என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் !

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.


அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார  சிறுகதை விமர்சனப்போட்டிகளில் பேரெழுச்சியுடன் கலந்துகொண்டு, 24 முறைகள் முதல் பரிசுகளையும், 7 முறைகள் இரண்டாம் பரிசுகளையும்,  ஒரேயொரு முறை மட்டும் மூன்றாம் பரிசினையும் வென்று, ஆக மொத்தம் 32 வெற்றிகளுடன், இறுதிச்சுற்று வரை முதலிடத்தினைத் தக்க வைத்துக்கொண்டு, சாதனைகள் பல புரிந்து ’ஆட்ட நாயகி’ , ‘விமர்சன வித்தகி’ என்றெல்லாம் அனைவராலும் புகழப்பட்டவரும், தற்சமயம் ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான, ‘கீத மஞ்சரி’ வலைப்பதிவர்  திருமதி. கீதா மதிவாணன் அவர்களை, எங்கள் இருவரின் சொந்த ஊரான திருச்சியில் இன்று சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.  

வலைத்தளம்: கீத மஞ்சரி


VGK's சிறுகதை விமர்சனப்போட்டிகள் - 2014 இல்
இவர்களுடைய சாதனைகளைப் பற்றி அறிய 
ஒருசில இணைப்புகள் இதோ:

பரிசு மழை பற்றியதோர் ஒட்டு மொத்த அலசல்

‘கீதா விருது’ - புதிய விருதுகள் (பரிசுகள்) அறிமுகம்

திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் எழுதியுள்ள ’நேயர் கடிதம்’

போட்டியின் இறுதிக்கதையான ‘மனசுக்குள் மத்தாப்பூ’ வுக்கு 
இவர்கள் எழுதி ’முதல் பரிசு’ பெற்றுள்ள விமர்சனம். 

போட்டி பற்றிய பல்வேறு அலசல்களும் புள்ளி விபரங்களும்.

என்னை மிகவும் மகிழ்வித்துச் சிரிக்கவும், சிந்திக்கவும்,  
சொக்கவும் வைத்த இவர்களின் சில விமர்சனங்கள்:

’ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’


வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., புதிய கட்சி ’மூ.பொ.போ.மு.க’ உதயம்

மாமியார்


’கீத மஞ்சரி’அவர்கள் தமிழில் எழுதியுள்ள 
‘என்றாவது ஒரு நாள்’ 
என்ற மொழி பெயர்ப்பு நூலுக்கு, அடியேன் கொடுத்துள்ள புகழுரைப் 
பதிவுகளுக்கான இணைப்புகள் (படங்களுடன்)







கோபு சாரின் பார்வையில் என்றாவது ஒரு நாள்... By Mrs. Geetha






இன்றைய எங்கள் சந்திப்பு, உலகப்புகழ் பெற்ற ’திருச்சி சாரதாஸ்’ ஜவுளிக்கடல் அமைந்துள்ள, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரோட்டின் [NSB Road] வட மேற்கு மூலையில், தெற்கு நோக்கியுள்ள ‘ஹோட்டல் ரகுநாத்’ தில் பகல் 10.50 மணி முதல் 11.20 மணி வரை நடைபெற்றது. இந்த இனிய சந்திப்பினில் எடுக்கப்பட்டுள்ள ஒரு சில புகைப்படங்கள் .... இதோ தங்களின் பார்வைக்காக: 




^உலகப் புகழ்பெற்ற பிரபல எழுத்தாளருக்கு 
பொன்னாடை அணிவித்து வரவேற்பு^


^14.04.2015 முதல் இவர்களுக்காகவே ஒதிக்கீடு செய்து, என்னிடம்
பாதுகாத்து வந்த, மூன்று நூல்களை நினைவுப்பரிசாகக் கொடுத்தல்^



 

 



^ஸ்வீட், காரம், காஃபி, பழங்களுடன் வேறு சில நினைவுப்பரிசுகள்^
  








^அவர்கள் எழுதி வெளியிட்டிருந்த நூலில் 
இன்று மீண்டும் அன்புடன் கையொப்பமிட்டு
23.02.2018 என்ற தேதியும் போட்டுக்கொடுத்தார்கள்^



அடியேன் அவர்களுக்குக் கொடுத்திருந்த நினைவுப் பரிசுகளில்
ஒரு புறம் விநாயகரும், மறுபுறம் பெருமாளுமாக பொறிக்கப்பட்டிருந்த 
தங்கக்கலர் சாவி வளையம் ஒன்றே ஒன்று மட்டுமே !

 

காமதேனுபோல அவர்கள் ஒன்றுக்குப் பத்தாக 
எனக்களித்துள்ள பத்து சாவி வளையங்கள் இதோ:

ஆறு பூனைக்குட்டிகள்
இரண்டு கங்காருகள்
100% Metal Key Rings - 2 Numbers 
Designed in Australia beautifully Etched
with 'Sydney Bridge' and 'Kangaroo'

^நிகழ்வுக்குப் பொருத்தமாக இன்றைய (23.02.2018) 
தினமலர்-சிறுவர் மலர் அட்டைப்படம்^



இந்த மேற்படி படத்திற்கான இதிகாச-புராணக்கதையினை, 
தினமலர் - சிறுவர் மலரில் எழுதியுள்ளவர் 
நம் ஹனி மேடம் (தேனம்மை லெக்ஷ்மணன்) அவர்கள். 
அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
http://honeylaksh.blogspot.com/2018/02/7.html 



கேட்டதும் கொடுப்பவனே .. கிருஷ்ணா - கிருஷ்ணா !
கேட்பதெல்லாம் கொடுப்பவளே .. காமதேனு !!


திருமதி. கீதா அவர்களை பத்திரமாக தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்து, குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், இந்த இனிய எங்கள் சந்திப்பு நிகழவும், புகைப்படங்கள் எடுக்கவும் பெரிதும் உதவிசெய்த Er. J.SENTHIL KUMAR, Consulting Civil Engineer, SATHYAM Builders and Contractors, Trichy-11 [Brother of Mrs. Geetha Mathivanan] அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னையும் என் மனைவியையும் ஒரு முறை ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருமாறு அன்புடன் அழைப்பு விடுத்துவிட்டு அவசரமாகப் புறப்பட்டு விட்டார்கள், திருமதி. கீதா அவர்கள். என்னுடைய அடுத்த பதிவு, ஒருவேளை ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரையாக இருக்குமோ என்னவோ ! :)     

 

 

 

   

திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
இதுவரை நான் நேரில் சந்தித்துள்ள 
43-வது பதிவராகும்.

என்னுடைய மற்ற சந்திப்புகள் பற்றிய 
முழு விபரங்களை, அரிய படங்களுடன் அறிய
இதோ சில இணைப்புகள்:

சந்தித்த வேளையில் .....


பகுதி-1 க்கான இணைப்பு:
பகுதி-2 க்கான இணைப்பு:
பகுதி-3 க்கான இணைப்பு:
பகுதி-4 க்கான இணைப்பு:
பகுதி-5 க்கான இணைப்பு:

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் .....

பகுதி-1 க்கான இணைப்பு: 
http://gopu1949.blogspot.in/2015/02/1.html

பகுதி-2 க்கான இணைப்பு:

பகுதி-3 க்கான இணைப்பு:


^பகுதி-3 க்கான இணைப்பு:^

பகுதி-4 க்கான இணைப்பு:
பகுதி-5 க்கான இணைப்பு:
பகுதி-6 க்கான இணைப்பு:
பகுதி-7 க்கான இணைப்பு:

புதுக்கோட்டை via மலைக்கோட்டை

மீண்டும் ஓர் இனிய சந்திப்பு

யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே .... !

முனைவர் ஐயாவுடன் ‘ஹாட்-ட்ரிக்’ சந்திப்பு

சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்

2017 ......... 2018 வாழ்த்துகள்

40 மற்றும் 41 ஆவது பதிவர்களை நான் சந்தித்தது
ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி-6

42-ஆவது பதிவர் சந்திப்பு
ஹனிமூன் வந்துள்ள பதிவர்!

என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


சனி, 10 பிப்ரவரி, 2018

கண்குளிரக் காட்சியளிக்கும் காமதேனு

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.


30.12.2017 சனிப்பிரதோஷ தினத்தில், பிரதோஷ வேளையில், என் கைகளை எட்டிய அந்தக் ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற பொக்கிஷம், என்னிடம் வந்த பிறகு என்ன ஆச்சு என்பதை இப்போது பார்ப்போம்.   

படத்தை நல்லமுறையில் எங்கேனும் லேமினேஷன் செய்து கொண்டு வருமாறு என் நண்பர் ஒருவரிடம் பத்திரமாக ஒப்படைத்திருந்தேன். ஒரிரு வாரங்கள் ஆகியும் அது வந்து சேராததால், அவருக்கு நான் நினைவூட்டல் கொடுத்திருந்தேன். ”இதோ வந்திடும் .. அதோ வந்திடும்” எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

நேற்று 09.02.2018 தை வெள்ளிக்கிழமையன்று, சாயங்காலம் ஐந்து மணி சுமாருக்கு, நானே சற்றும் எதிர்பாராத போது, அந்த லேமினேட் செய்யப்பட்ட படத்தினைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து விட்டார். படத்தினை வாங்கி பரவசத்துடன் கண்களில் ஒத்திக்கொண்டேன். 



அதே தினமான நேற்று 09.02.2018 தை வெள்ளிக்கிழமையுடன் ‘அனுஷ’ நக்ஷத்திரமாகவும் அமைந்திருந்தது மேலும் ஓர் ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.  

புதிய படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு, பழங்கள் + புஷ்பங்கள் வாங்கிக்கொண்டு, அந்த ஸ்ரீ பாதுகையின் அனுஷ பூஜையில், இந்தப் படத்தினை வைத்து வணங்கி விட்டு வரப் புறப்பட்டேன்.


லேமினேட் செய்யப்பட்ட இந்த காமதேனு-பெரியவா படம், அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த பூஜையில் என்னால் வைக்கப்பட்டது. அப்படியே நானும் அங்கு நமஸ்கரித்துக் கொண்டேன். 


பாதி பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததாலும், ஸ்ரீ பாதுகைகள் மேல் பூக்குவியலாக, உதிரிப் புஷ்பங்கள் போடப்பட்டுக்கொண்டே இருந்ததாலும், ஸ்ரீ பாதுகைகளை, நான் தரிஸிக்க இயலாமல், மலை போன்ற பூக்களால் அவை மறைக்கப்பட்டு இருந்தன. அனுஷ பூஜை முடியும் வரை நானும் அங்கு ஸ்ரீ பாதுகைகளை தரிஸிக்கக் காத்திருந்தேன்.

 

காமதேனு ஸமம் ப்ரோக்தம்
வாஞ்சிதார்த்த ப்ரதாயகம் !

ஸ்ரீ சந்த்ரஷேகரம் வந்தே
நிஸ்ஸீம கருணாலயம் !!

  

பூஜை முடிந்த பிறகு, மாலை அணிவிக்கப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவர் படம், மாலை அணிவிக்கப்பட்ட அவரின் திரு உருவச் சிலை, உதிரிப் புஷ்பக் குவியல்கள், ருத்ராக்ஷ மாலைகள், காமதேனு-பெரியவா படம், வெள்ளிக்கவசங்கள் போடப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பாதுகைகள் ஆகியவை அனைத்தும் நன்கு காட்சியளிக்குமாறு வைத்து, தாங்கள் அனைவரும் இங்கு தரிஸிக்க ஏதுவாக படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன. 





14.12.2017 அன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவருக்கு நடைபெற்றுள்ள ஆராதனை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ள இந்த காமதேனு-பெரியவா படம் பற்றிய பல்வேறு சிறப்புக்களை எடுத்துச் சொல்லும், 15 நிமிட வீடியோ காட்சிகள் காண இதோ ஓர் இணைப்பு:  



மேற்படி வீடியோவில் கடைசி நான்கு நிமிடக் காட்சிகளைக் காணத் தவறாதீர்கள். தெப்ப உற்சவத்தில் காமதேனு-பெரியவா, மிதந்து வந்து காட்சியளிப்பது மிகவும் அழகோ அழகாகக் காட்டப்பட்டுள்ளது.  




இந்தக் கிடைப்பதற்கு அரிய, பொக்கிஷமான காமதேனு-பெரியவா படத்தினை எனக்குப் புத்தாண்டு பரிசாக, பிரியத்துடன் அனுப்பி வைத்துள்ள, என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரியத் தோழி திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத், அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


  


  

வரும் 13.02.2018 மஹா சிவராத்திரி + பிரதோஷம் அன்றோ அல்லது 15.02.2018 அமாவாசையன்றோ மேற்படி காமதேனு-பெரியவா படத்தினை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹத்தால், என் வீட்டு பூஜை அறை நுழைவாயில் மேலே நிரந்தரமாகக் காட்சியளிக்குமாறு, ஆணி அடித்து மாட்டவும், புதிய சந்தன மாலை அணிவிக்கவும் ஏற்பாடு செய்யலாம் என நினைத்துள்ளேன். 

ஸ்ரீ ஸத் குருப்யோ நம:


பாத ரக்ஷைகள் என்றால் என்ன? அவற்றின் மகத்துவம் என்ன? ஏன் அதனை மிகவும் உயர்வாக நாம் மதித்து வணங்க வேண்டும்? என்ற பல்வேறு விஷயங்களை, மிகப் பிரபலமான எழுத்தாளரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்கள், ‘புதுயுகம்’ தொலை காட்சியில் ஆற்றிடும் சுவையான சொற்பொழிவினைக் கேட்க இதோ ஓரு சில இணைப்புகள்: 
   

140
https://www.youtube.com/watch?v=c98P9bZzliw&list=PL00QzbpQoXcvob0yaOjcgzpW7RfQFBYqP&index=19

141

142

143

144

145

146

147

148

149

150

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதரக்ஷைகளின் மஹிமைகள் பற்றி மட்டுமே, தினமும் 10 நிமிடங்கள் வீதம் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பேசி வருகிறார். அவர் சொல்லிடும் ஒவ்வொரு அதிசய + அற்புத நிகழ்வுகளையும் பற்றிக் கேட்டு மகிழ, மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது.

oooooOooooo




ஸ்ரீ குருப்யோ நம:  

சுவஸ்திஸ்ரீ ஹேவிளம்பி (ஹேமலம்ப) வருஷம், உத்தராயணம், சிசிர ருதெள, கும்ப மாஸம், கிருஷ்ணபக்ஷம், திரயோதஸி, ஸித்த யோகம், உத்ராஷாடா நக்ஷத்திரம் கூடிய, விஷ்ணுபதி புண்யகாலம், மாசி முதல் தேதி, மங்கள்வார் எனும் மாசிச் செவ்வாய்க்கிழமை, மஹா சிவராத்திரி புண்யதினம், பிரதோஷ நாள், பிரதோஷ வேளையில், 13.02.2018 மாலை 5 மணிக்கு மேல், மேற்படி காமதேனு-பெரியவா அடியேன் இல்லத்தின் பூஜையறை நுழைவாயில் அருகே வந்து அமர்ந்து அருளாசி வழங்க ஆரம்பித்துள்ளார் என்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அதற்கான படங்களில் சில தங்களின் தரிஸனத்திற்காக கீழே காட்டியுள்ளேன்:



^திருமதி. ஜெயஸ்ரீ அவர்களால் 
அன்பளிப்பாக அனுப்பப்பட்ட 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ காமதேனு-பெரியவா படம்^


^அடியேன் இல்லத்து பூஜை அறை நுழைவாயில்^


^பூஜை அறையின் உள்பக்கத்தின் ஒரு பகுதி^ 


என் பெரிய அக்கா தன் காசிப்பயணத்தை
முடித்து வந்ததும், எனக்கு அளித்துள்ள காமதேனு



என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]