என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6




ஓர் சிறுகதைத் 
தொகுப்பு நூலுக்கான மதிப்புரை
நிறைவுப் பகுதி!




சிவப்பு பட்டுக் கயிறு 
(சிறுகதைகள்)

நூல் வெளியீட்டு விழா

நூல் ஆசிரியர்: 
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்






PUBLISHER:

DISCOVERY BOOK PALACE
# 6, MAHAVEER COMPLEX
MUNUSAMY SALAI
K.K.NAGAR WEST
CHENNAI-600 078

PHONE: +91 - 44-6515 7525
MOBILE: +91 87545 07070

E-mail: discoverybookpalace@gmail.com
Website: www.discoverybookpalace.com 

First Edition: May 2016

Total No. of Pages: 104 
(Excluding wrappers)

Price Rs. 80/- only



  




13) நந்தினி

டாக்டர் நந்தினி டவுனிலேயே பெரிய டாக்டர். கைராசிக்காரி என்று பெயர் பெற்றவள். திருமணம் குழந்தை என்று இல்லாமல் தன்னுடைய டாக்டர் வேலையையே திருமணம் செய்துகொண்ட மாதிரி வாழ்ந்து வந்தாள். 

“இதையெல்லாம் நம்பித்தானே இங்கு கொண்டு வந்து அட்மிட் செய்து சேர்த்தோம். பிரஸவத்துக்குக் கூட்டியாந்த என் பிள்ளையைக் கொன்னுட்டாங்க. இப்போ என் மாப்பிள்ளையும் தூக்குமாட்டி செத்துட்டாரு. கொலைகார பயலுவ. ஒழுங்கா கவனிக்கவே மாட்டானுவ. பெரிய டாக்டரம்மா வந்து ஒழுங்கான பதில் சொல்லாமல் நாங்கள் பாடியை வாங்கிக்கொள்ள மாட்டோம்”. பெண்ணை டெலிவரிக்குச் சேர்த்துள்ள அந்தப்பெண்ணின் அப்பா தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பிக்கிட்டு இருக்காரு.

அந்த ஆஸ்பத்தரி வாசலில் ஒரே அமளி. போராட்டம். கூச்சல் குழப்பம்.

எயிட்ஸ் நோய் பற்றிச் சொல்லும் மிக அருமையான விழிப்புணர்வுக் கதை இது.  தனக்கே உரிய தனிப்பாணியில் மிகவும் பிரமாதமாக எழுதியுள்ளார்கள், நம் ஹனி மேடம். என் ஸ்பெஷல் பாராட்டுகள், மேடம்.

இதில் வரும் பெரிய டாக்டர் நந்தினியின் கதா பாத்திரம் நம் நெஞ்சைவிட்டு நீங்காதது.

இந்தக்கதையை மிக அழகாக ஒலிவடிவில் கேட்க விரும்புவோர் இதோ இந்த இணைப்பினில் கேட்டு மகிழலாம்

https://soundcloud.com/sabalaksh/nanthini-story 

இந்தக்கதைக்குக் குரல் கொடுத்துள்ளவர், நம் ஹனி மேடத்தின் ஃபேஸ்புக்  தோழி திருமதி. சரஸ்வதி தியாகராஜன் அவர்கள். 

 



14) கல்யாண முருங்கை

குழந்தை பாக்யமில்லாததோர்  தம்பதியினைப் பற்றிய மிகவும் அருமையானதோர் கதை .... அசத்தலான எழுத்து நடையில் எழுதியுள்ளார்கள். படிக்கப்படிக்க மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்த்திச் செல்லப்படுகிறது என்பது நமக்கும் நன்கு புரியவரும்.

திருமணத்திற்கு முன்பு அவள் கண்ட கனவுகள் வேறு. ஆனால் திருமணத்திற்குப்பின் சந்திக்க நேர்ந்த காட்சிகள் முற்றிலும் வேறுபட்டவை மட்டுமே. கூட்டுக்குடும்பம் என்ற கடலில் கலந்து, மாமனார், மாமியார், நாத்தனார்கள், கொழுந்தன்கள் என மற்றவர்களுக்காகவே பல்லாண்டுகள் உழைத்து வாழ்ந்த பின், அனைவரிடமிருந்தும் ஓரளவுக்கு விடுதலை கிடைத்தபின், ஒருசிலரைத் தானே வலுக்கட்டாயமாக பிரித்தபின், அவர்கள் எல்லோரும் அவரவர்கள் வாழ்க்கையில் பூத்துக்குலுங்கி செழித்து சிறப்பாக தனிக்குடுத்தனம் இருப்பதைத் தன் கண்களால் காணும்போது,  தனக்கு என்று தன் வாழ்க்கையில் ஏதும் கிடைக்கவே இல்லை என்ற இவ்வாறான விரக்தி அவளுக்கு மேலிடுவதில் வியப்பேதும் இல்லைதான்.  

இவ்விதமாக மிகப்பொறுமையாக பல்லாண்டு தன் கணவன் + அவன் வீட்டாரின் நலங்களுக்காக மட்டுமே வாழ்க்கை நடத்தியபிறகு, கணவனிடமிருந்தும் விலக நினைத்து, கோர்ட்டில் விவாக ரத்துக்கும் மனுச் செய்துவிட்டு, தன் பிறந்த வீட்டினில் புகுந்துகொண்டிருக்கும் ஓர் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்ணின் கண்ணீர்க்கதை இது. 

மறுநாள் பொழுது நல்லபடியாக விடிந்துவிட்டால் போதும். கோர்ட்டாரால் ஒரு நல்ல தீர்ப்பு இவளுக்குச் சாதகமாகவே கிடைத்துவிடும். 

இருப்பினும் அதற்குள் அன்று இரவு நடந்தது என்ன? என்பதே கதையின் க்ளைமாக்ஸ் காட்சியில், சற்றும் எதிர்பாராத வண்ணம் மிகவும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது என்பதே இந்தக் கதையின் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. 

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

காத்திருந்து காத்திருந்து தனக்குக் குழந்தை பாக்கியமே இல்லை என்பது அவளுக்குப் பேரிடியாக இருந்தது. ‘இருசி மட்டை, மலடி’ என்ற சொற்களை அவ்வப்போது கேட்க நேர்ந்தது, தன் கணவனின் கையாலாகாத தனத்தால் என உறுதியாக நம்பத் துவங்கினாள். ஒருநாள் வார்த்தைகள் தடித்துச் சண்டை வந்தது. அது மேலும் அடிக்கடி தொடர்ந்து தெருவே கேட்கும் அளவுக்கு அதிகமானது. 

எவ்வளவுதான் ஒரு தன்மானமிக்க மனிதன் பொறுக்க முடியும். மனைவியை பளாரென்று ஓங்கி அறைந்துவிட்டு வெளியே சென்றவன் இரண்டு நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல் தன் நண்பன் வீட்டில் தங்கிவிட்டான்.

வீங்கிய கன்னங்களோடு, பிள்ளைப்பேறும் இல்லாமல், தனியே இருக்கும் தன்மேல் துளிகூட அக்கறையும் இல்லாமல், எங்கோ  காணாமல் போய்விட்ட கணவன்கூட இனியும் வாழ்வதென்பது அவளுக்கு அர்த்தமற்றதாகத் தெரிந்தது.

திருமணமான சில நாட்களிலேயே, கட்டினவன் ஆம்பிள்ளையே இல்லை எனக் கோர்ட்டுக்கு இழுத்து, விவாக ரத்துச் செய்யும் பெண்களுக்கு மத்தியில், தான் இத்தனை வருடம் தன் கணவனோடு குடும்பம் நடத்தியதே பெரிது என நினைத்துக் கொண்டிருந்தாள், அவள். ‘இவ்வளவுக்குப் பிறகும் சேர்ந்திருப்பது எதற்காக’ என்ற எண்ணத்தோடு, குடும்ப நலக் கோர்ட்டில் விவாகரத்து தாக்கல் செய்துவிட்டாள்.

குடும்ப வன்கொடுமைச் சட்டம் எல்லாம் பெண்ணுக்குச் சாதகமாகவே இருக்கிறது. கணவனின் பக்கத்தை அது அதிகம் அலசி ஆராய்வதே இல்லை. ‘ஆண் மட்டும்தான் வன்கொடுமை செய்வான்’ எனச் சட்டமும் முடிவெடுக்கிறது.

ஜன்னல் வழியாக கல்யாண முருங்கை மரத்தின் பக்கம், தன் பார்வையைத் திருப்பியவளுக்கு, தானும் ஒரு கல்யாண முருங்கையாகக் காய் கனியில்லாமல் வெறுமே பூத்திருப்பதாகப் பட்டது. கல்யாண முருங்கை பிள்ளைப்பேறு அளிக்கும் மருத்துவச் செடி. ஆனால் அதற்குக் காய்ப்பில்லை. கனியில்லை. பூத்து உதிரும் அதற்குப் பிள்ளைப்பேறு கிடையாது. அந்தக் கல்யாண முருங்கையாகத் தானிருக்கும் கோலத்தை எண்ணிக் கலங்கியவள் ஒருவாறாக அன்றிரவு தூங்கியிருந்தாள்.

[இந்தக்கதை அமெரிக்கத் தமிழ் இதழான ‘தென்றல்’ இல், ஜனவரி 2016 இல் வெளியாகியுள்ளது]  

 




15) ஸ்ட்ரோக்

இது ஒரு மாறுபட்ட வித்யாசமான கதை. பொதுவாக ஒருமுறை மட்டும் மேலோட்டமாகப் படிப்பவர்கள் இதனைப் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கக்கூடும். ஆழமான அன்புள்ள கதையாக இருப்பதால் அதனை ஆழமாக ஊன்றிப்படிக்க வேண்டியது மிகவும்   அவசியமாகும்.

எனக்கு மிகவும் பிடித்தமான கதைக்கருவாக இருந்ததாலும், என் வாழ்க்கையின் ஏதோ ஒரு பக்கத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பதாலும், நானே பலமுறை படித்து ரஸித்து மகிழ்ந்தேன்.

மாடர்ன் ஆர்ட் என்று ஏதேதோ கிறுக்குவார்கள். கார்ட்டூன் என்று ஏதேதோ கேலிச்சித்திரங்கள் வரைந்து காட்டி, பக்கம் பக்கமாக எழுதி புரியவைக்க முடியாத, சில விஷயங்களை பளிச்சென்று ஒரே ஒரு படத்தின் மூலம், நகைச்சுவையுடன் காட்டி மிகச் சுலபமாகப் புரிய வைத்து விடுவார்கள். 

உதாரணமாக இதோ என்னால் வரையப்பட்டதோர் கார்ட்டூன்: 

இனிமே, உட்கார்ந்தா .. சறுக்குப்பாறை 
இருக்கிற ‘பார்க்’கா பார்த்து உட்காரணும்.

இதுபோன்ற கேலிச்சித்திரம் என்ற கார்ட்டூன்களைப் பொதுவாக அனைவரும் புரிந்துகொள்வதோ, ரஸிப்பதோ நடக்காத காரியம். அதில் ஓர் ஆசையும், ஈடுபாடும், கொஞ்சமாவது ரஸிப்புத்தன்மையும், கூடவே கொஞ்சம் புத்திசாலித்தனமும் இருக்க வேண்டும் என்று நான் அடித்துச் சொல்லுவேன். 

இந்தக் கதையில் வரும் கதாநாயகியும் ஓர் மாடர்ன் ஆர்டிஸ்ட் மட்டுமல்ல, ஆர்க்கிடெக்ஸிங் முடித்துவிட்டு, கட்டடங்களின் உள்பாகங்களை உருவமைத்துக் கொண்டிருந்தவள். தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு ஃப்ரீலான்சிங்காக, பத்திரிகைகளின் மேல் உள்ள ஈர்ப்பால், டிசைன் இன்ஜினியரிங் முடித்த தகுதியை வைத்து விதம் விதமான படங்களால் பத்திரிகை உலகைக் கலக்கிக் கொண்டிருந்தவள்.

இந்தத்துறையில் இவளின் தனித்தன்மையை உணர்ந்த ஒருவர் இவளின் கண்ணழகில் மட்டுமே காந்தமாக இழுக்கப்படுகிறார். அவளைத் தனக்குள் காதலிக்கவும் ஆரம்பித்து விடுகிறார் ..... அவளின் எண்ணம் எப்படியிருக்கும் என கொஞ்சமும் யோசிக்காமலேயே. 

படங்களில் காட்டப்படும் பலவிதமான் ஸ்ட்ரோக்குகள் போல இந்தக்கதை மிகச்சிறப்பான பலவித ஸ்ட்ரோக்குகளுடன் ஜோராகவே எழுதப்பட்டுள்ளது, நம் ஹனி மேடத்தால். 

இவர்களின் காதல் கடைசியில்  கைகூடியதா என்பதே இந்தக்கதையின் க்ளைமாக்ஸில்  ’ஸ்ட்ரோக்’ மூலமாகவே (குறியீட்டுக் கோடுகளின் மூலமாகவே) அவளால் அவருக்குச் சொல்லப்படும் மிகச்சிறப்பானதோர் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. அதுவே எனக்கு இந்தக்கதையை மிகவும் பிடித்துப் போக வைத்துவிட்டது.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

பொதுவாக அடுத்தவர் அந்தரங்கத்தை அறிவதில் அவருக்குத் துளியும் விருப்பமில்லை. ஆனால் அவர் அவளைக் காதலிக்கத் துவங்கியிருந்தார். தெரிந்துகொள்ளும் தேவையும் இருந்தது. அவருக்குத் திருமணம் ஆகி மனைவியை இழந்திருந்தார். அவளுக்கும் திருமணம் ஆகி மணவிலக்குப் பெற்றிருந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அது அவளின் கணவனின்  பராமரிப்பில் இருப்பதாகவும் சொல்லியிருந்தாள்.

“இப்போது உன் வாழ்வில் நீ மட்டும் இருக்கிறாய். என் வாழ்வில் நான் மட்டுமே இருக்கிறேன். நாம் இருவரும் இணைந்து வாழ்ந்தால் என்ன? நமக்காக வாழ, நம்மை சிந்திக்க, நம் இருவருக்கும் துணை தேவை” க்ரீமி இன்னில் குளிர்ந்த விரல்களால் லேஸாக அவள் கைகளைப் பற்றுவதுபோல அவர் ஒரு வேகத்தில் சொல்லி முடித்தார்.

“இதெல்லாம் பற்றி நினைக்கவே எனக்கு நேரமில்லை. இனியும் ஒருமுறை இதெல்லாம் தேவையா என்று யோசிக்க வேண்டும் .....” ஒரு மாதிரி கசப்பாகப் புன்னகைத்தாள். 

அங்கு சில குழந்தைகள் ஆரவாரமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது ஓரிரு குழந்தைகளை செல்ஃபோனில் படம் பிடித்துக்கொண்டிருந்தாள். இவள் புகைப்படம் எடுப்பதைப் பார்த்துப் பக்கத்தில் ஓடிவந்த குழந்தை டேபிளைத் தட்டியது. உருண்ட ஐஸ் க்ரீம் கப் சாய்ந்தது. பிடித்த இருவர் கரங்களிலும் ’ப்ளாக் கரண்ட் ஐஸ்க்ரீம்’ மின்சாரமாகப் பாய்ந்தது. :)

“மெதுவா யோசிச்சுச் சொல்லு ... அவசரமில்லை ... எந்த சுனாமியும் வரப்போறதில்லை.”

“அது எப்படித் தெரியும்?”

“தெரியும்.” அழுத்தமாகப் புன்னகைத்தார். 

‘திஸ் இஸ் த எண்ட்’ சொல்லிக்கொண்டது மனது. ‘வாழ்வது ஒருமுறை’ அதில் காதலும் ஒருமுறை’. கழுவிய பின்னும் ஐஸ்க்ரீம் பிசுக்கோடு கை மணத்துக்கொண்டிருந்தது .... காதோரம் அவள் அடித்திருந்த பாய்சன் செண்டின் மணத்தைப் போலவே.  

தினம் பல நூறு மெஸேஜ்கள் அவளிடமிருந்து அவருக்கு வந்துகொண்டே இருந்தன. அவர்கள் முதிர்ந்த காதலர்களைப்போல எதையும் பேசிக்கொள்வதில்லை. தினமும் காலையில் ஆரம்பிக்கும்போதும், படுக்கைக்குச் செல்லும் போதும், அவளின் சில மெஸேஜ்கள் அவரைப் புதுப்பிக்கப் போதுமானதாய் இருந்தன.  [நம்மில் பலரின் இன்றைய யதார்த்தம் வெகு அழகாகச் சொல்லப்பட்டுள்ளன .... இந்த ஒருசில வரிகளில் ..... :))))) ] 

காத்திருந்தார் .... அவர்.

இன்றாவது அவருக்கு நான் என் பதிலில் சந்தோஷத்தைக் கொடுத்துவிட வேண்டும். எத்தனை நாள் ... எத்தனை ஆண்டுகள் தவம் செய்கிறார். ஓரிரு வார்த்தைகளில் அவர் முகத்தில் ஏற்படும் சந்தோஷம் ... மெல்ல மெல்லப் பூவைப்போல மலர்ந்து கொண்டிருந்தது அவள் இதயம். 

‘இதயம் தேடும் இதயம்’ ... எந்த நிர்பந்தங்களும் இல்லை. சொல்லி விடலாம்தான். இன்றே சொல்லிவிட்டால் என்ன? ந்யூரான்களின் தாறுமாறுமான ஆட்டம்.



   

இந்த சிறுகதைத் தொகுப்பு நூல் என்பது சுமார் பதினைந்து பீப்பாய்களில் நிரம்பி வழியும் கொம்புத்தேனாக மிகவும் சுவையோ சுவையாக, இனிப்போ இனிப்பாக உள்ளது. நான் அந்த ஒவ்வொரு பீப்பாய்களிலிருந்தும் ஒரே ஒரு சொட்டுத் தேன் போல எடுத்து இங்கு சாம்பிளாக கொஞ்சூண்டு மட்டுமே உங்களிடம் தெளித்துள்ளேன் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எனவே ஆர்வமுள்ள பதிவர்கள் + வாசகர்கள் அனைவரும் இந்த நூலினை வாங்கி தேனை முழுவதுமாக ரஸித்து, ருசித்து, வாசித்து, தேன் பீப்பாய்களிலேயே மூழ்கிக் குளித்து மகிழலாம். 

பிறருக்கு நாம் அன்பளிப்பான வழங்குவதற்கும் இது மிகவும் ஏற்றதொரு நூல் ஆகும் என நான் உங்களுக்குப் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.



யாரோ .... இவர் யாரோ ?
ஆச்சர்யம்... ஆனாலும் உண்மை!

தன் 19-வது வயதில், கல்லூரியில்
இரண்டாம் ஆண்டு படிக்கும்போது
நம் ஹனி மேடம் !

அழகாக அடக்க ஒடுக்கமாக .... 
தோற்றத்தில் ஓர் மடிசார் மாமியாக !!


  


இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலினை, மிகச்சிறப்பாக எழுதி வெளியிட்டு, அதன் ஒரு பிரதியினை எனக்கு அன்புப் பரிசாக அனுப்பிவைத்து, என்னை வாசிக்கவும், மதிப்புரை செய்து என் வலைத்தளத்தினில் வெளியிடவும் வாய்ப்பளித்துள்ள, திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைக் கூறிக்கொண்டு விடைபெற்றுக் கொள்கிறேன்.

   





 


என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]

112 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. September 30, 2016 at 10:23 AM

      வா .... மீனா! வணக்கம்.

      உன் வருகை மிகவும் அதிஸயமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது .... எனக்கு.

      //'மீ.....த....ஃபர்ஸ்டூஊஊஊஊஊ.//

      ஃபர்ஸ்ட் ஆக இருந்தால் மட்டும் போதாது.

      இதன் ஆறு பகுதிகளுக்கும் போய்ப் பொறுமையாகப் படித்துப்பார்த்து, ஒவ்வொன்றுக்கும் ‘தி பெஸ்ட்’ ஆக யோசித்து கமெண்ட்ஸ் கொடுக்கணுமாக்கும்.

      நீக்கு
    2. தாங்க்ஸ் மீனா. நீங்கதான் ஃபர்ஸ்ட் :)

      நீக்கு
  2. ஒவ்வொரு பகுதியிலும் தேனம்மை மேடம் அவர்களின் வித விதமான போட்டோ களை போட்டு பதிவுக்கு அழகு சேர்த்திருக்கீங்க.. நந்தினி கதையில் டாக்டர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் பேஷண்ட் இறந்துவிட்டால் டாக்டரைத்தான்குத்தம் சொல்கிறார்கள்.இந்த கண்ணோட்டம் சரி இல்லைதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... September 30, 2016 at 5:52 PM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      //ஒவ்வொரு பகுதியிலும் தேனம்மை மேடம் அவர்களின் வித விதமான போட்டோ களை போட்டு பதிவுக்கு அழகு சேர்த்திருக்கீங்க..//

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி.

      //நந்தினி கதையில் டாக்டர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் பேஷண்ட் இறந்துவிட்டால் டாக்டரைத்தான் குத்தம் சொல்கிறார்கள். இந்த கண்ணோட்டம் சரி இல்லைதான்..//

      உண்மையில் உறவுகளை பலிகொடுத்து, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதுபோன்ற வலிகளும் வேதனைகளும் இருக்கத்தானே செய்யும். மருத்துவ சிகிச்சைகள் பற்றி பாமரர்களாகிய நமக்கு உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லையே.

      நீக்கு
    2. நன்றி ஸ்ரத்தா உண்மைதான் .

      ///பாமரர்களாகிய நமக்கு உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லையே// சரியா சொன்னீங்க. நன்றி விஜிகே சார்.

      நீக்கு
  3. கல்யாண முருங்கை கதை ரொம்பவே நெகிழ்த்சியாக இருக்கு. குழந்தை இன்மைக்கு பெண்ணே காரணம் என்று இன்றும் பலரும் நம்பி அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தி வருகிறார்கள்..விவாகரத்தே வாங்கினாலும் அதன் பிறகு அவள் வாழ்க்கை..?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... September 30, 2016 at 5:58 PM

      //கல்யாண முருங்கை கதை ரொம்பவே நெகிழ்ச்சியாக இருக்கு.//

      ஆம் .. கதாநாயகிக்கு மகிழ்ச்சியில்லாவிட்டாலும், கதை ரொம்பவும் நெகிழ்ச்சியாகவே உள்ளது.

      //குழந்தை இன்மைக்கு பெண்ணே காரணம் என்று இன்றும் பலரும் நம்பி அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தி வருகிறார்கள்..//

      ஆம். இது மிகவும் தவறானதோர் செயலாகும். பெரும்பாலான கேஸ்களில் குழந்தையின்மைக்கு ஆண்களே காரணம் எனச் சொல்லப்படுகிறது. சில கேஸ்களில் மட்டும் பெண்கள் காரணமாக இருக்கலாம்.

      //விவாகரத்தே வாங்கினாலும் அதன் பிறகு அவள் வாழ்க்கை..?????//

      கேள்விக்குறிதான் என நீங்கள் இங்கு சொல்லியுள்ளீர்கள். ஆனால் நம் கதாசிரியர் கதையில் என்ன சொல்லியிருக்காங்களோ! படித்தால்தான் தெரியவரும்.

      நீக்கு
    2. நன்றி ஸ்ரத்தா ஸபுரி & நன்றி விஜிகே சார்.

      நீக்கு
  4. ஸ்ட்ரோக் கதை நடுவயதை தாண்டியவர்களின் காதலை சொல்லும் கதையா...இதுபோல கதைகளில் வார்த்தைகளில் மிகுந்த கவனம்தேவை. நல்ல மனதுடன் அவர்கள் விரும்பி பழகிவந்தாலும் பார்க்கிற கண்கள் கருப்பு கண்ணாடி போட்டுத்தானே பார்க்கும்..
    இதுவரை கோபால் ஸார் திருமதி தேனம்மை லெஷ்மணன் அவர்களின் எழுத்துக்களை நாம் அனைவரும் படித்து ரசித்து மகிழ ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார்கள். ஸாருக்கு நன்றிகள்..பாராட்டுகள்... தேனம்மை மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள். இனி மேல எப்ப பதிவு போடுவீங்க கோபால்ஸார்... ஆவலுடன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... September 30, 2016 at 6:08 PM

      //ஸ்ட்ரோக் கதை நடுவயதை தாண்டியவர்களின் காதலை சொல்லும் கதையா...//

      ஆமாம். அதிலென்ன தப்பு? நடுவயதைத் தாண்டியவர்கள் காதல் செய்யக்கூடாதா?

      //இதுபோல கதைகளில் வார்த்தைகளில் மிகுந்த கவனம்தேவை. நல்ல மனதுடன் அவர்கள் விரும்பி பழகிவந்தாலும், பார்க்கிற கண்கள் கருப்பு கண்ணாடி போட்டுத்தானே பார்க்கும்..//

      அதையெல்லாம் பற்றி கவலைப்படுவானேன்.

      "கண்ணின் கடைவிழியை காதலியர் காட்டி விட்டால்
      மண்ணில் குமாரர்க்கு மாமலையும் ஓர் கடுகாகும்"

      "பாதி நிலாவை விண்ணில் வைத்து
      மீதி நிலாவை மண்ணில் வைத்து
      மண்ணில் வைத்ததை பெண்ணில் வைத்தானோ
      அவள் கண்ணில் வைத்தானோ"

      என்று நினைத்து, இவர்கள் காரியத்தை இவர்கள் பார்த்துக்கொண்டே செல்ல வேண்டியதுதான். :)

      //இதுவரை கோபால் ஸார் திருமதி தேனம்மை லெஷ்மணன் அவர்களின் எழுத்துக்களை நாம் அனைவரும் படித்து ரசித்து மகிழ ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார்கள். ஸாருக்கு நன்றிகள்.. பாராட்டுகள்... தேனம்மை மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி

      //இனி மேல எப்ப பதிவு போடுவீங்க கோபால்ஸார்... ஆவலுடன்.....//

      போடத் தோன்றிடும் போது ஆவலுடன் போடுவேன். :) எப்போது போடுவேன் என்பதை என்னால் இப்போதே சொல்ல இயலாது.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
    2. கருப்புக் கண்ணாடி போட்டுப் பார்ப்பார்கள் என்பது உண்மைதான் நன்றி ஸ்ரத்தா ஸபுரி. ஆனால் கம்பானியன்ஷிப் என்று இப்போது வாழ்கிறார்களே அது போன்றதான காதல்.புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். நன்றி :)

      நன்றி விஜிகே சார். அடுத்த பதிவுகள் தொடர்ந்து போடுங்கள். :) நாங்களும் எதிர்பார்ப்பில் :)

      நீக்கு
  5. இந்த பதிவிலும் வித்யாசமான தலைப்புகள் கதைகள்.. எவ்வளவு விஷயங்கள் எழுதி இருக்காங்க.. வாழ்த்துகள் பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ராப்தம் September 30, 2016 at 6:11 PM

      வாங்கோ, சாரூஊஊஊ, வணக்கம்.

      //இந்த பதிவிலும் வித்யாசமான தலைப்புகள் கதைகள்.. எவ்வளவு விஷயங்கள் எழுதி இருக்காங்க.. வாழ்த்துகள் பாராட்டுகள்...//

      ஏதோ ரத்தின சுருக்கமாகச் சொல்லிவிட்டு, எஸ்கேப் ஆகிக்கொண்டு இருக்கிறாய் .... நீ. எனினும் ஓக்கே.

      உன் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.....ப்பா.

      நீக்கு
    2. நன்றி ப்ராப்தம் & விஜிகே சார்

      நீக்கு
  6. அருமையான விமர்சனம்...

    படத்தில் இருப்பது அவர்களேதான்...தெரிந்துவிட்டதே!!!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu
      September 30, 2016 at 6:15 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையான விமர்சனம்...//

      மிக்க மகிழ்ச்சி.

      //படத்தில் இருப்பது அவர்களேதான்... தெரிந்துவிட்டதே!!!...//

      சபாஷ் ! நல்லதொரு கண்டுபிடிப்பு.

      நீக்கு
    2. நன்றி துளசி சகோ & கீத்ஸ் & வீஜிகே சார்

      நீக்கு
  7. அழகாக விமர்சித்துச் சகோ தேனம்மையைச் சிறப்பித்த தங்களுக்கும் வாழ்த்துகள் சார். அத்தனைக் கதைகளையும் மிகவும் ஆழ்ந்து வாசித்து கருத்துத் தெரிவித்து வாசிக்கும் ஆவலையும் தூண்டியமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu
      September 30, 2016 at 6:17 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அழகாக விமர்சித்துச் சகோ தேனம்மையைச் சிறப்பித்த தங்களுக்கும் வாழ்த்துகள் சார். அத்தனைக் கதைகளையும் மிகவும் ஆழ்ந்து வாசித்து கருத்துத் தெரிவித்து வாசிக்கும் ஆவலையும் தூண்டியமைக்கும் நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், வாசிக்கும் ஆவலை நான் தூண்டியதாகச் சொல்லி வாழ்த்தியுள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
    2. உண்மைதான் துளசி சகோ. விஜிகே சார் மிகப் பொறுமையுடன் படித்து அழகாக எழுதி இருக்காங்க. அதுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும் :)

      நீக்கு
  8. கோபு பெரிப்பா இது கடைசி பகுதியா..இனிமேல எப்போ புது பதிவு போடப்போறேள்.. இன்னிக்கு போட்டிருந்த கதை சுருக்கமும் நல்லா இருக்கு.. தேனம்மை மேடத்துக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy September 30, 2016 at 6:17 PM

      வா .... ஹாப்பி, வணக்கம்.

      //கோபு பெரிப்பா இது கடைசி பகுதியா..//

      எப்போதும் ’கடைசி’ என்ற வார்த்தையை நாம் எங்குமே உபயோகிக்கக் கூடாது. அதனால் இதனைக் கடைசி பகுதி எனச் சொல்லக்கூடாது...டா கண்ணு. இந்தத் தொடரின் நிறைவுப்பகுதி என நிறைவாகச் சொல்லணும். ஓக்கேயா?

      //இனிமேல எப்போ புது பதிவு போடப்போறேள்..//

      அது எனக்கே தெரியாதே. நான் ஹாப்பியாக இருக்கும் நாள் வரும்போது, என் செல்லக்குழந்தை ஹாப்பிக்காக, புதுப்பதிவு போட முயற்சிக்கிறேன்.

      //இன்னிக்கு போட்டிருந்த கதை சுருக்கமும் நல்லா இருக்கு.. தேனம்மை மேடத்துக்கு வாழ்த்துகள்...//

      உன் தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
    2. நன்றி ஹேப்பி. நிறைவுப் பகுதியும் அருமை விஜிகே சார். அடுத்தும் பதிவுகள் போடுங்க. டைம் கிடைக்கும்போது கட்டாயம் வந்து லேட்டானாலும் பதில் போடுவேன் :)

      நீக்கு
  9. 19--- வயதில் இதுபோல ஸாரி கட்டுவாங்களா.......
    இன்றய மூன்று கதைகளின் அவுட் லைனும் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. shamaine bosco September 30, 2016 at 6:20 PM

      வாங்கோ, வணக்கம்.

      //19--- வயதில் இதுபோல ஸாரி கட்டுவாங்களா.......//

      அதெல்லாம் பொதுவாக யாரும் கட்ட மாட்டார்கள். இவர்கள் கல்லூரியில் படிக்கும்போது ஏதும், இந்த டிரஸ்ஸில் நாடகத்தில் ஒருவேளை நடித்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

      இதற்கு அவர்களே வந்து பதில் சொன்னால் நாம் எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

      ஹிந்துக்களில், குறிப்பாக ஐயர் இனத்துப் பெண்கள், தங்கள் திருமணத்தின் போது இதுபோல 9 கெஜம் (NINE YARDS) புடவை கட்டாயமாகக் கட்டிக்கொள்வார்கள். இதற்கு மடிசார் புடவை / மடிசார் கட்டு என்பது பெயர்.

      வேறு சில மதச் சடங்குகள், பூஜைகள் முதலியவற்றின் போதும் திருமணமான ஐயர் பெண்கள் மட்டும் இதுபோலக் கட்டிக்கொள்வது உண்டு.

      //இன்றைய மூன்று கதைகளின் அவுட் லைனும் நல்லா இருக்கு//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களின் தொடர் வருகைக்கும் என் நன்றிகள்.

      நீக்கு
    2. இது காஸ்ட்யூம்ஸ் ஆஃப் தமிழ்நாடு என்ற கல்ச்சுரல் போட்டியில் கலந்துகொண்டபோது எடுத்தது. ஐயங்கார் மாமி போல் புடவை கட்டி இருந்தேன். பங்கஜம் மிஸ் என்பவர்கள் இப்படி கட்டி விட்டார்கள். மிகுந்த சிக்கலான கட்டு. கொஞ்சநேரம் புடவைக்குள் கட்டு கட்டுன்னு கட்டி தோல் பாவை மாதிரி ஊசலாட விட்டமாதிரி கூட இருந்தது :) தினம் எப்படித்தான் கட்டுகின்றார்களோ . இதில் என் நெற்றியில் தீட்டி இருப்பதுபோல வடகலை தென்கலை என்று புடவைக்குக் கூடத் தனித் தனிக் கட்டு இருக்காம். நன்றி ஷாமைன் மேம். & விஜிகே சார்.

      நீக்கு
  10. இந்த பகுதி நிறைவு பகுதியா ரொம்ப நல்லா இருந்திச்சு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... September 30, 2016 at 6:26 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இந்த பகுதி நிறைவு பகுதியா ரொம்ப நல்லா இருந்திச்சு..//

      அப்பாடா, இத்தோடு ஓவர். இந்தப்பகுதி நிறைவுப் பகுதியாக உள்ளது என்பதாலேயே ரொம்ப நல்லா இருந்திச்சா? :)

      தங்களின் தொடர் வருகைக்கு என் நன்றிகள்.

      நீக்கு
    2. நன்றி ஆல் இஸ் வெல் & விஜிகே சார்

      நீக்கு
  11. தேனம்மை லஷ்மணனின் இளவயது ஃபோட்டோ எங்கிருந்து பிடித்தீர்கள்? தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். September 30, 2016 at 6:31 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //தேனம்மை லஷ்மணனின் இளவயது ஃபோட்டோ எங்கிருந்து பிடித்தீர்கள்?//

      அதெல்லாம் தொழில் இரகசியமாக்கும். வெளியே சொல்ல முடியாதாக்கும்.

      அதைப்பிடிக்க நான் பட்டபாடு எனக்கு மட்டுமே தெரியுமாக்கும்.

      //தொடர்கிறேன்.//

      தொடரே முடிந்து விட்டதே ! இனி எப்படித் தொடர்வீர்கள்?

      தூக்கக்கலக்கத்தில் உள்ளீர்கள் எனத் தெரிகிறது.

      ஸ்ரீராம் முன்பு போல இல்லையாக்கும். :(

      எனினும் தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
    2. நன்றி ஸ்ரீராம். அது முகநூலில் என் பக்கத்தில் இருக்கு ஸ்ரீராம். கல்லூரி காம்பெடிஷனில் எடுத்தது. :)

      நன்றி விஜிகே சார் :)

      நீக்கு
  12. தேனம்மையின் புத்தகத்திற்கு மிக அழகான விமர்சனம். உங்கள் ஓவியம் அற்புதம்!! நீங்கள் பத்திரிகைத்துறையில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் சென்றிருந்தால் மிகப்பெரிய புகழை அடைந்திருப்பீர்கள்!

    உங்களுக்கும் தேனம்மைக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் September 30, 2016 at 6:38 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //தேனம்மையின் புத்தகத்திற்கு மிக அழகான விமர்சனம்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //உங்கள் ஓவியம் அற்புதம்!!//

      இது 02.03.1980 தேதியிட்ட ‘கல்கி’ யில் அட்டைப்பட ஜோக்காக வந்தது. (ஒரிஜினலாக யார் வரைந்தது என எனக்கு நினைவில் இல்லை) அதைப்பார்த்து மகிழ்ச்சியில் எழுச்சியுடன் 1980 இல் நான் இதை வரைந்து என்னிடம் பத்திரமாக வைத்துக்கொண்டேன்.

      //நீங்கள் பத்திரிகைத்துறையில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் சென்றிருந்தால் மிகப்பெரிய புகழை அடைந்திருப்பீர்கள்!//

      தாங்கள் இதுபோலச் சொல்லுவதைக் கேட்கவே எனக்கு, நான் அந்த மிகப்பெரிய புகழையே அடைந்துவிட்டது போல மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.

      //உங்களுக்கும் தேனம்மைக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகள் + நல்வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. ஆமாம் சரியா சொன்னீங்க மனோ மேம். அதைச் சொல்ல மறந்து போச்சே. சாரின் கார்ட்டூன் திறமையும் வெகு அற்புதம். அசத்துகிறார். இன்னும் எத்தனை திறமைகள் அவரிடம் இருக்குன்னு தெரில :) நன்றி சார் !

      நீக்கு
  13. அனைத்துக் கதைகளுமே
    மிக ஆழமான கருவது கொண்டதாகவும்
    யதார்த்தமான நேர்மையான தீர்வு
    காண்பதாகவும் இருப்பதை தங்கள் அருமையான
    விமர்சனம் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது

    அற்புதமான விமர்சனத் தொடர்..
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S September 30, 2016 at 6:45 PM

      வாங்கோ Mr RAMANI Sir, வணக்கம்.

      //அனைத்துக் கதைகளுமே மிக ஆழமான கருவது கொண்டதாகவும் யதார்த்தமான நேர்மையான தீர்வு
      காண்பதாகவும் இருப்பதை தங்கள் அருமையான
      விமர்சனம் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது.//

      மிக்க மகிழ்ச்சி, ஸார். :)

      //அற்புதமான விமர்சனத் தொடர்.. பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஊக்கமும் உற்சாகமும் ஊட்டிடும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      தங்களை அகஸ்மாத்தாக அமெரிக்காவில் பார்க்க நேர்ந்தது .... ஃபேஸ்புக்கில் .... நான் ஃபேஸ்புக் பக்கமெல்லாம் அடிக்கடி செல்லாதவனாக இருப்பினும்.

      பாராட்டுகள். தங்கள் பயணம் மேலும் மேலும் இனிமையாக என் மனமார்ந்த வாழ்த்துகள், ஸார். :)

      நீக்கு
    2. நன்றி ரமணி சார் & விஜிகே சார்

      நீக்கு
  14. "கல்யாண முருங்கை பிள்ளைப்பேறு அளிக்கும் மருத்துவச் செடி. ஆனால் அதற்குக் காய்ப்பில்லை. கனியில்லை. பூத்து உதிரும் அதற்குப் பிள்ளைப்பேறு கிடையாது." சிறப்பான வரிகள்! உங்கள் கார்ட்டூன் மிகவும் அருமை. தொடர்ந்து ஓவியம் வரையுங்கள். ஸ்ட்ரோக் மிகவும் வித்தியாசமான கதையென்று உங்கள் விமர்சனம் மூலமறிந்தேன். படிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாக விமர்சனம் எழுதியமைக்குப் பாராட்டுக்கள் கோபு சார்! அவசியம் வாங்கிப் படிப்பேன். மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி September 30, 2016 at 8:00 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //"கல்யாண முருங்கை பிள்ளைப்பேறு அளிக்கும் மருத்துவச் செடி. ஆனால் அதற்குக் காய்ப்பில்லை. கனியில்லை. பூத்து உதிரும் அதற்குப் பிள்ளைப்பேறு கிடையாது." சிறப்பான வரிகள்!//

      ஆமாம். முருங்கையில் ’கல்யாண முருங்கை’ என்று ஒன்று உள்ளதென்பதும், அதன் விசித்திர குணாதிசயங்களை, அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் நான் அறிந்துகொண்டுள்ளதும், இந்த நம் ஹனி மேடத்தின் நூலின் மூலம் மட்டுமே.

      சிறப்பாக வரிகள் எனத் தாங்கள் சிறப்பித்துச் சொல்லியுள்ளதையும் நான் எனக்குள் சிறப்பாகவே உணர்ந்து கொண்டேன். தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> ஞா. கலையரசி (2)

      //உங்கள் கார்ட்டூன் மிகவும் அருமை.//

      நான் என் கையால் வரைந்துள்ள இந்தக் கார்ட்டூன் 02.03.1980 தேதியிட்ட ‘கல்கி’ யில் அட்டைப்பட ஜோக்காக வந்தது, மட்டுமே.

      (ஒரிஜினலாக யார் வரைந்தது என எனக்கு நினைவில் இல்லை)

      அன்று அதைப்பார்த்து மிகவும் மகிழ்ந்துபோன நான் எழுச்சியுடன் 1980 இல் இதை வரைந்து என்னிடம் பத்திரமாக சேமித்து வைத்துக்கொண்டேன்.

      அப்போது என் வயது 30 மட்டுமே. :)

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> ஞா. கலையரசி (3)

      //தொடர்ந்து ஓவியம் வரையுங்கள்.//

      என் மன நிம்மதிக்காகவும், ஆத்ம திருப்திக்காகவும், இப்போது அதைத்தான் நான் மீண்டும் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

      இங்குள்ள என் பெரிய அக்கா வீட்டில் வழக்கம்போல இந்த ஆண்டும் நவராத்திரி கொலு வைத்திருக்கிறார்கள்.

      அதற்காக சில படங்கள் வரைந்து தரச்சொல்லி என் அக்கா என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

      அதற்காக ஃப்ரெஷ்ஷாக மூன்று படங்கள், அங்கு டிஸ்ப்ளே செய்ய கடந்த 4-5 நாட்களில் வரைந்து வைத்துள்ளேன்.

      அவற்றைத் தங்களுக்கு, தங்களின் பார்வைக்காக, இன்று மெயில் மூலம் தனியாக அனுப்பி வைக்கிறேன். :)

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> ஞா. கலையரசி (4)

      //ஸ்ட்ரோக் மிகவும் வித்தியாசமான கதையென்று உங்கள் விமர்சனம் மூலமறிந்தேன்.//

      உண்மையிலேயே அது எனக்கு மிகவும் பிடித்தமான, சற்றே வித்யாசமான கதையாகத்தான், நம் ஹனி மேடத்தால் எழுதப்பட்டுள்ளது.

      இருப்பினும் அதன் விமர்சனத்திலும், என்னாலான பல்வேறு புதிய கோணத்திலான ஸ்ட்ரோக் கொடுக்கப்பட்டுத்தான், நானும் இங்கு சற்றே புதுமையாக எழுதி தங்கள் அனைவரையும் நன்கு குழப்பி விட்டுள்ளேன். :)))))

      >>>>>

      நீக்கு
    5. கோபு >>>>> ஞா. கலையரசி (5)

      //படிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாக விமர்சனம் எழுதியமைக்குப் பாராட்டுக்கள் கோபு சார்!//

      மிக்க மகிழ்ச்சி, மேடம். மிகவும் சந்தோஷம்.

      //அவசியம் வாங்கிப் படிப்பேன். மிகவும் நன்றி!//

      புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வமுள்ள (புத்தகப்புழுவான) தாங்கள் ஒருவராவது அவசியமாக இதனை வாங்கிப் படிப்பீர்கள் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும், ஆச்சர்யமான + ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு
    6. நன்றி கலையரசி மேம் ! & விஜிகே சார். தொடர்ந்து வரையுங்கள். அந்த ஓவியங்களையும் ஒரு இடுகையா போடலாமே.

      நீக்கு
  15. ஒவ்வொரு கதைக்கும் விரிவான பார்வை.
    அருமையான நூல் விமர்சனம்...
    எல்லாப் பகிர்வும் வாசித்தேன் ஐயா...
    தேனக்காவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிவை சே.குமார் September 30, 2016 at 8:14 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒவ்வொரு கதைக்கும் விரிவான பார்வை.
      அருமையான நூல் விமர்சனம்... எல்லாப் பகிர்வும் வாசித்தேன் ஐயா...//

      ’ஒவ்வொரு கதைக்கும் விரிவான பார்வையுடன் கூடிய அருமையான நூல் விமர்சனம்’ எனப் பாராட்டிச் சொல்லியுள்ள தங்களின் அன்புக்கு என் நன்றிகள்.

      //தேனக்காவுக்கு வாழ்த்துக்கள்.//

      தேன் போன்ற இனிமையான வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி.

      நீக்கு
    2. நன்றி குமார் சகோ & விஜிகே சார்

      நீக்கு
  16. ஒவ்வொரு கதைக்கான தலைப்பையும் வரிசையாகக் கவனித்துக் கொண்டே வந்தேன். தலைப்பைப் பார்த்து உங்கள் குறிப்புகளைப் படித்ததுமே தலைப்பின் பொருத்தம் புரிந்து விடும்.

    ஆனால் அந்த 'ஸ்ட்ரோக்' கதைத் தலைப்பைப் பார்த்ததும், உங்கள் குறிப்புகளைப் படித்தும் நான் நினைத்த மாதிர்யான கதை இல்லை என்று தெரிந்தது. அப்புறம் கதையில் வரும் சில வரிகளைப் படித்ததும் தான் தெரிந்தது.

    நான் நினைத்த ஸ்ட்ரோக் வேறே; கதைக்க்கான தலைப்பாய் வந்த ஸ்ட்ரோக் வேறே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி September 30, 2016 at 9:38 PM

      வாங்கோ ஸார். நமஸ்காரங்கள், வணக்கம்.

      //ஒவ்வொரு கதைக்கான தலைப்பையும் வரிசையாகக் கவனித்துக் கொண்டே வந்தேன். தலைப்பைப் பார்த்து உங்கள் குறிப்புகளைப் படித்ததுமே தலைப்பின் பொருத்தம் புரிந்து விடும். //

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      //ஆனால் அந்த 'ஸ்ட்ரோக்' கதைத் தலைப்பைப் பார்த்ததும், உங்கள் குறிப்புகளைப் படித்தும் நான் நினைத்த மாதிரியான கதை இல்லை என்று தெரிந்தது. அப்புறம் கதையில் வரும் சில வரிகளைப் படித்ததும் தான் தெரிந்தது ..... ‘நான் நினைத்த ஸ்ட்ரோக் வேறே; கதைக்கான தலைப்பாய் வந்த ஸ்ட்ரோக் வேறே’ என்பது.//

      தாங்கள் நினைத்த ‘ஸ்ட்ரோக்’ ஆகவும் ஒருவேளை அந்தக்கதையின் ஒரு பகுதி இருந்து, நான் என் விமர்சனத்தில், மேலும் சில புதிய ஸ்ட்ரோக்குகளைக் கூடுதலாக என் பாணியில் நுழைத்து, கதையில் ஒருவேளை வரக்கூடிய அந்த ஒரிஜினல் ஸ்ட்ரோக்கையே நான் காணாமல் போகவைத்து, என் விமர்சனத்தைச் சற்றே சுவாரஸ்யப்படுத்தி எழுதியிருப்பேனோ என்னவோ?

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், உன்னிப்பான கழுகுப்பார்வையுடன் கூடிய வாசித்தலுக்கும், சிறப்பான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. நன்றி ஜிவி சார் & விஜிகே சார்

      நீக்கு
  17. அருமையான விமர்சனம் அய்யா!
    புத்தகத்தைப் படிக்கலாம் என்றால் அதற்குள் இரவல் போய்விட்டது. திரும்பிவந்ததும் படிக்கிறேன். அற்புதமான விமர்சனம் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.P.SENTHIL KUMAR September 30, 2016 at 10:15 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையான விமர்சனம் ஐயா!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      //புத்தகத்தைப் படிக்கலாம் என்றால் அதற்குள் இரவல் போய்விட்டது. திரும்பிவந்ததும் படிக்கிறேன்.//

      மிகவும் நல்லது. அப்படியே செய்யுங்கள்.

      //அற்புதமான விமர்சனம் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகம் ஊட்டிடும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
    2. நன்றி செந்தில் சகோ. உங்கள் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன். புக் எப்ப திரும்பும் :)

      & நன்றி விஜிகே சார்.

      நீக்கு
  18. கதை விமர்சனம் அருமை, படிக்க ஆவலை ஏற்படுத்துகிறது.
    உங்கள் ஓவியம் அருமை.
    தேனம்மையின் பழைய படம் (மடிசார்மாமி) அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு October 1, 2016 at 3:22 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //கதை விமர்சனம் அருமை, படிக்க ஆவலை ஏற்படுத்துகிறது.//

      மிக்க மகிழ்ச்சி.

      //உங்கள் ஓவியம் அருமை.//

      மிகவும் சந்தோஷம்.

      //தேனம்மையின் பழைய படம் (மடிசார்மாமி) அழகு.//

      நீங்களும் அதனை அழகாகவே சொல்லியுள்ளீர்கள். :)

      நீக்கு
    2. நன்றி கோமதி மேம். :)

      நன்றி விஜிகே சார். :)

      நீக்கு
  19. வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு October 1, 2016 at 3:23 PM

      //வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. நன்றி கோமதி மேம் :) & விஜிகே சார் )

      நீக்கு
  20. அருமையான கதைக் கொத்து. படிக்கப் படிக்க புத்தகம் பூராவும் படிக்க எண்ணம் தோன்றுகிறது. தேனம்மை லக்ஷ்மண் செட்டிநாட்டுப் பக்கத்துக்காரர்கள் என்பது என் யூகம், மடிசாரில் மின்னுகிறார். ஒரு தொடர் படித்த எண்ணம் மனதில் தோன்றுகிறது. திரும்பவும் வேறு விதமான தொடரில் ஸந்திக்கும் வரை அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி October 1, 2016 at 3:47 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //அருமையான கதைக் கொத்து. படிக்கப் படிக்க புத்தகம் பூராவும் படிக்க எண்ணம் தோன்றுகிறது.//

      மிக்க மகிழ்ச்சி.

      //தேனம்மை லக்ஷ்மண் செட்டிநாட்டுப் பக்கத்துக்காரர்கள் என்பது என் யூகம்,//

      என் யூகமும் அதுவே ! :)

      //மடிசாரில் மின்னுகிறார்.//

      மின்னிடும் கருத்துக்களாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள், மாமி. :))

      //ஒரு தொடர் படித்த எண்ணம் மனதில் தோன்றுகிறது.//

      மிகவும் சந்தோஷம்.

      //திரும்பவும் வேறு விதமான தொடரில் ஸந்திக்கும் வரை அன்புடன்//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான ஆசிகளுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி. பார்ப்போம்.

      நீக்கு
    2. உண்மைதான் காமாட்சி மேம். நன்றி :)

      நன்றி விஜிகே சார்

      நீக்கு
  21. ‘நந்தினி’ கதையை திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் குரலில் கேட்டேன். உடற்தேய்வு நோய் (AIDS) வந்து இறந்த பெற்றோர்களுக்கு பிறந்த நந்தினி திருமணம் செய்துகொள்ளாமல் மருத்துவராக சேவை செய்ய தொடங்கியது, பின்னர் தன்னுடைய மருத்துவமனையில் அதே நோயுள்ள பெண் வந்து இறந்தாலும் அந்த குடும்பத்தின் கௌரவத்திற்காக அதை ஏற்றுக்கொண்டது, அந்த நோய் வந்தால் என்ன மாதிரியான மருந்துகள் எடுக்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வது போன்றவைகளை மிக அழகாக ஏற்ற இறக்கக் குரலில் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் கதையை சொல்லி, மருத்துவர் நந்தினியை பாராட்ட வைத்துவிடுகிறார் திருமதி சரஸ்வதி தியாகராஜன்.

    நீங்கள் சொன்னதுபோல் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் மிக பிரமாதமாக எழுதியுள்ளார். கதையை திறனாய்வு செய்து அறிமுகப்படுத்திய தங்களுக்கும், நூலாசிரியருக்கும், அந்த கதையை ஒலிவடிவில் நமக்குத் தந்த அவரது தோழிக்கும்பாராட்டுக்கள்!

    கல்யாண முருங்கை கதை பற்றி சொல்லும்போது
    //மற்றவர்களுக்காகவே பல்லாண்டுகள் உழைத்து வாழ்ந்த பின், அனைவரிடமிருந்தும் ஓரளவுக்கு விடுதலை கிடைத்தபின், ஒருசிலரைத் தானே வலுக்கட்டாயமாக பிரித்தபின், அவர்கள் எல்லோரும் அவரவர்கள் வாழ்க்கையில் ஏதும் கிடைக்கவே இல்லை என்ற இவ்வாறான விரக்தி அவளுக்கு மேலிடுவதில் வியப்பேதும் இல்லைதான்.//

    என்ற தங்களின் கருத்து இன்று எதிர்பார்ப்போடு புக்ககம் புகுந்து அது நிறைவேறாமல் அவதியுறும் பலரின் நிலையை பிரதிபலிக்கிறது.

    நீதிமன்றத்தில் மணமுறிவுக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, தன் பிறந்த வீட்டினில் புகுந்துகொண்டிருக்கும் ஓர் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்ணுக்கு நீதிமன்ற தீர்ப்பு வரும் முதல் இரவு நடந்தது என்ன என்பதை அறிய ஆவலைத்தூண்டிவிட்டீர்கள்.

    //கல்யாண முருங்கை பிள்ளைப்பேறு அளிக்கும் மருத்துவச் செடி. ஆனால் அதற்குக் காய்ப்பில்லை. கனியில்லை. பூத்து உதிரும் அதற்குப் பிள்ளைப்பேறு கிடையாது.//

    என்ற வரிகள் கதைக்கு சரியாக இருக்கலாம். ஆனால் உண்மையில் கல்யாணமுருங்கை பூக்கும். காய்க்கும். அதற்கு விதைகள் உண்டு. விதைகள் மூலம் அவைகளை பயிரிடலாம். விதைகளின் முளைப்புத் திறன்(Germination capacity) 60 முதல் 75 விழுக்காடு வரை. பெரும்பாலும் கிளைகளை வெட்டி நட்டு பயிரிடுவது வழக்கம்.
    ‘கன்னிப் பெண்கள் இருக்கும் வீட்டில், கல்யாண முருங்கை இருக்கவேண்டும்‘ என்றொரு பழமொழி கூட உண்டு. இந்த செடி இருக்கும் வீடுகளில் பெண்மை சார்ந்த எந்த நோயும் வராது என்ற ஐதீகமும் இருக்கிறது.

    மேலே சொல்லியிருப்பவை குற்றம் சொல்வதற்காக அல்ல.உண்மையை விளக்கத்தான். மற்றபடி கதை அருமை.

    .
    ‘ஸ்ட்ரோக்’ கதைக்காக தாங்கள் வரைந்திருக்கும் கேலிச்சித்திரம் மிக நன்று. கதை வித்தியாசமாக இருப்பதால் தாங்களும் வித்தியாசமாக படம் வரைந்து திறனாய்வை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். காதலர்களின் காதல் கைகூடியதா என்பதை குறியீட்டுக்கோடுகள் மூலம் கதாசிரியர் சொல்லியிருக்கிறார் என்பது புதுமை.

    //சொல்லி விடலாம்தான். இன்றே சொல்லிவிட்டால் என்ன? ந்யூரான்களின் தாறுமாறுமான ஆட்டம்.// என்ற வரிகள் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களை நினைவூட்டியது.



    இந்த பதினைந்து கதைகளையும் படித்து திறனாய்வு செய்து சுருக்கி Capsule வடிவில் தந்த உங்களுக்கு பாராட்டுக்கள்! அருமையான எழுத்து நடையும் திறனும் கொண்ட திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    உண்மையில் இந்த சிறுதைத் தொகுப்பு திருமண விழாவில் பரிசளிக்கத் தக்கதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி 6 October 1, 2016 at 6:10 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //‘நந்தினி’ கதையை திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் குரலில் கேட்டேன்.//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி ஸார். நானும் அதனைக் கேட்டு ரஸித்தேன், ஒருமுறைக்கு இருமுறையாகவே.

      அழகாக நிறுத்தி நிதானமாக புரியும்படியாகவே சொல்லியுள்ளார்கள்.

      //உடற்தேய்வு நோய் (AIDS) வந்து இறந்த பெற்றோர்களுக்கு பிறந்த நந்தினி திருமணம் செய்துகொள்ளாமல் மருத்துவராக சேவை செய்ய தொடங்கியது, பின்னர் தன்னுடைய மருத்துவமனையில் அதே நோயுள்ள பெண் வந்து இறந்தாலும் அந்த குடும்பத்தின் கௌரவத்திற்காக அதை ஏற்றுக்கொண்டது, அந்த நோய் வந்தால் என்ன மாதிரியான மருந்துகள் எடுக்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வது போன்றவைகளை மிக அழகாக ஏற்ற இறக்கக் குரலில் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் கதையை சொல்லி, மருத்துவர் நந்தினியை பாராட்ட வைத்துவிடுகிறார் திருமதி சரஸ்வதி தியாகராஜன்.//

      நீங்கள் இதனை மிக அழகாக ரஸித்து, இங்கு எல்லோருக்கும் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். இதனால் மேலும் சிலர் ஆர்வமாக அந்தக்கதையை முழுவதுமாகக் கேட்க நேரிடும் என நான் நினைக்கிறேன்.

      //நீங்கள் சொன்னதுபோல் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் மிக பிரமாதமாக எழுதியுள்ளார். கதையை திறனாய்வு செய்து அறிமுகப்படுத்திய தங்களுக்கும், நூலாசிரியருக்கும், அந்த கதையை ஒலிவடிவில் நமக்குத் தந்த அவரது தோழிக்கும் பாராட்டுக்கள்! //

      மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      அதன் ஒலிவடிவுக்கான இணைப்பினைக் கொடுக்கலாமா வேண்டாமா என நான் நெடுநேரம் யோசித்தேன்.

      இருப்பினும் உங்களைப் போன்ற ஆர்வமுள்ள யாரோ ஒருசிலரைத் தவிர, வேறு யார் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிப் பொறுமையாகக் கேட்கப்போகிறார்கள், என்ற தைர்யத்தில் கொடுத்து விட்டேன். :)

      தாங்கள் ஒருவராவது அதனைக் கேட்டுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> வே. நடனசபாபதி (2)

      கல்யாண முருங்கை கதை பற்றி சொல்லும்போது

      **மற்றவர்களுக்காகவே பல்லாண்டுகள் உழைத்து வாழ்ந்த பின், அனைவரிடமிருந்தும் ஓரளவுக்கு விடுதலை கிடைத்தபின், ஒருசிலரைத் தானே வலுக்கட்டாயமாக பிரித்தபின், அவர்கள் எல்லோரும் அவரவர்கள் வாழ்க்கையில் .. பூத்துக்குலுங்கி செழித்து சிறப்பாக தனிக்குடுத்தனம் இருப்பதைத் தன் கண்களால் காணும்போது, தனக்கு என்று தன் வாழ்க்கையில்.. ஏதும் கிடைக்கவே இல்லை என்ற இவ்வாறான விரக்தி அவளுக்கு மேலிடுவதில் வியப்பேதும் இல்லைதான்.**

      என்ற தங்களின் கருத்து இன்று எதிர்பார்ப்போடு புக்ககம் புகுந்து அது நிறைவேறாமல் அவதியுறும் பலரின் நிலையை பிரதிபலிக்கிறது.//

      பெரும்பாலான பெண்களுக்கு, அவர்களின் ஒருசில நியாயமான எதிர்பார்ப்புகளும்கூட, புக்ககத்தில் நிறைவேறாமல்தான் போய்விடுகின்றன. :(

      >>>>>

      நீக்கு
    3. VGK >>>>> வே. நடனசபாபதி (3)

      //நீதிமன்றத்தில் மணமுறிவுக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, தன் பிறந்த வீட்டினில் புகுந்துகொண்டிருக்கும் ஓர் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்ணுக்கு நீதிமன்ற தீர்ப்பு வரும் முதல் இரவு நடந்தது என்ன என்பதை அறிய ஆவலைத்தூண்டிவிட்டீர்கள்.//

      முதல் நாள் இரவு நடந்தது என்ன? என்பதை அறியும் ஆவல், (முதலிரவைப்போலத்) தூண்டப்பட்டதாகச் சொல்லியுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      >>>>>

      நீக்கு
    4. VGK >>>>> வே. நடனசபாபதி (4)

      ****கல்யாண முருங்கை பிள்ளைப்பேறு அளிக்கும் மருத்துவச் செடி. ஆனால் அதற்குக் காய்ப்பில்லை. கனியில்லை. பூத்து உதிரும் அதற்குப் பிள்ளைப்பேறு கிடையாது.****

      என்ற வரிகள் கதைக்கு சரியாக இருக்கலாம். ஆனால் உண்மையில் கல்யாணமுருங்கை பூக்கும். காய்க்கும். அதற்கு விதைகள் உண்டு. விதைகள் மூலம் அவைகளை பயிரிடலாம். விதைகளின் முளைப்புத் திறன் (Germination capacity) 60 முதல் 75 விழுக்காடு வரை. பெரும்பாலும் கிளைகளை வெட்டி நட்டு பயிரிடுவது வழக்கம். //

      அப்படியா ஸார் ! இவையெல்லாம் என்னைப் பொறுத்தவரை, இதுவரை நான் அறியாத புதிய செய்திகள் மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் ’கல்யாண முருங்கை’ என ஒன்று உள்ளது என்பதையே இதுநாள்வரை நான் அறிந்தது இல்லை.

      //‘கன்னிப் பெண்கள் இருக்கும் வீட்டில், கல்யாண முருங்கை இருக்கவேண்டும்‘ என்றொரு பழமொழி கூட உண்டு. இந்த செடி இருக்கும் வீடுகளில் பெண்மை சார்ந்த எந்த நோயும் வராது என்ற ஐதீகமும் இருக்கிறது. //

      ஆஹா, மிகவும் நல்ல விஷயங்களாக உள்ளன. தங்கள் மூலம் இவற்றைக் கேட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      //மேலே சொல்லியிருப்பவை குற்றம் சொல்வதற்காக அல்ல. உண்மையை விளக்கத்தான்.//

      புரிகிறது. எனக்கும் நன்றாகவே புரிகிறது. இதில் ஒன்றும் தப்பே இல்லை, ஸார்.

      //மற்றபடி கதை அருமை. //

      வெரி குட். மிக்க மகிழ்ச்சி.

      >>>>>

      நீக்கு
    5. VGK >>>>> வே. நடனசபாபதி (5)

      //‘ஸ்ட்ரோக்’ கதைக்காக தாங்கள் வரைந்திருக்கும் கேலிச்சித்திரம் மிக நன்று.//

      இது என்னால் 1980-இல், கல்கி இதழின் [Dated 02.03.1980] அட்டைப்படத்தினில் வெளிவந்திருந்ததைப் பார்த்து வரையப்பட்டது மட்டுமே.

      இதனை நகைச்சுவையாக அன்று கல்கி அட்டையில் வரைந்திருந்த ஓவியர் வேறு யாரோ ஒருவர் மட்டுமே என்பதை இங்கு தங்களுக்கு விளக்கிச் சொல்லிக்கொள்கிறேன்.

      //கதை வித்தியாசமாக இருப்பதால் தாங்களும் வித்தியாசமாக படம் வரைந்து திறனாய்வை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.//

      கேலிச்சித்திரம் என்பதற்கான ஓர் உதாரணமாக மட்டுமே, நான் இங்கு இந்த என் பதிவினில், என் கைவசம் தயாராக இருந்த அதனை ஜஸ்ட் பயன்படுத்திக்கொண்டுள்ளேன். அவ்வளவுதான்.

      >>>>>

      நீக்கு
    6. VGK >>>>> வே. நடனசபாபதி (6)

      //காதலர்களின் காதல் கைகூடியதா என்பதை குறியீட்டுக்கோடுகள் மூலம் கதாசிரியர் சொல்லியிருக்கிறார் என்பது புதுமை. //

      ஆமாம் ஸார். காதலர்கள் பெரும்பாலும் சொல்லக்கூடிய, ஏதோ ஒரு சில வார்த்தைகளைக் குறியீடாக, அதையும் ஒருசில படங்களாக வரைந்து, சொல்லிப் புரிய வைத்திருக்கும் புதுமைதான் எனக்கும் இந்தக்கதையில் மிகவும் பிடித்துப்போனது.

      //****சொல்லி விடலாம்தான். இன்றே சொல்லிவிட்டால் என்ன? ந்யூரான்களின் தாறுமாறுமான ஆட்டம்.**** என்ற வரிகள் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களை நினைவூட்டியது.//

      ஆஹா, தங்களுக்கு இவ்வாறு நினைவூட்டப்பட்டதில் வியப்பேதும் இல்லைதான். :)

      >>>>>

      நீக்கு
    7. VGK >>>>> வே. நடனசபாபதி (7)

      //இந்த பதினைந்து கதைகளையும் படித்து திறனாய்வு செய்து சுருக்கி Capsule வடிவில் தந்த உங்களுக்கு பாராட்டுக்கள்!//

      ஆஹா, சந்தோஷம், ஸார். தங்களின் இத்தகைய பாராட்டுகள் எனக்கு Vitamin Capsule சாப்பிட்ட புத்துணர்ச்சியைத் தருகின்றன. :)

      //அருமையான எழுத்து நடையும் திறனும் கொண்ட திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்! //

      அருமையான எழுத்து நடையும் திறனும் கொண்ட திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் இங்கு வந்து இதையெல்லாம் படித்துவிட்டு, என்ன சொல்லப்போகிறார்களோ என்ற கவலையும் டென்ஷனும் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. :))

      //உண்மையில் இந்த சிறுகதைத் தொகுப்பு திருமண விழாவில் பரிசளிக்கத் தக்கதுதான். //

      அப்படியா ! தாங்கள் சொல்வதும் நல்லதொரு ஆலோசனைதான்.

      இந்த என் விமர்சனத் தொடருக்குத் தொடர்ச்சியாக வருகை தந்து, ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் விதமாகப் பின்னூட்டங்கள் தரும் சிலருக்கு மட்டும், நானே இந்த நூலினைப் பரிசாக அனுப்பி வைக்கப்போவதாக, நான் இந்தத்தொடரின் முதல் பகுதி ஆரம்பிக்கும்போதே அறிவித்திருக்கலாமோ என இப்போது நினைத்துக் கொண்டேன். :)))))

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஒவ்வொன்றையும் நன்கு ஊன்றி வாசித்து அவ்வப்போது தாங்கள் அளித்துள்ள அழகழகான, ஆத்மார்த்தமான நீண்ட நெடும் கருத்துக்களுக்கும், வாழ்த்துகள், பாராட்டுகள் முதலான அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
    8. நன்றி நடனசபாபதி சார். கல்யாண முருங்கை கிளையை வெட்டி நட்டால் மட்டுமே வளரும் என்று எங்கோ படித்த ஞாபகம். அதுதான். தவறைத் திருத்தியமைக்கு நன்றி :)

      நன்றி விஜிகே சார் !!!

      நீக்கு
  22. ஆறு பகுதிகளில் புத்தகத்தில் வந்த கதைகள் பற்றியும் அதில் உங்களைக் கவர்ந்த வாசகங்களையும், உங்கள் கருத்துகளையும், அசையும் படங்களை உங்கள் பாணியில் அளித்து வெகுச் சிறப்பாக வெளியிட்ட உங்களுக்குப் பாராட்டுகள். நூல் ஆசிரியர் தேனம்மை சகோவிற்கு வாழ்த்துகள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் October 2, 2016 at 1:40 PM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      //ஆறு பகுதிகளில் புத்தகத்தில் வந்த கதைகள் பற்றியும் அதில் உங்களைக் கவர்ந்த வாசகங்களையும், உங்கள் கருத்துகளையும், அசையும் படங்களை உங்கள் பாணியில் அளித்து வெகுச் சிறப்பாக வெளியிட்ட உங்களுக்குப் பாராட்டுகள்.//

      ஆஹா, தங்களின் இந்த மிகச்சிறப்பான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய மகிழ்ச்சிகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன், ஜி.

      நாளுக்கு நாள் என் மனதிலும், உடல்நிலையிலும் தளர்ச்சி ஏற்பட்டு விட்டதால், தற்சமயம் சூப்பர் வழுவட்டையாகப் போய் விட்டுள்ள நான், பிறர் (தங்களுடையது உள்பட) பதிவுகள் பக்கம் வருவதையும் பின்னூட்டங்கள் அளிப்பதையும் மிகவும் குறைத்துக்கொண்டு விட்டேன்.

      நான் என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் கொடுப்பதையும் பெரும்பாலும் குறைத்துக்கொண்டு விட்டேன்.

      எல்லாவற்றையுமே ஒரேயடியாக, சுத்தமாக மறந்துபோய் விடாமல் இருக்க, அவ்வப்போது இதுபோன்ற சில பதிவுகள் வெளியிடும் வாய்ப்புகள் எனக்கும் ஏற்பட்டுக்கொண்டுதான் வருகின்றன என்பதை நினைக்க சற்றே மன மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.

      தங்களின் இன்றைய இந்தப் பாராட்டுகள் எனக்குக்கொஞ்சம் ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக உள்ளன. அதற்கு மீண்டும் என் நன்றிகள்.

      //நூல் ஆசிரியர் தேனம்மை சகோவிற்கு வாழ்த்துகள்......//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வெங்கட் ஜி. பார்ப்போம்.

      நீக்கு
    2. நன்றி வெங்கட் சகோ & விஜிகே சார் !

      நீக்கு
  23. சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்தது போன்ற சந்தர்ப்பங்கள் அதிர்ஷ்ட வசமாகவே வாய்க்கும்..

    அப்படியொரு பொன்னான வாய்ப்பு..

    வரிக்கு வரி.. இனிமை ததும்புகின்றது.. நூலை முழுதாக வாசிக்கத் தூண்டுகின்றது - தங்களுடைய கைவண்ணம்..

    மற்றொன்று - தங்களின் கைவண்ணத்தில் கருத்துப்படம்!..

    சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவர் தாங்கள்!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ October 2, 2016 at 3:17 PM

      வாங்கோ பிரதர், வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      நீண்ட நாட்களுக்குப்பின், அதுவும் நவராத்திரி இரண்டாம் நாளான இன்று, தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிகவும் ஆனந்தம் அளிப்பதாக உள்ளது.

      //சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்தது போன்ற சந்தர்ப்பங்கள் அதிர்ஷ்ட வசமாகவே வாய்க்கும்..//

      ஆஹா, மிகச்சரியாக உணர்ந்து சொல்லியுள்ளீர்கள். தங்களின் வாய்க்கு சர்க்கரை போட்டு, அதில் ஒரு ஆழாக்கு தேனையும் ஊற்ற வேண்டும் போல உள்ளது. தாங்கள் சொல்லியுள்ளது போலவே, அதிர்ஷ்ட வசமாக மட்டுமே இந்த சந்தர்ப்பம் எனக்கு வாய்த்துள்ளது. :)

      //அப்படியொரு பொன்னான வாய்ப்பு..//

      ஆம். பொன்னானதொரு வாய்ப்பு பொருத்தமாகத்தான் அமைந்தது, இப்போது எனக்கு.

      //வரிக்கு வரி.. இனிமை ததும்புகின்றது..//

      இனிமையானச் சொற்களை இங்கு அருமையாகச் சொல்லியுள்ளதால் என் மனதில் உற்சாகம் ததும்பி வழிய ஆரம்பித்துள்ளது. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், பிரதர்.

      //நூலை முழுதாக வாசிக்கத் தூண்டுகின்றது - தங்களுடைய கைவண்ணம்..//

      அப்படியா! சந்தோஷம். அனைவரும் இந்த நூலினை முழுவதுமாக வாசிக்கத் தூண்ட வேண்டும் என்பதே இந்த என் மிகச்சிறிய தொடரின் அடிப்படை நோக்கமாகும். அது நிறைவேறியதாகத் தோன்றுகிறது, எனக்கும், தங்களின் மனம் திறந்த இந்த வரிகளின் மூலம். மிக்க மகிழ்ச்சி. :)

      //மற்றொன்று - தங்களின் கைவண்ணத்தில் கருத்துப்படம்!..//

      என் இந்தக்கருத்துப்படம் பற்றிய, பல்வேறு என் சொந்தக் கருத்துக்களை மேலே ஒருசிலருக்கு ஏற்கனவே விரிவாக, என் பதிலில் எடுத்துச் சொல்லியுள்ளேன்.

      //சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவர் தாங்கள்!..//

      அடடா, இதனைத் தங்கள் மூலம் இங்கு கேட்பதில் மிகவும் தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி. :)

      //வாழ்க நலம்!..//

      என் வேண்டுதலும் அதுவே.

      நிறைவுப்பகுதிக்கு மட்டுமாவது, தங்களின் அன்பான அபூர்வ வருகையும், அசத்தலான கருத்துக்களும் என் மனதுக்கு நிறைவினைத் தந்துள்ளது.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, பிரதர்.

      நீக்கு
    2. நன்றி துரை செல்வராஜூ சார். உண்மையிலேயே சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்தான் விஜிகே சார். நூற்றுக்கு நூறு சதம் ஆமோதிக்கிறேன். :)

      நீக்கு
  24. தேனம்மை அவர்கள் சிறந்த எழுத்தாளராக இருக்கலாம். திரியை தூண்டி விட்டு அவர்கள் புகழை பிரகாசப்படுத்தியது நீங்கதானே கிருஷ்.. உங்களுக்கு நன்றிகள்...பாராட்டுகள். அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் October 2, 2016 at 6:23 PM

      ’பூந்தளிர்’ என்ற உன் வலைத்தளப் புனைப்பெயரைப் படித்தாலே ’பூங்கதவே ...... தாழ் திறவாய்’ என்ற பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது.

      வாங்கோ ரோஜா ..... வணக்கம். இந்த நிறைவுப்பகுதிக்கு மட்டும், இன்னும் உன்னை ஆளையே காணுமே என மிகவும் கவலைப் பட்டு நான் இளைத்துப்போய் விட்டேன்.

      இவ்வாறு கவலைப்பட்டதனால் என் வெயிட் ஒரு இரண்டு கிலோ குறைந்ததுபோல ஆகிவிட்டது. இது ’சும்மா’ ஒரு பிரமை மட்டுமே ... ஆனால் அது நிச்சயம் குறைந்திருக்காது. ஒரு வேளை இன்னும் கூடியிருந்தாலும் இருக்கும். :)

      //தேனம்மை அவர்கள் சிறந்த எழுத்தாளராக இருக்கலாம். //

      அதில் என்ன சந்தேகம் !

      //திரியை தூண்டி விட்டு அவர்கள் புகழை பிரகாசப்படுத்தியது நீங்கதானே கிருஷ்..//

      திரியைத் தூண்டிவிட்டு, ஒரு பத்தாயிரம் வாலா பட்டாஸுக் கட்டை இப்படி இங்குக் கொளுத்திப் போட்டு விட்டாயே ....... கொழுப்பு எடுத்த குந்தாணியான நீ.

      உன்னை ............................... :))))) என்ன செய்தால் தேவலாம்?

      //உங்களுக்கு நன்றிகள்...பாராட்டுகள். அவங்களுக்கு வாழ்த்துகள்.//

      உன் அன்பான + வம்பான தொடர் வருகைக்கும், அழகான + ஸ்வாதீனமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்...... டா.

      நீக்கு
    2. அஹா நன்றி பூந்தளிர். உண்மைதான். எல்லாப் புகழும் விஜிகே சாருக்கே. நன்றி சார் :)

      நீக்கு
  25. ஃப்ரெஷ்ஷாக மூன்று படங்கள், அங்கு டிஸ்ப்ளே செய்ய கடந்த 4-5 நாட்களில் வரைந்து வைத்துள்ளேன்.

    அவற்றைத் தங்களுக்கு, தங்களின் பார்வைக்காக, இன்று மெயில் மூலம் தனியாக அனுப்பி வைக்கிறேன். :)
    மூன்று ஓவியங்களுமே நன்றாக இருக்கின்றன கோபு சார்! அதிலும் முதல் படத்தில் வரும் மாமியின் முகம் அவ்வளவு அழகாக தத்ரூபமாக உள்ளது. சிறுமியின் முகமும் ஓ.கே. அவள் ஹேர்ஸ்டைல் மட்டும் கொண்டை போல் உள்ளது. இக்கால இளசுகள் போல் முடியை விரித்துப் போட்டிருந்தால் மிகவும் பொருத்தமாயிருக்கும். ஜோக்கும் அதற்கான படமும் ஜோராக உள்ளன. ஓவியம் வரையும் திறமை சிலரிடம் மட்டுமே இருக்கும். தொடர்ந்து வரையுங்கள். உங்கள் படைப்புகளை அவ்வப்போது நாங்கள் காணத் தாருங்கள். எதிலும் கிடைக்காத ஆத்மதிருப்தி உங்களுக்கு வரைவதில் கிடைக்கும். பாராட்டுக்கள் கோபு சார்! நிறைய திறமைகளுக்குச் சொந்தக்காரர் நீங்கள். வணங்கி வாழ்த்துவதில் மகிழ்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி October 2, 2016 at 7:21 PM

      வாங்கோ மேடம். வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      **ஃப்ரெஷ்ஷாக மூன்று படங்கள், அங்கு டிஸ்ப்ளே செய்ய கடந்த 4-5 நாட்களில் வரைந்து வைத்துள்ளேன். அவற்றைத் தங்களுக்கு, தங்களின் பார்வைக்காக, இன்று மெயில் மூலம் தனியாக அனுப்பி வைக்கிறேன். :)**

      //மூன்று ஓவியங்களுமே நன்றாக இருக்கின்றன கோபு சார்!//

      மிகவும் சந்தோஷம் மேடம். எல்லாமே என்னால் மிகவும் அவசர அடியாக மட்டுமே வரையப்பட்டவை ஆகும்.

      //அதிலும் முதல் படத்தில் வரும் மாமியின் முகம் அவ்வளவு அழகாக தத்ரூபமாக உள்ளது.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம். :)

      //சிறுமியின் முகமும் ஓ.கே. அவள் ஹேர்ஸ்டைல் மட்டும் கொண்டை போல் உள்ளது. இக்கால இளசுகள் போல் முடியை விரித்துப் போட்டிருந்தால் மிகவும் பொருத்தமாயிருக்கும்.//

      நான் வரைய தேர்ந்தெடுத்துக்கொண்ட அதன் ஒரிஜினல் படத்தினில், அந்தச் சிறுமிக்கு தலை முடி கொண்டைபோல இருந்துள்ளதால் நானும் அப்படியே வரைந்துள்ளேன். தாங்கள் சொல்லுவது போல, இந்தக்காலக் குழந்தைகளின் ஹேர் ஸ்டைலில் மாற்றியிருக்க வேண்டும்தான். ஏனோ எனக்கு இது தோன்றவில்லை.

      இதனைத் தாங்கள் இங்கு குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளது, என்னால் நன்கு ரஸிக்கும் படியாகவும், படத்திற்கான தங்களின் விமர்சனம் என்னால் ஏற்றுக்கொள்ளும் படியாகவும் உள்ளது.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //ஜோக்கும் அதற்கான படமும் ஜோராக உள்ளன.//

      மிகவும் சந்தோஷம், மேடம்.

      அதனை அவர்கள் வீட்டு கொலுவுக்கு அடியில் அமைத்துள்ள ‘பார்க்’கில் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என ஆலோசனை சொல்லியிருக்கிறேன்.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> ஞா. கலையரசி (2)

      இவைகளைப்பெற்றுக்கொண்ட, 86 வயதான என் அக்கா வீட்டுக்காரருக்கும், 76+ வயதான என் அக்காவுக்கும் மிகவும் சந்தோஷமாகி விட்டது.

      அவர்கள் மிகப்பெரிய சம்சாரி. அவர்களுக்கு மொத்தம் 8 குழந்தைகள். [ 6 பிள்ளைகள் + 2 பெண்கள்.]

      எல்லோருக்கும் கல்யாணம் ஆகி, குழந்தை குட்டிகளுடன், உள்ளூரில் சிலரும், வெளியூர்களில் சிலரும், வெளிநாட்டில் சிலருமாக பரவலாக செளகர்யமாக உள்ளனர்.

      இந்த என் அக்கா தம்பதியினர், இதுவரை 5 பேரன்கள் + 9 பேத்திகள் + 2 கொள்ளுப்பேரன்கள் என பதினாறும் பார்த்து மகிழ்ந்துள்ளனர். :)

      எந்தவொரு பண்டிகைகளையும் விடாமல், ஆச்சார அனுஷ்டானங்களுடன் மிகச்சிறப்பாக, பக்தி சிரத்தையுடன் செய்வார்கள்.

      அதுபோல இந்த நவராத்திரி கொலுவும் அழகாக வைப்பார்கள். என் சிறுவயதிலிருந்தே இதனை, அவர்கள் வீட்டில் நான் மிகவும் கலையுணர்வுடனும், ஆர்வத்துடனும் ரஸிப்பது உண்டு.

      அவர்கள் வீட்டில் ஓர் மிகச்சிறிய விழா (குழந்தைகளுக்குக் காது குத்துதல், பூப்பு நீராட்டு விழா போன்றவைகள்) நடைபெற்றாலும், சொந்தப் பெண்கள், மாப்பிள்ளைகள், சொந்தப் பிள்ளைகள், மருமகள்கள், பேரன், பேத்திகள் + எட்டு சம்பந்தியினர் என நெருங்கிய சொந்தங்களாகவே ஒரு 100 பேர்கள் வரைக் கூடிவிடுவார்கள். :)

      என் பெரிய அக்காவுக்கு என்னிடம் அலாதியான தனி பிரியம் உண்டு. இவ்வளவு குழந்தைகள் இருந்தும், இன்றும் என்னை தன் மூத்த பிள்ளைபோல நினைத்து, அனைத்தையும் என்னுடன் பகிர்ந்துகொண்டு மகிழ்வார்கள்.

      பள்ளிப்படிப்பு அதிகம் இல்லாவிட்டாலும், அனைத்து சாமர்த்தியங்களும், விஷய ஞானமும், கணக்கு வழக்குகளும், உலக அனுபவமும், வங்கிக்கணக்குகளும் என மிக மிக அதிக வியாபகங்கள் உள்ளவர்கள்.

      வார / மாத இதழ்களில் வெளியாகும் என் கதைகளை ஆர்வமாக வாங்கிப் படிப்பார்கள். அக்கம்பக்கத்தில் உள்ள எல்லோரிடமும், “என் தம்பி எழுதிய கதை” என மிகப் பெருமையாகச் சொல்லி மகிழ்வார்கள்.

      மிகவும் பெருந்தன்மையான நல்ல குணங்கள் உள்ளவர்களும் ஆவார்கள். இன்று எங்கள் குடும்பத்திற்கே நல்லதொரு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      அவர்களின் புகைப்படம் இதோ இந்த என் பதிவுகள் சிலவற்றில் என்னால் ஏற்கனவே காட்டப்பட்டுள்ளன.

      https://gopu1949.blogspot.in/2014/08/vgk-30-01-03-first-prize-winners.html

      (சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு)

      http://gopu1949.blogspot.in/2013/10/62.html

      (அவர்கள் வீட்டில் வைத்துள்ள 2013-ம் ஆண்டு கொலுவுடன்)

      http://gopu1949.blogspot.in/2011/07/2.html

      (காரினை ஒட்டியுள்ள படத்தில், 9 கெஜம் மடிசார் புடவையில் ஹாரத்தி சுற்றுபவர்கள்)

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> ஞா. கலையரசி (3)

      //ஓவியம் வரையும் திறமை சிலரிடம் மட்டுமே இருக்கும். தொடர்ந்து வரையுங்கள். உங்கள் படைப்புகளை அவ்வப்போது நாங்கள் காணத் தாருங்கள். எதிலும் கிடைக்காத ஆத்மதிருப்தி உங்களுக்கு வரைவதில் கிடைக்கும்.//

      இதில் ’எதிலும் கிடைக்காத ஆத்ம திருப்தி வரைவதில் எனக்குக் கிடைக்கும்’ என்பதைக்கேட்க எனக்கும் மிகவும் திருப்தியாக உள்ளது. அதுதான் இதிலுள்ள உண்மையும்கூட.

      //பாராட்டுக்கள் கோபு சார்! நிறைய திறமைகளுக்குச் சொந்தக்காரர் நீங்கள். வணங்கி வாழ்த்துவதில் மகிழ்கிறேன்!//

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், அழகாகப் பொறுமையாக, ஆத்மார்த்தமாக ஒவ்வொன்றையும் அடுக்கிச்சொல்லியுள்ள கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    4. அஹா அக்காவைப் பற்றின நினைவலைகள் மிக அழகு & அருமை விஜிகே சார். நன்றி கலையரசி மேம்

      நீக்கு
  26. நீங்கள் கொடுத்த இணைப்புக்களுக்குச் சென்று அன்னையின் மறு உருவமான தமக்கையின் புகைப்படத்தையும் அவர்களின் இரு பேத்திகளின் படங்களையும் பார்த்தேன். அவர்கள் வீட்டுக்கொலு படங்களும் நன்றாயிருந்தன. உங்கள் பணி ஓய்வு படங்களுடன் மலரும் நினைவுகளையும் வாசித்தேன். மிகவும் நன்றி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி October 2, 2016 at 10:43 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நீங்கள் கொடுத்த இணைப்புக்களுக்குச் சென்று அன்னையின் மறு உருவமான தமக்கையின் புகைப்படத்தையும் அவர்களின் இரு பேத்திகளின் படங்களையும் பார்த்தேன். அவர்கள் வீட்டுக்கொலு படங்களும் நன்றாயிருந்தன. உங்கள் பணி ஓய்வு படங்களுடன் மலரும் நினைவுகளையும் வாசித்தேன். மிகவும் நன்றி சார்!//

      மிகவும் சந்தோஷம் + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  27. தேனம்மையின் சிறந்த எழுத்துக்கும், தங்களின் சிறப்பான மதிப்புரைக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.

    சார் சூப்பரா கார்டூன் வரைந்து இருக்கீங்க...நீங்க ஒரு சகலகலா வல்லவர் சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri October 3, 2016 at 10:25 AM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //தேனம்மையின் சிறந்த எழுத்துக்கும், தங்களின் சிறப்பான மதிப்புரைக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //சார் சூப்பரா கார்டூன் வரைந்து இருக்கீங்க...//

      ஆஹா, அப்படியா? நிஜம்மாவா சொல்றீங்கோ?

      //நீங்க ஒரு சகலகலா வல்லவர் சார்...//

      நீங்கள் எல்லோரும் இதுபோல அடிக்கடி ஏதேதோ ஜில்லுன்னு மனம் குளிரும்படியாகச் சொல்லி வருகிறீர்கள். இருப்பினும் .......

      இதனை இங்கு என்னுடனேயே எப்போதும் உள்ள என் மேலிடம் ஒருபோதும் ஒத்துக்கொள்வதே இல்லை. :(

      -=-=-=-

      தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  28. //திரியைத் தூண்டிவிட்டு, ஒரு பத்தாயிரம் வாலா பட்டாஸுக் கட்டை இப்படி இங்குக் கொளுத்திப் போட்டு விட்டாயே ....... கொழுப்பு எடுத்த குந்தாணியான நீ. //

    போச்சி....போச்சி.... என்னிய மட்டும் கொழுப்பெடுத்த குந்தாணி.... வெலமோருல வெண்ணை எடுக்குற ஆளுன்னு சொல்லுவீங்க... இப்ப ஒங்கட டீச்சரம்மா--1-- யும் சொல்லிட்டீங்களே.. ஃபயரிங் வரப்போகுது.. பீ...கேர் ஃபுல்... கோபூஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. October 3, 2016 at 10:54 AM

      **திரியைத் தூண்டிவிட்டு, ஒரு பத்தாயிரம் வாலா பட்டாஸுக் கட்டை இப்படி இங்குக் கொளுத்திப் போட்டு விட்டாயே ....... கொழுப்பு எடுத்த குந்தாணியான நீ.**

      //போச்சி....போச்சி.... என்னிய மட்டும் கொழுப்பெடுத்த குந்தாணி.... வெலமோருல வெண்ணை எடுக்குற ஆளுன்னு சொல்லுவீங்க... இப்ப ஒங்கட டீச்சரம்மா--1-- யும் சொல்லிட்டீங்களே..//

      கொழுப்பினில். ஒருத்தியைப் பார்க்க ஒருத்தி, குந்துமணி அளவுக்குக்கூட குறைந்தவர்கள் அல்ல என்பது நானும் நன்றாக உணர்ந்துகொண்டுள்ளேன்.

      //ஃபயரிங் வரப்போகுது.. பீ...கேர் ஃபுல்... கோபூஜி...//

      ஃபயரிங் பண்ணவாவது, மீண்டும் அவள் இங்கு வரமாட்டாளா என்ற நப்பாசையினால்தான், இதனை கேர் ஃபுல் ஆக யோசித்து எழுதியுள்ளேனாக்கும். :)))))

      நீக்கு
  29. டாக்டர் நந்தினி- டாக்டர் வேலையையே திருமணம் செய்துகொண்ட மாதிரி வாழ்ந்து வந்தாள். கதையின் முக்கியக் கருத்தை (எய்ட்ஸ்) நீங்கள் சொல்லிவிட்டாலும், அப்படி தொழிலுக்காகவே தன்னைக் கொடுத்துவிட்ட டாக்டருக்கு 'நோயாளிகளின் உறவினர்கள் கொடுக்கும் பிரச்சனையை எவ்விதமாகக் கையாண்டார் என்று பார்க்கவேண்டும்.

    கல்யாண முருங்கை - இதற்கு அர்த்தம் இப்போதுதான் படித்துத் தெரிந்துகொண்டேன். பாலகுமாரன் அவர்களும் இந்தத் தலைப்பில் கதை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். "தனக்கு என்று தன் வாழ்க்கையில் ஏதும் கிடைக்கவே இல்லை" - எனது உறவினர் ஒருவரும் குடும்பத்துக்காகவே வாழ்ந்தார். குழந்தைகள் இல்லாமல், கடைசி காலத்தில் ஆதரவு இல்லாமலும் ஆனால் தைரியமாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். கல்யாண முருங்கையாக இருப்பது குறையா என்ன? எத்தனை பேரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கும் பாக்யம் கிடைக்கிறது? முழுக்கதையையும் படித்தால்தான் அவர் வருந்துவதற்கும் விலக எண்ணுவதற்கும் காரணம் புரியும்.

    ஸ்ட்'ரோக் - கதை விமரிசனம் நல்லா இருந்தது. அதைவிட உங்கள் கார்ட்டூன் நல்லா இருந்தது. எனக்குப் பார்த்த உடனேயே 'நடனம்' அவர்கள் வரையும் படங்கள் ஞாபகம் வந்தது. பழைய விகடன், கல்கியில்.

    "அவர்கள் முதிர்ந்த காதலர்களைப்போல எதையும் பேசிக்கொள்வதில்லை." - இப்போவெல்லாம் இளமையானவர்கள்கூட வாட்ஸப்பில் பேசிக்கொள்ளும் காலம். இருந்தாலும் உங்கள் கருத்தை ரசித்தேன்.

    நல்ல நீண்ட, ஆழமான விமரிசனமாக எழுதியுள்ளீர்கள். புத்தகம் சிறப்பாக இல்லையென்றால் நீங்கள் இத்தனை நேரம் செலவழித்து ஒவ்வொரு கதையாக ஆழ்ந்து படித்து விமரிசனம் எழுதியிருக்கமாட்டீர்கள். ஓரளவு ஒவ்வொரு கதைக்கருத்தையும் புரிந்துகொள்ளும் அளவு கோடிட்டுக் காண்பித்தது மட்டுமல்லாமல், உங்களைக் கவர்ந்த வரிகளையும் எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 5:55 PM

      வாங்கோ, வணக்கம்.

      //டாக்டர் நந்தினி- டாக்டர் வேலையையே திருமணம் செய்துகொண்ட மாதிரி வாழ்ந்து வந்தாள். கதையின் முக்கியக் கருத்தை (எய்ட்ஸ்) நீங்கள் சொல்லிவிட்டாலும், அப்படி தொழிலுக்காகவே தன்னைக் கொடுத்துவிட்ட டாக்டருக்கு 'நோயாளிகளின் உறவினர்கள் கொடுக்கும் பிரச்சனையை எவ்விதமாகக் கையாண்டார் என்று பார்க்கவேண்டும்.//

      இந்த ஒரு கதையை மட்டும், தாங்கள் விரும்பினால், தங்களுக்குப் பொறுமையும், நேர அவகாசமும் இருக்குமானால், ஒலிவடிவில் முழுவதுமாகக் கேட்டு மகிழலாம். அதன் இணைப்பு என்னால் மேலே கொடுக்கப்பட்டும் உள்ளது.

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> நெல்லைத் தமிழன் (2)

      //கல்யாண முருங்கை - இதற்கு அர்த்தம் இப்போதுதான் படித்துத் தெரிந்துகொண்டேன்.//

      நானும் இப்போதுதான், இந்த நூலின் மூலம்தான், அதைப்பற்றி படித்துத் தெரிந்துகொண்டேன்.

      //பாலகுமாரன் அவர்களும் இந்தத் தலைப்பில் கதை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். //

      இருக்கலாம். எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது.

      //"தனக்கு என்று தன் வாழ்க்கையில் ஏதும் கிடைக்கவே இல்லை" - எனது உறவினர் ஒருவரும் குடும்பத்துக்காகவே வாழ்ந்தார். குழந்தைகள் இல்லாமல், கடைசி காலத்தில் ஆதரவு இல்லாமலும் ஆனால் தைரியமாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.//

      அப்படியா, மிகவும் சந்தோஷம்.

      //கல்யாண முருங்கையாக இருப்பது குறையா என்ன?//

      எதுவும் குறையே கிடையாது. குழந்தை(கள்) பிறந்துவிடுவதால் மட்டும் வாழ்க்கையில் நிறைவு ஏற்பட்டுவிடும் என்றும் நாம் உறுதியாகச் சொல்லிவிடவும் முடியாது. பிள்ளைகளால் தொல்லைகளை அனுபவிப்பவர்களையும் ஆங்காங்கே நாம் பார்க்கத்தான் முடிகிறதே. முதியோர் இல்லங்களுக்குச் சென்றால் ஏராளமான சோகக்கதைகளை நம்மால் கேட்க முடிகிறதே. :(

      //எத்தனை பேரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கும் பாக்யம் கிடைக்கிறது?//

      அதானே ! நிச்சயமாக !!

      //முழுக்கதையையும் படித்தால்தான் அவர் வருந்துவதற்கும் விலக எண்ணுவதற்கும் காரணம் புரியும்.//

      கரெக்ட். மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

      >>>>>

      நீக்கு
    3. VGK >>>>> நெல்லைத் தமிழன் (3)

      //ஸ்ட்'ரோக் - கதை விமரிசனம் நல்லா இருந்தது.//

      மிக்க மகிழ்ச்சி.

      //அதைவிட உங்கள் கார்ட்டூன் நல்லா இருந்தது. எனக்குப் பார்த்த உடனேயே 'நடனம்' அவர்கள் வரையும் படங்கள் ஞாபகம் வந்தது. பழைய விகடன், கல்கியில்.//

      அப்படியா .... மிகவும் சந்தோஷம். :)

      //"அவர்கள் முதிர்ந்த காதலர்களைப்போல எதையும் பேசிக்கொள்வதில்லை." - இப்போவெல்லாம் இளமையானவர்கள்கூட வாட்ஸப்பில் பேசிக்கொள்ளும் காலம். இருந்தாலும் உங்கள் கருத்தை ரசித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //நல்ல நீண்ட, ஆழமான விமரிசனமாக எழுதியுள்ளீர்கள். புத்தகம் சிறப்பாக இல்லையென்றால் நீங்கள் இத்தனை நேரம் செலவழித்து ஒவ்வொரு கதையாக ஆழ்ந்து படித்து விமரிசனம் எழுதியிருக்கமாட்டீர்கள். ஓரளவு ஒவ்வொரு கதைக்கருத்தையும் புரிந்துகொள்ளும் அளவு கோடிட்டுக் காண்பித்தது மட்டுமல்லாமல், உங்களைக் கவர்ந்த வரிகளையும் எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான விரிவான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
    4. விரிவான கருத்துகளுக்கு நன்றி நெல்லைத் தமிழன் & விஜிகே சார்

      நீக்கு
  30. கல்யாண முருங்கை கதை மனத்தை மிகவும் பாதித்தது. ஸ்ட்ரோக் கதையில் இழையோடும் முதிர்காதல் நெகிழவைக்கிறது. கதைகளை வாசிக்கும் ஆவலைத் தூண்டும்படி மிக அழகாகவும் நேர்மையாகவும் மதிப்புரை வழங்கி தோழியை சிறப்பித்துவிட்டீர்கள்... தோழி தேனம்மைக்கு இனிய வாழ்த்துகளும் அழகான மதிப்புரைகளை வழங்கி சிறப்பித்த தங்களுக்குப் பாராட்டுகளும் கோபு சார். ஏற்கனவே சொன்னதுபோல் பதிவை விடவும் கூடுதலான தகவல்களை அள்ளி வழங்குகின்றன பின்னூட்டப்பதிவுகள். தங்கள் வலைப்பூவின் சிறப்பே அதுதானே... பின்னூட்டங்களால் சுவாரசியம் கூட்டிய அனைவருக்கும் என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதமஞ்சரி October 4, 2016 at 10:44 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //கல்யாண முருங்கை கதை மனத்தை மிகவும் பாதித்தது. ஸ்ட்ரோக் கதையில் இழையோடும் முதிர்காதல் நெகிழவைக்கிறது. கதைகளை வாசிக்கும் ஆவலைத் தூண்டும்படி மிக அழகாகவும் நேர்மையாகவும் மதிப்புரை வழங்கி தோழியை சிறப்பித்துவிட்டீர்கள்... தோழி தேனம்மைக்கு இனிய வாழ்த்துகளும் அழகான மதிப்புரைகளை வழங்கி சிறப்பித்த தங்களுக்குப் பாராட்டுகளும் கோபு சார்.//

      தங்களின் அன்பான வருகையும், தங்கமான கருத்துக்களும் இந்த என் சிறிய தொடரினை மேலும் மெருகூட்டியுள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது, மேடம்.

      //ஏற்கனவே சொன்னதுபோல் பதிவை விடவும் கூடுதலான தகவல்களை அள்ளி வழங்குகின்றன பின்னூட்டப்பதிவுகள். தங்கள் வலைப்பூவின் சிறப்பே அதுதானே... பின்னூட்டங்களால் சுவாரசியம் கூட்டிய அனைவருக்கும் என் பாராட்டுகள்.//

      அந்தப் பின்னூட்ட சுவாரஸ்யங்கள், தங்களின் அன்பான வருகையாலும், மின்னிடும் கருத்துக்களாலும், மேலும் ஜொலிப்பதில் எங்கள் எல்லோருக்குமே மனதுக்கு முழு நிறைவாகிப்போய் உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. நன்றி கீத்ஸ் & விஜிகே சார்

      நீக்கு
  31. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம்.

    மொத்தம் ஆறு பகுதிகள் கொண்ட இந்த என் மிகச்சிறிய தொடரில், ஏதேனும் ஒருசில பகுதிகளுக்காவது அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள, கீழ்க்கண்ட உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    Position as on 13.10.2016 ..... 12.30 PM (IST)
    ==================================================

    திருவாளர்கள்:-
    =================

    01) எஸ். ரமணி அவர்கள் *** ***
    02) ஸ்ரீராம் அவர்கள் *** ***
    03) வே. நடன சபாபதி அவர்கள் *** ***
    04) ஜீவி அவர்கள் *** ***
    05) துளசிதரன் தில்லையக்காது அவர்கள் *** ***
    06) ஸ்ரத்தா, ஸபுரி... அவர்கள் *** ***
    07) ஆல்-இஸ்-வெல் அவர்கள் *** ***
    08) வெங்கட் நாகராஜ் அவர்கள் *** ***
    09) நெல்லைத்தமிழன் அவர்கள் *** ***

    10) முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் ****
    11) ஸ்ரீனி வாசன் அவர்கள் ****

    12) S P செந்தில் குமார் அவர்கள் ***

    13) தி. தமிழ் இளங்கோ அவர்கள் **
    14) ஜீவ.யாழ்.காசி.லிங்கம் அவர்கள் **
    15) பரிவை சே. குமார் அவர்கள் **

    16) ப. கந்தசாமி அவர்கள் *
    17) ‘தளிர்’ சுரேஷ் அவர்கள் *
    18) யாதவன் நம்பி அவர்கள் *
    19) துரை செல்வராஜ் அவர்கள் *

    திருமதிகள்:-
    =================

    20) ‘பூந்தளிர்’ அவர்கள் *** ***
    21) ஷாமைன் பாஸ்கோ அவர்கள் *** ***
    22) ‘ப்ராப்தம்’ அவர்கள் *** ***
    23) கோமதி அரசு அவர்கள் *** ***
    24) காமாக்ஷி மாமி அவர்கள் *** ***
    25) உமையாள் காயத்ரி அவர்கள் *** ***
    26) ‘கீதமஞ்சரி’ அவர்கள் *** ***

    27) ஞா. கலையரசி அவர்கள் *****

    28) மனோ சுவாமிநாதன் அவர்கள் ***
    29) தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் ***

    30) ஜெயந்தி ஜெயா அவர்கள் **
    31) ஷக்தி ப்ரபா அவர்கள் **

    32) ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் *

    செல்விகள்:-
    =================

    33) ‘ஹாப்பி’ அவர்கள் *** ***
    34) ’சிப்பிக்குள் முத்து’ அவர்கள் *** ***

    -oOo-

    நன்றியுடன் VGK

    பதிலளிநீக்கு
  32. *** *** அனைத்து ஆறு பகுதிகளுக்கும் (100%) தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ள (9 ஆண்கள் + 9 பெண்கள்) பதினெட்டு பதிவர்களுக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். *** ***

    என்றும் அன்புடன் VGK

    -oOo-

    பதிலளிநீக்கு
  33. கதைகள் தான் சூப்பர்ன்னு பார்த்தா கதாசிரியர் (மடிசார் மாமி) சூப்பரோ சூப்பர்.

    சட்டென்று பெண்கள் எடுத்து கையாள தயங்கும் கதைக்கருக்களையும் மிக அருமையாக எடுத்து நாசுக்காக எழுதி இருக்கிறார் தேன்.

    தேனம்மா, தேனம்மா கதைகள் தேனம்மா.

    மீண்டும் வருவேன், கதைகளை முழுக்க படித்து விட்டு.

    பி.கு.
    கோபு அண்ணா, நானும் சிறுகதை தொகுப்பு வெளியிடுவேன். அதற்கும் இது போல் விமர்சனம் எழுத தயாராக இருங்கள். ஆம்ம்மாம், சொல்லிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya October 18, 2016 at 2:38 PM

      வாங்கோ ஜெயா .... வணக்கம். எங்கட ‘ஜெ’ ஆளையே காணுமேன்னு இப்போத்தான் நினைத்தேன். உடனே வந்துட்டேள். உங்களுக்கு ஆயுஷு போனது போக ...... நூறு :)

      //கதைகள் தான் சூப்பர்ன்னு பார்த்தா கதாசிரியர் (மடிசார் மாமி) சூப்பரோ சூப்பர்.//

      சபாஷ் ! அப்படிச் சொல்லுங்கோ, ஜெயா. இதுவரை இங்கு யாருமே சொல்லாத இந்த வித்யாசமான சூப்பரோ சூப்பரான கருத்துக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      //சட்டென்று பெண்கள் எடுத்து கையாள தயங்கும் கதைக்கருக்களையும் மிக அருமையாக எடுத்து நாசுக்காக எழுதி இருக்கிறார் தேன். தேனம்மா, தேனம்மா கதைகள் தேனம்மா.//

      ஆஹா, பின்னூட்டத்தில் ஒரே ..... தேன் மழையாகப் பொழிந்து தள்ளியுள்ளீர்கள். இனிமையோ இனிமையாக உள்ளது.

      //மீண்டும் வருவேன், கதைகளை முழுக்க படித்து விட்டு.//

      அப்போ இன்னும் எதையுமே படிக்கவே இல்லையா? :)

      இருப்பினும் மிகவும் சந்தோஷம் ஜெயா.

      //பி.கு.
      கோபு அண்ணா, நானும் சிறுகதை தொகுப்பு வெளியிடுவேன்.//

      பிகு பண்ணிக்கொள்ளாமல் உடனடியாக எழுதி வெளியிடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      //அதற்கும் இது போல் விமர்சனம் எழுத தயாராக இருங்கள். ஆம்ம்மாம், சொல்லிட்டேன்.//

      தங்கள் ஸித்தம் ...... என் பாக்யம். :)

      வியாசர் சொல்லச்சொல்ல மஹாபாரதக் கதையினை எழுத அந்தத் தொந்திப்பிள்ளையார் தன் தந்தமாகிய கொம்பினை உடைத்து கையில் பேனாவாகப் பிடித்துக்கொண்டதுபோல, தும்பிக்கையில்லாத பிள்ளையார் போன்ற நானும், இப்போது தயாராகவே இருக்கிறேன்.

      தாங்கள் வெளியிடும் நூலினை உடனடியாக அனுப்புங்கோ ..... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      நீக்கு
    2. அன்புள்ள ஜெயா,

      இந்த என் மிகச் சிறிய தொடரின் ஆறு பகுதிகளுக்கும் 100% வருகை தந்திருந்தோர் பட்டியலில், ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் எண்ணிக்கையில் சரிசமமாகவே (9+9=18) நேற்று வரை இருந்துள்ளன.

      இன்றைய தங்களின் அன்பான வருகையால் பெண்கள் அணிக்கே மேலும் சிறப்பிடம் கிடைத்துள்ளது.

      இப்போதைய நிலவரப்படி, 100% பின்னூட்டம் இட்டுள்ளவர்கள் 9 ஆண்கள் + 10 பெண்கள். ஆக மொத்தம் 19 நபர்கள்.

      பெண்கள் அணிக்கு இவ்வாறு சிறப்புச் சேர்த்துள்ள அன்பின் ஜெயாவுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
    3. சீக்கிரம் எழுதி அனுப்புங்க ஜெயந்தி.நான் ரிவ்யூ போட ரெடி :) ஆனா விஜிகே சார் அளவு வரவே முடியாது. மிக மிக மனமார்ந்த நன்றி விஜிகே சார். எத்தனை முறை சொன்னாலும் போதாது :)

      யம்மாடியோவ் . ஒரு வழியா இந்தப் பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் எழுதி முடிச்சிட்டேன். நான் பத்து நாளைக்கு லீவ் பா . :)

      நீக்கு
    4. Thenammai Lakshmanan November 5, 2016 at 3:07 AM

      //யம்மாடியோவ் . ஒரு வழியா இந்தப் பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் எழுதி முடிச்சிட்டேன்.//

      ஆஹா, நேற்று இரவு முழுவதும்(என்னைப்போலவே) சுத்தமாகத் தூங்காமல், நள்ளிரவு 2 மணிக்கு ஆரம்பித்து 3.10 க்குள், இந்த என் தொடரில் விட்டுப்போய் இருந்த பகுதி-5 க்கும் பகுதி-6 க்குமாக, சுமார் 57 பேர்களுக்கு பொறுமையாக பதில் அளித்து தூள் கிளப்பி, ஒருவழியாக முடித்து விட்டீர்கள். !!!!!

      இது மிகவும் ஆச்சர்யம் ஆனால் உண்மையான சாதனைதான். :)

      அதுபோக (என் தமக்கை ஆங்காங்கே காட்சியளிக்கும்) என்னுடைய பழைய மூன்று பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஹனி மேடம்.

      //நான் பத்து நாளைக்கு லீவ் பா . :)//

      பத்து நாட்கள் என்ன .... நீங்க தாராளமாக பத்து மாதங்கள் வேண்டுமானாலும் லீவ் எடுத்துக்கொண்டு போங்கோ .... லீவ் சாங்ஷண்ட்.

      ஆனால் இந்த அடுத்த பத்து மாத லீவுக்குள் உங்களுக்கு நல்லபடியாக ஆறாவது பிரஸவம் நடந்து ஆறாவது குழந்தையையும் பெற்றுத்தர வேண்டும். அது தான் மிகவும் முக்கியமாக்கும். :))))))

      [6-வது பிரஸவம் மீன்ஸ் 6-வது நூல் வெளியீடு :) ]

      அட்வான்ஸ் நல் வாழ்த்துகள் .. ஹனி மேடம்.

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  34. அஹா தன்யளானேன் சார். !! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு