என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

2017 >>>>> 2018 வாழ்த்துகள்




அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். 

இன்று நள்ளிரவு 12 மணிக்கு  ஆங்கிலப்புத்தாண்டு 2018 பிறக்க உள்ளது.

புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'எனது எண்ணங்கள்’ http://tthamizhelango.blogspot.com/ வலைப்பதிவருமான திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்கள் என்னை சந்திப்பதும், புத்தாண்டுக்கான நாட்குறிப்புப் புத்தகம் (DIARY) கொடுத்துவிட்டுச் செல்வதும் வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார். இது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை நினைக்க, எனக்கே மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது.  

25.12.2013 அன்று என் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து 2014-ம் ஆண்டுக்கான புதிய டைரியை முதன் முதலாகக் கொடுத்துச் சென்றார்.

25.12.2014 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2015-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/12/9.html



25.12.2015 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2016-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

 


அதே போல 29.12.2016 வியாழக்கிழமை மாலை சுமார் 5.45 மணிக்கு திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் என் இல்லத்திற்கு நேரில் விஜயம் செய்து, 2017-ம் ஆண்டுக்கான புத்தம் புதிய DIARY கொடுத்துவிட்டுப் புத்தாண்டு நல் வாழ்த்துகள் சொல்லி மகிழ்வித்திருந்தார்கள். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: http://gopu1949.blogspot.in/2016/12/blog-post.html  தலைப்பு: யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே !






இன்று 31.12.2017 ஞாயிறு இரவு 7 மணி சுமாருக்கு என் அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் என் இல்லத்திற்கு திடீர் வருகை தந்து, வழக்கம்போல 2018-ம் ஆண்டுக்கான புத்தம் புதிய டைரி ஒன்றையும், நான்கு மாதுளம்பழங்களையும் அன்பளிப்பாக வழங்கி புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லிச் சென்று மகிழ்வித்துள்ளார்கள்.

இன்று ( 31.12.2017 -  ஞாயிறு இரவு ) சுடச்சுட எடுக்கப்பட்ட படங்கள் :-






2014 முதல் 2018 வரை தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக, நேரில் வருகை தந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்துகளும் சொல்லிப் புது வருட நாட்குறிப்புப் புத்தகமும் (DIARY) கொடுத்துச்செல்லும், அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் இனிய  ஆங்கிலப்புத்தாண்டு + தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




















என்றும் அன்புடன் தங்கள்


[ வை. கோபாலகிருஷ்ணன் ]