என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 23 டிசம்பர், 2011

தேடி வந்த தேவதை [சிறுகதை - இறுதிப்பகுதி 5 of 5]



தேடி வந்த தேவதை

[ சிறுகதை நிறைவுப்பகுதி (5 of 5) ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



முன்கதை முடிந்த இடம்:



எனவே தங்கள் தாயாரின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் நியாயமானதே.  அவர்களிடம் உண்மையைச்சொல்லி விட்டு, பிறகு அவர்கள் விருப்பப்படியே, நீங்கள் வேறு யாரையாவது உங்கள் ஸ்டேட்டஸுக்குத் தகுதியானவளாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்; 


ALL THE BEST ...... AND ..... GOOD BYE  ......." என்று சொல்லி போனை வைத்துவிட்டாள், சுமதி.       


சுந்தர் அடுத்த ஒரு வாரமும் சுமதியின் நினைவினில் தவியாய்த் தவித்து வந்தான். வேறு எந்த வேலையும் அவனுக்கு ஓடவில்லை. 


தன் தாயிடமும் இதுபற்றிப் பேசவும், உண்மையைச் சொல்லவும் மிகவும் தயங்கினான். 


இப்போது இந்த உண்மையை தன் வாயால் தன் தாயிடம் சொல்லப்போய், ஒருவேளை அதன் காரணமாகவே, தன் மனதுக்கு மிகவும் பிடித்தமான தேவதையாகிவிட்ட, சுமதியை தன் மனைவி ஆக்கிக்கொள்ள முடியால் போய் விடுமோ! என்ற கவலையும் அவனுக்கு ஏற்பட்டது.


அவன் தாயார் மரகதமும் அவனை அழைத்துக்கொண்டு, சுமதி வீட்டுக்குப் பெண் கேட்கப்போக, எந்தவொரு துரித நடவடிக்கைகளும் எடுக்காமலேயே காலம் கடத்தி வந்தாள்.

==================================

தொடர்ச்சி இப்போது இங்கே ..............



தினமும் இரண்டு வேளைகள் வீதம் கூட, ஷேவிங் செய்துகொண்டு, தன் சிவந்த முகத்தில், பச்சைநிறக் கன்னங்களுடன், எப்போதுமே பளபளப்பாகவும் பொலிவுடனும் காட்சி அளித்து வந்த சுந்தர், கடந்த நான்கு நாட்களாக ஷேவிங் செய்துகொள்ளாமலும், ஆபீஸுக்கு போகாமலும், ஏதோ பித்துப்பிடித்தவன் போலக் காட்சியளிப்பதை கண்டு மரகதம் வருந்தினாள். 


சுமதி வந்து விட்டுப் போனதிலிருந்து, சுந்தரின் போக்கினில் ஒருவித மாற்றத்தையும், சோகத்தையும் உணர்ந்த மரகதம் மேற்கொண்டு என்ன செய்வதென்று தீவிரமாகச் சிந்திக்கலானாள்.


“உடம்பு ஏதும் சுகமில்லையாப்பா? நம் டாக்டரிடம் வேண்டுமானால் போய்க் காட்டி விட்டு வருகிறாயா?” என்றாள் மரகதம். 


இந்த எயிட்ஸ் என்ற சனியன், ஏதாவது தன் மகனை இதுபோலெல்லாம் உள்ளூர வாட்டி வதைக்கிறதோ என்ற கவலை அவளுக்கு.


“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்” என்று சொல்லி சட்டையை மாட்டிக்கொண்டு எங்கோ வெளியில் புறப்படத் தயாராகி விட்டான், சுந்தர். 


“இந்தா, வீட்டுச்சாவியில் ஒன்றை நீ எடுத்துக்கொண்டு போ. மற்றொன்றை எடுத்துக்கொண்டு நான் கோயிலுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்றாள், மரகதம்.    


சுந்தர் தன் பைக்கில் எங்கோ கிளம்பியதைப் பார்த்த பிறகு, மரகதம் தானும் தன் வீட்டைப்பூட்டிக்கொண்டு, ஓர் ஆட்டோ பிடித்து, திடீரென்று சுமதி வேலை பார்க்கும் மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றாள்.  


அங்குள்ள ரிஸப்ஷன் + என்கொயரியில், தான் ”சுமதி” என்ற பெயரில் இங்கு வேலை பார்க்கும் நர்ஸை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்து விட்டு, சுழலும் மின் விசிறிக்கு அடியில், பெருமூச்சு வாங்கியபடி அமர்ந்து கொண்டாள். 


ஆட்டோவில் புறப்பட்டு பயணம் செய்து வந்ததே, அவளுக்கு என்னவோ அவளே பொடிநடையாக நடந்து வந்தது போல மூச்சு வாங்கித் திணறியது, அவளின் அசத்தலான தேகவாகினால். 


மோதமொழங்க ‘கும்’ என்றிருக்கும் ஆசாமியல்லவா நம் மரகதம் அம்மாள்!


வைர டாலர் டாலடிக்க, ஜில்லென்று குளிர்ச்சியுடன், B M W காரில், சீருடை அணிந்த டிரைவர் கார்க்கதவை திறக்க, ஒரு கெட்-அப் ஆக வந்து இறங்கியிருக்க வேண்டிய, செல்வச் சீமாட்டி தான் இந்த மரகதம் அம்மாள். 


என்ன செய்வது; இன்று தன் மகன் சுந்தருக்கும், தன் கார் டிரைவருக்குமே கூட தெரியாமல் ரகசியமாக, சுமதியை சந்தித்து விட்டு வரவேண்டும் என்று அவள் நினைத்ததால், ஏதோ ஒரு ஆட்டோவைப்பிடித்து, அவசரமாகப் புறப்பட்டு வந்து விட்டாள். 


ஜில்லென்று எப்போதும் ஏ.ஸீ. வீடு, ஏ.ஸீ. கார், ஏ.ஸீ. பாத்ரூம் என்றே வாழ்ந்து பழகிவிட்டவளுக்கு, இப்போது இன்று மட்டும் ஆட்டோவில் வந்ததால் சற்றே அவஸ்தையாகி விட்டது.   


அவளின் ’ரவிக்+கை’ க்கு இடைப்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட நீரூற்று போன்ற கசகசப்பே வெளியே அடிக்கும் வெய்யில் 40 டிகிரிக்குக் குறையாது என்று வானிலை அறிக்கை போல் அவளுக்கு உணர்த்தியது.


அவள் கண்ணெதிரே, அதே மருத்துவமனைக்குள் சில வெளிநாட்டுப் பெண்மணிகள், துள்ளிவரும் புள்ளி மான் கூட்டம் போல அப்போது நுழையக்கண்டாள், மரகதம்.


வாழைத்தண்டு போல வழவழப்பான கைகளும் கால்களும் அவர்களுக்கு. புதிதாகப் பறித்து வந்த, பச்சை வேர்க்கடலையின் மேல்தோலியை உடைத்ததும் உள்ளே இருக்குமே, அதே ரோஸ் கலர் (கடலையின் உள்தோலியின் கலர்) போலவே அவர்களின் ஒட்டுமொத்த நிறம். 


அவர்களில் ஒருசிலர் பெளர்ணமி முழுநிலவு போல பால் வெண்மையாகவும், சிலர் குட்டியூண்டு இளம் நொங்கு போல பார்க்கவே பரவசமாகவும், சிலர் பறங்கிப்பழத்தைப் பிளந்தது போல செக்கசெவேலென்றும், முகத்தோற்றம் கொண்டிருந்தனர். 


அவர்கள் அணிந்திருந்த ஆடைகளோ, காத்தாட அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சம் மட்டுமே. 


அவர்கள் எல்லோருமே மேலாடைகளில் கை இல்லாத ”ரவிக்” மட்டுமே [’ரவிக்கை’ மைனஸ் ’கை’ = ரவிக்] அணிந்திருந்தனர். அதாவது எல்லோருமே மொத்தத்தில் முண்டா பனியன் கேஸ்கள் தான்.


அடிக்கும் வெய்யிலுக்கு என்னமாய் சுதந்திரமாக காற்றோடமாக இவர்கள் திரிகிறார்கள்! என்ற எண்ணத்தில் அவர்களைப் பார்த்ததும், மரகதம் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டாள். 


ஆனாலும் அந்தக்கூட்டத்தை நம் ஆட்கள், வாயைப்பிளந்தபடி பார்க்கும் பார்வையைக் கண்ட மரகதத்திற்கு, தன் புடவைத்தலைப்பை சரி செய்து, இழுத்துப் போர்த்திக் கொள்ளத் தோன்றியது, ஒரு வித கூச்சத்தால்.  


இதுபோல புடவைத்தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொள்வதால் அவள் கழுத்தில் இன்று அணிந்து வந்துள்ள,  டால் அடிக்கும் புத்தம் புதிய வைர நெக்லஸ், மற்ற பெண்மணிகளின் பார்வையிலிருந்து மறைவதில், மரகதத்திற்கும் கொஞ்சம் வருத்தமே!


[ ”அடடா! மருத்துவமனை என்றால் பலரும் பலவிதமாக இதுபோல வரத்தான் செய்வார்கள்! 


இந்த வர்ணனைகளிலிருந்து முதலில் வெளியே வந்து மெயின் கதை என்னாச்சுன்னு சொல்லுங்கள்!”  ,,,..  என உங்களில் சிலர் முணுமுணுப்பது எனக்கும் புரிகிறது. 


சும்மா ஒரு ஜாலிக்குத்தான்! 


சுமதியும் மரகதமும் ஒருவரையொருவர் சந்திக்கும் வரை உங்களுக்கும் எனக்கும் போர் அடிக்கக்கூடாது அல்லவா!! 


அதனால் தான், அதுவரை அங்கு நடந்தவற்றை, நான் கொஞ்சம் வர்ணிக்கும் படியாகி விட்டது!!!  


இதோ நம் சுமதியே வந்துவிட்டாள்!   .........................  மெயின் கதைக்குப் போவோமா? ]



திடீரென்று மருத்துவ மனைக்கு, தன்னை சந்திக்க வருகை தந்துள்ள மரகதம்மாவை சுமதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவர்களை கைகூப்பி வரவேற்று, தனி அறை ஒன்றுக்குள் கூட்டிச்சென்றாள்.

கொஞ்சநேரம் எதுவுமே பேசாமல் சுமதி மிகவும் அமைதியாகவே இருந்தாள். 


அவள் ஏதோ இறுக்கமாக இருந்ததை உணர்ந்த மரகதம், தானே பேசலானாள்:


“சுமதி! உன் வீட்டுக்கு நானும் சுந்தரும் எப்போதும்மா புறப்பட்டு வரட்டும்? ;


நீயாகவே என்னிடம் போன் செய்து ஏதாவது இதுபற்றிப் பேசுவாய் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன், நான்; 


உன்னை மறுபடியும் நேரில் பார்க்கணும் போல எனக்கு ஒரு சின்ன ஆசை மனதுக்குள் இருந்தது;


அதனால் தான் இப்போ நானே உன்னைப்பார்க்க புறப்பட்டு வந்துட்டேன்; 


உன் வீட்டில் உள்ள எல்லோரிடமும் இதுபற்றி ஏதாவது நீ பேசினாயா? 


அவர்கள் எல்லோரும் என்ன சொல்லுகிறார்கள்? 


எல்லோருக்குமே இதில் திருப்தி தானே? 


பிரச்சனை ஏதும் இல்லையே?” 


என பலவிதக் கேள்விகளை ஆதங்கத்துடன் கேட்கலானாள், மரகதம்.

“என்னை மன்னித்து விடுங்கள் அம்மா; நான் எடுக்கும் எந்த முடிவுக்கும் என் வீட்டில் யாரும் எப்போதும் மறுபேச்சோ, மறுப்போ ஏதும் சொல்ல  மாட்டார்கள்;


நன்கு யோசித்துப் பார்த்ததில், எனக்குத்தான் இப்போது இந்த விஷயத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை” என்றாள் சுமதி.

சுமதி வாயால் இப்படிச்சொன்னதும், மரகதத்திற்கு ஒருவித ஏமாற்றமும், வருத்தமும், கோபமும் வந்து விட்டன.

“என் பிள்ளை சுந்தரையா வேண்டாம் என்கிறாய்? ; 


அவனுக்கு வந்திருக்கும் வியாதியைக்கண்டு பயப்படுகிறாய் போலிருக்கு; 


வியாதி என்று சொல்லித்தானே விளம்பரம் கொடுத்திருந்தான்? 


பிறகு எதற்காக அன்று எங்கள் வீட்டுக்கு வந்து அவ்வளவு பேச்சுப் பேசிவிட்டுப் போனாய்?;

உன் நினைவாகவே நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கும் என் மகன் சுந்தரின் நிலைமையை யோசித்துப் பார்த்திருந்தால், நீ மிகச்சுலபமாக ’நன்கு யோசித்துப் பார்த்ததில், எனக்குத்தான் இப்போது இந்த விஷயத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை’ என்று இப்போது நீ என்னிடம் சொல்லியிருக்க மாட்டாய்! 


எல்லாம் என் தலையெழுத்து” 


என்று சொல்லிவிட்டு, கோபமாகப் புறப்பட்டு விட்டாள், மரகதம். 


மரகதம் மிகக்கோபமாக எழுந்த வேகத்தில், அவள் அமர்ந்திருந்த சுழலும் நாற்காலி, நீண்ட நேரம் அசைந்து ஆடிக்கொண்டே இருந்தது.

சுமதிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. சுந்தர் நடத்தியுள்ள எயிட்ஸ் என்ற நாடக விளையாட்டை, தன் வாயால் அவர்களுக்கு விளக்கிக் கூறவும் விருப்பமின்றி, மிகவும் தயங்கியபடி மெளனமாகவே, இருந்து விட்டாள். 


தன் மீது மிகுந்த கோபத்துடன் மரகதம் வெளியே செல்வதையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள், சுமதி. 


பிறகு ஏழாம் நம்பர் கட்டிலில் உள்ள பேஷண்ட் ஆன பெரியவருக்கு ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டுமே! என்று நினைவுக்கு வந்தவளாக, தன் கடமையில் மூழ்கிப்போனாள்.  








எங்கோ பைக்கில் வெட்டியாக ஊரைச் சுற்றிவிட்டு வந்திருந்த சுந்தர் மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்தான். வீட்டின் மேல் கூரையில் சுழலும் மின் விசிறியை வெறித்துப்பார்த்தபடி, கட்டிலில் மல்லாக்காகப் படுத்திருந்த சுந்தரை நெருங்கி மரகதம் பேசலானாள்:

“நமக்கு அதிர்ஷ்டம் இல்லேடா, சுந்தர். சுமதிக்கு இந்தக் கல்யாணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லையாம்; என்னிடமே இதை அவள் நேரில் சொல்லிவிட்டாளே! நான் என்ன செய்வது? ;


எவ்வளவு தான் பணம் காசு, சொத்து சுகம் நம்மிடம் கொட்டி இருந்தாலும், சுமதியைப்போல ஒரு அழகான, அமைதியான, அடக்கமான, நாகரீகமான, படித்த, பண்புள்ள, புத்திசாலியான பெண் எனக்கு மருமகளாக அடையக் கொடுத்து வைக்க வில்லையே .....” எனக்கூறி கண்ணீர் விட்டுப் புலம்பினாள், மரகதம்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட சுந்தருக்கு, தன் விபரீத விளையாட்டை, தன் தாயாரிடம் மேலும் மறைக்க விருப்பமில்லை.

நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் தன் தாயாரிடம் விளக்கிக்கூறி, சுமதியின் விருப்பமின்மைக்கான உண்மைக் காரணத்தையும் எடுத்துச்சொல்லி, தனக்கு எப்படியாவது சுமதியே மனைவியாக வருமாறு ஏற்பாடுகள் செய்து உதவுமாறு, தன் தாயிடம் கெஞ்சினான்.


எப்படியோ தான் பெற்ற ஒரே பிள்ளை சுந்தருக்கு, எயிட்ஸ் என்ற கொடிய வியாதி ஏதும் இல்லை என்றதைக் கேள்விப்பட்டதும், அவளின் பெற்ற வயிறு, பாலை வார்த்தது போல குளிர்ந்து போனது. 


தன் மகன் சுந்தர் தன்னிடமே நடத்தியுள்ள பொய் நாடகத்தையும், அதற்கு துணைபோன குடும்ப டாக்டரையும், மனதிற்குள், கண்டபடி திட்டித்தீர்த்தாள். 


இருப்பினும் சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு சுமதி ஏன் மறுப்பு தெரிவித்தாள் என்பதன் உண்மைக்காரணம் இப்போதுதான் மரகதத்திற்கும் புரிய வந்தது.  உடனே, சுமதி மீது மரகதத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. 

தனக்கு ஆதாயம் இருப்பினும், தன் மகன் தன்னிடமே பொய் சொன்னதைப் பொறுத்துக் கொள்ள மனமின்றி, கொஞ்சமும் சுயநலமில்லாமல், துணிச்சலுடன் நடந்து கொண்ட சுமதியே, தனக்கு ஏற்ற மிகச்சிறந்ததொரு மருமகளாக இருக்க முடியும் என்று பேரானந்தப்பட்டாள் மரகதம்.





அடுத்த ஒரே மாதத்திலேயே “சுமதி+சுந்தர்” திருமணம் வெகு விமரிசையாக, மரகதத்தால் நடத்தி வைக்கப்பட்டது.






ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே !  







[கெளரிக்கல்யாண வைபோவமே!]



சுமதி.....சுந்தர்க் கல்யாண வைபோவமே!














சுபம் !!



-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-  






     
[ என் அடுத்த நகைச்சுவைச் சிறுகதை 
“முன்னெச்சரிக்கை முகுந்தன்” 
என்ற தலைப்பில்  வருகிற 27.12.2011 
செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்படும். ]


அன்புடன்
vgk

102 கருத்துகள்:

  1. எப்படியோ தான் பெற்ற ஒரே பிள்ளை சுந்தருக்கு, எயிட்ஸ் என்ற கொடிய வியாதி ஏதும் இல்லை என்றதைக் கேள்விப்பட்டதும், அவளின் பெற்ற வயிறு, பாலை வார்த்தது போல குளிர்ந்து போனது.

    அனைவருக்கும் மகிழ்ச்சிதான்..

    பதிலளிநீக்கு
  2. தனக்கு ஆதாயம் இருப்பினும், தன் மகன் தன்னிடமே பொய் சொன்னதைப் பொறுத்துக் கொள்ள மனமின்றி, கொஞ்சமும் சுயநலமில்லாமல், துணிச்சலுடன் நடந்து கொண்ட சுமதியே, தனக்கு ஏற்ற மிகச்சிறந்ததொரு மருமகளாக இருக்க முடியும் என்று பேரானந்தப்பட்டாள் மரகதம்./

    மரகத்தின் பேரானந்தம் எல்லோரையும் தொற்றிக்கொண்டது..

    பதிலளிநீக்கு
  3. ட்விஸ்ட் ஏதும் கொடுப்பீர்களோ என்று எதிர்பார்த்தேன். உங்கள் கதை சுபத்தில்தான் முடியும் என்று யூகித்ததுதான். சுபம்...சுபம்.. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. [கெளரிக்கல்யாண வைபோவமே!]



    சுமதி.....சுந்தர்க் கல்யாண வைபோவமே!


    ஆண்டாள் கல்யாண வைபம் நடைபெறும் தருணத்தில் சுமதி சுந்தர்
    கல்யாண வைபோவமே!

    பதிலளிநீக்கு
  5. விசாகா ஹரியின் ஹரிதையுமா??

    ரொம்பவும் விஷேசம்தான்..

    விமரிசையான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. அழகான பொருத்தமான படங்கள் கதைக்கு சிறப்பு செய்கின்றன்..

    பதிலளிநீக்கு
  7. மங்கள வாத்தியமான நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர் அருமை.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. அவள் கண்ணெதிரே, அதே மருத்துவமனைக்குள் சில வெளிநாட்டுப் பெண்மணிகள், மான் கூட்டம் போல அப்போது நுழையக்கண்டாள், மரகதம்.//

    இந்தியாவில் மருத்துவ டூரிஸம் வெளிநாடுகளில் பரவி வருவதை கதையின் போக்கிலேயே வெளிச்சமாகிய சாமர்த்தியத்திற்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. அவர்களில் ஒருசிலர் பெளர்ணமி முழுநிலவு போலவும், சிலர் குட்டியூண்டு இளம் நொங்கு போலவும், சிலர் செங்குரங்கு போலவும் முகத்தோற்றம் கொண்டிருந்தனர்.


    தங்களின் கவனிப்புத்திறன் அசாத்தியமான்து..

    பதிலளிநீக்கு
  10. இருப்பினும் சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு சுமதி ஏன் மறுப்பு தெரிவித்தாள் என்பதன் உண்மைக்காரணம் இப்போதுதான் மரகதத்திற்கும் புரிய வந்தது. உடனே, சுமதி மீது மரகதத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது.

    உடன் இணைத்த படங்கள்.. இடையிடையே சேர்த்த கலர்புல் விவரங்கள்
    கலக்குறீங்க..

    பதிலளிநீக்கு
  11. நீயாகவே என்னிடம் போன் செய்து ஏதாவது இதுபற்றிப் பேசுவாய் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன், நான்;


    உன்னை மறுபடியும் நேரில் பார்க்கணும் போல எனக்கு ஒரு சின்ன ஆசை மனதுக்கும் இருந்தது;/

    சுமதி மரகதத்தையும் கவர்ந்துவிட்டாளே

    புத்திசாலிப்பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது!!

    பதிலளிநீக்கு
  12. aha....தெரிந்து முடிவு தான்...இருந்தாலும் நீங்கள் சுவை கூட்டிய இடங்களால் மிளிர்கிறது....

    நான் ரசித்த இடங்கள்....

    //தினமும் இரண்டு வேளைகள் வீதம் கூட, ஷேவிங் செய்துகொண்டு, தன் சிவந்த முகத்தில், பச்சைநிறக் கன்னங்களுடன், எப்போதுமே பளபளப்பாகவும் பொலிவுடனும் காட்சி அளித்து வந்த சுந்தர், கடந்த நான்கு நாட்களாக ஷேவிங் செய்துகொள்ளாமலும், ஆபீஸுக்கு போகாமலும், ஏதோ பித்துப்பிடித்தவன் போலக் //

    :))

    ///ஆட்டோவில் புறப்பட்டு பயணம் செய்து வந்ததே, அவளுக்கு என்னவோ அவளே பொடிநடையாக நடந்து வந்தது போல மூச்சு வாங்கித் திணறியது, அவளின் அசத்தலான தேகவாகினால்.

    ///

    :))

    // நீரூற்று போன்ற கசகசப்பே வெளியே அடிக்கும் வெய்யில் 40 டிகிரிக்குக் குறையாது என்று வானிலை அறிக்கை போல் அவளுக்கு உணர்த்தியது.
    //

    ரொம்ப இயல்பா எழுதியிருக்கீங்க.

    //
    அவர்களில் ஒருசிலர் பெளர்ணமி முழுநிலவு போலவும், சிலர் குட்டியூண்டு இளம் நொங்கு போலவும், சிலர் செங்குரங்கு போலவும் முகத்தோற்றம் கொண்டிருந்தனர்.

    //

    நடை அழகு.

    //
    சும்மா ஒரு ஜாலிக்குத்தான்!


    சுமதியும் மரகதமும் ஒருவரையொருவர் சந்திக்கும் வரை உங்களுக்கும் எனக்கும் போர் அடிக்கக்கூடாது அல்லவா!!


    அதனால் தான், அதுவரை அங்கு நடந்தவற்றை, நான் கொஞ்சம் வர்ணிக்கும் படியாகி விட்டது
    //

    :))))

    அப்பாடா! நேத்தெல்லாம் சுமதி என்ன ஆனாள் மரகதம் போய்
    பார்த்தார்களா இல்லையான்னு ஒரே கவலையா போச்சு !

    ஒரு வழியா கல்யாணமும் முடிஞ்சுது!!

    அவங்க அவங்க வீட்டுல கல்யாண சாப்பாடு சாப்பிட்டுக்குறோம்!!

    பதிலளிநீக்கு
  13. நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  14. நளினி அப்படியே மரகதமா மாறிப்போனது தான் ஆச்சரியம்! :)))

    பதிலளிநீக்கு
  15. Keen observation மற்றும் அருமையான வர்ணனை, ஆனந்தமான முடிவு

    பதிலளிநீக்கு
  16. விருவிருப்பான முடிவை எதிர் நோக்கி இருந்த எனக்கு இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கின்றது.

    நான் இந்த கதையை படித்த போது எங்கடா நம்ம "குறும்புகார இளைஞரின் டச்சப்பை" காணோம் என்று நினைத்தேன்.அதற்கேற்றார் போல இந்த இறுதிபகுதியில் அந்த டச்சப்பை பார்த்தேன்.
    //அவர்கள் எல்லோருமே மேலாடைகளில் கை இல்லாத ”ரவிக்” மட்டுமே [’ரவிக்கை’ மைனஸ் ’கை’ = ரவிக்] அணிந்திருந்தனர். அதாவது எல்லோருமே மொத்தத்தில் முண்டா பனியன் கேஸ்கள் தான்.//

    ஐயா மருத்துவமனைக்கு அடிக்கடி மாமி துணையில்லாமல் தனியாக செல்லுவீர்களோ அதன் விளைவுதான் இந்த வர்ணணையோ??

    //வாழைத்தண்டு போல வழவழப்பான கைகளும் கால்களும் அவர்களுக்கு. புதிதாகப் பறித்து வந்த, பச்சை வேர்க்கடலையின் மேல்தோலியை உடைத்ததும் உள்ளே இருக்குமே, அதே ரோஸ் கலர் (கடலையின் உள்தோலியின் கலர்) போலவே அவர்களின் ஒட்டுமொத்த நிறம்//

    மரகதம்மாள் கண்ணுக்கா அல்லது உங்கள் கண்ணுக்கா?
    /அவள் கண்ணெதிரே, அதே மருத்துவமனைக்குள் சில வெளிநாட்டுப் பெண்மணிகள், மான் கூட்டம் போல அப்போது நுழையக்கண்டாள், மரகதம்.//

    கொஞ்சம் உங்க வீட்டு அம்மா போண் நம்பர் தருகிறீர்களா அவர்களிடம் கம்ளைண்ட் பண்ணனும். ஹீ..ஹீ அப்பதான் நான் இந்தியா வரும்போது எனக்கு ஸ்பெஷல் உணவு தாயாரித்து விருந்து பறிமாறுவார்கள்.

    ஆமாம் சார் கல்யாணம் சுபமா முடிந்தது என்று சொல்லி அழகான படங்களை போட்டுள்ளீர்கள் ஆனால் கல்யாண விருந்து சாப்பாட்டிற்காண படத்தை காணோமே சார்

    //சும்மா ஒரு ஜாலிக்குத்தான்! /// நானும் சும்மா ஜாலிக்காகதான் இப்படி பின்னுட்டம் போட்டுள்ளேன்.

    நேரம் கிடைக்கும் போது நீங்கள் குறிப்பிட்ட கதையை சென்று படிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  17. மிகவும் சுபமாக முடித்துவிட்டீர்கள். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் முடிவு என்னைப் பொருத்தமட்டில் கொஞ்சம் சப்பென்று போய்விட்டது. இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் சேர்த்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  18. ஆனந்தம்,ஆனந்தமே! அருமையான முடிவு.

    //ரவிக்” மட்டுமே [’ரவிக்கை’ மைனஸ் ’கை’ = ரவிக்] அணிந்திருந்தனர். //அதாவது எல்லோருமே மொத்தத்தில் முண்டா பனியன் கேஸ்கள் தான்.//

    ஹா..ஹா.. சூப்பர்.

    //இதுபோல புடவைத்தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொள்வதால் அவள் கழுத்தில் இன்று அணிந்து வந்துள்ள, டால் அடிக்கும் புத்தம் புதிய வைர நெக்லஸ், மற்ற பெண்மணிகளின் பார்வையிலிருந்து மறைவதில், மரகதத்திற்கும் கொஞ்சம் வருத்தமே!//

    இது இன்னும் சிறப்பு..

    கடைசி பகுதியை சோகமாக ஆரம்பித்து,நகைச்சுவையாக கொண்டு போய்,சுபமாக முடித்ததில் எல்லோருக்குமே ஆனந்தம்தான்....

    பதிலளிநீக்கு
  19. வலைசரத்தில் மீண்டும் மீண்டும் அடையாளம் காட்டப்பட்டதற்கு
    நிறைவான வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  20. நல்ல கதை.
    அருமையான முடிவு.
    மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  21. The closing episode is a damp squib, though the description slipped in-between was quite enjoyable.

    பதிலளிநீக்கு
  22. //சும்மா ஒரு ஜாலிக்குத்தான்! //

    ஜாலி வாழ்க்கைக்குத் தேவையான ஜோலி. கீப் ராகிங்.

    பதிலளிநீக்கு
  23. நல்ல வேளையாக பொய் சொல்லி திருமணம் நடக்காமல் இருந்ததே அதுவே பேரானந்தம்.

    பதிலளிநீக்கு
  24. நன்றாக உள்ளது.. சார், அடுத்த கதையை ரொம்ப ஜாலியாக எழுதுங்க... சோகத்திற்கு என் கதை.. சுகத்திற்கு உங்கள் கதை..

    பதிலளிநீக்கு
  25. படங்கள் கதையின் சுப முடிவிற்கு அழகு சேர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  26. அப்பாடா கத ஒரு வழியா முடிஞ்சுது - கிளைமாக்ஸ் - சூப்பர் - நடுவுல ஆஸ்பத்திரி விளக்கமா வர்ணனை .... ம்ம்ம்ம் - சுமதி சுந்தர் கல்யாணம் ஆயிடும்னு எல்லாருக்கும் தெரியும் - இருதாலும் அந்த எதிர்பார்ப்பக் கொண்டு வந்து காதயக் கொண்டு சென்ற விதம் நன்று. நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  27. தனக்கு ஆதாயம் இருப்பினும், தன் மகன் தன்னிடமே பொய் சொன்னதைப் பொறுத்துக் கொள்ள மனமின்றி, கொஞ்சமும் சுயநலமில்லாமல், துணிச்சலுடன் நடந்து கொண்ட சுமதியே, தனக்கு ஏற்ற மிகச்சிறந்ததொரு மருமகளாக இருக்க முடியும் என்று பேரானந்தப்பட்டாள் மரகதம்.//

    மரகதம் நல்ல முடிவு எடுத்தார்கள்.

    ஆனந்தன் ஆனந்தம் ஆனந்தமே !

    படங்கள் எல்லாம் ரொம்ப பொருத்தமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. கதை நடுவே இடைச்செருகல்கள் சுவை கூட்டின. எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும் கதை சொல்லிய விதம் சூபர்.

    பதிலளிநீக்கு
  29. யூகித்த முடிவுதான் என்றாலும் எப்படி முடிப்பீர்கள் என்ற ஆர்வம் இருந்தது..சுபமாய் முடிந்தது என்பதைவிட சுகமாய் முடித்தீர்கள் என்று சொல்லலாம்..
    நகைச்சுவைக் கதையை எதிர்பார்க்கிறேன்..

    வாக்கு (TM-07)
    அன்போடு அழைக்கிறேன்..

    மௌனம் விளக்கிச் சொல்லும்

    பதிலளிநீக்கு
  30. ஆனந்தம் ஆனந்தமே . எதுவும் சந்தோசமாக முடிந்தால் எல்லோருக்கும் நல்லதுதான். இடையில் எப்படி எல்லோருடைய மனதையும் படித்தது போல் சொன்னீர்கள். கதை அருமையாக முடிந்திருக்கிறது எப்போது அடுத்த தவிப்பை ஏற்ப்படுத்தப் போகின்றீர்கள்

    பதிலளிநீக்கு
  31. கதையில் நர்சுகளின் வர்ணிப்பு கூடுதல் எனப் பட்டாலும்
    வர்ணிப்பு மிக அருமையாய் இருந்தது குறிப்பாக
    அந்த உரித்த கடலையை சொல்லிப் போனது
    புதிய உவமையாக ரசிக்கும் படியாக இருந்தது
    கல்யாண படங்கள் அருமை
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..
    த.ம 9

    பதிலளிநீக்கு
  32. //என்னை மன்னித்து விடுங்கள் அம்மா; நான் எடுக்கும் எந்த முடிவுக்கும் என் வீட்டில் யாரும் எப்போதும் மறுபேச்சோ, மறுப்போ ஏதும் சொல்ல மாட்டார்கள் //

    இந்தக்கால பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் சுமதியின் கதா பாத்திரம் அமைத்துள்ளீர்கள் .

    போன பகுதி கொஞ்சம் சீரியஸ் . நிறைவு பகுதி காமெடி கலந்த கலாட்டா கல்யாணம் .

    வருணனைகள் சிந்திக்க வைத்து சிரிக்க வைக்கின்றன .

    காரமான மிக்சரில் கொஞ்சம் இனிப்பு கலந்தது போன்று மிகச் சுவை.

    பதிலளிநீக்கு
  33. புத்தகத்தில் படித்ததற்கும் வலைப்பூவில் படித்ததற்கும் நிறைய வித்தியாசம்..

    சேர்க்கப்பட்ட விஷயங்களும் நன்று.

    ஒரு வழியாக சுமதி - சுந்தர் கல்யாணம் நடந்ததில் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே......

    பதிலளிநீக்கு
  34. மிகவும் ரசித்த கதையை சுபமான முடிவு தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். மிக ரசித்துப் படித்தேன். சுவைகளில் சிறந்தது நகைச்சுவை. படிப்பதன் மூலம் சிரிக்க வைப்பது அரிய கலை. வித்தகரான உங்களின் நகைச்சுவைக் கதைக்கு ஆவலுடன் வெயிட்டிங்....

    பதிலளிநீக்கு
  35. கதை எதிர்பார்த்தபடி நிறைவுற்றது.ரவிக்கைக்கு புது பார்முலா அறிய கண்டுபிடிப்பு.படங்களும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  36. கதை சுபமாக முடிந்ததில் மகிழ்ச்சி. மரகதம் சுமதியை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டது மேலும் மகிழ்ச்சியைத் தந்தது...
    த.ம - 12
    இண்ட்லி - 5

    பதிலளிநீக்கு
  37. அருமையான கதை.. நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  38. உண்மை உணரும்வரை அதாவது மருத்துவமனையிலும் கூட தன் வைர அட்டிகையைக் காட்டி பகட்டான வாழ்க்கையைப் பறைசாற்றும் விதமாய் நடந்துகொண்ட மரகதம், மகனின் நாடகத்தையும், சுமதியின் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண்டபின், தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்து பணமல்ல, குணமே நல்வாழ்க்கைக்கு முக்கியம் என்பதையும் புரிந்துகொண்டு சுமதியை மருமகளாக்கிக்கொண்டது வெகு அழகு.

    தங்கள் நயமான, நகைச்சுவைகளும் முறுவல் எழுப்பி மனத்தை இலகுவாக்கின. இறுதியில் ஒரு கல்யாண விழாவுக்கே சென்றுவந்த மனநிறைவு கிட்டியது. பாராட்டுகள் வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  39. முதுகெலும்பில்லாத சுந்தருக்கு ஏற்ற துணை. ம்ம்ம்... மரகதம் அம்மா குடும்ப டாக்டர் மேலே கேஸ் போட ஒரு வக்கீல் தேவைனா சொல்லியனுப்பச் சொல்லுங்க :)

    எதிர்பார்த்த முடிவென்றாலும் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  40. ”..அவளின் ரவிக்+கை க்கு இடைப்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட நீரூற்று போன்ற கசகசப்பே வெளியே அடிக்கும் வெய்யில் 40 டிகிரிக்குக் குறையாது என்று வானிலை அறிக்கை போல் அவளுக்கு உணர்த்தியது...”
    சூப்பர்ங்கோ....

    பதிலளிநீக்கு
  41. மிக அருமை.. தொடர்ந்து வர இயலவில்லை.. கொஞ்சம் புத்தக வேலைகள். மன்னிக்கவும் கோபால் சார்..

    கதை மிக அருமை.. வலைச்சரத்தில் பின்னூட்டத்தில் பாராட்டியமைக்கு நன்றி..:0

    பதிலளிநீக்கு
  42. படங்களும் பகிர்வும் அருமை!..கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
    .மிக்க நன்றி பகிர்வுக்கு ...

    பதிலளிநீக்கு
  43. இராஜராஜேஸ்வரி said...
    //ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே !//

    ஆஹா!
    ஆனந்தம்
    ஆனந்தம்
    ஆனந்தமே!

    தான் எனக்கும் கூட,

    இதுவரை சரித்திரத்திலேயே இல்லாத
    அளவுக்கு [RECORD BREAK] 12 முறைகள் தங்களின் அழகிய செந்தாமரைகளை மலரச்செய்து, பதிவுக்கே பெருமை சேர்த்துள்ளதற்கு! ;))))))))))))

    ”தேடி வந்த தேவதை”க்கு என் மனமார்ந்த நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு
  44. திரு. GMB Sir அவர்கள்
    திரு. ரிஷபன் அவர்கள்
    திரு. என் ராஜபாட்டை ராஜா அவர்கள்
    புலவர் திரு.சா.இராமாநுசம் அவர்கள்
    Dr, Palaniappan Kandaswamy அவர்கள்
    திரு. ரத்தினவேல் அவர்கள்
    திரு. D.Chandramouli அவர்கள்
    Advocate PR Jayarajan அவர்கள்
    திரு. சீனா ஐயா அவர்கள்
    திரு. மணக்கால் அவர்கள்
    திரு. மதுமதி அவர்கள்
    திரு. நண்டு@நொரண்டு அவர்கள்
    திரு. ரமணி அவர்கள்
    திரு. Mazai.net அவர்கள்
    திரு. அப்பாதுரை அவர்கள்
    திரு. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்கள்

    திருமதி ஏஞ்சலின் அவர்கள்
    திரும்தி கோமதி அரசு
    திருமதி திருமதி B S ஸ்ரீதர் அவர்கள்
    திருமதி கோவை2தில்லி அவர்கள்
    திருமதி அம்பாளடியாள் அவர்கள்

    ஆகிய அனைவரின் அன்பான வருகைக்கும், அரிய கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  45. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
    //வர்ணனைகள் அனைத்தும் அருமை.//

    என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பிரபல எழுத்தாளராகிய தங்களின் அபூர்வ வருகை எனக்குப் பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  46. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //மிக அருமை.. தொடர்ந்து வர இயலவில்லை.. கொஞ்சம் புத்தக வேலைகள். மன்னிக்கவும் கோபால் சார்..

    கதை மிக அருமை.. வலைச்சரத்தில் பின்னூட்டத்தில் பாராட்டியமைக்கு நன்றி..:0//

    என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பிரபல எழுத்தாளராகிய தங்களின் அபூர்வ வருகை எனக்குப் பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

    மிக்க நன்றி மேடம்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  47. Shakthiprabha said...
    aha....தெரிந்து முடிவு தான்...இருந்தாலும் நீங்கள் சுவை கூட்டிய இடங்களால் மிளிர்கிறது....

    நான் ரசித்த இடங்கள்.............
    ................................
    ................................

    என பெரியதோர் பட்டியலே போட்டு
    உற்சாகப்படுத்தியுள்ளதால், புதிய ஷக்தி கிடைத்தது போல உணர்கிறேன்.

    மிக்க நன்றி, ஷக்தி.

    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  48. Avargal Unmaigal said...

    //விறுவிறுப்பான முடிவை எதிர் நோக்கி இருந்த எனக்கு இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கின்றது.//

    இதுபோன்ற சுபமான முடிவுகளைத்தான் என் எழுத்துக்களை ரசித்துப்படித்து கருத்துக்கள் கூறிவரும் பெரும்பாலான பெண்மணிகள் விரும்புகிறார்கள்.

    //நான் இந்த கதையை படித்த போது எங்கடா நம்ம "குறும்புகார இளைஞரின் டச்சப்பை" காணோம் என்று நினைத்தேன்.அதற்கேற்றார் போல இந்த இறுதிபகுதியில் அந்த டச்சப்பை பார்த்தேன்.//

    உங்களைப்போன்ற ரசிகர்களுக்காகவே அவை ஆங்காங்கே கொஞ்சமாக (சாம்பாரில் பெருங்காயம் + கருவேப்பிலை போல) சேர்க்கப்பட்டது.

    //ஐயா மருத்துவமனைக்கு அடிக்கடி மாமி துணையில்லாமல் தனியாக செல்லுவீர்களோ அதன் விளைவுதான் இந்த வர்ணணையோ??//

    நோ நோ ...அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது.

    ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டோம்.

    மேலும் இதுபற்றியெல்லாம் அவ்வப்போது என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நம்பிக்கைக்குரிய ஆசாமி என் அருகிலேயே இருக்க வேண்டுமே!

    அவங்களுக்குப்போக மிச்சம் மீதாரி தான் உங்களுக்கெல்லாம்.

    ஆனால் அவங்களுக்கு, இதிலெல்லாம், உங்கள் அளவு ரசிப்புத்தன்மை பத்தாது, ஸ்வாமி!

    அதுதான் எனக்கு கொஞ்சம் வருத்தம்.

    //மரகதம்மாள் கண்ணுக்கா அல்லது உங்கள் கண்ணுக்கா?//

    அடாடா, ரொம்பப் படுத்துறீங்களே, இப்படி!

    என் கதாபாத்திரங்கள் பற்றிய + இந்த தங்களின் கேள்விக்கான விளக்கங்கள் வரும் 31.12.2011 அன்று வெளியிடப்பட உள்ள என் 200 ஆவது பதிவில் ஓரளவுக்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    தாங்கள் கதையில் ரசித்த பல இடங்களைச் சுட்டிக்காட்டி, மிகப்பெரிய பின்னூட்டமாகக் கொடுத்துள்ளீர்கள்.

    என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  49. RAMVI said...
    //ஆனந்தம்,ஆனந்தமே! அருமையான முடிவு.//

    மிகவும் சந்தோஷம் + ஆனந்தம்.

    ***ரவிக்” மட்டுமே [’ரவிக்கை’ மைனஸ் ’கை’ = ரவிக்] அணிந்திருந்தனர். அதாவது எல்லோருமே மொத்தத்தில் முண்டா பனியன் கேஸ்கள் தான்.***

    //ஹா..ஹா.. சூப்பர்.//

    சூப்பரான பாராட்டுக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.


    ***இதுபோல புடவைத்தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொள்வதால் அவள் கழுத்தில் இன்று அணிந்து வந்துள்ள, டால் அடிக்கும் புத்தம் புதிய வைர நெக்லஸ், மற்ற பெண்மணிகளின் பார்வையிலிருந்து மறைவதில், மரகதத்திற்கும் கொஞ்சம் வருத்தமே!***

    //இது இன்னும் சிறப்பு..//

    யாருமே எழுதாத ஒரு கருத்தை தாங்கள் மட்டும் எடுத்துரைத்துப் பாராட்டியுள்ளதும், இன்னும் சிறப்பு தான். என் கூடுதல் நன்றிகள் ...உங்களுக்கு மட்டுமே. ;))))

    //கடைசி பகுதியை சோகமாக ஆரம்பித்து,நகைச்சுவையாக கொண்டு போய்,சுபமாக முடித்ததில் எல்லோருக்குமே ஆனந்தம்தான்....//

    தங்களின் மிகச்சிறப்பான பின்னுட்டத்தால் எனக்கும் ஆனந்தமே!
    மிக்க நன்றி, மேடம்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  50. சந்திரகௌரி said...
    //ஆனந்தம் ஆனந்தமே . எதுவும் சந்தோசமாக முடிந்தால் எல்லோருக்கும் நல்லதுதான்.//

    தாங்கள் எல்லாப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வருகை தந்து கருத்துக் கூறியுள்ளதில் எனக்கும் ஆனந்தம் + சந்தோஷமே.

    //இடையில் எப்படி எல்லோருடைய மனதையும் படித்தது போல் சொன்னீர்கள்.//

    31.12.2011 அன்று வெளியாக உள்ள என் 200 ஆவது பதிவில் இதற்கான பதில் ஓரளவு விளக்கப்பட்டிருக்கும்.

    // கதை அருமையாக முடிந்திருக்கிறது//

    மிகவும் சந்தோஷம்.

    //எப்போது அடுத்த தவிப்பை ஏற்ப்படுத்தப் போகின்றீர்கள்//

    எனக்கு எப்போது எழுத வேண்டும் என்ற தவிப்பு ஏற்படுகிறதோ, அப்போது தான்.

    அன்பான் தொடர் வருகை + கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள், மேடம்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  51. கீதா said...
    //உண்மை உணரும்வரை அதாவது மருத்துவமனையிலும் கூட தன் வைர அட்டிகையைக் காட்டி பகட்டான வாழ்க்கையைப் பறைசாற்றும் விதமாய் நடந்துகொண்ட மரகதம், மகனின் நாடகத்தையும், சுமதியின் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண்டபின், தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்து பணமல்ல, குணமே நல்வாழ்க்கைக்கு முக்கியம் என்பதையும் புரிந்துகொண்டு சுமதியை மருமகளாக்கிக்கொண்டது வெகு அழகு. //

    கதையை நன்கு ரசித்துப்படித்து, மரகதம் என்ற பணக்காரக் கதாபாத்திரத்தின் சுயரூபத்தையும், பிறகு அவளின் திடீர் மன மாற்றத்திற்கான காரணத்தையும் சரியாகப் புரிந்து கொண்டு, வெகு அழகாகச் சொல்லியுள்ள்ளீர்கள், மேடம். நன்றி.

    //தங்கள் நயமான, நகைச்சுவைகளும் முறுவல் எழுப்பி மனத்தை இலகுவாக்கின.//

    ரொம்ப சந்தோஷம், மேடம்.

    //இறுதியில் ஒரு கல்யாண விழாவுக்கே சென்றுவந்த மனநிறைவு கிட்டியது. பாராட்டுகள் வை.கோ.சார்.//

    தங்களின் அன்பான இந்த மிக நீண்ட பாராட்டுரை எனக்கு மிகுந்த உற்சாகம் + மனநிறைவு தருவதாக உள்ளது, மேடம்.

    மனமார்ந்த நன்றிகள், உங்களுக்கு.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  52. வெங்கட் நாகராஜ் said...
    //புத்தகத்தில் படித்ததற்கும் வலைப்பூவில் படித்ததற்கும் நிறைய வித்தியாசம்..

    சேர்க்கப்பட்ட விஷயங்களும் நன்று.

    ஒரு வழியாக சுமதி - சுந்தர் கல்யாணம் நடந்ததில் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே......//

    ஆமாம் வெங்கட், நான் உங்களிடம் நேரில் சொன்னேனே; புத்தகத்தில் வெளிவந்தவை யாவும், பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களால் பக்கத்தைக்குறைக்க வேண்டி EDIT செய்யப்பட்டவை. இந்த அவர்களின் செயல் எனக்குப் பிடிக்காததால் தான், நான் பத்திரிகைகளுக்கு எழுதுவதேயே கடந்த ஓராண்டாக சுத்தமாக நிறுத்திக்கொண்டு விட்டேன்.

    கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி, வெங்கட்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  53. கணேஷ் [INDIA] said...
    //மிகவும் ரசித்த கதையை சுபமான முடிவு தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். மிக ரசித்துப் படித்தேன்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், ரசித்து எழுதியுள்ள மறுமொழிக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

    //சுவைகளில் சிறந்தது நகைச்சுவை. படிப்பதன் மூலம் சிரிக்க வைப்பது அரிய கலை. வித்தகரான உங்களின் நகைச்சுவைக் கதைக்கு ஆவலுடன் வெயிட்டிங்....//

    இதுவரை வெளியிட்டுள்ள என்னுடைய பல கதைகளில் ஆங்காங்கே நகைச்சுவை என்ற பன்னீர் தான் தெளித்திருப்பேன்.

    தாங்கள் ஒரு நகைச்சுவை விரும்பி என்பது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

    ரொம்பவும் சந்தோஷம், ஐயா!

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  54. கணேஷ் [SOUDI ARABIA] said...
    //என்னை மன்னித்து விடுங்கள் அம்மா; நான் எடுக்கும் எந்த முடிவுக்கும் என் வீட்டில் யாரும் எப்போதும் மறுபேச்சோ, மறுப்போ ஏதும் சொல்ல மாட்டார்கள் //

    /இந்தக்கால பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் சுமதியின் கதா பாத்திரம் அமைத்துள்ளீர்கள்/

    உன் அன்பான வருகைக்கும், பெண்களுக்கு ஆதரவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, கணேஷ். நாம் அன்று பேசும்போது கதையில் ஒரு சிறு திருத்தம் சொன்னாய் அல்லவா! அதை சரிசெய்து விட்டேன், கவனித்திருப்பாய் என்று நினைக்கிறேன். இப்போ திருப்தியா என்று தெரிவிக்கவும்.


    /போன பகுதி கொஞ்சம் சீரியஸ் . நிறைவு பகுதி காமெடி கலந்த கலாட்டா கல்யாணம்./

    ஆமாம். நீ சொல்வது சரியே.
    இது போன்ற சுபமான முடிவுகளே பெரும்பாலான [பெண்] நேயர்களின் விருப்பமாக உள்ளது. அதனால் நானும் இனி சோகக்கதைகள் ஏதும் அதிகம் வெளியிடுவதாக இல்லை.

    //வருணனைகள் சிந்திக்க வைத்து சிரிக்க வைக்கின்றன .

    காரமான மிக்சரில் கொஞ்சம் இனிப்பு கலந்தது போன்று மிகச் சுவை.//

    ரொம்பவும் சந்தோஷம் கணேஷ்.

    --------------------------------

    இன்று மாமிக்கு மார்கழி உத்ராடம். ஜன்ம நக்ஷத்திரம். வாணப்பட்டரை மாரியம்மனுக்கு, நானும் அம்மாவும் போய் சேர்ந்து அபிஷேகம் செய்தோம். வெள்ளிக்கண்மலர்கள் 2 ஜோடி வாங்கி சாத்தினோம். பச்சைக்கலரில் அம்பாளுக்கு புடவை அம்மா வாங்கியிருந்தார்கள். சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம்.

    வழக்கம்போல் விடியற்காலம், காவிரியின் தென் கரையில் உள்ள ஆற்றங்கரை யோக நரசிம்ஹருக்கு, விசேஷ அர்ச்சனை + வெண் பொங்கல்
    பிரஸாதம். அதைப்பற்றி தனியே ஒரு பதிவிட தயார் நிலையில் உள்ளேன்.

    OK Ganesh, Thank you. Rest in our usual contact mails/chats.

    Yours affectionately,
    vgk

    பதிலளிநீக்கு
  55. இன்று மாமிக்கு மார்கழி உத்ராடம். ஜன்ம நக்ஷத்திரம். வாணப்பட்டரை மாரியம்மனுக்கு, நானும் அம்மாவும் போய் சேர்ந்து அபிஷேகம் செய்தோம். வெள்ளிக்கண்மலர்கள் 2 ஜோடி வாங்கி சாத்தினோம். பச்சைக்கலரில் அம்பாளுக்கு புடவை அம்மா வாங்கியிருந்தார்கள். சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம்./

    நம்ஸ்காரங்களும் வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
  56. வைர டாலர் டாலடிக்க B M W காரில் சீருடை அணிந்த டிரைவர் கார்க்கதவை திறக்க மரகதம் வந்திருந்தால் ஒரு கெட் அப்பாக இருந்திருக்குமே ஐயா..

    பதிலளிநீக்கு
  57. இராஜராஜேஸ்வரி said...
    //வைர டாலர் டாலடிக்க B M W காரில் சீருடை அணிந்த டிரைவர் கார்க்கதவை திறக்க மரகதம் வந்திருந்தால் ஒரு கெட் அப்பாக இருந்திருக்குமே ஐயா..//

    இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

    மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நான், மரகதம் ஆட்டோவில் போனதாக எழுதியது தவறு தான். I do fully agree with you, Madam.

    செல்வச்சீமாட்டியான உங்களுக்கு இது தோன்றியுள்ளதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

    மிகச்சாதாரணமானவனாகிய எனக்கு
    இது தோன்றாததிலும் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை தான்.



    வேண்டுமானால் இப்படி சமாதானம் செய்து கொள்ளலாம். மிகப்பெரிய பணக்காரியான மரகதம், தன் மகனுக்கும், கார் டிரைவருக்கும் கூடத் தெரிய வேண்டாம் என்ற நோக்கத்தில், சுமதியை சந்திக்க ஆட்டோ பிடித்துச் சென்றாள்.

    [கோயிலுக்குப்போய் வருகிறேன் என்று தன் மகனிடம் வேறு சொல்லியுள்ளார்களே!]

    However இந்த விஷயத்தில் தங்களின் மிக நுட்பமான அறிவை நான் மிகவும் மெச்சுகிறேன், மேடம். Thank you very much. vgk

    பதிலளிநீக்கு
  58. அண்ணே நான் கொஞ்ச நாளா மிஸ் பன்னிட்டேனே..கதை அருமை...!

    பதிலளிநீக்கு
  59. விக்கியுலகம் said...
    //அண்ணே! நான் கொஞ்ச நாளா மிஸ் பண்ணிட்டேனே..கதை அருமை...!//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, சார். எப்படியோ ஆனந்தம்! ஆனந்தம்!! ஆனந்தமே!!! ன்னு சுபமாக, பெண்கள் பாட்டுப்பாடுவதைக் கேட்க வந்ததில், அந்தப்பாட்டு போலவே நானும் ஆனந்தமடைகிறேன். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  60. இராஜராஜேஸ்வரி said...
    //வைர டாலர் டாலடிக்க B M W காரில் சீருடை அணிந்த டிரைவர் கார்க்கதவை திறக்க மரகதம் வந்திருந்தால் ஒரு கெட் அப்பாக இருந்திருக்குமே ஐயா..//

    தங்களின் அன்பான, ஆர்வமான, அசத்தலான இந்த ஆலோசனையை மனதார வரவேற்று, ஏற்றுக்கொண்டு, கதையில் இந்தப்பகுதியில், இன்று [28.12.2011] சிறிய மாற்றம் செய்து வெளியிட்டுள்ளேன்.

    தங்களின் மதிப்புமிக்க ஆலோசனைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  61. தேவதை கல்யாணம் ஆனந்தம்....ஆனந்தமே.

    பதிலளிநீக்கு
  62. சுபமாக முடிந்தது சந்தோஷம். இடையே வைத்தியசாலை வர்ணிப்பு.. சூப்பர். ;))

    பதிலளிநீக்கு
  63. மாதேவி said...
    தேவதை கல்யாணம் ஆனந்தம்....ஆனந்தமே.//


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  64. இமா said...
    சுபமாக முடிந்தது சந்தோஷம். இடையே வைத்தியசாலை வர்ணிப்பு.. சூப்பர். ;))

    சுபமாக முடிந்தது சந்தோஷம் என்றும் இடையே ஏதோவொரு வர்ணிப்பு சூப்பர் என்றும் என் ’இமா’ வே சொல்லி விட்டதில் எனக்கு சந்தோஷமே!

    மிக்க நன்றி, இமா. ;)))

    பதிலளிநீக்கு
  65. தேடி வந்த தேவதையை ஏற்கனவே பார்த்து படித்துவிட்டேன் சார்.
    இப்போதுதான் பின்னூட்டமிட முடிந்தது.

    ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் நிறுத்தி தொடரும் போட்டிருக்கிற இடங்கள் கொஞ்சம் படபடப்பையே உண்டு பண்ணியது.


    சுமதி - \\அழகு தேவதையாக ஒரு உருவம் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு\\


    மரகதம் - நளினி( படமே சொல்லிவிட்டது)

    சுந்தர் - \\கடந்த நான்கு நாட்களாக ஷேவிங் செய்துகொள்ளாமலும், ஆபீஸுக்கு போகாமலும், ஏதோ பித்துப்பிடித்தவன் போலக்\\

    ஒவ்வொருவரையும் வருணித்திருக்கும் விதம் அழகாக இருந்தது.

    \\தான் இந்த விஷப்பரீட்சையில் இறங்கினால், ஒருவேளை, தன் தங்கைகளையாவது நல்லபடியாகக் கரைசேர்க்க,ஏதாவது ஒரு வகையில், உதவியாகயிருக்குமோ என சிந்தித்தாள்.\\

    பொறுப்பான இந்தப் பெண் நிச்சயமாய் தேவதைதான் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும்.

    கதையும், கதைக்கான களமும் நன்றாக இருந்தது சார்.

    - நுண்மதி.

    பதிலளிநீக்கு
  66. nunmadhi said...
    //தேடி வந்த தேவதையை ஏற்கனவே பார்த்து படித்துவிட்டேன் சார்.
    இப்போதுதான் பின்னூட்டமிட முடிந்தது.

    ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் நிறுத்தி தொடரும் போட்டிருக்கிற இடங்கள் கொஞ்சம் படபடப்பையே உண்டு பண்ணியது.


    சுமதி - \\அழகு தேவதையாக ஒரு உருவம் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு\\


    மரகதம் - நளினி( படமே சொல்லிவிட்டது)

    சுந்தர் - \\கடந்த நான்கு நாட்களாக ஷேவிங் செய்துகொள்ளாமலும், ஆபீஸுக்கு போகாமலும், ஏதோ பித்துப்பிடித்தவன் போலக்\\

    ஒவ்வொருவரையும் வருணித்திருக்கும் விதம் அழகாக இருந்தது.

    \\தான் இந்த விஷப்பரீட்சையில் இறங்கினால், ஒருவேளை, தன் தங்கைகளையாவது நல்லபடியாகக் கரைசேர்க்க,ஏதாவது ஒரு வகையில், உதவியாகயிருக்குமோ என சிந்தித்தாள்.\\

    பொறுப்பான இந்தப் பெண் நிச்சயமாய் தேவதைதான் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும்.

    கதையும், கதைக்கான களமும் நன்றாக இருந்தது சார்.

    - நுண்மதி.//

    அன்பு மகள் நுண்மதியின் வருகையில் மட்டுமே சற்று தாமதம் என்றாலும், ரஸிப்புத்தன்மைகளும், அதை வெளிப்படுத்திய விதமும் அழகோ அழகு தான். என் மகள் நுன் மதி படைத்தவர் தான் என்பதை நிரூபித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கீறது.

    மிக்க நன்றி கெளரிலக்ஷ்மி!

    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  67. நல்லவேளை கதையை ஆனந்தமாகவே முடித்து விட்டீர்கள். யாரையும் கதாசிரியர் கொல்ல விரும்பவில்லை.

    பதிலளிநீக்கு
  68. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

    என்னுடைய ஒருசில தீவிர ரஸிகர்கள் + குறிப்பாக ரஸிகைகள், என் கதைகளில் கடைசியில் சுபமான ஆனந்தமயமான முடிவையே எப்போதும் எதிர்பார்க்கிறார்கள்.

    அதனால் சோக முடிவுடன் எழுதப்பட்ட, என்னுடைய ஒருசில கதைகளை நான் இதுவரை வெளியிடாமலேயே வைத்துள்ளேன்.

    அவ்வாறு என்னால் வெளியிடப்பட்ட ஒரே ஒரு கதையையும், பிறர் மனம் எந்த வகையிலும் வருத்தப்படக்கூடாது என்ற ஒரே காரணத்தினால், சுத்தமாக மாற்றிவிட்டேன்.

    ஒருநாள், இரவு 7 மணி சுமாருக்கு சற்றே சோகமான முடிவுடன் வெளியிட்ட அதனை, அரை மணி நேரத்திலேயே withdraw செய்து, பிறகு இரவு வெகு நேரம் தூங்காமல் அதன் CLIMAX ஐ, அடியோடு அப்படியே மாற்றி, விடியற்காலம் 3 மணிக்கு வெளியிட்டேன்.

    அந்தக்கதைக்கு மிகவும் நல்ல வரவேற்புகள் கிடைத்தன. அத்தனைப் பெண்மணிகளும் வெகுவாகப் பாராட்டியிருந்தனர்.

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    [அந்தக் கதையின் தலைப்பு: “அழைப்பு” இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_11.html பகுதி-1
    http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_11.html பகுதி-2

    அன்புடன்,
    vgk

    பதிலளிநீக்கு
  69. இந்த பாகம் தான் நிறைவு பகுதி என்பதானலயோ என்னவோ அண்ணா நிறைய ரசனையுடன் வர்ணனைகள் அள்ளி தெளித்து கோலமே போட்டிருக்கீங்களே அண்ணா....

    அருமையான ரசனையான வர்ணனை... சுந்தர் நோயாளி என்று பொய் சொன்னாலும் நல்லா ஃப்ரெஷ்ஷாக உடை உடுத்தி டிப்டாப்பாக இருப்பவன், சுமதியின் பாராமுகத்தால் ஏற்பட்ட மாற்றத்தால் உருமாறி தாடியுடன் பார்க்கவே சகிக்காத மரகதம் அம்மாள் மோதமொழங்க மரகதம் அம்மாள் உடனே ( இந்த இடத்தில் இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னது போல திருத்தம் செய்தது சிறப்பு.... ) ஆட்டோ பிடித்து கோயிலுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு.. அதென்ன ஒரு பக்கம் பிள்ளை பொய் சொல்றார் எய்ட்ஸ்ன்னுட்டு .. ஒரு பக்கம் அம்மா பொய் சொல்றார் சுமதிய பார்க்க போறதுக்கு கோயிலுக்கு போறேன்னுட்டு.....

    சுமதிய பார்க்க போறேன்னு தன்னுடைய பகட்டையும் பறைச்சாற்ற வந்துட்டாங்க அம்மா....

    அங்கே உலவிக்கொண்டிருந்த ஒருத்தரைக்கூட விடாம வர்ணனை செய்த பெருமை கதையாசிரியர் அண்ணாவையே சேரும் :-)

    சுமதி சுந்தருக்கும் மரகத்திற்கும் இடையே சங்கடங்கள் வரக்கூடாது என்று உண்மையையும் சொல்லாமல் தங்கள் மகனை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று சொன்னது மலைக்க வைத்தது....

    வீட்டுக்கு வந்த மரகதம் அம்மா விஷயத்தைச்சொல்ல ஒருவழியா தேங்காய் உடைப்பது போல ( லேட்டா உடைச்சிருக்கார் சுந்தர்) உண்மையை உடைச்சிட்டார்.. நல்லவேளை.... சுமதியின் மேலிருந்த மதிப்பும் உயர்ந்ததில் ஆச்சர்யமே இல்லை.. இப்படி ஒரு மருமகள் கிடைக்கும்போது வரதட்சணையாவது ஒன்னாவது....

    பணம் கிடைப்பது வரதட்சணை கிடைப்பது எளிது.. ஆனால் வாழ்க்கை நடத்தப்போவது இணைந்த இணையுடன்.. அந்த துணை தன்னை கண்ணின் மணியாக கண்விழியின் இமையாக காலமெல்லாம் தாய்மையுடன் பார்த்துக்கொள்ளும் அன்பு மனைவியாக கிடைப்பது தான் அரிது..

    அதை புரிந்துக்கொண்டார் மரகதம் வெகு லேட்டாவே.. சோ வாட்?

    சுபம்... கல்யாணம்... பேண்ட் வாத்தியம்.. நாதஸ்வரம்.. அமர்க்களப்படுத்திட்டீங்க அண்ணா.... சுந்தர் சுமதி கல்யாண வைபோகமே....

    சிறப்பாக ஒரு கல்யாணத்துக்கு போய் வந்த திருப்தி கதை படித்து முடித்தபோது....

    அன்புவாழ்த்துகள் அண்ணா தேடி வந்த தேவதை போல் ஒரு பெண் தான் தன் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று ஒவ்வொருவரும் வேண்டும்படி சுமதியின் காரக்டரை அத்தனை அருமையாக பிரதிபலித்தது தங்கள் வரிகள்...

    இப்படி ஒரு மருமகள் நமக்கு கிடைக்கமாட்டாளான்னு ஒவ்வொரு மாமியாரும் காத்திருப்பதில் வியப்பில்லை...

    பதிலளிநீக்கு
  70. மஞ்சுபாஷிணிNovember 22, 2012 2:44 AM

    வாங்கோ மஞ்சூஊஊஊஊஊ. வணக்கம். செள்க்யமாம்மா!

    //இந்த பாகம் தான் நிறைவு பகுதி என்பதனாலேயோ என்னவோ அண்ணா நிறைய ரசனையுடன் வர்ணனைகள் .....

    அள்ளி தெளித்து கோலமே போட்டிருக்கீங்களே அண்ணா.//

    அடடா, அப்படியா மஞ்சு. ரொம்ப சந்தோஷம்மா.

    அண்ணா போட்ட கோலம் நல்லாயிருக்காம்மா?

    //அருமையான ரசனையான வர்ணனை... //

    மஞ்சுவே சொன்னதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

    >>>>>>>>>>>>
    தொடரும்
    >>>>>>>>>>>>

    பதிலளிநீக்கு
  71. //சுந்தர் நோயாளி என்று பொய் சொன்னாலும் நல்லா ஃப்ரெஷ்ஷாக உடை உடுத்தி டிப்டாப்பாக இருப்பவன்,
    சுமதியின் பாராமுகத்தால் ஏற்பட்ட மாற்றத்தால் உருமாறி தாடியுடன் பார்க்கவே சகிக்காத //

    சுமதி என்றோ சுந்தர் என்றோ இல்லை மஞ்சு;

    உயிருக்குயிராகப் பழகினவங்க, நம் ஆழ்மனதில் நிறைஞ்சு போனவங்க நட்பாகவே இருந்தாலும்,
    நலம் விரும்பியாகவே இருந்தாலும், அதில் ஒருவர் இவ்வாறு திடீரெனப் பாராமுகமாக இருக்க ஆரம்பித்தால் அந்த மற்றொருவர் நிலைமை பரிதாபமாகவே ஆகிவிடும் தானே?

    தாடி மீசை வளர்ப்பது என்ன !

    உலகமே வெறுத்துப்போய் தற்கொலைக்கே கூட முயலலாம் அல்லவா !

    ஆழ்மனதில் ஒருவரைப்பற்றி நல்லெண்ணம் வேரூன்றி விட்ட பிறகு, அவர் பாராமுகமாக இருந்தால் அதை
    மறக்க என்னாலேயே முடியாமல் போய்ப்பாடாய்ப்படுத்துதே மஞ்சு.

    கதையில் வரும் ஓர் கற்பனைக் கதாபத்திரமான சுந்தர் எம்மாத்திரம்!

    >>>>>>>>>>>>

    பதிலளிநீக்கு
  72. //மரகதம் அம்மாள் மோதமொழங்க மரகதம் அம்மாள் உடனே ( இந்த இடத்தில் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னது போல திருத்தம் செய்தது சிறப்பு) ஆட்டோ பிடித்து கோயிலுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு.. அதென்ன ஒரு பக்கம் பிள்ளை பொய் சொல்றார் எய்ட்ஸ்ன்னுட்டு .. ஒரு பக்கம் அம்மா பொய் சொல்றார் சுமதிய பார்க்க போறதுக்கு கோயிலுக்கு போறேன்னுட்டு.

    சுமதிய பார்க்க போறேன்னு தன்னுடைய பகட்டையும் பறைச்சாற்ற வந்துட்டாங்க அம்மா....//

    //[இந்த இடத்தில் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னது போல திருத்தம் செய்தது சிறப்பு)//

    இது எப்படி மஞ்சு உங்களுக்குத்தெரிந்தது?

    ஓஹோ! பின்னூட்டங்கள் அத்தனையும் படிச்சிட்டீங்களோ!

    அதானே பார்த்தேன்!!

    மனதுக்குத் திருப்தியானவர், மனதுக்குத் திருப்தியாக ஓர் திருத்தம் சொன்னால், அதை அப்படியே கேட்டுக்கொண்டு திருத்தம் செய்துகொள்வது தானே அண்ணாவுக்கு அழகு!!!!!

    அவங்க ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்லவங்க, மஞ்சு.

    உங்க பாஷையிலே சொல்லணும்ன்னா

    “ஸ் வீ த் தோ .... ஸ் வீ த் த் த் த் து” மஞ்சு.

    அச்சு வெல்லம் தெரியுமா, மஞ்சு?
    சாப்பிட்டு இருக்கீங்களா?

    நான் சின்னப்பையனா இருக்கும் போது ஆசையா அப்படியே முழுசா அச்சு வெல்லத்தை அடிக்கடி வாயில் போட்டுக்கொண்டு, கன்னத்தில் உள்பக்கமாக அடக்கிவைத்துக்கொண்டு, அதன் தித்திப்பு ருசியை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து மகிழ்வேனம்மா!

    இவங்ககிட்டேயிருந்து என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டமெல்லாமே ஒவ்வொன்றும் எனக்கு ஒரு அச்சு வெல்லம் கிடைத்தாற்போலவே, நான் அகம் மகிழ்ந்து போவேன், மஞ்சு.

    இந்த “தேடி வந்த தேவதை” க்கு மட்டுமே, ஐந்து பகுதிக்கும் சேர்த்து [7+6+6+5+15=39] ஆக மொத்தம் 39 அச்சுவெல்லம் கொடுத்து அசத்தியிருக்காங்க, பாருங்கோ.

    >>>>>>>>>>>

    பதிலளிநீக்கு
  73. நான் 2011 நவம்பர் மாதம் தமிழ்மணத்திலே நட்சத்திரப்பதிவராக மின்னியதற்கும் இவங்க
    தான் காரணம் மஞ்சு.

    ”HAPPY இன்று முதல் HAPPY” போய்ப்படிச்சுப்பாருங்கோ, தெரியும்.
    இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

    என்னுடைய “நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்” கதையிலே வரும் சுகப்பிரும்ம மகரிஷி
    அவர்கள் பரீக்ஷித்து மஹாராஜா அவர்களுக்குச் சொன்ன பாகவத ஸப்தாகக் கதையில் எனக்கு ஏற்பட்ட
    அனைத்து சந்தேகங்களையும் “தகவல் களஞ்சியமாக” சொல்லி உதவியவர்கள் இவர்களே.

    அதற்கான இணைப்பு இதோ: பாருங்கோ: http://gopu1949.blogspot.in/2011/11/4-5.html.

    என்னுடைய முத்திரைக்கதைகளில் ஒன்றான “மறக்க மனம் கூடுதில்லையே” என்பதில் தலைப்புத் தேர்வு
    செய்யும் போது எனக்கு சற்றே குழப்பம் ஏற்பட்டு இவர்களின் உதவியை நான் நாடியபோது “மறக்க மனம் கூடுதில்லையே” என்றே இருக்கட்டும் எனச்சொல்லி என்னை உற்சாகப்படுத்தியவர்களும் இவர்களே.

    அதற்கான இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html

    [அந்த இவர்களின் காலத்தினால் செய்த உதவியை என்றும் என்னால் மறக்க மனம் கூடுதில்லையே]

    இதுவரை இவர்கள் எனக்களித்துள்ள பின்னூட்டம் என்ற ஆயிரக்கணக்கான அச்சு வெல்லங்கள் மட்டுமின்றி, எவ்வளவோ வேறு பல உதவிகள் மண்டைவெல்லம் போல செய்துள்ளார்கள், மஞ்சு.

    ஒவ்வொன்றையும் விரிவாக எடுத்துச்சொன்னால் வெல்லமண்டி போல நிறைய இடம் வேண்டுமே, மஞ்சு.

    இந்த இடம் அதெற்கெல்லாம் பத்தாதும்மா!

    என்னைப்பொறுத்தவரை இவங்கதான் எனக்கு எப்போதுமே

    "THE BEST"

    "THE GREATEST"

    "THE MOST BRILLIANT"

    and What Not ? மஞ்சு.

    >>>>>>>>>>>>>

    பதிலளிநீக்கு
  74. என்னுடைய எல்லாப்பதிவுகளையும் நீங்க படிச்சு முடிக்கும்போது ஜன்ம ஜன்மமாய்த் தொடர்ந்து வரும்
    எங்களின் பாசமும், நேசமும், உண்மையான நட்பும், நலம்விரும்புதலும் உங்களாலேயே உணர்ந்து கொள்ள
    முடியும்.

    ஆனாலும் என்னையும் உங்களையும் மாதிரி கலகலப்பா மனம்திறந்து லொடலொடான்னு
    இவங்க பேசமாட்டாங்கோ!

    சமத்தோ சமத்து !

    அழுந்தச் சமத்து !!

    நான் தினமும் எழுந்து கண் விழித்ததும், கம்ப்யூட்டரைத் திறந்து நேராக இவங்களோடப் பதிவுக்குத்தான் முதலில் போவேன்.

    ஒரு கோயிலுக்குப்போய் நேராக கர்ப்பக்கிரஹத்துக்கே போய் ஸ்வாமியையும் அம்பாளையும் கண் குளிர நிம்மதியாக தரிஸித்த திருப்தி ஏற்படும், எனக்கு. ;)))))).

    >>>>>>>>>>

    பதிலளிநீக்கு
  75. //அங்கே உலவிக்கொண்டிருந்த ஒருத்தரைக்கூட விடாம வர்ணனை செய்த பெருமை கதையாசிரியர்
    அண்ணாவையே சேரும் :-) //

    அடடா ! இதையும் ஒரு வரிகூட விடமா படிச்சிட்டு ரசிச்சிட்டு கருத்துக்கூறியுள்ள பெருமை, என் அன்புத்த்ங்[கம்]கை மஞ்சுவையே சேரும் ;)

    >>>>>>>>>>

    பதிலளிநீக்கு
  76. VGK to மஞ்சு [7]

    //சுமதி, சுந்தருக்கும் மரகத்திற்கும் இடையே சங்கடங்கள் வரக்கூடாது என்று உண்மையையும் சொல்லாமல் தங்கள் மகனை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று சொன்னது மலைக்க வைத்தது.//

    மலைக்க வைக்கும் அவளின் இது போன்ற குணத்தினாலேயே அந்தக்கதாபார்த்திரம் ஓர் தேவதை என தலைப்பிலேயே வர்ணிக்கப்பட்டுள்ளது.

    >>>>>>>>

    பதிலளிநீக்கு
  77. VGK to மஞ்சு [8]

    //வீட்டுக்கு வந்த மரகதம் அம்மா விஷயத்தைச்சொல்ல ஒருவழியா தேங்காய் உடைப்பது போல ( லேட்டா உடைச்சிருக்கார் சுந்தர்) உண்மையை உடைச்சிட்டார்.. நல்லவேளை.... சுமதியின் மேலிருந்த மதிப்பும் உயர்ந்ததில் ஆச்சர்யமே இல்லை.//

    கரெக்ட்டூஊஊஊஊ மஞ்சூஊஊஊஊ

    // இப்படி ஒரு மருமகள் கிடைக்கும்போது வரதட்சணையாவது ஒன்னாவது.//

    அதே! அதே!! சபாபதே !!!

    >>>>>>>>>>>

    பதிலளிநீக்கு
  78. VGK to மஞ்சு [9]

    //பணம் கிடைப்பது வரதட்சணை கிடைப்பது எளிது.. ஆனால் வாழ்க்கை நடத்தப்போவது இணைந்த
    இணையுடன்.. அந்த துணை தன்னை கண்ணின் மணியாக கண்விழியின் இமையாக காலமெல்லாம்
    தாய்மையுடன் பார்த்துக்கொள்ளும் அன்பு மனைவியாக கிடைப்பது தான் அரிது.. //

    கரெக்டா சொல்லிட்டீங்கோ, மஞ்சு ! ;)))))

    //அதை புரிந்துக்கொண்டார் மரகதம் வெகு லேட்டாவே.. சோ வாட்?

    சுபம்... கல்யாணம்... பேண்ட் வாத்தியம்.. நாதஸ்வரம்.. அமர்க்களப்படுத்திட்டீங்க அண்ணா.... சுந்தர் சுமதி

    கல்யாண வைபோகமே....

    சிறப்பாக ஒரு கல்யாணத்துக்கு போய் வந்த திருப்தி கதை படித்து முடித்தபோது....

    அன்புவாழ்த்துகள் //

    ரொம்பவும் சந்தோஷம், மஞ்சு.

    >>>>>>>>>>>>>>>

    பதிலளிநீக்கு
  79. VGK to மஞ்சு [10]

    //அண்ணா, தேடி வந்த தேவதை போல் ஒரு பெண் தான் தன் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று ஒவ்வொருவரும் வேண்டும்படி சுமதியின் காரக்டரை அத்தனை அருமையாக பிரதிபலித்தது தங்கள் வரிகள்.//

    ;)))))) ரொம்பவும் மகிழ்ச்சி, மஞ்சு....

    //இப்படி ஒரு மருமகள் நமக்கு கிடைக்க மாட்டாளான்னு ஒவ்வொரு மாமியாரும் காத்திருப்பதில் வியப்பில்லை...//


    காத்திருங்கோ, வருங்கால மாமியார்
    மஞ்சு அவ்ர்களே!

    சுமதி போல ஒன்றல்ல இரண்டு மருமகள்கள் வரப்போகிறார்கள், உங்களுக்கும்.

    அன்பான வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த
    மகிழ்ச்சிகள் மஞ்சு.


    பிரியமுள்ள
    கோபு அண்ணா.

    பதிலளிநீக்கு
  80. கருத்துக்கு கருத்தா அண்ணா...

    அனைத்தும் வாசித்தேன்... அன்புநன்றிகள் அண்ணா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி November 24, 2012 4:02 AM

      //கருத்துக்கு கருத்தா அண்ணா...

      அனைத்தும் வாசித்தேன்... அன்பு நன்றிகள் அண்ணா....//

      ”பாராமுகம்” என்ற வார்த்தை நான் COPY RIGHT வாங்கி வைத்துள்ள ஓர் வார்த்தை மஞ்சு.

      நான் மட்டுமே அதுவும் குறிப்பிட்ட ஒருவரிடம் மட்டுமே உபயோகித்து வந்த வார்த்தை அது.

      அதை நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் உபயோகித்ததும், நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன், மஞ்சு.

      அதனாலேயே உங்களின் ஒரு பின்னூட்டத்திற்கு நேற்று இரவு 10 மறுமொழிகள் [பதில் கருத்துக்கள்] கொடுக்கும் படியாகிவிட்டது.

      அனைத்தையும் வாசித்தேன் என்று சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ;)))))

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

      ஊசிக்குறிப்பு:

      என்னுடன் ஒருசில மாதங்களாக, உங்களைப்போலவே அதிக அன்புடன் பழகிவரும் அதிரா [நான் வைத்துள்ள பெயர்: அதிரடி அதிரா] இந்த COPY RIGHT என்பதை தன் “கொப்பி வலது” என்பாள்.

      அவளின் கொப்பி வலது வார்த்தைகள் ஏராளமாக உள்ளன.

      பின்குறிப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வதை ”ஊசிக்குறிப்பு” என்பாள்.

      கேட்டால் அது என் கொப்பி வலது என்பாள்.

      ஒரே சிரிப்பு தான் அவங்களுடன்.

      VGK

      நீக்கு
  81. மோதமொழங்க ‘கும்’ என்றிருக்கும் ஆசாமியல்லவா நம் மரகதம் அம்மாள்!//

    வர்ணனையெல்லாம் பிரமாதம்.

    எதை சொல்லுவது, எதை விடுப்பது என்று தெரியவில்லை.

    உங்க ரசிகர் பட்டாளத்தோட எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் கூடிக் கொண்டே போகும் போல இருக்கே.

    HIGHLIGHT:
    1. கதை, சுவாரசியமாக கதை சொல்லிய விதம்
    2. படங்கள்.
    3. வர்ணனை
    4. முன் கதை.

    MISSING
    ஒண்ணே ஒண்ணு தான் - சீர் வரிசை, பட்சணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI January 4, 2013 2:25 AM

      //மோதமொழங்க ‘கும்’ என்றிருக்கும் ஆசாமியல்லவா நம் மரகதம் அம்மாள்!

      வர்ணனையெல்லாம் பிரமாதம். எதை சொல்லுவது, எதை விடுப்பது என்று தெரியவில்லை.//

      ஏதேதோ சொல்லத்தான் நினைக்கிறீர்கள். புரிகிறது, அதனால் பரவாயில்லை. உங்களிடமிருந்து நானும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது. தங்களின் சுருக்கமான கருத்துக்களும் பிரமாதமாகவே உள்ளது.

      >>>>>>>>>>>

      நீக்கு
    2. கோபு >>>> திருமதி ஜயந்தி [2][

      //உங்க ரசிகர் பட்டாளத்தோட எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் கூடிக் கொண்டே போகும் போல இருக்கே.//

      ஆமாம் மேடம். எனக்கு ரசிகர்கள் சற்றே அதிகம் தான். நான் ஒரு மிகப்பெரிய நீண்ட ரயில் வண்டி போல. இதில் என்னுடன் பலரும் பல காலக்கட்டங்களின் பயணித்துள்ளனர். அவர்களில் சில வாடிக்கையாளர்கள், பல்வேறு காரணங்களால், அவர்களின் மாறுபட்ட குடும்பச் சூழ்நிலைகளால், இப்போது என் வண்டியில் பயணம் செய்ய அதிகமாக வருவது இல்லை.

      எப்போதுமே என்னுடைய ரயிலில் பயணம் செய்து கொண்டே இருக்கவா முடியும்?

      அனைவருக்கும் குடும்பப்பொறுப்புகள், குழந்தைகள் இட மாற்றங்கள் வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள் என ஆயிரம் விஷயங்களையும் கவனிக்க வேண்டியுள்ளதே! உங்களுக்குத் தெரியாததா?

      தங்களைப்போலவே என்னுடன் மிகுந்த பாசம் வைத்து ஏற்கனவே பழகியவர்களும், இப்போது பழகி வருபவர்களும் நிறைய பேர்கள் உண்டு. அவர்களே மிகப்பெரிய ரயில் வண்டியாகிய என்னுடைய ரயில் எஞ்சினை இயக்கியவர்கள் / இயக்கி வருபவர்கள்.

      அவர்களெல்லாம் தனிச்சிறப்பானவர்கள். இதே பதிவினில் என் அன்புத்தங்கை மஞ்சுவுக்கு நான் எழுதியுள்ள பின்னூட்ட பதிலில் கூட ஒரு முக்கியமானவரைப்பற்றி கொஞ்சூண்டு சுட்டிக்காட்டியுள்ளேன்.

      மற்றவர்கள் எல்லோரும் அவ்வப்போது ரயில் பெட்டிகளில் ஏறி இனிமையாக பயணம் மேற்கொண்டு அவரவர் இடம் வந்ததும் இறங்கிச்செல்வோர். புதிதுபுதிதாக யார்யாரோ அவ்வப்போது ரயிலில் தொத்தி ஏறுவார்கள் பிறகு இறங்குவார்கள்.

      உங்களுக்கும் இதுபோன்ற பல சுவையான அனுபவங்கள் பதிவுலகில் விரைவில் கிடைக்கக்கூடும். ஆனால் யாரும் எதுவும் சாஸ்வதம் இல்லை. நிரந்தரமும் இல்லை என்பதை மட்டும் நாம் மறந்துவிடக்கூடாது.

      என்னிடம் அன்போடு பழகுபவர்களிடம் நானும் அன்போடு பழகுவது உண்டு. என்னிடம் உரிமை எடுத்துக் கொள்பவர்களிடம் நானும் உரிமை எடுத்துக்கொள்வதுண்டு.

      நான், ஒவ்வொருவர் தரும் பின்னூட்டத்திற்கும் அநேகமாக பொறுமையாக பதில் தருவேன். அதை தாங்களும் கவனித்திருக்கலாம்.

      அவற்றைத் தொடர்ச்சியாக தாங்கள் உற்று நோக்கினாலே நான் ஒவ்வொருவரிடமும் வைத்திருக்கும் ந்ம்பிக்கையையும், வாத்சல்யத்தையும், நட்பையும் ஓரளவுக்குத் தங்களால் சுலபமாக எடை போட்டு அடையாளம் காண முடியும்.

      சில பெண்மணிகளை மட்டும் நான் திருமதி என்று ஆரம்பத்திலும் மேடம் என்று முடிவிலும் அழைப்பது இல்லை.

      இவர்களில் சிலர் மட்டும் இன்னும் திருமணமே ஆகாத இளம் வயது பெண்கள். சிலர் நடுத்தர வயதான 30 to 45 க்குள் இருப்பவர்கள், சிலர் 45 to 55 க்குள் உள்ளவர்கள்.
      வேறு சிலர் 55 வயதையும் தாண்டி என் சமவயதே கூட உள்ளவர்கள்.

      இவர்கள் எல்லோருமே தங்களை வெறும் பெயர் மட்டுமே சொல்லி அழைக்க வேண்டும் என்று தங்கள் மெயில் மூலம் எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளவர்கள்.

      எல்லோரையுமே மிகுந்த மரியாதையுடன் அழைத்து வந்த எனக்கு, ஆரம்பத்தில் இவ்வாறு இவர்களின் பெயர்களை மட்டும் நினைவில் வைத்து, வெறும் பெயர் மட்டும் சொல்லி, இவர்களை மட்டும் அழைப்பதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது. மறந்து போய் மரியாதை கொடுத்து அழைத்து இவர்களின் கோபத்திற்கு ஆளானதும் உண்டு.

      பிறகு நாளடைவில், அவர்களின் தொடர்ந்த Contacts மூலம் மட்டும், எனக்கு இது பழகிப்போனது.

      இதுபோல பல்வேறு நட்புகள். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம். ஒவ்வொருவரின் அன்பும் ஒவ்வொரு விதம். எல்லோரிடமும் தூய்மையான அன்பு ஒன்றே அடிப்படை.

      என்னிடம் தனி உரிமை எடுத்துக்கொண்டு ஸ்வாதீனமாக எதைப்பற்றியும் கலந்து ஆலோசிப்பவர்களும், தங்களின் குடும்ப வாழ்க்கை முதலியனவற்றைப் பகிர்ந்து கொள்பவர்களும் அதிகம் தான்.

      பொதுவாக எல்லோருக்கும் ஆறுதலாகப் பொறுமையாக பதில் அளிப்பது என் வழக்கம். அதுபோல எனக்கு என் ஒருசில சாதாரண உடல்நிலைப் பிரச்சனைகளுக்கு சற்றே ஆறுதல் சொல்பவர்களும் நிறைய பேர்கள் உள்ளனர்.

      இத்தனைக்கும் எனக்கே உள்ள தீர்க்க முடியாத, தீர்வு தெரியாத, விட்டும் விலக்க முடியாத, நானும் விலக முடியாத, என் பிரத்யேகப் பிரச்சனைகள் என்னவென்றே அவர்கள் யாருக்குமே நான் இதுவரை சொன்னதும் இல்லை. என் கஷ்டங்களை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்வது இல்லை. என்னுடைய ஜாலியான நகைச்சுவையான நினைவுகளை மட்டுமே என் பதிவுகள் மூலம் நான் எழுதி, பிறருக்கு மகிழ்ச்சியளிப்பது உண்டு.

      >>>>>>>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> திருமதி ஜயந்தி [ 3 ]

      உதாரணமாக .. ”மூன்றாம் சுழி” என்ற வலைத்தளத்தில் எழுதிவரும் திரு, அப்பாதுரை அவர்களை பதிவுலகத்தில் தெரியாதவர்கள் யாரும் அநேகமாக இருக்க முடியாது.

      இந்த என் பதிவுக்குக்கூட அவர் ஒரு கருத்து [பின்னூட்டம்] எழுதியுள்ளார். அவர் சிகாகோவில் இருப்பவர். நேற்று 04.01.2013 வெள்ளிக்கிழமை மதியம் என்னுடன் அலைபேசியில் முதன்முதலாகப்பேசினார்.

      “சார், உங்களை நேரில் சந்திக்க அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்கள் வீட்டுக்கு வர விரும்புகிறேன். உங்களுக்கு சம்மதமா ..... செளகர்யப்படுமா”
      என்று கேட்டார்.

      எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவரை நேற்று என் வீட்டுக்கு அழைத்து வந்தவர் ஏற்கனவே இருமுறை என்னை என் வீட்டில் சந்தித்துச்சென்றுள்ள டெல்லியில் இருக்கும் வெங்கட் நாகராஜ் ஜீ என்ற பதிவர் தான்.

      மிகச்சரியாக 4.30 க்குவந்தார்கள் ஆசை தீர ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

      நான் உபசாரம் செய்த ஸ்வீட், காரம், கூல் ட்ரிங்ஸ் முதலிய்வற்றை வேண்டாம் என்று மறுத்துவிட்டு, ஸ்ட்ராங்க் காஃபி மட்டும் எடுத்துக்கொண்டு பருகினார்கள்.

      பிறகு உத்தரவு வாங்கிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

      இத்தனைக்கும் இந்த திரு. அப்பாதுரை அவர்கள் எழுதி வரும் பதிவுகளை நான் எப்போதாவது படிப்பேனே தவிர நான் என் பின்னூட்டங்களை அவருக்கு அளித்ததாக எனக்கு ஞாபகமே இல்லை.

      ஏதாவது ஓரிரு முறை நான் 2011 இல் அளித்திருக்கலாம்.

      அவர் என் பதிவுகளுக்கு அவ்வப்போது வருகை தந்து பின்னூட்டம் கொடுத்துள்ளது தான் ஒப்பிட்டுப்பார்த்தால் மிக அதிகமாக இருக்கும்.

      ஏதோ அவருக்கும் என் மீது இவ்வளவு அன்பு. நேரில் சந்தித்துப்பேச வேண்டும் என என் வீடு தேடியே வந்திருக்கிறார்.

      வெளிநாட்டிலிருந்து இது போல என் வீடு தேடி என்னை சந்திக்க வந்துள்ள முதல் ஆண் பதிவர் இவர் மட்டுமே.

      ஏற்கனவே நம் அன்புக்குரிய திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களை இதுபோல நான் என் இடத்தில் சந்தித்துள்ளேன்.

      எழுத்துலக ... வலையுலக நட்பு என்பது இதுபோல மிகவும் மகிழ்ச்சியளிப்பது. விலைமதிப்பிட முடியாதது என்பதைத் தங்களுக்குச் சொல்வதற்காகவே இதை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

      இதுபோல என்னை என் வீட்டுக்கே நேரில் வருகை தந்து இனியும் காண விரும்புவதாக விருப்பம் தெரிவித்திருப்போர் எண்ணிக்கையும் மிக அதிகமாகவே உள்ளன.

      //உங்க ரசிகர் பட்டாளத்தோட எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் கூடிக் கொண்டே போகும் போல இருக்கே.//

      என்ற தங்களின் கேள்விக்கு ஓரளவு பதில் அளித்து விட்டேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      >>>>>>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> திருமதி ஜயந்தி [4]

      //HIGHLIGHT:
      1. கதை, சுவாரசியமாக கதை சொல்லிய விதம்
      2. படங்கள்.
      3. வர்ணனை
      4. முன் கதை.//

      மிகவும் சந்தோஷம் மேடம். அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்ற்கள்.

      //MISSING
      ஒண்ணே ஒண்ணு தான் - சீர் வரிசை, பட்சணம்//

      கோச்சுக்காதீங்கோ சம்பந்தி மாமி. எவ்வளவு வேண்டுமோ கேளுங்கோ 31 அல்ல 51 அல்ல 101 அல்ல. வகைக்கு 1001 ஆகவே, சீர் வரிசை பட்சணங்க்களை வைத்து அசத்தி விடுகிறேன். கவலை வேண்டாம்.

      உங்களை சம்பந்தியாக நான் அடைய மிகவும் கொடுத்து வைத்திருக்கணும் ..... அடுத்த ஜன்மத்திலாவது. ;)))))

      பிரியமுள்ள
      கோபு
      -oOo-

      நீக்கு
  82. போன பகுதியிலேயே நானும் இப்படித்தான் இருக்கும்னு ஊகம் பண்ணிட்டேன். ஆனா அதை நீங்க சொல்லி இருந்தவிதம் சுவாரசியம். மரகதம்மாவின் குண நலன் சுந்தரின் மனம், சுமதியின் மனம் என்று ஒவ்வொருவரின் குண நலன் களையும் சொல்லிச்சென்றவிதம் இதுபோல எழுத நிறைய எழுத்துத்திறமையும் கற்பனை வளமும் இருந்தால்தான் சாத்தியம்.அதெல்லாம் உங்க கிட்ட நிறையாவே அமைஞ்சிருக்கு. கதை ரொம்ப நல்லா இருந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் January 18, 2013 at 7:06 AM

      //போன பகுதியிலேயே நானும் இப்படித்தான் இருக்கும்னு
      யூ க ம் பண்ணிட்டேன்.//

      நீங்க என்ன என்னைப்போல சாதாரணமானவரா? மிகவும் யூகம் உள்ள ஆசாமியல்லவோ! அதனால் தான் உங்களால் இதை யூகம் செய்ய முடிந்துள்ளது.

      வலைப்பதிவு ஆரம்பித்து 19 நாட்களில், 9 பதிவுகள், 35 பின்தொடர்பவர்கள், இரண்டு முறை வலைச்சரத்தில் அறிமுகம் என்றால் சும்மாவா பின்னே! ;)))))

      //ஆனா அதை நீங்க சொல்லி இருந்தவிதம் சுவாரசியம். மரகதம்மாவின் குணநலன், சுந்தரின் மனம், சுமதியின் மனம் என்று ஒவ்வொருவரின் குணநலன்களையும் சொல்லிச் சென்றவிதம், இதுபோல எழுத நிறைய எழுத்துத்திறமையும் கற்பனை வளமும் இருந்தால்தான் சாத்தியம். அதெல்லாம் உங்க கிட்ட நிறையவே அமைஞ்சிருக்கு.//

      உங்களிடமும் இதைவிட அதிகமாகவே கற்பனை வளமும், எழுத்துத்திறமையும் இருக்கக்கூடும் என்பது என் நம்பிக்கை.

      அவற்றை வெளிக்கொணர மட்டுமே தான் நானும் உங்களை உற்சாகப்படுத்தி கருத்துக்கள் கூறிவருகிறேன்.

      //கதை ரொம்ப நல்லா இருந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.//

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள
      கோபு

      நீக்கு
  83. இனிதாக திருமனம் முடிந்தது மகிழ்ச்சியே,
    சுமதி மரகதம்மாளிடம் உண்மையைச் சொல்வாள் என்று நினைத்தேன். பரவாயில்லை சுமதி மேல் இருந்த மதிப்பு இன்னும் கூடுகிறது. சுந்தர் உண்மையைச் சொல்லி திருமனம் முடிந்தது சுபம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran May 4, 2015 at 2:16 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இனிதாக தி ரு ம ண ம் முடிந்தது மகிழ்ச்சியே,
      சுமதி மரகதம்மாளிடம் உண்மையைச் சொல்வாள் என்று நினைத்தேன். பரவாயில்லை சுமதி மேல் இருந்த மதிப்பு இன்னும் கூடுகிறது. சுந்தர் உண்மையைச் சொல்லி
      திரும ண ம் முடிந்தது சுபம்.//

      இந்த என் சிறுகதையின் அனைத்து ஐந்து பகுதிகளையும் ’தேடிவந்த தேவதை’யாகவே தாங்களும் ஓடிவந்து இன்று ஒரே நாளில் படித்துவிட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் அழகாக பொறுமையாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.

      நீக்கு
  84. நல்லபடியா யாரு மனமும் நோகாதபடிக்கு நிக்காஹ் நடந்திச்சே.

    பதிலளிநீக்கு
  85. மரகதம் அம்மா காலி பெருங்காய டப்பா போல. ஆரம்பத்துல வசதியா இருந்தவங்க கொஞ்சம் நிலமை மாறினாலும் தளர்ந்து போயிடறாங்க. ஆபீசுல அவங்க சுமதிய பாக்க தானே வந்தாங்க அந்த இடத்திலும் அங்க வேலை பண்ணும் இள வயது பெண்களை என்னமா வர்ணிச்சிருக்கீங்க. எப்படியோ சுமதியின் நல்லமனதையும் மகனின் நாடகத்தையும் ருரிந்து கொண்டு நல்ல முடிவாகவே எடுத்திருக்காங்க.

    பதிலளிநீக்கு
  86. னக்கு ஆதாயம் இருப்பினும், தன் மகன் தன்னிடமே பொய் சொன்னதைப் பொறுத்துக் கொள்ள மனமின்றி, கொஞ்சமும் சுயநலமில்லாமல், துணிச்சலுடன் நடந்து கொண்ட சுமதியே, தனக்கு ஏற்ற மிகச்சிறந்ததொரு மருமகளாக இருக்க முடியும் என்று பேரானந்தப்பட்டாள் மரகதம்./// உண்மையிலேயே விளம்பரத்தைப்பார்த்து தேடிவந்தவள் - தேவதையேதான்...



    பதிலளிநீக்கு
  87. //மருத்துவமனை வர்ணனைகள் , திருப்பங்கள், சுபமாய் முடிந்தது எல்லாம் அருமை! நாமும் வாழ்த்துவோம்! படங்கள் மிக அருமை!

    பதிலளிநீக்கு