என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

17] புனிதமான அன்பே சிவம் !

2
ஸ்ரீராமஜயம்


அன்பு தான் நல்லதைச் செய்வது. நலனும் இன்பமும் தருவது லக்ஷ்மிகரம் என்று சொல்கிற ஒரு நிறைவான அழகைப் பரப்புவது.

புனிதத்தன்மை என்பதோடு இணைபிரியாமல் சேர்ந்தது அன்பு. 

ஆசையும் காமமும் புனிதமில்லை. 

அன்புதான் புனிதம். 

அதனால்தான் ’அன்பேசிவம்’ என்று சொல்வது. 

இப்போது நம் ‘கை’ நாமாகத்தோன்றுகிறது.

நம் குரல் நாமாகத்தோன்றுகிறது.

நம் உடம்பு நாமாகத்தோன்றுகிறது.

இதுபோல உலகனைத்தும் நாமாகி விட வேண்டும்.

அப்படிப்பட்ட குணம் ஒருவனுக்கு அனுபவத்தில் வந்தால் அவன் சண்டாளனாக இருந்தாலும் அவன்தான் பண்டிதன். 

இந்த ஞானம் தான் மாறாத ஆனந்தமான மோட்சம்.

இந்த சரீரத்தில் இருக்கும்போதே அனுபவிக்கக்கூடிய மோட்சம்.


oooooOooooo


அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 



முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10 

முன் கதை பகுதி- 3 of 10    

முன் கதை பகுதி- 4 of 10  

முன் கதை பகுதி- 5 of 10  

முன் கதை பகுதி- 6 of 10  ..... தங்கள் நினைவுக்காக 

மிராசுதார் வாயப்பொத்தியபடியே, ”ஆமாம் ... பெரியவா ... பந்தியில் சர்க்கரைப்பொங்கல் மட்டும் என் கையால் நானே பரிமாறினேன்” என்று குழைந்தார். 

ஸ்வாமிகள் விடவில்லை. “சரி ... அப்படி சர்க்கரைப் பொங்கலை நீ போடறச்சே, பந்தி தர்மத்தோடு பரிமாறினதா ஒம் மனசாட்சி சொல்றதா?” என்று கேட்டார் கடுமையாக.

வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆச்சார்யாளே பேசினார்.

“நீ சொல்ல வேண்டாம், நானே சொல்றேன். நீ சர்க்கரைப்பொங்கல் போடறச்ச, அது பரம ருசியா இருந்ததாலே, வைதீகாளெல்லாம் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டா! நீயும் நிறைய போட்டே. 

ஆனா தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் ’சர்க்கரைப் பொங்கல் இன்னும் போடுடாப்பா ... ரொம்ப ருசியா இருக்குனு பலதடவை வாய்விட்டுக் கேட்டும்கூட, நீ காதிலே வாங்கிண்டு, அவருக்குப் போடாமலேயே போனியா இல்லியா?   

அவரும் எத்தனை தடவ வாய் விட்டுக்கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்டியே  .... இது தர்மமா? ஒரு மஹா ஸாதுவை இப்படி அவமானப் படுத்திப்டியே....” மிகுந்த துக்கத்துடன் மெளனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள்.

மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது. 

கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள்.  சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.

பதினைந்து நிமிடங்கள் மெளனம். பிறகு கண்களைத்திறந்து மெளனம் கலைந்தார் ஆசார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. அச்சார்யாளே, நாராயணஸ்வாமி ஐயரைப்பார்த்து, தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார். 


[பகுதி 7 of 10]


”மிராசுதார்வாள்! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தோரு வயசாகிறது. தன்னோட பதினாறாவது வயசிலேந்து, எத்தனையோ சிவச் க்ஷேத்ரங்கள்ளே ஸ்ரீ ருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்போதுமே அவர் நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு, அப்பேர்ப்பட்ட மஹான் அவர். நீ நடந்துண்ட விதம் மஹா பாபமான காரியம் .... மஹா மஹா பாபமான காரியம்! .... மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். கண்மூடி கண்மூடி மீண்டும் மெளனமாகிவிட்டார்.  சற்றுப்பொறுத்து ஆச்சார்யாள் மீண்டும் தொடர்ந்தார். 

“நீ பந்தி பேதம் பண்ணின காரியம் இருக்கே .... அது கனபாடிகள் மனஸை ரொம்பவும் பாதித்திடுச்சு. அவர் என்ன காரியம் செஞ்சார் தெரியுமா நோக்கு? சொல்றேன் கேளு! 

நேத்திக்கு சாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூருக்குப் போகலே.

திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ’அஸ்மேத’ [பெரிய பிரகாரப்] பிரதக்ஷணம் மூணு தடவைப் பண்ணினார்.  

நேரா மஹாலிங்க ஸ்வாமிக்கு முன்னால் போய் நின்னார். கைகூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்தித்தார் தெரியுமா? மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். 

தொடரும்




[இதன் தொடர்ச்சி 01.07.2013 திங்கட்கிழமை வெளியாகும்]






என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

வியாழன், 27 ஜூன், 2013

16] வாய்ச்சொல் வீரர்கள் !


2
ஸ்ரீராமஜயம்



பெரிதாக வாய்ப்பந்தல் போட்டு விட்டு, வாழ்க்கையில் வேறுவிதமாக இருந்தானானால் அவன் எத்தனை அழகாக சத்தியத்தை எடுத்துச் சொன்னாலும், அதற்கு மற்றவர்களை தூண்டிவிடும் சக்தி இருக்காததால், அது சத்தியத்தோடு சேரவே சேராது. உயிரல்லாத வெற்றுப்பேச்சான சத்தியம் சத்தியமேயில்லை.

தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. 

கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.

போதும் என்ற மனசோடு சம்பாதனம் செய்து [நியாயமான முறையில் சம்பாதித்து] அதை கவனத்துடன் செலவழிக்க வேண்டும்.


oooooOooooo

அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 


முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10 

முன் கதை பகுதி- 3 of 10    

முன் கதை பகுதி- 4 of 10  

முன் கதை பகுதி- 5 of 10  ..... தங்கள் நினைவுக்காக 

”நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறதை நான் சொல்றேன், கேட்டுக்கோ .... நோக்கு சொல்ல வெட்கமாயிருக்குப்போல. 

வைதீகாளையெல்லாம் வரிசையா ஸ்வாமி சந்நதியிலே ஒக்காத்தி வெச்சு, தலைக்குப் பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்ட வந்தபோது, ’இவர்தான் சரியா ருத்ரம் சொல்லலியே .... இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூவா கொடுக்கணும்?’னு நெனச்சு ஏழு ரூவா ஸம்பாவனை பண்ணினே. ஏதோ அவரைப்பழி வாங்கிட்டதா எண்ணம் நோக்கு. 

கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணினாரா பாத்தியா? நீ கொடுத்ததை வாங்கிண்டு அப்படியே வேஷ்டித் தலைப்பிலே முடிஞ்சிண்டார்.  நா சொல்றதெல்லாம் சரிதானே சொல்லு” என்று உஷ்ணமானார் ஆச்சார்யாள்.

பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர். ஒருவரும் வாயைத் திறக்கவில்லை.  

”நேற்று திருவிடைமருதூர் கோயிலிலே நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?’  என அங்கே குழுமியிருந்த பக்தர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

மிராசுதார் ஸ்ரீ பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, “தப்புத்தான் பெரியவா, ஏதோ அக்ஞானத்தில் அப்படியெல்லாம் நடந்துண்டேன். இனிமேல் அப்படி நடந்துக்கவே மாட்டேன்! என்னை நீங்க மன்னிச்சுடுங்கோ” என்று சொல்லி முடிப்பதற்குள், பெரியவா “இரு... இரு...! இத்தோடு முடிஞ்சிட்டாத்தான் பரவாயில்லையே .... ஜப பிராமணாளுக்கெல்லாம் அங்க மஹாதானத்தெரு ராமச்சந்திர ஐயர் கிருஹத்திலே தானே  சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே?” என்று ஓர் கேள்வியைப் போட்டார்.     

“ஆமாம், பெரியவா” இது மிராசுதார்.

உடனே ஆசார்யாள், ”சாப்பாடெலாம் பரமானந்தமா நன்னாத்தான் போட்டே.  பந்தியிலே நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப்பருப்பு, திராக்ஷையெல்லாம் போட்டு சர்க்கரைப் பொங்கல் பண்ணச்சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே ... சரியா?” என்று கேட்டார். 

வெலவெலத்துப்போய் விட்டார் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். 





[பகுதி 6 of 10]

மிராசுதார் வாயப்பொத்தியபடியே, ”ஆமாம் ... பெரியவா ... பந்தியில் சர்க்கரைப்பொங்கல் மட்டும் என் கையால் நானே பரிமாறினேன்” என்று குழைந்தார். 

ஸ்வாமிகள் விடவில்லை. “சரி ... அப்படி சர்க்கரைப் பொங்கலை நீ போடறச்சே, பந்தி தர்மத்தோடு பரிமாறினதா ஒம் மனசாட்சி சொல்றதா?” என்று கேட்டார் கடுமையாக.

வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆச்சார்யாளே பேசினார்.

“நீ சொல்ல வேண்டாம், நானே சொல்றேன். நீ சர்க்கரைப்பொங்கல் போடறச்ச, அது பரம ருசியா இருந்ததாலே, வைதீகாளெல்லாம் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டா! நீயும் நிறைய போட்டே. 

ஆனா தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் ’சர்க்கரைப் பொங்கல் இன்னும் போடுடாப்பா ... ரொம்ப ருசியா இருக்குனு பலதடவை வாய்விட்டுக் கேட்டும்கூட, நீ காதிலே வாங்கிண்டு, அவருக்குப் போடாமலேயே போனியா இல்லியா?   

அவரும் எத்தனை தடவ வாய் விட்டுக்கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்டியே  .... இது தர்மமா? ஒரு மஹா ஸாதுவை இப்படி அவமானப் படுத்திப்டியே....” மிகுந்த துக்கத்துடன் மெளனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள்.

மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது. 

கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள்.  சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.

பதினைந்து நிமிடங்கள் மெளனம். பிறகு கண்களைத்திறந்து மெளனம் கலைந்தார் ஆசார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. அச்சார்யாளே, நாராயணஸ்வாமி ஐயரைப்பார்த்து, தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார். 

தொடரும்






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

[இதன் தொடர்ச்சி 29.06.2013 சனிக்கிழமையோ  
அல்லது 30.06.2013 ஞாயிற்றுக்கிழமையோ வெளியாகும்]




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

செவ்வாய், 25 ஜூன், 2013

15] பணம் தான் பிரதானமா ?

2
ஸ்ரீராமஜயம்




‘பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும்.  

பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடு தான் ஆச்சார நெறிமுறைகள், கல்வியறிவு எல்லாம் போய்விட்டன. 

நம் தேசத்தில் பணம் முக்கியமாய் இருந்ததே இல்லை. 

உலக வாழ்க்கையை, ஆத்ம அபிவிருத்திக்கு துணையாக மட்டும் வைத்துக் கொள்வதுதான், நமது தேச நெறிமுறை.

என்ன பண்ணுவது என்று சரியாகத் தெரியாமல், புரியாமல் நாமாகவே ஏதேதோ முயற்சி பண்ணி திண்டாடுவதாக இல்லாமல் இலட்சியத்தை அடைந்த பெரியவர்கள் வழிமுறையாக ”இப்படி இப்படி பண்ணுப்பா” என்று போட்டுக் கொடுத்திருக்கும் வழிமுறைப்படி பண்ணுவதற்குத்தான் ’சாதனை’ என்று பெயர்.

oooooOooooo


அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 


முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10 

முன் கதை பகுதி- 3 of 10    

முன் கதை பகுதி- 4 of 10  ..... தங்கள் நினைவுக்காக 

வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள், “என்ன சொன்னே ...  என்ன சொன்னே .... நீ? பணம் இருந்தால் எது வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ?

”தேபெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகளோட  யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேத வித்தோட கால்தூசி பெறுவயா நீ? அவரப்பத்தி என்னமா நீ அப்படிச் சொல்லலாம்? 

நேத்திக்கு மஹாலிங்க ஸ்வாமி சந்நதியிலே என்ன நடந்ததுங்கறத இப்போ நா புரிஞ்சுண்டுட்டேன்! நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு! 

நேத்திக்கு ஜப நேரத்திலே ...... கனபாடிகள் முடியாம கண் மூடி உட்கார்ந்திருந்த நேரத்திலே ........... நீ அவர்ட்ட போய் கடுமையாக “ஏங்காணும் ... காசு வாங்கல நீர்! இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்திருக்கிறீரே”னு கத்தினது உண்டா இல்லியா?”  என்று பொரிந்து தள்ளிவிட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப்போனது.

கை-கால்கள் நடுங்க சாஷ்டாங்கமாக ஸ்ரீமஹாபெரியவா கால்களில் விழுந்தார், நாராயணஸ்வாமி ஐயர்.ஸ்வாமிகள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார். 

வாயப்பொத்திக்கொண்டு நடுக்கத்துடன், “தப்புதான் பெரியவா! இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பார்த்து, ஸ்வாமி சந்நதியிலே சொன்னதும் வாஸ்தவம் தான். என்னை மன்னிச்சுடணும் பெரியவா!” என்று கெஞ்சினார். பெரியவா விடவில்லை. 

“இரு ... இரு ... நீ அந்த ஒரு தப்பை மாத்திரமா பண்ணினே? சொல்றேன் கேளு! எல்லோருக்கும் நீ தக்ஷிணை கொடுத்தியோள்யோ ... ஒவ்வொரு வைதீகாளுக்கும்  நீ எவ்வளவு தக்ஷிணை கொடுத்தே?” என்று கேட்டார். 

மிராசுதார், மென்று விழுங்கிய படியே, ”தலைக்குப்பத்து ரூபா கொடுத்தேன் பெரியவா” என்றார் ஈனஸ்வரத்தில்.   

ஸ்வாமிகள் நிறுத்தவில்லை. “எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்துப்பத்து ரூவாவா கொடுத்தே! எனக்கு எல்லாம் தெரியும்” என்று மடக்கினார். 

மிராசுதார் மெளனமாக நின்றார். ஆனால் ஆச்சார்யாள் விடவில்லை. 


[பகுதி 5 of 10]


”நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறதை நான் சொல்றேன், கேட்டுக்கோ .... நோக்கு சொல்ல வெட்கமாயிருக்குப்போல. 

வைதீகாளையெல்லாம் வரிசையா ஸ்வாமி சந்நதியிலே ஒக்காத்தி வெச்சு, தலைக்குப் பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்ட வந்தபோது, ’இவர்தான் சரியா ருத்ரம் சொல்லலியே .... இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூவா கொடுக்கணும்?’னு நெனச்சு ஏழு ரூவா ஸம்பாவனை பண்ணினே. ஏதோ அவரைப்பழி வாங்கிட்டதா எண்ணம் நோக்கு. 

கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணினாரா பாத்தியா? நீ கொடுத்ததை வாங்கிண்டு அப்படியே வேஷ்டித் தலைப்பிலே முடிஞ்சிண்டார்.  நா சொல்றதெல்லாம் சரிதானே சொல்லு” என்று உஷ்ணமானார் ஆச்சார்யாள்.

பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர். ஒருவரும் வாயைத் திறக்கவில்லை.  

”நேற்று திருவிடைமருதூர் கோயிலிலே நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?’  என அங்கே குழுமியிருந்த பக்தர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

மிராசுதார் ஸ்ரீ பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, “தப்புத்தான் பெரியவா, ஏதோ அக்ஞானத்தில் அப்படியெல்லாம் நடந்துண்டேன். இனிமேல் அப்படி நடந்துக்கவே மாட்டேன்! என்னை நீங்க மன்னிச்சுடுங்கோ” என்று சொல்லி முடிப்பதற்குள், பெரியவா “இரு... இரு...! இத்தோடு முடிஞ்சிட்டாத்தான் பரவாயில்லையே .... ஜப பிராமணாளுக்கெல்லாம் அங்க மஹாதானத்தெரு ராமச்சந்திர ஐயர் கிருஹத்திலே தானே  சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே?” என்று ஓர் கேள்வியைப் போட்டார்.     

“ஆமாம், பெரியவா” இது மிராசுதார்.

உடனே ஆசார்யாள், ”சாப்பாடெலாம் பரமானந்தமா நன்னாத்தான் போட்டே.  பந்தியிலே நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப்பருப்பு, திராக்ஷையெல்லாம் போட்டு சர்க்கரைப் பொங்கல் பண்ணச்சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே ... சரியா?” என்று கேட்டார். 

வெலவெலத்துப்போய் விட்டார் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். 



தொடரும்






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

[இதன் தொடர்ச்சி 27.06.2013 வியாழக்கிழமை வெளியாகும்]





என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்


ஞாயிறு, 23 ஜூன், 2013

14] ஏன் இந்த அகங்காரம்?

2
ஸ்ரீராமஜயம்





ஆசைக்கும் வெறுப்பிற்கும் காரணம் அகங்காரம்.

அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களிடையிலும் உயர்வு, தாழ்வு தெரியாது.

நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம். 

பணக்காரன் பணம் தருவதும், ஏழை உழைப்பு தருவதும் பெரிய தியாகமில்லை.

பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்றுகொண்டு, மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும். 

ஏழை தன் கூழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக்கொள்வதற்கு பதிலாக காலணா நன்கொடை கொடுக்க வேண்டும். அதுதான் பெரிது.

தன் பெண்டாட்டியை, தன் சம்பாத்தியத்திற்கு உள்ளேயே, கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான், புருஷனுக்கு கெளரவம்.


oooooOooooo



அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 


முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10 

முன் கதை பகுதி- 3 of 10  ..... தங்கள் நினைவுக்காக :  



எதிரில் வைத்திருந்த பிரஸாதம் அப்படியே இருந்தது.  ஆசார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக்கொள்ளவில்லை. 

“அப்படீன்னா ஆத்மார்த்தத்துக்காகவோ, லோக க்ஷேமார்த்தமாவோ இதை நீ பண்ணலேன்னு தெரியறது” என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத்திறந்தார் ஆசார்யாள். அவர் முகத்தில் அப்படியொரு தெளிவு!  



கண்மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள் பல விஷயங்களைப் புரிந்துகொண்டுவிட்ட ஒரு ஞானப் பார்வை. 



அனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடர்ந்தார், “சரி, ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா?”

“பதினோரு வேத பண்டிதர்களை ஏற்பாடு பண்ணியிருந்தேன், பெரியவா!” இது மிராசுதார். 

உடனே ஸ்வாமிகள், “வைதீகாள் எல்லாம் யார் யாரு? எந்த ஊர்ன்னு எல்லாம் தெரியுமோ? நீ தானே எல்லா ஏற்பாடும் பண்ணினே? என்று விடாப்பிடியாக விசாரித்தார். 

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பக்தர்களுக்கு, ’பெரியவா ஏன் இப்படி துருவித்துருவி விசாரணை செய்கிறார்’ என வியப்பாக இருந்தது. இருந்தாலும் ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார், என்பதையும் புரிந்துகொண்டார்கள். 

மிராசுதார் தன் இடுப்பில் சொருகியிருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.

”வாசிக்கிறேன், பெரியவா! திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாஸ கனபாடிகள், ராஜகோபால சிரெளதிகள், மருத்துவக்குடி சந்தான வாத்யார், சுந்தா சாஸ்திரிகள், சுப்ரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக்குடி வெங்குட்டு வாத்யார் .... அப்புறம் என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள், “எல்லாம் நல்ல அயனான  வேதவித்துக்களாகத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கே. அது சரி ... உன் லிஸ்டுலே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கான்னு பாரு”என்று இயல்பாகக் கேட்டார்.

உடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, “இருக்கு பெரியவா, இருக்கு. அவரும் ஜபத்துக்கு வந்திருந்தார்!” என ஆச்சர்யத்தோடு பதிலளித்தார்.



சூழ்ந்து நின்ற பக்தர்களுக்கெல்லாம், ’பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப்பற்றி தூண்டித் துருவித்துருவி விசாரிக்கிறார்’ என்ற வியப்பே தவிர,   ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.

ஸ்வாமிகள், “பேஷ் ... பேஷ்” வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லியிருந்தயா? ரொம்ப நல்ல கார்யம். மஹா வேத வித்து. இப்போ கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்பவும் சிரமப்படும். ஜபத்தைப் புடிச்சு [மூச்சடக்கி] சொல்றதுக்கு ரொம்ப கஷ்டப்படுவார்” என்று கூறியதுதான் தாமதம்..... 



மிராசுதார் படபடவென்று உயர்ந்த குரலில் ”ஆமாம் ... பெரியவா ... நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே! சில நேரம் வாயே திறக்காமல் கண்ணை மூடிண்டு ஒக்கார்ந்திருந்தார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால் ஜப ’ஸங்க்யை’யும் [எண்ணிக்கை] கொறையறது. 



நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார்.  ஏண்டா அவரை வரவழைச்சோம்ன்னு ஆயிடுத்துப் பெரியவா” என்று சொல்லி முடித்தது தான் தாமதம் ........... பொங்கி விட்டார் ஸ்வாமிகள். 


[பகுதி 4 of 10]


வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள், “என்ன சொன்னே ...  என்ன சொன்னே .... நீ? பணம் இருந்தால் எது வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ?

”தேபெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகளோட  யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேத வித்தோட கால்தூசி பெறுவயா நீ? அவரப்பத்தி என்னமா நீ அப்படிச் சொல்லலாம்? 

நேத்திக்கு மஹாலிங்க ஸ்வாமி சந்நதியிலே என்ன நடந்ததுங்கறத இப்போ நா புரிஞ்சுண்டுட்டேன்! நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு! 

நேத்திக்கு ஜப நேரத்திலே ...... கனபாடிகள் முடியாம கண் மூடி உட்கார்ந்திருந்த நேரத்திலே ........... நீ அவர்ட்ட போய் கடுமையாக “ஏங்காணும் ... காசு வாங்கல நீர்! இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்திருக்கிறீரே”னு கத்தினது உண்டா இல்லியா?”  என்று பொரிந்து தள்ளிவிட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப்போனது.

கை-கால்கள் நடுங்க சாஷ்டாங்கமாக ஸ்ரீமஹாபெரியவா கால்களில் விழுந்தார், நாராயணஸ்வாமி ஐயர். ஸ்வாமிகள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார். 

வாயப்பொத்திக்கொண்டு நடுக்கத்துடன், “தப்புதான் பெரியவா! இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பார்த்து, ஸ்வாமி சந்நதியிலே சொன்னதும் வாஸ்தவம் தான். என்னை மன்னிச்சுடணும் பெரியவா!” என்று கெஞ்சினார். பெரியவா விடவில்லை. 

“இரு ... இரு ... நீ அந்த ஒரு தப்பை மாத்திரமா பண்ணினே? சொல்றேன் கேளு! எல்லோருக்கும் நீ தக்ஷிணை கொடுத்தியோள்யோ ... ஒவ்வொரு வைதீகாளுக்கும்  நீ எவ்வளவு தக்ஷிணை கொடுத்தே?” என்று கேட்டார். 

மிராசுதார், மென்று விழுங்கிய படியே, ”தலைக்குப்பத்து ரூபா கொடுத்தேன் பெரியவா” என்றார் ஈனஸ்வரத்தில்.   

ஸ்வாமிகள் நிறுத்தவில்லை. “எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்துப்பத்து ரூவாவா கொடுத்தே! எனக்கு எல்லாம் தெரியும்” என்று மடக்கினார். 

மிராசுதார் மெளனமாக நின்றார். ஆனால் ஆச்சார்யாள் விடவில்லை. 

தொடரும் 





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

[இதன் தொடர்ச்சி 25.06.2013 செவ்வாய்க்கிழமை வெளியாகும்]



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்




வெள்ளி, 21 ஜூன், 2013

13] களியாட்டம்

2
ஸ்ரீராமஜயம்




இந்த நாளில் EXCITE [கிளர்ச்சியூட்டுவது] பண்ணுவதுதான் ENTERTAINMENT [களியாட்டம்] என்று வைத்துகொண்டிருக்கிறார்கள்.

அந்த நாளிலோ ELEVATE [உன்னதமாக்குவது] பண்ணுவதுதான் ENTERTAINMENT என்று தெரிந்துகொண்டு, எத்தனைதான் உணர்ச்சிகளைக் கிளறி விட்டாலும் முடியாத, ஆத்மார்த்த மனதாக்கி சாதகத்தில் அடங்கச் செய்தார்கள்.

”எண் சாண் உடம்பிற்கு சிரசே [தலையே] பிரதானம்” என்கிறோம். அப்படி வேதத்திற்கும் ஒரு சிரசு [தலை] இருக்கிறது. உபநிடதங்கள் தான் அப்படிப்பட்ட தலை.

மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.


ooooooOoooooo


அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 



முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10  ..... தங்கள் நினைவுக்காக :  

ஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரரின் பதற்றத்தையும் தவிப்பையும் பார்த்த, மடத்தைச் சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக்கொடுத்து, நாராயணஸ்வாமி ஐயரை பெரியவாளுக்கு அருகே அழைத்துச்சென்றார். 


பெரியவாளைப் பார்த்ததும் மிராசுதாரருக்கு கையும் காலும் ஓடலை. தொபுக்கடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார். மஹா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார். ’என்ன விஷயம்?’ என்பதைப் போலப் புருவங்களை உயர்த்தினார்.


உடனே மிராசுதார் கைகள் உதற “பிரஸாதம் .. பிரஸாதம் .. பெரியவா” என்று குழறினார். 

மீண்டும் பெரியவர், “என்ன பிரஸாதம்?” என்று கேட்டு அவரைப்பார்த்தார். 

அதற்குள் மூட்டையைப்பிரித்து, பிரஸாதத்தை எடுத்து அங்குள்ள மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாக சமர்ப்பித்தார் மிராசுதார். அதில் ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், தேங்காய் மூடிகள், பூவன் வாழைப்பழங்கள் சில இருந்தன.


மஹாஸ்வாமிகள், “இதெல்லாம் எந்த க்ஷேத்ர பிரஸாதம்?” என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப்பார்த்தார்.    


மிராசுதார் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, மிகவும் விநயமாக, “பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூரிலே மஹாலிங்க ஸ்வாமிக்கு, ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சேன். மஹந்யாஸ ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம். அந்தப்பிரஸாதம் தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறத்துக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹரம் பண்ணணும்!” என்று சொல்லி முடித்தார். 


உடனே பெரியவா அந்தப்பிரஸாத மூங்கில்த்தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக்கேட்டார், “நாராயணஸ்வாமி! நீ பெரிய மிராசு தான், இருந்தாலும் செலவுக்கு இன்னும் வேறு யாரையாவது கூட்டு சேர்த்துண்டு, இந்த ருத்ராபிஷேகத்தை ஸ்வாமிக்குப் பண்ணினயோ?” 


“இல்லே பெரியவா! நானே என் சொந்தச்செலவிலே பண்ணினேன்” என்று அந்த நானேவுக்கு சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார். 

பெரியவாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். அத்துடன் விடவில்லை. ”லோக க்ஷேமார்த்ததிற்கு [உலக நன்மைக்கு] மத்யார்ஜுன க்ஷேத்ரத்திலே [திருவிடைமருதூரில்] ருத்ராபிஷேகம் பண்ணினையாக்கும்?” என்று கேட்டார். 


உடனே மிராசுதார் ஆதங்கத்துடன் , “இல்லே பெரியவா! ரெண்டு மூணு வருஷமாவே வயல்கள்லே சரியான விளைச்சல் கிடையாது.  சில வயல்கள் தரிஸாகவே கெடக்கு. 

திருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப்பார்த்தேன். அவர்தான் “சித்ரா பெளர்ணமி அன்னிக்கு, மஹாலிங்க ஸ்வாமிக்கு, மஹந்யாஸ ருத்ராபிஷேகம் நடத்து; அமோக விளைச்சல் கொடுக்கும்”ன்னு சொன்னார். அத நம்பித்தான் பண்ணினேன் பெரியவா!“ என்று குழைந்தார்.




[பகுதி 3 of 10]




எதிரில் வைத்திருந்த பிரஸாதம் அப்படியே இருந்தது.  ஆசார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக்கொள்ளவில்லை. 

“அப்படீன்னா ஆத்மார்த்தத்துக்காகவோ, லோக க்ஷேமார்த்தமாவோ இதை நீ பண்ணலேன்னு தெரியறது” என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத்திறந்தார் ஆசார்யாள். அவர் முகத்தில் அப்படியொரு தெளிவு!  

கண்மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள் பல விஷயங்களைப் புரிந்துகொண்டுவிட்ட ஒரு ஞானப் பார்வை. 

அனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடர்ந்தார், “சரி, ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா?”

“பதினோரு வேத பண்டிதர்களை ஏற்பாடு பண்ணியிருந்தேன், பெரியவா!” இது மிராசுதார். 

உடனே ஸ்வாமிகள், “வைதீகாள் எல்லாம் யார் யாரு? எந்த ஊர்ன்னு எல்லாம் தெரியுமோ? நீ தானே எல்லா ஏற்பாடும் பண்ணினே? என்று விடாப்பிடியாக விசாரித்தார். 

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பக்தர்களுக்கு, ’பெரியவா ஏன் இப்படி துருவித்துருவி விசாரணை செய்கிறார்’ என வியப்பாக இருந்தது. இருந்தாலும் ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார், என்பதையும் புரிந்துகொண்டார்கள். 

மிராசுதார் தன் இடுப்பில் சொருகியிருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.

”வாசிக்கிறேன், பெரியவா! திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாஸ கனபாடிகள், ராஜகோபால சிரெளதிகள், மருத்துவக்குடி சந்தான வாத்யார், சுந்தா சாஸ்திரிகள், சுப்ரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக்குடி வெங்குட்டு வாத்யார் .... அப்புறம் என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள், “எல்லாம் நல்ல அயனான  வேதவித்துக்களாகத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கே. அது சரி ... உன் லிஸ்டுலே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கான்னு பாரு” என்று இயல்பாகக் கேட்டார்.

உடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, “இருக்கு பெரியவா, இருக்கு. அவரும் ஜபத்துக்கு வந்திருந்தார்!” என ஆச்சர்யத்தோடு பதிலளித்தார்.


சூழ்ந்து நின்ற பக்தர்களுக்கெல்லாம், ’பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப்பற்றி தூண்டித் துருவித்துருவி விசாரிக்கிறார்’ என்ற வியப்பே தவிர,   ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.

ஸ்வாமிகள், “பேஷ் ... பேஷ்” வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லியிருந்தயா? ரொம்ப நல்ல கார்யம். மஹா வேத வித்து. இப்போ கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்பவும் சிரமப்படும். ஜபத்தைப் புடிச்சு [மூச்சடக்கி] சொல்றதுக்கு ரொம்ப கஷ்டப்படுவார்” என்று கூறியதுதான் தாமதம்..... 

மிராசுதார் படபடவென்று உயர்ந்த குரலில் ”ஆமாம் ... பெரியவா ... நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே! சில நேரம் வாயே திறக்காமல் கண்ணை மூடிண்டு ஒக்கார்ந்திருந்தார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால் ஜப ’ஸங்க்யை’யும் [எண்ணிக்கை] கொறையறது. 


நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார்.  ஏண்டா அவரை வரவழைச்சோம்ன்னு ஆயிடுத்துப் பெரியவா” என்று சொல்லி முடித்தது தான் தாமதம் ........... 


பொங்கி விட்டார் ஸ்வாமிகள். 




தொடரும்




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

[இதன் தொடர்ச்சி 23.06.2013 ஞாயிறு வெளியாகும்]








என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்