பதிவுலகினில் ’எங்கள் BLOG’ [http://engalblog.blogspot.in/
இவர்கள் தனி நபராக செயல்படாமல், பலரும் சேர்ந்து ஒரு குழுவாக பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள் என்பது ஓர் சிறப்பு அம்சமாகும். இவர்களில் பலரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சொந்த அண்ணன் தம்பிகள், மாமன் மச்சான் என்பது மேலும் வியப்பளிக்கும் செய்தியாகும்.
‘எங்கள் BLOG' வலைப்பதிவினிலிருந்து நால்வர் என்னை சந்திக்க என் இல்லத்திற்கு 25.01.2015 ஞாயிறு மதியம் மூன்று மணி சுமாருக்கு அன்புடன் வருகை புரிந்தனர்.
இவர்களில் இருவர் மட்டும் வருவதாக முன்கூட்டியே தகவல் சொல்லி எச்சரித்திருந்ததால், நானும் வழிமேல் விழிவைத்து வெகுநேரம் வீட்டில் எதிர்பார்த்துக் காத்திருந்து வரவேற்பு அளிக்க முடிந்தது.
என் வலைத்தளப்பக்கம் அவ்வப்போது வந்துபோகும் திரு. ஸ்ரீராம் [ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்] அவர்களையும், திரு. K.G. கெளதமன் அவர்களையும் ஓரளவுக்கு பதிவுகளின் மூலம் எனக்குப் பரிச்சயம் உண்டு. அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
வந்தவர்களில் மீதி இருவரும் திரு. K.G. கெளதமன் அவர்களின் சொந்த அண்ணாக்கள். திரு. K.G. கெளதமன் அவர்களுடன் சேர்த்து மொத்தம் அவர்கள் ஐந்து சகோதரர்களாம். மீதி இருவர் அன்று இவர்களுடன் என் இல்லத்திற்கு வருகை தரவில்லை.
இவர்களில் இருவர் மட்டும் வருவதாக முன்கூட்டியே தகவல் சொல்லி எச்சரித்திருந்ததால், நானும் வழிமேல் விழிவைத்து வெகுநேரம் வீட்டில் எதிர்பார்த்துக் காத்திருந்து வரவேற்பு அளிக்க முடிந்தது.
என் வலைத்தளப்பக்கம் அவ்வப்போது வந்துபோகும் திரு. ஸ்ரீராம் [ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்] அவர்களையும், திரு. K.G. கெளதமன் அவர்களையும் ஓரளவுக்கு பதிவுகளின் மூலம் எனக்குப் பரிச்சயம் உண்டு. அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
வந்தவர்களில் மீதி இருவரும் திரு. K.G. கெளதமன் அவர்களின் சொந்த அண்ணாக்கள். திரு. K.G. கெளதமன் அவர்களுடன் சேர்த்து மொத்தம் அவர்கள் ஐந்து சகோதரர்களாம். மீதி இருவர் அன்று இவர்களுடன் என் இல்லத்திற்கு வருகை தரவில்லை.
-=-=-=-=-=-=-=-=-=-
அவ்வாறு வருகை தராத ஒரு சகோதரருக்கு பதிலாக அவரின் நகைச்சுவைப்படைப்பு ஒன்று அன்றைய தினமலர் சண்டே ஸ்பெஷல் இதழில் ‘பொய்யெனப் பெய்யும் மழை’ என்ற தலைப்பினில் வெளியாகி மகிழ்வித்திருந்தது எனக்கே ஒரே ஆச்சர்யமாக இருந்தது. அவரைப்பற்றி 25.01.2015 ஞாயிறு தினமலர் SUNDAY SPECIAL இல் உள்ள சிறுகுறிப்பு இதோ:
கட்டுரையாளர் K.G.ஜவர்லால், மெக்கானிகல் இஞ்ஜினியர். 1982ல் இருந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது ஒரு பக்கக்கதைகள் மிகவும் பிரபலம். 2009ல் இருந்து வலைப்பதிவில் பல்சுவைக் கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை இவரது ஒன்பது புத்தகத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
திரு. கே.ஜி. ஜவர்லால் அவர்களே, வணக்கம்.
தங்களின் சகோதரர் K.G.கெளதமன் அவர்களை இன்று நான் திருச்சியில் நேரில் சந்திக்க முடிந்ததால், தங்களின் ’பொய்யெனப் பெய்யும் மழை’ என்ற நகைச்சுவை விருந்தினை தினமலர் இதழில் படித்துச் சிரித்து மகிழ முடிந்தது. பாராட்டுக்கள் + வாழ்த்துகள். - அன்புடன் VGK 25.01.2015
சரி, இப்போது என் இல்லத்திற்கு வருகை தந்தவர்களைப் பற்றிச் சொல்கிறேன்.
1. நம் ஸ்ரீராம் அவர்கள்
இவர் தன் புகைப்படத்தினை பதிவினில் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளதால் பொக்கிஷமாகத் தனியே வைத்துக்கொண்டு விட்டேன். இவர் என்னுடைய ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களை வெகுவாக மனம் திறந்து பாராட்டினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
"(1) இவர் ஓர் மிகச்சிறந்த ஓவியர் [2] **இவர் 1978ல் வரைந்த மிகப்பெரியதோர் காமாக்ஷி அம்மன் ஓவியம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, பரிபூர்ண அனுக்கிரஹம் செய்யப்பட்டு, குண்டக்கல் அருகேயுள்ள ‘ஹகரி’ என்ற கிராமத்தில் புதிதாகக்கட்டப்பட்டு 1979ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஓர் கோயிலில் மாட்ட உத்தரவு இடப்பட்டது** [3] கைவேலைகளில் இவர் ஒரு நிபுணர்; யாருக்காவது திருமணத்திற்கு GIFT அல்லது மொய்ப்பணம் கொடுத்தாலும் அதில் ஓர் கலையுணர்ச்சியோடு அலங்கரித்துத் தருபவர் [4] சிறந்த சிறுகதை எழுத்தாளர்; மிகவும் நகைச்சுவையாகவும் எழுதுபவர் [5] மிகவும் ருசியான சாப்பாட்டுப் பிரியரும்கூட” என ஏதேதோ என்னைப்பற்றிப் புகழ்ந்து தன் தாய் மாமாக்களிடம் எடுத்துச் சொன்னார், ஸ்ரீராம் அவர்கள்.
'எங்கள் ப்ளாக்’ தோழர்கள், நான் வரைந்த ஓவியங்களில் சிலவற்றைக் காட்டுமாறு வேண்டினர். ஸ்ரீ ஹனுமார் படத்தை மட்டும், வந்திருந்த அனைவரும் தங்களின் MOBILE PHONE களில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
2. திரு. K.G. கெளதமன் அவர்கள்
3. திரு. K.G. சுப்ரமணியன் அவர்கள்
4. திரு. K.G. யக்ஞராமன் அவர்கள்
இவர்கள் மூவரும் [ 2 to 4 above ] ஸ்ரீராம் அவர்களின் சொந்த ‘தாய் மாமன்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல SKC அளித்து, என் சிறுகதைத் தொகுப்பு நூலினை ஆளுக்கு ஒன்று வீதம் அளித்தேன்.
அவசரமாகச் சென்னை செல்ல வேண்டியுள்ளது என்றும், வெளியே காரில் மேலும் நான்கு பேர்கள் எங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் சொல்லி 40 நிமிடங்களுக்குள் என் இல்லத்திலிருந்து கிளம்பி விட்டனர்.
அதற்குள் திரு. அப்பாத்துரை அவர்கள் ஏற்கனவே சொல்லியிருந்த என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம் ( http://gopu1949.blogspot.in/ 2013/02/blog-post.html ) மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், தாயுமானவர் ஆலயம், ஸ்ரீ ஆனந்தவல்லீ ஸமேத ஸ்ரீ நாகநாதஸ்வாமி ஆலய கோபுரங்கள், பஜ்ஜிக்கடை உள்பட அனைத்தையும் ரசித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
கட்டிப்பிடி வைத்தியம் ஆரம்பம்
[ நம் ஸ்ரீராமுக்கும் இந்த
வைத்தியம் செய்யப்பட்டது :) ]
என்னுடைய சிறுகதைத்தொகுப்பு நூல்
’எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...’
ஒவ்வொருவருக்கும் பரிசளித்தல்.
[ இது நம் ஸ்ரீராமுக்கும் உண்டு :) ]
சுரேஷ் பத்மநாபன் என்பவர் எழுதி
’க்ளிக்’ ரவி என்பரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள
கிழக்குப்பதிப்பக வெளியீடான
பணம்
பண்டைய ரகசியங்கள்
என்ற நூல் எங்கள் ப்ளாக் சார்பில் எனக்கு வழங்கப்பட்டது.
நம் வீட்டுக்கு வரப்போவதாகச் சொன்னார்களே .....
அதனால் ஒருவேளை .....
சீர் லாடு
சீர் முறுக்கு
நெய் அதிரஸம்
மனோகரம்
முள்ளுத்தேன்குழல்
மைசூர்பாக்
போன்ற பக்ஷணங்களுடன்
வருவார்களோ என நான் பயந்தேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwhCBRnLBSX0gvT8GzUY8GLA0kIrJV_ICWOl2xepDd78bUPm7QXSmvzGLROw9cnEmKH9MK_LD0Sj8rTdkKT7IxNcc6v1pFo-_4BCkGvmDJEgFvmcUVKrDv4S1LnphU6yPgGwY9gMAiM2Du/s1600/ants+ani+1.gif)
ஆனால் அங்கு கல்யாணத்தில் அவர்களுக்கே பாயஸம்
சரியாக போதுமான அளவுக்குப் பரிமாறப்படவில்லை என்றும்
ரஸத்தினில் எந்தவிதமானதொரு ரஸமும் இல்லை என்றும்
http://engalblog.blogspot.in/ 2015/01/blog-post_28.html
மறுநாள் காலை டிபனும் சுவாரஸ்யமாக இல்லை என்றும்
http://engalblog.blogspot.in/ 2015/01/2.html
தங்கள் பதிவினில் புலம்பி எழுதியுள்ளார்கள் :)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwhCBRnLBSX0gvT8GzUY8GLA0kIrJV_ICWOl2xepDd78bUPm7QXSmvzGLROw9cnEmKH9MK_LD0Sj8rTdkKT7IxNcc6v1pFo-_4BCkGvmDJEgFvmcUVKrDv4S1LnphU6yPgGwY9gMAiM2Du/s1600/ants+ani+1.gif)
ஏதோ மேலே சொன்ன
‘பணம்’ என்ற நூலாவது
நமக்குக் கிடைத்ததே
என நினைத்து நான் மகிழ்ந்தேன் !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwhCBRnLBSX0gvT8GzUY8GLA0kIrJV_ICWOl2xepDd78bUPm7QXSmvzGLROw9cnEmKH9MK_LD0Sj8rTdkKT7IxNcc6v1pFo-_4BCkGvmDJEgFvmcUVKrDv4S1LnphU6yPgGwY9gMAiM2Du/s1600/ants+ani+1.gif)
பக்ஷணங்கள் என்றால்
உடனே சாப்பிட்டு மகிழலாம் !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwhCBRnLBSX0gvT8GzUY8GLA0kIrJV_ICWOl2xepDd78bUPm7QXSmvzGLROw9cnEmKH9MK_LD0Sj8rTdkKT7IxNcc6v1pFo-_4BCkGvmDJEgFvmcUVKrDv4S1LnphU6yPgGwY9gMAiM2Du/s1600/ants+ani+1.gif)
ஆனால் இந்தப் ’பணம்’ என்ற நூலை
சற்று தாமதமாக, மெதுவாக
அசைபோட்டுத்தான் என்னால்
ஜீரணிக்க முடியும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwhCBRnLBSX0gvT8GzUY8GLA0kIrJV_ICWOl2xepDd78bUPm7QXSmvzGLROw9cnEmKH9MK_LD0Sj8rTdkKT7IxNcc6v1pFo-_4BCkGvmDJEgFvmcUVKrDv4S1LnphU6yPgGwY9gMAiM2Du/s1600/ants+ani+1.gif)
பக்கத்தில் கொரிக்க பக்ஷணங்கள் ஏதும் இல்லாமல்
எதையுமே என்னால் படிக்கவும் இயலாது.
அப்படியே படித்தாலும் அது
என் மர மண்டையில் ஏறவே ஏறாது என்பது
எனக்கு மட்டுமே தெரிந்ததோர் இரகசியமாகும். :)
’எங்கள் ப்ளாக்’ தோழர்கள் என்னை சந்திக்க வருவதற்கு சற்று முன்பு, நம் அருமை நண்பர் ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்களை அவரின் வீட்டினில் சந்தித்து விட்டு, பிறகுதான் என் வீட்டுக்கு வந்துள்ளார்கள்.
ஆரண்யநிவாஸ் தோட்டத்தில் விளைந்த நெல்லிக்காய்களை ஒரு பையில் போட்டு இவர்கள் மூலம் அவர் அன்புடன் எனக்கு அனுப்பியுள்ளார்.
நெல்லிக்காய்கள் என்னிடம் வருவதற்கு முன்பே, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதுபோல, கைபேசியில் எனக்கு இந்தத் தகவல் உருண்டோடி வந்துவிட்டது.
ஒளவையார், அதியமான் நெடுமான்அஞ்சிக்கு, அற்புதமான நெல்லிக்கனி கொடுத்தது போல, ’ஆரண்யநிவாஸ்’ அன்புடன் எனக்கு அனுப்பியுள்ள நெல்லிக்காய்கள் இதோ:
திரு. கே.ஜி. ஜவர்லால் அவர்களே, வணக்கம்.
தங்களின் சகோதரர் K.G.கெளதமன் அவர்களை இன்று நான் திருச்சியில் நேரில் சந்திக்க முடிந்ததால், தங்களின் ’பொய்யெனப் பெய்யும் மழை’ என்ற நகைச்சுவை விருந்தினை தினமலர் இதழில் படித்துச் சிரித்து மகிழ முடிந்தது. பாராட்டுக்கள் + வாழ்த்துகள். - அன்புடன் VGK 25.01.2015
-=-=-=-=-=-=-=-=-=-
சரி, இப்போது என் இல்லத்திற்கு வருகை தந்தவர்களைப் பற்றிச் சொல்கிறேன்.
1. நம் ஸ்ரீராம் அவர்கள்
இவர் தன் புகைப்படத்தினை பதிவினில் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளதால் பொக்கிஷமாகத் தனியே வைத்துக்கொண்டு விட்டேன். இவர் என்னுடைய ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களை வெகுவாக மனம் திறந்து பாராட்டினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
"(1) இவர் ஓர் மிகச்சிறந்த ஓவியர் [2] **இவர் 1978ல் வரைந்த மிகப்பெரியதோர் காமாக்ஷி அம்மன் ஓவியம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, பரிபூர்ண அனுக்கிரஹம் செய்யப்பட்டு, குண்டக்கல் அருகேயுள்ள ‘ஹகரி’ என்ற கிராமத்தில் புதிதாகக்கட்டப்பட்டு 1979ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஓர் கோயிலில் மாட்ட உத்தரவு இடப்பட்டது** [3] கைவேலைகளில் இவர் ஒரு நிபுணர்; யாருக்காவது திருமணத்திற்கு GIFT அல்லது மொய்ப்பணம் கொடுத்தாலும் அதில் ஓர் கலையுணர்ச்சியோடு அலங்கரித்துத் தருபவர் [4] சிறந்த சிறுகதை எழுத்தாளர்; மிகவும் நகைச்சுவையாகவும் எழுதுபவர் [5] மிகவும் ருசியான சாப்பாட்டுப் பிரியரும்கூட” என ஏதேதோ என்னைப்பற்றிப் புகழ்ந்து தன் தாய் மாமாக்களிடம் எடுத்துச் சொன்னார், ஸ்ரீராம் அவர்கள்.
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
** மேலும் அதிக விபரங்களுக்கு
நானும் என் அம்பாளும் - அதிசய நிகழ்வு
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
'எங்கள் ப்ளாக்’ தோழர்கள், நான் வரைந்த ஓவியங்களில் சிலவற்றைக் காட்டுமாறு வேண்டினர். ஸ்ரீ ஹனுமார் படத்தை மட்டும், வந்திருந்த அனைவரும் தங்களின் MOBILE PHONE களில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
2. திரு. K.G. கெளதமன் அவர்கள்
3. திரு. K.G. சுப்ரமணியன் அவர்கள்
4. திரு. K.G. யக்ஞராமன் அவர்கள்
இவர்கள் மூவரும் [ 2 to 4 above ] ஸ்ரீராம் அவர்களின் சொந்த ‘தாய் மாமன்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல SKC அளித்து, என் சிறுகதைத் தொகுப்பு நூலினை ஆளுக்கு ஒன்று வீதம் அளித்தேன்.
அவசரமாகச் சென்னை செல்ல வேண்டியுள்ளது என்றும், வெளியே காரில் மேலும் நான்கு பேர்கள் எங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் சொல்லி 40 நிமிடங்களுக்குள் என் இல்லத்திலிருந்து கிளம்பி விட்டனர்.
அதற்குள் திரு. அப்பாத்துரை அவர்கள் ஏற்கனவே சொல்லியிருந்த என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம் ( http://gopu1949.blogspot.in/
என் இல்லத்துக்கு அன்று வருகை தந்தவர்களில்
ஸ்ரீராம் தவிர மற்றவர்களின் புகைப்படங்கள்:-
திரு. K.G. யக்ஞராமன் அவர்கள்
கட்டிப்பிடி வைத்தியம் ஆரம்பம்
[ நம் ஸ்ரீராமுக்கும் இந்த
வைத்தியம் செய்யப்பட்டது :) ]
’எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...’
ஒவ்வொருவருக்கும் பரிசளித்தல்.
[ இது நம் ஸ்ரீராமுக்கும் உண்டு :) ]
சுரேஷ் பத்மநாபன் என்பவர் எழுதி
’க்ளிக்’ ரவி என்பரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள
கிழக்குப்பதிப்பக வெளியீடான
பணம்
பண்டைய ரகசியங்கள்
என்ற நூல் எங்கள் ப்ளாக் சார்பில் எனக்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீரங்கத்தில் ஏதோ நெருங்கிய உறவினரின்
கல்யாணத்திற்குப் போய்விட்டு நம் வீட்டுக்கு வரப்போவதாகச் சொன்னார்களே .....
அதனால் ஒருவேளை .....
சீர் லாடு
சீர் முறுக்கு
நெய் அதிரஸம்
மனோகரம்
மைசூர்பாக்
போன்ற பக்ஷணங்களுடன்
வருவார்களோ என நான் பயந்தேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwhCBRnLBSX0gvT8GzUY8GLA0kIrJV_ICWOl2xepDd78bUPm7QXSmvzGLROw9cnEmKH9MK_LD0Sj8rTdkKT7IxNcc6v1pFo-_4BCkGvmDJEgFvmcUVKrDv4S1LnphU6yPgGwY9gMAiM2Du/s1600/ants+ani+1.gif)
ஆனால் அங்கு கல்யாணத்தில் அவர்களுக்கே பாயஸம்
சரியாக போதுமான அளவுக்குப் பரிமாறப்படவில்லை என்றும்
ரஸத்தினில் எந்தவிதமானதொரு ரஸமும் இல்லை என்றும்
http://engalblog.blogspot.in/
மறுநாள் காலை டிபனும் சுவாரஸ்யமாக இல்லை என்றும்
http://engalblog.blogspot.in/
தங்கள் பதிவினில் புலம்பி எழுதியுள்ளார்கள் :)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwhCBRnLBSX0gvT8GzUY8GLA0kIrJV_ICWOl2xepDd78bUPm7QXSmvzGLROw9cnEmKH9MK_LD0Sj8rTdkKT7IxNcc6v1pFo-_4BCkGvmDJEgFvmcUVKrDv4S1LnphU6yPgGwY9gMAiM2Du/s1600/ants+ani+1.gif)
ஏதோ மேலே சொன்ன
‘பணம்’ என்ற நூலாவது
நமக்குக் கிடைத்ததே
என நினைத்து நான் மகிழ்ந்தேன் !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwhCBRnLBSX0gvT8GzUY8GLA0kIrJV_ICWOl2xepDd78bUPm7QXSmvzGLROw9cnEmKH9MK_LD0Sj8rTdkKT7IxNcc6v1pFo-_4BCkGvmDJEgFvmcUVKrDv4S1LnphU6yPgGwY9gMAiM2Du/s1600/ants+ani+1.gif)
பக்ஷணங்கள் என்றால்
உடனே சாப்பிட்டு மகிழலாம் !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwhCBRnLBSX0gvT8GzUY8GLA0kIrJV_ICWOl2xepDd78bUPm7QXSmvzGLROw9cnEmKH9MK_LD0Sj8rTdkKT7IxNcc6v1pFo-_4BCkGvmDJEgFvmcUVKrDv4S1LnphU6yPgGwY9gMAiM2Du/s1600/ants+ani+1.gif)
ஆனால் இந்தப் ’பணம்’ என்ற நூலை
சற்று தாமதமாக, மெதுவாக
அசைபோட்டுத்தான் என்னால்
ஜீரணிக்க முடியும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwhCBRnLBSX0gvT8GzUY8GLA0kIrJV_ICWOl2xepDd78bUPm7QXSmvzGLROw9cnEmKH9MK_LD0Sj8rTdkKT7IxNcc6v1pFo-_4BCkGvmDJEgFvmcUVKrDv4S1LnphU6yPgGwY9gMAiM2Du/s1600/ants+ani+1.gif)
பக்கத்தில் கொரிக்க பக்ஷணங்கள் ஏதும் இல்லாமல்
எதையுமே என்னால் படிக்கவும் இயலாது.
அப்படியே படித்தாலும் அது
என் மர மண்டையில் ஏறவே ஏறாது என்பது
எனக்கு மட்டுமே தெரிந்ததோர் இரகசியமாகும். :)
ஆரண்யநிவாஸ் தோட்டத்தில் விளைந்த நெல்லிக்காய்களை ஒரு பையில் போட்டு இவர்கள் மூலம் அவர் அன்புடன் எனக்கு அனுப்பியுள்ளார்.
நெல்லிக்காய்கள் என்னிடம் வருவதற்கு முன்பே, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதுபோல, கைபேசியில் எனக்கு இந்தத் தகவல் உருண்டோடி வந்துவிட்டது.
ஒளவையார், அதியமான் நெடுமான்அஞ்சிக்கு, அற்புதமான நெல்லிக்கனி கொடுத்தது போல, ’ஆரண்யநிவாஸ்’ அன்புடன் எனக்கு அனுப்பியுள்ள நெல்லிக்காய்கள் இதோ:
[அஞ்சியபடியே நானும் அதனை வாங்கிக்கொண்டேன்]
அன்புடன் நெல்லிக்காய்கள் அனுப்பியதற்கு
மிக்க நன்றி Mr. ராமமூர்த்தி Sir.
அதுவும் அவற்றை ஒரு அழகான
ஜிப் வைத்த. புத்தம்புதிய முஹூர்த்தத் தாம்பூலப்பையில்
போட்டு அனுப்பியுள்ளதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
12.06.2013 அன்று நடைபெற்றதங்களின் அன்பு மகளின் திருமணமும்
என் நினைவுக்கு வந்து மகிழ்வித்தது.
12.06.2013 அன்று நடைபெற்றதங்களின் அன்பு மகளின் திருமணமும்
என் நினைவுக்கு வந்து மகிழ்வித்தது.
நான் அஞ்சியதற்குக் காரணம் .... அவற்றை வீணாக்கி விடாமல், பக்குவமாக வேக வைத்து உப்பு + காரம் சேர்த்து FRESH ஆக ஊறுகாய் போட, வீட்டில் உள்ள பெண்மணிகள் உடனடியாக அவசர அவசிய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமே என்ற கவலையினால் தான்.
ஆனால் என் மருமகள், அதில் சரிபாதியை நன்கு அலம்பி, கத்தியால் பொறுமையாகச் சீவி, விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து, உடனடியாக மிகவும் சுறுசுறுப்பாக, காரசாரமான நெல்லிக்காய் தொக்கு செய்து விட்டாள். எனக்கே ஆச்சர்யமாகப் போய் விட்டது !
[என் மருமகள் செய்த நெல்லிக்காய்த் தொக்கு]
புளிப்பாகவும், காரமாகவும், சுவையாகவும், சூப்பராகவும் உள்ளது. இந்த நெல்லிக்காய்த் தொக்கினை அப்படியே சூடான சாதத்தில் பிசைந்து, கொஞ்சமாக எண்ணெய் விட்டு சாப்பிடவும் படா ஜோராகவே உள்ளது.
தொக்கு தீரும் வரை
உம்மை நான்
மறக்கவே மாட்டேன் !
மறக்கவே மாட்டேன் !
[ஒரு பத்து நாட்களுக்குள் எப்படியும் தீர்ந்துவிடும்]
நான் உம்மை மறப்பதற்குள்,
அடுத்த லாட் வேறு ஏதாவது உம்மிடமிருந்து
வராமலாப் போய் விடும் என்ற சபலமும்
ஒரு பக்கம் உள்ளது ஸ்வாமி!
:) ஆரண்ய நிவாஸ் வாழ்க ! :)
அடுத்த லாட் வேறு ஏதாவது உம்மிடமிருந்து
வராமலாப் போய் விடும் என்ற சபலமும்
ஒரு பக்கம் உள்ளது ஸ்வாமி!
:) ஆரண்ய நிவாஸ் வாழ்க ! :)
எங்கே, அந்த நெல்லிக்காய் தொக்கை கொஞ்சம் இப்படி தள்ளுங்கள்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவு மூலம் மற்றவர்களையும் அறிய முடிந்தது.
இனிய சந்திப்பு.
நேரில் பார்த்ததுபோல் இர்ருந்தது
விஜி
viji January 30, 2015 at 12:32 AM
நீக்குவாங்கோ விஜி, வணக்கம். அபூர்வ வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
//எங்கே, அந்த நெல்லிக்காய் தொக்கை கொஞ்சம் இப்படி தள்ளுங்கள்.//
கூரியரில் அனுப்பி வைக்கட்டுமா விஜி ? :)
//உங்கள் பதிவு மூலம் மற்றவர்களையும் அறிய முடிந்தது.
இனிய சந்திப்பு. நேரில் பார்த்ததுபோல் இருந்தது. - விஜி//
மிகவும் சந்தோஷம் விஜி.
பிரியமுள்ள கோபு
நல்லதொரு சந்திப்பு...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா...
-'பரிவை' சே.குமார் January 30, 2015 at 12:56 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//நல்லதொரு சந்திப்பு... வாழ்த்துக்கள் ஐயா...//
மிக்க நன்றி.
சுவையான சந்திப்பை நகைச்சுவையாக விவரித்து இருக்கும் விதம் மிக அருமை.
பதிலளிநீக்குசீர் லாடு ,சீர் முறுக்கு, நெய் அதிரஸம்,மனோகரம்,முள்ளுத்தேன்குழல் ,மைசூபாக்...என படித்தவுடன் நீங்கள் அவர்களுக்கு எடுத்து வைத்திருந்தீர்களோ...என நினைத்தேன்...அப்போ நீங்க கொடுத்தீங்க பாருங்க ட்விஸ்ட்...
போன்ற பக்ஷணங்களுடன்
வருவார்களோ என நான் பயந்தேன்.//
சூப்பர் சார்.
R.Umayal Gayathri January 30, 2015 at 3:22 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//சுவையான சந்திப்பை நகைச்சுவையாக விவரித்து இருக்கும் விதம் மிக அருமை. //
சந்தோஷம்.
//சீர் லாடு ,சீர் முறுக்கு, நெய் அதிரஸம், மனோகரம், முள்ளுத்தேன்குழல், மைசூர்பாக்...என படித்தவுடன் நீங்கள் அவர்களுக்கு எடுத்து வைத்திருந்தீர்களோ...என நினைத்தேன்...//
இவைகளில் அடங்காத சோன்பப்டி, உருளைக்கிழங்கு சிப்ஸ், மேங்கோ ஜூஸ், ஹார்லிக்ஸ், ஸ்ட்ராங்க் காஃபி முதலியன நான் OFFER செய்தேன். முதல் இரண்டையும் எடுத்துக்கொண்டனர். மூன்றாவது மூன்றில் STRONG COFFEE ஐ, மட்டுமே PREFER செய்து விரும்பிக்குடித்து மகிழ்ந்து மிகவும் பாராட்டிச் சென்றனர். காப்பித்தூள் எங்கு வாங்குகிறோம் என்ற இரகசியத்தையும் கேட்டு அறிந்து சென்றனர்.
//அப்போ நீங்க கொடுத்தீங்க பாருங்க ட்விஸ்ட்... //
:) தங்களின் இந்த அழகிய ரசனைக்குத் தலை வணங்கி மகிழ்கிறேன் :)
//போன்ற பக்ஷணங்களுடன்
வருவார்களோ என நான் பயந்தேன்.//
சூப்பர் சார்.
நன்றி! நன்றி!! நன்றி !!!
அன்புடன் VGK
இவைகளில் அடங்காத சோன்பப்டி, உருளைக்கிழங்கு சிப்ஸ், மேங்கோ ஜூஸ், ஹார்லிக்ஸ், ஸ்ட்ராங்க் காஃபி முதலியன நான் OFFER செய்தேன். முதல் இரண்டையும் எடுத்துக்கொண்டனர். மூன்றாவது மூன்றில் STRONG COFFEE ஐ, மட்டுமே PREFER செய்து விரும்பிக்குடித்து மகிழ்ந்து மிகவும் பாராட்டிச் சென்றனர். காப்பித்தூள் எங்கு வாங்குகிறோம் என்ற இரகசியத்தையும் கேட்டு அறிந்து சென்றனர்.//
நீக்குஆஹா...பேஷ், பேஷ்....நீங்க இவ்வளவு கொடுத்து உபச்சாரம் செய்வீர்கள்...என தெரிந்து விட்டது. அடுத்த முறை இந்தியா வரும் போது கண்டிப்பாக உங்கள் இல்லம் வருகிறேன் ஐயா. பில்டர் காப்பியை வேறு நினைவு படுத்தி விட்டீர்கள்......!!! நன்றி
R.Umayal Gayathri January 30, 2015 at 11:54 AM
நீக்கு//ஆஹா...பேஷ், பேஷ்....நீங்க இவ்வளவு கொடுத்து உபச்சாரம் செய்வீர்கள்...என தெரிந்து விட்டது. அடுத்த முறை இந்தியா வரும் போது கண்டிப்பாக உங்கள் இல்லம் வருகிறேன் ஐயா. பில்டர் காப்பியை வேறு நினைவு படுத்தி விட்டீர்கள்......!!! நன்றி//
:))))) WELCOME ! WELCOME !! WELCOME !!! :)))))
//ரஸத்தினில் எந்தவிதமானதொரு ரஸமும் இல்லை //
பதிலளிநீக்குரஸத்தில் ரஸம் இல்லாவிடில் அது வீணே. ஆனால் எங்களுக்கோ அனுதினமும் நவரஸங்களும் வைகோ மூலம் கிடைத்துக்கொண்டே இருக்கிறதே.
பழனி. கந்தசாமி January 30, 2015 at 3:29 AM
நீக்குவாங்கோ என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஐயா அவர்களே ! வணக்கம் ஐயா.
**ரஸத்தினில் எந்தவிதமானதொரு ரஸமும் இல்லை**
//ரஸத்தில் ரஸம் இல்லாவிடில் அது வீணே.//
அழகாகச் சொல்லியுள்ளீர்கள், ஐயா. ரஸம் எப்போதுமே ரஸமாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் கோப்பை கோப்பையாக வாங்கிப் பருகுவதுபோல இருக்க வேண்டும். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, நான் என் வீட்டில் தினமும் ஆசையுடன் பருகாத ரஸமா !!!!!!
//ஆனால் எங்களுக்கோ அனுதினமும் நவரஸங்களும் வைகோ மூலம் கிடைத்துக்கொண்டே இருக்கிறதே.//
மிகவும் சந்தோஷம் ஐயா, மகிழ்ச்சி ஐயா. நன்றி ஐயா.
நம் இனிமையான சந்திப்பு என் நினைவுக்கு வந்து என்னைப் பரவஸப்படுத்தி விட்டது, ஐயா. இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html
அன்புடன் VGK
//நெல்லிக்காய்கள் என்னிடம் வருவதற்கு முன்பே, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதுபோல, கைபேசியில் எனக்கு இந்தத் தகவல் உருண்டோடி வந்துவிட்டது.//
பதிலளிநீக்குஹா.....ஹா....ஹா...
ஸ்ரீராம். January 30, 2015 at 6:15 AM
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் ! வணக்கம்.
**நெல்லிக்காய்கள் என்னிடம் வருவதற்கு முன்பே, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதுபோல, கைபேசியில் எனக்கு இந்தத் தகவல் உருண்டோடி வந்துவிட்டது.**
//ஹா.....ஹா....ஹா...//
:) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :) நன்றி.
அன்புடன் VGK
/தொக்கு தீரும்வரை உம்மை நான் மறக்க மாட்டேன்//
பதிலளிநீக்குஅப்புறம்? :P
ஸ்ரீராம். January 30, 2015 at 6:16 AM
நீக்கு**தொக்கு தீரும்வரை உம்மை நான் மறக்க மாட்டேன்**
//அப்புறம்? :P//
மறந்துட வேண்டியது தான் ...... [அந்தத்தொக்கை....]
ராமமூர்த்தியை நானோ, என்னை ராமமூர்த்தியோ மறக்கவே முடியாது ..... அவ்வளவு ஒரு சிநேகிதம் நாங்கள் ..... பல்லாண்டுகளாக ...... ஒரே தெருவில் வசித்தோம், ஒரே அலுவலகத்தில் அதுவும் ஒரே துறையினில் பணி புரிந்தோம். பல நாட்கள் மாலை அலுவலகம் விட்டதும் ஒரே பஸ்ஸில் பக்கத்துப்பக்கத்து சீட்டில் [கொஞ்சம் கஷ்டம் தான் - விழாமல் இருக்க ஒருவரை ஒருவர் இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொள்வோம்] அமர்ந்தே பேசிக்கொண்டே வருவோம். இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்ததேகூடத் தெரியாமல் மெய்மறந்து பேசிக்கொண்டே இருப்போம். :) நகைச்சுவை உணர்வுகள் மட்டுமே எங்களின் நட்புக்குக் காரணம்.
எங்களைத் தேடி கீழே வந்து காத்திருந்ததோடு, வருமுன்னரே ஜில்லென்று இருக்கவேண்டி A/C ஆன் செய்து வைத்து, என்று சகல முன்னேற்பாடுகளுடன் இருந்தீர்கள். அது நெகிழ்ச்சியைத் தந்தது.
பதிலளிநீக்குதிருமணத்துக்கு வந்த காரணத்தால் உங்கள் வீட்டு மற்றும் அந்த பஜ்ஜிக்கடை ஐட்டங்களைச் சுவைக்க முடியாமல் போனது.
ஸ்ரீராம். January 30, 2015 at 6:16 AM
நீக்கு//எங்களைத் தேடி கீழே வந்து காத்திருந்ததோடு, வருமுன்னரே ஜில்லென்று இருக்கவேண்டி A/C ஆன் செய்து வைத்து, என்று சகல முன்னேற்பாடுகளுடன் இருந்தீர்கள். அது நெகிழ்ச்சியைத் தந்தது.//
முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு வருபவர்களுக்கு இதெல்லாம் நிச்சயமாக நான் செய்வதுண்டு. அது நம் கடமை அல்லவா !
//திருமணத்துக்கு வந்த காரணத்தால் உங்கள் வீட்டு மற்றும் அந்த பஜ்ஜிக்கடை ஐட்டங்களைச் சுவைக்க முடியாமல் போனது.//
மிகவும் குறைதான் ..... உங்களுக்கு மட்டுமல்ல ..... அந்த பஜ்ஜி வியாபாரிக்கும்கூட :)
புகைப்படங்கள் அருமை. திருமணத்திலும் திருப்தியாகவே சாப்பிட்டோம். நீங்கள் இங்கு பதிவுக்காக நகைச்சுவையாக எழுதி இருப்பது போலவே நானும் பதிவில் சற்று நகைச்சுவையைக் கூட்டினேன்!
பதிலளிநீக்குகொஞ்ச நேரம் கூட இருந்திருந்தால் நெல்லித் தொக்கு கொஞ்சம் கவர்ந்து வந்திருக்கலாம் போலவே!
:)))))))))))))
ஸ்ரீராம். January 30, 2015 at 6:18 AM
நீக்கு//புகைப்படங்கள் அருமை.//
சந்தோஷம். தங்கள் படம் இல்லையே என சிலர் கவலைப்படுகிறார்கள் ... பாருங்கள்.
//திருமணத்திலும் திருப்தியாகவே சாப்பிட்டோம். நீங்கள் இங்கு பதிவுக்காக நகைச்சுவையாக எழுதி இருப்பது போலவே நானும் பதிவில் சற்று நகைச்சுவையைக் கூட்டினேன்! //
அப்படியா ! உண்மையில் நான் வேறு விதமாகவே எழுத இருந்தேன்.
தங்களின் முதல் இரண்டு பதிவுகளைப்படித்ததும், நானும் இவ்வாறு கொஞ்சம் என் நகைச்சுவைகளைக் கூட்டிக்கொண்டு விட்டேன்.
//கொஞ்ச நேரம் கூட இருந்திருந்தால் நெல்லித் தொக்கு கொஞ்சம் கவர்ந்து வந்திருக்கலாம் போலவே! :)))))))))))))//
ஆம் ...... நிச்சயமாக ! கவர்ந்து போய் இருக்கலாம்தான். ஏனெனில் அதில் கவர்ச்சி கொஞ்சம் அதிகம் தான். :)
கோபுர தரிசனம் கோடிபுண்ணியம் என்பார்கள். உங்களுக்கு தினசரி கோடி புண்ணியம் சேர்கிறது.
பதிலளிநீக்குஎல்லோரையும் ஒட்டுமொத்தமாகப் புகழ்ந்து எழுதி விட்டீர்கள். நன்றி, நன்றி, நன்றி.
சம்பந்தப்பட்ட பதிவுகளையும் உடனுக்குடன் தேடிக் கண்டுபிடித்து பதிவில் இணைத்து விட்டீர்களே... சபாஷ் ஸார்!
ஸ்ரீராம். January 30, 2015 at 6:18 AM
நீக்கு//கோபுர தரிசனம் கோடிபுண்ணியம் என்பார்கள். உங்களுக்கு தினசரி கோடி புண்ணியம் சேர்கிறது.//
ஆமாம். ஏதோ கொஞ்சம் கொடுத்து வைத்திருக்கிறோம். முன்னோர்கள் செய்த புண்ணியம் + ஆசீர்வாதங்கள் தான் காரணமாக இருக்கும்.
//எல்லோரையும் ஒட்டுமொத்தமாகப் புகழ்ந்து எழுதி விட்டீர்கள். நன்றி, நன்றி, நன்றி.//
ஒரேயொருவர் வந்தாலே ஒன்பது விஷயங்கள் எழுத எனக்குக் கிடைத்து விடும். தாங்கள் நால்வர் அல்லவா அதனால் கொஞ்சம் பதிவு பெரிதாகி விட்டதுபோல. தாங்கள் அனைவரும் புகழப்பட வேண்டியவர்களே. நான் எழுதியுள்ள அனைத்துமே எங்கள் ப்ளாக் போலவே, இந்தவார ‘பாஸிடிவ் செய்திகள்’ தான் :)
//சம்பந்தப்பட்ட பதிவுகளையும் உடனுக்குடன் தேடிக் கண்டுபிடித்து பதிவில் இணைத்து விட்டீர்களே... சபாஷ் ஸார்!//
ஆயிரத்தில் ஒருவராவது அவற்றைப் பார்க்க மாட்டார்களா, படிக்க மாட்டார்களா, கருத்தளிக்க மாட்டார்களா என்ற ஒரு சின்ன எதிர்பார்ப்பினால் மட்டுமே. :)
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.
அன்புடன் VGK
அருமையான, கோர்வையான எழுத்து. சந்திப்புக்கும், உபசரிப்புக்கும், நெல்லிக்காய்த் தொக்குக்கும் வாழ்த்துகள். நல்ல நாட்டு நெல்லிக்காய், பார்த்தாலே தெரிகிறது. சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த மருந்து. ஊறுகாய் போடாட்டியும் பரவாயில்லை. தினம் காலை 2, 3 நெல்லிக்காய்களை மிக்சியில் அடித்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். கூடவே பாகற்காயும் சேர்க்கலாம். இந்தச் சாறு சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு மற்ற எந்த ஆகாரமும் சாப்பிடக் கூடாது. காஃபி, டீ போன்றவையும் ஒரு மணி நேரம் கழித்தே குடிக்க வேண்டும். :)
பதிலளிநீக்குGeetha Sambasivam January 30, 2015 at 6:42 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அருமையான, கோர்வையான எழுத்து. சந்திப்புக்கும், உபசரிப்புக்கும், நெல்லிக்காய்த் தொக்குக்கும் வாழ்த்துகள்.//
மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.
அன்புடன் கோபு
அனுமன் அட்டகாசம்...!
பதிலளிநீக்குரகசியம் புரிந்தது ஐயா...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
திண்டுக்கல் தனபாலன் January 30, 2015 at 7:34 AM
நீக்குவாங்கோ Mr DD Sir.
//அனுமன் அட்டகாசம்...! ரகசியம் புரிந்தது ஐயா...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//
மிக்க நன்றி.
[ ரகசியம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கட்டும் :) ]
அன்புடன் VGK
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குஒரு சிறந்த பதிவர் சந்திப்பினை தங்களது இல்லத்திலேயே நடத்தியது நன்று. விருந்தினர்களும் தங்கள் இல்லத்திற்கு வந்து மகிழ்ந்தது நன்று.
////
சீர்லாடு சீர்முறுக்கு, நெய்அதிரஸம், மனோகரம் முள்ளுத்தேனகுழல் மைசூர்பாக்...என படித்தவுடன் நீங்கள் அவர்களுக்கு எடுத்து வைத்திருந்தீர்களோ...என நினைத்தேன்...அப்போ நீங்க கொடுத்தீங்க பாருங்க ட்விஸ்ட்...
பலப் பல //// -
//போன்ற பக்ஷணங்களுடன்
வருவார்களோ என நான் பயந்தேன்.//
இம்மறுமொழிகள் அருமைச் சகோதரி உமையாள் காயத்ரியினிடம் இருந்து சுட்டது.
மிக மிக இரசித்தேன்
நல்வாழ்த்துகள் வை.கோ
நட்புட்ன் சீனா
cheena (சீனா) January 30, 2015 at 9:37 AM
நீக்குஅன்பின் வை.கோ //
வாங்கோ என் அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கங்கள்.
//ஒரு சிறந்த பதிவர் சந்திப்பினை தங்களது இல்லத்திலேயே நடத்தியது நன்று. விருந்தினர்களும் தங்கள் இல்லத்திற்கு வந்து மகிழ்ந்தது நன்று.//
சந்தோஷம். மகிழ்ச்சி. மிக்க நன்றி.
//இம்மறுமொழிகள் அருமைச் சகோதரி உமையாள் காயத்ரியினிடம் இருந்து சுட்டது.//
தாங்கள் சுட்ட அதில் சூடு அதிகமாகவே உள்ளது. :)
//மிக மிக இரசித்தேன்//
நானும் அவர்களின் பின்னூட்டத்தை மிக மிக ரசித்தேன்.
சில பத்திரிகைகளில் ‘கேள்வி-பதில்’ பகுதியில் மிகச் சிறந்த கேள்வி கேட்கும் வாசகர்களுக்கு, பரிசு அளிப்பது உண்டு.
அதுபோல மிகச்சிறப்பாக பின்னூட்டம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பரிசு அளிக்கலாமா என நானும் என் மனதில் யோசித்து வருகிறேன்.
அவ்வாறு கொடுப்பதானால் இந்தப்பதிவுக்கு பின்னூட்டம் எழுதியுள்ள நம் சகோதரி Ms. R.Umayal Gayathri அவர்களுக்கே கொடுக்க வேண்டியிருக்கும்.
அவர்களுக்கு மீண்டும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
அன்புடன் VGK
அதுபோல மிகச்சிறப்பாக பின்னூட்டம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பரிசு அளிக்கலாமா என நானும் என் மனதில் யோசித்து வருகிறேன்.
நீக்குஅவ்வாறு கொடுப்பதானால் இந்தப்பதிவுக்கு பின்னூட்டம் எழுதியுள்ள நம் சகோதரி Ms. R.Umayal Gayathri அவர்களுக்கே கொடுக்க வேண்டியிருக்கும்.
அவர்களுக்கு மீண்டும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.//
ஐயா தாங்கள் நடத்திய கதை விமர்சனத்திற்கு ஒன்றாவது அனுப்பி பரிசு வாங்கனும்..அப்படின்னு நினைத்து இருந்தேன். ஆனால் அனுப்பவில்லை.....
ஆனா...இப்போ...உங்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் எனக்கு பரிசு வாங்கிய திருப்தியை கொடுத்து விட்டது.
நன்றி ஐயா.
R.Umayal Gayathri January 30, 2015 at 11:59 AM
நீக்கு//ஐயா தாங்கள் நடத்திய கதை விமர்சனத்திற்கு ஒன்றாவது அனுப்பி பரிசு வாங்கனும்..அப்படின்னு நினைத்து இருந்தேன். ஆனால் அனுப்பவில்லை.....//
அடடா, கலந்து கொண்டிருந்தால் நானும் மகிழ்ச்சி அடைந்திருப்பேனே ! மொத்தம் 255 பேர்களுக்கு மேல் பரிசு வழங்கப்பட்டுள்ளதே !! எங்களுக்கு உங்கள் எழுத்தினைப்படித்து மகிழ சந்தர்ப்பம் இல்லாமல் போய் விட்டதே !!!
இந்த இரு பதிவுகளில் உள்ள படங்களை மட்டுமாவது பாருங்கோ, ப்ளீஸ்:
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
முடிந்தால் பின்னூட்டமும் அளியுங்கள்.
//ஆனா...இப்போ...உங்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் எனக்கு பரிசு வாங்கிய திருப்தியை கொடுத்து விட்டது. நன்றி ஐயா.//
சந்தோஷம். மிக்க நன்றி.
வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!
அன்புடன் VGK
அருமையான சந்திப்பாக அமைந்து விட்டது பதிவின் மூலம் தெரிகிறது. நேற்று மாலை சந்தித்த பதிவர் பற்றிய தகவல்கள் அடுத்த பதிவிலா?
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் January 30, 2015 at 9:42 AM
நீக்குவாங்கோ, வெங்கட்ஜி, வணக்கம். தங்கள் வருகையும் இப்போதெல்லாம் அபூர்வ வருகையாகி விட்டது.
//அருமையான சந்திப்பாக அமைந்து விட்டது பதிவின் மூலம் தெரிகிறது.//
ஆம். அருமையான சந்திப்பாகவேதான் அமைந்திருந்தது.
//நேற்று மாலை சந்தித்த பதிவர் பற்றிய தகவல்கள் அடுத்த பதிவிலா?//
அந்த சந்திப்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஓர் பதிவரும், பிரபல பத்திரிகை எழுத்தாளருமான ஒருவருடன் நீண்ட நேரம் வெகு அழகாக, மிகவும் ஜாலியாக நடைபெற்றது. அவர்கள் தன் அன்புக் கணவருடன் என் வீட்டுக்கு விஜயம் செய்திருந்தார்கள். நீண்ட நேர சந்திப்பு. பகிர வேண்டிய விஷயங்களும் ஏராளமாக தாராளமாகவே உள்ளன.
இன்னும் நான் அதை பதிவாக வடிவமைக்கவே ஆரம்பிக்கவில்லை. முயற்சிக்கிறேன். வெகு விரைவில் வெளி வரலாம். நாளைக்கே கொடுக்க முடியுமா என்பது மிகவும் சந்தேகமே .
அன்புடன் VGK
மகிழ்வான தருணங்கள்..வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குAnuradha Prem January 30, 2015 at 10:53 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//மகிழ்வான தருணங்கள்..வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி.
அன்புடன் VGK
தங்களின் அருமையான எழுத்தில் நகைச்சுவை மிளிர நீங்கள் வெளியிட்ட பதிவு அருமையாக இருந்தது! பதிவர்களைத் தங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்ட செய்திகளும் சுவாரஸ்யமாக இருந்தன!
பதிலளிநீக்குமனோ சாமிநாதன் January 30, 2015 at 11:00 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தங்களின் அருமையான எழுத்தில் நகைச்சுவை மிளிர நீங்கள் வெளியிட்ட பதிவு அருமையாக இருந்தது!//
இதைத்தங்கள் வாயிலாகக் கேட்பதில் எனக்கோர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி + மகிழ்ச்சி, மேடம்.
//பதிவர்களைத் தங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்ட செய்திகளும் சுவாரஸ்யமாக இருந்தன!//
சந்தோஷம். மிக்க நன்றி.
அன்புடன் VGK
”எங்கள் ப்ளாக்”க்கில் அடிக்கடி வருபவர் ஸ்ரீராம் என்று நினைக்கிறேன். அவர் ஏன் தன்னுடைய படம் வெளிவருவதில் தயக்கம் காட்டினார் என்று புரியவில்லை. தங்களைச் சந்தித்த அடுத்த பதிவர் யாராக இருக்கும்? சீக்கிரம் சஸ்பென்ஸை உடைக்கவும்.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ January 30, 2015 at 11:04 AM
நீக்குவாங்கோ என் அருமை நண்பர் திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களே ! வணக்கம். வணக்கம்.
//”எங்கள் ப்ளாக்”க்கில் அடிக்கடி வருபவர் ஸ்ரீராம் என்று நினைக்கிறேன். //
அதே அதே ... அவரே அவரே தான் !
//அவர் ஏன் தன்னுடைய படம் வெளிவருவதில் தயக்கம் காட்டினார் என்று புரியவில்லை.//
அவர் எனோ தயக்கம் காட்டிவிட்டார். ஆனால் நான் எடுத்திருந்த பெரும்பாலான அனைத்துப்படங்களிலும் அவர் காட்சி அளித்திருந்தார். ஒவ்வொரு படத்திலிருந்தும் அவரை நீக்கி மிகவும் கவனமாக நான் வெளியிட வேண்டியிருந்ததால், பதிவு கொடுக்க சற்றே தாமதம் ஆகிவிட்டது. :)
//தங்களைச் சந்தித்த அடுத்த பதிவர் யாராக இருக்கும்? //
அவர் பதிவுலகை விட ஆன்மிக பத்திரிகையுலகில் மிகவும் பிரபலமானவர். அன்பானவர், பண்பானவர், தங்கமான தாராளமான மிகப் பெரிய மனஸு உடையவர்.
//சீக்கிரம் சஸ்பென்ஸை உடைக்கவும்.//
உடைக்க ....... மனம் கூடுதில்லையே ! :)
(எங்களுக்குள் உள்ள ஆத்மார்த்தமான நட்பையும் ... அந்த சஸ்பென்ஸையும்)
அன்புள்ள VGK
அருமையான பதிவர் சந்திப்பாக இருந்திருக்கிறது. எங்களால் தான் சந்திக்க முடியாமல் போய்விட்டது....:( ஒரு விசேஷத்துக்காக சென்னை சென்றிருந்தோம். கீதா மாமி தகவல் தரும் போது நாங்கள் பல்லவனுக்காக ஸ்ரீரங்கம் ரயில்நிலையத்தில் காத்திருந்தோம்....:) கெளதமன் சாரை மட்டும் சென்ற ஆண்டு பதிவர் மாநாட்டில் சந்தித்திருக்கிறோம்...
பதிலளிநீக்குநெல்லிக்காய் தொக்கு கவர்கிறது. உடனே செய்து சாப்பிட எண்ணம் வந்துவிட்டது...:)
ADHI VENKAT January 30, 2015 at 12:15 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அருமையான பதிவர் சந்திப்பாக இருந்திருக்கிறது. //
அப்படியா? ஆம். மிக்க மகிழ்ச்சி ! :)
//எங்களால் தான் சந்திக்க முடியாமல் போய்விட்டது....:( ஒரு விசேஷத்துக்காக சென்னை சென்றிருந்தோம். கீதா மாமி தகவல் தரும் போது நாங்கள் பல்லவனுக்காக ஸ்ரீரங்கம் ரயில்நிலையத்தில் காத்திருந்தோம்....:)//
என்ன செய்வது? அதனால் பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
//கெளதமன் சாரை மட்டும் சென்ற ஆண்டு பதிவர் மாநாட்டில் சந்தித்திருக்கிறோம்...//
அப்படியா ! சந்தோஷம்.
//நெல்லிக்காய் தொக்கு கவர்கிறது. உடனே செய்து சாப்பிட எண்ணம் வந்துவிட்டது...:)//
செய்யுங்கோ .... அல்லது நேராக புறப்பட்டு எங்காத்துக்கு வாங்கோ. FRIDGE இல் READY யாக உள்ளது. நாலு ஸ்பூன் TASTE செய்துவிட்டுப்போங்கோ ! :)))))
அன்புடன் VGK
// என ஏதேதோ என்னைப்பற்றிப் புகழ்ந்து தன் தாய் மாமாக்களிடம் எடுத்துச் சொன்னார், ஸ்ரீராம் அவர்கள். //
பதிலளிநீக்குஅவர்கள் சொன்னதெல்லாம் அப்பட்டமான 100/100 அக்மார்க் உண்மைகள் தானே.
இப்பதான் பெரிய நெல்லிக்காய் தொக்கு போட்டு வெச்சுட்டு (எனக்கு திரு ராமமூர்த்தி சார் ஒண்ணும் குடுக்கல. நானே போய் இல்ல அவரோட பைக்ல போய் வாங்கிண்டு வந்தேன்) ம். திருச்சில இருந்தா அண்ணா தனக்கு கிடைச்சதுல துளி, ஏன் தொக்காவே கிடைச்சிருக்கும். வடை போச்சே. தொக்கை பண்ணி வெச்சுட்டு வந்து உக்காந்தா இங்கயும் நெல்லிக்காய் தொக்கு.
//போன்ற பக்ஷணங்களுடன்
வருவார்களோ என நான் பயந்தேன்.//
யாரு நீங்க. இத நாங்க நம்பணுமாக்கும். மன்னியைப் பார்த்து தினமும் பாடற பாட்டே ‘அதிரசமே, கனி ரசமே’ தானே.
நிற்க. இப்ப நீங்க எப்படி பிரபலமா ஆயிருக்கேள் தெரியுமா? இந்த லயாக்குட்டி உங்க போட்டோவை காமிச்சா ‘கோபு தாத்தா’ என்று சொல்கிறாள். உங்க வலைத்தளத்துல இருக்கற புகைப்படங்கள், அதுவும் குறிப்பாக ANIMATED புகைப்படங்கள் அவளுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. நான் கணினியின் முன் உட்கார்ந்தாலே பாட்டி, அந்த கிளி காட்டு, குருவி காட்டுன்னு வந்து பக்கத்துல உக்காந்துடறா.
அறுசுவையில் ஒரு சுவையும் குறையாத உங்கள் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து விருந்தில் வயிறும், மனமும் ரொம்பித்தான் போய் இருக்கிறது.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
Jayanthi Jaya January 30, 2015 at 2:38 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம். செளக்யமா சந்தோஷமா இருக்கேளா ! நம் லயாக்குட்டி என்ன செய்கிறாள்? ஆத்தில் எல்லோரையும் கேட்டதாகச்சொல்லவும். வேறு ஏதும் விசேஷம் உண்டா :)
** என ஏதேதோ என்னைப்பற்றிப் புகழ்ந்து தன் தாய் மாமாக்களிடம் எடுத்துச் சொன்னார், ஸ்ரீராம் அவர்கள்.**
//அவர்கள் சொன்னதெல்லாம் அப்பட்டமான 100/100 அக்மார்க் உண்மைகள் தானே.//
எனக்கு எப்படித்தெரியும்? ஏதோ ஜெயா சொன்னா அது மிகவும் கரெக்டாத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
>>>>>
VGK >>>>> Jayanthi Jaya [2]
நீக்கு//இப்பதான் பெரிய நெல்லிக்காய் தொக்கு போட்டு வெச்சுட்டு .... ம்.//
ஆஹா ..... என்னப்பொருத்தம் ...... நமக்குள் இந்தப் பொருத்தம் !
//திருச்சில இருந்தா அண்ணா தனக்கு கிடைச்சதுல துளி, ஏன் தொக்காவே கிடைச்சிருக்கும். வடை போச்சே.//
மொறுமொறுன்னு சூடா உளுத்தம் வடை பண்ணி
இந்தத்தொக்கைத் தொட்டுக்கொண்டு சாப்பிடணும் போல ஆசையைக் கிளப்பி விட்டுட்டேளே, ஜெயா. :)
//தொக்கை பண்ணி வெச்சுட்டு வந்து உக்காந்தா இங்கயும் நெல்லிக்காய் தொக்கு.//
அதனால் என்னை எக்குவதற்கு ஜெயாவுக்குத் தொக்காப்போச்சு ! :)
>>>>>
VGK >>>>> Jayanthi Jaya [3]
நீக்கு**போன்ற பக்ஷணங்களுடன் வருவார்களோ என நான் பயந்தேன்.**
//யாரு நீங்க. இத நாங்க நம்பணுமாக்கும்.//
உண்மையிலேயே ஜெயா ... நீங்க அன்று நேரில் வந்தபோது கொடுத்துட்டுப்போன பெரிய லட்டு, பெரிய சுவையான உதிரு உதிரான அந்த நெய்யில் செய்த அதிரஸம், பெரிய சுற்று முறுக்கு எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டேன். மறக்கவே முடியாது அவற்றின் ருசி. ஜெயாவின் அன்பும் அதில் கலந்திருந்ததனால் :))))
http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html
http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html
//மன்னியைப் பார்த்து தினமும் பாடற பாட்டே ‘அதிரசமே, கனி ரசமே’ தானே. //
அடடா, இப்படியெல்லாம் கூட கொஞ்சலாமா ’ஜெ’ :)
இதெல்லாம் எனக்குச் சொல்லித்தரவே இல்லையே ! நல்ல அனுபவம் தான் போலிருக்கு உங்க மன்னியின் நாத்தனாராகிய உங்களுக்கு ! :))))) சந்தோஷம் !
>>>>>
VGK >>>>> Jayanthi Jaya [4]
நீக்கு//நிற்க.//
உத்தரவு ...... எழுந்து நின்னுட்டேன், ஜெயா !
//இப்ப நீங்க எப்படி பிரபலமா ஆயிருக்கேள் தெரியுமா? இந்த லயாக்குட்டி உங்க போட்டோவை காமிச்சா ‘கோபு தாத்தா’ என்று சொல்கிறாள்.//
வெரிகுட். என் செல்லக்குட்டி, பட்டுக்குட்டி, பட்டுத்தங்கம் அது. அவளுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
//உங்க வலைத்தளத்துல இருக்கற புகைப்படங்கள், அதுவும் குறிப்பாக ANIMATED புகைப்படங்கள் அவளுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. நான் கணினியின் முன் உட்கார்ந்தாலே பாட்டி, அந்த கிளி காட்டு, குருவி காட்டுன்னு வந்து பக்கத்துல உக்காந்துடறா.//
சபாஷ். என் பேரன் அநிருத்தும் அதே போலத்தான். அனிமேடட் படங்கள் என்றால் அவனுக்கு ஒரே குஷியாகி விடும்.
ஒரே டேஸ்டுகள் உள்ள அநிருத்+லயா :)
பிராப்தம் எப்படியோ? :)))))
>>>>>
VGK >>>>> Jayanthi Jaya [5]
நீக்கு//அறுசுவையில் ஒரு சுவையும் குறையாத உங்கள் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து விருந்தில் வயிறும், மனமும் ரொம்பித்தான் போய் இருக்கிறது. அன்புடன் ஜெயந்தி ரமணி//
மிகவும் சந்தோஷம், ஜெயா. மிக்க நன்றி.
பிரியமுள்ள கோபு
சகோ. திரு. யக்ஞராமனைத் தவிர மற்ற அனைவரும் எங்கள் வீட்டிற்கும் விஜயம் செய்துள்ளார்கள். இப்ப கூட நம்ப ஸ்ரீராம் இங்கே வரப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அங்கே வந்திருக்கிறார், பாருங்கள்! நான் அமெரிக்காவிலிருந்து திரும்பியதிலிருந்து அவருக்காக வெயிட்டிங்.... கிட்டதட்ட
பதிலளிநீக்கு10 கிலோ எடையுள்ள தி.ஜானகிராமனின் புத்தகங்களும் திருப்பித் தருவதற்காக அவருக்காக காத்திருக்கின்றன.
ஜீவி January 30, 2015 at 2:59 PM
நீக்குவாங்கோ சார். நமஸ்காரங்கள் ... வணக்கம்.
//சகோ. திரு. யக்ஞராமனைத் தவிர மற்ற அனைவரும் எங்கள் வீட்டிற்கும் விஜயம் செய்துள்ளார்கள்.//
ஆஹா ... அருமை.
//இப்ப கூட நம்ப ஸ்ரீராம் இங்கே வரப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அங்கே வந்திருக்கிறார், பாருங்கள்!//
நானும் அவரை எதிர்பார்க்கவே இல்லை. முதலில் திரு. KG கெளதமன் மட்டும் வருவதாகச் சொல்லியிருந்தார். பிறகு ஸ்ரீராமும் வருகிறார் என்பது கடைசி நிமிடத்தகவலாக வந்து, எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.
//நான் அமெரிக்காவிலிருந்து திரும்பியதிலிருந்து அவருக்காக வெயிட்டிங்.... கிட்டதட்ட 10 கிலோ எடையுள்ள தி.ஜானகிராமனின் புத்தகங்களும் திருப்பித் தருவதற்காக அவருக்காக காத்திருக்கின்றன.//
10 கிலோ ????? அதனால் தான் அவர் வராமல் இருக்கிறாரோ என்னவோ !!!!! :)
தங்களின் அன்பான வருகைக்கு நன்றி, சார்.
பிரியமுள்ள கோபு
ஜீவி ஸார்... விரைவில் சந்திப்போம்!
நீக்கு:))))))))))))
//10 கிலோ ????? அதனால் தான் அவர் வராமல் இருக்கிறாரோ என்னவோ !!!!! :) //
நீக்குஅந்த பத்து கிலோவும் அவரது தான். சுகமான அன்புச் சுமையாக அதை என்னிடம் தர எடுத்து வந்ததும் அவர் தான். திஜாவும் மென்மையானவர் ஆகையால் அவர் புத்தகங்களுக்கும் அந்த மென்மை வந்து 10 கிலோவும் 10 கிலோ என்று உணர முடியாத படிக்குத் தான் இருக்கிறது.
தி.ஜானகிராமனைப் பற்றி நான் எழுதவிருக்கும்
ஒரு பெரிய கட்டுரைக்காக குறிப்புகள் தேடிய பொழுது 'கவலைப்படாதீர்கள்; நான் கொண்டு வந்து தருகிறேன்' என்று கொடுத்துதவிய மகானுபாவர் அவர்! 'விரைவில் சந்திப்போம்' என்று தகவலும் கொடுத்து விட்டார் பாருங்கள்!
ஸ்ரீராம் மிகவும் நல்ல மனிதர்.
நீக்குஅதுவும் தங்களிடம் அவருக்கு மிகுந்த அன்பும், பாசமும் மரியாதையும் உண்டு என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.
தங்கள் இருவரின் இனிய சந்திப்பும் விரைவிலேயே நிகழட்டும். வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு
நாலு ஸ்பூன் தானா?
பதிலளிநீக்கு”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
நீக்குJanuary 30, 2015 at 3:38 PM
வாங்கோ ஸ்வாமி ! வணக்கம்.
//நாலு ஸ்பூன் தானா?//
சும்மா சுருள்சுருளான திரட்டுப்பால் போல பார்க்கவே ஜோரா இருக்கு ஸ்வாமி !
அதைப் பார்த்தாலே என் நாக்கில் ஜலம் ஊறுகிறது.
ஆனால் ஒரு ஸ்பூனுக்கு மேல் அப்படியே தனியாக யாரும் சாப்பிடுவதே கஷ்டம். அவ்வளவு ஒரு காரசாரம் + புளிப்பு.
தொண்டை கட்டிக்கொண்டு, 4-5 நாட்களாக இருமிக்கொண்டு இருக்கும் நான், அதைத்தொடவே கூடாது என தடைபோட்டு இருக்கிறார்கள், என் மேலிடம்.
மேலும் நெல்லிக்காயை இரவு வேளைகளில் சாப்பிடக்கூடாது என்று சாஸ்திர சம்ப்ரதாயங்கள் வேறு சொல்கிறார்கள்.
இருப்பினும் அனைவரும் தூங்கிக்கொண்டு நான் மட்டும் விழித்திருக்கும் நள்ளிரவு வேளைகளில், ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, அதன்பிறகே பேரெழுச்சியுடன் இந்தப்பதிவுகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறேன். :)
இதை தயவுசெய்து யாரிடமும் சொல்லிடாதீங்கோ :)))))
பிரியமுள்ள கோபு
//மேலும் நெல்லிக்காயை இரவு வேளைகளில் சாப்பிடக்கூடாது என்று சாஸ்திர சம்ப்ரதாயங்கள் வேறு சொல்கிறார்கள். //
நீக்குஆனா எங்காத்துக்காரர் என்ன சொல்றார்னா, நெட்ல படிச்சாராம் “ஒரு வீட்டில இருந்து யாராவது சந்நியாசம் போய் இருந்தா அந்த வீட்டுக்காரா இரவு வேளைகளில் தாராளமா நெல்லிக்காய் சாப்பிடலாமாம்’. ஆமாம் எங்க பெரிய மாமனார் அவரோட சின்ன வயசுலயே சந்நியாசியா இமயமலைக்குப் போயிட்டாராம். அதனால இவர் தைரியமா, தாரளமா ராத்திரி நெல்லிக்காய் சாப்பிடுவார்.
இதை எல்லாரிடமும் சொல்லிடுங்கோ.
‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”
ஜெயந்தி ரமணி
Jayanthi Jaya January 30, 2015 at 4:15 PM
நீக்கு//எங்காத்துக்காரர் என்ன சொல்றார்னா, நெட்ல படிச்சாராம் “ஒரு வீட்டில இருந்து யாராவது சந்நியாசம் போய் இருந்தா அந்த வீட்டுக்காரா இரவு வேளைகளில் தாராளமா நெல்லிக்காய் சாப்பிடலாமாம்’.//
நன்றி. இது எனக்கு புதிய தகவலாக உள்ளது. எனினும் OK. என் அப்பாவின் அப்பாவழித் தாத்தா ‘பிரும்மைபூதம்’தான்.
“சங்கிருதி கோத்ரான் ஸ்ரீ சிவராமகிருஷ்ண ஸர்மனஹா, ஆதித்ய ரூபான் பிரும்மைபூத பிரபிதாமஹானு ஸ்வதானமஸ் தர்ப்பயாமி” என்றே நான் தர்பணம் செய்து வருகிறேன். ஆபத் சந்யாசம் என்று கேள்வி.
என் இரு அண்ணாக்களில் ஒருவர், (இரண்டாவது அண்ணா) திருமணமே செய்துகொள்ளாமல் கட்டை பிரும்மச்சாரியாகவே இருந்து தனது 66வது வயதில் சந்நியாசம் வாங்கிக்கொண்டு 68வது வயதில் முக்தி அடைந்துள்ளார்கள்.
அதனால் நானும் இனி நெல்லிக்காய் இரவினில் சாப்பிடும்போது இவர்கள் இருவரையும் நினைத்துக்கொண்டே சாப்பிடுவேன்.
தகவலுக்கு உங்க ஆத்துக்காரருக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.
- VGK
பதிவையும், பின்னூட்டங்களையும் மிகவும் ரசித்தேன். சுவைபடக் கூறியிருக்கின்றீர்கள். நன்றி.
பதிலளிநீக்குkg gouthaman January 30, 2015 at 3:57 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம். என் இல்லத்திற்கு தங்கள் அனைவரின் வருகையும் மிகவும் மகிழ்வளித்தது.
//பதிவையும், பின்னூட்டங்களையும் மிகவும் ரசித்தேன். சுவைபடக் கூறியிருக்கின்றீர்கள். நன்றி.//
பதிவை நன்கு ரசித்து சுவைத்து எழுதியுள்ள தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன் VGK
VGK >>>>> Mr. KG Gouthaman Sir
நீக்குநேற்று முதலில் காட்டியிருந்த தங்களின் படம் இப்போது என்னால் மாற்றப்பட்டுள்ளது .... இது அதைவிட தெளிவாக உள்ளதால்.
அது படமெடுக்கும்போது சற்றே SHAKE ஆனதுபோல சற்றே மங்கலாக இருந்தது.
இந்த மாற்ற அறிவிப்பு தங்களின் தகவலுக்காக.
அன்புடன் VGK
இதிலே நானும் நெல்லிக்காயை ஜலதோஷமாக இருந்தால் கூடச் சாப்பிடலாம் என்று ஒரு கருத்துச் சொல்லி இருந்தேன். அதைக் காக்கா தூக்கிண்டு போச்சோ? தெரியலை. அது வெளிவரவில்லை. விட்டமின் சி சத்து பரிபூரணமாக இருப்பதால் நெல்லிக்காயைச் சளி பிடித்திருந்தால் கூட தாராளமாகச் சாப்பிடலாம். பயப்படவே வேண்டாம். :)
பதிலளிநீக்குGeetha Sambasivam January 30, 2015 at 6:01 PM
நீக்கு//இதிலே நானும் நெல்லிக்காயை ஜலதோஷமாக இருந்தால் கூடச் சாப்பிடலாம் என்று ஒரு கருத்துச் சொல்லி இருந்தேன். அதைக் காக்கா தூக்கிண்டு போச்சோ? தெரியலை. அது வெளிவரவில்லை.//
ஒருவேளை அந்தக்காக்காய்க்கு ஜலதோஷமும் பிடித்திருந்து, நெல்லிக்காயும் பிடித்திருந்து, இது முக்கியக்குறிப்பாக உள்ளதே என தூக்கிண்டு போயிடுச்சோ என்னவோ ! இங்கு எனக்கு அது இதுவரை வந்து சேரவே இல்லையாக்கும்.
//விட்டமின் சி சத்து பரிபூரணமாக இருப்பதால் நெல்லிக்காயைச் சளி பிடித்திருந்தால் கூட தாராளமாகச் சாப்பிடலாம். பயப்படவே வேண்டாம். :)//
சரி டாக்டரம்மா ... தகவலுக்குத் தேங்க் யூ வெரி மச் :)
அன்புடன் VGK
அடடா! ஸ்ரீராம் உங்கள் கட்டிபிடி வைத்தியத்தில் கட்டுண்டதை புகைப்படமாக போட்டிருக்கலாமே! நழுவிவிட்டாரா? நெல்லித் தொக்கு நாவில் நீரை வரவழைக்கிறதே!
பதிலளிநீக்குRanjani Narayanan January 30, 2015 at 6:38 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அடடா! ஸ்ரீராம் உங்கள் கட்டிபிடி வைத்தியத்தில் கட்டுண்டதை புகைப்படமாக போட்டிருக்கலாமே! நழுவிவிட்டாரா?//
அவர் நழுவவில்லை. நானும் அவரை நழுவ விடவும் இல்லை. கட்டிப்பிடித்துக்கொண்டோம்.
அவர் ஸ்ரீராமர் அல்லவா ! அதனால் ஸ்ரீராமபக்த ஹனுமன் போல நானும் ஆலிங்கனம் செய்துகொண்டேன்.
ஸ்ரீராமரின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து அது என்னால் என் பதிவினில் மட்டும், வெளியிடப்படவில்லை.
//நெல்லித் தொக்கு நாவில் நீரை வரவழைக்கிறதே!//
:) அப்படியா ! சந்தோஷம். அங்கு பெங்களூரில் நெல்லிக்காய் கிடைக்கும் தானே !
அபூர்வ வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் VGK
ஹை! எங்கள் ப்ளாக் குழுவோடு சந்திப்பு அருமை! ஸ்ரீராம் நண்பரைப் பார்க்க முடியவில்லையே! அந்தக் கறுப்பு பேன்ட் போட்டுண்டு உக்கார்ந்து முகம் காட்டா நபர் தானே நண்பர் ஸ்ரீராம்!!!??
பதிலளிநீக்குஎங்கள் வலை கீதாவும் அவரைப் போல்தான் தனது புகைப்படம் போட சம்மதிப்பதில்லை. வேறு யாராவது பகிர்ந்தால் கேட்டுக் கொண்டும் ..
ஹனுமார் படம் அருமை வைகோ சார். என்ன அருமையாக வரைந்துள்ளீர்கள்?! பன்முகக் கலைஞர் நீங்கள்! நகைச்சுவையும் இழையோட....கட்டிப்பிடி வைத்தியம் சூப்பர்!!!
Thulasidharan V Thillaiakathu January 30, 2015 at 8:51 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஹை! எங்கள் ப்ளாக் குழுவோடு சந்திப்பு அருமை! //
மிக்க நன்றி.
//ஸ்ரீராம் நண்பரைப் பார்க்க முடியவில்லையே! அந்தக் கறுப்பு பேன்ட் போட்டுண்டு உக்கார்ந்து முகம் காட்டா நபர் தானே நண்பர் ஸ்ரீராம்!!!??//
மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். அந்தக் கருப்புக்கலர் பேண்ட் [முழங்கால் மட்டுமே தெரிவது தான்] ஸ்ரீராம். :)
//எங்கள் வலை கீதாவும் அவரைப் போல்தான் தனது புகைப்படம் போட சம்மதிப்பதில்லை. வேறு யாராவது பகிர்ந்தால் கேட்டுக் கொண்டும் ..//
பொதுவாக பெண் பதிவர்களில் சிலர், ஒருசில காரணங்களால், தங்கள் புகைப்படத்தை வெளியிட விரும்புவது இல்லைதான். அது அவரவர்கள் இஷ்டமே.
//ஹனுமார் படம் அருமை வைகோ சார். என்ன அருமையாக வரைந்துள்ளீர்கள்?!//
எனக்கு ஏனோ அது முழுத்திருப்தியாக அமையவில்லை என்ற எண்ணம் இன்னமும் உண்டு. ஏதோ ஒரு மாதிரியாக அதை 24.01.2005 அன்று வரைந்து முடித்து விட்டேன்.
அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆஞ்சநேயரை சற்றே உயரமாக இதேபோல வரைந்திருந்தேன். அது எனக்கு முழுத்திருப்தியாக அமைந்திருந்தது.
அதன் ஒரே ஒரு பிரதி மட்டும் FRAME செய்யப்பட்டு இன்னும் எங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்த பல நண்பர்களும் தங்களுக்கும் அதுபோல ஒன்று வரைந்து தர வேண்டும் எனக்கேட்டதனால் இதை வரைந்து 50 Copies Color Xerox எடுத்து, Laminate செய்து உறவினர்கள் + நண்பர்களுக்கு அன்பளிப்பாக அளித்துள்ளேன்.
//பன்முகக் கலைஞர் நீங்கள்!//
சந்தோஷம். மிக்க நன்றி.
//நகைச்சுவையும் இழையோட....கட்டிப்பிடி வைத்தியம் சூப்பர்!!!//
மேலே யாரும் இதுவரை சொல்லாத ஒன்றை குறிப்பிட்டு சூப்பராகச் சொல்லியுள்ளீர்கள். அதற்கு என் நன்றிகள்.
அன்புடன் VGK
எங்கள் ப்ளாக் ப குழுவினரின் சந்திப்பு ,படங்கள் ,நீங்கள் வரைந்த ஹனுமான் படம் ,நெல்லிக்காய் தொக்கு ,,மற்ற படங்கள் அனைத்தும் அமர்க்களம் .சின்ன நெல்ல்லிக்காய் கிடைத்தால் எனக்கு பார்சல் அனுப்பவும் ...பார்த்து ருசித்து மாமாங்கம் ஆகிருக்கும் சார் .....
பதிலளிநீக்குthirumathi bs sridhar January 31, 2015 at 10:24 AM
நீக்குவாங்கோ ஆச்சி, வணக்கம் ஆச்சி.
//எங்கள் ப்ளாக் ப குழுவினரின் சந்திப்பு ,படங்கள் ,நீங்கள் வரைந்த ஹனுமான் படம் ,நெல்லிக்காய் தொக்கு ,,மற்ற படங்கள் அனைத்தும் அமர்க்களம்.//
அன்பான வருகைக்கும் அமர்க்களமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஆச்சி.
//சின்ன நெல்லிக்காய் கிடைத்தால் எனக்கு பார்சல் அனுப்பவும் ...பார்த்து ருசித்து மாமாங்கம் ஆகிருக்கும் சார் .....//
நாம் பள்ளியில் படிக்கும்போது பள்ளி வாசலில், எலந்தைப்பழங்களுடன் ’அரி நெல்லிக்காய்’ என சின்னதாக சற்றே மேற்புறம் நெளிநெளியாக விற்கப்படுமே, அதையா சொல்கிறீர்கள் ?
இப்போதெல்லாம் அரி நெல்லிக்காயோ, சின்ன நெல்லிக்காய்களோ கண்ணில் தென்படுவது இல்லை.
இந்தப்படத்தில் காட்டியுள்ளது போன்ற நெல்லிக்காய்களும், இதைவிட மிகப்பெரிய நெல்லிக்காய்களும் மட்டுமே விற்கப்படுகின்றன.
இருப்பினும் முயற்சிக்கிறேன், ஆச்சி. கிடைத்தால் கட்டாயம் வாங்கி அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன் கோபு
”எங்கள் ப்ளாக்” வலைத்தளம் வைத்து இருக்கும் அன்பர்கள் உங்கள் அன்பு பிடிக்குள் மகிழ்வுடன் கட்டுப்பட்டு இருக்கும் படங்கள் அருமை.
பதிலளிநீக்குபதிவர் சந்திப்புப் பற்றி மிக அருமையான பதிவு.
உடன் படிக்க முடியவில்லை. நான் வெளியூரில் இருக்கிறேன். வலைப்பக்கம் வர முடியவில்லை.
நீங்கள் வரைந்த அனுமன் படம் அழகு.
கோமதி அரசு January 31, 2015 at 4:28 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//”எங்கள் ப்ளாக்” வலைத்தளம் வைத்து இருக்கும் அன்பர்கள் உங்கள் அன்பு பிடிக்குள் மகிழ்வுடன் கட்டுப்பட்டு இருக்கும் படங்கள் அருமை.//
மிக்க மகிழ்ச்சி.
//பதிவர் சந்திப்புப் பற்றி மிக அருமையான பதிவு.//
சந்தோஷம். மிக்க நன்றி.
//உடன் படிக்க முடியவில்லை. நான் வெளியூரில் இருக்கிறேன். வலைப்பக்கம் வர முடியவில்லை. //
அதனால் பரவாயில்லை, மேடம். நானும் அவ்வாறுதான் இருக்கும் என எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
//நீங்கள் வரைந்த அனுமன் படம் அழகு.//
மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.
அன்புடன் VGK
ஜாம்பவான்களைக் கண்டதில் மகிழ்ச்சி!..
பதிலளிநீக்குநெகிழ்ச்சியான பதிவு.. மகிழ்ச்சியான பதிவு!..
துரை செல்வராஜூ January 31, 2015 at 9:02 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஜாம்பவான்களைக் கண்டதில் மகிழ்ச்சி!..
நெகிழ்ச்சியான பதிவு.. மகிழ்ச்சியான பதிவு!..//
அன்பான வருகைக்கும் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் VGK
'எங்கள்ப்ளாக்' பதிவர்களுடனான உங்கள் சந்திப்பு படிக்க சுவாரசியமாக உள்ளது. அருமையான பதிவு.
பதிலளிநீக்குRadha Balu January 31, 2015 at 10:04 PM
நீக்குவாங்கோ .... வணக்கம்.
//'எங்கள்ப்ளாக்' பதிவர்களுடனான உங்கள் சந்திப்பு படிக்க சுவாரசியமாக உள்ளது. அருமையான பதிவு.//
மிகவும் சந்தோஷம். நன்றி.
நெல்லிக்காய்த் தொக்கு நான் ஏன் நேற்று உங்களுக்கு Special ஆக Offer செய்தேன் என்பதும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். :)
பிரியமுள்ள கோபு
நெல்லிக்காய் தொக்கு கொஞ்சம் என் பேரைச் சொல்லி சாப்பிடுங்க சார்...
பதிலளிநீக்குஎனக்கும் தெரிந்த ரகசியம்.. சின்ன பட்சணக் கடையே வச்சிருக்கேளேனு நான் கேட்டப்ப உங்க பழக்க ரகசியத்தை என்னிடம் பகிர்ந்துக்கிட்டீங்க சார்.
Durai A February 1, 2015 at 1:22 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//நெல்லிக்காய் தொக்கு கொஞ்சம் என் பேரைச் சொல்லி சாப்பிடுங்க சார்...//
ஓக்கே .... சார். No problem. உங்களை நினைத்தும் நான் சாப்பிடுகிறேன்.
[ ஆனா நீங்க சந்யாசி இல்லை. கிருஹஸ்தர் என நான் நினைக்கிறேன் :) ]
//எனக்கும் தெரிந்த ரகசியம்.. சின்ன பட்சணக் கடையே வச்சிருக்கேளேனு நான் கேட்டப்ப உங்க பழக்க ரகசியத்தை என்னிடம் பகிர்ந்துக்கிட்டீங்க சார்.//
சின்ன பட்சணக்கடை இப்போதும் வச்சிருக்கேன், சார்.
இருப்பினும் பொதுவாகக் கல்யாண சீர் பட்சணங்கள் என்றால் அதன் டேஸ்ட் வித்யாசமாக இன்னும் ஜோராக இருக்கும் என்பதே இதில் எனக்குள்ள பழக்க இரகசியமாகும்.
நான் என்ன சொல்றேன் என்பது ‘ஜெயந்திரமணி’க்கு மட்டுமே இப்போதைக்குத் தெரியும். :)
அவங்க எனக்கு ஒரு அதிரஸம் கொடுத்துப்போய் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகிறது.
http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html
இன்னும் அதன் ருசியோ ருசி என் நாக்கிலேயே உள்ளது.
http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html
இந்தப்பதிவையும் அல்லது அதில் உள்ள ஒருசில பின்னூட்டங்களை மட்டுமாவது படிச்சுப்பாருங்கோ.
அப்போதுதான் நான் அன்று நன்கு அனுபவித்த ஜெயந்தியின் அதிரஸத்தின் தனி ருசியை :) நீங்களும் ஓரளவுக்கு உணரமுடியும்.
அன்புடன் கோபு
ஆஞ்சநேயர் படம் பிரமாதம்.
பதிலளிநீக்குDurai A February 1, 2015 at 1:23 AM
நீக்கு//ஆஞ்சநேயர் படம் பிரமாதம்.//
மிக்க நன்றி. ஆஞ்சநேயர் என்றதும் என் புத்தி இப்போ அதிரஸத்திலிருந்து வடைக்குத் தாவி விட்டது.
[ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவார்கள் + ஆஞ்சநேயர் குரங்கு இனமாகையால் நன்றாகவே ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுவார்.
நான் இப்போ அதிரஸத்திலிருந்து வடைக்குத்தாவி விட்டேன் :(
ஆனால் இரண்டுமே இப்போ கிடைக்கப்போவது இல்லை. யாரும் எனக்குச் செய்து தரப்போவதும் இல்லை.
எங்காவது வடைக் கடையை நோக்கி நான் நடையைக்கட்டினால் தான் உண்டு.]
VGK
மிகவும் சுவையான சுகமான சந்திப்பு. எழுத்தின் வாயிலாய்த் தொடரும் அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகீத மஞ்சரி February 1, 2015 at 9:52 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//மிகவும் சுவையான சுகமான சந்திப்பு. எழுத்தின் வாயிலாய்த் தொடரும் அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், சுவையான, சுகமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
பிரியமுள்ள கோபு
உங்கள் பதிவு மூலம் மற்றவர்களையும் அறிய முடிந்தது.
பதிலளிநீக்குமிகவும் சுவையான சந்திப்பு.. அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
Vetha.Langathilakam.
kovaikkavi February 1, 2015 at 2:04 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//உங்கள் பதிவு மூலம் மற்றவர்களையும் அறிய முடிந்தது.
மிகவும் சுவையான சந்திப்பு.. அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். Vetha.Langathilakam.//
மிக்க நன்றி.
இன்று தங்களை வலைச்சரத்தில் அறுமுகம் செய்து இருக்கிறேன் காணவாருங்கள்.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2015/02/1.html
R.Umayal Gayathri February 4, 2015 at 1:53 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இன்று தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் காணவாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2015/02/1.html//
மிகவும் சந்தோஷம். தங்களின் தங்கமான இந்தத்தகவலுக்கு மிக்க நன்றி.
அன்புடன் VGK
நல்வணக்கம்!
பதிலளிநீக்குதிருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"வலை - வழி - கைகுலுக்கல் - 1"
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகளுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
http://youtu.be/KBsMu1m2xaE
(எனது இன்றைய பதிவு
("கவி ஒளி" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / "தென்னகத்து தென்றல்" கண்டு இன்புற்று
படித்தது கருத்திட வேண்டுகிறேன். நன்றி!)
yathavan nambi February 4, 2015 at 3:14 AM
நீக்குநல்வணக்கம்! திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"வலை - வழி - கைகுலுக்கல் - 1" இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி, வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துகளுடன், புதுவை வேலு//
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
பதிலளிநீக்குஅன்புடையீர்,
வணக்கம்.
31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரையிலான 49 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 720) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. பாராட்டுகள். வாழ்த்துகள்.
மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, மீதியுள்ள பதிவுகளுக்கும் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் முன்னணியில் வந்துகொண்டிருக்கும் தாங்கள் இறுதி வெற்றியும், ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)
என்றும் அன்புடன் VGK
இனிமையான பதிவர் சந்திப்பு. இனிமேல திருச்சி வரவங்க கோவில் தரிசனத்தை பண்ணிட்டு நேரா உங்க வீட்டுக்கும் வந்துடுவாங்க போல.
பதிலளிநீக்குபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
நீக்குவணக்கம்மா.
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 49 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
இன்னும் இரண்டே இரண்டு மாதங்களில் உள்ள 15+15 = 30 பதிவுகள் மட்டுமே பாக்கியுள்ளன.
மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் கோபு
அனுமன் படம் அருமை..
பதிலளிநீக்குஅதியமான் அளித்த நெல்லிக்கனி போல்
சிறப்பான நெல்லிக்கனி அனுப்பிய நண்பருக்கும்
சிறப்பான பதிப்புக்கும் வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:29 PM
நீக்கு//அனுமன் படம் அருமை..//
இன்றாவது என் துயர் நீக்கி கொஞ்சம் மனதை மகிழச்செய்த அனுமனுக்கு என் நமஸ்காரங்கள்.
//அதியமான் அளித்த நெல்லிக்கனி போல் சிறப்பான நெல்லிக்கனி அனுப்பிய நண்பருக்கும் சிறப்பான பதிப்புக்கும் வாழ்த்துகள்..//
வாங்கோ, வணக்கம், தங்கள் அன்பான வருகை + வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.
அன்புடையீர்,
நீக்குவணக்கம் !
தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை ..... முதல் 49 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் என் நன்றிகளுடன் + நட்புடன்
VGK
அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:
பதிலளிநீக்குஅன்புள்ள ஜெயா,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை முதல் 49 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.
பிரியமுள்ள நட்புடன் கோபு
இந்த பதிவு கமண்டுலா ரசிச்சு படிச்சுபிட்டன. அல்லா சாப்பாட்டு ஐட்டம்லா இருந்திச்சில்ல. அது இன்னா மனோகரம் வெளங்கலியே. அல்லா பலகாரமும் படத்துல கண்டுகிட மட்டும்தா ஏலும் போல திங்க கிடக்காது.
பதிலளிநீக்குmru November 4, 2015 at 2:51 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//அது இன்னா மனோகரம் வெளங்கலியே. //
முறுக்கு வகைகளில் தேன் குழல் என்று ஒன்று உண்டு தெரியுமா? தெரியாவிட்டால் தங்கள் அம்மியிடம் ........ அவர்களுக்காவது தெரியுமா எனக் கேளுங்கோ.
இந்தத் தேன்குழல் என்பது உப்பு, சீரகம் முதலிய சேர்த்து அரிசி மாவில் செய்து எண்ணெயில் போட்டு எடுப்பதோர் தின்பண்டமாகும். ஓமப்பொடிபோல பொடியாகவும் இல்லாமல் காராசேவ் போல திக் ஆகவும் இல்லாமல் நடுத்தரமான சைஸில் இது Small Tube வடிவத்தில், பாம்பு சுருட்டிக்கொண்டுள்ளது போலக் காட்சியளிக்கும்.
மனோகரம் செய்ய, இந்தத்தேன்குழலில் உப்பு மட்டும் சேர்க்காமல் முதலில் தனியே செய்துகொள்வர்கள்.
பிறகு அதனை ஏலக்காய், சின்னச்சின்ன தேங்காய்ப்பற்களுடன் கூடியக் கொதிக்கும் வெல்லப்பாகில் போட்டு எடுத்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைப்பார்கள். இந்தத் தித்திப்பான தேன்குழல் என்பதே மனோகரம் என்று பொதுவாகச் சொல்லப்படுவது.
ஐயர் வீடுகளில், தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்யும் போது மட்டும், இதனை சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்காமல், ஒரு அடி உயரமுள்ள பெரிய கூம்பு வடிவத்தில் தகரம் அல்லது எவர்சில்வரில், பாத்திரக்கடைகளில் விற்கும் ‘பருப்புத்தேங்காய் கூடு’ என்றதோர் பாத்திரத்தில் சூட்டோடு சூடாக அடைத்துவிடுவார்கள்.
அதனை நிக்கா நடக்கும்போது, பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு, சீர் பட்சணங்கள் என்ற பெயரில் சபையில் அனைவரும் பார்க்குமாறு அழகாக வைத்துக் கொடுத்து விடுவார்கள்.
இந்த மனோகரம் பார்க்கவும் நன்றாக இருக்கும். சாப்பிடவும் மிகவும் டேஸ்டோ டேஸ்ட் ஆக இருக்கும். இதனை அதற்கான முறைப்படி செய்தார்களேயானால் சுமார் ஒரு வாரம்வரை இது கெடாமலும் அப்படியே இருக்கும்.
குருஜி கோபு >>>>> முருகு (2)
நீக்குமேற்படி மனோகரம் செய்முறைகளை ஒழுங்காகக் கற்றுக்கொள்ள நம் ஜெயந்தி ஜெயா மாமி அவர்களை நீங்கள் அணுகினால் மிகவும் நல்லது.
-=-=-=-=-=-=-
இந்த கூம்பு வடிவ (கூம்பு = JUST LIKE OUR CONE ICE SHAPE ONLY) பருப்புத்தேங்காய் கூட்டினுள் உள்ள திண்பண்டத்தை, பிறகு அந்தக்கூட்டை விட்டு தனியே எடுத்துவிட்டால் எப்படியிருக்கும் என்பது இதோ இந்தப்பதிவினில், இரண்டு மோதிரங்களுக்கு மேல் உள்ளதோர் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
அது தேன்குழலில் செய்யப்படாமல் வெறும் நெல் பொரிகளை வெல்லப்பாகில் போட்டு மிகச்சுலபமாகச் செய்யப்பட்டுள்ளதைக் காட்டப்பட்டுள்ளது. ஓரளவு அதன் அமைப்பைத் தாங்கள் தெரிந்துகொள்ள மட்டுமே அதன் இணைப்பினை இங்கு நான் கொடுத்துள்ளேன்.
அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
பதிலளிநீக்குஅன்புள்ள (mru) முருகு,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை, முதல் 49 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு
பதிவர் சந்திப்பு பின்னூட்டங்கள் எல்லாமே செம ரகளையா இருக்கு.நெல்லிக்காய் தொக்கு நல்லா இருக்கேனு கொஞ்சம் அதிகமா தொட்டுண்டா வயித்துல போயி ரகளை பண்ணுமில்லயா அதச்சொன்னேன்.
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
பதிலளிநீக்குSo far your Completion Status:
720 out of 750 (96 %) that too within
23 Days from 15th Nov. 2015 ! :)
2 more months (15+15=30 Posts)
are only pending to WIN the Contest !
Best Wishes :)
- vgk
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் முடிய, என்னால் முதல் 49 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
மிகக்குறுகிய நாட்களுக்குள் இந்தப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளவர் என்ற பெருமை தங்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடும் என நான் நம்புகிறேன். :)
ஏற்கனவே இதில் சாதனை படைத்துள்ளவர் எடுத்துக்கொண்டுள்ளது வெறும் 31 நாட்கள் மட்டுமே.
அவரின் சாதனையை தாங்கள் ஒருவேளை முறியடிக்கலாம் என நம்பப்படுகிறது. வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
பூந்தோட்டம் மேலும் விசாலமடையட்டும். அனுமன் படமும் முத்தான கையெழுத்தில் ஸ்லோகங்களும் அழகு. நெல்லித் தொக்கு அதுக்கு என் நாக்கு போடும் டொக்க்கு...கொஞ்சம் பார்சல் வாத்யாரே!!!!
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
பதிலளிநீக்குSo far your Completion Status:
720 out of 750 (96%) that too within
16 Days from 26th Nov. 2015.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை, என்னால் முதல் 49 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
நெல்லிக்காய் தொக்கு நெஞ்சை அள்ளியது! அருமையான பதிவு!
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
பதிலளிநீக்குSo far your Completion Status:
720 out of 750 (96 %) that too within
Four Days from 17th December, 2015.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 49 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
மறுபடியும் ஒருமுறை பதிவைக் கண்டேன், படித்தேன், ரசித்தேன்.... தேன்... தேன்... தேன்...!
பதிலளிநீக்குஸ்ரீராம். March 25, 2016 at 11:55 AM
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம், வணக்கம்.
//மறுபடியும் ஒருமுறை பதிவைக் கண்டேன், படித்தேன், ரசித்தேன்.... தேன்... தேன்... தேன்...!//
:) மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம். :)
100 நூற்று ஒன்று ஆகி இப்போது 102 ஆகவும் மாறுமே...
பதிலளிநீக்குஸ்ரீராம். March 25, 2016 at 11:55 AM
நீக்கு//100 நூற்று ஒன்று ஆகி இப்போது 102 ஆகவும் மாறுமே...//
ஆம். ஆகிவிட்டது. இப்போ ப்ரஸண்ட் ஸ்கோர் : 104
சந்தோஷம் ஸ்ரீராம். மிக்க நன்றி. அன்புடன் VGK
இந்தப் பதிவின் இறுதியில் காட்டப்பட்டுள்ள நெல்லிக்காய்கள் + நெல்லிக்காய்த் தொக்கு படங்கள் கீழ்க்கண்ட பதிவினில் இன்று (09.04.2018) நம் ’KITCHEN KING’ நெல்லைத்தமிழன் அவர்களால் வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன:
பதிலளிநீக்குhttps://engalblog.blogspot.com/2018/04/blog-post_9.html
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு
நன்றி... எங்கள் ப்ளாக்கில் நீங்கள் கொடுத்த இன்னொரு லிங்க்கிலும் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேனே.. அது வெளியாகவில்லையே...
பதிலளிநீக்குஎன்னிடம் வந்து சேர்ந்த அனைத்துப் பின்னூட்டங்களையும் வெளியிட்டு விட்டேன் ஸ்ரீராம். SPAM போன்றவற்றிலும் As such Pending எதுவும் இல்லை.
நீக்கு