என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 9 பிப்ரவரி, 2017

அதற்குள் ஓராண்டு ஓடிப்போனதே ! :(


முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
09.02.2017


"வாசிப்பது என்பது சுவாசிப்பது ! 

வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

[ மறைவு: 09.02.2016  ]
http://gopu1949.blogspot.in/2016/03/blog-post.html



 


வலையுலக நட்பிலிருந்து
தாங்கள் 2016-ம் ஆண்டு முதல் 
பிரிந்து சென்றுவிட்டாலும் ....

2011 முதல் 2015 வரை, 
அடியேன் வெளியிட்டுள்ள 
என் 806 பதிவுகள் அனைத்திலும் உள்ள 
   பின்னூட்டங்களிலும்

எங்கள் நினைவலைகளிலும் நீங்கள் 
நிரந்தரமாக இன்றும் வாழ்ந்து வருகிறீர்கள்.

-oOo-

தங்களிடமிருந்து எனக்குக்  
கடைசியாக பின்னூட்டங்கள்
கிடைக்கப்பெற்ற நாள் : 31.12.2015
http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

(சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு 

 100% பின்னூட்டப் போட்டி 2015)




  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் !!




    1. இராஜராஜேஸ்வரி December 31, 2015 at 8:24 AM

      வாங்கோ மேடம், வாங்கோ, வணக்கம்.

      //இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
      இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் !!//

      தங்களின் இனிமையான, ருசியான, தித்திக்கும் பொங்கல் போன்ற நல்வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

  2. போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி
    பரிகள் அளித்த சாதனையாளருக்கு
    இனிய நன்றிகள்..!!




    1. இராஜராஜேஸ்வரி December 31, 2015 at 8:26 AM

      //போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி பரிகள் அளித்த சாதனையாளருக்கு இனிய நன்றிகள்..!! //

      // போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி...... //

      இதுவரை OK ... OK ...

      //ப ரி க ள் அளித்த//

      போட்டியில் கலந்துகொண்ட பந்தயக்குதிரைகளுக்கு நான் அளித்ததும் பரிகளா .... குதிரைகளா ?

      { பரி = ’குதிரை’ அல்லவா! }

      அதில் இருவரை மட்டும் நான் சண்டிக்குதிரைகள் என்று சொல்லியிருந்ததால், ஒருவேளை அதே சிந்தனையில் தாங்களும் இருந்து, ‘பரிசுகள் அளித்த’ என்பதைப் ’பரிகள் அளித்த’ என குதிரை வேகத்தில் எழுதியிருப்பீர்களோ என்னவோ !! :)

      //சாதனையாளருக்கு இனிய நன்றிகள்..!! //

      உண்மையில் இந்தப்போட்டியில் சாதனையாளர்கள் தாங்கள் எட்டுப் பேர்கள் மட்டும் அல்லவா. உங்கள் அனைவரையும் அடையாளம் காட்டி சிறப்பிக்க ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது, இந்த மிகச் சாதாரணமானவனின் பெரும் பாக்யமே.

      என்னையும் இங்கு தாங்கள் ஒரு சாதனையாளர் ஆக்கியுள்ளதற்கும், தங்களின் இனிய நன்றிக்கும், என் இதயம் கனிந்த நன்றிகள், மேடம்.

    oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

2015ம் ஆண்டு என் வலைத்தளத்தினில் நடைபெற்ற 
100% பின்னூட்டமிடும் போட்டியில் 
வெற்றிவாகை சூடிய தங்களுக்கான 
பரிசுப்பொருட்களை 29.10.2015 அன்றே
தங்களுக்கு கொரியர் மூலம் என்னால்
அனுப்பி வைக்க முடிந்ததில் 
நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 

அதற்குத் தாங்கள் சந்தோஷமாக எனக்கு 
அனுப்பியுள்ள  கடைசி மெயில் செய்தி:




30/10/2015
to me

’ஸ்பெஷல் கிஃப்ட்’ உள்பட அனைத்தும் கிடைக்கப்பெற்றேன்.

என்றும் பிரிக்காமல் பொக்கிஷமாகப் பாதுகாப்போம்.

வெள்ளிக்கிழமையும் அதுவுமாக அரவிந்த்குமாருக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் இல்லத்துக்கு வந்து, உப்பு மஞ்சள் வாங்கிய திருநாளில் வெள்ளிக்காசு கிடைக்கப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சி தந்தது .. நிறைந்த நன்றிகள்..


oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

நினைவை விட்டு என்றும் நீங்காத
மற்ற சில பதிவுகளின் இணைப்புகள்:

2011

http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி! 

[2011 இந்த வருடத்தில் நான் ]


2012


ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்.

2013

ஆயிரம் நிலவே வா! .... ஓர் ஆயிரம் நிலவே வா !!

2014  
சிறுகதை விமர்சனப் போட்டிகள்


   

போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி

ஒட்டுமொத்த ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியல்

பரிசு மழை பற்றியதோர் அலசல் - VGK-01 to VGK-10

பரிசு மழை பற்றியதோர் அலசல் - VGK-11 to VGK-20

பரிசு மழை பற்றியதோர் அலசல் - VGK-21 to VGK-30

பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அலசல் 
 VGK-31 to VGK-40

போட்டி பற்றிய பல்வேறு அலசல்களும் புள்ளி விபரங்களும் VGK-01 to VGK-40


சிறுகதை  விமர்சனப் போட்டிகளில் 
தங்களின் மகத்தான 
28 வெற்றிகள்.

முதல் பரிசு பெற்றவை


  

காதலாவது கத்திரிக்காயாவது ....

அமுதைப்பொழியும் நிலவே

அஞ்சலை

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !! 

முன்னெச்சரிக்கை முகுந்தன்

தாயுமானவள்

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா ?

அவன் போட்ட கணக்கு

வாய் விட்டுச் சிரித்தால்

மாமியார்
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-01-03-first-prize-winners.html


இரண்டாம் பரிசு பெற்றவை
மறக்க மனம் கூடுதில்லையே

உண்மை சற்றே வெண்மை

சூழ்நிலை

வடிகால்

அட்டெண்டர் ஆறுமுகம்

சகுனம்

’எலி’ஸபத் டவர்ஸ்


மூன்றாம் பரிசு பெற்றவை

காதல் வங்கி

உடம்பெல்லாம் உப்புச்சீடை

நீ .... முன்னாலே போனா .... நா .... பின்னாலே வாரேன் !

அழைப்பு

மூக்குத்தி

யாதும் ஊரே .... யாவையும் கேளிர் !

முதிர்ந்த பார்வை

எல்லோருக்கும் பெய்யும் மழை

பூபாலன்

எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...
ஜாதிப்பூ


 2015      
 100% பின்னூட்டப்போட்டி - 2015

http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_16.html

சாதனையாளர் விருது  
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் 


                                            http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

சாதனையாளர்களின் 
ஒட்டுமொத்த அணிவகுப்பு.  


  



  

2016


கிட்டத்தட்ட சமவயதில் இருந்த நாம் இருவருமே 
2011 ஜனவரி முதல் வலைப்பதிவு ஆரம்பித்து தொடர்ச்சியாக அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பதிவுகள் கொடுத்து வந்தோம்.  

மிகச்சிறந்த அறிவாளியாகவும், 
ஆன்மீக அத்தாரிட்டியாகவும், 
தெய்வாம்சம் நிறைந்த பதிவராகவும், 
மிகச்சிறப்பான பின்னூட்டங்கள் கொடுப்பவராகவும் உங்களை நான் எனக்குள் நினைத்து 
மகிழ்ந்து கொண்டிருந்தேன். 

தங்களின் எதிர்பாராத திடீர் மறைவு 
எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 
என்னை மிகவும் கலங்க வைத்துவிட்டது.  

தாங்கள் இனி பின்னூட்டமிட 
வரப்போவது இல்லை என்று தெரிந்ததும், 
நானும் என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் ஏதும் வெளியிட ஆர்வமில்லாமல் இருந்துவிட்டேன். 

2016 + 2017ம் ஆண்டுகளில் ஒருசில  
தவிர்க்க இயலாத சூழ்நிலைகளால் மட்டுமே, 
நேற்றுவரை அதுவும் வெறும் 33+3=36 பதிவுகள் மட்டுமே என்னால் வெளியிடும்படியாக நேர்ந்துள்ளது.

அவைகளில் பெரும்பாலானவைகள் 
20 + 2 + 6 = 28 out of 36 ] 
பிற பதிவர்களான நம் 
திரு. ஜீவி ஸார் அவர்கள் (20), 
திரு. சிட்டுக்குருவி விமலன் அவர்கள் (2),
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் (6) 
ஆகியோரின்  நூல் அறிமுகங்களாகும். 

மேலும்  1+1+3 = 5 பதிவுகள் 
திருமதி. மனோ சுவாமிநாதன் தம்பதியினர் + 
திரு. தி. தமிழ் இளங்கோ ஸார் +
அஷ்டாவதானி திரு. மெளலி ஸார் 
ஆகியோரின் 
’பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகள்’ பற்றியதாகும்.  

தாங்கள் வருகை தராமல் நான் வெளியிட்டுள்ள 
அந்த 33+3 = 36 பதிவுகள் ஒவ்வொன்றிலும்கூட, 
தங்களின் நினைவாகத் ’தாமரை’ 
மலர்களைக் காட்டியே 
என் பதிவுகளை நிறைவு செய்து, 
நான் எனக்குள் ஓர் ஆறுதல் அடைந்துள்ளேன். 





ஓர் விநாயகர் சதுர்த்தியன்று தாங்கள் பிறந்ததாக
என்னிடம் சொல்லியிருந்தீர்கள் !

ஆன்மீக உலகுக்கு 
முழுமுதற் கடவுளாம் 
விநாயகர் போலவே,

வலைப்பதிவு உலகில் 
தங்களின் புகழும், நினைவுகளும் 
என்றும் நீடித்து நிற்கும் !




பரம பக்தையானத் தங்களுக்கு 
இறைவனின் திருவடிகளைச் சீக்கரமாக அடைய 
மிகச்சுலபமாக விசா கிடைத்து விட்டது.

எனக்கான அந்த விசா கிடைக்க 
எப்போது ப்ராப்தமோ தெரியவில்லை!

அதுவரை 
"வாசிப்பது என்பது சுவாசிப்பது ! 
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”
என்ற தங்களின் வழிகாட்டுதல்களின்படி

பின்னூட்டங்கள் + விமர்சனங்கள் உள்பட
உங்களின் பழைய எழுத்துக்களையும் 

பிற பதிவர்களின் புதிய எழுத்துக்களையும் 
என்னால் இயன்றவரை
வாசித்துக்கொண்டிருக்கிறேன். 




என்றும் நீங்காத நினைவுகளுடன்


      
VGK