என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
நினைவில் நிற்போர் - 17ம் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவில் நிற்போர் - 17ம் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 17ம் திருநாள்

2

நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும்

17ம் திருநாள்

17.06.2015


91. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


குருவருள் கூடும் திருப்பெயர்ச்சி-46



பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம்-47



http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_6028.html


 யானை விளையாட்டு-48






92. திரு. ஜீவி ( G.V ) அவர்கள்
வலைத்தளம்:  பூ வனம் 


சென்ற (2014) ஆண்டு முழுவதும் 
40 வாரங்களுக்குத் தொடர்ச்சியாக
வெற்றிகரமாக நடைபெற்ற 
மிகப்புதுமையான நம்
‘சிறுகதை விமர்சனப்போட்டி’யின்
நடுவராக பொறுப்பேற்று
திறம்பட செயல்பட்டவர் !

சிறுகதை விமர்சனப்போட்டியின் நடுவர் யார்?


மிகவும் அருமையானதோர் 
கண்ணியமான எழுத்தாளர்.

மிகப் பிரபலமான பிற எழுத்தாளர்களின் 
எழுத்துக்களை நன்கு திறனாய்வு செய்து 
தனது பதிவுகள் பலவற்றில் சிலாகித்து எழுதியுள்ளவர்.

இவர் மிக அபூர்வமாக எனக்குத்தந்துள்ள  
பல பின்னூட்டங்கள் எனக்கு 
மிகுந்த மகிழ்ச்சியையும்
தன்னம்பிக்கையையும் அளித்துள்ளன.

இதோ இவரின் வலைப்பக்கமுள்ள 
படைப்புக்களில் ஒருசில .....

கல்லிலே கலைவண்ணம் கண்டான்
நான் சினிமாவுக்கு வரலே
அங்கீகாரம்
சங்கிலி
இன்று செருப்பு .. நாளை சேலை
கனவும் காட்சியும்



93. திரு. சுந்தர்ஜி அவர்கள்
வலைத்தளம்: கைகள் அள்ளிய நீர்


நான் வலையுலகில் நுழைந்து 
முதன் முதலாக எழுத ஆரம்பித்த
காலக்கட்டங்களில் (2011-2012), 
தனது தனித்திறமை வாய்ந்த
பின்னூட்டங்களால் எனக்கு மிகவும்
ஊக்கமும் உற்சாகமும் அளித்தவர்.

இவரை நான் நேரில் சமீபத்தில் 
இருமுறை சந்தித்துள்ளேன்.

எங்களின் சந்திப்பு நிகழ்வதற்கு பலநாட்கள் முன்பே
எங்களுக்குள் நிகழ்ந்த முதல் தொலைபேசி உரையாடல்
இப்போது நினைத்தாலும் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

அதைப்பற்றிய நகைச்சுவைப்பதிவு ஒன்று 
என்னால் எழுதப்பட வேண்டும்
என என்னிடம் இவர் கோரிக்கை விடுத்துள்ளார். :)

இதோ இவரின் வலைப்பக்கமுள்ள 
படைப்புக்களில் ஒருசில .....

சிரிக்காம படிங்க பாப்போம் .... ஒரு சவால்
{ சவாலில் நான் தோற்றுப்போனேன், சுந்தர்ஜி அவர்களே! 
தஞ்சாவூர்க் கவிராயர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் - vgk }

முள்ளு மொனையில....
சிப்பிக்குள் முத்து
இங்கிவனை யான் பெறவே
விலைவாசி
சிற்றெறும்பு குருமார்கள்






94. அன்பின் திரு. சீனா ஐயா 
என்கிற
சிதம்பரம் காசிவிஸ்வநாதன்
என்கிற

ஆத்தங்குடி திரு. 

பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் 

அவர்கள்

{வலைச்சர நிர்வாகக் குழு தலைவர்}

வலைத்தளங்கள்: 
TEST
வலைச்சரம்
மதுரை வலைப்பதிவர்கள் குழுமம்
அசைபோடுவது
மதுரை மாநகரம்
படித்ததில் பிடித்தது

இவர் என் நெருங்கிய நண்பர்.
மிகவும் அன்பானவர், பண்பானவர், கண்ணியமானவர்.

எங்கள் நட்பின் ஆழம், எங்கள் இருவரையும் தவிர 
வேறு யாருக்குமே தெரிந்திருக்க நியாயம் இல்லை.

இவர் தன் துணைவியாருடன் 
என் இல்லத்திற்கே நேரில் 
வருகை தந்து மகிழ்வித்தவர்.

எங்கள் இனிய சந்திப்புக்கான படங்களுடன் இணைப்பு:


என்னிடமிருந்து விடைபெறும்போது 

இவரின் துணைவியாரும், பதிவருமான 

திருமதி. மெய்யம்மை ஆச்சி அவர்கள்

என்னிடம் தனியாகக் கூறிய செய்திகள், 

நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் 

 என்மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்பதை 

நிரூபித்துக்காட்டுவதாக இருந்தது.


அதைக்கேட்ட எனக்கு அன்று அப்போது 

ஆனந்தக்கண்ணீர் வந்தது.



என்னால் இதுவரை அடையாளம் காட்டி 

பரிந்துரை செய்யப்பட்ட மிகச்சிறந்த 

சுமார் 35 பதிவர்களுக்கு

வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க

வாய்ப்புகள் வழங்கி உதவியுள்ளார்கள்

நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்.



அவருக்கு மீண்டும் இங்கு என்

அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




http://cheenakay.blogspot.in/2008/01/blog-post_17.html
எழுதுனதுலே பிடிச்சது (யாருக்கு?)
வலைச்சர வரலாறு பற்றி இரு பகுதிகள்
இன்பச்சுற்றுலா 06-08.10.2013
முதல் கணினி அனுபவம்
சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்




95. திரு. பட்டாபிராமன் அவர்கள்
வலைத்தளம்: ராமரசம்



இவரை நான் இதுவரை நேரில் சந்திக்காவிட்டாலும்
எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே இருப்பவர்.
இவரை நான் எப்போதும் அன்புடன்
’பட்டாபிராம அண்ணா’
என்றே அழைத்து வருகிறேன். 

இவரின் மிக நீண்ட பின்னூட்டங்களில் பல
என்னை பாசத்துடன் பாராட்டுவதாகவும்
உரிமையுடன் கண்டிப்பதாகவும் இருக்கும்.

அதற்கோர் உதாரணமாக 

SWEET SIXTEEN - [இனிப்பான பதினாறு]
http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html#comment-form
என்ற என் பதிவின் இறுதியில் உள்ள 
இவரின் 5 பின்னூட்டங்களையும்
அதற்கான என்னுடைய 
8 பதில்களையும் படித்துப்பாருங்கள்.
அவை மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும் :)

-oOo-

இதோ இவரின் வலைப்பக்கமுள்ள 
படைப்புக்களில் ஒருசில .....

http://tamilbloggersunit.blogspot.in/2014/12/1.html
ஆண்டாள் காட்டும் அருட்பாதை - பாசுரம்-1 ஆரம்பம்
http://tamilbloggersunit.blogspot.in/2015/01/1000-2103.html
ராமரசம் 1000 - ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் சிந்தனைகள்
http://tamilbloggersunit.blogspot.in/2014/01/blog-post_26.html
கடவுள் எங்கிருக்கிறார்?
http://tamilbloggersunit.blogspot.in/2014/10/blog-post_26.html
மனிதர்களே ! தென்னையைப்போல் இருங்கள்





96. சுய அறிமுகத்தில் சில ...

நடமாடும் தெய்வமாகவே சமீபத்தில் நம்முடன் வாழ்ந்து, இன்றும் பலரின் நீங்காத நினைவுகளில் இடம்பெற்று வழிகாட்டிக்கொண்டிருப்பவரும், அனைத்து அறிவும், ஆற்றலும், தெய்வீக சக்திகளும் ஒருங்கே பெற்று, அனைத்து மதத்தவராலும் போற்றப்பட்ட உண்மையான, உயர்வான, எளிமையான, தூய்மையான துறவி, முக்காலமும் உணர்ந்திருந்த மாமுனிவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களைப்பற்றிய என் மெகா தொடரின் 108 பகுதிகளுக்கான இணைப்புகள் இதோ. ஒவ்வொன்றையும் க்ளிக்கினால் படிக்கலாம். இவற்றையெல்லாம் படிக்கவே ஓர் கொடுப்பினை வேண்டும். :)

oooooOooooo


oooooOooooo





oooooOooooo


  • [ஆரம்ப அறிமுக அறிவிப்பு]


oooooOooooo









மீண்டும் நாளை சந்திப்போம் !






என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]