About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, March 2, 2013

ஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும்

ஓடி வந்த பரிசு:



Reference:-   http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html



”சமையல் அட்டகாசம்” என்ற வலைத்தளப்பதிவர் திருமதி ஜலீலா கமால் அவர்கள் அளித்த இரண்டாம் பரிசு 09.02.2013 தை அமாவாசையன்று, திருச்சியில் உள்ள என்னை வந்தடைந்தது.  

Gift பொருளுக்கான அழகான Packing எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப்பிரிக்கவே எனக்கு மனம் வரவில்லை. பிறகு கஷ்டப்பட்டு மிகவும் கவனமாகப் பிரித்த அந்த Packing Materials களையும் தூக்கியெறிய மனமில்லாமல் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். 





என் வீட்டினில் மேலும் ஒரு விளக்கெரியச்செய்துள்ள திருமதி ஜலீலா கமால் அவர்களுக்கு என் நன்றிகள்.  தமிழ்நாட்டில் தற்சமயம் அடிக்கடி ஏற்பட்டு வரும்  மின்வெட்டு நேரத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்தப்பரிசுப் பொருள் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக உள்ளது. ;)


Once again My Sincere Thanks to 
Mrs. Jaleela kamal Madam, 
Their Team  and
Their Group Concern 
M/s. CHENNAI PLAZA
No, 277/30 Pycrofts Road,
1st Floor, (opp:shoba cut piece)
Triplicane , 
Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim Mob: 91 98 43709497

Email id: chennaiplazaik@gmail.com
feedbackjaleela@gmail.com
www.chennaiplazaik.com

=oOo=





தேடிவந்த பதிவர்கள்:



உள்ளூர் பதிவர்களும் என் நெருங்கிய அலுவலக நண்பர்களுமான திரு. ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன் மற்றும் ஆரண்யநிவாஸ் திரு. ஆர். ராமமூர்த்தி இருவரையும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பினைப்பெற்றுள்ளேன். 

நான் பதிவுலகத்திற்கு வந்த பிறகு, இதுவரை என்னை திருச்சியில் என் இல்லத்தில் சந்தித்துச்சென்றுள்ள ஒருசில பதிவர்கள் பெயர்களும் அவர்கள் என்னை சந்தித்த நாட்களும், இங்கு ஒரு  தகவலுக்காக மட்டுமே.



20.02.2011

திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள், 
ஷார்ஜா UAE
[முத்துச்சிதறல்] 
http://muthusidharal.blogspot.in/




ஆரண்யநிவாஸ் திரு. R. ராமமூர்த்தி அவர்கள், 
திருவானைக்கோயில், திருச்சி 
http://aaranyanivasrramamurthy.blogspot.in/






என்றென்றும் உங்கள் எல்லென்

http://aarellen.blogspot.in/






12.12.2011

திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்
புது டெல்லி
http://venkatnagaraj.blogspot.com/


திரு. ரிஷபன் அவர்கள், 
ஸ்ரீரங்கம், திருச்சி
http://rishaban57.blogspot.com/


ஆரண்யநிவாஸ் திரு. R. ராமமூர்த்தி அவர்கள், 
திருவானைக்கோயில், திருச்சி 
http://aaranyanivasrramamurthy.blogspot.in/



12.05.2012 
[பதிவர் தம்பதி]

திரு வெங்கட் நாகராஜ்  அவர்கள்
புது டெல்லி
http://venkatnagaraj.blogspot.com/

திருமதி ஆதி வெங்கட் அவர்கள்,  
[கோவை2தில்லி] புது டெல்லி 
[தற்போது ஸ்ரீரங்கம்] 
http://kovai2delhi.blogspot.in/



04.01.2013 
திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்
புது டெல்லி
http://venkatnagaraj.blogspot.com/



திரு. அப்பாதுரை அவர்கள், 
சிகாகோ
[மூன்றாம் சுழி] 
http://moonramsuzhi.blogspot.in/ 


25.02.2013 
திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள், 
K K NAGAR, திருச்சி 
[எனது எண்ணங்கள்] 
http://tthamizhelango.blogspot.in/





இவர்களின் சந்திப்புகள் யாவும் மிகவும் இனிமையான தருணங்களாக அமைந்திருந்தன. 


அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எல்லோருடனும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் ஒருசிலரின் அன்பான வேண்டுகோளின்படி அவை ஏதும் இங்கு வெளியிடப்படவில்லை,




இதன் பிறகு நான் மேலும் சந்தித்த பதிவர்களுடன் சேர்த்து
பல்வேறு அழகழகான படங்களுடன் ஓர் தொடர் பதிவு 
ஆறு பாகங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 

அதற்கான தலைப்பு: 
‘சந்தித்த வேளையில் ......’  

இணைப்புகள்:







காணத்தவறாதீர்கள் !



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

-oooooOooooo-


136 comments:

  1. மிகவும் அழகான பரிசு. வாழ்த்துக்கள், சார்.

    பதிவர்களின் வரவை நினைவு வைத்து அழகாக பதிவு கொடுத்துட்டீங்களே?
    சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. RAMVI March 2, 2013 at 12:52 AM

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  2. பரிசும் அழகு. உங்கள் சமையல் குறிப்பும் அழகு.

    எப்பொழுதும் இதுபோலநட்புகள் பெருகி என்றும் ஆனந்தம் நிலைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வல்லிசிம்ஹன் March 2, 2013 at 1:04 AM

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆசிகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


      Delete
  3. அழகான பரிசு..உங்களின் அழகான எழுத்திற்கும், நகைசுவையான பதிவிற்கும்
    பரிசுகளும், நட்புகளும் தேடிதேடித் வர வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete
    Replies
    1. ராதா ராணி March 2, 2013 at 1:18 AM

      வாருங்கள், வணக்கம்.

      //அழகான பரிசு..உங்களின் அழகான எழுத்திற்கும், நகைசுவையான பதிவிற்கும் பரிசுகளும், நட்புகளும் தேடிதேடித் வர வாழ்த்துக்கள் அண்ணா..//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  4. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் கோபால் சார்! பேச்சுலர் சமையல் போட்டியில் வெற்றிபெற்று பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துக்கள்! மேலும் உங்களைத் தேடி வரும் பதிவர்களை மறக்காமல், திகதிவாரியாக நினைவுகூர்ந்தமை வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!!

    இவையனைத்தும் உங்கள் அன்புக்குக் கிடைத்த பரிசுகளே!

    ReplyDelete
    Replies
    1. மாத்தியோசி மணி மணி March 2, 2013 at 1:26 AM

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  5. மிகவும் அழகான பரிசு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. faiza kader March 2, 2013 at 1:47 AM
      //மிகவும் அழகான பரிசு. வாழ்த்துக்கள்//

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  6. வாழ்த்துகள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. malar balan March 2, 2013 at 1:48 AM
      வாழ்த்துகள் வாழ்த்துகள்//

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  7. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    என் வீட்டினில் மேலும் ஒரு விளக்கெரியச்செய்துள்ள திருமதி ஜலீலா கமால் அவர்களுக்கு என் நன்றிகள். தமிழ்நாட்டில் தற்சமயம் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டு நேரத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்தப்பரிசுப் பொருள் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக உள்ளது. ;)//
    அருமையான வார்த்தைகள்.

    பதிவர்கள் அன்பினால் வந்த தேதிகளை அழகாய் பகிர்ந்தவிதம் அருமை. இனிமையான தருணங்கள் என்றும் நிலைக்கட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு March 2, 2013 at 2:05 AM

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  8. அருமையான பரிசு. வாழ்த்துகள். இனிய சந்திப்புகள் குறித்த மகிழ்வான பகிர்வும் நன்று. தொடரட்டும் நட்பு.

    ReplyDelete
    Replies
    1. ராமலக்ஷ்மி March 2, 2013 at 2:17 AM
      அருமையான பரிசு. வாழ்த்துகள். இனிய சந்திப்புகள் குறித்த மகிழ்வான பகிர்வும் நன்று. தொடரட்டும் நட்பு.//

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


      Delete
  9. வாழ்த்துக்கள். இனிமையான தருணங்கள் , சந்திப்புகள் தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரவாணி March 2, 2013 at 2:23 AM
      வாழ்த்துக்கள். இனிமையான தருணங்கள் , சந்திப்புகள் தொடரட்டும் //

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  10. உங்கள் சந்தோஷம்
    எங்கள் சந்தோஷம்

    ReplyDelete
    Replies
    1. Pattabi Raman March 2, 2013 at 2:27 AM
      உங்கள் சந்தோஷம்
      எங்கள் சந்தோஷம்//

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான சந்தோஷப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  11. Replies
    1. அப்பாதுரை March 2, 2013 at 2:30 AM
      Congratulations//

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  12. வாழ்த்துக்கள்! உங்களிடம் உள்ள ஒரு ஈர்ப்பு விசை, பரிசுகளை மட்டுமல்லாது பதிவர்களையும் உங்களிடம் இழுத்து வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ March 2, 2013 at 3:10 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வாழ்த்துக்கள்! உங்களிடம் உள்ள ஒரு ஈர்ப்பு விசை, பரிசுகளை மட்டுமல்லாது பதிவர்களையும் உங்களிடம் இழுத்து வருகிறது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஈர்ப்புவிசைக் கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..


      Delete
  13. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. s suresh March 2, 2013 at 3:15 AM
      பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா! பகிர்வுக்கு நன்றி!//

      வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      Delete
  14. ”சமையல் அட்டகாசம்” என்ற வலைத்தளப்பதிவர் திருமதி ஜலீலா கமால் அவர்கள் அளித்த இரண்டாம் பரிசு 09.02.2013 தை அமாவாசையன்று, திருச்சியில் உள்ள என்னை வந்தடைந்தது. //

    அமாவாசையை நிறைஞ்ச நாள்ன்னு சொல்லுவா அன்னிக்கு நிலாவின் தரிசனம் நமக்குக் கிடைக்காவிட்டாலும். நிறைஞ்ச நாளில் வெளிச்சம் தரும் பரிசு உங்களை வந்தடைந்ததற்கு வாழ்த்துக்கள்.

    மேன் மேலும் பல பரிசுகளுக்கு சொந்தக்காரராக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நான் பதிவுலகத்திற்கு வந்த பிறகு, இதுவரை என்னை திருச்சியில் என் இல்லத்தில் சந்தித்துச்சென்றுள்ள ஒருசில பதிவர்கள் பெயர்களும் அவர்கள் என்னை சந்தித்த நாட்களும், இங்கு ஒரு தகவலுக்காக மட்டுமே.//

    இதில் என்ன அதிசயம். தேன் இருக்கும் இடத்தைத் தேடி வண்டுகள் வருவது ஆச்சரியம் இல்லையே. இருந்தாலும், தேதியுடன் ஞாபகம் வைத்துக் கொண்டு அவர்களை கௌரவிக்கும் உங்களுக்கு HATS OFF.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. JAYANTHI RAMANI March 2, 2013 at 3:15 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அமாவாசையை நிறைஞ்ச நாள்ன்னு சொல்லுவா அன்னிக்கு நிலாவின் தரிசனம் நமக்குக் கிடைக்காவிட்டாலும். நிறைஞ்ச நாளில் வெளிச்சம் தரும் பரிசு உங்களை வந்தடைந்ததற்கு வாழ்த்துக்கள். மேன் மேலும் பல பரிசுகளுக்கு சொந்தக்காரராக மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      மிகவும் சந்தோஷம். பரிசுகளை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் செக்ரெடரியின் வேலையாக இருக்கக்கூடும். ஜாக்கிரதை.

      //இதில் என்ன அதிசயம். தேன் இருக்கும் இடத்தைத் தேடி வண்டுகள் வருவது ஆச்சரியம் இல்லையே. இருந்தாலும், தேதியுடன் ஞாபகம் வைத்துக் கொண்டு அவர்களை கௌரவிக்கும் உங்களுக்கு HATS OFF.//

      மிக்க மகிழ்ச்சி. பின்னூட்டத்தில் [வண்டுபோல குடைந்து] பின்னி எடுத்து விட்டீர்கள் !;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      Delete
    2. மிகவும் சந்தோஷம். பரிசுகளை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் செக்ரெடரியின் வேலையாக இருக்கக்கூடும். ஜாக்கிரதை.//

      அதை விட மகிழ்ச்சியான, முக்கியமான வேலை வேற என்ன இருக்கு.

      நன்றிக்கு நன்றி.

      Delete
    3. JAYANTHI RAMANI March 4, 2013 at 12:31 AM

      வாங்கோ, வணக்கம். தக்களின் மீண்டும் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உற்சாகம் அளிக்கும் பூஸ்ட் !!!!! ;)))))

      *****மிகவும் சந்தோஷம். பரிசுகளை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் செக்ரெடரியின் வேலையாக இருக்கக்கூடும். ஜாக்கிரதை.*****

      //அதை விட மகிழ்ச்சியான, முக்கியமான வேலை வேற என்ன இருக்கு. நன்றிக்கு நன்றி.//

      ஒருவரின் எழுத்துக்களால் மற்றொருவரை மகிழ்விக்க முடியும் என்பதற்கு நீங்களும் ஓர் மிகச்சிறந்த உதாரணம்.

      இதைக் கற்பனை செய்து பார்த்தாலே எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது!!!!!! ;)))))

      தங்களின் இதுபோன்ற தடாலடியான வாய்ச்சவடால் வார்த்தைகளில் நான் அகம் மகிழ்ந்து போகிறேன். அதிலேயே தங்களின் வால் தனமும் நன்கு என்னால் உணரமுடிகிறது.

      செளக்யமாக சந்தோஷமாக எப்போதும் இதுபோல கலகலப்பாக இருக்க வேண்டுகிறேன். நன்றியோ நன்றிகள். அன்புடன் கோபு

      Delete
  15. பரிசுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. சே. குமார்March 2, 2013 at 3:48 AM
      பரிசுக்கு வாழ்த்துக்கள்...//

      வாருங்கள், வணக்கம். அன்பான வருகை + வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      Delete
  16. வாழ்த்துக்கள்.சந்திப்புக்கள் இனிமையானவைகளை பகிர்ந்தமை அருமை.

    ReplyDelete
    Replies
    1. Asiya Omar March 2, 2013 at 4:28 AM
      வாழ்த்துக்கள்.சந்திப்புக்கள் இனிமையானவைகளை பகிர்ந்தமை அருமை.//

      வாருங்கள், வணக்கம். அன்பான வருகை + இனிமையான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  17. கோபு சாருக்கு வாழ்த்துக்கள்

    தனிப்பதிவாக போட்டு என் கடை அட்ரசையும் சேர்த்து இடுகை இட்டது மிகச்சிறப்பு.

    மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
    உங்கள் அற்புதமான அடை குறிப்புக்கும் அதை அழகான முறை பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    பதிவர்கள சந்தித்த நாள் ஓவ்வொன்றையும் இப்படி விளாவரியாக , நாள் தேதி வருடம் எலலாவற்றையும் ஞாபகம் வைத்து எழுதி இருக்கிற உங்களை யாருமே மிஞ்ச முடியாது

    ReplyDelete
    Replies
    1. *Chennai Plaza - சென்னை ப்ளாசா*
      March 2, 2013 at 4:33 AM

      வாருங்கள், வணக்கம்.

      //கோபு சாருக்கு வாழ்த்துக்கள்//

      சந்தோஷம்.

      //தனிப்பதிவாக போட்டு என் கடை அட்ரசையும் சேர்த்து இடுகை இட்டது மிகச்சிறப்பு.//

      I like the way in which you conducted the Contest and also the efforts made to send the Gift items properly in such a way to reach the individuals correctly with attractive packing. You are well deserved for all our appreciations.

      //மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
      உங்கள் அற்புதமான அடை குறிப்புக்கும் அதை அழகான முறை பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      //பதிவர்கள சந்தித்த நாள் ஓவ்வொன்றையும் இப்படி விலாவரியாக , நாள் தேதி வருடம் எலலாவற்றையும் ஞாபகம் வைத்து எழுதி இருக்கிற உங்களை யாருமே மிஞ்ச முடியாது //

      வருகை தந்த எல்லோரையும் அவ்வபோது போட்டோ பிடித்து , அன்றைய தினமே அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியிருந்ததால்; தேதிகளைக்கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக வேலையாகத் தோன்றவில்லை.

      நன்றியுடன் கோபு

      Delete
  18. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்!! இந்த இனிமையான பயணம் எப்போழுதும் தொடரட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. S.Menaga March 2, 2013 at 4:46 AM
      வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்!! இந்த இனிமையான பயணம் எப்போழுதும் தொடரட்டும்!!//

      வாருங்கள், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  19. தாங்கள் பரிசு பெற்ற விஷயம் மகிழ்வளிக்கிறது. தொடரட்டும் தங்களின் பதிவு மழையும் பரிசு மழையும்! நன்றி

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. March 2, 2013 at 4:53 AM

      வாருங்கள், வணக்கம்.

      தாங்கள் பரிசு பெற்ற விஷயம் மகிழ்வளிக்கிறது. தொடரட்டும் தங்களின் பதிவு மழையும் பரிசு மழையும்! நன்றி//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  20. இன்றைய நிலைமைக்கு அவசியமான பரிசு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் March 2, 2013 at 4:53 AM
      இன்றைய நிலைமைக்கு அவசியமான பரிசு...வாழ்த்துக்கள்...//

      வாருங்கள், வணக்கம். ஆம் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் என் இனிய நன்றிகள்.

      Delete
  21. எல்லாம் வல்ல இறைவன் நாடினால் வருகிற ஜூன் மாதம் விடுமுறையில் திருச்சி வரும்போது சந்திக்கலாம் என்று இருக்கிறேன் .அந்த மகிழ்ச்சியான சந்தர்பத்திற்கு காத்திருக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. அஜீம்பாஷா March 2, 2013 at 5:15 AM

      வாருங்கள், வணக்கம்.

      //எல்லாம் வல்ல இறைவன் நாடினால் வருகிற ஜூன் மாதம் விடுமுறையில் திருச்சி வரும்போது சந்திக்கலாம் என்று இருக்கிறேன் .அந்த மகிழ்ச்சியான சந்தர்பத்திற்கு காத்திருக்கிறேன் .//

      இறை அருள் இருப்பினும் கட்டாயம் சந்திப்போம். எனக்கும் மகிழ்ச்சியே.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  22. Replies
    1. ஸ்ரீராம். March 2, 2013 at 5:23 AM
      வாழ்த்துகள்.//

      வாங்கோ ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!

      தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  23. வாழ்த்துக்கள் சார் :)

    ReplyDelete
    Replies
    1. Shakthiprabha March 2, 2013 at 6:02 AM
      வாழ்த்துக்கள் சார் :)//

      வாங்கோ ஷக்தி, செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? வணக்கம்.

      தங்களின் அபூர்வ வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  24. உங்களுக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சி.
    congratulations.
    உங்களைக் காண வந்திருந்த அத்தனை பெரும் நினைவு வைத்திருந்து எழுதி இருப்பது உங்கள் மகிழ்ச்சியைக் காட்டுகிறது.
    நானும் உங்கள் மகிழ்ச்சியில் பங்குகொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. rajalakshmi paramasivam March 2, 2013 at 6:21 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்களுக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சி. congratulations.
      உங்களைக் காண வந்திருந்த அத்தனை பெயரும் நினைவு வைத்திருந்து எழுதி இருப்பது உங்கள் மகிழ்ச்சியைக் காட்டுகிறது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      /நானும் உங்கள் மகிழ்ச்சியில் பங்குகொள்கிறேன்.//

      மிகவும் மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றி.

      Delete
  25. ஜெயந்தி ரமணி : இதில் என்ன அதிசயம். தேன் இருக்கும் இடத்தைத் தேடி வண்டுகள் வருவது ஆச்சரியம் இல்லையே. இருந்தாலும், தேதியுடன் ஞாபகம் வைத்துக் கொண்டு அவர்களை கௌரவிக்கும் உங்களுக்கு HATS OFF.
    நான் : ஆம்...அத்தனையும் தேன் இருக்கும் இடம் நாடி
    வந்த வண்டு... நான் மட்டும் கொஞ்சம் குண்டு!

    ReplyDelete
    Replies
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி March 2, 2013 at 6:56 AM

      *****
      ஜெயந்தி ரமணி :

      இதில் என்ன அதிசயம். தேன் இருக்கும் இடத்தைத் தேடி வண்டுகள் வருவது ஆச்சரியம் இல்லையே. இருந்தாலும், தேதியுடன் ஞாபகம் வைத்துக் கொண்டு அவர்களை கௌரவிக்கும் உங்களுக்கு HATS OFF.

      நான் :

      ஆம்...அத்தனையும் தேன் இருக்கும் இடம் நாடி
      வந்த வண்டு... நான் மட்டும் கொஞ்சம் குண்டு!//

      *****
      வாருங்கள் ஸ்வாமி, வணக்கம்.

      நான் இந்த மேடத்துடன் நட்புடன் பழகி வருவதே, இன்னும் ஒண்ணேகால் வருடங்கள் கழித்து, எனக்கு Personal Secretary ஆகி, என்னையும் அவர்களைப்போலவே வெடவெடவென்று, ஒல்லியாக மாற்றிக்காட்டுகிறேன் என்று சபதம் செய்திருப்பதால் மட்டுமே.

      அப்போ உங்களையும் ஏதாவது செய்ய முடியுமா என நாங்கள் இருவருமாகச் சேர்ந்து யோசிப்போமில்லே1 அதனால் கவலையே படாதீங்க.

      எதற்கும் ஒரு 4 - 5 லட்சம் தனியாக டெபாஸிட் செய்து வைக்கவும். இது எங்களின் Consulting Fees மட்டுமே. இதரச்செலவுகள் தனியாக்கும். ;)))))

      Delete
    2. நான் இந்த மேடத்துடன் நட்புடன் பழகி வருவதே, இன்னும் ஒண்ணேகால் வருடங்கள் கழித்து, எனக்கு Personal Secretary ஆகி, என்னையும் அவர்களைப்போலவே வெடவெடவென்று, ஒல்லியாக மாற்றிக்காட்டுகிறேன் என்று சபதம் செய்திருப்பதால் மட்டுமே. //

      இதைப் படித்தால் என் பெண் விழுந்து விழுந்து சிரிப்பாள். ஏன்னா அவ என்ன கூப்பிடறது குண்டு மாமி. நாங்க ஒண்ணும் SLIM BEAUTY இல்லீங்கோ. அதெல்லாம் போன காலத்துல. இப்ப நல்லா உருளைக்கிழங்கு மாதிரி இருக்கேன். என்ன ரொம்ப சாமர்த்தியமா என்னை விட குண்டு மாமிங்க பக்கத்துல போய் நின்னுண்டுடுவேன். அப்புறம் என்ன. நான் குண்டா தெரிய மாட்டேனே!

      ஆரண்ய நிவாஸுக்கே சொந்தக்காரர். அதெல்லாம் நிறைய இருக்கும். நம்ப FEES வாங்கிப்போம்.

      Delete
    3. JAYANTHI RAMANI March 4, 2013 at 12:36 AM

      மீண்டும் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

      *****நான் இந்த மேடத்துடன் நட்புடன் பழகி வருவதே, இன்னும் ஒண்ணேகால் வருடங்கள் கழித்து, எனக்கு Personal Secretary ஆகி, என்னையும் அவர்களைப்போலவே வெடவெடவென்று, ஒல்லியாக மாற்றிக்காட்டுகிறேன் என்று சபதம் செய்திருப்பதால் மட்டுமே. *****

      //இதைப் படித்தால் என் பெண் விழுந்து விழுந்து சிரிப்பாள். ஏன்னா அவ என்ன கூப்பிடறது குண்டு மாமி. நாங்க ஒண்ணும் SLIM BEAUTY இல்லீங்கோ. அதெல்லாம் போன காலத்துல. இப்ப நல்லா உருளைக்கிழங்கு மாதிரி இருக்கேன்.//

      நான் இது எதிர்பார்த்தது தான், ஏதோ ஒரு பழைய படத்தை எடுத்து Profile இல் போட்டிருப்பீர்களோ என்று. அதனால் பரவாயில்லை.

      உருளைக்கிழங்கைப் பிடிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்கவே முடியாது.

      எனக்கு உருளைக்கிழங்குக் காரக்கறியை விட, பச்சமாப்பொடி உப்புமா போல கடுகு உளுந்தம்பருப்பு தாளித்து கருவேப்பிலையுடன் வெள்ளைவெளேரென்ற நிறத்தில் உள்ள உருளைக்கிழங்கு பொடிமாஸ் தான் மிகவும் பிடிக்கும்.

      அதை அப்படியே தனியாக ஒர் பெரிய கிண்ணத்தில் வைத்து ஸ்பூன் போட்டு சாப்பிடுவேன். வயிறு சும்மா கம்முனு ஆகிவிடும்.

      காரசாரமான மோர்குழம்பு சாதத்திற்கு இந்த உ.கி. பொடிமாஸ் மிகவும் மேட்ச் ஆக இருக்கும்.

      >>>>>

      Delete
    4. கோபு >>>> திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் [2]

      //என்ன ரொம்ப சாமர்த்தியமா என்னை விட குண்டு மாமிங்க பக்கத்துல போய் நின்னுண்டுடுவேன். அப்புறம் என்ன. நான் குண்டா தெரிய மாட்டேனே!//

      சபாஷ், உங்கள் சாமர்த்தியமே சாமர்த்தியம். ;)))))

      உடல்வாகு குண்டாக இருப்பதோ ஒல்லியாக இருப்பதோ நம் கையில் இல்லை.

      இதெல்லாம் நம் பரம்பரை ஜீன்ஸ்ஸைப் பொருத்தது.

      ஓரளவு கட்டுப்படுத்த முயற்சிக்கலாமே தவிர இதற்காக மிகவும் கவலைப்பட்டுக்கொண்டு நம் உடம்பை மேலும், மேலும் பசி பட்டினி இருந்து வருத்திக்கொள்ளவே கூடாது.

      குண்டு, ஒல்லி, நிதானம்; உயரம், குட்டை; சிகப்பு, கருப்பு, மாநிறம் எல்லாமே தனித்தனிஅழகு தான்.

      இவற்றை ரஸிக்கும் அவரவர்களின் பார்வையைப்பொருத்த விஷயம் இது.

      அதனால் எதைப்பற்றியும் அதிகமாகக் கவலையே படாதீங்கோ, ப்ளீஸ்..

      >>>>>

      Delete
    5. கோபு >>>> திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் [3]

      //ஆரண்ய நிவாஸுக்கே சொந்தக்காரர். அதெல்லாம் நிறைய இருக்கும். நம்ப FEES வாங்கிப்போம். //

      FEES என்று கேட்டாலே தலை தெறிக்க ஓடிடுவார். அதிலேயே அவர் உடம்பு மிகவும் இளைத்து விடும். அதனால் தான் நானும் FEES பற்றி SPECIFIC ஆக குறிப்பிட்டுள்ளேனாக்கும். ;)))))

      பிரியமுள்ள கோபு

      Delete
  26. மிக்க மகிழ்ச்சி.ஐயா!தங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு .
    தேடிவந்த பதிவர்களை சிறப்பித்திருப்பது பாராட்டுக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. T.N.MURALIDHARAN March 2, 2013 at 8:21 AM

      வாருங்கள், வணக்கம்.

      //மிக்க மகிழ்ச்சி.ஐயா! தங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு .
      தேடிவந்த பதிவர்களை சிறப்பித்திருப்பது பாராட்டுக்குரியது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  27. பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. அமைதிச்சாரல் March 2, 2013 at 8:46 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  28. ஓடிவந்த பரிசும், தேடிவந்த நண்பர்களும், நன்றி நவின்ற நீங்களும்
    மனதிலிருக்கிரார்கள். எல்லோருமே அன்பிற்குரியவர்கள். அழகான கவிதைபடித்த மன நிறைவு ஏற்படுகிரது. ஸந்தோஷம் வை.கோ அவர்களே. அன்புடனும் ஆசிகளுடனும் சொல்லுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Kamatchi March 2, 2013 at 9:18 AM

      வாங்கோ மாமி, அநேக நமஸ்காரங்கள்.

      //ஓடிவந்த பரிசும், தேடிவந்த நண்பர்களும், நன்றி நவின்ற நீங்களும் மனதிலிருக்றீர்கள்.

      எல்லோருமே அன்பிற்குரியவர்கள்.

      அழகான கவிதைபடித்த மன நிறைவு ஏற்படுகிறது.

      ஸந்தோஷம் வை.கோ அவர்களே.

      அன்புடனும் ஆசிகளுடனும் சொல்லுகிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அநேக நமஸ்காரங்களுடன்
      கோபாலகிருஷ்ணன்

      Delete
  29. உங்கள் திறமையைப்போல் ஒளிரும் பரிசு!

    ReplyDelete
    Replies
    1. கே. பி. ஜனா...March 2, 2013 at 9:58 AM
      உங்கள் திறமையைப்போல் ஒளிரும் பரிசு!//

      வாருங்கள், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஒளிரும் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  30. middleclassmadhavi March 2, 2013 at 5:27 AM
    Congrats!//

    வாங்கோ வணக்கம். தங்களின் அபூர்வ வருகைக்கும் பாராட்டுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  31. அன்பின் வை.கோ - பரிசு பெற்றமைக்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நாம் எப்பொழுது சந்திப்பது ? ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு வந்து அந்த ஜன்னலை எப்படியாவது பார்த்து விட வேண்டும். தங்கள் தயவில் திருச்சி சுற்றிப்பார்க்க வேண்டும், விரைவினில் தம்பதி சமேதராக திடீரென் வந்து நிற்பேன். ( 24 மணீ நேர நோட்டிஸ் நிச்சயம் கொடுப்பேன் )
    பதிவர் சந்திப்பினைல் எங்கள் புகைபடம் வர வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) March 2, 2013 at 10:19 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //அன்பின் வை.கோ - பரிசு பெற்றமைக்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நாம் எப்பொழுது சந்திப்பது ? ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு வந்து அந்த ஜன்னலை எப்படியாவது பார்த்து விட வேண்டும். தங்கள் தயவில் திருச்சி சுற்றிப்பார்க்க வேண்டும், விரைவினில் தம்பதி சமேதராக திடீரென் வந்து நிற்பேன். ( 24 மணீ நேர நோட்டிஸ் நிச்சயம் கொடுப்பேன் )
      பதிவர் சந்திப்பினில் எங்கள் புகைபடம் வர வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      அவசியம் வாருங்கள் ஐயா! தம்பதி சமேதராகவே வாருங்கள் ஐயா!! எங்கெங்கு போகணுமோ சொல்லுங்கள் ஐயா. காரில் ஜாலியாகப்போய் வரலாம்.

      புகைப்படம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் ஐயா. அவற்றையெல்லாம் சேர்த்து ஒரு 108 படங்களாகத் தொகுத்து தனிப்பதிவே கொடுத்து விடலாம் ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      Delete
  32. ஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும் ...??
    ஒளி வெள்ளமாய் பகிர்ந்த பகிர்வுகளுக்குப்
    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி March 2, 2013 at 11:48 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ .... வணக்கம்.

      //ஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும் ...??
      ஒளி வெள்ளமாய் பகிர்ந்த பகிர்வுகளுக்குப்
      பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...//

      தாங்கள் அன்புடன் ஓடிவந்து பகிர்ந்து அளித்துள்ள கருத்துக்களும் எனக்கு ஒளிவெள்ளமாய்த்தான் உள்ளன. மிகவும் சந்தோஷம். ;)

      Delete
  33. ”சமையல் அட்டகாசம்” என்ற வலைத்தளப்பதிவர் திருமதி ஜலீலா கமால் அவர்கள் அளித்த இரண்டாம் பரிசு 09.02.2013 தை அமாவாசையன்று, திருச்சியில் உள்ள என்னை வந்தடைந்தது. //

    அட்டகாசமான பரிசு வென்றதற்கு
    அருமையான நிறைவான பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி March 2, 2013 at 11:49 AM
      ******சமையல் அட்டகாசம்” என்ற வலைத்தளப்பதிவர் திருமதி ஜலீலா கமால் அவர்கள் அளித்த இரண்டாம் பரிசு 09.02.2013 தை அமாவாசையன்று, திருச்சியில் உள்ள என்னை வந்தடைந்தது.*****

      //அட்டகாசமான பரிசு வென்றதற்கு அருமையான நிறைவான பாராட்டுக்கள் ஐயா..//

      தங்களின் அருமையான நிறைவான பாராட்டுக்கள் அந்தப் பரிசைபோன்றே அட்டகாசமாகவே உள்ளதாக்கும். ;)))))

      Delete
  34. இனிமையான தருணங்களாக அமைந்திருந்த
    பதிவர்கள் சந்திப்புகளுக்கு மனம் நிறைந்த
    இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி March 2, 2013 at 11:51 AM

      //இனிமையான தருணங்களாக அமைந்திருந்த பதிவர்கள் சந்திப்புகளுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..//

      மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளுக்கு நன்றி. இத்தருணங்களின் இனிமைக்கு இனிமை சேர்க்க மேலும் சிலரை சந்திக்க விருப்பம் தான். அதற்கான பிராப்தம் கைகூடிவரப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  35. ஓடி வந்த பரிசு:
    ஒளிதரும் பயனுள்ள பரிசாக அமைந்ததில் மகிழ்ச்சி ..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி March 2, 2013 at 11:58 AM

      //ஓடி வந்த பரிசு:
      ஒளிதரும் பயனுள்ள பரிசாக அமைந்ததில் மகிழ்ச்சி //

      ஆம், எனக்கும் தான்.

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும், மனம் நிறைந்த மகிழ்வான பாராட்டுக்களும், சூரிய ஒளி போன்ற பிரகாஸமான வாழ்த்துகளும் இந்தப்பதிவுக்குப்பெருமை சேர்த்துள்ளதுடன், என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளன.

      தங்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  36. ஓடி வந்த ஒளிதரும் பரிசு மிக அருமை ...இப்போதெல்லாம்அடிக்கடி இருள் வீசும் தமிழ்நாட்டில் இவை உங்களுக்கு இன்றியமையாதது ..பொருத்தமான பரிசு :))

    தாங்கள் சந்தித்த ஒவ்வோர் நட்புகளையும் தேதிவாரியாக நினைவுகூர்ந்தது .,ஆஹா அற்புதம் !!!.
    அடுத்த ஆண்டு லண்டன் பதிவர் ஒருவரும் வர இருக்கிறாராம் !!! அவருக்கு மகவும் பிடித்த நேந்திரங்கா சிப்ஸ் மட்டும் ரெண்டு கிலோ தயாராக இருக்கட்டும்:))

    ReplyDelete
    Replies
    1. angelin March 2, 2013 at 2:35 PM

      வாங்கோ நிர்மலா.... வாங்கோ, வணக்கம்.

      //ஓடி வந்த ஒளிதரும் பரிசு மிக அருமை ... இப்போதெல்லாம் அடிக்கடி இருள் வீசும் தமிழ்நாட்டில் இவை உங்களுக்கு இன்றியமையாதது ..பொருத்தமான பரிசு :))//

      ஆமாம் நிர்மலா. மிகவும் இன்றியமையாத பொருத்தமான பரிசு என்றே உணர்கிறேன். SIMPLE, WEIGHTLESS, EASILY CHARGEABLE + HANDY யாக இருக்கிறது.

      //தாங்கள் சந்தித்த ஒவ்வோர் நட்புகளையும் தேதிவாரியாக நினைவுகூர்ந்தது .,ஆஹா அற்புதம் !!!.//

      இதுவரை சந்தித்தோர் மிகச்சிலரே. இனி சந்திக்க விரும்புவோர் மிகவும் அதிகம் உள்ளனர்.

      //அடுத்த ஆண்டு லண்டன் பதிவர் ஒருவரும் வர இருக்கிறாராம் !!!//

      ஆஹா, இதைக்கேட்கவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது, நிர்மலா. அவசியம் கட்டாயம் வாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      //அவருக்கு மகவும் பிடித்த நேந்திரங்கா சிப்ஸ் மட்டும் ரெண்டு கிலோ தயாராக இருக்கட்டும்:))//

      நோ ப்ராப்ளம் நிர்மலா. நேத்திரங்கா சிப்ஸ் புத்தம் புதியதாக எங்கள் ஊர் பிரபல ‘அர்ச்சனா ஸ்வீட்ஸ்’ ஸில் ஐந்து கிலோவாகவே வாங்கி தயாராக வைத்துவிடுகிறேன். இதென்ன பிரமாதம். கவலையே படாதீங்கோ. அவசியம் வாங்கோ ... நிர்மலா. ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், அண்ணனிடம் உரிமையுடன் வைத்துள்ள கோரிக்கைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  37. பரிசு மிகவும் அழகாக உள்ளது. தற்போதைய தமிழ்நாட்டு சூழலுக்கு மிகவும் உபயோகமானதும் கூட....

    பதிவர்களை சந்தித்த நாட்களை நினைவில் வைத்து கொண்டு பகிருவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான் சார்...
    மகிழ்ச்சியாக உள்ளது.

    என்னவர் இப்போது அலஹாபாத்திலிருந்து வந்து கொண்டுள்ளார். வந்த பின் பின்னூட்டம் அளிப்பார்...:)

    ReplyDelete
    Replies
    1. கோவை2தில்லி March 2, 2013 at 6:14 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசு மிகவும் அழகாக உள்ளது. தற்போதைய தமிழ்நாட்டு சூழலுக்கு மிகவும் உபயோகமானதும் கூட....//

      ஆமாம். மிக்ச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

      //பதிவர்களை சந்தித்த நாட்களை நினைவில் வைத்து கொண்டு பகிருவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான் சார்...
      மகிழ்ச்சியாக உள்ளது.//

      யார் யாரை சந்தித்துள்ளோம் என்ற நினைவுகள் மட்டும் எனக்கு எப்போதும் உண்டு.

      மிகச்சரியான தேதிகள் மட்டும், Sent Mail இல் Search போட்டு எடுத்தேன்.

      ஒவ்வொருவர் வருகையின் போதும் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர்களுக்கு மெயில் மூலம் அனுப்பியிருப்பேன் அல்லவா!

      அதிலிருந்து தேடி எடுக்க முடிந்தது.

      //என்னவர் இப்போது அலஹாபாத்திலிருந்து வந்து கொண்டுள்ளார். வந்த பின் பின்னூட்டம் அளிப்பார்...:)//

      ஆகட்டும். பரவாயில்லை. அவசரம் ஏதும் இல்லை.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  38. பதிவர்களை நேசிக்கும் உங்களின் அன்புக்கு ஈடுஇணை இல்லை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவியாழி கண்ணதாசன் March 2, 2013 at 7:44 PM

      வாருங்கள், வணக்கம்.

      //பதிவர்களை நேசிக்கும் உங்களின் அன்புக்கு ஈடுஇணை இல்லை வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  39. பதிவர்கள சந்தித்த நாள் ஓவ்வொன்றையும் இப்படி விளாவரியாக , நாள் தேதி வருடம் எலலாவற்றையும் ஞாபகம் வைத்து எழுதி இருக்கிற உங்களை யாருமே மிஞ்ச முடியாது//உங்கள் ஞாபகசக்தியின் பலத்தினை அவ்வப்[பொழுது நிரூபித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றீர்கள்.பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகக்ள்.

    ReplyDelete
    Replies
    1. ஸாதிகா March 2, 2013 at 8:02 PM

      வாருங்கள், வணக்கம்.

      //பதிவர்கள சந்தித்த நாள் ஓவ்வொன்றையும் இப்படி விளாவரியாக , நாள் தேதி வருடம் எலலாவற்றையும் ஞாபகம் வைத்து எழுதி இருக்கிற உங்களை யாருமே மிஞ்ச முடியாது//உங்கள் ஞாபகசக்தியின் பலத்தினை அவ்வப்பொழுது நிரூபித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றீர்கள்.பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகக்ள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  40. மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்திப்பதைவிட மகிழ்ச்சிதரக் கூடிய பரிசு வேறென்ன இருக்கின்றது . வாழ்த்துக்கள் அய்யா

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஜெயக்குமார் March 2, 2013 at 9:15 PM

      வாருங்கள், வணக்கம்.

      //மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்திப்பதைவிட மகிழ்ச்சிதரக் கூடிய பரிசு வேறென்ன இருக்கின்றது . வாழ்த்துக்கள் ஐயா//

      மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். உண்மை தான்.

      மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்திப்பதைவிட மகிழ்ச்சிதரக் கூடிய பரிசு வேறு எதுவும் இல்லை தான். அந்த சந்தோஷமே தனி தான்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  41. எல்லோருக்கும் தொடர் பின்னூட்டம் போட்டு மகிழும் உங்களுக்கு பரிசு என்பது புதிதல்ல; உங்களுக்குப் பரிசு என்று அறிந்து மற்ற பதிவர்கள் ஓடி வருவதும் அதிசயமில்லை. உங்களுக்கு ஓடி வராமல் வேறு யாருக்கும் ஓடி வருவார்களாம்?

    கூடிய விரைவில் உங்களை சந்தித்த பதிவர்கள் லிஸ்டில் என் பெயரும் வரவேண்டும் என்று ஆசை. திரு துரை வேறு உங்கள் வீட்டு ஜன்னல் பற்றி எழுதி ஆர்வத்தை தூண்டிவிட்டார். நீங்களும் உங்கள் வீட்டு ஜன்னல் பற்றியே மூன்று பதிவு எழுதிகள் அசத்திவிட்டீர்கள்.

    சமையலறையிலும் ராஜா என்று சமையல் குறிப்பும் எழுதி பரிசும் பெற்றுவிட்டீர்கள்.

    பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். பரிசு கொடுத்தவருக்கும் வாழ்த்துகள்.
    மறுபடியும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.





    ReplyDelete
    Replies
    1. Ranjani Narayanan March 2, 2013 at 10:05 PM

      வாங்கோ, வணக்கம்.

      //எல்லோருக்கும் தொடர் பின்னூட்டம் போட்டு மகிழும் உங்களுக்கு பரிசு என்பது புதிதல்ல; உங்களுக்குப் பரிசு என்று அறிந்து மற்ற பதிவர்கள் ஓடி வருவதும் அதிசயமில்லை. உங்களுக்கு ஓடி வராமல் வேறு யாருக்கும் ஓடி வருவார்களாம்?//

      அடடா, என்னே ஒரு அன்பான வார்த்தைகள். மனம் ஜில்லிட்டுப் போனது. சந்தோஷம். ;)

      //கூடிய விரைவில் உங்களை சந்தித்த பதிவர்கள் லிஸ்டில் என் பெயரும் வரவேண்டும் என்று ஆசை.//

      சின்னச்சின்ன ஆசை .... சிறகடிக்கும் ஆசை!
      முத்து முத்து ஆசை .... முடிந்து வைத்த ஆசை!!.
      தங்களின் நியாயமான ஆசைகள் விரைவில் நிறைவேறட்டும்.
      எனக்கும் மிக்க மகிழ்ச்சியே!

      //திரு துரை வேறு உங்கள் வீட்டு ஜன்னல் பற்றி எழுதி ஆர்வத்தை தூண்டிவிட்டார்.//

      ஆம், இதில் எல்லாப்புகழும், எல்லோரையுடைய ஆர்வங்களையும் தூண்டி விட்டு, தட்டிவிட்டுள்ள திரு. அப்பாதுரை அவர்களையே சேரும்.

      //நீங்களும் உங்கள் வீட்டு ஜன்னல் பற்றியே மூன்று பதிவு எழுதிகள் அசத்திவிட்டீர்கள்.//

      பொதுவாக எழுதவே மாட்டேன், Suppose எழுத ஆரம்பித்து விட்டால், அது ஹனுமார் வால் போல நீண்டுகொண்டே போகும்.

      என் பலம் + பலகீனம் இரண்டுமே அது தான்.

      //சமையலறையிலும் ராஜா என்று சமையல் குறிப்பும் எழுதி பரிசும் பெற்றுவிட்டீர்கள்.//

      அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் சமையலில் ராஜா அல்ல; வெறும் கூஜா தான். இந்த இரகசியம் என் ராணிக்கு மட்டுமே தெரியுமாக்கும்.

      //பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். பரிசு கொடுத்தவருக்கும் வாழ்த்துகள். மறுபடியும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மனம் திறந்த மிக நீண்ட கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  42. அழகிய பரிசினைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.. பதிவர்களைச் சந்தித்த தேதி முதற்கொண்டு ஞாபகம் வைத்திருப்பது ஆச்சரியத்திற்குரியது.

    ReplyDelete
    Replies
    1. enrenrum16 March 2, 2013 at 10:57 PM

      வாருங்கள், வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. மிக்க மகிழ்ச்சி.

      //அழகிய பரிசினைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.. பதிவர்களைச் சந்தித்த தேதி முதற்கொண்டு ஞாபகம் வைத்திருப்பது ஆச்சரியத்திற்குரியது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
    2. மேடமா.. எங்கே...எங்கே... :)

      (வயதில் மூத்தவரான நீங்கள் என்னை மேடம் என்றெல்லாம் அழைத்து என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்... நான் என்னிக்குமே 16தான்..ஹாஹாஹா)

      பானு.

      Delete
    3. enrenrum16 March 10, 2013 at 11:10 PM

      வாங்கோ ’என்றென்றும் பதினாறு’ அவர்களே!

      தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //மேடமா.. எங்கே...எங்கே... :)

      இதோ ..... இங்கே என் பக்கத்திலேயே இருக்காங்கோ. ;)

      (வயதில் மூத்தவரான நீங்கள் என்னை மேடம் என்றெல்லாம் அழைத்து என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்... நான் என்னிக்குமே 16தான்..ஹாஹாஹா)

      பானு.//

      அன்புடையீர். மனதில் ஏற்றிக்கொண்டு விட்டேன். இனி ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகள் ஆனாலும் கூட, அவ்வாறு மேடம் என்று அழைக்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.

      உண்மையான வயதினை ஒப்புக்கொண்டு பகிரங்கமாகவே சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      என்றென்றும் 16 என வரம் பெற்றுள்ள மார்கண்டேயனி வாழ்க வாழ்கவே!

      Delete
  43. வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. Sandhya March 3, 2013 at 1:06 AM
      வாழ்த்துக்கள்...!//

      வாருங்கள். வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  44. உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ March 3, 2013 at 4:42 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா..

      //உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.//

      மிக்க நன்றி ஐயா.

      இருப்பினும் எனக்கு அதிலெல்லம் அவ்வளவாக ஆர்வம் இல்லை ஐயா.

      எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் தருபவை, தங்களைப்போன்ற பலரின் கருத்துக்களும், பின்னூட்டங்களும் மட்டுமே ஐயா.

      உங்களின் விருப்பப்படி, செளகர்யப்படி நீங்களே பார்த்து என் படைப்புகளை தமிழ்மணம் போன்ற எதில் இணைத்தாலும் எனக்கு அதில் எந்த் ஒரு ஆட்சேபணையும் கிடையாது, ஐயா.

      அன்புடன் VGK

      Delete
  45. அழகான, பலனுள்ள பரிசைப் பெற்றதுக்கும், பதிவர்கள் வருகையினால் நீங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டமைக்கும் வாழ்த்துகள். இன்று போல் என்றும் இது போல் பல பரிசுகளையும் பெற்று நல்ல நண்பர்களையும் பெற்று வாழ அந்தத் தாயுமானவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam March 3, 2013 at 5:05 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அழகான, பலனுள்ள பரிசைப் பெற்றதுக்கும், பதிவர்கள் வருகையினால் நீங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டமைக்கும் வாழ்த்துகள். இன்று போல் என்றும் இது போல் பல பரிசுகளையும் பெற்று நல்ல நண்பர்களையும் பெற்று வாழ அந்தத் தாயுமானவனை வேண்டுகிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், வேண்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      Delete
  46. வாழ்த்துக்கள் சார் !!!
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. Sangeetha Nambi March 4, 2013 at 2:15 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வாழ்த்துக்கள் சார் !!!
      http://recipe-excavator.blogspot.com//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.


      Delete
  47. உங்கள் பணிவும் அன்பான விசாரிப்புகளுமே , உங்கள் வாசகர்களை கட்டி போட்டுள்ளன. எளிய நடையில், தினப்படி நடக்கும் நிகழ்ச்சிகளை , நகைச்சுவையோடு எழுதி வாசகர்களுக்கு விருந்து அளிக்கும் உங்களுக்கு, மேன் மேலும் சிறப்புகள் வந்தடைய , உச்சி பிள்ளையார் அருளுக்கு வேண்டுகிறேன்.

    ReplyDelete
  48. Pattu Raj March 4, 2013 at 11:39 PM

    வாங்கோ பட்டு ;))))) செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

    நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் இன்றைய அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சந்தோஷம்.

    அதுவும் பின்னூட்ட எண்ணிக்கையில் 99+100 ஆக அமைந்துள்ளது மேலும் ஓர் சிறப்பு தான்.

    //உங்கள் பணிவும் அன்பான விசாரிப்புகளுமே , உங்கள் வாசகர்களை கட்டி போட்டுள்ளன. எளிய நடையில், தினப்படி நடக்கும் நிகழ்ச்சிகளை , நகைச்சுவையோடு எழுதி வாசகர்களுக்கு விருந்து அளிக்கும் உங்களுக்கு, மேன் மேலும் சிறப்புகள் வந்தடைய , உச்சி பிள்ளையார் அருளுக்கு வேண்டுகிறேன்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், வேண்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  49. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா. அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ். அன்பினால் ஏற்பட்ட நட்புறவுகள் தாங்களை தேடிவந்தது ஆச்சரியமில்லை. அவர்களை இப்பதிவின்மூலம் அதனை ஞாபகப்படுத்தி கெளரவத்திருக்கிறீங்க.

    ReplyDelete
    Replies
    1. ammulu March 5, 2013 at 12:25 AM

      வாங்கோ அம்முலு, வணக்கம்.

      //பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா.//

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் சந்தோஷம் அம்முலு.

      //அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ். அன்பினால் ஏற்பட்ட நட்புறவுகள் தாங்களை தேடிவந்தது ஆச்சரியமில்லை. //

      என் அன்புக்குரிய அம்முலு வாயால் இதைக்கேட்க மிகுவும் சந்தோஷமாக உள்ளது.

      //அவர்களை இப்பதிவின்மூலம் ஞாபகப்படுத்தி கெளரவத்திருக்கிறீங்க.//

      ஆமாம் அம்முலு. உங்களைப்போல என்னிடம் மிகவும் அன்புடன் பழகிவரும் மேலும் நிறைய பதிவர்களை, இன்னும் அடிக்கடி சந்திக்கவேண்டும் என்று மிகவும் ஆவலாகத்தான் உள்ளது. பிராப்தம் இருக்க வேண்டும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களின் வருகை எண்: 101 என அமைந்துள்ளது மேலும் ஓர் மிகச்சிறப்பாக உள்ளது, ;)))))

      Delete
  50. மிகவும் அழகான பரிசு. வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  51. கணேஷ் March 5, 2013 at 1:39 AM

    வாப்பா கணேஷ், செளக்யமா? வலைப்பதிவில் சந்தித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. இன்றைய உன் வருகை சந்தோஷமளிக்கிறது.

    //மிகவும் அழகான பரிசு. வாழ்த்துக்கள்,//

    அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  52. பிறக்கும் போதே, நான் ஒரு கொழுக்கு மொழுக்கு! அந்த காலத்து பிரபல பானமான COW&GATE குடித்து வளர்ந்த பேபியாக்கும் நான்! ரொம்ப நாளாகவே மனிதர்கள் என்றால் குண்டாகத் தான் இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன்...கொஞ்சம் விபரம் தெரிந்தவுடன் தான் தெரிந்தது..ஒல்லியாகவும் மனிதர்கள் இருப்பார்களென்று..
    குண்டாக இருப்பது எனக்கு பிடித்த ஒன்று!மேலும் ஒல்லியாக வேண்டும் என்று விரும்பினால், யாராவது குண்டு கல்யாணம் பக்கம் போய் நின்று போஸ் குடுப்பேன்..(ஜெயந்தி மேம் டெக்னிக்!)
    மற்றபடி ராமமூர்த்தி சாண்டோ;
    உருளைக் கிழங்கு போண்டோ
    என்று பெயர் வாங்கத் தான் ஆவல்..
    எனக்கு நன்றாகவேத் தெரியும் உடம்பு ஸ்லிம்மாக எது செய்தாலும், கடைசியில் நம்ம பர்ஸ் தான் ஸ்லிம்மாகும் என்று!

    ReplyDelete
    Replies
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி March 5, 2013 at 7:26 AM

      ராமமூர்த்தி சாண்டோ !
      உருளைக் கிழங்கு போண்டோ !!

      அவ்ர்களே, வாருங்கள், வணக்கம்.

      //எனக்கு நன்றாகவேத் தெரியும் உடம்பு ஸ்லிம்மாக எது செய்தாலும், கடைசியில் நம்ம பர்ஸ் தான் ஸ்லிம்மாகும் என்று!//

      ஆஹா, இவ்வளவு தூரம் நாம் நகமும் சதையுமாகப் பழகியும் இதை என்னிடம் சொல்லாமல் இருந்து விட்டீர்களே, ஸ்வாமீ.

      என் பர்ஸ் ஸ்லிம்மான பிறகு தான் இந்தப்பேருண்மை நானும் தெரிந்து கொண்டேன். இப்போதெல்லாம் எதைப்பற்றியும் நான் கவலையே படுவதில்லை.

      தினமும் நிலைக்கண்ணாடியில் நான் என்னையே ஒருமுறை பார்த்துக்கொள்வேன். பிறகு ஜன்னலைத் திறந்து திருச்சி மலைக்கோட்டையைப் பார்ப்பேன். அதனுடன் ஒப்பிடும்போது நான் ஓமக்குச்சி தான் / ஈர்க்குச்சி தான் என நினைத்து மகிழ்வேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  53. Aha.
    Super Gift. Gift is always to be perserved. isint it?
    But this is so useful.
    Orunal nanum theti varuven. Ungal Jannalaiyum mamien adai sapidavum.
    viji

    ReplyDelete
    Replies
    1. viji March 5, 2013 at 6:39 PM

      வாருங்கள், வணக்கம். உங்களுக்கான என் இந்த பதிலின் எண்ணிக்கை 108 என்று காட்டுகிறது. அது ஒரு மிகச்சிறப்பான எண்ணிக்கை. அஷ்டோத்ரம் போலவே.

      உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம் இருவரின் நட்புக்கும் காரணமாக உள்ள ஓர் பதிவரின் வீட்டுக்கதவு எண்ணும் 108 தான்.

      அவர்களை நினைத்தாலே மகிழ்ச்சியில் மெய்சிலிர்த்துப்போகிறது அல்லவா! . அவர்கள் ’எங்கிருந்தாலும் வாழ்க’ என வாழ்த்தி மகிழ்வோம்.

      //Aha.Super Gift. Gift is always to be preserved. is it not? ஆஹா சூப்பர் கிஃப்ட். கிஃப்ட் என்பது எப்போதுமே பதுகாக்கப்பட வேண்டிய ஒன்று, இல்லையா ?//

      ஆம் சூப்பர் கிஃப்ட் தான். எப்போதும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது தான். .

      //But this is so useful ஆனாலும் இது மிகவும் உபயோகமானதே//

      ஆமாம். இருட்டினில் வெளிச்சம் தரும் மிகவும் பயனுள்ள பரிசுப்பொருள் தான். சந்தேகமே இல்லை. மிகவும் உபயோகமானதே.
      .
      //Orunal nanum theti varuven. Ungal Jannalaiyum mamien adai sapidavum.- viji ஒருநாள் நானும் தேடி வருவேன்.... உங்கள் ஜன்னலைக்காணவும், மாமியின் அடையைச் சாப்பிடவும் - விஜி //

      ”அந்த நாளும் .......... வந்திடாதோ !” எனப்பாடிக்கொண்டிருக்கிறேன்.

      வாங்கோ, அவசியம் வாங்கோ. ALWAYS WELCOME !

      தங்களின் அன்பான வருகைக்கும் அசத்தலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்

      அன்புடன் கோபு.

      Delete
  54. ஆஹா... ஆஹா.... அமாவாசைநாள் இருட்டில உங்களுக்கு லைட் கிடைச்சிருக்கே... ஆருக்கு கிடைக்கும் இப்படிப் பாக்கியம்..

    பொதுவா அமாவாசையில் நல்ல காரியம் எதுவும் செய்யப்படாது என்பினம்.. ஆனா அன்றுதானே பரிசு கைக்கு வந்திருக்கு... தப்பித்தவறி பவர் கட்டாகாமல் விட்டாலும்கூட.. நீங்க லைட்டை எல்லாம் ஓவ் பண்ணிட்டு சார்ஜர் லைட்டைப் பாவியுங்கோ..:))))) சரி அது போக..

    பல பதிவர்களை மீட் பண்ணியிருக்கிறீங்க.. இதில் எனக்கு தெரிஞ்சது மனோஅக்காவை மட்டும்தான்ன்... அவ... நாங்களெல்லாம் பழைய ஆட்களாக்கும்... அதாவது 2008 இலிருந்து அறுசுவையில் அறிமுகமானோம்ம் ஒருவரோடொருவர்...

    இந்த வருடத்தில் இன்னும் பலரைச் சந்திக்க வாழ்த்துக்கள் கூறி விடைபெறுபவர்..
    புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)..

    ReplyDelete
    Replies
    1. athira March 9, 2013 at 2:40 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //ஆஹா... ஆஹா.... அமாவாசைநாள் இருட்டில உங்களுக்கு லைட் கிடைச்சிருக்கே... ஆருக்கு கிடைக்கும் இப்படிப் பாக்கியம்..//

      அதைவிட பாக்கியம், தங்களின் இந்த பின்னூட்டம் கிடைத்தது.

      //பொதுவா அமாவாசையில் நல்ல காரியம் எதுவும் செய்யப்படாது என்பினம்.. ஆனா அன்றுதானே பரிசு கைக்கு வந்திருக்கு... //

      அமாவாசை நிறைந்த நாள். நம்பிக்கை தரும் நாள்.

      மறுநாள் முதல் பிறை சந்திரன் வளரப்போவதையும் ஒளிரப்போவதையும் தெரிவிக்கும் மிகச்சிறந்த நாள்.

      மூதாதையர்களின் ஆசியைச் சுலபமாக பெற்றிடும் நல்ல நாள்.

      அன்று பரிசு கைக்குக் கிடைத்தது மிகச்சிறந்த ஓர் நிகழ்வாகும் .... அதிரா. அமாவாசையைப்பற்றி நீங்க சொல்லும் கருத்து தவறு.

      //தப்பித்தவறி பவர் கட்டாகாமல் விட்டாலும்கூட.. நீங்க லைட்டை எல்லாம் ஓவ் பண்ணிட்டு சார்ஜர் லைட்டைப் பாவியுங்கோ..:))))) //

      பவர் கட்டாகாமல் விட்டால் தான், அதை சார்ஜில் போட முடியும்.

      //சரி அது போக..//

      சரி அதை விட்டுடுவோம் ;)

      //பல பதிவர்களை மீட் பண்ணியிருக்கிறீங்க.. இதில் எனக்கு தெரிஞ்சது மனோஅக்காவை மட்டும்தான்ன்... அவ... நாங்களெல்லாம் பழைய ஆட்களாக்கும்... அதாவது 2008 இலிருந்து அறுசுவையில் அறிமுகமானோம்ம் ஒருவரோடொருவர்...//

      கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

      //இந்த வருடத்தில் இன்னும் பலரைச் சந்திக்க வாழ்த்துக்கள் கூறி விடைபெறுபவர்.. புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)..//

      புலாலியூர் பூஸானந்தா அவர்களை எப்போது சந்திக்கும் பாக்யம் கிடைக்குமோ??????? ;)))))

      Delete
  55. //அதிரா. அமாவாசையைப்பற்றி நீங்க சொல்லும் கருத்து தவறு.//

    உண்மையாகவோ கோபு அண்ணன்? சின்னனிலிருந்தே அமாவாசை என்பது முழு இருட்ட்டு நாள் என்பதால் நல்ல காரியம் எதுவும் செய்யக்கூடாது என்பினம், அதனால் எனக்கு பயம்.

    ஆனா எங்கட ஒரு அங்கிள், அவர் தனக்கு அமாவாசைதான் பொருத்தம் என அன்றுதான் திருமணம் முடித்தவர்... இப்போ அவருக்கு உங்கள் வயதிருக்கும், நன்றாகவே இருக்கிறார்கள்.

    அப்போ அமாவாசையில் நல்ல கருமங்கள் செய்யலாமோ? நாளைக்கு அமாவாசை எல்லோ?

    ReplyDelete
    Replies
    1. athira March 10, 2013 at 12:23 AM

      வாங்கோ அதிரா, மீண்டும் வருகைக்கு மகிழ்ச்சி.

      *****அதிரா. அமாவாசையைப்பற்றி நீங்க சொல்லும் கருத்து தவறு.*****

      //உண்மையாகவோ கோபு அண்ணன்? சின்னனிலிருந்தே அமாவாசை என்பது முழு இருட்ட்டு நாள் என்பதால் நல்ல காரியம் எதுவும் செய்யக்கூடாது என்பினம், அதனால் எனக்கு பயம்.//

      சில நல்ல கார்யங்கள் அன்று ஆரம்பிக்கலாம். நாம் செய்யும் சில வழக்கமான ஆனால் தப்பான, கார்யங்கள் அன்று செய்யாமல் இருப்பது நல்லது.

      அது நம் பித்ருக்களுக்கு [முன்னோர்களுக்கு] உகந்த நாள்.

      பித்ருக்களுக்கு நீர்க்கடன் கொடுத்து விட்டு, ஒரு வேளை மட்டும் உணவருந்தி, இரவு பலகாரம் [டிபன்] சாப்பிடுவது வழக்கம்.

      அதுபோல வாழைக்காய் முதலிய ஸாத்வீகமான உணவுகளை மட்டும் உண்ண வேண்டிய நாள். வெங்காயம், பூண்டு முதலிய பலவற்றை அன்று தவிர்ப்பது வழக்கம்.

      //ஆனா எங்கட ஒரு அங்கிள், அவர் தனக்கு அமாவாசைதான் பொருத்தம் என அன்றுதான் திருமணம் முடித்தவர்... இப்போ அவருக்கு உங்கள் வயதிருக்கும், நன்றாகவே இருக்கிறார்கள்.//

      அமாவாசையன்றும், அதற்கு முதல் நாளும், பொதுவாக யாரும் திருமணங்கள் செய்வது இல்லை. அதற்கெல்லாம் சில குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன.

      //அப்போ அமாவாசையில் நல்ல கருமங்கள் செய்யலாமோ?//

      வீடு வாங்கும் போது பத்திரப்பதிவு போன்றவை அமாவாசையன்று செய்ய பலரும் ஆவலுடன் காத்திருப்பது வழக்கம்.

      அதுபோல ஒருசில சுப கார்யங்கள் அமாவாசை நிறைந்த நாள் என்று செய்வது வழக்கம்.

      அதற்காக எல்லாக்கார்யங்களும் அமாவாசையில் தான் செய்ய வேண்டும் என்பது அர்த்தமல்ல.

      அன்று கரிநாள் என பஞ்சாங்கத்தில் போட்டிருந்தாலோ, யோகம் முதலியன சரியில்லாமல் இருந்தாலோ, நக்ஷத்திரப் பொருத்தம் சரியில்லாமல் இருந்தாலோ, அமாவாசையாகவே இருப்பினும், எதுவும் செய்யக்கூடாது.

      எந்த ஒரு கார்யம் செய்யவும், அன்றைய யோகம் நல்லா இருக்கணும். அன்றைய நக்ஷத்திரம் உங்களின் பிறந்த நக்ஷத்திரத்திற்கு பொருத்தமானதாக இருக்கணும்.

      இதுபோல எவ்வளவோ விஷயங்களும் பார்க்க வேண்டியது உள்ளது.

      அமாவாசை என்ற ஒரே ஒரு ASPECT மட்டும் பார்க்கக்கூடாது.

      இதெல்லாம் எனக்கு ஓரளவு மட்டுமே பார்க்கத் தெரியும். சாதாரண நிகழ்வுகளுக்கு நானே நல்ல நாள் பார்த்துக்கொண்டு விடுவேன்.

      எனக்கு சந்தேகம் வரும் Major விஷயங்களுக்கு, நிறைய சாஸ்திரங்கள் படித்த மேதைகள் உள்ளனர். அவர்களிடம் போய் கேட்டு அறிந்து கொள்வேன்.

      //நாளைக்கு அமாவாசை எல்லோ?//

      ஓம் [ஆம்] ; நாளைக்கு சாதாரண அமாவாசை மட்டும் அல்ல. சிவராத்திரியை ஒட்டிய அமாவாசை. மிகவும் சிறப்பு வாய்ந்தது.

      மேலும் திங்கட்கிழமையன்று அமாவாசை வருவது அபூர்வமானது. விசேஷமானது.

      அதற்கு ஸோமவார பிரதக்ஷண அமாவாசை என்று பெயர்.

      ஸ்நானம் செய்து விட்டு மடியாக சுத்தமான உடை அணிந்து, 108 முறை அரச மரத்தை பிரதக்ஷணம் செய்து, அரசமரத்தடி பிள்ளையாரை வணங்குவார்கள்.

      ஒவ்வொரு பிரதக்ஷணம் முடியும் போது, பிள்ளையாரிடம் ஏதாவது ஒரு பொருளை [தின்பண்டம்] போடுவது வழக்கம்.

      பழங்கள், கொழுக்கட்டை, அப்பம். வடை, மிட்டாய்கள், சாக்லேட், கல்கண்டு, திராக்ஷை போன்ற ஏதாவது ஒன்று.

      அப்போது தான் 108 பிரதக்ஷண எண்ணிக்கையும் விட்டுப்போகாமல் இருக்கும்.

      பிறகு அதை அங்குள்ள பொதுமக்களுக்கும், எறும்பு, பறவைகள் முதலியவற்றிற்கும் விநியோகம் செய்வது வழக்கம்.

      ooOoo

      Delete
    2. ஆவ்வ்வ் பொறுமையாக இவ்வளாவும் எழுதியமைக்கு மியாவும் நன்றி.

      Delete
    3. athira March 10, 2013 at 1:18 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //ஆவ்வ்வ் பொறுமையாக இவ்வளாவும் எழுதியமைக்கு மியாவும் நன்றி.//

      பொறுமையாக என்னை எழுதத்தூண்டியதற்கும், நான் எழுதியுள்ள பதில்களைப் பொறுமையாகப் படித்ததற்கும் அதிராவுக்கும் மியாவுக்கும் என் நன்றியோ நன்றிகள். ;).

      Delete
  56. பரிசுக்கு வாழ்த்துகள். மேலும் வெற்றிகள் கிடைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மாதேவி March 13, 2013 at 6:12 AM

      வாருங்கள், வணக்கம்.

      //பரிசுக்கு வாழ்த்துகள். மேலும் வெற்றிகள் கிடைக்கட்டும்//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  57. அருமை.
    நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. Rathnavel Natarajan March 18, 2013 at 8:46 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //அருமை. நன்றி ஐயா.//

      மிக்க நன்றி, ஐயா.

      Delete
  58. வீட்டிற்கே பரிசு அனுப்பி வைத்த ஜலீலா கமல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.பதிவர்கள் சந்திப்பு தருணங்களும் மறக்க முடியாதவைதான்.அம்மாவசை பற்றின குறிப்புகளும் பயனுள்ளவை.

    ReplyDelete
  59. thirumathi bs sridhar March 24, 2013 at 7:13 PM

    வாங்கோ, வணக்கம். எப்படி இருக்கீங்கோ! உங்களைப் பார்த்து ரொம்ப வருஷம் ஆனாப்போல இருக்கு. ;(

    //வீட்டிற்கே பரிசு அனுப்பி வைத்த ஜலீலா கமல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.//

    ஆமாம். பாராட்டுக்குரியவர்கள் தான், திருமதி ’ஜலீலா கமால்’ அவர்கள்.

    //பதிவர்கள் சந்திப்பு தருணங்களும் மறக்க முடியாதவைதான்.//

    ஆமாம். அவை என்றும் மறக்க முடியாதவைகள் தான். நேற்று [24.03.2013] கூட மூவர் வருகை தந்திருந்தார்கள். ;)))))

    நீங்கள் அவர்கள் மூவரையும் அடிக்கடி சந்தித்துள்ளீர்கள். இங்கு அது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும்.

    //அம்மாவசை பற்றின குறிப்புகளும் பயனுள்ளவை.//

    அது அம்மா+வசை=அம்மாவசை அல்ல.
    அது அம்மா+ஆசை=அம்மாவாசையும் அல்ல.

    அமாவாசை என்பதே சரியான சொல்லாகும்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  60. வாழ்த்துக்கள் சொல்லி சொல்லி வாயெல்லாம் வலிக்குதுங்க.இன்னும் ஏதானு பரிசை விட்டு வச்சிருக்கீங்களா?சந்த்தித்தபதிவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்தத்து நெகிழ்ச்சியான விஷயம்.ரியல்லி யு ஆர் க்ரேட் சார்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் March 26, 2013 at 9:28 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வாழ்த்துக்கள் சொல்லி சொல்லி வாயெல்லாம் வலிக்குதுங்க.//

      அது எப்படிங்க வாயை வலிக்கும்? ஒருமுறைகூட நீங்க இன்னும் வாயைத்திறந்து எனக்கு வாழ்த்துச் சொல்லவே இல்லை. உங்கள் குரலைக்கூட நான் இன்னும் ஃபோனில் கூட கேட்டது இல்லை.

      டைப்பு அடிச்சுக் கையை வலிக்குது, விரலை வலிக்குது என்று சொன்னாலும் அது உண்மையகவும் நியாயமாகவும் இருக்கும். வாயை வலிக்குதுன்னு சொன்னால் எப்படிங்கோ?

      //இன்னும் ஏதானு பரிசை விட்டு வச்சிருக்கீங்களா?//

      தெரியவிலை எதுவும் ஞாபகத்துக்கு வருவதும் இல்லை.

      நேற்று கூட ஒரு பதிவர் எனக்கு ஒரு பரிசு அறிவித்திருக்கிறாங்கோ. இணைப்பு இதோ:

      http://www.eniniyaillam.com/2013/03/passion-on-plate.html//

      //சந்த்தித்தபதிவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்தத்து நெகிழ்ச்சியான விஷயம்.ரியல்லி யு ஆர் க்ரேட் சார்.//

      சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  61. ஓடி வந்த பரிசுக்கும் தேடி வந்த பதிவர்களுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  62. Replies
    1. பூந்தளிர் August 15, 2015 at 6:40 PM

      வாங்கோ, வணக்கம்.

      :)))))

      தங்களின் பழைய பின்னூட்டம் + என் பதில் மீண்டும் இன்று படித்து மகிழ்ந்தேன். :)))))

      Delete
  63. அடை பதிவுக்கா பரிசு கிடச்சிருக்கு? சூப்பருங்கோ. உங்க பக்கம் வந்தாலே பதிவும் பின்னூட்டங்களும் ஒரே கலகலப்பா இருக்கு. பரிசு வாங்கியதுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. mru September 8, 2015 at 6:23 PM

      வாங்கோ முருகு, வணக்கம்.

      //அடை பதிவுக்கா பரிசு கிடச்சிருக்கு? சூப்பருங்கோ.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //உங்க பக்கம் வந்தாலே பதிவும் பின்னூட்டங்களும் ஒரே கலகலப்பா இருக்கு. //

      அதிரடி, அலம்பல், அட்டகாச, அதிரஸ ’அதிரா’ என்றொரு ஸ்வீட் சிக்ஸ்டீன் கேர்ள் [தான் Sweet 16 என்று இதையே 60 வருஷமாக என்னிடம் சொல்லி வருபவர்கள் :) ] முன்பெல்லாம் என் பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டங்களில் கும்மியடித்து கலக்குவாங்க.

      அவங்களும் உங்களைப்போலவே கொச்சைத்தமிழில் தான் பின்னூட்டம் எழுதுவாங்கோ. இந்தப்பதிவுக்குக்கூட வந்திருக்காங்க. இப்போ கொஞ்சம் நாளா அவங்களைக்காணோம். அவங்களுக்கு அக்காவா நீங்க இப்போ வந்துக்கிட்டு இருக்கீங்கோ. மிக்க மகிழ்ச்சி.

      //பரிசு வாங்கியதுக்கு பாராட்டுக்கள்//

      சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றிம்மா.

      Delete
  64. ஸார் இது உங்களுக்கே நாயமா? பிரித்தானியார் இளவரசியார் ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிரா அக்காவுக்கு என்ன அக்கானு சொல்லிட்டீங்க. அளுகை அளுகையா வருதே. கண் துடைக்க பெரிய ருமால் அனுப்பிடுங்க சொல்லிபுட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. truefriend September 9, 2015 at 10:03 AM

      வாங்கோ ’உண்மை நட்பே’, வணக்கம்.

      //ஸார் இது உங்களுக்கே நியாயமா? பிரித்தானியார் இளவரசியார் ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிரா அக்காவுக்கு என்னை அக்கானு சொல்லிட்டீங்க. அளுகை அளுகையா வருதே. கண் துடைக்க பெரிய ருமால் அனுப்பிடுங்க சொல்லிபுட்டேன்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அதிராவுக்கு தம்பியோ/தங்கையோ என எழுதலாம்தான். ஆனால் அதனை நம் அதிரா பார்க்க நேர்ந்தால் என்னை பிரித்தானிய ஹைகோர்ட்டுக்கு அழைத்து, டாராகக் கிழித்து விடுவாங்களே ! நான் என்ன செய்ய? :)

      இப்போதைக்கு பெரிய ருமாலுக்கு பதிலாக, ஏதாவது வீட்டில் இருக்கும் பழைய வேஷ்டி/புடவைகளை வைத்துக் கொண்டு கண் துடைத்துக்கொள்ளவும். :)

      Delete
  65. ஸார் அண்ணன் பண்ணின குளப்படி. நான் இப்படி பின்னூட்டம் போடப்போறேண்டானு நேத்தே அவனிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். அவசர குடுக்க எனக்கு தெரியாம போட்டு இப்ப சொல்லி வெவ்வவேன்னு பளிப்பு காட்டுது. ஸாரி ஸாரி

    ReplyDelete
    Replies
    1. mru September 9, 2015 at 10:22 AM

      வாங்கோ முருகு, வணக்கம்.

      //ஸார் அண்ணன் பண்ணின குளப்படி. நான் இப்படி பின்னூட்டம் போடப்போறேண்டானு நேத்தே அவனிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். அவசர குடுக்க எனக்கு தெரியாம போட்டு இப்ப சொல்லி வெவ்வவேன்னு பளிப்பு காட்டுது. ஸாரி ஸாரி//

      ‘அண்ணன் ஒரு கோயில்’ :) அவரைப்போய் இப்படியெல்லாம் அவன் இவன் என்று மரியாதை குறைவாகப் பேசாதீங்கோ. எழுதாதீங்கோ.

      பளிப்பு காட்டினாலும், அவரிடமே ஸாரி ஸாரி கேட்டுக்கோங்கோ. OK யா ? Bye for now.

      Delete
  66. இங்கன அல்ரெடி கொளப்படிச்சாச்சி இனிமேக்கொண்டு தாங்காதுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. mru October 23, 2015 at 1:22 PM

      //இங்கன அல்ரெடி கொளப்படிச்சாச்சி இனிமேக்கொண்டு தாங்காதுங்கோ.//

      ஓக்கே, புரியுது. தேங்க் யூ வெரி மச். :)

      Delete
  67. ஓடி வந்த பரிசுக்கும் தேடி வந்த பதிவர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.

    ReplyDelete
  68. பரிசுக்கு வாழ்த்துகள்...இன்னும் எத்தனை லைன்ல இருக்கோ...பதிவர்களும் வந்து சார்ஜ் ஏத்திகிட்டு போனாங்களா?!!!

    ReplyDelete