About Me

My Photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, May 3, 2012

வாங்க பறக்கலாம் ! [உலகத்தின் மிகப்பெரிய பயணிகள் விமானம்]




”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” 

என்ற தலைப்பில் என்னால் 15.04.2012 முதல் 30.04.2012 வரை வெளியிடப்பட்ட [பகுதி-1 முதல் பகுதி-18 வரை]  தொடர் நாடகப் பதிவுகளுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய பல கருத்துக்கள் கூறி சிறப்பித்து, எனக்கு அவ்வப்போது உற்சாகம் கொடுத்து உதவியுள்ள 

திருவாளர்கள்:-
===============

01. ரிஷபன் Sir அவர்கள்

02. மணக்கால் ஜே. ராமன் Sir அவர்கள்

03. ஜீவி Sir அவர்கள்

04. ஸ்ரீராம் Sir அவர்கள்

05. மகேந்த்ரன் Sir அவர்கள்

06. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள் *****

07. மணிமாறன் Sir அவர்கள்

08. விச்சு Sir அவர்கள்

09. தி. தமிழ் இளங்கோ Sir அவர்கள்

10. சீனுகுரு Sir அவர்கள்

11. ஸ்ரீநிவாஸன் இராமகிருஷ்ணன் Sir அவர்கள்

12. ம.தி.சுதா Sir அவர்கள்

13. D. சந்த்ரமெளலிSir அவர்கள்

14. ஈ.எஸ்.சேஷாத்ரி Sir அவர்கள் *****

15. அப்பாதுரை Sir அவர்கள்

16. பழனி. கந்தசாமி Sir அவர்கள்

17. சென்னை பித்தன் Sir அவர்கள்

18. ரமணி Sir அவர்கள்

19. T N முரளிதரன் Sir அவர்கள்

20. G. ஸ்ரீதர் Sir அவர்கள்

21.  சுந்தர்ஜி Sir அவர்கள்

22. G. M. B.  Sir அவர்கள்

23. கே.பி. ஜனா Sir அவர்கள்

24. மதுரை சொக்கன் Sir அவர்கள்

25. பாலா Sir அவர்கள்

26. ”அன்பை தேடி....அன்பு” Sir அவர்கள்

27. ’ஆரண்யநிவாஸ்’ ஆர்.ராமமூர்த்தி Sir அவர்கள்

28. ”அவர்கள் உண்மைகள்” Sir அவர்கள்

மற்றும்

திருமதிகள்:-
=============

01. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்*****

02. மிடில் கிளாஸ் மாதவி Madam அவர்கள்

03. விஜி Madam அவர்கள்*****

04. லக்ஷ்மி Madam அவர்கள்*****

05. கோமதி அரசு Madam அவர்கள்*****

06. கோவை2தில்லி Madam அவர்கள்*****

07. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்*****

08. தேனம்மை லெக்ஷ்மணன் Madam அவர்கள்

09. மாதேவி Madam அவர்கள்

10. வல்லி சிம்ஹன் Madam அவர்கள்

11. ஏஞ்சலின் Madam அவர்கள்

12. நுண்மதி Madam அவர்கள்

13. சித்ரா Madam அவர்கள்

14. ஆசியா உமர் Madam அவர்கள்

15. இமா Madam அவர்கள்

16. திருமதி BS ஸ்ரீதர் [ஆச்சி] Madam அவர்கள்

17. சந்திரகெளரி Madam அவர்கள்

18. ஷக்திப்ரபா Madam அவர்கள்

19. ரமாரவி [ராம்வி] Madam அவர்கள் 


20. ஸாதிகா Madam அவர்கள்



ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***** 
தொடர்ச்சியாக அனைத்துப் பதினெட்டு பகுதிகளுக்குமே, எழுச்சியுடன் வருகை புரிந்து, மகிழ்ச்சியுடன் கருத்துரை இட்டு சிறப்பித்துள்ள

01. திரு. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்


02.  திருமதி கோவை2தில்லி Madam அவர்கள்




03. திருமதி இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்



04. திருமதி விஜி Madam அவர்கள் 


05. திருமதி லக்ஷ்மி Madam அவர்கள்


06. திருமதி கோமதி அரசு Madam அவர்கள் 



07. திருமதி உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்






and 
08. திரு E S சேஷாத்ரி Sir அவர்கள்


*****

ஆகியவர்களுக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


  

  


  

  



 


உங்களுக்கு பிடித்ததை எடுத்து ருசித்து சாப்பிடுங்கள்.





வாங்க பறக்கலாம் !


உலகின் மிகப்பெரிய 
பயணிகள் விமானத்தில்!!




ஒரே நேரத்தில் 900 பயணிகள் 
சுகமாகப் பயணம் செய்யலாம்
















பறவையைக் கண்டான்!
விமானம் படைத்தான்!!





ஒரு சிறு அறிவிப்பு


பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக்கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதுவரை நீங்கள் எல்லோரும் எனக்குக் கொடுத்துவந்த ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

என்றும் அன்புடன் தங்கள்
vgk 
03 05 2012

Sunday, April 29, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-18]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-18]


{ நிறைவுப்பகுதி }

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-23


[சங்கரரின் அழகான சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த பட்டுவும் கிட்டுவும் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்]


பட்டு:


இது போல மிக இனிமையாகவும், மிகச் சுலபமாகப் புரியும்படியும் யாரால் உவமானங்கள் சொல்ல் முடியும்? 


கிட்டு:


ஆம். நம் சங்கரரால் மட்டுமே இதுபோல அழகாகப் பேச முடியும்.


ஆமாம். அதிருக்கட்டும். 


நம் சங்கரர், தான் மட்டும் ஏதோ ஹிமாசலம் போய் கேதார்நாத் செல்லப்போவதாகச் சொல்கின்றாரே! 


அவர்கூட,  நாம் யாராவது போக வேண்டாமா?


பட்டு:


யாரும் தன்கூட வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம்.


ஏதோ ஒரு குகைக்குள் தனிமையில் தியானம் செய்யப்போகிறாராம்.


எப்போது திரும்பி வருவார் என்று அவருக்கே தெரியாதாம்.


கிட்டு:


சங்கரர் இல்லாத இடத்தில் நமக்கு இனி என்ன வேலை?


நாமும் நம் ஊருக்கே திரும்பிப்போய் சங்கரருடன் பழகிய அனுபவங்களை பலருக்கும் தெரிவித்து, அவரின் புகழைப் பரப்புவோம்.


பட்டு:

ஆமாம்....  ஆமாம்.  நீ சொல்வது தான் சரி. 

நாளைக்கு சங்கரர் கேதார்நாத்துக்கு புறப்பட்டதும், நாமும் நம் ஊரைப்பார்க்கக் கிளம்பிடுவோம்.  

அதற்கான பயண வேலைகளை இப்போதே ஆரம்பித்து விடலாம் ..... வா!




ooooooooooooooooooooooooooooooooo




காட்சி-24
[ஆதி சங்கரர் படத்தை, பூ மாலைகளால் அலங்கரித்து வைக்கலாம். இரண்டு குத்து விளக்குகள், ஐந்து முகங்களுடன் அழகாக எரிவதுபோல வைக்கலாம். பின்னனியில் கீழ்க்கண்டவாறு குரல் மட்டும் கொடுக்கலாம்]



    




ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்று அறிகிறோம்.


அவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது.


புண்ணிய பூமியாம் நம் பாரதத் திருநாட்டில் பல்வேறு மடங்கள், ஆதி சங்கரரால் நிறுவப்பட்டு, இன்று வரை அவை மக்களை பக்தி மார்க்கத்தில் இட்டுச்சென்று, நல்வழிப்படுத்தி வருகின்றன.


மிகவும் பழமை வாய்ந்த வேதங்களும், சாஸ்திரங்களும், சனாதன தர்மங்களும், ஆலமரம் போல் விழுதுகள் விட்டு, உலகில் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் யார்?


நம் ஆதிசங்கரர் அவர்களால் வித்திட்டு, விதை விதைத்து, நீர் ஊற்றி, நன்கு வளர்த்ததனால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.


நமக்கு வழிகாட்டியாக இருந்த “சங்கரர்” என்கிற ஆதிசங்கரரை என்றும் நினைப்போம். 


அவரின் அவதார தினத்தை ஆண்டுதோறும் ”சங்கர ஜயந்தி”த் திருநாளாக எல்லோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவோம்.


அவர் இயற்றிய ஸ்லோகங்களை அனைவரும் படிப்போம்.


அனுதினமும் அவற்றை உச்சரித்து மகிழ்வோம்.


ஆதி சங்கரர் காட்டிய நல்வழியில் நாம் வாழ்வோம். 


நற்கதியை நாம் அடைவோம்.


[தோடகாஷ்டக ஸ்லோகத்தை ஒலிபரப்பி நாடகத்தை முடிக்கலாம்]    




ஸ்ரீ தோடகாஷ்டகம்



விதிதா கில சாஸ்த்ர ஸுதா ஜலதே 
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 1 ]


கருணாவருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்!
ரசயாகிலதர்சன தத்த்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 2 ]



பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே!
கலயேச்வர ஜீவவிவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 3 ]



பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெள துதிதா
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 4 ]



ஸுக்ருதே (அ) திக்ருதே பஹூதா பவதோ
பவிதா ஸமதர்சன லால ஸதா!
அதி தீன மிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 5 ]



ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸ: ச்சலத:!
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி புரோ
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 6 ]



குருபுங்கவ புங்கவகேதந தே 
ஸமதா மயதாம் ந ஹி கோ பி ஸுதீ:!
சரணா கத வத்ஸல தத்த்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 7 ]




விதிதா ந மயா விசதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ!
த்ருத மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 8 ]


-ooooooooooooooooooooooooooo-

நாடகம் நிறைவுற்றது

-ooooooooooooooooooooooooooo-






சுபம்



  ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


இந்த நாடகத்திற்கு காட்சி வாரியாக என்னால் கொடுக்கப்பட்டிருந்த நேர ஒதிக்கீடுகள் [TIME SCHEDULE FOR EACH AND EVERY SCENE]

காட்சிகள்: 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 13, 17 மற்றும் 23 ஆகிய

12 காட்சிகள் தலா 2 நிமிடங்கள் வீதம் ............................ 12*2 = 24 நிமிடங்கள்

காட்சிகள்: 7, 11, 15, 16/1, 16/2, மற்றும் 21 ஆகிய  


6 காட்சிகள் தலா 6 நிமிடங்கள் வீதம்................................ 6*6 =  36 நிமிடங்கள்

காட்சிகள்: 12, 14, 18, 19, 20 மற்றும் 24 ஆகிய

6 காட்சிகள் தலா 4 நிமிடங்கள் வீதம் .............................. 6*4 =  24 நிமிடங்கள்

காட்சி 22 க்கு மட்டும் ..........................................................        10 நிமிடங்கள்

ஒவ்வொரு காட்சிக்கும் இடைவெளி 
Setting Time / Breathing Time ....................................................      26 நிமிடங்கள்

                                                                                                                ===================                                                               ========

ஆகமொத்தம் ...............................................................               120 நிமிடங்கள்
                                                                                                                ===================                                                              ========
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo



”ஸ்ரீ ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்”


என்ற தலைப்பில் பள்ளிச்சிறுவர்களால் 2 மணி நேரத்திற்குள் நாடகமாக நடித்து முடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய, நாடக ஆக்கம் பற்றிய எழுத்துப்போட்டி ஒன்றுக்காக, இந்த நாடகம் என்னால் 2007 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.

குறிப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் இந்த நாடகம் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதாலும், அதே நேரம் சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள் யாவும், ஓரளவுக்காவது, முழுமையாகப் பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதாலும், “பட்டு” “கிட்டு” என்ற இரண்டு கற்பனைக் கதாபாத்திரங்களை இந்த நாடகத்தில் நானாகவே நுழைத்துள்ளேன். 

நாடகத்தில் நடித்துக்காட்டப்பட நேரமில்லாத பகுதிகளை இந்த “பட்டு” “கிட்டு” ஆகிய இருவரின் உரையாடல்கள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு செய்து விடலாம் என்ற நம்பிக்கையில். நான் இந்த இரு கதாபாத்திரங்களைக் கையாண்டுள்ளேன்.

ஆதிசங்கரரின் உண்மையான வாழ்க்கை வரலாற்று நூல்கள் எதிலும், இந்தப்பட்டுவையோ அல்லது கிட்டுவையோ நீங்கள் காணமுடியாது. 

இதுபோன்ற வரலாற்றில் காணப்படாத இருவரை, நானே [காமெடியன்ஸ் போல] இடையே நுழைத்துள்ளதால் தான், என்னுடைய படைப்பு முதல் பரிசுக்கோ இரண்டாவது பரிசுக்கோ பரிசீலிக்கப்படாமல் போய் விட்டதோ என்ற சந்தேகமும் எனக்கு பிறகு ஏற்பட்டது. 

ஏதோ என் படைப்பு, அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியொன்றில், மொத்தம் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட, படைப்பாளிகளின் இடையே, மூன்றாவது பரிசுக்காவது தேர்ந்தெடுக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. 

பரிசளிப்பு விழா 02.10.2007 அன்று சென்னை தி. நகரில், வாணி மஹாலில் நடைபெற்றது. ரொக்கப்பரிசாக ரூபாய் ஐயாயிரம் அளிக்கப்பட்டது. என் குடும்பத்தார் அனைவருடனும் நேரில் போய் விழாவில் கலந்து கொண்டேன். 


அன்றைய தினம் அங்கு கூடியிருந்த எக்கச்சக்கமான கும்பலாலும், ஒருசில V.V.I.P. க்களின் வருகையாலும், அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளாலும், பரிசு பெறுபவர்களைத் தவிர வேறு யாரையும் மேடைக்கு அருகே, சென்று அமர அவர்கள் அனுமதிக்கவில்லை. 


அதனால் அன்று நான் பரிசு பெறுவதை, என் குடும்பத்தினர், மிகத்தொலைவிலிருந்து புகைப்படம் எடுத்தது சரியாகத் தெளிவாக அமையவில்லை. 






இந்த என் வெற்றிக்காக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் 16.10.2007 அன்று திருச்சியில், எனக்கு ஓர் பாராட்டு விழா நடத்தியது.



தமிழ்ப் பேராசிரியரும், தொலைகாட்சிப்புகழ் பட்டிமன்ற நடுவரும்
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் புரவலருமான 
பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய 
திரு. சோ. சத்யசீலன் ஐயா அவர்களால்
16.10.2007 அன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பாராட்டி கெளரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

-oOo-






இந்தத் தொடர் நாடகத்திற்கு, அன்புடன் வருகை புரிந்து, அவ்வப்போது உற்சாகப்படுத்தி மகிழ்வித்த, உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


என் அடுத்த பதிவினில், 
இந்த என் நாடகத்தின் 18 பகுதிகளிலும் 
அவ்வப்போது வருகை தந்து 
கருத்துக்கள் கூறி 
உற்சாகப்படுத்தியுள்ள 
 உங்கள் அனைவருக்கும் 
தனித்தனியே நன்றி கூறுவேன்.



என்றும் அன்புடன் தங்கள்
vgk

-oOo-


Saturday, April 28, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-17]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-17]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-22
[சங்கரர், தன் நான்கு பிரதான சிஷ்யர்களுடன் அமர்ந்திருக்க கூடவே வேறு சிலரும் உள்ளனர். சங்கரர் ஏதோ சொற்பொழிவு ஆற்றத் தயாராக உள்ளது போல அனைவருக்கும் தோன்றுகிறது.]




ஸ்ரீ பத்ரிநாத் ஆலயம்





சங்கரர்: 


பத்ரிநாராயணருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் முடித்து விட்டோம்,  இப்போது தான் மனம் அமைதியாக உள்ளது. 


இந்த த்யான மண்டபத்தில் உங்களுக்கெல்லாம் ஏதாவது சொல்லணும்னு தோன்றுகிறது. 


நீங்கள் எல்லோரும் தொடர்ந்து அத்வைத சித்தாந்தங்களை, மிகவும் எளிய முறையில், மக்களுக்குப் புரியுமாறு எடுத்துக்கூற வேண்டும்.




ஒருவர்: [சங்கரரிடம் மிகவும் பெளவ்யமாக] 


தங்கள் திருவாயால் எங்களுக்கு எடுத்துக்கூறினால், நாங்கள் அதைப் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்ல செளகர்யமாக இருக்கும், என்று பெரியவாளிடம் விக்ஞாபனம் செய்து கொள்கிறேன். 


நான் ஏதாவது தப்பாப் பேசியிருந்தால் தயவுசெய்து பெரியவா என்னை க்ஷமித்துக்கொள்ளணும்.




சங்கரர்:


[1]


கடவுள் தான் பரமாத்மா.


பரமாத்மா ஒரு மிகப்பெரிய ஸமுத்ரம் போன்றவர். 


ஜீவாத்மா என்ற நாம் ஸமுத்ர நீரில், காற்றடிக்கும் போது ஏற்படும் நீர்க்குமிழிகள் போன்றவர்கள்.


பிடிமானம் ஏதுமின்றி தத்தளிப்பவர்கள்.


ஸமுத்ரம் வேறு, அந்த ஸமுத்ரத்தில் உள்ள நீர்க்குமிழிகள் வேறு அல்ல.


இரண்டும் ஒன்று தான்.


ஸமுத்ரமும் தண்ணீர் தான்; நீர்க்குமிழிகளும் ஸமுத்ரத் தண்ணீர் தான்.  


ஸமுத்ரத் தண்ணீராலேயே உருவாக்கப் பட்டவைகள் தான் நீர் குமிழிகள்.


அது வேறு இது வேறு அல்ல.


அது போலத்தான், அடிக்கும் காற்று என்பது, நாம் ஏற்கனவே செய்த அல்லது செய்து கொண்டிருக்கிற பாவ புண்ணியங்கள் போல என்று சொல்லலாம். 


காற்று நல்லதாக, இதமானதாக, விரும்பக்கூடியதாக, தென்றலாக வீசலாம். 


அதுவே மிகக்கொடூரமாக, சூறாவளியாக, அழிக்கும் ஆற்றல் கொண்டதாக, புயலாகவும் வீசலாம்.


கெட்ட காற்று வீசினால் கடல் அலைகளில் மாட்டித் தடுமாறும், நீர்குமிழி போல நாமும் தத்தளிக்கிறோம்.


மனம் சஞ்சலப்படுகிறது.


மனதை ஒருநிலைப் படுத்தினால் பக்தி ஏற்படுகிறது.


பக்தி ஏற்பட்டால் ஞானம் ஏற்படுகிறது.


ஞானம் ஏற்பட்டு விட்டால் ஜீவாத்மாவான நம்மால் பரமாத்மாவை அடைய முடிகிறது.


கடல் அலையில் தத்தளிக்கும் நீர்குமிழி மேல், நல்லதொரு அமைதியான காற்று வீசும்போது, நீர்க்குமிழி உடைந்து ஸமுத்ர நீருடன் கலந்து விடுகிறது. 


அதுபோலவே ஞானம் ஏற்பட்டு விட்டால் அக்ஞானம் ஒழிந்துபோய், நாமும் தெய்வமும் ஒன்று என்ற ஒரு உன்னத சம நிலையை எட்ட முடிகிறது.


இதுவே நாம் சொல்லும் அத்வைதக் கருத்தாகும்.


[2]


முக்காலமும் உணர்ந்த ஞானிகள் கூறுவதைக் கேட்டு நடப்பது தான் மிகவும் சுலபமான வழி.


ஆற்று நீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. 


தாகத்தால் ஒரு சின்னக்குழந்தை நாக்கு வரண்டு போய்த் தவிக்கிறது.


அதனால் ஆற்றில் இறங்கி நீர் அருந்த முடியுமா?


ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை மொண்டுக் கொடுத்தால், குழந்தை சுலபமாகக் குடித்து தாக ஸாந்தி செய்துகொள்ள முடியும் அல்லவா?


நீரை மொண்டு குழந்தைக்குக் குடிக்கக் கொடுப்பது போலத்தான், நமக்கு ஞானிகள் காட்டிடும், வகுத்துத்தரும் வழிமுறைகள் யாவும் சுலபமானவை.


நாம் செய்யவேண்டியது, குருவிடம் முழுவதுமாக நம்பிக்கை வைத்து சரணாகதி அடைவது மட்டுமே; மற்றவைகள் அவர்பாடு என்று இருந்து விட வேண்டும்.


அவர் நம்மை இந்தப்பிறவிப் பெருங்கடலிலிருந்து காப்பாற்றி, பகவான் திருவடிகளில், கரை சேர்த்து விடுவார்.


கர்மானுஷ்டானங்கள் செய்வது நம் மன அழுக்கை நீக்க உதவும்.


பக்திசெய்தால் மனம் ஒரு நிலைப்படும்.


மனம் ஒருநிலைப்படுதலே, குருவிடம் சென்று ஞானம் பெறுவதற்கான முதல்நிலை.


[3]


ஒரு அறையில் நல்ல இருட்டாக உள்ளது.


ஒரு ஓரமாக ஒரு பூமாலை கிடக்கிறது.


கதவைத் திறந்துகொண்டு ஒருவர் உள்ளே வருகிறார்.


இருண்ட அந்த அறையில் நுழைந்தவருக்கு ஏதோ சுருண்டு பளபளப்பாக உள்ள அந்த வஸ்து பாம்பு என்று தோன்றுகிறது.


உடனே அவருக்கு மிகுந்த பயம் ஏற்படுகிறது.


நேரம் ஆக ஆக அந்த பயம் அதிகரிக்கிறது.


அந்த வஸ்து பூமாலை என்பது தான் சத்தியம்.


அந்த சத்தியம் தான் ப்ரும்மம்.


ப்ரும்மமாகிய சத்தியமாகிய மாலை என்பதை அவர் உணராமல் தடுப்பது தான் மாயை என்ற அறியாமை.


இந்த உலகமே மாயை தான்; அறியாமை தான்; பாம்பு தான்; பயம் தான்.


அறியாமையை அகற்றி எல்லோரும் ப்ரும்மத்தை உணர வேண்டும்.


அதற்கு ஞானம் என்ற ஒளி வேண்டும்.


ஞானம் என்ற ஒளியைப்பெற ஞானிகளின் வழிகாட்டுதல் வேண்டும்.


[4]


பெரிய பாறாங்கல்லாக இருந்த ஒரு வஸ்துவை சிற்பி ஒருவன் செதுக்குகிறான்,      


அதை தெய்வத்தின் தோற்றத்துடன் அழகிய சிலையாக வடிக்கிறான். 


அந்தச்சிலை கோயிலில் வைத்து தெய்வமாக வணங்கப்படுகிறது.


சிலையாக உருவாவதற்கு முன்பு அது கல்லாக இருந்தது.


சிலையாக உருவான பின்பும் அது கல்லே தான்.


வெறும் கல்லாக இருந்த அது இப்போது கற்சிலை என பெயர் மாற்றம் அடைந்துள்ளது.


பெரிய அந்தக்கல்லிலிருந்து தேவையில்லாத பாகங்கள் மட்டும் சிற்பியால் நீக்கப்பட்டுள்ளன அல்லது செதுக்கி எறியப்பட்டுள்ளன.


தேவையற்றவைகள் நீக்கப்பட்டு விட்டதால், அதே கல்லிலிருந்து அழகிய சிலை தோன்றி, அனைவராலும் வழிபட்டு போற்றக்கூடிய நிலை அந்தக்கல்லுக்கு ஏற்பட்டுள்ளது.


அதுபோலவே நம்மிடம் உள்ள 


தேவையற்ற எண்ணங்களையும், 
தேவையற்ற பேச்சுக்களையும், 
தேவையற்ற செயல்களையும், 
தேவையற்ற ஆணவத்தையும், 
தேவையற்ற ஆடம்பரங்களையும், 
தேவையற்ற சுயநலத்தையும் 


நாம் நம்மிடமிருந்து செதுக்கி எறிந்து விட்டால், இன்று பாறாங்கல் போன்று உள்ள நாமும்,, தெய்வாம்சம் பொருந்தியவராக மாறி, அனைவராலும் வணங்கப்படுவோம்.


இதுவே ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டும் ஒன்று என்ற அத்வைத தத்துவமாகும்.






[சங்கரர் தனது உரையை முடித்துக்கொள்கிறார். அனைவரும் எழுந்து சங்கரரை வணங்கி நமஸ்கரிக்கின்றனர்] .


ooooooooooOoooooooooo






இந்த தொடர் நாடகத்தின் இறுதிப்பகுதி 
{ பகுதி-18 [காட்சிகள் 23+24] }
நாளை 30.04.2012 திங்கட்கிழமை
  பகல் 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும். 



  
குருவருளாலும்,

திருவருளாலும்,
 
பின்னூட்டம் என்ற உற்சாக பானத்தை 
அடிக்கடி அள்ளி அள்ளி தந்துள்ள 
உங்கள் அனைவரின் அருளாலும்

இது என் 300 ஆவது 
பதிவாக அமைந்துள்ளது.

மேலும் இது, இந்த 2012 ஆம் ஆண்டின் 
100 ஆவது பதிவுமாகும்.



தங்கள் அனைவரின்
ஒத்துழைப்புக்கும்
அடியேனின் மனமார்ந்த
இனிய நன்றிகள்!




நாளை மீண்டும் சந்திப்போம்.


என்றும் அன்புடன் தங்கள்
vgk