என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 3 மார்ச், 2013

வலை ஏறியபின் மலை ஏறியவை !



வலை ஏறியபின் மலை ஏறியவை

By வை. கோபாலகிருஷ்ணன்

ஒரு காலத்தில் பத்திரிகைகளில் நம் படைப்புகள் வெளியாகாதா என நான் ஏங்கிய நாட்களும் உண்டு. 

பிறகு 2005 முதல் 2010 வரை ஓர் ஆறு ஆண்டுகளில் இந்த என் ஆசை பெருமளவில் பூர்த்தியாகி பல வார / மாத இதழ்களில் என் பெயருடன் என் படைப்புகள் வெளியானதும் உண்டு. 

02.01.2011 முதல் நான் எனது வலைத்தளத்தில் எழுதத்தொடங்கியபிறகு, பத்திரிகை உலகத்துடனான என் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு விட்டேன். 

எப்போதாவது ஒருசில பத்திரிகைகளை நான் புரட்டும் போது ஏதாவது விசித்திரமான போட்டிகள் அவர்கள் நடத்தி, அது என் கண்களில் பட்டு, அதில் கலந்து கொள்வதற்கான இறுதித்தேதியும் சாதகமாக இருந்து, எனக்கும் ஓர் ஆர்வமும் சந்தோஷமான மனநிலையும் இருக்குமானால் கலந்து கொள்வது உண்டு. அத்தோடு சரி. 

அவ்வாறு கலந்துகொண்டு வெற்றிபெற்ற உதாரணங்களில் ஒருசில  மட்டும் இதோ:

[1] http://gopu1949.blogspot.in/2011/04/6_17.html

வெற்றி அறிவிப்பு

கல்கி அட்டைப்படம் 


 
அளிக்கப்பட்ட இரு பரிசு நூல்கள்

[2] http://gopu1949.blogspot.in/2011/02/4.html

 


[3] http://gopu1949.blogspot.in/2012/12/16122012.html

 


நான் 02.01.2011 முதல் பத்திரிகை உலகத்துடனான என் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு விட்டபோதிலும், பத்திரிகை உலகம் என்னை மறக்காமல் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தொடர்ந்து படைப்புகளை அனுப்புமாறு வேண்டுகோள் [அன்புத்தொல்லை] விடுப்பதும் மகிழ்ச்சியாகவே உள்ளது.  காலம் மாறி வருவதையே இவை காட்டுகின்றன.

வலையுலகில் வலம் வருபவர்களை முதலில் நம் “ஆனந்தவிகடன்” பத்திரிகை "என் விகடன் - வலையோசை” பகுதியின் மூலம் அடையாளம் காட்டி பாராட்டி கெளரவிக்க ஆரம்பித்தது. 

என்னையும் கெளரவித்திருந்தார்கள். அதற்கான இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2012/11/blog-post_3.html 

இதுபோலவே வலையேறிய பின் பத்திரிகையில் வந்ததோர் படைப்பு: 
“முன்னெச்சரிக்கை முகுந்தன்” 

அதன் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_26.html 

இதைப்பற்றி நான் எழுதியதோர் பதிவு:  இன்றைய இனியவை நான்கு

அதன் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/07/blog-post_06.html

இப்போது சமீபத்திய 
புதிய செய்திகள்:

"நம் உரத்தசிந்தனை” [தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ்] என்பது சென்னையிலிருந்து வெளியாகும் ஓர் அருமையான சிற்றிதழ். 

நான் சந்தா கட்டி தொடர்ந்து ஆவலுடன் படித்து வரும் ஒருசில இதழ்களில் இதுவும் ஒன்று. 

இதன் ஆசிரியர் திரு. உதயம் ராம் [Mr. S.G.VENKATRAMAN] அவர்கள், என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இனிய நண்பர் ஆவார்.

இந்தப்பத்திரிகை ஆரம்பித்து 29 ஆண்டுகள் ஆகிய இனிய ஆண்டு விழா சமீபத்தில் 24.02.2013 அன்று சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த மாதப்பத்திரிகையின் FEBRUARY 2013 இதழை ”எழுத்தாளர் சிறப்பிதழ்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்கள். 

இதில் பிரபல பண்பட்ட எழுத்தாளரும்,  எழுத்துலக மார்க்கண்டேயனுமான பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களிடம் நம் உரத்த சிந்தனை ஆசிரியர் அவர்களால் கேட்கப்பட்டுள்ள ஏழு கேள்விகளும் அதற்கான அவரின் பதில்களும் இடம் பெற்றுள்ளன. 

நம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த வலைப்பதிவர் திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களில் ஆரம்பித்து, இன்னும் பல எழுத்தாளர்களின் புகைப்படங்களுடன், சிறுகுறிப்பும்,  அவர்களின் ஒருசில படைப்புகளையும் அடையாளம் காட்டி பெருமைப்படுத்தியுள்ளனர். 

இந்தப்பிரபலங்கள் பற்றி எழுதப்பட்டுள்ள அதே ”எழுத்தாளர் சிறப்பிதழ்” பக்கம் எண்கள் 50 முதல் 53 வரை, என் புகைப்படமும், என்னைப்பற்றிய ஓர் சிறு குறிப்பும், நான் கையால் வரைந்த படத்துடன் கூடிய “கொட்டாவி” என்ற சிறுகதையும் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தக்கதையினை முழுவதும் படிக்க என் வலைத்தள இணைப்பு இதோ: 



என் புகைப்படமும், 
என்னைப்பற்றிய சிறுகுறிப்பும் 
என் படைப்பும் வெளியாகியுள்ள பக்கம் மேலே.

அந்த மாத இதழின் அட்டைப்படம் இதோ கீழே.



இன்னும் ஒரு செய்தி: 



01-07/03/2013 தேதியிட்ட “பாக்யா” என்ற பல்சுவை வார இதழின் பக்கம் எண்: 68 முதல் 72 வரை “சூழ்நிலை” என்ற தலைப்பினில் நான் ஏற்கனவே என் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கதை பிரசுரிக்கப்பட்டுள்ளது. ”பாக்யா” என்ற பத்திரிகையில் என் பெயர் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.

அந்த சிறுகதையினை முழுவதும் படிக்க இணைப்புகள் இதோ: 

http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_5686.html [மீள்பதிவு]

http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_17.html [முதல் பதிவு]



அட்டைப்படம் மேலே.

அச்சிடப்பட்ட என் சிறுகதை கீழே. 





ஓர் முக்கிய அறிவிப்பு 

என் அடுத்த பதிவான 

“தீர்க்க சுமங்கலி பவ !”

வரும் 07.03.2013 வியாழக்கிழமை 
வெளியிடப்பட உள்ளது.


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

126 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் தங்கள் ஆக்கங்கள் இன்று போல் என்றும் பிரபலமடைந்து வெற்றி வகைகள் சூடட்டும் ! மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பாளடியாள் March 3, 2013 at 4:07 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் தங்கள் ஆக்கங்கள் இன்று போல் என்றும் பிரபலமடைந்து வெற்றி வகைகள் சூடட்டும் ! மிக்க நன்றி பகிர்வுக்கு .//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், ஆதரவான அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  2. உங்கள் சாதனைகளுக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனி. கந்தசாமி March 3, 2013 at 4:09 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //உங்கள் சாதனைகளுக்கு என் வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
  3. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

    //ஒரு காலத்தில் பத்திரிகைகளில் நம் படைப்புகள் வெளியாகாதா என நான் ஏங்கிய நாட்களும் உண்டு. //

    எல்லோருக்கும் உண்டான ஆசைதான். உங்கள் முயற்சி உங்களை வெற்றியில் கொண்டுபோய் நிறுத்தியது.


    // "நம் உரத்தசிந்தனை” [தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ்] என்பது சென்னையிலிருந்து வெளியாகும் ஓர் அருமையான சிற்றிதழ். //

    வாங்கிப் பார்க்கிறேன். திருச்சியில் கடைகளில் கிடைக்குமா என்பதனை தெரியப்படுத்தவும்.

    // அவ்வாறு கலந்துகொண்டு வெற்றிபெற்ற உதாரணங்களில் ஒருசில மட்டும் இதோ: //

    நீங்கள் பெற்ற வெற்றிகளுக்கு எனது உளங் கனிந்த வாழ்த்துக்கள்!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ March 3, 2013 at 4:16 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

      *****ஒரு காலத்தில் பத்திரிகைகளில் நம் படைப்புகள் வெளியாகாதா என நான் ஏங்கிய நாட்களும் உண்டு.*****

      //எல்லோருக்கும் உண்டான ஆசைதான். உங்கள் முயற்சி உங்களை வெற்றியில் கொண்டுபோய் நிறுத்தியது.//

      ஆம் ஐயா, விடா முயற்சிகள், ஓரளவு வெற்றிக்கு வழி வகுத்தன.

      ***** "நம் உரத்தசிந்தனை” [தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ்] என்பது சென்னையிலிருந்து வெளியாகும் ஓர் அருமையான சிற்றிதழ். *****

      //வாங்கிப் பார்க்கிறேன். திருச்சியில் கடைகளில் கிடைக்குமா என்பதனை தெரியப்படுத்தவும்.//

      பொதுவாக திருச்சியில் இது எல்லாக் கடைகளில் கிடைக்காது ஐயா. நான் 5 ஆண்டுகளுக்கான சந்தா கட்டி, சென்னையிலிருந்து தபாலில் வரவழைத்துக்கொண்டிருக்கிறேன்.

      திருச்சியில் உள்ள ஓர் கவிஞர் திரு. அ. கெளதமன் அவர்கள் அலைபேசி எண்: 9080588820 [அவர் தான் இதற்கு திருச்சி ஏஜண்ட் ஐயா]

      இது சம்பந்தமாக அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் ஐயா.

      கவிஞர் திரு அ. கெளதமன் அவர்களின் கவிதை நூல் “நெத்திச்சுட்டி” என்பதைப்பற்றிகூட நான் என் பதிவு ஒன்றினில் எழுதியுள்ளேன் ஐயா.

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html

      ***** அவ்வாறு கலந்துகொண்டு வெற்றிபெற்ற உதாரணங்களில் ஒருசில மட்டும் இதோ:*****

      //நீங்கள் பெற்ற வெற்றிகளுக்கு எனது உளங் கனிந்த வாழ்த்துக்கள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
    2. vidhai2virutcham.wordpress.com என்ற இணையதளத்திலும், “நம் உரத்த சிந்தனை” இதழின் முக்கியப் பக்கங்களை மட்டும் படிக்க முடியுமாம்.

      மேலும் விபரங்களுக்கு: 98841 93081 எனக் கொடுத்துள்ளார்கள்.

      சென்னை விலாசம்:

      “நம் உரத்த சிந்தனை” , 6, வீர சவார்க்கர் தெரு, இரமணா நகர், பெரம்பூர், சென்னை 600 011

      Mobile: 94440 11105, 98847 28812, 94450 89592

      நீக்கு
  4. உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ March 3, 2013 at 4:24 AM

      வாருங்கள் ஐயா, தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது ஐயா.

      //உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.//

      மிக்க நன்றி ஐயா.

      இருப்பினும் எனக்கு அதிலெல்லம் அவ்வளவாக ஆர்வம் இல்லை ஐயா.

      என் வலைத்தளத்தில் தமிழ்மணம் மற்றும் இன்ட்லி ஆகியவற்றின் ஓட்டுப்பட்டைகளே, காணாமல் போய் ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதே ஐயா.

      நான் அவைபற்றியெல்லாம் எப்போதுமே கவலைப்படுவதும் இல்லை ஐயா.

      எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் தருபவை, தங்களைப்போன்ற பலரின் கருத்துக்களும், பின்னூட்டங்களும் மட்டுமே ஐயா.

      உங்களின் விருப்பப்படி, செளகர்யப்படி நீங்களே பார்த்து என் படைப்புகளை தமிழ்மணம் போன்ற எதில் இணைத்தாலும் எனக்கு அதில் எந்த் ஒரு ஆட்சேபணையும் கிடையாது, ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  5. வலையுலகில் மட்டுமல்லாது பத்திரிக்கை உலகிலும் உங்கள் சாதனை தொடரட்டும்!
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan March 3, 2013 at 4:24 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வலையுலகில் மட்டுமல்லாது பத்திரிக்கை உலகிலும் உங்கள் சாதனை தொடரட்டும்! வாழ்த்துகள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      [பத்திரிகைகளுக்கு இப்போதெல்லாம் நான் என் படைப்புகளை ஏதும் எழுதி அனுப்புவது கிடையாது. அவர்களாகவே என் வலைத்தளத்திலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.]

      நீக்கு
  6. மிகவும் சந்தோசம் ஐயா... வாழ்த்துக்கள்...

    “தீர்க்க சுமங்கலி பவ !” வரும் வெள்ளியன்று ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் March 3, 2013 at 4:46 AM

      வாருங்கள், வணக்கம்.

      //மிகவும் சந்தோசம் ஐயா... வாழ்த்துக்கள்...//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //“தீர்க்க சுமங்கலி பவ !” வரும் வெள்ளியன்று ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...//

      வியாழக்கிழமையே அது வெளியிடப்பட உள்ளது. தாராளமாக வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கலாம். நன்றி.

      நீக்கு
  7. வாழ்த்துக்கள் உங்கள் பணிகளுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Muruganandan M.K.March 3, 2013 at 5:07 AM

      வாருங்கள், வணக்கம்.

      முதல் வருகை என நினைக்கிறேன். மிக்க சந்தோஷம் + மகிழ்ச்சி.

      //வாழ்த்துக்கள் உங்கள் பணிகளுக்கு//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  8. உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துகள். மேன்மேலும் வலை உலகிலும், பத்திரிகை உலகிலும் உங்கள் எழுத்துகள் பிரபலம் அடையவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam March 3, 2013 at 5:16 AM

      வாருங்கள், வணக்கம்.

      //உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துகள். மேன்மேலும் வலை உலகிலும், பத்திரிகை உலகிலும் உங்கள் எழுத்துகள் பிரபலம் அடையவும் வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  9. பாக்யா தவிர மற்ற செய்திகள் அவ்வப்போது தெரியும் என்றுதான் நினைவு! சாதனைகளும் சந்தோஷங்களும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்.March 3, 2013 at 5:26 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      //பாக்யா தவிர மற்ற செய்திகள் அவ்வப்போது தெரியும் என்றுதான் நினைவு! சாதனைகளும் சந்தோஷங்களும் தொடரட்டும்.//

      பாக்யா விஷயம் எனக்கே மிகவும் SURPRISE ஆனது தான். அதுபோலவே “நம் உரத்த சிந்தனை” யில் வெளியிட்டுள்ள “கொட்டாவி” சிறுகதையும் கூட.

      மற்றவைகள் நான் ஏற்கனவே அவ்வப்போது என் பதிவுகளில் சொல்லியுள்ளவைகள் தான். You are very correct.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  10. படைப்புகள் பல எழுதி சாதனைகள் பல புரிந்திட வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேக்கனா M. நிஜாம் March 3, 2013 at 5:47 AM

      வாருங்கள். வணக்கம்.

      //படைப்புகள் பல எழுதி சாதனைகள் பல புரிந்திட வாழ்த்துகள்...//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  11. மகிழ்ச்சியாக உள்ளது சார். தங்களின் சாதனைகள் தொடரட்டும். வெற்றி தங்களை தேடி வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி March 3, 2013 at 5:52 AM

      வாருங்கள், வணக்கம்.

      //மகிழ்ச்சியாக உள்ளது சார். தங்களின் சாதனைகள் தொடரட்டும். வெற்றி தங்களை தேடி வரட்டும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மகிழ்சியான கருத்துக்கள் + பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  12. இன்னும் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.
    அரிய சாதனைகள் தொடரட்டும்.மிகவும் பெருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் March 3, 2013 at 6:02 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்னும் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.
      அரிய சாதனைகள் தொடரட்டும்.மிகவும் பெருமையாக இருக்கிறது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பெருமைமிக்க கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  13. தங்களின் பத்திரிகையுலக சாதனைகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!
    தங்களின் சமையல் குறிப்பிற்கு பரிசு கிடைத்ததற்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!

    தங்களைத் தேடி வந்த பதிவர்களில் என்னையும் நினைவு வைத்து என் வருகையைப்பற்றி எழுதியதற்கு அன்பான நன்றி! தங்களின் மருமகளின் வளைகாப்பிற்கு என்னை அழைத்து, அந்த மங்களகரமான நாளில் நானும் உங்களை வந்து சந்தித்து உங்கள் இல்லத்து விசேஷத்தில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்வான நிகழ்வு!! அன்றே அந்த விசேட நிகழ்ச்சியில் திரு. ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்களையும் அவரின் சகோதரரையும் சந்தித்ததும் மிகவும் மகிழ்வான விஷயம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் March 3, 2013 at 6:05 AM

      வாருங்கள், வணக்கம்.

      //தங்களின் பத்திரிகையுலக சாதனைகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!//

      மிகவும் சந்தோஷம்.

      //தங்களின் சமையல் குறிப்பிற்கு பரிசு கிடைத்ததற்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!//

      மிக்க மகிழ்ச்சி.

      //தங்களைத் தேடி வந்த பதிவர்களில் என்னையும் நினைவு வைத்து என் வருகையைப்பற்றி எழுதியதற்கு அன்பான நன்றி! //

      நான் வலையுலகுக்கு வந்த பிறகு, உடனடியாக சந்திக்க நேர்ந்த முதல் பதிவர் தாங்கள் மட்டுமே. நீங்காத நினைவுகள் அல்லவா!

      //தங்களின் மருமகளின் வளைகாப்பிற்கு என்னை அழைத்து, அந்த மங்களகரமான நாளில் நானும் உங்களை வந்து சந்தித்து உங்கள் இல்லத்து விசேஷத்தில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்வான நிகழ்வு!! //

      அது ஏதோ அதுபோன்ற ஓர் அரிய சந்தர்ப்பம் நேர்ந்தது. அந்த சுப நிகழ்ச்சியின் பலனாக எனக்கு இரண்டாவது பேரன் [அநிருத்] 24.04.2011 அன்று பிறந்தான்.

      //அன்றே அந்த விசேட நிகழ்ச்சியில் திரு. ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்களையும் அவரின் சகோதரரையும் சந்தித்ததும் மிகவும் மகிழ்வான விஷயம்!!//

      அவர்கள் இருவரும் தங்களை சந்திப்பதற்காகவே அன்று அந்த விழாவுக்கு வருகை தந்திருந்தார்கள்.

      திரு ராமமூர்த்தி அவர்களுடன் எனக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு. நாங்கள் இருவரும் ஒரே அலுவகத்தில், ஒரே துறையில் பல்லாண்டு பணியாற்றியவர்கள்.:

      அவருடைய சகோதரர் [திரு. எல்லென்] அவர்களை நான் அன்று தான் முதன் முதலாக சந்தித்தேன்.

      நல்லவேளையாக இதைத் தாங்கள் எனக்கு இப்போது நினைவு படுத்தினீர்கள்.

      அதனால் நான் இதுவரை சந்தித்த பதிவர்கள் என்ற என் சென்ற பதிவினில் இப்போது மேலும் சில திருத்தங்கள் கொடுத்துள்ளேன். முடிந்தால் பாருங்கோ.

      http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_3629.html

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மகிழ்சியான கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்..

      நீக்கு
  14. வலை ஏறியபின் மலை ஏறி வானில் ஒளிரும் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 3, 2013 at 6:11 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      //வலை ஏறியபின் மலை ஏறி வானில் ஒளிரும் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் ஐயா..//

      தங்களின் அன்பான ஒளிரும் வருகையும், அழகான ஜொலிக்கும் கருத்துக்களும், இனிய பாராட்டுக்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது..என் மனமார்ந்த இனிய நன்றிகள்,

      நீக்கு
  15. பிரபலங்கள் பற்றி எழுதப்பட்டுள்ள அதே ”எழுத்தாளர் சிறப்பிதழ்” பக்கம் எண்கள் 50 முதல் 53 வரை, என் புகைப்படமும், என்னைப்பற்றிய ஓர் சிறு குறிப்பும், நான் கையால் வரைந்த படத்துடன் கூடிய “கொட்டாவி” என்ற சிறுகதையும் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.//

    பகிர்வுகளுக்கு இனிய வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 3, 2013 at 6:13 AM


      *****பிரபலங்கள் பற்றி எழுதப்பட்டுள்ள அதே ”எழுத்தாளர் சிறப்பிதழ்” பக்கம் எண்கள் 50 முதல் 53 வரை, என் புகைப்படமும், என்னைப்பற்றிய ஓர் சிறு குறிப்பும், நான் கையால் வரைந்த படத்துடன் கூடிய “கொட்டாவி” என்ற சிறுகதையும் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்*****

      //பகிர்வுகளுக்கு இனிய வாழ்த்துகள்..//

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் என் நெஞ்சார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  16. மிக்க சந்தோஷமா இருக்கு அண்ணா ...பத்திரிகையில் எங்கள் குடும்ப அங்கத்தினர் பெயர் வருவது என்பது எங்கள் அனைவருக்குமே மிக்க பெருமிதம் ..இன்னும் அதிகமாக உங்கள் படைப்புகள் பத்திரிகைகளில் வெளி வர வேண்டும் என்பது எனது ஆவல் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin March 3, 2013 at 6:25 AM

      வாங்கோ நிர்மலா. வணக்கம்.

      //மிக்க சந்தோஷமா இருக்கு அண்ணா ... பத்திரிகையில் எங்கள் குடும்ப அங்கத்தினர் பெயர் வருவது என்பது எங்கள் அனைவருக்குமே மிக்க பெருமிதம் //

      மிகவும் சந்தோஷம்மா.

      ”கு டு ம் ப அ ங் க த் தி ன ர் பெ ய ர் ” ;))))))))))))))

      இதுதான் எனக்கு மிகவும் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

      //இன்னும் அதிகமாக உங்கள் படைப்புகள் பத்திரிகைகளில் வெளி வர வேண்டும் என்பது எனது ஆவல் .//

      2005 முதல் 2010 வரை சுமார் ஆறு ஆண்டுகளில், சுமார் நூறு முறை என் படைப்புகள் பத்திரிகைகளில் வெளி வந்தாச்சு.

      பத்திரிகைகளுக்கு படைப்புகள் எழுதி அனுப்புவதில் நம் பொறுமை மிகவும் சோதிக்கப்படுகிறது.

      பத்திரிகையில் நம் படைப்புகள் வெளியாகும் போது அது ஆயிரக்கணக்கான லக்ஷக்கணக்கான வாசகர்களை சென்றடையும் வாய்ப்புகள் அதிகம் தான்.

      இருப்பினும் அதற்கான வாசகர் கருத்துக்களும் FEEDBACK க்கும் நமக்குக் கிடைப்பது இல்லை.

      இந்த விஷயத்தில் வலைப்பதிவு தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

      பதிவு வெளியிடப்பட்ட அரை மணி நேரத்தில், அதுவும் உலகின் பல பாகங்களிலிருந்தும்,.ஒரு பத்துபேர்களாவது கருத்தளித்து மகிழ்விக்கிறார்கள், அதுதான் உண்மையில் மகிழ்ச்சியளிப்பது.

      அதனால் நான் 02.01.2011 முதல் பத்திரிகைத் தொடர்புகளிலிருந்து பெரும்பாலும் ஒதுங்கி விட்டேன்.

      என் வலைத்தளத்தில் நான் எழுதுவதோடு சரி.

      இதில் சுட்டிக்காட்டியுள்ளவைகள் என் வலையில் ஏறியபின், அந்த நான்கு பத்திரிகைகளால் [ஆனந்த விகடன், ராணி, நம் உரத்த சிந்தனை + பாக்யா] மலை ஏற்றப்பட்டு மகிழ்விக்கப் பட்டுள்ளன.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மகிழ்சியான கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா..

      நீக்கு
  17. இராஜராஜேஸ்வரி has left a new comment on your post "சூ ழ் நி லை":

    ”பாக்யா” என்ற பத்திரிகையில் என் பெயர் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.//

    ”பாக்யா” பத்திரிகையில் வெளியான சூழ்நிலைக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி has left a new comment on your post "சூ ழ் நி லை":

      *****”பாக்யா” என்ற பத்திரிகையில் என் பெயர் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.*****

      //”பாக்யா” பத்திரிகையில் வெளியான சூழ்நிலைக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..//

      தங்களின் இந்தக்கமெண்ட் ஏனோ, நான் பலமுறை பப்ளிஷ் கொடுத்தும் தாமரையுட்ன் இங்கு வ்ந்து அமராமல் பாடாய்ப் படுத்திவிட்டது.

      அதற்கான சூழ்நிலையும் பாக்யமும் இல்லாமல் போனதில் எனக்கு கொஞ்சம் வருத்த்ம் தான். பிறகு மெயிலில் வந்த தகவலையே Copy + Paste செய்து இங்கு வெளியிட்டு விட்டேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும். வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    2. http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_17.html

      இந்த லிங்கில் கருத்துரை பதிவாகி இருக்கிறது ஐயா..

      நீக்கு
    3. இராஜராஜேஸ்வரி March 5, 2013 at 3:41 AM

      வாங்கோ, வணக்கம்.

      //http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_17.html

      இந்த லிங்கில் கருத்துரை பதிவாகி இருக்கிறது ஐயா..//

      எப்படியோ கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து கண்டு பிடிச்சுட்டீங்களே!

      நீங்க மஹா புத்திசாலி என்பதை அடிக்கடி சுலபமாக நிரூபித்து விடுகிறீர்கள்.

      சமத்தோ சமத்து தான் !! எனக்கு ஒரே வியப்போ வியப்பு தான்!!

      தங்கமான தகவலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
    4. //இராஜராஜேஸ்வரி has left a new comment on your post "சூ ழ் நி லை": //

      ஆமாம், பாருங்கோ. அந்த மெயிலிலேயே ”சூழ்நிலை” என்பதற்கு தாங்கள் கமெண்ட் கொடுத்துள்ளதாகத்தானே சொல்லியிருக்கிறது.

      அது தெரியாமல் இந்த என் பதிவினில் அது வந்து உட்கார வேண்டும் என நான் எதிர்பார்த்ததில் நியாயம் இல்லை தான்.

      ”இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே ....... அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!”. பாட்டு, எனக்குத்தான் மிகவும் பொருந்தும் போலிருக்கிறது.

      இது ஞானத்தங்கத்தின் தகவலுக்காக மட்டுமே.

      நீக்கு
  18. பத்திரிகை உலகத்துடனான என் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு விட்டபோதிலும், பத்திரிகை உலகம் என்னை மறக்காமல் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தொடர்ந்து படைப்புகளை அனுப்புமாறு வேண்டுகோள் [அன்புத்தொல்லை] விடுப்பதும் மகிழ்ச்சியாகவே உள்ளது. காலம் மாறி வருவதையே இவை காட்டுகின்றன.//

    காலம் மாறி வருவது உண்மைதான் சார்.
    உங்கள் கதைகள் உங்கள் ஓவியத்துடன் வந்தது சிறப்பு.

    உங்கள் கதைகள் எல்லா பத்திரிக்கைகளிலும் வரவேண்டும்.
    தொடர்ந்து எழுதுங்கள். பத்திரிக்கைகளில் வந்த கதைகளை மீண்டும் படிக்க ஆவல். படிக்கிறேன். மேலும், மேலும் உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.


    ”தீர்க்க சுமங்கலி பவ! படிக்க ஆவலாய் உள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு March 3, 2013 at 6:49 AM

      வாருங்கள், வணக்கம்.

      *****பத்திரிகை உலகத்துடனான என் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு விட்டபோதிலும், பத்திரிகை உலகம் என்னை மறக்காமல் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தொடர்ந்து படைப்புகளை அனுப்புமாறு வேண்டுகோள் [அன்புத்தொல்லை] விடுப்பதும் மகிழ்ச்சியாகவே உள்ளது. காலம் மாறி வருவதையே இவை காட்டுகின்றன.*****

      //காலம் மாறி வருவது உண்மைதான் சார்.
      உங்கள் கதைகள் உங்கள் ஓவியத்துடன் வந்தது சிறப்பு.//

      மிகவும் சந்தோஷம்.

      //உங்கள் கதைகள் எல்லா பத்திரிக்கைகளிலும் வரவேண்டும்.
      தொடர்ந்து எழுதுங்கள். பத்திரிக்கைகளில் வந்த கதைகளை மீண்டும் படிக்க ஆவல். படிக்கிறேன். மேலும், மேலும் உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.//


      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மகிழ்சியான கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      //”தீர்க்க சுமங்கலி பவ! படிக்க ஆவலாய் உள்ளேன்.//

      மிகவும் சந்தோஷம். வரும் வியாழக்கிழமை இரவு வெளியிடலாம் என்று இருக்கிறேன்.

      நீக்கு
  19. வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் தங்கள் ஆக்கங்கள் இன்று போல் என்றும் பிரபலமடைந்து வெற்றி வகைகள் சூடட்டும் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. faiza kader March 3, 2013 at 6:56 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் தங்கள் ஆக்கங்கள் இன்று போல் என்றும் பிரபலமடைந்து வெற்றி வகைகள் சூடட்டும் //

      தங்களின் அன்பான வருகைக்கும். வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  20. எத்தனை பத்திரிகையில் எத்தனை பதிவுகள்.!எத்தனை கதைகள்.!

    இதையெல்லாம் பார்க்கும் போது , உங்களுக்கு பின்னூட்டம் எழுதுவதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம் பயமாகவும் கொஞ்சம் தயக்கமாகவும் , எனக்கு அதற்கெல்லாம் தகுதியிருக்கிறதா என்றெல்லாம் அச்சமாகவும் இருக்கிறது.

    இருந்தாலும் என்னுடைய வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam March 3, 2013 at 6:56 AM

      வாருங்கள், வணக்கம்.

      //எத்தனை பத்திரிகையில் எத்தனை பதிவுகள்.!எத்தனை கதைகள்.! இதையெல்லாம் பார்க்கும் போது , உங்களுக்கு பின்னூட்டம் எழுதுவதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம் பயமாகவும் கொஞ்சம் தயக்கமாகவும் , எனக்கு அதற்கெல்லாம் தகுதியிருக்கிறதா என்றெல்லாம் அச்சமாகவும் இருக்கிறது.//

      அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ, நினைக்காதீங்கோ. நான் மிகச்சாதாரணமானவன் மட்டுமே. உங்க்ளில் ஒருவன், அவ்வளவு தான். எப்போதும் எல்லோருடைய தொடர்பு எல்லைக்குள்ளும் இருக்கக்கூடியவனே.

      ஏதோ நடுவில் கொஞ்ச காலம் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக என் படைப்புகள் வந்து கொண்டிருந்தன.

      பிறகு அதற்கான நம் உழைப்பு, தபால் செலவு, பொறுமை, சகிப்புத்தன்மை எல்லாம் மிகவும் தேவைப்படுவதாக இருந்ததால் நானே அவற்றிலிருந்தெல்லாம் என்னை முற்றிலுமாக 2011 முதல் விலக்கிக்கொண்டு விட்டேன்.

      //இருந்தாலும் என்னுடைய வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். வாழ்த்துக்கள்//

      அன்புடன் மகிழ்ச்சியுடன் சந்தோஷமாக பொக்கிஷமாகக் கருதி ஏற்றுக்கொள்வேன், புதையல் கிடைத்தது [போல நினைத்து மகிழ்ச்சியடைவேன் என்பதே உண்மை.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும்,. வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      .

      நீக்கு
  21. உங்கள் வெற்றிப்படிகளின் வரிசை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் March 3, 2013 at 7:06 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //உங்கள் வெற்றிப்படிகளின் வரிசை ..//

      அழகான படிக்கட்டுக்களை அமைத்துக்கொடுத்த பரந்தாமன தாங்கள் அன்றோ! ;))))))

      தங்களின் அன்பான வருகைக்கும், வெற்றிப்படிகளின் வரிசையான அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

      நீக்கு
  22. வாழ்த்துக்கள் சார்.தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கும் எழுதுங்கள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar March 3, 2013 at 7:13 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வாழ்த்துக்கள் சார்.தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கும் எழுதுங்கள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும்,. வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      .

      நீக்கு
  23. உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal March 3, 2013 at 7:38 AM

      வாருங்கள், வணக்கம்

      //உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  24. அன்பின் வை.கோ - வலை ஏறிய பின் மலை ஏறியவை - பதிவு அருமை - வலை பெரிதா ? மலை பெரிதா ? இரண்டுமே வெவ்வேறு உலகங்கள் - இரண்டிலும் கொடி கட்டிப் பறக்கும் தங்களுக்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - அனைத்துச்சுட்டிகளையும் சென்று பார்த்து படித்து நிச்சயம் மறுமொழி இடுகிறேன். - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) March 3, 2013 at 8:05 AM

      வாருங்கள் அன்பின் திரு சீனா ஐயா, வணக்கங்கள்.

      //அன்பின் வை.கோ - வலை ஏறிய பின் மலை ஏறியவை - பதிவு அருமை - வலை பெரிதா ? மலை பெரிதா ? இரண்டுமே வெவ்வேறு உலகங்கள் -//

      ஆம் ஐயா, இரண்டுமே வெவ்வேறு உலகங்கள் தான். வலையில் நாமே நமக்கு ராஜா.

      மலையில் அவ்வாறு இல்லை. பலவித கட்டுப்பாடுகள். தரக்கட்டுப்பாடுகள், கத்தரிகள் போன்றவைகள்.

      எல்லாவற்றையும் விட வெளியிடுவார்களா அல்லது நிராகரிப்பார்களா என பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதும் நம் பொறுமையை மிகவும் சோதிப்பதாக உள்ளது.

      //இரண்டிலும் கொடி கட்டிப் பறக்கும் தங்களுக்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - அனைத்துச்சுட்டிகளையும் சென்று பார்த்து படித்து நிச்சயம் மறுமொழி இடுகிறேன். - நட்புடன் சீனா//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும்,. வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா..
      .

      நீக்கு
  25. [அன்புத்தொல்லை] விடுப்பதும் மகிழ்ச்சியாகவே உள்ளது. காலம் மாறி வருவதையே இவை காட்டுகின்றன.//

    காலம் மாற காட்சியும் மாறி வசந்தமாக
    வெற்றிகளை வர்ஷிக்கிறது ..வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 3, 2013 at 8:15 AM

      தங்களின் மீண்டும் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிற்து.

      *****[அன்புத்தொல்லை] விடுப்பதும் மகிழ்ச்சியாகவே உள்ளது. காலம் மாறி வருவதையே இவை காட்டுகின்றன.*****

      //காலம் மாற காட்சியும் மாறி வசந்தமாக
      வெற்றிகளை வர்ஷிக்கிறது ..வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..//

      தங்களின் இத்தகைய வசந்தமான கருத்துக்கள் பதிவுக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாக உள்ளன. வெற்றிகளை வர்ஷிக்க உதவுகின்றன.

      தங்களின் அன்பான் வாழ்த்துகளுக்கும். பாராட்டுக்களுக்கும் என் மனப்பூர்வமான இனிய் அன்பு நன்றிகள்.

      நீக்கு

  26. வலையுலகில் வலம் வருபவர்களை முதலில் நம் “ஆனந்தவிகடன்” பத்திரிகை "என் விகடன் - வலையோசை” பகுதியின் மூலம் அடையாளம் காட்டி பாராட்டி கெளரவிக்க ஆரம்பித்தது.

    என்னையும் கெளரவித்திருந்தார்கள். ///

    கௌரவப்படுத்தி கௌரவம் தேடிக்கொண்ட ஆனந்தவிகடன் வலையோசைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 3, 2013 at 8:30 AM

      *****வலையுலகில் வலம் வருபவர்களை முதலில் நம் “ஆனந்தவிகடன்” பத்திரிகை "என் விகடன் - வலையோசை” பகுதியின் மூலம் அடையாளம் காட்டி பாராட்டி கெளரவிக்க ஆரம்பித்தது. என்னையும் கெளரவித்திருந்தார்கள். *****

      //கௌரவப்படுத்தி கௌரவம் தேடிக்கொண்ட ஆனந்தவிகடன் வலையோசைக்கு வாழ்த்துகள்..//

      அடாடா, கண்ணாடி வளையோசை போன்ற கலகலப்பான, பளபளப்பான, கலக்கலான, அசத்தலான கருத்துரைகள் சொல்ல உங்களிடம் தான் பாடம் கற்க வேண்டும்.

      தங்களின் இந்த வாழ்த்துகள் ஆனந்தவிகடன் வலையோசைக்குக் கிடைத்த கெளரவம் தான். மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  27. உங்களின் சாதனை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவியாழி கண்ணதாசன் March 3, 2013 at 8:37 AM

      வாருங்கள், வணக்கம்.

      //உங்களின் சாதனை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும்,. வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா..


      நீக்கு
  28. 'உரத்த சிந்தனை'யில் ஏற்கெனவே பார்த்து மகிழ்ந்தேன். இப்போது 'பாக்யா' கதை பற்றி அறிந்தேன். தங்கள் வலைப் பதிவுகள் மிகுந்த வரவேற்பைப் பெறுவது கண்டு மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... March 3, 2013 at 8:39 AM

      வாருங்கள், வணக்கம்.

      //'உரத்த சிந்தனை'யில் ஏற்கெனவே பார்த்து மகிழ்ந்தேன். இப்போது 'பாக்யா' கதை பற்றி அறிந்தேன். தங்கள் வலைப் பதிவுகள் மிகுந்த வரவேற்பைப் பெறுவது கண்டு மகிழ்ச்சி!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மகிழ்ச்சியான கருத்துக்களுக்கும்,. என் மனமார்ந்த நன்றிகள், சார்..

      நீக்கு
  29. பதில்கள்
    1. Prem s March 3, 2013 at 9:01 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வாழ்த்துக்கள் ஐயா//

      தங்களின் அன்பான் வருகைக்கும். வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  30. பிரமாதம் சார். கொட்டாவி கதையை முன்னமே படிச்சிருக்காப்ல நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை March 3, 2013 at 5:19 PM

      வாருங்கள் சார், வணக்கம்

      //பிரமாதம் சார். //

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பிரமாதமான கருத்துக்களுக்கும்,. என் மனமார்ந்த நன்றிகள், சார்..

      //கொட்டாவி கதையை முன்னமே படிச்சிருக்காப்ல நினைவு.//

      இருக்கலாம். சிறுகதையின் தலைப்பு தான் “கொட்டாவி”யே தவிர. படிக்கும் போது நடுவில் கொட்டாவிவிட்டு தூக்கம் வரவழைக்காத. சற்றே விறுவிறுப்பான சிறுகதை தான், அது.

      நீக்கு
  31. கலக்குகிறீர்கள் ஐயா! தனித்தன்மை உடையவர்கள் நீங்கள். தங்களுடைய சிறப்புகள் ஒவ்வரு நாளும் கூடிக்கொண்டே செல்கின்றன. நானும் தங்களால் அறியப்பட்டவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடரட்டும் உங்கள் சாதனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. T.N.MURALIDHARAN March 3, 2013 at 5:23 PM

      வாருங்கள், வணக்கம்.

      //கலக்குகிறீர்கள் ஐயா! தனித்தன்மை உடையவர்கள் நீங்கள். தங்களுடைய சிறப்புகள் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே செல்கின்றன. நானும் தங்களால் அறியப்பட்டவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடரட்டும் உங்கள் சாதனைகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கலக்கலான மகிழ்ச்சியுடன் கூடிய கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  32. வாழ்த்துகள் மென்மேலும் மேன்மை பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. malar balan March 3, 2013 at 9:53 PM

      வாருங்கள், வணக்கம்.

      //வாழ்த்துகள் மென்மேலும் மேன்மை பெற வாழ்த்துகள்//

      தங்களின் அன்பான் வருகைக்கும். வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  33. வாழ்த்துக்கள் சார்.படிக்கவே சந்தோஷமாக உள்ளது.அவசியம் இணைப்புகள் அனைத்தையும் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா March 4, 2013 at 1:17 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வாழ்த்துக்கள் சார்.படிக்கவே சந்தோஷமாக உள்ளது.//

      தங்களின் அன்பான் வருகைக்கும். சந்தோஷமான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //அவசியம் இணைப்புகள் அனைத்தையும் பார்க்கிறேன்.//

      பாருங்கோ, ப்ளீஸ்.

      நீக்கு
  34. ரொம்ப அருமையா இருக்கு சார் !!! தொடர்ந்து அனுப்புங்களேன் ?
    http://recipe-excavator.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sangeetha Nambi March 4, 2013 at 2:13 AM

      வாருங்கள், வணக்கம்.

      //ரொம்ப அருமையா இருக்கு சார் !!! தொடர்ந்து அனுப்புங்களேன் ?
      http://recipe-excavator.blogspot.com//

      தங்களின் அன்பான் வருகைக்கும். அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      [தொடர்ந்து நாம் அனுப்ப வேண்டியது இல்லை எனத் தோன்றுகிறது.

      அவர்களே வலையிலிருந்து எடுத்து மலையில் ஏற்றி விடுவார்கள் போலத்தெரிகிறது. தொல்லை விட்டது ]

      நீக்கு
  35. வாழ்த்துக்கள் சார். மிகவும் சந்தோஷமாக இருக்கு.

    மிகவும் சுவாரசியமான உங்கள் படைப்புகள் இன்னும் நிறைய பத்திரிக்கைகளில் வெளிவர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMVI March 4, 2013 at 6:02 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வாழ்த்துக்கள் சார். மிகவும் சந்தோஷமாக இருக்கு.

      மிகவும் சுவாரசியமான உங்கள் படைப்புகள் இன்னும் நிறைய பத்திரிக்கைகளில் வெளிவர வேண்டும்.//

      தங்களின் அன்பான் வருகைக்கும். சந்தோஷமான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  36. ஐயா,

    நீங்கள் சாதிக்கப் பிறந்தவர், சாதனைகள் தொடரட்டும். மிகவும் மகிழ்வடைந்தேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s.March 4, 2013 at 7:58 AM

      வாருங்கள், வணக்கம்.

      //ஐயா, நீங்கள் சாதிக்கப் பிறந்தவர், சாதனைகள் தொடரட்டும். மிகவும் மகிழ்வடைந்தேன். நன்றி!//

      தங்களின் அன்பான் வருகைக்கும். சந்தோஷமான மகிழ்வான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  37. சாதனைகள் தொடரட்டும். மிகவும் மகிழ்வடைந்தேன். நன்றி!
    படைப்புகள் இன்னும் நிறைய பத்திரிக்கைகளில் வெளிவர வேண்டும்.மென்மேலும் மேன்மை பெற வாழ்த்துகள்
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kovaikkavi March 4, 2013 at 1:59 PM

      வாருங்கள், வணக்கம்.

      //சாதனைகள் தொடரட்டும். மிகவும் மகிழ்வடைந்தேன். நன்றி!
      படைப்புகள் இன்னும் நிறைய பத்திரிக்கைகளில் வெளிவர வேண்டும்.மென்மேலும் மேன்மை பெற வாழ்த்துகள்
      வேதா. இலங்காதிலகம்.//

      தங்களின் அன்பான வருகைக்கும். மகிழ்ச்சியான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  38. உங்க திறமைக்கு கிடைத்த பரிசுகள்.உங்க ஆக்கங்கள் பத்திரிகை,மாத இதழ்களில் வெளிவந்ததையிட்டு மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து நீங்க‌
    எழுத்துலகில் பிரகாசிக்கவேண்டும்.இன்னும் நிறைய எழுதுங்கள் அண்ணா.வாழ்த்துக்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ammulu March 5, 2013 at 12:13 AM

      வாங்கோ அம்முலு! ;)))))
      செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

      இப்போதெல்லாம் உங்களைப்பார்ப்பதே மிகவும் அபூர்வமாக உள்ளது. அத்திப்பூத்தாற்போல வருகை தந்துள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //உங்க திறமைக்கு கிடைத்த பரிசுகள்.உங்க ஆக்கங்கள் பத்திரிகை,மாத இதழ்களில் வெளிவந்ததையிட்டு மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து நீங்க‌ எழுத்துலகில் பிரகாசிக்கவேண்டும்.இன்னும் நிறைய எழுதுங்கள் அண்ணா.வாழ்த்துக்கள்.நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும்,. வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், அம்முலு.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  39. உங்களின் கைவண்ணம் பற்றி தெரிவிக்க நினைத்து தவறவிட்டு விட்டேன்.
    ஓவியம் மிக அருமையாக வரைந்திருக்கிறீங்க. உங்க கதைக்கு
    நீங்களே ஓவியம் வரைந்தது உங்க திறமைக்கு மற்றுமொரு சான்று அண்ணா.

    பதிலளிநீக்கு
  40. ammulu March 5, 2013 at 3:03 AM

    வாங்கோ அம்முலு, மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

    //உங்களின் கைவண்ணம் பற்றி தெரிவிக்க நினைத்து தவறவிட்டு விட்டேன்.//

    அதனால் பரவாயில்லை அம்முலு. தவறினால் ‘தங்கம்’ என்பார்கள். தங்கம் போல எனக்கு மீண்டும் ஒரு பின்னூட்டம் கிடைத்துள்ளது, தங்கமான தங்கச்சியிடமிருந்து.

    //ஓவியம் மிக அருமையாக வரைந்திருக்கிறீங்க. உங்க கதைக்கு
    நீங்களே ஓவியம் வரைந்தது உங்க திறமைக்கு மற்றுமொரு சான்று அண்ணா.//

    மிகவும் சந்தோஷம் அம்முலு. இதுபோன்று என்னுடைய 7 அல்லது 8 சிறுகதைகளுக்கு நானே ஓவியங்களை வரைந்துள்ளேன்.

    தங்களின் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  41. Really I appreciate you sir, and I am proud that the greater is wellknown to me.
    I know your drawingskill.
    I am awaiting your next post.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //viji March 5, 2013 at 7:03 PM

      வாங்கோ வணக்கம்.

      //Really I appreciate you sir, //

      தங்களின் தங்கமான பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      //I am proud that the greater is well known to me. I know your drawing skill.//

      என்னிடமிருந்து உங்களிடம் பறந்து வந்துள்ள ஸ்ரீ ஹனுமார் உங்களை ஏதோ உணரவைத்து, இதுபோலெல்லாம் எழுதச் சொல்கிறார் என்பது எனக்கும் புரிகிறது.

      எனக்கு ஏதோ கொஞ்சூண்டு Drawing Skill கொடுத்துள்ள அந்த ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு என் நன்றிகள் / வந்தனங்கள்.

      //I am awaiting your next post. - viji//

      ரொம்ப சந்தோஷம். நாளை வெளியிடப்பட உள்ளது.

      “தீர்க்க சுமங்கலி பவ !”

      நீக்கு
  42. தங்களின் சாதனைகள் தொடர வாழ்த்துகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் March 5, 2013 at 8:00 PM

      வாருங்கள். வணக்கம்.

      //தங்களின் சாதனைகள் தொடர வாழ்த்துகின்றேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  43. வாழ்த்துக்கள் சார். உரத்த சிந்தனையில் நான் உறுப்பினராக இருந்திருக்கிறேன்.ஆரம்ப காலங்களில் என் எழுத்தை அறிந்து என் வெளியில் கொண்டு வந்தவர் உதயம்ராம் சார்தான்.முதலில் நான் எழுத ஆரம்பித்ததும் அதில்தான்.உரத்த சிந்தனையில் சிறுகதைக்கு நான் பெற்ற பரிசு கேடயத்தை இப்போதும் பத்திரமாக வைத்துள்ளேன். உரத்த சிந்தனையோடு இப்போது தொடர்பில் இல்லை என்றாலும் என்னை ஊக்கப்படுத்திய அவர்களுக்கு மறக்க முடியாத நன்றி மனதில் என்றும் உண்டு!

    உங்கள் சாதனை மேன்மேலும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு March 5, 2013 at 9:27 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வாழ்த்துக்கள் சார். உரத்த சிந்தனையில் நான் உறுப்பினராக
      இருந்திருக்கிறேன்.//

      இதைக்கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      எந்த விதமான கவர்ச்சிப்படங்களோ, சினிமா செய்திகளோ இல்லாமல் தொடர்ந்து 29 வருடங்களாக ஓர் பத்திரிகை, தன்னம்பிக்கையூட்டும் விதமாக, மிகச்சிறப்பாக வெற்றிகரமாக வெளியிடப்படுகிறது என்பது எவ்வளவு ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம். மிகப்பெரிய சாதனை தான். ;)))))

      //ஆரம்ப காலங்களில் என் எழுத்தை அறிந்து என்னை வெளியில்
      கொண்டு வந்தவர் உதயம்ராம் சார்தான்.//

      வேலூர் கோட்டைக்கே மிகவும் பலமாக அஸ்திவாரம் போட்டுள்ள எழுத்துலக தீரரும் என் இனிய நண்பருமான திரு. உதயம் ராம் அவர்களுக்கு என் நன்றிகளை இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.

      //முதலில் நான் எழுத ஆரம்பித்ததும் அதில்தான்.//

      அச்சா, பஹூத் அச்சா.

      எழுத்துலகில் தாங்கள் முதல் அடி எடுத்து வைத்துள்ள இடமே மிகவும் புனிதமான இடம் என்று அறிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

      //உரத்த சிந்தனையில் சிறுகதைக்கு நான் பெற்ற பரிசு கேடயத்தை
      இப்போதும் பத்திரமாக வைத்துள்ளேன். //

      பொக்கிஷம் அல்லவா அது. சந்தோஷம்.

      எனக்கும் அவர்கள் சமீபத்தில் சென்னையில் கொடுத்த கேடயம் ஒன்றே ஒன்று தான்.

      சென்னையிலிருந்து திருச்சி வருவதற்குள், அந்த கேடயம் ஒன்றே இரண்டாகிப்போனதில் வியந்து போனேன் ;)))))

      இருப்பினும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அவற்றை மீண்டும் ஒன்றாக்கி ஒட்டி வைத்துள்ளேன்.

      இந்த என் மிகவும் சிரத்தையான ஒட்டும் செயலை எண்ணி என் வீட்டினர் வியந்து தான் போனார்கள். என்னை விசித்திரமாகப் பார்த்தார்கள். [பாவம், அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியாது.]

      //உரத்த சிந்தனையோடு இப்போது தொடர்பில் இல்லை //

      இப்போது உங்களின் ’உரத்த சிந்தனை’, ஜீவ நதியொன்றிலிருந்து பிரிந்து செல்லும் பல்வேறு கிளை நதிகள் போல மற்ற எல்லாப்பத்திரிகைகளிலும் பரவியுள்ளது.

      ஆங்காங்கே பல ஊர்களிலும் உள்ள வாசகர்கள் என்னும் அனைத்து விவசாயிகளுக்கும் பலன் அளிப்பதாகவும் உள்ளது.

      குடத்தில் இட்ட விளக்காக இருந்த உங்களை குன்றிலிட்ட விளக்காக ஜொலிக்கச்செய்துள்ளது.

      அதுவும் எனக்கு மகிழ்ச்சியே. ;)))))

      //என்றாலும் என்னை ஊக்கப்படுத்திய அவர்களுக்கு மறக்க முடியாத நன்றி மனதில் என்றும் உண்டு!//

      அதுபோதும். “நன்றி மறப்பது நன்றன்று” என்பதற்கு தாங்கள் ஒரு நல்ல உதாரணமாகத் திகழ்கிறீர்கள். எனக்கு இதில் மகிழ்ச்சியே.

      //உங்கள் சாதனை மேன்மேலும் தொடரட்டும்.//

      “பாக்யா” வில் நான் தோன்றியது நான் செய்த பாக்யம்.

      [சொல்லத்தான் ....... நினைக்கிறேன் ......... நன்றியோ நன்றிகள்]

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான நீ....ண்.....ட
      எண்ணப்பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  44. வலை ஏறிய பின் மலை ஏறியவை அனைத்தும் அருமை!மலை ஏறிய பின் வலை ஏறியவரின் அனுபவத்தையும்என் பெயர் மேல் கிளிக்கி படிச்சுப் பாருங்க !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Bagawanjee KA March 6, 2013 at 2:18 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம். தங்களின் முதல் வருகை மகிழ்வளிக்கிறது.

      //வலை ஏறிய பின் மலை ஏறியவை அனைத்தும் அருமை!//

      சந்தோஷம், மிக்க நன்றி.

      //மலை ஏறிய பின் வலை ஏறியவரின் அனுபவத்தையும் என் பெயர் மேல் கிளிக்கி படிச்சுப் பாருங்க !//

      தங்களின் பெயரைக் கிளிக்கினால் நேரிடையாக உங்கள் வலைத்தளத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை.

      ஏதேதோ Friends Circle இல் இணைக்கச்சொல்லுகிறது.

      Friends Circle என்பதிலெல்லாம் எனக்கு விருப்பம் கிடையாது.

      எதிலும் யாருடனும் என்னை இணைத்துக்கொள்ள விரும்புவதும் இல்லை.

      ஒருவரின் வலைத்தளத்திற்கு நேரிடையாகச் செல்ல முடிந்தால் மட்டுமே நான் பதிவுகளைப் படிக்க விரும்புவது உண்டு.

      அதனால் என்னை தயவுசெய்து தாங்கள் மன்னிக்கவும்.

      நீக்கு
    2. Bagawanjee KA March 6, 2013 at 2:18 AM

      தங்கள் பெயரை நான் கிளிக்கியதும் வந்துள்ள தகவல் இதோ:

      Bagawanjee hasn't shared anything with you.

      People are more likely to share with you if you add them to your circles.

      இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

      நீக்கு
  45. கைகூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் . தங்கள் சாதனைகள் வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவகுமாரன் March 6, 2013 at 6:11 AM

      வாருங்கள். வணக்கம்.

      //கைகூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் . தங்கள் சாதனைகள் வியக்க வைக்கிறது.//

      தங்களின் அன்பான் வருகைக்கும். வியக்க வைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இன்று 07.03.2013 வலைச்சரத்தில் தங்களின் வலைத்தளத்தினை அறிமுகம் செய்து சிறப்பித்துள்ளார்கள். அதற்கு என் பாராட்டுக்க்ள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  46. :))))) ஹாஹாஅ நான் இன்னு கொட்டாவி கதைக்கு பின்னூட்டம் அளிக்கவில்லை ..இப்பவும் பாருங்கள் டைப் செய்யும்போதே கொட்டாவி வருகின்றதால் :)))
    ஹையோ மூன்று 0 நான்கு 0 குட்நைட் .நாளைக்கு வந்து கொட்டாவிக்கு கொட்டாவி இல்லாமல் பின்னூட்டம் தருகிறேன் ..கொட்டாவி மேல் ஆணை :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin March 8, 2013 at 3:24 PM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      //:))))) ஹாஹாஅ நான் இன்னு கொட்டாவி கதைக்கு பின்னூட்டம் அளிக்கவில்லை ..இப்பவும் பாருங்கள் டைப் செய்யும்போதே கொட்டாவி வருகின்றதால் :)))
      ஹையோ மூன்று 0 நான்கு 0 குட்நைட் .//

      GOOD NIGHT WITH SWEET DREAMS !

      //நாளைக்கு வந்து கொட்டாவிக்கு கொட்டாவி இல்லாமல் பின்னூட்டம் தருகிறேன் ..கொட்டாவி மேல் ஆணை :))//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி !

      தங்களின் அன்பான வருகைக்கும் நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  47. அட்லாஸ்ட் :)இன்னிக்கு பின்னூட்டம் எழுதிவிட்டேன் ...கொட்டாவி விடாமல் :))

    பதிலளிநீக்கு
  48. angelin March 9, 2013 at 6:48 AM

    வாங்கோ நிர்மலா, வணக்கம். மீண்டும் வருகை மகிழ்ச்சியாக உள்ளது.

    //அட்லாஸ்ட் :)இன்னிக்கு பின்னூட்டம் எழுதிவிட்டேன் ...கொட்டாவி விடாமல் :))//

    ஆஹா, மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். ;))))))

    நன்றியோ நன்றிகள். அங்கு போய் இப்போது அதையும் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  49. ///வலை ஏறியபின் மலை ஏறியவை////

    ஐ அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்...:)).. தலைப்பே தப்பூஊஊஊ:)..

    அதாவது மலையில ஏறியபின்புதான் வலையைத் திறந்தீங்க... அந்த மலையை மறந்திட்டீங்களே...:) ஐ மீன் திருச்சி மலையிலதானே இருக்கிறீங்க:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 9, 2013 at 3:10 PM

      வாங்கோ அதிரா, வணக்கம். 100க்கு 101 கொத்தாக வாங்கிட்டீங்க! அதற்கு முதலில் என் வாழ்த்துகள். ;)))))

      *****வலை ஏறியபின் மலை ஏறியவை*****

      //ஐ அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்...:)).. தலைப்பே தப்பூஊஊஊ:)..//

      தப்பூஊஊஊ தான் யுவர் ஆனர். மன்னிச்சுக்கோங்கோ ப்ளீஸ்.

      //அதாவது மலையில ஏறியபின்புதான் வலையைத் திறந்தீங்க... அந்த மலையை மறந்திட்டீங்களே...:) ஐ மீன் திருச்சி மலையிலதானே இருக்கிறீங்க:)..//

      ஓம் [ஆம்]; திருச்சி மலையிலேயே தான், அதாவது மலை அடிவாரத்திலேயே தான் இருக்கிறோம். அதை என்றும் மறக்க முடியாது. நினைவூட்டலுக்கு நன்றி.

      நீக்கு
  50. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ தான் 100ஊஊஊஊஊஊ.. அதுக்காக எனக்கு பெரிசா புதுசா:) பரிசேதும் வாணாம்ம்.. அந்த ஜல் அக்காவின் லைட்டை அனுப்பினாலே போதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 9, 2013 at 3:11 PM

      //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ தான் 100ஊஊஊஊஊஊ.. அதுக்காக எனக்கு பெரிசா புதுசா:) பரிசேதும் வாணாம்ம்.. அந்த ஜல் அக்காவின் லைட்டை அனுப்பினாலே போதும்..//

      ஆஹா, பேஷா, வந்து வாங்கிட்டுப்போங்கோ. வரும் போது அதை பத்திரமாகப் போட்டுச்செல்ல, ’ஓரஞ்சு கலர் பேக்’ உடன் வாருங்கோ.

      தொட்டுத் தடவிப்பாத்துட்டு திரும்பக்கொடுத்து விடுவேனாக்கும். அதனால் பயப்படாதீங்கோ. ;)

      நீக்கு
  51. உங்கள் பத்திரிகை பிரசுரிப்புக்கள் பார்க்க மெய்சிலிர்க்குது, எல்லோராலும் முடியாது, முடிந்தாலும், நேரம் காலம் ஒத்துழைக்காது, வெளிவராது... இவை அனைத்தையும் தாண்டி பத்து வருடமாக பங்களிப்பு செய்திருக்கிறீங்க என்பது பெருமைப்படவேண்டிய விஷயம்.

    ஆனா அப்படி இடம்பிடித்துவிட்டு, ஏன் விட்டீங்க, இடையிடையாவது பங்களிப்பு செய்யலாமெல்லோ... சரி அது உங்கள் விருப்பம்... எங்கிருந்தாலும் நன்கு மிளிர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 9, 2013 at 3:15 PM

      //உங்கள் பத்திரிகை பிரசுரிப்புக்கள் பார்க்க மெய்சிலிர்க்குது, எல்லோராலும் முடியாது, முடிந்தாலும், நேரம் காலம் ஒத்துழைக்காது, வெளிவராது... இவை அனைத்தையும் தாண்டி பத்து வருடமாக பங்களிப்பு செய்திருக்கிறீங்க என்பது பெருமைப்படவேண்டிய விஷயம்.//

      ரொம்பவும் சந்தோஷம் .... அதிரா.

      //ஆனா அப்படி இடம்பிடித்துவிட்டு, ஏன் விட்டீங்க, இடையிடையாவது பங்களிப்பு செய்யலாமெல்லோ... சரி அது உங்கள் விருப்பம்...//

      அதற்கெல்லாம் நிறைய பொறுமை வேண்டும். உழைப்பு வேண்டும். தபால் ஆபீஸுக்கு அலைய வேண்டும். சகிப்புத்தன்மை வேண்டும். அதெல்லாம் எனக்கு இப்போது சுத்தமாக இல்லை.

      //எங்கிருந்தாலும் நன்கு மிளிர வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.

      நீக்கு
  52. ஒரு காலத்தில் பத்திரிகைகளில் நம் படைப்புகள் வெளியாகாதா என நான் ஏங்கிய நாட்களும் உண்டு. //

    இப்ப இதே ஏக்கத்தில்தான் நான் இருக்கிறேன்.
    ஏதோ ஒன்றிரண்டு பத்திரிகைகளில் மற்றும் வலைப் பத்திரிகைகளில் என் படைப்புகள் வந்திருந்தாலும் .....

    உங்கள் ஆசியால் உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதோ அதில் சிறிதளவாவது பத்திரிகைகளில் வந்தாலே போதும்.

    உங்கள் படைப்புக்களை மீண்டும் தொடருங்கள்.’

    வாழ்த்துக்களுடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  53. JAYANTHI RAMANIMarch 10, 2013 at 11:25 PM

    வாங்கோ, வணக்கம்.

    ஆளையே காணோமே, என்ன ஆச்சோ ஏதாச்சோ என மிகவும் விசாரப்பட்டேன்.

    அழுகையே வந்துடுச்சுன்னு வெச்சுக்கோங்கோளேன்.


    *****ஒரு காலத்தில் பத்திரிகைகளில் நம் படைப்புகள் வெளியாகாதா என நான் ஏங்கிய நாட்களும் உண்டு. *****

    இப்ப இதே ஏக்கத்தில்தான் நான் இருக்கிறேன். ஏதோ ஒன்றிரண்டு பத்திரிகைகளில் மற்றும் வலைப் பத்திரிகைகளில் என் படைப்புகள் வந்திருந்தாலும் .....

    உங்கள் ஆசியால் உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதோ அதில் சிறிதளவாவது பத்திரிகைகளில் வந்தாலே போதும்.//

    நிச்சயமாக வரும். கவலையே படாதீங்கோ. உங்களிடம் ஓரளவு நல்ல எழுத்துத்திறமை உள்ளது. நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் எழுதுகிறீர்கள்.

    சோர்வு அடையாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கோ. நிச்சயம் ஒரு நாள் உங்கள் எழுத்துக்கள் வாசகர்களின் மத்தியில் ஜொலிக்கவே செய்யும்.

    //உங்கள் படைப்புக்களை மீண்டும் தொடருங்கள்.’
    வாழ்த்துக்களுடன் ஜெயந்தி ரமணி//

    நீங்கள் தொடர்ந்து வருகை தந்தால், வலைப்பக்கம் மட்டும் எழுதத் தயாராக உள்ளேன்.

    என்னுடைய இன்றைய ஏக்கம், உங்களைப்போன்ற பலரும் அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்களே, என்பது மட்டுமே.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்து[ப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். - பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தொடர்ந்து வருகை தந்தால், வலைப்பக்கம் மட்டும் எழுதத் தயாராக உள்ளேன்.

      என்னுடைய இன்றைய ஏக்கம், உங்களைப்போன்ற பலரும் அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்களே, என்பது மட்டுமே.//

      காணாம கண்டிப்பா போக மாட்டேன்.
      நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு தெரியாது.
      ஆனா, திடீர்ன்னு வருவேன். ஆம்ம்மாம்.

      “நீ பாத்துட்டுப் போனாலும், பாக்காம போனாலும் எழுதிக்கிட்டேதான் இருப்பேன்” அப்டீன்னு சொல்லுங்க.

      இது உமக்கு இட்ட கட்டளை.

      நீக்கு
    2. JAYANTHI RAMANIMarch 21, 2013 at 3:14 AM

      //காணாம கண்டிப்பா போக மாட்டேன்.//

      அப்பாடி ... சந்தோஷம்.

      //நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு தெரியாது. ஆனா, திடீர்ன்னு வருவேன். ஆம்ம்மாம்.//

      ரஜினி ஸ்டைலா? மிக்க மகிழ்ச்சி.

      //“நீ பாத்துட்டுப் போனாலும், பாக்காம போனாலும் எழுதிக்கிட்டேதான் இருப்பேன்” அப்டீன்னு சொல்லுங்க.//

      ஆஹா, மிகவும் அழகாக பாட்டாவே பாடிட்டீங்கோ! ;)))))
      You are really so Great ! [நகைச்சுவை வால் தனம் ரொம்பவும் ஜாஸ்தியாகவே உள்ளது. அதுதான் உங்களின் ப்ளஸ் பாயிண்ட்]

      // இது உமக்கு இட்ட கட்டளை. //

      ’ஜெ’ மேடத்தின் கட்டளை என்பதால், தமிழ்நாட்டின் சாமான்ய குடிமகனாகிய நான் அதற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டியுள்ளது.

      என்னை அரசாளும், அரசாங்கத்தின் கட்டளையை அடிபணிந்து ஏற்று மகிழ்கிறேன், மேடம். ;)))))

      நீக்கு
  54. உங்கள் தொடர் சாதனைகள் மகிழ்ச்சியைத் தருகின்றது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  55. மாதேவி March 13, 2013 at 6:18 AM

    வாருங்கள், வணக்கம்.

    //உங்கள் தொடர் சாதனைகள் மகிழ்ச்சியைத் தருகின்றது. வாழ்த்துகள்.//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  56. பதில்கள்
    1. Rathnavel Natarajan March 18, 2013 at 8:48 AM

      //அருமை. வாழ்த்துகள்.//

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.

      நீக்கு
  57. அப்பா !!!!!! ஸ்கோரல் ஸ்கோரல்........

    கடைசியாக வந்துள்ளதால் பெஞ்சு மேல நிக்க வச்சுடாதிங்க சார்.

    வாழ்த்துகள் வாழ்த்துகள்,வாழ்த்துகள் சார்,
    ***** ****** ****** *******
    ***********************
    ****************
    ***********

    பதிலளிநீக்கு
  58. அப்பா !!!!!! ஸ்கோரல் ஸ்கோரல்........

    கடைசியாக வந்துள்ளதால் பெஞ்சு மேல நிக்க வச்சுடாதிங்க சார்.

    வாழ்த்துகள் வாழ்த்துகள்,வாழ்த்துகள் சார்,
    *****
    *****
    *****************
    *****************
    ****************

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar March 24, 2013 at 6:25 PM

      வாங்கோ, வாங்கோ, வணக்கம். அதிசயமா இருக்கு. இன்று இங்கு நல்ல மழை பெய்யலாம் எனத் தோன்றுகிறது. அடிக்கும் வெயிலுக்கு மழை வந்தால் நல்லது தான். பார்ப்போம்.

      //அப்பா !!!!!! ஸ்கோரல் ஸ்கோரல்........//

      உங்களுக்கு என் பதிவுகளைப்படிப்பதைவிட, மற்றவர்களின் பின்னூட்டங்கள் என்ன சொல்கின்றன, அதற்கு நான் எழுதிய பதில் என்ன சொல்கிறது, என்பதைப்பார்ப்பதில் தான், ஆர்வம் அதிகம் என எனக்குத்தெரியும். அதனால் ஸ்கோரல் செய்து தான் ஆகவேண்டும் நீங்கள்.

      இல்லாவிட்டால் பதிவு இட்ட உடனேயே சூட்டோடு சூடாகக் கருத்துச்சொல்ல வரவேண்டும். அதுவும் பாவம் உங்களால் முடியாமல் உள்ளது. என்ன செய்வது? கடவுளே, கடவுளே!

      //கடைசியாக வந்துள்ளதால் பெஞ்சு மேல நிக்க வச்சுடாதிங்க சார்.//

      அச்சச்சோ, அப்படியெல்லாம் செய்வேனா? எப்போவந்தாலும் ரெட் கார்பெட் வரவேற்பு மட்டுமே. ரத்னக்கம்பள வரவேற்பு தான்.

      பெஞ்சு மேல யாரையும் நிற்க வைக்க மாட்டேன். அதுவும் பச்சை உடம்புக்காரங்களை அப்படியெல்லாம் செய்வது பாவமல்லவோ! ;)))))

      //வாழ்த்துகள் வாழ்த்துகள்,வாழ்த்துகள் சார்,//
      *****
      *****
      *****************
      *****************
      ****************//

      அடடா, எவ்ளோ வாழ்த்துகள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

      அதன் பிறகு எதையோ சொல்லும் 60 நட்சத்திரக்குறிகள் வேறு.;)

      தங்களின் அன்பான வருகைக்கும், சொல்லியுள்ள அழகான கருத்துக்களுக்கும், சொல்லாமல் விட்டுள்ள சங்கேத மொழி பாக்ஷைக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.

      நீக்கு
  59. அப்பாடா கண்ணைக்கட்டுதே.பத்திரிக்கையில் பாராட்டினவங்களை விட இந்த வலையுலத்தில் அதிக பேரு உங்க திறமையை நல்லா புரிஞ்சுகிட்டு மனதார பாராட்டுராங்க. எவ்வளவு பின்னூட்டங்கள் பாருங்க.ஒவ்வொருவருக்கும் நீங்க கொடுத்திருக்கும் பதி ல்பின்னூட்டங்கள் வெகு சுவாரசியம். பதிவு எழுதுவதை விட பதில் பின்னூட்டம் கொடுக்கத்தான் நிறையா நேரம் ஆகும் போல இருக்கே. நான் இப்படி உங்க பதிவெல்லாம் ஒன்னொன்னா படிச்சு பின்னூட்டம் போடத்தான் நேரம் சரியா போகுது. என் பக்கம் போயி புது பதிவு போடக்கூட நேரம் கிடைக்க மாட்டேங்குது. நீங்களும் உள்ளுக்குள்ள ஒன்னொன்னா நிறையா லிங்க் கொடுத்திருக்கீங்க. அதெல்லாம் எப்ப போயி படிக்க ப்போறேனோ?மஜா ஆயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 26, 2013 at 9:19 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அப்பாடா கண்ணைக்கட்டுதே.//

      என்னங்க சின்ன வயசுலேயே இப்படிக்கண்ணைக்கட்டுவதாகச் சொல்றீங்க ;(. நல்ல கண் டாக்டரைப்போய் பாருங்கோ.

      //பத்திரிக்கையில் பாராட்டினவங்களை விட இந்த வலையுலத்தில் அதிக பேரு உங்க திறமையை நல்லா புரிஞ்சுகிட்டு மனதார பாராட்டுராங்க. எவ்வளவு பின்னூட்டங்கள் பாருங்க//

      ஆமாங்க. எல்லோருடைய பின்னூட்டங்களும் தான் எனக்கு
      உற்சாகம் தரும் டானிக்கா இருக்குது.

      .//ஒவ்வொருவருக்கும் நீங்க கொடுத்திருக்கும் பதில் பின்னூட்டங்கள் வெகு சுவாரசியம். பதிவு எழுதுவதை விட பதில் பின்னூட்டம் கொடுக்கத்தான் நிறையா நேரம் ஆகும் போல இருக்கே.//

      ஆமாங்க. சுவாரஸ்யமே அதிலே தான் இருக்குது. பதில் எழுத மட்டுமே சுத்தமா ஒரு நாளுக்கு மேல் ஆகிவிடுகிறது.

      இருந்தாலும் அதில் ஒரு ஆத்ம திருப்தி உள்ளது. எனக்கும் பின்னூட்டம் கொடுத்தவருக்கும் அதுவே நட்பின் பாலம் போன்று அமைகிறது.

      //இப்படி உங்க பதிவெல்லாம் ஒன்னொன்னா படிச்சு பின்னூட்டம் போடத்தான் நேரம் சரியா போகுது.//

      ஒரேயடியாக சிரமப்படாதீங்கோ. தினமும் ஒரு அரை மணி நேரம் மட்டும் என் ஏதாவது ஒரு பதிவைப்படித்து விட்டு, அதற்கு ம்ட்டும் பின்னூட்டம் கொடுப்பது என நேரத்தை திட்டமிட்டு ஒதிக்கீடு செய்துகொள்ளுங்கள்.அது தான் நல்லது.

      //என் பக்கம் போயி புது பதிவு போடக்கூட நேரம் கிடைக்க மாட்டேங்குது.//

      உங்களின் புதுப்பதிவுக்கு நேரம் ஒதிக்கிக்கொண்டு அதன் பிறகே மற்றவர்கள் பதிவுப்பக்கம் போக வேண்டும். நேரத்தை நன்கு திட்டமிடல் வேண்டும்.

      நான் அதற்குத்தான் எல்லா பதிவுகளுக்கும் போவதே இல்லை. குறிப்பிட்ட சில பதிவுகளுக்கு மட்டுமே செல்வதுண்டு.

      மொத்தமாக ஒரு 10 பதிவர்கள் பக்கம் மட்டுமே செல்ல முயற்சிப்பேன்.

      அதுவே சமயத்தில் எனக்கு முடியாமல் போய்விடுகிறது.

      இதனால் சிலருக்கு என் மீது கோபம் கூட ஏற்படுகிறது.

      அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதும் இல்லை.

      // நீங்களும் உள்ளுக்குள்ள ஒன்னொன்னா நிறையா லிங்க் கொடுத்திருக்கீங்க. அதெல்லாம் எப்ப போயி படிக்க ப்போறேனோ? மஜா ஆயா.//

      அது உங்களுக்காக மட்டுமே கொடுக்கப்படுவது இல்லை. படிக்கும் சிலருக்கு, நூற்றில் ஒருவருக்காவது பயன்படக்கூடும் என்பதால் கொடுத்து வருகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  60. அசத்தல் படைப்புகளை வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  61. பூந்தளிர் August 15, 2015 at 6:44 PM
    :)))))))

    பூந்தளிர் August 17, 2015 at 4:08 PM
    :)))))))))

    என்ன ஆச்சு? ஒரே குஷியா இருக்கீங்க போலிருக்கே! அக்டோபர் (தீபாவளி) நெருங்கப்போவுதேன்னு ஜாலியா இருக்கீங்களோ :))))))) + :))))))))) = :))))))))))))))))

    இந்த வருஷம் நவம்பர் 10ம் தேதிதான் தீபாவளி. நீங்க திருச்சி சாரதாஸ் ஜவுளிக் கடலிலேயே புடவை முதலியன வேண்டியதை ஜாலியா எடுத்துட்டுப் போய் விடலாம். :)

    பதிலளிநீக்கு
  62. பரிசு மளல இப்பூடில்லா நனஞ்சிகிட்டே கெடந்தா ஜல்ப் புடிச்சிடுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 1:29 PM

      வாங்கோ, முருகு, வணக்கம்மா.

      //பரிசு மளல இப்பூடில்லா நனஞ்சிகிட்டே கெடந்தா ஜல்ப் புடிச்சிடுங்கோ.//

      புடிச்சிருச்சு.

      ஹச் .... ஹச் .... ஹச் .... ஹச் ....
      ஹச் .... ஹச் .... ஹச் .... ஹச் ....
      ஹச் .... ஹச் .... ஹச் .... ஹச் ....
      ஹச் .... ஹச் .... ஹச் .... ஹச் ....

      எனக்கு ஒரே தொடர் தும்மலாக வருகிறது. எல்லாம் உங்களாலே வந்தது மட்டுமே :)

      நீக்கு
  63. உங்க படைப்புகள் தொடர்ந்து பல பத்திரிகைகளில் வருவது பற்றி மகிழ்ச்சி. அதை நீங்க இங்கு பகிர்ந்து கொண்டதால நாங்களும் திரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துகள். பத்திரிகைகளில் கதைக்கு ஒன்று இரண்டு கமண்டுகளதான் வெளியிடுவார்கள். ஆனா இங்க எத்தனை பேர் வந்து கமண்ட் போட்டு உற்சாக படுத்துகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  64. வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச்சேரும்...சரிதானே?!!!

    பதிலளிநீக்கு