tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7420065575987871249..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: உணவே வா ..... உயிரே போ .....வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger163125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72595899957689711062016-10-28T21:00:47.594+05:302016-10-28T21:00:47.594+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17736294508123545872016-10-28T20:58:40.456+05:302016-10-28T20:58:40.456+05:30மேற்படி பின்னூட்டத்தை நான் அனுப்பி முடித்ததும் கொட...மேற்படி பின்னூட்டத்தை நான் அனுப்பி முடித்ததும் கொட-மிளகாய் பஜ்ஜி வெந்து கொண்டிருப்பதாகவும், அடுத்து வந்து கொண்டிருப்பதாகவும் சொல்லியுள்ளார்கள். <br /><br />எனக்கு அதில் இஷ்டம் இல்லை ... அது வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். அதற்கு பதிலாக வெங்காய பஜ்ஜியும், உருளைக்கிழங்கு பஜ்ஜியும் மட்டும் இன்னொரு லாட் கேட்டுள்ளேன். <br /><br />அத்துடன் முடித்துக்கொண்டு, ஒரு ஸ்ட்ராங்க் டிகிரி காஃபி வாங்கி சாப்பிட்டுவிட்டு, இன்றைய இரவு ஆகாரக் கடையை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்ற உத்தேசத்தில் உள்ளேன். <br /><br />சுடச்சுட பஜ்ஜிகள் வந்தாச்சு. அதனால் நான் இத்துடன் எஸ்கேப். :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39947227451243086072016-10-28T20:48:41.477+05:302016-10-28T20:48:41.477+05:30'நெல்லைத் தமிழன் October 28, 2016 at 8:25 PM
...'நெல்லைத் தமிழன் October 28, 2016 at 8:25 PM<br /><br />வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகைக்கு மீண்டும் என் சந்தோஷங்கள்.<br /><br />//இன்றைக்கு மீண்டும் எல்லோருடைய பின்னூட்டங்களையும் உங்கள் பதில்களையும் வாசித்தேன். உணவு காம்பினேஷன்களைக் குறித்துவைத்துக்கொண்டேன்.//<br /><br />ஆஹா, மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு சிரத்தையாக இதனைச் செய்துள்ளீர்கள். மிகவும் ஆச்சர்யமாக உள்ளது!<br /><br />//கிருஷ்ணனை, குசேலருக்கு அளவுக்கு அதிகமாகச் செல்வம் கொடுத்துவிடாதபடி ருக்மணி தடுத்ததுபோல உணவு விஷயத்தில் மேலிடம் கண்ட்ரோல் செய்யலைனா நமக்குத்தான் உணவை ரொம்பநாள் அனுபவிக்கும் அதிருஷ்டம் குறைந்துவிடும்.//<br /><br />கரெக்ட் ஸார். இப்போதெல்லாம் நானே கொஞ்சம் குறைத்துக்கொண்டுள்ளேன். <br /><br />ஆனால் நாளைக்கு தீபாவளியாக இருப்பதால், இப்போது இரவு வேறு எதுவும் சாப்பிட வேண்டாம் என்று முடிவெடுத்து, சுடச்சுட ஒரு ஆறு வெங்காய பஜ்ஜி, ஒரு ஆறு வாழைக்காய் பஜ்ஜி, ஒரு ஆறு கத்தரிக்காய் பஜ்ஜி, ஒரு ஆறு உருளைக்கிழங்கு பஜ்ஜி இத்துடன் இன்றைய இரவு ஆகாரத்தை முடித்துக்கொண்டுள்ளேன். ஓரளவு சிறிய சைஸ் பஜ்ஜிகளாகவே கொடுத்தார்கள். <br /><br />இதே போல இன்னொரு லாட் கேட்டாலும் நிச்சயமாகக் கிடைக்கும். <br /><br />இருப்பினும் ஒருவித கட்டுப்பாட்டுடன், பிரஸவ வைராக்யமாக நானாகவே கேட்காமல் பொறுமையைக் கடைபிடித்து வருகிறேன். அவர்களாகவே கொடுத்தால், அந்த அன்புக்காக நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். :)))))<br /><br />//தலைப்பே இடுகையின் உள்ளடக்கத்தைச் சரியாகச் சொல்லிவிட்டது.//<br /><br />ஆமாம். புரிகிறது. :) <br /><br />தங்களின் மீண்டும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30433396164109900052016-10-28T20:25:56.863+05:302016-10-28T20:25:56.863+05:30இன்றைக்கு மீண்டும் எல்லோருடைய பின்னூட்டங்களையும் உ...இன்றைக்கு மீண்டும் எல்லோருடைய பின்னூட்டங்களையும் உங்கள் பதில்களையும் வாசித்தேன். உணவு காம்பினேஷன்களைக் குறித்துவைத்துக்கொண்டேன். கிருஷ்ணனை, குசேலருக்கு அளவுக்கு அதிகமாகச் செல்வம் கொடுத்துவிடாதபடி ருக்மணி தடுத்ததுபோல உணவு விஷயத்தில் மேலிடம் கண்ட்ரோல் செய்யலைனா நமக்குத்தான் உணவை ரொம்பநாள் அனுபவிக்கும் அதிருஷ்டம் குறைந்துவிடும்.<br /><br />தலைப்பே இடுகையின் உள்ளடக்கத்தைச் சரியாகச் சொல்லிவிட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68453201305855772842016-10-03T23:37:57.980+05:302016-10-03T23:37:57.980+05:30'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 7:15 PM
இ...'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 7:15 PM<br /><br />இந்தப்பதிவு நான் வலையுலகத்திற்கு வந்த புதிதில் எழுதப்பட்டது. மிகப்பெரிய பதிவாக எழுதிவிட்டேன். இதையே பிரித்துப்பிரித்து 4-5 பகுதிகளாகக் கொடுக்கணும் என அன்று எனக்குத் தெரியாமல் போய் விட்டது. <br /><br />மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களும் எனக்குத் தெரியாமல் இருந்த காலக் கட்டம் அது. ஏதோ என் மனதுக்கு தோன்றியவற்றை + எனக்கு ஞாபகம் இருந்தவற்றையெல்லாம் சொல்லி விட்டேன். <br /><br />இதிலும் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் என்னால் சொல்ல விடுபட்டும் போயிருக்கலாம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34633607299363093152016-10-03T23:24:01.296+05:302016-10-03T23:24:01.296+05:30//"மனோரக்கா உருண்டை" - மனோகரத்தைத் தான் ...//"மனோரக்கா உருண்டை" - மனோகரத்தைத் தான் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீர்களா? திருனெல்வேலி மனோகரம் எனக்கு ரொம்பப் பிடித்தது.//<br /><br />அதே ... அதே ... தேன்குழலில் இனிப்பு வெல்லம் + தேங்காய் + ஏலக்காய் முதலியன கலந்து செய்யப்படும் உருண்டைகள் அல்லது கூம்பு வடிவக் கூட்டினில் அடைத்து ஐயர் வீட்டுக் கல்யாணங்களில் பருப்புத்தேங்காய் என்று பெயரில் சீராக வைக்கும் ஓர் இனிப்பு ஐட்டமே இந்த மனோரக்கா என்பதாகும்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12479053166227439902016-10-03T23:07:06.742+05:302016-10-03T23:07:06.742+05:30"பச்சமாப்பொடி உப்புமா (அதிலும் அந்த ஒட்டல் ....."பச்சமாப்பொடி உப்புமா (அதிலும் அந்த ஒட்டல் .... அடடா அதன் டேஸ்ட்டுக்கு ஈடு இணை கிடையாது)"<br /><br />அதாவது ஹோட்டல் அல்ல. <br /><br />பச்சரிசி மாவுப் பவுடரில் செய்யப்படும் உப்புமா செய்து முடித்தபின், நிறைய எண்ணெயை ஊற்றி மேலும் ஐந்து நிமிடங்கள் ஸ்டவ் அடுப்பினை சிம்மில் வைத்து விட்டால் அடி ஒட்டிக்கொண்டு, அதிகம் கருகாமல் ஒட்டலாக வரும். இரும்பு சட்டியில் அடியில் எண்ணெயுடன் கூடிய உப்புமா அப்படியே ஆங்காங்கே ப்ளாஸ்திரி போல ஒட்டிக்கொண்டு வருமே அது. இதனை நீங்கள் காந்தல் அல்லது கருகல் எனச் சொல்லக்கூடும். நாங்கள் அதனை ஒட்டல் எனச் சொல்லுவோம்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60062415824227329472016-10-03T22:50:45.790+05:302016-10-03T22:50:45.790+05:30//அது மிதுக்கு வற்றல் இல்லையா? (மினுக்கு என்று எழு...//அது மிதுக்கு வற்றல் இல்லையா? (மினுக்கு என்று எழுதியிருக்கிறீர்களே அது).//<br /><br />ஒருவேளை மிதுக்கு வற்றலாகவும் இருக்கலாம். நாங்கள் மினுக்கு வற்றல் என்றே சொல்லிப் பழக்கம்.<br /><br />பருப்பு உசிலிக்கு சாம்பாரைவிட மோர்க்குழம்பு இன்னும் பெஸ்ட் ஆக இருக்கும் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.<br /><br />வெல்லப்பாயஸத்தில், பருப்புகளைவிட தேங்காய் மட்டும் துருவி அரைத்துவிட்டு செய்தது என்றால் எனக்குப் பிடிக்கும். அதாவது வெல்லம் போட்ட தேங்காய் பாயஸம்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45706749001604778402016-10-03T22:45:04.476+05:302016-10-03T22:45:04.476+05:30//ஒரு கேள்வி.. பகவானுக்குப் படைப்பதற்கு முன் டேஸ்ட...//ஒரு கேள்வி.. பகவானுக்குப் படைப்பதற்கு முன் டேஸ்ட் சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாமா (உப்பு உரைப்பு போன்றவை)? நான், அது தவறில்லை என்று நினைக்கிறேன். (அவனுக்கு மட்டும் நம்ம சரி பார்க்காமல் படைப்பதா என்று). உங்கள் எண்ணம் என்ன?//<br /><br />நாம் டேஸ்ட் செய்யாமல்தான் பகவானுக்குப் படைக்க வேண்டும் என்பதே நியாயம் + சாஸ்திரம் சொல்வது. <br /><br />பகவானுக்குப் படைப்பவைகளை, ஆக்சுவலாக பகவான் சாப்பிடுவது இல்லை. அதில் உள்ள சிற்சில தோஷங்கள் + விஷங்கள் மட்டும் நீங்கி விடுவதாக ஐதீகம். <br /><br />பகவானும் சாப்பிட ஆரம்பித்தால், யாருமே நைவேத்யமே செய்ய முன்வர மாட்டார்கள், என்பதே என் எண்ணம். :)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10585056692435334882016-10-03T19:15:20.579+05:302016-10-03T19:15:20.579+05:30சமையல் அனுபவங்களும், சாப்பிடும் அனுபவங்களும் யார் ...சமையல் அனுபவங்களும், சாப்பிடும் அனுபவங்களும் யார் உண்மையாகவே அனுபவித்துச் செய்வார்களோ, அவர்கள்தான் பதிவு எழுதவேண்டும். ரொம்ப அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். <br /><br />பாத்திரங்கள், அடுப்பு வகைகள் எல்லாம் ரொம்ப நன்றாக எழுதியுள்ளீர்கள். <br /><br />ஆரம்பத்தில் சமையல் சொதப்பின அனுபவங்களை எழுதினபோது என்னை நினைத்துக்கொண்டேன். எனக்கு அடுப்பைக் கண்டாலே 28 வயதுவரை ரொம்ப பயம். அடுப்புப் பக்கத்திலேயே போனதில்லை. இப்போதும், முள்ளுமுருக்கோ அல்லது எண்ணையில் பொரிக்கும் பகோடா போன்றவை செய்துபார்க்கும்போது அடுப்பைவிட்டுக் கொஞ்சம் தூர இருப்பேன். சாம்பார், கூட்டு போன்றவற்றிற்கு உப்பு காரம் போதுமா என்று கரண்டியால், இடதுகையில் விட்டுப் பார்த்து பின் அலம்பிக்கொள்வேன். நேரடியாக கரண்டியினால் வாயில் விட்டுக்கொள்வதில்லை. (சூட்டை அனுமானிக்க முடியாது என்பதால்). I could relate your experience. ஒரு கேள்வி.. பகவானுக்குப் படைப்பதற்கு முன் டேஸ்ட் சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாமா (உப்பு உரைப்பு போன்றவை)? நான், அது தவறில்லை என்று நினைக்கிறேன். (அவனுக்கு மட்டும் நம்ம சரி பார்க்காமல் படைப்பதா என்று). உங்கள் எண்ணம் என்ன?<br /><br />அது மிதுக்கு வற்றல் இல்லையா? (மினுக்கு என்று எழுதியிருக்கிறீர்களே அது).<br /><br />உங்கள் காம்பினேஷன் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் ஒரே ஒரு மாற்றம்தான். பருப்பு சாம்பாரில் ஏற்கனவே பருப்பு இருப்பதால், உசிலி அதற்குச் சரிப்பட்டு வராது. உசிலி சாப்பிட, தக்காளி சாத்துமது (பூண்டெல்லாம் வரவே கூடாது) அல்லது மோர் வரிசையில் வரும் குழம்பு (மோர்க்குழம்பு, புளிசேரி, மோர்ச்சாத்துமது இன்னபிற) போன்றவைதான் சரிப்பட்டுவரும் என்பது என் அபிப்ராயம்.<br /><br />கம்ப்யூட்டரில் நாங்கள் WYSIWYG என்று சொல்வதுபோல் (What you see is what you get), தரமான பொருட்களை உபயோகித்தால்தான், பண்ணும் பொருளும் தரமாக வரும். <br /><br />"ஓணான் போன்ற பாகற்காய்" - ரசித்தேன். நான் சாப்பிட்டுப் பழகியது மிதுக்குப் பாகல் அல்லது இயற்கையான பாகல்காய். இப்போ வெள்ளையாவும், பெரிய அளவிலும் வரும் பாகல் (பெரும்பாலும் கேரளா டைப்) ஏதோ மாற்றம் செய்தது என்று தோன்றும்.<br /><br />மோர்க்குழம்பு சாதத்துக்கு கத்தரி புளிவிட்ட கூட்டும் (பட்டாணியோ நிலக்கடைலையோ போட்டிருந்தால் இன்னும் சூப்பர்) நன்றாக இருக்கும். என்ன, எல்லாமே ரொம்ப சூடாக இருந்தால்தான் நல்லா இருக்கும். அதுவும் கத்தரிக்காயை ரொம்ப வேகவைத்து அது மாவாகிவிட்டால் நல்லாவே இருக்காது.<br /><br />"சேமியா அல்லது ஜவ்வரிசி பால் பாயஸம்" - இதுதான் அவ்வளவாகப் பிடிக்காது. பருப்புப் பாயசமோ, வெல்லப் பாயசமோதான் நன்றாக இருக்கும். போனால் போகிறது என்று சேமியாப் பாயசத்தை எப்போவாவது சேர்த்துக்கொள்ளலாம். ஜவ்வரிசிப் பாயசம் கஞ்சியில சேர்த்தியில்லையோ?<br /><br />"கொத்தமல்லித் தொகையல் நல்ல காரசாரமாக இருக்கணும் (இல்லாவிட்டால் வழுவட்டையாக மருதாணி போல மக்குபோல இருக்கும்" - சாப்பிடுவதில் ஆர்வம் இருந்தால்தான் இவ்வாறு எழுதமுடியும். கொத்தமல்லித் தொகையலை வழுமூன அரைத்தால், மருதாணிக்கும் அதுக்கும் வித்தியாசமே இருக்காது. அரைத்த கீரைக் குழம்பை தச்சிமம்முக்குத் தொட்டுக்கொண்டதுபோல் இருக்கும்.<br /><br />"பச்சமாப்பொடி உப்புமா (அதிலும் அந்த ஒட்டல் .... அடடா அதன் டேஸ்ட்டுக்கு ஈடு இணை கிடையாது)" -இது என்ன என்று புரியவில்லை. அரிசிமா உப்புமாவா? அந்த ஹோட்டலையாவது கோடி காண்பிக்கக் கூடாதா? மறக்காமல் குறித்துக்கொள்வேன்.<br /><br />"மனோரக்கா உருண்டை" - மனோகரத்தைத் தான் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீர்களா? திருனெல்வேலி மனோகரம் எனக்கு ரொம்பப் பிடித்தது.<br /><br />உங்களைப் பார்க்கவந்தால், கண்டதையும் வாங்காமல், எனக்கு இவைதான் பிடிக்கும் என்று தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நல்லதுதான்.<br /><br />"நாக்கை அடக்க என்னால் எப்போதுமே முடிவதில்லை." - எனக்குப் பல சமயங்களில் தோன்றும். எதுக்கு நாக்கை அடக்கி சாப்பிடாமல் இருக்கணும்? நல்லா ரசிச்சு, அருமையான சாப்பாடைச் சாப்பிட்டு நல்ல தூக்கம் போடாமல், டயட் டயட் என்று ஏன் இருக்கணும்னு தோணும். <br /><br />ஃப்ரெஞ்ச் நாட்டவர், நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, வெயிட் போடக்கூடாது என்று விரலைவிட்டு வாமிட் பண்ணுவார்கள் என்று படித்திருக்கிறேன். ரொம்ப வெயிட் போட்டவர்கள் (அளவுக்கு அதிகமாக, அபாயகரமாக), வாயிலிருந்து வயிற்றுக்குச் செல்லும் குழாயை, நேராக சிறுகுடலுக்குள் செலுத்துவதன்மூலம், சிறு குழந்தைகள் சாப்பிடும் அளவு சாப்பிட்டாலே பசி அடங்கிவிடுமாம் (ஜூனியர் விகடனில் முன்பு-இப்போதும்? எழுதும் பிரகாஷ் எம். சுவாமி இப்படிப்பட்ட ஆபரேஷன் செய்துகொண்டார் என்று படித்திருக்கிறேன்). என்னிடம் இப்போது கடவுள் பிரத்யட்சமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், எனக்கு உடனடியாக மனதில் தோன்றுவது, பரமபதம், செல்வம் என்றவைகள் அல்ல. என்ன சாப்பிட்டாலும் அது என் எடையை அதிகரிக்கக்கூடாது, நோயையும் கொண்டுவரக் கூடாது என்ற ஒரே வரம்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82733915253704945092016-06-10T11:00:51.521+05:302016-06-10T11:00:51.521+05:30ஸ்ரத்தா, ஸபுரி... June 9, 2016 at 4:12 PM
//சமைய...ஸ்ரத்தா, ஸபுரி... June 9, 2016 at 4:12 PM<br /><br />//சமையல் மட்டும் கலை இல்லை. சாப்பிடுவதும் ஒரு காலைதான்.......//<br /><br />”சமையல் மட்டும் கலை இல்லை. சாப்பிடுவதும் ஒரு கலைதான்.......” என மேற்படி வரிகள் இருக்க வேண்டும். <br /><br />அநாவஸ்யமாக கலையில் ஒரு காலைப்போட்டு விட்டீர்கள். <br /><br />விசு படத்தில் அன்புள்ள பனுமதி, பனுமாதி என ஒருவன் தன் மனைவிக்குக் கடிதம் எழுத ஆரம்பிக்கும்போது விசு அதனை கரெக்ட் செய்ய நினைத்து ” ’ப’க்கு அருகில் மட்டும் ஒரு காலைப் போட்டு ’பானுமதி’ என்று அழகா எழுதுப்பா” என்பார். <br /><br />“யோவ் ... அது பெண்டாட்டியின் கால். அதனை நான் எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்வேன். உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்யா” என்பான். :)<br /><br />ஏனோ எனக்கு இப்போ அந்த ஞாபகம் வந்து எனக்குள் சிரித்துக்கொண்டேன்.<br /><br />//நீங்க ஸாம்பார் ருசிபார்த்த அமர்க்களம்.. அடை உங்களை ருசி பார்த்த கலாட்டா....இதுவரை தெரிந்திராத அடுப்பு பாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே தூள் தூள்..சாப்பாடு விஷயத்துல மட்டுமில்லாமல் பல விஷயங்களிலும் எக்ஸ்பர்ட்டா இருக்கீங்க....//<br /><br />மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.<br /><br />//இந்த இடத்துலதான் ஒரு சின்ன ஜோக்.. இதுபோல எல்லா விஷயத்திலும் திறமைசாலியாக இருக்கும் தன் நண்பரை ஒருவர் பாராட்ட எண்ணினார். ஆனா அவருக்கு இங்க்லீஷ் சரியா வராது.. நண்பரிடம் எல்லா விஷயத்துலயும் எப்படி ""எக்ஸ்பைர்டா ""இருக்கேன்னு கேட்டுட்டார்//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !<br /><br />Expert / Expired சூப்பர் ஜோக். ரஸித்தேன். <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53225806944422767542016-06-09T16:12:20.445+05:302016-06-09T16:12:20.445+05:30சமையல் மட்டும் கலை இல்லை. சாப்பிடுவதும் ஒரு காலைத...சமையல் மட்டும் கலை இல்லை. சாப்பிடுவதும் ஒரு காலைதான்....... நீங்க ஸாம்பார் ருசிபார்த்த அமர்க்களம்.. அடை உங்களை ருசி பார்த்த கலாட்டா....இதுவரை தெரிந்திராத அடுப்பு பாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே தூள் தூள்..சாப்பாடு விஷயத்துல மட்டுமில்லாமல் பல விஷயங்களிலும் எக்ஸ்பர்ட்டா இருக்கீங்க.... <br /> இந்த இடத்துலதான் ஒரு சின்ன ஜோக்.. இதுபோல எல்லா விஷயத்திலும் திறமைசாலியாக இருக்கும் தன் நண்பரை ஒருவர் பாராட்ட எண்ணினார். ஆனா அவருக்கு இங்க்லீஷ் சரியா வராது.. நண்பரிடம் எல்லா விஷயத்துலயும் எப்படி ""எக்ஸ்பைர்டா ""இருக்கேன்னு கேட்டுட்டார்<br />ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29944853007570630152015-12-17T12:46:29.442+05:302015-12-17T12:46:29.442+05:30அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? மிகவும் இரசித்த ...அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? மிகவும் இரசித்த பதிவு!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27435358721259727782015-11-27T23:01:47.469+05:302015-11-27T23:01:47.469+05:30//இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்...//இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்டிச்ச்ட்னி முதலியன என்முன் வைக்கப்பட்டு,சூடு ஆறும்முன் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ! என்று அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டதாலும், அடுத்த LOT பஜ்ஜிகளும், அதை அடுத்து ஸ்ட்ராங்கான சூடான டிகிடி காஃபியும் துரத்திக்கொண்டு வந்துவிடும் என்ற அறிகுறிகள் தெரிவதாலும், இத்துடன் இந்தப்பகுதியை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.// அப்புடியே எனக்கும் பார்சல்...அன்லிமிடெட் மீல்ஸ் அஞ்சு அப்புடியே அடி பின்னுன மாதிரி இருக்கு...என் சமயலெல்லாம் சுடுதண்ணியோட சரி...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45747823624864835682015-11-16T13:09:59.182+05:302015-11-16T13:09:59.182+05:30எனக்கு இதுவரை மறந்து போயிருந் சாப்பாட்டு காம்பினேஷ...எனக்கு இதுவரை மறந்து போயிருந் சாப்பாட்டு காம்பினேஷன்ஸ் உபயோகித்த பாத்திர பண்டங்கள் எல்லாவற்றயும் மறுபடி நினைவில் கொண்டு வந்த பத்வு. நீங்க அடை பண்ணிய அமர்க்களம் படு எதார்ந்நம். எங்காத்துலயும் நாங்க ஆண்குழந்தைகளும் அம்மாவுக்கு ஒத்தாசை பண்றோம்னு உபத்திரவங்கள நிறயவே பண்ணியிருக்கோம். இன்றய கால கட்டத்தில் எல்லாமே ஒன்ஸ் அப்பான் எ டைம் என்று மலரும் நினைவுகளாகவே ஆகிவிட்டது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56038267604562755132015-10-10T18:04:05.235+05:302015-10-10T18:04:05.235+05:30குருஜி நீங்க சாம்பார் டேஸ்ட் பாத்தத் கேட்டு சிரிப்...குருஜி நீங்க சாம்பார் டேஸ்ட் பாத்தத் கேட்டு சிரிப்பாணி பொத்துகிச்சி. அட சுட்டது அதவிட சூப்பரு.. நீங்க சரியான ஜோக்காலியேதா. அதாவது காமெடியா எளுதுரீங்கல்ல அதா<br /> நானு கூட பெரிய கமண்டு போடோனும்னு தான் நெனச்சேன். பொரவால விட்டுப்போட்டேன்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9948732499223342352015-05-24T20:24:34.760+05:302015-05-24T20:24:34.760+05:30Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM
**ந...Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM<br /><br />**நாம் சுவைத்திடும் உணவுகள் வாய், நாக்கு, தொண்டை முதலியனவற்றை கடந்த பிறகு, நேராக உணவுக்குழல் வழியே வயிற்றை நோக்கிச் சென்று தீங்கு ஏதும் விளைவிக்காமல், நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும்.**<br /><br />Chitra March 27, 2011 at 10:51 AM<br /><br />//......கோபு மாமா, petition கையெழுத்து போட, என்கிட்டே முதலில் கொடுங்க. என்னை மாதிரி ஆட்களுக்கு இது சூப்பர் ஐடியா, போங்// - Chitra <br /><br />//ஹாஹா சூப்பர் சித்து :)//<br /><br />:)))))<br /><br />அன்புக்குரிய ஹனி மேடம், <br /><br />நான் இந்தப் பதிவு வெளியிட்டு நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் இதனை இன்று ஆழமாக ரசித்துப்படித்து, வரிசையாக ஏராளமான பின்னூட்டங்கள் இட்டுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. <br /><br />தங்களின் அன்பு வருகைக்கும், அழகுக்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />என்றும் நட்புடனும் நன்றியுடனும், <br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48327106152814027302015-05-24T20:19:16.868+05:302015-05-24T20:19:16.868+05:30Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM
**இ...Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM<br /><br />**இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்டிச்ச்ட்னி முதலியன என்முன் வைக்கப்பட்டு,சூடு ஆறும்முன் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ! என்று அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டதாலும், அடுத்த LOT பஜ்ஜிகளும், அதை அடுத்து ஸ்ட்ராங்கான சூடான டிகிடி காஃபியும் துரத்திக்கொண்டு வந்துவிடும் என்ற அறிகுறிகள் தெரிவதாலும், இத்துடன் இந்தப்பகுதியை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.**<br /><br />//அஹா, வாழ்க்கை வாழ்வதற்கே ! இதே போல் உண்டு சந்தோஷமாய் என்ஜாய் செய்ங்க கோபால் சார் :) //<br /><br />அதுவும் ஓர் நகைச்சுவைக்காக மட்டுமே, பதிவின் முடிவுரையாக அன்று எழுதியுள்ளேன். :)<br /><br />உடல்நிலையை உத்தேசித்து இப்போ எல்லாவற்றிற்குமே மேலிடத்தினால் பயங்கர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதில் எங்கே நான் முன்புபோலெல்லாம் எஞ்ஜாய் செய்ய? :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46545537281921714632015-05-24T20:15:30.331+05:302015-05-24T20:15:30.331+05:30Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM
**இ...Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM<br /><br />**இது தவிர நல்ல A1 Quality தோசைமிளகாய்ப்பொடி (என் வீட்டில் அதற்கென தனி செய்முறை உண்டு) காரசாரமாக எள் வாசனையுடன் ஜோராக இருக்கணும். இட்லி தோசைக்கு அதை எண்ணெயில் குழைத்து அடிக்கணும். கெட்டி சட்னி, சாம்பார் எல்லாம் அடுத்த பக்ஷம் தான். இந்த காரசாரமான தோசை மிளகாய்ப்பொடி எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும்.**<br /><br />//அஹா நானும் பசங்களும் பொடிப்பிரியர்கள் :)//<br /><br />மிக்க மகிழ்ச்சி மேடம். பொடியர்கள் முதல் பெரியவர்கள் வரை பொடிப்பிரியர்களாகவே தான் உள்ளோம் என்பதே உண்மை.<br /><br />மிளகாய்ப்பொடி பற்றிய மேலும் விபரங்கள் இதோ என் இந்தப்பதிவினில் ......<br /><br />தலைப்பு:<br /><br />’வெண்ணிலவைத் தொட்டு ............. முத்தமிட ஆசை<br />மிளகாய்ப்பொடி கொஞ்சம் தொட்டுக்கொள்ள ஆசை’ :)<br /><br />இணைப்பு:<br /><br />http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html<br /><br />நேரமிருக்கும் போது படித்துப்பாருங்கோ. அதில் இதுவரை 171 பின்னூட்டங்கள் மட்டுமே உள்ளன. :))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75676745472019054222015-05-24T20:05:50.741+05:302015-05-24T20:05:50.741+05:30Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM
**...Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM<br /><br /><br />**தொட்டுக்கொள்ள டிஸ்கோ இல்லாத, விதை இல்லாத, பூச்சி இல்லாத, திருச்சி ஐயம்பாளயம் கிராமத்தில் விளையும், கத்தரிக்காயில் செய்த பொரிச்ச கூட்டு (பொரித்த கூட்டு).**<br /><br />//எனக்குக் கூட காரைக்குடியில் வாங்கி வரும் பெட்டிக்கத்திரிக்காய்தான் மிகவும் பிடிக்கும். உரம் போடாமல் வளர்த்தது மேலும் அதன் ருசி எங்குமே வராது :) //<br /><br />அது என்னவோ சில குறிப்பிட்ட கத்திரிக்காய்களில் செய்யும் பொரித்த கூட்டு மட்டுமே இவ்வளவு ருசியாக அமைகிறது. தாங்கள் சொல்வது போல செயற்கை உரங்கள் ஏதும் போடாமல் வளர்ந்தவைகளாக இருக்கலாம். தங்களின் அரிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37193261527721217112015-05-24T20:02:45.915+05:302015-05-24T20:02:45.915+05:30Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM
**க...Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM<br /><br />**காய்கறிகளோ, மளிகை சாமான்களோ, பாலோ, தயிரோ, எண்ணெய் வகைகளோ, வெண்ணெயோ, நெய்யோ எதுவாகினும், விலை அதிகமாயினும், A1 Quality யாகத்தான் வாங்க ஆர்டர் கொடுத்து விடுவோம். வீடு தேடி அழகாக அமர்க்களமாக எல்லாம் அவ்வப்போது வந்து இறங்கிவிடும். சாப்பாடோ, காஃபியோ, டிபனோ மிகவும் RICH ஆக TASTE ஆக இருக்க வேண்டும். மிகவும் நியாயமாக ஈட்டிய பணத்தில் பெரும் பகுதி நல்ல ருசியான வாய்க்குப்பிடித்தமான உணவுப்பொருட்களுக்கு செலவழிக்கவே FIRST PRIORITY தரப்படும். அதுவே என் கொள்கை.** <br /><br />//அட்டகாசம் வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று சும்மாவா சொன்னாங்க :)//<br /><br />மிக்க மகிழ்ச்சி. ’சும்மா’வின் புரிதலுக்கு நன்றிகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49949890931031123702015-05-24T20:00:44.047+05:302015-05-24T20:00:44.047+05:30Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM
**அ...Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM<br /><br />**அதுபோலவே பால் காய்ச்சி உறைஊற்றி தயிராக்கி, பால் பாத்திரம், தயிர் பாத்திரம், மோர் பாத்திரம், பழைய பால், புதுப்பால், புளிக்காத தயிர்/மோர், புளித்ததயிர்/மோர் என பார்த்துப்பார்த்து நிர்வகிப்பது போன்றவைகளுக்கும் ரொம்பவும் பொறுமையும் ஞாபகசக்தியும் வேண்டும். வீட்டில் வேறுயாரும் பெண்குழந்தைகள் இல்லாததால், பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல், எல்லா வேலைகளையும் நானே செய்யவேண்டியிருந்தது. பையன்கள் காஃபி குடித்த டவரா, டம்ளர்களைக்கூட, சமையல் ரூம் சிங்கில் கொண்டுபோய் கழுவப்போட மாட்டார்கள். அவ்வளவு செல்லமாக அவர்களின் அம்மாவின் வளர்ப்பு. **<br /><br />//ஹாஹா படித்துச் சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.//<br /><br />சிரிக்கவும் தான் இந்தப்பதிவு சற்றே நகைச்சுவைகளை ஆங்காங்கே தாளித்துக் கொடுக்கப்பட்டுள்ளது, என்னால். தாங்கள் இதனைப்படித்து சிரித்துக்கொண்டே இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.<br /><br />//உங்கள் பரிதவிப்பான முன் இரண்டு ஸ்டேடஸும் படித்து இரக்கம் மேலிட்டாலும் முதலில் சிரிப்பு வந்ததுக்கு மன்னிக்கவும் :) //<br /><br />மன்னிக்க என்ன இருக்கிறது?. சிரிக்கவும் பிறகு சிந்திக்கவும் மட்டுமே என் இதுபோன்ற பதிவுகள். :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46688976305605559682015-05-24T19:56:33.719+05:302015-05-24T19:56:33.719+05:30Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM
**அ...Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM<br /><br />**அதனால் கொஞ்சமாக சாம்பாருடன் கூடிய கரண்டியை நன்கு உயரமாக பிடித்துக்கொண்டு,வாயை நோக்கி நாலுசொட்டு விழுவது போல தலையை பின்புறமாக சாய்த்தபடி, கரண்டியை நான் கவிழ்க்க, சற்றே குறி தவறி, வாய்க்குள் போக வேண்டிய சுடச்சுட காரசாரமாக இருந்த அந்த சாம்பார், மூக்குத்துவாரத்தில் நுழைந்து விட, ஒரே கமறல், மூக்கெரிச்சல், கண்களில் ஜலம் வந்து, திக்கித்திணறிப்போய் விட்டேன் நான். அது அடங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது எனக்கு.**<br /><br />//அய்யோ ஏன் இந்தக் கொடுமை ..//<br /><br />(1) அனுபவம் புதுமை <br /><br />(2) பதிவினைப் படிப்போருக்கு நான் ஏதாவது கொஞ்சம் நகைச்சுவையைக் கூட்டித் தர வேண்டாமா !!!!! :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36073185781057638332015-05-24T19:54:24.945+05:302015-05-24T19:54:24.945+05:30Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM
**ப...Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM<br /><br />**பிறகு 22 வயதில் எனக்குத்திருமணம் ஆகி 18 வயதே ஆன மனைவி வந்து சேர்ந்தாள். வரும்போது சமையல் செய்வது பற்றி அதிக அனுபவம் இல்லாதவளாகவே இருந்தும், என் அம்மாவிடமிருந்து ஆசைஆசையாக அனைத்தையும் வெகு விரைவில் கற்றுக்கொண்டு, மிகவும் ருசியாக சமையல் செய்து, சுடச்சுட பரிமாறி என்னையும், என் பெற்றோர்களையும் தனது அன்பு வலையில் சிக்க வைத்து, அசத்தி விட்டாள். **<br /><br />//அருமை அருமை !!! :) :) :) //<br /><br />தங்களின் அபூர்வமான வருகைக்கும், அருமை அருமையான கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.<br /><br />So Sweet Days ! :) :) :) :) :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22099375721235334292015-05-24T19:49:56.626+05:302015-05-24T19:49:56.626+05:30Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM
**இ...Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM<br /><br />**இந்த ஈ.குக், எலெக்ட்ரிக் அடுப்பு, மைக்ரோ ஓவன், செல்போன், எல்லா ரூமுக்கும் ஏ.ஸி, கம்ப்யூட்டர், இண்டெர்நெட், லாப்டாப் போன்ற மிக நவீன வசதிகளைத்தான் என்னால் அவர்களுக்கு அன்று செய்துதர முடியாமல் போனது. இப்போதும் நினைத்தாலும், அது ஒரு குறையாகவே உள்ளது.**<br /><br />//பரவாயில்லை அது அவர்களுக்குத் தேவையுமில்லை விடுங்கள் :)//<br /><br />சரி. ஓக்கே. மிக்க நன்றிகள். <br /><br />இப்போது நாம் அடிக்கும் வெயிலுக்கு ஏ.ஸி. ரூமில் அமர்ந்து ஜில்லுன்னு ஆனந்தமாக இருக்கும்போது, அன்று வெயிலிலும் வேர்வையிலும் கஷ்டப்பட்ட நம் அப்பா அம்மாவை ஏனோ நினைக்காமல் இருக்க முடியவில்லை, என்னால். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com