என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

அறுபதிலும் ஆசை வரும் ! ;)))))


By
வை. கோபாலகிருஷ்ணன்



தங்கள் நினைவுக்காக



”நல்ல காலம் பொறக்குது !

நல்ல சேதி கெடைக்குது !!”

  


நல்ல காலம் பொறக்குது !



நல்ல சேதி கெடைக்குது !!





இந்த வூட்டுப்பதிவர் அம்மாவுக்கு


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!


இந்தச்செவத்த அம்மா வூட்டுல

கண்ணாலம் ஒண்ணு உடனே வரப்போகுது!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!




ஒரு கண்ணாலம் மட்டுமா!

அடுத்தடுத்துப் பல 

கண்ணாலங்கள் நடக்கப்போகுது!!




நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!

 !!



இந்த நடுத்தர வயசு செவத்தம்மாவின்




அறிவுக்கும், அழகுக்கும்,



ஆசைக்கும், குணத்துக்கும்,


துடிப்புக்கும், துள்ளலுக்கும்


அந்த செவத்த அம்மணிக்கே மீண்டும் 

கண்ணாலம் நடக்கப்போவுது!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!



பொன்னு [பொண்ணு] கெடச்சாலும்

புதன் கெடைக்காதுன்னு சொல்லுவாங்கோ!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!


இந்த செவத்த அம்மாதான்

மனையிலே குந்த,

இப்போ கண்ணாலப் 

பொண்ணாக் கெடச்சுருக்கு!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!




அடுத்து  புதன்தானே, கெடைக்கணும்?

ஒரு புதன்கிழமையாகவே 

அதுவும் கெடைக்கப்போகுது!!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!


  28th ஆகஸ்டு  புதன்கிழமை 

’டும் டும் டும் டும்’ ன்னு ஒரே

மேளச்சத்தமாக் கேட்கப்போகுது



நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!



அம்மாவுக்கும் ஐயாவுக்கும்

மீண்டும் ஜோராக் கண்ணாலம்

நடக்கத்தான் போகுது!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!



செவத்தம்மா கழுத்துல மீண்டும்

 புதுத்தாலி ஏறத்தான் போகுது!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!






’அறுபதிலும் ஆசை வரும்’ன்னு



இந்த செவத்தம்மா, ஐயாவோட


டூயட் ஆடத்தான் போறாங்கோ!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!



அழகாகக் கட்டிக்கிட்டு இருக்கிற

வூடு முடிஞ்சு செவத்தம்மா கையிலே

வீட்டுச்சாவி கெடைக்கப்போவுது!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!


வூடு மாத்தி கிரஹப்பிரவேசக்

கண்ணாலமும் இந்த செவத்தம்மா


நடத்தத்தான் போகுது!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!






அடுத்த மாசமே இந்த செவத்த



அம்மாவோட பேத்திக்குக்



காது குத்துக் கண்ணாலமும்


நடக்கப்போகுது!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!




இந்த வூட்டு ராணியம்மாவோடப்

பொண்ணு ... இளவரசியம்மாவுக்கு 

நல்ல வரன் ஒண்ணு 

குதிர்ந்து வரப்போகுது!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!


ஓயாம ஒழியாம ஓடிஓடி

பட்டாம்பூச்சிபோல ஒழைக்கற  

செவத்தம்மாவுக்குப்

பணி ஓய்வுக் கண்ணாலமும் 

இந்த வருஷமே நடக்கப்போகுது!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!




இந்த செவத்தம்மா

தொட்டதெல்லாம் 

தொலங்கப்போகுது!


பதிவில் எழுதாம 

விட்டெதெல்லாம் 

எழுதப்போகுது!!



நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!





யார் அந்த செவத்தம்மா?


அதுவும் யார் அந்தப் பதிவர் அம்மா?


என்கிறீர்களா?



நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!






என்ன நல்ல சேதி அது?


எப்போ கெடைக்கப் போகுது அது?



என்கிறீர்களா?



ஆயிரம் வாசல் இதயம் .... அதில்

ஆயிரம் எண்ணங்கள் உதயம்!



யோசியுங்கள் .... காத்திருங்கள் 


ஒரிரு வாரங்கள் மட்டுமே!



உங்களுக்கும்

நல்ல காலம் பொறக்கும் !

அந்த நல்ல சேதி

என் மூலமே கெடைக்கும் !!



என்று சொல்லியிருந்தேன் அல்லவா! 


























   
பூம்..பூம்..பூம் மாட்டுக்காரன்
தெருவில் வந்தான்டி!
பூம்..பூம்...பூம் மேளம் கொட்டி 
சேதி சொன்னான்டி !!
 




மேற்படி பதிவினில் நான் 
கொடுத்திருந்த புதிருக்கு விடை: 


இதோ அந்த செவத்தம்மா


என் அன்புச்சகோதரி 
திருமதி: ஜெயந்தி ரமணி அவர்கள்
மணம் [மனம்] வீசும்

oooooOooooo






2

ஸ்ரீராமஜயம்


ஸ்ரீமான் 
ரமணி வேங்கடேஸ்வரன்
அவர்களுக்கும் 

செளபாக்யவதி :
T.S. ஜெயந்தி அவர்களுக்கும்

28.08.2013 புதன்கிழமையன்று
காலை 10 மணி முதல் 11 மணிக்குள்
சஷ்டியப்த பூர்த்தி விழா [60th Birth Day]



தமிழ்நாட்டின் தலைநகரில்
மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

ஒற்றுமையான உத்தம தம்பதியினருக்கு 
மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


அன்புச்சகோதரி செளபாக்யவதி ’ஜெயந்தி’க்கு 
ஏதோ இந்த ஏழை எளிய கோபு அண்ணா
கொடுக்க நினைக்கும் [கற்பனையில் தான்]
ஒருசில மங்கலப்பொருட்கள். 


    
 

  


 




 

 



  

 



 





 



விழா ஏற்பாடுகளை மிகுந்த ஆசையுடனும், 
மிகச்சிறப்பாகவும், சிரத்தையாகவும் செய்துள்ள

சிரஞ்சீவி. ராம்ஸ்ரீநாத் ரமணி

திருமதி. விஷ்ணுப்ரியா ராம்ஸ்ரீநாத்

செல்வி சந்தியா ரமணி

’லயா’குட்டி என்று செல்லமாக 
அழைக்கப்படும் குட்டியூண்டு ஜெயந்தி


ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த 
ஆசிகள், வாழ்த்துகள், நன்றிகள். 


 

  

 



 

 

   


 


  

 

 



 

 

  

 





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆசீர்வாதத்தில் 
தம்பதியினராகிய தாங்கள் இருவரும் 
சகலவிதமான செளபாக்யங்களுடன், நீடூழி வாழ்ந்து
பீமரதஸாந்தி, ஸதாபிஷேகம், கனகாபிஷேகம் 
போன்ற விழாக்களையும் கொண்டாடி மகிழ வேண்டும் என
 ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு 
அடியேன் நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன். 

பிரியமுள்ள கோபு



சுபம்

oooooOooooo oooooOooooo oooooOooooo oooooOooooo


அனைவரின் பொதுவான தகவலுக்காக

அன்புச்சகோதரி திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுடன் எனக்கோர் 7-8 மாதங்களுக்கு முன்பாக மட்டுமே பதிவுகள் + பின்னூட்டங்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டது.  

ஆனால் 7-8 ஜன்மங்களாகப் பழகியது போல ஓர் உன்னதமான நட்புறவு எங்களுக்குள், இந்த மிகக்குறுகிய காலத்திற்குள் மலர்ந்துள்ளதை நினைக்க, எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது. 

வலைச்சரத்தில் திருமதி உஷா அன்பரசு அவர்கள் ஒரு வார ஆசிரியராக இருந்த போது, [24.12.2012 முதல் 30.12.2012 வரை] தன்னை ஒரு வகுப்பாசிரியர் என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். 

நானும் திருமதி ஜெயந்தி அவர்களும், க்ளாஸ் ரூமில் தினமும் கலாட்டா செய்யும் ஸ்டூடன்ஸ்களாகவே எங்களின் பின்னூட்டங்கள் மூலம் செயல்பட்டோம். அப்போது நான் தினமும் கொடுத்துவந்த பல்வேறு பின்னூட்டங்களால், இந்த எங்கள் இருவரின் நட்பு, மேலும்  மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தது. 

இதோ அந்த வலைச்சர இணைப்புகள்:

http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_6824.html
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_7102.html
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_26.html
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_3106.html
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_27.html
http://blogintamil.blogspot.in/2012/12/6.html
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_29.html

திருமதி ஜெயந்தி அவர்களின் குழந்தைத்தனம், குறும்புத்தனம், துடுக்குத்தனம், வால்த்தனம், உரிமையுடன் ஸ்வாதீனமாகப் பேசும் கலகலப்பான பேச்சுக்கள், நகைச்சுவை உணர்வுகள்,  கேலிகள்,  கிண்டல்கள், என்னிடம் காட்டிவந்த மிகுந்த அன்பு, பாசம், நேசம், பிரியம், வாஞ்சை, வாத்ஸல்யம்; எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசிடும் இனிய அணுகுமுறை [Transparency in all matters] உடனுக்குடன் மேற்கொள்ளும் தகவல் பறிமாற்றங்கள் [Quick Feedback] ஆகிய குணங்கள், இவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்தவைகளாக அமைந்து விட்டன. 

இவ்விதமான நான் மிகவும் ரஸிக்கும் + எதிர்பார்க்கும், எல்லா அபூர்வ குணங்களையும், நான் அடிக்கடி இவர்களின் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும், பதிவுகளிலும், எனக்கு இவர்கள் எழுதும் பின்னூட்டங்களிலும் பார்த்து உணர்ந்து மகிழ்ந்து வருகிறேன்.  

உதாரணமாக, என்னுடைய கீழ்க்கண்ட பதிவுகளில் திருமதி. ஜெயந்தி அவர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்கள், என் மனதை மிகவும் நெகிழச்செய்துள்ளன.



ஒரேவிதமான ரசனைகளும் எண்ண அலைகளும் உள்ள இருவருக்குள் மட்டும்தான் இதுபோன்ற வலுவான உன்னதமான நட்பு மலர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

மிகுந்த பாசத்துடன் பழகிவரும் அன்புச்சகோதரி திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.





oooooOooooo


http://gopu1949.blogspot.in/2013/08/34.html இந்த என் பதிவின் பின்னூட்டப் பகுதியில்

//”ஜெயமுடன் ரமணீயமாக பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம் ..!” // 

என்று சஸ்பென்ஸ்ஸை உடைக்கக் க்ளூ கொடுத்து உதவியிருந்த அதிபுத்திசாலிப் பதிவர்களுக்கும் ......

//செவத்தம்மா தெரிந்தபதிவர் தான். காத்து இருக்கிறேன். விடையை தெரிந்து கொள்ள.  இப்போதே என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.// 

என்று நாசூக்காக சுட்டிக்காட்டி எழுதியிருந்த திருமதி கோமதி அரசு அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான நல்வாழ்த்துகள். இனிய நன்றிகள்.



oooooOooooo

அறுபதிலும் ஆசை வரும் ! ;)))))

என்றல்லவா இந்தப்பதிவுக்கு நான் தலைப்புக்கொடுத்துள்ளேன் ! 

எனக்கும் அந்த ஆசை வந்ததே !!  

எங்களின் சஷ்டியப்தபூர்த்தி 05.12.2009 அன்று நடைபெற்றது. 

அப்போது ஓர் ஆசையினால் சற்றே வித்யாசமாக அச்சிடப்பட்ட 

அழைப்பிதழ்கள் இதோ மலரும் நினைவுகளாக. 




எப்படியிருந்த நான் .... ....

இப்படி ஆகிவிட்டேன். ;)))))


மற்ற விபரங்கள் நிறைய படங்களுடன் ஏற்கனவே என் பதிவினில் கொடுத்துள்ளேன். இணைப்பு இதோ:    http://gopu1949.blogspot.in/2011/07/1.html

oooooOooooo


அறுபதாம் கல்யாணம் என்று சொல்லப்படும் ’சஷ்டியப்த பூர்த்தி’போன்ற ஒருசில விழாக்களைப்பற்றி அடியேன் கேள்விப்பட்டுள்ள ஒருசில சிறப்புச் செய்திகளைத் தங்கள் தகவலுக்காக இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

1]

59 வயதுகள் பூர்த்தியாகி 60ல் அடியெடுத்து வைக்கும் நாளில் செய்துகொள்வது “உக்ரஹ சாந்தி” என்றதொரு ஹோமம். 

அடுத்த ஓராண்டு அரோக்யத்துடன் இருந்து சஷ்டியப்த பூர்த்தி நல்லபடியாக நடக்க எண்ணி, சிறப்பு வழிபாடுகளுடன் வேண்டிக்கொண்டு செய்யும் ஓர் விசேஷ ஹோமம் இது.

-=-=-

பிறந்து 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் [பிறந்த அதே தமிழ் வருஷம், அதே தமிழ் மாதம், அதே ஜன்ம நக்ஷத்திரம் சேரும் நன்னாளில்] செய்துகொள்ளும் விசேஷ பூஜைகளும் ஹோமங்களுமே, சஷ்டியப்த பூர்த்தி எனப்படுவது.  

ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் எந்தெந்த கிரஹங்கள் எந்தெந்த ராசியில் உள்ளனவோ, அதே ராசிகளில் அதே கிரஹங்கள் மீண்டும் வந்து அமர்வது என்பது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடிய அபூர்வமானதோர் நிகழ்வாகும். 

இதுபோன்ற அபூர்வமான கிரஹ அமைப்புகள் தான் சஷ்டியப்த பூர்த்தி நன்னாளின் தனிச்சிறப்பாகும். 

பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில், ஒரே ஒருமுறை மட்டும் தான் இத்தகைய அபூர்வ நிகழ்வினை மீண்டும் சந்திப்பதற்க்கான வாய்ப்பு அமையும். [அதுவும் பிராப்தம் இருந்தால் மட்டுமே] 

{குழந்தை பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும் ஜாதகத்தின் இராசிக்கட்டங்களில் இந்த கிரஹங்கள் எந்தெந்த ராசியில் அன்று அமைந்திருந்தன என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதே கிரஹங்கள் மீண்டும் அதே ராசிகளில் அப்படியே அமர்ந்திருப்பது, இந்த சஷ்டியப்தபூர்த்தி என்று கொண்டாடிடும் நாளில் மட்டுமே தான். }

மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்வினைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற விரும்பினால், 120 ஆண்டுகளுக்கு மேல் அவர் இந்த பூமியில் வாழ வேண்டியிருக்கும். ;)))))

60 வயது ஆனவர்களை [அவர்கள் ஆணோ பெண்ணோ, படித்தவர்களோ படிக்காதவர்களோ,நம் வீட்டில் மிகச்சாதாரண வேலைகள் செய்யக்கூடியவர்களாகவே இருப்பினும் கூட] நாம் அவர்களுக்கு ஆசனம் அளித்து அமர வைத்து மட்டுமே பேச வேண்டும். நாம் உட்கார்ந்து கொண்டு அவர்களை நிற்க வைத்து பேசுவது கூடவே கூடாது.  அவர்களின் வயதுக்கு ஒர் தனி மரியாதை அளிக்கப்பட வேண்டும்.


2] 

ஒரு பெற்றோரின் திருமணத்தை அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பார்க்க இயலாமல் போகிறது அல்லவா !  

இத்தக்காலத்தில் ஒரு செளகர்யம் உள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோரின் திருமண ஆல்பம், திருமண வீடியோ கேஸட் முதலியனவற்றைப் போட்டுக் காண்பித்து விடலாம் தான் !! 

இருந்தாலும் கூட, அந்த போட்டோ ஆல்பத்திலோ, வீடியோ கேஸட்டிலோ, தாங்கள் எங்கேயும் ஒரு இடத்தில் கூட இல்லையே என்ற ஏக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுவது சகஜம் தானே !!! 

அந்தக்குறையில்லாமல் தன் அப்பா, தன் அம்மாவுக்குத் தாலிகட்டி திருமணம் செய்து கொள்வதை குழந்தைகள் நேரில் பார்த்து மகிழவும், அவர்களுடன் அவர்கள் அருகிலேயே நின்று, போட்டோ வீடியோ எடுத்துகொண்டு மகிழவும்,  இந்த அறுபதாம் கல்யாணம் என்பது வழிவகுத்துக் கொடுக்கிறது.


3] 

பொதுவாக குடும்பத்தில் ஓர் சுபமங்கள நிகழ்ச்சி நடைபெறும் போது, பத்திரிகை [அதாவது அழைப்பிதழ்] அச்சடிக்கும் போது, அந்தக் குடும்பத்திலேயே வயதில் மிகப்பெரியவராக உள்ளவர் அழைப்பது போலத்தான் அச்சடிப்பது வழக்கம். 

ஆனால் இந்த அறுபதாம் கல்யாணம் போன்ற ஒருசில விசேஷ வைபவங்களில் மட்டும், அந்த தம்பதியினருக்குப் பிறந்த நேரடி வாரிசுகளும், அவர்கள் வழியாகப் பிறந்துள்ள பேரன் பேத்தி முதலிய பொடியர்களும் அழைப்பதாக அச்சடிப்பது வழக்கம். 

அதாவது பிள்ளைகள், மருமகள்கள், பெண்கள், மருமகன்கள், பிள்ளைவழி பேரன்கள், பேத்திகள், பெண்வழி பேரன்கள், பேத்திகள் என அனைவரும் அழைப்பதாக அது அமைந்திருக்கும். 

சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்றவை நடைபெறும்போது, கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் பெயர்கள் கூட, அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கும்.  

4] 

69 வயது பூர்த்தியாகி 70-ம் ஆண்டு ஆரம்பிக்கும் ஜன்ம நக்ஷத்திர நாளில்  பெரும்பாலானவர்கள் ”பீமரத சாந்தி” என்று ஒன்று, இப்போதெல்லாம் செய்து கொள்கிறார்கள். 

சாஸ்திரப்படி இந்த ”பீமரத சாந்தி” செய்துகொள்ள அவரின் வயது 77 ஆண்டுகள் + 7 மாதங்கள் + 7 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் என்றும், மிகவும் சாஸ்திரம் கற்ற பெரியோர்கள் சொல்கிறார்கள்.

-=-=-

80 வயது பூர்த்தியானவர்கள் செய்துகொள்வது ’சதாபிஷேகம்’ என்ற அருமையான நிகழ்ச்சியாகும். 

இதை தம்பதியினர் இருவரும் சேர்ந்து இருந்து செய்துகொள்ள மிகவும் கொடுப்பிணை வேண்டும். 

அதுபோன்ற தம்பதியினரை தரிஸித்து, அவர்களை நமஸ்கரித்து, ஆசிகள் வாங்க நாமும் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

சதாபிஷேகம் செய்து கொள்வதிலும் சாஸ்திரப்படி ஒருமுக்கியமான விஷயம் உள்ளது. 

அதாவது ஒருவர் இந்த பூலோகத்தில் பிறந்தது முதல் *1000 மூன்றாம் பிறைகள்*  பூர்த்தியாகி இருக்க வேண்டும்.  

அதன் பிறகே அவர் சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். 

இதை மிகச்சரியாகக் கணக்கிட்டால், 82 அல்லது 83 வயதாகும் போது மட்டுமே, அவர் சதாபிஷேகம் செய்து கொள்ளும்படி ஆகும். 

-=-=-

*மூன்றாம் பிறை பற்றி*

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப்பிறகு [அமாவாசையையும் சேர்த்து எண்ண வேண்டும்] வரும் மூன்றாம் நாள், வானத்தில் மூன்றாம் பிறை சந்திரன் தோன்றும். 

அழகான மெல்லிய வைர மோதிரம் போன்ற இதை, வானத்தில் தேடித்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும். 




இதைத் தேடிக்கண்டுபிடித்து தரிஸிப்பதால் நிறைய புண்ணியங்கள் நமக்கு ஏற்படும்.

அதற்கு மறுநாள் நாலாம் பிறைச்சந்திரன் நாம் தேடாமலேயே நம் கண்களுக்குப் பளிச்சென்று தெரியும். இதைப்பார்த்தல் அவ்வளவாக நல்லது அல்ல.  நாலாம் பிறையைப்பார்த்தால் நாய் படாதபாடு படணும் என்று ஒரு பழமொழியும் சொல்வார்கள்.

நாலாம் பிறையைத் தப்பித்தவறி பார்த்து விட்டால் விநாயகரை மனதில் நினைத்து, ஒருசில விநாயகர் ஸ்லோகங்கள் சொல்வது நல்லது.  விநாயகர் கோயில் ஏதும் அருகில் இருந்தால், அங்கு போய் தோப்பிக்கரணம் போட்டுவிட்டு வரலாம்.

இதனால் அந்த நாலாம் பிறைச் சந்திரனைப் பார்த்த தோஷங்கள் நமக்கு விலகிடும் என்று சொல்கிறார்கள்.

-=-=-

கனகாபிஷேகம் என்பது நூறாண்டுகள் நிறைவாக வாழ்ந்து முடிந்தவர்கள் செய்துகொள்வதாகும். 

அதுபோல வயது கணக்குக்கு நூறாண்டுகள் ஆகாவிட்டாலும், தன் பெளத்ரனுக்கு [பிள்ளை வழிப் பேரனுக்கு] திருமணம் ஆகி அவனுக்கு ஓர் ஆண் வாரிசு பிறந்து விட்டாலே ”கனகாபிஷேகம்” செய்துகொள்ளலாம் என்றும் ஓர் சாஸ்திரம் கூறுகிறது, என்கிறார்கள் சிலர். ;)


oooooOooooo



பிரபல பதிவரும் 
நம் அன்புச்சகோதரியுமான 
செளபாக்யவதி ஜெயந்தி ரமணி 
அவர்களை நீங்களும் இங்கு 
மனதார வாழ்த்துங்கள்.


 


இங்கு அன்புடன் வருகை தந்து 
கருத்துக்கூறிடும் அனைவருக்கும், 
என்னால் தனித்தனியாக 
நன்றி கூறி பதில் தரப்படும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

ஆடி வெள்ளிக்கிழமை
16.08.2013



’ஜெ’ மாமிக்கு 
பிரித்தானியா மஹாராணியாரின்
ஒரே பேத்தி

அதிரடி 
அட்டகாச
அலம்பல்
அதிரா 
[ஸ்வீட் சிக்ஸ்டீன்]

ஜே ... ஜே ... ன்னு
அனுப்பியுள்ள அன்பளிப்பு.





அதிராவுக்கு நன்றிகள்





221 கருத்துகள்:

  1. ஒற்றுமையான உத்தம தம்பதியினருக்கு
    மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜிம்மா, முதல் பின்னூட்டம் நான் போடணும்ன்னு நினைச்சேன்.
      ஆனா LIGHTNING SPEED ராஜிம்மாவை முந்த முடியுமா.
      ஆயிரம் பதிவு கண்ட ‘அபூர்வ சிந்தாமணி’ ஆச்சே.
      இருந்தாலும் இப்படி ஒரு அனுபவசாலி, சுறுசுறுப்பில் தேனி, எறும்பு என்று சொல்லக்கூடிய ஒருவரின் பின்னூட்டம் முதலில் வந்தது மிக்க மகிழ்ச்சிதான்.

      ராஜிம்மா (பெயரைச் சுருக்கிட்டேன். அதனால் இன்னும் கிட்ட வந்துட்டேன்) உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றிகள்.

      நீக்கு
    2. JAYANTHI RAMANI August 17, 2013 at 1:57 AM

      அன்புள்ள ஜெயந்தி, வாம்மா .... வணக்கம்.

      என் தளத்தில் அனைவருக்கும் உங்கள் பதில்கள் ....

      அருமையோ அருமை. மிகவும் சந்தோஷம். மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))

      -=-=-

      //ராஜிம்மா, முதல் பின்னூட்டம் நான் போடணும்ன்னு நினைச்சேன். //

      இதில் என் பங்கு சத்தியமாக ஏதும் இல்லை ஜெயந்தி. நம்புங்கோ, ப்ளீஸ்.

      நானே அவர்களின் முதல் வருகையைப்பார்த்து, அதுவும் நள்ளிரவில், மயக்கம் போட்டே விழுந்துட்டேன்.

      டேஷ் போர்டிலேயே காட்சியளிக்காத இந்தப்பதிவுக்குப் போய் தகவல் நாம் ஏதும் தராமலேயே உடன் வருகை தருகிறார்கள் என்றால் அவர்களின் தெய்வாம்சம் மட்டுமே அதற்குக் காரணமாக இருக்க முடியும்.

      அதனால் தான், நான் அவர்களை அம்பாள் என சிறப்பித்து, அவ்வப்போது கூறி, என் மனதில் வழிபட்டு வருகிறேன், ஓர் தீவிரமான பக்தனாக.

      நீங்கள் எப்போதுமே சுலபமாக என் தொடர்பு எல்லைக்குள் இருக்கிறீர்கள்.

      எப்போது நினைத்தாலும் நான் உங்களுடன் உடனே பேசுவது இன்று எனக்கு மிகவும் சுலபமாக உள்ளது.

      ஆனால் இவர்கள் மட்டும் உங்களைப்போல அல்ல.

      நான் நினைத்தாலும் அவர்களை டெலிபோனிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொள்ள முடியாது என்னால்.

      இதுவ்ரை நான் அதுபோல செய்ததும் இல்லை.

      ஜெயந்தி, நீங்க இதை நம்பினால் நம்புங்கோ நம்பாட்டா போங்கோ.

      அவர்களும் 1000 பதிவுக்கு மேல் இட்டாச்சு. நானும் 6000 பின்னூட்டங்களுக்கு மேல் அவங்களுக்குக் கொடுத்தாச்சு.

      இதுவரை நாங்கள் ஒருவர் குரலை ஒருவர் கேட்டதே இல்லை.

      மெயில், சாட்டிங், பதிவு பற்றிய மெயில் அறிவிப்பு என்று
      எங்களுக்குள் எந்தத் தொடர்புகளும் சுத்தமாகக் கிடையவே கிடையாது.

      //ஆனா LIGHTNING SPEED ராஜிம்மாவை முந்த முடியுமா. ஆயிரம் பதிவு கண்ட ‘அபூர்வ சிந்தாமணி’ ஆச்சே.//

      ஆத்தில் கிட்சனுக்குப்போய் சர்க்கரை சம்படத்தை எடுத்து, உடனே உங்க வாய்க்குக் கொஞ்சம், ஒரு ஸ்பூனாவது சர்க்கரை போட்டுக்கோங்கோ, நான் போட்டதாக நினைத்து.

      //இருந்தாலும் இப்படி ஒரு அனுபவசாலி, சுறுசுறுப்பில் தேனி,
      எறும்பு என்று சொல்லக்கூடிய ஒருவரின் பின்னூட்டம் முதலில் வந்தது மிக்க மகிழ்ச்சிதான்.//

      நன்னாவே சொல்லிட்டீங்க ஜெயந்தி.

      நானும் நீங்களுமே மிகவும் இந்த விஷயத்தில் பாக்யம் செய்திருக்கிறோம்.

      ஆடி வெள்ளிக்கிழமை + வரலக்ஷ்மி விரதமும் அதுவுமா முதன்முதலில் உஷத்காலத்தில் அம்பாள் பிரத்யக்ஷமாக நம்
      ஆத்துக்கு [நம் வலைத்தளத்துக்கு] வருகை தந்து
      சிறப்பித்துள்ளார்கள் என்றால் சும்மாவா! ;)))))

      //ராஜிம்மா (பெயரைச் சுருக்கிட்டேன். அதனால் இன்னும் கிட்ட
      வந்துட்டேன்) உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றிகள்.//

      அம்பாள் அவர்களின் மிகவும் கம்பீரமான முழுப்பெயரை
      உச்சரியுங்கோ, எழுதுங்கோ. புண்ணியம் கிடைக்கும்.

      இது என்னவோ இப்படிச்சுருக்கியது எனக்குப்பிடிக்கலை, ஜெயந்தி.

      செல்லமாகத்தான் அவர்களை அழைக்கணும் என்றால்
      “அடி .... என் .... ரா ஜா த் தீ” ன்னு எழுதுங்கோ.

      அது இன்னும் பெட்டராக இருக்குமோன்னு தோணுது, எனக்கு.

      இதையே தான் நான் என் அன்புத்தங்கச்சி மஞ்சுவிடமும் [மஞ்சுபாஷிணியிடமும்] சொல்லியுள்ளேன்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    3. இராஜராஜேஸ்வரி August 15, 2013 at 11:16 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ.

      என் அன்புக்குரிய அம்பாளுக்கு அடியேனின் வந்தனங்கள்.

      //ஒற்றுமையான உத்தம தம்பதியினருக்கு மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.//

      ஆடி வெள்ளிக்கிழமையும் வரலக்ஷ்மி விரதமுமான ந்ன்நாளில், தங்களின் முதல் வருகையும் வாழ்த்துக்களும் என்னை அப்படியே பிரமிக்க வைத்து விட்டன.

      எப்படி? எப்படி? எப்படி? எப்படி? உங்களால் இப்படி வர முடிந்தது?

      டேஷ் போர்டிலேயே தோற்றமளிக்காத இந்தப்பதிவுக்கு, நான் தங்களுக்குத் தகவல் தரும் வழக்கமே இல்லாதபோதும், எப்படி உடனே உதித்த உத்தமனான நரசிம்ஹ மூர்த்தியின், வக்ஷஸ்தலத்தில் உள்ள அம்பாளாக, பதிவு வெளியிட்ட உடனேயே க்ஷண நேரத்தில் திடீர் வருகை தர முடிந்தது?

      மகிழ்ச்சியின் மயக்கத்திலும் வியப்பிலும் நான் ......... ;)))))

      நீக்கு
  2. அறுபதாம் கல்யாணம் என்று சொல்லப்படும் ’சஷ்டியப்த பூர்த்தி’போன்ற ஒருசில விழாக்களைப்பற்றி அடியேன் கேள்விப்பட்டுள்ள ஒருசில சிறப்புச் செய்திகளைத் தங்கள் தகவலுக்காக இங்கு பகிர்ந்து கொள்கிறேன்://

    மிகவும் பயனுள்ள அற்புத பகிர்வுகள்...!

    அனைவருக்கும் புரியும்படி சிறப்பாக விளக்கியுள்ளமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு அண்ணாவா கொக்கா.

      சின்னப்புள்ளைக்கும் புரியும்படி விளக்கி சொல்லி இருக்கார்.

      நீக்கு
    2. இராஜராஜேஸ்வரி August 15, 2013 at 11:20 AM

      *****அறுபதாம் கல்யாணம் என்று சொல்லப்படும் ’சஷ்டியப்த பூர்த்தி’போன்ற ஒருசில விழாக்களைப்பற்றி அடியேன் கேள்விப்பட்டுள்ள ஒருசில சிறப்புச் செய்திகளைத் தங்கள் தகவலுக்காக இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:****

      //மிகவும் பயனுள்ள அற்புத பகிர்வுகள்...!//

      தன்யனானேன். சந்தோஷம்.

      //அனைவருக்கும் புரியும்படி சிறப்பாக விளக்கியுள்ளமைக்குப் பாராட்டுக்கள்..!//

      தகவல் களஞ்சியத்தின் தங்கமான பாராட்டுக்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

      நெஞ்சார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  3. சற்றே வித்யாசமாக அச்சிடப்பட்ட

    அழைப்பிதழ்கள் இதோ மலரும் நினைவுகளாக.


    பூவும் , காயும் ,கனியும் எல்லாம் ஒவ்வொரு நிலையிலும் ரசிக்கத்தக்க அழகுதான் ..!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜிம்மா, சஷ்டியப்த பூர்த்தி முடிந்ததும் புகைப்படங்கள் என் தளத்தில் வெளியிடுகிறேன். அங்கும் வந்து உங்கள் மேலான கருத்துக்களைப் பதியுங்கள்.

      நீக்கு
    2. இராஜராஜேஸ்வரி August 15, 2013 at 11:22 AM

      *****சற்றே வித்யாசமாக அச்சிடப்பட்ட அழைப்பிதழ்கள் இதோ மலரும் நினைவுகளாக. *****

      //பூவும் , காயும் ,கனியும் எல்லாம் ஒவ்வொரு நிலையிலும் ரசிக்கத்தக்க அழகுதான் ..!!!//

      இதைவிட அழகாக மனதுக்கு ஆறுதலாக யாரால் சொல்ல இயலும்? ;))))))))))))))))))))))))))

      இதை மிகச்சிறந்த என் மனதுக்குப்பிடித்தமான பின்னூட்டமாகக் கருதுகிறேன்.

      தங்களின் புத்திக்கூர்மைக்கு இது ஓர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக எனக்குத்தோன்றுகிறது. .

      என்றும் நான் போற்றிப் பாதுகாத்துவரும் தங்களின் பின்னூட்டங்கள் அடங்கிய என் பொக்கிஷ சேமிப்புக்கிடங்கில், இதற்கு ஃபைவ் ஸ்டார் அந்தஸ்து கொடுத்து சேமித்து, மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்வேன்.

      மன்ம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  4. கோபு அண்ணா,
    இப்படி ஒரு அருமையான பரிசு எங்களுக்குக் கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. தன்யனானேன்.

    இது ஏதோ போன ஜென்மத்து உறவு என்றுதான் நினைக்கிறேன். போன ஜென்மத்தில் நான் கண்டிப்பாக உங்கள் தங்கையாக இருந்திருப்பேன்.

    வாலாம்பா மன்னிக்கும், உங்களுக்கும் எங்கள் நமஸ்காரங்கள்.

    ஒரு பெற்றோரின் திருமணத்தை அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பார்க்க இயலாமல் போகிறது அல்லவா !

    இத்தக்காலத்தில் ஒரு செளகர்யம் உள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோரின் திருமண ஆல்பம், திருமண வீடியோ கேஸட் முதலியனவற்றைப் போட்டுக் காண்பித்து விடலாம் தான் !!


    இருந்தாலும் கூட, அந்த போட்டோ ஆல்பத்திலோ, வீடியோ கேஸட்டிலோ, தாங்கள் எங்கேயும் ஒரு இடத்தில் கூட இல்லையே என்ற ஏக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுவது சகஜம் தானே !!!
    அந்தக்குறையில்லாமல் தன் அப்பா, தன் அம்மாவுக்குத் தாலிகட்டி திருமணம் செய்து கொள்வதை குழந்தைகள் நேரில் பார்த்து மகிழவும், அவர்களுடன் அவர்கள் அருகிலேயே நின்று, போட்டோ வீடியோ எடுத்துகொண்டு மகிழவும், இந்த அறுபதாம் கல்யாணம் என்பது வழிவகுத்துக் கொடுக்கிறது.//

    உண்மைதான். சந்தியாதான் முழு மூச்சுடன் எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருக்கிறாள்.

    இன்று கூட என் பையன் சொன்னான். "பாவம், சந்தியாவே நிறைய வேலை செய்கிறாள். நான் பார்ப்பது டிரைவர் உத்தியோகம் மட்டும்தான் என்று"

    எங்களுக்கும், எங்கள் குழந்தைகளுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் வாரி வழங்கி இருக்கும் எல்லாப் பொருட்களிலும் உங்கள் நல் இதயம்தான் தெரிகிறது.

    வணக்கத்துடன் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டோம்.

    சிரம்தாழ்ந்த, நெஞ்சார்ந்த, மனமார்ந்த நன்றிகளுடன்
    ஜெயந்தி ரமணி.
    மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANIAugust 15, 2013 at 11:27 AM
      //கோபு அண்ணா,

      இப்படி ஒரு அருமையான பரிசு எங்களுக்குக் கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. தன்யனானேன்.//

      அன்புள்ள ஜெயந்தி,

      வாம்மா, வணக்கம்மா. மிகவும் சந்தோஷம்மா.

      //இது ஏதோ போன ஜென்மத்து உறவு என்றுதான் நினைக்கிறேன். போன ஜென்மத்தில் நான் கண்டிப்பாக உங்கள் தங்கையாக இருந்திருப்பேன்.//

      இருக்கலாம்மா. அப்படியும் இருக்கலாம் தான். முதன் முதலாக புகைப்படத்தில் உன்னைப் பார்த்தபோதே எனக்கும் அப்படித்தான் என் மனதில் தோன்றியது.

      //வாலாம்பா மன்னிக்கும், உங்களுக்கும் எங்கள் நமஸ்காரங்கள். //

      மனமார்ந்த வேதோக்த ஆசீர்வாதங்கள்.

      *****ஒரு பெற்றோரின் திருமணத்தை அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பார்க்க இயலாமல் போகிறது அல்லவா !

      இத்தக்காலத்தில் ஒரு செளகர்யம் உள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோரின் திருமண ஆல்பம், திருமண வீடியோ கேஸட் முதலியனவற்றைப் போட்டுக் காண்பித்து விடலாம் தான் !!

      இருந்தாலும் கூட, அந்த போட்டோ ஆல்பத்திலோ, வீடியோ கேஸட்டிலோ, தாங்கள் எங்கேயும் ஒரு இடத்தில் கூட இல்லையே என்ற ஏக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுவது சகஜம் தானே !!!

      அந்தக்குறையில்லாமல் தன் அப்பா, தன் அம்மாவுக்குத் தாலிகட்டி திருமணம் செய்து கொள்வதை குழந்தைகள் நேரில் பார்த்து மகிழவும், அவர்களுடன் அவர்கள் அருகிலேயே நின்று, போட்டோ வீடியோ எடுத்துகொண்டு மகிழவும், இந்த அறுபதாம் கல்யாணம் என்பது வழிவகுத்துக் கொடுக்கிறது.*****

      //உண்மைதான். சந்தியாதான் முழு மூச்சுடன் எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருக்கிறாள்.

      இன்று கூட என் பையன் சொன்னான். "பாவம், சந்தியாவே நிறைய வேலை செய்கிறாள். நான் பார்ப்பது டிரைவர் உத்தியோகம் மட்டும்தான் என்று" //

      நம் குழந்தைகள் எல்லோரும் நமக்காக இதுபோல ஒற்றுமையாக, ஆசையாக, சிரத்தையாக, முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      என் மறுமான் + மறுமாள் ஆகிய அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த ஆசீர்வாதங்கள்.

      //எங்களுக்கும், எங்கள் குழந்தைகளுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் வாரி வழங்கி இருக்கும் எல்லாப் பொருட்களிலும் உங்கள் நல் இதயம் தான் தெரிகிறது.

      வணக்கத்துடன் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டோம்.//

      மிக்க மகிழ்ச்சிம்மா. சந்தோஷம்மா.

      //சிரம்தாழ்ந்த, நெஞ்சார்ந்த, மனமார்ந்த நன்றிகளுடன் ஜெயந்தி ரமணி. //

      நம் நட்பு மேலும் வலுப்பட, இதையே ஓர் பதிவாக எழுதி வெளியிட சந்தர்ப்பம் அளித்த ஆண்டவனுக்கு நாம் இருவரும் நன்றி கூறுவோம்மா.

      //மீண்டும் வருகிறேன்.//

      இது ..... இந்த என் வலைத்தளம், உன் பிறந்த வீடுபோல. நீ எத்தனை முறை வேண்டுமானாலும் தாராளமாக வரலாம். கோபு அண்ணாவுக்கும் அதில் எப்போதும் மகிழ்ச்சியே.

      வராமல் போனாலோ வந்துட்டு உடனே வந்த காலோடு ஓடினாலோ தான் எனக்கு அழுகையாக வருகிறது.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. நீங்களே போ, போன்னு சொல்லற வரைக்கும் உங்க தளத்தில பின்னூட்டம் கொடுத்து ஜூனியர் பின்னூட்டப் புயல்ன்னு பட்டம் வாங்கிடறேன் சீக்கிரம் (சீனியர் பின்னூட்டப் புயல் யாருன்னு கேக்கறேளா, இந்த தன்னடக்கம் தானே வேண்டாங்கறது! உங்கள விட்டா ஆரு இந்த வலை உலகத்துல இந்தப் பட்டம் வாங்கினவா இருக்கா! நீங்க தான், நீங்க தான், நீங்களே தான்).

      நீக்கு
    3. JAYANTHI RAMANI August 17, 2013 at 2:06 AM

      வாம்மா .... ஜெயந்தி.

      //நீங்களே போ, போன்னு சொல்லற வரைக்கும் உங்க தளத்தில பின்னூட்டம் கொடுத்து ஜூனியர் பின்னூட்டப் புயல்ன்னு பட்டம் வாங்கிடறேன் சீக்கிரம் //

      அந்த நாளும் வந்திடாதோ என்ற ஏக்கத்துடன், கோபு.

      //(சீனியர் பின்னூட்டப் புயல் யாருன்னு கேக்கறேளா, இந்த தன்னடக்கம் தானே வேண்டாங்கறது! உங்கள விட்டா ஆரு இந்த வலை உலகத்துல இந்தப் பட்டம் வாங்கினவா இருக்கா! நீங்க தான், நீங்க தான், நீங்களே தான்).//

      ஹைய்யோ! நம் அன்புத்தங்கச்சி மஞ்சூஊஊ இதைப்பார்த்தால், போச்சு, நம் இருவரையுமே சேர்த்தே அடித்து நொறுக்கி விடுவா.

      அதனால் இதைப்படித்ததும் கிழித்து விட்டு, மூக்கைப் பிடித்துக்கொண்டாவது, கூவம் நதியில் கலந்துடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ;))))).

      நீக்கு
  5. மிகுந்த பாசத்துடன் பழகிவரும் அன்புச்சகோதரி திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு
    தித்திக்கத் தித்திக்க திகட்டத் திகட்ட அளித்த பரிசுகளிலும் , வாழ்த்துகளிலும் மனம் நிறைய நாங்களும் பங்கேற்கிறோம் ..

    பல்லாண்டுகள் ஜெயமுடன் ரமணீயமாக சதாபிஷேகங்கள் பல கண்டு இனிதுடன் வாழ இறைவனைப்பிரார்த்திக்கிறோம்...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜிம்மா நன்றியோ நன்றி. பாசக்கார புள்ளதான் நானு. அதைப் புரிஞ்சு கிட்டவங்களுக்கு தலை வணங்கி நன்றி சொல்லிக்கறேன்.

      நீக்கு
    2. இராஜராஜேஸ்வரி August 15, 2013 at 11:29 AM

      //மிகுந்த பாசத்துடன் பழகிவரும் அன்புச்சகோதரி திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு தித்திக்கத் தித்திக்க திகட்டத் திகட்ட அளித்த பரிசுகளிலும், வாழ்த்துகளிலும் மனம் நிறைய நாங்களும் பங்கேற்கிறோம் ..

      பல்லாண்டுகள் ஜெயமுடன் ரமணீயமாக சதாபிஷேகங்கள் பல கண்டு இனிதுடன் வாழ இறைவனைப்பிரார்த்திக்கிறோம்...!!//

      மிகுந்த பாசமுடன் பழகிவரும் அன்புச்சகோதரி ஜெயந்தியை வாழ்த்தவும் ஆசீர்வதிக்கவும் அம்பாளே நேரில் பிரசன்னமானது போல, இங்கு வருகை தந்து என்னுடன் மன்ம் நிறைய பங்குகொண்டு, சிறப்பித்து, அத்துடன் இறைவனைப் பிரார்த்தனையும் செய்துகொள்வதாகச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களின் பிரார்த்தனைகளுக்கு ஓர் தனி மகத்துவம் உண்டு தான் என்பது அடியேன் அறிந்ததே. அதனால் மேலும் தனி சந்தோஷம், எனக்கு.

      என் சென்ற பதிவான “ஆயிரம் நிலவே வா ! ,,, ஓர் ஆயிரம் நிலவே வா !! என்பதும், இந்தப்பதிவான ”அறுபதிலும் ஆசை வரும்” என்பதும் அடுத்தடுத்து வெளியானதும், அதுவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா பற்றி நான் கொடுத்துவரும் தொடர்பதிவுகளுக்கு இடையே, அமைந்துள்ளதும் ஓர் மிகச்சிறந்த தனிச்சிறப்பினைப் பெறுகின்றன. இரண்டுமே மங்கலகரமான கல்யாண நிகழ்ச்சிகளே தான். ;)))))

      ஆனந்தம் ..... ஆனந்தம் ...... ஆனந்தமே !

      நீக்கு
  6. அடெங்கப்பா அசத்திட்டீஙக் போங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜலீலா, அசத்தலோ அசத்தல்.
      ராத்திரி கனவில கூட இந்த சீரெல்லாம் வருதுன்னா பாத்துக்கங்களேன்.

      நீக்கு
  7. எங்க அறுசுவை வெஜ் சமையல் மஹாராணி ஜே ஜே ஜே மாமிக்கு வாழ்த்துக்கள்.இதை அழகாக தொகுத்து 60 ஆம் கலயாணம் நடத்தி காட்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜலீலா ரொம்ப நன்றி. என்னை ஜே ஜே மாமியாக்கியது நீங்க தான்.

      நீக்கு
  8. ஜே மாமி என் இனிய வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி ஜலீலா.
      வாழ்க்கையில நாமெல்லாம் ஒரு முறையாவது நேரில் சந்திக்கணும்.

      நீக்கு
    2. Jaleela Kamal August 15, 2013 at 11:51 AM

      வாங்கோ, திருமதி ஜலீலா கமால் அவர்களே, வணக்கம்.

      //அடெங்கப்பா அசத்திட்டீஙக் போங்க//

      அசத்தலான தங்கள் பாராட்டுக்களுக்கும் என் நன்றிகள்.

      //எங்க அறுசுவை வெஜ் சமையல் மஹாராணி ஜே ஜே ஜே மாமிக்கு வாழ்த்துக்கள்.//

      மஹாராணியார் ’ஜே ஜே ஜே’ ஐ வாழ்த்தியதற்கு என் நன்றிகள்.

      //இதை அழகாக தொகுத்து 60 ஆம் கலயாணம் நடத்தி காட்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி, சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மூன்று முறை கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  9. ஆஆஆஆஆஆஆ எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ மீ ஃபேயிண்ட்டாகிறேன்ன்ன்..:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டாறின தண்ணி என்ன அதிரா. ஐஸ் வாட்டரே தெளிக்கறோம்.

      நீக்கு
    2. athira August 15, 2013 at 12:03 PM

      வாங்கோ அதிரடி, அலம்பல், அட்டகாச அதிரா, ஸ்வீட் சிக்ஸ்டீன் அவர்களே, வணக்கம்.

      //ஆஆஆஆஆஆஆ எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ மீ ஃபேயிண்ட்டாகிறேன்ன்ன்..:)//

      வரும்போதே உங்க டாக்டரையும் கூட்டி வந்திருக்கக்கூடாதோ ?உங்க ஃபேமிலி டாக்டரைச்சொன்னேன். ஃபேமிலியில் உள்ள டாக்டர் என்று நீங்களாகவே ஏதும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.

      இப்படி வரும்போதே மூர்ச்சையாகிப்போனால் எப்படி? எங்களுக்கு கையும் ஓடலை .... லெக்கும் ஆடலை.

      நிறைய பின்னூட்டங்கள் கொடுத்தபிறகாவது ஃபேயிண்ட்டாகி இருக்கலாம். அதைப்பற்றி நாங்க கவலையே படமாட்டோம்.

      அடடா ! சுட்டாறின தண்ணிக்கு நாங்க இப்போ எங்கே போவோம், அதிரா?

      எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் தண்ணிதான் பஞ்சமில்லாமல் இங்கே கிடைக்கிறது. பரவாயில்லையா? குவார்ட்டரா, ஹாஃப்பா, ஃபுல்லா எவ்வளவு வாங்கி தெளிக்கணும்? அடடா, உங்க லெவல் என்ன, எனக்கேட்டுக்கொள்ள மறந்துட்டோமே! ;)))))

      நீக்கு
  10. அடடா ஜெயந்தி மாமியின் பிறந்ததினமோ.. இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் மாமி. நாளைக்குத்தான் 16.08 என் இங்கத்தைய வைட் ஃபிரெண்ட்டுக்கும் பிறந்தநாள்.

    பின்பு வந்து அழகாக முழுவதும் படித்து வாழ்த்துகிறேன், இப்போ விடைபெறுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா பிறந்த நாள் எனக்கில்ல. மாம்சுக்கு தான் (அதான் என்ற ஊட்டுக்காரர்) அதுவும் 28.08.2013 அன்னிக்கு தான்.

      அதிரா, எனக்கு உங்க பாணியிலேயே பதில் சொல்லணும்ன்னு ரொம்ப ஆசை. ஆனா முடியல. உங்க தளத்துல முழுகி முத்தெடுக்க ரொம்ப நாளாகும்.

      வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அதிரா

      நீக்கு
    2. athira August 15, 2013 at 12:04 PM

      //பின்பு வந்து அழகாக முழுவதும் படித்து வாழ்த்துகிறேன், இப்போ விடைபெறுகிறேன்.//

      அம்மாடி ...... மழை பெய்து ஓய்ஞ்சாப்போல இருக்கு. கொஞ்ச நேரமாவது நமக்கும் ஜாலிதான். ;)

      எப்போ அதிரா மீண்டும் வருவாங்களோ, என்னென்ன சொல்லுவாங்களோன்னு நினைச்சாலே பயமாக்கீதூஊஊஊ.

      நீக்கு
  11. திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    //ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆசீர்வாதத்தில்
    தம்பதியினராகிய தாங்கள் இருவரும்
    சகலவிதமான செளபாக்யங்களுடன், நீடூழி வாழ்ந்து
    பீமரதஸாந்தி, ஸதாபிஷேகம், கனகாபிஷேகம்
    போன்ற விழாக்களையும் கொண்டாடி மகிழ வேண்டும் என
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு
    அடியேன் நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன்.//

    நானும் அது போலவே வேண்டிக் கொள்கிறேஎன் சார்.

    என் பதிவுக்கு வந்து என்னை தெரிகிறதா? ஜெயந்தி மாமி என்று உரிமையுடன் தன்னை அறிமுக படுத்தி கொண்டார்கள். வெங்கட் அழைப்பு விடுத்து இருந்த அன்னம்விடு தூது கவிதை எழுதி இருந்தார்கள் அதில் ஜெயந்தி அவர்களை பாராட்டி இருந்தேன் அப்போது தெரிந்து கொண்டே இவர்களை.

    நட்பு வட்டம் ஒத்த அலை வரிசை உடையவர்களை தான் சேர்க்கும். என்று நீங்கள் சொல்வது உண்மைதான் சார்.

    //”ஜெயமுடன் ரமணீயமாக பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம் ..!” // க்ளு கொடுத்து உதவிய சக பதிவர்களுக்கு நன்றி.


    உங்கள் நல் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி சார்.
    என் ஊகம் சரியாக அமைந்து விட்டது எனக்கும் மகிழ்ச்சி.


    சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்றவைகளுக்கு உங்களின் விளக்கம் அருமை.
    உங்களின் அன்பான பதிவுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம அறுசுவை தோழிகளை மறக்க முடியுமா கோமதி?

      //நட்பு வட்டம் ஒத்த அலை வரிசை உடையவர்களை தான் சேர்க்கும். என்று நீங்கள் சொல்வது உண்மைதான் சார்.//


      ஆமாம். எல்லோரிடமும் நாம் ஆத்மார்த்தமாக பழகுவதில்லை. பழகவும் முடிவதில்லை. இந்தப் பரந்த உலகத்தில் சிலருடன் தான் நம்மால் ஆத்மார்த்தமாகப் பழக முடிகிறது. அது கூட இறைவனின் சித்தம் என்றுதான் நினைக்கிறேன்.

      //”ஜெயமுடன் ரமணீயமாக பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம் ..!” // க்ளு கொடுத்து உதவிய சக பதிவர்களுக்கு நன்றி.//


      அதனால் தான் நான் கம்முன்னு இருந்துட்டேன். நான் ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்லப்போய் 'எங்கப்பா குதிருக்குள்ள இல்லை'ன்னு சொன்னா மாதிரி ஆயிடுமோன்னுதான் பேசாம இருந்துட்டேன்.

      கோமதி உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
    2. கோமதி அரசு August 15, 2013 at 12:23 PM

      //நட்பு வட்டம் ஒத்த அலை வரிசை உடையவர்களை தான் சேர்க்கும். என்று நீங்கள் சொல்வது உண்மைதான் சார்.//

      ஆமாம் மேடம், எல்லோரும் எல்லா நேரங்களிலும் எல்லோருடனும் ஒத்துப்போக முடியாது. சிலருக்கு மட்டும் சிலரிடம் மட்டும் ஆத்மார்த்தமாக ஏதோ ஒரு தீவிர நட்பு மலர்ந்து, தனி ஈடுபாட்டினை ஏற்படுத்தி விடுகிறது. அதுபோன்ற என் FIRST CIRCLE FRIENDS களில் இந்த ஜெயந்தியும் ஒருவராக ஆகிவிட்டார்.

      ஜெயந்தி மேலே சொல்லியுள்ளது போல, அதுவும் இறைவனின் சித்தம் தான்.

      //உங்கள் நல் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி சார்.
      என் ஊகம் சரியாக அமைந்து விட்டது எனக்கும் மகிழ்ச்சி.//

      உங்கள் யூகம் சரியாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி தான்.

      //சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்றவைகளுக்கு உங்களின் விளக்கம் அருமை. உங்களின் அன்பான பதிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  12. //தம்பதியினராகிய தாங்கள் இருவரும்
    சகலவிதமான செளபாக்யங்களுடன், நீடூழி வாழ்ந்து
    பீமரதஸாந்தி, ஸதாபிஷேகம், கனகாபிஷேகம்
    போன்ற விழாக்களையும் கொண்டாடி மகிழ வேண்டும் என
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு
    அடியேன் நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன்.//

    இதை நானும் வேண்டிக் கொள்கிறேன்.
    திருமதி ஜெயந்திரமணிக்கு என் வாழ்த்துக்கள்.

    உங்கள் பதிவிலிருந்து 60,70,80,100 திருமணகளின் அர்த்தம் தெரிந்து கொண்டேன்.

    உங்கல் பதிவுகளின் பின்னூட்டங்களில் திருமதி ஜெயந்திரமணி கருத்தையும், உங்கள் பதிலையும் படித்து பல தடவை நீங்கள் இருவரும் உறவுக்காரர்கள் என்று எண்ணீயிருக்கிறேன்.

    நட்புக்காக ஒரு பதிவு எழுதி அதுவும் ஷஷ்டியப்த பூர்த்தி அழைப்பிதழாகவே எழுதிவிட்டீர்கள்.
    பதிவர்கள் சிலர் திருமதி ஜெயந்திரமணி கல்யாணத்தில் இருப்பார்கள் என்று சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நானும் வேண்டிக் கொள்கிறேன்.
      திருமதி ஜெயந்திரமணிக்கு என் வாழ்த்துக்கள்.//

      உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி.

      உங்கல் பதிவுகளின் பின்னூட்டங்களில் திருமதி ஜெயந்திரமணி கருத்தையும், உங்கள் பதிலையும் படித்து பல தடவை நீங்கள் இருவரும் உறவுக்காரர்கள் என்று எண்ணீயிருக்கிறேன்.

      இருக்கலாம். இது போன ஜென்ம பந்தமாகக் கூட இருக்கலாம்.

      நீக்கு
    2. rajalakshmi paramasivam August 15, 2013 at 2:04 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இதை நானும் வேண்டிக் கொள்கிறேன். திருமதி ஜெயந்திரமணிக்கு என் வாழ்த்துக்கள்.//

      ச்ந்தோஷம். மிக்க நன்றி.

      //உங்கள் பதிவிலிருந்து 60,70,80,100 திருமணகளின் அர்த்தம் தெரிந்து கொண்டேன்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களில் திருமதி ஜெயந்திரமணி கருத்தையும், உங்கள் பதிலையும் படித்து பல தடவை நீங்கள் இருவரும் உறவுக்காரர்கள் என்று எண்ணியிருக்கிறேன்.//

      அப்படியா? ஆச்சர்யமாக உள்ளது. மேலே ஜெயந்தியே சொல்லியிருப்பது போல, இது போன ஜென்ம பந்தமாகக் கூட இருக்கலாம்.

      //நட்புக்காக ஒரு பதிவு எழுதி அதுவும் ஷஷ்டியப்த பூர்த்தி அழைப்பிதழாகவே எழுதிவிட்டீர்கள்.//

      ஏதோ அது போல ஓர் வாய்ப்பு அமைந்துள்ளது.

      //பதிவர்கள் சிலர் திருமதி ஜெயந்திரமணி கல்யாணத்தில் இருப்பார்கள் என்று சொல்லுங்கள்.//

      இருக்கலாம். இருக்கக்கூடும் என நானும் உங்களைப்போலவே எதிர்பார்க்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  13. //”நல்ல காலம் பொறக்குது !
    நல்ல சேதி கெடைக்குது !!”//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கோபு அண்ணன் உந்த குடுகுடுப்பை தலைப்பாகை எல்லாம் விட்டிட்டு நேரடியா ஜேமாமிக்கு அறுபதாம் கல்யாணம் எனச் சொல்லியிருக்கலாமெல்லோ.... நான் பேர்த்டே என நினைச்சுட்டேன்.

    ஜெயந்திமாமி... உங்கள் அறுபதாம் திருமண வைபவத்துக்கு எம் மனங்கனிந்த இனிய வாழ்த்துக்கள்.. மரீனா பீச்சின் கடற்கரை மணல்போல, தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டுவாழ வாழ்த்துகிறேன் இருவரையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கோபு அண்ணன் உந்த குடுகுடுப்பை தலைப்பாகை எல்லாம் விட்டிட்டு நேரடியா ஜேமாமிக்கு அறுபதாம் கல்யாணம் எனச் சொல்லியிருக்கலாமெல்லோ.... நான் பேர்த்டே என நினைச்சுட்டேன்.//

      அதிரா, உங்களுக்குத் தான் தெரியுமே. கோபு அண்ணன் சஸ்பென்ஸ் மன்னன் என்று.

      ஜெயந்திமாமி... உங்கள் அறுபதாம் திருமண வைபவத்துக்கு எம் மனங்கனிந்த இனிய வாழ்த்துக்கள்.. மரீனா பீச்சின் கடற்கரை மணல்போல, தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டுவாழ வாழ்த்துகிறேன் இருவரையும்.//

      அதிராவும், அதிராவோட அழகான தமிழும் போல இருக்கவும் ஆசை எனக்கு.

      வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அதிரா.





      நீக்கு
    2. athira August 15, 2013 at 2:28 PM
      //”நல்ல காலம் பொறக்குது !
      நல்ல சேதி கெடைக்குது !!”//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கோபு அண்ணன் உந்த குடுகுடுப்பை தலைப்பாகை எல்லாம் விட்டிட்டு நேரடியா ஜேமாமிக்கு அறுபதாம் கல்யாணம் எனச் சொல்லியிருக்கலாமெல்லோ.... நான் பேர்த்டே என நினைச்சுட்டேன்.//

      இதற்குத்தான் என்னுடைய விட்டுப்போன பழைய பதிவுகளையெல்லாம் கட்டாயம் படிக்கணும்கிறேன்.

      ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிரா என் தொடரின் முதல் சிக்ஸ்டீன் பகுதிகளுக்கு மட்டும் வந்துட்டு, அப்புறம் பகுதி-17 முதல் 36 வரை ஆளையே காணவில்லை. நானும் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் உங்கள் பெயரை பகுதி-25 இல் வெளியிட்டிருந்தேன்.

      http://gopu1949.blogspot.in/2013/08/34.html என்ற பகுதி-34 ஐப் பார்த்து படித்திருந்தால் தெரிந்திருக்கும். அல்லது அந்தக்குடுகுடுப்பை முண்டாசுக்காரன் என்னதான் சொல்றான்னு இந்தப்பதிவிலாவது பொறுமையாகப் படித்திருந்தாலும் தெரிந்திருக்கும்.

      இதனால் பகுதி-25 மற்றும் பகுதி-35 இல் உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய பரிசுப்பொருட்களை எல்லாம் நீங்க இழக்கும்படியாக நேரிட்டுள்ளது.

      விட்டுப்போன பகுதிகளுக்கெல்லாம் கமெண்ட்ஸ் ஓரிரு வரிகளாவது எழுதுங்கோ.

      அப்போது தான் பகுதி-45 இல் ஆவது மீண்டும் பரிசுகள் உங்களுக்குக் கிடைக்கலாம்.. உடனே அதற்கான வேலைகளில் முழு மூச்சாக ஈடுபடுங்கோ.

      இன்னும் ஒரிரு வாரமே இடையில் டைம் உள்ளது.

      ஓடியாங்கோ .... ஓடியாங்கோ .... க்விக்காக ஓடியாங்கோ.

      நீக்கு
  14. அடடா தாய் வீட்டுச் சீதனமாக வைரத்தோடும் குடுக்கிறீங்க கோபு அண்ணன்.... அத்தனையும் ஜெயந்தி மாமிக்கா? ஆண்டவா இது நியாயமோ?:).

    அந்த குட்டி ஆரு? ஜேமாமியின் பேத்தியோ? ரொம்ப கியூட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா தாய் வீட்டுச் சீதனமாக வைரத்தோடும் குடுக்கிறீங்க கோபு அண்ணன்.... அத்தனையும் ஜெயந்தி மாமிக்கா? ஆண்டவா இது நியாயமோ?:).//

      இப்படி கேட்கப்படாது அதிரா. பின்ன உங்களுக்கும் கிடைக்கும். ரகசியம். அண்ணன் கிட்ட ஸ்டாக் நிறைய இருக்கு.

      அந்த குட்டி ஆரு? ஜேமாமியின் பேத்தியோ? ரொம்ப கியூட்.//

      ஆமாம். லயாக்குட்டி எங்க பேத்தி. க்யூட்டான வால்.

      நீக்கு
    2. athira August 15, 2013 at 2:31 PM

      //அடடா தாய் வீட்டுச் சீதனமாக வைரத்தோடும் குடுக்கிறீங்க கோபு அண்ணன்....//

      ஆமாம் அதிரா ;)

      // அத்தனையும் ஜெயந்தி மாமிக்கா? //

      ஆமாம் அதிரா, அத்தனையும் ஜெயந்திக்கு மட்டுமே தான். ;))

      //ஆண்டவா இது நியாயமோ?:).//

      ;))))) சிலர் சில நகைகள் அணிந்தால் அந்த நகைக்கே ஓர் தனிப் பெருமை வந்து சேரும் அதிரா .... [உதாரணம் உங்க ஃப்ரண்டு : கோல்ட் ஃபிஷ் ;))))) ] ....

      உங்க ஜெயந்தி மாமியும் அதுபோல வைரத்தோடே போடாமல் விட்டாலும், இயற்கையாகவே வைரமாகவே ஜொலிப்பவர்கள் தான்.

      வைரத்தோடும் போட்டு போட்டால் மேலும் இன்னும் *டாலடித்து ஜொலியோ ஜொலின்னு ஜொலிக்கக்கூடும்* .... அது நியாயமே என்று, அந்த உங்கள் ஆண்டவன் தான், அந்த குடுகுடுப்பாண்டி ரூபத்தில் என் சொப்பனத்தில் வந்து சொன்னான். அதனால் மட்டுமே கொடுத்துள்ளேன். ;)))))

      *வைர நெக்லஸ் போன்ற நகைகளெல்லாம் ஏராளமாக அணிந்துகொண்டு *டாலடித்து ஜொலியோ ஜொலின்னு ஜொலிக்கும்* மரகதம் மாமியைக்காண இங்கே அவசியம் போய்ப்பாருங்கோ, அதிரா:

      பலரும் பாராட்டி முத்திரை பதித்த என் முத்தான கதை.

      http://gopu1949.blogspot.in/2011/12/5-of-5.html

      -=-=-=-

      //அந்த குட்டி ஆரு? ஜேமாமியின் பேத்தியோ? ரொம்ப கியூட்.//

      அந்தக்குட்டிக் கொடாரஞ்சு [கமலாரஞ்சு எனச் சொல்லப்படும் ஓர் இனிப்பான பழம் - உரிக்கவும் சாப்பிடவும் மிகச்சுலபமாகவும் சுவையாகவும் இருக்கும் - நாங்கள் அதை கொடாரஞ்சு என்போம்] சாக்ஷாத் கொடாரஞ்சு போன்ற ஸ்வீட் “ஜெ” மாமியின் பிள்ளை வழிப்பேத்தியே தான். ;)

      ரொம்பவும் க்யூட்டோ க்யூட் தான். நம் ”ஜெ” க்கு, ஜே ஜே ன்னு, முதன் முதலாக பாட்டி என்ற பிரமோஷன் வாங்கிக்கொடுத்துள்ளவள்.

      இந்த ஸ்பெஷல் ’பிரமோஷன்’ பற்றி மேலும் விபரம் அறிய இந்த இணைப்பு உடனே போங்கோ அதிரா:

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_8942.html

      லயாக்குட்டி போன்ற குட்டியூண்டு மேட்டர் தான். ஆனால் உங்களை குபீரென்று சிரிக்க வைக்கும். ;)))))

      நீக்கு
  15. அடடா என்னா ஒரு சீர்வரிசை.. BMW கார் வேறா?:).. எனக்கு அந்த பாட்டுத்தான் நினைவுக்கு வருது..
    தாய்மாமன் சீர் சுமந்து வாறாண்டி.. அவன் தங்க கொலுசு கொண்டு வாறாண்டி... என தங்கைக்கு அண்ணன் சீர் எடுத்துப் போவது...

    மீண்டும் ஜேமாமி தம்பதிகளுக்கு வாழ்த்துச் சொல்லி.. பொயிண்ட்டுக்குப் போகிறேன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா என்னா ஒரு சீர்வரிசை.. BMW கார் வேறா?:).. எனக்கு அந்த பாட்டுத்தான் நினைவுக்கு வருது..
      தாய்மாமன் சீர் சுமந்து வாறாண்டி.. அவன் தங்க கொலுசு கொண்டு வாறாண்டி... என தங்கைக்கு அண்ணன் சீர் எடுத்துப் போவது...//

      கொடுத்து வைத்தவள் நானே.

      மீண்டும் நன்றி அதிரா. உங்க பொயிண்டுக்கு பதில் சொல்ல வரேன்.

      நீக்கு
    2. athira August 15, 2013 at 2:35 PM

      //அடடா என்னா ஒரு சீர்வரிசை.. BMW கார் வேறா?:).. //

      ஆமாம் அதிரா, BMW Car என்ன ..... அதீதமான நட்புக்கு நாம் எது கொடுத்தாலும் தகும், அல்லவா..

      //எனக்கு அந்த பாட்டுத்தான் நினைவுக்கு வருது. தாய்மாமன் சீர் சுமந்து வாறாண்டி.. அவன் தங்க கொலுசு கொண்டு வாறாண்டி... என தங்கைக்கு அண்ணன் சீர் எடுத்துப் போவது...//

      அதே அதே சபாபதே !

      [அதிரா, இதை என் மஞ்சு பார்ப்பதற்கு முன் படிச்சுட்டு கிழிச்சு, தேம்ஸ்ஸில் கலந்துடுங்கோ. இது அவளுக்கும் எனக்கும் உள்ள ’கொப்பி வலது’ [Copy Right] வார்த்தைகள்.]

      ’அதிரபதே ’ தான் நமக்குள்ள கொப்பி வலது வார்த்தை. ;)

      நீக்கு
  16. ஆ பொயிண்ட்டுக்கு வந்தாச்சு:))

    //அறுபதிலும் ஆசை வரும் ! ;)))))

    என்றல்லவா இந்தப்பதிவுக்கு நான் தலைப்புக்கொடுத்துள்ளேன் !

    எனக்கும் அந்த ஆசை வந்ததே !! ///

    ஆஅங்ங்ங்ங்ங்... சந்தடி சாக்கில:)) தன் ஆல்பத்தையும் ஓபின் செய்திட்டார் கோபு அண்ணன்:))...

    உங்களுக்கும் தீர்க்கசுமங்கலிபவ எனக்கூறி... இனிய தம்பதிகளாக பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் கோபு அண்ணன்.

    72க்கும் 2009 க்கும் ஒரு சின்ன வித்தியாசம்:) அங்கே சேர்ட்.. ரை.., இங்கே மாலை ... கண்ணாடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, காதைக் கொடுங்கோ.

      ஆஅங்ங்ங்ங்ங்... சந்தடி சாக்கில:)) தன் ஆல்பத்தையும் ஓபின் செய்திட்டார் கோபு அண்ணன்:))...//

      இதுதான் பக்கத்து இலைக்குப் பாயசம் போடறது.

      உங்களுக்கும் தீர்க்கசுமங்கலிபவ எனக்கூறி... இனிய தம்பதிகளாக பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் கோபு அண்ணன்.//

      இன்னும் எத்தனை தங்கைகளுக்கு சீதனம் செய்யணும். எல்லா தங்கைகளும் நன்னா வேண்டிக்கோங்க கோபு அண்ணனும், மன்னியும் நன்னா இருக்கணும்ன்னு.

      நீக்கு
    2. JAYANTHI RAMANI August 17, 2013 at 4:19 AM

      //அதிரா, காதைக் கொடுங்கோ.//

      ஜெயந்தி, அதிரா காது எப்பூடீஈஈஈஈஈ?

      குறுப்பை ஜாஸ்தியோ? ;))))) குறும்புக்காரியாக இருக்கிறாள், அதனால் ஒரு சந்தேகம் எனக்கு.

      \\ஆஅங்ங்ங்ங்ங்... சந்தடி சாக்கில:)) தன் ஆல்பத்தையும் ஓபின் செய்திட்டார் கோபு அண்ணன்:))...\\

      //இதுதான் பக்கத்து இலைக்குப் பாயசம் போடறது. //

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா. மிகவும் ரஸித்தேன்.

      \\உங்களுக்கும் தீர்க்கசுமங்கலிபவ எனக்கூறி... இனிய தம்பதிகளாக பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் கோபு அண்ணன்.\\

      //இன்னும் எத்தனை தங்கைகளுக்கு சீதனம் செய்யணும். எல்லா தங்கைகளும் நன்னா வேண்டிக்கோங்க கோபு அண்ணனும், மன்னியும் நன்னா இருக்கணும்ன்னு. //

      ரொம்ப சந்தோஷம் ..... ஜெயந்தி. எல்லோரும் சேர்ந்து வேண்டிக்கொள்ளட்டும்.அது தான் இன்றைய எங்கள் தேவையும்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    3. athira August 15, 2013 at 2:38 PM

      //ஆ பொயிண்ட்டுக்கு வந்தாச்சு:))//

      அப்போ இதுவரை சொன்னதில் எல்லாம் ஒரு பாயிண்ட்டும் இல்லையா, அதிரா. சும்மா மொக்கை தானா, அதெல்லாம். ;)

      *****அறுபதிலும் ஆசை வரும் ! ;))))) என்றல்லவா இந்தப்பதிவுக்கு நான் தலைப்புக்கொடுத்துள்ளேன் ! எனக்கும் அந்த ஆசை வந்ததே !! *****

      //ஆஅங்ங்ங்ங்ங்... சந்தடி சாக்கில:)) தன் ஆல்பத்தையும் ஓபின் செய்திட்டார் கோபு அண்ணன்:))...//

      அவ்வப்போது சந்துலே புகுந்து சிந்து பாடுவது என் வழக்கம், அதிரா.

      இதுவரை படிக்காதவங்க, பார்க்காதவங்க பார்க்க ஒரு வாய்ப்பா அமையுமோள்யோ ! அதனால் மட்டுமே.

      //உங்களுக்கும் தீர்க்கசுமங்கலிபவ எனக்கூறி... இனிய தம்பதிகளாக பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் கோபு அண்ணன்.//

      ரொம்பவும் சந்தோஷம் ..... அதிரா.

      //72க்கும் 2009 க்கும் ஒரு சின்ன வித்தியாசம்:) அங்கே சேர்ட்.. ரை.., இங்கே மாலை ... கண்ணாடி...//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      ஷர்ட், டை, மாலை, கண்ணாடி இதெல்லாம் கிடக்கட்டும்.

      அப்போ எழுச்சி மட்டும்! இப்போ பேரெழுச்சியாக்கும் !! ;)))))

      எழுச்சி, பேரெழுச்சி, வழுவட்டை முதலிய வார்த்தைகளுக்கான அகராதி [டிக்‌ஷனரி] பார்க்க இதோ இங்கே இணைப்பு உள்ளது:

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html
      முழுநீள நகைச்சுவை - காணத்தவறாதீர்கள்.

      நீக்கு
  17. *எப்படியிருந்த நான் .... ....

    **இப்படி ஆகிவிட்டேன். ;)))))//

    எப்படி?:)).

    //80 வயது பூர்த்தியானவர்கள் செய்துகொள்வது ’சதாபிஷேகம்’ என்ற அருமையான நிகழ்ச்சியாகும்.

    இதை தம்பதியினர் இருவரும் சேர்ந்து இருந்து செய்துகொள்ள மிகவும் கொடுப்பிணை வேண்டும். //

    இது உங்கள் மூத்த அக்காவுக்கு கிடைத்ததாக நீங்க முன்பு கூறியது ஞாபகம் இருக்கு.


    ///*மூன்றாம் பிறை பற்றி*///

    ஆவலோடு படித்தேன், ஆனா அதன் நன்மைகள் என்ன எனச் சொல்ல மறந்திட்டீங்க... நாங்களும் மூன்று பார்க்க நினைப்போம் ஆனா மறந்திடுவோம்... 4 ஐப் பார்க்கக்கூடாதென நினைப்போம், ஆனா வலிய தென்பட்டுவிடும்.

    அத்தோடு 5ம் பிறை அன்றுதானே சதுர்த்தி வரும்... சதுர்த்தி விரதமிருப்போர், அன்று பிறை பார்க்கக்கூடாதாமே உண்மையோ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவலோடு படித்தேன், ஆனா அதன் நன்மைகள் என்ன எனச் சொல்ல மறந்திட்டீங்க...//

      அருமையான பதிவு தனியாகவே போட்டுடுவார் கோபு அண்ணன்.

      நீக்கு
    2. athira August 15, 2013 at 2:44 PM

      *****எப்படியிருந்த நான் .... .... **இப்படி ஆகிவிட்டேன். ;)))))*****

      //எப்படி?:)).//

      அப்போ எழுச்சியுடன் இருந்தேன். மாங்கு மாங்குன்னு டைப்ரைட்டரில் [1+7 கார்பன் பேப்பர்களைச் சொருகி, மெனிஃபோல்டிங் ஷீட்டில் டைப்படிப்பேன் - நிறைய லெட்ஜர்கள் கையாலேயே அழகாக, மிக அழகாக அப்படியே கண்ணில் ஒத்திக்கொள்வது போல எழுதுவேன் - பக்கம் பக்கமாக வாயாலேயே சீக்கிரமாகக் கூட்டல் கணக்குகளும் போடுவேன்]

      இப்போ அந்த பழைய பஞ்சாங்கங்களை எல்லாம் தூக்கிக்கொண்டு போய் சப்ஜாடா காவிரி ஆற்றில் ஒரே அமுக்கா அமுக்கிப்புட்டு, பேரெழுச்சியுடன் கணினியில் சும்மா பூந்து விளையாடி வருகிறேனாக்கும்.

      நீங்க வேறு ஏதும் நினைச்சு ஏமாந்துட்டீங்கோன்னு தெரியும்.

      “ஏமாறச்சொன்னதும் நானோ .... என் மீது கோபம் தானோ” ;)))))

      -=-=-=-

      *****80 வயது பூர்த்தியானவர்கள் செய்துகொள்வது ’சதாபிஷேகம்’ என்ற அருமையான நிகழ்ச்சியாகும். இதை தம்பதியினர் இருவரும் சேர்ந்து இருந்து செய்துகொள்ள மிகவும் கொடுப்பிணை வேண்டும்.*****

      //இது உங்கள் மூத்த அக்காவுக்கு கிடைத்ததாக நீங்க முன்பு கூறியது ஞாபகம் இருக்கு.//

      ஆமாம். ஆமாம். ஆமாம். அவள் மிகவும் செளக்யமாக இங்கு எங்கள் வீட்டு அருகில் தான் குடி இருக்கா. இப்போ இதை டைப் அடிக்கும் போது கூட ஃபோனில் பேசினாள். அவளுக்கு ’ஆயுசு நூறு’ என நினைத்துக்கொண்டேன்.

      -=-=-=-=-

      //*மூன்றாம் பிறை பற்றி*

      ஆவலோடு படித்தேன், ஆனா அதன் நன்மைகள் என்ன எனச் சொல்ல மறந்திட்டீங்க... நாங்களும் மூன்று பார்க்க நினைப்போம் ஆனா மறந்திடுவோம்... 4 ஐப் பார்க்கக்கூடாதென நினைப்போம், ஆனா வலிய தென்பட்டுவிடும்.

      அத்தோடு 5ம் பிறை அன்றுதானே சதுர்த்தி வரும்... சதுர்த்தி விரதமிருப்போர், அன்று பிறை பார்க்கக்கூடாதாமே உண்மையோ??//

      இதையெல்லாம் பற்றியெல்லாம் நாம் நம் தெய்வீர்கப்பதிவரிடம் தான் கேட்க வேண்டும், அதிரா.

      நிச்சயமாக அவர்களும் இதைப்படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      அதனால் அவர்களே. பேரெழுச்சியுடன், இது சம்பந்தமாக உடனே ஒரு மிகப்பெரிய பதிவு ஏராளமான படங்களுடன் தந்து அசத்தி விடுவார்கள், பாருங்கோ.

      நானும் நீங்களும் சேர்ந்து ஜாலியாக அந்தப்பதிவைப் பார்க்கலாம், அதிரா. கவலையை விடுங்கோ.

      நீக்கு
  18. //இங்கு அன்புடன் வருகை தந்து
    கருத்துக்கூறிடும் அனைவருக்கும்,
    என்னால் தனித்தனியாக
    நன்றி கூறி பதில் தரப்படும்.
    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பதில் மட்டும்தானா? எங்களுக்கு விருந்து சுவீட்ட்... ஏதுமில்லையோ? அப்போ விடுங்கோ என்னை குயின் அம்மம்மா வரட்டாம் அவவின் பூட்டனை.. என் பெறாமகனை அதாவது வில்லியம் கேட்டின் மகனை, தொட்டிலில் போட:)) நான் அங்கு போகிறேன்ன்ன்:)))....

    ஊசிக்குறிப்பு:.. ஆடி வெள்ளியை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பதில் மட்டும்தானா? எங்களுக்கு விருந்து சுவீட்ட்... ஏதுமில்லையோ? அப்போ விடுங்கோ என்னை குயின் அம்மம்மா வரட்டாம் அவவின் பூட்டனை.. என் பெறாமகனை அதாவது வில்லியம் கேட்டின் மகனை, தொட்டிலில் போட:)) நான் அங்கு போகிறேன்ன்ன்:)))....

      லண்டனுக்குப் போறீயளோ? போனா எங்க வாழ்த்துக்களையும் வில்லியம் கேட்டின் மகனுக்குச் சொல்லிடுங்கோ.

      ஊசிக் குறிப்பு - பின் குறிப்பை இப்படியும் சொல்லலாமோ? இல்லை அதிரா, பின் என்றால் பின்னே வரும் என்று அர்த்தம்.

      ஊசிக் குறிப்பு என்றால் என்ன என்று சொல்லுங்கள்.

      நீக்கு
    2. விருந்து ஸ்வீட் எல்லாம் வித விதமா கோபு அண்ணா கொடுத்திருக்காங்களே. எவ்வளவு வேணாலும் எடுத்துக்கோங்கோ அதிரா.

      நீக்கு
    3. athira August 15, 2013 at 2:47 PM

      *****இங்கு அன்புடன் வருகை தந்து கருத்துக்கூறிடும் அனைவருக்கும், என்னால் தனித்தனியாக நன்றி கூறி பதில் தரப்படும்.*****

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பதில் மட்டும்தானா? எங்களுக்கு விருந்து சுவீட்ட்... ஏதுமில்லையோ? //

      ஜெயந்திக்கு சஷ்டியப்தபூர்த்தின்னு நான் தகவல்சொல்லி உங்களையெல்லா அழைக்க மட்டும் தான் வந்துள்ளேன். வரும்போது வெறும் கையுடன் வராமல் நிறைய பூவும், பழமுமாக கொண்டுவந்து வைத்துள்ளேன்.

      விருந்து ஸ்வீட் எல்லாம் விழாவிற்கு நேரில் வருகை தருபவர்களுக்கு மட்டும் தானே அங்கு கல்யாண மண்டபத்தில் மட்டும் தானே தருவார்கள் ! என்னைக்கேட்டால் எப்பூடீ?

      உங்களுக்கு, ”ஜெ” மாமி [அதுவும் அறுசுவை “ஜெ” மாமி ..... அறுவை அல்ல அறுசுவை ;)))))) ] கட்டாயம், மடிசார் புடவையுடன் சூப்பராகக் காட்சியளிக்கப்போகும் தன் பதிவினில், மிகப்பெரிய விருந்தே தந்து அசத்தப்போகிறார்கள், அதிராஆஆஆஆ. அந்த நாளும் வந்திடாதோ ! ;)))))

      அதைக்காண நானும் மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.

      //அப்போ விடுங்கோ என்னை குயின் அம்மம்மா வரட்டாம் அவவின் பூட்டனை.. என் பெறாமகனை அதாவது வில்லியம் கேட்டின் மகனை, தொட்டிலில் போட:)) நான் அங்கு போகிறேன்ன்ன்:)))....//

      போய்ட்டு வாங்கோ. மறக்காமல் சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கும், ”ஜெ” மாமியின் ”மடிசார்” பதிவுக்கும் அவசியம் வந்துடுங்கோ.

      ’மடிசார்’ என்றால் என்ன என்பதை அறிய இதோ என் பதிவுகளுக்கு வாங்கோ:

      http://gopu1949.blogspot.in/2011/06/1-of-2.html

      http://gopu1949.blogspot.in/2011/12/blog-post.html

      இரண்டுமே ஒரே ஜாலியாக மிகச்சிறந்த நகைச்சுவையாக இருக்கும்.:

      //ஊசிக்குறிப்பு:.. ஆடி வெள்ளியை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி...//

      இது தான் இந்த ஆண்டின் கடைசி “ஆடி வெள்ளிக்கிழமை”. அத்துடன் வரலக்ஷ்மி விரதமும் சேர்ந்துள்ளது மிகவும் விசேஷமான நாள்..

      எங்கள் ஊர் திருச்சியில் ஒரு முழம் வாசனை மல்லிகைப்பூவே ரூ. 50க்கு மேல் விற்கப்படுகிறது. தங்கள் தகவலுக்காக மட்டும்.

      நீக்கு
  19. வழக்கம் போல அசத்திட்டீங்க..

    என் நல்வாழ்த்துகளும் ஜெயந்தி ரமணி தம்பதிக்கு..

    திருவரங்க திவ்ய தம்பதியின் அனுக்கிரகம் எப்போதும் அவர்களுக்கு கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் சார்.

      மனமார்ந்த நன்றி. கோபு அண்ணனால் உங்கள் எல்லாருடைய வாழ்த்துக்களும், இறைவனின் வாழ்த்துக்களும் கிடைக்கப் பெற்ற நான் பாக்கியசாலி.

      நீக்கு
    2. ரிஷபன் August 15, 2013 at 4:55 PM

      வாங்கோ சார், வணக்கம் சார். தங்கள் வருகை எனக்குத்தனியானதோர் மகிழ்ச்சியினைத் தருகிறது.

      //வழக்கம் போல அசத்திட்டீங்க..//

      மிகவும் சந்தோஷம் ...... சார்.

      [என் எல்லாப் புகழும் உங்களுக்கே !]

      //என் நல்வாழ்த்துகளும் ஜெயந்தி ரமணி தம்பதிக்கு. திருவரங்க திவ்ய தம்பதியின் அனுக்கிரகம் எப்போதும் அவர்களுக்கு கிடைக்கட்டும்.//

      மிக்க மகிழ்ச்சி, சார்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      நீக்கு
  20. ஜெயந்தி ரமணி தம்பதியினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    2. பழனி. கந்தசாமி August 15, 2013 at 5:05 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //ஜெயந்தி ரமணி தம்பதியினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு அடியேனின் நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன் ஐயா. மிக்க மகிழ்ச்சிகள் ஐயா.

      நீக்கு
  21. திருமதி ஜெயந்தி அவர்களுக்கும் திரு ரமணிக்கும் வாழ்த்துகள். உங்களின் தாராளமனசுக்கு எல்லையே இல்லை.இதற்கும் கொடுத்துவைத்திருக்கவேண்டுமே.
    என்றும் சிறப்புடன் வாழ தம்பதிகளுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் வல்லி சிம்ஹன்

      கொடுக்கவும், பெற்றுக் கொள்ளவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    2. வல்லிசிம்ஹன் August 15, 2013 at 5:13 PM

      வாருங்கள் மேடம், நமஸ்காரங்கள்.

      //திருமதி ஜெயந்தி அவர்களுக்கும் திரு ரமணிக்கும் வாழ்த்துகள்.

      //உங்களின் தாராளமனசுக்கு எல்லையே இல்லை. இதற்கும் கொடுத்துவைத்திருக்கவேண்டுமே. என்றும் சிறப்புடன் வாழ தம்பதிகளுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு அடியேனின் நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன், மேடம். மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  22. சஷ்டியப்த பூர்த்தி காணும் தம்பதியர்க்கு நமஸ்காரங்களும் வாழ்த்துகளும்.

    உங்கள் நண்பர்களை உறவுகளாக மாற்றி அவர்களை உங்கள் பாணியில் வாழ்த்தி, அவர்கள் சந்தோஷத்தில் பங்கெடுக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த நன்றி ஸ்ரீராம். உங்களுக்கும் எங்கள் ஆசிகள்.

      உங்கள் நண்பர்களை உறவுகளாக மாற்றி அவர்களை உங்கள் பாணியில் வாழ்த்தி, அவர்கள் சந்தோஷத்தில் பங்கெடுக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்.//

      குடும்பங்கள் தீவுகளாக பிரிந்து நிற்கும் இந்த காலகட்டத்தில் கோபு அண்ணா போன்றவர்கள் நமக்கு முன் மாதிரி.

      நீக்கு
    2. ஸ்ரீராம். August 15, 2013 at 5:41 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //சஷ்டியப்த பூர்த்தி காணும் தம்பதியர்க்கு நமஸ்காரங்களும் வாழ்த்துகளும்.//

      மிகவும் சந்தோஷம். ஆசீர்வாதங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      //உங்கள் நண்பர்களை உறவுகளாக மாற்றி அவர்களை உங்கள் பாணியில் வாழ்த்தி, அவர்கள் சந்தோஷத்தில் பங்கெடுக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்.//

      ஸ்ரீராமனின் பாராட்டு எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது. நன்றியோ நன்றிகள், ஸ்ரீராம்.

      நீக்கு
  23. அய்யாVGK அவர்களே
    உங்கள் பதிவில் இன்னுமொரு பாசமலர்
    மணம் வீசுவதைக் கண்டேன்.
    மனம் நெகிழ்ந்தேன்

    மணி விழா காணும் திருமதி ஜெயந்தி ரமணி வெங்கடேஸ்வரன் தம்பதிக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள் .அவர்கள் குருபக்தியோடு இறை பக்தியும் பெற்று இனிதே வாழ பிரார்த்திக்கிறேன்.

    விழா முடிந்ததும் அவர்களின் புகைப்படம் அனுப்புங்கள் உங்களுக்கு வாழ்துப்படம் தயார் செய்து அனுப்பியதுபோல் அவர்களுக்கும் அனுப்புகின்றேன். (அவர்கள் விரும்பினால்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி பட்டாபிராமன் சார்.

      விழா முடிந்ததும் அவர்களின் புகைப்படம் அனுப்புங்கள் உங்களுக்கு வாழ்துப்படம் தயார் செய்து அனுப்பியதுபோல் அவர்களுக்கும் அனுப்புகின்றேன். (அவர்கள் விரும்பினால்)//

      கரும்பு தின்னக் கூலியா? கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன்.

      நீக்கு
    2. Pattabi RamanAugust 15, 2013 at 6:08 PM

      வாங்கோ அண்ணா, நமஸ்காரம் + வணக்கம் அண்ணா
      .
      //அய்யாVGK அவர்களே உங்கள் பதிவில் இன்னுமொரு பாசமலர்
      மணம் வீசுவதைக் கண்டேன். மனம் நெகிழ்ந்தேன் //

      இன்றைய தேதியில் “பாசமலர்”க்ளுக்கு என்னிடம் பஞ்சமே இல்லை அண்ணா. உலகம் பூராவும் ஆங்காங்கே எதேஷ்டமாகப் பரவியுள்ளார்கள்.

      இருப்பினும் இந்த ஜெயந்தி மலரின் வாஸம் [தனிப்பிரியம்] என்னை மயங்கச்செய்வதாக மிகவும் சுகந்தமானது அண்ணா.

      இந்த ஜெயந்தியின் வலைப்பதிவின் பெயரே கும்மென்று நறுமணம் வீசுகிறதே அண்ணா. அது எப்போதுமே ”மனம் [மணம்] வீசும்” அண்ணா.

      //மணி விழா காணும் திருமதி ஜெயந்தி ரமணி வெங்கடேஸ்வரன் தம்பதிக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள். அவர்கள் குருபக்தியோடு இறை பக்தியும் பெற்று இனிதே வாழ பிரார்த்திக்கிறேன். //

      தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் அடியேனின் மனமார்ந்த இனிய நன்றிகள், அண்ணா.

      //விழா முடிந்ததும் அவர்களின் புகைப்படம் அனுப்புங்கள் உங்களுக்கு வாழ்த்துப்படம் தயார் செய்து அனுப்பியதுபோல் அவர்களுக்கும் அனுப்புகின்றேன். (அவர்கள் விரும்பினால்)//

      இதற்கான பதிலை மேலே ஜெயந்தியே சொல்லிவிட்டார்கள்.

      -=-=-=-

      இருப்பினும் ஒரு சமாச்சாரம் உங்கள் தகவலுக்காக நான் இங்கு சொல்ல வேண்டியதாக இருக்குது அண்ணா.

      இவர்களின் அன்புக்கும் ஆசைக்கும் பிறந்துள்ள ஒரு மகள் இருக்கிறாள்..

      கல்யாண வயதில் காத்திருக்கும் அவள் ஒரு சிங்கக்குட்டி. M.Sc., ANIMATION + MULTIMEDIA படித்துள்ள மஹா கெட்டிக்காரி. அவள் கம்ப்யூட்டரில் புகுந்தால், செய்யமுடியாத ’இந்திரஜித்’ வேலைகள் எதுவுமே இருக்க முடியாது.

      உங்களுக்கும் எனக்கும் ஏதாவது ’ஜோல்னா வேலைகள்’ கணினியில் செய்ய வேண்டும் என்றாலும் நாம் உரிமையுடன் அவளை அணுகலாம்.

      இது தங்கள் தகவலுக்காக மட்டுமே, அண்ணா.

      அன்புடன் கோபு

      நீக்கு
  24. தம்பதியருக்கு எங்களது வாழ்த்துகள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜன் சார்.

      நீக்கு
    2. வெங்கட் நாகராஜ் August 15, 2013 at 6:20 PM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      //தம்பதியருக்கு எங்களது வாழ்த்துகள்......//

      வாழ்த்துகளுக்கு அடியேனின் அன்பு நன்றிகளும், வெங்கட்.

      நீக்கு
  25. திருமதி ஜெயந்திரமணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... ரசிக்க வைக்கும் தொகுப்புகளுக்கும், தகவல்களுக்கும் நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      நீக்கு
    2. திண்டுக்கல் தனபாலன் August 15, 2013 at 7:01 PM

      வாருங்கள் திரு திண்டுகல் தனபாலன் அவர்களே, வணக்கம்.

      //திருமதி ஜெயந்திரமணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... //

      தங்களின் வாழ்த்துகளுக்கு அடியேனின் நன்றிகளும்.

      //ரசிக்க வைக்கும் தொகுப்புகளுக்கும், தகவல்களுக்கும் நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...//

      தங்களின் அன்பான வருகைக்கும், ரஸித்துக்கூறியுள்ள அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  26. ஸ்ரீமான் ரமணி வேங்கடேஸ்வரன் சார் அவர்களுக்கும் , T.S. ஜெயந்தி மேடம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணிமாறன் சார் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    2. Manimaran August 15, 2013 at 7:08 PM

      வாருங்கள் திரு. மணிமாறன் அவர்களே, வணக்கம்.

      //ஸ்ரீமான் ரமணி வேங்கடேஸ்வரன் சார் அவர்களுக்கும் , T.S. ஜெயந்தி மேடம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...//

      தங்களின் அன்பான வருகைக்கும், அவர்களை வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  27. உங்களோடு சேர்ந்து லக்ஷ்மி ரமணி அவர்களை நானும் வாழ்த்துகிறேன் .வணங்குகிறேன் எல்லா செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவியாழி கண்ணதாசன் சார் உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.

      ஜெயந்தி ரமணி

      நீக்கு
    2. கவியாழி கண்ணதாசன் August 15, 2013 at 7:45 PM

      வாருங்கள் கவிஞரே, வணக்கம்.

      //உங்களோடு சேர்ந்து லக்ஷ்மி ரமணி அவர்களை நானும் வாழ்த்துகிறேன் .வணங்குகிறேன் எல்லா செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க.//

      மிக்க நன்றி. இருப்பினும் அவர்களின் ’ஜெயந்தி ரமணி’ என்ற அசல் பெயரை லக்ஷ்மிகரமாக மாற்றி விட்டீர்கள். அவசத்தில் நேர்ந்துள்ள இதுவும் அழகாகத்தான் உள்ளது.

      நீக்கு
  28. அவர்களுக்கு என் வாழ்த்துகள்... மகிழ்ச்சி பொங்கட்டும்...

    தங்கள் பதிவும் சிறப்பாக உள்ளது அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றி வேல் என் தளத்திற்கு வருகை தந்ததற்கும், வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
    2. வெற்றிவேல் August 15, 2013 at 10:40 PM

      வாருங்கள் ’வெற்றி’வேல் அவர்களே, வணக்கம்.

      //அவர்களுக்கு என் வாழ்த்துகள்... மகிழ்ச்சி பொங்கட்டும்...//

      சந்தோஷம். நன்றி.

      //தங்கள் பதிவும் சிறப்பாக உள்ளது அய்யா...//

      மிக்க மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  29. முதலில் ரமணி வேங்கடேஸ்வரன் - T.S. ஜெயந்தி தம்பதியினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    // அன்புச்சகோதரி செளபாக்யவதி ’ஜெயந்தி’க்கு
    ஏதோ இந்த ஏழை எளிய கோபு அண்ணா கொடுக்க நினைக்கும் [கற்பனையில் தான்] ஒரு சில மங்கலப்பொருட்கள். //

    வெளியே, நிஜ உலகிலும் இதேபோல் பெண் வீட்டார் கொடுத்து
    மாப்பிள்ளை வீட்டார் ( கற்பனையில் தான் ) வாங்கிக் கொண்டால் உலகம் உய்யும்! நல்ல தமாஷ் !

    உங்கள் மணிவிழா பற்றிய பதிவினையும் படங்களையும் மீண்டும் ஒருமுறை பார்த்தேன். மலரும் நினைவுகள்!

    // அறுபதாம் கல்யாணம் என்று சொல்லப்படும் ’சஷ்டியப்த பூர்த்தி’போன்ற ஒருசில விழாக்களைப்பற்றி அடியேன் கேள்விப்பட்டுள்ள ஒருசில சிறப்புச் செய்திகளைத் தங்கள் தகவலுக்காக இங்கு பகிர்ந்து கொள்கிறேன் //

    “உக்ரஹ சாந்தி”, ”சஷ்டியப்த பூர்த்தி”, ”பீமரத சாந்தி”, ”சதாபிஷேகம்”, ”கனகாபிஷேகம்” – என்று பல விஷயங்களைப் பற்றி தெளிவாக சொல்லியதற்கு நன்றி!




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியே, நிஜ உலகிலும் இதேபோல் பெண் வீட்டார் கொடுத்து
      மாப்பிள்ளை வீட்டார் ( கற்பனையில் தான் ) வாங்கிக் கொண்டால் உலகம் உய்யும்! நல்ல தமாஷ் ! //

      உண்மைதான். நிஜத்தில் அதைக் கொண்டா, இதைக் கொண்டா என்று பெண் வீட்டாரை பிடுங்காமல் இருந்தால் சரி.

      தமிழ் இளங்கோ சார், உங்கள் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
    2. தி.தமிழ் இளங்கோ August 15, 2013 at 11:15 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //முதலில் ரமணி வேங்கடேஸ்வரன் - T.S. ஜெயந்தி தம்பதியினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!//

      தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு, அடியேனின் மிக்க நன்றிகளும் ஐயா.

      //வெளியே, நிஜ உலகிலும் இதேபோல் பெண் வீட்டார் கொடுத்து
      மாப்பிள்ளை வீட்டார் ( கற்பனையில் தான் ) வாங்கிக் கொண்டால் உலகம் உய்யும்! நல்ல தமாஷ் ! //

      உலகம் உய்ய வேண்டும் ஐயா. அதில் சந்தேகமே இல்லை.

      இருப்பினும் இதெல்லாம் ஒரு சம்ப்ரதாயம் ஐயா.

      இன்று வசதியாக இருக்கும், ஒவ்வொரு சகோதரர்களும், தன் உடன்பிறப்பு சகோதரிகளுக்கு நிச்சயம் மறக்காமல் இதுபோல முடிந்தவரை செய்யத்தான் வேண்டும் ஐயா.

      அதற்கான நினைவூட்டல் மட்டுமே இது.

      //“உக்ரஹ சாந்தி”, ”சஷ்டியப்த பூர்த்தி”, ”பீமரத சாந்தி”, ”சதாபிஷேகம்”, ”கனகாபிஷேகம்” – என்று பல விஷயங்களைப் பற்றி தெளிவாக சொல்லியதற்கு நன்றி!//

      உக்ரஹ சாந்தி ஹோமம் பற்றி, வேதம் படித்த பண்டிதர்களால் எனக்கு எடுத்துச்சொல்லபட்டு, அதன் சிறப்புகள் விளக்கப்பட்டு, நானும் விமரிசையாகச் செய்துகொண்டேன் ஐயா. அதே போட்டோ தான் என் சஷ்டியப்த பூர்த்தி அழைப்பிதழிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், மிக நீண்ட கருத்துக்களுக்கும் அடியேனின் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  30. சஷ்டியப்த பூர்த்தி காணும் தம்பதியர்களுக்கு மனமார்ந்த ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஞ்சனி மேடம், உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    2. Ranjani Narayanan August 15, 2013 at 11:27 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சஷ்டியப்த பூர்த்தி காணும் தம்பதியர்களுக்கு மனமார்ந்த ஆசிகள்.//

      தங்களின் அன்பு வருகை + ஆசிகளுக்கு, அடியேனின் நன்றிகளும்.

      நீக்கு
  31. நிறைய தெரியாத பெயர்களும் அதற்கான விளக்கங்களும் தெரிந்து கொண்டேன். மலரும் நினைவுகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sasi Kala August 15, 2013 at 11:59 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நிறைய தெரியாத பெயர்களும் அதற்கான விளக்கங்களும் தெரிந்து கொண்டேன். மலரும் நினைவுகள் சிறப்பு.//

      தங்களின் அன்பு வருகை + சிறப்பான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  32. திரு + திருமதி. ஜெயந்திரமணி வேங்கடேஸ்வரன் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்.

    நலமுடனும் சிறப்புடனும் என்றும் வாழ வாழ்த்துகிறேன்.

    சிறப்பாக தம்பதிகளை வாழ்த்தி மகிழ்ந்த உங்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி, உங்கள் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    2. மாதேவி August 16, 2013 at 12:42 AM

      வாங்கோ, வணக்கம்.

      //திரு + திருமதி. ஜெயந்திரமணி வேங்கடேஸ்வரன் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்.

      நலமுடனும் சிறப்புடனும் என்றும் வாழ வாழ்த்துகிறேன்.//

      தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளை நானும் இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.

      //சிறப்பாக தம்பதிகளை வாழ்த்தி மகிழ்ந்த உங்களுக்கும் பாராட்டுகள்.//

      அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  33. அடேங்கப்பா.. தங்கையை இத்தனை சீரா? ஆஹா இப்படி ஒரு அண்ணன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான் அவங்க.

    சஷ்டியப்த பூர்த்தி காணும் தம்பதிகளுக்கு இச்சிறியவளின் பணிவான வணக்கங்கள்! என்றும் நலமுடன் மகிழ்ச்சியாய் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வணக்கங்களுக்கும், பிரார்த்தனைக்கும் மனமார்ந்த நன்றி உஷா

      நீக்கு
    2. உஷா அன்பரசு August 16, 2013 at 2:47 AM

      வாங்கோ உஷா டீச்சர்,

      தங்கள் ஓல்டு ஸ்டூடண்ட் கோபாலகிருஷ்ணனின் அன்பான வணக்கங்கள்.

      -=-=-=-

      [ஜெயந்தி!

      ”யார் வந்திருக்காங்க பாருங்கோ!! நம்ம உஷா டீச்சரே வந்துட்டாங்கோ!!

      என்னையும் உங்களையும் மட்டும், வகுப்பு முடியும் கடைசிநாள் [30.12.2012] அன்று, சிறப்பாக மேடையில் ஏற்றி, ஸ்பெஷலாக அவார்டு நம் இருவருக்கும் மட்டும் கொடுத்தாங்களே!!!

      ஞாபகமிருக்கா ஜெயந்தி! இதோ உங்கள் ஞாபகத்திற்காக:

      பின்னூட்டத்தில் போட்டி போட்டுக்கொண்டு பேசிய இவர்களுக்கு
      சிறந்த விமர்சகர் அவார்டு

      1) வை.கோபால கிருஷ்ணன்
      2) ஜெயந்தி ரமணி

      -=-=-=-

      //அடேங்கப்பா.. தங்கைக்கு இத்தனை சீரா? ஆஹா இப்படி ஒரு அண்ணன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான் அவங்க. //

      “கொடுத்து வைத்தவள் நீயே”ன்னு டீச்சர் பாட்டே பாடிடுவீங்க போலிருக்கு ! ;))))))

      //சஷ்டியப்த பூர்த்தி காணும் தம்பதிகளுக்கு இச்சிறியவளின் பணிவான வணக்கங்கள்! என்றும் நலமுடன் மகிழ்ச்சியாய் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்!//

      தங்களின் அன்பான வருகை + அழகான பிரார்த்தனைகளுக்கு மிக்க மகிழ்ச்சி, டீச்சர்.

      நீக்கு
  34. வை.கோ சார் இப்படியே போனா உங்க வீட்ல கூட இது வாங்கி தர்றேன் அது வாங்கி தர்றேன்னு அழகழகா லேப்-டாப்பிலயே காண்பிச்சு எஸ்கேப் ஆகிடுவிங்க...போலிருக்கே! அது போகட்டும் ஆனா எங்களுக்கு விருந்துன்னு போடற ஐட்டம் எல்லாம் கொரியரிலாவது பார்சல் பண்ணித்தான் சரி.. இல்லைன்னா உங்க வீட்டு முன்னாடி ஆர்ப்பாட்டம் பண்ணுவோம்.

    பதிலளிநீக்கு
  35. சஷ்டியப்த பூர்த்தி காணும் தம்பதியர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்! உங்களின் ஆசியை வேண்டி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி உஷா. உங்களுக்கு என் ஆசிகள்.

      நீக்கு
    2. உஷா அன்பரசு August 16, 2013 at 2:52 AM

      //வை.கோ சார் இப்படியே போனா உங்க வீட்ல கூட இது வாங்கி தர்றேன் அது வாங்கி தர்றேன்னு அழகழகா லேப்-டாப்பிலயே காண்பிச்சு எஸ்கேப் ஆகிடுவிங்க...போலிருக்கே! //

      கரெக்ட்டா பாயிண்டைப் பிடிச்சுட்டீங்கோ. அதே அதே சபாபதே ! ;)))))

      //அது போகட்டும் ஆனா எங்களுக்கு விருந்துன்னு போடற ஐட்டம் எல்லாம் கொரியரிலாவது பார்சல் பண்ணித்தான் சரி.. இல்லைன்னா உங்க வீட்டு முன்னாடி ஆர்ப்பாட்டம் பண்ணுவோம்.//

      உங்களுக்கு இல்லாத ஸ்பெஷல் விருந்தா, எப்போதுமே ரெடி. ஆர்பாட்டம் பண்ணவாவது எங்கள் வீட்டுக்கு வாங்கோ. மகிழ்ச்சி.

      என் காதைப்பிடித்துத் திருகி, பெஞ்சுமேல் ஏற்றி முட்டிக்குமுட்டி தட்டாமல் இருந்தால் சரியே, இளநீர் சீவிக்கொண்டு வரட்டுமா? ஜில்லுன்னு குடிப்பீகளா ? ;)))))

      //உஷா அன்பரசு August 16, 2013 at 2:56 AM

      //சஷ்டியப்த பூர்த்தி காணும் தம்பதியர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்! உங்களின் ஆசியை வேண்டி...!//

      எங்கள் இருவரின் அன்பான ஆசிரியரான உங்களுக்கு, எங்கள் நல்லாசிகள் எப்போதுமே உண்டு.

      எங்கள் நட்பு என்னும் செடி நன்கு துளிர்த்து வளர தாங்களும் கொஞ்சம் நீர் ஊற்றியுள்ளீர்கள். நன்றியோ நன்றிகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  36. சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் திருவாளர் ரமணி மற்றும் திருமதி ஜெயந்தி இருவருக்கும் இனிய அன்பான வாழ்த்துக்கள் ..

    Angelin.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த நன்றி ஏஞ்சலின்.

      நீக்கு
    2. Cherub Crafts August 16, 2013 at 3:21 AM

      அன்புள்ள நிர்மலா, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      //சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் திருவாளர் ரமணி மற்றும் திருமதி ஜெயந்தி இருவருக்கும் இனிய அன்பான வாழ்த்துக்கள் ..//

      நிர்மலாவின் அன்பான + இனிமையான வாழ்த்துகளுக்கு கோபுவின் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், நிர்மலா.

      நீக்கு
  37. அற்புதமான பகிர்வு அண்ணா....

    அன்பின் ஜெயந்தி ரமணி மேடம் அவர்களின் சஷ்டியப்த பூர்த்தியை மிக சுவாரஸ்யமாக குடுகுடுன்னு சொல்ற எல்லா நல்லவிஷயங்களை மிக அழகாய் நேர்த்தியாக சொல்லி...

    சர்ப்ரைஸாக நிறுத்தி.... அதன்பின் அஷ்ட ஐஸ்வர்யங்களுடன்...விருந்து சகிதம் ஆஹா ஆஹா பிரமாதம் அண்ணா...

    சஷ்டியப்தப்பூர்த்தி செய்துக்கொள்ளும் தம்பதியரிடம் ஆசி பெறுவது மிக விஷேஷம்...

    அதன்படி உங்க சஷ்டியப்த பூர்த்தியும் மீண்டும் ஒருமுறை காணப்பெற்றேன் அண்ணா...

    காதுக்குத்தல் லயாக்குட்டிக்கு...

    எல்லாமே அற்புதம்...

    மீண்டும் ஒரு முறை ஜெயந்திரமணி மேடம் தம்பதியருக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளைச்சொல்லிக்கொண்டு....

    இத்தனை அழகாய் நேர்த்தியாய் பதிவிட்ட அண்ணா உங்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....

    கனகாபிஷேகம் பற்றியும் அழகாய் சொன்னீர்கள்.. மஹாப்பெரியவாளோட ஆசிகளுடன் அற்புதம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.

      நீக்கு
    2. Manjubashini Sampathkumar August 16, 2013 at 3:23 AM

      //அற்புதமான பகிர்வு அண்ணா....//

      அன்பின் மஞ்சூஊஊஊஊ வாங்கோ, வாங்கோ, வருவீங்களோ மாட்டீங்களோன்னு ஒரே கவலையாக இருந்தேன்.

      ஒரு வாரமாகவே சரியாகத்தூக்கம் இல்லை. அடுத்தடுத்து விழாக்கள், விருந்துகள், வருவோர் போவோர் என அமர்க்களமாகவே உள்ளது.

      உங்களையும் நான் சரியாகவே தொடர்பு கொள்ள முடியவில்லை. இருப்பினும் வந்துள்ளீர்கள். மகிழ்ச்சியின் எல்லையில் நான். ;)))))

      //அன்பின் ஜெயந்தி ரமணி மேடம் அவர்களின் சஷ்டியப்த பூர்த்தியை மிக சுவாரஸ்யமாக குடுகுடுன்னு சொல்ற எல்லா நல்லவிஷயங்களை மிக அழகாய் நேர்த்தியாக சொல்லி...

      சர்ப்ரைஸாக நிறுத்தி.... அதன்பின் அஷ்ட ஐஸ்வர்யங்களுடன்...விருந்து சகிதம் ஆஹா ஆஹா பிரமாதம் அண்ணா...

      சஷ்டியப்தப்பூர்த்தி செய்துக்கொள்ளும் தம்பதியரிடம் ஆசி பெறுவது மிக விஷேஷம்...

      அதன்படி உங்க சஷ்டியப்த பூர்த்தியும் மீண்டும் ஒருமுறை காணப்பெற்றேன் அண்ணா...//

      ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா, மஞ்சு.

      //காதுக்குத்தல் லயாக்குட்டிக்கு... எல்லாமே அற்புதம்...//

      ஆமாம் மஞ்சு! என் பேத்தி பெயர் : பவித்ரா, ஜெயந்தியின் பேத்தி பெயர்: லயா

      இருவரின் பெயரும் சேர்ந்ததே என் வீட்டின் பெயரான : பவித்ரா + லயா = பவித்ராலயா. ;)))))

      ஏதோ இது அகஸ்மாத்தாக நடந்துள்ளதோர் நிகழ்வு.

      //மீண்டும் ஒரு முறை ஜெயந்திரமணி மேடம் தம்பதியருக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளைச்சொல்லிக்கொண்டு....

      இத்தனை அழகாய் நேர்த்தியாய் பதிவிட்ட அண்ணா உங்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....//

      மஞ்சுவின் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுக்கும், கோபு அண்ணாவின் இந்தப்பதிவினைப் பாராட்டியதற்கும் என் அன்பான சந்தோஷங்கள்ப்பா.

      [நன்றி / தயவுசெய்து / மேடம் போன்ற சில வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாதுன்னு, ஸ்ட்ரிக்டா சொல்லிட்டீங்கோ, அதனால் அடிப்பீங்களோன்னு ஒரு பயம் வந்து சந்தோஷங்கள்ன்னு முடிச்சுட்டேன்ம்மா.]

      //கனகாபிஷேகம் பற்றியும் அழகாய் சொன்னீர்கள்.. மஹாப்பெரியவாளோட ஆசிகளுடன் அற்புதம்...//

      மிக்க மகிழ்ச்சிடா மஞ்சு. ;)))))

      நீக்கு
  38. ஒவ்வொருமுறையும் ..புதிய பல விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் ...எங்கள் வழக்கத்தில் 25 ஆமாண்டு 50 ஆம் ஆண்டு கொண்டாடுவாங்க ..இதுவும் நல்ல முறை ....

    அம்மாடி எவ்ளோ சீர் வரிசை !!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அம்மாடி எவ்ளோ சீர் வரிசை !!!!!!!//

      அஞ்சூஊஊஊஉ இனிமேல் காலத்தில எல்லா அண்ணன்மாரும் இப்பூடி இண்டரெட்டிலயே சீர் வரிசையை அள்ளி அள்ளிக் கொடுத்து தப்பிக்கப் போகினம்:))... வாழ்க கோபு அண்ணன்.. வளர்க உங்கள் சீர்வரிசைகள்:)!!!!

      நீக்கு
    2. Cherub Crafts August 16, 2013 at 3:23 AM

      வாங்கோ நிர்மலா, மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //ஒவ்வொருமுறையும் ..புதிய பல விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் ... //

      மிகவும் சந்தோஷம் நிர்மலா.

      //எங்கள் வழக்கத்தில் 25 ஆமாண்டு 50 ஆம் ஆண்டு கொண்டாடுவாங்க ..இதுவும் நல்ல முறை ....//

      அப்படியா ஒவ்வொருவர் சம்ப்ரதாயங்கள் ஒவ்வொரு விதம் தான். எல்லாமே நல்லது தான்.

      //அம்மாடி எவ்ளோ சீர் வரிசை !!!!!!!//

      மனதில் இதற்கு மேலும் பற்பல சீர் ஐட்டங்கள் நிறைந்துள்ளன. [கற்பனையே என்றாலும்] திருஷ்டிப்பட்டுடுமோன்னு பாதியோடு நிறுத்திட்டேன், நிர்மலா.

      நீக்கு
    3. athira August 16, 2013 at 6:00 AM

      **அம்மாடி எவ்ளோ சீர் வரிசை !!!!!!!**

      //அஞ்சூஊஊஊஉ இனிமேல் காலத்தில எல்லா அண்ணன்மாரும் இப்பூடி இண்டர்நெட்டிலயே சீர் வரிசையை அள்ளி அள்ளிக் கொடுத்து தப்பிக்கப் போகினம்:))...//

      எங்கே போனாலும் எனக்கு இந்தப்பூனையுடன் பெரிய தொல்லை ஒரே சகுனத்தடையாகி விடுகிறது. ;)))))

      // வாழ்க கோபு அண்ணன்.. வளர்க உங்கள் சீர்வரிசைகள்:)!!!!//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அதிரா. [நிஜம்மாத்தான் சொல்றெனாக்கும், நம்புங்கோ. ]

      நீக்கு
  39. ஒவ்வொருமுறையும் ..புதிய பல விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் ...எங்கள் வழக்கத்தில் 25 ஆமாண்டு 50 ஆம் ஆண்டு கொண்டாடுவாங்க ..இதுவும் நல்ல முறை ....

    அம்மாடி எவ்ளோ சீர் வரிசை !!!!!!!

    தட்டில் பொறி உருண்டைக்கு பக்கத்தில் பூவாணம் ஷேப்பில் அது ஏன்னா அதுவும் இனிப்பு வகையா ?

    மிக அருமையான விழா கொண்டாட்டம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தட்டில் பொறி உருண்டைக்கு பக்கத்தில் பூவாணம் ஷேப்பில் அது ஏன்னா அதுவும் இனிப்பு வகையா ?//

      ஏஞ்சலின், இனிப்பு தான். அதற்குப் பெயர் பருப்புத் தேங்காய். அது இல்லாமல் எங்கள் வீடுகளில் ஒரு விசேஷமும் இருக்காது. அந்தந்த விசேஷத்துக்கு ஏற்றபடி எண்ணிக்கை மாறும். அதுவும் பிறந்த வீட்டுச் சீரில் முக்கிய அங்கம் வகிக்கும்.

      நீக்கு
    2. Cherub Crafts August 16, 2013 at 3:27 AM

      அம்மாடி எவ்ளோ சீர் வரிசை !!!!!!!

      ;)))))

      //தட்டில் பொறி உருண்டைக்கு பக்கத்தில் பூவாணம் ஷேப்பில் அது ஏன்னா அதுவும் இனிப்பு வகையா ?//

      அன்பின் நிர்மலா,

      நல்ல கேள்வி கேட்டீங்கோ. அதன் பொதுவான பெயர் “பருப்புத் தேங்காய்” என்பது.

      இதற்காகவே அந்தக்காலத்தில் தகரத்திலும், இந்தக்காலத்தில் பளபளவென்று எவர்சில்வரிலும், பருப்புத்தேங்காய் கூடு என்று [பெரிய கூம்பு வடிவத்தில் - தீபாவளி கலசம் போன்ற வடியில் ஆனால் சற்றே மிகப்பெரிதாக] ஒரு ஜோடியாவது செய்து வீடுகளில் வைத்திருப்பார்கள்.

      இப்போது பெரிய எவர்சில்வர் பாத்திரக்கடைகளில் இவை ரெடிமேடாகவே கிடைக்கின்றன.

      இது எங்கள் திருமணங்களில் மிகவும் முக்கியமானது. இது எண்ணிக்கையிலோ, அளவுகளிலோ குறைந்தால் போச்சு. அதற்காகவே சம்பந்தி சண்டை ஆரம்பித்து விடுவார்கள், அதுவும் பெண்கள் தரப்பில்.

      கல்யாணங்களில் இது குறைந்த பக்ஷம் 15 ஆவது வைக்கும்படியாக இருக்கும். இதைப்பற்றி பிறகு ஒரு நாள் நான் தனிப்பதிவே தர வேண்டும். அப்போது தான் உங்களுக்கு இதைப்பற்றிய முழு விபரமும் தெரியக்கூடும்.

      இதில் அடைக்கப்படுபவை எல்லாமே சீர் பக்ஷணங்கள் தான்.

      வெல்லம்போட்ட நிலக்கடலை, மனோரகம் என்று அழைக்கப்படும் வெல்லம்போட்டம் தேன்குழல், தேங்காய் + ஜீனி கலந்த பர்ப்பி, குஞ்சாலாடு என செல்லமாக அழைக்கப்படும் பூந்தி, மைசூர்பாகு போன்ற பலவித ஸ்வீட்ஸ்கள் செய்து, சுடச்சுட இதில் முழுக்க அடைத்து விடுவார்கள்.

      இந்தக்கூடுகளை மிகவும் அலங்கரிக்க [பெண்களின் கூந்தல், பின்னல் அலங்காரத்திற்கு ரேடிமேடு அட்டாச்மெண்ட்ஸ் போல] தங்கக்கலரில் கண்ணாடிகள் பதித்த எவ்வளோ அட்டாச்மெண்ட்ஸ்களும் இப்போது வந்து விட்டன. சபையில் இவற்றை வைத்தால் ஜிம்முனு, கும்முனு பந்தாவாக நிறைவாக இருக்கும்.

      இங்கு படத்தில் காட்டியுள்ளது கார்த்திகை தீபத்தன்று செய்யும் நெல்பொரி உருண்டையை, பருப்புத்தேங்காய் கூட்டில் சுடச்சுட வைத்து அடைத்து, பிறகு கூட்டை விட்டு எடுத்தது போலக் காட்டப்பட்டுள்ளது.

      பொதுவாக இதை அதாவது நெல்பொரி உருண்டையை யார் வீட்டிலும் இப்படி பருப்புத்தேங்காய்க் கூட்டுகளில் அடைத்துச் செய்வது கிடையாது. இது ஒரு விசித்திரமான படம்.

      கல்யாணங்களிலும் இதை [பொரி உருண்டையை] வைத்து, சம்பந்தி மாமியிடம் நாம் தப்பிக்கவே முடியாது. ஏற்றுக்கொள்ள மாட்டர்கள்.
      ஏனெனில் இது SO EASY & CHEAP ITEM.

      //மிக அருமையான விழா கொண்டாட்டம் ...//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கேள்விகளுக்கும் மிக்க நன்றி, நிர்மலா.

      நீக்கு
  40. Congratulations Mrs. Jayanthi madam, en manamaarndha vaazhuthukkal. You have a great and wonderful brother, all the virtual gifts right is heart is very very capturing, who else can give so many gifts for this lovely sis. Very very attractive lovely seedhanam for a loving brother.... simply superb... Wish you a very very happy sashtiyatra poorthi vizha.... our heartful wishes and love to you and your family...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you very much dear Priya.

      ஒரு சிறிய பரிசாக இருந்தாலும் பிறந்த வீட்டில் இருந்து வந்தால் பெண்களுக்கெல்லாம் அது ரொம்ப ஒசத்தி தானே. இப்படி அனுமார்வால் போல் நீண்ட பருசுகளும், அதையும் விட வரிசையான எல்லோருடைய வாழ்த்துக்களும் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு ஏது அளவு.

      நீக்கு
    2. Priya Anandakumar August 16, 2013 at 3:43 AM

      வாங்கோ என் அன்புக்குரிய பிரியா ஆனந்தகுமார் மேடம், வணக்கம்.

      என் அடுத்த பதிவினில் தங்களுக்கு ஓர் சிறப்பிடம் கொடுத்து நான் பாராட்ட இருக்கிறேன்.
      .
      எல்லாமே ரெடிசெய்து கம்போஸ் செய்தும் விட்டேன்.

      வெளியிடத் துடித்துக்கொண்டும் இருக்கிறேன்.

      இருப்பினும் இந்த ஜெயந்தியின் கல்யாணப்பதிவு நல்லபடியாக நிறைவேறட்டும் என மட்டுமே காத்திருக்கிறேன்.

      ஏன், எப்படி, எதற்காக என இப்போது என்னை நீங்கள் ஏதும் கேட்க வேண்டாம். தங்களுக்கே தெரிந்திருந்தாலும், இப்போதைக்கு மற்றவர்களுக்கு அது ஓர் சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும்.

      //Congratulations Mrs. Jayanthi madam, en manamaarndha vaazhuthukkal. You have a great and wonderful brother, all the virtual gifts right is heart is very very capturing, who else can give so many gifts for this lovely sis. Very very attractive lovely seedhanam for a loving brother.... simply superb... Wish you a very very happy sashtiyatra poorthi vizha.... our heartful wishes and love to you and your family...//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான .... மிக அழகான கருத்துக்களுக்கும், விசேஷமான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      ஓரிரு நாட்களில் என் அடுத்த பதிவினில் மகிழ்ச்சியுடன் சந்திப்போம், மேடம்.

      நீக்கு
  41. அன்பின் வை.கோ - அறுபதிலும் ஆசை வரும் - அருமையான பதிவு - பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்து நல்ல சொற்கள் கூறி - ஒரு கண்ணாலம் நடக்கப் போகுது என்று கூறி - செவத்த அம்மாவுக்கு கண்னாலம்னு கூறி - பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காத காலத்துல புதனும் கிடைச்சு பொண்ணும் கிடைச்சு - வர ஆகஸ்ட் 28 - புதன்கிழமை - கல்யாணம்

    யாருக்கு எங்கே - வை.கோவின் அன்புச் சகோதரி திருமதி ஜெயந்தி ரமணிக்கு சென்னையிலே 28.08.2013 அன்று அறுபதாம் கல்யாணம் - சஷ்டியப்த பூர்த்தி. எல்லோரும் இதையே அழைப்பாக எடுத்துக்கிட்டு சென்னை வந்து மூத்தவங்க எல்லாம் ஆசிர்வாதம் பண்ணி வாழ்த்திட்டு - மத்தவங்க எல்லாம் ஆசிர்வாதத்தோட வாழ்த்தும் பெற்றுச் செல்லுங்க.

    குடுகுடுப்பக் காரன் - நாதஸ்வரப் பார்ட்டி மங்கள இசை - ஜெயந்தி ரமணி - தம்பதி சமேதராக ரமணி வெங்கடேஸ்வரன் - படங்களோடு - ஒற்றுமையான உத்தம தம்பதியினருக்கு
    மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகளை வழங்கும் வை.கோ வின் பதிவு சூப்பர் பதிவு - படங்கள் எல்லாம் தேடிப்பிடித்துப் போட்டிருக்கிறார்.

    அருமைத் தங்கை ஜெயந்திக்கு அன்பு அண்ணா வை.கோ அளிக்கும் சீர் தான் என்ன ? மங்க்லப் பொருட்கள் - மாலைகள் - லலிதா ஜுவல்லரியில் வாங்கின வெள்ளிக் கெண்டிச் செம்பு - மாப்பிளைக்குப் பட்டு வேட்டி - பூச்சரங்கள் - வண்ண வண்ணப் பட்டுச் சேலைகள் - மாங்கல்யம் அழகிய சரட்டில் - மோதிரம் - கொலுசு - தாம்பூலத்துடன் தேங்காய் பலகாரம் - இத்தியாதி இத்தியாதி - வைர மோதிரம் - நவரத்ன மோதிரம் - வளையல் - கழுத்திற்குச் செயின் - வளையல்கள் - காதுக்கு மின்னும் தோட்டுடன் கூடிய அழகு ஆபரணம் - வகைவகையான தோடுகள் - நகை வைக்கும் பெட்டிகள் என அத்தனை படங்களையும் போட்டு அமர்க்களப் படுத்துகிறார்.

    சகோதரிக்குக் கொடுத்தால் போதுமா - மாப்பிள்ளைக்குக்க் கொடுக்க வேண்டாமா - புத்தம் புதுக் கார்கள் - மோட்டார் பைக் - மடிக் கணினிகள் - அலைபேசிகள் - என அத்தனை படங்களையும் போட்டு தூள் கிளப்புகிறார்.

    அத்துடன் விட்டாரா - மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தவராயிற்றே - பெண் பிள்ளைகள் கல்யாணம் செய்துவித்து சீர் கொடுத்து மகிழ இந்த ஷஷ்டியப்தப் பூர்த்தியினைப் பயன் படுத்தி உள்ளார். எழுபத்து மூன்று படங்கள் போட்டிருக்கிறார்.

    திருமணம் ஆகிப் புகுந்த வீடு செல்லும் பெண்ணிற்குத் தேவையான கிரைண்டர் - மிக்ஸி - வாஷிங் மெஷின் - குளிர் சாதனப் பெட்டி - தொலைக் காட்சிப் பெட்டி - வாசனைத் திரவியங்கள் - கட்டில் - சென்னையில் ஒரு வீடு - என மனம் மகிழ்ந்து யாரும் ஒரு குறை சொல்லக் கூடாதென - படங்கள் பரப்பி இருக்கிறார்.

    கலந்து கொள்ள வந்திருக்கும் விருந்தினர்களூக்கு - மா, வாழை, பலா என முக்கனிகளுடன் - மாதுளை, திராட்சை, உலர் திராட்சை, ஆரஞ்சு, பேரிச்சை, ஆப்பிள் எனப் பழத் தோட்டங்களைப் படைக்கிறார்.

    ஒரு சக பதிவரின் அறுபதாம் கல்யாணத்தினை முன்னிட்டு எழுதப் பட்ட பதிவினை இத்தனை படங்களுடன் சிறப்பாக வெளியிட்டமை நன்று - நட்பின் இலக்கணமாகத் திகழும் அருமை நண்பர் வை.கோ வினிற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனா சார்
      அத்துடன் விட்டாரா - மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தவராயிற்றே - பெண் பிள்ளைகள் கல்யாணம் செய்துவித்து சீர் கொடுத்து மகிழ இந்த ஷஷ்டியப்தப் பூர்த்தியினைப் பயன் படுத்தி உள்ளார். எழுபத்து மூன்று படங்கள் போட்டிருக்கிறார். //

      சீர் வரிசைகளைப் பார்த்த மகிழ்ச்சியில் எண்ணியெல்லாம் பார்க்கவில்லை. 73 ஆ. ஏ அப்பா.

      என் மகன் சொல்லுவான் “அம்மாவுக்கு 100 ரூபாய் புடவை வாங்கிக்கொடுத்தாலே போதும் ரொம்ப சந்தோஷமாயிடுவா” என்று. அதுதான் இன்று எனக்கு இவ்வளவு சீதனங்களையும், அதை விட சிறப்பான எல்லோருடைய வாழ்த்துக்களையும் வாரி, வாரி வழங்கி இருக்கிறது என்று நம்புகிறேன்.

      உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    2. cheena (சீனா)August 16, 2013 at 3:59 AM

      வாருங்கள் என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே!

      வணக்கம் ஐயா.

      //அன்பின் வை.கோ - அறுபதிலும் ஆசை வரும் - அருமையான பதிவு - >>>>>>>>>>>>>>>>>>> //

      //யாருக்கு எங்கே - வை.கோவின் அன்புச் சகோதரி திருமதி ஜெயந்தி ரமணிக்கு சென்னையிலே 28.08.2013 அன்று அறுபதாம் கல்யாணம் - >>>>>>>>>>>>>>>>

      சகோதரிக்குக் கொடுத்தால் போதுமா - மாப்பிள்ளைக்குக்க் கொடுக்க வேண்டாமா - புத்தம் புதுக் கார்கள் - மோட்டார் பைக் - மடிக் கணினிகள் - அலைபேசிகள் - என அத்தனை படங்களையும் போட்டு தூள் கிளப்புகிறார்.

      அருமைத் தங்கை ஜெயந்திக்கு அன்பு அண்ணா வை.கோ அளிக்கும் சீர் தான் என்ன ? மங்க்லப் பொருட்கள் - மாலைகள் >>>>>>>>>>

      ஒரு சக பதிவரின் அறுபதாம் கல்யாணத்தினை முன்னிட்டு எழுதப் பட்ட பதிவினை இத்தனை படங்களுடன் சிறப்பாக வெளியிட்டமை நன்று - நட்பின் இலக்கணமாகத் திகழும் அருமை நண்பர் வை.கோ வினிற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      சென்னையில் ஒரு வீடு - என மனம் மகிழ்ந்து யாரும் ஒரு குறை சொல்லக் கூடாதென - படங்கள் பரப்பி இருக்கிறார். >>>>>>>> //

      அயல்நாட்டுக்கு இன்பச் சுற்றுலா போய் இருந்தும், லண்டலினிலிருந்து இந்த என் பதிவினைப் பொறுமையாகப்படித்து, அருமையாக ரஸித்து, வரிக்குவரி பாராட்டி பக்கம் பக்கமாகப் பின்னூட்டம் எழுதியிருப்பது கண்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.

      இதை வைத்தே நாம் அடித்துச் சொல்லலாம் ஐயா .......

      “அறுபதில் தான் ஆசை வரும்” என்பதை. ;)))))

      // எழுபத்து மூன்று படங்கள் போட்டிருக்கிறார். //

      நானும் வெளியிடும்போது இதனை எண்ணிப்பார்க்கவில்லை, ஐயா. பிறகு இப்போது தான் எண்ணிப்பார்த்தேன்.; மிகச்சரியாகவே எண்ணிச்சொல்லியுள்ளீர்கள்.

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  42. செவத்தம்மா யார்ன்னு இப்பதான் தெரிந்தது..

    ஜெமாமி அறுசுவையிலிருந்தே எனக்கு தெரியும் மிகவும் இனியவர்..

    அவர்களுக்கு இனிய 60 ஆம் மணநாள் வாழ்த்துக்கள்,அவர்களை வணங்குகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேனகா குட்டீஸ் நலமா?
      ரொம்ப நாளாச்சு பேசி.

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மேனகா

      நீக்கு
  43. சஷ்டியப்த பூஜை பற்றிய செய்திகளை ஓரளவுக்கு தெரிந்திருந்தாலும் தங்கள் பதிவின் மூலம் மேலும் அறிந்துக்கொண்டேன்,நன்றி ஐயா!!

    தங்களின் இராஜராஜேஸ்வரி அஷ்டகம் கிடைக்கபெற்றதில் மிக்க மகிழ்ச்சி,இன்றிலிருந்து படிக்க போகிறேன்..நன்றி ஐயா!!


    4 ஆம் பிறை பார்த்தவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் தீராத துயரம் தீரும்.27 வருடங்களாக எங்கள் அம்மா கடைபிடித்து வராங்க,நாங்களும் இன்றுவரை அவ்விரதத்தை தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
  44. எங்கள் இல்லத்திற்க்கு எப்ப வர்றீங்கன்னு சொல்லுங்க,வெஜ் விருந்து செய்து அசத்திடுறேன்...தங்கள் அன்பான‌ கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா!!என்னை மேலும் உற்சாகமூட்டுகிறது...

    பதிலளிநீக்கு
  45. டேஷ்போர்டில் உங்களின் இந்த பதிவு வேலை செய்யவில்லை,லிங்கினை சரி செய்யவும் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.Menaga August 16, 2013 at 4:11 AM

      வாங்கோ மேனகா, செளக்யமாம்மா ? வணக்கம்மா.

      //செவத்தம்மா யார்ன்னு இப்பதான் தெரிந்தது..//

      ஹைய்யோ, தெரிஞ்சுக்கிட்டீங்களா?

      அப்போ செவத்தம்மான்னு குடுகுடுப்பைக்காரன் சொன்னது கரெக்ட் தானா? மேனகா. நிஜமாலுமே செவத்தம்மா தானா? ;)

      //ஜெமாமி அறுசுவையிலிருந்தே எனக்கு தெரியும் மிகவும்
      இனியவர்.//

      கேட்கவே எனக்கும் சந்தோஷமாக உள்ளது. ;)))))
      மேனகா வாயால் இதைக்கேட்க மேலும் இனிமையாக உள்ளது.

      //அவர்களுக்கு இனிய 60 ஆம் மணநாள் வாழ்த்துக்கள், அவர்களை வணங்குகிறேன்...//

      வணங்கியது + வாழ்த்தியது இரண்டுக்கும் என் அன்பான நன்றிகள்.

      [இது அவர்களின் 60ஆம் மணநாள் அல்ல. ஜெயந்தியின் கணவருக்கு 60ஆம் பிறந்தநாள் மட்டுமே.]

      -=-=-=-

      S.Menaga August 16, 2013 at 4:15 AM

      //சஷ்டியப்த பூஜை பற்றிய செய்திகளை ஓரளவுக்கு தெரிந்திருந்தாலும் தங்கள் பதிவின் மூலம் மேலும் அறிந்துக்கொண்டேன், நன்றி ஐயா!!//

      மிகவும் சந்தோஷம் மேனகா.

      -=-=-

      //தங்களின் இராஜராஜேஸ்வரி அஷ்டகம் கிடைக்கபெற்றதில் மிக்க மகிழ்ச்சி, இன்றிலிருந்து படிக்க போகிறேன்..நன்றி ஐயா!!//

      மிக்க மகிழ்ச்சிம்மா. நல்லது. தொடர்ந்து படியுங்கோ.. பாராட்டுக்கள்.

      -=-=-

      //4 ஆம் பிறை பார்த்தவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் தீராத துயரம் தீரும்.27 வருடங்களாக எங்கள் அம்மா கடைபிடித்து வராங்க,நாங்களும் இன்றுவரை அவ்விரதத்தை தொடர்கிறோம்...//

      ஆஹா, கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      -=-=-

      S.Menaga August 16, 2013 at 4:17 AM

      //எங்கள் இல்லத்திற்க்கு எப்ப வர்றீங்கன்னு சொல்லுங்க, வெஜ் விருந்து செய்து அசத்திடுறேன்...//

      மேனகா எப்போது சுத்த சைவமாக மாறுகிறாளோ, எப்போது நான்வெஜ் ஐட்டம்ஸ் பற்றி தன் பதிவில் எழுதுவதை சுத்தமாக நிறுத்துகிறாளோ, அன்று நான் கட்டாயமாக தங்கள் இல்லத்திற்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவேன்.

      பயப்படாதீங்கோ. என் விருப்பத்தை மறை முகமாக வெளிப்படுத்தியுள்ளேன், மேனகா. முயன்றால் நம்மால் முடியாதது எதுவுமே இல்லை.

      //தங்கள் அன்பான‌ கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா!!என்னை மேலும் உற்சாகமூட்டுகிறது...//

      உற்சாக்ம் தொடர்ந்து அளிக்கப்படும், எனக்கு உற்சாகம் இருக்கும்வரை.. வாழ்த்துகள் மேனகா.

      S.Menaga August 16, 2013 at 4:17 AM

      டேஷ்போர்டில் உங்களின் இந்த பதிவு வேலை செய்யவில்லை, லிங்கினை சரி செய்யவும் ஐயா...//

      டேஷ் போர்டில் என்னுடைய பல பதிவுகள் தோன்றாமலேயேதான் உள்ளன. அதற்கு நான் என்ன செய்யணும் என எனக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு எனக்கு கணினியில் தொழில் நுட்ப அறிவும் இல்லை. உதவிட ஆளும் அருகில் இல்லை.

      அதனால் தான் உங்களைப்போன்ற ஒருசிலருக்கு மட்டும் மெயில் மூலமோ அல்லது பின்னூட்டப்பெட்டி மூலமோ தகவல் அளித்து வருகிறேன்.

      தொடர்ச்சியாக நான்கு பின்னூட்டங்கள் கொடுத்துள்ளதற்கு நன்றிகள், மேனகா.

      அன்புடன் கோபு

      நீக்கு
  46. சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் திரு. ரமணி மற்றும் திருமதி ஜெயந்தி இருவருக்கும் அன்பின் வணக்கங்கள். எல்லாம் வல்ல சிவம் எல்லா நலன்களையும் அருள்வதாக!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜ் சார்
      உங்கள் வாழ்த்துக்களுக்கும், வணக்கங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
    2. துரை செல்வராஜூ August 16, 2013 at 4:27 AM

      வாருங்கள், வணக்கம்.

      //சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் திரு. ரமணி மற்றும் திருமதி ஜெயந்தி இருவருக்கும் அன்பின் வணக்கங்கள்.//

      மிக்க நன்றி.

      நீக்கு
  47. சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் திரு. ரமணி மற்றும் திருமதி ஜெயந்தி இருவருக்கும் நல்வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் பெற்று நீடுழி வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உனகள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    2. kasiviswanath ramanathan August 16, 2013 at 4:57 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் திரு. ரமணி மற்றும் திருமதி ஜெயந்தி இருவருக்கும் நல்வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் பெற்று நீடுழி வாழ்க வளமுடன்.//

      தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
  48. நோன்பை முடித்துக் கொண்டு பார்த்தால் என் அன்புப்பெண் ஜெயந்தி
    அவர் கணவர் திரு ரமணி அவர்களுக்கும் ஷஷ்டியப்த பூர்த்தி விழா
    சீதனங்களும்,ஆசிகளும், அணி வகுத்துக் கொடுத்திருப்பதைப் பார்த்து
    மிக்க ஸந்தோஷம். நானும் ஒரு பருப்புத் தேங்காய்த் தட்டுடன் உடன் வருவதாகக் கற்பனை விரிந்தது.
    தம்பதிகளிருவரும்,மேன் மேலும் பெயரும் புகழும் பெற்று,உடல்நலத்துடன் பல விழாக்களைக் கொண்டாடி தீர்காயுளோடு
    இருக்க , குடும்பம் செழிக்க,யாவரும் நலமுடன்உயர்ந்த நிலைகளை அடைய எல்லாம் வல்ல பசுபதீசுவரரின் அருளை வேண்டிப் பிரார்த்திக்கிறேன். எங்களுடைய, ஆசிகளும் அன்பும் அவர்கள் குடும்பத்திற்கு. அண்ணாவாக அளித்த சீர் வரிசைகள், அன்புப் பரிசுகள்
    நல்ல மனமுடைய உங்களுக்கும் வாழ்த்துகள். அன்புடனும், ஆசியுடனும்






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோன்பை முடித்துக் கொண்டு பார்த்தால் என் அன்புப்பெண் ஜெயந்தி அவர் கணவர் திரு ரமணி அவர்களுக்கும் ஷஷ்டியப்த பூர்த்தி விழா சீதனங்களும்,ஆசிகளும், அணி வகுத்துக் கொடுத்திருப்பதைப் பார்த்து மிக்க ஸந்தோஷம். நானும் ஒரு பருப்புத் தேங்காய்த் தட்டுடன் உடன் வருவதாகக் கற்பனை விரிந்தது. //

      பருப்புத் தேங்காய் தட்டுடன் காமாட்சி அம்மா. கற்பனை செய்து பார்த்தேன். மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

      காமாட்சி அம்மா, எனக்கு ஒரு வருத்தமும், குற்ற உணர்வும் உண்டு. உங்கள் வலைத் தளத்திற்கு அடிக்கடி வர முடியவில்லையே என்று. கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது வர முயற்சிக்கிறேன்.

      உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் போது எனக்கு ஒரு சின்ன பெண் குழந்தை சொல்வதைப் படிப்பது போல் இருக்கும்.

      உங்களை குறிப்பிட்டு ஒரு சிறுகதை கூட எழுதி வைத்திருக்கிறேன்.

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா.

      வணக்கத்துடன்
      ஜெயந்தி ரமணி

      நீக்கு
    2. Kamatch iAugust 16, 2013 at 6:05 AM

      வாங்கோ மாமி, அநேக நமஸ்காரங்கள்.

      //நோன்பை முடித்துக் கொண்டு பார்த்தால் என் அன்புப்பெண் ஜெயந்தி அவர் கணவர் திரு ரமணி அவர்களுக்கும் ஷஷ்டியப்த பூர்த்தி விழா. சீதனங்களும்,ஆசிகளும், அணி வகுத்துக் கொடுத்திருப்பதைப் பார்த்து மிக்க ஸந்தோஷம். நானும் ஒரு பருப்புத் தேங்காய்த் தட்டுடன் உடன் வருவதாகக் கற்பனை விரிந்தது. //

      இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. உங்கள் கற்பனையும் மிக அழகானது தான்.

      //தம்பதிகளிருவரும்,மேன் மேலும் பெயரும் புகழும் பெற்று, உடல்நலத்துடன் பல விழாக்களைக் கொண்டாடி தீர்காயுளோடு இருக்க, குடும்பம் செழிக்க, யாவரும் நலமுடன் உயர்ந்த நிலைகளை அடைய எல்லாம் வல்ல பசுபதீசுவரரின் அருளை வேண்டிப் பிரார்த்திக்கிறேன். எங்களுடைய, ஆசிகளும் அன்பும் அவர்கள் குடும்பத்திற்கு. //

      மிக்க மகிழ்ச்சி, மாமி.

      //அண்ணாவாக அளித்த சீர் வரிசைகள், அன்புப் பரிசுகள்
      நல்ல மனமுடைய உங்களுக்கும் வாழ்த்துகள். அன்புடனும், ஆசியுடனும்//

      ரொம்ப ரொம்ப சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மனம் நிறைந்த ஆசிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மாமி. அன்புடன் கோபு

      நீக்கு
  49. // ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆசீர்வாதத்தில்
    தம்பதியினராகிய தாங்கள் இருவரும்
    சகலவிதமான செளபாக்யங்களுடன், நீடூழி வாழ்ந்து
    பீமரதஸாந்தி, ஸதாபிஷேகம், கனகாபிஷேகம்
    போன்ற விழாக்களையும் கொண்டாடி மகிழ வேண்டும் என
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு
    அடியேன் நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன். //

    நானும் அவ்வண்ணமே வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டன் August 16, 2013 at 6:38 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      *****ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆசீர்வாதத்தில்
      தம்பதியினராகிய தாங்கள் இருவரும்
      சகலவிதமான செளபாக்யங்களுடன், நீடூழி வாழ்ந்து
      பீமரதஸாந்தி, ஸதாபிஷேகம், கனகாபிஷேகம்
      போன்ற விழாக்களையும் கொண்டாடி மகிழ வேண்டும் என
      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு
      அடியேன் நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன்.*****

      //நானும் அவ்வண்ணமே வேண்டுகிறேன்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், வேண்டுதலுக்கும் மிக்க நன்றி ஐயா. குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் சேர்ந்து சாப்பிட்ட மகிழ்ச்சி அளிக்கிறது, ஐயா. ;)

      நீக்கு
    2. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆசீர்வாதத்தில்
      தம்பதியினராகிய தாங்கள் இருவரும்
      சகலவிதமான செளபாக்யங்களுடன், நீடூழி வாழ்ந்து
      பீமரதஸாந்தி, ஸதாபிஷேகம், கனகாபிஷேகம்
      போன்ற விழாக்களையும் கொண்டாடி மகிழ வேண்டும் என
      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு
      அடியேன் நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன்.*****//

      திரு குட்டன் ஐயா, உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  50. ஸ்ரீ வர்ச்சஸ்வ மாயுஷ்ய மாரோக்யமாவிதாத் சோபமானம் மஹீயதே
    தான்யம் தனம் பசும் பஹுபுத்ர லாபம் சதஸம்வத்ஸரம் தீர்க்கமாயு:

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை பித்தன் August 16, 2013 at 7:50 AM

      வாங்கோ ஸ்வாமீ, அநேக நமஸ்காரங்கள்.

      //ஸ்ரீ வர்ச்சஸ்வ மாயுஷ்ய மாரோக்யமாவிதாத் சோபமானம் மஹீயதே ... தான்யம் தனம் பசும் பஹுபுத்ர லாபம் சதஸம்வத்ஸரம் தீர்க்கமாயு://

      ஆஹா, சரியான நேரத்தில் சரியான இடத்துக்கு அன்புடன் வருகை தந்து ’ஆசீர்வாத பஞ்சாதி’ சொல்லி அருளியுள்ளது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினைத்தருகிறது.

      மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், ஸ்வாமீ. ;)

      நீக்கு
    2. திரு சென்னை பித்தன் அவர்களுக்கு

      என் சிரம் தாழ்ந்த நன்றியுடன் கூடிய வணக்கங்கள்.

      நீக்கு
  51. அன்போடு இட்ட பகிர்வும் தங்கள்
    அகம் மகிழ்ந்து வாழ்த்திய வாழ்த்தும்
    நிறைந்த நற் பண்பிற்கு இலக்கணமாய்
    நின்றது என் நெஞ்சினிலும்....!! வாழ்த்துக்கள் ஐயா

    இனிய நல் வாழ்த்துக்களுடன் என் வாழ்த்துக்களும்
    இணைவதில் பெருமை கொள்கின்றேன் இந்நாளில் .
    (மிக்க நன்றி கோபாலகிருஸ்ணன் ஐயா அழைப்பிற்கு .)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ambal adiyal August 16, 2013 at 8:18 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //அன்போடு இட்ட பகிர்வும் தங்கள்
      அகம் மகிழ்ந்து வாழ்த்திய வாழ்த்தும்
      நிறைந்த நற் பண்பிற்கு இலக்கணமாய்
      நின்றது என் நெஞ்சினிலும்....!! வாழ்த்துக்கள் ஐயா

      இனிய நல் வாழ்த்துக்களுடன் என் வாழ்த்துக்களும்
      இணைவதில் பெருமை கொள்கின்றேன் இந்நாளில் .
      (மிக்க நன்றி கோபாலகிருஸ்ணன் ஐயா அழைப்பிற்கு .)//

      அடியேனின் அழைப்பினை அன்புடன் ஏற்று, அம்பாளின் பிரதிநிதிபோல ’திருமதி அம்பாள் அடியாள் அவர்களே’ இங்கு வருகை தந்து, எங்களுடன் இணைந்து அழகானதோர் பாடலுடன் வாழ்த்தியுள்ளது மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது. தங்களுக்கு என் நன்றியோ நன்றிகள்.

      நீக்கு
    2. இனிய நல் வாழ்த்துக்களுடன் என் வாழ்த்துக்களும்
      இணைவதில் பெருமை கொள்கின்றேன் இந்நாளில் .//

      கவிதாயினியின் கவிதைக்கும், வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  52. //ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆசீர்வாதத்தில்
    தம்பதியினராகிய தாங்கள் இருவரும்
    சகலவிதமான செளபாக்யங்களுடன், நீடூழி வாழ்ந்து
    பீமரதஸாந்தி, ஸதாபிஷேகம், கனகாபிஷேகம்
    போன்ற விழாக்களையும் கொண்டாடி மகிழ வேண்டும் என
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு
    அடியேன் நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன்.////
    அது ஒன்று போதுமே! தகவல்கள் அனைத்தும் அருமை! பரிசுகள் பரவசப்படுத்தின! நல்லதொரு பகிர்விற்கு நன்றி!
    சஷ்டியப்த பூர்த்தி விழாக் காணும் தம்பதிகளுக்கு எங்களின் வாழ்த்துகள்! நீடூழி வாழ இறைவனை இறைஞ்சும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. August 16, 2013 at 9:21 AM

      வாங்கோ Mr. Seshadri Sir, வணக்கம்.

      *****ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆசீர்வாதத்தில்
      தம்பதியினராகிய தாங்கள் இருவரும்
      சகலவிதமான செளபாக்யங்களுடன், நீடூழி வாழ்ந்து
      பீமரதஸாந்தி, ஸதாபிஷேகம், கனகாபிஷேகம்
      போன்ற விழாக்களையும் கொண்டாடி மகிழ வேண்டும் என
      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு
      அடியேன் நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன்.*****

      //அது ஒன்று போதுமே! தகவல்கள் அனைத்தும் அருமை! பரிசுகள் பரவசப்படுத்தின! நல்லதொரு பகிர்விற்கு நன்றி!//

      மிகவும் சந்தோஷம், Sir.

      //சஷ்டியப்த பூர்த்தி விழாக் காணும் தம்பதிகளுக்கு எங்களின் வாழ்த்துகள்! நீடூழி வாழ இறைவனை இறைஞ்சும்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும், அவர்கள் நீடூழி வாழ இறைவனை இறைஞ்சும் குணத்திற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
    2. சஷ்டியப்த பூர்த்தி விழாக் காணும் தம்பதிகளுக்கு எங்களின் வாழ்த்துகள்! நீடூழி வாழ இறைவனை இறைஞ்சும்//

      திரு சேஷாத்ரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  53. ஐயா
    தங்களின் வாழ்த்துக்களுடன்
    மணிவிழா காணும் தம்பதியர்
    பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  54. ஐயா
    தங்களின் வாழ்த்துக்களுடன்
    தம்பதியர் பொற்பாதம் தொட்டு
    வணங்குகிறேன் ஆசீர்வதிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பவித்ரா நந்தகுமார் August 16, 2013 at 11:04 AM

      வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      //ஐயா
      தங்களின் வாழ்த்துக்களுடன்
      மணிவிழா காணும் தம்பதியர்
      பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்

      பவித்ரா நந்தகுமார் August 16, 2013 at 11:12 AM

      ஐயா
      தங்களின் வாழ்த்துக்களுடன்
      தம்பதியர் பொற்பாதம் தொட்டு
      வணங்குகிறேன் ஆசீர்வதிக்கவும்//

      தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அவர்களின் பொற்பாதம் தொட்டு வணங்குவதாகச் சொல்லியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். ஆசிகள்.

      பொற்பாதம் உடைய தம்பதியினரில் ஒருவரான ஜெயந்தி, தனியே வந்து தங்களை மீண்டும் ஆசீர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

      Thanks a Lot, Madam.

      நீக்கு
    2. பவித்ரா நந்தகுமார்.

      தங்களின் வாழ்த்துக்களுடன்
      தம்பதியர் பொற்பாதம் தொட்டு
      வணங்குகிறேன் ஆசீர்வதிக்கவும்//

      என் மனமார்ந்த ஆசிகளும் நன்றிகளும் உங்களுக்கும் அனைவருக்கும்.

      நீக்கு
  55. அடேங்கப்பா..அண்ணன் தங்கைக்களித்த வாழ்த்துகக்ளும்,பரிசுப்பொருட்களும் அசர வைத்து விட்டது.பிரமிப்பு மாறாமலே அன்பு ஜே மாமி தம்பதிகளை மனதார வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா August 16, 2013 at 7:29 PM

      வாங்கோ, மேடம், வணக்கம். நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அபூர்வ வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //அடேங்கப்பா.. அண்ணன் தங்கைக்களித்த வாழ்த்துகளும், பரிசுப்பொருட்களும் அசர வைத்து விட்டது. பிரமிப்பு மாறாமலே//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //அன்பு ஜே மாமி தம்பதிகளை மனதார வாழ்த்துகிறேன்.//

      தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு அவர்கள் சார்பில் நானும் நன்றி கூறிக்கொள்கிறேன். Thanks a Lot Madam.

      நீக்கு
    2. ஸாதிகா

      மனமார்ந்த நன்றிகள்.

      விரைவில் உங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.

      நீக்கு
  56. அன்பின் திரு வை.கோ சார்,

    வணக்கம். அன்புத் தங்கைக்கு அற்புதமான சீதனங்கள் கொடுத்து அசத்தி விட்டீர்கள். உங்களுக்குத் தங்கையாக பிறக்கவில்லையே என்று ஏங்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் ஐயா.

    சஷ்டியப்தபூர்த்தி காணும் தம்பதிகளுக்கு மனமார்ந்த இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நித்திலம்-சிப்பிக்குள் முத்து August 16, 2013 at 11:33 PM

      வாங்கோ ‘வல்லமை’ பொருந்திய மேடம் அவர்களே, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை ஆச்சர்யம் அளிக்கிறது + மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //அன்பின் திரு வை.கோ சார்,

      வணக்கம். அன்புத் தங்கைக்கு அற்புதமான சீதனங்கள் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.//

      ஆஹா, அசத்தலான கருத்துக்கள்.

      //உங்களுக்குத் தங்கையாக பிறக்கவில்லையே என்று ஏங்க வைத்துவிட்டீர்கள்.//

      அடடா, இப்படி ஒரே போடாகப்போட்டு என்னையே கவிழ்த்து விட்டீர்களே ! ;)))))

      // வாழ்த்துக்கள் ஐயா.//

      தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      //சஷ்டியப்தபூர்த்தி காணும் தம்பதிகளுக்கு மனமார்ந்த இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.//

      அந்த தம்பதியினருக்கு தங்களின் மனமார்ந்த + இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் + பிரார்த்தனைகளைச் சொல்லியுள்ளதற்கு, அடியேனின் நன்றிகளைக்கூறிக்கொள்கிறேன்.

      Thanks ..... Thanks a Lot, Madam.

      அன்புடன்
      பவள சங்கரி

      நீக்கு
    2. வணக்கம். அன்புத் தங்கைக்கு அற்புதமான சீதனங்கள் கொடுத்து அசத்தி விட்டீர்கள். உங்களுக்குத் தங்கையாக பிறக்கவில்லையே என்று ஏங்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் ஐயா.//

      பவள சங்கரி நாம் எல்லோருமே கோபு அண்ணனுக்கு உடன் பிறவா தங்கைகள் தான்.

      ஏக்கமே வேண்டாம். உங்களுக்கும் சரியான நேரத்தில் எல்லா சீதனங்களும் வந்து சேரும்.

      //சஷ்டியப்தபூர்த்தி காணும் தம்பதிகளுக்கு மனமார்ந்த இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.//

      உங்கள் நல் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பவள சங்கரி

      நீக்கு
  57. பதில்கள்
    1. கே. பி. ஜனா... August 17, 2013 at 12:51 AM

      வாங்கோ Mr. கே.பி.ஜனா Sir,

      //மனமார்ந்த வாழ்த்துக்கள்!//

      அன்பான வருகை + அழகான வாழ்த்துகளுக்கு, மிக்க நன்றி, சார்.

      நீக்கு
    2. திரு கே.பி. ஜனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  58. அன்பின் வை.கோ

    தங்களின் சஷ்டியப்த பூர்த்தி அழைப்பிதழே வித்தியாசமாக - 21 - 60 வயதுப் புகைப்படங்கள் அழைப்பிதழில் - 59, 60. 70. 80. 100 வயதுகளில் கொண்டாட வேண்டிய விழாக்களைப் பற்றிய விளக்கங்கள் - அத்தனையும் அருமை - தங்களின் 60 விழா பற்றிஅய் முந்தைய பதிவு நன்று - ஏற்கனவே படித்து மறுமொழி இட்டிருக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) August 17, 2013 at 12:55 AM

      வாங்கோ அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம்.

      //அன்பின் வை.கோ

      தங்களின் சஷ்டியப்த பூர்த்தி அழைப்பிதழே வித்தியாசமாக - 21 - 60 வயதுப் புகைப்படங்கள் அழைப்பிதழில் -//

      ஆம் ஐயா, திருமணத்தன்று எடுத்த புகைப்படமும், பிறகு 59 முடிந்து உக்ரஹ ஸாந்தி நடந்தபோது எடுக்கப்பட்ட படமும், அந்த சஷ்டியப்த பூர்த்தி அழைப்பிதழில் இடம்பெறுமாறு செய்தோம்.

      //59, 60. 70. 80. 100 வயதுகளில் கொண்டாட வேண்டிய விழாக்களைப் பற்றிய விளக்கங்கள் - அத்தனையும் அருமை -//

      மிகவும் சந்தோஷம் ஐயா.

      //தங்களின் 60 விழா பற்றிய முந்தைய பதிவு நன்று - ஏற்கனவே படித்து மறுமொழி இட்டிருக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      அன்புடன் கூடிய மீண்டும் வருகைக்கும், அழகுடன் கூடிய இனிய கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா. நன்றிகள்.

      நீக்கு
  59. டும் டும் ..... டும் டும் ...... டும் டும் ...... டும் டும் .....

    ஓர் முக்கிய அறிவிப்பு:
    =====================

    இங்கு அன்புடன் வருகை தந்து கருத்துக்கூறியுள்ள உங்கள் அனைவருக்கும், என் அன்புச்சகோதரி ’ஜெயந்தி ’ முதலில் பதில் அளிக்க ஆசைப்படுவதால் அவளின் [அவர்களின்] பதில்களுக்குப்பிறகே என்னால் தனித்தனியாக நன்றி கூறி பதில் தரப்படும்.

    அதனால் இந்தப்பதிவுக்கு நான் கொடுப்பதாகச் சொல்லியிருக்கும், என் பதில்களும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ‘அமுத மழை’ என்ற என் தொடரின் அடுத்த புதிய வெளியீடுகளும் சற்றே தாமதமாகலாம்.

    தயவுசெய்து பொறுத்துக்கொள்ளுங்கள் என அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பிரியமுள்ள கோபு
    17.08.2013 13.30 Hrs. [IST]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டும் டும் ..... டும் டும் ...... டும் டும் ...... டும் டும் .....

      மீண்டும் மற்றொரு அறிவிப்பு:
      ===========================

      ஜெயந்தி அவர்களுக்கு போதிய நேர அவகாசம் இல்லாமல் ஒருசில நெருக்கடியான அவசரமான கல்யாண வேலைகள் குறுக்கிடுவதால் அவர்களின் பதில் வருவதில் சற்றே தாமதம் ஏற்பட்டு வருகிறது.

      அதனால் இப்போது என்னுடைய பதில்கள் முன்னனியில் வரக்கூடும். பிறகு அவர்களும், அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போது, வருகை தந்து பதில் அளிப்பார்கள் என நம்புகிறேன்.

      பிரியமுள்ள கோபு
      20.08.2013 18.15 Hrs. [IST]

      நீக்கு
  60. தம்பதிகளுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    கோபு சார் குறிப்பிட்டபடி கனகாபிஷேகம் வரை
    அனைத்து மங்கள நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக
    நடக்க வேணுமாய அன்னை மீனாட்சியை
    வேண்டிக் கொள்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S August 17, 2013 at 1:32 AM

      வாங்கோ திரு, ரமணி, சார். வணக்கம்.

      //தம்பதிகளுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். கோபு சார் குறிப்பிட்டபடி கனகாபிஷேகம் வரை அனைத்து மங்கள நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக நடக்க வேணுமாய அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறோம்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அன்னை மீனாக்ஷியிடமான வேண்டுதல்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. ரமணி சார்

      உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  61. சஷ்டியப்த பூர்த்தி காணும் திருவாளர் ரமணி மற்றும் திருமதி ஜெயந்தி தம்பதியர்களுக்கு என் பணிவான வணக்கங்களுடன் அன்பான வாழ்த்துக்களும்!

    இதனை இங்கு அன்புடன் பகிர்ந்துகொண்ட ஐயாவுக்கும் நன்றிகள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி August 17, 2013 at 1:57 AM

      வாங்கோ ..... வணக்கம்.

      //சஷ்டியப்த பூர்த்தி காணும் திருவாளர் ரமணி மற்றும் திருமதி ஜெயந்தி தம்பதியர்களுக்கு என் பணிவான வணக்கங்களுடன் அன்பான வாழ்த்துக்களும்!//

      தங்களின் பணிவான வணக்கங்கள் + அன்பான வாழ்த்துக்களுக்கு ஜெயந்தி தம்பதியினரின் சார்பில் என் முதற்கண் நன்றிகள்.

      //இதனை இங்கு அன்புடன் பகிர்ந்துகொண்ட ஐயாவுக்கும் நன்றிகள்! வாழ்த்துக்கள்!//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நன்றிகள் + வாழ்த்துகளுக்கும், அடியேனின் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
    2. இளமதி

      உங்கள் வாழ்த்துக்களுக்கும், வணக்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    3. மனோ நலமா?
      எப்படி இருக்கீங்க.
      அறுசுவைக்கு வந்து உங்களுடன் எல்லாம் பேசி ரொம்ப நாட்களாயிற்று.

      உங்களுக்கும் உங்கள் கண‌வருக்கும் உளம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள்!! அனைத்து நலங்களும் வளங்களும் மகிழ்வும் என்றும் பொங்கிப்பெருகட்டும்!//

      உங்கள் வாழ்த்துக்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள்.

      நீக்கு
    4. கீதா சாம்பசிவம்

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  62. Ammadi....
    Veshathathukku pooituvantha kalaippu than verenna?
    Enna oru function, ena oru seeru...enna oru virunthu..
    innum oru varathukku ethaiye pasi makilalam pole......//

    Gopu sir asathipittenge ponga.....

    தம்பதியினராகிய தாங்கள் இருவரும்
    சகலவிதமான செளபாக்யங்களுடன், நீடூழி வாழ்ந்து
    பீமரதஸாந்தி, ஸதாபிஷேகம், கனகாபிஷேகம்
    போன்ற விழாக்களையும் கொண்டாடி மகிழ வேண்டும் என
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு
    அடியேன் நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன்
    thatasithu.....
    Nanum appadiye vendi kolkiren Jayanthi.
    Periyava asirvatham unkalutan irrukattum...

    viji



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji August 17, 2013 at 2:10 AM

      வாங்கோ விஜி, செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?
      கோபுவின் அன்பான வணக்கங்கள். வாழ்த்துகள், ஆசிகள்.

      //Ammadi....
      அ ம் மா டீ ஈ ஈ ஈ ஈ //

      ஏன் என்னாச்சும்மா, விஜி?

      //Veshathathukku pooituvantha kalaippu than verenna?
      விஷேசத்துக்கே போயிட்டுவந்த களைப்புத்தான் வேறென்ன?//

      களைப்பு மட்டும் தானா? களிப்பு இல்லையா? ;)))))

      //Enna oru function, ena oru seeru...enna oru virunthu..
      என்ன ஒரு விழா, என்ன ஒரு சீரு, என்ன ஒரு விருந்து !//

      என்னவோ ........ சொல்லுங்கள் ......... ! ;)))))

      //innum oru varathukku ethaiye pasi makilalam pole......
      இன்னும் ஒரு வாரத்துக்கு இதையே பேசி மகிழலாம் போல! ;) //

      அடடா, அப்படியா விஜி, சந்தோஷம்மா.

      //Gopu sir asathipittenge ponga.....
      கோபு சார் அசத்திட்டீங்க போங்க ,..... ;)//

      நிஜம்மாவா? மிக்க மகிழ்ச்சி.

      *****தம்பதியினராகிய தாங்கள் இருவரும் சகலவிதமான செளபாக்யங்களுடன், நீடூழி வாழ்ந்து பீமரதஸாந்தி, ஸதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற விழாக்களையும் கொண்டாடி மகிழ வேண்டும் என ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு அடியேன் நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன்*****

      //thatasithu..... ததாஸ்தூ

      ஆஹா, அப்படியே ஆகட்டும் என “ததாஸ்து” சொல்லியதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      //Nanum appadiye vendi kolkiren Jayanthi.
      நானும் அப்படியே வேண்டிக்கொள்கிறேன் ஜெயந்தி.//

      மிகவும் சந்தோஷம்மா, வேண்டிக்கொள்ளுங்கோ, ப்ளீஸ்ஸ்.

      //Periyava asirvatham unkalutan irrukattum...
      ஸ்ரீ பெரியவா ஆசீர்வாதம் உங்களுடன் இருக்கட்டும்.//

      அது எப்போதும் நம் எல்லோருடனும் இருக்கட்டும்.

      //viji விஜி.//

      அன்புடன்
      {விஜிக்கு வீஜீ [VG]}
      கோபு

      நீக்கு
    2. விஜி
      உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  63. Gopu Sir,
    neengal enakkum annavakkum...
    neeyabaham errukattum...
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //viji August 17, 2013 at 2:15 AM

      வாங்கோ, விஜி ..... வணக்கம்.

      Gopu Sir, கோபு சார்

      //neengal enakkum annavakkum... நீங்கள் எனக்கும் அண்ணாவாக்கும்//

      அதுதான் தெரிந்த விஷயமாச்சே. எவ்ளோ தடவை நமக்குள் அந்த பாசம் நிரூபிக்கப்பட்டுள்ளன! ;)))))

      //neeyabaham errukattum... ஞாபகம் இருக்கட்டும்.//

      எனக்கு நன்றாகவே ஞாபகம் உள்ளது, விஜி.

      ஆனால் ஒரு சின்ன சந்தேகம். அண்ணாவைப்போய் எந்தத் தங்கையாவது Sir போட்டு அழைப்பாங்களா? விஜி மேடம். ;)

      viji விஜி //

      அன்புடன் கோபு

      [ அன்புத்தங்கை விஜி - அன்பு அண்ணா வீஜீ {VG} ]

      நீக்கு
  64. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பதில் மட்டும்தானா? எங்களுக்கு விருந்து சுவீட்ட்... ஏதுமில்லையோ? அப்போ விடுங்கோ என்னை குயின் அம்மம்மா வரட்டாம் அவவின் பூட்டனை.. என் பெறாமகனை அதாவது வில்லியம் கேட்டின் மகனை, தொட்டிலில் போட:)) நான் அங்கு போகிறேன்ன்ன்Aithira, thottil function nalla nadunthutha....?
    Ungallukku sweet kitachutha?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ இதை இப்பத்தான் பார்க்கிறேன்ன்.. ஹா..ஹா..ஹா.. இல்ல.. இன்னும் ஒரு மாதமாகல்லியே:)(மீ கணக்கில புலியாக்கும்:)) 31 க்குத்தான் தொட்டிலில் கிடத்துவினமாம்:)).. எனக்கோ நேரமில்லை:) ஆனா குயின் அம்மம்மா விடுறா இல்லை:)).. முகம் கறுத்திடக்கூடாது பாருங்கோ:) அதனால எப்படியும் போயிடுவேன்:).

      நீக்கு
    2. ;))))) சரியான அலட்டல், அலம்பல், அட்டாகாசம், அதிரடி அதிரா!

      //முகம் கறுத்திடக்கூடாது பாருங்கோ:) அதனால எப்படியும் போயிடுவேன்:).//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      இங்கு இந்த செவத்தம்மா முகமும் கறுத்திடக்கூடாது, தாங்கள் அவர்களின் மடிசார் புடவைப்பதிவுக்கு கருத்திடாமல். நினைவிருக்கட்டும் ...... அதிரா. ;)

      நீக்கு
  65. அன்பு சகோதரி ஜெயந்திக்கு!

    உங்களுக்கும் உங்கள் கண‌வருக்கும் உளம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள்!! அனைத்து நலங்களும் வளங்களும் மகிழ்வும் என்றும் பொங்கிப்பெருகட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mrs.Mano Saminathan August 17, 2013 at 11:54 AM

      வாங்கோ Mrs. Mano Saminathan Madam, வணக்கம்.

      //அன்பு சகோதரி ஜெயந்திக்கு!

      உங்களுக்கும் உங்கள் கண‌வருக்கும் உளம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள்!! அனைத்து நலங்களும் வளங்களும் மகிழ்வும் என்றும் பொங்கிப்பெருகட்டும்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும், அவர்கள் சார்பில் என் முதற்கண் நன்றிகளை அடியேன் தங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  66. சாமீ 109 கமெண்ட்ஸ் இருக்கு,சோ நான் எதையும் படிக்கல,டைம் இல்ல...

    முதலில் ஜெயந்தி தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.இளமையா இருக்காங்களே!லயா குட்டீ சூப்பாரா இருக்காங்க.திருஷ்டி போட்டுங்க.

    இங்கு சாருக்கு நிறைய நட்புகள் இருக்கும்...மக்களா சார் எப்படி எல்லோரையும் கோழி குஞ்சுகளை இறகிற்குள் வைத்திருப்பது போல வைத்திருக்கார் பாருங்க.அனைவரையும் மெயிண்டைண்ட் பன்வதில் உங்களைப் போல முடியாது சார்.

    அப்பா எம்பூட்டு சீர் வரிசை!!!!!!!!வர வர பதிவிலே பரிசளிக்கும் மன்னராகிடுவிங்க போலருக்கே,

    60,70,80 வது திருமணங்கள் பற்றின குறிப்புகள் சிறப்பு,59 வயதில் புற்று நோயில் அவதிப்படும் என் அப்பாவை நினைக்கும்போது எனக்கு ஒருவித ஏக்கத்தையும் தருகின்றது.

    சார் என் கண்ணில் சரியாக நாலாம் பிறைதான் படும்.நாலாம் பிறை பார்த்தால் ஞாபக மறதி வரும்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.உங்கள் தகவல்கள் புதிதாக அறிகின்றேன்.

    இந்த பதிவின் அனைத்து பகிர்வுகளும் சிறப்பு&நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar August 17, 2013 at 6:12 PM

      வாங்கோ அன்புள்ள ஆச்சி, வணக்கம்மா ! வணக்கம்.

      //சாமீ 109 கமெண்ட்ஸ் இருக்கு, ஸோ .... நான் எதையும் படிக்கல, டைம் இல்ல...//

      இதை நான் அப்படியே நம்புகிறேன், ஆச்சி.

      உங்களுக்கு நான் கொடுக்கும் இந்த பதில் கமெண்ட்டே தேவைப்படாதோ என்னவோ? இதைப்படிக்கவும் ஆச்சிக்கு நேரம் இருக்குமோ இருக்காதோ? ஏனெனில் இது எண்ணிக்கையில்: 180

      //முதலில் ஜெயந்தி தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.//

      மிகவும் சந்தோஷம் .,.... வாழ்த்துகளுக்கு.

      //இளமையா இருக்காங்களே!

      அதானே ! ;)))))

      [இள்மையின் அந்த இரகசியம் என்னவென்று தனியே கேட்டுத் தெரிந்து கொண்டு எனக்கும் சொல்லுங்கோ, ஆச்சி]

      //லயா குட்டீ சூப்பாரா இருக்காங்க.திருஷ்டி சுற்றிப் போட்டுடுங்க.//

      குழந்தைகள் என்றாலே அப்படித்தான். நம் அமிர்தாவும் யக்‌ஷயாஸ்ரீ யும் மட்டும் என்னவாம்? உங்களை விட்டு திருஷ்டி சுற்றிப்போடச்சொன்னேன், ஞாபகம் இருக்கா?

      //இங்கு சாருக்கு நிறைய நட்புகள் இருக்கும்... மக்களா சார் எப்படி எல்லோரையும் கோழி குஞ்சுகளை இறகிற்குள் வைத்திருப்பது போல வைத்திருக்கார் பாருங்க. அனைவரையும் மெயிண்டைண்ட் பன்னுவதில் உங்களைப் போல முடியாது சார்.//

      அடடா, உங்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் அளவே கிடையாதா, ஆச்சி. இங்கு வந்து பின்னூட்டத்திலுமா...? உங்களைத்தனியா பேசிக்கிறேன்.

      //அப்பா எம்பூட்டு சீர் வரிசை!!!!!!!! வர வர பதிவிலே பரிசளிக்கும்
      மன்னராகிடுவிங்க போலருக்கே//

      செட்டிநாட்டுப்பக்கமெல்லாம், நகரத்தார்கள் இன்னும் நிறையவே சீர் வரிசை வைப்பார்களே, உங்களுக்குத்தெரியாததா .... ஆச்சி.

      //60,70,80 வது திருமணங்கள் பற்றின குறிப்புகள் சிறப்பு//

      மிகவும் சந்தோஷம்.

      //59 வயதில் புற்று நோயில் அவதிப்படும் என் அப்பாவை நினைக்கும்போது எனக்கு ஒருவித ஏக்கத்தையும் தருகின்றது.//

      Very Sorry ஆச்சி, கேள்விப்பட்ட எனக்கே மிகவும் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. விரைவில் முற்றிலும் குணமாக
      நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்வோம்.
      கவலைப்படாதீங்கோ, ஆச்சி.

      //சார் என் கண்ணில் சரியாக நாலாம் பிறைதான் படும். நாலாம் பிறை பார்த்தால் ஞாபக மறதி வரும்னு கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் தகவல்கள் புதிதாக அறிகின்றேன்.//

      அப்படியும் இருக்கலாம் ஆச்சி. ஏதேதோ ஒவ்வொரு ஊரில் ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாகச் சொல்வார்கள், தான்.

      //இந்த பதிவின் அனைத்து பகிர்வுகளும் சிறப்பு & நன்றிகள்//

      ஆச்சியின் அன்பான வருகையும் விரிவான கருத்துக்களும் மகிழ்வாக இருந்தன. ஆச்சிக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
    2. திருமதி ஸ்ரீதர்,

      //இங்கு சாருக்கு நிறைய நட்புகள் இருக்கும்... மக்களா சார் எப்படி எல்லோரையும் கோழி குஞ்சுகளை இறகிற்குள் வைத்திருப்பது போல வைத்திருக்கார் பாருங்க. அனைவரையும் மெயிண்டைண்ட் பன்னுவதில் உங்களைப் போல முடியாது சார்.//

      ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.

      முதலில் ஜெயந்தி தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.இளமையா இருக்காங்களே!லயா குட்டீ சூப்பாரா இருக்காங்க.திருஷ்டி போட்டுங்க.//

      நேர பார்த்தால் என்ன சொல்லுவீங்களோ?

      லயா குட்டி சூப்பர்தான். சந்தேகமே இல்லை. எல்லாரும் சொன்ன மாதிரி சுத்திப் போட்டுடறேன்.

      //59 வயதில் புற்று நோயில் அவதிப்படும் என் அப்பாவை நினைக்கும்போது எனக்கு ஒருவித ஏக்கத்தையும் தருகின்றது.//

      விரைவில் முற்றிலும் குணமாக
      நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்வோம்.
      கவலைப்படாதீங்கோ//

      கோபு அண்ணா சொன்ன மாதிரி ஒரு நாள் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.

      உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  67. அருமையான உறவுகளைப் பெற்றிருக்கும் திரு வைகோவுக்கும், அவரின் பரந்த உள்ளத்துக்கும் முதலில் வாழ்த்துகள். நான் வந்து பார்ப்பதற்குள்ளாக இங்கே சஷ்டி அப்த பூர்த்தியே முடிஞ்சுடுமோனு நினைச்சேன். நல்லவேளையா இன்னிக்கானும் வர முடிஞ்சது. சீர் வரிசையெல்லாம் அமர்க்களமாக உள்ளது. திருமதி ஜெயந்தி ரமணிக்கு அதே போல் சஷ்டி அப்த பூர்த்தியும் சிறப்பாக நடந்து சதாபிஷேஹமும், கனகாபிஷேஹமும் காண மனமார வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam August 18, 2013 at 2:29 AM

      வாங்கோ, வாங்கோ, நமஸ்காரங்கள்.

      //அருமையான உறவுகளைப் பெற்றிருக்கும் திரு வை கோ வுக்கும், அவரின் பரந்த உள்ளத்துக்கும் முதலில் வாழ்த்துகள்.//

      மிகவும் சந்தோஷம்.

      //நான் வந்து பார்ப்பதற்குள்ளாக இங்கே சஷ்டி அப்த பூர்த்தியே முடிஞ்சுடுமோனு நினைச்சேன். நல்லவேளையா இன்னிக்கானும் வர முடிஞ்சது.//

      ஆஹா! ’இஷ்டமித்ர பந்து ஜனங்களுடன் முன்னதாகவே வந்திருந்து’ என முன்பெல்லாம் பத்திரிகையில் போட்டு நிஜமாகவே ஓர் எதிர்பார்ப்புடன் அழைப்பார்கள். அதன்படி நீங்க சஷ்டியப்தபூர்த்திக்கு 10 நாட்கள் முன்பே வந்துட்டேள். ;))))) சந்தோஷம்.

      // சீர் வரிசையெல்லாம் அமர்க்களமாக உள்ளது.//

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி. நாலும் தெரிந்த பெரியவாளா நீங்களே சொன்னால் எல்லாமே கரெக்டாத்தான் இருக்கும்.

      //திருமதி ஜெயந்தி ரமணிக்கு அதே போல் சஷ்டி அப்த பூர்த்தியும் சிறப்பாக நடந்து சதாபிஷேஹமும், கனகாபிஷேஹமும் காண மனமார வாழ்த்துகிறோம்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும், அவர்கள் சார்பில் முதலில் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      ‘கல்யாணப்பொண்ணு கடைப்பக்கம் போனா”ன்னு ஒரு சினிமாப் பாட்டு கேள்விப்பட்டிருப்பேள். அதுபோல ஜெயந்தி இப்போ ரொம்பவும் பிஸியாக இருப்பா போலிருக்கு.

      இன்னும் அவங்க கல்யாணத்துக்கு சரியா எட்டே எட்டு நாள் தான் இருக்கு. அதனால் பிறகு வருகை தந்து உங்களுக்கு நன்றி சொல்லுவா என எதிர்பார்க்கிறேன்.

      அன்புடன் கோபு

      நீக்கு

  68. அம்பாளைப் பற்றிய இடுகை டேஷ் போர்டில் தெரிகிறது, பதிவு வரவில்லையே. ? உங்களால் தெரியவரும் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடும் தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G.M BalasubramaniamAugust 18, 2013 at 4:08 AM

      வாங்கோ ஐயா, வணக்கம் ஐயா.

      //அம்பாளைப் பற்றிய இடுகை டேஷ் போர்டில் தெரிகிறது, பதிவு வரவில்லையே. ?//

      இந்தப்பதிவு என்னால் 15.07.2013 அன்று வெளியிடப்பட்டது. ஆனால் அன்று முதல் டேஷ் போர்டில் அது தெரியவில்லை.
      திடீரென்று 4 நாட்கள் முன்பு அதாவது 16.08.2013 அன்று அது டேஷ் போர்டில் தெரிகிறது.

      ஆனால் அதன்மூலம் யாரும் உள்ளே சென்று படிக்கவும் முடியாது. இது ஏதோ கூகுள் பிரச்சனை. நம்மால் இதை
      ஒன்றும் சரி செய்யவும் முடியாது.

      நீங்க அதைப்படிக்க விரும்பினால் இதோ அதன் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/07/25.html

      இதுபோல என்னுடைய பல சிறப்புப்பதிவுகள் இதுவரை டேஷ்
      போர்டில் தெரியாமலேயே இருந்துள்ளன. உதாரணமாக திருமதி
      இராஜராஜேஸ்வரி அவர்களின் 1000 ஆவது பதிவைப்பாராட்டி நான் எழுதிய சிறப்புப் பதிவும், இதோ இந்த ஜெயந்தியின் சஷ்டியப்த பூர்த்தி பற்றி நான் எழுதியுள்ள சிறப்புப்பதிவும் கூட டேஷ் போர்டுக்கே இதுவரை வரவில்லை தான். இன்னும் ஒரு மாதம் கழித்து அவை உங்கள் டேஷ் போர்டில் தெரியும்.

      ஆனால் உள்ளே புகுந்த அதன் மூலம் படிக்க முடியாதபடி அது இருக்கும்.

      மொத்தத்தில் இவை நம்முடைய மிகப்பெரிய துரதிஷ்டங்களே என்று தான் சொல்ல வேண்டும்.

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி நான் தொடர்ச்சியாக இதுவரை 38
      பகுதிகள் கொடுத்துள்ளேன். இன்னும் நிறைய பகுதிகள் கொடுக்கவும் உள்ளேன்.

      அவற்றின் தலைப்புகளுக்கு முன்னல் நான் ஒரு சீரியல் நம்பர்
      கொடுத்து வருகிறேன். நீங்கள் இதுவரை வருகை தராத சீரியல்
      நம்பர்கள் இதோ:

      1 to 8, 10, 11 to 16, 18, 19, 25, 28 and 36 ஆகியது 20 மட்டும்.

      மீதி 18 பகுதிகளுக்கு வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். நன்றி.

      //உங்களால் தெரியவரும் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடும் தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் தம்பதியினரை
      வாழ்த்தியுள்ளதற்கும் அவர்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
    2. திரு பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு

      என் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும்

      நீக்கு
  69. ஜேமாமிக்கு!!!

    ஒவ்வொரு வாழ்த்தையும் மதித்து, கோபு அண்ணனே பதிவு போட்டார் அவரே பதிலையும் போடட்டும் என இருக்காமல், ஒவ்வொருவருக்கும் நேரமொதுக்கி, அவர்களின் வாழ்த்துக்கு மதிப்பளித்து, நன்றி கூறும், உங்கள் பெருந்தன்மையை நான் மிகவும் பாராட்டுகிறேன், இந்தக் குணம் ரொம்பவும் உயர்ந்தது, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... இப்படியே.. கீப் இட் மேல:)..

    பதிலுக்கு என் நன்றிகள்.

    அதுக்காக இந்தாங்கோ ஜெயந்தி மாமி இது உங்களுக்கே...

    http://depositphotos.com/5340181/stock-photo-Cat-lying-near-vase-with-flowers.html

    ஊசிக்குறிப்பு:
    கோபு அண்ணன், இதை சிவப்பு மையில்:) வெளியிடும்படி வேண்டப்படுகிறீங்கள்:).. இல்லையெனில்..:)) வேறென்ன.. பி.நீ:)) தான் ஏறோணும் சொல்லிட்டேன்ன்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவ்வ்வ்வ்வ் மேலே பார்த்து திடுக்கிட்டுவிட்டேன்ன்:)).. நான் ஜே மாமிக்கு கொடுத்த பூங்கொத்தை மேலே போட்டுவிட்டீங்க கோபு அண்ணன்.. மியாவும் நன்றி.

      நீக்கு
    2. athira August 18, 2013 at 11:39 AM

      //ஆவ்வ்வ்வ்வ் மேலே பார்த்து திடுக்கிட்டுவிட்டேன்ன்:)).. நான் ஜே மாமிக்கு கொடுத்த பூங்கொத்தை மேலே போட்டுவிட்டீங்க கோபு அண்ணன்.. மியாவும் நன்றி.//

      பிரித்தானியா மஹாராணியாரின் ஒரே செல்லப்பேத்தியும், மேன்மை மிக்க தலைமை நீதிபதி கனம் கோர்ட்டாரும் ஆகிய அதிராவின் உத்தரவை மீற முடியுமா?

      பிறகு பிரித்தானியா நீதி மன்றத்துக்கு அல்லவா நான் அலைய வேண்டும். இதுவரை நீதிமன்றம் / போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றின் படிகளை நான் மிதித்ததே இல்லை, அதிரா. ;)

      நீக்கு
    3. //ஆவ்வ்வ்வ்வ் மேலே பார்த்து திடுக்கிட்டுவிட்டேன்ன்:)).. நான் ஜே மாமிக்கு கொடுத்த பூங்கொத்தை மேலே போட்டுவிட்டீங்க கோபு அண்ணன்.. மியாவும் நன்றி.//

      அதிரா பூங்கொத்துக்கு நன்றி. மேலே போட்டதால் எல்லாரும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
      ஒவ்வொரு வாழ்த்தையும் மதித்து, கோபு அண்ணனே பதிவு போட்டார் அவரே பதிலையும் போடட்டும் என இருக்காமல், ஒவ்வொருவருக்கும் நேரமொதுக்கி, அவர்களின் வாழ்த்துக்கு மதிப்பளித்து, நன்றி கூறும், உங்கள் பெருந்தன்மையை நான் மிகவும் பாராட்டுகிறேன், இந்தக் குணம் ரொம்பவும் உயர்ந்தது, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... இப்படியே.. கீப் இட் மேல:)..//

      பெருந்தன்மையா? இப்படி ஒரு கௌரவத்தை எனக்குக் கொடுத்த கோபு அண்ணனுக்கு நான் காட்டும் நன்றிக் கடன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

      என் வலைத்தளமும் ஏதோ கொஞ்சூண்டு எல்லாருக்கும் தெரிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் கோபு அண்ணா தான்.

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  70. வணக்கம்
    ஐயா

    உங்களின் பரந்த மனசு பதிவில் புரிகிறது வலைப்பூவின் ஊடாக வந்த உங்கள் அன்புச்சகோதரியை பாராட்டிய விதம் மிக அருமை தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அத்தோடு அருமையான பதிவை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2008rupan August 19, 2013 at 3:39 AM

      //வணக்கம், ஐயா//

      வாங்க வணக்கம். இந்த என் பதிவு டேஷ் போர்டில் தோன்றாமல் இருந்தும், நான் தங்களுக்கு ஏதும் தகவல் எப்போதும் கொடுக்கும் வழக்கமே இல்லாமல் இருந்தும், உங்கள் பதிவுகள் பக்கம் நான் வராமலேயே இருந்தும் கூட, தாங்கள் இங்கு வருகை தந்திருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

      //உங்களின் பரந்த மனசு பதிவில் புரிகிறது வலைப்பூவின் ஊடாக வந்த உங்கள் அன்புச்சகோதரியை பாராட்டிய விதம் மிக அருமை தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அத்தோடு அருமையான பதிவை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் நன்றி ஐயா. -நன்றி--அன்புடன்--ரூபன்-//

      மிக்க நன்றி. முடிந்தால் இதற்கு முந்திய சிறப்புப்பதிவினையும் படித்துப்பாருங்கள். அதுவும் டேஷ் போர்டில் தோன்றவில்லை.

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

      நீக்கு