tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2905038593499785779..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: பதிவர் சந்திப்பு 2015 .... சூடான சுவையான செய்திகள்.... .... .... .... .... [புதுக்கோட்டை via மலைக்கோட்டை]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33631894379046882402015-11-11T12:31:43.096+05:302015-11-11T12:31:43.096+05:30பவித்ரா நந்தகுமார் November 11, 2015 at 11:26 AM
...பவித்ரா நந்தகுமார் November 11, 2015 at 11:26 AM<br /><br />//வணக்கம் அப்பா, தாங்கள் நலம் என்பதை அறிவதில் ஆனந்தம். //<br /><br />வாம்மா பவித்ரா, வணக்கம்மா. <br /><br />//நீண்ட நாட்களுக்கு பிறகான ஒரு பொன்னான நேரத்தில் பதிவிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. //<br /><br />அன்பு மகளின் இன்றைய வருகை எனக்கும் ஆனந்தம் அளிக்கிறது.<br /><br />//இப்படி ஒரு கொண்டாட்டமான பதிவை உங்களை காட்டிலும் சிறப்பாக வேறு யாரால் கொடுத்து விட முடியும்?//<br /><br />அடடா ! மிக்க மகிழ்ச்சிம்மா. <br /><br />//அவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளர் என்று எக்கச்சக்கமாக எழுதி உள்ளீர்கள். இன்னும் அந்த இடத்தை அடைய காலம் கனிய வேண்டும். தங்கள் வாழ்த்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.//<br /><br />என்னே ஒரு தன்னடக்கமான பதில்! நேற்று தீபாவளியன்று நேரில் (தொலைகாட்சியில்) பவித்ராவைக் கண்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு. அந்த முழு நிகழ்ச்சியையும் என்னால் கவனிக்க இயலவில்லை. தங்களின் மிகச் சிறப்பான பேச்சினை மட்டும் கேட்டு மகிழ்ந்தேன். அதற்குமுன் பேசிய பேச்சாளருடன் திண்டுக்கல்காரர் டூயட் ஆடினார் என ஆரம்பித்து ........ விடுமுறை நாட்களில் ஒட்டடை அடிப்பது வரை அனைத்துத் தொல்லைகளையும் அடுக்கடுக்காகக் கோர்வையாகச் சொன்னபோது பலமாகக் கைத்தட்டி மகிழ்ந்தேன்.<br /><br />அப்போது என் மடியில் 4+ மற்றும் 1+ வயதுப் பேரன்கள் அமர்ந்து லூட்டி அடித்துக்கொண்டிருந்தனர். அதனால் அந்த நிகழ்ச்சியை முழுமையாக நேற்று கேட்க முடியாமல் போய்விட்டது. அதனால் என்ன ..... தனியே யூ-ட்யூப்பில் எடுத்து வைத்துள்ளேன். அதனைப் போட்டு மீண்டும் ஒருமுறை பொறுமையாகக் கேட்டு மகிழ்வேன்.<br /><br />//திருச்சி ஆரணிக்கு பக்கத்தில் இல்லையே என்று இப்பொழுது வருத்தமாக இருக்கிறது. தங்களை நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்குமே...என்ன செய்ய...ஆனால் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் என எதிர்பார்க்கிறேன். நம்பிக்கையுடன் பவித்ரா நந்தகுமார்//<br /><br />அடிக்கடி தொலைகாட்சி + பெண்கள் மலர் மூலமாக சந்தித்துவிடுவதால் எனக்கு அந்த மனக்குறையெல்லாம் இல்லவே இல்லையம்மா. இருப்பினும் பிராப்தம் இருந்தால், தங்களின் இந்த நம்பிக்கை வீண்போகாமல், நாம் நேரில் சந்திப்போம். <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான தன்னடக்கமான இனிய கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா.<br /><br />என்றும் அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25120082930943050192015-11-11T11:26:38.750+05:302015-11-11T11:26:38.750+05:30வணக்கம் அப்பா, தாங்கள் நலம் என்பதை அறிவதில் ஆனந்தம...வணக்கம் அப்பா, தாங்கள் நலம் என்பதை அறிவதில் ஆனந்தம். நீண்ட நாட்களுக்கு பிறகான ஒரு பொன்னான நேரத்தில் பதிவிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. இப்படி ஒரு கொண்டாட்டமான பதிவை உங்களை காட்டிலும் சிறப்பாக வேறு யாரால் கொடுத்து விட முடியும்? <br /> அவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளர் என்று எக்கச்சக்கமாக எழுதி உள்ளீர்கள். இன்னும் அந்த இடத்தை அடைய காலம் கனிய வேண்டும். தங்கள் வாழ்த்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.<br /> திருச்சி ஆரணிக்கு பக்கத்தில் இல்லையே என்று இப்பொழுது வருத்தமாக இருக்கிறது. தங்களை நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்குமே...என்ன செய்ய...ஆனால் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் என எதிர்பார்க்கிறேன். நம்பிக்கையுடன் பவித்ரா நந்தகுமார்பவித்ரா நந்தகுமார்https://www.blogger.com/profile/04748508080969407775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31778751347098627872015-11-01T22:27:20.186+05:302015-11-01T22:27:20.186+05:30Jayanthi Jaya November 1, 2015 at 7:41 PM
வாங்கோ ...Jayanthi Jaya November 1, 2015 at 7:41 PM<br /><br />வாங்கோ .... ஜெ. வணக்கம்.<br /><br />மலைக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு நீங்கள் சென்றிருந்தால் எங்களுக்கு ஒரு அருமையான எழுத்து விருந்து கிடைத்திருக்கும். வடை போச்சே.//<br /><br />உங்களுக்கு வடை போனால் போகட்டும். <br /><br />ஒருசிலர் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி அவர்களின் புதிய எழுத்துக்களுக்கு திறப்பு விழா நடத்தி சிறப்பிப்பார்கள். <br /><br />வேறு சிலரோ, பொறாமையினாலோ என்னவோ, ஒழுங்காக நடந்துவரும் ஒரு அமைப்பினைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஒருவழியாக மூடுவிழா நடத்துவதிலேயே ஆர்வமாகவும் குறியாகவும் இருந்து செயல்படுவார்கள்.<br /><br />அங்கு சென்றால், இதுபோல ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமான விசித்திர குணாதிசயம் கொண்ட ஆசாமிகளாக பல ஊர்களிலிருந்து வந்து சேர்ந்திருப்பார்கள். <br /><br />நான் அங்கு போகாமல் இருந்ததற்கான பல காரணங்களில் இதுபோன்ற ஓரிருவரை பார்க்கவே சுத்தமாக விரும்பாததும் ஒன்று.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24230000405896812312015-11-01T19:41:28.526+05:302015-11-01T19:41:28.526+05:30மலைக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு நீங்கள் ச...மலைக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு நீங்கள் சென்றிருந்தால் எங்களுக்கு ஒரு அருமையான எழுத்து விருந்து கிடைத்திருக்கும். <br /><br />வடை போச்சே.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32397991705226710172015-10-29T02:18:33.908+05:302015-10-29T02:18:33.908+05:30kasiviswanath ramanathan October 28, 2015 at 11:01...kasiviswanath ramanathan October 28, 2015 at 11:01 AM<br /><br />//My e-mail address: kasi1949@gmail.com//<br /><br />I have just noted this in my mind. <br /><br />நான் புதிய வெளியீடுகள் கொடுக்கும்போது இது நினைவில் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. <br /><br />மேலும் புதிய வெளியீடுகள் பற்றி யாருக்குமே நாமாகவே இ.மெயில் மூலம் தகவல் கொடுத்து அவர்கள் யாரையும் வருந்தி அழைக்கக்கூடாது என்ற கொள்கை முடிவினை நான் எடுத்து செயல்பட்டு வருவதால், அதனை மீறி தங்களை மட்டும் அழைப்பதும் அவ்வளவாக சரியாக இருக்காது. <br /><br />மற்றொரு மிக முக்கியமான விஷயம்: நான் வெளியிடும் பதிவுக்கு சற்றேனும் சம்பந்தம் உள்ளதாகவும், சற்றே வித்யாசமாகவும், விரிவாகவும் பின்னூட்டமிடும் நபர்கள் என் பதிவுக்கு வருவதை மட்டுமே நான் எப்போதும் விரும்புகிறேன். <br /><br />சும்மாவாவது வருகை தந்து, பதிவினையும் முற்றிலும் படிக்காமல், சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஓரிரு வரிகள் எழுதிவிட்டுச் செல்வோர் இங்கு என் பதிவுகள் பக்கம் வருவதும் வராததும் என்னைப் பொறுத்தவரை ஒன்று தான். அப்படிப்பட்டவர்கள் வருவதால் எனக்கு சந்தோஷமோ அவர்கள் வராததால் எனக்கு வருத்தமோ ஏதும் கிடையவே கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />என் இந்த பதிலால் நான் ஏதேனும் தவறாகச் சொல்லி இருப்பதாகத் தாங்கள் நினைத்தால் என்னை தயவுசெய்து மன்னித்துக்கொள்ளவும். <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14757052946327575132015-10-29T01:56:17.912+05:302015-10-29T01:56:17.912+05:30kasiviswanath ramanathan October 28, 2015 at 11:01...kasiviswanath ramanathan October 28, 2015 at 11:01 AM<br /><br />வாங்கோ சார், வணக்கம்.<br /><br />//வணக்கம். தங்களின் பதிவுகள் தற்சமயம் எனக்கு இ மெயிலில் கிடைப்பதில்லை. தயவுசெய்து என் இ மெயில் விலாசத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி.<br />காசிவிஸ்வநாதன்.//<br /><br />தங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி. <br /><br />இருப்பினும் நான் நீண்ட நாட்களாகவே [ஓராண்டுக்கும் மேலாகவே] யாருக்கும் என் புதிய பதிவுகள் வெளியீடுபற்றி இ.மெயிலில் தகவல் அனுப்பும் வழக்கம் ஏதும் என்னிடம் இல்லை. <br /><br />இங்கு வருகை தந்து கருத்தளித்துள்ளவர்கள் அனைவருமே அவர்களாகவே டேஷ்-போர்டினைப்பார்த்து மட்டுமே ஓர் ஆர்வத்துடன் வருகை தந்துள்ளார்கள். தாங்களும் அதுபோலவே செய்தால் நல்லது. <br /><br />என் பதிவுக்கு தாங்கள் Follower ஆகியிருந்தால், என் புதிய வெளியீடுகள் பற்றிய தகவல் தங்களின் டேஷ்-போர்டில் நிச்சயமாகக் காட்சியளிக்கும்.<br /><br />இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73394692528276173662015-10-28T11:01:59.872+05:302015-10-28T11:01:59.872+05:30My e-mail address: kasi1949@gmail.com.My e-mail address: kasi1949@gmail.com.VISWAMhttps://www.blogger.com/profile/06427189895550543725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70582472763996093782015-10-28T11:01:22.975+05:302015-10-28T11:01:22.975+05:30வணக்கம். தங்களின் பதிவுகள் தற்சமயம் எனக்கு இ மெயி...வணக்கம். தங்களின் பதிவுகள் தற்சமயம் எனக்கு இ மெயிலில் கிடைப்பதில்லை. தயவுசெய்து என் இ மெயில் விலாசத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />மிக்க நன்றி.<br /><br />காசிவிஸ்வநாதன்.<br />VISWAMhttps://www.blogger.com/profile/06427189895550543725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18490642915314764632015-10-26T15:23:26.418+05:302015-10-26T15:23:26.418+05:30மோகன்ஜி October 26, 2015 at 9:17 AM
வாங்கோ ... வ...மோகன்ஜி October 26, 2015 at 9:17 AM<br /><br />வாங்கோ ... வணக்கம்.<br /><br />//பல நாட்கள் ஆயிற்று. வழக்கம் போலவே வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் பதிவு. நலம் தானே வைகோ சார்?//<br /><br />நலமே. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார் :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81415333770388969382015-10-26T09:17:32.710+05:302015-10-26T09:17:32.710+05:30பல நாட்கள் ஆயிற்று. வழக்கம் போலவே வண்ணமயமான வானவேட...பல நாட்கள் ஆயிற்று. வழக்கம் போலவே வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் பதிவு. நலம் தானே வைகோ சார்?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76958692031305735462015-10-25T13:10:55.030+05:302015-10-25T13:10:55.030+05:30Thenammai Lakshmanan October 25, 2015 at 12:52 PM...Thenammai Lakshmanan October 25, 2015 at 12:52 PM<br /><br />வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.<br /><br />//பழனி கந்தசாமி சார் & ஜி எம் பாலா சாருடனான முதல் சந்திப்பு அருமை.//<br /><br />இது அவர்கள் இருவருடனுமான என் இரண்டாம் சந்திப்பு ஆகும். அவர்களுடனான என் முதல் சந்திப்புக்கான இணைப்புகளும், இந்தப்பதிவினில் ஆங்காங்கே நான் கொடுத்துள்ளேன்.<br /><br />//மஞ்சு எங்கே இருக்கிறார். //<br /><br />மஞ்சு தற்சமயம் ‘குவைத்’தில் இருக்கிறார்.<br /><br />//பவித்ராவுக்கு வாழ்த்துகள். :) //<br /><br />எழுத்துலகில் மேலும் ஓர் சாதனையை சமீபத்தில் செய்துள்ள திருமதி. பவித்ரா அவர்களை தாங்கள் வாழ்த்தியுள்ளதற்கு, அவர்கள் சார்பில் என் நன்றிகள்.<br /><br />//வழக்கம்போல அருமையான அழகான பகிர்வு கோபால் சார் :)//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72868381105508143742015-10-25T12:52:12.801+05:302015-10-25T12:52:12.801+05:30பழனி கந்தசாமி சார் & ஜி எம் பாலா சாருடனான முதல...பழனி கந்தசாமி சார் & ஜி எம் பாலா சாருடனான முதல் சந்திப்பு அருமை. மஞ்சு எங்கே இருக்கிறார். <br /><br />பவித்ராவுக்கு வாழ்த்துகள். :) <br /><br />வழக்கம்போல அருமையான அழகான பகிர்வு கோபால் சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54649598112983949922015-10-19T00:14:50.817+05:302015-10-19T00:14:50.817+05:30RAVIJI RAVI October 17, 2015 at 11:23 PM
வாங்கோ...RAVIJI RAVI October 17, 2015 at 11:23 PM<br /><br />வாங்கோ வாத்யாரே, வணக்கம்.<br /><br />//ஆஹா! நான் ரெண்டு கோட்டையையுமே 'கோட்டை' விடுறாப்புல ஆகிடுச்சே! ஒரு நாளைக்கு சொல்லாம கொள்ளாம வந்து வீட்டு கதவ தட்டப்போறேன் வாத்யாரே! ஹா ஹா!//<br /><br />வாருங்கள். வாருங்கள். மிக்க மகிழ்ச்சி. முன்கூட்டியே சொல்லிவிட்டு வந்தால் நம் இருவருக்குமே சந்திப்பினில் ஏமாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கலாம்.<br /><br />WELCOME TO YOU !<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91556892734940062782015-10-17T23:23:09.618+05:302015-10-17T23:23:09.618+05:30ஆஹா! நான் ரெண்டு கோட்டையையுமே 'கோட்டை' விட...ஆஹா! நான் ரெண்டு கோட்டையையுமே 'கோட்டை' விடுறாப்புல ஆகிடுச்சே! ஒரு நாளைக்கு சொல்லாம கொள்ளாம வந்து வீட்டு கதவ தட்டப்போறேன் வாத்யாரே! ஹா ஹா!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8419555157177498532015-10-17T11:55:45.290+05:302015-10-17T11:55:45.290+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:05 AM
வாங்க...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:05 AM<br /><br />வாங்கோ, வணக்கம். நலம். நலமறிய ஆவல்.<br /><br />//கோட்டை நகரங்களில் நிகழ்ந்த சிறப்பான பதிவர் சந்திப்புகள் வெற்றிக்கோட்டைத் தொட்டு வெற்றிக்கொடி பறக்கவிட்டதற்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//<br /><br />தங்களை நீண்ட நாட்களுக்குப்பின் [கடைசியாகப் பார்த்தது: இராஜராஜேஸ்வரி December 21, 2014 at 3:43 AM] இங்கு என் பதிவினில் இன்று பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.<br /><br />தங்களின் இன்றைய அன்பான அபூர்வ வருகைக்கும், கனிவான இதமளிக்கும் கருத்துக்களுக்கும், 2015ம் ஆண்டின் முதல் வருகைக்கும், திருச்சி மலைக்கோட்டை மாநகரத்தின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />WELCOME and THANK YOU Madam !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73419147947938215732015-10-17T11:36:19.098+05:302015-10-17T11:36:19.098+05:30ஏற்கனவே முனைவர். திரு. கந்தசாமி ஐயா அவர்கள் கொடுத்...ஏற்கனவே முனைவர். திரு. கந்தசாமி ஐயா அவர்கள் கொடுத்துள்ளதோர் பதிவுக்கான இணைப்பு:<br /><br />http://swamysmusings.blogspot.com/2015/09/blog-post.html<br />தலைப்பு: நானும் ஒரு பரிசு பெற்றேன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1213777337622650862015-10-17T11:16:16.173+05:302015-10-17T11:16:16.173+05:30எங்களின் இனிய மீண்டும் சந்திப்பினைப்பற்றி, முனைவர்...எங்களின் இனிய மீண்டும் சந்திப்பினைப்பற்றி, முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள், சமீபத்தில் தன் ‘மன அலைகள்’ என்ற வலைத்தளத்தினில், இரண்டு பதிவுகள் கொடுத்துள்ளார்கள். <br />அவற்றிற்கான இணைப்புகள் இதோ:<br /><br />http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_17.html<br />தலைப்பு: கரும்பு தின்னக் கூலி<br /><br />http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_14.html<br />தலைப்பு: இரு பிரபல வலைப்பதிவர்களின் சந்திப்பு<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74186178576903074882015-10-17T11:05:43.183+05:302015-10-17T11:05:43.183+05:30கோட்டை நகரங்களில் நிகழ்ந்த சிறப்பான பதிவர் சந்திப்...கோட்டை நகரங்களில் நிகழ்ந்த சிறப்பான பதிவர் சந்திப்புகள்<br />வெற்றிக்கோட்டைத் தொட்டு வெற்றிக்கொடி பறக்கவிட்டதற்கு<br />பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74327745350829562702015-10-15T22:03:56.940+05:302015-10-15T22:03:56.940+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 15, 2015 at 9:53...அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 15, 2015 at 9:53 PM<br /><br />வாங்கோ நண்பரே, வணக்கம். நலம் தானே!<br /><br />//அது : புதுவை பதிவர் சந்திப்பு!~<br />இது: புதுமை பதிவர் சந்திப்பு!<br />மிக அருமை!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான ’புதுமை’யான [சிலேடையான] கருத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். வாழ்க !<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45292111258286724442015-10-15T21:53:18.237+05:302015-10-15T21:53:18.237+05:30அது : புதுவை பதிவர் சந்திப்பு!~
இது: புதுமை பதிவர்...அது : புதுவை பதிவர் சந்திப்பு!~<br />இது: புதுமை பதிவர் சந்திப்பு!<br />மிக அருமை!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85129328606405344242015-10-14T01:29:21.653+05:302015-10-14T01:29:21.653+05:30Thulasidharan V Thillaiakathu October 14, 2015 at...Thulasidharan V Thillaiakathu October 14, 2015 at 12:56 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />இந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53138039172726956502015-10-14T00:56:44.381+05:302015-10-14T00:56:44.381+05:30அடடா!! மலைக்கோட்டைப் பதிவர் சந்திப்பு!! அதுவும் வ...அடடா!! மலைக்கோட்டைப் பதிவர் சந்திப்பு!! அதுவும் வலையுலக மூத்த ஜாம்பவான்கள் சந்திப்பு!!! ம்ம்ம் ந்டத்துங்கள் நடத்துங்கள்! தங்கள் தர்பாரை...."தர்பார் மகிமை சொல்லும்"<br /><br />மூத்தவர்கள் எல்லாம் இந்த வயதிலும் உற்சாகத்துடன் ஒருவரை ஒருவர் சந்தித்து அளவளாவுவதைக் காணும் போது எல்லோருமே குழந்தைகள் போல அகமகிழ்ந்து அன்புடன் சந்தித்து வலு பெறுகின்றார்கள் என்று அழகியலாய் தோன்றுதின்றது. இந்த வலைப்பதிவு ஒற்றுமை ஓங்கி உலகளந்து வளர்ந்து வலம் வர வேண்டும்! <br /><br />தங்கள் எல்லோரது உடல் நலத்திற்கும் பிரார்த்தித்துக் கொண்டு, தங்களின் அன்பும், நட்பும் செழித்தோங்கிட வாழ்த்துகளுடன்....பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது சார்!!! தங்களது உற்சாகம் எங்கள் எல்லோருக்கும் ஒரு சிறந்த உதாரணம் என்பது மிகையல்ல...<br /><br />துளசிதரன், கீதா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44638020481486036372015-10-14T00:31:25.490+05:302015-10-14T00:31:25.490+05:30அன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ சார் அவர்களே!
வணக...அன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ சார் அவர்களே! <br />வணக்கம்.<br /><br />நான் மேலே என் மனம் திறந்து எழுதியுள்ள தங்களின் பின்னூட்டத்திற்கான என் பதில்களில் சில தங்களுக்கு ஒருவேளை ஏதேனும் வருத்தம் அளிக்கக்கூடுமானால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். <br /><br />என் மனதுக்குச் சரி என்று பட்டதை, தங்களின் உடல்நலன் கருதி மட்டுமே, தங்களின் சொந்த அண்ணன் போலச் சொல்லி விட்டேன். <br /><br />//மூத்த வலைப்பதிவர் அய்யா G.M.B அவர்கள் வலைப்பதிவு, வலைப்பதிவர் மீது வைத்திருக்கும் தூய அன்பினை என்னென்று சொல்வது? இதற்காகவே திருச்சிக்கு வந்த அவரைப் பார்க்க இரண்டாம் முறையும் வந்தேன். //<br /><br />நான் அன்று அவர்களை இரண்டாம் முறையாக சந்திக்க வர நேர்ந்தது வேறு சில காரணங்களுக்காகவும் .... அதாவது நம் திரு. ரிஷபன் சார் அவர்களும், ஆரண்யநிவாஸ் திரு. இராமமூர்த்தி அவர்களும் திரு. GMB Sir அவர்களை முதன்முதலாக சந்திக்கச் செல்லும்போது நானும் கூடவே அவர்களுடன் வரவேண்டும் என விரும்பினார்கள். போகவர தாங்களே கார் ஏற்பாடு செய்வதாகவும் என்னிடம் வாக்குறுதி கொடுத்து விட்டார்கள். <br /><br />அதுபோலவே அவர்களின் அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு என் வீட்டுக்கே வந்து காரில் என்னைக் கூட்டிச்சென்றார்கள். திரும்ப என் வீட்டினில் காரில் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள். <br /><br />Otherwise அன்று வானம் உருட்டிக்கொண்டு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சூழ்நிலையில், அவர்கள் என்னைக் காரில் கூட்டிச்செல்லாமல் இருந்திருந்தால் நான் தனியாக புறப்பட்டு வந்து திரு. GMB Sir அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பே இருந்திருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். <br /><br />சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பித்தத் தங்களுக்கும், திரு. ரிஷபன் சாருக்கும், திரு. இராமமூர்த்தி சாருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகள். <br /><br />//அய்யா இன்னொரு விஷயம். இதுபோல் இரண்டு மூன்று பதிவுகளை ஒரே பதிவாக போடவேண்டாம்.//<br /><br />நான் இப்போதெல்லாம் அதிகமாகப் பதிவுகளே வெளியிடுவது இல்லை என்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். <br /><br />05.07.2015 அன்று நான் வெளியிட்டிருந்த ’நினைவில் நிற்போர் - 35ம் திருநாள்’ என்ற http://gopu1949.blogspot.in/2015/07/35.html இந்தப்பதிவினை முழுவதுமாகப் படித்துப் பார்த்து மனம் திறந்து பாராட்டிவிட்டு, புதுக்கோட்டை பதிவர் சந்திப்புத் திருவிழா பற்றி ஓர் பதிவினை நான் கட்டாயமாக வெளியிட வேண்டும் என நம் இனிய நண்பரும் விழாத் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான திரு. முத்து நிலவன் ஐயா அவர்கள் என்னிடம் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டதால் மட்டுமே 17.09.2015 அன்று ’புவனா .. ஒரு ஆச்சர்யக்குறி!’ என்ற தலைப்பில் ஓர் பதிவு வெளியிட்டேன். <br /><br />[அதிலேயே அவ்வப்போது புதுக்கோட்டை விழாக்குழுவினரால் வெளியிடப்பட்ட லேடஸ்ட் நியூஸ்களையும் 10.10.2015 வரை அப்டேட் செய்துகொண்டே வந்துள்ளேன். ]<br /><br />மேலும் இந்த 10.10.2015 தேதியிட்ட, இந்தப்பதிவுக்குப்பின் நான் எப்போது புதிய பதிவு வெளியிடுவேன் என எனக்கே தெரியாது. அதுபற்றி என்னால் இப்போது ஏதும் சொல்லவும் இயலாது. <br /><br />அதனால் மட்டுமே நடுவில் நிகழ்ந்துள்ள குவைத் பெண் பதிவர் ஒருவரின் திடீர் வருகையையும், மற்றொரு பெண் பதிவரின் சமீபத்திய எழுத்துலக சாதனையையும் இதிலேயே கொண்டுவரும்படி ஆகிவிட்டது. <br /><br />பிறகு அவை வெளியிடாமலேயே விட்டுப்போய்விடக்கூடும் என்பதால் வேறு வழியே இல்லாமல் இந்தப்பதிவினிலேயே சேர்க்கும்படி ஆகிவிட்டது.<br /><br />//அதேபோல் ஒரு பதிவினைப் போட்டுவிட்டு, ஒன்றிரண்டு தினங்கள் கழிந்த பின்னர் புதிய படங்களைச் சேர்க்க வேண்டாம். அதுதான் அப்போதே இந்த பதிவைப் பார்த்து விட்டோமே என்று , பிற்பாடு இணைத்த புதியவற்றை பலர் பார்க்காமலே போய்விடுகின்றனர். //<br /><br />இதை நான் நன்கு புரிந்துகொள்கிறேன். இந்தப்பதிவினில் நான் அதுபோல கொஞ்சம் செய்ய நேர்ந்துவிட்டது. ஆனால் அதுபோல நான் செய்த நள்ளிரவு நேரத்தில் யாரும் பின்னூட்டம் இடவில்லை என்பதால் அதுபோலச் செய்து விட்டேன். <br /><br />இல்லாவிட்டால் (அதாவது யாராவது பின்னூட்டங்கள் கொடுத்தபிறகு என்னால் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால்) அது பற்றியதோர் அறிவிப்பினை நானே பின்னூட்டப் பெட்டியில் கொடுத்துவிடுவது என் வழக்கம்.<br /><br />தங்களின் மீண்டும் வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13225089168028619432015-10-13T21:46:30.643+05:302015-10-13T21:46:30.643+05:30VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ [ ...VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ [ 3 ]<br /><br />Dear Sir, <br /><br />நான் தங்களை கவனித்தவரை, தங்களுக்கும் என்னைப்போலவே கொஞ்சம் பதட்டம் அதிகமாகத்தான் உள்ளது. பெரு மூச்சு வாங்கி, வியர்த்துக்கொட்டும் ஸ்தூல சரீரமாகவே உள்ளது. உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள், சார். <br /><br />பதிவு / பதிவர்கள் / சந்திப்பு / திருவிழா / போட்டோ என எங்கும் அலைந்து தயவுசெய்து உடலை வருத்திக்கொள்ளாதீர்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />இவையெல்லாம் ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே, நமக்கு நேரம் இருக்கும்போது மட்டுமே, நமக்குள்ள ஓய்வு நேரத்தைக் கடத்த மட்டுமே நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதே வேலையாக நாம் இருத்தல் கூடவே கூடாது. <br /><br />எதற்காகவும், யாருக்காகவும், நம் உடலை கொஞ்சமும் வருத்திக்கொள்ளவே கூடாது. இதுதான் என் பாலிஸி. அதனால்தான் நீங்கள் எவ்வளவோ வற்புருத்தியும் நான் புதுக்கோட்டை விழாவிற்கு வரவே இல்லை. <br /><br />அங்கு நடந்தவற்றை இங்கு வீட்டிலிருந்தே அழகாக ஆனந்தமாகக் கண்டு மகிழ்ந்தேன். நீங்களும் அதுபோலவே செய்திருக்கலாம் என்பதே என் தனிப்பட்ட கருத்தாகும். இதெல்லாம் இந்த வயதில் நமக்கு இருக்கும் உடல்நிலை + பதட்டம் + அசெளகர்யங்களுக்கு, நமக்கு வேண்டாத வேலைகள் சார். <br /><br />இதுபோல தங்களுக்கு அன்று நிகழ இருந்த பெரும் ஆபத்தினைப்பற்றி, தாங்கள் என்னை அன்று சந்தித்தபோது கூட என்னிடம் சொல்லவில்லையே, சார். <br /><br />இனியாவது கவனமாக இருங்கோ சார், ப்ளீஸ்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79741611409448260052015-10-13T21:42:38.975+05:302015-10-13T21:42:38.975+05:30VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ [ ...VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ [ 2 ]<br /><br />தங்களின் சமீபத்திய பதிவினில் திரு. மணவை ஜேம்ஸ் அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டத்தின் இறுதிப்பகுதியை சற்றுமுன் நான் படிக்க நேர்ந்தது. (அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்)<br /><br />படித்ததும் என் மனதுக்கு மிகவும் கவலையாகவும், வருத்தமாகவும் இருந்தது. <br /><br />-=-=-=-=-=-<br /><br />manavai jamesTuesday, October 13, 2015 7:30:00 p.m.<br /><br />**பெரியவர் திருமிகு. G.M.B. அவர்களைத் திருச்சியில் சந்திக்க பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்த பொழுது இன்னொரு பேருந்து வந்ததை கவனிக்காமல் சாலை கடக்க முற்பட்ட பொழுது... நொடிப் பொழுதில் பேருந்து மோத இருந்தது என்று தாங்கள் சொல்லிய பொழுது அதிர்ந்து போய் விட்டேன். அய்யா பதட்டம் இல்லாமல் நிதானமாக அவசரப்படாமல் காரியங்களைச் செய்யுங்கள். ‘சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்ட முடியும்’ சிறியவன் நான் சொல்லக்கூடாதுதான் என்றாலும் சொல்ல வேண்டும் என என் மனம் எண்ணியதால் சொல்கிறேன். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும். தாங்களும் விபத்தில் சிக்கி காலில் அடிபட்டதையும் பொருட்படுத்தாமல் அநேக இடங்களுக்குச் சென்று வருவதையும், தங்களின் ஆர்வத்தையும் எண்ணி வியக்கிறேன். நன்றி.**<br /><br />-=-=-=-=-=-<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com