tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2230815134951946307..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 17வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58490900431134753152016-04-24T13:40:25.865+05:302016-04-24T13:40:25.865+05:30Geetha Sambasivam April 24, 2016 at 9:28 AM
வாங்...Geetha Sambasivam April 24, 2016 at 9:28 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//அம்பை என்றாலே அந்திமாலை தான் முதலில் நினைவில் வரும். அவர் எழுத்துக்களைப் படித்துள்ளேன், பலவற்றில் கருத்து வேறுபாடு இருந்தாலும். :)//<br /><br />அச்சா !<br /><br />//பாலகுமாரனை ஒரு காலத்தில் அதிகம் படித்து வந்தாலும் பின்னால் ஓர் அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டு விட்டது! பெண்களைப் பற்றி எல்லாம் தெரிந்தாற்போல் காட்டிக்கொள்ளும் சுபாவத்தினாலோ! என்னனு தெரியலை! இப்போதெல்லாம் படிப்பதே இல்லை! :) பாலகுமாரனின் ஆரம்ப கட்ட நாவல்கள் தவிர்த்து மற்றவை படித்ததே இல்லை. படிக்கணும்னு ஆசையும் இல்லை! :)//<br /><br />பஹூத் அச்சா !!<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், மனம் திறந்த நேர்மையான கருத்துக்களுக்கும் என் நன்றிகள், மேடம். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9930865277243476612016-04-24T09:28:44.347+05:302016-04-24T09:28:44.347+05:30அம்பை என்றாலே அந்திமாலை தான் முதலில் நினைவில் வரும...அம்பை என்றாலே அந்திமாலை தான் முதலில் நினைவில் வரும். அவர் எழுத்துக்களைப் படித்துள்ளேன், பலவற்றில் கருத்து வேறுபாடு இருந்தாலும். :) பாலகுமாரனை ஒரு காலத்தில் அதிகம் படித்து வந்தாலும் பின்னால் ஓர் அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டு விட்டது! பெண்களைப் பற்றி எல்லாம் தெரிந்தாற்போல் காட்டிக்கொள்ளும் சுபாவத்தினாலோ! என்னனு தெரியலை! இப்போதெல்லாம் படிப்பதே இல்லை! :) பாலகுமாரனின் ஆரம்ப கட்ட நாவல்கள் தவிர்த்து மற்றவை படித்ததே இல்லை. படிக்கணும்னு ஆசையும் இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6259605311406899212016-04-23T23:34:12.325+05:302016-04-23T23:34:12.325+05:30அப்பாதுரை April 23, 2016 at 10:14 PM
//பாலகுமாரன...அப்பாதுரை April 23, 2016 at 10:14 PM<br /><br />//பாலகுமாரன் ஒன்றிரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன். என்னவோ அவர் எழுத்து என்னை ஈர்க்கவில்லை.//<br /><br />இருக்கலாம். ஒவ்வொருவர் டேஸ்ட் ஒவ்வொருவிதம். அதனாலும்கூட இருக்கலாம். அதனால் பரவாயில்லை, சார். <br /><br />//அவருடைய ஆரம்பகால புதுக்கவிதை வரிகள் சில இன்றும் நினைவிருக்கின்றன.//<br /><br />அச்சா, பஹூத் அச்சா.<br /><br />தங்கள் அன்பான வருகைக்கும், நேர்மையான + தெளிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29325090111169534002016-04-23T23:30:51.118+05:302016-04-23T23:30:51.118+05:30அப்பாதுரை April 23, 2016 at 10:13 PM
வாங்கோ சார்...அப்பாதுரை April 23, 2016 at 10:13 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />**“அம்மா! பருவம்ன்னா என்னம்மா?”<br />மெளனம். நீண்ட நேர மெளனம்.<br />அம்மா திடீரென்று சொல்கிறாள் <br />“நீ இப்படியே, இருடீம்மா... பாவாடையை அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு.”**<br /><br />//beautiful!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் Beautiful என்ற Beautiful கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48544712679937589062016-04-23T22:14:53.494+05:302016-04-23T22:14:53.494+05:30பாலகுமாரன் ஒன்றிரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன்...பாலகுமாரன் ஒன்றிரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன். என்னவோ அவர் எழுத்து என்னை ஈர்க்கவில்லை. அவருடைய ஆரம்பகால புதுக்கவிதை வரிகள் சில இன்றும் நினைவிருக்கின்றன.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33701005364816241242016-04-23T22:13:29.813+05:302016-04-23T22:13:29.813+05:30//“அம்மா! பருவம்ன்னா என்னம்மா?”
மெளனம். நீண்ட நேர...//“அம்மா! பருவம்ன்னா என்னம்மா?”<br /><br />மெளனம். நீண்ட நேர மெளனம்.<br /><br />அம்மா திடீரென்று சொல்கிறாள் <br /><br />“நீ இப்படியே, இருடீம்மா... பாவாடையை அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு.”//<br /><br />beautiful!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32175262999806973222016-04-19T13:59:39.311+05:302016-04-19T13:59:39.311+05:30வறுமை காரணமில்லை கோமதியம்மா. பெண்ணின் நிறம் கருப்ப...வறுமை காரணமில்லை கோமதியம்மா. பெண்ணின் நிறம் கருப்பு என்பதினால் கருப்பை ஒதுக்கும் கல்யாண சந்தை வியாபாரத்தை நினைத்துக் கவலை கொள்ளும் தாய் மனம் படுகிற பாடு. <br /><br />//அம்பை அவர்கள் எழுதியுள்ள அந்த முழுக்கதையையும் தங்களுக்கு நான் இப்போது தனி மெயில் மூலம் அனுப்பியுள்ளேன். முடிந்தால் படித்துப்பாருங்கோ.//<br /><br />நல்ல காரியம் செய்தீர்கள், கோபு சார்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1869964466000862652016-04-19T13:21:59.715+05:302016-04-19T13:21:59.715+05:30கோமதி அரசு April 19, 2016 at 12:38 PM
வாங்கோ மேட...கோமதி அரசு April 19, 2016 at 12:38 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//அம்பையின் கதையை படிக்கவில்லை. ஆனால் பின்னூட்டங்கள் மூலம் தாய் பேசியது தப்பு என்றும் சரிஎன்றும் கருத்து பரிமாற்றம் நடக்கிறது. .......//<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான பல கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />அம்பை அவர்கள் எழுதியுள்ள அந்த முழுக்கதையையும் தங்களுக்கு நான் இப்போது தனி மெயில் மூலம் அனுப்பியுள்ளேன். முடிந்தால் படித்துப்பாருங்கோ.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66438325886253247142016-04-19T12:38:20.873+05:302016-04-19T12:38:20.873+05:30அம்பையின் கதையை படிக்கவில்லை ஆனால் பின்னூட்டங்கள் ...அம்பையின் கதையை படிக்கவில்லை ஆனால் பின்னூட்டங்கள் மூலம் தாய் பேசியது தப்பு என்றும் சரிஎன்றும் கருத்து பரிமாற்றம் நடக்கிறது.<br /><br /><br /> கதைப்படி அந்தக்காலத்தில் பெண் அழகாய் இருக்கனும், நிறைய பணம் நகையோடு வரனும் என்ற காலகட்டம். பெண் குழந்தைகளை விளையாட விடாமல் பெரியமனுஷியாக லட்சணமாய் இரு என்று அதட்டும் காலம். அதனால் தான் மகள் கேள்விக்கு அம்மா இப்படி பதில் சொல்கிறார் பருவம் அடைந்தால் மகள் இன்பமாய் இருக்க முடியாது என்று நினைக்கிறாள். அம்மா சின்ன வயதில் பட்ட கஷ்டங்கள் மகளுக்கு வேண்டாம் என்று நினைக்கிறாள் போலும்.<br /><br /> //அம்மா! பருவம்ன்னா என்னம்மா?”<br /><br />மெளனம். நீண்ட நேர மெளனம்.<br /><br />அம்மா திடீரென்று சொல்கிறாள் <br /><br />“நீ இப்படியே, இருடீம்மா... பாவாடையை அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு.”//<br /><br />இக் கதை மகளின் சொல்வது போல் இருப்பதால் மகள் பார்வையும் கருத்தும் வேறு மாதிரி இருக்கிறது. தான் பருவம் அடைந்த விஷ்யத்தை பாரம் என்றும் அந்த விஷ்யம் கொண்டாடபடவில்லை என்றும் நினைக்கும் போது அந்த பிஞ்சு மனம் வேதனைப்படுகிறது என்று நினைக்கிறேன்.<br /><br />கதையை முழுவதும் படித்து விட்டு மீண்டும் கருத்து சொல்கிறேன்.<br /><br />பாலகுமரன் கதை நிறைய படித்து இருக்கிறேன். தாயுமானவன் கதையில் தன் மகள் பெரியவள் ஆனதை அவள் அம்மா இல்லாமல் தந்தையே தனக்கு தெரிந்த மாதிரி கொண்டாடுவது என்ற விஷயத்தை சொல்லி இருப்பார்.<br />மீண்டும் வருகிறேன்.<br />உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் சார்.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47981199456846385292016-04-18T22:19:44.190+05:302016-04-18T22:19:44.190+05:30இப்பொழுது தான் பார்த்தேன்.
'அந்த'முழுக் ...இப்பொழுது தான் பார்த்தேன்.<br /><br />'அந்த'முழுக் கதையையும் படித்து விட்டு எழுதுவதான கருத்துக்கு நன்றி கீத மஞ்சரி.<br /><br />அந்த பதிமூன்று வயது பெண்ணுக்கு, 'என்ன இது? எதனால் இது? என்ற குழப்பம் ஓரளவு முருக்குப் பாட்டியின கவனிப்பால் தீர்ந்திருக்கும் என்றாலும் அம்மா உதிர்த்த வார்த்தைகள் தீயாகச் சுட்டிருக்கும் என்று கொண்டாலும் பெற்ற அம்மாவின் அந்த வெடிப்புக்கும் அம்பையே தகுந்த காரணமும் சொல்லியிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.<br /><br />இருப்பினும் மனோதத்துவ ரீதியில் அந்த 13 வயது பெண்ணுக்கு அந்த திடீர் சீறல் 'தான் எந்த விதத்தில் இந்த எழவுக்குக் காரணம்?' என்று விடை தெரியாத கேள்வியாய் திகைக்க வைத்திருக்கலாம். மறுப்பதற்கில்லை. <br /><br />ஆனால் இப்படி ஒவ்வொன்றுக்கும் பெற்றோர்கள் பார்த்து பார்த்து தங்கள் குழந்தைகளிடம் பேச வேண்டும் என்ற எதிர்ப்பார்பும் தீங்கானதே. வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியவர்களுக்கு இப்படித் தொட்டாற்சுருங்கியாய் இருக்கும் மனநிலையும் ஒரு மனரீதியான குறைபாடாகவே எதிர்காலத்தில் ஆகிப்போகும்.<br /><br />அந்த நிகழ்வு நடக்காது நாள் தள்ளிப் போனாலும் அந்தத் தாயே நொந்து நூலாகிப் போவாள் என்பதையும் என் நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். <br /><br />ஆக, அந்த அப்பாவி அம்மாவை ரொம்பவும் காய்ச்ச வேண்டாம், ப்ளீஸ்..<br /><br />எல்லாம் கதாசிரியர்கள் பண்ணுகிற வேலை. தாங்கள் எடுத்துக் கொள்ளும் விஷயத்தை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற கலையைக் கற்றவர்கள் அவர்கள். <br /><br />அதெல்லாம் போகட்டும்.. தன் பெண்ணுக்கு இஜ்த பெருமைமிகு நிகழ்வு நடைபெறும் பொழுது அந்தத் தாயின் மனநிலை எப்படியிருக்கும்?.. <br /><br />பெற்றெடுத்தத் தாய்களாலேயே உணர்வு பூர்வமாக உணரப்படும் உன்னத மன இயல் கேள்வி இது!..<br /><br />இந்தக் கதையை அம்பை அவர்கள் எழுதுவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே நான் எழுதிய சிறுகதை ஒன்று பத்திரிகையில் வெளி வந்திருக்கிறது.. 'வான்மதி' என்ற அந்தப் பத்திரிகையும் அம்பை அந்தக் காலத்தில் வாழ்ந்த கோவையிலிருந்தே வெளிவந்திருப்பதும் ஆச்சரியம்!<br /><br />விரைவில் தேடி எடுத்து அந்தக் கதையை என் பூவனம் தளத்தில் பிரசுரிக்கிறேன். <br /><br />தாய் ஸ்தானத்தில் படித்துக் கருத்துச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்..<br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84213948700971546212016-04-18T18:16:46.699+05:302016-04-18T18:16:46.699+05:30அம்மா ஒரு கொலை செய்தாள் கதையை வாசிக்காவிடினும் இங்...அம்மா ஒரு கொலை செய்தாள் கதையை வாசிக்காவிடினும் இங்கு சுட்டப்பட்ட கருத்துகளைக் கொண்டு தாய்மைக்கும் நிறமுண்டு என்று குறிப்பிட்டேன். அது சரியல்லவென்று தாங்கள் சுட்டி அளித்த விளக்கத்துக்கு மிகவும் நன்றி ஜீவி சார். இன்று கோபு சாரின் தயவால் முழுக்கதையையும் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. இப்போது அந்த வார்த்தையை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனாலும் தங்கள் கருத்திலிருந்து சற்று மாறுபடத்தான் செய்கிறேன். இந்தக் கதை ஒரு பதிமூன்று வயதுப் பெண்ணின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டிருப்பதால் அந்த நேரத்தில் அச்சிறுமியின் மனப்பிரதிபலிப்பு அப்படித்தான் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. எழுதியவர் அம்பை என்பதால்தான் இவ்வளவு விமர்சனம் என்பதும் புரிகிறது. அந்தச்சிறுமியின் நிலையில் என்னையோ என் பெண்ணையோ இருத்திப் பார்த்தாலும் அந்த மனநிலை மாறவில்லை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1027716300987576452016-04-17T23:02:22.885+05:302016-04-17T23:02:22.885+05:30வணக்கம் ஜீவி சார்!
விரிவான அலசலுடன் கூடிய விளக்கத்...வணக்கம் ஜீவி சார்!<br />விரிவான அலசலுடன் கூடிய விளக்கத்துக்கு என் முதல் நன்றி! <br />அந்தக் கருப்பு விஷயத்தைப் பிரதானப்படுத்தாமல், பிரதானப்படுத்தியிருந்தாலும், அந்தக் கருப்பைப் பொருட்படுத்தாத ஒரு தீர்வு, இந்தக் கதையில் முக்கியப்படுத்தியிருந்தால், அது கருப்பை வெறுத்த, வெறுக்கிற நிற ஒதுக்கலுக்கு எதிரான அந்தஸ்தை இது பெற்றிருக்கும் என்று தாங்கள் சொல்லியிருப்பது சரியே. அம்பை என்பதால் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது என்பதும் உண்மை தான். <br />இக்காலத்தில் அம்பை இதை எழுதியிருப்பாரே யானால், என் திறமையை மதிக்காது, என் நிறத்தை மட்டுமே பார்க்கும் ஒருவனை நான் திருமணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்று அப்பெண் போர்க்கொடி உயர்த்தி நிராகரிப்பதாக எழுதியிருப்பாரோ என்னவோ?<br />என் கருத்துக்களையும் பொறுமையாகப் படித்து ரசித்துப் பாராட்டியமைக்கு மனமார்ந்த நன்றி ஜீவி சார்! என் கருத்தை வெளியிட்ட திரு கோபு சார் அவர்களுக்கும், என் நன்றி. <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43700526007624020532016-04-17T21:18:31.815+05:302016-04-17T21:18:31.815+05:30தி.தமிழ் இளங்கோ April 17, 2016 at 9:03 PM
//அன்ப...தி.தமிழ் இளங்கோ April 17, 2016 at 9:03 PM<br /><br />//அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.// <br /><br />வாங்கோ சார், வணக்கம்.<br /><br />//நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் பாலகுமாரன் அவர்கள் அறிமுக எழுத்தாளர். எனவே அப்போது அவரது எழுத்துக்களை அதிகம் வாசித்தது இல்லை.<br /><br />ஓஹோ, அப்படியா!!!!!<br /><br />//அவர் ‘எழுத்துச் சித்தர்’ ஆன பிற்பாடுதான், கடந்த சில வருடங்களாக அவரது நூல்களை வாசித்து இருக்கிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, சார்.<br /><br />//அதிலும் அவர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில், பழமார்நேரிக்காரர் என்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. காரணம் எனது அம்மாவின் ஊரும் இந்த (மேலத்) திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில்தான்.//<br /><br />அடடா, நம்மூர் பக்கமாச்சே. கல்லணை தாண்டியதும் உடனே வந்துவிடுமே. திருக்காட்டுப்பள்ளிக்கு மிக அருகில்தான் பிரபல வரஹூர் பெருமாள் கோயிலும் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் உரியடி உத்ஸவம் உலகப் பிரஸித்தி பெற்றது ஆச்சே ! நான் வரஹூருக்கு (உங்கள் அம்மா ஊரான திருக்காட்டுப்பள்ளி வழியே) பலமுறை போய் வந்துள்ளேன். <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் ஆச்சர்யமான செய்திகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27546257225386407142016-04-17T21:03:06.875+05:302016-04-17T21:03:06.875+05:30அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நான் கல்லூரியி...அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் பாலகுமாரன் அவர்கள் அறிமுக எழுத்தாளர். எனவே அப்போது அவரது எழுத்துக்களை அதிகம் வாசித்தது இல்லை. அவர் ‘எழுத்துச் சித்தர்’ ஆன பிற்பாடுதான், கடந்த சில வருடங்களாக அவரது நூல்களை வாசித்து இருக்கிறேன். அதிலும் அவர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில், பழமார்நேரிக்காரர் என்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. காரணம் எனது அம்மாவின் ஊரும் இந்த (மேலத்) திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில்தான். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35691922095418830022016-04-17T19:39:34.052+05:302016-04-17T19:39:34.052+05:30நீண்ட பதிலுக்கு நன்றி, கலையரசி மேடம்.
உங்கள் பார...நீண்ட பதிலுக்கு நன்றி, கலையரசி மேடம்.<br /><br />உங்கள் பார்வையில் எல்லாம் சரியே. கருத்தை சரியாகக் கையாளவைல்லை என்று சொல்ல வந்தது கருத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்ற அர்த்தத்தில். <br /><br />அந்த அம்மா தன் பெண்ணின் மேல் வைத்திருந்த பாசமும் அன்பும் அந்த நாளே அவளைப் பக்கத்தில் அம்ர்ந்திக் கொண்டு பேச வைத்திருக்கும்..<br /><br />தன் அம்மா சொல்வதை வேதவாக்காகக் கொள்ளும் அந்தப் பெண்ணும் அன்றே சகஜமான அம்மாவின் உரையாடலால் சரியாகியிருப்பாள். இதுவே யதார்த்தம்.<br /><br />ஆனால் கதையை இப்படித் தான் எழுத வேண்டும் என்று தீர்மானம் பண்ணி விட்டு அதற்காக முன்னேற்பாடுடன் கூடிய அடித்தளமும் அமைத்து எழுதும் பொழுது நீங்கள் சொல்வது மாதிரி தான் எடுத்துக் கொள்ள தோன்றும்.<br /><br />கதாசிர்யர் எழுதியிருக்கிற எடுத்துக் காட்டுகளைக் கோண்டு கதையை நியாயப்படுத்த முயற்சித்தால் இதில் ஒன்றும் தப்பில்லையே என்று தான் நினைக்கத் தோன்றும்.<br /><br />வறுமையான குடும்பங்களில் அடுத்தடுத்துக் குழந்தையைப் பெற்ற அந்தக்கால வாயும் வயிறுமாக இருந்த தாய்மார்கள் கூட் "இது இல்லேன்னு இப்போ யார் அழுதா?" என்று அலுப்பில் சொல்லிக் கொண்டதுண்டு. குழந்தை பிறந்ததும் அந்த வெறுப்பும் அலுப்பும் போன இடம் தெரியாது. எத்தனை குழந்தைகள் இருந்தாலும் குடும்பக் கட்டுப்பாடு அமுலில் இல்லாத அந்தக் காலத்தில் குழந்தைகளின் பிறப்பை ஏற்றுக் கொள்ளவே செய்தார்கள்.<br /><br />'இந்த இழவு இல்லேன்னு இப்போ யார் அழுதா?" என்ற ஒரே ஒரு சுடுசொல் அசந்தர்ப்பமாய் அந்த அம்மா வாயிலிருந்து வந்ததற்கு தன் பெண்ணின் மனசை ஹதம் பண்ணிவிட்டதாக அதீத கற்பனை கொள்ளுமாறு கதையை நடத்திச் சென்றிருக்க வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.<br /><br />ஆண்களுக்கு பிடித்ததை அவர்கள் விரும்புவதை ஆதரிப்பதே ஒரு காலத்து வழக்கமாக இருந்தது. இந்த கருப்பு ஒதுக்கல், சிவப்புத் தோலின் ஆசை எல்லாம் அந்த அடிப்படையில் தீர்மானம் ஆனவை. அந்த அம்மாவின் குழப்பமும் அந்த ஆண் ஆதிக்க வலையில் சிக்கிக் கொண்டதினால் தான்.<br /><br />அந்த பழக்கத்தில் தான் அந்தப் பெண்ணின் அப்பா கூட,<br />'எங்கேடி இந்த கருப்பு?" என்று விளிக்கிற மாதிரியில் தன் பெண்ணை அழைக்கிறார். 'கருப்பு' என்றே தன்னை அழைப்பதற்கு பழக்கப்பட்டுப் போன பெண்ணுக்கு விளக்கிச் சொல்லும் பொழுது 'கருப்பு' ஒன்றும் பிரச்னையாகிப் போயிருக்காது.<br /><br />"நீ எப்படிம்மா இப்படி வெளுப்பா இருக்கே?" என்று பெண் கேட்கும் பொழுது, "கருப்பு--வெளுப்பில் என்னடி, இருக்கு?" என்று சொல்லின் சீராட்டலில் குழந்தையை வளர்த்திருக்க வேண்டும்.<br /><br />பருவமடைந்த குழந்தையைக் கட்டிக் கொண்டு, " கருப்பா இருந்தா என்ன?.. இவளுக்கென்று ஒரு ராஜா பிறந்திருப்பான், பாருங்கோ" என்று தன் புருஷனிடம் அந்த அம்மா சொல்வதாக கதையைக் கொண்டு போயிருந்தால் இந்த கருப்பு விஷயம் பிரதானப்பட்டிருக்காது.<br /><br />"நான் வெளுப்பு; நீங்கள் கருப்பு.. நமக்காகலையா?.. அந்த மாதிரி தான் நம் பெண்ணுக்கும் நடக்கும் பாருங்கோ.." என்று அவள் சொல்வதாக, அவள் கணவனின் நிறத்தைக் கருப்பாக்கி, கருப்பை சாதாரணமான விஷயமாக்கியிருக்க லாம் மட்டுமில்லை.. பெண்ணின் கருப்பு நிறத்திற்கு காரணம் கூடச் சொல்லியிருக்கலாம்.<br /><br />இந்தக் குடும்பமும் பெண்ணின் கருப்பை பெரிதாக நினைத்துக் குழம்பாமல் கருப்புக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கும்.<br /><br />அந்த கருப்பு விஷயத்தைப் பிரதானப்படுத்தாமல், பிரதானப்படுத்தியிருந்தாலும் அந்தக் கருப்பைப் பொருட்படுத்தாத ஒரு தீர்வு இந்தக் கதையில் முக்கியப் படுத்தியிருந்தால், அது கருப்பை வெறுத்த அந்தக்கால நிற ஒதுக்கலுக்கு எதிரான போர்க்கொடி உயர்த்திய அந்தஸ்த்தை இந்தக் கதை பெற்றிருக்கும்.<br /><br />இன்றைய பெண்ணியக்கம் சாரந்த எண்ணம் கொண்டவராஉ அன்றைய அம்பை அவர்கள் இல்லாதிருந்திருக்கலாம். குறைந்தபட்சம், இந்த 'அம்மா ஒரு கொலைச் செய்தாள்' என்று கதையை எழுதும் பொழுது. அதனால் தான் கதை அப்படி அமைந்து விட்டது. இன்றைய அம்பையாய் இருந்தால் இந்தக் கதையையே வேறு மாதிரி எழுதுவார் என்று அதற்காகத் தான் சொன்னேன்.<br /><br />கலைமகளில் தொடராக வந்து பரிசு பெற்ற தன் 'அந்திமாலை' கதையை நினைத்தால் எனக்கு சிரிப்பாகத் தான் வருகிறது என்று அம்பையே சொல்லுவார். அந்த அளவுக்கு அவரது பிற்கால வளர்ச்சி இருந்திருக்கிறது.<br /><br />இந்தக் கதையே சிவசங்கரி எழுதியிருந்தால் நாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை. எழுதியிருப்பது அம்பை என்பதால் தான் நம் எதிர்பார்ப்பு கூடிப் போயிருக்கிறது. <br /><br />தங்கள் வாதத்தை ரசித்தேன். பாராட்டுக்கள்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58350437700461306912016-04-17T19:31:15.665+05:302016-04-17T19:31:15.665+05:30mru April 17, 2016 at 7:16 PM
வாங்கோ மின்னலு ......mru April 17, 2016 at 7:16 PM<br /><br />வாங்கோ மின்னலு .... முருகு, வணக்கம்மா.<br /><br />//குருஜி.... வரவேணாம்னுதா நெனச்சி பிட்டேன்.. //<br /><br />அச்சச்சோ ... அப்படியெல்லாம் அந்த ரோஜா டீச்சர் போல நினைக்கவே கூடாது. வேண்டாம், அப்புறம் நான் அளுதுடுவேன் .....:)<br /><br />//படங்கள் அல்லா என்ன வா வா னு கூப்பிடுது...//<br /><br />முருகுவின் ரசனைக்காகவே காட்டப்பட்டுள்ள படங்களாக்கும், அவையெல்லாம். :))<br /><br />//மேல ரோஸாபூவு பட்டர்ப்ளை சொலிக்குது.... பொறவால நெக்லஸு...... மூடி மூடி தொறக்குற ரோஸாபூவு அல்லாமே நல்லாகீது....//<br /><br />முருகு, நீங்க மட்டும்தான் இதையெல்லாம் பற்றி, அழகா ரசித்துச் சொல்லியிருக்கீங்க. மொத்தத்தில் மிகவும் வெவரமான புத்திசாலிப் பொண்ணு நீங்க.:) வாழ்க !<br /><br />அன்பான வருகைக்கும், சும்மா ஜோரா ஜொலிக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, முருகு. :)<br /><br />பிரியமுள்ள குருஜி கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21661342250090925572016-04-17T19:16:59.538+05:302016-04-17T19:16:59.538+05:30குருஜி.... வரவேணாம்னுதா நெனச்சி பிட்டேன்.. படங்கள...குருஜி.... வரவேணாம்னுதா நெனச்சி பிட்டேன்.. படங்கள் அல்லா என்ன வா வா னு கூப்பிடுது... மேல ரோஸாபூவு பட்டர்ப்ளை சொலிக்குது.... பொறவால நெக்வஸு...... மூடி மூடி தொறக்குற ரோஸாபூவு அல்லாமே நல்லாகீது....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8190772045398009872016-04-17T18:41:12.981+05:302016-04-17T18:41:12.981+05:30ஸ்ரீராம். April 17, 2016 at 6:05 PM
//இந்த விவாத...ஸ்ரீராம். April 17, 2016 at 6:05 PM<br /><br />//இந்த விவாதத்தைப் பார்த்தால் அந்தக் கதையைப் படித்தே ஆக வேண்டும் போலுள்ளதே...//<br /><br />எழுத்துலகில், அதுவும் இதுபோன்ற இரு பண்டிதர்கள் மத்தியில், சூடான சுவையான விவாதங்கள் நிகழ்வது மிகவும் ஆரோக்யமானதும், சுவாரஸ்யமானதுமாகவே இருக்கக்கூடும். <br /><br />’அம்பை’ அவர்கள் எழுதிய அந்த முழுக்கதையையும் நான் இப்போது படித்து முடித்துவிட்டேன். ராமபாணமான ‘அம்பை’ப் போல, அது என்னிடமிருந்து தங்களை நோக்கி வெகு வேகமாகப் புறப்படத் தொடங்கிவிட்டது. தாங்களும் படித்து மகிழுங்கள். <br /><br />‘ஸ்வாஹா’ என அக்னிக்கு நெய் ஊற்றுவதுபோல இந்த விவாதங்களுக்கு உங்கள் பங்குக்கு கொஞ்சம் நெய் ஊற்றி அக்னி அணையாமல் மேலும் கொழுந்து விட்டு எரியச்செய்து புண்ணியத்தைக் கட்டிக்கொள்ள உதவலாம். :) <br /><br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! :)<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35021418976993985412016-04-17T18:12:41.490+05:302016-04-17T18:12:41.490+05:30அந்தக் கதையைப் படிக்காமலேயே என் கருத்தைச் சொல்வது ...அந்தக் கதையைப் படிக்காமலேயே என் கருத்தைச் சொல்வது சரியில்லைதான். எனினும் ஜீவி ஸார் சொல்லி இருப்பது போல படைப்பாளி யாருடைய பார்வையிலிருந்து கதையைப் படைக்கிறார் என்பதைப் பொறுத்துதான் பெரும்பாலான வாசகர்கள் பார்வை அமைகிறது. பல வாசகர்கள் அதைத் தாண்டி வேறு விதமாக்கவும் யோசிக்கிறார்கள். அந்தச் செயலையும் சிலவேளை எழுத்தாளரே மறைமுகமாகத் தூண்டுகிறார். பெரும்பாலான சமயங்களில் படிக்கப்படும் அந்தப் படைப்பு வாசகனின் வாழ்வனுபவத்தோடு ஏதோ ஒரு வகையில் எங்கோ ஓரிடத்தில் ஒன்றுகிறது. எதையோ நினைவு படுத்துகிறது. அதை ஒட்டியும் வாசகனுக்கான பாதிப்பு நேர்கிறது.<br /><br />கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு காட்சி. முதலாளியின் மகள் தன்னை விரும்புவதாக நினைத்து ஏமாந்த கதாநாயகன். அவன் உயரத்தில் மிகக் குறைந்தவன். நண்பர்களுக்கு மட்டுமே அவன் தோல்வி தெரியும். நிலை உணராத அவன் தாய் முதலாளியிடம் அவர் மகளின் காதல் குறித்து சமாதானம் செய்யும்போது "மாப்பிள்ளை என் மகன் போலக் குள்ளனாக இருந்தாலும் நீங்கள் மறுக்கலாம்" என்பது போலச் சொல்வதைக் கேட்கும் நாயகன் உடையும் இடமும், பின் தொடரும் காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53686160801177684442016-04-17T18:05:01.829+05:302016-04-17T18:05:01.829+05:30இந்த விவாதத்தைப் பார்த்தால் அந்தக் கதையைப் படித்தே...இந்த விவாதத்தைப் பார்த்தால் அந்தக் கதையைப் படித்தே ஆக வேண்டும் போலுள்ளதே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3256647924741465292016-04-17T17:41:15.444+05:302016-04-17T17:41:15.444+05:30அம்பை கருவைச் சரிவரக் கையாளவில்லை என்ற உங்கள் கருத...அம்பை கருவைச் சரிவரக் கையாளவில்லை என்ற உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன் ஜீ.வி. சார்.<br /><br />நீங்களே சொல்லியிருப்பது போல், கதை பதிமூன்று வயதுடைய ஒரு பெண் குழந்தையின் கோணத்திலிருந்து சொல்லப்படுகின்றது. அம்மாவின் கோணத்திலிருந்து அல்ல.<br />அம்மாவின் சீற்றத்துக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவை தம் பெண்ணின் நல்வாழ்வைப் பொறுத்த கவலைகள் தாம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. <br />ஆனால் அவையெல்லாம் அந்தக் குழந்தைக்குத் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது; அதற்கு அவசியமுமில்லை. அக்குழந்தை வளர்ந்து ஆளாகும் போது, அம்மாவின் வார்த்தைகளில் இருந்த எரிச்சலுக்கும், கோபத்துக்கும் காரணம் கண்டிப்பாகத் தெரியவரும். கதையின் கரு அதுவல்ல. <br /><br />ஒரு பெண் குழந்தை பருவமடையும் போது அவள் மனநிலையில் ஏற்படும் குழப்பம், தடுமாற்றம், அம்மாவிடம் அடைக்கலம் தேடும் பய உணர்வு ஆகியவற்றை அம்பை மிக அற்புதமாக இக்கதையில் வெளிப்படுத்தியிருக்கிறார், அவரும் இப்படிப்பட்ட கட்டத்தைத் தாண்டி வந்திருப்பதால். <br /><br />வீட்டில் யாராவது எப்போதும் நம்மை திட்டிக்கொண்டே இருந்தால், அதை நாம் சட்டையே செய்ய மாட்டோம். ஆனால் அதே சமயம் அதிகம் திட்டாதவர், நம் மீது மிகவும் பிரியமாக இருப்பவர், சாதாரணமாக ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும்; அது நம்மைப் பெரிதாகப் பாதிக்கும்.<br /><br />அது போலவே இந்தக் குழப்பத்திலிருந்து அம்மா நம்மை விடுவிப்பாள்: எப்போதும் போல் அரவணைத்து ஆறுதல் சொல்வாள், என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் செல்பவளுக்கு, இனிமே நீ எனக்கொரு பாரம் என்று அம்மாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், தீயாகச் சுட்டுப் பொசுக்குகின்றன.<br /><br />“அம்மாவின் உதடுகளும், நாசியும், நெற்றிக் குங்குமமும், மூக்குப் பொட்டும், கண்களும் ரத்த நிற ஜ்வாலையை உமிழ்வது போல் தோன்றுகிறது. அந்த நெருப்பில் அவள் மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான வெறும் மனித அம்மாவாய் அவள் படுகிறாள் அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து முன்பு முளைவிட்டிருந்த அத்தனை அழகுகளையும் குருட்டுத் தனமாக ஹதம் செய்கிறது. தீராத பயங்கள் கரும் சித்திரங்களாய் நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன.”<br /><br />தன் அம்மாவை ஜ்வாலையின் பிம்பமாக, அசுத்தங்களை எரித்துச் சுத்திகரிக்கும் நெருப்பாக, தேவ ஸ்வரூபமாக கதையின் துவக்கத்திலிருந்தே அடிக்கடி கற்பனை செய்வதாகக் காட்டுகிறார் எழுத்தாளர். கடைசியில் அவள் தேவ பிம்பம் மறைந்து வெறும் மனித அம்மாவாக அவள் கண்களுக்குக் காட்சி தருகிறாள்.<br /><br />“அம்மாவைப் பற்றிய இத்தகைய உணர்வுகளை அம்மாவே ஊட்டினாளா, நானே நினைத்தேனா தெரியவில்லை.” என்று அக்குழந்தை நினைப்பதாக அம்பை சொல்கிறார்.<br /><br />தன் அம்மாவைப் பற்றிய அக்குழந்தையின் யதார்த்தத்துக்கு ஒவ்வாத அதீத கற்பனை கூட, அவள் அளவுக்கதிகமாக மனம் நொறுங்கியதற்கு, தன்னைக் கொலை செய்ததாக நினைக்குமளவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். <br />இங்கு அம்பை சமூகச் சீர்கேடுகளுக்கு அம்மாவைக் குற்றம் சாட்டவில்லை. நமக்கு எவ்வளவு தான் பிரச்சினைகள் இருந்தாலும், நம் வெறுப்பையும் எரிச்சலையும் குழந்தைகளிடம் காட்டி, அவர்கள் மனதை நோகடிக்கக் கூடாது என்பதே இக்கதையிலிருந்து பெறக்கூடிய நீதியாக நான் கருதுகிறேன். <br /><br />நாவினால் சுட்ட வடு ஆறாதல்லவா?<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80447490278803277802016-04-17T16:13:46.787+05:302016-04-17T16:13:46.787+05:30கீத மஞ்சரி April 17, 2016 at 12:58 PM
வாங்கோ மேடம...கீத மஞ்சரி April 17, 2016 at 12:58 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//அம்பையின் பல படைப்புகளை வாசித்துள்ளேன். பெண்மையின் நுட்பமான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் அவருடைய சிறுகதைகள் பலவும் என்னைப் பாதித்துள்ளன.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மேடம்.<br /><br />//’அம்மா ஒரு கொலை செய்தாள்’ இன்னும் வாசிக்க வாய்ப்பு அமையவில்லை. ஆனால் இங்கு தாங்களும் கலையரசி அக்காவும் சுட்டிய வரிகளிலிருந்து அச்சிறுபெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. தாய்மைக்கும் நிறமுண்டு என்பதை சுட்டும் அருமையான கதை.// <br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், நான் மிகவும் ரஸித்த வரிகளான ’தாய்மைக்கும் நிறமுண்டு’ உள்பட (இதே தலைப்பில் ஓர் சிறுகதை எழுதலாமோ என என்னை நினைக்க வைத்தது) அழகான பல கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். <br /><br />அம்பையின் எழுத்துக்களிலேயே ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதையை வாசித்துள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டம் மிகவும் ஆழமானதும், அசத்தலானதும், ஆச்சர்யமானதும் ஆகும். :) <br /><br />//பாலகுமாரனின் படைப்புகள் சிலவற்றை வாசித்திருந்தாலும் பெரிய அளவில் ஈர்ப்போ பாதிப்போ எழவில்லை.//<br /><br />சங்கல்பம் / விகல்பம் ஏதும் இல்லாமல் தங்கள் மனதுக்குத் தோன்றியதை மிகச்சரியாக பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சியே.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88965487668540170122016-04-17T14:11:35.605+05:302016-04-17T14:11:35.605+05:30//தாய்மைக்கும் நிறமுண்டு என்பதை சுட்டும் அருமையான ...//தாய்மைக்கும் நிறமுண்டு என்பதை சுட்டும் அருமையான கதை.// <br /><br />அப்படியில்லை, கீதமஞ்சரி. இந்தக் கதை வேறு மாதிரியானது.<br /><br />தான் பெற்ற பெண் வளர வளர பெருமிதமடைய வேண்டிய தாய்க்கு சமூகத்தின் சில அவலங்கள் அவளைக் கவலை கொள்ள வைக்கின்றன.<br /><br />வறுமை, நிறம், அழகின்மை போன்ற சில காரணிகள் பல தாய்மார்களின் அந்தக் கவலைக்குக் காரணமாகின்றன.<br /><br />கல்யாண சந்தையில் தன் பெண் விலை போகாமல் போய்விடப்போகிறாளோ என்கிற கவலை.<br /><br />இந்தக் கதையில் வரும் தாய், தான் போய் வந்த வெளியூர் உறவுக்கார பெண் பார்க்கும் படலத்தில், பெண் கருப்பு என்ற காரணத்தினால் 'ரிஜக்ட்' ஆன வேதனையை தரிசிக்கிறாள்.<br /><br />தன் பெண்ணும் கருப்பு என்கிற காரணத்தினால், தன் பெண்ணுக்கும் கற்ப்னையில் இதைப் பொறுத்திப் பார்த்து அவள் மனம் வேதனை அடைகிறது.<br /><br />ஊருக்குத் திரும்பியவள் சொல்லி வைத்தாற் போல தன் பெண் பருவமடைந்த செய்தி கேள்விப் பட்டு சந்தோஷமடைய வேண்டியவள், மாறாக சமீபத்திய இந்த கறுப்பு தந்த வேதனையில், "இந்த எழவுக்கு என்னடீ அவசரம்?" என்று கரிப்பைக் கொட்டுகிறாள்.<br /><br />அது ஒரு நிமிட சலனம். அவ்வளவு தான். அடுத்த வினாடியே அது சரியாகப் போகப் போகிறது. தாயின் அந்த எரிச்சலுக்குக் காரணம் சமூகத்தின் கோணல் மாணல்கள்.<br />ஆனால் அம்பையோ கதையை அந்தப் பெண் பார்வையில் பார்க்கிறாள். தன் அன்புத் தாயின் எதிர்பாராத அந்த சீறலைக் கேட்டவுடனேயே அந்தப் பெண்ணின் மனம் நொறுங்கிப் போவதாகக் காட்டி, அந்தத் தாயு ஒன்றும் தெரியாத அந்தப் பெண்ணின் மனதைக் கீறி ரணமாக்கி விட்டதாகக் கொண்டு, 'அம்மா ஒரு கொலை செய்தாள்' என்று கதையாக்கியிருக்கிறார். <br /><br />அம்பையின் இந்தப் பார்வையை என் இந்த நூலில் விமரிசனத்துற்கும் உள்ளாக்கியிருக்கிறேன்.<br /><br />பெண்ணுக்கு மிக மிக நெருக்கமானவள் அவளின் தாய் தான்.<br />எல்லாத் தாய்மார்களும் தன் பெண்ணைத் தானாகவேப் பார்க்கிறார்கள் என்பது சிக்மண்ட் ப்ராய்டின் மன ஆராயுச்சிகள் சொல்லும் பாடம்.<br /><br />இப்படியிருக்க அந்த அன்னையின் வேதனையில் வெளிப்பட்ட ஒற்றைச் சொல்லை பெரிசுபடுத்தி அம்மா ஒரு கொலை செய்தாள்' என்று கதையாக்கியிருக்கிறார் அம்பை. <br /><br />பெண்ணியப் பதாகையைத் தூக்கிப் பிடிப்போருக்கு அந்த அம்மாவும் ஒரு பெண் தானே என்கிற பார்வை இல்லாமல் போனது வேதனையான ஒன்று. <br /><br />அம்பையின் சீற்றம் இந்த சமூகத்தின் சீர்கேடுகளின் மேல் கொள்ள வேண்டியது. <br /><br />அந்த அப்பாவி அம்மாவின் மேல் கொண்டது, கதையின் கருவை சரிவரக் கையாளாத குறைபாடே. <br />இந்தக் கதை அம்பையின் ஆரம்பக் கதைகளில் ஒன்று என்பதினால், அவரது பிற்கால வளர்க்சியைக் கணக்கில் கொண்டு, இப்பொழுது இதேக் கதையை அதே அம்பை எழுதினால் வேறு மாதிரி எழுதுவார் என்றும் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28887627038675436322016-04-17T14:09:26.498+05:302016-04-17T14:09:26.498+05:30Position as on 17.04.2016 - 2.00 PM
என் இந்தத்தொட...Position as on 17.04.2016 - 2.00 PM<br /><br />என் இந்தத்தொடரின் முதல் பதினைந்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துச் சிறப்பித்துள்ள<br /><br />திருமதிகள்:<br /><br />01) ஞா. கலையரசி அவர்கள் <br />02) கோமதி அரசு அவர்கள் <br />03) கீதா சாம்பசிவம் அவர்கள்<br />04) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள் <br /><br />செல்விகள்:<br /><br />05) ’சிப்பிக்குள் முத்து’ அவர்கள் <br />06) 'மின்னலு முருகு' மெஹ்ருன்னிஸா அவர்கள்<br />07) ’ப்ராப்தம்’ அவர்கள் <br /><br />திருவாளர்கள்:<br /><br />08) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்<br />09) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்<br />10) S. ரமணி அவர்கள் <br />11) வே. நடன சபாபதி அவர்கள் <br />12) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள் <br />13) ஆல் இஸ் வெல் அவர்கள்<br />14) ஸ்ரீனிவாஸன் அவர்கள்<br />15) தி. தமிழ் இளங்கோ அவர்கள் <br /><br />ஆகியோருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். <br /><br />இதே போன்ற புள்ளி விபரங்கள் நிறைவுப் பகுதி (பகுதி-20) முடிந்ததும் மீண்டும் அறிவிக்க நினைத்துள்ளேன்.<br /><br />அன்புடன் VGK<br /><br />oooooooooooooo<br /><br />பகுதி-1 முதல் பகுதி-14 வரைக்கான அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து, பகுதி-15க்கு மட்டும் இதுவரை வருகை தராமல் ஒருவர் உள்ளார். அவர் தற்சமயம் முக்கியமான வேலைகளில் மூழ்கி இருப்பதால், கூடிய சீக்கரம் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.<br /><br />ooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24474684586423140122016-04-17T12:58:52.439+05:302016-04-17T12:58:52.439+05:30அம்பையின் பல படைப்புகளை வாசித்துள்ளேன். பெண்மையின்...அம்பையின் பல படைப்புகளை வாசித்துள்ளேன். பெண்மையின் நுட்பமான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் அவருடைய சிறுகதைகள் பலவும் என்னைப் பாதித்துள்ளன. அம்மா ஒரு கொலை செய்தாள் இன்னும் வாசிக்க வாய்ப்பு அமையவில்லை. ஆனால் இங்கு தாங்களும் கலையரசி அக்காவும் சுட்டிய வரிகளிலிருந்து அச்சிறுபெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. தாய்மைக்கும் நிறமுண்டு என்பதை சுட்டும் அருமையான கதை. பாலகுமாரனின் படைப்புகள் சிலவற்றை வாசித்திருந்தாலும் பெரிய அளவில் ஈர்ப்போ பாதிப்போ எழவில்லை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com