என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 13 ஜூன், 2017

’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-7 of 8

இந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-3 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-4 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-5 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-6 க்கான இணைப்பு:


நூலாசிரியர் மோகன் ஜி அவர்கள்


16) பாண்டு

மிகவும் அழகாக கற்பனை செய்து எழுதியிருக்கிறார். கரப்பான் பூச்சிகளுக்கும் வாழ்க்கை உண்டு, மீசையும் ஆசையும் உண்டு, நிரந்தமான வாழ்விடமும் அவ்வப்போது சிறுசிறு பயணங்களும் உண்டு, வாழ்க்கையில் போராட்டங்கள் உண்டு, எதிர்பாராத ஆபத்துகள் உண்டு, 

உடலில் ஒருசில குறைபாடுகள் உண்டு, கேலியும் கிண்டலும் பரிகாசமும் அவமானங்களும் உண்டு, தாய்-சேய்ப்  பாசமும் உண்டு, துயரங்கள் உண்டு, உதவிடும் மனப்பான்மை உண்டு, காதலும்கூட உண்டு என்பதை நேர்த்தியாக நேரேட் செய்துள்ளார்.



மிக அழகாக ஓருசில கரப்பான் பூச்சிகளே பேசுவதாகவே எழுதியுள்ளார். இந்தக் கதைக்கான தலைப்புத்தேர்வும் மிகவும் கச்சிதமாகவே உள்ளது. 


17) வடு

ஆஹா, அருமையானதொரு கதை. காதல் கதை. நிறைவேறாக் காதல் கதை. கதையின் தலைப்பு ‘வடு’  .... புளிப்பில்லாத சின்னூண்டு பச்சரிசி மா’வடு’ போன்றே நறுக் + சுருக் + நல்ல டேஸ்ட்.



கதாநாயகனுக்கு மட்டும் இன்னும் கல்யாணமே ஆகவில்லை. முதிர்க்கண்ணனாக இருக்கிறான். (முதிர்க் கன்னியின் ஆண்பாலாக ‘முதிர்க் கண்ணன்’ என நான் இங்கு சொல்லியுள்ளேன்.) 


அவள் விட்டுச்சென்ற அந்த வடு, மதிப்புரை எழுதும் என்னையே மிகவும் ஹிம்சித்து விட்டது என்றால், பாவம் ...... அந்தக்கதாநாயகனுக்கு எப்படி இருந்திருக்கும். 

ஒரு சின்ன வெல்வெட் ஸ்டிக்கர் பொட்டு போன்ற விஷயத்தை என்னமாக ஜோராகக் கையாண்டு கதையாக்கியுள்ளார். 

சபாஷ் மோகன் ஜி! 

உங்களிடம் நான் கற்க வேண்டியது நிறையவே இருக்கும் போலிருக்குது!! 

உமக்கு உம் சொந்த அனுபவங்களே பேசுது போலிருக்குதய்யா ! 


18) தமிழே! என் தமிழே!! 

1995-ம் ஆண்டு கடலூரில் ஓர் அந்திமாலைப் பொழிதினில் நூலாசிரியர் மோகன்ஜி இல்லத்திற்கு இரண்டு V.I.P. க்கள் வந்துள்ளனர். 

இருவருமே எனக்கும் மிகவும் பிடித்தவர்களே. ஒருவர் திரு. இறையன்பு I.A.S. அவர்கள் மற்றொருவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள்.

அப்போது இந்த நூலாசிரியர் ஆந்திரா-ஒரிஸ்ஸா மாநில எல்லையில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ஒரு ஊரின் வங்கிக்கிளைக்கு மாற்றலாகியிருந்த சமயமாம். அங்கு பொறுப்பேற்றுக்கொண்டு விடுப்பில் கடலூருக்கு வந்துள்ளார்.

புது ஊரில் யாரோடும் தமிழ் பேச வாய்ப்பில்லாத சூழலில் அதற்காகத் தான் தவித்த தவிப்பையும், சில சம்பவங்களையும் இந்த இரு V.I.P க்களோடும் பகிர்ந்து கொண்டுள்ளார். 

உணர்வு பூர்வமான சிறு மெளனத்திற்குப்பிறகு திரு. இறையன்பு அவர்கள், இந்த சம்பவத்தை அப்படியே ஓர் கதை போல எழுதுங்கள் என அன்புக்கட்டளை இட்டுள்ளார்கள். 

இவ்வாறு இந்தக்கதையோ அல்லது கட்டுரையோ பிறந்துள்ளதாக, இந்த நூலாசிரியர் தன் குறிப்பாக பக்கம் எண்: 134 இல் சுட்டிக்காட்டியுள்ளார். 

இப்போது கதைச் சுருக்கத்திற்குப் போவோம்.




ஆந்திரா-ஒரிஸ்ஸா பார்டரில் ஒருநாள் சாயங்கால வேளையில்  ‘தமிழ்ச்செல்வி’ என்ற பெயர் பலகையுடன் வந்து நின்ற லாரியொன்றைக் கண்டதும், கதாசிரியருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அந்த லாரி மதுரையிலிருந்து புறப்பட்டு வந்துள்ளது.  




கதாசிரியர் டிரைவருடனும் க்ளீனருடனும் தமிழிலேயே அரட்டை அடிக்கிறார். லாரி டிரைவருக்கும், க்ளீனருக்கும் அருகிலுள்ள டீக்கடையில் டீயும் பிஸ்கட்களும் வாங்கித்தருகிறார். 

இரவு அங்கேயே எங்காவது தங்கி தூங்கிவிட்டு, மறுநாள் விடியற்காலம் லாரியைக்கிளப்பிக்கொண்டு கல்கத்தாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர், லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு வந்துள்ள ஆசாமிகள். 

இவர்களுடன் மேலும் தமிழ் பேச வேண்டும் என்ற தாகத்திலும் மோகத்திலும், அவர்கள் இருவரையும் தன் வீட்டுக்கு இரவு விருந்துண்ண அழைக்கிறார் கதாசிரியர். 

அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தாண்டி அவரின் வீடு அமைந்துள்ளது. ரோட்டோர டீக்கடையில் நின்றவாறே டீ அருந்திய அந்த பேங்க் மேனேஜரான நம் கதாசிரியர், லாரியிலேயே தொத்திக்கொண்டு தன் வீட்டுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறார். தன் கைப்படவே சூடாக சமையல் செய்து அவர்களுடன் சேர்ந்து பேசி மகிழ்ந்து உண்கிறார்.  

ஆந்திரா ஹோட்டல்களில் உணவு சாப்பிட்டால் நவத்துவாரங்களும் பற்றிக்கொண்டு எரிவதாக அவர்கள் பேச்சினூடே சொல்லிக்கொள்வது குபீரெனச் சிரிப்பினை வரவழைக்கின்றது. 

அவர்களின் மற்ற பேச்சு சுவாரஸ்யத்தினை நூலின் ஒவ்வொரு வரியாகப் படித்துத்தான் இன்புற வேண்டும். உணர்வு பூர்வமான மிக எளிமையான சுவாரஸ்யமான உரையாடல்களாக அவை அமைந்துள்ளன.

லாரி டிரைவருக்கு ஊரில் சரோஜா என்ற பெயரில் ஒரு சம்சாரமும் 2+2 நாலு குழந்தைகளும் உள்ளனராம். 2+2 என்றால் இரண்டு பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் எனத் தப்புக்கணக்கு போட்டு விட வேண்டாம். அவற்றில் சரோஜாவுக்கு மட்டும் பிறந்தவை இரண்டு, பிறகு இந்த லாரி டிரைவரை அவள் மறுமணம் செய்துகொண்ட பிறகு இவர் மூலம் பிறந்துள்ளவை இரண்டு. ஆக மொத்தம் நான்கு. 

அர்ஜுனனுக்கு கண்ணன் கீதா உபதேசம் செய்தது போல இந்த லாரி டிரைவர் டேவிட்டும் தனக்குத் தூக்கம் வரும்வரை பேங்க் மேனேஜருக்கு பல்வேறு நாட்டு நடப்புகளைச் சொல்லி வருகிறார்.

மிகவும் ரஸித்ததோர் இடம்:

“உன் வருமானத்திலே சந்தோஷமா இருக்கியா, டேவிட்?” 

“சந்தோஷம் வருமானத்திலேயா? மனசுல தான் சார்; 

இந்த நிமிட்டு நான் ராஜா சார். 

பெரிய பதவியிலே இருக்கிற மேனேஜர் எனக்காக சமச்சு வயிறார போட, கருத்தரு இன்னிக்கு ஆசீர்வதித்திருக்காரு; 


  


நாலு சக்கரத்துக்கு மேலே என் வாழ்க்கை சார். எப்ப வேணும்னாலும் எதுவும் ஆகலாம்; 

முன்னமெல்லாம் ரோடுசைட்ல வண்டிய நிப்பாட்டிட்டு கெட்டதுங்களோட கொஞ்ச நேரம் குஜாலா இருக்கிறதுதான்; 


 


சம்சாரத்துக்கு சத்தியம் பண்ணிக் குடுத்தேன்.... கருமத்த உட்டேன் சார்; 

ஒருவாரம் பத்துநாள் இப்படி ஊர் சுத்திட்டு வீட்டுக்குப்போய் பிள்ளைகளைப் பார்க்கறப்போ மனசு பொங்கி வழியும் சார். வீட்டுக்கு எப்போ போறோம்ன்னு மனசு அடிச்சுக்கும் சார்.”





^மெல்லிசை மன்னர்^ 
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன்
நூலாசிரியர் மோகன்ஜி - ஆண்டு : 2003 


மும்பையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் 
பழ.கருப்பையா அவர்களுடன்
நூலாசிரியர் மோகன்ஜி


தொடரும்


இந்தத்தொடரின் 
https://gopu1949.blogspot.in/2017/06/6-of-8.html
பகுதி-6 இல் பின்னூட்டமிடுவதில் 
முதலிடம் பெற்றுள்ள ‘சித்ரா’வுக்கு 
 பூங்கொத்து இதோ:



இந்தத்தொடரின்  
பகுதி-1 முதல் பகுதி-6 வரை
மிக அதிகமான 
எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் இட்டு 
சிறப்பித்துள்ள நம் அதிரடி
‘அதிரா’வுக்கு 
மேலும் சில பரிசுகள்
அளித்து கெளரவிக்கப்படுகிறது
 

1) இடுப்பினில் அணியும் ஒட்டியாணம்


^மிகவும் அகலமான இதுவே^
நம் அதிராவின் இடுப்புக்குப் பத்துமோ பத்தாதோ !



மூன்று சைஸ்களில் 
இடுப்புக்கு ஒட்டியாணங்கள் !!!



2) மேலும் மூன்று நெக்லஸ்கள் !!!


 



ஹா ஹா ஹா அப்பூடியா சங்கதி கோபு அண்ணன்:).. சரி சரி அப்போ மீ குதிக்காமல் விடுகிறேன்ன்.. அதுக்காக சேர்த்து ஒரு சோடி வைர வளையல்களாகவும் குடுத்திடுங்கோ:)

//அதுக்காக சேர்த்து ஒரு சோடி வைர வளையல்களாகவும் குடுத்திடுங்கோ:)//

கேட்டதும் ..... கொடுப்பவனே .....
கிருஷ்ணா ..... (கோபால)கிருஷ்ணா ..... :)

 3) விரும்பிக்கேட்டுள்ள ஒரு ஜோடிக்கு பதிலாக
எட்டு ஜோடி தங்க/வைர வளையல்கள்
கொடுக்கப்பட்டுள்ளன. :)

4) அது தவிர ..... மூன்று ப்ரேஸ்லெட்டுகள்

 

இனிய நல்வாழ்த்துகள் அதிரா !



**அதனால் நீங்க எதுவாகினும் என்னிடம் கூச்சப்படாமல் கேளுங்கோ.**- கோபு

ஹா ஹா ஹா எனக்கு அந்த உச்சியில் பள்ளம் விழுந்த, உச்சிப் பிள்ளையார் சிலை வேணும்:) - அதிரா

  

  

   


^அதிராவுக்காக வைரம் பதித்த ஜொலிக்கும் பிள்ளையார்^

இன்று 13.06.2017 சங்கட ஹர சதுர்த்தி நன்னாளில்
வழங்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பாக அமைந்துள்ளது!

இன்றைய உச்சிப்பிள்ளையார் கோயில்
(காதலர்கள் பூங்கா போலவும்  பயன்பட்டு வருகிறது) 

ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 
எங்கள் வீட்டு வாசலிலிருந்து
எடுக்கப்பட்டுள்ள படம் இது.


^சீறிப்பாயும் பூஸாரை தாவிப்பிடிக்கும் பிள்ளையார்!^


^பூனையின் வாலைப்பிடித்து அப்படியே 
தேம்ஸ் நதியில் அமுக்க நினைக்கும் பிள்ளையார்.^

உச்சிப் பிள்ளையாரின் 
வலுவான பிடியில் இப்போது பூனையார் ! 
”கழுத்தைப் பிடிக்காதீங்கோ ..... 
நான் நெக்லஸ் அணிய வேண்டும்”
எனக் கதறும் பூனையார் !!







[கடைசியில் காட்டப்பட்டுள்ள மூன்று-நான்கு படங்கள் மட்டும் 
இங்கு எங்கட சத்குணவதியான 
ஒரு நேயர் விருப்பமாக வெளியிடப்பட்டுள்ளன.]



என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


121 கருத்துகள்:

  1. அபூர்வமான, அழகிய புகைப்படங்கள்! சிறப்பான விமர்சனம்!!
    இனிய பாராட்டுக்கள்!! அன்பு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மேடம்! கோபு சாரின் புதுப் பட்டம் என்ன தெரியுமோ? 'விமரிசக வித்தகர்'. எப்படி?!

      நீக்கு
    2. முதல் வருகைக்கும் பெறவிருக்கும் பரிசுகளுக்கும் வாழ்த்துகள் மனோ மேடம். அடுக்கடுக்காய் புத்தகங்களையும், மலை மேல் ஒரு வீட்டையும் பரிசாக பரிந்துரை செய்கிறேன்.

      நீக்கு
    3. மோகன்ஜிJune 13, 2017 at 3:47 PM
      நன்றி மேடம்! கோபு சாரின் புதுப் பட்டம் என்ன தெரியுமோ? 'விமரிசக வித்தகர்'. எப்படி?!///

      ஹையோ விமரிசக என்பது பொம்பிளைப்பெயராக இருக்கே:)..

      // அடுக்கடுக்காய் புத்தகங்களையும், மலை மேல் ஒரு வீட்டையும் பரிசாக பரிந்துரை செய்கிறேன்.///
      ஹா ஹா ஹா மோகன் ஜி யும் ஆரம்பித்து விட்டாரா.. வழித்தேங்காயை எடுத்து .... உடைக்க:).. கோபு அண்ணனின் வீடு போச்சேஏஏ:).

      நீக்கு
    4. மனோ சாமிநாதன் June 13, 2017 at 12:11 AM

      வாங்கோ மேடம். வணக்கம். இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

      //அபூர்வமான, அழகிய புகைப்படங்கள்! சிறப்பான விமர்சனம்!! இனிய பாராட்டுக்கள்!! அன்பு வாழ்த்துக்கள்!!//

      புகைப்படங்களை மிகவும் ரஸித்துச் சொல்லியுள்ளீர்கள். அது உங்களைப் போன்ற ஒருசிலரால் மட்டுமே முடியும். :)

      தங்களின் முதல் வருகை + சிறப்பான விமர்சனம் + அபூர்வமாக அழகிய புகைப்படங்கள் என்ற கருத்து + இனிய பாராட்டுகள் + அன்பு வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    5. //ஹையோ விமரிசக என்பது பொம்பிளைப்பெயராக இருக்கே:)..//

      அதிரா விமர்சக என்பது பெயர் இல்லை. வித்தகர் என்ற வார்த்தை சேர்ந்து வரும் போது விமர்சனம் என்பது விமர்சக என்று வருகிறது.

      நீக்கு
  2. அடடா... வர வர நேக்கு முதலிடம் கிடைக்குதில்லையே:).. ஆனாலும் போன தடவையே கோபு அண்ணன் சொல்லிட்டார்ர் 2 வதா வருவோருக்கே பரிசு என:) இல்லயா கோபு அண்ணன்?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 13, 2017 at 12:19 AM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //அடடா... வர வர நேக்கு முதலிடம் கிடைக்குதில்லையே:)..//

      இன்று பதிவு வெளியிட்ட பிறகு, 11 நிமிடங்கள் தாமதமாக வந்துவிட்டீர்கள். எங்கட துபாய்காரங்க டக்குன்னு மூன்றே நிமிடத்தில் வந்து உங்களை முந்திட்டாங்கோ.

      //ஆனாலும் போன தடவையே கோபு அண்ணன் சொல்லிட்டார்ர் 2 வதா வருவோருக்கே பரிசு என:) இல்லயா கோபு அண்ணன்?:)//

      நான் சொன்னதாக நீங்கள் சொல்வதால் அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும்.

      என்ன சொன்னோம், யாரிடம் சொன்னோம், எதற்காகச் சொன்னோம் என்பது சமயத்தில் எனக்கு மறந்து போய் விடுகிறது. சரி அ(த்)தை விடுங்கோ.

      வைரம் / தங்கம் / வெள்ளி போன்ற நகை நட்டெல்லாம் எப்போதும் உங்களுக்கு மட்டுமே.

      நீக்கு
    2. நாங்க தூங்கற நேரத்துல கோபு அண்ணா பதிவ போட்டுடறார். நாங்க எழுந்து வேலை எல்லாம் முடிச்சுட்டு ஆடி, அசைஞ்சு வரதுக்குள்ள கடைசி இடம் தான் கிடைக்கறது. அதுக்கே நாங்க கவலைப் படலயாம். இரண்டாவது இடத்துக்கு வருத்தப்படலாமா அதிரா

      நீக்கு
  3. முதலாவது படத்தில் மோகன் ஜி யைய்ப் பார்த்தால் சிவாஜி அங்கிளைப்பொல தெரிகிறார்:).. அது சரி எப்போ அவரது தலை வெள்ளையானது?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. இருங்கோ கொஞ்சத்தால வந்து புக் படிக்கிறேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா! உங்களுக்கு ஒரு விருந்தே தருவேன். சிவாஜி போல் எனச் சொன்னதற்கு....
      தலை வெள்ளையானது பற்றியா கேட்டீர்கள்? எனக்கு வெள்ளை மனசாச்சா? அது பொங்கிப் பொங்கி தலைப் வடிஞ்சிருச்சம்மா !

      நீக்கு
    2. //மோகன்ஜிJune 13, 2017 at 3:52 PM
      அதிரா! உங்களுக்கு ஒரு விருந்தே தருவேன். சிவாஜி போல் எனச் சொன்னதற்கு...//

      ஹா ஹா ஹா சத்தியமாத்தான்.. அதுவும் முதல்மரியாதையில் வரும் சிவாஜி போலவே..

      இல்லயா அஞ்சு?:).. வந்து கொஞ்சம் கை கொடுக்கலாமெல்லோ நேக்கு தனியா நிண்டு பேசக் கூச்சமாக் கிடக்கூஊஊஊஊ:)

      நீக்கு
    3. asha bhosle athira June 13, 2017 at 4:04 PM

      //ஹா ஹா ஹா சத்தியமாத்தான்.. அதுவும் முதல்மரியாதையில் வரும் சிவாஜி போலவே.. //

      முதல் மரியாதையில், வேஷ்டியை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு, அண்டர்வேர் தெரிய, கொஞ்சம் நடுத்தர வயசான சிவாஜி .....

      அந்த ஜாக்கெட் போடாத ராதாப்பொண்ணுக்காக தூக்கிக்காட்டுவாரே ......

      ஒரு மிகப்பெரிய இளவட்டக் கல் ஒன்றை ......

      அந்த எங்கட சிவாஜியையா நீங்க சொல்றீங்கோ? :)

      நீக்கு
    4. மோகன் ஜியின் புகைப்படத்தைப் பார்த்ததும் நான் கூட நினைத்தேன். இவர் எதற்கு நாடகங்களுக்கு வசனமும், சிறுகதைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார். பேசாமல் நடிக்கப் போய் இருக்கலாமே என்று.

      நீக்கு
  4. பாண்டுவில் வரும் கரப்பான் பூச்சிக் கதை உண்மையா?:).. உண்மை எனில், எதுக்கு கதை எழுதும்போது கரப்பான் பூச்சியின் றிசேஜ் ஐச் செய்தார் மோகன் ஜி?:).. எனக்கென்னமோ டவுட்டு டவுட்டா வருதே:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. றிசேஜ் ??? ஙே..... புரியல்லையே !

      நீக்கு
    2. மோகன்ஜி June 13, 2017 at 3:54 PM

      //றிசேஜ் ??? ஙே..... புரியல்லையே !//

      அதிரா பாஷை உங்களுக்குப் புரிய ஆறு வருஷங்கள் ஆகும்.

      அதிரா பாஷையில் ’றிசேஜ்’ என்றால் RESEARCH :)

      நீக்கு
    3. அப்படியா சங்கதி! என் மனைவிக்கு கரப்பாம் பூச்சி மட்டுமே பயம் என்பதால், அது மேல தனி அன்பு.

      நீக்கு
  5. ///ஆஹா, அருமையானதொரு கதை. காதல் கதை. நிறைவேறாக் காதல் கதை.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு விமர்சிக்கத் தெரியல்ல “வடு” வை கோபு அண்ணன்:).. அருமை.. அழகூ எண்டெல்லாம் சொல்லிப்போட்டு.. நிறைவேறாத காதல் கதை எனச் சொல்றீங்க கர்ர்:)..

    ///அவள் விட்டுச்சென்ற அந்த வடு, மதிப்புரை எழுதும் என்னையே மிகவும் ஹிம்சித்து விட்டது என்றால், பாவம் ...... அந்தக்கதாநாயகனுக்கு எப்படி இருந்திருக்கும். ///

    எனக்கு இப்போ இன்னொரு டவுட்டும் வருதே:) என் பக்கத்தில் ”நேற்று” நான் எழுதிய கதையைப் படிச்சுத்தான் இதை எழுதியிருப்பாரோ மோகன் ஜி:).. ஹையோ எனக்கென்னமோ ஆச்சு இண்டைக்கு:).

    உண்மையிலேயே மோகன் ஜி யின் எழுத்துக்கள் நாளுக்கு நாள் என்னை ரசிகை ஆக்கிக்கொண்டே வருகிறது...

    இன்னும் ஒரு பகுதியோடு முடியப்போகுதே எனும் எண்ணத்தைக் கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா ! எனக்கு ரசிகை ஆகணும்னா கோபு சார் கிட்ட ஒரு சர்டிபிகேட்டும், கடைசி பதிவிலாவது முதல் பரிசும் வாங்கி வரணும். சரியா?

      நீக்கு
    2. asha bhosle athira June 13, 2017 at 1:52 AM

      **ஆஹா, அருமையானதொரு கதை. காதல் கதை. நிறைவேறாக் காதல் கதை.**

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு விமர்சிக்கத் தெரியல்ல “வடு” வை கோபு அண்ணன்:).. அருமை.. அழகூ எண்டெல்லாம் சொல்லிப்போட்டு.. நிறைவேறாத காதல் கதை எனச் சொல்றீங்க கர்ர்:)..//

      காதல் நிறைவேறினால் என்ன ஆகும்? கல்யாணத்தில் முடியும். அதன் பிறகு பிள்ளைப்பேறு அது இதுன்னு ஆளே அடையாளம் தெரியாமல் சப்புன்னு ஆகிவிடும். சில கேஸ்களில், சீக்கரமாகவே வெறுத்துப்போய் டைவேர்ஸ் வரையும் கூடக் கொண்டுபோய் விட்டு விடும்.

      ஆனால் இந்த நிறைவேறாக் காதலும், அந்தக் காதல் உணர்வுகளும் மட்டுமே, சும்மா பச்சரிசி வடு மாங்கா மாதிரி நறுக், சுருக்குன்னு நல்ல டேஸ்டோ டேஸ்டாக நம் நினைவுகளில் என்றும் பசுமையாக அப்படியே இருக்கும்.

      அதனால் மட்டுமே அதனை அருமை, அழகு என்றெல்லாம் நான், எனக்குத் தெரிந்த வரையில் வர்ணித்துச் சொல்லியுள்ளேன். :)

      நீக்கு
    3. கோபு >>>>> அதிரா (2)

      சில ஜோடிகள் தாங்கள் ஒருவரையொருவர் உயிருக்குயிராகக் காதலிப்பதாகச் சொல்லித் திரிவார்கள்.

      காதலிக்கும் போது, காதல் மயக்கத்தில் ஒருவரிடம் உள்ள குறைபாடு மற்றவருக்குத் தெரியாது. ஒரே த்ரில்லிங்கா குஜாலாகத்தான் இருக்கும்.

      கல்யாணம் என்று ஒன்று ஆன பின்புதான் .... ’ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பூ இவ்வளவுதானா வாழ்க்கை என்பது’ என்ற ஒரு பெரிய சலிப்பு ஏற்பட்டுவிடும்.

      இதனைப்பற்றி வ.வ.ஸ்ரீ என்ற கதாபாத்திரம், தகுந்த உதாரணங்களுடன், உங்களுக்கு வெகு அழகாகப் புரியும்படி, புட்டுப்புட்டுச் சொல்லியிருக்கிறார்..... நான் எழுதிய என் கதையொன்றில். அதனை முழுவதும் படிக்கா விட்டாலும் அதன் பகுதி-5 ஐ மட்டுமாவது படியுங்கோ .... அதிரா.

      இதோ இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

      அந்தக்கதையெல்லாம் படிக்கக் கொடுத்து வெச்சிருக்கணும். உங்களுக்கு அந்தக்கொடுப்பினை இதுவரை இல்லை.

      இதில் நம் அஞ்சு மட்டுமே மிகவும் கொடுத்து வெச்சவங்க ! :) 2011 மார்ச் மாதம் நான் முதன் முதலாக வெளியிட்ட போதே https://gopu1949.blogspot.in/2011/03/5_18.html வந்து அழகாக, சமத்தாக கமெண்ட்ஸ் போட்டுவிட்டு போய் இருக்கிறாங்க:

      -=-=-=-=-

      angelin May 23, 2012 at 6:54 PM

      **அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் முதன் முதலாகக் கைவைத்து, அதைத் திறந்து, லேசாக ஆள்காட்டி விரலை மட்டும் அதற்குள் பதித்து, மூக்கருகில் கொண்டு செல்ல எத்தனிக்கும் போது,**

      CURIOSITY :)))))))))

      பொண்டாட்டியின் சுருக்கம் பொ... டி.
      அருமையான பதம் :)))

      மனைவியின்றி அவரில்லை .

      நானும் சாப்பிட்டுருக்கேன் கம்மர்கட் .
      கொஞ்சம் பொட்டுகடலையும் சேர்ப்பாங்க அதை செய்யும்போது. சில கடைகளில் உள்ளே நாணயங்களை வைத்தும் விற்பாங்க.

      -=-=-=-=-

      அஞ்சுவே நான் பதிவு வெளியிட்டபின் 14 மாதங்கள் தாமதமாக வந்து கருத்துச் சொல்லியிருக்காங்கோ. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      நீக்கு
    4. //மோகன்ஜிJune 13, 2017 at 3:56 PM
      அதிரா ! எனக்கு ரசிகை ஆகணும்னா கோபு சார் கிட்ட ஒரு சர்டிபிகேட்டும், கடைசி பதிவிலாவது முதல் பரிசும் வாங்கி வரணும். சரியா?//

      ஆஆஆவ்வ்வ்வ்வ்வ் இப்பூடி வச்சிட்டீங்களே மோகன் ஜி ஆப்பு:).. சேர்டிபிகேட் கோபு அண்ணனை மிரட்டி வாங்கிடுவேன்:) ஆனா அந்த முதல் கொமெண்ட் தான் எங்கயோ இடிக்குது.. இருங்கோ எதுக்கும் என் ஆயுதத்தை இப்பவே தூக்கிடுறேன்:).. அப்போத்தான் என் கொமெண்ட்டை எப்பூடி எடிட் பண்ணியாவது கோபு அண்ணன் முதலாவதாப் போடுவார்:) எங்கிட்டயேவா.. நான் ரசிகை ஆகோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:)..

      https://i.ytimg.com/vi/LOkunGb9kU4/maxresdefault.jpg

      நீக்கு
    5. ///அந்தக்கதையெல்லாம் படிக்கக் கொடுத்து வெச்சிருக்கணும். உங்களுக்கு அந்தக்கொடுப்பினை இதுவரை இல்லை. ///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடி ஆராவது தன்னைத்தானே புழுகினால்.. எனக்குப் படிக்கும் ஆர்வம் வருவதில்லை:)... நேரம் கிடச்சால் வந்து படியுங்கோ பிளீஸ்ஸ்....இப்படி சொல்லும்போதுதான்.. அந்தச் சொல்லுக்காகவே படிக்கோணும் எனத் தோணும்:).. சரி சரி கோபு அண்ணனோடு சண்டையிட்டு என்ன ஆகப்போகிறது.. போய்ப் படிக்கிறேன்..:)

      நீக்கு
    6. நேரம் கிடச்சால் வந்து படியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

      நீக்கு
    7. https://i.ytimg.com/vi/LOkunGb9kU4/maxresdefault.jpg

      மிகப்பெரிய துப்பாக்கியுடன், மிகப்பெரிய பூனையையும் அதன் பூனைக்கண்களையும் பார்த்து நான் பயந்தே பூட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன். கர்ர்ர்ர்.

      நீக்கு
    8. அது அது:) இத்தனை பிளீஸ்ஸ்ஸ் பார்த்ததும் உடனே ஓடிப்போய் படிச்சிட்டேன்ன்.. ஆனா ஏதோ காதல் கதை எனச் சொல்லிப்போட்டு, என்னை அரசியல் கதை படிக்க வச்சிட்டீங்களே.. கர்:).

      நீக்கு
    9. asha bhosle athira June 14, 2017 at 3:52 PM

      //அது அது:) இத்தனை பிளீஸ்ஸ்ஸ் பார்த்ததும் உடனே ஓடிப்போய் படிச்சிட்டேன்ன்.. ஆனா ஏதோ காதல் கதை எனச் சொல்லிப்போட்டு, என்னை அரசியல் கதை படிக்க வச்சிட்டீங்களே.. கர்:).//

      அதில் காதல் உள்பட நவரசமும் கலந்துள்ளதாக எங்கட கீதமஞ்சரி வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்களும், நம்ம இராஜராஜேஸ்வரி அக்காவும் சூப்பராக விமர்சனம் எழுதி முதல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ளார்கள்.

      இங்கே போய்ப் படிச்சுப்பாருங்கோ தெரியும். :))
      http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html

      அதிருக்கட்டும் அதிரா .... உங்களின் மேற்படி பின்னூட்ட எண்ணிக்கை: 101 ஆகும். CONGRATS !

      நீக்கு
  6. ///தென்கச்சி கோ. சுவாமிநாதன் //
    ஓ இவரின் பேச்சுக்கள் அதிகம் கேட்பேன் நான்... ரொம்பப் பிடிக்கும்.

    //“உன் வருமானத்திலே சந்தோஷமா இருக்கியா, டேவிட்?”

    “சந்தோஷம் வருமானத்திலேயா? மனசுல தான் சார்; ///

    மிக மிக அருமையான வரிகள்.. நானும் மிகவும் ரசிக்கிறேன்.

    ///^மெல்லிசை மன்னர்^
    எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன்
    நூலாசிரியர் மோகன்ஜி - ஆண்டு : 2003//

    மோகன் ஜி பற்றி ஒரு வாழ்க்கை வரலாறு எழுதலாமே கோபு அண்ணன்? மோகன் ஜி நம்மைப்போல ஒரு புளொக்கர் .. அதைத்தாண்டி ஒரு நல்ல எழுத்தாளர் என மட்டுமே எனக்கு தெரிந்துள்ளது.... ஆனா அவர் பெரிய பெரிய மேதைகளுடன் எல்லாம் சேர்ந்து படங்கள் எடுத்துள்ளமை பார்க்க எனக்கேதும் புரியவில்லை... ரொம்ப சிம்பிளாக நம் அரட்டைகளை ரசிச்சு பதிலும் போட்டுவிட்டுச் செல்கிறார்.. எந்த லெவலோ தற்பெருமையோ இல்லாமல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாடி! நான் சாதாரணமான ரசிகன் மட்டுமே. வாழ்க்கை நல்லவர்களை என்னிடம் சேர்த்திருக்கிறது. நட்பில் உண்மையானவனாகவும், எதிர்பார்ப்புகள் இல்லாதவனாகவும் இருப்பேன். யாவும் தமிழ்நேசம் தந்த கொடை. இதுவரை நான் கோபுசாருடன் இருக்கும் படம் ஒன்று கூட இல்லை...

      நீக்கு
    2. //இதுவரை நான் கோபுசாருடன் இருக்கும் படம் ஒன்று கூட இல்லை...//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னவோ இந்த அதிரா முதலிய அனைவருமே கோபுவுடன் இருக்கும் படம் ஏராளமாக
      வெளிவந்து கொண்டிருப்பது போலவும், இவர் படம்தான் இல்லை எனக் குறைப்பட்டுக்கொண்டுள்ளார் பாருங்கோ, அதிரா.

      நாமெல்லாம் இன்று நேற்றா வலையுலகில் பழக்கம்?

      http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html இதோ இந்தப்பதிவினை சமீபத்தில் படித்துவிட்டு பின்னூட்டம்
      வேறு கொடுத்துள்ளார்.

      -=-=-=-=-

      மோகன்ஜி June 7, 2017 at 2:12 PM
      எவ்வளவு சுவாரசியமான கும்மி?! இன்னமும் புதுப்பொலிவுடன் இருக்கிறது

      -=-=-=-=-

      நீக்கு
  7. ///தொடரும்//

    ஆரம்பம் கசந்தது:) இப்போ எனக்கிது ரொம்பப் பிடிச்சுப்போச்ச்ச்ச்:).

    நல்லவேளை சித்திராவைக் காணம்:) வந்திருந்தால் என் நகையில் பங்கு கேட்டாலும் கேட்டிருப்பாவோ என்னமோ:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதில் பதியும் வரை எதுவும் கசப்பே அதிரா!

      நீக்கு
    2. அடிக்கிற கைதான் அணைக்கும்
      அணைக்கிற கைதான் அடிக்கும்

      இனிக்கிற வாழ்வே கசக்கும்
      கசக்கிற வாழ்வே இனிக்கும்

      புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
      துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
      புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
      துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
      புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
      துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி

      இருளுக்குப் பின் வரும் ஜோதி
      இதுதான் இயற்கை நியதி
      இருளுக்குப் பின் வரும் ஜோதி
      இதுதான் இயற்கை நியதி
      இதுதான் இயற்கை நியதி

      அடிக்கிற கைதான் அணைக்கும் - பலே
      அணைக்கிற கைதான் அடிக்கும்

      இனிக்கிற வாழ்வே கசக்கும்
      கசக்கிற வாழ்வே இனிக்கும்
      அடிக்கிற கைதான் அணைக்கும்

      இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி
      இடிக்கிற வானம் கொடுக்கும்
      இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி
      இடிக்கிற வானம் கொடுக்கும்
      இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி
      இடிக்கிற வானம் கொடுக்கும்

      விதைக்கிற விதை தான் முளைக்கும்
      இதுதான் இயற்கை நியதி - ஹுக்
      விதைக்கிற விதை தான் முளைக்கும்
      இதுதான் இயற்கை நியதி
      இதுதான் இயற்கை நியதி

      அடிக்கிற கைதான் அணைக்கும்
      அணைக்கிற கைதான் அடிக்கும்

      இனிக்கிற வாழ்வே கசக்கும்
      கசக்கிற வாழ்வே இனிக்கும்
      அடிக்கிற கைதான் அணைக்கும்
      அணைக்கிற கைதான் அடிக்கும்

      இனிக்கிற வாழ்வே கசக்கும்
      கசக்கிற வாழ்வே இனிக்கும்

      -=-=-=-
      பாடியவர்: திருச்சி லோகநாதன் + பி. சுசிலா
      படம்:- வண்ணக்கிளி
      (1959-இல் வெளிவந்த படம்)
      இசை: கே.வி. மஹாதேவன்
      பாடலாசிரியர்: மருதகாசி
      -=-=-=-

      நீக்கு
  8. //
    ^மிகவும் அகலமான இதுவே^
    நம் அதிராவின் இடுப்புக்குப் பத்துமோ பத்தாதோ !//

    நீங்க அதைப்பற்றிக் கவலைப்படாதீங்கோ:) நான் இதுக்கெல்லாம் கூச்சப்பட மாட்டேன்ன்:) பத்தாட்டில் இன்னும் ஒரு 5 பவுண் எக்ஸ்டாவாக் கேட்பேன்ன்,தரமாட்டேன் எனச் சொல்லவா போறீங்க:).. எப்படியாவது என் லொக்கர் முட்டினால் சரிதான்:).

    ஊசிக்குறிப்பு:
    அஞ்சுவுக்கு ஊசிபோல மிக மிக மெல்லிசாக்கும்:) நீங்க ஒட்டியாணம் ஏதும் கொடுக்க நினைச்சால்ல் ஒரு ரெண்டு கிராமில கொடுத்தால் போதும் கோபு அண்ணன்.. அதிகம் கஸ்டப்படாதீங்கோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர் :) எப்படியோ உண்மையை ஒத்துக்கிட்டாங்க பூஸ் :)

      நீக்கு
    2. "5 பவுண்" - மறுபடியும் எழுத்துப் பிழையா? '5 பவுண்ட் எடையுள்ள தங்கம்' - திருத்திடுங்கோ.

      நீக்கு
    3. ///நெல்லைத் தமிழன்June 13, 2017 at 11:15 AM
      "5 பவுண்" - மறுபடியும் எழுத்துப் பிழையா? '5 பவுண்ட் எடையுள்ள தங்கம்' - திருத்திடுங்கோ.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு மூச்சுக்கூட நிம்மதியா விட முடியுதா இங்கின:) கூட்டம் கூடிட்டாங்கையா கூட்டம் கூடிட்டாய்ங்க:).. ஹா ஹா ஹா நெ.த அது தங்கத்தின் எடையைச் சொன்னேனாக்கும்.. பவுண் தானே அது?:)

      நீக்கு
    4. ///AngelinJune 13, 2017 at 2:47 AM
      கர்ர்ர்ர் :) எப்படியோ உண்மையை ஒத்துக்கிட்டாங்க பூஸ் :)///

      ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தையே ஒப்பேத்திடுறாங்களாம்ம்.. நான் என் லொக்கரை நிரப்புகிறேன்ன் வைரத்தாலும் முத்துக்களாலும்.. தங்கத்தாலும் எனப் பொறாமை இந்த ரெண்டு கிராம் ஒட்டியாணம் கட்டும் அஞ்சுக்கு கர்ர்ர்ர்:).

      ஹையோ இந்த ரோபோவோடு போராடி, அதுக்குப் பதில் சொல்லி களைச்சாலும், விடாமல் கொமெண்ட் போடுகிறேனே.. இதெல்லாம் கோபு அண்ணனுக்கு எங்கே புரியப்போகிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      நீக்கு
    5. பவுன் - 8 கிராம். சாவரின்-அது 10 கிராம்னு சொல்றாங்க.

      நீக்கு
    6. //பத்தாட்டி இன்னும் ஒரு 5 பவுன் எக்ஸ்ட்ராவாக் கேட்பேன், தரமாட்டேன் எனச் சொல்லவா போறீங்க:).. எப்படியாவது என் லாக்கர் முட்டினால் சரிதான்:).//

      நாளை நள்ளிரவுக்குள் லாக்கர் முட்டிவிடும். கவலைப்பட வேண்டாம். லாக்கரில் போதுமான இடம் இல்லாவிட்டால் புதிய லாக்கர் கூட ஒன்று கேட்டு
      நீங்க வாங்கிக்கொள்ளலாம். :)

      பவுன் (இரண்டு சுழி ‘ன்’ போடணும்) அதாவது ஒரு பவுன் என்றால் 8 கிராம் தங்கமாகும்.

      நீங்க கேட்டுள்ளது 5 பவுன் .. அதாவது 5*8=40 கிராம் தங்கம் மட்டுமே. ஆனால் தரப்போவது மிக மிக அதிகமாக்கும்.

      40 கிலோவே தருவதாகத் திட்டமிட்டுள்ளேன். அதாவது 40000 கிராம். நீங்க கேட்டது போல ஆயிரம் மடங்காக்கும். :) சந்தோஷமா இருங்கோ, அதிரா.

      நீக்கு
  9. மோகன்ஜி sir க்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் !

    கோபு மாமாவுக்கு வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chitra June 13, 2017 at 2:09 AM

      வாங்கோ சித்ரா, வணக்கம்.

      //மோகன்ஜி sir க்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் ! கோபு மாமாவுக்கு வணக்கங்கள்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் கோபு மாமா

      நீக்கு
  10. ///2) மேலும் மூன்று நெக்லஸ்கள் !!!//

    ஆஹா...

    // 3) விரும்பிக்கேட்டுள்ள ஒரு ஜோடிக்கு பதிலாக
    எட்டு ஜோடி தங்க/வைர வளையல்கள்
    கொடுக்கப்பட்டுள்ளன. :)///

    ஓஹோ:)

    ///4) அது தவிர ..... மூன்று ப்ரேஸ்லெட்டுகள்
    ///
    என்னால தாங்கவே முடியல்ல கோபு அண்ணன்:).. தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதில் உங்களை மிஞ்ச ஆள் இல்லவே இல்லை:) ஹா ஹா ஹா:)..

    இருப்பினும் கஸ்டப்பட்டுத்தேடி எடுத்து.. அதுக்கு தலைப்பிட்டு மினக்கெட்டுப் பரிசளித்தமைக்கு மிக்க நன்றிகள்(முக்கியமாக அஞ்சுக்கு தெரியாமல்):).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதில்....//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பழமொழி தப்பூஊஊஊஊஊஊஊ.

      ’கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது’ எனக் கரெக்டாகச் சொல்லணுமாக்கும். :)

      நீக்கு
  11. ///இன்று 13.06.2017 சங்கட ஹர சதுர்த்தி நன்னாளில்
    வழங்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பாக அமைந்துள்ளது!
    //

    உண்மைதான், 48 மணித்தியாலங்களுக்கு ஒரு பதிவு உங்களோடது, ஆனா நான் எதேச்சையாத்தான் பிள்ளையார் படம் கேட்டேன்ன்ன்.. அது இன்று சதுர்த்தியில் வந்து அமைஞ்சது மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.. மிக்க சந்தோசம்.. ஏதோ எனக்கும் பிள்ளையாரின் அருள் கொஞ்சம் இருக்கிறது போலும்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்துகரத்து அண்ணல் யாவரையும் காக்கட்டும்

      நீக்கு
    2. ஆமாம் அதிரா, எனக்கும் இதில் மிகவும் ஆச்சர்யம் மட்டுமே.

      பதிவினை ரிலீஸ் செய்யும் முன்பு ஜஸ்ட் ஒருமுறை டெய்லி ஷீட் காலண்டரை கிழித்துப் பார்த்தேன்.

      பிள்ளையாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி எனப்போட்டிருந்தது. உடனே அந்த இரண்டு வரிகளையும் மகிழ்ச்சியுடன் அதில் கொண்டுவந்து விட்டேன்.

      It is really a miracle & co-incident.

      பிள்ளையாரின் அருள் நம் எல்லோருக்குமே கிடைக்கட்டும். :)

      நீக்கு
  12. பாண்டு கட்டாயம் படிக்கணுமே ..அங்கே தேடிபார்க்கிறேன் :)
    நானும் நினைப்பதுண்டு பூனை பறவை காக்கா குருவிக்கெல்லாம் பாசம் காட்டும் நாம் இந்த சின்ன பூச்சிகளை மட்டும் துவம்சம் செய்றோமெ என்று அதுங்களுக்கு வாழ்க்கை குடும்பம் குட்டி எல்லாம் இருக்குமே ..பாவமில்லையா .நல்லவேளை கரப்பான் இல்லாத இடத்தில இருக்கேன் :)
    வடு ..சில வடுக்கள் மறைவதில்லை ஆமாம் ..தமிழே என் தமிழே நம்ம பாஷை தெரிந்த யாரையேனும் புது ஊரில் பார்த்தா ஆனந்தமே ஏற்படும் அதை கதையாக்கி எழுத சொன்னவர் இறையன்பு ஐ ஏ எஸ் அவர்களா !! வாவ் .
    தென்கச்சியார் அவர்களின் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி தொடர்ந்து கேட்பேன் ஸ்கூல் படிக்கும்போது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்சலின். என் தளத்தில் இருக்கிறது. வலைப்பூவின் உள்ளடக்கத்தில்,கதைகளை கிளிக் செய்து பாருங்கள்.

      நீக்கு
  13. அந்த மூணாவது ஒட்டியாணம் போட்டவங்க இப்போ இருப்பது :) ======= கண்டுபிடிச்சிட்டேனே ..அதிரா ஓடுங்க தேம்ஸ்ல குதிச்சா தப்பிச்சீங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவ்வ்வ்வ் சமாதியில் ஓங்கி அடிச்சாவே அவவா?:) சே சே இருக்காது:). அது யாரெனத் தெரியாமல் குதிக்க மாட்டேன்ன் நோஓஓஓ:).

      நீக்கு
  14. காசு மாலை தெரியும் ஆனா காசு வளையல் இப்போதான் பார்க்கிறேன் :)
    வாழ்த்துக்கள் தொடர்ந்து நகைகளாக பரிசை தட்டிச்செல்லும் பூஸாருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அது அது:) கடசில வந்தாலும் அடம்புடிச்சு அடிச்சுப் பிடிச்சாவது பரிசு வாங்கிடுவேன்ன்:)..

      அழுகிற பிள்ளைதான் பால்குடிக்கும் தெரியுமோ?:)

      நீக்கு
    2. //அழுகிற பிள்ளைதான் பால்குடிக்கும் தெரியுமோ?:)//

      தெரியும். சிலது பாலை நிறையக் குடிச்சுட்டு மீண்டும்
      மீண்டும் அழும் .... மீண்டும் பால் குடிக்கத்தான். :)

      நீக்கு
  15. ஐம்பது வருடம் முன் எடுத்த படம் பொக்கிஷம் இப்போதைக்கு அப்போதைக்கு எத்தனை வித்தியாசம் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நானும்அந்த பழைய மலைக்கோட்டை படத்தைக் கண்டு மலைத்தேன்.

      நீக்கு
    2. Angelin June 13, 2017 at 2:18 AM

      //ஐம்பது வருடம் முன் எடுத்த படம் பொக்கிஷம் இப்போதைக்கு அப்போதைக்கு எத்தனை வித்தியாசம் !!!//

      நிறைய வித்யாசங்கள். இப்போது மாட்டு வண்டிகளையே பார்க்க முடிவது இல்லை.

      அந்தப்படத்தில் மாடுகள் நிற்கின்றதே. அதன் எதிர்புறம் தான் அன்றும் இன்றும் என் வீடு அமைந்துள்ளது.

      நடுவில் 1981 to 2000, ஒரு 20 வருடங்கள் மட்டும் நான் BHEL Township Quarters இல் வாழ நேர்ந்தது. :)

      நீக்கு
  16. பழைய பிள்ளையாரையும் புதிய பிள்ளையாரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எவ்வளவு வித்தியாசம்....

    பிள்ளையாருக்கும் பூஸாரோடு விளையாடப் பிடிச்சிருக்கோ.. வாகனம் எலியாருக்குக் கோபம் வந்திடப்போகுதே:)..

    பூஸ் உடன் ஓடி விளையடி பிள்ளையாரின் வண்டி மெலிஞ்சே போச்ச்ச்.. அனைத்தும் அழகிய படங்கள் கோபு அண்ணன்.. ரசிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிள்ளையாரின் வண்டி// என்றால் தொந்தியா?????

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html
      இதோ ’தொந்தி’ பற்றிய நான் எழுதியுள்ள சின்ன கவிதை.

      நீக்கு
  17. /எங்கட சத்குணவதியான///

    யாரென்று தெரிஞ்சாதான் தூக்கமே வரும் எனக்கு :)

    அப்புறம் கோபு அண்ணா உங்க பதிவில் இருந்து இரண்டு கணேஷ்ஜிக்களை களவாடிக்கொள்கிறேன் :)
    அந்த அரச இலை பிள்ளையார் அப்புறம் கோணிப்பை கிராப்ட் பிள்ளையார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin June 13, 2017 at 2:45 AM

      **எங்கட சத்குணவதியான** யாரென்று தெரிஞ்சாதான் தூக்கமே வரும் எனக்கு :)//

      தேவதை மட்டுமே சத்குணவதியாக இருக்க முடியும். :)

      //அப்புறம் கோபு அண்ணா உங்க பதிவில் இருந்து இரண்டு கணேஷ்ஜிக்களை களவாடிக்கொள்கிறேன் :)
      அந்த அரச இலை பிள்ளையார் அப்புறம் கோணிப்பை கிராப்ட் பிள்ளையார்.//

      நீங்க என் பதிவிலிருந்து எந்தப்படத்தை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கோ. அவையெல்லாம் நானும் கூகிளிலிருந்து களவாடியவை மட்டுமே. :)

      நீக்கு
  18. மோகன்ஜி உங்க பிளாக்கில் எல்லா கதையும் படிச்சி பின்னூட்டம் தருவேன் விரைவில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி ஏஞ்சலின். அவசியம் பாருங்கள்.

      நீக்கு
  19. காதல் தோல்வினு சொல்ல முடியாது. ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாகக் காதலியை இழந்த குருராஜனின் உள்ளார்ந்த துன்பத்தை அழகாகச் சொல்லி இருக்கார். கடைசி வரியில் நம் மனமும் பதறும். மற்ற இரு கதைகளும் கூட அருமை. கரப்பின் பார்வையில் பாண்டு! இதைத் தொடர்ந்து தான் நான் வானவில் மனிதனையே தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அக்கா! பாண்டுவுலே அந்தக் கோயிலும் ஊரும் ஏதாயிருக்கும்னு ஒரு விவாதம் நடந்தது

      நீக்கு
    2. Geetha Sambasivam June 13, 2017 at 6:40 AM

      //காதல் தோல்வின்னு சொல்ல முடியாது.//

      அதுபோல நானும் சொல்லவில்லையே.

      நிறைவேறாக் காதல் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

      காதல் மட்டும் எப்போதுமே தோல்வி அடைவதே கிடையாது. வெற்றிக்களிப்புடன் அவரவர் மனதில் எப்போதும் உயிருடன் மட்டுமே இருந்துகொண்டே இருக்கும். :)

      நீக்கு
  20. மோகன்ஜியின் கதைகளை மீண்டும் தேடி படிக்க தூண்டிய விமர்சனங்கள்.

    //மோகன்ஜி உங்க பிளாக்கில் எல்லா கதையும் படிச்சி பின்னூட்டம் தருவேன் விரைவில்//

    ஏஞ்சலின் சொல்வது அதை உறுதிப்படுத்துகிறது.

    அதிரா சொன்னது போல் பெரிய மேதைகளுடன் பழக்கம் உள்ள உயர்ந்த மனிதர்தான் மோகன்ஜி. நேரமின்மையால் பதிவோ, பின்னூட்டமோ போட நேரம் இல்லாமல் தன் பொழுதுகளை பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் இப்போது.
    இடை இடையே நேரம் கிடைக்கும் போது கதைகளும், பதிவுகளும் எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    உங்களையும் தான் வை.கோ சார் மீண்டும் பதிவுகள், கதைகள் கட்டுரைகள் என்று எழுதுங்கள்.

    வாழ்த்துக்கள் இருவருக்கும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீயும் மீயும் கோமதி அக்காவை படு வன்மையாக வழிமொழிகிறேன்:)

      நீக்கு
    2. கோமதி அரசு மேடம்,
      என்னை நன்கு புரிந்து கொண்டவர்கள் நீங்கள். நீங்கள் கூறியது போல் இனி நிறைய எழுதுகிறேன். கோபு சாரும் எழுதுவார்.

      நீக்கு
    3. கோமதி அரசு June 13, 2017 at 7:19 AM

      வாங்கோ, மேடம். வணக்கம்.

      //மோகன்ஜியின் கதைகளை மீண்டும் தேடி படிக்க தூண்டிய விமர்சனங்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //உங்களையும் தான் வை.கோ சார் மீண்டும் பதிவுகள், கதைகள் கட்டுரைகள் என்று எழுதுங்கள்.
      வாழ்த்துக்கள் இருவருக்கும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஊக்கமும் உற்சாகமும் தரும் கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  21. வெகு கோலாகலமான திருவிழாவிற்கு வந்ததைப் போல் இருக்கின்றது...

    அவ்வளவு கலகலப்பு.. வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை சார்! நன்றாகச் சொன்னீர்கள்!!

      நீக்கு
    2. துரை செல்வராஜூ June 13, 2017 at 7:19 AM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //வெகு கோலாகலமான திருவிழாவிற்கு வந்ததைப் போல் இருக்கின்றது... அவ்வளவு கலகலப்பு.. வாழ்க நலம்...//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஊக்கமும் உற்சாகமும் தரும் கலகலப்பான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  22. எப்போவும்போல் 3 கதைகளுக்கு விமரிசனம் நல்லா வந்திருக்கு.

    பாண்டு - கதையைப் படிக்கவேண்டும். கரப்பான் பூச்சிக்கு நம்மைப்போல் அறிவு உண்டு என்று பலமுறை கண்டிருக்கிறேன். பூச்சிமருந்தை எடுப்பதையோ அல்லது நம் நோக்கத்தையோ நொடிப்பொழுதில் புரிந்துகொண்டு மறைந்துகொள்ளும். சமயத்தில் நம் கண்ணுக்குத் தட்டுப்படாதவாறு, நம் எதிரிலேயே அசையாமல் இருக்கும்.

    வடு - கதா'நாயகனின் வடுவை நினைத்து, உங்கள் ஆசைக்கு நல்லதான படமாத்தான் போட்டிருக்கீங்க. (நான் வடுவைச் சொன்னேன்) என்ன. சின்ன வெல்வெட் ஸ்டிக்கர் பொட்டுக்குப் பதிலாக, உஷா உதுப் அவர்கள் உபயோகப்படுத்தும் பொட்டைக் கொண்ட பெண் படத்தைப் போட்டுள்ளீர்கள். (ஆசை யாரை விட்டது)

    தமிழே என் தமிழே - கதாசிரியரின் உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கும் எங்கயாவது பயணம் செல்லும்போது தமிழ்க்குரல் கேட்டால் உடனே நின்று பார்க்கத் தோன்றும். அவர்கள் பேசுகின்ற நடையை வைத்தே எந்த மாவட்டம் என்றும் கேட்டுவிடுவேன். இந்த உணர்வை, தமிழகம் இல்லாத பகுதியில் உள்ள தமிழர்கள் அறிவர்.

    "பெரிய பதிவிலே" - புத்தகத்தில் உள்ள பிழையா அல்லது தட்டச்சுப் பிழையா? 'பதவியிலே' அல்லது பேச்சுத்தமிழில் 'பதவிலே'.

    ஒட்டியாணத்துல ஒண்ணு, அரசியல் ஒட்டியாணம் போல் இருக்கிறது. ஆட்டோ வராது என்ற நம்பிக்கையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ நெல்லைத் தமிழன்

      //"பெரிய பதிவிலே" - புத்தகத்தில் உள்ள பிழையா அல்லது தட்டச்சுப் பிழையா? 'பதவியிலே' அல்லது பேச்சுத்தமிழில் 'பதவிலே'.//

      புத்தகத்தில் உள்ளது: ‘பதவில’

      நான் தவறாக தட்டச்சு செய்திருந்தது: ’பதிவிலே’

      இப்போது நான் என் பதிவில் மாற்றியுள்ளது: ’பதவியிலே’

      தட்டச்சு எழுத்துப்பிழையினை சுட்டிக்காட்டியதற்கு தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.

      நீக்கு
    2. ///ஒட்டியாணத்துல ஒண்ணு, அரசியல் ஒட்டியாணம் போல் இருக்கிறது. ஆட்டோ வராது என்ற நம்பிக்கையா?///

      ஆஆஆஆ அப்போ அதே அதே அஞ்சுவுக்கு சொன்ன அதே சமாதியில் அடிச்ச கதையோ?:)..

      அவருக்கு எதுக்கு ஓட்டோ வருதூஊஊஊ:) எனக்கெல்ல்லோ கைக்குச் சங்கிலி போடப்போகினம்ம்ம்:)... வயலூர் முருகா.. அந்த ஒட்டியாணத்தில் பாதியை வள்ளிக்குக் கொடுத்திடுறேன்ன் என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்:)..

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன் சார், உங்கள் கூர்மையான வாசிப்புக்கும் தகவல் மிக்க கருத்துக்கும் நன்றி ஜி

      நீக்கு
    4. @ நெல்லைத் தமிழன்

      //சின்ன வெல்வெட் ஸ்டிக்கர் பொட்டுக்குப் பதிலாக, உஷா உதுப் அவர்கள் உபயோகப்படுத்தும் பொட்டைக் கொண்ட பெண் படத்தைப் போட்டுள்ளீர்கள். (ஆசை யாரை விட்டது)//


      ஆசையே அலை போலே
      நாமெல்லாம் அதன் மேலே
      ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
      ஆசையே அலை போலே
      நாமெல்லாம் அதன் மேலே
      ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

      பருவம் என்னும் காட்டிலே
      பறக்கும் காதல் தேரிலே
      ஆணும் பெண்ணும் மகிழ்வார்...சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்!
      நாளை உலகின் பாதையை இன்றே.... யார் காணுவார்

      ஆசையே அலை போலே
      நாமெல்லாம் அதன் மேலே
      ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

      வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
      வடிவம் மட்டும் வாழ்வதேன்...
      இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
      காலம் போகும் பாதையை இங்கே.... யார் காணுவார்

      ஆசையே அலை போலே
      நாமெல்லாம் அதன் மேலே
      ஓடம் போலே ஆடிடுவொமே... வாழ்நாளிலே

      சூறைக்காற்று மோதினால்
      தோணி ஓட்டம் மேவுமோ
      வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....
      இருப்பது கனவு

      காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்

      ஆசையே அலை போலே
      நாமெல்லாம் அதன் மேலே
      ஓடம் போலே ஆடிடுவொமே... வாழ்நாளிலே

      ஆஅ......ஆஅ.........ஆஅ.........

      -=-=-=-
      படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
      வரிகள்: கண்ணதாசன்
      -=-=-=-

      நீக்கு
    5. பாட்டெல்லாம் அமர்க்களப்படுகிறதே ஜி! அட்டகாசம்...

      நீக்கு
  23. பதில்கள்
    1. நன்றி முகமது அல்தப் சார்!

      நீக்கு
    2. mohamed althaf June 13, 2017 at 11:30 AM

      //அருமை//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  24. கதைகள் அருமை. இத்தனை நாள் இந்த மோகன் ஜியின் எழுத்துக்கள் பற்றி தெரியாமல் போய் விட்டதேன். ம்ம்ம்ம் தெரிந்தால் மட்டும் என்ன உடனே போய் படித்தா விடப் போகிறேன்.


    அதிராவுக்கு ரொம்ப ஜாலி தான். அந்த சின்னம்மா அல்லது பெரியம்மாவின் ஒட்டியாணத்தை அழித்தால் அதிரா ஆசைப் பட்ட நகையெல்லாம் பண்ணி போட்டுக்கலாம்.

    நீங்க ஜமாயுங்கோ கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவ்வ்வ்வ் ஜே மாமி.. நேற்று உங்களை இங்கு தேட நினைச்சு வந்து.. சத்தியமா நம்புங்கோ.. பின்னர் நகைகளைப் பார்த்து மயக்கமாகித் தேடாமல் போயிட்டேன்ன்ன்:)).. வாங்கோ வாங்கோ எங்கே மீண்டும் முருங்கியில் ஏறிட்டீங்கோ கர்ர்:)

      நீக்கு
    2. ஜெயந்தி ஜெயா மேடம்,
      //கதைகள் அருமை. இத்தனை நாள் இந்த மோகன் ஜியின் எழுத்துக்கள் பற்றி தெரியாமல் போய் விட்டதேன். //
      இப்போது கோபு சார் உபயத்தால் தெரிந்து விட்டது அல்லவா? என் வலைப்பூ 'வானவில் மனிதன்' மற்றும் முகநூல் 'மோகன் ஜி' பக்கம் வாருங்களேன்.

      நீக்கு
    3. Jayanthi Jaya June 13, 2017 at 3:04 PM

      //நீங்க ஜமாயுங்கோ கோபு அண்ணா//

      வாங்கோ ஜெயா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ.

      நீக்கு
    4. அம்மாடி அதிரடி அதிரா இங்க வந்து தேடினீங்களா? இனிமே ஒழுங்கா என் வலைத்தளத்துல வந்து தேடுங்கோ.

      நீக்கு
    5. மோகன் ஜி

      கண்டிப்பாக வருகிறேன். வானவில் பிடிக்காதவர்கள் உண்டா? எப்ப வரும்ன்னு காத்துண்டு இல்ல இருப்போம்.

      நீக்கு
  25. உங்கள் விமர்சனமும் அருமை.....மோகன் ஜியின் வரிகளை..டேவிட் வழி வரம் உரையாடல் வரிகளும் செம. ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வமரிசனத்தையும், என் வரிகளையும் ரசித்ததிற்கு மிக்க நன்றி துளசிதரன்ஜி

      நீக்கு
    2. Thulasidharan V Thillaiakathu

      //உங்கள் விமர்சனமும் அருமை.....மோகன் ஜியின் வரிகளை..டேவிட் வழி வரம் உரையாடல் வரிகளும் செம. ..//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  26. முந்தைய பகுதிகளையும் சேர்த்து இன்று படித்து விட்டேன்.
    சிறப்பாக இருக்கிறது....கதைகளும் நூலுக்கான உங்கள் விமரிசனமும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை பித்தன் June 13, 2017 at 3:57 PM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //முந்தைய பகுதிகளையும் சேர்த்து இன்று படித்து விட்டேன். சிறப்பாக இருக்கிறது....கதைகளும் நூலுக்கான உங்கள் விமரிசனமும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
    2. நன்றி சென்னைப் பித்தன் ஜி!

      நீக்கு
  27. என்னுடைய பள்ளி நாட்களிலேயே
    கடலும் கிழவனும் என்கிற பரிசு பெற்ற
    நாவலைத் தமிழில் படித்து
    மெய்சிலிர்த்திருக்கிறேன்
    அதில் ஒரு மீன்பிடிக் கிழவனும் கடலும் தவிர
    முழு நாவலிலிம் வேறு கதாப்பாத்திரங்களே
    இருக்காது.அந்தக் கிழ்வனின் வெறுமை இரவை
    படிக்கப்படிக்க ஒரு கட்டத்தில் நாமே
    உணர்வது போலிருக்கும்.
    அதற்காகத்தான் அந்த நாவல் நோபல்
    பரிசு பெற்றிருக்கும் என நினைக்கிறேன்

    இப்படிச் சூழலை தேர்ந்தெடுப்பதும்
    அதை எழுத முனையும் தைரியமும்
    திற்னும் எல்லோருக்கும் வாய்க்காது

    தாங்கள் பாண்டு கதை விமர்சனம் படிக்க
    அந்த நாவலின் ஞாபகமே வந்து போனது

    அற்புதமான கதை தந்த மோகன் ஜி அவர்களுக்கும்
    அதை அருமையாக அறிமுகம் செய்த
    தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S June 13, 2017 at 7:17 PM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //என்னுடைய பள்ளி நாட்களிலேயே, கடலும் கிழவனும் என்கிற பரிசு பெற்ற நாவலைத் தமிழில் படித்து மெய்சிலிர்த்திருக்கிறேன். அதில் ஒரு மீன்பிடிக் கிழவனும் கடலும் தவிர முழு நாவலிலும் வேறு கதாப்பாத்திரங்களே இருக்காது. அந்தக் கிழவனின் வெறுமை இரவைப் படிக்கப்படிக்க ஒரு கட்டத்தில் நாமே உணர்வது போலிருக்கும். அதற்காகத்தான் அந்த நாவல் நோபல் பரிசு பெற்றிருக்கும் என நினைக்கிறேன்.//

      மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். நானும் இதுபோன்ற வேறு ஒரு கதை படித்துள்ளேன்.

      //இப்படிச் சூழலை தேர்ந்தெடுப்பதும், அதை எழுத முனையும் தைரியமும், திறனும் எல்லோருக்கும் வாய்க்காது. தாங்கள் பாண்டு கதை விமர்சனம் படிக்க அந்த நாவலின் ஞாபகமே வந்து போனது.//

      இருக்கலாம், ஸார்.

      //அற்புதமான கதை தந்த மோகன் ஜி அவர்களுக்கும், அதை அருமையாக அறிமுகம் செய்த தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான ஒப்பீட்டுக் கருத்துக்களுக்கும், மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. ரமணி சார்!அனுபவித்து அழகாகச் சொல்கிறீர்கள். பாண்டுவை உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்சசி!
      உங்கள் முகவரி எனக்கு இன்னும் வரவில்லை சார்.

      நீக்கு
  28. கண்ணிரண்டும் அரப்பு விழுந்தாற் போல கலங்கினேன் பாண்டு கரப்பின் கதையில்..பாண்டுவின் காதலி என்ட்ரி சூப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
      June 13, 2017 at 9:17 PM

      //கண்ணிரண்டும் அரப்பு விழுந்தாற் போல கலங்கினேன் பாண்டு கரப்பின் கதையில்..//

      அடடா, என்ன ஆச்சு ஸார். ஒருவேளை கதையைப் படித்ததால் வந்த விபரீத விளைவாக இருக்குமோ?

      //பாண்டுவின் காதலி என்ட்ரி சூப்பரோ சூப்பர்!//

      அடேடே .... காதலி என்ட்ரி மட்டும் சூப்பரோ சூப்பரோ?

      அப்போ அவளின் என்ட்ரியினால் தங்கள் கண் உறுத்தல் இல்லாமல் ஜில்-ஜில்லுன்னு சரியாப்போச்சோ?

      நீக்கு
    2. மூவார்! அந்தக் கதையை ஜாலியாக எழுத எண்ணி தான் யோசித்து வைத்தேன். ஏதோ ஒரு புள்ளியில், சடசடவென தன்னிரக்கம் கலந்து எழுதி விட்டேன்.
      என் கண்ணில் கரப்பு விழுந்தது....
      உங்க கண்ணில் அரப்பு விழுந்தது!

      நீக்கு
  29. வடு என்பது ஆறிய புண்ணின்
    அடையாளம் எனக் கொண்டால்
    நிச்சயம் இந்தக் கதை கொஞ்சம்
    சீரியஸான கதையாகத்தான் இருக்க வேண்டும்
    என்பது என் அபிப்பிராயம்
    ஆயினும் தாங்கள் அறிமுகம் செய்துள்ளதைப்
    படிக்க அப்படி இருக்க வாய்ப்பில்லை
    எனத்தான் படுகிறது
    அவருடைய பதிவுகள் அனைத்தும்
    அடுத்த வாரம் படித்து முடிக்க
    திட்டமிட்டுள்ளேன்.அப்போது
    புரிந்து விடும் என நினைக்கிறேன்
    வித்தியாசமான அருமையான விமர்சனத்திற்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S June 14, 2017 at 3:32 AM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //வடு என்பது ஆறிய புண்ணின் அடையாளம் எனக் கொண்டால், நிச்சயம் இந்தக் கதை கொஞ்சம் சீரியஸான கதையாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.//

      கரெக்ட் ஸார். கொஞ்சம் சீரியஸான கதையே தான்.

      //ஆயினும் தாங்கள் அறிமுகம் செய்துள்ளதைப் படிக்க அப்படி இருக்க வாய்ப்பில்லை எனத்தான் படுகிறது.//

      சீரியஸான மேட்டரால் பாதிக்கப்பட்டுள்ள ஆணின் மனநிலையை, அருமையானதொரு ப்ளாஷ் பேக் ஆகச் சொல்லிச் சென்றுள்ளார். அந்த வித்யாசமான எழுத்து நடை என்னை வியப்பில் ஆற்றி மகிழ்வித்தது.

      //அவருடைய பதிவுகள் அனைத்தும் அடுத்த வாரம் படித்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். அப்போது புரிந்து விடும் என நினைக்கிறேன்.//

      வெரி குட், ஸார். நிச்சயமாக தங்களுக்கு எல்லாமே புரிந்துவிடும். :)

      //வித்தியாசமான அருமையான விமர்சனத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//

      தங்களின் தொடர் வருகைக்கும், ஒவ்வொரு கதைக்கான என் வரிகளையும் ஊன்றிப் படித்து, தனித்தனியே பின்னூட்டங்கள் கொடுத்து சிறப்பித்து வரும் தங்களின் தனிப்பாணிக்கும், அருமையான விமர்சனம் என்று சொல்லி மனமார்ந்த நல்வாழ்த்துகள் கூறியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  30. ரமணி சார்! உங்கள் புரிதல் சரியே! என்னை வாசிக்க முடிவு செய்தமைக்கு என் நன்றி! தொடர்பில் இருப்போம்.

    பதிலளிநீக்கு
  31. தமிழே என் தமிழே கதையின்
    உள்ளார்ந்த உணர்வை நான் இருக்கிற
    சூழ் நிலையில் நன்றாக உணர முடிகிறது
    60 வீடுகள் உள்ள ஃப்ளாட் என்றாலும் கூட
    ஒரு இந்தியர்கள் கூட இல்லை

    மாலையில் நான் நடைப்பயிற்சி செல்லுகையில்
    யாராவது ஒரு இந்தியரைச் சந்திக்க இயலும்
    அப்போது அவர் வட இந்தியர் டெல்ஹி எனச்
    சொன்னாலும் கூட அவர் நம் பக்கத்துவீட்டுக்காரர்
    என்கிற உணர்வைத் தரும்.

    இதை தங்கள் விமர்சனம் படிக்கையில்
    ஒப்பிட்டுப் பார்த்தேன்.

    உணர்ந்து படிக்க முடிந்தது

    அற்புதமான கதை.அருமையான விமர்சனம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S June 14, 2017 at 6:35 PM

      வாங்கோ Mr RAMANI Sir, வணக்கம்.

      //தமிழே என் தமிழே கதையின் உள்ளார்ந்த உணர்வை நான் இருக்கிற சூழ் நிலையில் நன்றாக உணர முடிகிறது. 60 வீடுகள் உள்ள ஃப்ளாட் என்றாலும் கூட ஒரு இந்தியர்கள் கூட இல்லை. மாலையில் நான் நடைப்பயிற்சி செல்லுகையில், யாராவது ஒரு இந்தியரைச் சந்திக்க இயலும். அப்போது அவர் வட இந்தியர் டெல்ஹி எனச் சொன்னாலும் கூட அவர் நம் பக்கத்துவீட்டுக்காரர் என்கிற உணர்வைத் தரும்.//

      ஆமாம் ஸார். உள்ளூரிலேயே இருந்தாலும்கூட நாம் அக்கம் பக்கத்தில் பலருடன் பேசவோ பழகவோ சற்றே தயங்குவோம். வட இந்தியாவுக்கோ, வெளிநாட்டுக்கோ போனால், அங்கு எங்காவது அபூர்வமாக தமிழ் பேசுவோரை நாம் சந்திக்கும்போது நம்மையறியாமல் ஒரு மகிழ்ச்சி ஏற்படும்தான். அவர்களுடன் நிச்சயமாகப் பேசுவோம். இதனை நானும் என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

      //இதை தங்கள் விமர்சனம் படிக்கையில் ஒப்பிட்டுப் பார்த்தேன். உணர்ந்து படிக்க முடிந்தது//

      மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      //அற்புதமான கதை. அருமையான விமர்சனம் பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்.//

      தங்களின் தொடர் வருகைக்கும், இதே பதிவுக்கு மூன்றாம் முறை வருகைக்கும், ஒவ்வொரு கதைக்கான என் வரிகளையும் ஊன்றிப் படித்து, தனித்தனியே பின்னூட்டங்கள் கொடுத்து சிறப்பித்து வரும் தங்களின் தனிப்பாணிக்கும், அற்புதமான கதை, அருமையான விமர்சனம் என்று சொல்லி நல்வாழ்த்துகள் கூறியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. ரமணி சார், நம் மொழி நம் மக்கள் எனும் உணர்வு, அவை இல்லாமல் போகும் தருணங்களில் தான் விஸ்வரூபம் எடுக்கும். அந்த டிரைவர் முகம் இன்னமும் என் நினைவில் உள்ளது. ஒத்திருக்கும் உங்கள் உணர்வை சொல்லியது ரசித்தேன்.

      நீக்கு
  32. ஒவ்வொரு பாகமும் தனித்துவமான விமர்சனப்பார்வை.

    பதிலளிநீக்கு
  33. எப்படியாவது உங்களிடம் முதல் பரிசு வாங்களாம் என்றால் காலம் கைகூடுதில்லை))

    பதிலளிநீக்கு
  34. பாண்டு என்ற கதையின் தலைப்பே புதுமையாய் உள்ளது இதற்கு நோய்வகை எனப் பொருள் கொண்டாலும் Bond என்றால் பிணைப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.

    கரப்பான் பூச்சிகளுக்கும் வாழ்க்கை உண்டு, மீசையும் ஆசையும் உண்டு, நிரந்தமான வாழ்விடமும் அவ்வப்போது சிறுசிறு பயணங்களும் உண்டு, வாழ்க்கையில் போராட்டங்கள் உண்டு, எதிர்பாராத ஆபத்துகள் உண்டு என்று சொல்லியிருப்பதால் அவைகளுக்கிடையே உள்ள பிணைப்பை சொல்கிறது இந்தக் கதை என எண்ணுகிறேன்.

    கரப்பான் பூச்சிகள் பேசுவதாக உள்ள அந்த கற்பனை உரையாடலை கொஞ்சம் தந்திருக்கலாம். படித்து இரசித்துக்கொள்ளட்டும் என விட்டுவிட்டீர்கள் போலும்.

    வடு என்ற கதையின் தலைப்பும் புதுமையாய் உள்ளது. ஒரு சொல்லுக்கு பல பொருள் தரும் சொற்களை தேர்ந்தெடுத்திருக்கும் கதாசிரியரின் உத்தியை பாராட்டவேண்டும். கதாநாயகி விட்டு சென்ற வடு, திறனாய்வு செய்த உங்களையே பாதித்திருக்கிறது என்பதே இந்த கதை அருமையாக உள்ளது என்பதற்கு சான்று.

    தமிழே என் தமிழே என்ற கதையில் வரும் நிகழ்வு போன்று, வெளி நாட்டில் /வெளி மாநிலத்தில் பணியில் இருக்கும் தமிழர்களுக்கு நடக்க வாய்ப்புண்டு. ஆனால் அவைகளை எழுத்தில் கொண்டு வரும் திறமை திரு மோகன்ஜி அவர்களுக்கே உண்டு என்பதில் ஐயமில்லை. இந்த கதை எழுதக் காரணமாக இருந்த .திரு இறையன்பு இ.ஆ.ப அவர்களுக்கும், மறைந்தும் மறையாமல் இருக்கின்ற தென்கச்சியார் அவர்களுக்கும் நன்றி!

    அருமையான தலைப்புக்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த கதைகளைத் தந்த திரு மோகன்ஜி அவர்களுக்கு பாராட்டுகள்!

    அவரது கதைகளை ஆய்ந்து சுருக்கித் தந்து சுவை கூட்டிய தங்களுக்கு வாழ்த்துகள்!
    ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் வெளியிடும் திரு மோகன்ஜி அவர்களின் புகைப்படங்கள் அவருக்கு பிரபலங்களோடு உள்ள தொடர்புகளை தெரியப்படுத்துகின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடன சபாபதி சார். டெம்ப்ளேட் கருத்துகள் மட்டும் வரும் காலத்தில், கவனமாய்ப் படித்து விரிவாக கருத்திடும் உங்களைப் போன்றவர்களே தமிழ் வலையுலகத்தை தாங்கிப் பிடிப்பவை. நன்றி எனச் சொல்வது சிறு வார்த்தையாய்த் தோன்றுகிறது. எனினும் நன்றி சார்.

      நீக்கு
    2. வே.நடனசபாபதி June 15, 2017 at 12:02 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //கதைகளை ஆய்ந்து சுருக்கித் தந்து சுவை கூட்டிய தங்களுக்கு வாழ்த்துகள்!//

      மிக்க மகிழ்ச்சி ஸார். வாழ்த்துகளுக்கு நன்றி, ஸார்.

      //ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் வெளியிடும் திரு. மோகன்ஜி அவர்களின் புகைப்படங்கள் அவருக்கு பிரபலங்களோடு உள்ள தொடர்புகளை தெரியப்படுத்துகின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி! //

      ஆமாம், ஸார். இவரும் மிகப்பிரபலமானவராக இருப்பார் போலிருக்குது. இப்போதுதான் எனக்கே இதுவிஷயம் தெரிய வருகிறது. :)

      தங்களின் தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய, ஆரோக்யமான, ஆச்சர்யமான, அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  35. பாண்டு, வடு கதைகளை வாசித்த நினைவு இருக்கிறது. தமிழே என் தமிழே வாசித்ததில்லை.. கடல்கடந்து வாழும் சூழலில் எங்காவது ஒற்றைத்தமிழ் வார்த்தை கேட்டாலும் என்னவோ நம்மையே பெயரிட்டு அழைப்பதுபோல சடாரென்று துள்ளித் திரும்பி.. தமிழரை அடையாளங்கண்டுகொண்டு ஆர்வத்துடன் அளவளாவுவது சொல்லில் வடிக்கமுடியா இன்பம். அதை இக்கதை வாயிலாக உணரமுடிகிறது. சந்தோஷம் எங்கே இருக்கிறது என்பதை ஒரு சாதாரண லாரி டிரைவர் வழியாக உணர்த்துவதும் அழகு.

    பதிலளிநீக்கு

  36. \\அவள் விட்டுச்சென்ற அந்த வடு, மதிப்புரை எழுதும் என்னையே மிகவும் ஹிம்சித்து விட்டது என்றால், பாவம் ...... அந்தக்கதாநாயகனுக்கு எப்படி இருந்திருக்கும்.

    ஒரு சின்ன வெல்வெட் ஸ்டிக்கர் பொட்டு போன்ற விஷயத்தை என்னமாக ஜோராகக் கையாண்டு கதையாக்கியுள்ளார்.

    சபாஷ் மோகன் ஜி!

    உங்களிடம் நான் கற்க வேண்டியது நிறையவே இருக்கும் போலிருக்குது!! \\

    மதிப்புரைகளின் வாயிலாக தங்கள் மதிப்பும் உயர்ந்துகொண்டே போகிறது கோபு சார். மனம் நிறைந்த பாராட்டுகள் தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி July 3, 2017 at 6:30 AM

      \\அவள் விட்டுச்சென்ற அந்த வடு, மதிப்புரை எழுதும் என்னையே மிகவும் ஹிம்சித்து விட்டது என்றால், பாவம் ...... அந்தக்கதாநாயகனுக்கு எப்படி இருந்திருக்கும்.

      ஒரு சின்ன வெல்வெட் ஸ்டிக்கர் பொட்டு போன்ற விஷயத்தை என்னமாக ஜோராகக் கையாண்டு கதையாக்கியுள்ளார்.

      சபாஷ் மோகன் ஜி!

      உங்களிடம் நான் கற்க வேண்டியது நிறையவே இருக்கும் போலிருக்குது!! \\

      //மதிப்புரைகளின் வாயிலாக தங்கள் மதிப்பும் உயர்ந்துகொண்டே போகிறது கோபு சார். மனம் நிறைந்த பாராட்டுகள் தங்களுக்கு.//

      ஆஹா, என் மனதுக்குப் பிடித்தமான, ஓர் மிகப்பிரபலமான பதிவரும், மிகச்சிறந்த எழுத்தாளரும், ’*விமர்சன வித்தகி’*யுமான தங்களின் வாயிலாக இதனைக் கேட்க நான் தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      -=-=-=-

      *விமர்சன வித்தகி* பட்டங்களுக்கான இணைப்புகள்:

      http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22-01-03-first-prize-winners.html

      http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html

      அன்புடன் கோபு

      நீக்கு
  37. என் கருத்தை கோபு சார் சொல்லி விட்டார் கீதா!

    பதிலளிநீக்கு