என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 31 மார்ச், 2013

5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் !


”பொக்கிஷம்”

தொடர்பதிவு 
By
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். அவர்களின் வயது முறையே பத்து, எட்டு, மூன்று. என் வரவுகளும் வீட்டுச் செலவுகளும் மிகச்சரியாக இழுத்துக்கோ பறிச்சுக்கோ என இருந்த காலக்கட்டம்.  

என் தாயார் உள்பட எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் ஆறு நபர்கள். என் ஒருவனின் வருமானம் மட்டுமே. வேறு ஏதும் சொத்தோ சுகமோ கிடையாது. அலுவலகத்திலோ, வேறு தனி நபர்களிடமோ எக்காரணம் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.

எனது அலுவலக நண்பர் ஒருவர்,  திரு. B. ராமகிருஷ்ணன் என்று பெயர். ஸ்ரீராம் சிட்ஸ் இல் ஓர் சீட்டு சேருமாறு என்னை மிகவும் நிர்பந்தப்படுத்தினார். அவர் தன் மனைவி பெயரில் ஸ்ரீராம் சிட் ஃபண்டில் ஏஜண்ட் ஆக செயல்பட்டு வந்தார். 

அப்போது ஸ்ரீராம் சிட்ஸ் கம்பெனி திருச்சியில் கிடையாது. சென்னையில் இருந்தது. மாதம் ரூ. 250 வீதம் 40 மாதங்கள் = ரூ. 10000/- என்ற சீட்டில் என்னை சேர்த்து விட்டார். ஏலச்சீட்டில் தள்ளுபடி போக, மாதம் சுமார் ரூ 180 முதல் 220 வரை மட்டும் கட்டும்படியாக இருக்கும். 

நவராத்திரி சமயத்தில் சேர்த்து விட்டதால் சுமார் 50 கிராம் எடையுள்ள ஒருபுறம் மட்டும் பிள்ளையார் படமும், மறுபுறம் ஸ்ரீராம் சிட்ஸ் சின்னமும்  பொறித்த வெள்ளிக்காசு ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இதோ இங்கே. மிகவும் சந்தோஷமாக இருந்தது.


ஒவ்வொரு மாதமும் அந்த ஏஜண்ட் என்னிடம் வந்து பணத்தை வசூல் செய்து போவார். என்னைப்போல பலரிடமும் மொத்தமாக வசூல் ஆகும் தொகையை சென்னைக்கு ஒரே DD யாக வாங்கி அனுப்பிவிடுவார். 

ஒவ்வொரு மாதமும் ஏலம் கேட்கலாமா? ஏலச்சீட்டை தள்ளி எடுக்கலாமா? குடும்பத்தில் ஏதாவது அவசர செலவுகள் இருக்கிறதா? என என்னைக்கேட்பார். 

சும்மா இல்லாமல் நான், ஏழாவது மாதத்தில் ஏலம் கேட்கச்சொல்லி சொன்னேன். ரூ. 3000 தள்ளி ரூ. 7000 கிடைத்தால் எடுத்துக்கொள்வதாக சம்மதக்கடிதம் எழுதி அவரிடம் கொடுத்து விட்டேன். 

அதுபோலவே ஏலம் கேட்ட பலநபர்களில், குலுக்கல் முறையில் என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், ரூ 7000 சீட்டுப்பணத்தை வாங்கிக்கொள்ள, ஏற்கனவே இதுபோல சீட்டுக்கட்டி வரும், இரண்டு தனி நபர் ஜாமீன் வேண்டும் எனவும் எனக்கு சென்னை ஸ்ரீராம் சிட்ஸ்லிருந்து  கடிதம் வந்தது. 

எனக்கு அந்த நேரத்தில் அந்தப்பணம் தேவைப்படாததாலும், இரண்டு தனி நபர் ஜாமீனுக்கு யாரிடமும் போய்க்கேட்க எனக்கு விருப்பம் இல்லாததாலும், நான் என்னசெய்வது என்று யோசித்து ஓர் முடிவுக்கு வந்தேன். 

அதாவது அவர்களிடமே,  ஸ்ரீராம் சிட்ஸ் சென்னையிலேயே [ஸ்ரீராம் மோட்டார் ஃபைனான்ஸ் கம்பெனியில்]  அந்தப்பணத்தை மூன்று வருடங்களுக்கு டெபாஸிட்  செய்துகொள்வதாகச் சொல்லி அதற்கான மனுவை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தேன்.  

மனுவைப்பூர்த்தி செய்து அனுப்பும்போது, ஏற்கனவே அவர்கள் எனக்குக் கொடுத்த 50 கிராம் வெள்ளிக்காசுகள் போல மேலும் மூன்று காசுகளாவது, இந்த என் புதிய டெபாஸிட் தொகைக்காக அனுப்பி வைக்கும்படி, ஓர் கோரிக்கைக்கடிதமும் வைத்து அனுப்பினேன்.  

என் கோரிக்கை உடனே அவர்களால் ஏற்கப்பட்டது. FIXED DEPOSIT RECEIPT FOR RS. 7000 உடன் மூன்று 50 கிராம் வெள்ளிக்காசுகளும் REGISTERED POST மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. 



ஒரு வெள்ளிக்காசில் 
தாமரைமலரில் 
நிற்கும்  ஸ்ரீ கெஜலக்ஷ்மி. 



இரண்டாவது வெள்ளிக்காசில்
  ஸ்ரீ வெங்கடாசலபதி .



மூன்றாவது வெள்ளிக்காசில் 
ஸ்ரீ கோதண்டராமர் 
ஸீதை + லக்ஷ்மணன் +  ஹனுமனுடன்.  



ஒரே கல்லில் 
ஒன்றல்ல இரண்டல்ல மூன்றுல்ல 
நான்கு மாங்காய்கள் போல 

அதுவும் ஒரே ஒரு ஏலச்சீட்டில் - 
நான்கு வெள்ளிக்காசுகள்
கிடைக்கப்பெற்றேன்.

அன்று முதல் இன்று வரை என் பணப்பெட்டியில் இந்த வெள்ளிக்காசுகள் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை என்னிடம் வந்தது முதல் இன்று வரை எனக்குப் பணப் பஞ்சம் என்பதே ஏற்பட்டது இல்லை. 

நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

அப்போது நான் 40 மாதங்களிலும் சேர்த்து கட்டிய மொத்தத்தொகை ரூ. 8500 க்கு மேல் இல்லை. ரூபாய் ஏழாயிரத்தை ஏலச்சீட்டில் ஏழாவது மாதம் எடுத்து அதை அவர்களிடமே டெபாஸிட் செய்ததில் மூன்றாண்டுகள் கழித்து கிடைத்த மொத்தத்தொகை  ரூ 10570/-. 

இந்த சிறுசேமிப்பில் நான் முதன் முதலாகச் சேர்ந்ததினால், 40 மாதங்களில் எனக்குக் கிடைத்த நிகர லாபம் ரூ.2070 + நான்கு வெள்ளிக்காசுகள்.

அப்போதெல்லாம் இப்போது போல யாருக்கும் கைநிறைய சம்பளம் தரப்படவில்லை. 

மூன்றாண்டுகள் கழித்து சுளையாக பத்தாயிரம் ரூபாயை என் கண்களால் நான் பார்க்க, 40 மாதங்கள் சிறுகச்சிறுக சீட்டுக்கட்டியுள்ளேன் என்பதை இன்று நினைத்தாலும் மிகவும் வேடிக்கையாகவும், ஆச்சர்யமாகவும் தான் உள்ளது.


அதன் பிறகு திருச்சியிலேயே ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டது.  பிறகு பல ஏலச்சீட்டுகளில் நானும் சேர்ந்துள்ளேன். லட்ச ரூபாய் சீட்டுக்களிலெல்லாம் கூட துணிந்து சேர்ந்துள்ளேன்.   

அந்த நான் சேர்ந்த புதிய சீட்டுக்களுக்கெல்லாம் அவ்வப்போது ஏதேதோ பரிசுப்பொருட்கள் எனக்கு அளித்தார்கள். 

இருந்தாலும் முதன் முதலாக நான் கஷ்டப்பட்டுச் சேர்ந்த மிகச்சிறிய Rs. 250 x 40 Months = Rs. 10000 என்ற சீட்டின் மூலம்  நான்கு வெள்ளிக்காசுகள் கிடைத்தது தான் சந்தோஷமான நினைவலைகளாக இன்றும் உள்ளது. 

அந்த நான்கு வெள்ளிக்காசுகளும் இன்றும் என்னிடம் பொக்கிஷங்க்ளாகவே உள்ளன. 





தொடரும்

இந்த ’பொக்கிஷம்’ பதிவின் தொடர்ச்சி 
05.04.2013 வெள்ளிக்கிழமையன்று
வெளியிடப்படும்.


மாதா, பிதா, குரு, தெய்வம் 
என்று சொல்வார்கள் அல்லவா!

இனிவரும் என் பொக்கிஷப்பதிவுகளில்
அவர்களும் ஆங்காங்கே வரக்கூடும்.

oooooOooooo


 நாம் இன்று மறந்துபோன 
ஒருசில நாணயங்கள் 
இதோ இங்கே!
[உங்கள் ஞாபகத்திற்காக]


1960 இல் வெளியிட்டுள்ள 
ஒரு நயா பைசா


1 பைசா [2 வடிவங்களில்]
 2 பைசா [2 வடிவக்களில்]
 3 பைசா, 
5 பைசா,
10 பைசா [3 வடிவங்களில்]
20 பைசா [தாமரைப்பூ போட்டது]
 1/4 ரூபாய் [25 பைசாவுக்கு சமமானது]
 1/2 ரூபாய் [50 பைசாவுக்கு சமமானது]

நடுவில் உள்ளது தான் ஓட்டைக்காலணா


1/2 ரூபாய் நாணயம் 
[அதாவது 50 பைசாவுக்குச் சமமானது]
 தாமரைப்பூ போட்ட 20 பைசா, 
கெட்டியான நெளிநெளியான 10 பைசா
3 பைசா, 2 பைசா, 1 பைசா


சமீபத்தில் நம்மிடையே புழக்கத்தில் இருந்த 25 பைசா

-oOo- 


அடுத்து பலியாகத் 
தயாராகக் காத்திருக்கும் 
[இன்று நம்மிடைய புழக்கத்தில் உள்ள] 
50 பைசா நாணயங்கள் இதோ:






என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்




116 கருத்துகள்:

  1. கிடைத்த நான்கு வெள்ளிக்காசுகளும் பொக்கிசங்கள் தான்... மறந்துபோன நாணயங்களும் பொக்கிசங்கள் தான்...

    சிரமப்படும் சிலருக்கு உங்களால் முடிந்தயளவு செய்யும் உதவி தான் மிகச்சிறந்த பொக்கிசம்... அதற்கு அந்த நான்கு பொக்கிசங்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் March 31, 2013 at 5:44 AM

      வாருங்கள், வணக்கம். தங்களின் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.

      //கிடைத்த நான்கு வெள்ளிக்காசுகளும் பொக்கிசங்கள் தான்... மறந்துபோன நாணயங்களும் பொக்கிசங்கள் தான்...

      சிரமப்படும் சிலருக்கு உங்களால் முடிந்தயளவு செய்யும் உதவி தான் மிகச்சிறந்த பொக்கிசம்... அதற்கு அந்த நான்கு பொக்கிசங்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  2. தங்களின் சேமிப்பு அனுபவங்கள் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு பாடம்.
    பழைய நாணய கலெக்ஷன் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. T.N.MURALIDHARAN March 31, 2013 at 5:52 AM

      வாருங்கள், வணக்கம்.

      //தங்களின் சேமிப்பு அனுபவங்கள் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு பாடம். பழைய நாணய கலெக்ஷன் சூப்பர்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  3. உங்கள் சேமிப்புகள் இப்போது உள்ள தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்.
    சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் ஆடம்பர செலவுகள் செய்யாமல் அவசிய செலவுசெய்து சேமித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, குடும்பத்துடன் ஓய்வுக்காலத்தில் நிம்மதியாய் மகிழ்ச்சியாக வாழ்வதை இளைய தலைமுறைகள் உங்களிடம் கற்றுக் கொள்ளலாம்.
    ஸ்ரீராம் சிறு சேமிப்புக்கு கொடுத்த நாணயங்கள், மற்றும் இப்போது புழக்கத்தில் இல்லாத நாணயங்கள் சேகரிப்பு அனைத்தும் அருமை.
    உங்கள் பொக்கிஷபதிவு மிக நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு March 31, 2013 at 5:57 AM

      வாருங்கள், வணக்கம் மேடம்.

      //உங்கள் சேமிப்புகள் இப்போது உள்ள தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும். சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் ஆடம்பர செலவுகள் செய்யாமல் அவசிய செலவுசெய்து சேமித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, குடும்பத்துடன் ஓய்வுக்காலத்தில் நிம்மதியாய் மகிழ்ச்சியாக வாழ்வதை இளைய தலைமுறைகள் உங்களிடம் கற்றுக் கொள்ளலாம்.//

      மிகவும் சந்தோஷம்.

      //ஸ்ரீராம் சிறு சேமிப்புக்கு கொடுத்த நாணயங்கள், மற்றும் இப்போது புழக்கத்தில் இல்லாத நாணயங்கள் சேகரிப்பு அனைத்தும் அருமை. உங்கள் பொக்கிஷபதிவு மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  4. உண்மையில் பொக்கிஷங்கள் மிக அற்புதம்! பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. March 31, 2013 at 6:02 AM

      வாருங்கள், வணக்கம்.

      //உண்மையில் பொக்கிஷங்கள் மிக அற்புதம்! பகிர்விற்கு நன்றி ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  5. முதன் முதலாக சிறு சேமிப்பில் சேர்ந்து உங்கள் வீட்டிற்கு நாணய வடிவில் வந்த நான்கு தெய்வங்கள்.. நான்கு பேருக்கு உதவும் அளவு அந்த தெய்வங்களின் அருட் கடாட்ஷம் கிடைப்பது இன்றளவும் நிச்சயமாக அந்த நாணயங்கள் உங்களுக்கு பெரும் பொக்கிஷம்தான்..பத்திரமாக இருக்கட்டும். உங்கள் சந்ததிகளுக்கும் அந்த கடாஷம் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா ராணி March 31, 2013 at 6:18 AM

      வாருங்கள் மேடம், வணக்கம்.

      //முதன் முதலாக சிறு சேமிப்பில் சேர்ந்து உங்கள் வீட்டிற்கு நாணய வடிவில் வந்த நான்கு தெய்வங்கள்.. நான்கு பேருக்கு உதவும் அளவு அந்த தெய்வங்களின் அருட் கடாட்ஷம் கிடைப்பது இன்றளவும் நிச்சயமாக அந்த நாணயங்கள் உங்களுக்கு பெரும் பொக்கிஷம்தான்.//

      சந்தோஷம்.

      //.பத்திரமாக இருக்கட்டும். உங்கள் சந்ததிகளுக்கும் அந்த கடாஷம் கிடைக்கட்டும்.//

      ஆகட்டும். மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  6. நான் கூட இந்த ஸ்ரீராம் சிட் ஃபண்ட் காசுகள் நிறைய சேர்த்து வைத்தேன். சேமிப்பிற்கு வழிகாட்டியாக இருந்தது. அதிருஷ்ட காசுகள் அவை.தவழும் கிருஷ்ணர்,பிள்ளையார் முதல், பலகடவுளின் உருவங்கள் பொதிந்த காசுகள். பொக்கிஷங்களில் சேமிப்புக்கு கிடைத்த பொக்கிஷங்கள், நன்றாக இருக்கிறது.
    மற்றும்,பழைய நாணயங்களின் அணி வகுப்பும் அருமை.ரிடயராகப்போகும் காசுகளும் பாவம். ஆசிகளுடனும்,அன்புடனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi March 31, 2013 at 6:37 AM

      வாங்கோ, அநேக நமஸ்காரம்.

      //நான் கூட இந்த ஸ்ரீராம் சிட் ஃபண்ட் காசுகள் நிறைய சேர்த்து வைத்தேன். சேமிப்பிற்கு வழிகாட்டியாக இருந்தது. //

      முறையான சேமிப்பும் இல்லாமல் ஆங்காங்கே தனி நபர்களிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி, வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வந்த என்னுடைய சில உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நான் இதுபோன்று ஸ்ரீராம் சிட்ஸ் இல் சேரச்சொல்லி ஆலோசனைகள் சொல்லியுள்ளேன். அவர்களும் அதுபோலச் சேர்ந்து, சேமிப்பினால் இன்று உயர்ந்து, என்னிடமும் மிகவும் நன்றியுடன் இருக்கிறார்கள்.

      //அதிருஷ்ட காசுகள் அவை. தவழும் கிருஷ்ணர்,பிள்ளையார் முதல், பலகடவுளின் உருவங்கள் பொதிந்த காசுகள். பொக்கிஷங்களில் சேமிப்புக்கு கிடைத்த பொக்கிஷங்கள், நன்றாக இருக்கிறது.//

      ஆம் அதிர்ஷ்டமான காசுகள் தான் அவை. மகிழ்ச்சி.

      //மற்றும்,பழைய நாணயங்களின் அணி வகுப்பும் அருமை. ரிடயராகப்போகும் காசுகளும் பாவம். ஆசிகளுடனும்,அன்புடனும்//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆசிகளுக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்

      நமஸ்காரங்களுடன்
      கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  7. கிடைத்த நான்கு வெள்ளிக்காசுகளும் பொக்கிசங்கள் தான்... மறந்துபோன நாணயங்களும் பொக்கிசங்கள் தான்...

    பொக்கிஷங்கள் மிக அற்புதம்! பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VijiParthiban March 31, 2013 at 6:50 AM

      வாருங்கள், வணக்கம்.

      //கிடைத்த நான்கு வெள்ளிக்காசுகளும் பொக்கிசங்கள் தான்... மறந்துபோன நாணயங்களும் பொக்கிசங்கள் தான்... பொக்கிஷங்கள் மிக அற்புதம்! பகிர்விற்கு நன்றி ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  8. இதே ஸ்ரீராம் சிட்ஸில் சேர்ந்து 38 இல் 12,000 ரூபாய்க்கு 4 பவுனில் மனைவிக்கு சங்கிலி வாங்கித் தந்த நினைவு எனக்கும் வந்தது, உங்கள் பதிவைப் படித்ததும். சேமிப்பின் அருமை சொல்லும் இந்தப் பதிவு பொக்கிஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். March 31, 2013 at 7:10 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //இதே ஸ்ரீராம் சிட்ஸில் சேர்ந்து 38 இல் 12,000 ரூபாய்க்கு 4 பவுனில் மனைவிக்கு சங்கிலி வாங்கித் தந்த நினைவு எனக்கும் வந்தது, உங்கள் பதிவைப் படித்ததும்.//

      இதைக் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      38வது மாதத்திலா ..... ஸ்ரீராம்.?

      8 கிராம் கொண்ட ஒரு பவுன் ரூ. 3000 வீதம் வாங்கியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      இன்று ஒரு கிராம் தங்கமே ரூ. 3000த்தை நெருங்கிக் கொண்டு உள்ளது.

      //சேமிப்பின் அருமை சொல்லும் இந்தப் பதிவு பொக்கிஷம்.//

      மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்.

      நீக்கு
    2. //இதே ஸ்ரீராம் சிட்ஸில் சேர்ந்து 38 இல் 12,000 ரூபாய்க்கு 4 பவுனில் ....//

      //38வது மாதத்திலா ..... ஸ்ரீராம்.?//

      மன்னிக்கவும்.... தவறை இப்போதுதான் கவனிக்கிறேன். 98 அதாவது 1998 என்று வந்திருக்க வேண்டும்.

      நீக்கு
    3. ஸ்ரீராம்.April 2, 2013 at 1:19 AM

      //இதே ஸ்ரீராம் சிட்ஸில் சேர்ந்து 38 இல் 12,000 ரூபாய்க்கு 4 பவுனில் ....//

      *****38வது மாதத்திலா ..... ஸ்ரீராம்.?*****

      //மன்னிக்கவும்.... தவறை இப்போதுதான் கவனிக்கிறேன். 98 அதாவது 1998 என்று வந்திருக்க வேண்டும்.//

      OK OK அதனால் பராவாயில்லை.

      பாருங்கோ 15 வருடத்தில் கிட்டத்தட்ட 8 மடங்கு ஏறியுள்ளது.

      நீக்கு
  9. 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். அவர்களின் வயது முறையே பத்து, எட்டு, மூன்று. என் வரவுகளும் வீட்டுச் செலவுகளும் மிகச்சரியாக இழுத்துக்கோ பறிச்சுக்கோ என இருந்த காலக்கட்டம்.

    நீங்களும் வாழ்க்கையில் படிப்படியாகத்தான் முன்னேறி வந்திருக்கீங்க இல்லியா? உங்க அனுபவங்கள் பலருக்கும் நல்ல ஒரு படிப்பினையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர்March 31, 2013 at 7:48 AM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

      *****1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். அவர்களின் வயது முறையே பத்து, எட்டு, மூன்று. என் வரவுகளும் வீட்டுச் செலவுகளும் மிகச்சரியாக இழுத்துக்கோ பறிச்சுக்கோ என இருந்த காலக்கட்டம்*****.

      //நீங்களும் வாழ்க்கையில் படிப்படியாகத்தான் முன்னேறி வந்திருக்கீங்க இல்லியா? உங்க அனுபவங்கள் பலருக்கும் நல்ல ஒரு படிப்பினையாக இருக்கும்//

      “இளமையில் வறுமை”யை நன்றாக அனுபவித்து வளர்ந்தவன் நான்.

      சத்தியம், தர்மம், நியாயம், நீதி, பாவம், புண்ணியம், கெளரவம் எல்லாம் பார்த்து என்னை வளர்த்தவர்கள் என் பெற்றோர்கள்.

      நான் எழுதியுள்ள “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற பதிவினை தயவுசெய்து படித்துப்பாருங்கோ.

      அதில் என் இளமைக்காலத்தைப்பற்றியும், ‘இளமையில் வ்றுமை’ என்னை பாடாய்ப்படுத்தியது பற்றியும் ஓரளவுக்கு மட்டும் எழுதியுள்ளேன். நல்ல சுவாரஸ்யமாக இருக்கும்.

      படித்து விட்டு ஒவ்வொரு பகுதிக்கும் கருத்து எழுதுங்கோ.

      http://gopu1949.blogspot.in/2012/03/1.html [பகுதி-1 of 7]

      http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html [இறுதிப்பகுதி-8]

      என் வாழ்க்கையின் கஷ்டமான,கசப்பான பகுதிகளை நான் எங்கும் அதிகமாக விவரிப்பதோ, யாருக்கும் தெரிவிப்பதோ இல்லை. மகிழ்ச்சிகளை மட்டுமே தனியாகப்பிரித்து என் பதிவுகளில் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.

      நீக்கு
  10. என் தாயார் உள்பட எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் ஆறு நபர்கள். என் ஒருவனின் வருமானம் மட்டுமே. வேறு ஏதும் சொத்தோ சுகமோ கிடையாது. அலுவலகத்திலோ, வேறு தனி நபர்களிடமோ எக்காரணம் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.

    உண்மையிலேயே நல்ல கொள்கை தான்.உங்க ஒரு ஆள் வருமானத்தில்
    குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்திருக்கீங்க.எவ்வளவு கஷ்ட்டங்கள் பட்டிருப்பீங்க இல்லியா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 31, 2013 at 7:52 AM

      //என் தாயார் உள்பட எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் ஆறு நபர்கள். என் ஒருவனின் வருமானம் மட்டுமே. வேறு ஏதும் சொத்தோ சுகமோ கிடையாது. அலுவலகத்திலோ, வேறு தனி நபர்களிடமோ எக்காரணம் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.//

      //உண்மையிலேயே நல்ல கொள்கை தான்.உங்க ஒரு ஆள் வருமானத்தில் குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்திருக்கீங்க. எவ்வளவு கஷ்டங்கள் பட்டிருப்பீங்க இல்லியா.//

      திட்டமிட்டு வாழ்ந்தால் ஒரு கஷ்டமும் இல்லை. வரவுக்குள் செலவை அடக்க வேண்டும். அல்லது செலவுக்குத்தகுந்த படி வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

      அனாவஸ்ய செலவுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. உணவு, உடை, இருப்பிடம், குழந்தைகளின் கல்வி போன்ற அத்யாவஸ்ய செலவுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அதன் பிறகு சேமிப்பே நம் முதல் செலவாக இருக்க வேண்டும்.

      நீக்கு
  11. பொக்கிஷங்கள் தொடர் படிக்கப் ப‌டிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நீங்க‌ள் இவற்றையெல்லாம் காலங்காலமாக பத்திரமாகப் பாதுகாத்து வந்திருப்பதைத்தான் மனதார பாராட்ட வேண்டும். ஓட்டைக்காலணா கூட உங்கள் பொக்கிஷ அறையில் பத்திரமாக இருக்கிற‌து! இந்த மாதிரி பொக்கிஷ நினைவறைகளைத் திறக்க முதன் முதலாக சாவி கொடுத்த சகோதரி ஆசியாவையும் இங்கே பாராட்டியே தீர வேண்டும்!!

    உலமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் March 31, 2013 at 7:53 AM

      வாருங்கள், வணக்கம்.

      //பொக்கிஷங்கள் தொடர் படிக்கப் ப‌டிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நீங்க‌ள் இவற்றையெல்லாம் காலங்காலமாக பத்திரமாகப் பாதுகாத்து வந்திருப்பதைத்தான் மனதார பாராட்ட வேண்டும். ஓட்டைக்காலணா கூட உங்கள் பொக்கிஷ அறையில் பத்திரமாக இருக்கிற‌து!//

      மிகவும் சந்தோஷம்.

      //இந்த மாதிரி பொக்கிஷ நினைவறைகளைத் திறக்க முதன் முதலாக சாவி கொடுத்த சகோதரி ஆசியாவையும் இங்கே பாராட்டியே தீர வேண்டும்!!//

      சகோதரி திருமதி ஆசியா ஓமர் மட்டுமல்ல, சகோதரி. திருமதி ஏஞ்சலின் அவர்களும் தான். ஆளுக்கு ஒரு சாவியாக என்னிடம் கொடுத்து என்னை இரட்டைப்பூட்டு அதிகாரியாக [DOUBLE LOCKING OFFICER] ஆக்கி விட்டனர். ;)

      //உளமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், உளமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  12. நவராத்திரி சமயத்தில் சேர்த்து விட்டதால் சுமார் 50 கிராம் எடையுள்ள ஒருபுறம் மட்டும் பிள்ளையார் படமும், மறுபுறம் ஸ்ரீராம் சிட்ஸ் சின்னமும் பொறித்த வெள்ளிக்காசு ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இதோ இங்கே. மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    அந்த வெள்ளிக்காசு அன்பளிப்பு பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்த வெள்ளிக்காசுகள் வந்த நேரம் உங்களுக்கு மிக நல்ல நேர மாக அமைந்து விட்டது. எவ்வளவு நல்ல விஷயம் இல்லியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 31, 2013 at 7:58 AM

      *****நவராத்திரி சமயத்தில் சேர்த்து விட்டதால் சுமார் 50 கிராம் எடையுள்ள ஒருபுறம் மட்டும் பிள்ளையார் படமும், மறுபுறம் ஸ்ரீராம் சிட்ஸ் சின்னமும் பொறித்த வெள்ளிக்காசு ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இதோ இங்கே. மிகவும் சந்தோஷமாக இருந்தது.*****

      //அந்த வெள்ளிக்காசு அன்பளிப்பு பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்த வெள்ளிக்காசுகள் வந்த நேரம் உங்களுக்கு மிக நல்ல நேர மாக அமைந்து விட்டது. எவ்வளவு நல்ல விஷயம் இல்லியா?//

      ஆம், மிகவும் நல்ல விஷயமே தான். நல்ல நேரம் தான். சந்தோஷம் நீடிக்கவே செய்தது.

      நீக்கு
  13. என் கோரிக்கை உடனே அவர்களால் ஏற்கப்பட்டது. FIXED DEPOSIT RECEIPT FOR RS. 7000 உடன் மூன்று 50 கிராம் வெள்ளிக்காசுகளும் REGISTERED POST மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

    சிறுக ச்சிறுக சேமித்ததொகையை பிக்சட்டில் போட்டது ரொம்ப நல்ல விஷயம். அதுக்காகவும் வெள்ளிக்காசு அன்பளிப்பு கிடைக்கப்பற்றது இன்னும் சூப்பர். நீங்க தலைப்பில் சொல்லி உள்ள படி ஒரேகல்லில் நான்கு மாங்காய்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 31, 2013 at 8:02 AM

      *****என் கோரிக்கை உடனே அவர்களால் ஏற்கப்பட்டது. FIXED DEPOSIT RECEIPT FOR RS. 7000 உடன் மூன்று 50 கிராம் வெள்ளிக்காசுகளும் REGISTERED POST மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. *****

      //சிறுகச்சிறுக சேமித்ததொகையை பிக்சட்டில் போட்டது ரொம்ப நல்ல விஷயம். அதுக்காகவும் வெள்ளிக்காசு அன்பளிப்பு கிடைக்கப்பற்றது இன்னும் சூப்பர். நீங்க தலைப்பில் சொல்லி உள்ள படி ஒரேகல்லில் நான்கு மாங்காய்கள்தான்.//

      அதைவிட சூப்பரோ சூப்பர் என்ன தெரியுமா?

      ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் போல, இந்த என் ஒரே பதிவுக்கு ‘பூந்தளிர்’ இடமிருந்து எனக்குக்கிடைத்துள்ள 5 தனித்தனிக் கருத்துக்கள் [பின்னூட்டங்கள்] தானாக்கும். ஹுக்க்க்கும்! ;)))))

      நீக்கு
  14. வெள்ளிக்காசுகள் மூலம் பல கடவுள் கள் உங்களைத்தேடி அருள் செய்ய வந்துட்டாங்க போல. பழைய நாணய கலெக்‌ஷன்ஸ் எல்லாமே சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 31, 2013 at 8:05 AM

      //வெள்ளிக்காசுகள் மூலம் பல கடவுள்கள் உங்களைத்தேடி அருள் செய்ய வந்துட்டாங்க போல.//

      ஆமாம். ஆமாம். வெள்ளிக்காசுகள் மூலம் பல கடவுள்கள் என்னைத்தேடி அருள் செய்ய வந்தாங்கோ, அப்போது.

      இதோ தங்கக்காசுகளாக [அம்பாளாக] அடுத்து அருள் செய்ய வந்திருக்காங்கோ இப்போது இங்கே கீழே >> ;)))))

      //பழைய நாணய கலெக்‌ஷன்ஸ் எல்லாமே சூப்பர்.//

      ரொம்ப சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகழகான சின்னச்சின்ன சூப்பரான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், பூந்தளிர்.

      நீக்கு
  15. நான்கு வெள்ளிக்காசுகளும் பொக்கிஷங்க்ளாக
    சந்தோஷம் தருவதற்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 31, 2013 at 8:29 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      //நான்கு வெள்ளிக்காசுகளும் பொக்கிஷங்க்ளாக சந்தோஷம் தருவதற்கு வாழ்த்துகள்...//

      தங்களின் தங்கத்தாமரைகள் அம்பாள்போல இங்கு பொக்கிஷங்களாக வருகை தந்து வாழ்த்தியுள்ளது மிகுந்த சந்தோஷத்தினைத் தருகிறது.

      நீக்கு
  16. நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

    மகிழ்ச்சி மலர்விக்கும் இனிய உயர்விற்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 31, 2013 at 8:30 AM

      *****நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே*****.

      //மகிழ்ச்சி மலர்விக்கும் இனிய உயர்விற்கு பாராட்டுக்கள்.//

      இனிய உறவுகளுக்கும், உயர்வுகளுக்கும் காரணமாக அமையும் இதுபோன்ற உற்சாகம் மிக்க பாராட்டுக்களே மகிழ்ச்சியை மலர்விப்பதாக உள்ளது..;)

      நீக்கு
  17. அடுத்து பலியாகத்
    தயாராகக் காத்திருக்கும்
    [இன்று நம்மிடைய புழக்கத்தில் உள்ள]
    50 பைசா நாணயங்கள் ...

    இனி நாணய சேகரிப்புக்கு மட்டுமே ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 31, 2013 at 8:31 AM

      *****அடுத்து பலியாகத் தயாராகக் காத்திருக்கும் [இன்று நம்மிடைய புழக்கத்தில் உள்ள] 50 பைசா நாணயங்கள் ...*****

      //இனி நாணய சேகரிப்புக்கு மட்டுமே ..//

      ஆமாம். வெகு அழகாகவே சொல்லி விட்டீர்கள். மகிழ்ச்சி ;)

      நீக்கு
  18. ஒரு பொக்கிஷபதிவு தொடர் பதிவு பொக்கிஷ பதிவு போலலல்லவா இருக்கிறது.

    இவ்வளவு பத்திரமாக வைத்து இருக்கீங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *Chennai Plaza - சென்னை ப்ளாசா* March 31, 2013 at 8:32 AM

      வாருங்கள், வணக்கம்.

      //ஒரு பொக்கிஷபதிவு தொடர் பதிவு பொக்கிஷ பதிவு போலலல்லவா இருக்கிறது.//

      எப்படியோ தலைப்புக்கு ஏற்றவாறு, தங்களுக்கும் இவைகள் பொக்கிஷமாகத் தோன்றுவதாகச் சொல்வதில் எனக்கும் மகிழ்ச்சியே!

      //இவ்வளவு பத்திரமாக வைத்து இருக்கீங்கள்//

      பத்திரமாக எங்கோ வீட்டில் ஆங்காங்கே சிதறித்தான் இருந்தன. பதிவுக்காக வேண்டி நோண்டி தோண்டி எடுக்கப்பட்ட புதையல்கள் இவை.

      நீக்கு
  19. மூன்றாண்டுகள் கழித்து சுளையாக பத்தாயிரம் ரூபாயை என் கண்களால் நான் பார்க்க, 40 மாதங்கள் சிறுகச்சிறுக சீட்டுக்கட்டியுள்ளேன் என்பதை இன்று நினைத்தாலும் மிகவும் வேடிக்கையாகவும், ஆச்சர்யமாகவும் தான் உள்ளது.

    சிறு துளி பெரு வெள்ளமாக அப்போது மகிழ்ச்சி அளித்திருக்கும் ..
    மலரும் நினைவுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 31, 2013 at 8:34 AM

      *****மூன்றாண்டுகள் கழித்து சுளையாக பத்தாயிரம் ரூபாயை என் கண்களால் நான் பார்க்க, 40 மாதங்கள் சிறுகச்சிறுக சீட்டுக்கட்டியுள்ளேன் என்பதை இன்று நினைத்தாலும் மிகவும் வேடிக்கையாகவும், ஆச்சர்யமாகவும் தான் உள்ளது.*****

      //சிறு துளி பெரு வெள்ளமாக அப்போது மகிழ்ச்சி அளித்திருக்கும் ..மலரும் நினைவுகள்...//

      ஆமாம். மேடம். ஒவ்வொன்றுமே மலரும் நினைவுகள் தான்.

      அந்தக்காலக்கட்டத்தில் சிறு துளிப் பெருவெள்ளமாகவே அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது என்பது உண்மையே.

      1990 க்குப்பிறகே என் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.

      ஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம் பொங்க ஆரம்பித்தது.

      FINANCE MANAGEMENT இல் மிகப்பெரிய ஆளானேன்.

      ஏழைபாழைகள் பலருக்கும் FINANCE CONSULTANT ஆக இலவச சேவைகள் செய்தேன். பல குடும்பங்கள் இதனால் பிழைத்தன. முன்னுக்கு வந்தன.

      இன்றும் அவர்கள் [கணவன் மனைவி இருவரும்] என்னை நேரில் சந்தித்தால் கையெடுத்துக்கும்பிடுகிறார்கள்.

      இன்றும் பல லட்சங்களை தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு, எங்கு முதலீடு செய்யலாம் என என்னைக்கேட்டு வருபவர்கள் சிலர் உள்ளனர்.

      முதலுக்கு முழுப்பாதுகாப்பு + அதிக வருமானம் + வரிச்சலுகை + அவர்களின் உடனடித்தேவைகள் [உதாரணமாக மகளின் திருமணம் போன்றவை] இவைகளையெல்லாம் தீர விசாரித்து, அவரவர்களுக்கு ஏற்றவாறு ஒருசில ஆலோசனைகள் சொல்லி அனுப்புவது உண்டு.

      அன்று 40 மாதங்கள் குருவி சேர்ப்பது போல சேர்த்துத்தான் என்னால் ரூபாய் 10000 என்பதைக் கண்ணால் கண்டு மகிழ முடிந்தது.

      இன்று என் வீட்டுக்கு 2 + 2 = 4 மாத மின்கட்டணம் கட்டக்கூட அந்த ரூ 10000 போதாமல் உள்ளது.

      இப்போதெல்லாம் பணத்திற்கு அப்போது இருந்த மதிப்பு இல்லை.

      இன்று என்னதான் நம்மிடம் செல்வம் சேர்ந்திருந்தாலும், போதும் என்ற மனத்திருப்தியும் வராமல் தான் உள்ளது.

      மேலும் மேலும் எதை எதையோ [நிம்மதிகளை] இழந்து எதை எதையோ [துக்கங்களை] சேர்த்துக்கொண்டு தான் வருகிறோம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான பல கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டுள்ளதற்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  20. நல்ல பகிர்வு தொடருங்கள்..பொக்கிஷங்களின் மதிப்பு என்றும் குறைவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar March 31, 2013 at 9:08 AM

      வாருங்கள் மேடம், வணக்கம்.

      //நல்ல பகிர்வு தொடருங்கள்..பொக்கிஷங்களின் மதிப்பு என்றும் குறைவதில்லை..//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  21. அனைவரையும் ஊக்குவிக்கும் பொக்கிஷங்கள் உங்களுடையவை. ஒரு நல்ல மனிதர் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம்.சேமிப்பு என்பது மிகப் பெரிய விஷயம்.
    நாணயங்கள் எப்பவும் உங்கள் குடும்ப க்ஷேமத்தை வளர்க்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் March 31, 2013 at 9:15 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அனைவரையும் ஊக்குவிக்கும் பொக்கிஷங்கள் உங்களுடையவை. ஒரு நல்ல மனிதர் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம்.சேமிப்பு என்பது மிகப் பெரிய விஷயம்.//

      மிகவும் சந்தோஷம்.

      //நாணயங்கள் எப்பவும் உங்கள் குடும்ப க்ஷேமத்தை வளர்க்கட்டும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆத்மார்த்தமான ஆசிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  22. சேமிப்பின் மகத்துவத்தை உங்கள் பதிவு விளக்குகிறது.
    அந்தக் காலத்தில் நீங்கள் சொல்வது போல் பத்தாயிரம் ருபாய் என்பது மிகப் பெரிய தொகை. 80களில் ரூபாயின் மதிப்பை அப்படியே வெளிபடுத்துகிறது உங்கள் பதிவு.
    உங்கள் பொக்கிஷ காசுகள் மிகவும் அதிர்ஷ்டக் காசுகள் தான்.
    பலரை உதவும் நிலைக்கு உங்களைக் கொண்டு வந்த காசுகளுக்கு
    நன்றி.
    அழகான பொக்கிஷப் பகிர்வு , தொடருங்கள் உங்கள் பொக்கிஷங்களை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam March 31, 2013 at 9:34 AM

      வாருங்கள், வணக்கம்.

      //சேமிப்பின் மகத்துவத்தை உங்கள் பதிவு விளக்குகிறது.//

      சந்தோஷம்.

      //அந்தக் காலத்தில் நீங்கள் சொல்வது போல் பத்தாயிரம் ருபாய் என்பது மிகப் பெரிய தொகை. 80களில் ரூபாயின் மதிப்பை அப்படியே வெளிபடுத்துகிறது உங்கள் பதிவு.//

      ஆமாம். இது இன்றைய தலைமுறையினருக்கு விளங்கவே விளங்காது. எடுத்த எடுப்பிலேயே 5 Digit 6 Digit Salary யில் அமர்பவர்களால் இதை உணரவும் இயலாது.

      //உங்கள் பொக்கிஷ காசுகள் மிகவும் அதிர்ஷ்டக் காசுகள் தான்.
      பலரை உதவும் நிலைக்கு உங்களைக் கொண்டு வந்த காசுகளுக்கு
      நன்றி.//

      மிக்க மகிழ்ச்சி.

      //அழகான பொக்கிஷப் பகிர்வு , தொடருங்கள் உங்கள் பொக்கிஷங்களை.... //

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  23. பதில்கள்
    1. அமைதிச்சாரல் March 31, 2013 at 11:03 AM

      வாருங்கள், வணக்கம்.

      //விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள்.//

      விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் போன்ற தங்கள் கருத்துக்கும், அன்பான வருகைக்கும் மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  24. சார்... ஐந்து கிராமா ஐம்பது கிராமா?

    அட... என்னிடமும் உள்ளனவே இந்த பழைய நாணயங்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலாமகள் March 31, 2013 at 4:44 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சார்... ஐந்து கிராமா ஐம்பது கிராமா?//

      தங்கள் சந்தேகம் மிகவும் நியாயமானதே. அவர்கள் பிறகு ஒரு காலக்கட்டத்தில் கொடுத்தது 10 கிராம் வெள்ளி நாணயங்கள்.

      அதன் பிறகு அதையும் குறைத்து 5 கிராம் வெள்ளி நாணயங்கள்.
      கொடுக்க ஆரம்பித்தார்கள்.

      அதன் பிறகு வெள்ளிக்காசுகளைப் பொதுவாக நிறுத்தி விட்டு, எவர்சில்வர் பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள் என ஏதேதோ கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

      பழைய வெள்ளிக்காசுகள் இருந்தால் அவற்றை காப்பித்தூள் கடைக்கு எடுத்துச்சென்று எலெக்ட்ரானிக்ஸ் மெஷினில் துல்லியமாக எடை போட்டுப்பார்த்தால் மட்டுமே, தெரியும்.

      இவ்வாறான காசுகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான எடையில் தான் இருக்கக்கூடும். பொதுவாக 10 கிராம் அல்லது 5 கிராம் தான் பலரிடமும் இருக்கும்.

      //அட... என்னிடமும் உள்ளனவே இந்த பழைய நாணயங்கள்...!//

      அப்படியா மகிழ்ச்சி. உடனே எல்லாவற்றையும், புகைப்படம் எடுத்து பதிவாகப்போட்டு விடுங்கள்.

      நீக்கு
  25. உங்கள் சேமிப்பு அனுபவங்கள் பயனுள்ளவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... March 31, 2013 at 6:01 PM

      வாருங்கள், வணக்கம்.

      //உங்கள் சேமிப்பு அனுபவங்கள் பயனுள்ளவை...//

      தங்களின் அன்பான வருகைக்கும், பயனுள்ள கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  26. பொக்கிஷங்கள் என்றும் இனிப்பவையே/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமலன் March 31, 2013 at 6:49 PM

      வாருங்கள், வணக்கம்.

      //பொக்கிஷங்கள் என்றும் இனிப்பவையே//

      தங்களின் அன்பான வருகைக்கும், இனிப்பான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  27. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

    // ** 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். அவர்களின் வயது முறையே பத்து, எட்டு, மூன்று. என் வரவுகளும் வீட்டுச் செலவுகளும் மிகச்சரியாக இழுத்துக்கோ பறிச்சுக்கோ என இருந்த காலக்கட்டம். ** //

    அன்றைய சூழலில், ஒரு நடுத்தர குடும்பம் இருந்த நிலைமையை நாலே வரிகளில் விளக்கமாக சொல்லிவிட்டீர்கள்.


    // ** நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.**//

    தம்மின் மெலியாரை தமதுடமை நோக்கி அம்மா பெரிதென்று அகமகிழ்க – என்ற வாக்கியத்தை நினைவில் கொணர்ந்தது.

    // ** அப்போதெல்லாம் இப்போது போல யாருக்கும் கைநிறைய சம்பளம் தரப்படவில்லை. ** //

    அந்தநாளில் கைநிறைய சம்பளம் இல்லை. ஆனாலும் ஒரு திருப்தி, போதும் என்ற மனம் இருந்தது.

    // ** 1 பைசா [2 வடிவங்களில்] 2 பைசா [2 வடிவக்களில்]
    3 பைசா, 5 பைசா, 10 பைசா [3 வடிவங்களில்]
    20 பைசா [தாமரைப்பூ போட்டது]
    1/4 ரூபாய் [25 பைசாவுக்கு சமமானது]
    1/2 ரூபாய் [50 பைசாவுக்கு சமமானது]
    நடுவில் உள்ளது தான் ஓட்டைக்காலணா ** //

    அந்தக் கால நாணயங்களைப் பார்த்தவுடன் அந்த காசுகளுக்கு அன்றைக்கு கிடைத்த பொருட்கள், தின்பண்டங்கள் ஞாபகம் வந்தன. ஓட்டைக் காலணாக்களை கைவிரல்களில் ( மிருதங்க வித்வான்களைப் போல) மாட்டிக் கொண்டு விளையாடியதும் ஞாபகம் வந்தது.

    ( உங்களின் அருமையான இந்த பொக்கிஷம் பதிவினை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். இது ஒரு தகவலுக்காக மட்டுமே! )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ March 31, 2013 at 8:07 PM

      //அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!//

      வாருங்கள் ஐயா. அன்பான வணக்கங்கள் ஐயா.

      //அன்றைய சூழலில், ஒரு நடுத்தர குடும்பம் இருந்த நிலைமையை நாலே வரிகளில் விளக்கமாக சொல்லிவிட்டீர்கள்.//

      ஆம் ஐயா, சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பார்களே, அதே நிலைமைதான் ஐயா.

      //தம்மின் மெலியாரை தமதுடமை நோக்கி அம்மா பெரிதென்று அகமகிழ்க – என்ற வாக்கியத்தை நினைவில் கொணர்ந்தது.//

      சந்தோஷம் ஐயா. ஏதோ நம்மால் முடிந்த சிறுசிறு உதவிகள் மட்டுமே செய்ய முடிந்தது, ஐயா.

      //அந்தநாளில் கைநிறைய சம்பளம் இல்லை. ஆனாலும் ஒரு திருப்தி, போதும் என்ற மனம் இருந்தது.//

      நிச்சயமாக ஐயா. இதைச்சொன்ன தங்கள் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும்.

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா [2]

      //அந்தக் கால நாணயங்களைப் பார்த்தவுடன் அந்த காசுகளுக்கு அன்றைக்கு கிடைத்த பொருட்கள், தின்பண்டங்கள் ஞாபகம் வந்தன.//

      அவைகளை நினைத்தாலே இனிக்கிறதே ஐயா!

      //ஓட்டைக் காலணாக்களை கைவிரல்களில் ( மிருதங்க வித்வான்களைப் போல) மாட்டிக் கொண்டு விளையாடியதும் ஞாபகம் வந்தது. //

      ஆமாம். சுண்டிவிரல் மட்டுமே கொஞ்சமாக நுழையும். ;)

      ( உங்களின் அருமையான இந்த பொக்கிஷம் பதிவினை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். இது ஒரு தகவலுக்காக மட்டுமே! )

      மிக்க நன்றி, ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும், மிகவும் பயனுள்ள பாங்கான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      நீக்கு
  28. பதில்கள்
    1. middleclassmadhavi March 31, 2013 at 9:11 PM

      WELCOME Madam ! வாங்கோ, வணக்கம்.

      //Nice treasures and nice savings!//

      தங்களின் அன்பான வருகைக்கும். அழகான VERY NICE கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  29. வாழ்க்கையில் உங்கள் அனுபவங்களை சொல்லும் பொக்கிஷ தொடர் எங்களுக்கு வழிகாட்டியாய் இருக்கும். உங்களின் சேமிப்பு அனுபவங்கள் எங்களை யோசிக்க வைக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு March 31, 2013 at 9:39 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வாழ்க்கையில் உங்கள் அனுபவங்களை சொல்லும் பொக்கிஷ தொடர் எங்களுக்கு வழிகாட்டியாய் இருக்கும்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //உங்களின் சேமிப்பு அனுபவங்கள் எங்களை யோசிக்க வைக்கிறது..//

      பிஸாத்துப்பணம் சுண்டைக்காய் அளவு ரூபாய் பத்தே பத்து ஆயிரம். இதைப்போய் இவ்வளவு கஷ்டப்பட்டு 40 மாதங்களுக்குச் சீட்டுக்கட்டியல்லவா சேமித்துள்ளார், இந்த மனிதர், என்று யோசிக்க வைக்கிறதா? ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  30. என்ன சொல்ல. உங்கள் பொக்கிஷங்களைப் பார்த்து பிரமித்துப்போய் இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI April 1, 2013 at 12:55 AM

      வாங்கோ வணக்கம்.

      //என்ன சொல்ல. உங்கள் பொக்கிஷங்களைப் பார்த்து பிரமித்துப்போய் இருக்கிறேன்//

      நானும் என்ன சொல்ல! நீங்கள் வரவர ஒன்றும் சரியில்லை.

      போன பதிவுக்கும் இந்தப்பதிவுக்கும் வழக்கம் போல் பொக்கிஷமான உங்கள் கருத்துக்களைக்காணோம்.

      ஏனோ தானோ என வருகிறீர்கள். என்னவோ சொல்லணுமே எனச் சொல்லுகிறீர்கள். பிறகு எஸ்கேப் ஆகி விடுகிறீர்கள். ;(

      எப்படி இருந்த நீங்கள் இப்படி ஆகிவிட்டீங்களே என நானும் பிரமித்துப்போய்த்தான் இருக்கிறேன்.

      இருப்பினும் தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  31. கேரளாவில் உள்ள பத்மனாபா கோயிலில் பாதாள அறையில் இருந்த பொக்கிஷங்கள் போல உங்களிடம் உள்ள பொக்கிஷங்களும் என்ன முடியாத அளவில் வந்து கொண்டிருக்கின்றனவே... நீங்கள் தொடர்ந்து வெளியிடும் பொக்கிஷங்களை எல்லாம் ஆட்கள் வைத்து மதிப்பிட்டுவிடலாம். ஆனால் மதிப்பிட முடியாத ஒரு பொக்கிஷம் ஒன்று உண்டென்றால் அது நீங்கள் தான். பதிவுலகில் நீங்கள் ஒரு மதிப்பு மிக்க பொக்கிஷம். பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Avargal Unmaigal April 1, 2013 at 6:21 AM

      வாங்கோ என் அன்புத்தம்பி, தங்கக்கம்பீ , வணக்கம்.

      //கேரளாவில் உள்ள பத்மனாபா கோயிலில் பாதாள அறையில் இருந்த பொக்கிஷங்கள் போல உங்களிடம் உள்ள பொக்கிஷங்களும் எண்ண முடியாத அளவில் வந்து கொண்டிருக்கின்றனவே...//

      அடடா, என்ன ஒரு ஒப்பீடு. ஆனால் சரியில்லை.

      அது ஓர் இமயமலை போல தங்கமலை ரகசியம்.

      என்னுடையது, குழந்தைகள் ஆற்று மணலில் கட்டும் மலை போல.

      //நீங்கள் தொடர்ந்து வெளியிடும் பொக்கிஷங்களை எல்லாம் ஆட்கள் வைத்து மதிப்பிட்டுவிடலாம்.//

      ஆட்களே வேண்டாம். சுண்டைக்காய். நாமே மதிப்பிட்டு விடலாம்.
      .
      //ஆனால் மதிப்பிட முடியாத ஒரு பொக்கிஷம் ஒன்று உண்டென்றால் அது நீங்கள் தான். பதிவுலகில் நீங்கள் ஒரு மதிப்பு மிக்க பொக்கிஷம்.//

      அடடா, ஒரே அடி அடித்து விட்டீர்களே!!!!

      பரந்து விரிந்துள்ள இந்தப்பதிவுலகில் நான் ஓர் மிகச்சாதாரணமானவன் ஸ்வாமீ!.

      // பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்

      நீக்கு
  32. நாணயங்கள் அனைத்துமே அருமை. நான் இதுவரை பார்த்திராத நாணயங்களையும் பார்க்க முடிந்தது. நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி April 1, 2013 at 7:05 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நாணயங்கள் அனைத்துமே அருமை. நான் இதுவரை பார்த்திராத நாணயங்களையும் பார்க்க முடிந்தது. நன்றி சார்.//

      மிகவும் சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  33. உங்கள் பொக்கிஷங்களை பார்க்க ரொம்ப பிரமிப்பா இருக்கு ஐயா...மறந்துபோன அந்த 1 பைசா 2 பைசாக்களை பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.Menaga April 2, 2013 at 1:26 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் பொக்கிஷங்களை பார்க்க ரொம்ப பிரமிப்பா இருக்கு //

      மிகவும் சந்தோஷம்.

      //ஐயா...மறந்துபோன அந்த 1 பைசா 2 பைசாக்களை பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு...//

      மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  34. பொக்கிஷங்கள் தொடர் படிக்கப் ப‌டிக்க மிகவும் ஆச்சரியாமாகவும் ரசிக்கும்படியுமாக இருக்கிறது.

    மிகமிக நிறைந்த அனுபவங்கள் நிறைந்த நல்லதொரு வாழ்காலப் பதிவு.

    ப்ரமிக்கவைக்கும் பதிவு + பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி April 2, 2013 at 3:04 AM

      வாங்கோம்மா, வணக்கம். நல்லா செளக்யமா சந்தோஷமாக இருக்கீங்களா? தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

      //பொக்கிஷங்கள் தொடர் படிக்கப் ப‌டிக்க மிகவும் ஆச்சரியாமாகவும் ரசிக்கும்படியுமாக இருக்கிறது.//

      ரொம்பவும் சந்தோஷம்மா.

      //மிகமிக நிறைந்த அனுபவங்கள் நிறைந்த நல்லதொரு வாழ்காலப் பதிவு.//

      மிக்க மகிழ்ச்சிம்மா.

      //ப்ரமிக்கவைக்கும் பதிவு + பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆச்சர்யமான, ரஸிப்புடன் கூடிய, ப்ரமிக்க வைக்கும் மகிழ்ச்சியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.

      நீக்கு
  35. எத்தனை வகை வகையான நாணயங்கள்!
    ஓட்டை காலனாவைப் பார்த்தவுடன் அந்தக் காலத்துக்கே சென்றுவிட்டேன்.
    'அவர்கள் உண்மைகள்' சொல்லியிருப்பதுபோல ஒரு பொக்கிஷப் பதிவரிடமிருந்து பொக்கிஷம் பொக்கிஷமாகப் பதிவுகள்!
    தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan April 2, 2013 at 3:14 AM

      வாருங்கள், வணக்கம்.

      //எத்தனை வகை வகையான நாணயங்கள்! ஓட்டைக்காலணாவைப் பார்த்தவுடன் அந்தக் காலத்துக்கே சென்றுவிட்டேன்.//

      ஆஹா, தாங்கள் சின்னக்குழந்தையாகவே மாறிவிட்டதை கற்பனை செய்து பார்த்தேன். ;))))) மகிழ்ச்சியாக இருந்தது.

      //'அவர்கள் உண்மைகள்' சொல்லியிருப்பதுபோல ஒரு பொக்கிஷப் பதிவரிடமிருந்து பொக்கிஷம் பொக்கிஷமாகப் பதிவுகள்! தொடரட்டும்! //

      இங்கு திருச்சியில் மண்டையைப்பிளக்கும் வெயில் தினமும் 100 டிகிரியைத்தாண்டி கொளுத்தி வருகிறது.

      இருப்பினும் தங்களின் + ’அவர்கள் உண்மைகள்’ கருத்துக்களால் கொஞ்சம் குளிர்வது போல உணர முடிகிற்து.

      இருவரும் அள்ளி அள்ளி அளித்துள்ள உற்சாக பானங்களுக்கு மிகவும் சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  36. vishukani andru veetil kaanum kani idho inge ungal padhivil malara kaana miga magizchi. interesting collection.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mira April 2, 2013 at 4:18 AM

      வாங்கோ மீரா ... வணக்கம்.

      //vishukani andru veetil kaanum kani idho inge ungal padhivil malara kaana miga magizchi. interesting collection.

      விஷுக்கனி அன்று வீட்டில் காணும் கனி இதோ இங்கே உங்கள் பதிவில் மலரக்காண மிகவும் மகிழ்ச்சி. சுவாரஸ்யமான சேகரிப்புகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மீரா. - அன்புடன் கோபு.

      நீக்கு
  37. ஓட்டை காலனா இப்பொழுதுதான் பார்க்கின்றேன். அருமையான பொக்கிசங்கள்.

    கஜலக்சுமி வந்த வேளை நல்லவேளையாக அமைந்தது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி April 2, 2013 at 7:28 AM

      வாருங்கள், வணக்கம்.

      //ஓட்டை காலணா இப்பொழுதுதான் பார்க்கின்றேன். அருமையான பொக்கிசங்கள்.

      கஜலக்சுமி வந்த வேளை நல்லவேளையாக அமைந்தது வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  38. Wonderful and amazing collection of coins. I have only heard of 1/2 Anna, 1/4 Anna. Butnever have seen them. Indha pokishangal nijamagavey arumaiyana pokishangal. Indha madhri arumaiyana padhivai pakindharku romba nandri iyyah. Even my kids enjoyed watching all different types of coins. Migavum nandri iyyah. Vanakkam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Priya Anandakumar April 2, 2013 at 1:23 PM

      வாங்கோ, வணக்கம்.

      //Wonderful and amazing collection of coins. I have only heard of 1/2 Anna, 1/4 Anna. Butnever have seen them. Indha pokishangal nijamagavey arumaiyana pokishangal. Indha madhri arumaiyana padhivai pakindharku romba nandri iyyah. Even my kids enjoyed watching all different types of coins. Migavum nandri iyyah. Vanakkam.

      மிகவும் ஆச்சர்யமும் வியப்பும் ஏற்படுத்தும் நாணய சேகரிப்புக்ள். நான் அரை அணா, காலணா பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இதுவரை பார்த்ததே இல்லை. இந்தப்பொக்கிஷங்கள் நிஜமாகவே அருமையான் பொக்கிஷங்கள் தான். இந்த மாதிரி அருமையான பதிவினை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றிகள் ஐயா. என் குழந்தைகள் கூட இந்த பல்வேறு நாணயங்களைப்பார்த்து மிகவும் மகிழ்ந்தன. மிகவும் நன்றி ஐயா, வணக்கம்.//

      இதைக்கேட்க எனக்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகம் ஊட்டும் அழகான கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தொடர்ந்து வருகை தாருங்கள். மேலும் சில பொக்கிஷங்களைப் பார்த்து மகிழலாம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  39. Sriram chit, velli kasu...
    Most of the middleclass families like us once or other do like this. You brought back my memories Sir.
    Then the ootta kalana.....
    lovely.
    Thamarai poo potta 20 paisa.....
    108 kasu cherthu Lakshmi astotharam cholli.....
    En friendkku kuduthuvitten poojai chaiya....
    Nalla nalla pokishyankal..
    Avaludan adutha post i ether parkiren...
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji April 2, 2013 at 10:39 PM

      வாங்கோ விஜி மேடம். வணக்கம்.

      Sriram chit, velli kasu... Most of the middleclass families like us once or other do like this. You brought back my memories Sir. Then the ootta kalana..... lovely. Thamarai poo potta 20 paisa..... 108 kasu cherthu Lakshmi astotharam cholli..... En friendkku kuduthuvitten poojai chaiya.... Nalla nalla pokishyankal.. Avaludan adutha post i ether parkiren... ---- viji

      ஸ்ரீராம் சிட்ஸ் வெள்ளிக்காசு .. நம்மைப்போன்ற நடுத்தர மக்கள் ஓரிரு முறைகளாவது இதுபோன்ற சிட்ஸ்களில் பணம் போட்டு சேமிப்புக்காகச் சேர்ந்திருப்போம். தாமரைப்பூப்போட்ட 20 பைசாக்களை 108 சேகரித்து, ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி என் சினேகிதிகள் பலருக்கும் பூஜை செய்யக்கொடுத்து விட்டேன். நல்ல நல்ல பொக்கிஷங்கள். ஆவலுடன் [கோபாலகிருஷ்ணனுக்கான அவலுடன் ;)))) ] அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன் - விஜி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு கருத்துக்கள் சொல்லியுள்ளதற்கும், அடுத்த தொடர்ச்சியினை ஆவலுடன் [இனிப்பு வெல்ல அவலுடன் ;)] எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  40. சேமிப்பு அனுபவம்கள் எங்களுக்கு நல்லதொரு ஆலோசனை.வழமை போல் உங்களுக்கே உரித்தான் சுவாரஸ்யாமான நடையில் பகிர்வு பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா April 3, 2013 at 9:08 AM

      வாருங்கள், வணக்கம்.

      //சேமிப்பு அனுபவங்கள் எங்களுக்கு நல்லதொரு ஆலோசனை. வழமை போல் உங்களுக்கே உரித்தான சுவாரஸ்யாமான நடையில் பகிர்வு பிரமாதம்.//

      தங்கள் அன்பான வருகைக்கும், அழகான சுவாரஸ்யமான கருத்துக்களுக்கும், குறிப்பாக என் எழுத்து நடையைப் பாராட்டிப் பேசியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      இதன் முதல் பகுதிக்கும் நாலாம் பகுதிக்கும் மட்டும் தாங்கள் வருகை தரவில்லை என நினைக்கிறேன். நேரமிருந்தால் படித்துப்பார்த்துக் கருத்துச் சொல்லுங்கோ. அன்புடன் VGK

      நீக்கு
  41. naanum ungala mathiriye, 2, 3, 5, 10 coins. Apram Re.1 and Rs. 2 Note ellan vachikiren sir ! athulan ennoda pakathu veetu thatha nyabagama vachi iruken. Point to be noted is athu ellan puthusa irukum vera :) romba nalla collection ungaluthu....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sangeetha Nambi April 3, 2013 at 11:04 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //naanum ungala mathiriye, 2, 3, 5, 10 coins. Apram Re.1 and Rs. 2 Note ellan vachikiren sir ! athulan ennoda pakathu veetu thatha nyabagama vachi iruken. Point to be noted is athu ellan puthusa irukum vera :) romba nalla collection ungaluthu....

      நானும் உங்களை மாதிரியே 2, 3, 5, 10 நாணயங்களும், அப்புறம் ரூ.1 ரூ.2 நோட்டுக்களும் எல்லாம் வைத்திருக்கிறேன், சார் அத்துடன் என்னோட பக்கத்து வீட்டுத் தத்தா ஞாபகமாகவும் வைத்திருக்கிறேன். அவைகள் எல்லாமே புத்தம் புதிதாக இருக்கும் என்பதும் வேறு குறிப்பிடத்தக்கது. உங்களுடையது மிகவும் நல்ல கலெக்‌ஷன்ஸ்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் ,அருமையான அனுபவங்களை இனிமையாகப் பகிர்ந்து கொண்டதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  42. பதில்கள்
    1. அப்பாவி தங்கமணி April 3, 2013 at 11:40 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      // Real treasure sir //

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், REAL ஆன கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  43. என் கணவர் சொல்வார் அடிக்கடி "கஷ்டப்பட்டு, உண்மையாக (நேர்மையாக) உழைத்தால் அதற்கு பலன் உண்டு இருமடங்காக. நீங்களும் நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருக்கிறீங்க. ஆனா இப்ப நல்லா இருக்கீங்கதானே. வெள்ளிக்காசுகள் நவராத்திரி சமய‌த்தில் கிடைத்தது + சென்டிமென்டாக வைத்திருப்பீங்க. நல்ல பொக்கிஷங்கள்.
    //நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே// லேசில் பலருக்கு வராததொன்று.
    பழைய கால நாணயங்கள் இந்திய காசுகளை உங்க பகிர்வின்மூலமா பார்க்ககிடைத்தது.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ammulu April 5, 2013 at 12:21 AM

      வாங்கோ அம்முலு, வணக்கம்.

      //என் கணவர் சொல்வார் அடிக்கடி "கஷ்டப்பட்டு, உண்மையாக (நேர்மையாக) உழைத்தால் அதற்கு பலன் உண்டு இருமடங்காக.//

      மிகச்சரியாகவே உணர்ந்து அனுபவித்துச் சொல்லியுள்ளார், தங்கள் கணவர். சந்தோஷம் ;)

      //நீங்களும் நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருக்கிறீங்க.//

      நான் நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருப்பது என்னவோ உண்மை தான். அவைகளை என் பதிவுகளில் எங்கும் சொல்லிக்கொள்வது இல்லை.

      //ஆனா இப்ப நல்லா இருக்கீங்கதானே.//

      அப்படித்தான் பலரும் சொல்லுகிறார்கள். மற்றவர்கள் பார்வைக்கு அப்படித்தான் தெரிகிறது.

      நானும் சமுதாயத்தில் கெளரவமாக வாழ்வதாகவும், ஓரளவு நல்லா இருப்பதாகவும தான் நினைக்கிறேன்.

      //வெள்ளிக்காசுகள் நவராத்திரி சமய‌த்தில் கிடைத்தது + சென்டிமென்டாக வைத்திருப்பீங்க. நல்ல பொக்கிஷங்கள்.//

      ஆம். அவை என்னிடம் வந்த பிறகு என் பொருளாதார நிலைமையில் நல்லதொரு மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது என்பதும் உண்மை தான்.

      *****நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே*****

      //லேசில் பலருக்கு வராததொன்று.//

      ஆம், பணம் இருப்பவரிடம் உதவ மனம் இருக்காது. உதவ மனம் இருப்பவரிடம் பணம் இருக்காது. ஏதோ நம்மால் ஆன சிறுசிறு உதவிகள் செய்ய முடிகிறதே என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      //பழைய கால நாணயங்கள் இந்திய காசுகளை உங்க பகிர்வின்மூலமா பார்க்கக் கிடைத்தது.நன்றி.//

      மிகவும் சந்தோஷம், அம்முலு.

      அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  44. தாமரைப்பூப் போட்ட 20 காசுகள் 108 சேர்த்து விளக்கு பூஜை பண்ணும் வழக்கம் அந்தக் கால கட்டத்தில் இருந்தது. எங்களிடம் கூட அப்படி ஒரு வழக்கம் இருந்து சேகரித்து வந்தோம். பின்னால் விட்டுப் போச்சு. :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam April 7, 2013 at 6:23 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தாமரைப்பூப் போட்ட 20 காசுகள் 108 சேர்த்து விளக்கு பூஜை பண்ணும் வழக்கம் அந்தக் கால கட்டத்தில் இருந்தது. எங்களிடம் கூட அப்படி ஒரு வழக்கம் இருந்து சேகரித்து வந்தோம். பின்னால் விட்டுப் போச்சு. :))))) //

      மிகவும் சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அனுபவக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  45. நல்ல பொக்கிசங்ககள் ,அருமையான சேமிப்புகள்,அந்த காலத்து பைசாக்களில் 20 பைசா மிஸ்ஸிங் சார் .

    பதிலளிநீக்கு
  46. thirumathi bs sridhar April 8, 2013 at 5:12 PM

    வாங்கோ அன்புக்குரிய ஆச்சி மேடம், வணக்கம்.

    //நல்ல பொக்கிசங்ககள் ,அருமையான சேமிப்புகள்,//

    சந்தோஷமம்மா.

    //அந்த காலத்து பைசாக்களில் 20 பைசா மிஸ்ஸிங் சார்.//

    ஆமாம். 20 பைசாவில் மூன்று விதமாக வெளியிட்டார்கள்.

    இரண்டு ரவுண்ட் ஷேப். அதில் ஒன்று தாமரை போட்டது.
    இன்னொன்று தாமரை போடாதது. இவை இரண்டுமே பித்தளை கலரில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

    நீங்கள் மிஸ்ஸிங் என்று சொல்லும் 20 பைசா அறுகோண வடிவில், நிக்கலில் இருக்கும். படத்தில் காட்டியுள்ள 3 பைசாவுக்கு அம்மா போல சற்றே பெரியதாக இருக்கும்.

    அதெல்லாம் ஏராளமாக நான் ஒரு காலத்தில் நான் வைத்திருந்தேன். இப்போது இல்லை. எல்லாவற்றையும் காசி போனபோது கங்கையில் வாரணாசியிலும், அலஹாபாத் திரிவேணியிலும், கிலோ கணக்கில் வீசியெறிந்து விட்டேன்.

    தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பின்குறிப்பு: உங்களின் பொக்கிஷமான கருத்துக்கள் இந்தத்தொடரின் பகுதி-3 + பகுதி-4 க்கு இன்னும் கிடைக்கவில்லையாக்கும். ஹூக்க்க்க்கும் ;)

    பதிலளிநீக்கு
  47. தங்களது பொக்கிஷம் தொடரின் இந்தப் பகுதியை இப்போதுதான் படித்தேன். வலையுலகிலிருந்து சில காலம் விடுப்பு எடுத்திருந்ததால் பல பதிவுகளை வாசிக்க இயலவில்லை. வாசித்தாலும் கருத்திட இயலவில்லை. மன்னிக்கவும்.

    சிறுசேமிப்பின் அடையாளமான வெள்ளி நாணயங்கள் முதல் அபூர்வ அந்தக்கால நாணயங்கள் வரை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கும் தங்களுக்குப் பாராட்டுகள் வை.கோ. சார்.

    ஒவ்வொரு பொருளையும் பேணிக்காப்பதோடு, அது தொடர்பான தகவல்களையும் தாங்கள் நினைவில் வைத்திருந்து பதிப்பது வியப்பூட்டுகிறது. மற்ற பதிவுகளுக்கும் சென்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  48. கீதமஞ்சரி April 10, 2013 at 3:11 AM

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //தங்களது பொக்கிஷம் தொடரின் இந்தப் பகுதியை இப்போதுதான் படித்தேன். வலையுலகிலிருந்து சில காலம் விடுப்பு எடுத்திருந்ததால் பல பதிவுகளை வாசிக்க இயலவில்லை. வாசித்தாலும் கருத்திட இயலவில்லை. மன்னிக்கவும்.//

    அதனால் பரவாயில்லை மேடம். ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ அசெளகர்யங்கள் உள்ளன என்பதை நானும் நன்கு அறிவேன். என்னாலும் முன்புபோல பலபதிவுகளைப்படிக்க முடியாத சூழ்நிலைகள் தான் உள்ளது..

    //சிறுசேமிப்பின் அடையாளமான வெள்ளி நாணயங்கள் முதல் அபூர்வ அந்தக்கால நாணயங்கள் வரை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கும் தங்களுக்குப் பாராட்டுகள் வை.கோ. சார்.//

    மிக்க மகிழ்ச்சி மேடம்.

    //ஒவ்வொரு பொருளையும் பேணிக்காப்பதோடு, அது தொடர்பான தகவல்களையும் தாங்கள் நினைவில் வைத்திருந்து பதிப்பது வியப்பூட்டுகிறது. மற்ற பதிவுகளுக்கும் சென்று பார்க்கிறேன்.//

    கேட்கவே சந்தோஷமாக உள்ளது, மேடம்.

    தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  49. /ஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம் பொங்க ஆரம்பித்தது.

    FINANCE MANAGEMENT இல் மிகப்பெரிய ஆளானேன். /

    பின்னூட்டத்தில் படித்ததும் . என் மனதில் உதித்தது ...
    நீங்கள் இறைவன் மேல் கொண்ட நம்பிக்கை தான் உங்களை வழி நடத்துகிறது
    நான்கு வெள்ளி காசுகளைவிட அவற்றில் பொறித்துள்ள கடவுளர்களின் திரு உருவங்களே அரிய பொக்கிஷங்கள் ...
    இறைவன் நமக்கு பண உதவிகள் செய்வார் ..நாம் தகுதிக்குமற்றும் அனாவசியமாக மீறி செலவழிக்கும் போதோ ..இருப்பதையும் பறி கொடுப்போம் ...

    நீங்கள் ஏலத்தில் கிடைத்த பணத்தை சரியான முறையில் மீண்டும் டெபாசிட் செய்தது அந்த கடவுளர்களின்
    வழிநடத்துதலே ..அதனால் தான் எல்லா பொக்கிஷங்களும் உங்களை நாடி வந்திருக்கு அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin April 15, 2013 at 2:33 AM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      *****ஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம் பொங்க ஆரம்பித்தது. FINANCE MANAGEMENT இல் மிகப்பெரிய ஆளானேன்.*****

      //பின்னூட்டத்தில் படித்ததும், என் மனதில் உதித்தது ... நீங்கள் இறைவன் மேல் கொண்ட நம்பிக்கை தான் உங்களை வழி நடத்துகிறது. நான்கு வெள்ளி காசுகளைவிட அவற்றில் பொறித்துள்ள கடவுளர்களின் திரு உருவங்களே அரிய பொக்கிஷங்கள் ... இறைவன் நமக்கு பண உதவிகள் செய்வார்.. நாம் நம் தகுதிக்கு மேல் மற்றும் அனாவசியமாக மீறி செலவழிக்கும் போதோ .. இருப்பதையும் பறி கொடுப்போம் ...//

      வாழ்க்கைத் தத்துவத்தினை மிக நன்றாகவே புரிந்துகொண்டு, மிக அழகாகவே எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.;)

      //நீங்கள் ஏலத்தில் கிடைத்த பணத்தை சரியான முறையில் மீண்டும் டெபாசிட் செய்தது அந்த கடவுளர்களின் வழிநடத்துதலே .. அதனால் தான் எல்லா பொக்கிஷங்களும் உங்களை நாடி வந்திருக்கு அண்ணா//

      கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளதும்மா. மிக்க நன்றி.

      நீக்கு
  50. //வேறு தனி நபர்களிடமோ எக்காரணம் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.//

    மிக சிறந்த கொள்கை அண்ணா ..
    finance management பற்றிய தங்கள் அறிவுரைகள்நிச்சயம் பலருக்கும் பயன்படும் .
    நேரம் கிடைக்கும்போது அவை பற்றியும் பதிவு இடுங்கள் அண்ணா ..
    ..கை நிறைய சம்பாதிக்கும் பலர்
    எப்படி எதற்கு செலவழிப்பது என்பது தெரியாமல் வீண் செய்கிறார்களோ என தோன்ருகின்றது ..
    அவசியம் ,அத்யாவசியம் ..அநாவசியம் ....... புரிந்து செலவழித்தால் நோ ப்ராப்ளம் .
    ..பொக்கிஷங்கள் அனைத்தும் அருமை ..
    உங்கள் பொக்கிஷ பதிவுகள் அனைத்தும் அருமை




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin April 15, 2013 at 2:43 AM

      வாங்கோ நிர்மலா, தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

      *****வேறு தனி நபர்களிடமோ எக்காரணம் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.*****

      //மிக சிறந்த கொள்கை அண்ணா .. finance management பற்றிய தங்கள் அறிவுரைகள் நிச்சயம் பலருக்கும் பயன்படும். நேரம் கிடைக்கும்போது அவை பற்றியும் பதிவு இடுங்கள் அண்ணா ..//

      சந்தோஷம்மா. பார்க்கிறேன். முயற்சிக்கிறேன்.

      //கை நிறைய சம்பாதிக்கும் பலர் எப்படி எதற்கு செலவழிப்பது என்பது தெரியாமல் வீண் செலவு செய்கிறார்களோ எனத் தோன்றுகின்றது .. அவசியம், அத்யாவசியம் .. அநாவசியம் ....... புரிந்து செலவழித்தால் நோ ப்ராப்ளம்.//

      //அவசியம் ... அத்யாவசியம் ... அநாவசியம்.//

      மிகவும் அழகோ அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

      இதுவும் ’பொக்கிஷம்’ போலவே தான். ஒருவருக்குப் பொக்கிஷமாகத்தோன்றுவது, மற்றவர்களுக்கு பொக்கிஷமாகத்தோன்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

      சம்பந்தப்பட்ட ஒருவருக்கு அவசியம், அத்யாவசியம் ஆனால் அதே மற்றவருக்கு அனாவசியம் எனத் தோன்றலாம்.

      குடி, குட்டி, சூதாட்டம் என்று பழக்கப்பட்டவர்களுக்கு அது அவசியமாகவும், அத்யாவசியமாகவும் இருக்கலாம்.

      அதே அவரின் வாழ்க்கைத்துணைக்கும், குழந்தைகளுக்கும் அனாவசியமாகத்தெரியலாம்.

      ஒன்றும் சொல்வதற்கு இல்லை. யார் சொல்லியும் யாரும் திருந்தப்போவது இல்லை.

      அவரவர்களாக சுயமாகச் சிந்தித்துப்பார்த்து, தங்களின் வருமானத்தை திட்டமிட்டு, அதற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, ஓரளவு சேமித்து, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொண்டால் நல்லது.

      //பொக்கிஷங்கள் அனைத்தும் அருமை .. உங்கள் பொக்கிஷ பதிவுகள் அனைத்தும் அருமை //

      மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆத்மார்த்தமான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  51. நோ ... நான் இங்கே உள்ளே வரமாட்டேன்ன் கோபு அண்ணன்....:) போனதடவை 100 கிடைக்கவில்லை எனச் சொன்னேன், இல்லை 101 தான் சிறந்தது எனச் சொல்லிட்டீங்க.. சரி என ஏற்றுக்கொண்டேன், ஆனா இப்போ இங்கு 101 ம் போய் விட்டது.. இது 102. அப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira April 18, 2013 at 1:09 PM

      //நோ ... நான் இங்கே உள்ளே வரமாட்டேன்ன் கோபு அண்ணன்....:)//

      அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா செல்லம். பாசமுள்ள தங்கச்சி என்றாலே இப்படித்தான். உரிமையுடன் அண்ணா வீட்டுக்கு உள்ளே வந்துவிட்டு, உள்ளே வரமாட்டேனாக்கும் என்று சொல்லி சண்டை போடுவாள்.

      அதே அதே சபாபதே! அதிரபதே!!

      //போனதடவை 100 கிடைக்கவில்லை எனச் சொன்னேன், இல்லை 101 தான் சிறந்தது எனச் சொல்லிட்டீங்க.. சரி என ஏற்றுக்கொண்டேன், ஆனா இப்போ இங்கு 101 ம் போய் விட்டது.. இது 102. அப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?:)..//

      102 ஐக்கூட்டிப்பாருங்கோ 1+0+2 = 3 வருகிறதா. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்குன்னு நம்ம வாத்யார் பாட்டே பாடியிருக்கிறார்.

      அம்மா, அப்பா, அதிரா, பாப்பா, தாத்தா, பாட்டி அண்ணா, அக்கா, MGR, ஒபாமா என ஏராளமான பிரபலங்கள் மூன்றெழுத்தில் தான் உள்ளனர். அன்பு, பண்பு, வெற்றி, லட்டு, அஞ்சு, மஞ்சு, பிஞ்சு என எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

      அதனால் எந்த நம்பராக அமைந்தாலும் கவலையே படாதீங்கோ. எல்லாவற்றிற்கும் இப்படியும் அப்படியுமாக ஏதாவது கதைகட்டி விடலாம். ;)))))

      நீக்கு
  52. //1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது.//

    35 வயசில மூன்று பிள்ளைகள் எனில், 65 வயதில் எத்தனை பிள்ளைகள் எனக் கணக்குப் பார்த்தேன்ன்.. ஃபெயிண்ட் ஆகிட்டேன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira April 18, 2013 at 1:10 PM
      *****1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது.*****

      //35 வயசில மூன்று பிள்ளைகள் எனில், 65 வயதில் எத்தனை பிள்ளைகள் எனக் கணக்குப் பார்த்தேன்ன்.. ஃபெயிண்ட் ஆகிட்டேன்ன்ன்:).//

      அதிரா,

      எனக்கு நியாயமாக குசேலர் போல 27 குழந்தைகளாவது இருந்திருக்க வேண்டும்.

      ஒருசில நடைமுறைச்சிக்கல்களாலும், அரசாங்க + அரசியின் ஒத்துழைப்பு இல்லாமையாலும், நான் குசேலரும் ஆகாமல், குபேரனும் ஆகாமல் ஓர் இரண்டும்கெட்டான் ஆக ஆக்கப்பட்டு விட்டேன்.

      அதைப்பற்றி கூட என் கீழ்க்கண்ட பதிவு ஒன்றில் விபரமாகத் தெரிவித்துள்ளேன். அதற்கு நீங்க கூட கடைசியாக வருகை தந்து மூன்று கருத்துக்கள் சொல்லியிருக்கீங்கோ.

      http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html

      அதனால், தாங்கள் இதுவிஷயத்தில் பொட்டைக்கணக்கு ஒன்று போட்டு ஃபெயிண்ட் ஆனது நியாயமே இல்லையாக்கும். ;)))))

      நீக்கு
  53. வெள்ளிக்காசுகள் அழகிய பொக்கிஷம்.. சரி அந்த 7000 ரூபா இப்போ என்ன ஆச்செனச் சொல்லவேயில்லையே:).. சரி வாணாம் விட்டிடுவோம்ம்.. அழகிய பதிவு இது.

    ஊசிக்குறிப்பு:
    இத்தோடு பொக்கிஷப் பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டி விட்டேன், 4ம் நம்பர் பதிவு தவிர. ஏனெனில் 4ம் நம்பர் எனக்கு மிகவும் பிடித்த நம்பர் என்பதனால்... ஒரேயடியாகப் பின்னூட்டம் போடாமல்.. நாளைக்குத்தான் போடுவேன்ன்... ஒரேயடியாகப் போட்டாலும் அருமை தெரியாமல் போயிடுமாம் என அம்மம்மா சொல்றவ:) அதுதான் .. கொஞ்சம் ரைம் விட்டுப் போடப்போறேன்ன்...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira April 18, 2013 at 1:16 PM

      //வெள்ளிக்காசுகள் அழகிய பொக்கிஷம்.. //

      சந்தோஷம்.

      //சரி, அந்த 7000 ரூபா இப்போ என்ன ஆச்செனச் சொல்லவேயில்லையே:)..//

      அந்த ஏழாயிரம் தான் மறுமுதலீடாக டெபாஸிட் செய்யப்பட்டு, அதனுடன் வட்டி குட்டி போட்டு ரூ. 10570 ஆச்சுன்னு சொல்லிருக்கேனே, அது ஏதாவது பிறகு செல்வாகியிருக்கும். இப்போ என்ன ஆச்சுன்னு கேட்டால் எப்படி?

      //சரி வாணாம் விட்டிடுவோம்ம்..//

      ஊஹூம், எதையுமே எங்குமே விட்டுடக்கூடாது. அதிராவை நேரில் சந்திக்கும் போது, பஞ்சுமிட்டாய் குல்பி போன்ற ஏதாவது வாங்கிக்கொள்ளத் தரலாம் என பத்திரமாக வைத்துள்ளேனாக்கும். ;)

      //அழகிய பதிவு இது.//

      மிக்க மகிழ்ச்சி.

      //ஊசிக்குறிப்பு:
      இத்தோடு பொக்கிஷப் பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டி விட்டேன், 4ம் நம்பர் பதிவு தவிர.//

      என்னிடம் உள்ள புள்ளிவிபரங்கள் இதை அப்படியே ஒத்துக் கொள்கின்றன. கரெக்டூஊஊஊ.

      //ஏனெனில் 4ம் நம்பர் எனக்கு மிகவும் பிடித்த நம்பர் என்பதனால்...//

      பிடித்தது என்றால் உடனே போட வேண்டாமோ? ;)

      //ஒரேயடியாகப் பின்னூட்டம் போடாமல்.. நாளைக்குத்தான் போடுவேன்ன்... ஒரேயடியாகப் போட்டாலும் அருமை தெரியாமல் போயிடுமாம் என அம்மம்மா சொல்றவ:) அதுதான் .. கொஞ்சம் ரைம் விட்டுப் போடப்போறேன்ன்...:)//

      அம்மம்மா சொல்வது சரிதான். அனுபவசாலியாக இருக்காங்கோ. ஒரேயடியாகப் போட்டாலும் அருமை தெரியாமல் போய்விடும் என அழகாக அனுபவித்துச் சொல்லியிருக்காங்கோ. அதன்படியே செய்யுங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அசத்தலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா.

      நீக்கு
  54. சேமிப்பு என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 மார்ச் வரையிலான 27 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  55. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

    வணக்கம்மா.

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 மார்ச் வரை முதல் 27 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  56. காச படங்கலா பாக்கயிலே வேடிக்கயாகீது. அதல்லா நெசம் காசுகளா வெளயாட்டுகாசுகளா.

    குருஜி இந்த பின்னூட்ட போட்டியில பூந்தளிர் பழனி கந்தசாமி ஐயா அல்லாருமே இருக்காகளா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 2:53 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //காச படங்கலா பாக்கயிலே வேடிக்கயாகீது. அதல்லா நெசம் காசுகளா வெளயாட்டுகாசுகளா.//

      நிஜமான காசுகள் தானம்மா. சந்தேகமாக இருந்தால் உங்க அம்மியிடம் காட்டி, கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக்காசுகளையெல்லாம் நம் இந்திய அரசாங்கம் வெளியிட்டபோது, நீங்க பிறந்தே இருக்க மாட்டீங்கோ.:)

      //குருஜி இந்த பின்னூட்ட போட்டியில பூந்தளிர், பழனி கந்தசாமி ஐயா அல்லாருமே இருக்காகளா..//

      இருக்காங்களாவாவது.

      நல்லாக் கேட்டீங்கோ ஒரு கேள்வி!

      இவர்கள் இருவரையும் தவிர மற்றொருவருமாக இதுவரை மூன்று நபர்கள் முற்றிலுமே முடித்து வெற்றியினை எட்டிப்பிடித்து விட்டார்கள்.

      மேலும் ஒருவர் வெற்றியை எட்டிப்பிடிக்கும் தூரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

      இப்போதைக்கு இந்த ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஐந்தாவதாக ஓடி வந்துகொண்டு இருக்கிறீர்கள்.

      25.12.2015 கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதுதான் இன்னும் யார் யார் புதிதாகக் கலந்துகொண்டு, இறுதி வெற்றி பெறுவார்கள் என என்னால் சொல்லவே முடியும்.
      அதுபற்றிய முழுவிபரங்கள் அதிகாரபூர்வமாக என் வலைத்தளத்தில், அழகழகான படங்களுடன் டிஸம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும்.

      முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மட்டும், என்னை நேரில் திருச்சியில் சந்தித்து பரிசுப்பணத்தையே பெற்றுக்கொண்டு சென்று விட்டார். இது சம்பந்தமாக அவர் தன்னுடைய வலைத்தளத்தினில் மூன்று பதிவுகளும் வெளியிட்டு விட்டார். அவற்றின் இணைப்புகள் இதோ:

      http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_17.html
      கரும்பு தின்னக் கூலி

      http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_14.html
      இரு பிரபல வலைப்பதிவர்களின் சந்திப்பு

      http://swamysmusings.blogspot.com/2015/09/blog-post.html
      நானும் ஒரு பரிசு பெற்றேன்

      அன்புடன் குருஜி.

      நீக்கு
  57. ஸ்ரீராம் சிட்ஸ் மூலமாக தங்களுக்கு கிடைத்த காசுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கூடவே கூட்டிண்டு வந்து விட்டது. பழய நாணயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது

    பதிலளிநீக்கு
  58. அப்போதெல்லாம் இப்போது போல யாருக்கும் கைநிறைய சம்பளம் தரப்படவில்லை. // உண்மைதான் ஆனால் - இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே..எனது முதல் சம்பளம் ரூ.2.75 மட்டுமே ;-))))))))))

    பதிலளிநீக்கு