என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

ஆயிரம் நிலவே வா ! ... ... ... ... ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !!

By
வை. கோபாலகிருஷ்ணன்


மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி

நம் அன்புக்கும், 
மரியாதைக்கும் உரிய

தெய்வீகப்பதிவர்
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்

தனது வெற்றிகரமான 
ஆயிரமாவது [1000th POST] பதிவினை 
இன்று செவ்வாய்க்கிழமை
இந்திய நேரம் காலை 5 மணிக்கு வெளியிடுகிறார்கள்.

 


2
ஸ்ரீராமஜயம்


 
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள்

[விளக்கேற்றி வைத்து, வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது 
ஆதிசங்கரர் அருளிய இந்த வெகு அழகான 
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்தைச் 
சொல்லி வந்தால் ஸர்வ மங்களமும் கிட்டுவது நிச்சயம்]


 
1

அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி
காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி !
ஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!

2

அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த ஸந்தாயிநீ
வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலிநீ !
கல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம் ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!



3

அம்பா நூபுர ரத்ன கங்கணதரீ கேயூர ஹாராவளீ
ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ரஞ்ஜிதா !
வீணா வேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!




4

அம்பா ரெளத்ரிணீ பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மனோஜ்வலா!
சாமுண்டாச்ரித ரஷபோக்ஷ ஜனநீ தாக்ஷாயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!



5

அம்பா சூலதனு: குசாங்குசதரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா !
மல்லாத் யாஸுர முக தைத்ய தமனீ மாஹேஸ்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!



6

அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம் சோபிதா
காயத்ரீ ப்ரணவாக்ஷராம் ருதரஸா பூர்ணாநு ஸந்தீக்ருதா !
ஓங்காரீ வினதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!




7

அம்பா சாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யா வை ஜகன்மோகினீ !
யா பஞ்ச ப்ரணவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!




அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய! படேத்
அம்பாலோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம் !
அம்பா பாவன மந்த்ர ராஜபடானாத் தந்தேச மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!



 



  


வாராய் என் தோழி வாராயோ ! 
மகத்தான வெற்றி விழாப்பந்தல் 
காண வாராயோ!!




திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு 
என் அன்பான பாராட்டுக்கள்







மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்






மேலும் மேலும் தொடர்ந்து நீங்கள் 
எழுத்துலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் 
பல்வேறு வெற்றிகளைப்பெற்று 
புகழின் உச்சியினை அடைய 
உளமாற வாழ்த்துகிறேன்.


செளபாக்யவதி 
இராஜராஜேஸ்வரி
அவர்களே !

A L W A Y S  






வெற்றி விழாவுக்கான அழைப்பிதழ்



இந்த என் பதிவினைப்படிக்கும் அனைவரும் 
தயவுசெய்து  இங்கும் ஆஜர் கொடுத்துவிட்டு 
மறக்காமல் 
திருமதி இராஜராஜேஸ்வரி 
அவர்களின் வலைத்தளத்திற்குச்சென்று 
வாழ்த்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விழா நடக்குமிடம் செல்லப்பாதை இதோ:
http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_13.html






I request all my Friends and Followers 
to kindly offer your Valuable Comments 
not only here in my post but also in 
Mrs. Rajarajeswari Madam's post 
with your kind Greetings 
for Her Very Successful 
1000th Post 
Released Today. 

Link to Reach Her Post : 

http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_13.html


















வெற்றி விழாவினை வாழ்த்தச்செல்லும் முன் 
தயவுசெய்து விருந்து சாப்பிட்டு விட்டுச்செல்லுங்கள்.


 






 


























தங்கள் அனைவரின் கவனத்திற்காக

செளபாக்யவதி: இராஜராஜேஸ்வரி அவர்கள் 
பற்றிய ஒரு சிறுகுறிப்பு

ஞானத்தில் சரஸ்வதி தேவி;செல்வச்செழிப்பினில் மஹாலக்ஷ்மி; ஆற்றலில் ஆதி பராசக்தி என முப்பெரும் தேவிகளின் தெய்வாம்சங்களையும் ஒருங்கே கொண்டவர்கள் தான் இந்த செளபாக்யவதி இராஜராஜேஸ்வரி அவர்கள்.

இவர்கள் வலையுலகில் புகுந்து முதல் பதிவு 

வெளியிட்ட தேதி:    21.01.2011 

இன்றைய தேதி:       13.08.2013 

இடைப்பட்ட நாட்களோ  936 மட்டுமே !  

936 நாட்களில் 1000 பதிவுகள் கொடுத்து மிகப்பெரிய சரித்திர சாதனை புரிந்துள்ளார்கள், இந்த பதிவுலக சாதனைப் பெண்மணி.

இவர்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் ஏனோ தானோ பதிவுகள் அல்ல.

ஒவ்வொரு பதிவும் உலகத்தரம் வாய்ந்த படங்கள் நிறைந்தவை..

இவர்கள் தரும் தலைப்புகள் மிகவும் அழகானவை.

உள்ளே தந்திடும் செய்திகளோ விளக்கங்களோ ஏராளமானவை மட்டுமல்ல, தாராளமான நீளம், அகலம், ஆழம் நிறைந்தவை.

ஆயிரம் பதிவுகளுமே, ஆயிரம் பெளர்ணமி நிலவாக ஜொலிப்பவை. 

படிப்போர் மனதுக்கு எப்போதுமே குளுமை தரக்கூடியவை.

அதனால் தான் நான் இந்த என் பதிவின்  தலைப்பினை 

“ஆயிரம் நிலவே வா .... 
ஓர் .... ஆயிரம் நிலவே வா” 

என்று கொடுத்துள்ளேன்.

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளில் 90% ஆன்மிக விஷயங்களே நிரம்பி உள்ளதாகக் கூறப்படுவது உண்மையாயினும், ஆன்மிகக்  கலப்பு அதிகம்  இல்லாமலும் இவர்கள் பல பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். 

அவற்றில் என்னை, மிகவும் கவர்ந்து, என் மனதைக்கொள்ளை கொண்ட பதிவுகளாக கீழ்க்கண்ட 35 பதிவுகளை அடையாளம் காட்டிட விரும்புகிறேன். 

இவற்றில் ஏதாவது ஒரு பதிவினைத் திறந்து  படித்துப்பார்த்தால் உங்களுக்கே இவர்களின் தனித்திறமை என்னவென்று புரியக்கூடும்.



1] யானை விளையாட்டு

2] மிடுக்காய் கடுக்காய்

3] பஞ்சவர்ணக்கிளிப்பூ

4] கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச்சாரல்

5] வியத்தகு விமான நிலையங்கள்.

6] கை வண்ணம் கலை வண்ணம்

7] கண்ணாடிப்பாலமும் தொட்டிப்பாலமும்

8] அன்பு நண்பனுக்கு ஆராதனை

9] ஆஹா, ஹாங்காங்

10] இரயில் பயணங்களில்

11] புதுமை புதுமை கொண்டாட்டம்

12] வானில் வண்ணக்கோலங்கள்

13] பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம்.

14] மிஞ்சிய பலன் தரும் இஞ்சி

15] பந்தாட்ட யானைகள்

16] கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்.

17] லயிக்க வைக்கும் லங்காவி

18] பட்டையின் பராக்கிரமம்

19] ஹாங்காங் நோவாவின் கப்பல்

20] பூப்பூவாய்ப் பூத்த புதுப்பூக்கள்

21] மலர்களே மலர்களே

22] உல்லாச உலகம்

23] கருத்தான கருவேப்பிலை

24] தேன் மதுரத் தேன் சிட்டுக்கள்

25] உலக பொம்மலாட்ட தினம் 

26] நிஷாகந்தி - பூப்பூக்கும் ஓசை

27] பஞ்ச வர்ணக்குருவிகள்

28] செல்லப்பிராணிகள்

29] கடலுக்குள் கலாட்டா

30] சர்வ தேச யானைகள் திருவிழா

31] பட்டத்திருவிழா

32] பாசப்பறவைகள்.

33] பூமரங்கள் வீசும் சாமரங்கள்

34] பச்சைக்கிளிகள் பரவும் பக்த அனுமன் !

35] கடல் பசுக்கள்


நேரம் தவறாமை, அபார விஷய ஞானம், யானைபோன்ற ஞாபகசக்தி, தேனீ போன்ற சுறுசுறுப்பு, வாசிப்பதிலும் எழுதுவதிலும் அதீத ஆர்வம், ஆத்மார்த்தமான ஈடுபாடு, தனித்தன்மை, தனித்திறமை, பேராற்றல், அமைதியான ஸாத்வீகமான பெருந்தன்மை போன்ற எல்லா மென்மையான மேன்மையான நற்குணங்களும் ஒருங்கே அமைந்து, நிரம்பி வழியும் அதிபுத்திசாலியான இவர்களை என்னால் எப்போதும் ஓர் பிரத்யக்ஷ அம்பாளாகவே நினைத்து மகிழ முடிகிறது. 

இவர்களைப்பற்றியும் இவர்களுடைய வலைத்தளத்தினைப் பற்றியும் வலைச்சரத்தில் பல ஆசிரியர்கள், பலமுறை பாராட்டிப்பேசி கெளரவித்துள்ளனர். 

இவர்களே ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றிய போது, இதுவரை வலைச்சர ஆசிரியராக இருந்த யாருமே செய்யாத சரித்திர சாதனையாக, மிகப் பெரும்பாலான எண்ணிக்கையில் [200க்கும் மேற்பட்ட] பதிவர்களை, அடையாளம் காட்டி, அறிமுகம் செய்து அசத்தியுள்ளார்கள். 

வலையுலகிலும், வல்லமையிலும், மூன்றாம் கோணத்திலும், லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையிலும் எழுதி, அந்தத்தளங்களில் அவர்களில் பலரால்  அவ்வப்போது நடத்தப்பட்ட பல [சிறுகதை + கட்டுரை + கவிதை] போட்டிகளில் பங்கேற்று பலமுறை, பாராட்டுக்களையும், பரிசினையும் வென்று குவித்துள்ளார்கள்.

நிறைய தொடர்பதிவுகளும் வித்யாசமான முறையில் அழகாக எழுதியுள்ளார்கள்.

இவர்கள் இதுவரை எழுதி வெளியிட்டுள்ள அனைத்து 1000 பதிவுகளிலும் என்னுடைய பின்னூட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்பதில் என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 

அதுபோல நான் இதுவரை வெளியிட்டுள்ள என்னுடைய அனைத்துப் பதிவுகளிலும் இவர்களின் பின்னூட்டங்கள் தவறாமல் இடம் பெற்று எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் அளித்துள்ளன.

இதுபோன்றதொரு ஆச்சர்யமானவரும், அதிசயமானவரும், நல்ல மனதுக்காரரும், பெருந்தன்மையானவரும்,அதிபுத்திசாலியும், என் நலம் விரும்பியும் ஆன ஒரு பதிவரின் நட்பினை வலையுலகம் மூலம் எனக்கு அடையாளம் காட்டியுள்ள ஆண்டவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

செளபாக்யவதி இராஜராஜேஸ்வரி அவர்களின் புகழையும், தனித்திறமைகளையும் பற்றி, நான் மேலும் தொடர்ச்சியாக இங்கு சொல்ல ஆரம்பித்தால், அவற்றை முடிப்பதற்குள்  நீண்ட நேரம் ஆகி, இன்றைய பொழுதே போய் நாளைய பொழுது விடிந்து விடும். 

அப்புறம் 1000 என்ற சிறப்புப்பதிவு முடிந்து 1001 என்ற பதிவினை அவர்கள் வெளியிட்டு விடுவார்கள். 

அதனால் நாம் உடனே இப்போதே அவர்களின் பதிவுக்குச் செல்வோம் ... ஜூஸ் பருகிவிட்டு .... ஜில்லுன்னு ..... சீக்கரமா ...... கிளம்புங்கோ ! 



சொகுசுப்பேருந்துகள் இதோ 
உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கின்றன !







வெற்றி விழாவுக்கான மொய்ப்பணத்தைத் 
தங்கள் சார்பில் மொத்தமாக 
நானே கொடுத்துவிடுகிறேன் !


தாங்கள் தயவுசெய்து அவர்களை வாழ்த்தி
அவர்களின் வலைத்தளத்தில் 
பின்னூட்டம்  கொடுத்தால் அதுவே போதும். ;)))))









இங்கு அன்புடன் வருகை தந்து 
கருத்துக்கூறிடும் அனைவருக்கும், 
என்னால் தனித்தனியாக 
நன்றி கூறி பதில் தரப்படும்.

மேலும் ஓர் முக்கிய அறிவிப்பு

வரும் 16.08.2013 
ஆடி வெள்ளிக்கிழமை
காலை 6 மணிக்கு

”அறுபதிலும் ஆசை வரும்!”

என்ற தலைப்பில் 
ஓர் சிறப்புப்பதிவு 
வெளியாக உள்ளது

அதையும் 
காணத் தவறாதீர்கள்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

13.08.2013 செவ்வாய்க்கிழமை



226 கருத்துகள்:

  1. இதோ நானும் கிலம்பி விட்டேன் திருமதி ராஜராஜெஸ்வரியின் பதிவிற்கு. அவர்கலுடைய 1000வது பதிவைப் பற்றீ இவ்வலவு விளக்கமாக பதிவ்ட்டதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam August 12, 2013 at 12:41 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இதோ நானும் கிளம்பி விட்டேன் திருமதி ராஜராஜேஸ்வரியின் பதிவிற்கு.//

      நீங்க எவ்வளவு அவசரமாகக் கிளம்புகிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

      ’அவசரத்தில் அண்டாவும் கை கொள்ளாது’ என்று ஓர் பழமொழி உண்டு. அதுபோல அவசரத்தில் நிறைய எழுத்துப்பிழைகளை என்னால் காணமுடிந்தது. ;)

      //அவர்களுடைய 1000வது பதிவைப் பற்றி இவ்வளவு விளக்கமாக பதிவிட்டதற்கு நன்றி சார்.//

      தங்களின் அன்பான உடனடி முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
      மனம் நிறைந்த நன்றிகள்..!

      நீக்கு
  2. நேரம் தவறாமை, அபார விஷய ஞானம், யானைபோன்ற ஞாபகசக்தி, தேனீ போன்ற சுறுசுறுப்பு, வாசிப்பதிலும் எழுதுவதிலும் அதீத ஆர்வம், ஆத்மார்த்தமான ஈடுபாடு, தனித்தன்மை, தனித்திறமை, பேராற்றல், அமைதியான ஸாத்வீகமான பெருந்தன்மை போன்ற எல்லா மென்மையான மேன்மையான நற்குணங்களும் ஒருங்கே அமைந்து, நிரம்பி வழியும் அதிபுத்திசாலியான இவர்களை என்னால் எப்போதும் ஓர் பிரத்யக்ஷ அம்பாளாகவே நினைத்து மகிழ முடிகிறது. //

    நானும் அப்படித்தான் நினைப்பேன் தெய்வீக அருள் இருந்தால் தான் இப்படி தங்கு தடங்கல் இன்றி எழுத முடியும் தினமும். தினம் தெய்வங்களின் அழகிய படங்களும் சிறப்பான செய்திகளும் தருவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே!

    அது மட்டும் அல்லாமல் எல்லோர் பதிவுகளை வாசித்து உற்சாகம் தரும் பின்னூட்டங்களும் சோர்வில்லாமல் தருபவர்.
    அவர்களுக்கு நீங்கள் சிறப்பு பதிவு தந்து வாழ்த்தியமைக்கு எங்கள் சார்பில் நன்றிகள் உங்களுக்கு.
    மிக சிறப்பான மகிழ்ச்சியான பகிர்வு.
    வாழ்த்துக்கள் சார்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு August 12, 2013 at 1:06 PM

      வாங்கோ, வணக்கம்.

      ***** நேரம் தவறாமை ...... மகிழ முடிகிறது *****

      //நானும் அப்படித்தான் நினைப்பேன் தெய்வீக அருள் இருந்தால் தான் இப்படி தங்கு தடங்கல் இன்றி எழுத முடியும் தினமும். தினம் தெய்வங்களின் அழகிய படங்களும் சிறப்பான செய்திகளும் தருவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே! அது மட்டும் அல்லாமல் எல்லோர் பதிவுகளை வாசித்து உற்சாகம் தரும் பின்னூட்டங்களும் சோர்வில்லாமல் தருபவர்.//

      ஆமாம். உண்மைதான் மேடம்.

      //அவர்களுக்கு நீங்கள் சிறப்பு பதிவு தந்து வாழ்த்தியமைக்கு எங்கள் சார்பில் நன்றிகள் உங்களுக்கு.//

      சந்தோஷம் மேடம். தங்கள் நன்றிகளுக்கு என் நன்றிகள்.

      //மிக சிறப்பான மகிழ்ச்சியான பகிர்வு. வாழ்த்துக்கள் சார்.//

      ;))))) மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  3. மேலும் மேலும் தொடர்ந்து நீங்கள்
    எழுத்துலகிலும், குடும்ப வாழ்க்கையிலும்
    பல்வேறு வெற்றிகளைப்பெற்று
    புகழின் உச்சியினை அடைய
    உளமாற வாழ்த்துகிறேன்.//

    உங்களை போலவே நானும் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு August 12, 2013 at 1:16 PM

      *****மேலும் மேலும் தொடர்ந்து நீங்கள் எழுத்துலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் பல்வேறு வெற்றிகளைப்பெற்று புகழின் உச்சியினை அடைய உளமாற வாழ்த்துகிறேன்.*****

      //உங்களை போலவே நானும் வாழ்த்துகிறேன்.//

      ஆஹா, சந்தோஷம். அன்பான தங்களின் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  4. சுவையான இனிப்புகளுடன் நீங்கள் செய்த அடை, துனுக்கும் கொடுத்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு August 12, 2013 at 1:18 PM

      //சுவையான இனிப்புகளுடன் நீங்கள் செய்த அடை + குணுக்குகளும் கொடுத்தற்கு நன்றி.//

      அடடா, நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு. கூர்ந்து கவனித்துக் கண்டுபிடித்துள்ளீர்களே ! ;)))))

      சந்தோஷம், மேடம்.

      நீக்கு
    2. தங்கள் அருமையான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பான நன்றிகள்..!

      நீக்கு
  5. 1000 வைரங்களை படைத்த ராஜேஸ்வரி அக்காவுக்கு அன்பான வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Cherub Crafts August 12, 2013 at 1:45 PM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      “ஓடியாங்கோ ..... ஓடியாங்கோ .... அவசரம் அவசியம், உடனே ஓடியாங்கோ” என்று நான் சொன்னதும், உடனே ஓடிவருவீர்கள் என நான் எதிர் பார்க்கவே இல்லை. ;)))))

      //1000 வைரங்களை படைத்த ராஜேஸ்வரி அக்காவுக்கு அன்பான வாழ்த்துக்கள்//

      தங்கள் அக்காவை வைரமாக ..... அதுவும் 1000 வைரமாக சிறப்பித்து வாழ்த்தியதற்கு என் அன்பு நன்றிகள், நிர்மலா.

      நீக்கு
  6. அக்கா மெய்யாகவே தெய்வீக பதிவர்தான் ..அவரது பதிவுகள் அனைத்துமே AWESOME!!!!!
    ஒவ்வொன்றும் தகவல் களஞ்சியம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Cherub Crafts August 12, 2013 at 1:49 PM

      //அக்கா மெய்யாகவே தெய்வீக பதிவர்தான் ..அவரது பதிவுகள் அனைத்துமே AWESOME!!!!! ஒவ்வொன்றும் தகவல் களஞ்சியம் ..//

      மிகச்சரியாகவே சொல்லிட்டீங்கோ, நிர்மலா. மிக்க மகிழ்ச்சி.;)))))

      நீக்கு
  7. ராஜேஸ்வரி அக்காஇன்னும் நிறைய பதிவுகளை தரணும் மேலும் மேலும் தொடர்ந்து நீங்கள்
    எழுத்துலகிலும், குடும்ப வாழ்க்கையிலும்
    பல்வேறு வெற்றிகளைப்பெற்று
    புகழின் உச்சியினை அடைய
    உளமாற வாழ்த்துகிறேன்//நானும்

    இறைவனை வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Cherub Crafts August 12, 2013 at 1:54 PM

      //ராஜேஸ்வரி அக்கா இன்னும் நிறைய பதிவுகளை தரணும். //

      தருவார்கள் என நம்புவோம், நிர்மலா.

      *****மேலும் மேலும் தொடர்ந்து நீங்கள் எழுத்துலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் பல்வேறு வெற்றிகளைப்பெற்று புகழின் உச்சியினை அடைய உளமாற வாழ்த்துகிறேன்.*****

      //நானும் இறைவனை வேண்டுகிறேன்.//

      நம் இருவரின் கூட்டுப்பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் பலன் இருக்கும். மிக்க நன்றி நிர்மலா.

      நீக்கு
    2. வருகைக்கும் வாழ்த்துரைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..

      நீக்கு
  8. இப்போ பின்னூட்டம் அண்ணாவுக்கு ...அண்ணா !!!!! இவ்வளவு ஸ்நாக்ஸ் /அறுசுவை உணவுடன் மொய்யும் தந்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திட்டீங்க ...உங்கள் விருந்தோம்பல கிரேட் கிரேட் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Cherub Crafts August 12, 2013 at 1:58 PM

      இப்போ பின்னூட்டம் அண்ணாவுக்கு ...

      //அண்ணா !!!!! இவ்வளவு ஸ்நாக்ஸ் /அறுசுவை உணவுடன் மொய்யும் தந்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திட்டீங்க ....... உங்கள் விருந்தோம்பல கிரேட் கிரேட் !!!//

      ஏதோ இந்த ஏழை எளிய அண்ணனால் முடிந்தது.

      ”எத்கிஞ்சது” என்பார்கள், அதுபோலத்தான் நிர்மலா.

      நீக்கு
  9. வெறும் வார்த்தையில் பதிவுலக பின்னூட்டத்தில் நன்றி, சிறப்பு என்று வாழ்த்த மனசு இல்லை அம்மாவின் பதிவின் மூலம் நான் சில தலத்தினை தரிசித்தேன் அம்மா இன்னும் நலமுடன் பல பகிர்வு பதியவேண்டும் என்று என் சாஸ்தாவிடம் பாதம் பணிகின்றேன் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம் August 12, 2013 at 1:59 PM

      வாருங்கள் .... வணக்கம்.

      //வெறும் வார்த்தையில் பதிவுலக பின்னூட்டத்தில் நன்றி, சிறப்பு என்று வாழ்த்த மனசு இல்லை அம்மாவின் பதிவின் மூலம் நான் சில தலத்தினை தரிசித்தேன் அம்மா இன்னும் நலமுடன் பல பகிர்வு பதியவேண்டும் என்று என் சாஸ்தாவிடம் பாதம் பணிகின்றேன் ஐயா!//

      மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான அதிசயமான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அம்மாவுக்காக சாஸ்தாவிடம் தாங்கள் செய்யும் பாதம் பணிந்த பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
    2. சிறப்பான கருத்துரைகளுக்கும் சாஸ்தாவிடம் தாங்கள் செய்யும் பாதம் பணிந்த பிரார்த்தனைகளுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்,

      நீக்கு
  10. அன்பின் வை.கோ - இன்னும் 4 மணி நேரம் இருக்கிறது - சென்று பார்க்கிறேன். இத்தளத்தில் தங்களின் பாராட்டும் வாழ்த்தும் நன்று. எத்தனை எத்த்னை படங்கள் - எவ்வளவு விளக்கங்க்ள் - நீண்ட பதிவு - வரவேற்பு - வான வேடிக்கை - நாதஸ்வரம் - எத்தனை எத்த்னாஇ பலகாரங்கள் - - சாப்பாடு - பழங்கள் - காபி - மொய்ப்பணம் நன்றி அறிவிப்பு பேருந்து ஐஸ்கிரீம் - ஆன்மீகப் பதிவில்லாத 36 பதிவுகள் - அவற்றின் சுட்டிகள் - அடேங்கப்பா - எவ்வளவு பொறுமைசாலி தாங்கள் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) August 12, 2013 at 2:19 PM

      வாருங்கள் அன்பின் திரு சீனா ஐயா, வணக்கம் ஐயா.

      //அன்பின் வை.கோ - இன்னும் 4 மணி நேரம் இருக்கிறது - சென்று பார்க்கிறேன்.//

      நள்ளிரவில் இங்கு தங்களின் தரிஸனம் எனக்குக் கிடைக்கும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. தாங்கள் தற்சமயம் வெளிநாட்டுச் சுற்றுலாவில் இருப்பதில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய இலாபம் இது தான்.;)))))

      //இத்தளத்தில் தங்களின் பாராட்டும் வாழ்த்தும் நன்று. எத்தனை எத்தனைப் படங்கள் - எவ்வளவு விளக்கங்க்ள் - நீண்ட பதிவு - வரவேற்பு - வான வேடிக்கை - நாதஸ்வரம் - எத்தனை எத்தனை பலகாரங்கள் - - சாப்பாடு - பழங்கள் - காபி - மொய்ப்பணம் நன்றி அறிவிப்பு - பேருந்து - ஐஸ்கிரீம் - ஆன்மீகப் பதிவில்லாத 35 பதிவுகள் - அவற்றின் சுட்டிகள் - அடேங்கப்பா - எவ்வளவு பொறுமைசாலி தாங்கள் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா//

      அழகாக அனைத்தையும் ரஸித்து, ருசித்து, ஒவ்வொன்றையும் பாராட்டியுள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிய கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

      நீக்கு
    2. பெரியவர்கள் வாழ்த்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..

      நீக்கு
  11. சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! 1000 பதிவுகள் என்பது சாதாரண இலக்கு அல்ல! மீண்டும் வாழ்த்துக்கள் அவருக்கு!!

    வாழ்த்துப் பதிவினை அழகுற வெளியிட்ட கோபால் சார் உங்களுக்கும் நன்றிகள்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபல எழுத்தாளர் மணி மணி August 12, 2013 at 2:58 PM

      வாருங்கள், வணக்கம். பிரபல எழுத்தாளர் ’டபுள் மணி’ அவர்களே இங்கு வ்ந்து வாழ்த்தியுள்ளது, என் வியப்பினை டபுள் மடங்காக ஆக்கிவிட்டது. சந்தோஷம்.

      இருப்பினும் என்னுடைய நியாயமான நீண்ட நாள் கோரிக்கையை இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை.

      ”ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி”யாக http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
      http://gopu1949.blogspot.in/2011/06/2-of-4_20.html ஆகிய முதல் இரு பகுதிகளுக்கும் வருகை தந்து அசத்தலான பின்னூட்டங்கள் கொடுத்த நீங்கள், அதன் பிறகு அடுத்த் இரு பகுதிகளான http://gopu1949.blogspot.in/2011/06/3-of-4_22.html மற்றும்
      http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4_26.html க்கு வருகை தராமல் என்னை மிகவும் அப்செட் செய்துவிட்டீர்கள்.

      அந்த இரு பகுதிகளுக்கு ஓ.வ.நாராயணனாகவே தாங்கள் மீண்டும் உடனடியாக வருகை தரவேண்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      //சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! 1000 பதிவுகள் என்பது சாதாரண இலக்கு அல்ல! மீண்டும் வாழ்த்துக்கள் அவருக்கு!!//

      தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      //வாழ்த்துப் பதிவினை அழகுற வெளியிட்ட கோபால் சார் உங்களுக்கும் நன்றிகள்!!!!//

      நன்றிகளுக்கு என் நன்றிகள். ;))))))

      நீக்கு
  12. பதில்கள்
    1. பழனி. கந்தசாமி August 12, 2013 at 3:08 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //மனமார்ந்த பாராட்டுகள்.//

      தங்கள் அன்பான வருகைக்கும் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் என் இனிய நன்றிகள் ஐயா.

      நீக்கு
  13. அறிவுக்கு விருந்தாகும் திருக்குறள்
    கண்ணுக்கு விருந்தாகும் உங்கள்
    பதிவுக் கதம்பம்

    பேராசையை
    தூண்டுகிறீர் நாவால் சுவைக்க
    வேண்டிய பல காரங்களை
    கண் முன்னே வைத்து.
    மனதை மகிழ வைக்கும்
    செய்திகளோடு நெஞ்சை
    நெகிழ வைக்கும் நினைவுகளையும்
    அள்ளி தருகிறீர்கள்.

    மனம் திறந்து பாராட்ட
    மனம் வேண்டும்
    பாராட்ட பல காரணங்கள் வேண்டும்
    அதை பட்டியலிட்டு தந்துள்ளீர்.
    ஜகமணி வலைதள பதிவரின்
    ஆயிரமாம் பதிவு வண்ணம் கலந்து
    உயர்ந்த எண்ணங்களை விதைக்கும்
    கருவூலம் ,நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

    அவருக்கு வாழ்த்துக்கள்
    பல்லாண்டு வளமுடன் வாழ
    அவரின் பெருமைகளை
    பட்டியலிட்டு காட்டிய VGK
    வாழ்க .

    உங்கள் அஞ்சலகத்தில் பதிவைபோட்டால்
    அது அவர்களிடம் போய் சேர்ந்திடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman August 12, 2013 at 5:04 PM

      வாங்கோ அண்ணா, வணக்கம் / நமஸ்காரங்கள் அண்ணா.

      //அறிவுக்கு விருந்தாகும் திருக்குறள் கண்ணுக்கு விருந்தாகும் உங்கள் பதிவுக் கதம்பம் //

      அடடா! எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கே இதைக்கேட்க.

      //பேராசையை தூண்டுகிறீர் நாவால் சுவைக்க வேண்டிய பல காரங்களை கண் முன்னே வைத்து. மனதை மகிழ வைக்கும்
      செய்திகளோடு நெஞ்சை நெகிழ வைக்கும் நினைவுகளையும்
      அள்ளி தருகிறீர்கள். //

      மிகவும் சந்தோஷம், அண்ணா.

      //மனம் திறந்து பாராட்ட மனம் வேண்டும் பாராட்ட பல காரணங்கள் வேண்டும் அதை பட்டியலிட்டு தந்துள்ளீர்.//

      மனம் நிறையவே என்னிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது அண்ணா.

      காரணங்கள் என்று ஏதும் குறிப்பாகக் கிடையாது, அண்ணா.

      என்னையும் அறியாமல் ஏதோ ஒரு ஈடுபாடு / பிரேம பக்தி..

      கோபியர்கள் கோபாலகிருஷ்ணனிடம் கொண்டிருந்த ப்ரேம பக்தி போலவே தான் இதுவும்.

      //ஜகமணி வலைதள பதிவரின் ஆயிரமாம் பதிவு வண்ணம் கலந்து உயர்ந்த எண்ணங்களை விதைக்கும் கருவூலம் ,நான் பலமுறை கண்டிருக்கிறேன்.//

      அண்ணா சொன்னால் எதுவுமே அசத்தலாக கரெக்டாகவே இருக்கும். ’கருவூலமே தான்’. ;)))))

      நான் கருவூலத்தைக் கட்டிக்காக்கும் அதிகாரியாக இருந்தவன், ஒரு காலத்தில். இப்போது பணி ஓய்வு பெற்று விட்டேன். இன்று முதல் முழு ஓய்வு பெற்றுவிடலாமா என்ற ஓர் ஆழ்ந்த யோசனையில் உள்ளேன்.

      //அவருக்கு வாழ்த்துக்கள் பல்லாண்டு வளமுடன் வாழ //

      அவர்களை வாழ்த்தியதற்கு என் தனிப்பட்ட நன்றிகள் அண்ணா.

      //அவரின் பெருமைகளை பட்டியலிட்டு காட்டிய VGK வாழ்க .//

      மகிழ்கிறேன் அண்ணா, தாங்களாவது ’VGK வாழ்க’ என்று சொன்னதற்கு.

      //உங்கள் அஞ்சலகத்தில் பதிவைபோட்டால் அது அவர்களிடம் போய் சேர்ந்திடும்.//

      இதுபோலத்தான் எல்லோருமே நினைத்துக்கொண்டுள்ளார்கள். அது உண்மையா என எனக்கு ஏதும் தெரியாது, அண்ணா.

      என் பணி பாராட்ட வேண்டியவைகளைப் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவதோடு சரி. வேறொன்றும் அறியேன் பராபரமே !

      தங்களின் அன்பான வருகைக்கும், மனமார்ந்த பல கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும். என் இனிய நன்றிகள் அண்ணா.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. //ஜகமணி வலைதள பதிவரின் ஆயிரமாம் பதிவு வண்ணம் கலந்து உயர்ந்த எண்ணங்களை விதைக்கும் கருவூலம் ,நான் பலமுறை கண்டிருக்கிறேன்.//

      பொக்கிஷமான கருத்துரைகள் தந்து மிளிரவைத்த அன்பு கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

      நீக்கு
  14. வார்த்தைகளே வரவில்லை.. அப்படியே திக்குமுக்காடிப் போகிறேன் நானே.. என்ன ஒரு அன்பு பாசம்..நட்பு..
    அய்யா வை கோ அவர்களே முதலில் உங்கள் பொன்னான திருவடிகளுக்கு ஒரு நமஸ்காரம்.

    இதோ கிள்ம்பிட்டேன் 1000 வது பதிவைக் கண்டு களிக்க !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் August 12, 2013 at 5:08 PM

      வாங்கோ என் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்களே, வணக்கம். தங்களின் வரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      //வார்த்தைகளே வரவில்லை.. அப்படியே திக்குமுக்காடிப் போகிறேன் நானே.. என்ன ஒரு அன்பு பாசம்..நட்பு..//

      தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி, சார்.

      //அய்யா வை கோ அவர்களே முதலில் உங்கள் பொன்னான திருவடிகளுக்கு ஒரு நமஸ்காரம்.//

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பொன்னான திருவடிகளுக்கு உங்கள் நமஸ்காரங்களைச் சேர்ப்பித்து, நானும் நமஸ்கரித்து, அதன் பின் என் மனமார்ந்த ஆசீர்வாதங்களை தங்களுக்கு வழங்குகிறேன்.

      செளக்யமாக க்ஷேமமாக சந்தோஷமாக எப்போதும் இருக்கவும்.

      //இதோ கிள்ம்பிட்டேன் 1000 வது பதிவைக் கண்டு களிக்க !//

      மிக்க நன்றி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள் வாழ்க ! வளர்க !!

      நீக்கு
    2. வார்த்தைகளே வரவில்லை.. அப்படியே திக்குமுக்காடிப் போகிறேன் நானே.. என்ன ஒரு அன்பு பாசம்..நட்பு..
      அய்யா வை கோ அவர்களே முதலில் உங்கள் பொன்னான திருவடிகளுக்கு ஒரு நமஸ்காரம்.

      நானும் நமஸ்கரித்துக்கொள்கிறேன் ..
      குருவையும் அருமை சிஷ்யரையுரையும் ..!

      நீக்கு
  15. மிகச் சிறப்பாகத் தங்களின் வாழ்த்துரையைத் தேர்வு செய்துள்ளீர்கள்
    ஐயா ...!!!! நான் ஏற்க்கனவே என் வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டேன் .
    இங்கும் மனம் மகிழ்ந்து உங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை தோழி
    இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைச்
    சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றேன் .

    பொன்னும் பொருளும் மறைந்த பொழுதிலும்
    எண்ணும் எழுத்தும் மறையாதுலகினில்
    கண்ணும் கருத்துமாய் நீ வடித்த காவியம்
    மின்னும் உலகினில் மிளிர் கொன்றை நிலவெனவே

    வாழ்த்துக்கள் தோழி .
    மிக்க நன்றி ஐயா அழைப்பிற்கும் ,அழகிய படைப்பிற்கும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ambal adiyal August 12, 2013 at 5:22 PM

      வாருங்கள், வணக்கம்.

      //மிகச் சிறப்பாகத் தங்களின் வாழ்த்துரையைத் தேர்வு செய்துள்ளீர்கள் ஐயா ...!!!!//

      மிக்க மகிழ்ச்சி.

      //நான் ஏற்க்கனவே என் வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டேன் .
      இங்கும் மனம் மகிழ்ந்து உங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை தோழி இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றேன் //

      சந்தோஷம் .... ஸ்பெஷல் நன்றிகள்..

      //பொன்னும் பொருளும் மறைந்த பொழுதிலும்
      எண்ணும் எழுத்தும் மறையாதுலகினில்
      கண்ணும் கருத்துமாய் நீ வடித்த காவியம்
      மின்னும் உலகினில் மிளிர் கொன்றை நிலவெனவே

      வாழ்த்துக்கள் தோழி .//

      அழகான பொருத்தமான பாடல் வரிகள் தந்து சிறப்பித்துள்ளீர்கள்.
      சந்தோஷம்.

      /மிக்க நன்றி ஐயா அழைப்பிற்கும், அழகிய படைப்பிற்கும் !//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள் வாழ்க ! வளர்க !!

      நீக்கு
    2. மின்னிடும் கருத்துரைகளுடன் தனிப்பதிவிலும் பாராட்டி மகிழ்வித்தமைக்கு மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்..!

      நீக்கு
  16. மேடத்துக்கு எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும். நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் அவர்களுக்கு மிக நன்றாகப் பொருந்தும். பிரமிக்கத்தக்க பதிவர்.

    படத்திலிருக்கும், மலரத்துடிக்கும் ரோஜா மொட்டு ஒவ்வொரு முறை மாறும்போதும் இதோ மலரத் தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது!

    விருந்து படங்களில் காஃபி மட்டும் எடுத்துக் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். August 12, 2013 at 5:25 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

      //மேடத்துக்கு எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும். நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் அவர்களுக்கு மிக நன்றாகப் பொருந்தும். பிரமிக்கத்தக்க பதிவர்.//

      இதைக்கேட்கவே சந்தோஷமாக உள்ளது, ஸ்ரீராம்.

      //படத்திலிருக்கும், மலரத்துடிக்கும் ரோஜா மொட்டு ஒவ்வொரு முறை மாறும்போதும் இதோ மலரத் தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது!//

      இந்தப்படம் எனக்குக்கிடைத்ததும் அந்த அம்பாளின் உபயம் தான்.

      அது ரோஜா அல்ல .... நிஷாகந்தி என்று சொல்லியிருந்தார்கள்.

      //விருந்து படங்களில் காஃபி மட்டும் எடுத்துக் கொண்டேன்!//

      நீங்களும் என்னைப்போலவே ஒரு காஃபி பிரியர் என்பதைப் புரிந்து கொண்டேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. நிஷாகந்தி ம்லர்ந்த பதிவில் அளித்திருந்த
      அந்தமலரும் மலர் ரோஜாதான் ..!


      அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும்,
      மனமார்ந்த இனிய நன்றிகள்

      நீக்கு
  17. இன்று காலை நான் பார்த்த முதல் பதிவே சகோதரியாரின் பதிவுதான். வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துவிட்டேன் ஐயா. தங்களின் பதிவு அருமை ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் August 12, 2013 at 5:33 PM

      வாருங்கள். வணக்கம்.

      //இன்று காலை நான் பார்த்த முதல் பதிவே சகோதரியாரின் பதிவுதான்.//

      மிக்க மகிழ்ச்சி. தினமும் அதுபோலவே செய்யுங்கள். நல்லது.

      //வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துவிட்டேன் //

      சந்தோஷம்.

      //ஐயா. தங்களின் பதிவு அருமை ஐயா. நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்

      நீக்கு
    2. தங்களின் முதல் தரிசனத்திற்கும்
      அருமையான கருத்துரைகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

      நீக்கு
  18. தெய்வீகப் பதிவர் ராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளை சிறப்பாக ஆய்வு செய்து விட்டீர்கள் .
    யானை விளையாட்டை வலைசர ஆசிரியராக இருந்தபோது குறிப்பிட்டிருக்கிறேன்.
    இராஜேஸ்வரி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரம் பதிவுகள் படைக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. T.N.MURALIDHARAN August 12, 2013 at 6:18 PM

      வாருங்கள், வணக்கம்.

      //தெய்வீகப் பதிவர் ராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளை சிறப்பாக ஆய்வு செய்து விட்டீர்கள் . //

      அப்படியா? சந்தோஷம். ;))))

      //யானை விளையாட்டை வலைசர ஆசிரியராக இருந்தபோது குறிப்பிட்டிருக்கிறேன். //

      அதற்கு என் மனமார்ந்த ஸ்பெஷல் நன்றிகள். ;)

      //இராஜேஸ்வரி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். //

      அவகளை மனம் நிறைந்து வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகளை நானும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      //இன்னும் பல ஆயிரம் பதிவுகள் படைக்கட்டும்//

      ஆஹா, படைப்பார்கள். படைக்கட்டும். மகிழ்ச்சியே.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்

      நீக்கு
    2. இனிய கருத்துரைகளுக்கும்
      வாழ்த்துரைகளுக்குமினிய நன்றிகள்..~

      நீக்கு
  19. காலையில் எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்ததும் உங்களின் நற்செய்தி! அப்புறம் எனது வலைப்பதிவின் முகப்புப் பலகையில் ( Dashboard ) சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆயிரமாவது பதிவு மின்னியது. அவரது பதிவை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

    தீபாவளிக்கு முதல்நாள், கொண்டாட்டத்தை எதிர்பார்த்து எப்பொழுது பொழுது விடியும் என்று இருந்த குழந்தையின் மனதுபோல் உங்கள் பதிவு இருக்கிறது. திறந்த மனதோடு பாராட்டி இருக்கிறீர்கள்.

    சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    மீண்டும் வருவேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ August 12, 2013 at 6:32 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //காலையில் எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்ததும் உங்களின் நற்செய்தி! //

      என்னுடைய பல பதிவுகள்: ஏனோ டேஷ்போர்டில் தெரிவது இல்லை. அதுபோலவே இந்த சிறப்புப்பதிவும் டேஷ்போர்டில் தெரியவில்லை. மிகவும் சோதனையாகத்தான் உள்ளது.

      அதுபோல என் டேஷ் போர்டைத்திறந்தால் எனக்குப் பிறர் பதிவுகளும், பெரும்பாலான நேரங்களில் சுத்தமாக தெரிவது இல்லை. சில சமயம் மட்டுமே அவைகள் தெரிகின்றன. என்ன பிரச்சனைகளோ! ;(

      அதனால் மட்டுமே தனியாக மின்னஞ்சல் மூலம் பலருக்கும் தகவல் கொடுத்திருந்தேன்.

      //அப்புறம் எனது வலைப்பதிவின் முகப்புப் பலகையில் ( Dashboard ) சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆயிரமாவது பதிவு மின்னியது. //

      எனக்கு என் டேஷ்போர்டில் அதுபோல எதுவும் மின்னவில்லை, ஐயா ;(

      //அவரது பதிவை இனிமேல்தான் படிக்க வேண்டும்.//

      மகிழ்ச்சியுடன் போய்ப் படியுங்கள் ஐயா. சந்தோஷம்.

      //தீபாவளிக்கு முதல்நாள், கொண்டாட்டத்தை எதிர்பார்த்து எப்பொழுது பொழுது விடியும் என்று இருந்த குழந்தையின் மனதுபோல் உங்கள் பதிவு இருக்கிறது.//

      மிகச்சரியாக அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா. அதே அதே !

      தீபாவளிக்கு முதல் நாள் போல மட்டும் அல்ல. கடந்த 100 நாட்களாகவே என் மனதில் பலவிதமான எண்ணங்கள், திட்டங்கள், கற்பனைகள்.

      மெருகூட்டி, மெருகூட்டி, மேலும் மேலும் மெருகூட்டி, கடைசியாக பலவற்றைச் சுருக்கிக் கத்தரித்து பல இரவுகள் தூங்காமல் வடிவமைத்த தீபாவளிக் கொண்டாட்டம் தான் இது.

      //திறந்த மனதோடு பாராட்டி இருக்கிறீர்கள். //

      பாராட்டப்பட வேண்டியவர்களை, பாராட்டப்பட வேண்டிய நேரத்தில், மிகச்சரியாகப் பாராட்டத்துடிக்கும் தான் என் மனது.
      நேரம் காலம் மற்ற சூழ்நிலைகள் ஒத்து வந்தால் என் மனம் ஆட்டோமேடிக் ஆக, மிகஅகலமாகவே திறந்து கொள்ளும்..

      //சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!//

      அவர்களை வாழ்த்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே. என் ஸ்பெஷல் நன்றிகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

      //மீண்டும் வருவேன்!//

      மிக்க மகிழ்ச்சி. எப்போது வேண்டுமானாலும், மீண்டும் மீண்டும் நிங்கள் வரலாம். ALWAYS WELCOME ! Sir.

      நீக்கு
    2. கொண்டாட்டங்களில் பங்கேற்று சிறப்பித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

      நீக்கு
  20. மனம் திறந்த பாராட்டுகள்.....

    அப்பப்பா எத்தனை இணைப்புகள், படங்கள் என அசத்தி விட்டீர்கள்.....

    தொடரட்டும் உங்களது வலைப்பகிர்வுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் August 12, 2013 at 6:41 PM

      வாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.

      //மனம் திறந்த பாராட்டுகள்.....//

      சந்தோஷம்.

      //அப்பப்பா எத்தனை இணைப்புகள், படங்கள் என அசத்தி விட்டீர்கள்..... //

      மிக்க மகிழ்ச்சி.

      //தொடரட்டும் உங்களது வலைப்பகிர்வுகள்...//

      OK வெங்கட்ஜி.

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜி.

      நீக்கு
  21. asathal post sir. You always keep good track of the happenings and is a regular visitor to any blog. Thanks for bringing the milestone to our notice. Mela thalam, sweet vagayarakal jore-aana post! sirappu kondata padhivu. Moipanamum engalukaga neengale kuduthutele! bale bale!

    Proceeding to the blog page of smt. rajarajeswarima

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mira August 12, 2013 at 7:06 PM

      வாங்கோ மீரா, வணக்கம்

      //asathal post sir. அசத்தலான போஸ்ட் சார்//

      சந்தோஷம்.

      //You always keep good track of the happenings and is a regular visitor to any blog.//

      Thank you MIRA ;)))))

      //Thanks for bringing the milestone to our notice. சாதனைமிக்க முக்கியமான மைல்கல்லினை எங்கள் கவனத்திற்குக்கொண்டு வந்ததற்கு நன்றிகள்//

      மகிழ்ச்சி. ஏதோ என்னால் முடிந்தது, மீரா.

      //Mela thalam, sweet vagayarakal jore-aana post! sirappu kondata padhivu. Moipanamum engalukaga neengale kuduthutele! bale bale!

      மேளதாளம், ஸ்வீட் வகையறாக்கள் ஜோரான போஸ்ட்! சிறப்பான கொண்டாட்டப்பதிவு. மொய்ப்பணமும் நீங்களே எங்களுக்காகக் கொடுத்துட்டேளே ! பலே பலே !! //

      ;))))) சந்தோஷம் மீரா.

      //Proceeding to the blog page of smt. rajarajeswarima
      ஸ்ரீமதி இராஜராஜேஸ்வரியின் பதிவு நோக்கி ஓடத்தொடங்கி விட்டேன்//

      மிக்க மகிழ்ச்சி, செய்யுங்கோ, மீரா.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மீரா

      அன்புடன் கோபு

      Delete

      நீக்கு
    2. அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      நீக்கு
  22. வாழ்த்திய உங்களுக்கும் வாழ்த்தப் பட்ட ஸ்ரீமதி ராஜராஜேஸ்வரிக்கும் மிக மிக மனமார்ந்த வாழ்த்துகள். இருவரும் நீண்ட நல்ல பதிவுகள் இட்டு எங்களை எப்போதும் மகிழ்விக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் August 12, 2013 at 7:20 PM

      வாங்கோ நமஸ்காரம் / வணக்கம்.

      //வாழ்த்திய உங்களுக்கும் வாழ்த்தப் பட்ட ஸ்ரீமதி ராஜராஜேஸ்வரிக்கும் மிக மிக மனமார்ந்த வாழ்த்துகள். இருவரும் நீண்ட நல்ல பதிவுகள் இட்டு எங்களை எப்போதும் மகிழ்விக்கவேண்டும்.//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் எங்களின் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. மகிழ்ச்சியான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      நீக்கு
  23. ஆயிரமாவது [1000th POST] பதிவினை
    வெற்றி விழாக் கோலாகலமான பதிவாக்கிப்
    பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரிAugust 12, 2013 at 7:23 PM

      வாருங்கள் என் அன்புக்குரிய அம்பாளே!

      தங்களுக்கு என் வந்தனங்கள்.

      //ஆயிரமாவது [1000th POST] பதிவினை வெற்றி விழாக் கோலாகலமான பதிவாக்கிப் பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..! //

      மிகவும் சந்தோஷம்.

      தங்களின் தீவிர பக்தனாகிய நான் அன்புடன் தயாரித்து அளித்த இந்த மிகச்சிறிய எளிய பிரஸாதத்தையும் கூட, மிகப்பெரிய மனதுடன், ஸ்வீகரித்துக்க்கொண்டு, மனதார அருள் மழை பொழிந்துள்ள அம்பாளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      >>>>>

      நீக்கு
    2. நான் மிகவும் சர்ப்ரைஸ் ஆக வெளியிட்ட இந்த சிறப்புப்பதிவினை, முதல் முதலாகத் தாங்கள் படித்த அந்த க்ஷணத்தில், என்ன FEELINGS உங்களுக்கு ஏற்பட்டது என அறிந்துகொள்ள, நான் அன்று மிகவும் ஆவலாக இருந்தேன்.

      நீக்கு
  24. பாராட்டத்தக்க சாதனையாளரை பாராட்டத்தக்கவர் பாராட்டினால் எத்தனை சிறப்பாக இருக்கும் என்பதற்கு இப்பதிவே சாட்சி ஒரு பிரமாண்டமான பாராட்டு நிகழ்வில் கலந்து கொணட திருப்தி பதிவைப் படித்து முடித்ததும் இருந்து வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S August 12, 2013 at 7:25 PM

      வாருங்கள் திரு. ரமணி சார், வணக்கம்.

      //பாராட்டத்தக்க சாதனையாளரை பாராட்டத்தக்கவர் பாராட்டினால் எத்தனை சிறப்பாக இருக்கும் என்பதற்கு இப்பதிவே சாட்சி//

      ஆஹா, இப்படியொரு பாராட்டினை தங்களைத் தவிர வேறு யாரால் தந்திட முடியும்?.

      மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஸ்பெஷல் நன்றிகள்.

      //ஒரு பிரமாண்டமான பாராட்டு நிகழ்வில் கலந்து கொணட திருப்தி பதிவைப் படித்து முடித்ததும் இருந்து வாழ்த்துக்கள்.//

      அதே ... அதே ... அதே தான் .... நான் எதிர்பார்த்ததும்.

      இதைத் தங்கள் வாயால் கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. ஒரு பிரமாண்டமான பாராட்டு நிகழ்வில் கலந்து கொணட திருப்தியுடன் சிறப்பித்த வாழ்த்துரைகளுக்கு மனம் கனிந்த இனிய நன்றிகள் ஐயா..!

      நீக்கு
  25. ஐயா, இந்தப் பேரன்பை, பண்பைப் பெற உங்கள் நட்பு வட்டமும், குறிப்பாக பதிவு நாயகியும் கொடுத்து வைத்தவர்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. middleclassmadhavi August 12, 2013 at 7:27 PM

      வாங்கோ திருமதி MCM Madam, வணக்கம்.

      //ஐயா, இந்தப் பேரன்பை, பண்பைப் பெற உங்கள் நட்பு வட்டமும், குறிப்பாக பதிவு நாயகியும் கொடுத்து வைத்தவர்கள்!!//

      மனதுக்குப்பிடித்தமான, பாராட்டப்பட வேண்டியவர்களை, பாராட்டப்பட வேண்டிய நேரத்தில், மிகச்சரியாகப் பாராட்ட வேண்டியது தானே நம் அன்பாகவும் பண்பாகவும் இருக்க முடியும்.

      கடவுள் அருளால், இன்று இந்தக் குறிப்பிட்டப் பதிவு நாயகியைப் ஏதோ கொஞ்சம் பாராட்டி மகிழ்ந்து சிறப்பித்து, கெளரவிக்க, நானும் ஏதோ கொஞ்சமாவது கொடுத்து வைத்துள்ளதாகவே நினைத்து மகிழ்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான இனிமையான என் மனதுக்குப்பிடித்தமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  26. தெய்வீகப் பதிவர் ராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் August 12, 2013 at 7:50 PM

      வாருங்கள் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே,. வணக்கம்.

      //தெய்வீகப் பதிவர் ராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....//

      தெய்வீகப்பதிவர் அவர்களை இங்கு வந்து வாழ்த்தியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  27. ஆயிரம் பதிவுகளிலும் அவரது அயராத உழைப்பு ஜொலிக்கின்றது எனில் தங்களது இந்தப் பதிவில் மேலான நேசமும் பாசமும் மின்னுகின்றன..வாழ்க!.. வளர்க!..எல்லாரிடத்தும் ஈசன் அருள் நிறைக!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ August 12, 2013 at 7:55 PM

      வாருங்கள் திரு. துரை செல்வராஜூ அவர்களே, வணக்கம்.

      //ஆயிரம் பதிவுகளிலும் அவரது அயராத உழைப்பு ஜொலிக்கின்றது எனில் தங்களது இந்தப் பதிவில் மேலான நேசமும் பாசமும் மின்னுகின்றன..வாழ்க!.. வளர்க!..//

      அப்படியா? இதைக்கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      //எல்லாரிடத்தும் ஈசன் அருள் நிறைக!..//

      சரியாக மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

      நீக்கு
    2. //ஆயிரம் பதிவுகளிலும் அவரது அயராத உழைப்பு ஜொலிக்கின்றது எனில் தங்களது இந்தப் பதிவில் மேலான நேசமும் பாசமும் மின்னுகின்றன..வாழ்க!.. வளர்க!..//

      ஈசன் அருளோடு நிறைவான பாராட்டுகளுக்கும்
      மேலான நேசமும் பாசமும் மின்னுகின்ற வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

      நீக்கு
  28. அழைப்புக்கு நன்றி. அவரை வாழ்த்தி விட்டுதான் இந்த விழாவுக்கு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமலக்ஷ்மி August 12, 2013 at 8:01 PM

      வாங்கோ திருமதி ராமலக்ஷ்மி மேடம் அவர்களே, வணக்கம்.

      //அழைப்புக்கு நன்றி. //

      அழைப்பினை ஏற்று வருகை அளித்துள்ளதற்கு நன்றி + மிக்க மகிழ்ச்சி.

      //அவரை வாழ்த்தி விட்டுதான் இந்த விழாவுக்கு வருகிறேன்.//

      அது போதும். அது தான் என் எதிர்பார்ப்பும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  29. ஒரு பதிவு எழுதுவதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஆயிரம் பதிவுகளை எப்படித்தான் வெளியிட்டார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
    மேலும் தனது வலைப்பதிவைத் தொடரும் பதிவர்களின் பதிவுகளுக்கும் விடாது கருத்துரைகள் த்ருவதிலும் உங்களைப் போலவே சலிப்படைவதில்லை. கைகள் ஆயிரம் உடையவள் காளி என்று படித்து இருக்கிறேன். அந்த காளியின் அருள் பெற்ற கவி காளிதாஸைப் போல சகோதரிக்கு புகழ் உண்டாகட்டும்!

    அவர் எழுதிய பதிவுகளை தொகுத்தும் பகுத்தும் ஒரு ஆராய்ச்சியே செய்து எழுதி இருக்கிறீர்கள். இந்த பதிவில் அவருடைய எழுத்தின் பாதிப்பு (வண்ண படங்கள் ) தெரிகிறது.

    வரும் ஆடி வெள்ளிக்கிழமை 16.08.2013 அன்று எங்களைத் தேடிவரும் ”அறுபதிலும் ஆசை வரும்!” என்ற சிறப்புப்பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ August 12, 2013 at 8:05 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //ஒரு பதிவு எழுதுவதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஆயிரம் பதிவுகளை எப்படித்தான் வெளியிட்டார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.//

      சாதனையாளர்கள் சிலரின் சில நடவடிக்கைகள் இதுபோலத்தான் நமக்கு மிகுந்த ஆச்சர்யம் அளிக்கும், ஐயா.

      நம்மால் அவற்றிற்கு என்றுமே விடை காணவே முடியாது.

      அவர்களாகவே எப்போதாவது ஏதாவது வாயைத்திறந்து நம்மிடம் சொன்னால் தான் உண்டு. ஆனால் சொல்லவே மாட்டார்கள் ஐயா. அதெல்லாம் தேவ ரகசியங்கள் ஐயா.STRICTLY CONFIDENTIAL MATTERS ! ;)

      //மேலும் தனது வலைப்பதிவைத் தொடரும் பதிவர்களின் பதிவுகளுக்கும் விடாது கருத்துரைகள் த்ருவதிலும் உங்களைப் போலவே சலிப்படைவதில்லை. //

      என்னைப்போலவே என்று சொல்லாதீர்கள் ஐயா. நான் சலிப்படைந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. அவர்கள் அப்படி இல்லை.

      இன்றும் ..... என்றும் பேரெழுச்சியோ எழுச்சியுடன், பட்டாம் பூச்சியாக அனைத்து பூக்களுக்கும் [வலைப்பூக்களுக்கும்] சென்று கருத்தளித்து வருகிறார்கள்.

      //கைகள் ஆயிரம் உடையவள் காளி என்று படித்து இருக்கிறேன். அந்த காளியின் அருள் பெற்ற கவி காளிதாஸைப் போல சகோதரிக்கு புகழ் உண்டாகட்டும்!//

      ஆஹா, சந்தோஷம். அப்படியே ஆகட்டும், ஐயா. புகழின் உச்சிக்கே போய் கொடிகட்டிப்பறக்கட்டும்

      //அவர் எழுதிய பதிவுகளை தொகுத்தும் பகுத்தும் ஒரு ஆராய்ச்சியே செய்து எழுதி இருக்கிறீர்கள்.//

      அப்படியா ஐயா, நான் விரும்பிப்படித்துவரும் ஒருசில தளங்களில் மிகவும் முக்கியமான, மறக்க முடியாததோர் தளமாயிற்றே, ஐயா !

      //இந்த பதிவில் அவருடைய எழுத்தின் பாதிப்பு (வண்ண படங்கள் ) தெரிகிறது. //

      வண்ணப்படங்கள் கொடுக்காவிட்டால், யார் ஐயா, வெறும் வெற்றுப்பதிவினைப் படிக்க முன் வருவார்கள்? ;)))))

      எனக்கு இயற்கையாகவே படங்கள் என்றால் பிடிக்கும். அதுவும் அசையும் படங்கள் [Animation] என்றால் மிகவும் பிடிக்கும்.

      முன்பெல்லாம் அதுபோல எனக்கு மிகவும் பிடித்தமான ஒருசில படங்களை மட்டும் இவர்களின் பதிவுகளிலிருந்து அவ்வப்போது ஓர் உரிமையுடன் திருடி தனியே சேமித்து வைத்துக்கொள்வது உண்டு. அப்போதெல்லாம் Copy & Paste செய்வது எளிமையாக இருந்தது.

      இப்போது அதுபோலெல்லாம் செய்ய முடியாமல், தடை போட்டுள்ளார்கள். தடை எனக்காகப் போட்டது அல்ல. வேறு ஏதோ சில காரணங்களுக்காக. எல்லாம் நன்மைக்கே.

      //வரும் ஆடி வெள்ளிக்கிழமை 16.08.2013 அன்று எங்களைத் தேடிவரும் ”அறுபதிலும் ஆசை வரும்!” என்ற சிறப்புப்பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். //

      மிகவும் சந்தோஷம் ஐயா. கட்டாயமாக வெளியிடுவேன் ஐயா. ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்புக்கு மிக்க நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. அவர் எழுதிய பதிவுகளை தொகுத்தும் பகுத்தும் ஒரு ஆராய்ச்சியே செய்து எழுதி இருக்கிறீர்கள். இந்த பதிவில் அவருடைய எழுத்தின் பாதிப்பு (வண்ண படங்கள் ) தெரிகிறது. /

      இதுதான் வியக்கவைக்கும் அசாதாரண சாதனை ..!

      என் எளிய முயற்சியை பெரியவர்கள் ஊக்குவித்து உற்சாகம் அளித்து மெருகூட்டி ,பட்டைதீட்டி சிகரத்தில் ஏற்றி பாராட்டி தனிப்பதிவாக வெளியிட்டுபெருமைப்படுத்தியதற்கு மனம் நெகிழ்ந்த இனிய நன்றிகள் ஐயா..!

      நீக்கு
    3. இராஜராஜேஸ்வரி August 26, 2013 at 6:20 AM

      வாங்கோ, வணக்கம், வந்தனங்கள்.

      /அவர் எழுதிய பதிவுகளை தொகுத்தும் பகுத்தும் ஒரு ஆராய்ச்சியே செய்து எழுதி இருக்கிறீர்கள். இந்த பதிவில் அவருடைய எழுத்தின் பாதிப்பு (வண்ண படங்கள் ) தெரிகிறது. /

      இதுதான் வியக்கவைக்கும் அசாதாரண சாதனை ..!

      ஆஹா, நிறை குடம் என்றும் தளும்பாது.

      அந்த நிறைகுடமே என் அன்புக்குரிய அம்பாள்.

      ‘குறை குடம் கூத்தாடும்’ என்பதற்கு நானே நல்ல உதாரணம்.

      இருப்பினும் குறை குடமாய் கூத்தாடியுள்ள இந்த என் மிகச்சிறிய செயலைப்போய் ”இதுதான் வியக்கவைக்கும் அசாதாரண சாதனை” என்று ஓர் மிகப்பெரிய சாதனையாளர் சொல்லியிருப்பது, அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. எனக்கு அவர்மேல் மேலும் மேலும் பாசத்தையும் ஊட்டுகிறது.

      //என் எளிய முயற்சியை பெரியவர்கள் ஊக்குவித்து உற்சாகம் அளித்து மெருகூட்டி ,பட்டைதீட்டி சிகரத்தில் ஏற்றி பாராட்டி தனிப்பதிவாக வெளியிட்டுபெருமைப்படுத்தியதற்கு மனம் நெகிழ்ந்த இனிய நன்றிகள் ஐயா..!//

      அசராமல் தினமும் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளாகக் கொடுத்து அசத்திய ’மணம் நிறைந்த புஷ்ப மாலை’யைத் தாங்கிடும் / தொடுத்திடும் நாராக நானும் இருந்துள்ளேன் என்பது மட்டுமே இதில் எனக்குள்ள ஓர் மிகச்சிறிய கெளரவம்.

      YOU ARE WELL DESERVED, MADAM ! ;)

      நீக்கு
  30. நிச்சயமாக இது ஒரு பெரும் சாதனை. இதை நிகழ்த்திய திருமதி.இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், அதை சிறப்பித்துப் பெருமைப்படுத்திய தங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்வதி இராமச்சந்திரன். August 12, 2013 at 8:27 PM

      வாங்கோ திருமதி பார்வதி இராமச்சந்திரன்.அவர்களே, வணக்கம்.

      //நிச்சயமாக இது ஒரு பெரும் சாதனை. இதை நிகழ்த்திய திருமதி.இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், அதை சிறப்பித்துப் பெருமைப்படுத்திய தங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.//

      தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  31. பதில்கள்
    1. வேடந்தாங்கல் - கருண் August 12, 2013 at 8:49 PM

      //வாழ்த்துக்கள்...//

      தங்களின் அன்பு வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நண்பரே.

      நீக்கு
  32. கோலாகலமாக ஆயிரமாவது பதிவைக் கொண்டாடி விட்டீர்கள். உங்கள் அன்பினால் திருமது ராஜராஜேஸ்வரி திக்குமுக்காடிப் போயிருப்பார். ஏனெனின் எனக்கும் அதே நிலைமை தான். உங்கள் அன்புள்ளத்தைக் கண்டு வியந்து போனேன். முதலில் உங்களுக்குப் பாராட்டுகள். ராஜராஜேஸ்வரியின் தளத்திற்கும் சென்று அவர்களையும் பாராட்டிவிட்டுப் பின்னர் மறுபடி வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam August 12, 2013 at 8:52 PM

      வாங்கோ திருமதி. கீதா மாமி. நமஸ்காரங்கள் / வணக்கங்கள்,

      //கோலாகலமாக ஆயிரமாவது பதிவைக் கொண்டாடி விட்டீர்கள். //

      ஏதோ இந்த ஏழை எளிய அந்தணனால் முடிந்தது. ’எத்கிஞ்சது’ ’ஏழைக்குத்தகுந்த எள்ளுருண்டை.’

      //உங்கள் அன்பினால் திருமது ராஜராஜேஸ்வரி திக்குமுக்காடிப் போயிருப்பார்.//

      இல்லை மாமி. அதுபோலெல்லாம் இல்லை. எதற்கும் திக்குமுக்காடவே மாட்டார்கள்.

      உதாரணமாக கோயிலில் உள்ள அம்பாளுக்கு நாம் குடம் குடமாகப் பாலாபிஷேகம் செய்து, பட்டுப்புடவை + ஆபரணங்கள் அணிவித்து, பார்த்து மகிழ்வோம். பரவஸம் ஆவோம். ஆனால் அந்த அம்பாள் வாயைத்திறந்து ஏதாவது நம்முடன் பேசுமா?

      அதே போலத்தான் இந்த அம்பாளும்.

      //ஏனெனில் எனக்கும் அதே நிலைமை தான்.//

      தாங்களும் ஆயிரக்கணக்கில் பதிவுகள் கொடுத்துள்ளதாக் நேற்று தான் உங்கள் மூலமும் நம் அன்பின் சீனா ஐயாவின் பதில்கள் மூலமும் [அவர்களின் பதிவினில்] தெரிந்து கொண்டேன்.

      உத்தவன் குளக்கரையில் ஹிடும்பையைப் பார்த்தது போல நானும் வியந்து ஆடிப்போனேன். ;)))))

      மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

      //உங்கள் அன்புள்ளத்தைக் கண்டு வியந்து போனேன். முதலில் உங்களுக்குப் பாராட்டுகள்.//

      அப்படியா? சந்தோஷம்.

      //ராஜராஜேஸ்வரியின் தளத்திற்கும் சென்று அவர்களையும் பாராட்டிவிட்டுப் பின்னர் மறுபடி வருகிறேன்.//

      ஆஹா, அதைச்செய்யுங்கோ, முதலில் அதுதான் என் இந்தப்பதிவின் எதிர்பார்ப்பும் கூட.

      மறுபடியும் வாங்கோ, சந்தோஷமே ! ;).

      நீக்கு
    2. மகிழ்ச்சியான கருத்துரைகள் வழங்கி பாராட்டிய அன்பு உள்ளத்திற்கு இனிய நன்றிகள்..

      நான் தங்கள் அத்தனை பதிவுகளையும் படித்து வியந்திருக்கிறேன்..
      பல தளங்களில் தங்கள் உழைப்பு பிரமிக்கவைக்கிறது..
      தங்கள் வாழ்த்துகள் உற்சாகம் தருகின்றன..
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

      நீக்கு
  33. தொடர்ந்து கருத்துகளையும் பதிவுகளையும் சிறப்பாக கொடுக்கும் தோழிக்கு வாழ்த்து

    மேலும் சக பதிவரை மிகசிறப்பாக பதிவு செய்து இத்தனை சிறப்பான விருந்துடன் வாழ்த்திய உங்களுக்கு இரட்டிப்பு வாழ்த்து ..........விருந்து அருமை .......தாம்பூலம் மட்டுமே குறை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை மு சரளா August 12, 2013 at 8:54 PM

      வாருங்கள் கவிதாயினி அவர்களே,

      வணக்கம்.

      //தொடர்ந்து கருத்துகளையும் பதிவுகளையும் சிறப்பாக கொடுக்கும் தோழிக்கு வாழ்த்து //

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      [ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் அல்லவா நீங்கள் இருவரும் ;))))) மேலும் மகிழ்ச்சி எனக்கு]

      //மேலும் சக பதிவரை மிகசிறப்பாக பதிவு செய்து இத்தனை சிறப்பான விருந்துடன் வாழ்த்திய உங்களுக்கு இரட்டிப்பு வாழ்த்து ..........விருந்து அருமை ....... //

      மிகவும் சந்தோஷம். இரட்டிப்பு சந்தோஷம் தான் எனக்கும்.

      //தாம்பூலம் மட்டுமே குறை//

      தங்களுக்காகவே குறையை இப்போது நிறை[வு] செய்து விட்டேன்.

      நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  34. அசத்தலான பாராட்டுவிழாவை ஏற்பாடு செய்து தோழி.ராஜராஜேஸ்வரியை மட்டும் அல்ல எங்களையும் திகைப்பில் ஆழ்த்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி..தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எண்ணிக்கை கொள்ளமுடியாத அளவு எண்ணற்ற பதிவுகள் தொடரட்டும்... யாருக்கும் கிடைத்திருக்க முடியாதபடி ஒரு பாராட்டுவிழா...தங்களைப்போன்றவர்களின் ஆசியும் வாழ்த்தும், தோழமைகளாகிய எங்களின் அன்பும் தோழியை மென்மேலும் பதிவுகள் பல படைக்க வழிவகுக்கட்டும். மற்றவர்களை மனதாரப்பாராட்டும் தங்கள் நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுகிறேன்..வாழ்க வளமுடன். தோழி


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிக்காயத்ரி August 12, 2013 at 9:34 PM

      வாருங்கள், வணக்கம். என் தளத்திற்குத் தங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். மகிழ்ச்சி.

      //அசத்தலான பாராட்டுவிழாவை ஏற்பாடு செய்து தோழி.ராஜராஜேஸ்வரியை மட்டும் அல்ல எங்களையும் திகைப்பில் ஆழ்த்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி..//

      மிக்க மகிழ்ச்சி.

      //தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

      நல்லது. மிக்க நன்றி.

      //எண்ணிக்கை கொள்ளமுடியாத அளவு எண்ணற்ற பதிவுகள் தொடரட்டும்... //

      ஆம் தொடரட்டும்.

      //யாருக்கும் கிடைத்திருக்க முடியாதபடி ஒரு பாராட்டுவிழா...//

      அப்படியா !!!!!!! சந்தோஷம். ஸ்பெஷல் நன்றிகள்.

      //தங்களைப்போன்றவர்களின் ஆசியும் வாழ்த்தும், தோழமைகளாகிய எங்களின் அன்பும் தோழியை மென்மேலும் பதிவுகள் பல படைக்க வழிவகுக்கட்டும். //

      ஆஹா, நிச்சயமாக அப்படியே நடக்கட்டும். ததாஸ்து.

      //மற்றவர்களை மனதாரப்பாராட்டும் தாங்கள் நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுகிறேன்..வாழ்க வளமுடன். தோழி//

      தங்களின் வேண்டுதலுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

      தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.



      நீக்கு
    2. //மற்றவர்களை மனதாரப்பாராட்டும் தாங்கள் நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுகிறேன்..வாழ்க வளமுடன். //

      ஆத்மார்த்தமான கருத்துரைகள் வழங்கி சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      நீக்கு
  35. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    மிகவும் சிறப்பான முறையில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு எழுதியுள்ளீர்கள் வை.கோ சார். சந்தோஷமாக இருக்கிறது.தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMVI August 12, 2013 at 9:50 PM

      வாங்கோ. வணக்கம். தங்களின் அபூர்வ வருகையில் என் மனம் தனியானதோர் மகிழ்ச்சி அடைந்தது.

      நீங்க எங்க வரப்போறீங்க என்ற அவநம்பிக்கையுடன் தான் நள்ளிரவில் மெயில் அனுப்பியிருந்தேன்.

      வருகை தந்து ஆச்சர்யப்படுத்தி விட்டீர்கள். அதற்கு முதலில் என் ஸ்பெஷல் நன்றிகள்.

      //இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

      அவர்களை இங்கு வாழ்த்தியுள்ளதற்கு என் நன்றிகள்.

      //மிகவும் சிறப்பான முறையில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு எழுதியுள்ளீர்கள் வை.கோ சார். சந்தோஷமாக இருக்கிறது. //

      அப்படியா ???? நிஜமாவா ???? ;)))))

      //தங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

      சந்தோஷம்மா.

      தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  36. பதில்கள்
    1. அப்பாதுரை August 12, 2013 at 9:55 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //adengappa! அடேங்கப்பா !
      nalla manam vaazhga. நல்ல மனம் [ பூ மணம் ;))))) ] வாழ்க !!//

      நல்ல மனத்துடன் வருகை தந்து நறுமணம் வீசும் கருத்தாக ’வாழ்க’ எனச் சொல்லி வாழ்த்தியுள்ள்து என்னையும் ‘அடேங்கப்பா’ என வியப்படையச்செய்து விட்டது. மிக்க நன்றி, சார்.


      நீக்கு
  37. ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நேரடியாக அவர்களது வலைத்தளத்திலேயே பதிவு செய்துவிட்டேன்.
    இங்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த உங்களுக்கும் நன்றி.

    உங்கள் விருந்தில் படைத்துள்ள எல்லாவற்றையும் பீடா உட்பட ரசித்து சுவைத்தேன். நன்றி வெற்றிவிழா மிக மிகப் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Viya Pathy August 12, 2013 at 10:02 PM

      வாருங்கள், வணக்கம்.

      //ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நேரடியாக அவர்களது வலைத்தளத்திலேயே பதிவு செய்துவிட்டேன்.//

      மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

      //இங்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த உங்களுக்கும் நன்றி.//

      மிகவும் சந்தோஷம் + நன்றிகள்.

      //உங்கள் விருந்தில் படைத்துள்ள எல்லாவற்றையும் பீடா உட்பட ரசித்து சுவைத்தேன். நன்றி வெற்றிவிழா மிக மிகப் பிரமாதம்.//

      ஆஹா, ரசித்து, ருசித்து, சுவைத்து மகிழ்ந்தது கேட்க சந்தோஷமாக உள்ளது.

      என் தளத்தில் இதுதான் தங்களின் முதல் வருகை என நினைக்கிறேன்.

      அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் நன்றியோ நன்றிகள். வாழ்க !

      நீக்கு
  38. ஓடி வந்துவிட்டேன்! முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளத்தில் countdown பண்ணி பண்ணி பின்னூட்டம் போடுவதை ரசித்துக் கொண்டேதான் இருந்தேன்.

    அந்த நல்ல நாளும் இன்று வந்ததே!

    சகபதிவர்களை மனம் விட்டுப் பாராட்டும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
    அடடே! நேரம் ஆகிவிட்டதே! சொகுசுப் பேருந்து புறப்பட்டு விடப்போகிறது! திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களைப் பாராட்ட போய்விட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan August 12, 2013 at 10:29 PM

      வாங்கோ திருமதி ரஞ்ஜனி மேடம். வணக்கம்.

      //ஓடி வந்துவிட்டேன்! //

      அடடா, நான் ஒரு பேச்சுக்கு “ஓடிவாங்கோ .... ஓடி வாங்கோ ... உடனே ஓடி வாங்கோ .... அவசரம் ..... அவசியம்’ ன்னு மெயில் கொடுத்தால் இப்படி நீங்க நிஜமாகவே ஓடி வரலாமா?

      மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குதே ..... பாவம் உங்களுக்கும், என்னைப்போலவே.

      அமைதியா உட்காருங்கோ. கொஞ்சம் தீர்த்தம் [குவார்ட்டர் இல்லை] சாப்பிடுங்கோ.

      //முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளத்தில் countdown பண்ணி பண்ணி பின்னூட்டம் போடுவதை ரசித்துக் கொண்டேதான் இருந்தேன். //

      ஆஹா, அந்த இரகசியம் எங்கள் இருவரையும் தவிர, உங்களுக்கும் தெரிந்து விட்டதா? போச்சுடா !

      யாரிடமும் இதை சொல்லிடாதீங்கோ, ப்ளீஸ்.

      //அந்த நல்ல நாளும் இன்று வந்ததே!//

      ஆமாம். மேடம் இந்த நாள் இனிய நாளாக வந்தே விட்டது.

      //சகபதிவர்களை மனம் விட்டுப் பாராட்டும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.//

      இன்று மிகப் பிரபல பதிவராகத் திகழ்ந்துவரும் தங்களின் பாராட்டுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      //அடடே! நேரம் ஆகிவிட்டதே! சொகுசுப் பேருந்து புறப்பட்டு விடப்போகிறது! திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களைப் பாராட்ட போய்விட்டு வருகிறேன்.//

      ஆமாம். பஸ்ஸை விட்டுட்டாப்போச்சு. மீண்டும் உடம்பைத்தூக்கிண்டு மூச்சுவாங்க தலை தெரிக்க ஓட வேண்டியிருக்கும்.

      அதுபோல ஆனால் என்னிடம் சொல்லுங்கோ தனியே மிகப்பெரிய ஏ.ஸி.கார் ஏற்பாடு செய்கிறேன்.;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. //சகபதிவர்களை மனம் விட்டுப் பாராட்டும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.//

      நீங்கள் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளத்தில் countdown பண்ணி பண்ணி பின்னூட்டம் போடுவதை ரசித்துக் கொண்டேதான் இருந்தேன்.

      அந்த நல்ல நாளும் இன்று வந்ததே!/

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் ,பாராட்டுரைகளுக்கும் இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு

  39. நம் பெரியவர்கள் பெயர் சூட்டும்போது ஆண்டவன் நாமத்தை வைப்பார்கள். இவர்களைக் கூப்பிடும்போதாவது ஆண்டவன் பெயரை உச்சரிக்கட்டுமே என்று. ஆனால் நீங்கள் ராஜராஜேஸ்வரி அஷ்டகமே சொல்ல வைத்து விட்டீர்கள். பாராட்டுவதிலும் உங்கள் பெருய மனசு தெரிகிறது. வஞ்சனையில்லாமல் போற்றுகிறீர்கள். அந்த நல்ல மனதுக்கு ஒரு பெரிய ” ஓ ஓ ஓ” நல்ல மனம் வாழ்க . நாடு போற்ற வாழ்க.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G.M Balasubramaniam August 12, 2013 at 11:15 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //நம் பெரியவர்கள் பெயர் சூட்டும்போது ஆண்டவன் நாமத்தை வைப்பார்கள். இவர்களைக் கூப்பிடும்போதாவது ஆண்டவன் பெயரை உச்சரிக்கட்டுமே என்று. ஆனால் நீங்கள் ராஜராஜேஸ்வரி அஷ்டகமே சொல்ல வைத்து விட்டீர்கள்.//

      ஏதோ தோன்றியது. இவர்கள் பெயரும் அதுவாக இருப்பதால், பொருத்தமாக இருக்குமே என சேர்த்து வைத்தேன்.

      இந்த அஷ்டகத்தை ஏற்கனவே நான் ஒரு தனிப்பதிவாகக் கொடுத்துள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2012/02/blog-post.html

      01.02.2012 அன்று, அதாவது அந்த மாத முதல் தேதியில் இந்தப்பதிவினைக் கொடுத்து ஆரம்பித்ததும் அந்த மாதம் என்னாலும் தினம் ஒரு பதிவுக்கு மேல் கொடுக்க முடிந்தது.

      அந்த மாத மொத்த நாட்களான 29 நாட்களில் 34 பதிவுகள் கொடுக்க முடிந்தது. சந்தோஷமாக இருந்தது. அவர்கள் பெயர் ராசி அப்படி.

      என் மூன்றவது மருமகள் மாசமாக இருக்கிறாள். 2014 மார்ச் வாக்கில் டெலிவரி இருக்கும். பேத்தி பிறக்கணும் என ஆசைப் படுகிறேன். பேத்தி பிறந்தால் அவளுக்கு “இராஜராஜேஸ்வரி” என்றே பெயர் வைப்பதாக இருக்கிறேன். அந்த என் மருமகளும் நேற்று அங்கு போய் ஓர் பின்னூட்டம் கொடுத்து வாழ்த்தி இருக்கிறாள்.

      // பாராட்டுவதிலும் உங்கள் பெரிய மனசு தெரிகிறது. வஞ்சனையில்லாமல் போற்றுகிறீர்கள். அந்த நல்ல மனதுக்கு ஒரு பெரிய ” ஓ ஓ ஓ” நல்ல மனம் வாழ்க . நாடு போற்ற வாழ்க.!//

      மனதுக்குப் பிடித்தமானவர்களாகவும் இருந்து, சாதனைகளும் செய்து முடித்துள்ள பாராட்டப்பட வேண்டியவர்களை, பாராட்டப்பட வேண்டிய நேரத்தில், மிகச்சரியாகப் பாராட்டத்துடிக்கும் தான் எப்போதும் என் மனது.

      நேரம் காலம் மற்ற சூழ்நிலைகள் மட்டும் ஒத்து வந்தால் போதும். மனதாரப்பாராட்டித் தீர்த்து விடுவேன்.

      இது ஒன்று தானே நம்மால் சுலபமாகச் செய்யமுடியக்கூடிய காரியம். அதில் கஞ்சத்தனமே கூடாது, ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.


      நீக்கு
    2. என் மூன்றவது மருமகள் மாசமாக இருக்கிறாள். 2014 மார்ச் வாக்கில் டெலிவரி இருக்கும். பேத்தி பிறக்கணும் என ஆசைப் படுகிறேன். பேத்தி பிறந்தால் அவளுக்கு “இராஜராஜேஸ்வரி” என்றே பெயர் வைப்பதாக இருக்கிறேன்/

      தங்கள் மனம் போல் சிறப்பாக அமைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்..

      நீக்கு
    3. இராஜராஜேஸ்வரி August 26, 2013 at 5:55 AM

      வாங்கோ, வணக்கம், வந்தனங்கள்.

      *****என் மூன்றாவது மருமகள் மாசமாக இருக்கிறாள். 2014 மார்ச் வாக்கில் டெலிவரி இருக்கும். பேத்தி பிறக்கணும் என ஆசைப் படுகிறேன். பேத்தி பிறந்தால் அவளுக்கு “இராஜராஜேஸ்வரி” என்றே பெயர் வைப்பதாக இருக்கிறேன்.*****

      //தங்கள் மனம் போல் சிறப்பாக அமைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்..//

      ;))))))))))))))))))))))) மிக்க ந்ன்றி ;)))))))))))))))))))))))

      இப்போதே கற்பனையில் என் பேத்தி இராஜராஜேஸ்வரியைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டேன். ;)))))))))))))))))))))))

      நீக்கு
  40. அட்டகாசமான பாராட்டுகள்... இதனைவிட ஒருவரை பாராட்டுவது கடினம்... சிறப்பாக செய்துள்ளீர்கள்... அவருக்கும், உங்களுக்கும் பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவின் புன்னகை August 12, 2013 at 11:20 PM

      வாருங்கள், வணக்கம்.

      //அட்டகாசமான பாராட்டுகள்... இதனைவிட ஒருவரை பாராட்டுவது கடினம்... சிறப்பாக செய்துள்ளீர்கள்... //

      அப்படியா சொல்கிறீர்கள். எனக்கென்னவோ இன்னும் நிறையவே பாராட்டி இருக்கணுமோ எனத்தோன்றியது.

      எதுவுமே சுருக்கமாக எழுத வேண்டும், பிறர் மனதில் அது ’சுருக்’ என்று தைக்க வேண்டும் என என் மானஸீக குருநாதர் அவர்கள் அடிக்கடிச் சொல்லுவார்.

      அதனால் நானும் சுருக்கோ சுருக்கென்று சுருக்கி இந்தப்பதிவினைக் இப்படிக் கொடுத்துள்ளேன்.

      எனக்கென்னவோ முழுதிருப்தி ஆகவில்லை. ‘இரவின் புன்னகை’யே இப்படிச்சொல்லிப்பாராட்டியிருப்பதால் எனக்கு இப்போ பகலில் புன்னகை ஏற்பட்டு, மகிழ்ச்சியுடன் இதனை டைப் அடித்துக்கொண்டு இருக்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அசத்தலான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நண்பரே.

      //அவருக்கும், உங்களுக்கும் பாராட்டுகள்...//

      இருவரையும் சேர்த்துப்பாராட்டியுள்ளதற்கு மிக்க நன்றி, நண்பரே.

      நீக்கு
  41. உங்கள் மகிழ்ச்சி என்னையும் தொற்றி கொண்டுவிட்டது. ரொம்ப சந்தோஷமாயிருக்கு...! வயிறு முட்ட விருந்து வேற.. இருந்தாலும் சந்தோஷமா ஓடி போய் வாழ்த்துக்களை சொல்லிடறேன்.. ஒரே கலர்புல் திருவிழாவா இருக்கு இன்னிக்கு..!
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு August 12, 2013 at 11:21 PM

      வாங்கோ டீச்சர், வணக்கம்.

      //உங்கள் மகிழ்ச்சி என்னையும் தொற்றி கொண்டுவிட்டது. ரொம்ப சந்தோஷமாயிருக்கு...! //

      இருக்காதா பின்னே ! எல்லாமே உங்களால் வந்த வினை தானே.

      [மகிழ்ச்சி என்பது ஒரு தொற்று நோய் போலத்தான். நம்மைப் போன்ற ஒரே எண்ணம் உள்ள எழுத்தாளர்களைச் சுலபமாகத் தொற்றிக்கொள்ளும். ;))))) ]

      -=-=-=-

      உங்கள் நினைவுகளுக்காக :

      http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_7102.html

      வலைச்சரத்தில் தாங்கள் ஆசிரியராக இருந்தபோது 25.12.2012 அன்று, இவர்களின் பதிவுகளை முதல் நாள் முதல் அறிமுகமாகக் கொண்டுவந்து, அதனுடன் இலவச இணைப்பாக என் பெயரையும் இழுத்துப் போட்டு, ’பின்னூட்டப்புயல்’ என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டீர்களே, அதனால் வந்த விளைவுகள் தான் இவையெல்லமே.

      1) இராஜராஜேஸ்வரி

      வலைத்தளம்: “மணிராஜ்” தினம் ஒரு பதிவுக்குக் குறையாமல்
      மிகச்சிறந்த படங்களுடன் ஆன்மிக விஷயங்களை அள்ளித்தரும் பதிவர் 705 நாட்களுக்குள் 768 பதிவுகளுக்கு மேல் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

      இவரின் பெரும்பாலான பதிவுகளில் நம் பதிவுலகின் பின்னூட்டப்புயலான வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் ஏராளமான கருத்துக்களை தாராளமாகக் காணமுடிகிறது.

      ஏற்கனவே தங்கமாக ஜொலிக்கும் இந்தப் பதிவரின் பதிவுகள், வை.கோ. ஐயாவின் பல்வேறு கருத்துக்களால் வைரமாக ஜொலிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.

      1] அன்பென்ற மழையிலே
      2] கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்


      ”ஓய்ந்திருந்த புயலை உசுப்பிவிட்ட உஷா” டீச்சர் வாழ்க!

      -=-=-=-=-

      //வயிறு முட்ட விருந்து வேற.. இருந்தாலும் சந்தோஷமா ஓடி போய் வாழ்த்துக்களை சொல்லிடறேன்.. //

      வயிறு முட்டச்சாப்பிட்டு விட்டு எப்படி ஓடமுடியும்? பேசாமல் சொகுசு பஸ்ஸில் ஏறிப்போங்கோ. உங்களுக்காக ஸ்பெஷல் ட்ரிப் அடிக்கச்சொல்லியிருக்கிறேன்.

      -=-=-

      நேற்று முந்தினம் இரவு வேலூர் கோட்டை பூராவும் சுற்றி உங்களைத்தேடிக் கண்டுபிடிக்க நான் பட்டபாடு நாய் படாது.

      ஒருவரைக்கேட்டால், ”அந்த அம்மா எழுத்தாளர் இந்துமதியைச் சிறப்புப்பேட்டி எடுக்கப் போயிருக்காங்கோ” என்கிறார்.

      மற்றொருவரைக்கேட்டால் “அவங்க ரொம்ப பிஸி, ’நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போயிருக்காங்க” என்கிறார்.

      மொத்தத்தில் அன்று இரவு நீங்க என் தொடர்பு எல்லைக்கு அப்பால் மட்டுமே இருந்தீர்கள். பிறகு ஒருவழியா உங்களை ஒரே அமுக்கா அமுக்கிப்பிடிச்சுட்டேன் இல்ல ..... விடுவோமா பின்ன ! ;)

      -=-=-

      //ஒரே கலர்புல் திருவிழாவா இருக்கு இன்னிக்கு..! நன்றி!//

      ;))))) மகிழ்ச்சியோ மகிழ்ச்சி டீச்சர். உங்கள் பழைய மாணவன் கோபாலகிருஷ்ணனை மதித்து வருகை தந்து மகிழ்வித்ததற்கு.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. தினமலர் விழாவில் இந்த இரண்டு நாட்களும் செலவிட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளர் இந்துமதி அம்மாவிடம் கலந்துரையாடியது இனிய தருணங்கள்...! அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி!

      நீக்கு
    3. உஷா அன்பரசு August 16, 2013 at 3:02 AM

      வாங்கோ டீச்சர், தங்களின் மீண்டும் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

      //தினமலர் விழாவில் இந்த இரண்டு நாட்களும் செலவிட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளர் இந்துமதி அம்மாவிடம் கலந்துரையாடியது இனிய தருணங்கள்...! அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி!//

      எல்லாமே கேள்விப்பட்டேன். உங்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டேன். தினமலர் பெண்கள் மலரிலும் அறிவிப்பினைப் பார்த்தேன். வாழ்த்துகள்.

      பொறுமையாகப் பகிர்ந்து விட்டு, தகவல் கொடுங்கோ, நான் கட்டாயம் வந்து படிக்கிறேன். அன்புடன் கோபு

      நீக்கு
    4. மிக அசாதாரணமான கலர்ஃபுல் திருவிழாவை நடத்திக்காட்டி தங்கமாய் வைரமாய் ஜொலிக்கும் ஐயாவின் சிரத்தை மிகு உழைப்பிற்கு மனம் நிறைந்த நன்றிகள்..!

      நீக்கு
    5. இராஜராஜேஸ்வரி August 26, 2013 at 6:00 AM

      வாங்கோ, வணக்கம், வந்தனங்கள்.

      //மிக அசாதாரணமான கலர்ஃபுல் திருவிழாவை நடத்திக்காட்டி தங்கமாய் வைரமாய் ஜொலிக்கும் ஐயாவின் சிரத்தை மிகு உழைப்பிற்கு மனம் நிறைந்த நன்றிகள்..!//

      ஏதோ நீண்ட நாட்களாகவே [உங்களின் 900வது பதிவுக்குப்பிறகு] திட்டமிட்டு செதுக்கியது இந்த வைரம்.

      மேலும் மேலும் தங்கத்தையும் வைரத்தையும் இதில் சேர்த்து ஜொலிக்கச்செய்து கொண்டே தான் இருந்தேன்.

      முழுத்திருப்தி ஏற்படும்வரை அதை மெருகூட்டி, மெருகூட்டி, பிறகு திருஷ்டாகிவிடுமோ ]MISFIRE ஆகி MISUNDERSTANDING ஏற்பட்டுவிடுமோ] என்ற மனக் கவலையில் அவற்றைச்சுருக்கிச் சுருக்கி தினமும் பல்வேறு வடிவங்களில் மாற்றி வடிவமைத்து, இந்த இறுதி வடிவத்தை என்னால் [என் மனதுக்கு முழு திருப்தி இல்லாமலேயே] ஏதோ ஒரு மாதிரி எட்டிட முடிந்தது.

      தங்களிடம் முன்கூட்டியே சொல்லி, இதை வெளியிட ஒப்புதல் வாங்க வேண்டும் என என் மனம் துடியாய்த்துடித்தது என்பது என்னவோ உண்மைதான்.

      இருப்பினும் ஒரு SUSPENSE ஆக இருக்கட்டுமே என்று என் மற்றொரு மனது நினைத்ததாலும், இந்த இறுதி வடிவம் கொடுத்ததில் ஏதும் யாரும் தவறாக நினைக்கவே இடமில்லை என்று என் உள்மனது சொன்னதாலும், தங்களுக்கு நான் ஏதும் முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை.

      தங்களின் மனம் நிறைந்த சந்தோஷங்களுக்கும், என் இந்த கலர்ஃபுல் திருவிழாவினை பெரிய மனதுடன் தாங்களும் ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  42. lதிருமதி இராஜராஜேச்வரியால் இவ்வளவு அழகாக அருமையாக, தொடர்ச்சியாக எழுதமுடிகிரது என்ற வியப்பு என்னுள்ளே எப்போதும்
    இருந்து கொண்டே இருக்கிரது. அதிலும், ஆன்மீகக் கட்டுரகளாகவே.

    1000,கட்டுரைகள், மெய்க் கட்டுரைகள்,பாராட்ட வார்த்தைகள் போதாது.
    அவரைக் கௌரவித்த, உங்களுக்கும், அவருக்கும் என் அன்புப் பாராட்டுகள், எனக்கு வயதிருப்பதால் மனமார்ந்த என் ஆசீர்வாதங்களும் திருமதி இராஜராஜேஸ்வரிக்கும், அவரின் குடும்பத்தினருக்கும். உங்கள்,குடும்பத்தினருக்கும்,உங்களுக்கும்
    அளிக்கிறேன்.
    பஸ் வசதி கொடுத்திருப்பதால் , முதலாவதாக நான் தயாராகி
    இடமும் பிடித்துவிட்டேன்.
    எல்லோரையும் ஊக்குவித்து பாராட்டும் நீங்கள் ,அவருக்கு ஆயிரத்திற்கும்,பின்னூட்டம், கொடுத்ததும், அவரும் உங்களுடைய
    எல்லா பதிவிலும் முன் நிற்பதும் ஒரு ஸாதாரண காரியமில்லை.
    முன்மாதிரியாகத் திகழுகிறீர்கள்.
    சாதனைத் திலகங்கள். நான் நினைக்கிறேன். அன்புடனும், ஆசிகளுடனும்.
    வாருங்கள் யாவரும் சேர்ந்து பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi August 12, 2013 at 11:31 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //திருமதி இராஜராஜேச்வரியால் இவ்வளவு அழகாக அருமையாக, தொடர்ச்சியாக எழுதமுடிகிறது என்ற வியப்பு என்னுள்ளே எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதிலும், ஆன்மீகக் கட்டுரைகளாகவே. 1000,கட்டுரைகள், மெய்க் கட்டுரைகள்,பாராட்ட வார்த்தைகள் போதாது.//

      ஆமாம் மாமி, அவர்கள் ஒரு தெய்வீகப்பிறவி தான். சமத்தோ சமத்து. அழுந்தச் சமத்து. அதே சமயம் அதிபுத்திசாலி. எனக்கே மிகவும் வியப்பாகத்தான் உள்ளது. ;)

      //அவரைக் கௌரவித்த, உங்களுக்கும், அவருக்கும் என் அன்புப் பாராட்டுக்கள். எனக்கு வயதிருப்பதால் மனமார்ந்த என் ஆசீர்வாதங்களும் திருமதி இராஜராஜேஸ்வரிக்கும், அவரின் குடும்பத்தினருக்கும். உங்கள் குடும்பத்தினருக்கும், உங்களுக்கும் அளிக்கிறேன். //

      எங்கள் இருவர் குடும்பங்களையும் ஒரே குடும்பமாக்கி இங்கு நீங்கள் ஆசீர்வதித்துள்ளதற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாமி.

      அந்த உங்கள் நாட்டு [நேபாளம்] பசுபதிநாதரே நேரில் வந்து வாழ்த்தி, அருளாசி வழங்கியது போல மகிழ்கிறேன்.

      //பஸ் வசதி கொடுத்திருப்பதால் , முதலாவதாக நான் தயாராகி
      இடமும் பிடித்துவிட்டேன்.//

      அடடா, உங்களுக்குத்தான் முதல் இடம். முன்பக்கம் டிரைவருக்கு அருகிலேயே. பின்னால் அமர்ந்தால் தூக்கித்தூக்கிப்போடக்கூடும். அதனால் உங்களுக்கான இடத்தை வசதியாக முன்கூட்டியே ரிஸர்வ் செய்து கர்சீப் போட்டு காமாக்ஷி மாமி என எழுதி வைத்து விட்டேன்

      //எல்லோரையும் ஊக்குவித்து பாராட்டும் நீங்கள், அவருக்கு ஆயிரத்திற்கும் பின்னூட்டம் கொடுத்ததும், அவரும் உங்களுடைய
      எல்லா பதிவிலும் முன் நிற்பதும் ஒரு ஸாதாரண காரியமில்லை.
      முன்மாதிரியாகத் திகழுகிறீர்கள். சாதனைத் திலகங்கள் என நான் நினைக்கிறேன்.//

      எல்லாம் உங்களைப்போன்ற பெரியோர்கள் செய்த ஆசீர்வாதம் மாமி. நினைத்துப்பார்த்தால் மிகப்பெரிய சாதனையாகத்தான் தோன்றுகிறது. எங்கள் இருவருக்கும் “சாதனைத்திலகங்கள்” என்ற பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளது, ரொம்ப சந்தோஷமாக இருக்கு மாமி.

      //அன்புடனும், ஆசிகளுடனும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் [எங்களின்] மனமார்ந்த இனிய நன்றிகள், மாமி.

      நீக்கு
    2. தங்களைப்போல் நல்லமனம் படைத்தவர்கள் ஆசிகளுக்கு தலைவணங்கிய நிறைவான நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..!

      நீக்கு
  43. பிரமாதமான பதிவு. கலக்கி விட்டீர்கள்.
    விருந்தையும் சுவைத்தேன். மொய்யையும் வைத்து விட்டேன். இதோ கிளம்பி விட்டேன். அவர்களின் இருப்பிடத்திற்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி August 12, 2013 at 11:51 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //பிரமாதமான பதிவு. கலக்கி விட்டீர்கள்.//

      அப்படியா? நிஜம்மாவா?

      //விருந்தையும் சுவைத்தேன். மொய்யையும் வைத்து விட்டேன்.//

      விருந்து சுவைத்தீர்கள் OK. மொய்யையும் வைத்து விட்டீர்களா? ஏன்? எதற்கு? எங்கே?

      ஓஹோ, திரும்ப உங்க ஹேண்ட் பேக்கிலேயே வைத்து விட்டீர்களா ! அதானே பார்த்தேன். சரி, சரி OK OK சந்தோஷம்.

      //இதோ கிளம்பி விட்டேன். அவர்களின் இருப்பிடத்திற்கு...//

      நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரல்லவா [கொங்கு நாட்டுக்கோவை] அவர்களின் இருப்பிடம். அதனால் தான் இந்த அவசரமோ ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  44. சாமீ ! விர்சுவல் விழாக்கோலம்,! என்ன ஒரு ஆராய்ச்சி,எங்கள ஹெல்ப் கூட கூப்பிடாம தனியாளா எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்து அசத்திட்டீங்க சார்.அந்த பூனை என்ன வேல பாக்குது பாருங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar August 13, 2013 at 12:13 AM

      வாங்கோ ஆச்சி, வணக்கம். நல்லா இருக்கீங்களாம்மா?

      //சாமீ ! விர்சுவல் விழாக்கோலம்,! என்ன ஒரு ஆராய்ச்சி//

      நிஜம்மாவா ஆச்சி? நல்லா இருக்கா ?
      விபரமாக மெயில் கொடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      // எங்கள ஹெல்ப் கூட கூப்பிடாம தனியாளா எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்து அசத்திட்டீங்க சார். //

      நண்டும் சிண்டும் நார்த்தங்கா வண்டுமா இரண்டு குழந்தைகளும் உங்களைப் படுத்துமேம்மா. பிறகு எப்படி ஹெல்ப்புக்குக் கூப்பிட முடியும்?

      தனியாளா எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்தால் தானே FULL CREDIT உம் எனக்கே கிடைக்கும். ;)

      அப்படியும் இதுவரை ஒண்ணும் கிடைக்கக்காணும். உங்களை மாதிரி நல்லவங்க சிலபேரு மட்டும் பாராட்டியிருக்கீங்க. அதுவரை சந்தோஷமே.

      //அந்த பூனை என்ன வேல பாக்குது பாருங்க.//

      அடடா, அது அமைதியாகத்தான் நின்னுக்கிட்டு இருந்துச்சு.

      சும்மா இருந்த அதை நீங்க என்ன பண்ணினீங்க ஆச்சி?

      இப்போ நீங்க சொன்னபிறகு தான் அதை உற்றுப்பார்த்தேன்.

      அடடா என்னைப்போல சமத்தா இருந்திச்சே அது.

      அதைப்போய் இப்படி என்னவெல்லாமோ வேலை பண்ண வெச்சுட்டீங்களே !

      போங்க ...... நீங்க ரொம்ப மோசம் ஆச்சி ;)))))

      எல்லாவற்றையும் விட்டுவிட்டு பூனையைச் சுட்டிக்காட்டிப் பின்னூட்டம் கொடுத்துட்டீங்கோ. பேசிக்கிறேன். ;)

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வேடிக்கையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஆச்சி.

      அன்புடன் கோபு

      நீக்கு
  45. indru sevvai kizhamai rajarajeshwari astagam padikka vaithamaikku nandrigal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. girijasridhar August 13, 2013 at 12:19 AM

      வா .... கிரிஜா, செளக்யமா? அநிருத் எப்படி இருக்கிறான்? இன்று அதிசயமாக இங்கு வந்திருக்கிறாய். ஆச்சர்யமாக உள்ளது. அங்கு வேறு போய் அவர்கள் பதிவிலும் பின்னூட்டம் கொடுத்து அசத்தி இருக்கிறாய். சந்தோஷம்.

      //indru sevvai kizhamai rajarajeshwari astagam padikka vaithamaikku nandrigal.//

      அந்த ஸ்லோகம் நல்லா இருக்கும். அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் அம்பாளின் சின்னச்சின்ன நாமாவளிகளே. பிரித்துப்பிரித்துச் சொல்லலாம். அடிக்கடி சொல்லு. நொற்று ஆகி விடும். கடைசி வரி மட்டும் Common - Repeat ஆகும்.

      உனக்குப் பிறக்க இருக்கும் குழந்தைக்கு அதே பெயர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி என்றே வைத்து விடுவோம். [எனக்குப் பேத்தி தான் வேண்டும் - சொல்லிட்டேன், சொல்லிட்டேன். ;))))) ]

      அன்புள்ள அப்பா

      நீக்கு
    2. hahaha!!!! nandri..mama..kandipaga antha slogathai sollikondu varukiren....

      நீக்கு
    3. ;))))) சந்தோஷம். மற்றவை நாம் நேரில் சந்திக்கும் போது ! ;)))))

      நீக்கு
    4. தங்களின் ஆத்மார்த்தமான அபூர்வ வருகைக்கும் அருமையான ஆழ்ந்த கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள்..

      தாங்கள் என்றும் எல்லா வளங்களும் பெற்று
      சிறப்புடன் வாழ இறைவனைப்பிரார்த்திக்கிறேன்..

      நீக்கு
    5. இராஜராஜேஸ்வரி August 27, 2013 at 4:23 AM

      //தாங்கள் என்றும் எல்லா வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனைப்பிரார்த்திக்கிறேன்..//

      என்னுடைய சொந்த பெரிய அக்காவின், மூத்த மகனின் ஒரே மகளான இவள், என்னை ஆரம்பத்திலிருந்தே [சிறு குழந்தையிலிருந்தே - அவளின் அப்பாவைப்போலவே] மாமா என்று தான் அழைப்பாள்.

      இவளின் ஆயுஷ்ஹோமத்தன்று நான் இவளை தூக்கிக் கொஞ்சிக்கொண்டிருக்கும் புகைப்படம் எங்களிடம் உள்ளது.

      இப்போது அவளுக்கு நான் மாமனாரான பிறகும் அதே ’மாமா’ என்று தான் அழைத்து வருகிறாள்.

      என் முதல் இரண்டு நாட்டுப்பெண்களும் என்னை ’அப்பா’ என்று அழைக்கும் போது இவளுக்கு மட்டும் இதில் சிறப்புச்சலுகை. ;)

      ஒன்றுக்குள் ஒன்றாக உறவுகள் விட்டுப்போகாமல் அமைந்தது தெய்வ சங்கல்ப்பம்.

      http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html என்ற என் அனுபவப் பதிவினில் நான் பட்ட கஷ்டங்களெல்லாம் இவளுக்காக மட்டுமே.

      இதுபற்றி உங்களுக்கு ஏற்கனவே நிச்சயமாகத் தெரியும்.

      இங்கு இதை நான் குறிப்பிட்டுள்ளது மற்றவர்களுக்காக மட்டுமே.

      குழந்தையான இவளுக்காக தாங்கள் பிரார்த்தனை செய்துகொள்வதாகச் சொல்லியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      -=-=-=-=-

      இந்தப்பதிவுக்கு கடைசியாக பின்னூட்டம் இட்டுள்ள, சந்தானம் என்பவனும் என் சொந்த பெரிய அக்காவின் கடைசி பிள்ளை தான். அவனும் என் சொந்த மறுமான் தான். பேங்க் ஒன்றில் சீனியர் மேனேஜராக இருக்கிறான்.

      கிரிஜாவுக்கு சந்தானம் சொந்த சித்தப்பா.

      கிரிஜாவுக்கு மொத்தம் ஐந்து சித்தப்பாக்கள் + 2 அத்தைகள். ;)))))))

      -=-=-=-=-

      பின்னூட்டப்பகுதியை திடீரென்று தாமரைத் தடாகமாகவே மாற்றி, புத்தம் புதிதாக 25 தாமரை மலர்களை இதழ் விரித்து மலரச்செய்துள்ளது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      அதுமட்டுமல்ல, இதனால் மொத்த பின்னூட்ட எண்ணிக்கையும் நமது SATURATION LEVEL ஆன 200ஐ எட்டிவிட்டது என்பதிலும் மகிழ்ச்சியே.

      -=-=-=-=-

      அனைத்துக்கும், அனைவர் சார்பிலும் என் மனமார்ந்த, இனிய, அன்பு நன்றிகளை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  46. romba periay vishayam......... ethanai peraala seyya mudiyum.
    en siram thaazhntha vanakkam and paaraattukkaL

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shakthiprabha August 13, 2013 at 12:21 AM

      வாங்கோ ஷக்தி. வணக்கம். நல்லா இருக்கீங்களா? செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? பார்த்து எவ்ளோ நாளாச்சு !!!!

      நீங்க வருகை தந்து இன்று இங்கு கருத்துக்கூறுவீர்கள் என நான் கொஞ்சம்கூட எதிர் பார்க்கவே இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்றுதான மெயில் கொடுத்திருந்தேன். அது ரொம்ப நல்லதாப்போச்சு, ஷக்தி. மனதுக்கு சந்தோஷமாக உள்ளதும்மா.

      //romba periay vishayam......... ethanai peraala seyya mudiyum.
      en siram thaazhntha vanakkam and paaraattukkaL
      ரொம்ப பெரிய விஷயம்...... எத்தனை பேரால செய்ய முடியும்?//

      நிஜம்மாவா ஷக்தி? மிகவும் சந்தோஷம்மா. புதிய ஷக்தி கிடைத்தது போல உள்ளது, இதை - ஷக்தி சொல்வதைக்கேட்க. ;)

      //என் சிரம் தாழ்ந்த வணக்கம் + பாராட்டுக்கள்//

      மிக்க மகிழ்ச்சி, ஷக்தி.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஷக்தி.

      நீக்கு
  47. romba romba periya vishayam. rajeswari avargaLukku en vanakkam matrum paaraattukkaL

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shakthiprabha August 13, 2013 at 12:22 AM

      //romba romba periya vishayam. rajeswari avargaLukku en vanakkam matrum paaraattukkaL ரொம்ப ரொம்பப் பெரிய விஷயம். ராஜேஸ்வரி அவர்களுக்கு என் வணக்கம் மற்றும் பாராட்டுக்கள்.//

      இது சொன்னீங்களே “ரொம்ப ரொம்பப் பெரிய விஷயம்”ன்னு, அது கரெக்ட். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து பாராட்டுக்களும் இங்கு தெரிவித்துள்ளதற்கு அவர்கள் சார்பில் என் நன்றிகள், ஷக்தி.

      நீக்கு
  48. I have heard about the greatness and skills of Mrs Rajeshwari Jegamani from you so many times.But today i happened to witness it.Vinayagar agaval ,1000th Gem in her crown and 1000th grand treat for the readers and her fans.And its doubly nice on ur part to publish this to many and letting us knw abt her.pirarai paratta vendum ennum ennam elloridamum iruppathillai.antha oru sirappu thanmai thangalidam iruppathai parthu vianthen!!!!!!!avargalidam thangal kondulla mariyathai ennai melum viyakka seikirathu.The genuine appreciating quality within u has created N number of people around u which is quite visible.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. girijasridhar August 13, 2013 at 12:29 AM

      I have heard about the greatness and skills of Mrs Rajeshwari Jegamani from you so many times.

      திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் தனிசிறப்புகள் மற்றும் தனித்திறமைகள் பற்றி பலமுறை தங்களின் வாயினால் புகழ்ந்து பேசப்பட்டு நானே கேள்விப்பட்டுள்ளேன்.

      But today i happened to witness it.

      ஆனால் இன்றுதான் அதை அவர்களின் பதிவினில் காணும் பாக்யம் பெற்றேன்.

      Vinayagar agaval, 1000th Gem in her crown and 1000th grand treat for the readers and her fans.

      அவர்களின் எழுத்தின் ரஸிகர்களுக்கும், பின் தொடர்போருக்கும் ஆயிரமாவது விருந்தாக விநாயகர் அகவலை அளித்து தன் வைரக்கிரீடத்தில் ஆயிரமாவது வைர இறகினை வெகு அழகாகச் சொருகிக் கொண்டுள்ளார்கள்.

      And its doubly nice on ur part to publish this to many and letting us knw abt her.

      அவர்களின் இத்தகையதோர் மாபெரும் வெற்றியை பலரும் அறியும் விதமாக, [ஓர் நல்ல விளம்பரம் போல] இந்தச் சிறப்புப் பதிவினைத் தாங்கள் இன்று அளித்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியினைத் தருவதாக உள்ளது.

      pirarai paratta vendum ennum ennam elloridamum iruppathillai.

      பிறரைப்பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருப்பது இல்லை.

      antha oru sirappu thanmai thangalidam iruppathai parthu vianthen!!!!!!!

      அந்த ஒரு சிறப்புத்தன்மை தங்களிடம் இருப்பதைப் பார்த்து நான் வியந்துபோனேன்.

      avargalidam thangal kondulla mariyathai ennai melum viyakka seikirathu.

      அவர்களிடம் தாங்கள் கொண்டுள்ள மரியாதை என்னை மேலும் வியக்கச் செய்கிறது.

      The genuine appreciating quality within u has created N number of people around u which is quite visible.

      தங்களிடம் உள்ள, மிகசிறந்த, உண்மையான, மனம் திறந்து பாராட்டும் குணமும் தரமுமே, உங்களைச்சுற்றி கணக்கில்லாத எண்ணிக்கையில், இத்தனை வாசகர்களை கூட வைத்திருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது.

      -=-=-=-

      அன்புள்ள கிரிஜா,

      உன்னிடமிருந்து கூட இவ்வளவு அழகானதோர் பாராட்டு எனக்கு [இந்த என் பதிவுக்குக்] கிடைக்கும் என நான் நினைக்கவே இல்லை.

      எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி, கிரிஜா.

      Affectionately yours,

      VGK

      நீக்கு
  49. ஆயிரம் பதிவுகளையிட்ட அறிவுஜீவியான திருமதி ராஜேஸ்வரி அவர்களை நேரில் காண ஆவலாயுள்ளேன்.இதற்குக் காரணமாக விளங்கும் தங்களின் அசத்தலான பதிவும் அமர்க்களமான விருந்தும் ஆயிரம் கோடி பெரும்.அவரின் பதிவிற்கே சென்று வாழ்த்துக் கூறுகிறேன்.தங்களுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rukmani Seshasayee August 13, 2013 at 12:44 AM

      வாங்கோ திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களே, அநேக நமஸ்காரங்கள்.

      தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      தாங்கள் வருவீர்களோ மாட்டீர்களோ என்ற சந்தேகத்துடன் தான் மெயில் கொடுத்தேன். தங்களின் வருகை இப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //ஆயிரம் பதிவுகளையிட்ட அறிவுஜீவியான திருமதி ராஜேஸ்வரி அவர்களை நேரில் காண ஆவலாயுள்ளேன்.//

      எனக்கும் இன்னும் அந்த பாக்யம் கிட்டவில்லை.

      //இதற்குக் காரணமாக விளங்கும் தங்களின் அசத்தலான பதிவும் அமர்க்களமான விருந்தும் ஆயிரம் கோடி பெரும்.//

      பிரபல மூத்த பத்திரிகை எழுத்தாளராகிய தங்களின் வாயால் இதைக்கேட்டதும் என் உடம்பெல்லாம் சிலிர்த்துப்போய் விட்டது.. தன்யனானேன்.

      //அவரின் பதிவிற்கே சென்று வாழ்த்துக் கூறுகிறேன். தங்களுக்கு என் நன்றி.//

      ஆகட்டும். அவர்களையும் வாழ்த்துங்கள். தங்களின் விலை மதிப்பெற்ற வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் பெற நாங்கள் என்ன தவம் செய்தோமோ! ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  50. எனக்கு மெயில் வந்ததுமே நானே வந்து பார்க்க நினைத்தேன்.. எப்போதும் எத்தனையோ பதிவுகள் அண்ணா நீங்கள் இட்டாலும் என்னிடம் வந்து பார்க்கும்படி சொன்னதில்லை.. பிரத்யேகமாக சொல்றீங்கன்னா கண்டிப்பா அதில் விஷேஷம் இருக்கும் என்று நினைத்தேன் அண்ணா.. அதே போலவே இராஜராஜேஸ்வரி இவர்கள் பெயரை உச்சரிக்கும்போதே ஒரு கம்பீரம் தோன்றுவதை உணர்கிறேன்...



    இனி இராஜிம்மா பற்றி....

    இராஜிம்மா நீங்க பகிர்வது முழுக்க முழுக்க ஆன்மீகப்பதிவு மட்டுமில்லாமல் ஒவ்வொரு பதிவுக்கும் தேர்ந்தெடுக்கும் படங்களில் இருந்து ஒவ்வொரு விளக்கமும் ஸ்லோகங்களும் பகிரும் நேர்த்தியும் கண்டிப்பாக ஃபுல் மார்க்ஸ் உங்களுக்கு தர வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manjubashini Sampathkumar August 13, 2013 at 12:45 AM

      வாங்கோ மஞ்சூஊஊஊஊஊ, வணக்கம்ப்பா / அநெக ஆசிகள்ப்பா.

      //எனக்கு மெயில் வந்ததுமே நானே வந்து பார்க்க நினைத்தேன்.. எப்போதும் எத்தனையோ பதிவுகள் அண்ணா நீங்கள் இட்டாலும் என்னிடம் வந்து பார்க்கும்படி சொன்னதில்லை.. பிரத்யேகமாக சொல்றீங்கன்னா கண்டிப்பா அதில் விஷேஷம் இருக்கும் என்று நினைத்தேன் அண்ணா..//

      மஞ்சுவின் பிஞ்சு விரல்களுக்கு வேலை வைக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில், மெயில் கொடுக்கலாமா வேண்டாமா என நான் வெகு நேரம் யோசித்தேண்டா மஞ்சு.

      பிறகு தகவல் தெரிவிக்காவிட்டாலும் என்னை அடிப்பாயோ என அஞ்சினேன். அதனால் மட்டுமே தகவல் அளித்தேன். அன்புடன் வருகை தந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான் மஞ்சு.

      //அதே போலவே இராஜராஜேஸ்வரி இவர்கள் பெயரை உச்சரிக்கும்போதே ஒரு கம்பீரம் தோன்றுவதை உணர்கிறேன்...//

      ஆஹா, என்னைப்போலவே என் தங்கச்சியும் உணர்வதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்ப்பா.

      “கம்பீரம்” என்பதே இங்கு மிகவும் பொருத்தமான வார்த்தை.

      The very opt & appropriate word you have used. ;))))))

      >>>>>

      இனி இராஜிம்மா பற்றி....

      இராஜிம்மா நீங்க பகிர்வது முழுக்க முழுக்க ஆன்மீகப்பதிவு மட்டுமில்லாமல் ஒவ்வொரு பதிவுக்கும் தேர்ந்தெடுக்கும் படங்களில் இருந்து ஒவ்வொரு விளக்கமும் ஸ்லோகங்களும் பகிரும் நேர்த்தியும் கண்டிப்பாக ஃபுல் மார்க்ஸ் உங்களுக்கு தர வேண்டும்...

      Yes. Your have correctly awarded / granted FULL MARK 100% to HER ;))

      நீக்கு
  51. அண்ணா உங்க சிரத்தை நான் அறிவேன்...

    உங்க பதிவுகள் மட்டுமல்ல.. நேரில் வந்து பார்க்கும்போது நீங்க எவ்ளவு பர்ஃபெட்டாக உங்கள் பதிவுகள் இடறீங்க என்பதின் ரகசியமும் மன்னி மூலம் அறியவும் பெற்றேன்...

    எந்த ஒரு வேலையும் ஈடுபாட்டோடு செய்வது உங்க வழக்கம் என்பதை...

    மாத்திரம் அல்ல.. உங்க பதிவுகளுக்கு மட்டுமல்லாது.. பிறர் படைப்புகளையும் ரசித்து வாசித்து.. உடனுக்குடன் பின்னூட்டங்கள் கவனிங்க அண்ணா... பின்னூட்டங்கள் அதுவும் ரசிக்கும்படி தருவது உங்க பாணி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manjubashini Sampathkumar August 13, 2013 at 12:50 AM

      //அண்ணா உங்க சிரத்தை நான் அறிவேன்...//

      ;))))) மிக்வும் சிரத்தையான பதில் கொடுத்துட்டீங்கோ மஞ்சு.

      //உங்க பதிவுகள் மட்டுமல்ல.. நேரில் வந்து பார்க்கும்போது நீங்க எவ்ளவு பர்ஃபெட்டாக உங்கள் பதிவுகள் இடறீங்க என்பதின் ரகசியமும் மன்னி மூலம் அறியவும் பெற்றேன்...//

      ஆஹா, எனக்கே தெரியாத அந்த ரகசியத்தை உங்க மன்னி உங்களிடம் சொல்லியிருக்கிறாளா? என்னென்னவெல்லாம் சொல்லியிருக்கிறாங்களோ? இரண்டு பெண்மணிகள் சந்தித்தாலே போச்சு ..... எல்லாமே போச்சு ..... முக்கால் மணி நேரம் எங்காத்திலே நீங்க தங்கியிருந்ததற்குள் இவ்வளவு நடந்து போச்சா? எனக்கு இதெல்லாம் சுவையாக [மர்மமான] செய்திகளாகவே உள்ளதே மஞ்சு. சொல்லக்கூடிய சமாசாரங்களாக இருந்தால் மெயிலில் சொல்லுங்கோ.

      //எந்த ஒரு வேலையும் ஈடுபாட்டோடு செய்வது உங்க வழக்கம் என்பதை...//

      அடடா, என்னைப்பற்றி எவ்வளவு PERFECT ஆக எனக்கே தெரியாத பல விஷயங்களை சொல்லி இப்படி அசத்திறீங்களே மஞ்சூஊஊஊ
      ;)))))

      //மாத்திரம் அல்ல.. உங்க பதிவுகளுக்கு மட்டுமல்லாது.. பிறர் படைப்புகளையும் ரசித்து வாசித்து.. உடனுக்குடன் பின்னூட்டங்கள் கவனிங்க அண்ணா... பின்னூட்டங்கள் அதுவும் ரசிக்கும்படி தருவது உங்க பாணி...//

      ஹைய்யோ ... ஹைய்யோ ... ஹைய்யோ ....

      இதையும் ரசிக்கும்படியே சொல்லியிருக்கீங்க மஞ்சு.

      நீக்கு
  52. இராஜிம்மா ஆன்மீக பதிவுகள் எழுதுவதை மட்டும் தான் அறிந்தேன்.. ஆனால் நீங்கள் ஒரு படி முந்திச்சென்று.. இராஜிம்மா இடும் பதிவுகள் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை 1000 பதிவுகள் இட்ட காலக்கணக்கும் அதன் வேகமும் அவரைப்பற்றிய நுணுக்கமாக அறிந்துச்சொன்ன அத்தனை விஷயங்களும் சத்திய வாக்கே அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இராஜிம்மா ஆன்மீக பதிவுகள் எழுதுவதை மட்டும் தான் அறிந்தேன்.. //

      கம்பீரமான அவர்களின் முழுப்பெயரைச்சொல்லாமல் இப்படி நீங்க குறுக்கி விட்டது எனக்கு அவ்வளவாக சம்மதம் இல்லை மஞ்சு. வேண்டுமானால் *அட என் ராஜாத்தி*ன்னு சொல்லுங்கோ. அது இன்னும் கொஞ்சம் பெட்டரா இருக்குமோ என்னவோ! ;)))))

      1000 பதிவுகளில் ஆன்மிகம் அதிகம் கலக்காமல் சுமார் 100 பதிவுகள் எழுதியிருக்காங்கோ, மஞ்சு. அதிலிருந்து சிலவற்றை .. ஒரு 35ஐ மட்டும் நான் இணைப்புடன் சுட்டிக்காட்டியுள்ளேன்.

      அதில் குறிப்பாக 34, 30, 26, 23, 18, 17, 16, 14 ஐ முதலில் பாருங்கோ. எவ்ளோ ஜோரான படங்கள் + எவ்ளோ விஷயங்கள் .. அப்பப்பா !

      //ஆனால் நீங்கள் ஒரு படி முந்திச்சென்று.. இராஜிம்மா இடும் பதிவுகள் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை 1000 பதிவுகள் இட்ட காலக்கணக்கும் அதன் வேகமும் அவரைப்பற்றிய நுணுக்கமாக அறிந்துச்சொன்ன அத்தனை விஷயங்களும் சத்திய வாக்கே அண்ணா.//

      அப்படியா மஞ்சு ! சத்தியமாகவே சொல்றீங்களா ?

      ஆயிரம் தான் இருந்தாலும் அவர்களின் பதிவுகள் ஆயிரமும் ஒரு மிகப்பெரிய சமுத்திரம் போல மஞ்சு.

      நான் BEACH ஓரமாக நின்று கொஞ்சூண்டு என் காலகளை மட்டும் நனைத்து வந்துள்ளேன்.

      அந்தச் சிறு மகிழ்ச்சியே என்னால் தாங்க முடியவில்லை.

      முழுக்கடலின் அகலமும் நீளமும் ஆழமும் உணர முடிந்தால் .. அப்பப்பா .......... யாரால் ”அ ந் த க் க ட லி ன்” முழு ஆழத்தையும் காணமுடியும்? ;)

      நீக்கு
  53. இராஜிம்மாவின் பதிவுகளில் ஒரு ஆத்மார்த்தம் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன்.. நீங்கள் இராஜிம்மா பதிவுகளைப்பற்றி எப்போதும் என்னிடம் உயர்வாய் சொல்லும்போது இன்னும் பற்று அதிகம் ஆனது இராஜிம்மா மீது..

    உங்கள் இருவரின் நட்பு என்றும் இறையருளால் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுகிறேன் அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manjubashini Sampathkumar August 13, 2013 at 12:52 AM

      //இராஜிம்மாவின் பதிவுகளில் ஒரு ஆத்மார்த்தம் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன்.. நீங்கள் இராஜிம்மா பதிவுகளைப்பற்றி எப்போதும் என்னிடம் உயர்வாய் சொல்லும்போது இன்னும் பற்று அதிகம் ஆனது இராஜிம்மா மீது..//

      அப்படியாம்மா மஞ்சு. ரொம்ப சந்தோஷம்.

      //உங்கள் இருவரின் நட்பு என்றும் இறையருளால் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுகிறேன் அண்ணா.//.

      ;))))) தாங்க் யூ மஞ்சு.

      நீக்கு
  54. இமாலய சாதனைக்குத் தலை வணங்குகிறேன்.அதை இவ்வளவு சிறப்பாகப் பாராட்டிய தங்களுக்கும் தலை வணங்குகிறேனஅம்மாடி!என்ன விருந்து!பஸ் ஏறிட்டேன்!இதோ புறப்பட்டாச்சு.....ச..........ர்,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டன் August 13, 2013 at 1:09 AM

      வாங்கோ ஐயா, வணக்கம்.

      //இமாலய சாதனைக்குத் தலை வணங்குகிறேன்.//

      மிக்க நன்றி, ஐயா. [அவ்விடம் தங்கள் தலை ஜாக்கிரதை]

      //அதை இவ்வளவு சிறப்பாகப் பாராட்டிய தங்களுக்கும் தலை வணங்குகிறேன. //

      சரி, சரி, மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.;)

      //அம்மாடி!என்ன விருந்து!//

      ஏராளமான செலவில் தாராளமாக அளிக்கப்பட்டுள்ளதாக்கும் ! ;)

      //பஸ் ஏறிட்டேன்! இதோ புறப்பட்டாச்சு.....ச..........ர்,,,,,,,//

      குறும்பும் குசும்பும் நகைச்சுவையும் சேர்ந்த கலவைதான் குட்டன் என்று கேள்விப்பட்டுள்ளேன். இப்போது அதை இங்கு கண்டேன். ;)

      தங்களின் அபூர்வ வருகைக்கும் அழகான நகைச்சுவைக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
  55. இராஜிம்மாவின் 1000 வது பதிவுகளுக்கு நீங்கள் சிரத்தையுடன் எடுத்து பகிர்ந்த ஸ்லோகத்தில் ஆரம்பித்து வரவேற்பும் கொண்டாட்டமும் திருவிழா போல் அத்தனை ஜகஜ்ஜோதியாக இருந்தது..

    விழாவுக்கு வந்தவர்களுக்கு சும்மா போகவிடுவீங்களா? குடிக்க பழரசமும் சுவைக்க விருந்தும்... மலர்களும் அற்புதம் அண்ணா...

    உங்கள் இருவரின் நட்பு என்றும் தொடர வாழ்த்துகிறேன் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manjubashini Sampathkumar August 13, 2013 at 1:17 AM

      //இராஜிம்மாவின் 1000 வது பதிவுகளுக்கு நீங்கள் சிரத்தையுடன் எடுத்து பகிர்ந்த ஸ்லோகத்தில் ஆரம்பித்து வரவேற்பும் கொண்டாட்டமும் திருவிழா போல் அத்தனை ஜகஜ்ஜோதியாக இருந்தது.. //

      அப்படியா மஞ்சு? நிஜம்மாவாச் சொல்றீங்க ? என் மஞ்சு என்னிடம் போய் பொய் சொல்லுவாளா? [தலையில் குட்டிக்கொண்டு விட்டேனம்மா .... லேஸாகத்தான் ... கவலைப்படாதீங்கோ]

      //விழாவுக்கு வந்தவர்களுக்கு சும்மா போகவிடுவீங்களா? குடிக்க பழரசமும் சுவைக்க விருந்தும்... மலர்களும் அற்புதம் அண்ணா...//

      ரொம்ப சந்தோஷம் மஞ்சு. ;)

      //உங்கள் இருவரின் நட்பு என்றும் தொடர வாழ்த்துகிறேன் அண்ணா...//

      நம் நட்பு போலவே அது தொடரட்டும் மஞ்சு.

      அப்புறம் ஒரு சின்ன கோரிக்கை மஞ்சு. நீங்க திருச்சிக்கு வந்து போனதற்கு அடையாளமா என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் சார் அவர்களின் லோகோ படத்தை கடத்திப்போய் உபயோகித்து வருகிறீர்க்ள்.

      கருத்துச்சொல்வது யார்? என்று அசப்பில் பார்த்தால் குழப்பமே ஏற்படுகிறது.

      ஆனால் அதை என்னால் கண்டு பிடிப்பது மிகவும் ஈஸி தான்.

      அவர் திருக்குறள் மாதிரி ஓரிரு வரிகளில் கருத்தளிப்பவர். நீங்க என்னைப்போல கிலோ மீட்டர் கணக்கில் எழுதுபவர். அதை வைத்தே சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்.

      என்னைப்பொருத்தவரை நீங்களும் அவரும் என் இரு கண்கள் போலவே தான்.

      இருந்தாலும் இது என்னவோ எனக்கு நியாயமாகப் படவில்லை.

      நேற்று இதைப்பற்றி நான் உங்களிடம் பேசியபோது, உங்கள் தரப்பு நியாயங்களாக ஏதேதோ சொன்னீர்கள்.

      நான் அவரிடம் இன்னும் இதைப்பற்றி பேசவில்லை.

      பிறகு எனக்கு ஓர் யோசனை உதித்தது. உங்களால் மாற்றிக்கொள்ள முடியாவிட்டால் அவராவது, அவருடைய லோகோவை வேறு படமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லவா ! அதற்காவது அவருக்கு நீங்களே யோசனை சொல்லுங்கோ.

      மொத்தத்தில் பதிவுலகில் யாருக்கும் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும். அது தான் என் கோரிக்கை. இருவரும் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்.

      வாழ்த்துகள் மஞ்சு.

      அன்புடன்
      கோபு அண்ணா

      நீக்கு

  56. வணக்கம்!

    அன்பில் விளைந்த அழகினைக் கண்டுநான்
    இன்பில் திளைத்தேன் இணைந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கி. பாரதிதாசன் கவிஞா்August 13, 2013 at 2:11 AM

      //வணக்கம்!//

      வாருங்கள் கவிஞர் ஐயா, தங்களுக்கு என் வணக்கங்கள்.

      காதல் ஆயிரம் என்ற தலைப்பில் இதே நாளில் தாங்களும் ஆயிரம் கவிதைகளை அனாயாசமாக எழுதியிருப்பதனை அறிந்தேன், மகிழ்ந்தேன். அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

      //அன்பில் விளைந்த அழகினைக் கண்டுநான்
      இன்பில் திளைத்தேன் இணைந்து

      கவிஞா் கி. பாரதிதாசன்
      தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு//

      பிரான்ஸ் நாட்டு கம்பன் கழகத்தலைவரே நேரில் வருகை தந்து பாராட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத்தருகிறது. கம்ப ராமாயணம் எழுதிய கம்பரே நேரில் வந்து வாழ்த்தியது போல உணர்கிறோம்.

      தங்கள் பெயரிலேயே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனையும் பார்த்து மகிழ முடிகிறது.

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், ஓர் கவிதைபாடி வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  57. பதிவாயிரம் படைத்த அவருக்கு என் வந்தனமாயிரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... August 13, 2013 at 2:49 AM

      வாங்கோ, வணக்கம்.

      //’பதிவாயிரம் படைத்த அவருக்கு என் வந்தனமாயிரம்!//

      அவர்களைப்பாராட்டி வந்தனமும் இங்கு கூறியுள்ளதற்கு, அவர்கள் சார்பில் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  58. காலை 5.30க்கே என் வாழ்த்தை அங்கே தெரிவிச்சிட்டேன். இப்பதான் உங்க பதிவு பாத்தேன். விருந்து, படங்கள்னு கலக்கியிருக்கீங்க. ரொம்ப அருமை.

    இங்கவும் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் பாராட்டை தெரிவிச்சுகிட்ட்டு இருக்கேன்.

    (இன்னும் 17 போஸ்ட் தான். நானும் 1000 லிஸ்ட்ல சேர்ந்துக்க) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுகைத் தென்றல்August 13, 2013 at 3:40 AM

      வாங்கோ ... வணக்கம்.

      //காலை 5.30க்கே என் வாழ்த்தை அங்கே தெரிவிச்சிட்டேன்.//

      அப்படியா, மிகவும் சந்தோஷம்.

      //இப்பதான் உங்க பதிவு பாத்தேன். விருந்து, படங்கள்னு கலக்கியிருக்கீங்க. ரொம்ப அருமை.//

      மிக்க மகிழ்ச்சி.

      //இங்கவும் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் பாராட்டை தெரிவிச்சுகிட்டு இருக்கேன்.//

      மிக்க நன்றி.

      //(இன்னும் 17 போஸ்ட் தான். நானும் 1000 லிஸ்ட்ல சேர்ந்துக்க) :)//

      அப்படியா. நல்லது. மகிழ்ச்சி. பாராட்டுக்கள், அட்வான்ஸ் வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  59. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்... சக பதிவரின் இந்த சாதனையை இந்த அளவுக்கு யாரும் வாழ்த்தி போற்றிருக்க மாட்டாங்க... இந்த ஆயிரமாவது சாதனையை விட உங்களின் இந்தப் பதிவுதான் அவருக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்திருக்கும்.... இதோ சகோ அவர்களின் பதிவுக்கு சென்று வாழ்த்துகளை அளிக்கிறேன்... (அப்புறம் நீங்க தந்த விருந்து அபாரம்... வயிறார சாப்பிட்ட திருப்தி..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manimaran August 13, 2013 at 3:59 AM

      வாருங்கள் திரு. மணிமாறன் அவர்களே, வணக்கம்.

      //உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்... சக பதிவரின் இந்த சாதனையை இந்த அளவுக்கு யாரும் வாழ்த்தி போற்றிருக்க மாட்டாங்க...// **

      அப்படியா? மனதில் உறுதியோடு சொல்லியிருக்கீங்க. இதைக்கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      // இந்த ஆயிரமாவது சாதனையை விட உங்களின் இந்தப் பதிவுதான் அவருக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்திருக்கும்.... //**

      அப்படித்தான் நானும் நம்புகிறேன்.

      இருப்பினும் தனிப்பட்ட முறையில் என்னிடம் அவர்கள் எதுவும் இதுவரை, வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது இல்லை.

      அவர்கள் பதிவினில், நான் அளித்துள்ள பல பின்னூட்டங்களுக்கு அவர்கள் கொடுத்துள்ள ஒருசில பதில்கள் மூலம் அவர்களின் சந்தோஷத்தையும் என்னால் ஓரளவு உணரமுடிகிறது.

      //இதோ சகோ அவர்களின் பதிவுக்கு சென்று வாழ்த்துகளை அளிக்கிறேன்...//

      ஆஹா, சென்று வாருங்கள், அது தான் என் வேண்டுகோள்.

      //(அப்புறம் நீங்க தந்த விருந்து அபாரம்... வயிறார சாப்பிட்ட திருப்தி..)//

      ஏராளமாக செலவழித்து தாராளமாக வழங்கப்பட்டுள்ளதாக்கும் ! ;)
      திருப்தியாகச் சாப்பிட்டதாகச்சொல்வதே எனக்கு, மிகவும் திருப்தியாக உள்ளது. மிக்க நன்றி.

      தங்களின் அன்பான வருகைக்கும், எனக்கு முழுத் திருப்தியளிக்கும் வகையில், அசத்தலான இதுவரை யாரும் சொல்லாத, ஓருசில** முக்கியக் கருத்துக்களைச் சொல்லியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிக்ள், நண்பரே.

      நீக்கு
  60. ராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு தெய்வீக அருள் இருந்தால் தான் இப்படி தங்கு தடங்கல் இன்றி எழுத முடியும் தினமும் நானும் அப்படித்தான் நினைப்பேன் . தினம் தெய்வங்களின் அழகிய படங்களும் சிறப்பான செய்திகளும் தருவதில் அவர்களுக்கு நிகர்....

    அது மட்டும் அல்லாமல் எல்லோர் பதிவுகளை வாசித்து உற்சாகம் தரும் பின்னூட்டங்களும் சோர்வில்லாமல் தருபவர்.
    அவர்களுக்கு நீங்கள் சிறப்பு பதிவு தந்து வாழ்த்தியமைக்கு எங்கள் சார்பில் நன்றிகள் உங்களுக்கு.மிக சிறப்பான மகிழ்ச்சியான பகிர்வு.
    வாழ்த்துக்கள் ஐயா...

    ராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு என்னுடை மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் தெரிவிக்கிறேன்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VijiParthibanAugust 13, 2013 at 3:59 AM

      தங்களின் அன்பான வருகைக்கும், மேலே திருமதி கோமதி அரசு அவர்கள் அளித்துள்ள பின்னூட்டத்தையே அப்படியே Copy & Paste போட்டு விட்டதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள். ;)

      நீக்கு
  61. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்... சக பதிவரின் இந்த சாதனையை இந்த அளவுக்கு யாரும் வாழ்த்தி போற்றிருக்க மாட்டாங்க... இந்த ஆயிரமாவது சாதனையை விட உங்களின் இந்தப் பதிவுதான் அவருக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்திருக்கும்.... இதோ சகோ அவர்களின் பதிவுக்கு சென்று வாழ்த்துகளை அளிக்கிறேன்... (அப்புறம் நீங்க தந்த விருந்து அபாரம்... வயிறார சாப்பிட்ட திருப்தி..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manimaran August 13, 2013 at 3:59 AM

      வாருங்கள் திரு. மணிமாறன் அவர்களே, வணக்கம்.

      //**உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்... சக பதிவரின் இந்த சாதனையை இந்த அளவுக்கு யாரும் வாழ்த்தி போற்றிருக்க மாட்டாங்க...**//

      அப்படியா? மனதில் உறுதியோடு சொல்லியிருக்கீங்க. இதைக்கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      // **இந்த ஆயிரமாவது சாதனையை விட உங்களின் இந்தப் பதிவுதான் அவருக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்திருக்கும்....** //

      அப்படித்தான் நானும் நம்புகிறேன்.

      இருப்பினும் தனிப்பட்ட முறையில் என்னிடம் அவர்கள் எதுவும் இதுவரை, வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது இல்லை.

      அவர்கள் பதிவினில், நான் அளித்துள்ள பல பின்னூட்டங்களுக்கு அவர்கள் கொடுத்துள்ள ஒருசில பதில்கள் மூலம் அவர்களின் சந்தோஷத்தையும் என்னால் ஓரளவு உணரமுடிகிறது.

      //இதோ சகோ அவர்களின் பதிவுக்கு சென்று வாழ்த்துகளை அளிக்கிறேன்...//

      ஆஹா, சென்று வாருங்கள், அது தான் என் வேண்டுகோள்.

      //(அப்புறம் நீங்க தந்த விருந்து அபாரம்... வயிறார சாப்பிட்ட திருப்தி..)//

      ஏராளமாக செலவழித்து தாராளமாக வழங்கப்பட்டுள்ளதாக்கும் ! ;)
      திருப்தியாகச் சாப்பிட்டதாகச்சொல்வதே எனக்கு, மிகவும் திருப்தியாக உள்ளது. மிக்க நன்றி.

      தங்களின் அன்பான வருகைக்கும், எனக்கு முழுத் திருப்தியளிக்கும் வகையில், அசத்தலான இதுவரை யாரும் சொல்லாத, ஓருசில** முக்கியக் கருத்துக்களைச் சொல்லியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிக்ள், நண்பரே.

      வாழ்க !

      நீக்கு
  62. திருமதி இராஜராஜேஸ்வரி மேடத்தின் அர்ப்பணிப்பு எழுத்தில் வடிக்க இயலாதது. சிறப்பான அவர்கள் பணி என்றென்றும் இனிதே தொடர இனிய வாழ்த்துக்கள். அவர்களை இங்கே பெருமிதப்படுத்தி சிறப்பித்த தங்களுடைய அன்பும் அதற்கான உழைப்பும் அசத்துகின்றன. சகபதிவரை சிறப்பிக்கும் தங்கள் நல்ல உள்ளத்துக்குத் தலைவணங்குகிறேன். தங்களுக்கும் இனிய பாராட்டுகளும் நன்றிகளும் வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி August 13, 2013 at 4:24 AM

      வாங்கோ திருமதி கீதமஞ்சரி மேடம். வணக்கம்.

      //திருமதி இராஜராஜேஸ்வரி மேடத்தின் அர்ப்பணிப்பு எழுத்தில் வடிக்க இயலாதது.//

      ஆமாம். உண்மை. அவர்களின் “அர்ப்பணிப்பு” எழுத்தில் வடிக்க இயலாதது தான். மிகச்சரியாகவும் அழகாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.

      //சிறப்பான அவர்கள் பணி என்றென்றும் இனிதே தொடர இனிய வாழ்த்துக்கள்.//

      அவர்களை இங்கு இனிமையாக வாழ்த்தியுள்ளதற்கு தங்களுக்கு என் நன்றிகள்.

      //அவர்களை இங்கே பெருமிதப்படுத்தி சிறப்பித்த தங்களுடைய அன்பும் அதற்கான உழைப்பும் அசத்துகின்றன. சகபதிவரை சிறப்பிக்கும் தங்கள் நல்ல உள்ளத்துக்குத் தலைவணங்குகிறேன். தங்களுக்கும் இனிய பாராட்டுகளும் நன்றிகளும் வை.கோ.சார்.//

      எல்லோரும் எல்லோரையும் எல்லா நேரத்திலும் பாராட்டி சிறப்பிப்பது என்பது மனதில் அதுபோன்ற எண்ணம் இருந்தாலும் நடைமுறையில் சாத்தியப்படாமல் போகக்கூடும்.

      ஆனால் இவர்கள் விஷயத்தில் ......

      [1] என் மனதுக்கு மிகவும் பிடித்தமான பதிவர் இவர்.

      [2] தினமும் இவர்களின் பதிவுகளை நிறுத்தி நிதானமாக மிகவும் ரஸித்துப் படிப்பவன் நான்.

      [3] பாராட்டுக்களுக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் [SHE IS WELL DESERVED]

      [4] வலையுலகையும் தாண்டி என் நலம் விரும்பியாக செயல் படுபவர். [ A TRUE WELL WISHER ]

      [5] என் பதிவுகள் ஒவ்வொன்றையும் தன்னுடைய மிகச்சிறந்த பின்னூட்டங்கள் மூலம் தொடர்ந்து ஆதரித்து, உற்சாகப்படுத்தி வருபவர்.

      [6] பொதுவாக நல்லவர், வல்லவர், ஸாத்வீகமானவர், பண்பானவர், மிகவும் அமைதியான குணமுடையவர், விஷய ஞானம் அதிகமாகவே உள்ளவர், பெருந்தன்மையானவர், GENTLE WOMAN.

      இவர்களைப்போற்றி பாராட்டி எனக்கு நானே மகிழவும், அவர்களை மகிழ்விக்கச்செய்யவும், மற்ற பதிவர்களில் இவரைப்பற்றி அதிகம் அறியாதவர்களுக்கு அறியச்செய்யவும், இந்த இவர்களின் ஆயிரமாவது வெற்றிப்பதிவு வெளியீட்டை, என் வளைத்தளத்தில் தனிப்பதிவாக, சிறப்புப்பதிவாக வெளியிட்டு, கெளரவிக்க ஓர் சந்தர்ப்பமாக இது அமைந்ததில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.

      இந்த என் சிறப்புப்பதிவை நான் வெளியிடும் வரை [நேற்று 13.08.2013 அதிகாலை வரை] இதுபற்றி, அவர்களுக்கே தெரியாது. நானும் அவர்களிடம் இதுபற்றி ஏதும் தெரிவிக்கவில்லை. முழுக்க முழுக்க SURPRISE கொடுத்து விட்டேன்.

      DASH BOARD இல் இந்தப்பதிவு ஏனோ தெரியாமல் update ஆகாமல் போய்விட்டதால், மேலும் பலர் இந்தப்பதிவு வெளியீடு பற்றி அறிய முடியாமல் போய் விட்டது.

      இதெல்லாம் தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே இங்கு சொல்லியுள்ளேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.




      நீக்கு
  63. பதிவுகள் ஆயிரம் பாவையின் ஆற்றல்
    மதியிவள் தந்தனள் வாழ்த்து!


    ஆயிரம் பதிவுகண்ட சகோதரி இராஜராஜேஸ்வரிக்கும்
    ஆயிரம் மடங்காக அவரைப் போற்றி மகிழும் ஐயாவுக்கும்
    அன்பான வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி August 13, 2013 at 4:29 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பதிவுகள் ஆயிரம் பாவையின் ஆற்றல்
      மதியிவள் தந்தனள் வாழ்த்து!//

      பாவையின் ஆற்றலைப்பாங்குடன் எடுத்துரைத்து வாழ்த்தியுள்ள் ’மதி’யுடைய மங்கைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      //ஆயிரம் பதிவுகண்ட சகோதரி இராஜராஜேஸ்வரிக்கும்
      ஆயிரம் மடங்காக அவரைப் போற்றி மகிழும் ஐயாவுக்கும்
      அன்பான வாழ்த்துக்கள்!//

      ஆயிரம் தான் இருந்தாலும் கவிதாயினியின் அன்பான அபூர்வ வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் ஈடு இணை தான் உண்டோ?

      மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள்.

      நீக்கு
  64. மிகுந்த உற்சாகத்துடன் வாழ்த்தி இனிப்புகளும் தந்து எங்கள் சார்பில் பரிசும் அளித்துவிட்டீர்கள். உங்களுக்கு பாராட்டுகள்.

    உங்கள் வாழ்த்துடன் எங்கள் வாழ்த்தையும் இராஜராஜேஸ்வரி அவர்கட்கு தெரிவிக்கின்றோம் பதிவுகள் பல்லாயிரமாக தொடரட்டும். வாழ்க!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி August 13, 2013 at 4:42 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மிகுந்த உற்சாகத்துடன் வாழ்த்தி இனிப்புகளும் தந்து எங்கள் சார்பில் பரிசும் அளித்துவிட்டீர்கள். உங்களுக்கு பாராட்டுகள்.//

      மிகவும் சந்தோஷம்.

      //உங்கள் வாழ்த்துடன் எங்கள் வாழ்த்தையும் இராஜராஜேஸ்வரி அவர்கட்கு தெரிவிக்கின்றோம் பதிவுகள் பல்லாயிரமாக தொடரட்டும். வாழ்க!.//

      மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  65. எனது இளைய மகனுக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் எங்கும் வரஇயலவில்லை. எனினும் இன்று தவறாமல் தோழியின் பகிர்வை படித்து வாழ்த்து கூறிய பின்பே இங்கு வந்து விருந்து உண்டேன். மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sasi Kala August 13, 2013 at 6:19 AM

      வாங்கோ கவிதாயினி மேடம். வணக்கம்.

      //எனது இளைய மகனுக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் எங்கும் வரஇயலவில்லை.//

      அடடா, சீக்கரமாக அவர் பூரண குணமாகட்டும் என பிரார்த்திப்போம்.

      //எனினும் இன்று தவறாமல் தோழியின் பகிர்வை படித்து வாழ்த்து கூறிய பின்பே இங்கு வந்து விருந்து உண்டேன். மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா.//

      பல ம்னசஞ்சலங்களுக்கு இடையேயும். அங்கும் இங்கும் அன்புடன் தென்றலாக வருகை புரிந்து கருத்தளித்துள்ளதற்கு எங்கள் ம்னமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  66. சந்தோசம், பிரம்மிப்பு, நட்பின் உன்னதம். வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலாமகள் August 13, 2013 at 6:53 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //சந்தோசம், பிரம்மிப்பு, நட்பின் உன்னதம். வாழ்த்துக்கள் சார்.//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அழாகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  67. இதோ உடனே ராஜிம்மாவின் தளத்திற்குச் செல்கிறேன்.

    கோபு அண்ணா உங்களையும் வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI August 13, 2013 at 7:32 AM

      வாங்கோ “ஜெ” வணக்கம்.

      //இதோ உடனே ராஜிம்மாவின் தளத்திற்குச் செல்கிறேன்.//

      அப்பாடி, ஒரு வழியா வந்தீங்களே !

      //கோபு அண்ணா உங்களையும் வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.//

      ஆமாம். உங்களிடமிருந்து ஒரு பெரிய குடம் நிறைய சுண்டக்காய்ச்சி, பனம் கல்கண்டு போட்ட சூடான பசும்பால் நான் எதிர்பார்த்தேன். ஒரே ஒரு சின்ன ஸ்பூனில் வெறும் தண்ணி கொடுத்துட்டு ஓடறீங்க.

      போங்க உங்களோட கோபு அண்ணா டூஊஊஊஊஊ.

      [பாவம் நீங்க இன்று வந்ததே பெரிசு தான். மிக்க நன்றிம்மா]

      நீக்கு
  68. ராஜேஸ்வரி அவ்ர்கள் தளத்திலும் வாழ்த்தி விட்டேன். 1000 பிறை கண்டவர் என்பது போல 1000 பதிவு கண்டவர் என்பது மிகப்பெரிய பெருமைதான்.2000 ஆவது பதிவை அடுத்த 365 நாட்களில் எட்டினாலும் ஆச்ச்சரியப்படமாட்டேன்.
    கோவில் ஸ்தலபுராணம், விசேஷ வழிபாட்டு முறைகள், இதிஹாஸ,
    புராணங்களுக்கும், அழகிய படங்களுக்கும் பெயர் பெற்ற்து அவருடைய வலைதளம். வாழ்க,வளர்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kmr.krishnan August 13, 2013 at 7:48 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //ராஜேஸ்வரி அவ்ர்கள் தளத்திலும் வாழ்த்தி விட்டேன். 1000 பிறை கண்டவர் என்பது போல 1000 பதிவு கண்டவர் என்பது மிகப்பெரிய பெருமைதான். 2000 ஆவது பதிவை அடுத்த 365 நாட்களில் எட்டினாலும் ஆச்ச்சரியப்படமாட்டேன்.//

      ஆஹா, அவர்களின் திறமையைத் துல்லியமாக எடை போட்டு வைத்துள்ளீர்கள். சந்தோஷம்.

      //கோவில் ஸ்தலபுராணம், விசேஷ வழிபாட்டு முறைகள், இதிஹாஸ, புராணங்களுக்கும், அழகிய படங்களுக்கும் பெயர் பெற்றது அவருடைய வலைதளம். வாழ்க,வளர்க!//

      நான் அறியாத பலவிஷயங்களை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள், ஐயா.

      என் தளத்திற்கு தங்களின் இன்றைய முதல் வருகைக்கும் மிக்க நன்றிகள், ஐயா.

      நீக்கு
  69. Congrats to Mrs. Rajarajeswari... great job by a great lady... wonderful virtual treat and perfect celebration... going on to her space...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Priya Anandakumar August 13, 2013 at 11:49 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //Congrats to Mrs. Rajarajeswari... great job by a great lady... wonderful virtual treat and perfect celebration... going on to her space...//

      தங்களின் அன்பான வருகைக்கும், அவர்களை இங்கு வாழ்த்தியுள்ளதற்கும், அங்கு சென்று வாழ்த்தப்போவதற்கும், இங்கும் அங்கும் நடைபெறும் விழாக்களில் பங்கு கொண்டு சிறப்பித்துக் கொடுத்ததற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  70. ஆஹா பாராட்டவும் நல்ல மனம் வேண்டும்... அங்கே அம்பாளைப்பாராட்டுமுன்பு அவர் சகோதரர் கோபால கிருஷ்ணரைப்பாராட்டிவிடுகிறேன்...என்னே அழகாய் கோர்வையாய் எல்லாம் சொல்லி படங்களுடன் வாழ்த்தி....!!!!
    சிலநேரங்களில் பிரமிப்புகளின் பிரும்மாண்டம் நம் வாயை அடைத்துவிடுகிறது ஆனால் என்ன கண்களின் வார்த்தைகள் புரியாதா காத்திருப்பார் இராஜராஜேஸ்வரி எனத்தெரியாதா இதோ ஓடி அவரை அங்கும் வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷைலஜா August 13, 2013 at 6:37 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஆஹா பாராட்டவும் நல்ல மனம் வேண்டும்... அங்கே அம்பாளைப்பாராட்டுமுன்பு அவர் சகோதரர் கோபால கிருஷ்ணரைப் பாராட்டி விடுகிறேன்...//

      தாங்கள் சொல்லியுள்ளதற்கு ஏற்ப இன்று [14.08.2013] அந்த அம்பாள் அவர்கள் வெளியிட்டுள்ள தன் 1001வது பதிவில் ”கோபால சுந்தரி” என்று ஏதேதோ புதுமையாக அழகாகச் சொல்லியுள்ளார்கள். எனக்கான தங்களின் பாராட்டுக்கு என் மகிழ்ச்சிகள் + நன்றிகள்.

      //என்னே அழகாய் கோர்வையாய் எல்லாம் சொல்லி படங்களுடன் வாழ்த்தி....!!!!//

      ரஸித்துச் சொல்வதற்கு மிகவும் சந்தோஷம்.

      //சிலநேரங்களில் பிரமிப்புகளின் பிரும்மாண்டம் நம் வாயை அடைத்துவிடுகிறது .... ஆனால் என்ன கண்களின் வார்த்தைகள் புரியாதா காத்திருப்பார் இராஜராஜேஸ்வரி எனத்தெரியாதா //

      ;))))) இல்லை மேடம், அவர்கள் காத்திருக்க வாய்ப்பே இல்லை. இதுபோல ஒரு பதிவு [அதுவும் அவர்களைப்பற்றிய பிரத்யேகமான பதிவு] நான் 12/13.08.2013 நள்ளிரவில் வெளியிடப்போகிறேன் என்பதே அவர்களுக்குத்தெரியாது. நானும் அவர்களிடம் சொல்லவே இல்லை. SURPRISE கொடுத்துத்தான் நான் இதை வெளியிட்டேன்.

      //இதோ ஓடி அவரை அங்கும் வாழ்த்துகிறேன்!//

      நல்லது. அதுபோலவே செய்யுங்கோ. அதுதான் நான் வேண்டுவ்து.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  71. பாராட்டுவதிலும், பரிசளிப்பதிலும் உங்களுக்கு நிகர் நீங்களே! 1000ம் பதிவுகள் தந்த திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் வாழ்த்துகள்! அருமையான பதிவுகளை அடையாளம் காட்டிய தங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. August 13, 2013 at 10:10 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //பாராட்டுவதிலும், பரிசளிப்பதிலும் உங்களுக்கு நிகர் நீங்களே! 1000ம் பதிவுகள் தந்த திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் வாழ்த்துகள்! அருமையான பதிவுகளை அடையாளம் காட்டிய தங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  72. தங்கள் பதிவு டேஷ்போர்டில் தெரியவில்லை..அதனால் நீங்கள் இன்னும் பதிவு போடவில்லை என்றே நினைத்துவிட்டேன்..

    இராஜராஜேஸ்வரி மேடத்தின் பதிவுக்கும் சென்று கருத்தளித்துவிட்டேன்,அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    அவரை பர்றி பதிவு எழுதிய தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    விருந்துக்கும்,மொய் பணத்துக்கும் நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.Menaga August 14, 2013 at 4:32 AM

      வாங்கோ மேனகா, வணக்கம்.

      //தங்கள் பதிவு டேஷ்போர்டில் தெரியவில்லை..அதனால் நீங்கள் இன்னும் பதிவு போடவில்லை என்றே நினைத்துவிட்டேன்..//

      ஆமாம் மேனகா, இதுபோல பல முக்கியமான் பதிவுகள், வெளியிட்டும் டேஷ் போர்டில் தெரியாமல் போய் விடுகின்றன. பெரிய தொல்லையாகி விடுகிறது. அதுபோன்ற சமயங்களில் முக்கியமான சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மெயில் மூலம் செய்தி சொல்ல வேண்டியதாக உள்ளது. உங்களுக்குக்கூட தனியாக மெயில் கொடுத்திருந்தேனே! [SUB: அவசரம் - அவசியம் - ஓடியாங்கோ .... ஓடியாங்கோ ..... உடனே ஓடியாங்கோ .....]

      //இராஜராஜேஸ்வரி மேடத்தின் பதிவுக்கும் சென்று கருத்தளித்துவிட்டேன்//

      அவர் தளத்தில் தங்கள் வருகையைப்பார்த்தேன். இங்கும் அங்கும் என்ற வருகைப்பதிவேட்டில் இரண்டு பக்கமும் டிக் அடித்து விட்டேன். ;)))))

      //அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...//

      அவர்களை இங்கு வாழ்த்தியதற்கு, அவர்கள் சார்பில் என் நன்றிகள்.

      //அவரை பர்றி பதிவு எழுதிய தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!//

      சந்தோஷம். அவரைப்பற்றி தனிப்பதிவு எழுதக்கொடுத்து வைத்திருக்கணும், மேனகா. ஏதோ ஒரு அரிய வாய்ப்பாக எனக்கு இது அமைந்தது. எனக்கும் ஒரே சந்தோஷமே. ;)))))

      //விருந்துக்கும்,மொய் பணத்துக்கும் நன்றி ஐயா!!//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      நீங்கள் தினமும் தராத விருந்தா? நீராகாரத்திலிருந்து ஒன்று விடாமல் அடிக்கடி கொடுத்து அசத்தி வருகிறீர்களே! ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேனகா.

      அன்புடன் கோபு

      நீக்கு
  73. ஐயா,ஒரு சிறிய வேண்டுக்கோள்,இராஜராஜேஸ்வரி அஷ்டகத்தை நாளை மாலைக்குள் எனக்கு மெயிலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்,வரலஷ்மி பூஜையன்று தொடங்கி வாரம் வாரம் சொல்லலாம் என்று விரும்புகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.Menaga August 14, 2013 at 4:34 AM

      வாங்கோ மேனகா. வணக்கம்.

      //ஐயா, ஒரு சிறிய வேண்டுக்கோள், ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகத்தை நாளை மாலைக்குள் எனக்கு மெயிலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். வரலஷ்மி பூஜையன்று தொடங்கி வாரம் வாரம் சொல்லலாம் என்று விரும்புகிறேன்..//

      ரொம்ப சந்தோஷம் மேனகா. கட்டாயமாக அனுப்புகிறேனம்மா. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொல்லுங்கோ. எனக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கோ. முடிந்தால் இன்றைக்கே அனுப்பி வைக்கிறேன். இல்லாவிட்டால் கட்டாயமாக நாளைக்கு உங்களுக்குக் கிடைக்கும்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. ஸ்லோகம் தனியே மெயில் மூலம் அனுப்பி விட்டேன்.

      அது கிடைத்து விட்டதாக உங்களுடைய மெயிலும் எனக்குக் கிடைத்து விட்ட்து.

      As it is account settled. பாக்கிசாக்கி ஏதும் இல்லை.

      சந்தோஷம், மேனகா.

      .

      நீக்கு
  74. கோபு அண்ணன் குறுக்க நிக்காமல் கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ:)).. நான் பத்து தடவை தோப்புக்கரணம் போட்டிட்டு வாறேன்:))பிள்ளையார் முன்னாடி:)..

    ஏன் தெரியுமோ? இவ்ளோ தாமதமா வந்தமைக்கு.

    எவ்ளோ அழகா ராஜேஸ்வரி அக்காவின் ஆயிரம் பதிவை அலங்கரிச்சிருக்கிறீங்க... அதுக்கும் வாழ்த்துக்கள்.

    இன்றுதான் அங்கும் வாழ்த்தினேன், உடன் வரமுடியவில்லை மன்னிக்கவும்.

    உங்களுக்கும்... பதிவு அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athiraAugust 14, 2013 at 11:40 AM

      வாங்கோ அதிரா வாங்கோ. வணக்கம், வணக்கம்.

      //கோபு அண்ணன் குறுக்க நிக்காமல் கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ:))..//

      ’அரக்கி’ன்னா என்ன அதிரா அர்த்தம்?

      ’தள்ளி’ என்று இருக்குமோ?

      இங்கு எங்க பக்கமெல்லாம் ’அரக்கி’ன்னா ’அதிரா’ன்னு அர்த்தம்.

      அதாவது அதிரா போல அதிரடி, அழும்பு, அட்டகாசம், அலட்டல் செய்பவர்கள் என்று அர்த்தம்.

      ’அரக்கி’யை ’ராக்ஷசி’ன்னும் சொல்லுவாங்கோ.

      அதிலிருந்து தான் “அழகான ராக்ஷசியே” என்ற சினிமாப் பாடலும் கூட பிறந்துள்ளது.

      //நான் பத்து தடவை தோப்புக்கரணம் போட்டிட்டு வாறேன்:)) பிள்ளையார் முன்னாடி:)..//

      நல்ல காரியம் உடனே பண்ணுங்கோ, அதிரா.

      //ஏன் தெரியுமோ? இவ்ளோ தாமதமா வந்தமைக்கு.//

      அடடா, இவ்வளவு தானா? நான் என்னமோ ஏதோன்னு கவலைப்பட்டுப் போய் விட்டேன், அதிரா.

      வெயிட் போட்டு உண்டான உடம்பை [டங்க் ஸ்லிப்பு .... குண்டானன்னு இருக்கோணும்,உண்டான ன்னு தப்பா டைப்பிட்டுட்டேன் திருத்திக்கோங்கோ, ப்ளீஸ்] ஸ்லிம் ஆக்கவோன்னு கூட நினைத்தேன்.

      //எவ்ளோ அழகா ராஜேஸ்வரி அக்காவின் ஆயிரம் பதிவை அலங்கரிச்சிருக்கிறீங்க... //

      உங்க, அக்காவா ! கொக்கா !!

      அலங்கரிக்காமல் இருப்பேனா அதிரா ;)))))

      //அதுக்கும் வாழ்த்துக்கள்.//

      மிகவும் சந்தோஷம், அதிரா. நன்றி !

      //இன்றுதான் அங்கும் வாழ்த்தினேன்//

      ஆஹா, அது தான் முக்கியம். அது தான் இந்தப்பதிவின் முக்கியமான என் கோரிக்கையே.

      // உடன் வரமுடியவில்லை மன்னிக்கவும்.//

      உங்களை நான் எப்போதாவது என்னுடன் வரச்சொன்னேனா? நீங்க [என்னுடன்] வராட்டியும் பரவாயில்லை.

      ஆனால் மன்னிக்க மட்டும் முடியாதூஊஊஊ. ;)))))

      //உங்களுக்கும்... பதிவு அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.//

      அதிரடி அதிராவின் அன்பான வருகைக்கும், அசத்தலான அவசரக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கிடையாதூஊஊஊ.

      இன்னும் நிறைய கமெண்ட்ஸ் எதிர்பார்த்தேன்.

      சரி, போனாப்போவுது. அதிரா பாவம். அதனால் நன்றிகள் நிறைய.
      Thanks a Lot அதிரா.

      நீக்கு
  75. எனக்கந்த பருப்பு வடையும் ரீயும் போதும்:))... மிச்சமெல்லாம் அஞ்சுவுக்காக விட்டிடுறேன்:)) ஹையோ இதைப் படிச்சதும், கிழிச்சு.. வைகையில கலந்துவிட்டிடுங்கோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira August 14, 2013 at 11:42 AM

      //எனக்கந்த பருப்பு வடையும் ரீயும் போதும்:))... //

      சரி, நீங்களே எடுத்துக்கொள்ளுங்கோ எல்லா வடைகளையும் + ரீ [டீ] யையும்.

      //மிச்சமெல்லாம் அஞ்சுவுக்காக விட்டிடுறேன்:)) //

      அஞ்சு பாவம். எவ்ளோ நல்லவங்க தெரியுமா? பதிவு வெளியான உடனேயே என் தொடர்பு எல்லைக்குள் வந்துட்டாங்கோ. நீண்ட நேரம் என்னைப் பாராட்டிப்பேசி மகிழ்வித்தாங்கோ. அவங்க டேஸ்ட் செய்து சாப்பிட்ட மீதி தான் இங்கு உங்களுக்காகத் தரப்பட்டுள்ளன.

      //ஹையோ இதைப் படிச்சதும், கிழிச்சு.. வைகையில கலந்துவிட்டிடுங்கோ:))//

      வைகையிலா? அங்கு என்ன விசேஷம்? எங்கள் ஊர் காவிரி ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடுகிறது. வைகைக்குத்தான் போகணும் என்றால் நான் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்குமே அதிரா.

      ஹையோ, நானும் இதைக் கிழிச்சுக்கிழிச்சுப் பார்க்கிறேன். முடியவில்லையே அதிரா, உடனே வாங்கோ .... ஹெல்ப் மீ ..... டாராகக் கிழிப்பதற்கு மட்டுமே தான். ;))))).

      நீக்கு
  76. 144 பதில் கருத்துகள் விழுந்திருக்கு ஐயா. நான் 150வது விழா விருந்தினர்.
    விழா மிகச்சிறப்பாகச் செய்துள்ளீர்கள். 1000 ம் வாழ்த்துகள்.
    அவர் மேலும் சிறப்படைய இறையருள் கிடைக்கட்டும்.
    அங்கும் இப்போதே செல்கிறேன் .இனிய நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kovaikkavi August 14, 2013 at 10:28 PM

      வாங்கோ மேடம்,. வணக்கம்.

      //144 பதில் கருத்துகள் விழுந்திருக்கு ஐயா. நான் 150வது விழா விருந்தினர். //

      அப்படியா சந்தோஷம். உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக இன்னும் ஆறு சேர்த்து 156 ஆக இப்போது ஆக்கியுள்ளேன்..

      //விழா மிகச்சிறப்பாகச் செய்துள்ளீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //1000 ம் வாழ்த்துகள். அவர் மேலும் சிறப்படைய இறையருள் கிடைக்கட்டும். //

      சந்தோஷம்.

      //அங்கும் இப்போதே செல்கிறேன் .இனிய நன்றி.
      வேதா. இலங்காதிலகம்.//

      ஆஹா, போய் வாருங்கள். மிக்க நன்றி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  77. ராஜேஸ்வரியக்காவின் 1000 மாவது பதிவுக்கு என் மனமார்ந்த(காலம் தாழ்த்திய வாழ்த்துக்கள்)
    அவரை இவ்வள்வு தூரம் யாராலும் பாராட்டமுடியாது. உங்களைத்தவிர. இப்படி பாராட்டி அசத்தியமைக்கு உங்களுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  78. ammulu August 15, 2013 at 4:33 AM

    வாங்கோ, அம்முலு, வணக்கம்.

    //ராஜேஸ்வரியக்காவின் 1000 மாவது பதிவுக்கு என் மனமார்ந்த (காலம் தாழ்த்திய வாழ்த்துக்கள்)//

    அதனால் பரவாயில்லை அம்முலு. அவர்களை நீங்க வாழ்த்தியதில்
    அவர்களைவிட எனக்குத்தான் மிகுந்த மகிழ்ச்சி அம்முலு.

    தினமும் கோயிலுக்குப்போக முடியாவிட்டாலும், பரவாயில்லை ஆனால் இவர்களின் பதிவுக்கு மட்டும் போகாமல் இருக்காதீங்கோ என உங்களுக்குச்சொன்னதே நான் தானே.

    அதன்பிறகு அவ்வப்போது உங்களை உங்கள் பின்னூட்டம் மூலம் அவர்கள் தளத்தில் காணும்போதெல்லாம், நேரிலேயே அம்முலுவைப் பார்த்தது போன்றதோர் சந்தோஷம் எனக்கு அடிக்கடி ஏற்படும்.

    //அவரை இவ்வளவு தூரம் யாராலும் பாராட்டமுடியாது. உங்களைத்தவிர.//

    மிக்க மகிழ்ச்சி. அம்முலு சொன்னால் எதுவுமே கரெக்டாத்தான் இருக்கும்.

    //இப்படி பாராட்டி அசத்தியமைக்கு உங்களுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.//

    சந்தோஷம் அம்முலு, உங்களின் பாராட்டு எனக்கும் கிடைத்ததற்கு.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், அம்முலு.

    பதிலளிநீக்கு
  79. அன்புள்ள வைகோ

    ஹரணி வணக்கமுடன்.

    உங்களின் பெருந்தன்மையையும் அளவிடற்கரிய அன்பைச் சுமந்துகொண்டிருக்கும் மனத்தையும் கண்டு பெருமையடைகிறேன்.
    இப்படி இன்னொரு பதிவரைப் பாராட்டும் (தகுதியுடைய பதிவர் இராஜேஸ்வரி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை) பரந்த மனத்தைக் கண்டு பரவசப்படுகிறேன். எவ்வளவு மெனக்கெடுவான பதிவு. என்னுடைய மனத்தால் உங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். வேறென்ன சார்.. கொண்டுபோகப்போகிறோம் போகும்போது. அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ ர ணி August 15, 2013 at 8:09 AM

      //அன்புள்ள வைகோ

      ஹரணி வணக்கமுடன்.//

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //உங்களின் பெருந்தன்மையையும் அளவிடற்கரிய அன்பைச் சுமந்துகொண்டிருக்கும் மனத்தையும் கண்டு பெருமையடைகிறேன்.//

      மிகவும் சந்தோஷம், ஐயா.

      //இப்படி இன்னொரு பதிவரைப் பாராட்டும் பரந்த மனத்தைக் கண்டு பரவசப்படுகிறேன். எவ்வளவு மெனக்கெடுவான பதிவு.//

      மிக்க மகிழ்ச்சி, ஐயா.

      (தகுதியுடைய பதிவர் இராஜேஸ்வரி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை)

      இதைச்சொன்ன தங்கள் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும் ஐயா. [தயவுசெய்து நீங்களே என் சார்பில் போட்டுக்கொள்ளுங்கள் ஐயா ;))))) ]

      //என்னுடைய மனத்தால் உங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்.//

      அடடா, நாம் எல்லோரும் கடவுளை வணங்கி மகிழ்வோம் ஐயா.

      //வேறென்ன சார்.. கொண்டுபோகப்போகிறோம் போகும்போது. அற்புதம்.//

      மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள் ஐயா. ஆயிரத்தில் ஒரு வார்த்தை இது. கோடிக்கணக்கான ரூபாய்க்கு சமம் இது.

      “என்ன கொண்டு வந்தோம்? என்ன கொண்டுபோகப்போகிறோம்? ஒன்றுமே இல்லை தான்” ஐயா. ஏதோ ஒருவருக்கொருவர், ஒரு சின்ன பாராட்டு. இதில் இருவருக்குமே ஓர் சின்ன மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் ம்னமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  80. 936 ஆயிரம் பதிவு...பிரமிப்பாக உள்ளது.சகோதரி இராஜைராஜேஸ்வரிக்கு அன்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா August 16, 2013 at 7:35 PM

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அபூர்வ வருகை எனக்கு ஆச்சர்யம் அளிக்குது.

      //936 நாட்களில் ஆயிரம் பதிவு...//

      936 நாட்களில் என்று இருக்க வேண்டும். அதை நான் இங்கு சரிசெய்து விட்டேன்.

      //பிரமிப்பாக உள்ளது. சகோதரி இராஜைராஜேஸ்வரிக்கு அன்பு வாழ்த்துக்கள்.//

      அவர்கள் விஷயத்தில் எல்லாமே எனக்கும் பிரமிப்பு மட்டுமே.

      அவர்களை இங்கு வந்து வாழ்த்தியுள்ளதற்கு என் அன்பான இனிய நன்றிகள், உங்களுக்கு.

      அன்புடன் கோபு

      நீக்கு
  81. Soory vwery very sorry I am late here due to some unavoidable reasons..
    Appadiyooo
    Enna valthukkukalllllllllll
    Atharuku mika mika thagithiuanavar than Rajeswari.
    When I was at USA., the date to date celebaration of festival and important days are being known to me is by the way of Rajeswaris blog.
    Now I am not able to move and sitting at one place and visiting all the places with the help of Rajeswari......
    Ward by ward i second you sir.
    I am not able to express, but agree and happy to see your wards.
    I am not yet finished all the comments. will sure come back after gone through all.....
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji August 16, 2013 at 10:02 PM

      வாங்கோ விஜி மேடம். உங்களை நான் வலைபோட்டுத் தேடிக் கொண்டிருந்தேன் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ச்சியாக.

      பிறகு தான் எனக்கு அந்த விஷயமே தெரிய வந்தது. எனினும் லேட்டாக வந்தாலும் லேடஸ்டாக ஊருக்குப்போய் “வரலக்ஷ்மி விரதமும் முடித்துக்கொண்டு” அம்பாளைப் பாராட்ட அழகாக வந்து சேர்ந்து விட்டீர்கள்.

      //I am not yet finished all the comments. will sure come back after gone through all..... viji//

      வாங்கோ, மீண்டும் மீண்டும் வாங்கோ. ஏதாவது அடுத்தடுத்து சொல்லிக்கொண்டே இருங்கோ. உங்கள் இராஜராஜேஸ்வரியை நீங்க பாராட்டாமல் யார் பாரட்ட முடியும்? ;)))))

      மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  82. நீங்கள் வலைதளத்தை பார்க்கச் சொல்லியிருந்தால் முதலிலேயே போய் பார்த்திருப்பேன். நீங்கள் கொடுத்த விருந்தில் வயிறு மந்தமாகி விட்டது. தூங்கி விட்டேன். நாளை பார்க்கிறேன் சார்.
    ஆயிரம் நிலவே வா....பல்லாயிரம் நிலவாகிட உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  83. பவித்ரா நந்தகுமார் August 18, 2013 at 8:12 AM

    வாங்கோ மேடம். மிகவும் சந்தோஷம். தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    //நீங்கள் வலைதளத்தை பார்க்கச் சொல்லியிருந்தால் முதலிலேயே போய் பார்த்திருப்பேன். நீங்கள் கொடுத்த விருந்தில் வயிறு மந்தமாகி விட்டது. தூங்கி விட்டேன். நாளை பார்க்கிறேன் சார். //

    அதனால் பரவாயில்லை. விருந்து சாப்பிட்டு தூங்கியதைக் கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    மெதுவாகப்போய்ப்பாருங்கோ. அவசரமில்லை. 200க்கு மேல் பின்னூட்டங்கள் அவ்விடம் வந்து குவிந்துள்ளதாலும், அவர்கள் எங்கோ வெளியூர் பயணம் போய் இருப்பதாலும், அவற்றை தற்சமயம் வெளியிடுவதில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அறிகிறேன்.

    //ஆயிரம் நிலவே வா....பல்லாயிரம் நிலவாகிட உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.//

    தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், என் அழைப்பிற்கு இணங்க தங்களின் அன்பான வருகைக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  84. பதில்கள்
    1. gsanthanam1610 August 20, 2013 at 8:49 AM

      வா, சந்தானம், செளக்யமா? குழந்தைகள் இருவரும் செளக்யமா?

      //Read our girija's comments... congrats//

      ரொம்ப சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      அன்புடன் கோபு மாமா

      நீக்கு