என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 26 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 26ம் திருநாள்

2



நினைவில் நிற்கும்

பதிவர்களும், பதிவுகளும்

26ம் திருநாள்

26.06.2015


149. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

குருவாயூர் ஏகாதஸிக் கொண்டாட்டம்-73

வைகுண்ட ஏகாதஸி திருவிழா-74

விந்தைகள் சிந்தும் ரோஜாக் கூட்டம்-75

அழகும் அற்புதமும்-76




150. திருமதி. காமாக்ஷி அவர்கள்
வலைத்தளம்: சொல்லுகிறேன்





இனிப்பு வகைகள் 

சித்ரா பெளர்ணமி

எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை

ஊறுகாய் வகைகள்






151. திருமதி.  பத்மாசூரி (சந்திரவம்சம்) அவர்கள்
வலைத்தளம்: தாமரை மதுரை

 

http://thamaraimalar-chandrasekar.blogspot.in/2012/11/blog-post_23.html
வணங்கி வாழ்த்தும் .. திருக்கார்த்திகை தீபம்



http://thamaraimalar-chandrasekar.blogspot.in/2012/11/blog-post_13.html
மொட்டுக்களின் பூந்தோட்டம்
மலர்களில் நிம்மதி
வாரிசு இல்லாவிட்டாலும் வாழ்க்கை இருக்கு
மனிதனும் தெய்வமாகலாம்
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி தரிஸனம்


 

152. திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள்
வலைத்தளங்கள்:

பாட்டி சொல்லும் கதைகள்

மணிமணியாய் சிந்தனை


நினைவில் நிற்கும் நிலாச்சோறு
அலட்சியம் வேண்டாம்
பெரிய தாசர்
ஒரு அன்னையின் உள்ளம்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

இவர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய நூல்
‘திருக்குறள் கதைகள்’

 

நூல் முதல் பதிப்பு வெளியீடு (2014): 
சாயி பதிப்பகம்
6/18 மேற்கு வன்னியர் தெரு
நெசப்பாக்கம் - சென்னை 600 078
அலைபேசி எண்: 94447 99569
விலை ரூ. 60-00



153.  திருமதி. பவள சங்கரி அவர்கள்
வலைத்தளம்: நித்திலம் - சிப்பிக்குள் முத்து


எழுத்து வல்லமை மிக்க இவர்களே
’வல்லமை’ 
இணைய இதழின் நிர்வாக ஆசிரியர் ஆவார்.



http://coralsri.blogspot.in/2015/04/blog-post_26.html
கலாசூரி விருதிற்கு நன்றி
http://coralsri.blogspot.in/2015/03/blog-post_8.html
தாயிற் சிறந்த கோயில் இல்லை
http://coralsri.blogspot.in/2015/02/httpwww.html
நிறைகுடமாய் நீண்டதொரு பயணம்
http://coralsri.blogspot.in/2013/12/blog-post_1402.html
பாசத்தின் விலை

இவர்கள் இதுவரை ஏராளமான நூல்கள் எழுதி 
வெளியிட்டுள்ளார்கள்.
அவற்றில் சமீபத்திய வெளியீடுகளில் சில:


  




154. சுய அறிமுகத்தில் சில ....








மீண்டும் நாளை சந்திப்போம் !







என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

49 கருத்துகள்:

  1. 26ம் திருநாள்....மல்லிகைச்சரங்கள் மயக்கும் மங்கையர்...
    திருமதிகள் இராஜராஜேசுவரி, காமாட்சி, பத்மாசூரி,
    ருக்மணி.எஸ், பவளநங்கரி, தாங்கள் எல்லோருக்கும் இதயம் நிறை வாழ்த்துகள்.
    (இன்று சகோதரி பவளசங்கரியின் ஆக்கம் ஒன்றிற்குக் கருத்திட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @kovaikkavi

      :) வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் இதயம் நிறைந்த வாழ்த்துகளுக்கு அனைவர் சார்பிலும் என் நன்றிகள். தங்களின் பின்னூட்டத்திலும்கூட மல்லிகை மணம் கமழ்வதை உணர முடிகின்றது :)

      //(இன்று சகோதரி பவளசங்கரியின் ஆக்கம் ஒன்றிற்குக் கருத்திட்டேன்)//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

      நீக்கு
  2. இன்றைக்கு சொல்லி இருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    திருமதி பத்மாசூரி அவர்களது பதிவுகள் படித்ததில்லை. படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வெங்கட் நாகராஜ்

      :) வாங்கோ வெங்கட்ஜி. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      நீக்கு
  3. அறிமுகங்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @பழனி. கந்தசாமி

      :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி. :)

      நீக்கு
  4. இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள். அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வே.நடனசபாபதி

      :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி, சார். :)

      நீக்கு
  5. இன்றைய சிறப்பான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @திண்டுக்கல் தனபாலன்

      :) வாங்கோ Mr DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி. :)

      நீக்கு
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Chitra

      :) வாங்கோ சித்ரா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  7. இருவர் இதுவரை தொடராதவர்கள்
    உடன் அவர்கள் பதிவுக்குச் சென்று வந்தேன்
    அற்புதமான பதிவர்களை அருமையாகப் பதிவு
    செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Ramani S

      :) வாங்கோ Mr Ramani Sir. வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  8. வணக்கம்,
    தங்களின் நினைவில் நின்ற இன்றைய பதிவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள், இனி தான் வாசிக்கனும், அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @mageswari balachandran

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      நீக்கு
  9. இன்று புதிய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @சசி கலா

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      :) தயவுசெய்து நாளைக்கும் ’தென்றல்’ ஆக வருகை தாங்கோ, ப்ளீஸ் :)

      நீக்கு
  10. தங்களின் - சிறப்பான தொகுப்பின் வழியாக
    பல தளங்களைப் பற்றியும் அறிய முடிகின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @துரை செல்வராஜூ

      :) வாங்கோ பிரதர், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      நீக்கு
  11. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Usha Srikumar

      :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  12. காமாட்சி மற்றும் பத்மாசூரி தளங்கள் சென்றதில்லை! சென்று பார்க்கின்றேன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @‘தளிர்’ சுரேஷ்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      நீக்கு
  13. அன்புள்ள V.G.K அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் வணக்கம். இன்றைய அறிமுகத்தில் எனக்கு, மரியாதைக்குரிய அம்மா திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள் மட்டுமே எனக்குத் தெரியும். அண்மையில் ஸ்ரீரங்கத்தில் அவர்களது இல்லத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பினில், தங்கள் அழைப்பின் பேரில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைத்த, மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @தி.தமிழ் இளங்கோ

      வாங்கோ சார், வணக்கம். அன்றைய நம் சந்திப்பின் இனிய நினைவலைகளை அழகாக எடுத்துச்சொல்லியுள்ளது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் இதர பல உதவிகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
  14. நினைவில் நின்றவர்களில் நானும் ஒருவள் என்பதே மிகவும் மகிழ்சியான விஷயமாக இருக்கிறது. எனக்கும் பதிவர்களில் யாரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற அவா மிகுதிதான்.இந்த என் எண்பத்திநான்காவது வயதில் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் பின்னூட்டங்கள் மூலமே என் நெருங்கிய உறவினராகி விட்டார். பார்க்கவில்லை என்ற குறையே எழுவதில்லை. ஏதோ வெகுகாலமான பந்தம் என்றே தோன்றுகிறது.
    அதே மாதிரி ரஞ்ஜநி,மற்றும் பலபேர் இருக்கிறார்கள். எனக்குப் பின்னூட்டம் அளிப்பவர்கள் எல்லோரையுமே பார்த்துப்பேசிய மகிழ்வு எனக்கிருக்கிறது. பலபேர்கள் என்னைத் தெரியாதவர்கள் கூட இன்று சொல்லுகிறேனைப் பார்ப்பார்கள்
    அதுவே எனக்கு மிகவும் பெருமை. உங்கள் யாவரையும் வரவேற்கிறேன்.. இன்று பெருமைக்குரியவர்களான அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
    நன்றி திரு. கோபால கிருஷ்ணன். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi June 26, 2015 at 5:34 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //நினைவில் நின்றவர்களில் நானும் ஒருவள் என்பதே மிகவும் மகிழ்சியான விஷயமாக இருக்கிறது. எனக்கும் பதிவர்களில் யாரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற அவா மிகுதிதான். இந்த என் எண்பத்திநான்காவது வயதில் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் பின்னூட்டங்கள் மூலமே என் நெருங்கிய உறவினராகி விட்டார்.//

      தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி. :)

      //பார்க்கவில்லை என்ற குறையே எழுவதில்லை. ஏதோ வெகுகாலமான பந்தம் என்றே தோன்றுகிறது.//

      இருக்கலாம். எனக்கும் ஒரு சிலருடனான தொடர்புகள், ஜன்ம ஜன்மமாக தொடரும் நெருங்கிய சொந்தங்கள் போலவே என்னையும் நினைக்க வைக்கிறது.

      //அதே மாதிரி ரஞ்ஜனி,மற்றும் பலபேர் இருக்கிறார்கள். எனக்குப் பின்னூட்டம் அளிப்பவர்கள் எல்லோரையுமே பார்த்துப்பேசிய மகிழ்வு எனக்கிருக்கிறது. பலபேர்கள் என்னைத் தெரியாதவர்கள் கூட இன்று ’சொல்லுகிறேன்’ என்ற என் வலைத்தளத்தினைப் பார்ப்பார்கள்//

      நிச்சயமாக ஒருசிலராவது கட்டாயம் வந்து பார்ப்பார்கள்.

      //அதுவே எனக்கு மிகவும் பெருமை. உங்கள் யாவரையும் வரவேற்கிறேன்.. இன்று பெருமைக்குரியவர்களான அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

      அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் என் நன்றிகள்.

      //நன்றி திரு. கோபால கிருஷ்ணன். அன்புடன்//

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள் + நமஸ்காரங்கள்.

      என்றும் அன்புடன் கோபு

      நீக்கு
  15. காமாட்சி அம்மாவை மட்டும் அறிவேன். மற்றவர்கள் தளங்கள் புதியது எனக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ஸ்ரீராம்.

      ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வாங்கோ, வணக்கம்.

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸ்ரீராம் ! :)

      நீக்கு
  16. எல்லோருமே புதியவர்கள் எங்களுக்கு....தாமதமாகி விட்டது சார். ஒரு வாரமாக வரையலவில்லை. பல நிகழ்வுகள் பயணம், வேலைப்பளு காரணமாக......பொருத்தருள்க சார்....இனி தொடர்கின்றோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu June 26, 2015 at 7:15 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //எல்லோருமே புதியவர்கள் எங்களுக்கு.... தாமதமாகி விட்டது சார். ஒரு வாரமாக வர இயலவில்லை. பல நிகழ்வுகள் பயணம், வேலைப்பளு காரணமாக...... பொருத்தருள்க சார்....//

      அதனால் பரவாயில்லை. இது எல்லோருக்குமே மிகவும் சகஜம்தான்.

      // இனி தொடர்கின்றோம்....//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார்.

      நீக்கு
  17. இன்று இத்தளத்தில் அறிமுப்படுத்திய விவரங்கள் பின்னூட்டமூலம் தெரியப்படுத்திய யாதவன்நம்பி-புதுவைவேலு அவர்களுக்கும், தமிழ் இளங்கோ அவர்கட்கும் என்நன்றியும்,அன்பும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi June 26, 2015 at 7:43 PM

      வாங்கோ, மீண்டும் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.

      //இன்று இத்தளத்தில் அறிமுப்படுத்திய விவரங்கள் பின்னூட்டமூலம் தெரியப்படுத்திய யாதவன்நம்பி-புதுவைவேலு அவர்களுக்கும், தமிழ் இளங்கோ அவர்கட்கும் என் நன்றியும், அன்பும். அன்புடன்//

      அவர்களின் இதுபோன்ற அன்றாட சேவைகளுக்கு நானும் தங்களுடன் சேர்ந்து என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி. :)

      நீக்கு
  18. வணக்கம் ஐயா !

    இன்றைய அறிமுகப் படுத்தலில் காமாட்சி அம்மா பத்மாசூரி அம்மா ருக்மணி அம்மா பவள சங்கரி ஆகியோரின் தளங்கள் எனக்கும் புதியவையே அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் தொண்டு துலங்கட்டும் அன்னைத் தமிழ்

    அறிமுகப் படுத்தலுக்கு மீண்டும் நன்றிகள் ஐயா
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ சீராளன்

      :) வாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகைக்கும் மனமார்ந்த ஆத்மார்த்தமான அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். மிக்க மகிழ்ச்சி :)

      நீக்கு
  19. பத்மாசூரி தவிர மற்ற அனைவரும் நன்கு தெரிந்தவர்கள் தாம். பவள சங்கரி அவர்களை வல்லமை ஆசிரியராகத் தெரியும். அவர்கள் தளத்தை இன்று தான் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அங்குச் சென்று பின்னூட்டமும் கொடுத்தேன். எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kalayarassy G June 26, 2015 at 10:31 PM

      வாங்கோ மேடம், வணக்கம்

      //பத்மாசூரி தவிர மற்ற அனைவரும் நன்கு தெரிந்தவர்கள் தாம்.//

      திருமதி. பத்மாசூரி அவர்கள் ஏனோ கடந்த ஓராண்டுக்கும் மேலாக [From Sep. 2013 onwards] புதிய பதிவுகள் ஏதும் வெளியிடாமல் உள்ளார்கள்.

      //பவள சங்கரி அவர்களை வல்லமை ஆசிரியராகத் தெரியும். அவர்கள் தளத்தை இன்று தான் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அங்குச் சென்று பின்னூட்டமும் கொடுத்தேன்.//

      மிகவும் சந்தோஷம், மேடம்.

      //எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்!//

      :) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம். :)

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  20. இன்றைய அறிமுகங்களில் பத்மாசூரி அவர்களைத் தவிர மற்றவர்களை அறிவேன். பல பதிவுகளை வாசித்துக் கருத்திடாமல் கடந்திருக்கிறேன். இனி கருத்திடுவதிலும் கவனம் வைக்கிறேன். அறிமுகங்களுக்கு நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி June 27, 2015 at 4:49 PM

      :) வாங்கோ, வணக்கம். :)

      //இன்றைய அறிமுகங்களில் பத்மாசூரி அவர்களைத் தவிர மற்றவர்களை அறிவேன்.//

      திருமதி. பத்மாசூரி அவர்கள் ஏனோ கடந்த ஓராண்டுக்கும் மேலாக [From Sep. 2013 onwards] புதிய பதிவுகள் ஏதும் வெளியிடாமல் உள்ளார்கள். அதனால் தாங்கள் இவர்களை அறிந்திருக்காமலும் இருக்கலாம்.

      //பல பதிவுகளை வாசித்துக் கருத்திடாமல் கடந்திருக்கிறேன்.//

      அதனால் என்ன? பரவாயில்லை, மேடம்.

      //இனி கருத்திடுவதிலும் கவனம் வைக்கிறேன். //

      சந்தோஷம். தங்கள் செளகர்யம்போலச் செய்யவும். தங்களால் முடியும்போது வாங்கோ. :)

      //அறிமுகங்களுக்கு நன்றி கோபு சார்.//

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம் :)

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  21. அனைவருமே புதியவர்கள். அவர்களுடைய தளங்களைச் சென்று பார்த்தேன். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. பிற பணிகள் காரணமாக உடன் எழுதமுடியவில்லை. நாளை சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Dr B Jambulingam

      :) வாங்கோ முனைவர் சார். வணக்கம். மிக்க மகிழ்ச்சி+நன்றி. :)

      //பிற பணிகள் காரணமாக உடன் எழுதமுடியவில்லை.//

      அதனால் பரவாயில்லை சார். தாமதமாகவேனும் மறக்காமல் வருகை தந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி, மட்டுமே. மிக்க நன்றி, சார்.

      நீக்கு
  22. http://gopu1949.blogspot.in/2015/07/35.html

    மேற்படி பதிவினில் திருமதி. பத்மாசூரி (சந்திரவம்சம்)
    வலைத்தளம்: தாமரை மதுரை, அவர்கள் தனது கீழ்க்கண்ட கருத்தினை பதிவு செய்துள்ளார்கள்.

    -=-=-=-=-=-

    சந்திர வம்சம் has left a new comment on your post "நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்":

    தங்களின் தகவலுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். அன்புடன் பத்மாசூரி

    அன்புமிகு ஐயா அவர்களுக்கு,
    பதிவு உலகில் சிறிது காலமே உலா வந்த என்னுடைய கன்னி முயற்சியினையும் பாராட்டியமைக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். "பல்வேறு பிரச்சனையின்" காரணமாக பதிவினை தொடர இயலவில்லை.அன்புடன் பத்மாசூரி

    திரு.வி.ஜி.கே. (V.G.K.) அவர்களின் சிறப்பான பின்னூட்டங்களினால்தான் என்னால் 100 பதிவுகளுக்கு மேல் பதிவிட முடிந்தது. புதிய பதிவாளர்களை அவர் ஊக்குவிக்கும் முறையே தனித்துவம் வாய்ந்தது.

    -=-=-=-=-=-

    அவர்களுக்கு என் அன்பான நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  23. Mail Message to me on 26.09.2015 from Mrs. Rukmani Seshasayee Madam:

    Rukmani Seshasayee 06:53 (13 hours ago) to me

    வணக்கம் கோபு சார். தங்கள் 26ம் திருநாள் என்ற பதிவினைப் பார்த்தேன். எப்படியோ படிக்காமல் விட்டுப் போய்விட்டது. மன்னிக்க. ஐந்து பெண்மணிகள் பற்றி தாங்கள் எழுதியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.அதில் என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி அறிமுகப் படுத்தியுள்ளதைப பார்த்து மிக மிக மகிழ்ச்சி.எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களது அயராது உழைக்கும் திறத்திற்கு என் பாராட்டுகள்.

    அன்புடன் ருக்மணி.

    பதிலளிநீக்கு
  24. திருமதி. ருக்மணி சேஷசாயீ அவர்களின் சமீபத்திய (2014) நூல் வெளியீடான ‘திருக்குறள் கதைகள்’ என்பதன் முன் அட்டையும், பின் அட்டையும், நூல் கிடைக்குமிடமும் இந்தப்பதிவினில் இப்போது இன்று புதிதாக என்னால் இணைக்கப்பட்டுள்ளது. இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    VGK

    பதிலளிநீக்கு
  25. மலர்ச்சரமாய் அறிமுகப்படுத்தப்பட்ட
    அருமையான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:35 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மலர்ச்சரமாய் அறிமுகப்படுத்தப்பட்ட அருமையான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..//

      மல்லிகை / ஜாதிப்பூ ........... மலர்ச்சரமாய் மணம் வீசும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க ! :)

      நீக்கு
  26. அறிமுகப்படுத்தப்பட்டஅருமையான பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya November 2, 2015 at 3:38 PM

      //அறிமுகப்படுத்தப்பட்டஅருமையான பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..//

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      போட்டிக்கான 750 பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டம் அளித்து நிறுத்திக்கொள்ளாமல், அதையும் தாண்டி நான் இதுவரை வெளியிட்டுள்ள 43 உபரிப் பதிவுகளுக்கும் முழுவதுமாக பின்னூட்டம் அளித்து மாபெரும் சாதனையைச் செய்துள்ளீர்கள். 793 out of 793 as on 02.11.2015.

      என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நன்றிகள், ஜெ.

      உங்களுக்கு அடுத்ததாக வேறு ஒருவர் 777 out of 793 பின்னூட்டமிட்டு, தங்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்கள். அவர்கள் பின்னூட்டமிடாமல் விட்டுப்போன 16 பதிவுகளில் 15 பதிவுகள் ஜூன் 2015 இல் என்னால் வெளியிடப்பட்டுள்ளவை. ஒருவேளை மறந்தே போய் இருப்பார்களோ என்னவோ. அதனால் பரவாயில்லை. அவை போட்டிக்கு சம்பந்தமே இல்லாதவை மட்டுமே. போட்டிக்கு அல்லாத மற்ற எல்லாவற்றிற்கும் வருகை தருவதோ தராததோ அவரவர்கள் இஷ்டம் மட்டுமே.

      OK Jaya .... Thank you, Jaya .... Best Wishes !

      HAPPY DEEPAVALI

      பிரியமுள்ள கோபு அண்ணா.

      நீக்கு