என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 20 (நிறைவுப்பகுதி)



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன்  ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார்  ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தின், முதல் 19 பகுதிகளில் நாம் தொடர்ந்து ஜீவி சிலாகித்துச் சொல்லியுள்ள 37 பிரபல எழுத்தாளர்களில், 36 நபர்களையும் பற்றி பார்த்துவிட்டோம். இப்போது இந்த நிறைவுப்பகுதியில்  திரு. எஸ்.ரா. அவர்களைப்பற்றி மட்டும் நாம் பார்ப்போம். 




37) எழுத்துப் பயணி
எஸ். ராமகிருஷ்ணன்
[பக்கம் 249 முதல் 264 வரை]



தமிழ் வாசிப்பு  உலகுக்கு  எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.ரா. தான். வாசிப்பில்லாமல் எழுத்தாளர் இல்லை என்றாலும், வாசிப்பு உலகிலிருந்து வந்த எஸ்.ரா. என்று எஸ்.ரா. வின் வாசிப்பு அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜீவி பெருமையாகச் சொல்கிறார்.

தமிழில் சிறந்த நூறு கதைகளை பட்டியலிட எஸ்.ரா. முனைந்த பொழுது அந்த நூறில் தனது இரண்டு கதைகளையும் சேர்த்து கொண்டிருக்கிறார். 'தாவரங்களின் உரையாடல்' மற்றும் 'புலிக்கட்டம்' ஆகிய எஸ்.ரா.விற்குப் பிடித்த அவரது  இரண்டு கதைகளை இந்த நூலில் ஜீவி விமரிசிக்கிறார்.

  1. திரிகூட மலை தாண்டவராய சுவாமிகள் எழுதிய ''தாவங்களின் ரகசிய வாழ்க்கை' என்ற நூலைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் பற்றி அறிய வேண்டும் என்ற அசுர ஆவலில் இங்கிலாந்திலிருந்து இந்தியா வருகிறார் ராபர்ட்ஸன் என்று வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொண்டு விடுகிறது.  ஆறு விரல் பெண், வாசல் படியில் சேவலின் அறுபட்ட தலை ரத்தம் கசியக் கிடப்பதாக.... என்று கதை முடியும் வரை ஒரே 'பரபர' தான்..
              2. அடுத்த கதை 'புலிக்கட்டம்'  பிரமாதமான கதை.  
                  வாசித்துத் தான் அதன் ரசனையை அறிய வேண்டும். 
                  சொன்னால் சரிப்படாது.

இந்த இரண்டு கதைகளும் எஸ்.ரா. வுக்கு பிடித்த அவரது கதைகள் என்றால்,  தனக்குப் பிடித்த எஸ்.ராவின் 'வெறும் பிரார்த்தனை' கதையை எடுத்துக் கொண்டு ஜீவி பரவசப்படுகிறார்.

’எஸ்.ரா.’ அவர்களின் தேர்ந்தெடுத்த கதைகளான ‘காந்தியோடு பேசுவேன்’; ‘ஷெர்லி அப்படித்தான்’; ‘பாதியில் முடிந்த படம்’; ‘பிடாரனின் மகள்’; ’சஞ்சாரம்’ என்கிற நாவல் முதலிய பலவற்றையும் பற்றி இந்த நூலில் பேசப்பட்டுள்ளன. 

எஸ்.ரா. அவர்கள் நாடகம் மற்றும் திரைப்படங்களிலும் தனது ஆர்வத்தினைக்காட்டி தன் பங்களிப்பினைத் தந்துள்ளார்கள்.


இவர் எழுதிய முதல் கதை ‘தொலைந்துபோன கபாடபுரம்’ என்றாலும் இவரின் முதல் பிரசுரம் ’கணையாழி’ பத்திரிகையில் வெளிவந்த ’தண்டவாளம்’ என்பதே என்கிறார் ஜீவி.


நாவலுக்கு எஸ்.ரா.வின் 'யாமம்'  கதையை ஜீவி எடுத்துக் கொண்டிருக்கிறார்.  அந்த யாமம் எப்படி காமமாய் கதையெங்கும் விரிகிறது என்று ஜீவி சொல்லச் சொல்ல நம் வாசிப்பின் சுகம் எங்கேயோ போகிறது.

'யாமம்' வாசித்தது  அதி அற்புத அனுபவமாயிற்றாம், ஜீவிக்கு.

நமக்கும் தான் என்று சந்தோஷமாய்ச் சொல்லலாம்..  

எஸ். ரா. அவர்களின் ‘யாமம்’ தாகூர் இலக்கிய விருதினைப்பெற்ற புதினமாகும். இந்த விருதினைப்பெற்ற முதல் எழுத்தாளரும் இவரே என்கிறார் ஜீவி. 

-oOo-

ஜீவி சாரின் இந்த நூலில் 
’யாமம்’ பகுதியில் 
நான் மிகவும் ரஸித்த வரிகள்:

ஆக, யாமம் திரிபுகொண்டு காமமாய் நாவல் நெடுக பதுங்கிக்கிடக்கிறது. இரவின் இரகசியம், வாசனைகளின் சுகந்தம் ஆகிய எல்லாமுமே காமத்தீயைக் கொழுந்துவிட்டு எரியச்செய்கிறது. காமம் தான் கதைகளாகிய இந்த நிகழ்வுகளைக் கட்டிப்போட்ட சரடு. 

வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக, பரிதாபத்திற்காக என்று காமம் வெவ்வேறு காரணங்களுக்கான தீர்வாக தன்னை நியாயப்படுத்திக்கொள்கிறது. அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அடைந்த இழப்புகளும் ஏராளம்.

புதினத்திற்கு ’யாமம்’ என்று பெயரிட்டிருந்தாலும் காமம்தான் கதையின் ஓட்டத்திற்கு அச்சாணியாக இருக்கிறது. 

மொத்தத்தில் காமம் ஒரு தீ. அதன் கதகதப்பை நாடியோரை அது சுடாமல் விடாது. யாமம் தெரிவிக்கும் நீதியும் அதுவே. 

எஸ்.ரா.வும் தனக்கு வாய்ப்பிருந்தும், தன் எழுத்துக்களால் காமத்தீயை, விசிறி விசிறி அனலைக் கிளப்பாமல், அடக்கி வாசித்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.      

காமம் என்பது தேனும் கூட. காமத்தை சுகிப்பவன், தேனில் விழுந்த ’ஈ’யாகிறான். மாந்துகிறேன் பேர்வழி என்று ஒரு கிண்ணத் தேனின் மேற்பரப்பில் உட்கார்ந்த ஈ, அந்தத் தேனில் விழுந்தே கிடப்பது ... அதன் இறக்கைகள் நனைந்து, பிசுபிசுத்துப் பறக்க முடியாத நிலையையும் உருவாக்கலாம். தேனில் அமிழ அமிழ  அந்தத் தேன் கிண்ணத்திலிருந்தே அதனால் வெளியேற முடியாதபடிக்கு அதனை மூழ்கச் செய்யலாம். 

ஈ பறப்பதற்காகப் படைக்கப்பட்ட ஒன்று. தேனில் மூழ்குவதற்காக அல்ல, வெளியே வரவேண்டும்;  வந்து அது, அதன் இறக்கைகள் படபடத்துப் பறக்க வேண்டும்.

தேனையும், ஈயையும் கற்பனையில் உருவாக்கிய எழுத்தாளனும் தான் படைத்த ஈயைப்போல தேனிலேயே விழுந்து கிடக்கக்கூடாது. தேவைக்காகத் தேனும் வேண்டியிருந்தாலும், ஈயை வெளியேற்ற வேண்டிய பொறுப்பும் அவனுக்குண்டு. விழுந்து கிடந்தால் ஈக்கும் அவனுக்கும் வித்யாசமில்லாது போகும்.

நவீன இலக்கியம் என்பதும் சதாசர்வ காலமும் தேனில் ஈயை மூழ்கடித்து மூழ்கடித்து, ஈயை முடக்கக்கூடிய வேலையும் அல்ல.

-oOo-

தேன் போன்ற இந்த ஜீவி சாரின் நூலாகிய தேன் கிண்ணத்தில், இதுவரை  ஓர் ஈ போல மூழ்கிப்போயிருந்த நான்,  தேனின் தீண்டலாலும், தேனின் சுவையாலும், அது எனக்களித்த சுகபோகங்களாலும், மயங்கிக்கிடந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.


பிசுபிசுத்துப்போய் இருந்த என் இறக்கைகளுடன், எப்படியோ ஒருவாறு சமாளித்துத் தட்டுத்தடுமாறி, [அடிக்கடி என் மேலிடத்தின் குறுக்கீடுகள் போன்ற மாபெரும் உதவிகளாலும்] ஒரு வழியாக இந்த நூலைப் படித்து முடித்து வெளியேறி விட்டேன். 


இந்த அருமையான தேனின் ருசியும், நினைவலைகளும் மட்டும் என்றும் நீங்காமல், நீண்ட நாட்கள் என் மனதினில் இடம் பெற்றிருக்கும். - VGK




என் முடிவுரை


கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம் ஜீவி சார் அவர்கள் தான் வாசித்து இன்புற்றுள்ள பிரபல எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளைப்பற்றி நன்கு திறனாய்வு செய்து, தனக்கே உரித்தான பாணியில் ஒவ்வொன்றையும் அழகாக நமக்கு பருக ஆரோக்யமான ஜூஸ் போல இந்த நூலில் கொடுத்துள்ளார்கள். 

உண்மையைச் சொல்லப்போனால், இவர் சுட்டிக்காட்டியுள்ள பிரபலங்களில் (சுஜாதாவின் ஒருசில சிறுகதைகளைத் தவிர) எதையுமே இதற்கு முன் வாசித்தறியும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. இவரின் இந்த நூல் வாயிலாக பிரபல தமிழ் எழுத்தாளர்கள் பலரின் பெயர்களையும், எழுத்துலகில் அவர்களின் மிகப்பெரிய சாதனைகளையும். தனித்தன்மைகளையும், தனித்திறமைகளையும், தனிச்சிறப்புக்களையும் ஓரளவுக்கு இப்போது என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்துள்ளதில் தனித்திருப்தி ஏற்பட்டிருக்கிறது. 

இந்த நூலினை 26.02.2016 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குப் படிக்க எடுத்த நான், ஆரம்ப அட்டை முதல் நிறைவு அட்டை வரை ஒரு வரி விடாமல், மனதில் வாங்கிக்கொண்டு 05.03.2016 சனிக்கிழமை மதியம் 2 மணிக்குள் (ஒன்பது நாட்களுக்குள்ளாக) ரஸித்துப் படித்து முடித்துவிட்டேன். 

குளிக்கும் நேரம், சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களின் இந்த நூல் என் கைகளிலேயே தவழ்ந்து கொண்டிருந்தது. தொடர்ந்து வாசிக்காமல் இந்த நூலைக் கீழே வைக்கவே எனக்கு மனசு வரவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம். பார்க்கப்போனால் இந்த நூல் பூராவும் இருப்பவை கட்டுரைகள் என்ற வகைப்பட்டன. கட்டுரைகள் எழுதுவதில் கதைகள் படிப்பதைப்போன்ற இவ்வளவு சுவாரஸ்யத்தை எப்படிக் கொண்டுவந்தார் என்பதுதான் ஜீவி சாரின் தனித்திறமையாக எனக்குத் தெரிகிறது. வாசித்துப்பார்த்தால் நீங்களும் அதைக் கண்டுகொள்வீர்கள். 

இந்த நூலில் குறையேதும் இல்லை என்பதே ஓர் சின்னக் குறையாகச் சொல்லலாம். 99.99% எழுத்துப்பிழைகளோ, அச்சுப்பிழைகளோ இல்லாமல் இருப்பது மேலும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

இந்த 264 பக்கங்கள் கொண்ட நூலில் என் கண்களுக்குப் பட்டது மூன்றே மூன்று ... அதுவும் மிகச்சிறிய அச்சுப்பிழைகள் மட்டுமே. (1) பக்கம் எண்: 127-இல் ஒரு வார்த்தையில் ‘று” என்று இருக்க வேண்டிய எழுத்து ‘ரு’ என அச்சடிக்கப்பட்டுள்ளது (2) பக்கம் எண் 159-இல் ’ஜீனோ’, ’மீண்டும் ஜீனோ’ என்று இருக்க வேண்டியது ’ஜெனோ’, ’மீண்டும் ஜெனோ’ என அச்சிடப்பட்டுள்ளது  (3) பக்கம் எண் 160-இல் ஒரு வார்த்தையில் ‘ய’ என்ற எழுத்து மட்டும் அச்சிடப்படாமல் விட்டுப்போய் உள்ளது. மொத்த நூலிலுமே என் கண்களில் பட்டது இவை மூன்றே மூன்று மிகச்சிறிய அச்சுப்பிழைகள் மட்டுமே. அந்த அளவுக்கு ஓர் ஈடுபாட்டுடன் மிகக் கடுமையாக உழைத்து இந்த நூலை ஜீவி அவர்கள் முழுமையாக MOST PERFECTION உடன் வெளியிட்டுள்ளார்கள். 

எழுத்துலகில் எத்கிஞ்சுது (கொஞ்சூண்டாவது) ஈடுபாடு உள்ள நான், இந்த நூலை படிக்க நேர்ந்ததை வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய பாக்யமாக நினைத்து மகிழ்கிறேன். 

முழு மனத் திருப்தியுடன், இந்த அனுபவம் பெற காரணமாய் இருந்த இந்த நூலின் ஆசிரியர் ஜீவி சார் அவர்களுக்கு என் நமஸ்காரங்களுடன் கூடிய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


 


  


இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் ஓர் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.

ஜீவியின் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை' என்ற நூல் தமிழகத்தில்  கீழ்க்கண்ட புத்தகக் கடைகளில் கிடைக்கும்  என்கிற விவரம் நண்பர் ஜீவியின்  மூலமாக அறிந்தேன்.  இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்க எண்ணமுள்ளவர்களுக்கு இந்தத் தகவல் உபயோகமாக இருக்கும் என்பதால் அதை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.


மதுரை: மல்லிகை புக் சென்டர், 11, மேலாவணி தெரு, 
ரயில் நிலையம் எதிரில், மதுரை. போன்: 2341739

கோவை: விஜயா பதிப்பகம், 20, ராஜ  வீதி, கோயம்புத்தூர். போன்:  2394614

ஈரோடு: பாரதி புத்தகாலயம், 39  SBI சாலை, ஈரோடு--1

பொள்ளாச்சி: நம்ம புக்ஸ், 12, பஜார் தெரு, பொள்ளாச்சி--1

சேலம்: பாலம் புக்ஸ், 36/2,  அத்வைத ஆசிரமம் சாலை, சேலம்-4. 
போன்:  2335952

தேனி: மாயா புக்ஸ், 28, மதுரை ரோடு, 
(பேருந்து நிலையம் எதிரில்), தேனி-1

சென்னை: சந்தியா பதிப்பகம், எண்: 77,  53வது தெரு, 9வது அவென்யூ, 
அசோக் நகர்,  சென்னை -600 083 போன்:  24896979

சென்னை: நியூ புக் லேண்ட்ஸ், 52/C,  வடக்கு உஸ்மான ரோடு, 
தி. நகர், சென்னை- 17


-oOo-

இன்று 21.04.2016 வியாழக்கிழமை 
’சித்ரா பெளர்ணமி’ 
என்ற நல்ல நாளில், இந்த என் தொடர் நிறைவடைந்துள்ளது 
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அனைவருக்கும் சித்ரா பெளர்ணமி நல்வாழ்த்துகள்


சித்திரை மாதம் பெளர்ணமி திதியில், சித்திரை நக்ஷத்திரமும் கூடி வருவதால், சித்ரா பெளர்ணமி என அழைக்கப்படுகின்றது. மாதத்தின் பெயரும் நக்ஷத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நக்ஷத்திரத்தில் சஞ்சரிக்கையில்) சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பெளர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது. 




இந்தப் பெளர்ணமி திதியும், சித்ரா நக்ஷத்திரமும், சித்திரை மாதமும் அம்மனுக்கு உரியனவாக இருப்பதனால், இந்த தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்பான நாளாகும். 





அம்மனுக்குரிய இந்தச் சித்ரா பெளர்ணமி விரத நாளிலேயே, எமனின் சபையில் நம் பாவ புண்ணியக் கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்ரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுகிறது.






ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர் சித்திர குப்தனார் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் தொகுத்து அதற்கேற்ப மோக்ஷமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். 




எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தன் இந்த சித்திரை நக்ஷத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை மணந்ததாகப் புராணம் சொல்கிறது. 




அன்னை மீனாக்ஷி, மதுரையில் சொக்கநாதரை மணந்ததும், கள்ளழகர் மதுரை வைகையாற்றில் விழா காண்பதும், இதே சித்திரை மாத பெளர்ணமி தினத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


இறைவியாகிய அம்பாள், இயற்கையின் சக்தியாக, தர்மத்தின் காவலாக, உலக இயக்கத்தின் ஆதாரமாக விளங்குவதாக இந்துக்கள் கொள்கின்றனர். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நிறுத்த, அம்பாள் காலத்திற்குக் காலம் பல்வேறு அவதாரங்களை எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 



பூமா தேவியாக, பொறுமையின் இருப்பிடமாக வீற்றிருக்கும் அன்னை பொறுமை இழந்தால் .... எரிமலையாகக் கிளர்ந்தெழவும், புயலாக, வெள்ளமாக, வரட்சியாக, ஆழிப்பேரலையாக, அதிர்வாக, கொடுநோய்களாக வெளிப்பட்டு தன் சக்தியைக் காட்டி உலகத்தாருக்குப் புத்தியைப் புகட்டும் ஆற்றல் மிக்கவள். 






தாயாக இருந்து வாழ்வளிக்கும் அம்மனை இந்த நன்நாளில் நம்பிக்கையுடன் தொழுது நின்றால், நிச்சயம் வாழ்வில் மலர்ச்சியும், எழுச்சியும் நம்மை நாடி வரும். துன்ப, துயரங்கள் தூர விலகி விடும். மங்களம் பொங்கும். நல்வாழ்வு கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன.






அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது. வெயிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை தானமாக அளிப்பது வழக்கம்.





உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து, சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து, ஒரு மூங்கிலாலான முறத்தில், அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவைகளையும் தானம் செய்யலாம்.










'கொஞ்சம் வெட்டி பேச்சு'
வலைப்பதிவர்

சித்ரா

 'கொஞ்சம் வெட்டி பேச்சு' 

மிகப்பிரபலமானதோர் வலைப்பதிவரும், பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரமும், தற்சமயம் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவரும், என்னை ’கோபு மாமா’ என அன்புடன் அழைப்பவருமான, நம் அன்புக்குரிய ’சித்ரா’ பிறந்த தினமும் ஒரு ’சித்ரா பெளர்ணமி’ அன்றுதான். அதனாலேயே அவருக்கு ‘சித்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

அதனாலேயே பெளர்ணமி முழு நிலவு போல சும்மா ஜொலிக்கிறாரோ என்னவோ, என நான் அடிக்கடி எனக்குள் நினைத்துக்கொள்வது உண்டு. :) 

சித்ராவின் தந்தை, பிரபலமான திரு. பொ.ம.ராசமணி அவர்கள் போலவே, சித்ராவும் மிகச் சிறந்ததோர் நகைச்சுவையாளர். 

ஜனவரி 2012 வரை, வலையுலகில் கொடிகட்டிப்பறந்து வந்த இவர், ஏனோ அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய பதிவுகள் ஏதும் தரவில்லை. 

இருப்பினும், சமீபகாலமாக சித்ரா பெளர்ணமி நிலவு போல ஃபேஸ்புக்கில் அடிக்கடி தோன்றி வருகிறார்.

 இனிய பிறந்த நாள் 
நல்வாழ்த்துகள் ..... சித்ரா. :)


 

அன்புடன் 
கோபு மாமா



இத்துடன் இந்தத்தொடரை நிறைவு செய்துகொண்டு 
தங்களிடமிருந்து தற்காலிகமாக 
விடைபெற்றுக்கொள்கிறேன்.




என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)

145 கருத்துகள்:

  1. ஒரு சிறுகதை விமர்சனப் புத்தகத்தை 20 பதிவுகளில் விமரிசிக்க கோபு ஒருவரால்தான் முடியும். இவரை ஏன் நாம் "விமரிசனப் புலி" என்று அழைக்கக் கூடாது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும், பழனி கந்தசாமி ஐயா.

      இது ஒரு சிறுகதை விமரிசன புத்தகம் என்கிற அளவில் குறுக்கமான நூல் அல்ல, ஐயா.

      கோபு சாரின் வார்த்தைகளில் சொல்லப் போனால்---

      "ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார்"

      நீக்கு
    2. நீங்கள் மிகுந்த பிரயாசை எடுத்துள்ளீர்கள் என்பதை வைகோ அவர்களின் பதிவுகளிலிருந்து புரிந்து கொண்டேன்.

      நீக்கு
    3. பழனி.கந்தசாமி April 21, 2016 at 4:47 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //ஒரு சிறுகதை விமர்சனப் புத்தகத்தை 20 பதிவுகளில் விமரிசிக்க கோபு ஒருவரால்தான் முடியும். //

      அதை ஒரு சிறுகதை விமர்சனப்புத்தகம் என சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. பல்வேறு பிரபல எழுத்தாளர்களின் பல்வேறு கதைகளைப்பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து, திறனாய்வு செய்து, சிலாகித்துச் சொல்லியுள்ள ஒரு நூல் அது.

      இருப்பினும் அதில் உள்ள பொடிப்பொடியான மெல்லிய எழுத்துக்கள், என்னைப் போன்ற சிலருக்கு படிக்கக் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கக்கூடும். அந்தக்கால அம்புலிமாமா புத்தகம் போல பெரிய பெரிய எழுத்துக்களில் இருந்தால், மேலும் ஆர்வத்துடன் சுலபமாகப் படிக்க வசதியாக இருந்திருக்கும். இருப்பினும் அதுபோல பளிச்சென்று BOLD LETTERS களில் அச்சிடப்பட்டால் இந்த நூல் 1000 பக்கங்களுக்கு மேல் போய், விலையும் ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்க வேண்டியதாக ஆகியிருக்கும்.

      அதனால் இதனை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

      இந்த நூலைப்படிக்க எனக்கு என்னவோ ஓர் ஆர்வமும், சுவாரஸ்யமும் இருந்ததனால் மட்டுமே, பொடிப்பொடி எழுத்துக்களேயானாலும் கஷ்டப்பட்டு என்னால் தொடர்ந்து படிக்க முடிந்தது என்பதையும் இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

      நம் பதிவர்களின் பதிவுகளிலேயேகூட, பொடிப்பொடி எழுத்துக்களில், அடர்த்தியாக அடை வார்த்தது போல எழுதிக்கொண்டே போவோரின் படைப்புக்களை நான் ஒரு போதும் வாசிக்க விரும்ப மாட்டேன்.

      4-5 வரிகளுக்கு ஒருமுறை பத்தி பிரித்து, கொட்டை எழுத்துக்களில் பளிச்சென்று அழகாக, படிக்கத் தூண்டுவதாக, கண்களுக்குக் குளுமையாக, கலர் கலராக இருந்தால் மட்டுமே வாசிக்க விரும்புவேன்.

      இந்த என் தொடரை ஒருசில குறிப்பிட்ட காரணங்களுக்காக நான் சுருக்கோ சுருக்கென்று சுருக்கிக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதனால் அது இருபது பகுதிகளோடு சீக்கரமாக நிறைவடைந்து விட்டது.

      என் போக்குக்கு நான் சுதந்திரமாக இதனைக் கையாண்டு எழுதியிருந்தால் அதுவே ஒரு 40-50 பகுதிகளாக மேலும் விரிவடைந்திருக்கும். வாசகர்களாகிய நீங்களும் மிகவும் பொறுமை இழந்து என்மீது படு எரிச்சலாகிப்போய் இருந்திருப்பீர்கள். :)

      //இவரை ஏன் நாம் "விமரிசனப் புலி" என்று அழைக்கக் கூடாது?//

      இந்த என் சிறிய தொடர், நம் ஜீவி சாரின் நூல்பற்றிய என்னுடைய விமர்சனமே அல்ல என்பதையும் இங்கு மிகத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன். எதையும் விமர்சனம் செய்யும் அளவுக்கெல்லாம் நான் தகுதி படைத்தவனும் அல்ல. நான் என் லேபிளில் குறிப்பிட்டுள்ளபடி ‘நூல் பற்றிய புகழுரை’ என்று மட்டுமே இதனை எடுத்துக்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். பொதுவாக எனக்கு யாரையும் புகழ்ந்து பாராட்டித்தான் பழக்கம் உண்டு. எனவே என்னை ‘விமர்சனப்புலி‘ என யாரும் அழைத்தால் அது பொருத்தமாகவே இருக்காது என்பதையும் மிகப்பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், என்னைக் கொஞ்சம் மனம் விட்டு பேசத் தூண்டியதற்கும், தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் கோபு.

      நீக்கு
  2. மிகப் பெரிய பணியாக, இதுவரை யாரும் செய்திடாத வகையில் ஒரு புத்தகத்தினை வாசகர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறீர்கள். மிகவும் வித்தியாசமான சிந்தனை உடையவர் நீங்கள் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளீர்கள். எண்ணற்ற வாசகர்களின் கலந்துரையாடலுடன் அருமையான ஒரு பங்களிப்பு. எங்களால் இது போல எல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. பாராட்டுகள் வை. கோபாலகிருஷ்ணன் ஸார். இதில் இன்னுமொரு விஷயம் என்னைக் கவர்ந்தது, இதில் சொல்லப்பட்டிருக்கும் பெரும்பாலான எழுத்தாளர்களை நீங்கள் படித்ததில்லை என்று சொன்ன உங்கள் நேர்மை. பின்னூட்டங்களில் நீங்கள் காட்டும் அக்கறை. அதில் மிளிரும் நகைச்சுவை. (நான் படித்ததில்லை இந்த எழுத்தாளரை என்று சொன்னால் "இருக்கட்டும். நானும் படித்ததில்லை." என்றோ, "சந்தோஷம். நானும் படித்ததில்லை" உங்கள் பதில்கள் அமையும்போது எனக்கு புன்னகை வரும். இதில் எனக்கு என்ன தெரியும் என்று ஒரு பதிவாக மட்டும் புத்தகத்தைப் பற்றி எழுதி ஒதுங்காமல், வித்தியாசமாக இதை எங்களிடம் சேர்த்த உங்களுக்கு பாராட்டுகள் ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். April 21, 2016 at 6:19 AM

      வாங்கோ, ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //மிகப் பெரிய பணியாக, இதுவரை யாரும் செய்திடாத வகையில் ஒரு புத்தகத்தினை வாசகர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறீர்கள். மிகவும் வித்தியாசமான சிந்தனை உடையவர் நீங்கள் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளீர்கள். //

      மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம். :)))))

      //எண்ணற்ற வாசகர்களின் கலந்துரையாடலுடன் அருமையான ஒரு பங்களிப்பு. //

      எண்ணற்ற வாசகர்கள் என்பதை இங்கு என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை ஸ்ரீராம். VERY VERY LIMITED வாசகர்கள் ONLY. அதைப்பற்றிய புள்ளி விபரங்கள் மிகத்துல்லியமாக நாளை, இதன் பின்னூட்டப்பகுதியிலேயே வெளியிடலாம் என்று இருக்கிறேன்.

      இதில் நம் ஜீவி சார் மீதுகொண்ட மரியாதையினால் மட்டுமே இங்கு கொஞ்சம் அவ்வப்போது மட்டும் தலையைக்காட்டி, எட்டிப்பார்த்துள்ளவர்கள் ஒரு 2-3 பேர்கள் உள்ளனர்.

      உண்மையிலேயே பதிவினைப் படித்து ரஸித்து, தங்களின் கருத்துக்களை அழகாகப் பகிர்ந்துகொண்டு எழுதியுள்ளவர்கள் ஒரு 5-6 பேர்கள் உள்ளனர்.

      மற்றும் சிலர் என் மீதுகொண்ட அபரிமிதமானதோர் அன்பினால் மட்டுமே இங்கு வருகை தந்து கருத்துச் சொல்லியுள்ளவர்கள்.

      மீதி பேரெல்லாம் ஏனோ தானோ என கச்சேரி கேட்க வந்துள்ள பேர்வழிகள் மட்டுமே.

      இதிலிருந்து ஒட்டுமொத்தமாகவே ஒதுங்கிக்கொண்டுள்ளவர்களும் ஏராளமானவர்கள் உள்ளனர். அதற்கெல்லாம் நிறைய காரணங்களும் உள்ளன.

      //எங்களால் இது போல எல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.//

      என் தனி ஒருவனால் இது முடிந்துள்ள போது, தங்கள் கூட்டணி பலத்தால் மிகச் சுலபமாக ஆட்சியைக் கைப்பற்ற முடியும். (எங்கள் ப்ளாக் என்பதே நான் சொல்லும் கூட்டணி)

      //பாராட்டுகள் வை. கோபாலகிருஷ்ணன் ஸார்.//

      தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம்.

      // இதில் இன்னுமொரு விஷயம் என்னைக் கவர்ந்தது, இதில் சொல்லப்பட்டிருக்கும் பெரும்பாலான எழுத்தாளர்களை நீங்கள் படித்ததில்லை என்று சொன்ன உங்கள் நேர்மை.//

      இதில் என்ன ஒளிவு மறைவு வேண்டிக்கிடக்கு?

      மேலும் எனக்கே எனக்குள் உள்ள ஓர் அகம்பாவம், ’யாரையுமே மிகச்சிறந்த, தலைசிறந்த, பிரபல எழுத்தாளர் என என்னால் லேஸில் ஏற்றுக்கொள்ளவும் முடியாது’ என்பதாகும்.

      படித்தால் படித்தேன் என்று சொல்வேன். நல்லா இருந்தால் நல்லா இருந்தது என்று சொல்வேன். வெளி வேஷமே போடத்தெரியாது, எனக்கு.

      என் நேர்மையை நேர்மையாகப் பாராட்டியுள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஸ்ரீராம்.

      //பின்னூட்டங்களில் நீங்கள் காட்டும் அக்கறை. அதில் மிளிரும் நகைச்சுவை. (நான் படித்ததில்லை இந்த எழுத்தாளரை என்று சொன்னால் "இருக்கட்டும். நானும் படித்ததில்லை." என்றோ, "சந்தோஷம், நானும் படித்ததில்லை" என்றோ உங்கள் பதில்கள் அமையும்போது எனக்கு புன்னகை வரும்.//

      இதுபோலெல்லாம் நான் நகைச்சுவையாக என் பதில்களை எழுதாதுபோனால், இப்போது வந்துள்ள ஆக மொத்தம் 50 பேர்களில் ஒரு 5 பேர்கள்கூட இவ்விடம் கருத்துக்கூற வருகை தந்திருக்க மாட்டார்கள் என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன், ஸ்ரீராம்.

      என் நேர்மை மட்டுமல்லாமல், இதெல்லாம் ஓர் ஸ்பெஷல் மார்க்கெட்டிங் டெக்னிக்கும் ஆகும். :)

      //இதில் எனக்கு என்ன தெரியும் என்று ஒரு பதிவாக மட்டும் புத்தகத்தைப் பற்றி எழுதி ஒதுங்காமல், வித்தியாசமாக இதை எங்களிடம் சேர்த்த உங்களுக்கு பாராட்டுகள் ஸார்.//

      எதிலும் நான் லேஸில் இறங்க மாட்டேன். ஒருவேளை இறங்கிவிட்டால் அதிலிருந்து பின்வாங்கி ஒதுங்கிக்கொள்ளாமல், ஆழ அகலமாக நீச்சல் அடித்து, ஒரு கை பார்த்துவிடுவேன். அதுதான் என் ஸ்பெஷாலிடியாகும். :)

      தங்களின் அன்பான வருகைக்கும், என்னைக் கொஞ்சம் மனம் விட்டு பேச வாய்ப்பளித்ததற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஸ்ரீராம்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. ஸ்ரீராமின் பின்னூட்டமும் உங்கள் பதிலும் மிகவும் ரசித்தேன்.

      நீக்கு
    3. அப்பாதுரை April 25, 2016 at 6:30 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //ஸ்ரீராமின் பின்னூட்டமும் உங்கள் பதிலும் மிகவும் ரசித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி சார். மிக்க நன்றி சார்.

      என் பதிலை ஸ்ரீராம் படித்தாரோ இல்லையோ நானே இதுவரை பலமுறை படித்து ரஸித்து, எனக்கே நான் ஷொட்டுக்கொடுத்துக் கொண்டுள்ளேன்.

      ஸ்ரீராமுக்கு மட்டும், இந்தப்பகுதியில் மட்டுமல்ல, இந்த என் தொடரில் உள்ள அனைவரின் அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் நான் கொடுத்துள்ள என் பதிலை மட்டும் தயவுசெய்து படித்துப்பாருங்கோ.

      அவ்வப்போது என் மனதில் பட்டதை பட்-பட் என்று எழுதியிருப்பேன். அதில் பலவும் தாங்கள் மிகவும் ரஸிக்கக் கூடியதாகவே இருக்கும். :)

      அன்புடன் VGK
      112

      நீக்கு
    4. பதிலைப் படிக்காமலிருப்பேனா வைகோ ஸார்? மேலும் இவை என் மெயில் பாக்ஸை நாடி ஓடி வந்து விடுமே....!

      நீக்கு
    5. ஸ்ரீராம். April 26, 2016 at 11:27 AM

      வாங்கோ ஸ்ரீராம் .....

      //பதிலைப் படிக்காமலிருப்பேனா வைகோ ஸார்? மேலும் இவை என் மெயில் பாக்ஸை நாடி ஓடி வந்து விடுமே....!//

      தாங்கள் எப்போதும் என் பதிலை உடனுக்குடன் படித்துவிடுவீர்கள் என்பது எனக்கும் தெரியும்.

      இருப்பினும் தாங்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் ...... சந்தேகப்பட்டேன். மிக்க நன்றி, ஸ்ரீராம்

      அன்புடன் VGK
      120

      நீக்கு
    6. //அன்புடன் VGK
      120 //

      ஓ... இது புதிய பாணி! மெயில் பாக்ஸிலேயே எத்தனைப் பின்னூட்டங்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

      :))

      நீக்கு
    7. ஸ்ரீராம்.April 26, 2016 at 1:04 PM
      **அன்புடன் VGK 120**

      //ஓ... இது புதிய பாணி! மெயில் பாக்ஸிலேயே எத்தனைப் பின்னூட்டங்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!:))//

      ஆம் ஸ்ரீராம். தங்களின் தங்கமான புரிதலுக்கு என் நன்றிகள். - அன்புடன் VGK - இது இப்போ 126 :)

      நீக்கு
  3. எஸ் ரா எழுத்த்துகளைப் படித்திருக்கிறேன். நடுவில் நிறுத்தி இருந்தேன். ஜீவி ஸார் பகிர்வைப் படித்ததும் மறுபடி அவரைப் படிக்கும் ஆவல் வருகிறது. அவர் சொல்லி இருக்கும் சில படைப்புகளை படிக்க ஆவலாகவே உள்ளேன். ஒரு பெரிய முயற்சியாக ஜீவி ஸார் இந்த நூலைப் பரிசளித்திருக்கிறார் நமக்கெல்லாம். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். April 21, 2016 at 6:19 AM

      வாங்கோ ஸ்ரீராம் ......

      //எஸ் ரா எழுத்த்துகளைப் படித்திருக்கிறேன். நடுவில் நிறுத்தி இருந்தேன். ஜீவி ஸார் பகிர்வைப் படித்ததும் மறுபடி அவரைப் படிக்கும் ஆவல் வருகிறது. அவர் சொல்லி இருக்கும் சில படைப்புகளை படிக்க ஆவலாகவே உள்ளேன். ஒரு பெரிய முயற்சியாக ஜீவி ஸார் இந்த நூலைப் பரிசளித்திருக்கிறார் நமக்கெல்லாம். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகட்டும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம் - VGK

      நீக்கு
  4. சகோதரி சித்ரா சாலமன் அவர்களுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். April 21, 2016 at 6:19 AM

      வாங்கோ ஸ்ரீராம் ........

      //சகோதரி சித்ரா சாலமன் அவர்களுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளும்.//

      மிகவும் சந்தோஷம், ஸ்ரீராம். :)

      நீக்கு
  5. அறிமுகங்கள் நல்லபடியா
    நிறைவு பகுதியை எட்டியது...
    வாழ்த்துகள் நண்பரே...
    இன்னும் பயனுள்ள பதிவுகள்
    தொடர்ந்து தாருங்கள் நண்பரே...

    சித்ரா சகோ க்கு பிறந்தநாள்
    வாழ்த்துகள் என் சார்பாக
    சொல்லி விடுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ajai Sunilkar Joseph April 21, 2016 at 6:41 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அறிமுகங்கள் நல்லபடியா நிறைவு பகுதியை எட்டியது... வாழ்த்துகள் நண்பரே... இன்னும் பயனுள்ள பதிவுகள் தொடர்ந்து தாருங்கள் நண்பரே...//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      //சித்ரா சகோ க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என் சார்பாக
      சொல்லி விடுங்கள்...//

      சரி.

      நீக்கு
  6. நெகிழ்ந்தேன், கோபு மாமா! தங்களின் தூய அன்பும் ஆசிரும் எனக்குக் கிடைத்தது , பெரும்பேறு ! மிக்க நன்றி , கோபு மாமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chitra April 21, 2016 at 7:04 AM

      வாங்கோ சித்ரா, வணக்கம்.

      //நெகிழ்ந்தேன், கோபு மாமா! தங்களின் தூய அன்பும் ஆசியும் எனக்குக் கிடைத்தது, பெரும்பேறு ! மிக்க நன்றி , கோபு மாமா//

      மிக்க மகிழ்ச்சி சித்ரா.

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, சித்ரா :)

      அன்புடன் கோபு மாமா

      நீக்கு
    2. சித்ரா இன்னும் பதிவு எழுதுறாங்களா என்ன?

      நீக்கு
  7. ஜீவி சாரின் நூல் ஒரு பொக்கிஷம் என்றால் அதற்காக தாங்கள் வழங்கிய இந்த தொடர் மற்றொரு பொக்கிஷம். நூலை படிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த தொடரை படித்தாலே போதும். ஏராளமான எழுத்தாளர்களை அறிந்து கொள்வார்கள். பலரும் அறிய அற்புதமான தொடரை வழங்கிய தங்களுக்கும் அதற்கு மூலகாரணமாக இருந்த ஜீவி ஐயாவுக்கும் கோடான கோடி நன்றிகள். நானும் மதுரை மல்லிகை புக் சென்டரில் புத்தகம் வாங்க உள்ளேன்.
    இனி இன்றைய தொடர் நாயகன் எஸ்.ரா. பற்றி எனக்கு இவரை அறிமுகப்படுத்தியதும் வழக்கம்போல விகடன்தான். இவரின் தேஷாந்திரி, சிறிது வெளிச்சம், போன்ற தொடர்களில் சிறைப்பட்டுப் போனேன். இவரின் கதைகளைவிட இவர் எழுதிய கட்டுரைகளை அதிகம் வாசித்திருக்கிறேன். எனது தகவல் சேகரிப்புக்கு இவரின் பல கட்டுரைகள் பெரும் துணையாக நின்றிருக்கின்றன. இவர் எழுதிய எனது இந்தியா, உணவு யுத்தம், உலக சினிமா நான் விரும்பிப்படித்த இவரின் சமீபத்திய நூல்கள்.
    'தினத்தந்தி' ஞாயிறு மலருக்காக இவரை பேட்டிக்கண்டது என் வாழ்வில் கிடைத்த வரம். மனம் நிறைவான பல விஷயங்களைப் பேசினார். எளிமையான மனிதர்.
    மீண்டும் என் உளமார்ந்த நன்றிகள் அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானும் மதுரை மல்லிகை புக் சென்டரில் புத்தகம் வாங்க உள்ளேன். //

      மிக்க நன்றி, செந்தில் குமார் சார். இது தான் இந்த மாதிரியான நூல்கள் நிறைய வெளிவருவதற்கு துணை செய்யக் கூடிய ஆக்கபூர்வமான வாசகர் தரப்பான பங்களிப்பு. நூறு பேர் வாசிக்க வாங்கினால் அதில் எழுதுவதற்கு ஆர்வமுள்ள பத்து பேராவது இதையும் விஞ்சிய தலைப்புகளில் எழுதவும் அவை பிரசுரம் காணவும் வழியேற்படும. இப்படித்தான் எழுதுவோரின் கூட்டம் உருவாகிறது. எதையும் எழுதலாமெனிலும் அதில் சமூகத்திற்கு பயன் அளிக்கக் கூடிய ஆக்கபூர்வமான எழுத்தைத் தேர்ந்து நாம் வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது ஆக்கபூர்வமான எழுத்துக்களின் தேவை பெருகி அப்படியான நூல்கள் வெளிவர தூண்டுகோலாக நம் செயல்பாடுகள் அமைகின்றன.

      நீக்கு
    2. S.P.SENTHIL KUMAR April 21, 2016 at 7:43 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஜீவி சாரின் நூல் ஒரு பொக்கிஷம் என்றால் அதற்காக தாங்கள் வழங்கிய இந்த தொடர் மற்றொரு பொக்கிஷம். நூலை படிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த தொடரை படித்தாலே போதும். ஏராளமான எழுத்தாளர்களை அறிந்து கொள்வார்கள். பலரும் அறிய அற்புதமான தொடரை வழங்கிய தங்களுக்கும் அதற்கு மூலகாரணமாக இருந்த ஜீவி ஐயாவுக்கும் கோடான கோடி நன்றிகள்.//

      பொக்கிஷமான இந்தத் தங்களின் கருத்துக்கள் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. :)

      //நானும் மதுரை மல்லிகை புக் சென்டரில் புத்தகம் வாங்க உள்ளேன்.//

      சந்தோஷம்.

      //இனி இன்றைய தொடர் நாயகன் எஸ்.ரா. பற்றி எனக்கு இவரை அறிமுகப்படுத்தியதும் வழக்கம்போல விகடன்தான். இவரின் தேஷாந்திரி, சிறிது வெளிச்சம், போன்ற தொடர்களில் சிறைப்பட்டுப் போனேன். இவரின் கதைகளைவிட இவர் எழுதிய கட்டுரைகளை அதிகம் வாசித்திருக்கிறேன். எனது தகவல் சேகரிப்புக்கு இவரின் பல கட்டுரைகள் பெரும் துணையாக நின்றிருக்கின்றன. இவர் எழுதிய எனது இந்தியா, உணவு யுத்தம், உலக சினிமா நான் விரும்பிப்படித்த இவரின் சமீபத்திய நூல்கள். 'தினத்தந்தி' ஞாயிறு மலருக்காக இவரை பேட்டிக்கண்டது என் வாழ்வில் கிடைத்த வரம். மனம் நிறைவான பல விஷயங்களைப் பேசினார். எளிமையான மனிதர். //

      ஆஹா, மிகவும் மகிழ்வூட்டும் செய்திகளாக பலவும் சொல்லியுள்ளீர்கள். தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      //மீண்டும் என் உளமார்ந்த நன்றிகள் ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான பல கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

      நீக்கு
  8. நிறைவுப் பகுதியை வாசித்தேன்.

    ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் 'அட்டகாசம்'

    மிகுந்த உழைப்புடன், ஆத்மார்த்தமான பிடிப்புடன் எடுத்த காரியத்தில் ஈடுபாட்டுடன் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.
    அதுவும் உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிரமங்களுக்கிடையில்.

    என்னசொல்வது என்று தெரியவில்லை. நன்றி என்று ஒற்றை வார்த்தையைத் தாண்டிய நெகிழ்ச்சி இது.

    உங்களுக்கும் தொடர்ந்து இந்தப் பகுதியை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்து பின்னூட்டம் இட்டு தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இந்த நூலினை வாங்கி வாசித்து தங்கள் தளங்களில் தங்கள் எண்ணங்களைப் பகிரப் போகிறவர்களுக்கும் என் மனங்கனிந்த அன்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் புத்தாண்டில் இதுபோல இன்னும் நிறைய உருப்படியான சாதனைகளை ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம்.

    எல்லோரும் வாழ்க வளமுடன்!!

    தங்கள் அன்பன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி April 21, 2016 at 10:07 AM

      வாங்கோ சார், என் நமஸ்காரங்கள் + வணக்கங்கள், சார்.

      நன்றி என்ற ஒற்றை வார்த்தையைத் தாண்டிய நெகிழ்ச்சியுடன் ஒரே வார்த்தையில் தாங்கள் சொல்லியுள்ள ’அட்டகாசம்’ என்பது அட்டகாசமாகவே உள்ளது.

      தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. சாதனைகள் சிறக்க வாழ்த்துக்கள்!

      நீக்கு
  9. ஆஹா நான்தான் இன்று .ஃபர்ஸ்டூஊஊஊஊவா......... நிறைவு பதிவு நிறைவாக இருக்கு....கூடவே நிறைய விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கீங்க... எடுத்த முயற்சியை சிறப்பாக நிறைவு செய்திருக்கீங்க.... ஜி. வி. ஸாருக்கும் எங்கட கோபூஜிக்கும் வாழ்த்துகளும்... பாராட்டுகளும் தெரிவிச்சுக்கறேன்..... அவ்வளவு ஈசியா விணை..... விடை கொடுத்து அனுப்பிடுவோம்னு தப்பு கணக்கெல்லாம் போடாதீங்க.. தொடர்ந்து வலைப்பதிவில் ஏதாவது எழுதிக்கொண்டேதான் இருக்கணுமாக்கும்.... நிறய சரக்கு வச்சிருக்கீங்கல்ல.... சும்ம இறக்கி வைங்க கோபூஜி........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. April 21, 2016 at 10:10 AM

      வாங்கோ சிப்-முத்-முன்னா, வணக்கம்மா.

      //ஆஹா நான்தான் இன்று ஃபர்ஸ்டூஊஊஊஊவா......... //

      நீங்க தான் எப்போதுமே ஃபர்ஸ்டூஊஊஊஊ :)

      [எங்கள் சிலரின் மனதினில் .... :) ]

      //நிறைவு பதிவு நிறைவாக இருக்கு....கூடவே நிறைய விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கீங்க... எடுத்த முயற்சியை சிறப்பாக நிறைவு செய்திருக்கீங்க....//

      நிறைவுப்பகுதி (தொடரும் போடப்படாமல்) நிறைவாகத்தானே இருக்கும்? அதுவும் எங்க அக்கா மகள் சித்ரா நிறைவாக பெளர்ணமி நிலவாக பால் போல காட்சியளிக்கிறார். அதனாலும் நிறைவாக இருக்கலாம். தங்களின் இந்தப் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன.

      //ஜி. வி. ஸாருக்கும் எங்கட கோபூஜிக்கும் வாழ்த்துகளும்... பாராட்டுகளும் தெரிவிச்சுக்கறேன்.....//

      ஆஹா, தங்களின் தங்கமான வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிம்மா.

      //அவ்வளவு ஈசியா (விணை.....?) விடை கொடுத்து அனுப்பிடுவோம்னு தப்பு கணக்கெல்லாம் போடாதீங்க..//

      சரீங்க !

      //தொடர்ந்து வலைப்பதிவில் ஏதாவது எழுதிக்கொண்டேதான் இருக்கணுமாக்கும்....//

      ஆஹா, உத்தரவுங்க எஜமானியம்மா !!

      //நிறைய சரக்கு வச்சிருக்கீங்கல்ல.... சும்மா இறக்கி வைங்க கோபூஜி........//

      நம்மிடம் சரக்குக்கு எப்போதுமே பஞ்சமே இல்லை. அவற்றை இறக்கிவைக்க ’இடம்-பொருள்-ஏவல்’ தான் பிரச்சனையே. இதுபற்றி நம் டீச்சரம்மாவுக்கு முழு விபரமும் ஏற்கனவே தெரியும். ஏனோ இந்த புதுவருஷம் 2016 பிறந்ததுமே என் மகிழ்ச்சியெல்லாம் எங்கேயோ பறந்து போய்விட்டது. :( ........... எனினும் பார்ப்போம்.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், முன்னாக்குட்டி. - பிரியமுள்ள கோபு.

      நீக்கு
  10. நிறைவு பகுதி வெகு சிறப்பாக அமைந்திருக்கு.... எஸ்.ரா... நிறைய படிச்சிருக்கேன்... இப்ப கூட ஆனந்தவிகடனில் வாரம் ஒரு புதிய தலைப்பில் கட்டுரைகள் எழுதி வராங்க. மிகத்திறமையான எழுத்தாளர்..... இவ்வளவு நாட்களாக மூத்த தலைமுறை பிரபல எழுத்தாளர்களை சிறப்பாக அறிமுகம் செய்து வந்திங்க...நிறய எழுத்தாளர்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.... ஏன் பெண் எழுத்தாளர்களுக்கு 33%---இட ஒதுக்கீடு கொடுக்கல? (ஜஸ்ட்...ஃபார்..ஜோக்).....இதில் இன்னும் சிலபேரைச் சேர்த்திருக்கலாமே???? அதாவது.... கல்கி...சாண்டில்யன்....சாவி......மணியன்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதுபோல லஷ்மி... வாஸந்தி..... இந்துமதி....அனுராதாரமணன்.....
    சொல்றவங்க ஈசியா அப்படி பண்ணி இருக்கலாமே.... இப்படி பண்ணி இருக்கலாமேன்னு சொல்லிட்டு போயிகிட்டே இருக்கலாம்...இதில் உள்ள சிரமங்கள் அந்த பதிவருக்குத்தானே தெரியும்... சரி அது போகட்டும்.... இதுபோல இன்றய தலைமுறை அதாவது சமகால எழுத்தாளரகள் சிலரையும் அறிமுகம் செய்யலாமே.... ஜ.வி.. ஸார்... கோபால் ஸாருக்கு ஒரு தூண்டுதல் கொடுங்க... ஸாரை எழுத்துலகை விட்டு இப்போதைக்கு போக விடாதிங்க........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதுபோல இன்றய தலைமுறை அதாவது சமகால எழுத்தாளரகள் சிலரையும் அறிமுகம் செய்யலாமே.... ஜ.வி.. ஸார்... //

      உருப்படியான யோசனை. செய்யத் தான் வேண்டும். அதுவும் ஜெயமோகன், எஸ்.ரா., போன்று பிரபலமடையாத, இவர்களுக்கு எழுத்துச் சிறப்பிலும் மாறுபட்ட கருத்துச் சிறப்பிலும், உழைப்பிலும் எந்த விதத்திலும் குறைந்து விடாதவர்களைப் பற்றியும் எழுத வேண்டும். உண்மை தான். தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

      கேரளம் போல் இல்லை, தமிழகம். அங்கு புத்தகம் வாங்குவோர் எண்ணிக்கை மிக அதிகம். வாசிப்போர் எண்ணிக்கையும் தமிழக்த்தை விட மிக அதிகம். இவ்வளவுக்கும் நிலப்பரப்பும், மக்கள் தொகையும் தமிழகத்தியை விட குறைவு பட்டது.

      இங்கு நாலைந்து வாரப்பத்திரிகைகளுக்கு மாதத்திற்கு ரூ.500/-ஐ தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் ஒதுக்குவோரில் பெரும்பான்மையோர் தனியாக புத்தகங்களுக்கு செலவிடுவதில்லை.

      இங்கு பத்திரிகைகளில் வெளிவந்து பின் புத்தகங்களாக வெளிவருவனவற்றிற்கு மவுசு அதிகம். அங்கு அவர்களுக்கு பத்திரிகை பிரசுரத்தைப் பற்றி கவலை இல்லை. நல்ல எழுத்தாலர்களை நேசிக்கிற மிகப் பெரிய கூட்டம் அங்கு உண்டு. அப்படியானவர்களின் புத்தகம் பிரசுரம் காணும் பொழுதே இவ்வளவு பிரதிகள் விற்பனையாகும் என்பதை தீர்மானித்து விடலாம்.

      இங்கு பத்திரிகைகளின் மூலம் வெளிவந்து படித்தவை இரண்டாவது ரொடேஷனாக, இரண்டாவது சுற்றாக புத்தகப் பதிப்பு கண்டு மறுபடியும் வலம் வருகிறது.
      அதனால் இயல்பாகவே தமிழக பத்திரிகைகளுக்கு எழுத்தாளர் கூட்டத்தை உருவாக்குபவர்களும், அதற்காகவே பிறப்பெடுத்தவர்களும் தாங்கள் தான் என்கிற மமதை உண்டு. அதனால் தான் பத்திரிகை பிரசுரங்களுக்கு ஆலாய் பறந்து பிரபலமடைய வேண்டும் என்கிற தீராத தாகம் கொண்டவர்களாய் தமிழ் எழுத்தாளர்கள் மாறிப் போனார்கள்.

      ஒரு காலத்தில் பத்திரிகைகள் மூலம் எழுத்தாலர்கள் பிர்பலமடைந்தார்கள் என்றால் இப்பொழுது சினிமா. எப்படியாவது பிரபலமடைய வேண்டும். பின் அவர்கள் என்ன எழுதினாலும் அந்த நூல் விற்பனையாகும் என் கிற நிலை தான் இங்கு.

      இந்தப் போக்கை மாற்ற வேண்டும் நாம். பதிவு உலகில் வெவ்வேறு பொருள்களில் சிறப்பாக எழுதுபவர்கள், அபாரமான சிந்தனை வளம் கொண்டவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இணைய உலகே இனி எதிர்காலம் என்பதினால் பதிவுலகை அந்த மாற்றத்திற்காக நாம் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

      இதற்கு ஆக்கபூர்வமான வழிமுறைகளை யாராவது சிந்தித்துச் சொன்னால் அதை செயல்படுத்தும் முயற்சிகளில் நாம் ஒன்றுபட்டு ஈடுபடலாம்.

      நீக்கு
    2. என் கருத்துக்கு விவரமாக நீண்ட ரிப்ளை அனுப்பியதற்கு முதலில் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... காசு செலவு செய்து நல்ல புத்தகங்கள் வாங்கி படிப்பது இப்போது மிகவும் குறைந்து விட்டது என்பது வேதனையான உண்மைதான். நீங்களும் கோபால் ஸாரும் முதல் அடி எடுத்து வச்சிருக்கீங்க... படிப்பு ஆர்வம்+ தாகம்.. உள்ளவர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்..... இன்னும் இன்னும் இந்த மாதிரி பதிவுகள் தொடரணும்... நெட் யுகம் வந்த பிறகு இங்கும் பல நல்ல விஷயங்களை யார் கொடுத்தாலும் தேடிப்பார்த்து படிக்கவும் ( என்னைப்போல.... உங்களைப்போல) சிலராவது இருக்கத்தான் செய்கிறார்கள்.......தொடரவும்... சிறப்பான பணியை... வாழ்த்துக்களுடன்.........

      நீக்கு
    3. ஸ்ரத்தா, ஸபுரி... April 21, 2016 at 10:26 AM

      //நிறைவு பகுதி வெகு சிறப்பாக அமைந்திருக்கு....//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //கோபால் ஸாருக்கு ஒரு தூண்டுதல் கொடுங்க... ஸாரை எழுத்துலகை விட்டு இப்போதைக்கு போக விடாதிங்க........//

      :) இந்தத் தங்களின் தூண்டுதலே போதும். நன்றி.

      இந்தத்தொடருக்கு தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், விரிவான + ஆத்மார்த்தமான நல்ல பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். பழையபடி நாம் அங்கு விட்ட இடத்திலிருந்து இனி தொடர்வோம். - VGK

      நீக்கு
  11. மிகவும் நிறைவான பதிவு... கூடவே சித்திரா பவுர்ணமியின் சிறப்புகள்..... எஸ்.ரா... படித்ததுண்டு... கோபுஸார் எழுதுவதை நிறுத்த கனவில் கூட நினைக்காதிங்க... நாங்க எவ்வளவு பேரு உங்க எழுத்துக்கு ரசிகராக இருக்கோம்..... எங்களை எல்லாம் ஏமாத்தலாமா........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... April 21, 2016 at 10:35 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மிகவும் நிறைவான பதிவு... கூடவே சித்திரா பவுர்ணமியின் சிறப்புகள்.....//

      மிக்க மகிழ்ச்சி :)

      //எஸ்.ரா... படித்ததுண்டு...//

      அப்படியா! ’அவர் படித்ததும் உண்டு + எழுதுவதும் உண்டு’ எனக்கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நான் இதுவரை அவர் எழுத்துக்களைப் படித்தது இல்லை.

      //கோபுஸார் எழுதுவதை நிறுத்த கனவில் கூட நினைக்காதிங்க... நாங்க எவ்வளவு பேரு உங்க எழுத்துக்கு ரசிகராக இருக்கோம்..... எங்களை எல்லாம் ஏமாத்தலாமா........//

      அடடா, இந்த ஒரு சொல்லே எனக்கு ஜில்லுன்னு இருக்கு, இங்கு திருச்சியில் அடிக்கும் 40 டிகிரிக்கும் மேற்பட்ட கடும் வெயிலுக்கு.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், நல்ல பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      நீக்கு
  12. நிறைவு பகுதியில் ஒருவர் மட்டும்தானா.......ராமகிருஷ்ணன் கதைகள் படித்ததுண்டு.. திறமையான எழுத்தாளர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. srini vasan April 21, 2016 at 10:38 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நிறைவு பகுதியில் ஒருவர் மட்டும்தானா.......//

      இல்லையே கீழே நிறைவாக என் அக்கா மகள் சித்ரா காட்சியளிக்கிறாரே! நீங்க பார்க்கவே இல்லையா? :)

      //ராமகிருஷ்ணன் கதைகள் படித்ததுண்டு.. திறமையான எழுத்தாளர்.//

      அப்படியா? வெரி குட்.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      நீக்கு
  13. இன்று சீக்கிரமே பதிவு போட்டீங்களா மதியத்துக்கு மேலதானே எப்பவும் போடுவீங்க. ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக பண்ணின திருப்தி கிடைச்சுதா....நிறைய எழுத்தாளர்களைத் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது..எழுதுவதை நிறுத்திடலாம்னு மட்டும் நினைக்காதிங்க... எழுத்துக்கலை எல்லாருக்கும் கைவந்து விடாது.. உங்களுக்கு எழுத்து திறமை+ சூப்பரான கற்பனை வளம் எல்லாமே தாராளமா கொட்டி கிடக்கு... தொடர்ந்து எழுதிக்கொண்ணே இருக்கவும்.. பேனாவையும் மனசையும் துருப்பிடிக்க விட்டுடாதிங்க.... ப்ளீஸ்........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ராப்தம் April 21, 2016 at 10:46 AM

      வாங்கோ சாரூஊஊஊஊ, வணக்கம்மா. நலம் தானே! ஜாலியா சந்தோஷமா இருக்கீங்களா? உங்களை இங்கு சந்திக்கும் ‘ப்ராப்தம்’ அமைந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

      //இன்று சீக்கிரமே பதிவு போட்டீங்களா? மதியத்துக்கு மேலதானே எப்பவும் போடுவீங்க.//

      எனக்கு, இன்று விடியற்காலமே ஜாலியா ஹனிமூன் போக வேண்டிய வேலை (MOOD) வந்தது. திரும்பிவர முன்னே பின்னே நேரம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் இந்த என் நிறைவுப் பகுதியை மட்டும், நான் சொன்ன நேரத்திற்கு 15 மணி நேரங்கள் முன்னதாகவே அட்வான்ஸ் ஆக வெளியிட்டு விட்டேன்.

      //ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக பண்ணின திருப்தி கிடைச்சுதா....//

      எனக்கென்னவோ எதிலும் லேஸில் திருப்தி வருவது இல்லை. எவ்வளவுதான் சிறப்பாகச் செய்தாலும் என்னவோ ஒரு சிறிய குறை இருப்பதுபோலவே எப்போதும் என் மனதுக்குத் தோன்றிக்கொண்டே இருக்கும்.

      //நிறைய எழுத்தாளர்களைத் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது.. //

      எனக்கும் உங்களைப்போலவேதான், நிறைய எழுத்தாளர்களைத் தெரிந்து கொள்ள, இதன் மூலம் நல்ல வாய்ப்பு கிடைத்தது.

      //எழுதுவதை நிறுத்திடலாம்னு மட்டும் நினைக்காதிங்க... //

      ஏன்? என்ன ஆச்சு?

      //எழுத்துக்கலை எல்லாருக்கும் கைவந்து விடாது.. //

      அப்படியா? என்னவெல்லாமோ அம்பாள் போல, அசரீரி போலச் சொல்லுகிறீர்களே !

      //உங்களுக்கு எழுத்து திறமை + சூப்பரான கற்பனை வளம் எல்லாமே தாராளமா கொட்டி கிடக்கு...//

      எனக்கே தெரியாமல், என்னிடம் எங்கோ கொட்டிக் கிடக்கும் இவற்றை, எப்படியோ நீங்க துப்பறிந்து கண்டு பிடிச்சு சொல்லிட்டீங்களே, யூ ஆர் ஸோ க்ரேட், க்ரேட்டர், க்ரேட்டஸ்ட் :)

      //தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவும்..//

      உத்தரவு ..... மஹாராணியாரே !

      //பேனாவையும் மனசையும் துருப்பிடிக்க விட்டுடாதிங்க.... ப்ளீஸ்........//

      ஒருவேளை ஏற்கனவே அவை துருப்பிடித்து இருந்தால் ..... என்ன செய்வது? ..... சொல்லுங்கோ, ப்ளீஸ்.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், பேரன்புக்கும், தங்கமான பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சாரூஊஊஊஊ - பிரியமுள்ள கோபு

      நீக்கு
  14. இன்றைக்கு அறிமுகமாயுள்ள எஸ்.ரா என்கிற திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புகளை இதுவரைப் படித்ததில்லை. ‘யாமம்’ பகுதியில் நீங்கள் மிகவும் இரசித்த வரிகளை நானும் இரசித்தேன். குறிப்பாக ‘காமம் என்பது தேனும் கூட. காமத்தை சுகிப்பவன், தேனில் விழுந்த ’ஈ’யாகிறான். மாந்துகிறேன் பேர்வழி என்று ஒரு கிண்ணத் தேனின் மேற்பரப்பில் உட்கார்ந்த ஈ, அந்தத் தேனில் விழுந்தே கிடப்பது ... அதன் இறக்கைகள் நனைந்து, பிசுபிசுத்துப் பறக்க முடியாத நிலையையும் உருவாக்கலாம். தேனில் அமிழ அமிழ அந்தத் தேன் கிண்ணத்திலிருந்தே அதனால் வெளியேற முடியாதபடிக்கு அதனை மூழ்கச் செய்யலாம்.’ என்ற வரிகளை மிகவும் இரசித்தேன்.

    திரு ஜீ.வி அவர்கள் செய்த அறிமுகத்தை தங்கள் வாயிலாக அறிந்த பிறகு திரு எஸ்.ரா அவர்களின் படைப்பையும் படிக்க ஆவல் கொண்டுள்ளேன். அதற்கு முன்பு திரு ஜீ.வி. அவர்களின் ‘ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ் ரா வரை என்ற நூலை வாசிக்கக்வேண்டும்.

    ஒரு கதையை அல்லது ஒரு நாவலைப் படைப்பது ஒரு பிள்ளைப்பேறுக்கு சமம் என சொல்வார்கள். அப்படி படைத்த படைப்பாளிகள் பற்றி ஆய்ந்து அவர்களின் படைப்புகளை திறனாய்வு செய்து ஒரு நூலாக வெளியிடுவதென்பது மிகவும் கடினமான செயல்.. அதை செய்திருக்கின்ற திரு ஜீ.வி அவர்கள் பாராட்டுக்குரியவர்.

    மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்;
    எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
    அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;
    கருமமே கண்ணாயினார்

    என்று குமரகுருபரர் பாடியது தங்களுக்கு பொருந்தும் என எண்ணுகிறேன்.

    இல்லாவிடில் திரு ஜீ.வி அவர்களின் நூலை ஒன்பது நாட்களுக்குள் வேறு பணி ஏதும் செய்யாமல் தொடர்ந்து படித்து தங்கள் பாணியில் திறனாய்வு செய்து சுருக்கமாக ஆனால் சுவையாக எங்களுக்கு படைத்திருக்கமுடியுமா?

    பிடியுங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்!

    உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் முழு மனத் திருப்திதான் தங்கள் மூலம் இந்த அனுபவம் பெற்றதற்கு.

    தங்களுக்கு சித்ரா பவுர்ணமி வாழ்த்துக்கள்!

    வலைப்பதிவர் சகோதரி சித்ரா அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி April 21, 2016 at 12:20 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //இன்றைக்கு அறிமுகமாயுள்ள எஸ்.ரா என்கிற திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புகளை இதுவரைப் படித்ததில்லை.//

      ஆஹா, நாம் இருவரும் இது விஷயத்தில் இப்போது ஒரே கட்சியில்தான் இருக்கிறோம். அதில் எனக்கோர் மகிழ்ச்சியாகவும், மனதுக்குச் சற்றே ஆறுதலாகவும் உள்ளது. :)

      //‘யாமம்’ பகுதியில் நீங்கள் மிகவும் இரசித்த வரிகளை நானும் இரசித்தேன். குறிப்பாக ‘காமம் என்பது தேனும் கூட. காமத்தை சுகிப்பவன், தேனில் விழுந்த ’ஈ’யாகிறான். மாந்துகிறேன் பேர்வழி என்று ஒரு கிண்ணத் தேனின் மேற்பரப்பில் உட்கார்ந்த ஈ, அந்தத் தேனில் விழுந்தே கிடப்பது ... அதன் இறக்கைகள் நனைந்து, பிசுபிசுத்துப் பறக்க முடியாத நிலையையும் உருவாக்கலாம். தேனில் அமிழ அமிழ அந்தத் தேன் கிண்ணத்திலிருந்தே அதனால் வெளியேற முடியாதபடிக்கு அதனை மூழ்கச் செய்யலாம்.’ என்ற வரிகளை மிகவும் இரசித்தேன். //

      இதைக்கேட்க எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சார். நம் இருவர் ரசனையும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளதே !

      //திரு ஜீ.வி அவர்கள் செய்த அறிமுகத்தை தங்கள் வாயிலாக அறிந்த பிறகு திரு எஸ்.ரா அவர்களின் படைப்பையும் படிக்க ஆவல் கொண்டுள்ளேன். அதற்கு முன்பு திரு ஜீ.வி. அவர்களின் ‘ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ் ரா வரை என்ற நூலை வாசிக்கக்வேண்டும். //

      நல்லது. அப்படியேயும் தாங்கள் செய்யலாம்.

      //ஒரு கதையை அல்லது ஒரு நாவலைப் படைப்பது ஒரு பிள்ளைப்பேறுக்கு சமம் என சொல்வார்கள். அப்படி படைத்த படைப்பாளிகள் பற்றி ஆய்ந்து அவர்களின் படைப்புகளை திறனாய்வு செய்து ஒரு நூலாக வெளியிடுவதென்பது மிகவும் கடினமான செயல்.. அதை செய்திருக்கின்ற திரு ஜீ.வி அவர்கள் பாராட்டுக்குரியவர். //

      நிச்சயமாக ..... பாராட்டுக்குரியவரேதான், சார்.

      //மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்;
      எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
      அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;
      கருமமே கண்ணாயினார்

      என்று குமரகுருபரர் பாடியது தங்களுக்கு பொருந்தும் என எண்ணுகிறேன். //

      என்னைப்பார்த்து ஏற்கனவே பலரும் இதுபோலச் சொல்லியது உண்டு சார். தாங்கள் இப்போது சொல்லியுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      //இல்லாவிடில் திரு ஜீ.வி அவர்களின் நூலை ஒன்பது நாட்களுக்குள் வேறு பணி ஏதும் செய்யாமல் தொடர்ந்து படித்து தங்கள் பாணியில் திறனாய்வு செய்து சுருக்கமாக ஆனால் சுவையாக எங்களுக்கு படைத்திருக்கமுடியுமா? //

      ஏதோ அதுபோன்றதோர் உந்துதல் எனக்கும் ஏற்பட்டு, செய்து முடிக்கத் தோன்றியது அப்போது. அதற்கான வாய்ப்புக்கிடைத்தது. பயன் படுத்திக்கொண்டேன். என் பாணியில் திறனாய்வு செய்து சுருக்கமாக ஆனால் சுவையாகப் படைத்திருப்பதாக, தாங்களும் தங்கள் வாயால் சுவைபட இங்கு எடுத்துச் சொல்லியுள்ளது கேட்க தன்யனானேன், சார்.

      //பிடியுங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்! //

      சிக்கெனப் பிடித்துக்கொண்டேன் தங்களின் அன்பான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும். என் ஸ்பெஷல் நன்றிகள், சார்.

      //உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் முழு மனத் திருப்திதான் தங்கள் மூலம் இந்த அனுபவம் பெற்றதற்கு. //

      மிகவும் சந்தோஷம், சார் .

      //தங்களுக்கு சித்ரா பவுர்ணமி வாழ்த்துக்கள்! //

      மிக்க நன்றி, சார்.

      //வலைப்பதிவர் சகோதரி சித்ரா அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! //

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி, சார்.

      இந்தத்தொடருக்கு தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், விரிவான + ஆத்மார்த்தமான + மிகச்சிறப்பான நல்ல பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. இதே மாதிரியான இன்னொரு நூல். தங்கள் தமையனாரின் படைப்பு. இப்பொழுது வாசித்ததை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

      http://solvanam.com/?p=43776

      அன்புடன்,
      ஜீவி

      நீக்கு
  15. நூலை சிறப்பாக அலசி வெற்றிகரமாக விமர்சனத்தை முடித்தமைக்கு வாழ்த்துகள் ஐயா - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. KILLERGEE Devakottai April 21, 2016 at 5:50 PM
      நூலை சிறப்பாக அலசி வெற்றிகரமாக விமர்சனத்தை முடித்தமைக்கு வாழ்த்துகள் ஐயா - கில்லர்ஜி//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

      நீக்கு
  16. மற்றுமொரு மகத்தான சாதனைப் பதிவு.. எடுத்த காரியத்தை செவ்வனே செய்துமுடித்த தங்கள் செயற்திறமைக்கு மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார்.

    எஸ்ரா அவர்களின் எழுத்து, ஆனந்தவிகடனில் அவர் எழுதிய துணையெழுத்து தொடர் வாயிலாகத்தான் அறிமுகம். அதன்பிறகு அவருடைய சில படைப்புகளை வாசித்துள்ளேன். அவருடைய எளிய இயல்பான மொழிநடையும் எழுத்துவன்மையும் வியக்கவைப்பவை. இப்போது குறிப்பிடப்பட்டுள்ள மற்ற படைப்புகளையும் தேடி வாசிப்பேன்.

    இப்படியொரு நூலை எழுதவேண்டும் என்று ஜீவி சாருக்குத் தோன்றியது வாசகர்க்குக் கிடைத்த வரம். இல்லையெனில் நான் எங்கே தேடிப்போய் பல அற்புதமான எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கப்போகிறேன்… அது மட்டுமல்ல.. பல எழுத்தாளர்களை அவர்கள் பெயரைக்கூட அறியாமல் இருந்திருக்கிறேன். எழுத்தில் சாதனை புரிந்த அவர்களைப் பற்றிய அறிமுக முன்னோட்டமே அசத்தலாக உள்ளதே… விரிவாக வாசிக்கும்போது இன்னும் எவ்வளவு ரசனையாக இருக்கும்? மற்ற படைப்பாளிகளின் படைப்புகளை அவ்வளவாக வாசித்ததில்லை என்று குறிப்பிட்ட தாங்களே இந்நூலை தொடர்ச்சியாக வேறு சிந்தனையில்லாமல் வாசித்து முடித்ததோடு அதற்கான நீண்ட விமர்சனப்பதிவுகளையும் வெளியிட்டுள்ளீர்கள் என்றால் எவ்வளவு சுவாரசியமான நூலாக இது உள்ளது என்று புரிகிறது. தமிழின் வளர்ச்சிக்கு இதுபோன்ற ஆவணப்பதிவுகள் அவசியம் தேவை.. அதிகம் அறியப்படாது காற்றோடு கரைந்துபோகும் கற்பூரமாக இல்லாது கல்வெட்டுகளாய் பொறிக்கப்படவேண்டிய படைப்பாளிகளின் படைப்புத்திறத்தை அறியத்தரும் இந்நூலினை வழங்கிய ஜீவி சாருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி April 21, 2016 at 7:10 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மற்றுமொரு மகத்தான சாதனைப் பதிவு.. எடுத்த காரியத்தை செவ்வனே செய்துமுடித்த தங்கள் செயற்திறமைக்கு மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார். //

      ஏதோ தங்களைப்போன்ற தங்கமான பின்னூட்டங்கள் கொடுத்துள்ளவர்கள் தந்துள்ள ஊக்கமும் உற்சாகமும் மட்டுமே, என்னை வழிநடத்திச்சென்று, இந்த மகத்தான சாதனைப்பதிவுத் தொடரை நிறைவாகவும் வெற்றிகரமாகவும் முடிக்க வைத்துள்ளது. தங்களின் இந்தப்பாராட்டுகளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

      //எஸ்ரா அவர்களின் எழுத்து, ஆனந்தவிகடனில் அவர் எழுதிய துணையெழுத்து தொடர் வாயிலாகத்தான் அறிமுகம். அதன்பிறகு அவருடைய சில படைப்புகளை வாசித்துள்ளேன். அவருடைய எளிய இயல்பான மொழிநடையும் எழுத்துவன்மையும் வியக்கவைப்பவை. இப்போது குறிப்பிடப்பட்டுள்ள மற்ற படைப்புகளையும் தேடி வாசிப்பேன். //

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //இப்படியொரு நூலை எழுதவேண்டும் என்று ஜீவி சாருக்குத் தோன்றியது வாசகர்க்குக் கிடைத்த வரம். இல்லையெனில் நான் எங்கே தேடிப்போய் பல அற்புதமான எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கப்போகிறேன்… அது மட்டுமல்ல.. பல எழுத்தாளர்களை அவர்கள் பெயரைக்கூட அறியாமல் இருந்திருக்கிறேன்.//

      நானும் தான் மேடம். இந்த 37 பிரபல எழுத்தாளர்களில் 30 பேர்கள் வரை, எனக்கு சுத்தமாகத் தெரியாமலும், கேள்வியே படாமலும்தான் நானும் இருந்துள்ளேன். கேள்விப்பட்ட மீதி ஏழு நபர்களில் சுஜாதா கதைகள் மட்டும், அதுவும் கொஞ்சம் கொஞ்சம் மட்டும் படித்துள்ளேன். தாங்கள் சொல்வதுபோல இந்த நம் ஜீவி சாரின் நூல் வாசகர்களுக்குக் கிடைத்ததோர் அரிய பெரிய வரம்தான்.

      //எழுத்தில் சாதனை புரிந்த அவர்களைப் பற்றிய அறிமுக முன்னோட்டமே அசத்தலாக உள்ளதே… விரிவாக வாசிக்கும்போது இன்னும் எவ்வளவு ரசனையாக இருக்கும்? மற்ற படைப்பாளிகளின் படைப்புகளை அவ்வளவாக வாசித்ததில்லை என்று குறிப்பிட்ட தாங்களே இந்நூலை தொடர்ச்சியாக வேறு சிந்தனையில்லாமல் வாசித்து முடித்ததோடு அதற்கான நீண்ட விமர்சனப்பதிவுகளையும் வெளியிட்டுள்ளீர்கள் என்றால் எவ்வளவு சுவாரசியமான நூலாக இது உள்ளது என்று புரிகிறது.//

      உலகப்புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கதாசிரியர் ’ஹென்றி லாஸன்’ அவர்களைப்பற்றி தங்களின் ’என்றாவது ஒரு நாள்’ என்ற தமிழாக்க நூல் மூலம் மட்டுமே நான் அறிந்துகொள்ள முடிந்தது. http://gopu1949.blogspot.in/2015/09/part-1-of-5.html அதுபோல இதுவும் ஒரு சுவாரஸ்யமான நூல்தான் என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். முதன் முதலாக அந்தத் தங்களின் நூலினை நான் என் வலைத்தளத்தில் அறிமுகம் செய்த அனுபவமே இதில் எனக்கோர் வழிகாட்டியாகவும் அமைந்தது.

      அந்த அறிமுக முன்னோட்டம் அசத்தலாக அமைந்தது போலவே இதுவும் அமைந்துவிட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே. தங்களின் இந்தப்புரிதலுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

      //தமிழின் வளர்ச்சிக்கு இதுபோன்ற ஆவணப்பதிவுகள் அவசியம் தேவை.. அதிகம் அறியப்படாது காற்றோடு கரைந்துபோகும் கற்பூரமாக இல்லாது கல்வெட்டுகளாய் பொறிக்கப்படவேண்டிய படைப்பாளிகளின் படைப்புத்திறத்தை அறியத்தரும் இந்நூலினை வழங்கிய ஜீவி சாருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். //

      தங்களின் எழுத்துக்களோ, படைப்புகளோ, நூல் ஆக்கமோ, விமர்சனங்களோ, பின்னூட்டங்களோ எதுவாகினும் அது கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள ஒன்றாய் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. அதற்கு முதலில் தங்களுக்கு என் பாராட்டுகள்.

      தங்களின் பாராட்டுகளுக்கு ஜீவி சார் சார்பாக என் நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறேன்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  17. தோழி சித்ராவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி April 21, 2016 at 7:10 PM

      //தோழி சித்ராவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி மேடம். நம் சித்ராவின் பிறந்த நாள்: ஆங்கிலக் கணக்குப்படி 13th May Only (Official).

      தமிழ் கணக்குப்படி சித்திரை மாதம், சித்திரை நக்ஷத்திரம், அதுவும் சித்ரா பெளர்ணமி தினத்தன்று. :)

      நீக்கு
  18. ஜீவி சாரின் நூல் அறிமுகத்தை இருபது பகுதிகளாக வெளியிட்டு, மீண்டும் ஒரு புதுமையான சாதனையை நிகழ்த்தியிருக்கிறீர்கள் கோபு சார்!
    எந்தத் தடங்கலுமின்றித் திட்டமிட்டபடி, இந்தத் தொடர் பதிவின் இருபது பகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன என்பது மகிழ்வு தரும் செய்தி.
    உடல்நலம் சரியில்லாத போதும், நல்லதொரு நூலை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மிகவும் அற்புதமாகச் செய்து விட்டீர்கள். இதுவும் ஒரு வித இலக்கியப்பணி தான்.
    நம் எழுத்தாளுமைகளையும், அவர்களுடைய மிகச் சிறந்த ஆக்கங்களையும் பரவலாக எல்லோரும் தெரிந்து கொள்வதற்கு இத்தொடர் மிகவும் உதவி செய்தது. வாசகர்கள் கொடுத்த பின்னூட்டங்கள் ஜீவி சாருக்கு அடுத்த தொகுதி எழுதுவதற்கு உதவி செய்பவை.
    என்னைக் கவர்ந்த பதிவுகள் -3 ல் திரு ஜீவி சார் தம் பின்னூட்டத்தில் என்னைக் கவர்ந்த பின்னூட்டக்காரர்கள் என்று யார் எழுதப் போகிறார்களோ தெரியவில்லை என எழுதினார்.
    அதற்கு நான் அளித்த பதிலில் எனக்குத் தெரிந்தவரை திரு கோபு சார் அவர்களுக்குக் கிடைப்பதைப் போன்ற சுவையான நீண்ட பின்னூட்டங்கள் வேறு யாருக்கும் கிடைப்பதில்லை. எனவே இந்தத் தலைப்பில் எழுத மிகவும் பொருத்தமானவர் கோபு சார் தான் என்று பதிலளித்தேன்.
    இந்த இருபது பதிவுகளுக்கும் கிடைத்த பின்னூட்டங்களைப் பார்த்தால், நான் சொன்னது உண்மை என்பது விளங்கும்.
    எஸ்.ரா எழுதிய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். துயில் என்ற நாவலை இப்போது தான் வாசிக்கத்துவங்கியுள்ளேன்.
    சித்ரா பெளர்ணமி பற்றிய கூடுதல் தகவல்களையும் அறிந்து கொண்டேன். சகோதரி சித்ராவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
    சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் எழுத தாங்கள் வர வேண்டும் என்பதே என் அவா.
    தமிழுக்குச் சிறந்த நூலொன்றைப் பரிசளித்த திரு ஜீவி சார் அவர்களுக்கும், அந்நூல் பற்றிப் பலரும் அறியும்வண்ணம் தொடர் எழுதி இலக்கியப் பணி புரிந்த தங்களுக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி April 21, 2016 at 8:07 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஜீவி சாரின் நூல் அறிமுகத்தை இருபது பகுதிகளாக வெளியிட்டு, மீண்டும் ஒரு புதுமையான சாதனையை நிகழ்த்தியிருக்கிறீர்கள் கோபு சார்!//

      ஏற்கனவே ‘என்றாவது ஒரு நாள்’ + ‘பெண் பூக்கள்’ பற்றிய என் நூல் அறிமுகப் பதிவுகள் இதற்கு ஓர் வழிகாட்டியாக அமைந்தன என்று சொல்லலாம்.

      இருப்பினும் தங்களைப் போன்றோரின் தங்கமான பின்னூட்டங்கள் தந்துள்ள ஊக்கமும் உற்சாகமும் மட்டுமே, என்னை நன்கு வழிநடத்திச்சென்று, இந்த மகத்தான சாதனைப்பதிவுத் தொடரை நிறைவாகவும், வெற்றிகரமாகவும் முடிக்க வைத்துள்ளது. அதற்கு முதலில் தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

      //எந்தத் தடங்கலுமின்றித் திட்டமிட்டபடி, இந்தத் தொடர் பதிவின் இருபது பகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன என்பது மகிழ்வு தரும் செய்தி. உடல்நலம் சரியில்லாத போதும், நல்லதொரு நூலை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மிகவும் அற்புதமாகச் செய்து விட்டீர்கள். இதுவும் ஒரு வித இலக்கியப்பணி தான். நம் எழுத்தாளுமைகளையும், அவர்களுடைய மிகச் சிறந்த ஆக்கங்களையும் பரவலாக எல்லோரும் தெரிந்து கொள்வதற்கு இத்தொடர் மிகவும் உதவி செய்தது.//

      ’இதுவும் ஒரு வித இலக்கியப்பணி தான்’ என்ற இதனைத் தங்களின் மூலம் கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தன்யனானேன், மேடம்.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> திருமதி. ஞா. கலையரசி அவர்கள் (2)

      //வாசகர்கள் கொடுத்த பின்னூட்டங்கள் ஜீவி சாருக்கு அடுத்த தொகுதி எழுதுவதற்கு உதவி செய்பவை. //

      நிச்சயமாக ...... மேடம்.

      //என்னைக் கவர்ந்த பதிவுகள் -3 ல் திரு ஜீவி சார் தம் பின்னூட்டத்தில் என்னைக் கவர்ந்த பின்னூட்டக்காரர்கள் என்று யார் எழுதப் போகிறார்களோ தெரியவில்லை என எழுதினார்.
      அதற்கு நான் அளித்த பதிலில் எனக்குத் தெரிந்தவரை திரு கோபு சார் அவர்களுக்குக் கிடைப்பதைப் போன்ற சுவையான நீண்ட பின்னூட்டங்கள் வேறு யாருக்கும் கிடைப்பதில்லை. எனவே இந்தத் தலைப்பில் எழுத மிகவும் பொருத்தமானவர் கோபு சார் தான் என்று பதிலளித்தேன். //

      அதனை அன்றைக்கே நான் பார்த்து மகிழ்ந்தேன். தனியாக என்னிடம் உள்ள ‘பிறரின் பாராட்டுகள்’ என்ற தலைப்பிலான என் கோப்பு ஒன்றினில் அதன் இணைப்பினையும் சேமித்துப் பொக்கிஷமாக வைத்துக்கொண்டுள்ளேன். :)

      //இந்த இருபது பதிவுகளுக்கும் கிடைத்த பின்னூட்டங்களைப் பார்த்தால், நான் சொன்னது உண்மை என்பது விளங்கும். //

      ஓரளவுக்கு என் பதில்களையும் சேர்த்து 1000 பின்னூட்டங்களுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன். இன்னும் சரியாக அதனை நான் கணக்கிடவில்லை. முடிந்தால் நாளைக்குள் எல்லாப் புள்ளிவிபரங்களையும் கணக்கிட்டு அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> திருமதி. ஞா. கலையரசி அவர்கள் (3)

      பிறரின் பின்னூட்டங்களில் என்னைக் கவர்ந்தவற்றையெல்லாம், ஓரளவுக்கு சேகரித்து என் 2015 மார்ச் மாத பதிவுகள் பலவற்றில் ஏற்கனவே நான் எழுதியுள்ளேன், மேடம். அந்தத்தொடரினை மொத்தம் 15 பகுதிகளாகக் கொடுத்துள்ளேன்.

      தலைப்பு: ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்’

      பகுதி-1 க்கான இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2015/03/1.html

      பகுதி-12/04/04 க்கான இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2015/03/120404.html

      ’என்னைக் கவர்ந்த பின்னூட்டக்காரர்கள் என்று யார் எழுதப் போகிறார்களோ தெரியவில்லை’ என ஜீவி சார் தங்களிடம் கேட்டுள்ளது வியப்பாக உள்ளது எனக்கு.

      உதாரணமாக இதோ இந்தப்பதிவுகளில் பலரின் பின்னூட்டங்களை நான் காட்டியுள்ளேன். அதில் நம் ஜீவி சாரின் பின்னூட்டங்களும்கூட உள்ளன.

      http://gopu1949.blogspot.in/2015/03/120104.html

      http://gopu1949.blogspot.in/2015/03/9.html

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> திருமதி. ஞா. கலையரசி அவர்கள் (4)

      //எஸ்.ரா எழுதிய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். துயில் என்ற நாவலை இப்போது தான் வாசிக்கத்துவங்கியுள்ளேன்.//

      வெரி குட், மேடம்.

      //சித்ரா பெளர்ணமி பற்றிய கூடுதல் தகவல்களையும் அறிந்து கொண்டேன். சகோதரி சித்ராவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து!//

      மிக்க மகிழ்ச்சி, மேடம். வாழ்த்துகளுக்கு சித்ரா சார்பில் என் நன்றிகள், மேடம்.

      //சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் எழுத தாங்கள் வர வேண்டும் என்பதே என் அவா.//

      முயற்சிக்கிறேன், மேடம்.

      //தமிழுக்குச் சிறந்த நூலொன்றைப் பரிசளித்த திரு ஜீவி சார் அவர்களுக்கும், அந்நூல் பற்றிப் பலரும் அறியும்வண்ணம் தொடர் எழுதி இலக்கியப் பணி புரிந்த தங்களுக்கும் பாராட்டுக்கள்!//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான, விரிவான, ஆழமான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். நன்றியுடன் கோபு.

      நீக்கு
  19. இவருடைய எழுத்துக்களையும் வாசித்ததில்லை...

    இவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    அழகாக தொடர்ந்து 1 நாள் விட்டு 1 நாள் மதியம் 3 மணிக்கு என இவ்வளவு சிறப்பாக உங்களைத் தவிர யாரால் இப்படி நூல் விமர்சனத்தை புதுமையாகச் செய்ய முடியும்....வாழ்த்துகள்,பாராட்டுகள் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri April 21, 2016 at 8:40 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இவருடைய எழுத்துக்களையும் வாசித்ததில்லை...//

      அதனால் பரவாயில்லை. நானும் வாசித்ததில்லை.

      //இவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன்.//

      அது போதுமே. நான் இதற்கு முன்பு இவரைப்பற்றி கேள்விப்பட்டதும்கூட இல்லை. நினைக்கவே மிகவும் வெட்கமாகத்தான் உள்ளது.

      //அழகாக தொடர்ந்து 1 நாள் விட்டு 1 நாள் மதியம் 3 மணிக்கு என இவ்வளவு சிறப்பாக உங்களைத் தவிர யாரால் இப்படி நூல் விமர்சனத்தை புதுமையாகச் செய்ய முடியும்.... வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றி ஐயா//

      ஏதோ குரு அருள் + திரு அருளால் இனிதே இந்த என் புதுமையான தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தத் தொடரின் முதல் பகுதிக்கு, முதல் பின்னூட்டம் தாங்கள் தான் கொடுத்திருந்தீர்கள். பிறகு ஒரு 7-8 பகுதிகளுக்கு உங்களை ஆளையே காணும் என்றாலும்கூட, மொத்தப்பின்னூட்ட எண்ணிக்கைகள் (என் பதில்கள் உள்பட) ஆயிரத்தைத் தாண்டியிருக்கும் போலத் தெரிகிறது.

      எல்லாம் ’உமையாள் காயத்ரி’ என்ற அம்பாளின் பெயர் ராசி + முதல் பின்னூட்ட ராசி என எனக்குள் நினைத்துக்கொள்கிறேன். மகிழ்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGK

      நீக்கு
  20. ஜீவி சாரின் நூலே அரியதோர் பொக்கிஷம் என்றால், தாங்கள் அதனை வாசகர்களிடம் கொண்டு சேர்த்த விதம் அருமை! சாரின் புத்தகத்தை வாங்கியாச்!! ஆனால் நீங்கள் இவ்வளவு அழகாக, நேர்மையாக, ஆழ்ந்த ஆர்வத்துடன் நூல் விமர்சனம் மட்டுமின்றி, அதில் இருந்த தேன் துளிகளின் சுவையையும் கொடுத்து அசராத உழைப்புடன், மிகவும் வித்தியாசமாய் வழங்கியிருப்பதைப் பார்க்கும் போது நாங்கள் அந்தப் புத்தகத்தை விமர்சனம் செய்ய முடியுமா என்றே தோன்றுகின்றது. அதேசமயம் எங்களுக்கும் இது ஊக்கம் அளிப்பதாகவும், முன்னோடியாகவும் இருக்கும் என்பதும் மிகையல்ல..

    இத்தனைவாரங்கள் எத்தனை அறிமுகங்கள். இதுவரை கேட்டிராத, வாசித்திராத எழுத்தாளர்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதை விட ஜீவி சாரின் நூலினை வாங்கிட வேண்டும் என்றும் தோன்றிட வைத்த அருமையான விமர்சன நூல் என்றும் சொல்லலாம்...இதையே ஒரு புத்தகமாகப் போடலாம் போல.

    அது போன்று உங்கள் பின்னூட்டக் கருத்துகள்..சுவாரஸ்யமிக்கவை.

    மிக்க நன்றி சார்..

    வாழ்த்துகள் சார்! பாராட்டுகள்!

    எங்கள் இருவருடைய கருத்தும் இது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சாரின் புத்தகத்தை வாங்கியாச்!! //
      ரொம்ப நன்றிங்க.

      //நாங்கள் அந்தப் புத்தகத்தை விமர்சனம் செய்ய முடியுமா என்றே தோன்றுகின்றது. //

      யார் விட்டாங்க?.. அப்படிலாம் நழுவிட முடியாது.

      //அதேசமயம் எங்களுக்கும் இது ஊக்கம் அளிப்பதாகவும், முன்னோடியாகவும் இருக்கும் என்பதும் மிகையல்ல.. //

      இதான் கரெக்ட்.. விரைவில் புத்தகம் பற்றிய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். கோபு சார் அறிமுகம் என்பதினால் சின்னச் சின்ன குறிப்புகள் தான் கொடுத்திருக்கார். இன்னும் ஒட்டு மொத்த புத்தகம் பற்றி நிறைய எழுதலாம். 'ஊக்கம் அளிப்பதாகவும் முன்னோடியாகவும் இருக்கும்'ன்னு நீங்களே சொல்லிட்டீங்க. ஆளுக்குக் கொஞ்சம்ன்னு ரெண்டு பேரும் சேர்ந்தே எழுதுங்களேன்.

      நீக்கு
    2. Thulasidharan V Thillaiakathu
      April 22, 2016 at 10:07 AM

      //ஜீவி சாரின் நூலே அரியதோர் பொக்கிஷம் என்றால், தாங்கள் அதனை வாசகர்களிடம் கொண்டு சேர்த்த விதம் அருமை! சாரின் புத்தகத்தை வாங்கியாச்சு!!//

      ஆஹா, தங்களின் ‘அருமை’ என்ற கருத்து மிகவும் அருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. தாங்கள் இந்தப் புத்தகம் வாங்கியுள்ளது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

      //அதை விட ஜீவி சாரின் நூலினை வாங்கிட வேண்டும் என்றும் தோன்றிட வைத்த அருமையான விமர்சன நூல் என்றும் சொல்லலாம்...//

      ஆஹா, இதுவே என் இந்தத் தொடரின் வெற்றியாக நினைத்து நான் மகிழ்கிறேன்.

      //இதையே ஒரு புத்தகமாகப் போடலாம் போல.//

      புத்தகம் போடுவதைப்போன்றதோர் முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை என்ற முடிவுக்கு நான் வந்து பலநாட்கள் ஆகிவிட்டன.

      தங்களின் + தங்கள் தோழியின் அன்பான தொடர் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

      நீக்கு
  21. விளக்கு அலங்காரம் சூப்ரா இருக்குது...இந்தவாட்டி தாடிமீச வயசாளி படம்போட்டு பயங்காட்டல....... ஆனா
    ( ஒங்கட) போல ஒரு வளுக்க தல ஆளு படம் போட்டிருக்கீக......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru April 22, 2016 at 10:26 AM

      அன்புள்ள மின்னலு முருகு, வாங்கோ, வணக்கம்மா.

      //விளக்கு அலங்காரம் சூப்ரா இருக்குது...//

      மிக்க மகிழ்ச்சி.

      ”விளக்கேற்றி வைக்கிறேன் ....
      விடிய விடிய எரியட்டும் ....
      நடக்கப்போகும் நாட்களெல்லாம் .....
      நல்லதாக நடக்கட்டும் ....
      நல்லதாக நடக்கட்டும்” ன்னு

      ஒரு அருமையான சினிமாப் பாட்டு உள்ளது.

      வெகு விரைவில் நிக்காஹ் நடக்கவுள்ள உங்களுக்கு அது இப்போது வெகு பொருத்தம், முருகு.

      //இந்தவாட்டி தாடிமீச வயசாளி படம்போட்டு பயங்காட்டல....... //

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      //ஆனா (ஒங்கட போல) ஒரு வளுக்க தல ஆளு படம் போட்டிருக்கீக......//

      என்னை நேரில் பார்க்காமலேயே நீங்களாகவே ஒரு யூகம் பண்ணிக்கிட்டீங்களோ, முருகு !

      நானும் ஒரு காலத்தில் சினிமாவில் வரும் ஹீரோக்கள் போல ஏராளமான முடியுடன் இருந்தவன் மட்டுமே, முருகு. ஒரு முடி முளைக்க வேண்டிய இடத்தில் எனக்கு ஒன்பது முடி முளைத்து, சும்மா அடர்த்தியா ஜோரா இருக்கும். அதை நன்கு படியவைக்க வேண்டி விளக்கெண்ணெய் கூட தடவி, சீப்பால் சீவி இருக்கிறேன்.

      சும்மா கருகருன்னு கும்முன்னு, ’பாலும் பழமும்’ படத்தில் வரும் சிவாஜி போல தூக்கி ’பப்’ வைத்து வாரிக்கொண்டு ஆபீஸ் செல்வேன். அதில் கொஞ்சம் முடிகள் என் நெற்றியில் வந்து விழுந்து கொஞ்சும். எல்லோரும் என் ஹேர் ஸ்டைலைப் பார்த்து மயங்குவார்கள். என் ஹேர் ஸ்டைலால் ஒருசில குட்டிகள் மயங்கி, மயக்கம்போட்டு விழுந்ததும்கூட உண்டு. :)

      மிகவும் அடர்த்தியான முடிகளுடன் கூடிய, என் 21 வயது படத்தினை இதோ இந்தப்பதிவினில் மேலிருந்து கீழ் மூன்று மற்றும் நான்கு ஆகிய படங்களில் பாருங்கோ, முருகு.

      http://gopu1949.blogspot.in/2011/07/1.html

      20 முதல் 45 வயது வரை இதுபோலவே ..... ஒரே ஜாலியாகவே ..... இளமை ஊஞ்சலாடியபடி இருந்து வந்தேன். பிறகுதான் நான் என் வாழ்க்கையிலும், குடும்பப் பொறுப்புகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக என் முடிகள் கவலையில் உதிர ஆரம்பித்தன.

      அன்று முதல் இன்று வரை தலைக்கு பிறரைப்போல நான் ’டை’ அடிப்பதோ விக் வைப்பதோ கிடையாது.

      பிறகு காதோரம் கொஞ்சம் நரைக்க ஆரம்பித்தது. ’இளமையில் நடை அழகு, முதுமையில் நரை அழகு’ என்று ஏற்றுக்கொண்டு அது அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.

      ’டை’ அடிப்பவர்களுக்கு நிறைய பின்விளைவுகள் வருவது உண்டு. டாக்டர் இதைச் சுட்டிக்காட்டிய பிறகு ’டை’ அடிப்பதையே அவர்கள் நிறுத்தி விடுவார்கள்.

      அதன்பின் அவர்களின் முடிகளைப் பார்க்கவே சகிக்காது. தலைமுடி கலர் செம்பட்டையாகி விடும். பார்ப்பவர்கள் பயப்படுவார்கள். எனக்கு அந்தத்தொல்லையெல்லாம் ஏதும் இல்லை. :)

      இன்றும் என் தலையில் பரவலாக ஆங்காங்கே கணிசமான முடிகள் உள்ளன. பின் பக்கம் மட்டும் ’சந்திரோதயம் போல’ ரெளண்டாகக் காட்சியளிப்பதாக என் வீட்டுக்காரி அவ்வப்போது சொல்கிறாள். :)

      மொத்தத்தில் இதுபோல எதையாவது சொல்லி ’என் தலையைத் தடவுவதில்’ கெட்டிக்காரியாக இருக்கிறாள். :)

      பொதுவாக வழுக்கைத் தலையர்களை மட்டுமே பெண்கள் அதிகம் விரும்புவதாக எங்கோ படித்த ஞாபகமும் வருகிறது.

      முடிதானே ! முடியே போச்சு, என நான் இப்போது அதற்காகக் கவலைப்படுவதையே சுத்தமாக விட்டுவிட்டேன்.

      முருகு, தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான வேடிக்கையான வித்யாசமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..... மின்னலு.

      அன்புடன் குருஜி.

      நீக்கு
  22. இன்று என் உறவினரை வரவேற்க
    இரயில் நிலையம் போயிருந்தேன்

    அது மும்பை நாகர் கோவில் வண்டி

    அது மதுரை ஜங்சனில் நுழைகையில்
    "நான் எல்லா டிரையின் போல இல்லையாக்கும்
    நான் மும்பையில் இருந்து வருகிறேன்
    அதிக தூரத்தில் இருந்து மதுரையில் இன்று
    நுழைகிற வண்டி நான் தானாக்கும் " என
    பெருமித பெருமூச்சு விடுகிறார்ப்போலப்பட்டது

    அப்போது எனக்கு ஏனோ வை. கோ சாரின்
    இந்தத் தொடரின் ஞாபகம் வந்தது

    நிச்சயமாக இது தவம் போல மிகச்
    சிரத்தையுடன் செய்ய வேண்டிய பணி

    அற்புதமாகச் செய்த்துள்ள
    பதிவுலகப் பிதாமகர் வை, கோ சார்
    அவர்களுக்கு பதிவர்களின் சார்பில்
    மனமார்ந்த நன்றி

    மிகச் சிறப்பாக வை.கோ சார் படைக்க
    மிகச் சிறப்பாகச் சமைத்துக் கொடுத்த
    ஜி,வி சார் அவர்களுக்கும் பதிவர்கள்
    அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அது மதுரை ஜங்சனில் நுழைகையில்
      "நான் எல்லா டிரையின் போல இல்லையாக்கும்
      நான் மும்பையில் இருந்து வருகிறேன்
      அதிக தூரத்தில் இருந்து மதுரையில் இன்று
      நுழைகிற வண்டி நான் தானாக்கும் " என
      பெருமித பெருமூச்சு விடுகிறார்ப்போலப்பட்டது..//

      மனசின் நிறைய கற்பனைகள் வெகு அழகானவை. ஆனால் அவரவர் மனசின் அழகு தான் இந்த மாதிரி கற்பனைகளுக்கு ஊற்றாக இருக்கின்றன என்பதும் அந்த அழகு தான் மனசாகிறது என்றும் தோன்றுகிறது.

      நீக்கு
    2. Ramani S April 22, 2016 at 11:27 AM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //இன்று என் உறவினரை வரவேற்க இரயில் நிலையம் போயிருந்தேன். அது மும்பை நாகர் கோவில் வண்டி. அது மதுரை ஜங்சனில் நுழைகையில் "நான் எல்லா டிரையின் போல இல்லையாக்கும் நான் மும்பையில் இருந்து வருகிறேன். அதிக தூரத்தில் இருந்து மதுரையில் இன்று நுழைகிற வண்டி நான் தானாக்கும்" என பெருமித பெருமூச்சு விடுகிறார்ப்போலப்பட்டது

      அப்போது எனக்கு ஏனோ வை. கோ சாரின் இந்தத் தொடரின் ஞாபகம் வந்தது.//

      மற்றவர்களின் பதிவு போல இது இல்லை. இது சம்திங் ஸ்பெஷல் என்பதை, இவ்வாறு அந்த ரயில் வண்டியுடன் ஒப்பிட்டு வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். எதிலும் இதுபோன்ற அழகிய கற்பனைகள் உங்களைப்போன்ற தரம் வாய்ந்த கவிஞர்கள் / எழுத்தாளர்கள் சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடும். தங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள், சார். :)

      //நிச்சயமாக இது தவம் போல மிகச் சிரத்தையுடன் செய்ய வேண்டிய பணி. அற்புதமாகச் செய்துள்ள பதிவுலகப் பிதாமகர் வை.கோ சார் அவர்களுக்கு பதிவர்களின் சார்பில் மனமார்ந்த நன்றி//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். தன்யனானேன்.

      //மிகச் சிறப்பாக வை.கோ சார் படைக்க மிகச் சிறப்பாகச் சமைத்துக் கொடுத்த ஜி,வி சார் அவர்களுக்கும் பதிவர்கள் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றி.//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான வித்யாசமான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

      நீக்கு
  23. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விகடனில் வந்த தேஷாந்திரி, படித்து இருக்கிறேன். ஜீவி சார் குறிபிட்டவைகளை படிக்க வில்லை.

    எஸ்.ரா அவர்களின் கதையை வைத்தே நிறைவுரையை அழகாய் எழுதி விட்டீர்கள்.

    ஜீவிசாரின் பணி சிறப்பு, அதை அனைவரிடமும் கொண்டு சென்று புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை அதிகப்படுத்திய உங்களின் பணி மிக சிறப்பானது.

    சாரின் மறுமொழி, உங்களின் பின்னூடங்கள். எல்லாம் அருமையான செய்திகளை அள்ளி தந்தன. உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழின் சிறப்பான சிறுகதைகள் என்று எஸ்.ரா. நூறு சிறுகதைகளைத் தேர்வு செய்திருக்கிறார். அந்த நூறில் அவரது கிறுகதைகள் இரண்டும் அடக்கம். அந்த இரண்டை எடுத்துக் கொண்டு இந்த நூலில் விமர்சனம் செய்திருக்கிறேன். அதைத் தவிர அவர் பார்வையில் இல்லாத என் பார்வையில் சிறப்பாகப் பட்ட அவரது இன்னொரு சிறுகதையையும் சேர்த்துக் கொண்டு வியந்திருக்கிறென். எஸ்.ரா.வின் 'யாமம்' என்ற நாவலையும் விமரிசத்திருக்கிறேன்..

      இந்த விமரிசனங்களைப் பற்றியெல்லாம் சம்பந்தப்பட்ட வாழும் எழுத்தாளர்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது பொதுத் தளத்தில் இவற்றை அவர்கள் பகிர்ந்து கொணடால் தான் தெரியும். பகிர்ந்து கொள்ளாவிட்ட்டாலும் இந்த நூல் சம்பந்தப்பட்ட வாழும் எழுத்தாளர்களை நேரில் சந்தித்து அது பற்றித் தெரிந்து கொள்ளவும் இருக்கிறேன்.

      குழப்பமான சொற்றொடர்களையும், கோட்பாடுகளையும் தவிர்த்து எளீய தமிழில் எல்லோரும் வாசித்து அறிந்து கொள்கிற பாங்கில் விமரிசனப் பார்வையில் வெளிவந்த முதல் தமிழ் நூல் இதுவே என்பதால் இந்த ஆர்வம் எனக்கிருக்கிறது.

      நீக்கு
    2. கோமதி அரசு April 22, 2016 at 11:38 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விகடனில் வந்த தேஷாந்திரி, படித்து இருக்கிறேன். ஜீவி சார் குறிபிட்டவைகளை படிக்க வில்லை.

      எஸ்.ரா அவர்களின் கதையை வைத்தே நிறைவுரையை அழகாய் எழுதி விட்டீர்கள்.

      ஜீவிசாரின் பணி சிறப்பு, அதை அனைவரிடமும் கொண்டு சென்று புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை அதிகப்படுத்திய உங்களின் பணி மிக சிறப்பானது.

      சாரின் மறுமொழி, உங்களின் பின்னூடங்கள். எல்லாம் அருமையான செய்திகளை அள்ளி தந்தன. உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். நன்றிகள்.//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  24. மிக அருமையான பணியைச் சிறப்பாகச் செய்துவிட்டீர்கள் விஜிகே சார். ஜிவி சாரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.

    ஸ்ரீராம், செந்தில், நடன சபாபதி , கலையரசி, கீதா , துளசி சகோ ஆகியோரின் பதில்களையும் ரசித்துப் படித்தேன். நடு நடுவே உங்களின் மற்றும் ஜிவி சாரின் பதில் பின்னூட்டங்களையும்.

    மொத்தத்தில் நானும் தேனில் விழுந்த ஈயானேன்.

    அன்புத் தங்கை சித்ராவுக்கு சித்ரா பௌர்ணமியில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :)

    தொடர்ந்து எழுதுங்கள் சார். தொடர்கிறோம். ( நேரம் கிடைக்கும்போது கட்டாயம் ) :) :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan April 22, 2016 at 7:48 PM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //மிக அருமையான பணியைச் சிறப்பாகச் செய்துவிட்டீர்கள் விஜிகே சார்.//

      மிகவும் சந்தோஷம் மேடம்.

      //ஜிவி சாரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //ஸ்ரீராம், செந்தில், நடன சபாபதி , கலையரசி, கீதா, துளசி சகோ ஆகியோரின் பதில்களையும் ரசித்துப் படித்தேன். நடு நடுவே உங்களின் மற்றும் ஜிவி சாரின் பதில் பின்னூட்டங்களையும்.//

      அவையெல்லாம் எப்போதுமே பதிவைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடியவைகளாகும். :)

      //மொத்தத்தில் நானும் தேனில் விழுந்த ஈயானேன்.//

      அடாடா, தாங்களே தேன் ஆச்சே. தேனே ஈயானதுதான் கேட்க மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

      //அன்புத் தங்கை சித்ராவுக்கு சித்ரா பௌர்ணமியில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :) //

      சித்ரா சார்பில் தங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள், மேடம்.

      //தொடர்ந்து எழுதுங்கள் சார். தொடர்கிறோம். ( நேரம் கிடைக்கும்போது கட்டாயம் ) :) :) :) //

      முயற்சிக்கிறேன், மேடம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  25. சித்திரா பெளர்ணமி சிறப்புகள் அருமை.
    சித்திராவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு April 22, 2016 at 8:03 PM

      வாங்கோ மேடம் .....

      //சித்திரா பெளர்ணமி சிறப்புகள் அருமை.//

      சந்தோஷம் மேடம்.

      //சித்ராவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
      வாழ்க வளமுடன்.//

      தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு நம் சித்ரா சார்பில் என் அன்பு நன்றிகள், மேடம். - VGK

      நீக்கு
  26. தமிழ்ச் சிறுகதையின் தலையெழுத்து என்று ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களின் எழுத்தில் எஸ்.ராவின் எழுத்தும் அடக்கம் என்பது என் எண்ணம். ஜீவிக்குப் பிடித்திருந்தால் சரிதான், என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை April 23, 2016 at 10:02 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //தமிழ்ச் சிறுகதையின் தலையெழுத்து என்று ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களின் எழுத்தில் எஸ்.ராவின் எழுத்தும் அடக்கம் என்பது என் எண்ணம்.//

      பிறரின் எழுத்துகள் பற்றிய ஒவ்வொருவர் எண்ணமும் (டேஸ்ட்) ஒவ்வொரு மாதிரியாகத்தான் இருக்கும். அதுபோல தங்களின் எண்ணத்தைத் தயங்காமல் சொல்லியுள்ளது பாராட்டத்தக்கதுதான்.

      //ஜீவிக்குப் பிடித்திருந்தால் சரிதான், என்ன சொல்றீங்க?//

      இந்தத்தங்களின் கேள்விக்கு நம் ஜீவி சாரால் மட்டுமே பொருத்தமாக ஏதாவது பதில் அளிக்க முடியும் என்று சொல்கிறேன். :)

      தங்களின் அன்பான வருகைக்கும் ஆணித்தரமான சில கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

      நீக்கு
    2. அடடா! அப்பாதுரை சாரா?.. மோகன்ஜியின் ஜெமோ பற்றிய பதிவில் 'எங்கே இப்போலாம் அப்பாதுரை சாரைக் காணோம்' என்று நாங்கள் ஒருவொருக்கொருவர் விசாரித்துக் கொண்டிருந்தால் (பல்கொட்டி பெய்க்கு முன்னாடி) நீங்கள் இங்கே தலைகாட்டி இருக்கிறீர்களா?.. உங்களோட பின்னூட்டம்னா ஒளைப்பட்டாசு மாதிரி. ஒரு வரியில் கொளுத்திப் போட்டு நீண்ட பதிலை வரவழைச்சிடுவீங்க. தப்பிச்சிக்கவே முடியாது. அதனாலே இப்போ உங்களோட ஒவ்வொரு பின்னூட்டமா பார்ப்போம்.

      //ஜீவிக்குப் பிடித்திருந்தால் சரி தான். //

      நவீன எழுத்தாளர்களில் எஸ்.ரா. தவிர்க்கவே முடியாதவர். அவரைத் தவிரிக்க வேண்டிய அவசியமும் நமக்கு ஏதுமில்லை.

      ஜீவிக்குப் பிடிக்கறதோ இல்லையோ, அது முக்கியமில்லை.. எஸ்.ரா.வைப் பிடிச்சவங்க இருக்கும் பொழுது (பின்னாடியே திரு. தமிழ் இளங்கோ பாருங்க) அவரில் பிடிச்சது நமக்கு என்ன இருக்குன்னு பார்க்கறது தான் இப்படியான ஒரு நூலை ஆக்குபவனின், விமரிசகரின் வேலையாகிப் போகிறது.

      நீங்கள் இந்த நூலை வாசிக்க வேண்டும். எஸ்.ரா. பற்றிய எனது விமரிசனத்தை வேண்டுமானால் நாம் விவாதிக்கலாம். சரியா?..

      இந்த புத்தகத்தை வாசிக்கும் எவரும் அப்படியான் ஒரு விவாதித்தில் ஈடுபட்டால் இந்த நூல் இன்னும் சிறப்பு பெறும்.

      (உ.ம்) கீதமஞ்சரியும், ஊஞ்சல் கலையரசி அவர்களும் அம்பையின் எழுத்து பற்றி இந்தத் தொடர் பதிவிலேயே லேசாகத் தொட்டுச் சென்றிருக்கிறார்கள், பாருங்கள்.

      நீக்கு
    3. புத்தகம் கண்டிப்பாக வாசிப்பேன். எஸ்ராவின் எழுத்து தமிழின் தலைஎழுத்து. தவிர்க்க முடியாத எழுத்தா தெரியாது.. எதோ ஒரு போலித்தனம் இழையூடுவதை கவனிக்கத் தவறியதேயில்லை.

      நீக்கு
  27. உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை April 23, 2016 at 10:03 PM

      //உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. என் உழைப்புக்கான தங்களின் இந்தப் பாராட்டினால் தன்யனானேன். - VGK

      நீக்கு
  28. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம். வெளியூர் பயணம், வெயில், அசதி காரணமாக இந்த பதிவினை அன்றைக்கே படிக்க இயலவில்லை.

    ஒரு நூல் விமர்சனத்திற்கு 20 தொடர் பதிவுகள் எழுதிய ஒரே பதிவர் நீங்களாகத்தான் இருக்க முடியும். உங்கள் சாதனைகளில் இதுவும் ஒன்று.

    // தேன் போன்ற இந்த ஜீவி சாரின் நூலாகிய தேன் கிண்ணத்தில், இதுவரை ஓர் ஈ போல மூழ்கிப்போயிருந்த நான், தேனின் தீண்டலாலும், தேனின் சுவையாலும், அது எனக்களித்த சுகபோகங்களாலும், மயங்கிக்கிடந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும் //

    உண்மைதான். இதே மெய்தீண்டல் போன்ற, புத்தக வாசிப்பு சுகத்தை , ஜீவி சாரின் இந்த நூலில் நானும் உணர்ந்தேன். இப்போது அவரது வலைத்தளத்தில் அவரது பதிவுகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வருகிறேன். இவருடைய மற்றைய நூல்களையும் வாசிக்க வேண்டும்.

    எனக்குப் பிடித்த இன்றைய எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும் ஒருவர். இவருடைய பேட்டிகள், கட்டுரைகள், நூல்கள் என்று நிறையவே வாசித்து இருக்கிறேன். சிறந்த வலைப்பதிவரும் ஆவார். புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர் மாநாட்டில் இவருடைய அருமையான பேச்சை நேரில் கேட்டு ரசித்து இருக்கிறேன். இவரைப் பற்றிய ஜீவியின் பார்வையை நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள்.

    எப்போதும் போல இந்த பதிவின் நிறைவில் இலவச இணைப்பாக சித்ரா பௌர்ணமி, சித்ரா பிறந்தநாள் வாழ்த்து என்று கூடுதல் செய்திகள்.

    உங்கள் எழுத்துலக பயணம் தொடரட்டும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ April 23, 2016 at 10:08 PM

      //அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்.//

      வாங்கோ சார், வணக்கம்.

      //வெளியூர் பயணம், வெயில், அசதி காரணமாக இந்த பதிவினை அன்றைக்கே படிக்க இயலவில்லை.//

      தங்களின் லேடஸ்ட் பதிவின் மூலம் இதனை நானும் சற்றே தாமதமாகப் புரிந்துகொண்டேன் சார்.

      //ஒரு நூல் விமர்சனத்திற்கு 20 தொடர் பதிவுகள் எழுதிய ஒரே பதிவர் நீங்களாகத்தான் இருக்க முடியும். உங்கள் சாதனைகளில் இதுவும் ஒன்று.//

      மிகவும் போர் அடித்து விட்டேனோ என்னவோ ! அதையும் ஓர் சாதனை எனச் சொல்லியுள்ளீர்கள், என்மீது கொண்ட தனி அன்பினால். எனினும் மிக்க மகிழ்ச்சி, சார். :)

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> திரு. தமிழ் இளங்கோ அவர்கள் (2)

      **தேன் போன்ற இந்த ஜீவி சாரின் நூலாகிய தேன் கிண்ணத்தில், இதுவரை ஓர் ஈ போல மூழ்கிப்போயிருந்த நான், தேனின் தீண்டலாலும், தேனின் சுவையாலும், அது எனக்களித்த சுகபோகங்களாலும், மயங்கிக்கிடந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்**

      //உண்மைதான். இதே மெய்தீண்டல் போன்ற, புத்தக வாசிப்பு சுகத்தை , ஜீவி சாரின் இந்த நூலில் நானும் உணர்ந்தேன். இப்போது அவரது வலைத்தளத்தில் அவரது பதிவுகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வருகிறேன். இவருடைய மற்றைய நூல்களையும் வாசிக்க வேண்டும்.//

      மிக்க மகிழ்ச்சி, சந்தோஷம். வாசிங்கோ.

      >>>>>

      நீக்கு
    3. VGK >>>>> திரு. தமிழ் இளங்கோ அவர்கள் (3)

      //எனக்குப் பிடித்த இன்றைய எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும் ஒருவர். இவருடைய பேட்டிகள், கட்டுரைகள், நூல்கள் என்று நிறையவே வாசித்து இருக்கிறேன். சிறந்த வலைப்பதிவரும் ஆவார். புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர் மாநாட்டில் இவருடைய அருமையான பேச்சை நேரில் கேட்டு ரசித்து இருக்கிறேன். இவரைப் பற்றிய ஜீவியின் பார்வையை நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள்.//

      ஆஹா, தங்கள் பாணியில் அனைத்தையும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

      //எப்போதும் போல இந்த பதிவின் நிறைவில் இலவச இணைப்பாக சித்ரா பௌர்ணமி, சித்ரா பிறந்தநாள் வாழ்த்து என்று கூடுதல் செய்திகள்.//

      ஆஹா, நிறைய இலவச இணைப்புகளா !!!!! அப்படிச் சொல்லக்கூடாதாமே.

      அதனால் விலையில்லா இணைப்புகள் என வைத்துக்கொள்வோம், சார்.

      //உங்கள் எழுத்துலக பயணம் தொடரட்டும்.//

      பார்ப்போம், சார்.

      தங்களின் தொடர் வருகைக்கும், தொய்வில்லாக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

      நீக்கு
  29. சமீப ஒரு நாள் சென்னைப் பயணத்தில் உஸ்மான் ரோடில் அந்தக் கடை மறந்து விட்டதே.. அவ்வளவு தூரம் போய்.. மற்ற கடைகளில் கேட்டேன்.. இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. ஹிக்கின்பாதம்சுக்குப் போகச் சொன்னார்கள்.. நீங்களே போங்கள் என்று சொல்லிவிட்டேன்.. என்ன வெயில் என்ன வெயில்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை April 23, 2016 at 10:26 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //சமீப ஒரு நாள் சென்னைப் பயணத்தில் உஸ்மான் ரோடில் அந்தக் கடை மறந்து விட்டதே.. அவ்வளவு தூரம் போய்.. மற்ற கடைகளில் கேட்டேன்.. இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை.//

      ஒருவேளை, மலிவு விலை ரேஷன் பொருட்கள் போல மிகவும் டிமாண்டான ஐட்டமாக இருக்குமோ, என்னவோ?

      //ஹிக்கின்பாதம்சுக்குப் போகச் சொன்னார்கள்.. நீங்களே போங்கள் என்று சொல்லிவிட்டேன்..//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... ’இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ... ஞானத்தங்கமே ... இவர் ஏதும் அறியாரடி ... ஞானத்தங்கமே’ என்றோர் திரைப்படப்பாடல் நினைவுக்கு வந்தது. எனக்குச் சிரிப்பும் வந்தது.

      //என்ன வெயில் என்ன வெயில்..!//

      சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்கவுமே வெயில் கடுமையாகக் கொளுத்தி வருகிறது.

      ஒருநாள் சென்னைப்பயணத்தில் இதற்காகப்போய் இவ்வளவு தூரம் வெயிலில் அலைந்தும், தங்களின் (வாசிப்பு) தாகத்திற்கும் மோகத்திற்கும் அது கிடைக்காததில் எனக்கு ஒரே வருத்தமாக உள்ளது.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. இதுக்காக போகவில்லை.. தி நகர் போக வேண்டியிருந்தது.. சட்டென்று ஜீவியின் புத்தக ஞாபகம் வந்தது.. repetition creates retention என்பார்கள்.. அதைத்தான் உங்கள் பதிவுகள் வெற்றிகரமாகச் செய்திருக்கின்றன. ஏதாவது புஸ்தகம் வாங்கலாம்னா இப்ப ஜீவி சாரோட புஸ்தகம் ஞாபகம் வருது.. :-).

      நீக்கு
    3. அடுத்த சென்னை ட்ரிப்பில் ஜீவியோட ஆடோகிரேபுடன் வாங்கிட வேண்டியது தான்.

      நீக்கு
    4. அட! சென்னை வந்திருந்தீங்களா?.. ஒரு போன் போட்டிருக்கக் கூடாது?.. ஸ்ரீராமையாவது தொடர்பு கொண்டிருந்திருக்கலாம். இந்தியாவில் தான் இருக்கிறீர்கள் என்றால்,எப்படியும் புத்தகத்தை உங்களிடம் சேர்ப்பித்து விடலாம்.

      இந்தப் புஸ்தகத்திற்கு என்று இல்லை, சென்னைக்கு அதுவும் தி.நகர் வந்தால் நியூ புக்ஸ் லேண்ட்ஸை மறந்து விடாதிர்கள். நமக்கு வேண்டிய சிறு பத்திரிகைகளிலிருந்து எல்லாம் கிடைக்கிறது அங்கு.

      நீக்கு
    5. எனது அந்த ஆட்டோகிராப் பதிவுகளை வேறு ஞாபகப் படுத்திவிட்டீர்கள். அந்தத் தலைப்பில் எழுத வேண்டிய நிறைய ஆட்டோகிராப்கள் கைவசம் இருக்கின்றன. இன்றைய சூழல் சரியில்லை என்பதினால் விஷயத்தை ஊறப் போட்டிருக்கிறேன். பிறகு பார்க்கலாம். சரியா?..

      அடுத்த சென்னை ட்ரிப்போ, எனது அமெரிக்கப் பயணமோ எது முதலில் சந்திப்பு வாய்ப்பு ஏற்படுத்துகிறதோ, அப்போ பாக்கலாம்.
      தொடர் கருத்துப் பகிர்தல்கள் நிறைவாக இருக்கின்றன. நன்றி, அப்பாஜி.

      நீக்கு
    6. ஒரே ஒரு நாள் சென்னை வந்தேன் ஜீவி சார்.. பாண்டி பஜாரிலிருந்து ரங்கநாதன் தெருவுக்கு நடந்து வருகையில் புத்தக நினைவு வந்தது.. ந்யூ கடை மறந்துவிட்டது -ஸ்ரீராம் ஒரு முறை எனக்கு அறிமுகம் செய்த கடை.

      ஆமாம் யார் யாரையோ எல்லாம் (க்கும்) பற்றி எழுதியிருக்கிறீர்கள்.. சுப்ரமணிய ராஜூ பற்றி ஏதாவது எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்..

      நீக்கு
    7. ஹிஹி.. நான் சென்னை வரும்போது நீங்க அட்லேண்டா வருவது வாடிக்கையாகிறதோ?

      நீக்கு
  30. Position as on 23/24.04.2016 - MIDNIGHT 12.10 Hrs. IST

    இந்த என் தொடரின் இருபது பகுதிகளுக்கும் சேர்த்து கிடைத்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை: 1109 [இதில் பின்னூட்டமிட்டுள்ளவர்களுக்கு நான் அளித்துள்ள பதில் மறுமொழிகளின் எண்ணிக்கைகளும் அடக்கமாகும்.]

    74 + 78 + 63 + 45 + 51 = 311 (01-05)
    56 + 42 + 39 + 49 + 53 = 239 (06-10)
    42 + 63 + 41 + 53 + 57 = 256 (11-15)
    56 + 72 + 51 + 47 + 77 = 303 (16-20)
    =====================================
    ஆக மொத்தம் = 1109 (01-20)
    =====================================

    >>>>>

    பதிலளிநீக்கு
  31. Position as on 23/24.04.2016 - MIDNIGHT 12.10 Hrs. IST

    இதுவரை இந்தத்தொடரின் ஏதேனும் ஒரு பகுதிக்காவது வருகை தந்து பின்னூட்டமிட்டுள்ள ஆண்கள்: 29 + பெண்கள்: 20 ஆக மொத்தம்: 49 நபர்களாகும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  32. Position as on 23/24.04.2016 - MIDNIGHT 12.10 Hrs. IST

    இந்த என் தொடருக்கு, இதுவரை பின்னூட்டமிட்டுள்ளவர்கள் பற்றிய பட்டியல் இதோ. அவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்:

    திருவாளர்கள்:
    ===============

    01. Thulasidharan V Thillaiakathu & Co., அவர்கள் 20/20
    02. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள் 20/20
    03. Ramani S அவர்கள் 20/20
    04. G.M Balasubramaniam அவர்கள் 05/20
    05. முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் 10/20
    06. வே.நடனசபாபதி அவர்கள் 20/20
    07. ஸ்ரத்தா, ஸபுரி... அவர்கள் 20/20
    08. ஆல் இஸ் வெல்....... அவர்கள் 20/20
    09. கே. பி. ஜனா... அவர்கள் 01/20
    10. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள் 06/20
    11. Jeevalingam Yarlpavanan Kasirajalingam அவர்கள் 01/20
    12. Chellappa Yagyaswamy அவர்கள் 02/20
    13. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் 04/20
    14. துரை செல்வராஜூ அவர்கள் 02/20
    15. மோகன்ஜி அவர்கள் 01/20
    16. srini vasan அவர்கள் 20/20
    17. தனிமரம் நேசன் அவர்கள் 01/20
    18. ‘தளிர்’ சுரேஷ் அவர்கள் 01/20
    19. அப்பாதுரை அவர்கள் 20/20
    20. ஜீவி அவர்கள் 17/20
    21. தி.தமிழ் இளங்கோ அவர்கள் 20/20
    22. S.P.SENTHIL KUMAR அவர்கள் 12/20
    23. Ajai Sunilkar Joseph அவர்கள் 14/20
    24. Vimalan Perali அவர்கள் 01/20
    25. வெங்கட் நாகராஜ் அவர்கள் 02/20
    26. பரிவை சே.குமார் அவர்கள் 03/20
    27. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்கள் 01/20
    28. subramanian madhavan அவர்கள் 01/20
    29. KILLERGEE Devakottai அவர்கள் 06/20

    செல்விகள்:
    ============

    30. சிப்பிக்குள் முத்து - முன்னாக்குட்டி 20/20
    31. ப்ராப்தம் - சாரூஊஊ க்குட்டி 20/20
    32. வசந்தம் - மின்னலு முருகுக்குட்டி 20/20

    [ஆஹா, இந்தக் குட்டிகள் மூவருமே செண்டம்]

    திருமதிகள்:
    ===========

    33. R.Umayal Gayathri அவர்கள் 12/20
    34. ராமலக்ஷ்மி அவர்கள் 01/20
    35. Thenammai Lakshmanan அவர்கள் 07/20
    36. Geetha M (புதுக்கோட்டை) அவர்கள் 02/20
    37. viji விஜயலக்ஷ்மி அவர்கள் 01/20
    38. ஞா. கலையரசி அவர்கள் 20/20
    39. கோமதி அரசு அவர்கள் 20/20
    40. மனோ சாமிநாதன் அவர்கள் 03/20
    41. Geetha Sambasivam அவர்கள் 15/20
    42. கீத மஞ்சரி - கீதா மதிவாணன் அவர்கள் 20/20
    43. Shakthiprabha அவர்கள் 01/20
    44. ஆச்சி ஆச்சி - பரமேஸ்வரி அவர்கள் 01/20
    45. பூந்தளிர் அவர்கள் 01/20
    46. SARATHA. J அவர்கள் 01/20
    47. கீதா (of thillaiakathu chronicles) அவர்கள் 20/20
    48. Chandragowry Sivapalan அவர்கள் 01/20
    49. Chitra அவர்கள் 01/20

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதென்ன.. பரீட்சை மார்க் மாதிரி..

      நீக்கு
    2. //அப்பாதுரை April 24, 2016 at 1:48 AM
      இதென்ன.. பரீட்சை மார்க் மாதிரி..//

      அவை இந்த என் ஜீவி தொடருக்கு வருகை தந்துள்ளோர் பற்றிய சில புள்ளி விபரங்கள்.

      01/20 means மொத்தமுள்ள 20 பகுதிகளில் ஏதோ ஒரே ஒரு பகுதிக்கு மட்டுமாவது வருகை தந்துள்ளார் என அர்த்தம்.

      07/20 means மொத்தமுள்ள 20 பகுதிகளில், ஏதோ ஏழு பகுதிகளுக்கு மட்டுமாவது வருகை தந்துள்ளார், என அர்த்தம். [ இதற்கு ஓர் நல்ல உதாரணம்: Sl. No. 35 நம் ஹனி மேடம் - Just Pass Mark 35% வாங்கித் தப்பியுள்ளவர்கள் :) ]

      10/20 means மொத்தமுள்ள 20 பகுதிகளில், ஏதோ பத்து பகுதிகளுக்கு மட்டுமாவது வருகை தந்துள்ளார், என அர்த்தம்.

      பரீட்சை மார்க் மாதிரியே தான். ஒரு பகுதிக்கு வருகை தந்திருந்தால் ஐந்து மார்க் வீதம் அளிக்கப்பட்டுள்ளது. (ஒரே பகுதியில் எவ்வளவு முறை திரும்பத்திரும்ப வருகை தந்திருந்தாலும், ஐந்து மார்க் மட்டுமே என்பதையும், இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்)

      இதிலும், இந்த மொத்த வருகையாளரான 49 பேர்களில், 35% மார்க்காவது வாங்கி, பாஸ் செய்துள்ளவர்கள் 22 பேர்கள் மட்டுமே.

      இந்த பாஸான 22 பேர்களில் தங்களைப்போன்ற ஒரு 15 பேர்கள் 100க்கு 100 செண்டம் வாங்கியுள்ளவர்கள் ஆகும். அவர்களுக்கு மட்டும் ஓர் சிறப்பிடம் கொடுத்து கீழே தனியாகக் காட்டப்பட்டுள்ளது.

      மொத்த வருகையாளர்களான 49 பேர்களில் படிக்குப் பாதிகூட பாஸ் மார்க் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. :)

      இப்போது ஓரளவு உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

      அன்புடன் VGK

      நீக்கு
    3. பரிட்சைலேந்து எனக்கு விலக்கு கிடையாதா?.. மத்தவங்க எப்படி பரிட்சை எழுதறாங்கங்கறதைப் பொறுத்து அப்பப்போ வருவேன்; போவேன். அதனாலே சும்மா தமாஷூக்குச் சொன்னேன். அதுக்காக நீங்க மறுபடியும் மார்க்ல்லாம் ரீவேல்யூ பண்ண வேணாம்!

      நீக்கு
    4. சுப்ரமணிய ராஜூ மறந்ததுக்காக ரெண்டு மார்க் கம்மி பண்ணிடுங்க வைகோ சார்.

      நீக்கு
  33. Position as on 23/24.04.2016 - MIDNIGHT 12.10 Hrs. IST

    இந்த என் தொடரின் அனைத்து இருபது பதிவுகளுக்கும் தொடர்ச்சியாக அன்புடன் வருகை தந்து கருத்துக்கள் அளித்துள்ள கீழ்க்கண்ட 15 பதிவர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    20 Out of 20 Cases:
    ===================

    திருமதிகள்:
    ============

    01) ஞா. கலையரசி அவர்கள்
    02) கோமதி அரசு அவர்கள்
    03) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்

    செல்விகள்:
    ============

    04) ’சிப்பிக்குள் முத்து’-முன்னா மெஹ்ருன்னிஸா அவர்கள்
    05) வசந்தம் - 'மின்னலு முருகு' மெஹ்ருன்னிஸா அவர்கள்
    06) ’ப்ராப்தம்’ - சாரூஊஊஊ அவர்கள்

    திருவாளர்கள்:
    ==============

    07) துளசிதரன் தில்லையக்காது & தோழி கீதா அவர்கள்
    08) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்
    09) S. ரமணி அவர்கள்
    10) வே. நடன சபாபதி அவர்கள்
    11) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள்
    12) ஆல் இஸ் வெல் அவர்கள்
    13) ஸ்ரீனிவாஸன் அவர்கள்
    14) தி. தமிழ் இளங்கோ அவர்கள்
    15) அப்பாதுரை அவர்கள்

    என்றும் அன்புடன் தங்கள் VGK

    பதிலளிநீக்கு
  34. இந்த நிறைவு பதிவுக்காவது எப்படியும் வந்து கொஞ்சூண்டு கருத்து சொல்லணும்னு நினைத்தேன்.....என் தமிழ்...."அறிவு"...பத்தி கிருஷ்ஜி...க்கு நல்லாவே தெரியும்........ கருத்து சொல்லாட்டி கூட எல்லா... பதிவுகள்.... பின்னூட்டங்கள் படிச்சு ரசிககத்தான் செய்தேன்......... பொதுவா நார்த்ல... ஹிந்தி...மராட்டில... டெய்லி நாம பயன் படுத்தும் பொருட்களின் பெயர்ககள் தமிழில் தப்பான அர்த்தம் கொடுக்கும் வார்த்தைகளாகவே இருக்கின்றன...
    உதாரணத்துக்கு கதவு தாழ்ப்பாள்..... ஸல்வார் கூட போடும் துப்பட்டா.... இப்படி இன்னும் நிறைய சொல்லிகிட்டே போகலாம்..... .. இதன் மராட்டி பெயர்ளைச்சொல்லி.... கிருஷ்ஜி கிட்ட அர்த்தம் கேட்கும்போது....அவங்களுக்கே அடக்கமுடியாம ( முருகு... ளாஷையில்...)... சிரிப்பாணி பொத்துகிடும்..)))))) அவங்க சொல்லும் தமிழ் வார்த்தை கேட்டு எனக்கும்.... சிரிப்பாணி... பொத்துகிடும்))))) அதுமட்டுமில்ல போன ரெண்டு வருடமாக கோவையில் தங்கவேண்டிய சூழ்நிலை வந்தது.. என் தமிழ் அறிவால் கடைக்காரர்களிடமெல்லாம்
    1000---- வாட்ஸ்... பல்ப்பு...... வாங்கி இருக்கேன்...))))))) இதுபோல தமிழ்ல தப்பு தாளம் போடும் நான் எப்ளடி...இந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுக் முடியும்.. பின்னூட்டத்தில்.... சிலபேருக்குத்தான் மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் பற்றி தெரிந்திருக்கிறது.... பலருக்கும் பலரையும் தெரிந்திருஅகவே இல்லை..... ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லி இருப்பதைப்போல சமகால எழுத்தாளர்களை அறிமுகள்ளடுத்தும் ளதிவு போடலாம்..அதற்கு இன்னும் வரவேற்பு அதிகமாகவே இருக்கும்...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் April 24, 2016 at 7:22 AM

      வாங்கோ ‘பூந்தளிர்’, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? நாம் பார்த்துப் பேசி பல நாட்கள் ஆச்சு. :( ... உங்களை நான் நினைக்காத நாள் இல்லை. :)

      //இந்த நிறைவு பதிவுக்காவது எப்படியும் வந்து கொஞ்சூண்டு கருத்து சொல்லணும்னு நினைத்தேன்.....//

      சந்தோஷம்மா. கொஞ்சூண்டா? நிறையவே விரிவாகத்தான் என்னென்னவோ ஏராளமாகவும் தாராளமாகவும் சொல்லியிருக்கீங்க.

      //என் தமிழ்...."அறிவு"...பத்தி கிருஷ்ஜி...க்கு நல்லாவே தெரியும்........//

      பள்ளியில் தமிழ் படிக்க வாய்ப்பே கிடைக்காத நீங்க இவ்வளவு வரிகளில் தமிழில் அழகாக எழுதியிருப்பது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்ம்மா.

      //கருத்து சொல்லாட்டி கூட எல்லா... பதிவுகள்.... பின்னூட்டங்கள் படிச்சு ரசிககத்தான் செய்தேன்.........//

      அப்படியா? ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா.

      இந்தத் தங்களின் அன்பான அபூர்வமான திடீர் வருகையைப் பார்த்ததும், பழசு எல்லாம் நினைவுக்கு வந்து சிரிப்பாணி பொத்துக்கிச்சு. மிக்க நன்றிம்மா.

      {அது என்ன ஆரம்பத்தில் ஓர் ’கிருஷ்ஜி’ ? ஓஹோ, கோபிகைகள் போன்ற பிரேம பக்தியுடன் கோபாலகிருஷ்ணன் ஆகிய என்னை செல்லமாக ‘கிருஷ்ஜி’ என அழைத்துள்ளீர்களோ?

      ஓக்கே....ஓக்கே !! :))))) }

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  35. மூத்த தலைமுறை இந்த தலைமுறை போல ஜனரஞ்சக எழுத்தாளர்கள் சிலரும் இருக்காங்க......... நான் சொல்ல வருவது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்............... சமீபத்தில் ஒரு செய்தி படிக் கிடைத்தது.... கோவைக்கார பிரபல க்ரைம் கதை எழுத்தாளர்.... திரு ராஜேஷ் குமார்... அவர்கள்..2000----
    க்ரைம் நாவல்கள் எழுதி கின்னஸ் புக்ல இடம் பிடிச்சிருக்காங்க.. பாக்கெட்நாவல் 2, 3... நானும் படிச்சிருக்கேன்... மிஞ்சி மிஞ்சி போனால்கூட அரை மணி நேரத்துக்குள்ள ளடிச்சு முடிச்சுடலாம்... அவ்வளவு விறுவிறுப்பு வெரைட்டி இருக்கும்
    படிக்கும் ஆர்வம் இருப்பவங்க..... க்ரைம், குடும்ப,சரித்திர,கதைகளா என்றெல்லாம் பார்க்காமல் சுவாரசியமாக இருந்தா எந்த விஷயத்தையும் ளடிக்க ரெடியாதான் இருக்காங்...கோவையில்... பக்கத்து ரூமில் இருப்பவங்க தமிழ் மாதாந்திர நாவல் வாங்குவாங்க.. எனக்கும் படிச்சு பாருன்னு தருவாங்க.. கனமான புகெல்லாம் நமக்கு சரிளடாதே... ஸுஜாதாவோட.. ஜீனோ.... ளடிச்சிருக்கேன....(கிருஷ்ஜி.... உங்களுக்கு... நாய் னா அலர்ஜி இல்லியா????).....
    முதல்ல அவங்க பெண் எழுத்தாளர்னு நெனச்சேன்... அப்புறமாதான்... மனைவி பேர புனைப்பெயரா வச்சுகிட்டு எழுதும் ஆண் எழுத்தாளர்னு தெரிஞ்சது....... அதுபோல பாலகுமாரன்ஸார் புக் ஒன்னு படிக்க கிடைத்தது... அவரது சுயசரிதை போல அவரைப்பற்றி மிகவும் வெளிப்படையாக எழுதி இருந்தாங்க... முதலில் பார்த்த சாதாரண வேலை...படிப்படியாக முன்னேறியது சினிமாவுக்கு கதைவசனம் எழுதியது அங்கு கிடைத்த அனுபவங்கள்....... அவரின் பர்ஸனல் பற்றியும் வெளிப்படையாக எழுதி இருந்தார்... யோகி... ராம் சூரத் குமாரின் பக்தரானது, பற்றி விரிவாக சொல்லி இருந்தார்.. பாலகுமாரன் ஸாருக்கு இரண்டு மனைவிகள் நாலு குழந்தைகள் வீட்டில் நடந்த விசேஷங்கள் என்று எல்லாமே சொல்லி இருந்தார்...
    (கிருஷ்ஜி..... குறை நீங்கிச்சா??????? திருப்தியா?????? சந்தோஷமா???????)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் April 24, 2016 at 7:48 AM

      வாங்கோ ‘பூந்தளிர்’ ... தங்களின் மீண்டும் வருகையும் மீண்டும் தமிழில் மிக நீண்ண்ண்ண்ண்ட பின்னூட்டமும் என்னை அசர வைக்கிறதும்மா.

      அந்த எழுத்தாளர்கள் பற்றிய கதையெல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும். அத்தை விடுங்கோ. :)

      கடைசியில் 2-3 வரிகளில் என்னவோ சொல்லியிருக்கேளே, நேராக அதற்கு வருவோம்.

      //பாலகுமாரன் ஸாருக்கு இரண்டு மனைவிகள் நாலு குழந்தைகள் வீட்டில் நடந்த விசேஷங்கள் என்று எல்லாமே சொல்லி இருந்தார்...//

      எனக்கு இதுவரை ஒரேயொரு மனைவியும், மூன்று பிள்ளைகளும் மட்டுமே உள்ளனர். :(

      (கிருஷ்ஜி..... குறை நீங்கிச்சா??????? திருப்தியா?????? சந்தோஷமா???????)//

      அது எப்படி? யாரோ ஒருத்தருக்கு இரண்டு மனைவிகள், நாலு குழந்தைகள் எனத் தங்கள் மூலம் நான் இப்போது கேட்டுவிட்டதால் .... உங்க கிருஷ்ஜிக்கு எப்படிக் குறை நீங்க முடியும்? எப்படித் திருப்தி ஏற்பட முடியும்? எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?

      சொல்லுங்கோ, ப்ளீஸ்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  36. எஸ்.ராவையும் படிச்சிருக்கேன். உங்கள் இளைய சிநேகிதி சித்ராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அருமையான விமரிசனத் தொகுப்பு! அழகாக ஆரம்பித்து அருமையாக முடித்துவிட்டீர்கள். வாழ்த்துகள். இந்த அளவுக்கெல்லாம் என்னால் முடியுமா என்பது சந்தேகமே! பற்பல வேலைகள் முழுக அடித்துவிடும். இணையம் அருகேயே சில நாட்கள் வரக் கூட முடியறதில்லை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam April 24, 2016 at 9:36 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //எஸ்.ராவையும் படிச்சிருக்கேன்.//

      பரவாயில்லையே நீங்கள் எல்லோரையுமே அநேகமாகப் படித்துள்ளீர்கள் எனத் தெரிகிறது. சந்தோஷம். நான்தான் யாரையும் படித்தது இல்லை போலிருக்குது.

      //உங்கள் இளைய சிநேகிதி சித்ராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி மேடம். என்னுடைய சொந்த சின்ன அக்கா பெண் பெயரும் சித்ராதான் என ஒருநாள் இந்தச்சித்ராவிடம் சொல்லியிருந்தேன். அன்று முதல் என்னை பிரியமாக ’கோபு மாமா’ என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். :)

      //அருமையான விமரிசனத் தொகுப்பு! அழகாக ஆரம்பித்து அருமையாக முடித்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.//

      ஏதோ அதுபோல ஒரு ப்ராப்தம் அகஸ்மாத்தாக அதுவாகவே அமைந்துவிட்டது. தங்களின் இந்த அருமையான அழகான வாழ்த்துகளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

      //இந்த அளவுக்கெல்லாம் என்னால் முடியுமா என்பது சந்தேகமே!//

      இதற்கு மேலேயே மிகவும் படா ஜோராகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

      //பற்பல வேலைகள் முழுக அடித்துவிடும். இணையம் அருகேயே சில நாட்கள் வரக் கூட முடியறதில்லை! :)//

      இதெல்லாம் மிகவும் வாஸ்தவம்தான், மேடம்.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGK

      நீக்கு
  37. //பாலகுமாரன் ஸாருக்கு இரண்டு மனைவிகள் நாலு குழந்தைகள் வீட்டில் நடந்த விசேஷங்கள் என்று எல்லாமே சொல்லி இருந்தார்... //

    பாலகுமாரனுக்கு மனைவியர் இருவர்! இரண்டாம் மனைவியை மணக்க நேரிட்டது குறித்து ஒரு நாவலே எழுதி இருக்கார். மனைவியர் இருவருமே அரசுப் பணியில் இருந்தவர்கள். முதல் மனைவிக்கு ஒரு பெண்ணும், இரண்டாம் மனைவிக்கு ஒரு பையனும் என்று தான் கேள்விப் பட்டிருக்கேன். நான்கு குழந்தைகள் என்பது புதிய செய்தி! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **பாலகுமாரன் ஸாருக்கு இரண்டு மனைவிகள் நாலு குழந்தைகள் வீட்டில் நடந்த விசேஷங்கள் என்று எல்லாமே சொல்லி இருந்தார்...**

      - பூந்தளிர்

      //பாலகுமாரனுக்கு மனைவியர் இருவர்! இரண்டாம் மனைவியை மணக்க நேரிட்டது குறித்து ஒரு நாவலே எழுதி இருக்கார். மனைவியர் இருவருமே அரசுப் பணியில் இருந்தவர்கள். முதல் மனைவிக்கு ஒரு பெண்ணும், இரண்டாம் மனைவிக்கு ஒரு பையனும் என்று தான் கேள்விப் பட்டிருக்கேன். நான்கு குழந்தைகள் என்பது புதிய செய்தி! :)//

      - கீதா சாம்பசிவம்

      எனக்கு இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது மேடம். சொல்லப்போனால் பாலகுமாரன் அவர்களைப் பற்றியே எனக்கு ஒன்றும் அதிகமாகத் தெரியாது. அவர் ஒரு தமிழ் எழுத்தாளர் என்பது மட்டுமே நான் இதுவரை கேள்விப்பட்ட விஷயம். அவரின் கதைகளில் எதையும் நான் அதிகமாகப் படித்ததும் இல்லை.

      அப்படியிருக்கும்போது, அவருக்கு பெண்டாட்டிகள் எத்தனை, அவர்கள் ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் எத்தனை என்பதெல்லாம் எனக்கு எதற்கு வீண் வம்பு?

      உங்களுக்காச்சு .... அந்தப் பூந்தளிருக்காச்சு. நான் இத்துடன் இதிலிருந்து, இந்த ஆட்டத்திலிருந்து எஸ்கேப். :)

      அன்புடன் VGK

      நீக்கு
  38. 15/20 மார்க் வாங்கியிருந்த கீதாம்மா இப்போ ரிசல்டுக்கு அப்புறம் மார்க்கைக் கூட்டிக்க பாக்கறாங்க, பாருங்க! ரிசல்ட்டு வெளியிட்ட பிறகு மார்க்கெல்லாம் கூட்டிப் போட மாட்டோம்ன்னு கறாராச் சொல்லிடுங்க, ஆமாம்! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி April 24, 2016 at 11:20 AM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்

      //15/20 மார்க் வாங்கியிருந்த கீதாம்மா இப்போ ரிசல்டுக்கு அப்புறம் மார்க்கைக் கூட்டிக்க பாக்கறாங்க, பாருங்க! ரிசல்ட்டு வெளியிட்ட பிறகு மார்க்கெல்லாம் கூட்டிப் போட மாட்டோம்ன்னு கறாராச் சொல்லிடுங்க, ஆமாம்! :))//

      எலெக்‌ஷன் ரிஸல்ட் அறிவிக்கும்போது, முதல் சுற்று எண்ணிக்கையில் இந்த வேட்பாளர் இவ்வளவு லீடிங், இவர் இவ்வளவு வோட் வித்யாசத்தில் அவரைவிட முன் அணியில் இருக்கிறார், அவர் சற்றே பின் அணியில் இருக்கிறார் என்றெல்லாம் ஏதேதோ அறிவித்துக்கொண்டே இருப்பார்கள்.

      கடைசியில் இறுதி முடிவு அறிவிக்கும்போது இவையெல்லாம் அடியோடு மாறி விடவும் வாய்ப்பு உண்டு.

      அதுபோலத்தான் போலிருக்கு இந்த என் அறிவிப்பும். ஆனாலும் நல்லவேளையாக முன்னெச்சரிக்கையாக Position as on 23/24.04.2016 - MIDNIGHT 12.10 Hrs. IST என நான் போட்டுள்ளேன். பிழைத்தேன்.

      என்னால் அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை, நேற்று இரவு தேதி முடிந்து இன்று காலை தேதி ஆரம்பிக்கும் நள்ளிரவு நிலவரம் மட்டுமே அது.

      மேடத்தின் கோபத்திற்கு ஆளாகாமல் புதிய அறிவிப்பு ஒன்றும் பிறகு கொடுத்தால் போச்சு. :)

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  39. Position as on 24.04.2016 - 13.50 Hrs. IST

    இந்த என் தொடரின் அனைத்து இருபது பதிவுகளுக்கும், தொடர்ச்சியாக அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் அளித்துள்ள கீழ்க்கண்ட 16 பதிவர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    20 Out of 20 Cases:
    ===================

    திருமதிகள்:
    ============

    01) ஞா. கலையரசி அவர்கள்
    02) கோமதி அரசு அவர்கள்
    03) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்
    04) கீதா சாம்பசிவம் அவர்கள்

    செல்விகள்:
    ============

    05) ’சிப்பிக்குள் முத்து’-முன்னா மெஹ்ருன்னிஸா அவர்கள்
    06) வசந்தம் - 'மின்னலு முருகு' மெஹ்ருன்னிஸா அவர்கள்
    07) ’ப்ராப்தம்’ - சாரூஊஊஊ அவர்கள்

    திருவாளர்கள்:
    ==============

    08) துளசிதரன் தில்லையக்காது & தோழி கீதா அவர்கள்
    09) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்
    10) S. ரமணி அவர்கள்
    11) வே. நடன சபாபதி அவர்கள்
    12) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள்
    13) ஆல் இஸ் வெல் அவர்கள்
    14) ஸ்ரீனிவாஸன் அவர்கள்
    15) தி. தமிழ் இளங்கோ அவர்கள்
    16) அப்பாதுரை அவர்கள்

    என்றும் அன்புடன் தங்கள் VGK

    பதிலளிநீக்கு
  40. நூலை ஆக்கியோன் என்ற கோணத்தில் கேட்கிறேன். புத்தகத்தை வாங்கியும் பின்னூட்டம் போட்டும் பங்களித்தோருக்கு கிரேஸ் மார்க் என்று ஏதும் கிடையாதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி April 24, 2016 at 3:10 PM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //நூலை ஆக்கியோன் என்ற கோணத்தில் கேட்கிறேன். புத்தகத்தை வாங்கியும் பின்னூட்டம் போட்டும் பங்களித்தோருக்கு கிரேஸ் மார்க் என்று ஏதும் கிடையாதா?..//

      அவர்களெல்லாம் VERY GOOD GENTLEMEN & VERY GOOD GENTLE WOMEN மட்டுமே. GRACE MARKS களை ஒருபோதும் அவர்கள் விரும்பவே மாட்டார்கள்.

      மேலும் எனக்குத் தெரிந்து அவர்கள் ஏற்கனவே செண்டம் அதாவது நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியுள்ளவர்கள், மட்டுமே.

      நாம் எப்படி அதற்கு மேலும் கிரேஸ் மார்க் தரமுடியும்? OVER FLOW ஆகி வழிந்துவிடுமே, நம் தேன் கிண்ணம்.:)

      நீக்கு
    2. ஸ்டெல்லா ப்ரூஸ், வாஸந்தி, இந்துமதி, தமிழ்வாணன், தேவன், சாண்டில்யன், பாக்கியம் ராமசாமி - இவங்களை அடுத்த புத்தகத்தில் எதிர பார்க்கலாமா?

      நீக்கு
    3. அப்பாஜி! முதலில் சிறுபத்திரியகைகளோடு சம்பந்தப்பட்ட தமிழ் எழுத்தாளர்களைத் தான் எடுத்துக் கொண்டு எழுதுவதாக இருந்தேன்.

      அவர்களையெல்லாம் வரிசைப்படுத்திய பொழுது வெகுதிரள் வாசகர்களுக்கு பெரும்பாலும் அவர்கள் அன்னியப்பட்டவர்களாகவே ஆகிப்போகும் ஆபத்து புரிந்தது.

      இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க பத்திரிகைகளின் மூலம் வெகுஜன வாசகர்களுக்கு தெரிந்திருக்கிற பிரபல எழுத்தாளர்களின் பின்னணியில் இவர்களை எடுத்தாண்டால் ஓரளவு இரண்டு பக்க வாசகர்களையும் கவரலாம் என்று தோன்றியது.

      அதனால் தான் சி.சு.செல்லப்பாவையும், குமுதம் எஸ்.ஏ.பி.யையும் இந்த நூலில் ஒருசேர அடைக்க முடிந்தது.

      பிறகு அவர்கள் வயது மூப்பு அடிப்படையில் 37 பேர்களையும் வரிசைப்படுத்தினேன்.

      எழுத எழுத மொத்த பக்க எண்ணிக்கை வேறு பயமூறுத்தியது. மொத்த பக்க எண்ணிக்கையும் அந்த நூலுக்கான அடக்க விலையும் நேர் விகிதம்.

      அதனாலேயே பலரைத் தவிர்க்க வேண்டியதாகப் போய் விட்டது. என் கணக்கில் விடுபட்டவர்கள்:
      நீல. பத்மநாபன், ஆ. மாதவன், கி.ராஜநாராயணன், ஆர். சண்முகசுந்தரம், பா.செயப்பிரகாசம், பூமணி, எல்லார்வி,கொத்தமங்கலம் சுப்பு, ரா.கி.ரங்கராஜன், வாசவன், வையவன், பி.வி.ஆர். வாஸந்தி, சாவி, ஜோதிர்லதாகிரிஜா, உஷா சுப்ரமணியன் சுப்ரமண்ய ராஜூ ஆகியவர்கள். இன்னொரு தொகுதி வெளியிட்டால் இவர்களையும் இன்னும் சிலரையும் அடக்கி விடலாம். இந்த வரிசையில் அடுத்த தொகுதி என்பது இந்த தொகுதியின் வரவேற்பை பொறுத்தே.

      பேராசிரியர் கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், ஜெயமோகன் போன்றோர்களுக்கு தனிப்புத்தகம்.
      அதற்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கி விட்டேன்.

      இப்பொழுதெல்லாம் தமிழகத்தில் ஏகப்பட்ட இலக்கிய சலசலப்புகள். தொடர்கதைகள் எல்லாம் நாவலே இல்லை என்று வேறே புதுப்பூதம் இப்பொழுது புறப்பட்டிருக்கிறது. நல்ல வேளை அவர்கள் எல்ல்லாம் நாவலாசிரியர்ளே இல்லை என்று சொல்லப்போய் தமிழ் எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லாமல் போனார்கள்.

      அதற்கு வேறு இன்னொரு தொடரில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன். .

      தங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி, அப்பாதுரை. யாராவது விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்.









      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. நீல பத்மநாபன்.. அவர் பெயர்தான் மறந்துவிட்டது. என் மாமா அறிமுகம் செய்த கலைஞர்.

      நீக்கு
    6. ஜெயமோகனுக்கு தனிப் புத்தகமா? சரி.. ஒரு புத்தகம் வாங்க வேண்டியது மிச்சம்னு வச்சுக்க வேண்டியது தான்.

      நீக்கு
    7. ஜெயமோகன் தமிழ் சிறுகதை இலக்கிய நாவல் உலகத்துக்கு என்ன செய்து கி ஹிஹி செய்திருக்கிறார் என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் புண்ணியமாகப் போகும். தமிழ் எழுத்துக்கு.

      நீக்கு
    8. ஜெயமோகன் இந்த காலகட்டத்தில் தவிர்க்கவே முடியாதவர். அவரைப் படித்து விட்டால் நிறைய விஷயங்களை ஆதியோடு அந்தமாகத் தெரிந்து கொள்ளலாம். அவர் சொல்லும் விஷயங்களில் உங்களுக்கும் ஞானம் இருந்தால் அவர் கோட்டை விட்ட இடங்களைக் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் நாமும் ஒரு இலக்கிய விவாதத்தையோ சர்ச்சையோ எழுப்பலாம்.
      இதனால் உருப்படியான இலக்கிய கட்டுரைகளை நாம் உருவாக்கலாம். இதான் அவரை வாசிப்பதில் இருக்கும் சூட்சுமம்.

      இப்பொழுது 'அழகிய தமிழ் மொழி இது' என்று ஒரு கட்டுரைத் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
      இந்தக் கட்டுரைக்கான சிந்தனையைக் கிளப்பி விட்டது சொல்லப்போனால் ஜெமோ தான்.

      1. நாவல் இலக்கியம் என்பது பிரிட்டிஷாரிடம் இருந்து நாம் தெரிந்து கொண்டது என்பது பொதுவாக உலவும் கருத்து..

      2. தமிழில் வெளிவந்த பத்திரிகைத் தொடர்கதைகள் எல்லாம் நாவலில்லை என்பது ஜெமோவின் கூற்று.

      இந்த இரண்டு விஷயங்களையும் மறுப்பதே எனது அந்தத் தொடரின் அடிப்படைக் கோட்பாடாகிப் போனது.

      அவ்ரை வாசிப்பதால் கிடைக்கும் உடனடிப் பலங்கள் இவை. இந்த ந.பி.யிலிருந்து எஸ்.ரா.வரை நூலில் கூட இரண்டு மூன்று இடங்களில் அவர் சொன்னதைப் பிரஸ்தாபித்து என்னுடைய மாறுபட்ட கருத்தையும் பதிவு செய்திருக்கிறேன்.

      ஜெமோவை வாசிக்காமலே இருப்பது இந்த காலகட்ட
      தமிழ் இலக்கிய போக்குக்கு உடன்பாடான விஷயம் அல்ல். ஆனால் அவரை வாசிக்கும் தீவிர வாசகர்கள், அவரை விமரிசிப்பவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தான் ஒரு முரணான விஷயம். அந்த அளவுக்கு அவரின் தீவிர் வாசகர்கள் அவரை மட்டுமே வாசிக்கிற வாசகர்களாகப் பழக்கப் பட்டிருக்கிறார்க்ள். அல்லது அவர் சொல்லும் கருத்துக்களுக்கு மாறுபட்டு சிந்திக்கக் கூட தயாராரில்லாத நிலையில் இருக்கிறார்கள். தயாரில்லாத நிலை என்று இல்லாவிட்டாலும், அவர் சொல்வதில் முழுதும் கன்வின்ஸ் ஆனவர்கள், அவர் சொல்வதற்கு மாறுபட்ட கருத்தை நாம் முன் வைக்கும் போது அந்த மாறுபட்ட கருத்துக்கு எதிராகவேனும் விவாதம் செய்யலாம் இல்லையா?.. இவர்களைப் பொருத்த வரை இந்த இரண்டையுமே செய்ய மாட்டார்கள் என்பது தான் நெட் ரிசல்ட்.

      ஆனால் ஜெமோ இணையத்தில் வரும் சிறப்பானவற்றை எப்படியோ வாசித்து விடுகிறார் என்பது தான் ஆச்சரியம். நான் முன்பு எழுதி வந்த எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளையும் வாசித்து அவர் தளத்தில் குறிப்பும் கொடுத்திருந்தார்.

      ஜெமோவை வாசிப்பதில் அடிப்படையான விஷயம் என்னவென்றால்..

      ஜெமோ சொலவதிலிருந்து விலகிப்பார்க்கும் பார்வையை நாம் பெற்றால் நாம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் அவரிடமிருந்தே கிடைக்கின்றன என்பது என் அனுபவம்.

      நீங்களும் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள். கற்றுக் கொள்ள இல்லையாயினும் வாசிப்பு அனுபவத்திற்கு. அவரின் தளம்:

      http://www.jeyamohan.in/

      நீக்கு
    9. ஜெமோ வாசித்திருக்கிறேன். வாசிக்காமல் என் கருத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. எல்லாவற்றையும் வாசித்தபின் என் கருத்து மாறுபடும் நிலைவரும் என்று நினைக்க முடியவில்லை. இலக்கியப் பானைக்கும் ஒரு சோறு தான் பதம்.

      நீக்கு
    10. நிச்சயமாக அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். அதனால் அவர் தமிழ் இலக்கியக் காவலர் என்று கொண்டாட முடியுமா என்ன?

      நீக்கு
    11. ஜெமோவின் தீவிர ரசிகர்கள் விமரிசகர்களை கண்டு கொள்ளாதிருப்பதும் இயற்கை தான். அந்த மட்டுக்கு ஜெமோவை அவர்கள் முழுமையாக அனுபவிக்கலாமே?

      நீக்கு
    12. // எல்லாவற்றையும் வாசித்தபின் என் கருத்து மாறுபடும் நிலைவரும் என்று நினைக்க முடியவில்லை. //

      தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

      ஜெமோவைப் பற்றி உங்கள் கருத்து மாறுபடும் என்று நான் சொல்லவே இல்லை.

      ஜெமோவின் சொல்லும் கருத்துருக்களிலிருந்து விலகிப் பார்க்கும் பார்வையைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
    13. அவர் கருத்துலக் காவலர் என்று கொண்டாடச் சொல்லி நான் சொல்லவில்லையே! அவர் எடுத்தாளும் விஷயங்கள் விவாதங்களுக்கு ஏற்றவை என்றி தான் சொல்லியிருக்கிறேன். அந்தவிதத்தில் இந்த காலகட்டத்தில் அவர் தவிர்க்கவே முடியாதவர் என்றும் சொல்லியிருக்கிறேம்/

      நீக்கு
    14. நீங்கள் நிச்சயம் சொல்லவில்லை சார். (சொல்லக்கூடியவரும் அல்ல நீங்கள்). அவை என்னுடைய புரிதலின் நீட்சி aka வம்பு.

      நீக்கு
  41. நான் முன்பேசொல்லியுள்ளது போல, திரு.ஜீ.வி அவர்களின் நூலுக்கு இதை விட சிறந்த விமர்சனம் இருக்க முடியாது என்பதைத்தான் மறுபடியும் சொல்கிறேன். அத்தனை அருமையாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள்.

    //தேன் போன்ற இந்த ஜீவி சாரின் நூலாகிய தேன் கிண்ணத்தில், இதுவரை ஓர் ஈ போல மூழ்கிப்போயிருந்த நான், தேனின் தீண்டலாலும், தேனின் சுவையாலும், அது எனக்களித்த சுகபோகங்களாலும், மயங்கிக்கிடந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

    பிசுபிசுத்துப்போய் இருந்த என் இறக்கைகளுடன், எப்படியோ ஒருவாறு சமாளித்துத் தட்டுத்தடுமாறி, [அடிக்கடி என் மேலிடத்தின் குறுக்கீடுகள் போன்ற மாபெரும் உதவிகளாலும்] ஒரு வழியாக இந்த நூலைப் படித்து முடித்து வெளியேறி விட்டேன்.

    இந்த அருமையான தேனின் ருசியும், நினைவலைகளும் மட்டும் என்றும் நீங்காமல், நீண்ட நாட்கள் என் மனதினில் இடம் பெற்றிருக்கும்//

    இதை விட சிறந்த முடிவுரையும் வேறு இருக்க முடியாது என்ப‌தை மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள்!!

    இனிய வாழ்த்துக்கள்! எழுதுவதற்காக என்பதை விட, எல்லோருக்கும் உங்களிடத்திலுள்ளள அன்பையும் தோழமையையும் தொடர்வதற்காகவாவது விரைவில் பதிவெழுத வருவீர்கள் என்று நம்புகிறேன்!

    [ ஷார்ஜா வந்து விட்டேன். அதனால்தான் பின்னூட்டம் எழுத தாமதம் ஆகியது!]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் April 24, 2016 at 3:22 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நான் முன்பே சொல்லியுள்ளது போல, திரு.ஜீ.வி அவர்களின் நூலுக்கு இதை விட சிறந்த விமர்சனம் இருக்க முடியாது என்பதைத்தான் மறுபடியும் சொல்கிறேன். அத்தனை அருமையாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி மேடம். இதனைத் தங்கள் மூலமாக மீண்டும் ஒருமுறை கேட்பதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. :)

      **தேன் போன்ற இந்த ஜீவி சாரின் நூலாகிய தேன் கிண்ணத்தில், இதுவரை ஓர் ஈ போல மூழ்கிப்போயிருந்த நான், தேனின் தீண்டலாலும், தேனின் சுவையாலும், அது எனக்களித்த சுகபோகங்களாலும், மயங்கிக்கிடந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

      பிசுபிசுத்துப்போய் இருந்த என் இறக்கைகளுடன், எப்படியோ ஒருவாறு சமாளித்துத் தட்டுத்தடுமாறி, [அடிக்கடி என் மேலிடத்தின் குறுக்கீடுகள் போன்ற மாபெரும் உதவிகளாலும்] ஒரு வழியாக இந்த நூலைப் படித்து முடித்து வெளியேறி விட்டேன்.

      இந்த அருமையான தேனின் ருசியும், நினைவலைகளும் மட்டும் என்றும் நீங்காமல், நீண்ட நாட்கள் என் மனதினில் இடம் பெற்றிருக்கும்** - VGK

      //இதை விட சிறந்த முடிவுரையும் வேறு இருக்க முடியாது என்ப‌தை மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள்!! //

      ஆஹா, சந்தோஷம், மேடம். தன்யனானேன்.

      //இனிய வாழ்த்துக்கள்! எழுதுவதற்காக என்பதை விட, எல்லோருக்கும் உங்களிடத்திலுள்ளள அன்பையும் தோழமையையும் தொடர்வதற்காகவாவது விரைவில் பதிவெழுத வருவீர்கள் என்று நம்புகிறேன்!//

      தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம். பிறரின் அன்பையும் தோழமையையும் இழப்போமே என்பதை நினைக்கும்போதுதான் என் மனதுக்கு மிகவும் கஷ்டமாகவும், அதன் வலி மிகவும் அதிகமாகவும் உள்ளது, மேடம். என்ன செய்வது என்றே எனக்கும் புரியவில்லை. எனினும் தங்களின் நம்பிக்கைக்கு ..... முயற்சிக்கிறேன்.

      //[ ஷார்ஜா வந்து விட்டேன். அதனால்தான் பின்னூட்டம் எழுத தாமதம் ஆகியது!]//

      ஓஹோ, பரவாயில்லை மேடம். எங்கிருந்தாலும் வாழ்க !

      என்றும் அன்புடன்
      வை. கோபாலகிருஷ்ணன்
      101

      நீக்கு
  42. அப்பாதுரையின் கருத்துகள் நச் என்று இருக்கின்றன. எஸ்ரா ஜெமோ பற்றிய கருத்துகள் ஒரு சோறு - அல்லது இரு சோறு - பதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். April 26, 2016 at 11:30 AM

      வாங்கோ ஸ்ரீராம் ......

      //அப்பாதுரையின் கருத்துகள் நச் என்று இருக்கின்றன. எஸ்ரா ஜெமோ பற்றிய கருத்துகள் ஒரு சோறு - அல்லது இரு சோறு - பதம்!//

      அப்பாதுரை சாரின் வருகையே ஆனந்தம் அளிப்பதாக உள்ளது.

      கருத்தளிப்பதில் அனைவரையும்விட அஞ்சாநெஞ்சம் கொண்டவர், நம் அப்பாதுரை சார் அவர்கள்.

      தீபாவளி கேப் வெடிகள் போல, ஓலைப் பட்டாசு போல, ஊசிச்சரம் போல ஏதேனும் கொஞ்சமாக கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார். :)

      அதற்கு நம் ஜீவி சார் அவர்களோ பத்தாயிரம் வாலா பட்டாசு போல பெரிதாக ஏதேனும் பதில் எழுத வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

      மொத்தத்தில் இவர்கள் இருவரும் செய்துகொள்ளும் விவாதங்கள் என்ன என்பதே என்னைப்போன்ற மிகச் சாமான்யர்களுக்கு ஒன்றும் புரியவே புரியாது. :)

      மின்னலு முருகு பாஷையில் சொல்வதென்றால், அவை சுத்தமாக எனக்கு ஒன்றுமே விளங்கிட ஏலாது.

      விளங்கிக்கொள்ள கஷ்டப்பட்டு படித்து அலட்டிக்கொள்வதிலும் எனக்கு விருப்பம் கிடையாது.

      இப்போதெல்லாம் எனக்கு எதற்குமே நேரமும் பொறுமையும் கிடையாது.

      இருப்பினும் பின்னூட்ட எண்ணிக்கைகள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டு இருப்பதில் எனக்கோர் சின்ன மகிழ்ச்சியாக உள்ளது.

      சின்னக்குழந்தை தீபாவளி சமயம் வானத்தின் உயரத்தில் சென்று வெடித்து, வெளிச்சமாகப் பூமழை பொழியும் ராக்கெட்டை ரஸிப்பதுபோல நானும் ரஸித்துக்கொண்டு இருக்கிறேன். அவர்கள் இருவரின் பின்னூட்டங்களையும் பப்ளிஷ் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.

      அம்புட்டுத்தான்.

      அன்புடன் VGK
      124

      நீக்கு
    2. கோபு சாரின் தளத்தில் தங்க வந்த இடத்தில் வம்பாடிக்கொண்டிருக்கிறோமே, பதிவுகள் நிறைவடைந்த வேளையில் இது என்னடா புதுத் தலைவலி என்று அவருக்கு எரிச்சலாகி விடக்கூடாது என்றிருந்தேன். அவர் என்னவென்றால் சிறுகுழந்தை போல வாணவேடிக்கையை ரசித்துக் கைதட்டிக் கொண்டிருக்கிறார்!.. அசராது இருபது பகுதிகளை நிறைவு செய்ததின் கொண்டாட்டம் அவருக்கு! நிறைவு விழாவின் கோலாகலத்தில் பூரண மகிழ்ச்சி அவருக்கு!

      ஆக, ஓடி ஆடி இஷ்டம் போல விளையாட ஆடுகளத்தில் எந்தத் தடையுமில்லை!
      ஆக, ஜமாயுங்கள் ஸ்ரீராம்?..

      'நச்'ச்சைத் தானே மெச்சினீர்கள்?.. துரை சாரை ரசித்துப் பின் தொடர்ந்து விளாசித் தள்ளுங்கள்.
      உங்கள் கைவசம் என் புஸ்தகம் வேறு இருக்கிறது.
      புஸ்தகத்தைக் கையில் கொடுத்து விட்டு பரிட்சையே எழுதச் சொன்ன மாதிரி! எஸ்.ரா.வை முழுமையாகப் படித்து விட்டு அங்குலம் அங்குலமாக முன்னேறுங்கள்!
      நசுக்கிப் பார்ததில் இரண்டு சோற்றுப் பருக்கைகளும் பதமாக வெந்திருக்கின்றன.. ஆக, வம்பு தான்! இருந்தாலும் யார் விட்டார்கள்?.. ஜமாயுங்கள்!

      நீக்கு
    3. நான் இன்னும் உங்கள் புத்தகத்தில் பாதிப் புத்தகத்தைத் தாண்டவில்லை ஜீவி ஸார்! அப்பாதுரை எப்போதுமே ஒரு தூண்டில் வார்த்தை வீசுவார். வார்த்தை மயக்குகிறது. எஸ்ராவின் 'துணை எழுத்து' புத்தகத்தை அப்பாதுரையிடம் கொடுத்தவன் நான். எனக்கு எஸ்ராவிடம் மதிப்பைத் தோற்றுவித்த புத்தகம் அது. அப்புறம் வேறு ஏதோ ஒரு புத்தகம் கூட வாசித்திருக்கிறேன். அவர் மீது எனக்கு மதிப்பு குறைந்த கணங்கள் அல்லது சம்பவங்கள் இரண்டு : 1) அவர் காவல்கோட்டம் பற்றி அடித்த கமெண்ட். 2) அவர் "தொகுத்த" சிறந்த நூறு சிறுகதைகள் பற்றிய சம்பவத்தின் சர்ச்சை.

      நீக்கு
    4. உண்மைதான் ஸ்ரீராம்.. ஆனா அதற்குப் பிறகு நான் படித்த (தெரியாமல் செய்த பிழை) பாசாகு இலக்கியம் தான் என் கருத்துக்களின் வேர். ஆச்சரியம். எனக்கும் காவல் கோட்ட காழ்ப்பில் குமட்டல் வந்தது.

      நீக்கு
    5. நல்ல வேளையாக எஸ்ரா படிப்பதை நிறுத்திவிட்டதால் தொகுப்பு பற்றி தெரியாமல் இருந்து விட்டேன்.

      நீக்கு
    6. //இது என்னடா புதுத் தலைவலி என்று அவருக்கு எரிச்சலாகி விடக்கூடாது என்றிருந்தேன்..

      ஹிஹி அதே அதே ஜீவி சார்.

      நீக்கு
  43. ஹி.. ஹி.. உங்கள் பின்னூட்ட எண்ணிக்கை எகிறிக் கொண்டு போகிறது.. கோபு சாரும் இந்த 'எண்ணிக்கை கடையை' கட்ட வில்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  44. ஸ்ரீராம்! அந்த நூலில் 'எஸ்.ரா.' பகுதியில் வரும் 'கதைசொல்லி' விஷயத்தை எடுத்து நீங்கள் அப்பாதுரையிடம் சொல்லலாமோ என்று தோன்றியது.

    ஆனால் அதிலும் எனக்குத் தெரிந்த ஆபத்து ஒன்று இருப்பது லேட்டாக இப்பொழுது தான் தெரிகிறது..

    பதிலளிநீக்கு
  45. ஜெயந்தன் அவர்களையும்
    நினைவில் கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான தேர்வு. சேர்த்துக் கொள்கிறேன், ரமணி சார்!

      நீக்கு
  46. POSITION AS ON 04.05.2016 .... 6 PM (I.S.T)
    ===============================================

    MY BLOG FOLLOWERS : 381

    MY BLOG VIEWERS : 3,89,241

    TOTAL NUMBER OF COMMENTS SO FAR
    RECEIVED and PUBLISHED : 38,629

    No. of Posts Published:
    January 2011 to April 2016 = 827

    oooooooooooooooooooooooooooooooo

    FOLLOWERS IN GOOGLE PLUS : 517

    VIEWERS IN GOOGLE PLUS : 44,49,610

    Ref: https://plus.google.com/102656777470795306517/posts

    oooooooooooooooooooooooooooooooo

    My sincere thanks to all of you ..... vgk

    பதிலளிநீக்கு
  47. வாத்யாரே வணக்கம். நலமா? சற்றே கால இடைவெளிக்குப்பின்னர் படிக்க வாய்த்த இந்த எபிசோட்...ரசிக்க வைக்கிறது...நூலைப்படிக்கத்தூண்டுகிறது. நன்றி...அன்புடன் உங்கள் எம்.ஜி.ஆர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 138

      RAVIJI RAVI May 13, 2016 at 2:16 PM

      //வாத்யாரே வணக்கம். நலமா? சற்றே கால இடைவெளிக்குப்பின்னர் படிக்க வாய்த்த இந்த எபிசோட்... ரசிக்க வைக்கிறது... நூலைப் படிக்கத்தூண்டுகிறது. நன்றி... அன்புடன் உங்கள் எம்.ஜி.ஆர்.//

      வாங்கோ வாத்யாரே, வணக்கம். நல்லா இருக்கீங்களா? நலம் தானே? உங்களை என் பதிவுகள் பக்கம் பார்த்தே ரொம்ப நாட்கள் ஆச்சு. தேர்தல் வேலைகளில் பிஸியோ? :)

      அட்-லாஸ்ட் தங்களின் அன்பு வருகைக்கும், இந்த எபிசோட் ... ரசிக்க வைத்ததாகச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும் [அதனை அப்படியே நானும் நம்புகிறேன் :) ] என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அப்புறம் நான் தங்களுக்கு அனுப்பி வைத்த கீழ்க்கண்ட பரிசுத் தொகைகள் தங்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என நான் பலமுறைகள் தங்களிடம் கேட்டும், எனக்கு தங்களிடமிருந்து இதுவரை எந்தவிதமான பதிலுமே வரவில்லை. :(

      Rs. 475 sent on 18.06.2014

      Rs. 650 sent on 16.09.2014

      Rs. 325 sent on 10.11.2014

      Rs. 1000 sent on 19.12.2015

      ===========================
      TOTAL: Rs. 2450 ONLY
      ===========================

      நீக்கு
  48. தங்களின் அலாதியான ஈடுபாடு எங்களை வியக்கவைக்கிறது. தாமதமான என்னுடைய வருகைக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். நூலை படித்த விதம், விமர்சித்த பாணி, பகிர்ந்த நிலை என்ற நிலைகளில் தங்களின் மன உறுதி எங்களுக்கு ஒரு முன்னுதாரணம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 140

      Dr B Jambulingam May 14, 2016 at 9:26 PM

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

      //தங்களின் அலாதியான ஈடுபாடு எங்களை வியக்கவைக்கிறது.//

      அப்படியா? மிக்க மகிழ்ச்சி.

      //தாமதமான என்னுடைய வருகைக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.//

      அதனால் என்ன, பரவாயில்லை. நோ ப்ராப்ளம், சார்.

      //நூலை படித்த விதம், விமர்சித்த பாணி, பகிர்ந்த நிலை என்ற நிலைகளில் தங்களின் மன உறுதி எங்களுக்கு ஒரு முன்னுதாரணம். நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ‘முன்னுதாரணம்’ போன்ற பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  49. 141

    அன்புடையீர், அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

    http://honeylaksh.blogspot.in/2016/05/blog-post.html

    மேற்படி இணைப்பினில், 'சும்மா’ வலைப்பதிவரும், பன்முகத் திறமையாளருமான, திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள், சமீபத்தில் தான் ரஸித்துப் படித்து மகிழ்ந்த, என்னுடைய சிறுகதைத் தொகுப்பு நூல்கள் மூன்றையும் பற்றி சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதியிருக்கிறார்கள்.

    இது இங்கு அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    -=-=-=-=-

    இவ்வாறு தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துப் பாராட்டியுள்ள என் அன்புக்குரிய ஹனி மேடம் அவர்களுக்கு, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள VGK

    பதிலளிநீக்கு
  50. தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா. வாக்கிய அமைப்பு தாங்கள் அமைத்தது தான் அழகு. பூரணத்துவமாக இருக்கிறது.
    மிக்க நன்றி ஐயா. தங்கள் கருத்தை பார்த்து விட்டு உடனேயே
    சரி செய்து விட்டேன். சகோ ஶ்ரீராம் சுட்டிக்காட்டியதையும் மாற்றி விட்டேன். மீண்டும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri June 2, 2016 at 9:41 PM

      //தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா. வாக்கிய அமைப்பு தாங்கள் அமைத்தது தான் அழகு. பூரணத்துவமாக இருக்கிறது.//

      ஒருமையாக உள்ள கடைசி வார்த்தையையும் தலைப்பினில் பன்மையாக மாற்றச்சொல்லியிருந்தேன் என ஞாபகம்.

      அதாவது

      வெளிவந்திருக்கிறது = வெளிவந்துள்ளன

      எனினும் மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  51. ஒரு நீண்ட இடைவெளி பிறகு அடியேனின் பிலாக் வருகை!
    ஜீவி சாரின் நூல் அறிமுகம் அருமை.சித்ரா மேடத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.இனி வாரம் ஒரு முறை பிலாக் பக்கம் வரலாம் என்றிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
      June 18, 2016 at 2:18 AM

      //ஒரு நீண்ட இடைவெளி பிறகு அடியேனின் பிலாக் வருகை!//

      ஆஹா, நானும் தற்சமயம் ஒரு நீண்ட இடைவெளி கொடுத்து வலையுலகிலிருந்து வெளியேறியுள்ளபோது, தங்களின் இந்த வருகை, மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

      //ஜீவி சாரின் நூல் அறிமுகம் அருமை.சித்ரா மேடத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.இனி வாரம் ஒரு முறை பிலாக் பக்கம் வரலாம் என்றிருக்கிறேன்..//

      சந்தோஷம், மிக்க நன்றி.

      145

      நீக்கு