கடவுள் இருக்கிறாரா?
அல்லது
கடவுள் இல்லையா?
[விவாதப் பகுதி 3 of 3]
பகுதி 1 படிக்க: http://gopu1949.blogspot.in/2012/04/blog-post_9165.html
பகுதி-2 படிக்க: http://gopu1949.blogspot.in/2012/04/2-of-3.html
மாணவர்:
மாணவர்:
மாணவர்:
ஐயா, உங்களின் ஆய்வுக்கொள்கைகளின் அடித்தளம் யாவுமே இருமையைப்பற்றியே [இரண்டு பொருட்களை சம்பந்தப்படுத்தியே] உள்ளன.
உங்கள் வாதத்தில் பிறப்பு, இறப்பு; வாழ்வது, சாவது; நன்மை செய்யும் கடவுள், தீமை செய்யும் கடவுள் ஆக, இதுவரை எல்லாமே இரட்டை இரட்டையாகவே சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளன.
கடவுளையே ஒரு எல்லைக்கு உட்பட்டவராக , ஏதோவொரு அளவுக்கு உட்பட்டவராக, நம்மால் அவரை வெகு சுலபமாக அளந்துவிட முடியும் என்பதாகவே உள்ளன.
கடவுளையே ஒரு எல்லைக்கு உட்பட்டவராக , ஏதோவொரு அளவுக்கு உட்பட்டவராக, நம்மால் அவரை வெகு சுலபமாக அளந்துவிட முடியும் என்பதாகவே உள்ளன.
ஐயா, ”எண்ணங்கள்” என்பது என்ன என்பதையே கூட, விஞ்ஞானத்தால் இன்றுவரை விவரிக்க முடியாதபடியே தான் உள்ளது.
விஞ்ஞானம் மின்சாரத்தையும் காந்த சக்தியையும் பயன் படுத்தி வருகின்றனவே தவிர, ஆனால் இதுவரை அதைக் கண்களால் கண்டது இல்லை. இவை இரண்டினில் ஒன்றைப்பற்றி விஞ்ஞானம் இதுவரை ஏதோ கொஞ்சமாக மட்டுமே புரிந்து கொண்டுள்ளது என்பதே உண்மை.
விஞ்ஞானம் மின்சாரத்தையும் காந்த சக்தியையும் பயன் படுத்தி வருகின்றனவே தவிர, ஆனால் இதுவரை அதைக் கண்களால் கண்டது இல்லை. இவை இரண்டினில் ஒன்றைப்பற்றி விஞ்ஞானம் இதுவரை ஏதோ கொஞ்சமாக மட்டுமே புரிந்து கொண்டுள்ளது என்பதே உண்மை.
இறப்பை பிறப்பின் எதிர்பதமாகப் பார்ப்பதே முதலில் அறியாமையின் வெளிப்பாடாகும்.
வாழ்வின் எதிர்பதம் சாவு என்பதே தவறு.
ஒருவரின் சாவினில் அவரின் வாழ்வு என்பது மறைந்துள்ளது என்பதே சரியான பொருள்.
வாழ்வின் எதிர்பதம் சாவு என்பதே தவறு.
ஒருவரின் சாவினில் அவரின் வாழ்வு என்பது மறைந்துள்ளது என்பதே சரியான பொருள்.
இப்போது கூறுங்கள் பேராசிரியரே!
குரங்கிலிருந்து படிப்படியாக பலவித பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டு மாறியவர்களே மனிதர்கள் என்று நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்த முடியும் அல்லவா?
குரங்கிலிருந்து படிப்படியாக பலவித பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டு மாறியவர்களே மனிதர்கள் என்று நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்த முடியும் அல்லவா?
பேராசிரியர்:
இயற்கையில் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்ற தலைப்பு வரும்போது, ஆமாம் எங்களால் அது போல பாடம் நடத்த முடியும் தான். நானும் நடத்தக்கூடும் தான்.
இயற்கையின் இந்தப் பரிணாம வளர்ச்சியினை நீங்கள் உங்கள் கண்களால் இதுவரை கண்டு உணர முடிந்துள்ளதா, ஐயா.
[பேராசிரியர் அவர்கள் புன்னகை புரிந்த முகத்துடன், தன் தலையை லேஸாக ஆட்டிக்கொண்டார். அவருக்கு இந்த மாணவரின் விவாதம் தன்னை எங்கு கொண்டு செல்லப்போகிறது என்பதும் புரியலானது]
மாணவர்:
ஆகையால் பரிணாம வளர்ச்சி பற்றி போதிக்கும் யாரும் இதுவரை எதையும் தங்கள் கண்களால் பார்த்து உணரவில்லை.
தாங்களே சோதனை செய்ததும் இல்லை.
எதையும் நிரூபித்ததும் இல்லை.
செய்முறைக்காகவும் சோதனைகளுக்காகவும் யாரும் தன்னை மிகவும் வருத்திக்கொண்டதும் இல்லை.
தொடர்ந்து கஷ்டப்பட்டு பிரயத்தனம் செய்து எதையும், தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்ததும் இல்லை.
தாங்களே சோதனை செய்ததும் இல்லை.
எதையும் நிரூபித்ததும் இல்லை.
செய்முறைக்காகவும் சோதனைகளுக்காகவும் யாரும் தன்னை மிகவும் வருத்திக்கொண்டதும் இல்லை.
தொடர்ந்து கஷ்டப்பட்டு பிரயத்தனம் செய்து எதையும், தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்ததும் இல்லை.
இதுபோலெல்லாம் இருக்கும் போது நீங்கள் எப்படி ஐயா, உங்களுக்கு மனதில் தோன்றியதை எங்களுக்குப் பாடமாக போதிக்கலாம்?
எப்படி எங்கள் மேல் உங்கள் கருத்துக்களைத் திணிக்கலாம்?
எப்படி எங்கள் மேல் உங்கள் கருத்துக்களைத் திணிக்கலாம்?
நீங்கள் பாடம் போதிக்கும் ஒரு ஆசிரியரா? அல்லது விஞ்ஞானியா? அல்லது மத போதகரா? சொல்லுங்கள், ஐயா.
[இந்த சூடான விவாதத்தால் வகுப்பறையில்
அப்போது மிகுந்த கூச்சலும் குழப்புமாக அமளி ஏற்பட்டது]
மாணவர்:
[மற்ற சக மாணவர்களைப் பார்த்து கேட்கிறார்]
நண்பர்களே!
இந்த நம் வகுப்பறையில் உள்ள நம் பேராசிரியர் அவர்களின் மூளையை யாராவது உங்களில் ஒருவராவது இதுவரை பார்த்திருக்கிறீர்களா?
இந்த நம் வகுப்பறையில் உள்ள நம் பேராசிரியர் அவர்களின் மூளையை யாராவது உங்களில் ஒருவராவது இதுவரை பார்த்திருக்கிறீர்களா?
[இதைக் கேட்டதும், மாணவர்கள் அனைவரும்
பலக்கச் சிரித்து விட்டனர் ]
மாணவர்:
[தொடர்ந்து வகுப்பறை நண்பர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார்]:
”பேராசிரியரின் மூளையின் ஓசையை இதுவரை யாராவது தங்கள் காதால் கேட்டுள்ளீர்களா?”
அவரது மூளையை யாராவது இதுவரை உணர்ந்தாவது உள்ளீர்களா?
அவரது மூளையை யாராவது இதுவரை தொட்டுப்பார்த்து உள்ளீர்களா?
அவரது மூளையின் வாசனையையாவது யாராவது இதுவரை நுகர்ந்து பார்த்து உள்ளீர்களா?
! ! ! ! !
உங்கள் அனைவரின் மெளனத்திலிருந்து, யாரும் அதுபோல இதுவரை செய்யவில்லை என்பது, இப்போது என்னால் நன்கு உணர முடிவதால், நான் கீழ்க்கண்ட முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
அதாவது ......
அநுபவத்தையே அடிப்படையாகக்கொண்ட ஆராய்ச்சிகளின் படியும், இதுவரை நிகழ்த்தியுள்ள சோதனைகளின் அடிப்படையிலும், அந்தப்பல்வேறு சோதனைகளின் இறுதி முடிவு அறிக்கைகளின் படியும், விஞ்ஞான பூர்வமாக, நமது பேராசிரியர் அவர்களுக்கு மூளை என்ற ஒன்றே இல்லை! இல்லை!! இல்லை!!! என்பதைத் தானே நாம் இப்போது தெள்ளத்தெளிவாக அறிய முடிகிறது?
மாணவர் பேராசிரியரை நோக்கி:
என் பெரும் மதிப்புக்குரிய ஐயா, நாங்கள் இப்போது செய்த மிகச்சிறிய சோதனைகளின் அடிப்படையிலான, விஞ்ஞானபூர்வமான முடிவு இவ்வாறு இருக்கும் போது, நாங்கள் எவ்வாறு நீங்கள் நடத்தும் பாடங்களை நம்ப முடியும், ஐயா?
[இந்த நேரம் அந்த வகுப்பறையில் பெரிய அமைதி நிலவியது]
[பேராசிரியர் அந்த மாணவரை உற்று நோக்கினார். அந்த மாணவரின் முகத்தில் தோன்றிய அறிவின் ஆழம் அவரை ஸ்தம்பிக்கச்செய்தது]
பேராசிரியர்:
எதையுமே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன், என் அன்புக்குரிய மகனே!
அவ்வளவு தான் ஐயா! மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ளதோர் இணைப்பே “நம்பிக்கை” என்பது மட்டுமே, ஐயா.
அந்த நம்பிக்கையே எல்லாவற்றையும் இதுவரை நடத்திச் சென்று கொண்டிருக்கிறது.
அந்த நம்பிக்கை என்பது மட்டுமே எல்லாவற்றிற்கும் உயிரளித்துக் கொண்டு வருகிறது.
அந்த நம்பிக்கை என்பது மட்டுமே எல்லாவற்றிற்கும் உயிரளித்துக் கொண்டு வருகிறது.
oooooooooooooo
முற்றும்
oooooooooooooo
முற்றும்
oooooooooooooo
எனக்கு மிகவும் பிடித்தமான, இந்த அழகான உரையாடலை, நீங்களும் நன்கு படித்து, புரிந்துகொண்டு. ரஸித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
இது உண்மையில் நடந்த உரையாடல் சம்பவம் தானாம்.
இதில் பங்கு பெற்ற மாணவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் அனைவரும் அவரை அவசியமாகத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
அவர் வேறு யாரும் அல்ல
பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நம்
திரு A P J அப்துல் கலாம் அவர்கள்.
[நம் இந்தியத் திருநாட்டின்
முன்னாள் குடியரசுத்தலைவர் அவர்கள்]
-oOo-
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இந்த உரையாடல், பல நாட்கள் முன்பு, எனக்கு என் நண்பர் ஒருவரால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்ப்ட்டது.
என்னால் முடிந்தவரை ஓரளவு தமிழாக்கம் மட்டும் செய்து தங்களுக்குத் தந்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
vgk








