என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 18 மார்ச், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 3



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன்  ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  



3) 'மணிக்கொடி'
பி.எஸ். ராமையா
[பக்கம் 26 முதல் 29 வரை]

 

’மணிக்கொடி’யின் முதல் இதழ் பார்த்து ராமையா சொக்கிப்போனார். அந்தப்பத்திரிகையில் பணியாற்ற வேண்டுமென்கிற ஆசையில் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து தமது ஆசையை உரிமையாளர் ஸ்ரீநிவாசனிடம் தெரிவிக்கிறார். ராமையாவுக்கு பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலை கிடைக்கிறது. எந்த வேலையானாலும் சரி, இந்தப் பத்திரிகைக்கு ஏதாவது ஒரு வகையில் உழைக்கவேண்டுமென்கிற உள்ளக்கிடக்கையில் ஒப்புக்கொள்கிறார் ராமையா.

’நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி’ என்று தஞ்சைப்பகுதியில் அந்தக்காலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு. அந்த மாதிரியான சின்ன ரயில் நிலையங்களில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர்தான் பணிக்கு இருப்பவராய் இருக்கும். டிக்கெட் கொடுப்பதும் அவரே, வெளியேறும் பயணிகளிடம் டிக்கெட் கலெக்ட் செய்வதும் அவரே, பாயிண்ட்ஸ்மேனும் அவரே. அந்த ஸ்டேஷன்மாஸ்டர் மாதிரி, எழுத, பிழைதிருத்த, பேப்பர் வாங்க, தபால் நிலையம் செல்ல, ஸ்டாம்ப் ஒட்டி பார்ஸல் கட்ட என்று ராமையா அந்தப் பத்திரிகைக்கு சகலமும் ஆகிறார். விழிப்பிலும், தூக்கத்திலும் ராமையாவுக்கு மணிக்கொடியே மனசு பூராவும் வியாபித்து அந்தப் பத்திரிகைக்காகத்தான் பிறப்பெடுத்திருக்கிறோம் என்கிறதான நினைப்பு மேலோங்குகிறது.  

'மணிக்கொடி’ பி.எஸ். ராமையா அவர்களை நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி என வேடிக்கையாக ஒப்பிட்டுச் சொல்கிறார் ஜீவி. சுதந்திரப் போராட்ட வீரரான இவரைப்பற்றிய மேலும்  சுவாரஸ்யமான பல தகவல்கள் ஜீவியின் நூலில் உள்ளன.


ஆனந்த விகடன் போட்டியில் பரிசுபெற்ற சமூக சீர்திருத்த புரட்சிக்கதையான ‘மலரும் மணமும்’ பி.எஸ். ராமையா எழுதியதே. 1936ல் மணிக்கொடியில் இவர் எழுதியுள்ள ‘கார்னிவல்’ என்ற கதை பற்றியும், ’போட்டிக் கதை’ என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள சிறுகதை பற்றியும் ஜீவி புகழ்ந்து சொல்லியுள்ளார். 

பி.எஸ். ராமையாவின் மிகச்சிறந்த நாடக ஆக்கங்களான ’தேரோட்டி மகன்’ ‘பூவிலங்கு’ ‘மல்லியம் மங்களம்’ ‘பாஞ்சாலி சபதம்’ என்பவற்றின் சிறப்புக்களையும் ஜீவி மறக்காமல் நமக்கு நினைவூட்டுகிறார். திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ‘போலீஸ்காரன் மகள்’ திரைப்படமே பி.எஸ். ராமையாவின் வெற்றி கண்ட நாடகமே என்கிறார் ஜீவி. ‘இந்த மன்றத்தில் .... ஓடிவரும் .... இளம் தென்றலைக் கேட்கின்றேன்... என்ற புகழ்பெற்ற இனிமையான பாடல் இடம்பெற்ற படம் இது என்பதையும் ஜீவி நமக்கு நினைவூட்டத் தவறவில்லை. 



4) புதுப்பாதை அமைத்த 
புதுமைப்பித்தன்
[பக்கம் 30 முதல் 35 வரை]





எதுபற்றியும் ஊன்றி கவனித்து அதுபற்றி தன்னில் பதிந்ததை அல்லது அதுபற்றி படித்துப் பிடித்ததை கதைகளாக வடித்துவிடும் துடிதுடிப்பு புதுமைப்பித்தனின் எழுத்துக்களில் தெரிகிறது. அவர் தரும் கதைகளின் முடிவும் பளீரென்று மின்னல் வெட்டாய் நிகழ்ந்து இதற்குமேல் விவரிக்க என்ன இருக்கிறது என்ற உணர்வையும் தோற்றுவிக்கும் என்கிறார் ஜீவி.

அதற்கு உதாரணமாக ‘பொன்னகரம்’ ‘ஒருநாள் கழித்து’ கல்கி அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ [கலைமகளில் வெளியானது]; ‘சாப விமோசனம்’; ‘உணர்ச்சியின் அடிமைகள்’; ‘கயிற்றரவு’; ‘காஞ்சனை’; ‘மனித யந்திரம்’; ‘கபடாபுரம்’ போன்ற பலகதைகளை எடுத்துக்கொண்டு அலசி ஆராய்ந்து அவற்றில் உள்ள தனித்தன்மைகளை தனக்கே உரித்தான பாணியில் சிலாகித்துச் சொல்லியுள்ளார் ஜீவி. 


ஒவ்வொன்றையும் படிக்கப்படிக்க வெகு சுவாரஸ்யமாக உள்ளது.




இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்



  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:

 


 வெளியீடு: 20.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

புதன், 16 மார்ச், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 2




’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.

”கங்கையைச் சொம்புக்குள் அடக்க முடியாதுதான். ஒரு நூற்றாண்டில் தமிழில் எழுதிக்குவித்த ஆயிரக்கணக்கான எழுத்துக் கலைஞர்களில் 37 என முடிவுக்கு வந்தது மிகவும் அநியாயம்தான் என்றாலும் பக்கக் கணக்கு நெருக்கடியில், ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில், தமிழ் எழுத்துலகை வாசித்து அறிய இந்த அளவே சாத்தியமாயிற்று. பேராசியர் கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், நவீன இலக்கிய ஜெயமோகன் போன்றோருக்கு தனிப்புத்தகம்தான் போட வேண்டும்”  என்கிறார் ஜீவி தன் முன்னுரையில்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  



1) இயற்கையை நேசித்த 
ந. பிச்சமூர்த்தி 
[பக்கம் 11 முதல் 16 வரை]



அசப்பில் தாகூர் போன்றதோர் தோற்றம். இவரின் பல கதைகள் பொறி போன்ற ஒரு வெளிச்சத்தைத் தாங்கிக்கொண்டிருக்கும். அந்தப்பொறி எதுவொன்றையும் உன்னிப்பாய்ப் பார்த்து ரசித்த அவர் மனத்தின் வெளிப்பாடாக இருக்கும். அவராகப் புனைவாக ஒரு விஷயத்தை நீட்டி முழக்கிச் சொல்லாமல் அவர் பார்த்த காட்சி பற்றிய அதிசயப் படப்பிடிப்பாய் இருக்கும். சில அன்றாடம் நாம் பார்க்கக்கூடியவைதான் என்றாலும் ‘அடடா! இந்த மனிதர் இதை இப்படி நோக்கியிருக்கிறாரே. அவருக்குத்தோன்றியது நமக்குத் தோன்றவில்லையே’ என்று அவர் பார்த்த பார்வையை நாமும் ரசிக்கத்தோன்றும்.

ந. பிச்சமூர்த்தி  எழுதியுள்ள சிலகதைகளை உதாரணமாக எடுத்துக்கொண்டு ஜீவி தனக்கே உரிய பாணியில் திறனாய்வு செய்து நமக்கு இந்த நூல் வாயிலாகச் மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார்கள். ஒவ்வொன்றையும் படிக்கப்படிக்க பரமானந்தமாக உள்ளது.

இவரது பிற்கால பெயர் சொல்லும் வாழ்க்கைக்கு முன்னாலேயே அச்சாரமாக அமைந்தது, கலைமகளில் பிரசுரமான இவரின் ‘முள்ளும் ரோஜாவும்’ என்ற சிறுகதை என்கிறார் ஜீவி. 



இவர் எழுதியுள்ள ’காபூலிக் குழந்தைகள்’; ‘குட்டிக்குளவி’ ஆகிய கதைகளையும், தமிழின் முதல் புதுக்கவிதையான ‘பெட்டிக்கடை நாரணன்’  பற்றியும் ஜீவி அலசி ஆராய்ந்து வெகு அழகாகச் சொல்லியுள்ளார்.  



2) சிறுகதைச் சிற்பி 
கு.ப. ராஜகோபாலன்
[பக்கம்: 17  முதல் 25 வரை]

 


கதைப்போக்கின் நடுவே யார் சார்பாகவும் கதாசிரியரான இவர் ஒரு வார்த்தை பேசமாட்டார். கதையின் கடைசி வரிக்கு அப்புறம் படிப்பவரின் மன உணர்வுக்கு எல்லா முடிவுகளையும் விட்டுவிடுவார். பெரும்பாலும் எல்லாக்கதைகளிலும் கு.ப.ரா. அவர்கள் இப்படி ஒரு நட்சத்திர மினுக்கு வைத்திருப்பார். இல்லை, மொத்தக் கதையையும் சுருட்டி ஒரு பந்தாக்கி விளையாடுகிற மாதிரி ஒரு திருப்பம் காத்திருக்கும். இதுதான் கு.ப.ரா.வின் கதை சொல்லும் பாணி என்கிறார்  ஜீவி.  

கு.ப.ரா.வின் 'விடியுமா?'  என்ற சிறுகதையை எடுத்துக் கொண்டு அவர் எழுத்துச் சிறப்பை எடுத்துச் சொல்கிறார் ஜீவி. அதைவிட ‘நூருன்னிசா’ என்ற சிறுகதையைப் பற்றியும் ’சிறிது வெளிச்சம்’ என்றதொரு கதையைப்பற்றியும் ஜீவி விரிவாக எழுதியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தன. ’சிறிது வெளிச்சம்’ என்ற கதையில் ஓர் இளம் மனைவி விரக்தியடைந்த நிலையில் சொல்லும் வசனமான ’பெற்றோர்களாவது, புருஷனாவது? .... எல்லாம் சுத்த அபத்தம்’ என்பது படிக்கும் நம்மைக் கண்கலங்கி விக்கித்துப்போக வைக்கிறது. 

கு.ப.ரா. வின் ‘திரை’ என்ற கதையை ஜீவியின் விமர்சனத்தின் வாயிலாகப் படிப்பவர்களே அதிர்ஷ்டசாலிகள் என்பேன். இதில் வீணையின் சுருதிலயம் சேர்ந்து ஓர் விதவைப் பெண்ணின் ஏக்கம் மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளது ..... படித்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம் !!!!! 

கு.ப.ரா. அவர்களின் இளைய சகோதரியும் ஓர் பிரபல எழுத்தாளராக இருந்துள்ளார். ‘கலைமகள்’ பத்திரிகையில் நிறைய எழுதியுள்ள கு.ப.சேது அம்மாள். தமது இளம் வயதிலேயே கணவனைப் பறிகொடுத்த இவருக்கு, மறுமணம் செய்துவைத்த புரட்சியாளர் கு.ப.ரா. கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள் என்கிறார் ஜீவி.

மேலும் கு.ப.ரா. பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தகுந்த உதாரணங்களுடன் ஜீவி நூலில் படித்து ரசித்து உணரலாம். 




இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)

தொடரும்

  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:

 

 வெளியீடு: 18.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

திங்கள், 14 மார்ச், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 1

2
ஸ்ரீராமஜயம்

 

    


ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் துணை

{ இந்தப்பதிவினில் ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் இடம்பெற்றுள்ளது }


   

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். நீண்ட நாட்களுக்குப்பின் தங்கள் அனைவரையும் இந்த என் பதிவின் மூலம் இன்று சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

பல்வேறு சொந்தக்காரணங்களாலும், என் கணினியில் அடிக்கடி ஏற்பட்டு வந்த BLOGGER PROBLEMS முதலியவற்றாலும் என் வலைத்தளத்தினையும், பிறர் வலைத்தளங்களையும் என்னால் திறந்து படிக்க முடியாமலும், கருத்தளிக்க முடியாமலும் இருந்து வந்தது. பிறகு சமீபத்தில் ஒருநாள், அந்தப்பிரச்சனை தானாகவே சரியாகி விட்டது. 

இதற்கிடையில் ’பயணங்கள் முடிவதில்லை’ என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவு ஒன்று என் இனிய நண்பர் திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்களின் வலைத்தளத்தினில் 28.01.2016 அன்று வெளியிட நேர்ந்தது உங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம். அதில் என் மறுமொழிகள் உள்பட 127 பின்னூட்டங்கள் உள்ளன. 

இதோ அதற்கான இணைப்பு: 

oooooOooooo

07.02.2016 ஞாயிறன்று மாலை துளசிதளம் வலைப்பதிவரும், தற்சமயம் நியூஸிலாண்டில் வசிப்பவருமான திருமதி. துளசி கோபால் அவர்களை, அவர்களின் கணவருடன் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேரில் சந்திக்க நேர்ந்தது. இவரே நான் நேரில் சந்திக்க நேர்ந்த 40வது பதிவராவார். அதுபற்றிய படங்களும் பதிவுகளும், அந்த சந்திப்பில் கலந்துகொண்ட சில பதிவர்களால் வெளியிடப்பட்டிருந்தன. அவைகளுக்கான இணைப்புகள்:




oooooOooooo

அதன்பிறகு, 13.02.2016 அன்று திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ‘திரு. V.G.K. அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஓர் தனிப்பதிவும் வெளியிட்டிருந்தார்கள். 

அதற்கான இணைப்பு: 

அதில் அவரும், பின்னூட்டமிட்டிருந்த பலரும், நான் மீண்டும் வலைத்தளத்தினில் எழுத வேண்டும் என கோரிக்கை விடுத்து விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு நான் நன்றி கூறி, என் நிலைமைகளை விளக்கி, அவர் மட்டுமல்லாமல், அனைவருமே புரிந்துகொள்ளுமாறு ஒரேயொரு பின்னூட்டமும் கொடுத்திருந்தேன். அதன் முக்கியமான ஒரு பகுதி இதோ:

-=-=-=-=-=-

தற்சமயம் என் இல்லத்திலும், உள்ளத்திலும், உடல்நிலையிலும், என் கணினியின் உடல்நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளை நான் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் என் வலைத்தளத்திலிருந்து நான் சற்றே ஒதுங்கி ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளேன். என் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் எனக்கு சாதகமாக மாறும்போது, ஒருவேளை நான் மீண்டும் என் வலைத்தளத்தினில் எழுத நேரிடலாம். இப்போதைக்கு அதுபற்றி ஏதும் என்னால் தெளிவாகக் கூற இயலாமல் உள்ளது.

என் மீதுள்ள பிரியத்தினால் அன்புடன் இந்தப்பதிவினை வெளியிட்டுள்ள தங்களுக்கும், அதில் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள வாசக நண்பர்கள் + என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

என்றும் அன்புடன் VGK / 14.02.2016

-=-=-=-=-=-

இவ்வாறு வலையுலகிலிருந்து சற்றே ஒதுங்கி ஓய்வு எடுத்துவந்த எனக்கு, என் இனிய நண்பரும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் அவர்களின் சமீபத்திய வெளியீடான ‘முற்றுப் பெறாத ஓவியங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலினை முழுவதுமாக ரஸித்துப் படித்து மகிழ முடிந்தது. 

அதைவிட ஆச்சர்யமாக என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ’ஜீவி’ அவர்களின் சமீபத்திய நூல் வெளியீடு ஒன்றினை, முழுவதுமாக மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும், சுவாரஸ்யமாகப் படித்து மகிழும் வாய்ப்பும் கிட்டியது. 

ஜீவி அவர்களின் இந்த நூல் என்னுள் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தி விட்டதாலும், வாசகர்களும் இன்றைய வலைத்தள எழுத்தாளர்களும் அவசியமாகப் படிக்க வேண்டிய நூல் இது என்று நான் கருதுவதாலும், அதைப்பற்றி தங்களுடன் என்னால் பகிர்ந்துகொள்ளாமல் ஒதுங்கி இருக்க இயலவில்லை. 

எனவே எனக்குள்ள பல்வேறு சொந்தப்பிரச்சனைகள் + கணினியில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் BLOGGER சோதனைகளையும் தாண்டி, இதுவே இந்தப்புத்தாண்டு 2016-இல் என் வலைத்தளத்தினில் நான் மகிழ்ச்சியுடன் வெளியிடும் முதல் பதிவாகவும் அமைந்துள்ளது என்பதையும் தங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்
  
(வை. கோபாலகிருஷ்ணன்)



 

’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்.

”கங்கையைச் சொம்புக்குள் அடக்க முடியாதுதான். ஒரு நூற்றாண்டில் தமிழில் எழுதிக்குவித்த ஆயிரக்கணக்கான எழுத்துக் கலைஞர்களில் 37 என முடிவுக்கு வந்தது மிகவும் அநியாயம்தான் என்றாலும் பக்கக் கணக்கு நெருக்கடியில், ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில், தமிழ் எழுத்துலகை வாசித்து அறிய இந்த அளவே சாத்தியமாயிற்று. பேராசிரியர் கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், நவீன இலக்கிய ஜெயமோகன் போன்றோருக்கு தனிப்புத்தகம்தான் போட வேண்டும்” என்கிறார் ஜீவி, தன் முன்னுரையில்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

நூலின் முதல் பக்கத்தில் 
’சந்தியா பதிப்பகம்’ 
வெளியிட்டுள்ளவை

மூத்த எழுத்தாளர் ஜீவியின் படைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. 1958-இல் இவரின் 15வது வயதில் ‘கல்கண்டு’ பத்திரிகையில் இவரின் முதல் கதை பிரசுரமானது. தொடர்ந்து கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை என்று எழுதுகலையின் எல்லா வகையிலும் எழுதிப் பார்த்தவர் இவர். இன்றும் இணையத்தில் எழுதிக்கொண்டிருப்பவர். ஜீவி கும்பகோணத்துக்காரர். சென்னையில் வசித்து  வரும் இவர் தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.   


’ஜி. வெங்கடராமன்’,  ’ஜீவி’யானது அந்தக்கால பிரபல எழுத்தாளர் ‘ஆர்வி’யைப் பார்த்து வைத்துக்கொண்டது. ’முதலில் நான் வாசகன்.  அந்த வாசக உள்ளம்தான் என்னையும் எழுத வைத்தது’ என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் நேசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இவரில் படிந்து போயிருக்கும் அந்த வாசக உள்ளம்தான் தமிழின் தலைசிறந்த எழுத்துச்சிற்பிகளின் எழுத்தாக்கங்களில் தோய்ந்து இந்த நூலாக உருவெடுத்திருக்கிறது. ஒரு நூற்றாண்டு தமிழ் எழுத்துலகை வலம் வந்த உணர்வையும் நம்மில் ஏற்படுத்துகிறது.

ooooooOoooooo

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் (ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகப்) பார்ப்போம்.

இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப் படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)


48 மணி நேர இடைவெளிக்குப் பிறகு 
தொடரும்....


  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:

 

வெளியீடு: 16.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 



  


ஞாயிறு, 6 மார்ச், 2016

’மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நம் கண்ணீர் அஞ்சலி :(


’மணிராஜ்’ 
வலைப்பதிவர் 
திருமதி. இராஜராஜேஸ்வரி 
அவர்களுக்கு நம் 
கண்ணீர் அஞ்சலி :(


சில மாதங்களாகவே உடல்நிலை 
சரியில்லாமல் இருந்துவந்த
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
09.02.2016 அன்று
இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்
என அவர்களின் வாரிசுகள்
வெளியிட்டுள்ள பதிவு
மூலம் கேள்விப்படுகிறோம்.
http://jaghamani.blogspot.com/2016/03/blog-post_92.html

-oOo-

அவர்களின் இந்த அகால மரணத்தால்
 மிகவும் மனம் வருந்துகிறோம்.

-oOo-


அவர்களின் ஆன்மா சாந்தியடைய
ப்ரார்த்திக்கிறோம்.

 

தாங்கவே முடியாத மன வருத்தங்களுடன்
வை. கோபாலகிருஷ்ணன்