என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 15 அக்டோபர், 2016

ஆர்டிஸ்ட் அநிருத் ..... வயது ஐந்து !



சமீபத்தில் 
’தமிழ்நாடு அரசு - வனத்துறை’யினரால்
 நடத்தப்பட்டுள்ளதோர் ஓவியப் போட்டியில்  
திருச்சி மாவட்ட அளவில் 
முதலிடம் !

Master: S. ANIRUDH 
U.K.G. Student of 
R.S.K. Higher Secondary School
BHEL Township - Tiruchirapalli - 14.


ஐந்து வயதே ஆகும்
என் பேரக்குழந்தை 
’அநிருத்’தின்
ஓவிய சாதனை !!  

 

போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த
 நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன்
நடுவர்கள் முன்னிலையில்

ஓவியப் போட்டி நடைபெற்ற நாள்: 
17.09.2016

போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 
நடைபெற்ற நாள்: 
07.10.2016

இடம்:  பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி



  

போட்டி நடைபெறும் நாளுக்கு முன்பாக
 அவனாகவே ஓர் ஆர்வத்தில், 
வீட்டில் ஒருவார பயிற்சி  எடுத்துக்கொண்டபோது
'அநிருத்' வரைந்துள்ள மாதிரி ஓவியங்களில் சில...







வெட்டப்பட்டுள்ள மரம் ஒன்று
கண்ணீர் விட்டபடி
தன் கையை உயர்த்தி
‘என்னைக் காப்பாற்றுங்கள் ....
எனக்கு உதவி செய்யுங்கள்’
[ ' SAVE ME' ..... 'HELP ME' ]
எனக் கதறுவதாக 
போட்டியின் நடுவர்கள் முன்னிலையில்
தானே கற்பனையில் வரைந்து
அங்கேயே அவர்கள் எதிரிலேயே
வர்ணங்களும் தீட்டி 
என் பேரனால்  கொடுக்கப்பட்டுள்ள படம்
திருச்சி மாவட்ட அளவில்
முதல் பரிசினைப் பெற்றுக்கொடுத்துள்ளது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



  
மேற்படிச் சான்றிதழில் இரு சிறு எழுத்துப்பிழைகள் உள்ளன

குழந்தையின் பெயர்: S. ANIRUDH
என எழுதப்பட்டிருக்க வேண்டும்.
[ instead of S. ANIRUTH ]

L.K.G. என்பதற்கு பதில் U.K.G. எனப்
போடப்பட்டிருக்க வேண்டும்.
 







  

Our Heartiest Congratulations to
My Dear ANIRUDH 




 

D.O.B : 24th April, 2011

 2011

 

 




2012

 

 



2013

  




2014









2015

10.11.2015 தீபாவளியன்று 



2016

On 17th January, 2016  
in a function at Srirangam


On 7th October, 2016 
Secured District Level First Prize in
Drawing Competition ! 

[ 'ANIRUDH' with his little brother 'AADHARSH' ]





தொடர்புடைய பதிவும் பின்னூட்டங்களும்
’வெற்றித் திருமகன்’

 

குழந்தை அநிருத் 
அவ்வப்போது வரைந்துள்ள 
வேறு சில டைரி கிறுக்கல் படங்களில்
கைவசம் இப்போது கிடைத்துள்ளவை மட்டும் இதோ:







 



சிறு வயதிலிருந்தே அவன் Free Hand இல் வரையும் படங்களையும், அதில் அவன் கொண்டுவரும் வளைவு நெளிவு சுளிவுகளையும் கண்டு நான் மிகவும் வியந்து போவதுண்டு.

பேப்பர், டைரி, பென்சில், பேனா, கலர் பென்சில்கள், ஸ்கெட்ச் பேனாக்கள் என அவனிடம் கொடுத்துவிட்டால் போதும். மணிக்கணக்காக அதில் அவன் ஆழ்ந்து விடுவது உண்டு.

ஓவியம் மட்டுமல்லாமல், எதிலுமே மிகச்சிறப்பான நினைவாற்றலும், கற்பனா சக்தியும், இசை ஞானமும், வேறு சில தனித்திறமைகளும், வயதுக்கேற்ற குறும்புகளும் கொண்டவனாக இருப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

தாத்தா எழுதிய ‘அ, ஆ, இ, ஈ,  ........ ஃ’ எழுத்துக்களை, டிக் செய்து, ஸ்டார் போட்டு, ஸ்மைலி போட்டு, தன்னை ஒரு டீச்சராகவே பாவித்துக்கொண்டு GOOD போட்டு கொடுத்துள்ளதைப் பாருங்கோ. :)

 

Some of the Arts of 'ANIRUDH' 
on the outer walls of the 
Washing Machine at his home.

 






Fancy Dress Competition at School on 08.11.2016


^Fancy Dress Competition at School on 08.11.2016^


ONE MORE WINNING !

SPLASH COLOURING COMPETITION HELD AT 
KAILASAPURAM CLUB OF B.H.E.L., TIRUCHI-14
IN CONNECTION WITH CHILDREN'S DAY 
14.11.2016

Sri. S. ANIRUDH 
has secured 2nd Prize
in this Competition 

 


 He receives this Prize from the 
General Manager/Welding Research Institutue
BHEL - TIRUCHI-14
 




 


என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]









130 கருத்துகள்:

  1. புலிக்குட்டி. உங்கள் பேரன் பின்னே திறமையில்லாமல் இருப்பானா? பெருமை கொள்ளும் தருணங்கள். அநிருத்துக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். October 15, 2016 at 3:10 PM

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //புலிக்குட்டி.//

      :) மிக்க மகிழ்ச்சி.

      //உங்கள் பேரன் பின்னே திறமையில்லாமல் இருப்பானா?//

      எல்லாம் கடவுள் செயல், ஸ்ரீராம்.

      //பெருமை கொள்ளும் தருணங்கள்.//

      ஆம், மிகவும் சந்தோஷமாகவே உள்ளது.

      //அநிருத்துக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
  2. குழந்தை அனிருத்துக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் ....ஆசீர்வாதங்கள்.
    மிக அழகாக வரைந்திருக்கிறேன்.கான்செப்ட்டை அனைவருக்கும் பொட்டில் அடித்தாற்போல் புரிய வைத்துள்ளான். Congratulations !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Usha Srikumar October 15, 2016 at 3:19 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //குழந்தை அனிருத்துக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் ....ஆசீர்வாதங்கள்.//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, மேடம்.

      //மிக அழகாக வரைந்திருக்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //கான்செப்ட்டை அனைவருக்கும் பொட்டில் அடித்தாற்போல் புரிய வைத்துள்ளான். Congratulations!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பேரக்குழந்தைக்கான பாராட்டுகள் + ஆசீர்வாதங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  3. பேரனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் கோபுசார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G.M Balasubramaniam October 15, 2016 at 4:09 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //பேரனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் கோபு சார்//

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார். எல்லாவற்றிற்கும் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகளே காரணம்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. middleclassmadhavi October 15, 2016 at 4:23 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //Congrats Sir!//

      Thanks a Lot Madam.

      //unga pasamum ulleeda odugirathu pathivil!! உங்கள் பாசமும் உள்ளீடா ஓடுகிறது பதிவில்!!//

      அது நம்மையறியாமலேயே ஓடத்தானே செய்யும் ! :)

      தங்களின் அபூர்வ வருகைக்கும், பாசமுள்ள கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  5. செல்வன் அனிருத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அவன் மேன்மேலும் பல வெற்றிகள் அடைய ஆண்டவன் கிருபை புரியட்டும்.

    உங்கள் பேரன் இந்த வெற்றியைப் பெற ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துள்ள உங்களுக்கும் என்து பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப.கந்தசாமி October 15, 2016 at 4:26 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //செல்வன் அனிருத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அவன் மேன்மேலும் பல வெற்றிகள் அடைய ஆண்டவன் கிருபை புரியட்டும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      //உங்கள் பேரன் இந்த வெற்றியைப் பெற ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துள்ள உங்களுக்கும் எனது பாராட்டுகள்.//

      பொதுவாக அவனுக்கு ஓவியம் வரைவதில் உள்ள ஈடுபாட்டுக்கு நான் அவ்வப்போது ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவது உண்டு.

      இருப்பினும், இந்தக்குறிப்பிட்ட போட்டியில் என் பேரன் கலந்து கொண்டிருக்கிறான் என்பதே முதலிலேயே எனக்குத் தெரியாமல்தான் இருந்தது. பிறகுதான் தெரிய வந்தது.

      இதற்கான ஊக்கம் கொடுத்துள்ளது அவனின் அப்பாவும் அம்மாவும் மட்டுமே.

      தங்களைப்போன்ற பெரியோர்கள் + என் நலம் விரும்பிகளின் ஆசிகளும் சேர்ந்து மட்டுமே இந்த வெற்றியினை ஈட்டிக்கொடுத்துள்ளன.

      அன்புடன் VGK

      நீக்கு
  6. செல்வன் அணிருத்திற்கு என் பாராட்டுக்களும், ஆசிகளும்.
    கோபு சாரின் பேரன் ஓவியம் வரைவதில் வியப்பில்லை.
    Hats Off to Anirudh!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam October 15, 2016 at 4:36 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //செல்வன் அநிருத்திற்கு என் பாராட்டுக்களும், ஆசிகளும்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம். :)

      //கோபு சாரின் பேரன் ஓவியம் வரைவதில் வியப்பில்லை.//

      அடடா .... நீங்கள் இப்படிச் சொல்வது எனக்கு வியப்பாக உள்ளது, மேடம். :)

      //Hats Off to Anirudh!//

      Thanks. Thanks a Lot, Madam.

      நீக்கு
  7. குழந்தை(இப்படி சொல்லலாமோ)?????
    அநிருத்துக்கு வாழ்த்துகள்.. விளையும் பயிர்.....தாத்தாவோட பேரனாச்சே.. வேர எப்படி இருப்பான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ராப்தம் October 15, 2016 at 5:38 PM

      //குழந்தை (இப்படி சொல்லலாமோ)?????//

      ஒரு குழந்தை (தன் மடியில் ஒன்றல்ல இரண்டு குழந்தைகளுடன்) தன் மழலை மொழியில், எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அது அழகோ அழகுதான். :)

      //அநிருத்துக்கு வாழ்த்துகள்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //விளையும் பயிர்.....//

      நன்கு செழித்து வளரட்டும். என் அன்பான நல்வாழ்த்துகள்.

      //தாத்தாவோட பேரனாச்சே.. வேற எப்படி இருப்பான்...//

      அடடா ! நீ வேறு ஏதேதோ டூ மச் ஆகச் சொல்லுகிறாயே !!

      உன் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், குழந்தை அநிருத்துக்கான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூஊஊஊஊ.

      நீக்கு
  8. ஆஹா...கோபு பெரிப்பா...அநிருத் ஆர்ட்டிஸ்டுக்கு சந்தோஷமான வாழ்த்துகள்.. பிறந்ததிலேந்து அவனின் போட்டோவை சேமிப்புல வச்சிருக்கிங்களே.ரொம்ப நல்லா இருக்கைு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy October 15, 2016 at 5:41 PM

      வாம்மா, என் செல்லக்குழந்தாய் ஹாப்பி. உன் வருகை மிகவும் ஹாப்பியாக உள்ளது.

      //ஆஹா... கோபு பெரிப்பா... அநிருத் ஆர்ட்டிஸ்டுக்கு சந்தோஷமான வாழ்த்துகள்.. //

      மிக்க மகிழ்ச்சி...... டா, தங்கம்.

      //பிறந்ததிலேந்து அவனின் போட்டோவை சேமிப்புல வச்சிருக்கிங்களே. ரொம்ப நல்லா இருக்கு//

      சந்தோஷம். அதெல்லாம் இன்னும் எக்கச்சக்கமாக இருக்குது. கன்னத்தில் குழிவிழும் சிரித்த முகக் குழந்தையாகிய உன்னுடையதும் கூட அந்த என் சேமிப்பினில் பத்திரமாகவே உள்ளது. :)

      உன் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  9. ஆர்டிஸ்ட் அநிருத்.. அட! இந்த அழைப்பே எவ்வளவு அழகாக இருக்கிறது!.. குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

    நூறு கூட்டங்கள் போட்டு மரத்தை வெட்டாதீர்கள் என்று அறிவுரை சொன்னாலும் எடுபடாத effective-வா குழந்தை சொன்ன கருத்து! தெய்வம் சொன்ன மாதிரி ஏற்றுக்கொண்டு பரிசு பெற்றத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி October 15, 2016 at 5:51 PM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள். வணக்கம்.

      //ஆர்டிஸ்ட் அநிருத்.. அட! இந்த அழைப்பே எவ்வளவு அழகாக இருக்கிறது!..//

      என்ன தலைப்பு கொடுக்கலாம் என நான் என் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென உதித்து மலர்ந்தது இந்தத் தலைப்......’பூ’ :)

      தலைப்......’பூ’ போலவே அழகாக அமைந்துள்ளதாக தாங்களும் சொல்லியுள்ளதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியே.

      //குழந்தைக்கு வாழ்த்துக்கள்.//

      குழந்தைக்கான தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்

      //நூறு கூட்டங்கள் போட்டு மரத்தை வெட்டாதீர்கள் என்று அறிவுரை சொன்னாலும் எடுபடாத effective-வா குழந்தை சொன்ன கருத்து! தெய்வம் சொன்ன மாதிரி ஏற்றுக்கொண்டு பரிசு பெற்றத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்!//

      எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்கள் + என் நலம் விரும்பிகளின் ஆசீர்வாதங்கள் மட்டுமே, தெய்வம் சொன்ன கருத்து மாதிரி போட்டியின் நடுவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த ஏகப்பட்ட சந்தோஷத்தை அளித்துள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், EFFECTIVE ஆன கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். :)

      நீக்கு
  10. தாத்தாவை சந்தோஷப்படுத்திய பேரன்...ஆர்டிஸ்ட் அநிருத்துக்கும் தாத்தாவுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. October 15, 2016 at 5:53 PM

      வா, மீனா, வணக்கம்.

      //தாத்தாவை சந்தோஷப்படுத்திய பேரன்... ஆர்டிஸ்ட் அநிருத்துக்கு வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //தாத்தாவுக்கும் வாழ்த்துகள்//

      சந்தடி சாக்கில் என்னைத் தாத்தா எனச் சொல்லித் தனக்குள் மகிழ்ந்து கொண்டுள்ள கொ.எ.கு. மீனாவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  11. கோபால் ஸார் நீங்களே சிறந்த ஆர்டிஸ்ட்தானே.. அந்த ஜீன்ஸ்...பேரனுக்கும் வந்திருக்கு சந்தோஷம்..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... October 15, 2016 at 5:55 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கோபால் ஸார் நீங்களே சிறந்த ஆர்டிஸ்ட்தானே..//

      ஒரேயடியாக அப்படிச் சொல்ல முடியாது. நான் ஏதோ கொஞ்சம் கிறுக்குவேன். ஓவியத்தை ரஸிப்பதில் எனக்கும் கொஞ்சம் ஆர்வம் உண்டு.

      //அந்த ஜீன்ஸ்...பேரனுக்கும் வந்திருக்கு சந்தோஷம்.. வாழ்த்துகள்..//

      இருக்கலாம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், சந்தோஷமான வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  12. வனத்துறையினர் நடத்திய போட்டிக்கு பொறுத்தமான படங்களை குழந்தை வரைந்திருக்கிறான். கோபால்ஸார் இவங்க உங்க கூடதான் இருக்காங்களா. படம் வரைவதில் நீங்க ஆலோசனைகள் சொல்லுவிங்களா..பிறந்ததுமுதல் இப்ப வரையிலும் போட்டோக்களை சேமித்து வைத்திருப்பதுடன்.நாங்கள் பார்த்து ரசிக்க பதிவாகவும் போட்டது அநிருத்துக்கு பெரிய என்கரேஜ்மெண்டா இருக்கும் சந்தோஷமான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... October 15, 2016 at 6:01 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வனத்துறையினர் நடத்திய போட்டிக்கு பொருத்தமான படங்களை குழந்தை வரைந்திருக்கிறான்.//

      ஆமாம். :)

      //கோபால்ஸார் இவங்க உங்க கூடதான் இருக்காங்களா.//

      நாங்களும் அவர்களும் இன்றைய தேதியில் ஒரே ஊரில்தான் இருக்கிறோம். இருப்பினும் தனித்தனியே தான் இருக்கிறோம்.

      என் மகனின் பணி நிமித்தமாகவும், வேறு சில வசதிகள் + அலுவலக நிர்பந்தங்கள் காரணமாகவும், நாங்கள் தற்சமயம் வசிக்கும் இல்லத்திலிருந்து ஒரு 20 கிலோ மீட்டர் தள்ளி, அவர்கள் தனியே தான் வசித்து வருகிறார்கள். வாரம் ஒருமுறையாவது இங்கு நம் இல்லத்திற்கு குழந்தைகளுடன் காரில் வந்து போவார்கள்.

      //படம் வரைவதில் நீங்க ஆலோசனைகள் சொல்லுவிங்களா..//

      இங்கு பேரன் வரும்போது பெரும்பாலும் என்னுடன் தான் ஒட்டிக்கொண்டு இருப்பான். அவன் என்னருகில் படம் வரைய உட்காரும் போது, அதனை ரஸித்து நானும் பார்த்துக்கொண்டு இருப்பேன். அவ்வப்போது கைத்தட்டி + கைகுலுக்கி நான் அவனைப் பாராட்டுவேன்.

      ”நம் அநிருத் எவ்ளோ சூப்பரா வரைந்திருக்கான் பாருங்கோ” என வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, அவன் எதிரிலேயே காட்டி மகிழ்வதும் உண்டு. இதெல்லாம் அவனுக்கு உற்சாகமாக இருக்கும்.

      தேவைப்படும்போது ஒரு சில ஆலோசனைகளும் சொல்லுவது உண்டு. அவன் போக்கில் வரையச் சொல்லி அதனை முதலில் பாராட்டி விட்டு, இந்த இடம் இன்னும் கொஞ்சம் இப்படி இருந்தால் இன்னும் ஜோராக இருக்குமே, இந்த இடத்தில் இந்தக்கலர் அடித்திருந்தால் இன்னும் அமர்க்களமாக இருக்குமே எனச் சொல்லி புரிய வைப்பது உண்டு. அவனும் அதனை நன்கு புரிந்துகொள்வான். பெரும்பாலும் அதே படத்தினை மீண்டும் சரியாக வரைந்து, சரியான கலர் கொடுத்துக் காட்டியும் விடுவான்.

      //பிறந்ததுமுதல் இப்ப வரையிலும் போட்டோக்களை சேமித்து வைத்திருப்பதுடன் நாங்கள் பார்த்து ரசிக்க பதிவாகவும் போட்டது அநிருத்துக்கு பெரிய என்கரேஜ்மெண்டா இருக்கும் சந்தோஷமான வாழ்த்துகள்.//

      ஆமாம். இதையெல்லாம் நான் பதிவேற்றி விடுவதால், நாளடைவில் இந்த நிகழ்ச்சியை நாம் மறக்காமல் இருக்க உதவும். இவை நமக்கே ஒரு Future Reference க்குத் தேவையும் படலாம். வீட்டில் ஒரு பொருளையோ, பேப்பரையோ தேடிக் கண்டு பிடிப்பதைவிட, கணினியில் தேடிக் கண்டு பிடிப்பது மிகச் சுலபமாக இருக்கும். குழந்தையும் வளர வளர சற்றே பெரியவன் ஆனதும், தாத்தாவின் வலைப்பதிவினைத் தானே என்றாவது திறந்து பார்த்து மகிழ்ச்சி கொள்ளலாம். இங்கு அவன் வந்துபோகும் போதெல்லாம் நானும் அவனிடம் இதனைக்காட்டி அவனை மேலும் உற்சாகப்படுத்தவும் செளகர்யமாக இருக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், சந்தோஷமான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  13. தாத்தாவுக்கு ஏற்ற பேரன்! அநிருத் குட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேன்மேலும் வரைந்து பழகிட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ADHI VENKAT October 15, 2016 at 6:02 PM

      வாங்கோ, மேடம். வணக்கம்.

      //தாத்தாவுக்கு ஏற்ற பேரன்!//

      :) ஆம். உண்மைதான். அதே.... அதே ! மிக்க மகிழ்ச்சி. :)

      //அநிருத் குட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேன்மேலும் வரைந்து பழகிட வாழ்த்துகள்.//

      மிகவும் சந்தோஷம். :)

      அநிருத் குட்டிக்கு மிகச்சரியாக ஓராண்டு நிறைவு விழா முடிந்த மறுநாள் (12.05.2012) தாங்கள் தம்பதி ஸமேதராய் என் இல்லத்திற்கு, முதன்முறையாக வருகை தந்து மகிழ்வித்திருந்தீர்கள்.

      https://www.facebook.com/vai.gopalakrishnan/posts/10209720213996119?comment_id=10209729879237744

      மேற்படி ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வயதுக் குழந்தையான ’அநிருத்’ உடன் தாங்கள் இருவரும் தம்பதியினராக அமர்ந்துள்ள படத்தினை வெளியிட்டுள்ளேன். பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். :)

      மேலும் குழந்தை செல்வி: ரோஷ்ணி வரைந்துள்ள, இரட்டை மாட்டு வண்டி ஓவியத்தையும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்து உண்மையிலேயே நான் பிரமித்துப்போய் மிகவும் மகிழ்ச்சியில் பூரித்துப்போனேன்.

      செல்வி: ரோஷ்ணிக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்.

      இந்தப்பதிவுக்குத் தங்களின் அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  14. ஆர்டிஸ்ட் அநிருத் படங்கள் பொறுத்தமானதாக நல்லா வந்திருக்கு.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீனி வாசன் October 15, 2016 at 6:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆர்டிஸ்ட் அநிருத் படங்கள் பொருத்தமானதாக நல்லா வந்திருக்கு.. வாழ்த்துகள்..//

      தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  15. ஆஹா! மிக மிக மகிழ்ச்சி சார்! நன்றாக வரையக்கூடிய உங்கள் ஜீன்ஸ் பேரனிடம் இருக்கிறது என நினைக்கிறேன். எதிர்காலத்தில் சிறந்த ஓவியராக மிளிரக்கூடிய சாத்தியம் இப்போது குழந்தை வரைந்துள்ள படங்களிலிருந்தே தெரிகின்றது. என்னைக் காப்பாற்றுங்கள் என்று மரம் கெஞ்சுகிற மாதிரி வரைந்துள்ள படம் மிகவும் நெகிழ வைக்கிறது! மரத்தின் அவசியம் இந்தச்சின்ன வயதிலேயே அந்தப் பிஞ்சுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது வளரும் தலைமுறையின் மீது நம்பிக்கை வைக்கத் தோன்றுகிறது. என் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் பேரனிடம் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி October 15, 2016 at 6:28 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஆஹா! மிக மிக மகிழ்ச்சி சார்! நன்றாக வரையக்கூடிய உங்கள் ஜீன்ஸ் பேரனிடம் இருக்கிறது என நினைக்கிறேன்.//

      :) இருக்கலாம். எங்கள் குடும்பத்தில் உள்ள என் நெருங்கிய உறவினர்கள் எல்லோரும் இதனைத்தான் சொல்லி வருகிறார்கள். தாங்களும் அதையே இங்கு சொல்லியுள்ளதில் எனக்கு மேலும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் தாங்களும் என் குடும்பத்தில் ஓர் உறவினர் போலவே எனக்குக் காட்சியளிக்கிறீர்கள். :)

      //எதிர்காலத்தில் சிறந்த ஓவியராக மிளிரக்கூடிய சாத்தியம் இப்போது குழந்தை வரைந்துள்ள படங்களிலிருந்தே தெரிகின்றது.//

      மிகவும் சந்தோஷம். தங்களின் வாக்கு பலிக்கட்டும். அவன் எதிர்காலத்தில் சிறந்த ஓவியராக மிளிரட்டும்.

      //என்னைக் காப்பாற்றுங்கள் என்று மரம் கெஞ்சுகிற மாதிரி வரைந்துள்ள படம் மிகவும் நெகிழ வைக்கிறது!//

      ஆம். அதனாலேயே அது போட்டியின் நடுவர்களையும் நெகிழ வைத்து, முதல் பரிசுக்குத் தேர்வாகி இருக்கலாம் என்பதே எனது எண்ணமும் ஆகும்.

      இதனை இதுபோல வரையச் சொல்லி, குழந்தைக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைத்துள்ளது, அவனின் தந்தையான என் மூன்றாவது மகன் ஆவார்.

      Credit goes to him & to his Mrs. also. :)

      //மரத்தின் அவசியம் இந்தச்சின்ன வயதிலேயே அந்தப் பிஞ்சுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது வளரும் தலைமுறையின் மீது நம்பிக்கை வைக்கத் தோன்றுகிறது.//

      பொதுவாக இந்தக்காலக் குழந்தைகள் பிறக்கும்போதே அதி புத்திசாலிகளாகத்தான் உள்ளனர். அவர்கள் நல்ல முறையில் வளர்க்கப்பட்டால், நிச்சயமாக வளரும் தலைமுறையின் மீது, தாங்கள் சொல்லியுள்ளதுபோல, நாம் நம்பிக்கை வைக்கலாம் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லைதான்.

      //என் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் பேரனிடம் சொல்லுங்கள்.//

      நிச்சயமாகச் சொல்லுவேன். :)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகழகான வித்யாசமான கருத்துக்களுக்கும், குழந்தைக்கான ஆசிகள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  16. அநிருத்துக்கு அத்தை பாட்டியின் வாழ்த்துக்கள்.

    புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? பேர் சொல்ல ஒரு பிள்ளை மட்டும் இல்லை. பேரனும் தான்.

    இயற்கையை நேசிக்க இப்பொழுதே கற்றுக் கொண்டு விட்டான். அப்புறம் என்ன. இன்னும் பல வெற்றிகளைப் பெற மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya October 15, 2016 at 8:09 PM

      //அநிருத்துக்கு அத்தை பாட்டியின் வாழ்த்துக்கள்.//

      வாங்கோ, அநிருத்தின் அத்தைப்பாட்டியான ஜெயா! :) வணக்கம்.

      தங்களின் இந்த பாசமுள்ள வாழ்த்துகளுக்கு முதற்கண் என் ஸ்பெஷல் நன்றிகள்.

      //புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?//

      தெரியவில்லை. உங்களைப் போன்ற ஒரு புலியையோ அல்லது என்னைப்போன்ற ஒரு பூனையையோ கேட்டால் ஒருவேளைத் தெரியலாம்.

      //பேர் சொல்ல ஒரு பிள்ளை மட்டும் இல்லை. பேரனும் தான். //

      அடடா ..... அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பிள்ளைகளைவிட பேரன்கள், பேத்திகள், நாட்டுப்பெண்கள் ஆகியோரைக் கோயில் கட்டிக் கும்பிட வேண்டும் போலத் தோன்றுகிறது, எனக்கு. :)

      //இயற்கையை நேசிக்க இப்பொழுதே கற்றுக் கொண்டு விட்டான். அப்புறம் என்ன. இன்னும் பல வெற்றிகளைப் பெற மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

      “ஜெ” யின் அன்பான வருகைக்கும், பாசமுள்ள கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  17. அநிருத்தின் திறமையை வெளிச்சமிடும் படங்களையும், உங்கள் எழுத்தில் தாத்தாவின் பெருமிதத்தையும் காண முடிந்தது. பாராட்டுக்கள். படத்தைவிட அவனின் கற்பனை என்னைக் கவர்ந்தது. Themeக்கேற்ற சிந்தனை, சிறிய வயதில். இதைத்தான், இந்த awarenessஐத்தான் போட்டி நடத்தியவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்.

    உங்கள் மகன்களில் யாரிடமாவது வரையும் திறமை இருந்ததா? அப்படி இருந்திருந்தால் அதை ஆதரித்தீர்களா (encouragement)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் October 15, 2016 at 8:28 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அநிருத்தின் திறமையை வெளிச்சமிடும் படங்களையும், உங்கள் எழுத்தில் தாத்தாவின் பெருமிதத்தையும் காண முடிந்தது. பாராட்டுக்கள்.//

      மிகவும் சந்தோஷம். என்னாலும் இதனை மிகவும் பெருமிதமாகத்தான் உணர முடிகிறது. தங்களின் பாராட்டுகளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> நெல்லைத் தமிழன் (2)

      //படத்தைவிட அவனின் கற்பனை என்னைக் கவர்ந்தது. Themeக்கேற்ற சிந்தனை, சிறிய வயதில். இதைத்தான், இந்த awarenessஐத்தான் போட்டி நடத்தியவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்.//

      ’படம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், பரிசுக்குத் தேர்வாகும்’ என்ற Concept / Theme முதலியன அவனின் அப்பாவால் அவனுக்கு விளக்கப்பட்டுள்ளது.

      அதனை நன்கு மனதில் வாங்கிக்கொண்டும், புரிந்துகொண்டும் அவனாகவே சுலபமாக தன் கற்பனையில் வரைந்துள்ளான்.

      போட்டிக்குச் செல்லும் நாள்வரை தினமும் ஒருமுறை வரைந்து கலர் அடித்து தன் அப்பா அம்மாவிடம் காட்டியும் உள்ளான்.

      இதுபோல ஒரு போட்டி நடந்ததோ, அதில் என் பேரன் கலந்துகொண்டதோ எனக்குத் தெரியவே தெரியாது.

      போட்டி நடைபெற்று முடிந்த நாளுக்குப் பிறகே, இங்கு எங்கள் இல்லத்திற்கு வந்திருந்தபோது, இதுவிஷயம் பற்றி என்னிடம் சொன்னார்கள்.

      உடனே எனக்காகவே ஒருமுறை என் எதிரில் வரைந்து கலர் அடித்துக் காட்டினான் என் பேரன் ‘அநிருத்’.

      அப்போதே நான் நினைத்துக்கொண்டேன், ’இவனுக்கு, இந்தப்படத்துக்கு, நிச்சயமாக ஏதேனும் ஒரு பரிசு தரப்படலாம்’ என்று.

      அவனிடமும் கைகுலுக்கி, பாராட்டி விட்டு நான் சொன்னேன் “உனக்கு நிச்சயமாக பரிசு கிடைக்கும்” என்று.

      நான் நினைத்தபடியே பரிசு ... அதுவும் மாவட்ட அளவில் முதல் பரிசு என்று கேள்விப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

      >>>>>

      நீக்கு
    3. VGK >>>>> நெல்லைத் தமிழன் (3)

      //உங்கள் மகன்களில் யாரிடமாவது வரையும் திறமை இருந்ததா? அப்படி இருந்திருந்தால் அதை ஆதரித்தீர்களா (encouragement)//

      குறிப்பாக, சிறப்பாக வரையும் திறமை என்று இல்லாவிட்டாலும்கூட, அவர்கள் மூவரிடமும் பல்வேறு தனித் திறமைகள் இருந்து வந்தன.

      அவற்றை நான் அவ்வப்போது சொல்லிச் சொல்லி உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்திப் பாராட்டி ஆதரித்ததும் உண்டு.

      எனக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் மட்டுமே. பெண் குழந்தை பிறக்கும் பாக்யம் இல்லாமல் போய்விட்டதில் கொஞ்சம் வருத்தமும் உண்டு.

      >>>>>

      நீக்கு
    4. VGK >>>>> நெல்லைத் தமிழன் (4)

      என் மூத்த பிள்ளைக்கு சிறு வயதிலிருந்தே இஞ்சினீரிங் மைண்ட் உண்டு.

      உதாரணமாக கீ கொடுத்து ஓடும் பொம்மையை வாங்கிக்கொடுத்தால், அது எவ்வாறு ஓடுகிறது என்பதைக் கண்டு பிடிக்க வேண்டியே, அதனை முதல் வேலையாக உடைத்து உள்ளே என்னென்ன மெகானிஸம் உள்ளன ..... எதனால் நாம் கீ கொடுத்தால், அது தானாகவே ஓடுகிறது என்பதை ஆராய்ச்சி செய்வான்.

      இன்று மிகப்பெரிய கம்பெனியில் இஞ்சினியர் ஆகி, மிகப்பெரிய பதவி வகித்துக்கொண்டு, அடிக்கடி உலகம் பூராவும் (ஒரு நாடு கூட விடாமல்) சுற்றி வந்துகொண்டு இருக்கிறான்.

      அநேகமாக மாதத்தின் பாதி நாட்களில் அடுத்தடுத்து விமானப்பயணத்தில் பறப்பது மட்டுமே இன்றைய அவன் வேலையாக உள்ளது. :)

      >>>>>

      நீக்கு
    5. VGK >>>>> நெல்லைத் தமிழன் (5)

      இரண்டாவது பிள்ளைக்கு, அவன் அம்மாவைப்போல சங்கீதம் + இசை ஞானம் ஏராளமாக உண்டு.

      லாங்க் ஜம்ப், ஹை ஜம்ப் போன்ற ஸ்போர்ட்ஸ் களிலும் கில்லாடி.

      வில் வித்தையில் அர்ஜுனன் போல, சிறுவயதிலேயே இவன் வெச்ச குறி எதுவுமே தப்பாது. சுமார் ஐம்பது அடி தூரத்தில் உள்ள கோலிக்குண்டை, குறிபார்த்து அடித்து நொறுக்கி விடுவான்.

      கியாரம் போர்டில் தன் கையில் ஸ்ட்ரைக்கரைப் பிடித்தால், அனைத்துக் காய்களையும் ஒரே மூச்சில் (ஏக் தம்மில்) சப்ஜாடாக முடித்து விடுவான்.

      இவன் திறமைகளை மட்டுமே நம்பி, இவனை வைத்து கியாரம் போர்டில் பெட் கட்டி சூதாட்டமே நடத்தியவர்களும் உண்டு என்பதை நான் மிகவும் தாமதமாக அறிய நேர்ந்தது.

      ஒருமுறை BHEL Community Centre என்ற இடத்திற்கு நான் இரவு ஏழு மணி சுமாருக்கு வேறொரு அவசிய வேலையாகப் போக நேர்ந்தது. அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடி அமர்ந்திருக்க, மேடையில் இவன் ரஜினி நடித்த ’அண்ணாமலை’ படத்தில் வரும்

      ”ஹேய்..வந்தேண்டா பால்காரன் - அடடா
      பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
      புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

      வந்தேண்டா பால்காரன் - அடடா
      பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
      புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

      புல்லு குடுத்தா பாலு குடுக்கும்
      உன்னால முடியாது தம்பி -அட

      பாதி புள்ள பொறக்குதப்பா
      பசும்பால தாய் பாலா நம்பி

      வந்தேண்டா பால்காரன் - அடடா
      பசுமாட்ட பத்தி பாடபோறேன்
      புது பாட்டு கட்டி ஆடப்போறேன்”

      என்ற பாடலை மெய் மறந்து, உற்சாகமாக மைக்கில் பாடியபடி ஆடிக்கொண்டு இருக்கிறான். சபையோர் அனைவரும் கைத்தட்டி, விசிலடித்து அவனைப் பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

      என்னாலேயே இதனை நம்ப முடியாமல் அன்று நான் மிகவும் வியந்து போனேன்.

      >>>>>

      நீக்கு
    6. VGK >>>>> நெல்லைத் தமிழன் (6)

      எங்களின் செல்லக்குழந்தையும், எங்களின் கைக்குழந்தையுமான மூன்றாவது பிள்ளை (என் பேரன் ஆர்டிஸ்ட் ’அநிருத்’ தின் அப்பா) என்னைப்போலவே மிகவும் சுகவாசி.

      நான் என் வாழ்க்கையில், ஓரளவு மிகவும் சுகமாக இருந்த காலக் கட்டத்தில் பிறந்தவன் இவன்.

      பிறவியிலிருந்தே மண்டையில் உள்ள அனைத்து முடிகளிலும் மூளை நிரம்பி உள்ளவன் இவன்.

      காமர்ஸ் க்ரூப்பினை விரும்பித் தேர்ந்தெடுத்தவன். B.Com., (Hons), I.C.W.A. Inter + Final, C.A., போன்ற கடினமான படிப்புகள் அனைத்தையும் First Attempt லேயே ஊதித்தள்ளியவன்.

      பல இடங்களிலிருந்தும் வேலை வாய்ப்புகள் இவனைத் தேடி அதுவாகவே வந்தும்கூட, என் விருப்பத்திற்கும் கட்டாயத்திற்கும் இணங்க BHEL வேலையில் சேர்ந்துள்ளவன்.

      தற்சமயம் தன் சிறிய இளம் வயதிலேயே DEPUTY MANAGER / FINANCE ஆக பதவி வகிப்பவன்.

      ஆயுளும், அதிர்ஷ்டமும், நல்ல நேரமும், தெய்வ அனுக்கிரஹமும் மட்டும் சாதகமாக இருக்குமானால், அவன் தன் பணி ஓய்வுக்கு முன்பு, GENERAL MANAGER / FINANCE அல்லது DIRECTOR / FINANCE போன்ற உச்சக்கட்ட பதவியினை அடைவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாகும்.

      >>>>>

      நீக்கு
    7. VGK >>>>> நெல்லைத் தமிழன் (7)

      என் பிள்ளைகள் மூவருமே படிப்பிலும் மிகவும் கெட்டிக்காரர்களாகவே இருந்தார்கள்.

      அதிக மதிப்பெண்கள் வாங்கித்தான் ஆகணும் என நான் அவர்களைக் கட்டாயப்படுத்தினதே இல்லை. இருப்பினும் Public Examination இல் Mathematics இல் மூவருமே 100 க்கு 100 செண்டம் வாங்கியவர்கள்.

      என்னைப்பொறுத்தவரை ஓரளவு 80 to 90% வாங்கி வந்தாலே மனம் திறந்து பாராட்டி விடுவேன். என்னால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வந்துள்ளேன்.

      நல்ல பிள்ளைகளாக ஒழுக்கத்துடன் வளர்ந்துள்ளார்கள் என்பதில் ஓர் ஆத்ம திருப்தியாக உள்ளது.

      எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹம் + பத்து தலைமுறைகளாக வேதம் படித்துள்ள எங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதம் மட்டுமே இதெற்கெல்லாம் காரணமாகும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும், என்னைக் கொஞ்சம் மனம் திறந்து பேச விட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
    8. 'நீண்ட பதிலுக்கு நன்றி... திறமைகளையும் வாய்ப்புகளையும் அவனே தருகிறான், தருவான். மனம் திறந்து நிறைவாக எழுதியதற்கு நன்றி.

      நீக்கு
    9. 'நெல்லைத் தமிழன் October 17, 2016 at 11:38 AM

      வாங்கோ, மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி.

      //'நீண்ட பதிலுக்கு நன்றி... திறமைகளையும் வாய்ப்புகளையும் அவனே தருகிறான், தருவான். மனம் திறந்து நிறைவாக எழுதியதற்கு நன்றி.//

      நேற்று இரவிலிருந்தே நெட் கனெக்‌ஷன் சரிவர கிடைக்காமல், அடிக்கடி அது துண்டிக்கப்பட்டு, என்னைப் பாடாய்ப் படுத்தி வருகிறது. மேலும் எனக்கும் இன்று இங்கு ‘துலா விஷு புண்யகால தர்ப்பணம்’ போன்ற உபரி வேலைகளால், பின்னூட்டமிட்டுள்ளவர்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க முடியாமல் இருந்து வருகிறது.

      //திறமைகளையும் வாய்ப்புகளையும் அவனே தருகிறான், தருவான்.//

      மிகவும் நியாயமான வாஸ்தவமான வார்த்தைகள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      எல்லாம் அவன் செயல். அவனின்றி ஓர் அணுவும் அசையாது !

      நீக்கு
  18. அனிருத்துக்கு எமது வாழ்த்துகளும் ஐயா மென்மேலும் சிகரம் தொடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. KILLERGEE Devakottai October 15, 2016 at 9:37 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அனிருத்துக்கு எமது வாழ்த்துகளும் ஐயா மென்மேலும் சிகரம் தொடட்டும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  19. பதில்கள்
    1. பரிவை சே.குமார் October 15, 2016 at 10:34 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வாழ்த்துக்கள் அநிருத்....//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  20. தாத்தாவை போல பேரனும் அழகாய் வரையும் திறமை பெற்றுஇருக்கிறான்.வாழ்த்துக்கள் பேரனுக்கு.
    குழந்தையின் ஓவியம் மிக அருமை.

    மேலும் மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு October 15, 2016 at 11:09 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //தாத்தாவை போல பேரனும் அழகாய் வரையும் திறமை பெற்றுஇருக்கிறான். வாழ்த்துக்கள் பேரனுக்கு.
      குழந்தையின் ஓவியம் மிக அருமை. மேலும் மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      //படங்கள் எல்லாம் அருமை.//

      :) தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  21. மிகவும் மகிழ்ச்சி அய்யா!
    தங்களின் பேரன் மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.P.SENTHIL KUMAR October 15, 2016 at 11:59 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மிகவும் மகிழ்ச்சி ஐயா! தங்களின் பேரன் மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள் !//

      தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  22. மனம் நிறைந்த வாழ்த்துகள் அனிருத்.....

    மிக்க மகிழ்ச்சி வை.கோ. ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் October 16, 2016 at 6:08 AM

      வாங்கோ, வெங்கட்ஜி, வணக்கம்.

      //மனம் நிறைந்த வாழ்த்துகள் அனிருத்.....
      மிக்க மகிழ்ச்சி வை.கோ. ஜி!//

      அவன் தன் அப்தபூர்த்தி .. ஆயுஷ்ஹோமம் முடித்த மறுநாளே தங்கள் மடியில் அமரும் பாக்யம் பெற்றவனானதால், தங்கள் மகள் செல்வி: ரோஷ்ணி போலவே ஓவியத்தில் ஆர்வமுள்ளவனாக இருக்கிறான் என எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன். :)

      தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஜி.

      நீக்கு
  23. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா சார்!!! தங்களின் பேரன் அல்லவா! தாத்தா 8 அடி பாய்ந்தால் பேரன் 32 அடி பாய்வான் அன்றோ!!!!

    குழந்தை வரைந்தப் படங்கள் அனைத்தும் அழகு. புகைப்படங்களும் அழகு!

    மிகவும் மகிழ்ச்சி! மனம் நிறைந்த வாழ்த்துகள்! பாராட்டுகள் அனிருத்! மேலும் மேலும் பல சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல இறைவன் குழந்தையை வாழ்த்தி அருள் வழங்கட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu
      October 16, 2016 at 10:19 AM

      வாங்கோ, வணக்கம்.

      //புலிக்குப் பிறந்தது பூனையாகுமா சார்!!! தங்களின் பேரன் அல்லவா! தாத்தா 8 அடி பாய்ந்தால் பேரன் 32 அடி பாய்வான் அன்றோ!!!!//

      :) மிக்க மகிழ்ச்சி :)

      //குழந்தை வரைந்தப் படங்கள் அனைத்தும் அழகு. புகைப்படங்களும் அழகு! மிகவும் மகிழ்ச்சி! மனம் நிறைந்த வாழ்த்துகள்! பாராட்டுகள் அனிருத்! மேலும் மேலும் பல சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல இறைவன் குழந்தையை வாழ்த்தி அருள் வழங்கட்டும்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள், பாராட்டுகள், இறையருள் வேண்டுதலுடன் கூடிய வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  24. திருச்சி மாவட்ட அளவில் ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ள செல்வன் ‘அநிருத்’ துக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்! இந்த இளம் வயதில் வனங்களைப் பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை அருமையான ஓவியம் மூலம் சொல்லியிருக்கும் செல்வன் ‘அநிருத்’ தின் கற்பனைத் திறனுக்கு ஒரு ‘சபாஷ்’!
    பாட்டனாரின் ஓவியத்திறமை பெயரனுக்கு வந்திருக்கிறது என்பதை யாரும் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன்.
    செல்வன் அநிருத் இன்னும் பல போட்டிகளில் கலந்துகொண்டு மென்மேலும் பரிசு பெற்று ,தலைசிறந்த ஓவியராக மிளிர வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி October 16, 2016 at 10:49 AM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //திருச்சி மாவட்ட அளவில் ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ள செல்வன் ‘அநிருத்’ துக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!//

      மிக்க மகிழ்ச்சி ஸார் + செல்வன் ‘அநிருத்’க்கான தங்களின் வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி, ஸார்.

      //இந்த இளம் வயதில் வனங்களைப் பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை அருமையான ஓவியம் மூலம் சொல்லியிருக்கும் செல்வன் ‘அநிருத்’ தின் கற்பனைத் திறனுக்கு ஒரு ‘சபாஷ்’!//

      சபாஷ் !! :) மிகவும் சந்தோஷம், ஸார்.

      //பாட்டனாரின் ஓவியத்திறமை பெயரனுக்கு வந்திருக்கிறது என்பதை யாரும் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன்.//

      நான் என் கற்பனையில் சிலவற்றை மட்டுமே நானாகவே வரைவேன்.

      பெரும்பாலும் பிறர் வரைந்துள்ள / அச்சிடப்பட்டுள்ள படங்களைப் பார்த்து அப்படியே தத்ரூபமாக வரைவதிலேயே எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு.

      ஆனால் என் பேரன் அப்படி இல்லாமல், இந்த இளம் வயதிலேயே, தானாகவே தன் சொந்தக் கற்பனையில் பலவற்றை வரையக்கூடியவனாக இருப்பதுதான் எனக்கும் மிகுந்த வியப்பாக உள்ளது. :)

      //செல்வன் அநிருத் இன்னும் பல போட்டிகளில் கலந்துகொண்டு மென்மேலும் பரிசு பெற்று, தலைசிறந்த ஓவியராக மிளிர வாழ்த்துகள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக மிளிரும் கருத்துக்களுக்கும், பாராட்டுகள், வாழ்த்துகள் போன்ற அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  25. pஜாடை தாத்தாவே. படம் வரைதலிலும் தாத்தாவிற்கு பேரன் சளைத்தவனில்லை. சின்னபையன் அனிருத்தின் கைவண்ணம் எல்லோரையுமே மகிழ்ச்சி பொங்க வைக்கிறது.மேலுமேலும் சித்திரங்கள் படைத்து நல்ல ஓவியனாக வளர கடவுள் ஆசீர்வாதம் செய்வார். நானும் ஆசிகளையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி October 16, 2016 at 1:49 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //ஜாடை தாத்தாவே. படம் வரைதலிலும் தாத்தாவிற்கு பேரன் சளைத்தவனில்லை. சின்னபையன் அனிருத்தின் கைவண்ணம் எல்லோரையுமே மகிழ்ச்சி பொங்க வைக்கிறது.//

      :) மிகவும் சந்தோஷம், மாமி. :)

      //மேலும்மேலும் சித்திரங்கள் படைத்து நல்ல ஓவியனாக வளர கடவுள் ஆசீர்வாதம் செய்வார். நானும் ஆசிகளையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்புடன்//

      தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள் கிடைக்க நாங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், கடவுள் ஆசிகளையும் சேர்த்து தங்களின் அன்புடன் கூடிய ஆசிகளைத் தெரிவித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி.

      நீக்கு
  26. உங்களுடைய பழைய பதிவுகளைப் பார்த்தாலே தெரியும், நீங்களும் ஒரு ஓவியர்தான். உங்களைப் போலவே உங்கள்வழி பேரனும். உங்கள் பேரன் மாஸ்டர் S.அநிருத்திற்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள். இதில் உள்ள படங்களையும் உங்கள் ஃபேஸ்புக்கிலேயே பார்த்து, லைக்கும் செய்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ October 16, 2016 at 3:33 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //உங்களுடைய பழைய பதிவுகளைப் பார்த்தாலே தெரியும், நீங்களும் ஒரு ஓவியர்தான். உங்களைப் போலவே உங்கள்வழி பேரனும்.//

      :) மிக்க மகிழ்ச்சி, ஸார் :)

      //உங்கள் பேரன் மாஸ்டர் S.அநிருத்திற்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான உளங்கனிந்த நல்வாழ்த்துகளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார்.

      //இதில் உள்ள படங்களையும் உங்கள் ஃபேஸ்புக்கிலேயே பார்த்து, லைக்கும் செய்துள்ளேன்.//

      ஆமாம், பார்த்தேன்.

      நான் பொதுவாக ஃபேஸ்புக் பக்கமே போவது இல்லை.

      புதுப்பதிவுகள் வெளியிடும்போது அதன் லிங்க் கொடுத்து விளம்பரம் செய்ய மட்டுமே செல்வது வழக்கம்.

      சுமார் 10 படங்களுக்கு மேல் தாங்களே லைக் போட்டுள்ளதாக எனக்கும் மெயில் மூலம் தகவல்கள் வந்துள்ளன.

      இந்த ஒரு பதிவுக்கு மட்டுமே, நேற்று ஒரே நாளில் மட்டுமே, ஃபேஸ்புக்கில் சுமார் 200 பேர்களுக்கு மேல் லைக் போட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. :)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  27. Aha....
    Great.
    Pulikutty..
    mudaladiyilaya painthu varukirathu.
    Valthukkal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji October 16, 2016 at 3:40 PM

      வாங்கோ விஜி மேடம். செளக்யமா நன்னா இருக்கேளா? உங்களைப் பார்த்தே பல நாட்கள் இருக்கும். உங்களின் இன்றைய திடீர் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சந்தோஷமாகவும் உள்ளது. மிக்க நன்றி. :)

      //Aha.... Great. Pulikutty.. mudaladiyilaya painthu varukirathu. Valthukkal. ஆஹா.... க்ரேட். புலிக்குட்டி .. முதல் அடியிலேயே பாய்ந்து வருகிறது. வாழ்த்துகள்//

      நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் தங்களின் அன்பான வருகைக்கும், இங்கு பாய்ந்து வந்து சொல்லியுள்ள கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், விஜி மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  28. வாழ்த்துக்கள் ஆர்ட்டிஸ்ட் அனிருத்திற்கு,,,,/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Vimalan Perali October 16, 2016 at 6:48 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வாழ்த்துக்கள் ஆர்ட்டிஸ்ட் அனிருத்திற்கு,,,,//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  29. வாழ்த்துக்கள் ஆர்ட்டிஸ்ட் அனிருத்திற்கு,,,/

    பதிலளிநீக்கு
  30. ஆர்டிஸ்ட் அநிருத் அவர்களுக்கு
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jeevalingam Yarlpavanan Kasirajalingam
      October 16, 2016 at 9:20 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆர்டிஸ்ட் அநிருத் அவர்களுக்கு வாழ்த்துகள்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  31. குழந்தைக்கு மனம் நிறைந்த பாராட்டுகளோடு ஆசிகளும்.. உள்ளிருக்கும் கலைத்திறமையை அழகாக வெளிப்படுத்த களம் அமைத்துக்கொடுத்த குடும்பத்தார்க்கும் மனமார்ந்த பாராட்டுகள். தாத்தாவின் ஓவியத்திறமை பேரனிடம் பளிச்சிடுவதில் வியப்பென்ன... பால ஓவியர் அனிருத் பேரும் புகழும் பெற்று வாழ்வாங்கு வாழ என் இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி October 17, 2016 at 7:29 AM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //குழந்தைக்கு மனம் நிறைந்த பாராட்டுகளோடு ஆசிகளும்..//

      குழந்தைக்கான தங்களின் மனம் நிறைந்த பாராட்டுகளுக்கும் ஆசிகளுக்கும் முதற்கண் என் நன்றிகள்.

      //உள்ளிருக்கும் கலைத்திறமையை அழகாக வெளிப்படுத்த களம் அமைத்துக்கொடுத்த குடும்பத்தார்க்கும் மனமார்ந்த பாராட்டுகள்.//

      ’களம் அமைத்துக்கொடுத்த’ என்ற தங்களின் சொல்லாடல் கிளி கொஞ்சுவதுபோல மிகவும் அழகாகவும், வெகு பொருத்தமாகவும் உள்ளது. மிகவும் சந்தோஷம், மேடம். :)

      //தாத்தாவின் ஓவியத்திறமை பேரனிடம் பளிச்சிடுவதில் வியப்பென்ன...//

      ஆஹா ..... மேலும் (இலவச இணைப்பு போல) இது வேறயா? .... வியந்து போனேன்!

      //பால ஓவியர் அனிருத் பேரும் புகழும் பெற்று வாழ்வாங்கு வாழ என் இனிய வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், பால(கிருஷ்ணா) ஓவியம் போன்ற அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகள், வாழ்த்துகள், குழந்தைக்கான ஆசிகள் ஆகிய அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  32. சைல்ட் ஆர்டிஸ்ட் அநிருத்துக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளும்அநிருத்தின் திறமையை பதிவாக போட்டு பலர் அறிய தந்ததற்கு கிஷ்ணாஜிக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. shamaine bosco October 17, 2016 at 2:20 PM

      அடேடே ..... வாங்கோ மேடம், வணக்கம். தங்களை கோவாவில் பார்த்ததாக பம்பாய்க்காரி ஒருத்தி சொன்னாள். அது நிஜமோ பொய்யோ .... அந்தக் கர்த்தருக்கே வெளிச்சம் ! :)

      //சைல்ட் ஆர்டிஸ்ட் அநிருத்துக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளும்//

      ’சைல்ட் ஆர்டிஸ்ட் அநிருத்’ ! ஆஹா .... இந்தத் தங்களின் சொல்லாடல்கூட சைல்ட் போல (அதுவும் இரட்டைக் குழந்தைகள் போல) மிகவும் அழகோ அழகாகவே உள்ளது. :))

      //அநிருத்தின் திறமையை பதிவாக போட்டு பலர் அறிய தந்ததற்கு கிஷ்ணாஜிக்கு நன்றிகள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், குழந்தைகளுக்குப் பிடித்தமான ’ஸ்ரீகண்ட்’ போன்ற ஸ்வீட்டான பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      காரசாரமான புதினாச் சட்னியுடன் பூரி கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. :)

      அன்புடன் கிஷ்ணாஜி

      நீக்கு
  33. எங்கள் பேரன்,பேத்திகளை எப்படி வளர்க்க்வேண்டும் என்பதற்கு உதவியாக இப்பதிவு அமையும் என்று நினைக்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr B Jambulingam October 17, 2016 at 3:37 PM

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

      //எங்கள் பேரன், பேத்திகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு உதவியாக இப்பதிவு அமையும் என்று நினைக்கிறேன் ஐயா.//

      ஆஹா, அப்படியா!!!!! மிக்க மகிழ்ச்சி. :)

      தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  34. என்னடா பாத்த ஜாடையா இருக்கே...ஒரு வேள வாத்தியாரோட பேரனா இருக்குமோன்னு பாத்தா...சரிதான் வாத்தியாரோட பேரனேதான்...பரிசு வாங்குனதுல ஆச்சரியம் என்ன இருக்கு? அதெல்லாம் 'ஜீன்ஸ்'டைய விளையாட்டு...எல்லாத்துக்கும் மேல நான் படிச்ச ஸ்கூலுக்கு எதிர்த்த ஸ்கூல் ஸ்டூடென்ட் இல்லயா...அந்த எஃபக்ட் இருக்குமுல்ல (ஹா..ஹா...சும்மா...!!)BHEL தமிழ் மீடியம் ஸ்கூல்ல படிச்சவனுங்கோ...பக்கத்தாப்ல C-3/2 ல கொஞச நாள் இருந்தோம்கோ...வாத்யாரே 16 அடி பாய்ஞ்சப்ப பேரன்...கொறஞ்சது 64 அடி...இது பிகினிங்தான் வாத்யாரே...மீண்டும் அவனுக்கு எனது வாழ்த்துகள்...;;;;;;;-)))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAVIJI RAVI October 17, 2016 at 11:53 PM

      வாங்கோ சின்ன வாத்யாரே, வணக்கம்.

      //என்னடா பாத்த ஜாடையா இருக்கே...ஒரு வேள வாத்தியாரோட பேரனா இருக்குமோன்னு பாத்தா... சரிதான் வாத்தியாரோட பேரனேதான்... பரிசு வாங்குனதுல ஆச்சரியம் என்ன இருக்கு? அதெல்லாம் 'ஜீன்ஸ்'டைய விளையாட்டு...//

      மிக்க மகிழ்ச்சி. தங்கள் தனிப்பாணியில் பின்னூட்டம் அருமை. :)

      //எல்லாத்துக்கும் மேல நான் படிச்ச ஸ்கூலுக்கு எதிர்த்த ஸ்கூல் ஸ்டூடென்ட் இல்லயா... அந்த எஃபக்ட் இருக்குமுல்ல (ஹா..ஹா...சும்மா...!!)//

      சும்மா இல்லை ..... நிஜமாகவே அதுதான் காரணமாக இருக்கும். :))

      //BHEL தமிழ் மீடியம் ஸ்கூல்ல படிச்சவனுங்கோ... பக்கத்தாப்ல C-3/2 ல கொஞ்ச நாள் இருந்தோம்கோ...//

      அடடா, தெரியாமல் போச்சே. நான் 1981 இல் புத்தம் புதியதாகக் கட்டப்பட்ட C2/577 இல், முதன் முதலாகக் குடி வந்தேன். இப்போது உள்ள 'C" Sector பெருமாள் கோயில் பக்கம் அது அமைந்துள்ளது. அப்போது அந்தப்பெருமாள் கோயில் அங்கு கட்டப்படவே இல்லை.

      பதவி உயர்வுடன் புதுப்பொறுப்புகள், புது வாழ்க்கை, புது வாழ்க்கைத்தரம், புதுமையான சுற்றுச்சூழல்,

      கட்டில்.. மெத்தை.. பீரோ.. சைக்கிள்.. மிக்ஸி என ஏராளமான பொருட்கள் அனைத்துமே புத்தம் புதிதாக வாங்கிக் குவித்திருந்தேன்.

      அந்தப் புத்தம் புது வீட்டில் ஜாலியோ ஜாலியாக நான் குடியேறிய பிறகு தான், இன்றைய ‘ஆர்டிஸ்ட் அநிருத்’தின் அப்பா 28.04.1982 அன்று BHEL Main Hospital இல், புத்தம் புதிதாக கஷ்கு முஷ்குக் குழந்தையாக ஜோராகப் பிறந்தான். :)))))

      நினைத்தாலே இனிக்கும் நாட்கள் அவை. :) அன்று நான் புத்தம் புதிதாக ஆல் ஃபிட்டிங்ஸ் உடன் வாங்கியிருந்த காஸ்ட்லியான சைக்கிளில், முன்புறம் ஓர் புத்தம் புதிய கூடையை மாட்டி, அதில் குழந்தையான அவனை அமர்த்தி பல இடங்களுக்குக்கூட்டிப்போய் மகிழ்வித்து நானும் மகிழ்ந்துள்ள, மறக்க முடியாத நாட்கள் அவை.

      //வாத்யாரே 16 அடி பாய்ஞ்சப்ப பேரன்.. கொறஞ்சது 64 அடி...//

      ஆம். நான் புதிய சைக்கிள், பின் புதிய ஸ்கூட்டர், அதன்பின் புதிய சுசுகி சாமுராய் பைக் எனப் படிப்படியாக வாங்கி, ஏதோ என் வாழ்க்கையில் மகிழ முடிந்தது.

      ஆனால் இன்று என் பேரன் பேத்திகள் பிறக்கும் போதே, அவர்களுடைய அப்பாக்கள் வாங்கியுள்ள புத்தம் புதிய ஏ.ஸி. காரில், ஆளாளுக்கு கையில் ஒரு காஸ்ட்லி மொபைல் போனில் வீடியோ கேம்ஸ் போன்றவைகளை விளையாடிக்கொண்டு பயணம் செய்யும் பாக்யம் பெற்றுள்ளார்கள், என்பதைக் காண்பதிலும் ஓர் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

      அதுவே தாங்கள் சொல்லும் பொருளாதார முன்னேற்றமான ..... /கொறஞ்சது 64 அடி.../ :)))))

      //இது பிகினிங்தான் வாத்யாரே...//

      ஆம். என்றாவது ஒருநாள் செவ்வாய் கிரஹத்துக்கே பயணம் மேற்கொண்டாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை தான்.

      //மீண்டும் அவனுக்கு எனது வாழ்த்துகள்...;;;;;;;-)))))))))))//

      தங்களின் அன்பான வருகைக்கும், வழக்கம்போல அழகழகான வேடிக்கையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  35. இளம் கலைஞனுக்கு
    இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !

    திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையை
    விரிவுபடுத்தவேண்டி, சில நூற்றுக்கணமக்கான
    ( ஆயிரக்கணக்காண ) மரங்களை வெட்டப்போகிறது
    வனத்துறை. திருவண்ணாமலையில் மடியப்ப்பொகும்
    மரங்களின் கண்ணீர்தானோ, திருச்சியில் இளம் கலைஞனின்
    மனதில் விரிந்த கற்பனை ?

    உணருமா வனத்துறை ?

    இமயம் தொட, செல்வன் அநிருத்துக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G Perumal Chettiar October 18, 2016 at 6:09 AM

      வாங்கோ ஸார். வணக்கம். நலம் தானே? தங்களின் அபூர்வ வருகை எனக்கு ஆச்சர்யமளித்து என்னை மிகவும் மகிழ்விக்கிறது. :)

      //இளம் கலைஞனுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார். சந்தோஷம். :)

      //திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையை
      விரிவுபடுத்தவேண்டி, சில நூற்றுக்கணக்கான
      ( ஆயிரக்கணக்காண ) மரங்களை வெட்டப்போகிறது
      வனத்துறை. திருவண்ணாமலையில் மடியப் போகும்
      மரங்களின் கண்ணீர்தானோ, திருச்சியில் இளம் கலைஞனின் மனதில் விரிந்த கற்பனை ?//

      இது மிகவும் வருத்தமான செய்தியாகத்தான் உள்ளது :(

      //உணருமா வனத்துறை ?//

      உணர்ந்தால் நல்லது.

      //இமயம் தொட, செல்வன் அநிருத்துக்கு வாழ்த்துக்கள் !//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், சமுதாய நலம் கருதிக் கூறியுள்ள அருமையான + அனைவரையும் யோசிக்க வைக்கக்கூடிய கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  36. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா.. - என்பார்கள்..

    தங்களுடைய அன்பின் பேரனல்லவா!..

    மனித நேயமும் இயற்கையின் மீது ஆர்வமும் பொங்கித் ததும்பக் கேட்பானேன்!..

    இன்றைய தலைமுறையில் இயற்கையின் மீது ஆர்வம் பொங்கியெழ வேண்டும் என்பது நியதி..

    செல்வன் அநிருத் மேலும் பல வெற்றிகளை எய்த வேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ October 19, 2016 at 9:37 AM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா.. - என்பார்கள்.. தங்களுடைய அன்பின் பேரனல்லவா!.. மனித நேயமும் இயற்கையின் மீது ஆர்வமும் பொங்கித் ததும்பக் கேட்பானேன்!..//

      ஆஹா, சந்தோஷம். இதனைத் தங்கள் மூலம் கேட்டதில் தன்யனானேன். :)

      //இன்றைய தலைமுறையில் இயற்கையின் மீது ஆர்வம் பொங்கியெழ வேண்டும் என்பது நியதி..//

      மிக்க மகிழ்ச்சி. ததாஸ்து. அப்படியே தங்கள் வாக்குப்போல அவை நிகழட்டும்.

      //செல்வன் அநிருத் மேலும் பல வெற்றிகளை எய்த வேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன்..//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும், குழந்தைக்கான மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், பிரதர்.

      நீக்கு
  37. செல்லக் குழந்தை அநிருத்துக்குப் பாராட்டுகள். உங்கள் பேரனல்லவா அதனால் வெற்றித் திருமகன் ஆகிவிட்டார் :) மிக அழகான டைரி ஓவியங்கள். மேலும் நல்ல தீம் & ப்ரசண்டேஷன். தேவையான ஒன்று. மீண்டும் பாராட்டுகள் அநிருத். இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan October 20, 2016 at 11:37 AM

      வாங்கோ, ஹனி மேடம், வணக்கம்.

      //செல்லக் குழந்தை அநிருத்துக்குப் பாராட்டுகள். உங்கள் பேரனல்லவா அதனால் வெற்றித் திருமகன் ஆகிவிட்டார் :)//

      மிக்க மகிழ்ச்சி மேடம். ‘வெற்றித் திருமகன்’ என்ற தலைப்பினில் நான் எழுதியுள்ள பழைய பதிவினையும் http://gopu1949.blogspot.in/2013/12/100-2-2.html படித்துள்ளீர்கள் என நினைக்கிறேன். மிகவும் சந்தோஷம். :)

      //மிக அழகான டைரி ஓவியங்கள்.//

      இங்கு எங்கள் இல்லத்திற்கு வரும்போதெல்லாம், பல டைரிகளில் ‘அநிருத்’ ஏராளமாக கிறுக்கியுள்ளான். எல்லாவற்றையும் பொக்கிஷமாக என்னிடம் பாதுகாத்து வைத்துள்ளேன். :)

      ’டைரி கிறுக்கல்கள்’ என்ற தலைப்பு மட்டும் தங்களிடமிருந்து, தங்களைக் கேட்காமலேயே நான் திருடிக்கொண்டு விட்டேன்.

      கோபாலகிருஷ்ணனுக்கு ‘நவநீத சோரன்’ என்றே ஓர் பெயர் உண்டு.

      ’நவநீதம்’ என்றால் வெண்ணெய்

      ‘சோரன்’ என்றால் திருடன்

      ’நவநீத சோரன்’ என்றால் வெண்ணெய் திருடன்

      என்று பொருள்.

      >>>>>

      நீக்கு
    2. கோபாலா கோபாலா, கோகுல நந்தன கோபாலா!

      நந்த முகுந்தா கோபாலா, நவநீத சோரா கோபாலா!

      வேணு விலோலா கோபாலா, விஜய கோபாலா கோபாலா!

      ராதா கிருஷ்ணா கோபாலா, ரமணீய வேஷா கோபாலா!

      காளிய மர்த்தன கோபாலா, கௌஸ்துப பூஷண கோபாலா!

      முரளீ லோலா கோபாலா, முகுந்தப் பிரியா கோபாலா!

      ராதா ரமணா கோபாலா, ராஜீவ நேத்ரா கோபாலா!

      யசோதா பாலா கோபாலா, யதுகுல திலகா கோபாலா!

      நளின விலோசன கோபாலா, கோமள வசனா கோபாலா!

      புராண புருஷா கோபாலா, புண்ய ஸ்லோகா கோபாலா!

      கனகாம் பரதா கோபாலா, கருணா மூர்த்தே கோபாலா!

      கஞ்ச விலோசன கோபாலா, கஸ்தூரி திலகா கோபாலா !

      >>>>>

      நீக்கு
    3. ராதே ! ராதே ! ராதே ! ராதே !
      ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
      அநாத நாதா! தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

      நந்த குமாரா! *நவநீத சோரா* !
      ராதே கோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
      அநாத நாதா! தீன பந்தோ ! ராதே கோவிந்தா !

      புராண புருஷா புண்ய ஸ்லோகா
      ராதே கோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
      அநாத நாதா! தீன பந்தோ ! ராதே கோவிந்தா !

      வேணு விலோலா ! விஜய கோபாலா !
      ராதே கோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
      அநாத நாதா! தீன பந்தோ ! ராதே கோவிந்தா !

      பண்டரி நாதா ! பாண்டு ரங்கா !
      ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
      அநாத நாதா! தீன பந்தோ ! ராதே கோவிந்தா !

      ஜெய் ஜெய் விட்டலா ! ஜெய ஹரி விட்டலா !
      ராதே கோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
      அநாத நாதா! தீன பந்தோ ! ராதே கோவிந்தா

      >>>>>

      நீக்கு
    4. VGK >>>>> ஹனி மேடம் ..... தொடர்ச்சி .....

      //மேலும் நல்ல தீம் & ப்ரசண்டேஷன். தேவையான ஒன்று. மீண்டும் பாராட்டுகள் அநிருத். இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துகள். :)//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், குழந்தைக்கான பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  38. ’ஆர்டிஸ்ட் அநிருத்’ தன் வீட்டு, துணி துவைக்கும் இயந்திரத்தின் வெளிப்பக்கச் சுவர்களில் வரைந்துள்ள ஒரு சில ஓவியங்கள், இப்போது .... இன்று, இந்தப் பதிவின் கடைசியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

    இது இங்கு ஏற்கனவே பின்னூட்டமிட்டுள்ளவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    >>>>>

    பதிலளிநீக்கு
  39. அடியேன் பெரிய அளவினில் வரைந்து, என்னுடன் எடுத்துச்சென்ற ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் ஓவியம் ஒன்றுக்கு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவர் அவர்கள், அங்கீகாரம் அளித்து, அனுக்கிரஹம் செய்து அருளியுள்ளது, என் வாழ்க்கையில் மறக்க முடியாததோர் இனிய அனுபவமாகும்.

    அதனைப்பற்றி நான் இதோ இந்த என் பதிவினில் விரிவாக எழுதியுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2013/04/9.html

    இதுவும் தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    >>>>>

    பதிலளிநீக்கு
  40. என் சிறுகதைகள் + மகிழ்ச்சிப் பகிர்வுகள் சிலவற்றிற்கு நானே வரைந்துள்ள ஓவியங்கள் + செய்துள்ள கைவேலைகள் இதோ இந்த என் பதிவுகளில் உள்ளன:

    (1)

    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html
    VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]

    -ooOoo-

    (2)

    http://gopu1949.blogspot.in/2011/09/blog-post.html
    கொ ட் டா வி (சிறுகதை)

    -ooOoo-

    (3)

    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html
    VGK 13 - வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ !
    புதிய கட்சி ’மூ.பொ.போ.மு.க.’ உதயம் !!
    நகைச்சுவைக் கதை

    -ooOoo-

    (4)

    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18.html
    VGK 18 - ஏமாற்றாதே ! .... ஏமாறாதே .... !! (சிறுகதை)

    -ooOoo-

    மகிழ்ச்சிப் பகிர்வுகள்:-

    (5)

    http://gopu1949.blogspot.in/2011/07/6.html
    மலரும் நினைவுகள் - பகுதி 6
    [ கலைகளிலே அவள் ஓவியம் ]

    -ooOoo-

    (6)

    http://gopu1949.blogspot.in/2015/02/2.html
    சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-2

    -ooOoo-

    (7)

    http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html
    சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு
    100% பின்னூட்டப் போட்டி 2015

    -ooOoo-

    இதுவும் தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  41. உங்கள் பேரன் கருவிலே திரு உடையவன் , மகத்தான திறமை அவனிடம் காணப்படுகிறது . மேன்மேலும் அது வளரவும் அவன் பெரும்புகழ் பெறவும் வாழ்த்துகிறேன் , நீங்கள் பெருமிதம் அடைய உரிமையுண்டு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொ.ஞானசம்பந்தன் October 24, 2016 at 5:11 PM

      வாருங்கள் ஐயா,

      அடியேனின் நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.

      //உங்கள் பேரன் கருவிலே திரு உடையவன், மகத்தான திறமை அவனிடம் காணப்படுகிறது .//

      மிக்க மகிழ்ச்சி ஐயா. இந்த இனிய தகவல்களை அசரீரி போலத் தாங்கள் சொல்லியுள்ளதில் நான் மிகவும் தன்யனானேன், ஐயா.

      //மேன்மேலும் அது வளரவும் அவன் பெரும்புகழ் பெறவும் வாழ்த்துகிறேன்.//

      தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சிகளுடன் அடியேனின் மிக்க நன்றிகள், ஐயா.

      //நீங்கள் பெருமிதம் அடைய உரிமையுண்டு.//

      எங்கள் பேரக்குழந்தை அதன் சிறுவயதில், முதன்முதலாகப் பெற்றுள்ள, முதல் பரிசினைவிட, அங்கீகாரத்தைவிட, தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகளும், வாழ்த்துகளும் என்னையும் என் பிள்ளையையும் பெருமிதம் கொள்ளச் செய்வதாக உள்ளன.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகள் + ஆசிகளுக்கும் எங்கள் குடும்பத்தார் அனைவரின் சார்பிலும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  42. உங்கள் பேரன் கருவிலே திருவுடையான் ; அசாதாரண திறமை காணப்படுகிறது . நீடூழி வாழ்ந்து மேன்மேலும் சாதிதுப் புகழுடன் விளங்க வாழ்த்துகிறேன் ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொ.ஞானசம்பந்தன் October 24, 2016 at 9:09 PM

      //உங்கள் பேரன் கருவிலே திருவுடையான் ; அசாதாரண திறமை காணப்படுகிறது . நீடூழி வாழ்ந்து மேன்மேலும் சாதித்துப் புகழுடன் விளங்க வாழ்த்துகிறேன்.//

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா.

      நீக்கு
  43. குருஜி... ஒங்கட பதிவு பழக்கத்தால் வந்து போட்டு எம்பூட்டு நாளாயிடிச்சில்லா.. மொதக போட்டே படத்துல ஒங்கட மடியுல ஒரு புள்ள இருக்குது.. பின்னாடி ஒரு புள்ள நிக்குதே அதுதான் சாதனையாளர் அநிருத்துக்கு பேர பையனா குருஜி..
    ஒவ்வொரு போட்டோ படமா பாத்து பிட்டு வந்து கமெண்டுறன்..))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 25, 2016 at 12:46 PM

      வாம்மா ..... முருகு. நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கிறாயா? உன் கணவர், உன் அம்மி, உன் அண்ணன், உன் அண்ணி, உன் மாமியார் எல்லோரும் நல்லா இருக்காங்களா! திடீரென்று உன்னை இன்று இங்கு பார்த்ததில் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

      கனவா, நனவா என என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். [கிள்ளியது வேறு எனக்கு வலிக்குது :) ]

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> முருகு (2)

      //குருஜி... ஒங்கட பதிவு பழக்கத்தால் வந்து போட்டு எம்பூட்டு நாளாயிடிச்சில்லா..//

      ரொம்ப நாள் ஆச்சு, முருகு. :(

      இதோ இந்த நான்கு பதிவுகளை நம் இருவராலும், அந்த ’எங்காளு’வாலும் மறக்க முடியுமா?

      எத்தனை இனிமையான நாட்கள் அவை :))))

      http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html
      *With 243 Comments*
      -=-=-=-
      http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html
      *With 133 Comments*
      -=-=-=-
      http://gopu1949.blogspot.in/2015/12/3.html
      *With 106 Comments*
      -=-=-=-
      http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_21.html
      *With 133 Comments*
      -=-=-=-

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> முருகு (3)

      //மொதக போட்டே படத்துல ஒங்கட மடியுல ஒரு புள்ள இருக்குது.. பின்னாடி ஒரு புள்ள நிக்குதே அதுதான் சாதனையாளர் அநிருத் .... பேர பையனா குருஜி..//

      ஆமாம் முருகு. முதல் படத்தில் தக்காளி நிறக் கார் மீது அமர்ந்துள்ளவனும், இரண்டாம் படத்தில் என் பின்புறம் நிற்பவனும் என் பேரன் அநிருத்.

      என் மடிமீது அமர்ந்திருப்பவன் அவன் தம்பி ‘ஆதர்ஷ்’ என்று பெயர்.

      போன தீபாவளி (10.11.2015) அன்று நான் இருவருக்கும் வாங்கிக்கொடுத்திருந்த புது டிரஸ்ஸைப் போட்டுக்கொண்டு, போட்டோவில் என்னுடன் இருக்கிறார்கள்.

      //ஒவ்வொரு போட்டோ படமா பாத்து பிட்டு வந்து கமெண்டுறன்..))//

      சபாஷ்! ஓக்கே .... முருகு. தேங்க் யூ முருகு.

      நீக்கு
  44. மொதா செவப்பு கலரு காருமேவ ஸ்டைலா குந்திகிட்டால கீதே அந்த பொடி புள்ளையா பரிசு வாங்கிருக்குஎதுக்கு போலீசு நிக்குது பாதுகாப்புக்காக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 25, 2016 at 12:50 PM

      //மொதா செவப்பு கலரு காருமேவ ஸ்டைலா குந்திகிட்டால கீழே அந்த பொடி புள்ளையா பரிசு வாங்கிருக்கு//

      அதே .... அதே .... முருகு. கரெக்டா கண்டு பிடிச்சுட்டாயே. பலே பலே ! :)

      //எதுக்கு போலீசு நிக்குது பாதுகாப்புக்காக.//

      அது யாராவது FOREST OFFICER ஆக இருக்கும். அதாவது காட்டு இலாகா அதிகாரி. போட்டி நடத்தியது தமிழ்நாடு அரசின் - காட்டு இலாகாவினரால் அல்லவா ! :)

      அதனால் அவர் போலீஸ் ட்ரெஸ்ஸில் அந்த விழா மேடையில் நின்றுகொண்டு இருக்கிறார்.

      நீக்கு
  45. படங்க அல்லாமே சூப்பரா கீது. ஒங்கட பேர புள்ளைலா.. எங்கட குருஜியே சூப்பரா படம் வரைஞ்சிடுவாகளே. அவுக பேரப் பையனுக்கு அவுகளப்போலவே கீது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 25, 2016 at 12:53 PM

      //படங்க அல்லாமே சூப்பரா கீது.//

      மிக்க மகிழ்ச்சி, முருகு. :)

      //ஒங்கட பேர புள்ளைலா.. எங்கட குருஜியே சூப்பரா படம் வரைஞ்சிடுவாகளே. அவுக பேரப் பையனுக்கு அவுகளப்போலவே கீது.//

      ஆஹா, அழகா இதனை முருகுவின் மழலை மொழியினில் இங்கு கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. :)

      106

      நீக்கு
  46. அந்தப் புள்ள பொறந்தப்பலேந்தே போட்டோபடமலா எடுத்து சேர்த்து வச்சிங்களா குருஜி. தலைலர் துண்டு இடுப்புல துண்டு வாய் நெறயா சிரிப்பாணி பொத்துகிட்டு அந்த போட்டோ படம் பொறவாலதான் காய்கறிகள் முன்னாடி குந்திகிட்டு ஒரு போட்டா படம் தாத்தாஸ்ரீகிட்டால கொஞ்சுற போட்டா படம் குடும்ப படம் அல்லாமே தூள் கெளப்புது குருஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 25, 2016 at 12:59 PM

      //அந்தப் புள்ள பொறந்தப்பலேந்தே போட்டோ படமலா எடுத்து சேர்த்து வச்சிங்களா குருஜி.//

      ஆமாம் முருகு. பெரும்பாலான போட்டோக்கள் எல்லாம் நானே எடுத்தது. என்னுடன் உள்ள படங்கள் மட்டும், பிறரால் எடுக்கச் சொல்லி நான் வற்புருத்திக் கேட்டுக்கொண்டது.

      //தலைல துண்டு இடுப்புல துண்டு வாய் நெறயா சிரிப்பாணி பொத்துகிட்டு அந்த போட்டோ படம்.//

      தலையிலே பெரிய புது கர்சீப் துணியை நானே அவனுக்குக் கட்டிவிட்டு, அவனை (உங்கள்) சாயபு போல ஆக்கி விட்டேன். :)

      இடுப்பில் வேஷ்டி போல ஒரு துண்டைக்கட்டியதும் நானே தான். அவனை என் இருகைகளால் பிடித்துக்கொண்டுள்ளேன். அப்போது அவன் நிற்க ஆரம்பிக்கவில்லை.

      நான் செய்திருந்த மேக்-அப்பில், அவனுக்கும் அப்போது ஒரேயடியாக சிரிப்பாணி பொத்துக்கிச்சு. :)))))

      //பொறவாலதான் காய்கறிகள் முன்னாடி குந்திகிட்டு ஒரு போட்டா படம்.//

      மறுநாள் ஒரு திதி விசேஷத்திற்காக நிறைய காய்கறிகள் வாங்கி வந்திருந்தேன். அவற்றைத் தரையில் பரப்பி காய்கறிக் கடை போல வைத்து, அவற்றின் முன்பு அவனைக் காய்கறிக்கடைக்கார வியாபாரி போல உட்கார வைத்து படம் எடுத்ததும் நான்தான். :)

      //தாத்தா கிட்டால கொஞ்சுற போட்டா படம் குடும்ப படம் அல்லாமே தூள் கெளப்புது குருஜி.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு. :)

      107

      நீக்கு
  47. இதுபோல வாஸிங்கு மெசினுல கிறுக்கினா அவுக அம்மி கோவப்படாதுகளா..மாதிரி கிறுக்கினா இருப்பதே நல்லா தானே கீது போட்டிக்காக தனியா வேர படம் வரஞ்சிச்சா.. குருஜி கமெண்டு போட்டேன் பல நாளும் ஆகி போச்சில்லா ரொம்பவே மிஸுடேக்கா டைப்பிருக்கேன்.. மாப்பு குருஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 25, 2016 at 1:02 PM

      //இதுபோல வாஸிங்கு மெசினுல கிறுக்கினா அவுக அம்மி கோவப்படாதுகளா..//

      அவுக அம்மி கோவப்பட்டால் நான் அவுக அம்மிமேலே கோபப்படுவேனாக்கும்.

      வாஷின் மெஷின் புதிதாக எவ்வளவு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நாம் வாங்கிக்கொள்ளலாம்.

      ஆனால் நம் குழந்தையின் இதுபோன்ற கற்பனை வளத்துடன் கூடிய மிக அழகான கிறுக்கல்களை நாம் எவ்வளவு விலை கொடுத்தாலும் எங்குமே வாங்க இயலாது.

      நான் புதிதாக வாங்கிய அடுக்கு மாடி வீட்டின் உட்புறச் சுவர்களை 2005-2006 இல் நிறைய செலவழித்து கலர் வாஷ் செய்து இருந்தேன். அப்போது என் முதல் பேரன் சிவா என்பவனுக்கு 3 வயதுக்குள்தான் இருக்கும். (இப்போது அவன் துபாய் நாட்டில் இருக்கிறான்)

      அவன் என் மாஸ்டர் பெட் ரூம் கட்டிலின் மேல் ஏறி, சுவற்றில் மிகப்பெரியதாக சில படங்கள் வரைந்து, மெழுகுக் கலர்கள் கொடுத்து வைத்துவிட்டான். என் பெரிய மருமகளுக்கு உள்ளூர ஒரே கவலை.

      நான் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து இந்தப்படத்தைப் பார்த்ததும் என் பேரனை கட்டிப்பிடித்து, அவன் கைகளை வாங்கி முத்தம் கொடுத்து மகிழ்ந்தேன். அந்தப்படங்களையும் போட்டோ எடுத்து என்னிடம் பத்திரப்படுத்திக்கொண்டேன். இன்னும் அவை என்னிடம் பத்திரமாகவே உள்ளன.

      //மாதிரி கிறுக்கினா இருப்பதே நல்லா தானே கீது. போட்டிக்காக தனியா வேற படம் வரைஞ்சிச்சா..//

      போட்டியில் நடுவர்கள் முன்னிலையில் தனியாகத் தானே கற்பனையில் படம் வரைந்து, தானே கலர் கொடுத்துவிட்டு வரணும். அதுதான் இந்தப்போட்டிகளில் உள்ள விதிமுறை.

      //குருஜி கமெண்டு போட்டேன் பல நாளும் ஆகி போச்சில்லா ரொம்பவே மிஸுடேக்கா டைப்பிருக்கேன்.. மாப்பு குருஜி.//

      அதனால் பரவாயில்லை. இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்து நீ தமிழ் எழுதியதைவிட, இப்போது மஸ்கட்டிலிருந்து எழுதியுள்ளதில், ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் மிகவும் குறைந்துள்ளது என்றுதான் நான் சொல்லுவேன். அதனால் ‘நோ .... மாப்பு’ முருகு. :)))))

      ooOoo

      *இது இந்த என் பதிவுக்கான மிகச்சிறப்புகள் வாய்ந்த 108-வது பின்னூட்டம் என்பதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது, முருகு*

      நீக்கு
  48. குருஜி... எம்பூட்டு கமெண்டூஊஊஊஊ. நீங்க கோடி பொறுமையாக அல்லா பேத்துக்கும் பெரிசு பெரிசா பதிலுக்கு போட்டிருக்கீங்க.. இன்னக்கி ரொம்ப சந்தோசமா கீது குருஜி.. அதான் நெறய நெறய டைப்பிட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 25, 2016 at 1:05 PM

      //குருஜி... எம்பூட்டு கமெண்டூஊஊஊஊ.//

      அதுதானே என் பதிவுகளில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான ஓர் விஷயமாக உள்ளது. இன்னும் ’எங்காளு’ போன்ற குறிப்பிட்ட ஒருசிலர் இந்தப்பதிவுப் பக்கமே ஏனோ வரக்காணும். :)))))

      //நீங்க கோடி பொறுமையாக அல்லா பேத்துக்கும் பெரிசு பெரிசா பதிலும் போட்டிருக்கீங்க.. //

      அது பெரும்பாலும் என் வழக்கம் ஆச்சே. அதுதானே பின்னூட்டமிட்டவர்களுக்கும் ஒருவித மகிழ்ச்சியைத் தரக்கூடும். அது என் கடமையும் அல்லவா, முருகு.

      //இன்னக்கி ரொம்ப சந்தோசமா கீது குருஜி.. அதான் நெறய நெறய டைப்பிட்டேன்...//

      இதைவிட அதிகமாக ஒருநாள் நீ என் பதிவுக்கு டைப்பியுள்ளாய். இதோ அதன் இணைப்பு: https://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

      எனினும் எனக்கும் மிகவும் சந்தோஷமாகவே உள்ளது .... முருகு.

      109

      நீக்கு
  49. இம்பூட்டு கமெண்டூஊ போதுமாஆஆஆ இன்னும் கொஞ்சம் வேண்டுமா.. எங்கட கோபூஜிக்கு சிரிப்பாணி பொத்துகிடோணுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 25, 2016 at 1:06 PM

      //இம்பூட்டு கமெண்டூஊ போதுமாஆஆஆ இன்னும் கொஞ்சம் வேண்டுமா..//

      போதும் .... போதும் .... இந்தப் பதிவுக்கு இதுவே போதும். உனக்கு அங்கு பொழுதுபோகாவிட்டால், நடுவில் விட்டுப்போன என் மீதிப் பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் கொடுக்க முயற்சிக்கவும். :)

      உன் வருகையால் இந்தப் பதிவின் பின்னூட்ட எண்ணிக்கைகள் 100, 101, 108 என்ற சிறப்பு எண்களையும் தாண்டி 110-க்கு வந்துவிட்டது. அதற்காக என் ஸ்பெஷல் நன்றிகள், முருகு.

      //எங்கட கோபூஜிக்கு சிரிப்பாணி பொத்துகிடோணுமே.//

      அது ஏற்கனவே நன்கு பொத்துக்கொண்டு, ஒரேயடியாக எனக்கு இங்கு ஜொள்ளு வழியுது. :)))))

      03.07.2016 அன்று திருமணம் ஆகி நீ மஸ்கட்டுக்குப் போய் இருப்பினும், எனக்கு பிஸ்கட் கொடுக்காமல் .... அதாவது என்னை இன்னும் மறக்காமல், நினைவில் வைத்துக்கொண்டு, நீண்ட நாட்களுக்குப்பின் இங்கு என் பதிவுப்பக்கம் வருகை தந்து, உன் ட்ரேட் மார்க்கான கொச்சைத் தமிழில், நிறைய பின்னூட்டங்கள் அளித்து என்னை மகிழ்வித்துள்ளதற்கு, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்......ப்பா, முருகு.

      என்றும் அன்புடன் உன் குருஜி

      110

      நீக்கு
  50. வெளியில் அலைந்து கொண்டிருந்ததால் இளம் ஓவியர் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். அவரின் கை வண்ணங்கள் மிக அழகு! பரிசு பெற்றதற்கு என் இனிய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அவரிடம் தெரிவியுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் November 7, 2016 at 10:26 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //வெளியில் அலைந்து கொண்டிருந்ததால் இளம் ஓவியர் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்.//

      அதனால் பரவாயில்லை, மேடம். சந்தோஷம்.

      //அவரின் கை வண்ணங்கள் மிக அழகு!//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //பரிசு பெற்றதற்கு என் இனிய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அவரிடம் தெரிவியுங்கள்!//

      நிச்சயமாகத் தெரிவிக்கிறேன், மேடம்.

      மேலே பின்னூட்ட எண்: 91 மற்றும் 93 இல், வயதிலும், அனுபவத்திலும், இலக்கிய சிந்தனைகளிலும் மிகவும் மூத்த பதிவரான திரு. சொ. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் கீழ்க்கண்ட பின்னூட்டங்களை எழுதி பேரக்குழந்தையை ஆசீர்வதித்துள்ளார்கள்.

      -=-=-=-=-=-=-

      91) உங்கள் பேரன் கருவிலே திரு உடையவன், மகத்தான திறமை அவனிடம் காணப்படுகிறது . மேன்மேலும் அது வளரவும் அவன் பெரும்புகழ் பெறவும் வாழ்த்துகிறேன், நீங்கள் பெருமிதம் அடைய உரிமையுண்டு .

      93) உங்கள் பேரன் கருவிலே திருவுடையான்; அசாதாரண திறமை காணப்படுகிறது . நீடூழி வாழ்ந்து மேன்மேலும் சாதித்துப் புகழுடன் விளங்க வாழ்த்துகிறேன் ,

      -=-=-=-=-=-=-

      அவர் ‘கருவிலே திருவுடையவன்’ என எழுதியுள்ளார்.

      அவன் பிறக்கும் முன்பு (கருவாய் உருவாகி இருந்தபோது) நடந்த வளைகாப்பு + சீமந்த நிகழ்ச்சிகளில் தாங்கள் கலந்துகொள்ளும் வாய்ப்பு, அகஸ்மாத்தாக அமைந்திருந்தது.

      http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html

      அவனை அவன் தாயார் கருவாக தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த நேரம், மிகச்சிறந்த பத்திரிகை ஓவியரான தங்களின் கடாக்ஷம் (பார்வை) அந்தக்குழந்தைக்குப் பட்டுள்ளது.

      அதனாலேயே அவனுக்கு இதுபோன்றதோர் ஓவியத்திறமை ஏற்பட்டிருக்கலாமோ என எனக்குள் நினைத்து நான் மகிழ்ந்து கொண்டேன். :)

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      112

      நீக்கு
  51. A photo of Sri. S.Anirudh taken today [08.11.2016] at School, in connection with Fancy Dress Competition, is displayed at the end of this post just now.

    This is just for your information, only.

    பள்ளியில் இன்று 08.11.2016 நடந்த மாறு வேஷப் போட்டியொன்றில் கலந்துகொண்ட எங்கள் பேரன் செல்வன்: 'அநிருத்'தின் புகைப்படம் ஒன்று இந்தப்பதிவின் இறுதியில் இன்று புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

    இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    பதிலளிநீக்கு
  52. படம்...அட்டகாசமா இருக்கு. புல்லாங்குழலை வாய்கிட்ட வச்சிருந்தா அசத்தலா இருக்குமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy November 8, 2016 at 1:19 PM

      வா..ம்..மா, ஹாப்பி. வணக்கம்.

      //படம்...அட்டகாசமா இருக்கு.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //புல்லாங்குழலை வாய்கிட்ட வச்சிருந்தா அசத்தலா இருக்குமே...//

      அப்படியிருந்தால் அது அசத்தலாக இருக்கும்தான். அதற்குள் அந்த பட்டு வேஷ்டி இடுப்பிலிருந்து நழுவாமல் இருக்கணும். :)

      இந்த ஒரு படத்தை மட்டும், இப்போதைக்கு ஏதோ ஒரு அவசரத்தில் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியுள்ளார்கள்.

      இனிமேல் தான் அந்தப் புல்லாங்குழலை வாய்கிட்ட வச்சு ஊதுவாரோ என்னவோ ! :)

      உன் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..ப்பா.

      நீக்கு
  53. வாட்ஸ் ஆப் எவ்வளவு சவரியமாயிருக்கு.... இன்னிக்கு போட்யிடில் கலந்துகொண்டு பரிசும்வாங்கி உடனடியாக பதிவிலும் போட முடியறதே.... எல்லா பெருமையும் "தாத்தா" வுக்கே..)))

    எனக்கு வாட்ஸ் ஆப் பத்திலாம் ஒன்னும் தெரியலை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy November 8, 2016 at 1:42 PM

      //வாட்ஸ் ஆப் எவ்வளவு செளகர்யமாயிருக்கு....//

      ஆமாம். உடனுக்குடன் படங்களையும், ஆடியோ, வீடியோக்களையும், குறுந்தகவல்களையும், உலகின் எந்த மூலையில் இருப்பினும், ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளவும், நம் குரலுடன் செய்திகளை பேசி அனுப்பவும் மிகவும் செளகர்யமாக உள்ளது.

      //இன்னிக்கு போட்டியில் கலந்துகொண்டு பரிசும் வாங்கி உடனடியாக பதிவிலும் போட முடியறதே.... எல்லா பெருமையும் "தாத்தா" வுக்கே..)))//

      தாத்தாவுக்கு மட்டுமல்ல ... ’அத்தை மடி மெத்தையடி ... ஆடி விளையாடம்மா’ ... வான, அவனின் மிகப் பிரியமான ’ஹாப்பி’ என்ற அத்தைக்கும்தான்.

      //எனக்கு வாட்ஸ் ஆப் பத்திலாம் ஒன்னும் தெரியலை...//

      இதை நானும் அப்படியே நம்பிட்டேனாக்கும். வாட்ஸ்-அப் பில் உனக்கும் உன் சின்ன மாமாவுக்கும் மட்டுமே கனெக்‌ஷன் வைத்துக்கொண்டுள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியுமாக்கும். நான் உன்னுடைய வாட்ஸ்-அப் கனெக்‌ஷன் ஃபோன் நம்பரைக் கேட்கவே மாட்டேன். கவலையே பட வேண்டாம். :)

      நீக்கு
  54. பிள்ளை வளர்ப்பிலும் பேரன் வளர்ப்பிலும் தேர்ந்த அனுபவங்கள் எங்களுக்கும் வழிகாட்டுகிறது. நன்றி சார். அனிருத் நலமும் வளமும் நிலைபெற்று நிடூழி வாழ எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலாமகள் November 14, 2016 at 6:40 PM

      வாங்கோ, வணக்கம் மேடம்.

      //பிள்ளை வளர்ப்பிலும் பேரன் வளர்ப்பிலும் தேர்ந்த அனுபவங்கள் எங்களுக்கும் வழிகாட்டுகிறது. நன்றி சார். அனிருத் நலமும் வளமும் நிலைபெற்று நிடூழி வாழ எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அருமையான பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      119

      நீக்கு
  55. பதில்கள்
    1. ashok November 15, 2016 at 1:32 PM

      Welcome Sir !

      //sweet post...good to see the lovely art works of kids :)//

      Thank you very much for your kind visit here & the Sweet comments offered. :)

      121

      நீக்கு
  56. Sri. S.ANIRUDH HAS SECURED ONE MORE PRIZE TODAY .. 19.11.2016.

    'SPLASH COLOURING COMPETITION' HELD AT KAILASAPURAM CLUB, B.H.E.L., TIRUCHIRAPPALLI-14, IN CONNECTION WITH CHILDREN'S DAY CELEBRATIONS ON 14TH NOVEMBER, 2016.

    HE HAS SECURED THE SECOND PRIZE WITH A SHIELD & CERTIFICATE

    இந்தப்பதிவின் இறுதியில் இன்று இப்போது [19.11.2016] புதிதாக ஐந்து படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே. - அன்புடன் VGK

    122

    பதிலளிநீக்கு
  57. பதில்கள்
    1. Angelin November 22, 2016 at 2:17 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //Congratulations. .GOD bless you anirudh ..//

      தங்களின் அன்பான வருகைக்கும், குழந்தை ‘அநிருத்’துக்கான பாராட்டுகளுக்கும், தேவதையின் ஆசிகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      124

      நீக்கு
  58. மிக்க சந்தோசமாக உள்ளது

    நிச்சயம் கொடுப்பினை வேண்டும்...

    இப்படித் திறன் வாய்ந்த பேரன்
    தாத்தாவுக்குக் கிடைக்கவும்,

    இப்படிக் கொண்டாடி மகிழப் பேரனுக்கு
    ஒரு தாத்தா அமையவும்..

    இதன் அருமை புரிந்த என் போன்றோருக்கு
    தங்கள் தொடர்பு அமைந்ததும்...

    நல்வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S November 23, 2016 at 9:12 PM

      வாங்கோ Mr. Ramani Sir, வணக்கம்.

      //மிக்க சந்தோசமாக உள்ளது. நிச்சயம் கொடுப்பினை வேண்டும்... இப்படித் திறன் வாய்ந்த பேரன்
      தாத்தாவுக்குக் கிடைக்கவும், இப்படிக் கொண்டாடி மகிழப் பேரனுக்கு ஒரு தாத்தா அமையவும்.. இதன் அருமை புரிந்த என் போன்றோருக்கு தங்கள் தொடர்பு அமைந்ததும்... நல்வாழ்த்துக்களுடன்...//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான புரிதலுடன் கூடிய கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      அன்புடன் VGK

      126

      நீக்கு
  59. நல்வாழ்த்துக்கள்! சிறப்புகள் தொடர்வெற்றிகளுக்கும் ஆசீர்வாதங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி December 29, 2016 at 10:20 AM

      வாங்கோ மேடம். வணக்கம். உங்களைப் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டன. நல்லா இருக்கீங்களா!

      //நல்வாழ்த்துக்கள்! சிறப்புகள் தொடர் வெற்றிகளுக்கும் ஆசீர்வாதங்கள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
    2. Brilliantly expressed his pain on destroying the trees @ this tiny age . I wish him more & more achievements.

      நீக்கு
  60. இந்த ஓவியத்தை இந்த குழந்தைதான் வரைந்தது என்றால் உண்மையாகவே நம்ப முடியவில்லை ....பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை ... உண்மையிலேயே ''ஜீனியஸ்'' தான் !!!...
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு