என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 31 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி - 12/04/04


இந்தப்பதிவின் இறுதியில் 
ஓர் மிகச்சுலபமான போட்டி 
அறிவிப்பு உள்ளது.
காணத்தவறாதீர்கள் !
கலந்துகொள்ள மறவாதீர்கள் !!


வானமே எல்லையாக ஜொலிக்கும் சாதனையாளர் !


 

நான் என் வலைத்தளத்தினில் வெளியிட்டுள்ள பெரும்பாலான பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வருகை தந்து, ஒவ்வொரு பதிவுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறைய கருத்துகளை நிறைவாகவும், அழகாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும்,    பின்னூட்டமிட்டு, தொடர் ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர் நம் ‘மணிராஜ்’ வலைத்தளப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி  அவர்களே என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கு பதிவு செய்துகொள்கிறேன். 

அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 




 



 

   

  


உடல்நலக்குறைவினால், 08.11.2014 அன்று நான் வெளியிட்டதோர் பதிவுக்கும், 21.12.2014 க்குப்பிறகு இன்று 31.03.2015 வரை நான் வெளியிட்டுள்ள 65 பதிவுகளுக்கும் மட்டும், அவர்கள் வருகை தந்து கருத்தளிக்க முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்க எனக்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

இதுவரை என் மிக அதிகமான பதிவுகளுக்கு வருகை தந்துள்ளவர் மற்றும் என் ஒவ்வொரு பதிவுக்கும் மிக அதிகமான எண்ணிக்கைகளில் பின்னூட்டங்கள் கொடுத்துள்ளவர் என்ற பெருமை இவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. 

This Madam has offered their 
Very Valuable Comments for all my 
684 Posts out of 750 ! 


பின்னூட்டங்களைப்பற்றியே ஓர் தொடர் எழுத ஆரம்பித்துவிட்டு, இவர்களைப்பற்றி நான் எதுவுமே குறிப்பிடாமல் இருந்தால் அது மிகவும் நன்றிகெட்டச் செயலாகும் என்பதை நான் நன்கு அறிவேன். எனக்கு இதுவரை கிடைத்துள்ள சுமார் 28000 பின்னூட்டங்களில், இவர்கள் எனக்கு இதுவரை அளித்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை மட்டுமே சுமார் 2000 To 2500 இருக்கக்கூடும். 

இவர்கள் என் பதிவுகளுக்குத் தந்துள்ள பின்னூட்டங்கள் அத்தனையும் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள பொக்கிஷங்களாக நான் என்றுமே எப்போதுமே இனிமையாக நினைப்பவைகள் மட்டுமே. 

இவர்கள் வாரி வழங்கியுள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாலும், அத்தனையும் எனக்குக் கற்கண்டாக இனிப்பதாலும் மட்டுமே, இவர்களின் பின்னூட்டங்களை இதுவரை நான் தனியாகப் பிரித்து இந்த என் தொடரினில் எங்கும் பிரசுரிக்க இயலவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


விரைவில் அவர்களின் உடல்நலம் பரிபூரண குணமாகி வலையுலகுக்கு வழக்கம்போலத் திரும்பிவந்து, விட்டுப்போய் உள்ள இந்த என் 66  பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் அளித்து, தன் அழகிய செந்தாமரைகளை மலரச்செய்து மகிழ்வித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. 

விரைவில் அவர்கள் முற்றிலும் உடல்நலம்பெற்று மீண்டும் வலையுலகுக்கு மீண்டுவர, நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்வோமாக! 


 







நினைவூட்டுகிறேன் !

 


திருமதி. 

 இராஜராஜேஸ்வரி 

அவர்களின் 
சமீபத்திய சாதனைகள்.

பதிவுலகில் காலடி எடுத்து வைத்து சுமார் நான்கு ஆண்டுகளுக்குள், கண்ணைக்கவரும் ஏராளமானப் படங்களுடன் 1514 பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். 

21.01.2011 முதல் 31.12.2014 வரையிலான முதல் 1441  நாட்களுக்குள் 1504  பதிவுகள் வெளியிட்டு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.

சமீபத்தில் 2014 பொங்கல் பண்டிகை முதல் 2014 தீபாவளி பண்டிகை வரை தொடர்ச்சியாக நாற்பது வாரங்கள் என் வலைத்தளத்தினில் நடத்தப்பட்ட ‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ அனைத்திலும், மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு, கீழ்காணும் பல வெற்றிகளை எட்டி மாபெரும் சாதனைகள் புரிந்துள்ளார்கள்.




1] 
ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்களில் முதல் இடம் 
[ஏழு முறை ஹாட்-ட்ரிக் வெற்றிகள்]



2] 

ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் வரிசையில்

இரண்டாம் இடம்

 

3] 

என் சிறுகதை விமர்சனப் போட்டி பற்றி 

இவர்கள் அளித்துள்ளதோர் சிறப்புப் பேட்டி




4]
 ’தனக்குத்தானே நீதிபதி’ என்ற 
‘போட்டிக்குள் போட்டி’யில் வெற்றி




5]

 ’நடுவர் யார்? யூகியுங்கள்’ என்ற 

‘போட்டிக்குள் போட்டி’யில் வெற்றி



6]

’ஜீவீ + வீஜீ விருது’

பெற்ற சாதனையாளர்





7]

’கீதா விருது’ 

பெற்ற சாதனையாளர்





8]

’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’ 

பெற்ற சாதனையாளர்






எழுத்துலக + வலையுலக 

சாதனை நாயகியும்,

ஆன்மீக அறிவுக்கோர் 

அத்தாட்சியும் அத்தாரிட்டியுமான 

இவர்களுக்கு

என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்,

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



 நலமுடன் நீடூழி வாழ்க ! 



 

 


 

 

அவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும், பின்னூட்டமிட்டு, எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவுகளில் பசுமையாக நிற்கும், சில அன்புள்ளங்களின் பெயர்களை கீழ்க்கண்ட இரு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். 


பட்டியல் எண்: 4  .... 60 GENTS


பட்டியல் எண்: 5 .... 70 LADIES

மேலும் அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் கொஞ்சமாக வருகை தந்து கருத்தளித்துள்ள நட்புகள் பட்டியல்களும்கூட இரண்டு (By Random Selection) தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளன. 

பட்டியல் எண்: 7 ....  50 LADIES

பட்டியல் எண்: 8  ....  40 GENTS
இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.  




பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, என்னிடம் சேமித்து வைத்துக்கொண்டுள்ளேன்.




 பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 6 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 7 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 8 க்கான இணைப்பு:

பட்டியல் எண்: 9 க்கான இணைப்பு:


பட்டியல் எண்: 10 க்கான இணைப்பு:


பட்டியல் எண்: 11 க்கான இணைப்பு:


பட்டியல் எண்: 12/01/04 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 12/02/04 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/120204.html
பட்டியல் எண்: 12/03/04 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/120304.html





பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள 
என் பதிவுகளைப் பற்றிய
 பட்டியல் இப்போதைக்கு 
இத்துடன் இன்றுடன் 
இனிதே நிறைவடைகிறது.


 


பட்டியல் எண்: 12 [Part : 4 of  4] 
பின்னூட்ட எண்ணிக்கை : 270
http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
அடடா ..... என்ன அழகு !
அடையைத் தின்னு பழகு !!




TOTAL NUMBER OF COMMENTS : 
2 7 0
THE HIGHEST ONE 
IN MY BLOG HISTORY !


 
இந்த மேற்படி ஒரு பதிவுக்கு மட்டும் இதுவரை 270 பின்னூட்டங்கள் வந்துள்ளன. ஆனால் என் மேற்படி பதிவின் அடியில் சென்று பார்த்தால் என்னைத்தவிர பிற பார்வையாளர்களுக்கு முதலில் வந்துள்ள 1 to 200 பின்னூட்டங்கள் மட்டுமே படிக்கக்கூடியதாக உள்ளன. 

200க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் வரும்போது, அவற்றை என்னால் மட்டும் வேறு ஒரு வழியில் சென்று காணமுடிகிறது. BLOG SYSTEM அதுபோல அமைக்கப்பட்டுள்ளது. 

எனவே என் பதிவினினில் கடைசியாக காட்சியளிக்கும் பின்னூட்டத்திற்குப்பிறகு கிடைத்துள்ள பின்னூட்டங்களையும் இங்கு தனித்தனியே, இத்துடன் கடந்த நான்கு பதிவுகளில் காட்டி வருகிறேன். இதனால் இந்தப்பதிவுக்கு சற்றே தாமதமாகப் பின்னூட்டமிட்டவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்.


  


COMMENT Nos: 255 TO 270



  1. angelin  January 19, 2013 at 10:03 AM //test comment//

  2. மிக்க நன்றி, நிர்மலா. தங்கள் Test Comment கிடைத்துள்ளது.

  3. ஆனால் நான் சொன்ன பிரச்சனைகள் மட்டும் இன்னும் நீடிக்கின்றன.

  4. பார்ப்போம். நன்றி.



    பிரியமுள்ள கோபு

  5. ஆஹா!படிக்கும்போதே அடை சாப்பிடும் ஆவல் பெருகுகிறதே!


  6. குறிப்புகளும் வர்ணனைகளுமாக வாசனை தூக்குகிறதே!
  7. மொறு மொறு அடைக்கு வெல்லம் உருக்கிய நெய்!!!!!!!!
  8. நான் இப்போதே கிளம்பி திருச்சி வர சித்தமாக இருக்கிறேன் :-)

    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

  9. raji January 21, 2013 at 6:30 AM

    வாங்கோ என் அன்புமகள் செள.ராஜி அவர்களே! வணக்கம்.

    செளக்யமா சந்தோஷமாக இருக்கீங்களா?

    உடம்பு இப்போது முற்றிலும் தேவலாமா?


    //ஆஹா!படிக்கும்போதே அடை சாப்பிடும் ஆவல் பெருகுகிறதே!



  10. குறிப்புகளும் வர்ணனைகளுமாக வாசனை தூக்குகிறதே!

  11. மொறு மொறு அடைக்கு வெல்லம் உருக்கிய நெய்!!!!!!!!//



  12. தங்களின் இந்த அபூர்வ வருகையே எனக்கு மொறு மொறு 
  13. அடையுடன் வெல்லம் + உருக்கிய நெய் தொட்டுக்கொண்டு 
  14. சாப்பிட்ட மகிழ்ச்சியை அளிக்கிறதும்மா. சந்தோஷம்! ;)))))


  15. //நான் இப்போதே கிளம்பி திருச்சி வர சித்தமாக இருக்கிறேன் :-)//
  16. வாங்கோ ப்ளீஸ் ..... அகம் மகிழ்ந்து அன்புடன் வரவேற்க நாங்களும் காத்திருக்கிறோம்மா.
  17. //பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.//
  18. அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிம்மா.
  19. //தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.//
  20. அதனால் பரவாயில்லை.
  21. உங்களின் சூழ்நிலை தான் எனக்கும் நன்றாகவே தெரியுமே.

    தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் 
  22. என் மனமார்ந்த  நன்றிகள். வாழ்க!
  23. பிரியமுள்ள கோபு

  24. புத்தாண்டில் அடைமழையாய் சான்றிதழ்களும் பரிசுகளும் வென்ற சுவை நிறைந்த அடை படைப்புக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..





    1. இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:35 PM

      //புத்தாண்டில் அடைமழையாய் சான்றிதழ்களும் பரிசுகளும் வென்ற சுவை நிறைந்த அடை படைப்புக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

      வாங்கோ, என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மேடம் !

      தாங்கள் தாமதமாக வருகை தந்திருப்பினும்,
    2. எனக்கு மிகவும் பிடித்த ’புளிச்சமா’ அடையைச் சுடச்சுட எடுத்து  
    3. ‘தோசை மிளகாய்ப்பொடி + எள் மணத்துடன் உள்ள நல்ல சமையல்
    4.  நல்லெண்ணெயில் கலந்து, ருசிப்பது போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

    5. ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது ;)))))


      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம்..





  • Such a lively post Sir:) As if some one is directly talking :)






    1. Harini M August 24, 2013 at 7:46 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //Such a lively post Sir:) As if some one is directly talking :)//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த  இனிய அன்பு நன்றிகள், மேடம். Thanks a Lot.

  • Hilarious post, loved all your instructions and cautions about using mixie, gas stove, great read








    1. Harini M October 19, 2013 at 11:35 AM

      வாங்கோ மேடம் வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //Hilarious post, loved all your instructions and cautions about using mixie, gas stove, great read//

      மிக்க நன்றி. தாங்கள் ஏற்கனவே 24.08.2013 அன்று ஒரு கமெண்ட் கொடுத்துள்ளீர்கள். அதை நான் இப்போது தான் கவனித்தேன்.

      கமெண்ட்ஸ் எண்ணிக்கை 200 வரை மட்டுமே நேரிடையாகக் காட்சியளிக்கின்றன.

      அதற்கு மேல் வரும் கமெண்ட்ஸ்களை நான் வேறு ஒரு முறையில் சென்று பார்த்து பதில் அளிக்க வேண்டியதாக உள்ளது.

      தங்களின் இந்த கமெண்ட் எண்: 263 + என் பதில் எண்: 264. இவைகளை என் பதிவினில் நேரிடையாகப் பார்ப்பது இயலாத காரியம்.

      //Harini M August 24, 2013 at 7:46 AM
      Such a lively post Sir:)As if some one is directly talking :)//

      தங்களின் அன்பான வருகைக்கும் 2 கமெண்ட்ஸ்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். சந்தோஷம்.

      இதே போல நம் திருச்சியைப்பற்றிய ஓர் சிறப்புப்பதிவு, நிறைய படங்களுடன் கொடுத்துள்ளேன். நேரம் இருக்கும் போது படித்துப்பாருங்கள்.

      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

      அன்புடன் கோபு

  • வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  • வணக்கம்
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_27.html?showComment=1388106172450#c4072647375032658530
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-
  • வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
    இன்றைய வலைச்சரத்தில் இந்த பதிவு.
    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html?showComment=1388105779571#c1927188437863207263

  • உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

    வலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)








    1. திண்டுக்கல் தனபாலன் April 30, 2014 at 6:58 AM

      //உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

      மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

      அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

      அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

      வலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)//

      தங்களின் அன்பான உடனடித் தகவலுக்கு மிக்க நன்றி
      Mr. DD Sir.

      அன்புடன் கோபு [VGK]

  • வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

  •  


    POSITION AS ON 31.03.2015 .... 11 A.M. (I.S.T) 

    -oOo-



    MY BLOG FOLLOWERS 

     380

     

    MY BLOG VIEWERS

     3,07,363

     

    TOTAL NUMBER OF COMMENTS 
    SO FAR RECEIVED and PUBLISHED
     27,427 



    FOLLOWERS IN GOOGLE PLUS 

     399 



    VIEWERS IN GOOGLE PLUS  

     31,94,497 

     



      
    { இது என் 750வது பதிவாக அமைந்துள்ளதில் மகிழ்ச்சி ! }




    டும் டும் .... டும் டும் .... 
    டும் டும் .... டும் டும் .....


    மீண்டும் ஓர் மிகச்சுலபமான பரிசுப்போட்டி அறிவிப்பு

    02.01.2011 முதல் 31.03.2015 வரை நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும் [மீள் பதிவுகள் உள்பட சுமார் 750] ஏற்கனவே பின்னூட்டமிட்டுள்ளவர்களுக்கு + இனி புதிதாகப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஓர் சிறப்புப்பரிசு அளிக்கப்பட உள்ளது.

    மேற்படி போட்டிக்கான ஒருசில எளிய நிபந்தனைகள்:

    என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் தங்களுடைய சற்றே மாறுபட்ட பின்னூட்டம் 15 வார்த்தைகளுக்குக் குறையாமல் இடம் பெற வேண்டும். 

    ’அட’ ’ஆஹா’ ‘அருமை’ ’அசத்தல்’ ’பாராட்டுக்கள்’ ‘வாழ்த்துகள்’ ’படித்தேன்’ ‘ரசித்தேன்’ என்ற ஓரிரு வார்த்தைகளுக்குள் மட்டும் இல்லாமல், அந்தந்த பதிவுகளுக்கு சற்றேனும் சம்பந்தம் உள்ளதாகவும், சற்றே சுவையான, மாறுபட்ட, வித்யாசமான கருத்துக்கள் கொண்ட பின்னூட்டமாகவும் அவை அமைந்தால் போதுமானது. 

    பிறர் கொடுத்துள்ள பின்னூட்டங்களையே COPY and PASTE செய்து தங்களின் பின்னூட்டமாக அளித்தல் கூடவே கூடாது.

    என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் 
    தங்களின் பின்னூட்டங்கள்
    இடம்பெற வேண்டிய 
    இறுதி நாள்: 31.12.2015 

    இன்னும் முழுசாக ஒன்பது மாதங்கள் 
    அதாவது 275 நாட்கள் உள்ளன. 

    தினமும் சராசரியாக மூன்று பதிவுகள் என 
    முயற்சித்தாலே போதும் .....

    மிகச்சுலபமாக வெற்றியினை எட்டி 
    பரிசினைத் தட்டிச் செல்லலாம்.

    என் பதிவு ஒன்றுக்கு ஏற்கனவே தாங்கள் பின்னூட்டம் கொடுத்திருந்தால், மீண்டும் அதே பதிவுக்குப் பின்னூட்டம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு மீண்டும் புதிதாகக் கொடுத்தாலும் தப்பேதும் இல்லை. தாராளமாகக் கொடுக்கலாம். :)

    இவ்வாறு என் அனைத்துப்பதிவுகளுக்கும் முழுவதுமாகப் பின்னூட்டம் கொடுத்துள்ளவர்கள் 31.12.2015க்குள் எனக்கு மெயில் மூலம் அதற்கான தகவல் அளிக்க வேண்டும். 

    மெயிலில் Subject என்ற இடத்தில் 100% பின்னூட்டங்கள்  எனக் குறிப்பிடவும். என் மெயில் விலாசம்: valambal@gmail.com 

    இவ்வாறு வெற்றிகரமாக என் அனைத்துப் பதிவுகளையும் படித்து, சிரத்தையுடன் பின்னூட்டங்களும் அளித்திருந்து, எனக்கு 31.12.2015க்குள் மெயில் மூலம் தகவலும் அளிக்கும் ஒவ்வொருவருக்கும், அவற்றை நான் சரிபார்த்து உறுதி செய்துகொண்டபின், குறைந்தபட்சம்  ரூ. 500 [ரூபாய் ஐநூறு] பரிசுத்தொகையாக அனுப்பி வைக்கப்படும். 

    இதில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோர் எண்ணிக்கை ஒருவேளை பத்து நபர்களோ அல்லது அதற்குக்குறைவாகவோ அமையுமானால் இந்த அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகையை இரட்டிப்பாக (அதாவது ரூ. 1000 என) நான் நிர்ணயித்து அளிக்கவும் இதில் அதிக வாய்ப்புகள் உள்ளன.

    பதினோரு நபர்களுக்கு மேல் நூற்றுக்கணக்கானோர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடினாலும், ஒவ்வொருவருக்கும் ரூ. 500 வீதம் பரிசுத்தொகை நிச்சயமாக என்னால் அளிக்கப்படும்.

    மேற்படி பரிசுத்தொகைகள் என் *வழக்கப்படி* வெற்றிபெற்ற தங்களின் வங்கிக்கணக்குக்கு நேரிடையாக அனுப்பி வைக்கப்படும்.

    ஏற்கனவே சென்ற ஆண்டின் (2014) சிறுகதை விமர்சனப்போட்டிகளில் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்ட + பரிசுத்தொகைகள் அளிக்கப்பட்ட விபரங்கள் இதோ இந்தப்பதிவுகளில் உள்ளன: 

    (*வழக்கப்படி*)


    இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றியாளர்களாகப்போகும் தங்களிடமிருந்து, 2016ம் ஆண்டு ஜனவரி முதல் வாரம், தங்களின் வங்கிக்கணக்கு விபரங்களை நான் அதற்கான மிக எளிமையான சிறிய படிவத்தினை மெயில் மூலம் தங்களுக்கு அனுப்பி பெற்றுக்கொள்வேன். 

    வங்கி விபரங்களை சரிவர 15.01.2016க்குள் எனக்கு அனுப்பி வைக்கும் வெற்றியாளர்களுக்கு, 31.01.2016க்குள் பரிசுத்தொகைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு மேற்படி பரிசினை மிகச்சுலபமாகப் பெறலாம். 

    இவ்வாறு பரிசு பெற்ற வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் என்றாவது ஒருநாள் என் பதிவினில் சிறப்பித்து வெளியிடப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

    பெரும்பாலானவர்கள் இந்த எளிய + அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு, இதில் கலந்துகொண்டு பரிசு பெற என் இனிய நல்வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன் தங்கள்
    VGK 


     

    Today is 31st March .... 
    The Financial Year Ending Day !


    To all of you !





    என்றும் அன்புடன் தங்கள்
    [வை. கோபாலகிருஷ்ணன்]
    31st March, 2015