என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 11 ஜூன், 2017

’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-6 of 8

இந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-3 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-4 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-5 க்கான இணைப்பு:


நூலாசிரியர் மோகன் ஜி அவர்கள்



13) வீட்டைத் துறந்தேன்

“அன்புள்ள அப்பா, நான் வீட்டை விட்டுப் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். அடுத்த ஜென்மத்திலும் நீங்களே எனக்கு அப்பா ஆக வேண்டும். ஆனால் அப்போது எனக்கு வேறு அம்மா வேண்டும்” பென்சிலால் கடிதம் ஒன்று கிறுக்கி வைத்துவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ள 10 வயது சிறுவனின் கதை இது. 




அம்மாவுடன் இன்று மிகவும் கோபம். தன் 8 வயது தம்பியைத் தான் அடித்துவிட்டதால், அவன் மேல் உள்ள பாசத்தால் அம்மா தன்னை இன்று இப்படி அடித்துவிட்டாளே என்ற கோபம் + அவமானம். 

வீட்டைத் துறந்துவிட்டு இப்படிப் புறப்பட்டுப்போன பையன் எங்கு போனான்?  என்ன ஆனான்? நூலினைப் படித்து தெரிந்துகொள்ளுங்கோ.

கதையில் வரும் ஓர் சின்ன உரையாடல்:

”வரவர உன் அழிச்சாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்கற செல்லத்தில் உன் கொட்டம், ஜாஸ்தி ஆயிடுத்து. இனிமேல் சங்கரை அடிப்பியா?”

விசிறிக்காம்பால் காலில் ஒன்று போட்டால் என்றுமே என்னை அடிக்காத எங்கம்மா. அடிபட்ட அவமானம் அடியைவிட அதிகமாக இருந்துச்சு.

“அவன் என்ன பண்ணினான் தெரியுமா?” பொங்கும் கோபத்தில் குரல் உயர்த்திக்கூவினேன்.

காலில் மேலும் ஒன்று விழுந்தது. என் நியாயத்தைக் கேட்க அவள் தயாரில்லை.

“அவன் தான் முக்கியமா? என்னை ஏன் பெத்தே?”

“உன்னைப்போய் பெத்தேனா? தவிட்டுக்கு வாங்கினேன், போடா”

“போன்னுதானே சொன்னே, போய்ட்டேன்னா கேட்கக்கூடாது”

“கொட்டு மேளத்தோட போ! .... யார் வேணாம்ன்னா? வயிறு காஞ்சாத் தானா வருவே”

அதிர்ந்தேன். இப்படி என்றும் நிகழ்ந்தது இல்லை. என் அம்மா என்னை இப்படி நடத்தியது இல்லை. பாராட்டுக்களிலேயே சுகம் கண்டவனுக்கு இது தாளவில்லை. வீட்டை விட்டே புறப்பட்டு விட்டேன்.



14) எப்படி மனம் துணிந்தீரோ?

கோடீஸ்வரர் ஒருவரைப்பற்றிய கதை. அநாதையான ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்து பாசத்துடன் வளர்க்கிறார். பிறகு ஒரு காலக் கட்டத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்ய நேரிடுகிறது. 

வளர்ப்பு மகள் பெயரில் எல்லா சொத்துக்களையும் உயில் எழுதி வைத்து விடுகிறார். தான் குருவாக ஏற்றுக்கொண்டுள்ள + கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாமியார் ஒருவரை கார்டியனாக நியமித்துள்ளார். 

அந்தப் பெண் மேஜராவதற்குள் நிறைய கத்திக்குத்துகள் வாங்கி, மருத்துவ மனையினில் உயிருக்குப்போராடி வருகிறாள். 



தந்தை பித்துப்பிடித்தவர் போல இருக்கிறார். 

பணம் பத்தும் செய்து விடுமே.

துப்பறியும் கதை போலச் செல்கிறது. இடையில் பல்வேறு போலீஸ் விசாரணைகள் வேறு.  போலீஸ் விசாரணைகளிலேயே கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின், விசித்திர குணாதிசயங்களையும் நம்மால் நன்கு அறிய முடிகிறது.

முடிவில் என்னதான் ஆச்சு? என்பதை இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலில் படித்துப் புரிந்துகொண்டு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.


15) நிழல் யுத்தம்

எனக்கு மிகவும் பிடித்ததோர் அருமையான கதை.  ஒவ்வொரு வரியும் படிக்கும்போதே சும்மா ஹல்வாத்துண்டு போல வழிக்கி கிரஹித்துக்கொள்ள முடிகிறது. 



ஏனென்றால் 60-ஐ நெருங்கும் ஓர் வயதான தம்பதிகளைப்பற்றிய கதை இது. அவர்களுக்குள் அடிக்கடி என்னதான் சின்னச்சின்ன வாக்குவாதங்களும், கிண்டலும் கேலியுமான வாய்ச் சண்டைகள் வந்துகொண்டு இருப்பினும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும், ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனமில்லாத உத்தம தம்பதிகளாகவும் இருப்பது, இந்தக்கதையில் நம் ரஸனையைக் கூட்டுகிறது.

அந்த அம்மா பேசிடும் ஒரு சில இடங்கள்:-

தன் கணவரிடம் ......

“நான் சொல்லி எடுபடுமா? நீங்கதான் உங்க பிள்ளை மனசுலே எதை எதையோ சொல்லி நைச்சியமா இந்த ஏற்பாட்டைப் பண்ணியிருப்பேள். எப்படியோ உங்கள் விருப்பப்படி நீங்க தனியா சந்தோஷமா இருங்கோளேன். இதெல்லாம் புதுசா எனக்கு? இவனைப் பிள்ளையாண்டிருந்தபோது, ”இந்த சமயத்துல அம்மா துணை அவசியம்” ன்னு என்னை நச்சரித்து. என்னை எங்காத்துக்கு அனுப்பிட்டு, எதுத்தாத்து கோமளாங்கி கெளசல்யாகிட்ட ’புரை குத்த மோர் இருக்கா?’ன்னு கேட்டு வழிஞ்ச ஆளுதானே நீங்க.......”

தன் மகனிடம்

”அஜீ! அம்மாவும், அப்பாகூட இப்படி ஊருக்குப் புறப்பட்டுப் போறேனேன்னு  தப்பா எடுத்துக்காதே. உங்கப்பாவுக்குப் பசி தாங்காது. ஷுகர் வேற படுத்துது. நான் இல்லைன்னா சாப்பிடாம கொள்ளாம ஏதும் புஸ்தகத்தை வாசிச்சுண்டே இருப்பார். குழந்தைத் திருட்டுத்தனமா மண்ணு திங்கற மாதிரி, தானே காஃபி வெச்சு சக்கரையை அள்ளிப் போட்டுப்பார். ஏதோ நான் இருக்கறவரையில பார்த்துப்பேன். நான் போயிட்டா அப்புறம் அவர் பாடு .... உன் பாடு”




2002-ம் வருடம் சென்னை மியூசிக் அகாதமியில் 
பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் அவர்களின் 
ஷெனாய் நிகழ்ச்சியின் போது 
மோகன்ஜி  வரவேற்பு அளித்தல்.



சென்னையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு க்ரூப் போட்டோ. 
Left to Right வரிசையாக நம் பதிவர்கள்:
பத்மா, மாதங்கி, மௌலி, ஆர்.வீ.எஸ், 
மோகன்ஜி, சுந்தர்ஜி + எரிதழல் வாசன்



தொடரும்


இந்தத் தொடரின் பகுதி-5 இல்
முதல் வருகை தந்து சிறப்பித்துள்ள
நம் அதிராவுக்கு மேலும் சில பரிசுகள்
அளித்து கெளரவிக்கப்படுகிறது

   

 

 

 



நல்வாழ்த்துகள் அதிரா !

இதுபோக இன்னும் இரண்டு பகுதிகள் 
மட்டுமே பாக்கியுள்ளன.

இவை மூன்றிலும் முதலிடம் வகித்து
மீதியிருக்கும் பரிசுகளான 
இன்னும் 5-6 வைர நெக்லஸ்கள்,
இடுப்புக்கு நல்ல அகலமான ஒட்டியாணங்கள் 
காலுக்கு கொலுசுகள் போன்ற நகைகளையும்
தாங்களே வெல்ல வேண்டுமாய் 
வாழ்த்தி மகிழ்கிறேன்.


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

99 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. Chitra June 11, 2017 at 12:24 AM

      வாங்கோ சித்ரா, இந்தப்பகுதிக்குத் தங்களின் முதல் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      //Congratulations!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் கோபு மாமா :)


      நீக்கு
  2. பதில்கள்
    1. ohhhhhhhhhhhhhhh nooooooooooooooooo:)

      https://s-media-cache-ak0.pinimg.com/736x/bd/c2/13/bdc213b448d464758c645f1e2c226f33.jpg

      நீக்கு
    2. 'போனால் போகட்டும் போடா’ என்ற சோக கீதங்களைப் பாடிக்கொண்டு தேம்ஸ்க்குச் செல்ல வேண்டாம், ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      உங்களின் இன்றைய சற்றே தாமத வருகையால் மற்றொரு நபருக்கும், ஏதோவொரு பரிசு கிடைக்க வாய்ப்புக்கிடைத்துள்ளதே என மகிழுங்கோ.

      உங்களுக்கு என வாங்கிக்குவித்துள்ள அனைத்து நகைகளும் உங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

      அதில் யாருக்கும் பங்கு கிடையாதூஊஊஊஊஊ.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா அப்பூடியா சங்கதி கோபு அண்ணன்:).. சரி சரி அப்போ மீ குதிக்காமல் விடுகிறேன்ன்.. அதுக்காக சேர்த்து ஒரு சோடி வைர வளையல்களாகவும் குடுத்திடுங்கோ:)

      நீக்கு
    4. //அதுக்காக சேர்த்து ஒரு சோடி வைர வளையல்களாகவும் குடுத்திடுங்கோ:)//

      கேட்டதும் ..... கொடுப்பவனே .....
      கிருஷ்ணா ..... (கோபால)கிருஷ்ணா ..... :)

      நீக்கு
  3. முதலில் கீழே இருந்து மேலே படங்கள் பார்க்கப்போறேன்ன்ன்... இம்முறைதான் கோபு அண்ணன் மனம் வச்சுச் செலவளிச்சு நல்ல நல்ல டயமண்ட் ஆகத்தேடி வாங்கியிருக்கிறார்ர்.. இது கோயம்புத்தூரின் வாங்கியதுதானே கோபு அண்ணன்.. சூப்பரா இருக்குது:)...

    இப்போ அடுத்த முறையும் மீக்குத்தான்ன்ன்ன்.. நீங்க எகயின் கடனாளி ஆகிட்டீங்க:) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  4. சர் வாணாம்ம்ம்.. ஒழுங்கு முறையா மேலே இருந்து படிச்சு வருவம்...

    மோகன் ஜி ஒவ்வொரு போஸ் இலும் ஒவ்வொரு சினிமா ஹீரோ வை நினைவுபடுத்துறார் ஹா ஹா ஹா:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).

    வீட்டைத்துறந்தேன்:
    அச்சச்சோ கோபம் கண்ணை மறைத்து, வேறு எரிச்சல்களை பிள்ளைகள் மீது காட்டிவிடுகிறார்கள் சிலர்... அதனால் பிள்ளைக்கு எவ்வளவு வேதனை என்பதனை புரிந்து கொள்பவர்கள் மிகக் குறைவே....

    மனம் பதைபதைக்கும் படியாக இருக்கிறது கதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா!
      //மோகன் ஜி ஒவ்வொரு போஸ் இலும் ஒவ்வொரு சினிமா ஹீரோ வை நினைவுபடுத்துறார் ஹா ஹா ஹா:)..//
      லூஸ் மோகனைத் தானே?!

      நீக்கு
    2. @ மோகன்ஜி

      //லூஸ் மோகனைத் தானே?!//

      குட் .... டைம்லி ஜோக்-ஜி. படிச்சதும் அந்த எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் லூஸ் மோகனைக் கண்முன் நினைச்சுக்கிட்டேன். கண்ணைச் சுருக்கிக் கொண்டு அவர் பேசுவதையும் கற்பனை செய்து பார்த்துக்கொண்டேன்.

      குபீரெனச் சிரித்து விட்டேன். சபாஷ்-ஜி :)))))

      நீக்கு
    3. @ அதிரா

      // நீங்க எகயின் கடனாளி ஆகிட்டீங்க:) ஹா ஹா ஹா:).//

      ’கடன் பட்டான் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ன்னு கம்பர் இராமாயணத்திலே அன்றே சொல்லி விட்டார்.

      அதிராவுக்கு எகயின் and எகயின் கடன் பட்டே அடியேன் தலை மொட்டையானாலும் பரவாயில்லை. எப்படியோ எங்கட அதிரா சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்குப் போதும்.

      ’எடுக்க எடுக்கக் கொடுக்கக் கொடுக்கத்தான் நீர்
      வற்றாமல் ஊறும்’ன்னும் சொல்லுவாங்கோ.

      அதனால் நீங்க எதுவாகினும் என்னிடம் கூச்சப்படாமல் கேளுங்கோ. இன்னும் இரண்டே இரண்டு சான்ஸ்கள் மட்டுமே உங்களுக்கு உள்ளன. :)

      நீக்கு
    4. ///அதனால் நீங்க எதுவாகினும் என்னிடம் கூச்சப்படாமல் கேளுங்கோ.//

      ஹா ஹா ஹா எனக்கு அந்த உச்சியில் பள்ளம் விழுந்த, உச்சிப் பிள்ளையார் சிலை வேணும்:)

      நீக்கு
    5. //லூஸ் மோகனைத் தானே?!//

      ஹா ஹா ஹா பார்ப்போம் மோகன் ஜி அடுத்த இரண்டு பதிவுக்குள் அப்படியும் தெரிகிறீங்களோ என:)

      நீக்கு
    6. எத்தனை விதமாகப் பார்த்தாலும் லூஸ் மோகன் ரஜினி போல தெரிய மாட்டார் ஆதிரா!

      நீக்கு
  5. eப்படி மனம் துணிந்தீரோ?:)////

    அதுதானே 2 வதா இன்று வந்த அதிராவுக்கு பரிசுகள் கொடுக்கக்கூடாது என எண்ண, எப்படி மனம் துணிவார் கோபு அண்ணன்.. சரி அதை விடுங்கோ:).. மறக்க நினைக்கிறேன் முடியவில்லை:) அஞ்சூ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்...:) பிங் கலர் நினைவிருக்குதுதானே?:).

    ///முடிவில் என்னதான் ஆச்சு? என்பதை இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலில் படித்துப் புரிந்துகொண்டு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
    ///

    பிளீஸ்ஸ்ஸ் பிளீஸ்ஸ்ஸ் மீக்க்கும் கொஞ்சம் சொல்லுங்கோ:).. ஆனாலும் நேக்கு விடுப்ஸ் பிடிக்காது பாருங்கோ:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 11, 2017 at 12:53 AM

      //எப்படி மனம் துணிந்தீரோ?:)

      அதுதானே 2 வதா இன்று வந்த அதிராவுக்கு பரிசுகள் கொடுக்கக்கூடாது என எண்ண, எப்படி மனம் துணிவார் கோபு அண்ணன்.. சரி அதை விடுங்கோ:)..//

      :)))))))))))))))))))))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

      அதிரா ..... நீங்க விட்டாலும் நான் விடவே மாட்டேனாக்கும் ..... ஹூக்க்க்கும் !

      நீக்கு
  6. நிழல் யுத்தத்தில்/// உந்த மிக்கி மவுஸ்களுக்கு ஒரு கர்ர்ர்ர்:)..

    ///மியூசிக் அகாதமியில் //

    ஹையோ ஹையோ அது அக்கா தமி இல்ல கோபு அண்ணன்.. அக்கா டமி:) ஆக்கும் கர்ர்:). ரிவியூ எழுதுறது கோபு அண்ணன்.. புரூஃப் ரீடிங் செய்யுறது அதிரா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 11, 2017 at 12:58 AM

      //நிழல் யுத்தத்தில் .... உந்த மிக்கி மவுஸ்களுக்கு ஒரு கர்ர்ர்ர்:)..//

      ஒய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்? கர்ர்ர்ர்ர்ர்.

      //மியூசிக் அகாதமியில் ... ஹையோ ஹையோ அது அக்கா தமி இல்ல கோபு அண்ணன்.. அக்கா டமி:) ஆக்கும் கர்ர்:).//

      ’அக்காவோட தமி’ யாகிய அகாதமி தான் உச்சரிக்க டேஸ்டா அய்ய்ய்கோ அய்கா இருக்குது.

      ‘அக்காடமி’ அக்காவே மிகவும் வயசாகி டம்மியாக இருப்பது போல நல்லாவே இல்லையாக்கும். :)

      நீக்கு
  7. மோகன் ஜி க்கு வாழ்த்துக்கள்... அவரது சுவாரஷ்யமான கதைகளி .. சுவாரஷ்யமாக நகர்த்திக் கொண்டிருக்கும் கோபு அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்....

    அஞ்சுவைக் காணல்ல:) அநேகமா.. தானே ஓடிப்போய்த் தேம்ஸ்ல குதிச்சிருப்பா என்றுதான் நம்புறேன்ன்ன்.. எதுக்கும் நாளைக் காலை பிபிசி நியூஸ் பார்த்துக் கொன்ஃபோம் பண்ணிடலாம்:)..

    இப்போ மூச்ச்ச்ச்ச்ச்ச்ச் விடமாட்டேன்ன்.. பிறகு காப்பாத்திப் போடுவினமெல்லோ:).. பின்ன அதிராவின் நகைகள் ஜொலிப்பதை பார்த்த பின்பும் அவ அப்படியே இருப்பா என நினைக்கிறீங்க.. அவவுக்கு ரோசம் அதிகம்மம்மாஆஆஆஆஆஆ:)).. ஹா ஹா ஹா ஹையோ இண்டைக்கு மீக்கு பொம்பர் வந்துதான் குண்டு போட்டாலும் போடும்.. அதுக்குள் மீ எஸ்கேப்ப்ப்ப்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அதிரா!

      நீக்கு
    2. asha bhosle athira June 11, 2017 at 1:01 AM

      //மோகன் ஜி க்கு வாழ்த்துக்கள்... அவரது சுவாரஷ்யமான கதைகளி .. சுவாரஷ்யமாக நகர்த்திக் கொண்டிருக்கும் கோபு அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்....//

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, அதிரா.

      மிகவும் தங்கமான (கோல்ட் ஃபிஷ்ஷான) அஞ்சுவை மீண்டும் மீண்டும் இப்படி நீங்கள் வம்புக்கு இழுப்பது நியாயமே இல்லை. இதெல்லாம் ரொம்பவும் ஓவர். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      அஞ்சுவை கோட்டா செய்யும் இது தொடர்ந்தால் அஞ்சால் அலுப்பு மருந்து ஆறு பாட்டில்கள் வாங்கி வேப்பண்ணெயில் நன்கு குழைத்து, உங்கட கைகால்களைக் கட்டிப்போட்டு பாலாடையால் புகட்டிவிடுவோமாக்கும். ஜாக்கிரதை. :)

      நீக்கு
  8. விரைவில் நூல் வாங்கிப்படிக்கின்றேன் தொடர் விமர்சனத்துக்கு நன்றிகள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம் சார்! நன்றி. அவசியம் புத்தகத்தைப் படியுங்கள்.

      நீக்கு
    2. தனிமரம் June 11, 2017 at 1:27 AM

      வாங்கோ, வணக்கம்.

      //விரைவில் நூல் வாங்கிப்படிக்கின்றேன். தொடர் விமர்சனத்துக்கு நன்றிகள் ஐயா!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  9. //அடிபட்ட அவமானம் அடியைவிட அதிகமாக இருந்துச்சு.//8-14 வயதில் ஒரு பிடிவாத குணம் மேலோங்கி இருக்கும் தான் அவமானப்படுத்தப்பட்டுவிட்டோம் என்ற உணர்விலேயே பல பிள்ளைங்கள் வீட்டைவிட்டு ஓடிவிடுவார்கள் ..காரணம் பார்த்தா இப்படி அப்பா அடிசேரா அம்மா திட்டினார் என்ற உப்புசப்பு இல்லா விஷயம்தான் அந்த சில்லி திங்ஸ் தான் உணர்வுகளை உசுப்பி அட்ரினலின் எபெக்ட்டால் அவசரப்பட வைக்கும் .
    தவிட்டுக்கு வாங்கும் விஷயம் பெரும்பாலான வீடுகளில் இடம்பெறும் உரையாடல் எங்க வீட்ல மாடு கோழி இருந்ததால் நானும் நம்பிட்டேன் முந்தி :)



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பாலிய கால உணர்வுகளை அழகாய் படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். மிக்க நன்றி!

      நீக்கு
    2. மோகன்ஜி June 11, 2017 at 6:57 AM

      //அந்த பாலிய கால உணர்வுகளை//

      ??????????????????????? அதிரா உடனே ஓடியாங்கோ. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கூஊஊஊஊஊஊஊஊஊஊ. அதுவும் காஸ்ட்லி மிஸ்டேக்கூஊஊஊஊஊஊஊஊ.
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      பால்ய என்ற சொல்லில் ’ல்’ க்கு பதிலாக ‘லி’ போட்டு அர்த்தத்தையே அனர்த்தமாக்கிவிட்டார். விடாதீங்கோ ..... நறுக்குன்னு குட்டிட்டுப் போங்கோ.

      நீங்கதான் நல்லா ’புரூஃப் ரீடிங் செய்யும் அதிராவாச்சே!’ :)

      நீக்கு
    3. Angelin June 11, 2017 at 2:54 AM

      //தவிட்டுக்கு வாங்கும் விஷயம் பெரும்பாலான வீடுகளில் இடம்பெறும் உரையாடல். எங்க வீட்ல மாடு கோழி இருந்ததால் நானும் நம்பிட்டேன் முந்தி :)//

      நானும் என் சிறுவயதில், முதன்முதலாக இதனைக்கேட்டதும், ஒருநாள் முழுக்க அழுது கொண்டே இருந்தேன். :)

      நீக்கு
    4. //அப்பா அடிசேரா//

      தமிழில் டீ குடிச்ச அவ்வையாரின் பேத்தி வருமுன்ன நானே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை கரெக்டரேன் :)
      //அப்பா அடிச்சாரே //

      நீக்கு
    5. //நானும் என் சிறுவயதில், முதன்முதலாக இதனைக்கேட்டதும், ஒருநாள் முழுக்க அழுது கொண்டே இருந்தேன். :)//

      ஆவ்வ் யூ டூ அண்ணா ..நான் ரொம்பவே அழுதேன் சின்னதில் .

      நீக்கு
    6. 'பால்ய' தப்பை பொறுத்துக் கொண்டு, இந்த பாலனை மன்னிப்பார்கள் ஐயா!!

      நீக்கு
    7. நான், கோபு சார்,ஏஞ்சலின் மூவருமே தவிட்டுக்கு வாங்கப் பட்ட அண்ணன்மார்களும்,தங்கையும்..... வாட் எ பேமிலி!!!

      நீக்கு
  10. எப்படி மனம் துணிந்தீரோ அங்கே அவர் பக்கம் வாசித்தேன் .இன்னும் பின்னூட்டம் தரலை
    மக்கள் இன்னும் இந்த சாமியார்கள் விஷயத்தில் ஏமாந்துகொண்டுதான் இருக்காங்க .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்ததிற்கு மகிழ்ச்சி ஏஞ்சலின்! உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.மகிழ்வேன்.

      நீக்கு
    2. Angelin June 11, 2017 at 2:57 AM

      //எப்படி மனம் துணிந்தீரோ அங்கே அவர் பக்கம் வாசித்தேன்.//

      வெரி குட்.

      //இன்னும் பின்னூட்டம் தரலை.//

      அதனால் பரவாயில்லை. :)

      //மக்கள் இன்னும் இந்த சாமியார்கள் விஷயத்தில் ஏமாந்துகொண்டுதான் இருக்காங்க.//

      அது மட்டுமல்ல. இந்தக்கதையில் வரும் பணக்காரர், போலீஸ் விசாரணையில்கூட, பல்லாண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அந்தச் சாமியாரை மிகவும் புகழ்ந்து உயர்வாகவே சொல்லியும் வருகிறார்.

      தான் ஏமாந்து கொண்டிருப்பதே தெரியாமல் அவர் பேசிக்கொண்டிருக்கும் அதுதான் மிகவும் வேடிக்கை. :)

      நீக்கு
  11. பதிவர்களுடன் மோகன்ஜி ..வாவ்! rvs தெரியும் ..மற்றவர்களையும் பார்த்தாச்சு இங்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்தாறு வருடங்களுக்கு முன் மும்முரமாக செயல் பட்ட பல நல்லபதிவர்கள் இப்போது அதிகம் தென்படுவதில்லை. முகநூலில் சிலர் இருக்கிறார்கள். அதை எண்ணி பெருமூச்சு தான் விட முடியும் போங்கள்!

      நீக்கு
    2. Angelin June 11, 2017 at 3:01 AM

      //பதிவர்களுடன் மோகன்ஜி .. வாவ்! rvs தெரியும் .. மற்றவர்களையும் பார்த்தாச்சு இங்கே.//

      எனக்கு அதில் முதலாவதாக உள்ளவருடன் இதுவரை எந்தவிதமான பரிச்சயமும் இல்லை.

      இரண்டு, மூன்று மற்றும் ஆறு ஆகிய மூவரையும் நான் நேரிலேயே சந்தித்துப் பேசியுள்ளேன்.

      நான்கு, ஐந்து, ஏழு ஆகிய மூவரையும் நான் நேரில் சந்திக்காவிட்டாலும், பதிவுகள் + பின்னூட்டங்கள் மூலம் எனக்கு இவர்கள் நன்கு பரிச்சயம் உண்டு.

      ஏழாவது ஆசாமியை இங்கு நான் படத்தில் முதன் முதலாகப் பார்க்க நேர்ந்ததில் எனக்கு மிகவும் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. :)

      http://gopu1949.blogspot.in/2012/09/blog-post.html
      அவர் என்னுடைய மேற்படி பதிவுக்கு இட்டுள்ள பின்னூட்டம் இதோ:

      -=-=-=-
      vasan September 1, 2012 at 6:25 PM
      இன்று காலை ந‌ண்ப‌ரிட‌ம் இருந்து இதே வ‌ந்த‌து.
      சுவார‌ஸ்ய‌மான மொழி பெய‌ர்ப்பு.
      என்ன‌டா வைகோ "லஞ்ச‌ம்" ப‌ற்றி எழுதுகிறாரே
      என்று வேக‌ம் வேக‌மாய் ப‌திவைத் திறந்தேன்....
      -=-=-=-

      இதிலுள்ள Total No. of Comments (As on Date): 198

      நீக்கு
    3. கோபு சாருக்குத் தெரியாமல் ஒரு பதிவரா? இருக்க முடியாது.

      நீக்கு
  12. கோபு அண்ணா இங்கே வேறேதாவது பதிவில் இணைத்திருக்கிறீர்களா ? ஒன்றும் தெரியலை எனக்கு அதுவும் அதிராவுக்கு கொடுத்த
    பரிசுகள் ஒன்றுமே தெரியலை எனக்கு :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா தெரியல்லயாம்ம்ம் இனித்தான் மீ நிம்மதியா நித்திரை கொள்ளுவேன்ன்ன்:)... எங்கே எடுத்திட்டு ஓடிடுவாவோ எனப் பயந்து கொண்டே இருந்தேன்ன்ன்:).

      நீக்கு
    2. Angelin June 11, 2017 at 3:03 AM

      //கோபு அண்ணா இங்கே வேறேதாவது பதிவில் இணைத்திருக்கிறீர்களா? ஒன்றும் தெரியலை எனக்கு அதுவும் அதிராவுக்கு கொடுத்த பரிசுகள் ஒன்றுமே தெரியலை எனக்கு :))))))))//

      அதிரா நிம்மதியாக நித்திரை கொள்ளட்டும், என்று
      தாங்கள் நல்லெண்ணத்துடன் நினைத்து, தாங்கள் தங்கள் கண்களை மறைத்துக் கொண்டு, இதில் பாதிக்கு மேல் (குறிப்பாக அந்த அடியில் தோன்றிடும் முக்கியமான சமாச்சாரங்கள்) தெரியவில்லை எனச் சொல்லியுள்ளீர்கள்.

      இவ்வாறான தங்களின் தங்கமான மனமும், வைரமான குணமும், அல்டாப் அதிராவைப் போன்றவர்களுக்குத் தெரியாமல் இருப்பது மிகவும் துரதிஷ்டமே. :)

      நீக்கு
  13. பாசமான தாயிடம் வாங்கிய
    முதல் அடியில் எடுத்த
    முட்டாள்தனமான முடிவு
    பதறவைக்கிறது
    தாய் கோபத்தில் கூறிய
    வார்த்தைக்கு அர்த்தம் பார்த்தால்..
    என்ன பாடு பட்டிருக்கப்போகிறோனோ ?
    அதைவிட அந்தத் தாய்...
    அவசியம் படிக்கத் தூண்டும் துவக்கம்
    சுருக்கமான அருமையான
    விமர்சனத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S June 11, 2017 at 6:06 AM

      வாங்கோ Mr RAMANI Sir, வணக்கம்.

      //பாசமான தாயிடம் வாங்கிய முதல் அடியில் எடுத்த முட்டாள் தனமான முடிவு பதறவைக்கிறது. தாய் கோபத்தில் கூறிய வார்த்தைக்கு அர்த்தம் பார்த்தால்.. என்ன பாடு பட்டிருக்கப்போகிறோனோ ? அதைவிட அந்தத் தாய்... //

      தாய்ப்பாசம் என்பது தாயைவிட்டுப் பிரிந்து, நாய் போலத் தெருத்தெருவாக அலையும் போது மட்டுமே, உணரக்கூடியதாக இருக்கும். மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

      கதையில் வரும் தாய் மிகவும் கெட்டிக்காரி. அவனை மிகச்சுலபமாக மீட்டு வரச் செய்து, எதுவுமே நடக்காதது போல நடித்து, அவனை ஆதரவாக அணைத்துக்கொண்டும் விட்டாள்.

      //அவசியம் படிக்கத் தூண்டும் துவக்கம். சுருக்கமான அருமையான விமர்சனத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. ரமணி சார்! பிள்ளைகளைப் பொறுத்தவரை எந்தத் தாயுமே சரியான முடிவை மட்டுமே எடுப்பாள். உள்ளுணர்வு சார்ந்தே அந்த முடிவுகள் அமைவதும் யோசிக்கத் தக்கது. அஉங்களுக்கு கோபு சாரின் பதில் சார்ந்து என் நன்றிகளும்.

      உங்கள் முகவரி மின்னஞ்சல் ஏதும் வரவில்லையே? அனுப்புங்கள்.

      நீக்கு
  14. "வீட்டைத் துறந்தேன்" கதை செல்லமாக வளர்க்கப்பட்ட அநேக முதல் குழந்தைகளின் மனோநிலையை மிக அற்புதமாகச் சித்திரிக்கப்பட்ட கதை!

    "நிழல் யுத்தம்" கதையின் அம்மா எடுக்கும் முடிவு எதிர்பார்த்த ஒன்றே!

    எப்படி மனம் துணிந்தீரோ! கதையின் முடிவு கடைசி வரியிலேயே இருக்கே வைகோ சார்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam June 11, 2017 at 6:24 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //எப்படி மனம் துணிந்தீரோ! கதையின் முடிவு கடைசி வரியிலேயே இருக்கே வைகோ சார்! :)//

      எனக்குப் புரியாமல் இல்லை. நான் எழுதிடும் மதிப்புரை மற்றும் விமர்சனம் போன்றவற்றில் இதுபோல ஏதாவது புதிர்போட்டு, மொட்டையாய் எழுதி முடித்தால் மட்டுமே, வாசிப்போரில் சிலருக்காவது, அந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற சுவாரஸ்யம் ஏற்படக் கூடும்.

      முழுக்கதையையும் சொல்லிவிடாமல், சற்றே உஷாராக இருக்க வேண்டியுள்ளது.

      நீக்கு
    2. கோபு சார் ! கீதா அக்கா என் கதைகளை நிறைய ரிவிஷன் பண்ணினவங்களாக்கும் !!

      நீக்கு
  15. காலையில் மலரும் கமலம் போல
    புத்தம் புதிதாய் கதை நயம்...

    தங்களைப் போல கருத்துரைக்க ஒருவர் கிடைத்து விட்டால் எவருக்கும் கதையும் கற்பனையும் ஊற்றெடுக்கும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ June 11, 2017 at 6:25 AM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //காலையில் மலரும் கமலம் போல புத்தம் புதிதாய் கதை நயம்...//

      எப்போதுமே என் பதிவுகள் பக்கம் காலையில் முதன்முதலாக, புத்தம் புதிதாய் மலரும் கமலத்தை (தாமரையை) 01.01.2016 முதல் காணாமல், இன்னும் நான் கவலையில் மட்டுமே ஆழ்ந்துள்ளேன் உள்ளேன், பிரதர்.

      http://gopu1949.blogspot.in/2016/03/blog-post.html
      :((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

      எனினும் தங்களின் இந்த நயமான கருத்துக்கள் எனக்குக் கொஞ்சம் மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றன.

      //தங்களைப் போல கருத்துரைக்க ஒருவர் கிடைத்து விட்டால் எவருக்கும் கதையும் கற்பனையும் ஊற்றெடுக்கும்.. வாழ்க நலம்..//

      ஆஹா, தன்யனானேன். மிக்க நன்றி, பிரதர்.

      நீக்கு
    2. அன்பின் அண்ணா..

      தங்களது கவலை எனக்குப் புரிகின்றது..
      காலம் தான் ஆறுதலைத் தரவேண்டும்..

      நீக்கு
    3. துரை சார்,

      //தங்களைப் போல கருத்துரைக்க ஒருவர் கிடைத்து விட்டால் எவருக்கும் கதையும் கற்பனையும் ஊற்றெடுக்கும்.. வாழ்க நலம்..//

      லட்சத்தில் ஒரு வரி.....

      நீக்கு
  16. பாராட்டுக்களிலேயே சுகம் கண்டவனுக்கு இது தாளவில்லை.//
    கொஞ்சி கொஞ்சி சீராட்டிய தாய் கொஞ்சம் கோபித்து கொண்டால் மனம் தாங்ககாது தாய், சேய் மனதை அழகாய் சொல்லியிருப்பார் கதையில்.
    இதை கதை படித்து பின்ணூட்டம் போட்டேன். அதை படிக்க ஆவலாக இருக்கிறது .

    மாறுதலான துப்பறியும் கதை இதற்கும் பின்னூட்டங்கள் அதிகமாய் போட்டேன் இப்படி இருக்குமோ, அப்படீருக்குமோ! என்று படிப்பவர்களின் யூகங்க்களை சொல்ல வைத்த கதை.

    நிழல் யுத்தமும் ரசித்து படித்த கதை. அன்பு இழையால் பின்னப்பட்ட கதை.சண்டையிடுவது மட்டும் தான் பிறருக்கு தெரியும் இருவருக்கும் உள்ள அன்பு தம்பதிகளுக்கே தெரியும்.

    அழகான படங்களுடன், கதையில் உங்களுக்கு பிடித்த உரையாடல்களையும் பகிர்ந்து கொண்டது அருமை.

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு June 11, 2017 at 7:35 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      பெரும்பாலும் அனைத்துக் கதைகளுமே தாங்கள் அவரின் வலைத்தளத்தில் படித்திருப்பீர்கள் போலத் தெரிகிறது. மிகவும் நல்லது.

      //அழகான படங்களுடன், கதையில் உங்களுக்கு பிடித்த உரையாடல்களையும் பகிர்ந்து கொண்டது அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. கோமதி அரசு மேடம்... உங்கள் செறிவான கருத்துகள் எப்போதும் எனக்கு ஊக்கம் அளிப்பவை. தொடருங்கள் மேடம்

      நீக்கு
  17. நல்ல விமரிசனம் தொடரட்டும். மூன்று கதைகளும் வித்தியாசமாக இருக்கின்றன. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. வாய்ப்பு கிடைக்கும்போது படிக்கிறேன்.

    மீண்டும் ஒரு பெரிய இசைக் கலைஞரின் படத்தோடு கூடிய பதிவு. உஸ்தாத் அவர்கள் காசியிலேயே கடைசி வரை வசித்தவர், காசி விசுவநாதர் ஆலயத்தோடு தொடர்பு உடையவர். தினமும் சரசுவதி பூஜைக்குப் பிறகுதான் இசை வேள்வியை ஆரம்பிக்கக்கூடியவர். எல்லா பத்ம விருதுகளும் அதற்கு மேலாக பாரத ரத்னாவும் அளிக்கப்பட்டவர். இவருடைய சிறப்பு, சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் (ஆரம்ப காலத்தில்) இவரது ஷெனாய் இசையின்மூலம் தொடங்கிவைத்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் June 11, 2017 at 10:53 AM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //நல்ல விமரிசனம் தொடரட்டும்.//

      மிகவும் சந்தோஷம்.

      //மூன்று கதைகளும் வித்தியாசமாக இருக்கின்றன. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. வாய்ப்பு கிடைக்கும்போது படிக்கிறேன்.//

      ஒன்றும் அவசரமே இல்லை.

      யதா செளகர்யப் பரிஷேஷனம்..... :)

      பல்வேறு பத்ம விருதுகள் வாங்கியுள்ள ஷெனாய் இசைக்கலைஞர் ‘பாரத ரத்னா’ உஸ்தாத் அவர்களைப் பற்றி தங்கள் மூலம் மேலும் அறிந்துகொண்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்கள் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
    2. நெல்லைத்தமிழன் சார் ! கதைகளை அவசியம் நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
      பிஸ்மில்லா கான் அவர்கள் சந்திப்பின் போது, காசிக்கும்/கங்கைக்கும்/விசுவநாத ஸ்வாமிக்கும்- அவருக்கும் உள்ள தொடர்பை அவர் வாயாலேயே சொல்லக் கேட்டு பரவசமடைந்தேன்.

      கலை என்பது மொழி,மத,தேச வேறுபாடுகளைக் கடந்தது என்றுணர்ந்தேன்.
      நன்றி சார் !

      நீக்கு
  18. இந்த கதை மாதிரி, சின்ன வயசுல அம்மா கையால அடி வாங்கினதும்,நானும் ஓடிப் போறவன் தான்!
    ஆங்கரை அக்ரஹாரத்தில் அப்ப தெரு நாய் ஜாஸ்திங்கறதுனால, என் எண்ணத்தை மாத்திண்டுட்டேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //இந்த கதை மாதிரி, சின்ன வயசுல அம்மா கையால அடி வாங்கினதும், நானும் ஓடிப் போறவன் தான்! ஆங்கரை அக்ரஹாரத்தில் அப்ப தெரு நாய் ஜாஸ்திங்கறதுனால, என் எண்ணத்தை மாத்திண்டுட்டேன் ...//

      என்னைப்போலவே தான் தாங்களும் போலிருக்குது. தெரு நாய்களைக் கண்டால் எனக்கு இன்றும் மிகவும் பயம் தான்......

      அது ஆங்கரையாயினும் ..... ஆண்டார் வீதியாயினும். :)

      நீக்கு
    2. மூவார்! உங்கள் பதிலை மிக ரசித்தேன்.
      இப்போது மனைவியிடம் கோபித்துக் கொண்டு கம்பி நீட்டினால், தேடி இழுத்து வருவார்களா? இல்லை, விட்டது தொல்லை என்று வாளாவிருந்து விடுவார்களா?! சொல்லுங்க பாஸ்.....

      நீக்கு
  19. ‘ வீட்டைத்துறந்தேன் ‘ சிறுகதை தான் மோகன் ஜி அவர்களது படைப்பிலேயே என்னை மிகவும் பாதித்தது. அந்த சமயத்தில் அவரின் வலைத்தளம் கூட வேறு வடிவில் இருக்கும்! அதை மீண்டும் படிக்கவாவது அவரின் புத்தகத்தை சீக்கிரம் வாங்க வேண்டும்!
    என் தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர். தந்தை இல்லாத நேரத்தில் போலீஸ்காரர்கள் எல்லாம் என்னிடமும் என் தங்கையிடமும் ஏதாவது பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அதில் ஒன்று தான் இந்த ‘தவிட்டுக்கு வாங்கிய ‘ கதை! ஒரு போலீஸ்காரர் என்னைத் தவிட்டுக்கு வாங்கியதாகச் சொன்னதும் ரகசியமாய் பல நாட்கள் அழுதிருக்கிறேன் சகோதரர் வை.கோ போல!
    நம் பதிவர்களுடனான புகைப்படங்கள் மகிழ்வை அளிக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mrs. Mano Saminathan June 11, 2017 at 9:06 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //‘வீட்டைத்துறந்தேன்‘ சிறுகதை தான் மோகன் ஜி அவர்களது படைப்பிலேயே என்னை மிகவும் பாதித்தது. அந்த சமயத்தில் அவரின் வலைத்தளம் கூட வேறு வடிவில் இருக்கும்! அதை மீண்டும் படிக்கவாவது அவரின் புத்தகத்தை சீக்கிரம் வாங்க வேண்டும்!//

      இதோ அவரின் வலைத்தளத்தில் உள்ள இந்தக் கதைக்கான இணைப்பினையும் அதில் தாங்கள் 04.12.2010 அன்று கொடுத்துள்ள பின்னூட்டத்தினையும் கீழே கொடுத்துள்ளேன்:

      -=-=-=-

      http://vanavilmanithan.blogspot.in/2010/12/blog-post.html

      மனோ சாமிநாதன் சொன்னது…
      சிறு வயது அனுபவங்களை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்! அருமையான எழுத்து நடை!
      'தாய்மை'க்கு அன்பென்ற மகுடம் சூட்டும் உங்களைப்போல எல்லா மகன்களும் தாய்மையை ஆராதித்தால் அப்புறம் முதியோர் இல்லங்கள் எல்லாம் ஒன்றுமில்லாதாகி விடும்!
      04/12/2010 ..... 11:56 பிற்பகல்
      -=-=-=-

      //என் தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர். தந்தை இல்லாத நேரத்தில் போலீஸ்காரர்கள் எல்லாம் என்னிடமும் என் தங்கையிடமும் ஏதாவது பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அதில் ஒன்று தான் இந்த ‘தவிட்டுக்கு வாங்கிய ‘ கதை! ஒரு போலீஸ்காரர் என்னைத் தவிட்டுக்கு வாங்கியதாகச் சொன்னதும் ரகசியமாய் பல நாட்கள் அழுதிருக்கிறேன் சகோதரர் வை.கோ போல!//

      சிறுவயதில் குழந்தைகளாகிய நம்மையெல்லாம் மிகவும் பாதித்த விஷயம் இது. இதுபோல சின்னக் குழந்தைகளிடம் விளையாட்டாகச் சொல்லி அவர்களை பீதியடையச் செய்வதே மிகவும் தவறான செயலாகும் என்பது என் எண்ணம்.

      //நம் பதிவர்களுடனான புகைப்படங்கள் மகிழ்வை அளிக்கிறது!//

      ஆமாம் மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
    2. மனோ மேடம் ! உங்கள் பாராட்டு மனதை நெகிழச் செய்கிறது. நன்றி! உங்கள் அனுபவத்தையும் ரசனையுடன் சொல்லியிருக்கிறீர்கள். நீங்களும் இதை பதிவாக இடுங்களேன் மேடம்!

      நீக்கு
    3. கோபு சார்! மனோ மேடத்திற்கான உங்கள் பதிலில், ஆறேழு வருடங்களுக்கு முன் நான் எழுதிய கதையின் சுட்டியையும், மனோ மேடம் அளித்த பின்னூட்டத்தையும் தேடிப் பிடித்துப் போட்டிருக்கிறீர்கள். பிறருக்கு நீங்கள் எவ்வளவு மதிப்பளிக்கிறீர்கள் என்று வியக்கிறேன். மிக்க நன்றி சார்!

      நீக்கு
  20. எப்படி மனம் துணிந்தனறோ
    தலைப்பே பணத்திற்காக எதையும்
    செய்யத் துணிந்த கூட்டம் இருக்கும்
    விஷயத்தையும்,அது செய்யும்
    ஜகதலப்பிரதாபங்களையும்
    மிக மிக மெதுவாக ஆயினும்
    தர்மமும் நியாயமும் இறுதியில்
    வெல்லுகிற விஷயத்தை சுவாரஸ்யமாகச்
    சொல்லிப்போகும் கதையாக இது
    இருக்கக் கருதுகிறேன்
    விமர்சனம் செய்த விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S June 11, 2017 at 9:37 PM

      வாங்கோ Mr. RAMANI Sir, தங்களின் மீண்டும் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்

      //எப்படி மனம் துணிந்தீரோ? தலைப்பே பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்த கூட்டம் இருக்கும் விஷயத்தையும், அது செய்யும் ஜகதலப்பிரதாபங்களையும், மிக மிக மெதுவாக ஆயினும் தர்மமும் நியாயமும் இறுதியில் வெல்லுகிற விஷயத்தை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போகும் கதையாக இது இருக்கக் கருதுகிறேன். விமர்சனம் செய்த விதம் அருமை. வாழ்த்துக்களுடன்...//

      கதை பற்றிய தங்களின் சில யூகங்களுக்கும், அதைப்பற்றி விரிவாக எடுத்துச்சொல்லி அருமையாக வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. ரமணி சார் ! கவித்துவமான கருத்துக்கு என் நன்றி!
      முகவரியை அனுப்புங்கள்.

      நீக்கு
  21. கதைகளின் கருப்பொருள் புதிதுபுதிதாக இருக்கிறது . மோஹன் ஜீ அவர்களுக்குக் கற்பனை வளம் மிகுதி . பாராட்டுகிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொ.ஞானசம்பந்தன் June 12, 2017 at 5:53 PM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //கதைகளின் கருப்பொருள் புதிதுபுதிதாக இருக்கிறது . மோஹன் ஜீ அவர்களுக்குக் கற்பனை வளம் மிகுதி . பாராட்டுகிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், கதாசிரியரைப் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. ஞான சம்பந்தம் ஐயா!
      உங்கள் வாழ்த்தை ஆசீர்வாதமாய் ஏற்று வணங்குகிறேன். நன்றி ஐயா!

      நீக்கு
  22. பதில்கள்
    1. Mathu S June 12, 2017 at 10:00 PM

      //நல்ல பணி அய்யா//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
  23. அறுபதைக் கடந்தவர்களில்
    பலாப்பழம் போன்ற சூட்சுமமான
    அந்த வயதைக் கடந்தவர்கள் மட்டுமே
    உணர முடிந்த அன்பின் அடர்த்தியை
    எப்படி மோகன் ஜீயால் மிகச் சரியாக
    சூட்சும நாடிப்பிடித்து அறிந்து
    எழுத முடிந்தது என்பது ஆச்சரிய
    மளிப்பதாகவே உள்ளது

    அதை மிகச் சரியாக உணரும்படியாக
    அதற்கான இரண்டு பத்திகளை
    அழகாக எடுத்துப் பதிந்து
    கொடுத்த உங்கள் திறனும்...

    அற்புதமான விமர்சனப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறுபதுகளின் வாழ்க்கையில் அந்தரங்கமென்று ஏதும் இருப்பதில்லை. சண்டையோ சமாதானமோ, யாவருக்கும் தெரிய நடப்பது தான் பெரும்பாலும். சாட்சியாக உள்வாங்கிய நிகழ்வுகளின் நீட்சியே இந்தக் கதை. அறுபதைத் தொட்டிருக்கும் நான், இப்போது இதை எழுதினால் வேறு விதமாய் இருக்கும் எனத் தோன்றுகிறது ரமணி சார் !

      நீக்கு
    2. Ramani S June 12, 2017 at 10:38 PM

      வாங்கோ Mr. RAMANI Sir,

      தனித்தனியாக ஒவ்வொரு கதைக்கும்,
      தனித்தனியாக பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்துள்ளது,
      தனி அழகாகவே உள்ளது.

      //அறுபதைக் கடந்தவர்களில் பலாப்பழம் போன்ற சூட்சுமமான அந்த வயதைக் கடந்தவர்கள் மட்டுமே உணர முடிந்த அன்பின் அடர்த்தியை எப்படி மோகன் ஜீயால் மிகச் சரியாக சூட்சும நாடிப்பிடித்து அறிந்து எழுத முடிந்தது என்பது ஆச்சரிய மளிப்பதாகவே உள்ளது//

      மோகன்ஜி அவர்களும், பழுத்த பலாப்பழம் போன்று, அறுபதைக் கடந்துவிட்டவர் மட்டுமே. ஆனால் பார்த்தால் அப்படித் தெரியவே தெரியாது.

      ஒரு முடியும் நரைக்காமல், அடர்த்தியான முடிகளுடன், எப்போதும் ஸ்மார்ட் ஆக, இளமை ஊஞ்சலாடும் விதமாக ஜோராகவே காட்சி அளிப்பார்.

      கல்யாணமே ஆகாதவரோ என நினைத்து யாரேனும் பொண்ணு கொடுக்க வந்தாலும் ஆச்சர்யமே இல்லை.

      இதே தொடரின் பகுதி-4 இல் திரு. ரிஷபன் அவர்களின் பின்னூட்டத்திற்கான தன் பதிலில் இந்த அவரின் ஏக்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

      -=-=-=-=-

      மோகன்ஜிJune 7, 2017 at 10:33 AM

      ரிஷபன்ஜி !

      //மோகன் ஜியின் அழகான படங்கள் போனஸ்..//

      கிண்டல் தானே?! கோபு சாரும் எப்படியெல்லாமோ என் படத்தைப் போட்டுப் பார்க்கிறார்... இதுவரை ஒரு வரன் கூட தகையவில்லை!!

      -=-=-=-=-

      //அதை மிகச் சரியாக உணரும்படியாக அதற்கான இரண்டு பத்திகளை அழகாக எடுத்துப் பதிந்து கொடுத்த உங்கள் திறனும்... அற்புதமான விமர்சனப் பதிவு. பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், வித்யாசமான பல்வேறு கருத்துக்கள் மூலம் இந்தத் தொடர் பதிவினை ஜொலிக்கச்செய்து வருவதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  24. கோபு சார்! இந்தக் கதை ஐம்பது வயது தொடக்கத்தில் எழுதினேன். இந்தக் கதையின் நாயகன் விருப்ப ஓய்வு பெற்றதனால் தம்பதிகளின் இடையே பூசல் வருகிறது. மும்பையில் பிள்ளை வீட்டிற்கு வருகிறார்கள்.

    சில வருடங்கள் கழித்து நானும் என் பணியிலிருந்து விருப்ப ஓய்வு கொடுத்தேன். என் மகனும் மும்பையில் பணிக்கு சேர்ந்தான். இந்த தற்செயல் புத்தகத்திற்கான தயாரிப்பின் போதே உணர்ந்தேன். வித்தியாசம் என்னவென்றால், கதையின் நாயகி போல்,என் மனைவி சண்டையெல்லாம் போடவில்லை. ' வேலையிலிருந்த போது அரை புருஷன்; வேலையை விட்டபின் டபிள் புருஷனாக படுத்தப் போகிறீர்கள்!" என்றாள்.
    கருத்தமுடி... சாயங்களின் உபயம். அண்மையில் அறுபது ஆனபின் 'டை' அடிப்பதை விட்டேன்.
    Now aging with grace...
    அந்த 'வரன் தகையிற மேட்டர்' நமக்குள்ளேயே இருக்கட்டும் கோபு சார்!!!
    ஆரண்ய நிவாஸ் அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்கோ!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகன்ஜி June 13, 2017 at 12:27 AM

      //அந்த 'வரன் தகையிற மேட்டர்' நமக்குள்ளேயே இருக்கட்டும் கோபு சார்!!!

      ஆரண்ய நிவாஸ் அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்கோ!!//

      கவலையே படாதீங்கோ. சொல்ல மாட்டேன். அவருடைய மேட்டரே ஒன்று என்னிடம் 5-12-2009 முதல் பத்திரமாக, ஆடியோ மற்றும் வீடியோவாக உள்ளது. அதை வைத்துத்தான் அவரை நானே அவ்வப்போது மிரட்டிக்கொண்டு இருக்கிறேன். :)

      நீக்கு
    2. ஹா...ஹா... பெரிய பிடியாய் இருக்கும் போலிருக்கே!

      நீக்கு
  25. வைகோ சார் உங்கள் விமர்சனம் அருமை...விரிவாக எழுத இயலவில்லை..பயணம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu

      //வைகோ சார் உங்கள் விமர்சனம் அருமை...விரிவாக எழுத இயலவில்லை..பயணம் ...//

      வாங்கோ, வணக்கம். பரவாயில்லை. தங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்.

      நீக்கு
    2. துளசிதரன் சார்! பயணம் முடிந்து வந்து கருத்திடுங்கள். வாழ்த்துகள் !

      நீக்கு
  26. //முடிவில் என்னதான் ஆச்சு? என்பதை இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலில் படித்துப் புரிந்துகொண்டு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.//

    உங்களுக்கே புரியலயா அட ராமா! அப்புறம் எங்களூக்கு எப்படி புரியும்.

    எனக்கு ஒரு டவுட்டு.

    இத்தனை நகைகளை வெச்சுண்டு இந்த அதிரா பொண்ணு என்ன பண்ணப் போறா? ஜாக்கிரதையா இருக்கச் சொல்லணும். ஊரெல்லாம் திருட்டு பயம் வேற.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 13, 2017 at 3:10 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      **முடிவில் என்னதான் ஆச்சு? என்பதை இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலில் படித்துப் புரிந்துகொண்டு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.**

      //உங்களுக்கே புரியலயா அட ராமா! அப்புறம் எங்களுக்கு எப்படி புரியும்?//

      அதாவது இவரின் சில கதைகள் மட்டும், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாகப் புரியக்கூடும். அதைப்பற்றி விளக்கம் பகுதி-8 இன் ஆரம்பத்திலேயே விரிவாக வர உள்ளது. படித்துப் பாருங்கோ ஜெயா.

      //எனக்கு ஒரு டவுட்டு. இத்தனை நகைகளை வெச்சுண்டு இந்த அதிரா பொண்ணு என்ன பண்ணப்
      போறா?//

      பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசையில் பெண்களுக்கே உரித்தான பொன்னாசை அதிராவிடம் அதிகம் இருக்கும் போலிருக்குது. அப்போ உங்களிடம் இல்லையா .... ஜெயா :)

      //ஜாக்கிரதையா இருக்கச் சொல்லணும். ஊரெல்லாம் திருட்டு பயம் வேற.//

      ஆமாம்.... ஆமாம். அதனால்தான் என்னிடம் உள்ள அனைத்தையும் சப்ஜாடா நம்ம அதிராவுக்கே கொடுத்துட்டேன். என்னிடம் இப்போ ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லை. ஜாலிதான்..... எனக்கு. :)

      நீக்கு
    2. ஜெயந்தி ஜெயா மேடம்! புத்தகத்தைப் படித்து தான் பார்த்து விடுங்களேன்!

      நீக்கு
    3. கண்டிப்பாக படிக்கிறேன் மோகன் ஜி. அப்படியே உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எங்காத்துக்கும் வாங்கோ.

      எங்காத்து விலாசம்
      http://aanmiigamanam.blogspot.in/2017/06/4.html

      http://manammanamveesum.blogspot.in/2017/04/

      உங்கள மாதிரி, கோபு அண்ணா மாதிரி இல்லாட்டாலும் கொஞ்சம் சுமாரா எழுதுவேன். வந்து பாருங்கோளேன்

      நீக்கு
    4. அவசியம் வருகிறேன் மேடம்.
      எழுதுவதோடு உங்கள் வேலை முடிந்தது. சுமாரா? சூப்பரா? என நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் தாயே!

      நீக்கு
  27. வீட்டைத் துறந்தேன்’ கதை இன்றும் பல அம்மாக்கள் தங்கள் பிள்ளைகள் தானே என்ற நினைப்பில் அவர்களது மனப்போக்கை அறியாமல் செய்கின்ற தவறையும், அதனால் விளையும் இடர்ப்பாடுகளையும் விளக்கும் கதை என நினைக்கிறேன்.

    கதையில் வரும் உரையாடலில் இன்றைய பிள்ளைகள் எவ்வாறு கேள்வி கேட்டு பெற்றோர்களை மடக்குகிறார்கள் என்பதை நன்றாகவே எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் திரு மோகன்ஜி அவர்கள்.

    ‘எப்படி மனம் துணிந்தீரோ’ என்ற கதை உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் செய்த ஏற்பாட்டின் காரணமாக அவரும் அவரது மகளும் அல்லல்பட்டதை ஒரு துப்பறியும் கதைபோல் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் என நினைக்கிர்னே. படித்துப் பார்த்துவிட்டு முடிவில் என்ன ஆயிற்று என்பதை தெரிவிக்கிறேன்.

    ‘நிழல் யுத்தம்’ கதை வயது முதிர்ந்த தம்பதியினர் அன்னியோன்மையாய் ‘செல்ல’ச் சண்டைபோட்டுக் கொள்வதைப் பற்றியது என நினைக்கிறேன். கதையை படித்து சுவைக்க இருக்கிறேன் அந்த ‘அல்வா துண்டுகளை.

    வெவ்வேறு கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து சிறுகதைகளாக கொடுத்திருக்கும் திரு மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்! அந்த கதைகளை சிறப்பான முறையில் மதிப்புரை செய்துள்ள தங்களுக்கு பாராட்டுகள்!

    ஒவ்வொரு பதிவிலும் திரு மோகன்ஜி அவர்கள் பற்றிய படங்கள் அவரைப் பற்றி மேலும் அறிய உதவுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி June 13, 2017 at 5:30 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //வீட்டைத் துறந்தேன்’ கதை இன்றும் பல அம்மாக்கள் தங்கள் பிள்ளைகள் தானே என்ற நினைப்பில் அவர்களது மனப்போக்கை அறியாமல் செய்கின்ற தவறையும், அதனால் விளையும் இடர்ப்பாடுகளையும் விளக்கும் கதை என நினைக்கிறேன். //

      இருக்கலாம்.

      //கதையில் வரும் உரையாடலில் இன்றைய பிள்ளைகள் எவ்வாறு கேள்வி கேட்டு பெற்றோர்களை மடக்குகிறார்கள் என்பதை நன்றாகவே எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் திரு மோகன்ஜி அவர்கள். //

      மகிழ்ச்சி.

      //‘எப்படி மனம் துணிந்தீரோ’ என்ற கதை உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் செய்த ஏற்பாட்டின் காரணமாக அவரும் அவரது மகளும் அல்லல்பட்டதை ஒரு துப்பறியும் கதைபோல் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் என நினைக்கிர்னே. படித்துப் பார்த்துவிட்டு முடிவில் என்ன ஆயிற்று என்பதை தெரிவிக்கிறேன். //

      சரி........... ஸார். சில கதைகளின் முடிவுகளை வாசகர்களின் யூகத்திற்கே விட்டுள்ளார். அதற்கான காரணங்களை அவரே தன் முன்னுரையில் விரிவாகக் குறிப்பிட்டும் உள்ளார். அந்த முன்னுரையை நான் அப்படியே இந்தத் தொடரின் நிறைவுப்பகுதியின் ஆரம்பத்தில் வெளியிடவும் உள்ளேன்.

      //‘நிழல் யுத்தம்’ கதை வயது முதிர்ந்த தம்பதியினர் அன்னியோன்மையாய் ‘செல்ல’ச் சண்டைபோட்டுக் கொள்வதைப் பற்றியது என நினைக்கிறேன். கதையை படித்து சுவைக்க இருக்கிறேன் அந்த ‘அல்வா துண்டுகளை. //

      வீட்டுக்கு வீடு வாசல்படி ..... என்பது போலத்தான். நம்மைப் போன்ற சீனியர் சிடிஸன்ஸ்களுக்கு பெரும்பாலும் பற்கள் விழுந்திருக்கும். அதனால் அல்வா துண்டுகளை பல் இல்லாமலேயே சாப்பிடவும் பிடிக்கக்கூடும்.

      //ஒவ்வொரு பதிவிலும் திரு மோகன்ஜி அவர்கள் பற்றிய படங்கள் அவரைப் பற்றி மேலும் அறிய உதவுகிறது. //

      ஆமாம் ஸார். மிகப்பெரிய பிரபலங்களுடன் நட்புடன் பழகியுள்ள இவரும் மிகப்பெரிய பிரபலமாகத்தான் இருக்கணும் என எனக்கும் தோன்றுகிறது. :)

      //வெவ்வேறு கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து சிறுகதைகளாக கொடுத்திருக்கும் திரு மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்! அந்த கதைகளை சிறப்பான முறையில் மதிப்புரை செய்துள்ள தங்களுக்கு பாராட்டுகள்! //

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்தால் ஆத்மார்த்தமாக எடுத்துச்சொல்லும் அருமையான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. நடன சபாபதி சார்! உங்கள் கருத்துகளைப் போலவே ஊகங்களும் அழகே! உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி சார்!

      நீக்கு
  28. வீட்டைத் துறந்தேன் கதையைத் தொடர்ந்து வாசிக்கும் ஆவல் எழுகிறது..அம்மாவின் செயலுக்குப் பின்னாலிருக்கும் காரணம் என்னவாக இருக்கும்?

    நிழல் யுத்தம் என்ன அழகான தலைப்பு... கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரிகளே சான்று.

    எப்படி மனம் துணிந்தீரோ கதை மோகன்ஜியின் கதாபாணியிலிருந்து சற்றே விலகி வேறு வகையான அனுபவத்தைத் தரக்கூடும் என்று நினைக்கிறேன். கதைச்சுருக்கத்தை வைத்து இம்முடிவு. எண்ணம் தவறாகவும் இருக்கலாம்.

    கடைசியாக பத்மஜா, சுந்தர்ஜி, மோகன்ஜி உள்ளிட்ட பதிவர் குழு அசத்துகிறது. கோபு சாரின் சிரத்தைக்கும் அர்ப்பணிப்புக்கும் சொல்லவா வேண்டும். நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி July 3, 2017 at 6:22 AM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //கடைசியாக பத்மஜா, சுந்தர்ஜி, மோகன்ஜி உள்ளிட்ட பதிவர் குழு அசத்துகிறது. கோபு சாரின் சிரத்தைக்கும் அர்ப்பணிப்புக்கும் சொல்லவா வேண்டும். நன்றி கோபு சார்.//

      இதுபோன்ற பல படங்களும் நம் மோகன்ஜியால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டவை மட்டுமே. நான் அவற்றை எட்டு பதிவுகளுக்குமாக நிரவி வெளியிட்டுள்ளேன்.

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  29. எப்படி மனம் துணிந்தீரோ அரைகுறையாய் விடப்பட்ட என் இரு வேறுவேறு சிறுகதைகளை ஒன்றாக்கி செப்பனிட்ட பரிட்சார்த்த சவால் எனக்கு!

    பதிலளிநீக்கு