என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

57] மதசார்பற்ற அரசு

2
ஸ்ரீராமஜயம்



சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை ‘செக்யூலரிஸம்’ என்பதாக இருக்க வேண்டும் என்பதே  தற்போது அரசியலாரின் கருத்தாக உள்ளது. 

இந்த ‘செக்யூலரிஸம்’ என்பது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்ததாக இல்லாதிருப்பதே என்று அவர்களால் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. 

இது சரியான கருத்தல்ல என்று எடுத்துக்காட்டி, ‘செக்யூலரிஸம்’ என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது. 

தற்போது எண்ணுவதுபோல, அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து இல்லாமல், அதாவது மதத்தொடர்பே அற்று இருப்பதால், இதைச் சொல்ல வேண்டியுள்ளது. 

மாறாக ’செக்யூலரிஸம்’ என்பது, ’அதாவது அரசாங்கமானது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் மட்டும் சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே’ என்பது தான் சரியான பொருள்.

ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து, பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும்.  




oooooOooooo



பெரியவாளும் ஆங்கிலமும்


மொழி ஆராய்ச்சியில் எடுத்தாலும் அப்படித்தான் பெரியவா  பேசும் ஆங்கிலம் மிகவும் கடினமாக உயர்ந்ததாக இருக்கும்.

அகராதியைப் புரட்டாமல் அர்த்தம் தெரியாது. நூறு வருடத்துக்கு முன்பே அவர் கான்வென்டில் படித்தவர்.ஆகவே அற்புதமாக ஆங்கிலத்தில் உரையாடுவார்.

ஒரு முறை விமான நிலையத்தைக் காண, பெரியவா மீனம்பாக்கம் சென்றார். எல்லா இடங்களையும் பார்வையிட்டபின் இன்ஜினீயரிங் செக்‌ஷன் வந்தது. 

அங்குள்ளவற்றை ஒருவர் விவரிக்கப்  பிரயத்தனப் பட்டார். அவருக்கு தமிழில் சரளமாகப் பேச வரவில்லை. ஆனால் பெரியவாளுக்குத் தமிழில் சொல்லாவிட்டால் புரியாதே  என்று நினைத்தார். 

"ஓ! அதைத்தானே Stratosphere-னு சொல்லுவா!" என்று பெரியவர்  சொல்ல... பொறியாளருக்குத் தூக்கிவாரிப்போட்டது.

'இத்தனை நேரம் தமிழ் வார்த்தைகளையே தேடிக் கொண்டிருந்தேனே.. இவருக்கு போய் ஆங்கிலம் தெரியாது என்று நினைத்தேனே!'  என்று வெட்கினார்.

இப்படித்தான் அடிக்கடி உத்தியோகம் மாறுகிற ஒருவர் வந்தார்.  



"இப்போ எதில் இருக்கே?" என்று கேட்கிறார் பெரியவர்.

அவருக்குப் புரியணுமேன்னு நினைச்சு மிகவும் கஷ்டப்பட்டு,  "அந்தக் கணக்கு போடற யந்திரத்துக்கு பேப்பர் தரும் வேலை!"  என்றார்.

"Computer Stationery  -தானே நீ சொன்னது?" என்று பெரியவர் அவர் சங்கடத்தைத் தவிர்க்கிறார். 

எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆழம் கண்டவராயிற்றே!


[Thanks to Amritha Vahini]  


oooooOooooo



பெரியவாளின் ஞாபகசக்தி



தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அடுத்த ஊர் காவேரிப்பட்டணம். 1944-ம் ஆண்டு மஹா பெரியவா அங்கே முகாமிட்டிருந்தார. ஒரு மாத காலமாக மஹான் அங்கே தங்கியிருந்தபோது நித்திய நிகழ்ச்சிகளில் தினந்தோறும், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பிரபலங்கள், அரசாங்க அலுவலர்கள் போன்றோர் தவறாமல் பங்கேற்பது உண்டு.



இந்தக் கும்பலில் அஞ்சல்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணனும் ஒருவர். மெத்தப் படித்தவர். காஞ்சி மஹான் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர். அதனால் காவேரிப்பட்டணத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது ஓய்வு நேரத்தில், மடத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் மஹானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்த்து. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிறார் என்பதே, அருள் பெற்றது போலத்தானே?

......... 

சில தினங்களில் மஹான் வேறு ஊருக்கு தனது முகாமை மாற்றிக் கொண்டார்.

இது நடந்து பல வருடங்களுக்குப் பின், மஹான் வேறு ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தார. நிறைய பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்றவண்ணம் இருந்தனர். அந்த வரிசையில் நின்றவர்களில் அஞ்சல் அதிகாரி கோபாலகிருஷ்ணனும் ஒருவர். ஓவ்வொருவராக நகர்ந்தபின், இவர் முறையும் வந்தது. நமஸ்காரம் செய்தபின் தீர்த்ததுக்காக தன் கையை நீட்டினார்.

தீர்த்தம் கொடுக்கும் முன், மஹான் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் கண்களைச் சுருக்கி இவரைப் பார்த்தார்.

எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் என்று நினைத்த அதிகாரி, “காவேரிப்பட்டணம் போஸ்ட் மாஸ்டர்.." என்று அடி எடுத்துக் கொடுக்க, மஹான் புன்முறுவலுடன் அவரை கைகளினால் ஆசீர்வதித்து, “பரத்வாஜ கோத்திரம்!” என்றார்.

இரண்டே வினாடிகளில் இந்த சந்திப்பு நிகழ்ந்துவிட்டது என்றாலும், அதிகாரிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கைதூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால், ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?

[Thanks to Amritha Vahini  26 09 2013]



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

56] திருமணத்தடைகள் நீங்க ...

2
ஸ்ரீராமஜயம்




கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந்தால் போதும்.

மூலம் ஆயில்யம்ன்னு நக்ஷத்திரங்களைப் பார்த்துண்டு அதனாலே பெண்களோட திருமணத்துக்குத் தடை ஏற்படக்கூடாது.

தோஷம்னு இருந்தா எல்லாத்துக்கும் பரிகாரம் இருக்கு. அந்தப் பரிகாரத்தை செய்துவிட்டு திருமணத்தை நடத்திக்கலாம்.

பிள்ளையைப்பெற்ற பெண்கள் முன்வந்து வரதட்சிணை வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்தால்தான் வரதட்சிணைக் கொடுமைக்கு முடிவு கட்ட வழி பிறக்கும்.

ஒழியணும் என்பதை விட்டு, வளரணும் என்று ஆரம்பித்தோமானால், அத்தனை பேதமும், த்வேஷமும். சண்டையும் போய்விடும்.



oooooOooooo

ஒரு நாள் போதுமா !
இன்றொரு நாள் போதுமா !! 

[திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் 
ஹேமநாத பாகவதர் போன்ற ஒருவர் பற்றிய சம்பவம்]

ஆடல் வள்ளலின் திருவிளையாடல் 64 என்பார்கள். நம் ஆச்சார்யாளின் திருவிளையாடல்கள் அனந்தம்.

ஸ்ரீ பரமாச்சார்யாள் ஸதாராவில் முகாமிட்டிருந்தார். 

ஸ்ரீ மஹாபெரியவா சந்நிதானம் என்றாலே வித்வத் சபைகளுக்குப் பஞ்சம் இருக்காது.

அனைத்துக்கலைகளும் அவருடைய போதனையால் வளர்ந்தது என்றால் மிகையாகாது.

ஸதாராவில் ஸ்ரீகிருஷ்ண சாஸ்திரி என்பவர் பண்டித தர்க்க வித்வானாக பிரகாசித்து வந்தார்.

அவருடைய பிள்ளை, பேரன் என பரம்பரையாக தர்க்க வாதத்தில் விற்பன்னராக இருந்து வந்தனர்.

அவருடைய க்ருஹத்திலேயே சாஸ்திர பாடசாலை வைத்து நடத்தி பலவித மாணாக்கர்களை தயார் படுத்தி வந்தார்.

ஸ்ரீ பரமாச்சார்யாள் ஸதாரா வந்ததும் தினமும் நடைபெறும் வித்வத் சபைகளில் பங்கெடுத்துக்கொண்டு, வேறு எவரும் வாதத்தில் வெற்றி பெற முடியாதபடி நடுவில் பல கேள்விகளைக் கேட்டு, யாரும் பதில் சொல்ல முடியாது திணறுவதைக்கண்டு, தக்ஷிண தேசத்தில் எனக்கு பதில் சொல்ல பண்டிதர் எவருமில்லை என்ற இறுமாப்புடன் இருந்து வந்தார்.

சர்வேஸ்வரனான ஆச்சார்யாளுக்கு அவர் எண்ணம் புரியாதா என்ன?

அதற்கான வேலைகளைத் தொடங்கினார் ஸ்ரீ பெரியவா

கும்பகோணத்திலுள்ள அத்வைத சபாவின் தலைவராக இருந்த விஷ்ணுபுரம் ஸ்ரீ ராமமூர்த்தி ஐயர் அவர்களிடம் தகவல் அனுப்பி பண்டிதராஜ் ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகளை உடனே ஸதாராவுக்கு அனுப்பி வைக்குமாறு சொன்னார்.

பண்டிதராஜ் ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் என்பவர் தலை சிறந்த வித்வான்.

கொச்சி ராஜா, தர்க்க சாஸ்திரம் படித்தவராயும், வாதத்தில் விருப்பமுடையவராகவும் இருந்ததனால், அடிக்கடி பண்டிதராஜ் அவர்களை வாதத்திற்கு அழைத்து, அவரின் வாதத் திறமைகளுக்கு சந்தோஷித்து, தனக்கு சமமான ஆசனத்தில் அவரை இருத்தி போஜனம் செய்வார் என்பது  ஸ்ரீ பண்டிதராஜ் அவர்களின் பெருமை அல்லவா!

ஆனால் அவருக்கு தேக ஆரோக்யம் பிரயாணம் செய்யும்படியாக அமையாமல் போன சமயத்தில் ஸ்ரீ பெரியவாளின் ஆக்ஞை வந்தது.

ஸ்ரீ பண்டிதராஜ் அவர்களின் அசெளகர்யம் என்னவென்றால், மலம் சிறுநீர் போன்ற விசர்ஜனங்கள் ட்யூப்பின் வழியாக வெளியேற்றும் படியாக இருந்து வந்தது. கும்பகோணத்தில் இருக்கும் போதே அவரின் உதவிக்கு இன்னொருவரை நாட வேண்டி இருந்தது.

இந்த மாதிரியான குருசேவை செய்ய வேண்டியிருப்பதை ஸ்ரீ பெரியவாளுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

ஆனால் ஆச்சார்யாள் அவருக்குப் பெருமை தேடித்தர சித்தம் கொண்டதால், இச்சிறுமையான விஷயங்களை மனதில் வாங்கிக்கொள்ளாது, “அவர் இங்கே கட்டாயம் வரணும் ...... அவாளுக்கு வேண்டிய செளகர்யங்களைப் பண்ணிக்கொடுத்து ரயிலிலே முதல் வகுப்புப்பொட்டியிலே [FIRST CLASS]  ஜாக்கிரதையா அழச்சுண்டு வாங்கோ” என உத்தரவே போட்டு விட்டார். 

அதன்படி பண்டிதராஜ் ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் ஸதாரா வந்து சேர்ந்தார்.

அன்றும் நம் ஹேமநாத பாகவதரான ஸதாரா ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளும் வந்தார். ஸ்ரீ பெரியவாளோ அவரை அழைத்து, “தக்ஷிண க்ஷேத்ரத்திலிருந்து ஒரு சிறிய தர்க்க வித்வான் வந்துள்ளார்; இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு நாளை உங்களுடன் விவாதிப்பார்” என்றார்.

நம் ஹேமநாத பாகவதரின் பிரதிநிதியான ஸதாரா சாஸ்திரிகளோ “ஒரு நாள் போதுமா!” என்ற பாவனையுடன் சென்று விட்டார்.

மறுநாள் ஸ்ரீ பெரியவா சந்ந்தியில் சபை தொடங்கியது. தர்க்க வாக்யார்த்தம் ஆரம்பிக்கப்பட்டது.

பண்டிதராஜ் ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் ஸ்ரீ மஹாபெரியவாளுக்கு குரு வந்தனம் செய்து பின் வாக்யார்த்தம் சொல்ல ஆரம்பித்தார்.

வழக்கம்போல ஸதாரா சாஸ்திரிகள் கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.

அதற்கு பண்டிதராஜ் அவர்கள் “நடுவில் எந்தக்கேள்விகளையும் தயவுசெய்து கேட்க வேண்டாம்; நான் முடித்தபின் நீங்கள் எத்தனைக் கேள்விகள் கேட்டாலும் பதில் சொல்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டார்.  

அதேபோல இடைவிடாது மூன்று மணி நேரங்கள் வாக்யார்த்தம் நடைபெற்றது. அனைத்தையும் சொல்லி முடித்தார் ஸ்ரீ பண்டிதராஜ். பின் பெரியவாளை சேவித்து அமர்ந்தார்.

ஸனாதன சங்கரரோ, ஸதாரா பண்டிதரை நோக்கி, ”இனி உங்கள் கேள்விகளைக் கேட்கத்தொடங்கலாம்” என குறுநகையுடன் தெரிவித்ததும். அவர் உடனே ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, ”என் கேள்விகளுக்கு மேல் அவர் அனைத்தும் பதிலாகச் சொல்லிவிட்டார். அவரின் பதில்களுக்கு என்னிடம் கேள்விகள் இல்லை” என்றார். 

மேலும் “ஸ்ரீ பெரியவா தக்ஷிண தேசத்து சிறிய வித்வான் என இவரை அறிமுகப்படுத்தினார்கள்;  சிறிய வித்வானே என்னைக் கேள்வி கேட்க முடியாமல் செய்திருக்கிறார் எனில் தக்ஷிண தேசத்துப் பெரிய வித்வான்கள் முன் நான் வாய் திறக்கக்கூட அருகதை இல்லை” என மனமுவந்து பெரிய மனதோடு ஒப்புக்கொண்டார்.

அதற்கு பண்டிதராஜ் அவர்கள், “இது நம் ஸ்ரீ ஆச்சார்யாளின் பிரபாவமேயன்றி என் சாமர்த்தியம் ஏதும் இல்லை. ஸ்ரீ ஆச்சார்யாளின் அடிமணலும் வாதிக்கும். குருநாதரின் க்ருபையைத்தவிர வேறு எதுவுமே இல்லை. எவ்வளவு படித்தாலும், வித்தைகள் கற்றுக்கொண்டாலும், அந்தப்படிப்போ வித்தையோ சமயத்தில் கை கொடுக்க வேண்டுமெனில் “சத்குரு க்ருபை” இருந்தால் மட்டுமே முடியுமேயன்றி, வேறு எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது”  என்றார் மிகுந்த அவை அடக்கத்தோடு.

ஸ்ரீ ஆச்சார்யாள் ஸதாரா சாஸ்திரிகளையும் கெளரவப்படுத்தி, அடுத்த வருஷம் கும்பகோணம் ஸ்ரீமடம் அத்வைத சபாவுக்கு தாங்களும் வர வேண்டுமென நியமித்தார். 

அதன்படி ஸதார பண்டிட் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி அவர்களும் வந்து தெற்கத்திய வித்வான்களோடு கலந்துகொண்டு, அந்த சபையை அலங்கரித்தார். 

ஸ்ரீ ஸதாரா சாஸ்திரிகள், தன் கருத்தை மாற்றிக்கொண்டு, தக்ஷிண தேச வித்வான்களுக்கு மரியாதை சேர்க்கும் விதமாய் ”செப்புப்பட்டயம்” எழுதித்தந்தார் என்பது ’செவிவழி’ச் செய்தி.


-oOo-




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

புதன், 25 செப்டம்பர், 2013

55 / 2 / 2 ] கிளி மொழி கேட்க ஓடியாங்கோ !

பகுதி-55 / 1 / 2 முடிந்த இடம் .... தங்கள் நினைவுக்காக 

அன்புடையீர், 

அனைவருக்கும் வணக்கம். 

28.05.2013 அன்று ஆரம்பித்த இந்தத்தொடரின் முதல் ஐம்பது பகுதிகள் மட்டும் 15.09.2013 அன்று நிறைவடைந்துள்ளது.


இந்தத்தொடருக்கு பலரும் அவ்வப்போது வருகை தந்து தங்களின் மேலான கருத்துக்களை அளித்து உற்சாகம் தந்துள்ளனர். 



 

அவர்கள் அனைவருக்கும் என் 
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

-oOo-

தொடர்ச்சி இப்போது .......




பழைய பதிவுகள் அனைத்துக்கும்
திரும்பச்சென்று புள்ளிவிபரங்களைச்
சேகரித்துக்கொடுத்த கிளி.

என் இந்தத்தொடரின் முதல் ஐம்பது பகுதிகளுக்கு இதுவரை கிடைத்துள்ள வரவேற்புகள் பற்றி என் கணக்குப்பிள்ளைகளான கிளிகள், கிளிஜோஸ்யம் போலச் சொல்லும் புள்ளிவிபரங்கள் இதோ தங்கள் பார்வைக்காக:






Position As On 25th September, 2013 - 10 AM [I.S.T]


முதல் 50 பகுதிகளுக்கு அவ்வப்போது 


வருகை தந்து கருத்தளித்துள்ளவர்களின் 




மொத்த எண்ணிக்கை:  90  

45 ஆண்கள்  + 45 பெண்கள்: ]




முதல் 50 பகுதிகளுக்கு இதுவரை கிடைத்துள்ள 



பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை:   2160






ஆண்களிடமிருந்து:   786   

பெண்களிடமிருந்து:   1374 





இந்தத்தொடருக்கு பகுதி-1 முதல் பகுதி-50 வரை, 

தொடர்ச்சியாக வருகை தந்து 

கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள 

 7 ஆண்கள் +  14  பெண்கள்





ஆகமொத்தம் 21 பதிவர்களை மட்டும், 




கிளி இங்கு கீழே அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளது.


  

அவர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.


ஆளுக்கு ஒரு பூங்கொத்து + மடிக்கணினி 


எடுத்துக்கொண்டு மாம்பழ ஜூஸும் சாப்பிடுங்கோ.





 


 

[01] திருமதி காமாக்ஷி மாமி அவர்கள்
சொல்லுகிறேன்

  



  

ஆண்கள் அணியில் அதிகமான எண்ணிக்கையில் 
பின்னூட்டமிட்டவர்களில் 
இரண்டாம் இடம் பெற்றுள்ள 
பெருமைக்குரியவர்.

முதல் 50 பகுதிகளுக்கு 
இவர் அளித்துள்ள பின்னூட்டங்களின் 
மொத்த எண்ணிக்கை: 72 

அடியேனின் ஸ்பெஷல் நன்றிகள்.


 

[02] திரு. பட்டாபிராமன் அவர்கள்
ramarasam 



  

ஆண்கள் அணியில் மிக அதிகமான எண்ணிக்கையில் பின்னூட்டமிட்டவர் என்ற பெருமைக்குரியவர்.

முதலிடம் பெற்றுள்ளவர்.

முதல் 50 பகுதிகளுக்கு 
இவர் அளித்துள்ள பின்னூட்டங்களின் 
மொத்த எண்ணிக்கை: 89 

அடியேனின் ஸ்பெஷல் நன்றிகள்.



[03] அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்


அசை போடுவது


 
 

[04]  திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL


 

 

 [05] திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
எண்ணங்கள்
கண்ணனுக்காக

 

[06] திருமதி விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்
Viji's Craft 
 I love Craft


 

 [07] திருமதி கோமதி அரசு அவர்கள்
திருமதி பக்கங்கள்


 

[08] திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
Ranjani Narayanan
இரண்டாவது எண்ணங்கள்
திருவரங்கத்திலிருந்து



   


[09] Mrs. Rajalakshmi Paramasivam அவர்கள்
Arattai [அரட்டை] By Rajalakshmi 



 


 

[10] கரந்தை திரு. ஜெயக்குமார் அவர்கள்
கரந்தை ஜெயக்குமார்



 

[11] திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்
esseshadri.blogspot.com
காரஞ்சன் [சேஷ்]




  



 

பெண்கள் அணியில் மிக அதிகமான எண்ணிக்கையில் பின்னூட்டமிட்டவர் என்ற பெருமைக்குரியவர்.

அதிலும் முதலிடம் பெற்றுள்ளவர்.

முதல் 50 பகுதிகளுக்கும் சேர்த்து 
இவர் அளித்துள்ள பின்னூட்டங்களின் 
மொத்த எண்ணிக்கை: 181 


அடியேனின் ஸ்பெஷல் நன்றிகள்.

 

[12] திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
மணிராஜ்
Krishna




 

 

 [13] திருமதி கீதா மதிவாணன் அவர்கள்
கீதமஞ்சரி



 

 [14] திருமதி ’மிடில் கிளாஸ் மாதவி’ அவர்கள்
மிடில் கிளாஸ் மாதவி




 

 [15] திருமதி மாதேவி அவர்கள்
சின்னு ரேஸ்ரி 
ரம்யம்


 



பெண்கள் அணியில் அதிகமான எண்ணிக்கையில் 
பின்னூட்டமிட்டவர்களில் 
இரண்டாம் இடம் பெற்றுள்ள 
பெருமைக்குரியவர்.

முதல் 50 பகுதிகளுக்கும் சேர்த்து
இவர் அளித்துள்ள பின்னூட்டங்களின் 
மொத்த எண்ணிக்கை: 128 


அதிரடி 
அட்டகாச
அலம்பல்
அலட்டல்
அதிரஸ
அதிராவுக்கு 

அடியேனின் 
ஸ்பெஷல் நன்றிகள்.




[16] 
திருமதி அதிரா அவர்கள்
என் பக்கம்




 

 

 

[17] திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
திண்டுக்கல் தனபாலன்


 

[18] திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்
வெங்கட் நாகராஜ்
சந்தித்ததும் சிந்தித்தும்



 


 


[19] கோவை2தில்லி அவர்கள்

கோவை2தில்லி 
சாப்பிட வாங்க
ரசித்த பாடல்

 

 [20] திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள்


 

 [21] Ms. S. மேனகா அவர்கள்
SASHIGA



 
  

அன்புள்ள மேனகா,  

மேலேயுள்ள புஷ்பத்தை அழகாக கட் செய்து, மேலே உள்ள மாமிகள் எல்லோருக்கும் ஓடிப்போய்க் கொடுத்துட்டு வாங்கோ. முதலில் வயதில் மூத்தவரான காமாக்ஷி மாமியிலே ஆரம்பிச்சு, ப்ரியா அக்காவரை ஒருத்தர் விடாமல் எல்லோருக்கும் கொடுங்கோ. நீங்களும் தலையிலே பூ வெச்சுக்கோங்கோ.  

அதிராவுக்கு மட்டும் நிறையக்கொடுங்கோ. ஏனெனில் அவங்க ’அதிரா மியாவ்’ என்று ஒரு பூனையை எப்போதும் வளர்க்கிறாங்கோ.  

[மடியில் பூனையைக் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதை என்பார்களே, அதே .. அதே ! அதிரபதே !!] 

அந்தப்பூனைக்கும் தலைமுதல் வால்வரை {கால்வரை} பூச்சூட்டி மகிழ அதிரா ஆசைப்படுவாங்கோ.  ;) 




 
இது தான் ’அதிரா மியாவ்’


மிக்க நன்றி, மேனகா.



 






  

  



 




      



இதுவரை கிளி அவ்வப்போது கொடுத்துள்ள 

புள்ளி விபரங்கள் வெளியான இணைப்புகள்.

oooOooo

பகுதி 1-10 க்கு தொடர் வருகை புரிந்து கருத்தளித்தவர்கள் 
மொத்தம்: 20 பேர்கள். http://gopu1949.blogspot.in/2013/06/11.html

oooOooo

பகுதி 1-20 க்கு தொடர் வருகை புரிந்து கருத்தளித்தவர்கள் 
மொத்தம்: 20 பேர்கள். http://gopu1949.blogspot.in/2013/07/25.html

oooOooo

பகுதி 1-30 க்கு தொடர் வருகை புரிந்து கருத்தளித்தவர்கள் 
மொத்தம்: 20 பேர்கள். http://gopu1949.blogspot.in/2013/08/35.html

oooOooo

பகுதி 1-40 க்கு தொடர் வருகை புரிந்து கருத்தளித்தவர்கள் 


மொத்தம்: 22 பேர்கள்.


பகுதி 1-50 க்கு தொடர் வருகை புரிந்து கருத்தளித்தவர்கள் 


மொத்தம்: 21 பேர்கள்

[இதோ இந்தப்பதிவினிலேயே அதற்கான பட்டியல் உள்ளது]

oooOooo


காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

சென்ற 1-40 க்கு தொடர் வருகை புரிந்து சிறப்பிக்கப்பட்டு, இந்த 1-50 இல் காணாமல் போயுள்ள ஒருவரே ஒருவர் புதுசாக் கண்ணாலம் ஆனவங்க ... அதனால் அவங்க [HONEY MOON] தேன் நிலவுக்குப் போயிருக்கக்கூடும். 

நாங்க புதுசா ...... 
நாங்க புதுசாக்கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க ...
நல்ல பாட்டுப்படிக்கும் வானம்பாடிதானுங்க ...


நாங்க புதுசாக்கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க ...
நல்ல பாட்டுப்படிக்கும் வானம்பாடிதானுங்க ...

.................  ................. 
.................  ................. 
.................  ................. 

கண்ணால ரகசியம் பேசிக்கிட்டோம் .........................

நாங்க ரெண்டுபேரும் காதல்வலை வீசிப்புட்டோம் .... ன்னு 

ஜாலியாக டூயட் பாட்டுப்பாடிக்கொண்டு எங்கோ வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கு போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். 

ஒரு 30 நாளோ அல்லது 60 நாளோ ஆனபின் தானாவே இங்கே நம்ம பதிவு பக்கம் வந்துடுவாங்கோ. 

’ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ ன்னு ஏதோ பழமொழி சொல்லுவாங்கோ. ஆனால், இங்கு நான் அதைச் சொல்லவில்லை.

மேலும், ஆசை அறுபது வருஷம், மோகம் முப்பது வருஷம்’ என்று அடித்துச் சொல்லும் அனுபவசாலியே நான். 

’ஜாலிலோ ஜிம்கானா’வாக ’தேன்நிலவு’க்குச் சென்றுள்ள அந்தப் புதுமணப்பெண்ணான ’பாசக்காரப் புள்ளை’யை நான் இங்கு அழைத்துத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.  


என் பாசக்கார தங்கச்சி! 
நீ எங்கிருந்தாலும் வாழ்க !!


அந்தப்புதுசா கட்டிக்கிட்ட ஜோடியின் கண்ணால போட்டோவை  இதுவரை பார்க்காதவங்க இங்கு போய் உடனே பார்த்து மகிழவும்: 



      



ஏதோ ஒருசில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்தப்பட்டியலில் இடம் பெறாமலும், பூங்கொத்து கிடைக்காமலும் போனவர்கள் இப்போது நினைத்தாலும், அடுத்த வாய்ப்பினில் [அதாவது பகுதி-1 முதல் பகுதி-60 வரை மீண்டும் ஒருநாள் கிளியால் செய்யப்படும் ஆராய்ச்சியில்] இடம் பெறுவதற்கான வாய்ப்பு, இப்போதும் உள்ளது. 


 
பின்னூட்டமிடத் துடிக்கும் கிளிகளோ! ;)

பகுதி-1 முதல் பகுதி-60 வரை தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளவர்கள் பற்றிய பட்டியல் பகுதி-65ல் மீண்டும் வெளியிடப்படும்.

இந்த ஒரு தொடருக்கு மட்டும், ஒருசில தவிர்க்க இயலாத காரணங்களால், பின்னூட்டம் கொடுத்த அனைவருக்கும் என்னால், தனித்தனியாக பதில் ஏதும் கொடுக்க இயலவில்லை. அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 

இன்று பூங்கொத்து + பரிசுப்பொருட்கள் பெற்றுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.












ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில், இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், எப்போதும் செளக்யமாகவும், சந்தோஷமாகவும், மனநிம்மதியுடனும், ஒற்றுமையாகவும், மனித நேயத்துடனும் வாழ பிரார்த்திப்போம்.


 

அன்புடன் கோபு

oooooOooooo




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி

நாளை மறுநாள் வெளியிடப்படும். 




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்