என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 5 நவம்பர், 2012

SWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]



S W E E T   S I X T E E N  
[இனிப்பான பதினாறு]

பதினாறு என்பது ஒரு மிகச்சிறப்பான 
எண்ணாகச் சொல்லப்படுகிறது. 

இளமையைக் குறிக்க 

‘ஸ்வீட் சிக்ஸ்டீன்’ 

என்கிறார்கள். 

அது ஒரு அறிந்தும் அறியாத 
புரிந்தும் புரியாத 
அற்புதமான பருவமே.

குட்டியூண்டு நொங்கு, 
வழுக்கையான இளநீர் 
போன்ற மிகவும் டேஸ்ட் ஆன 
பக்குவமான பதமான 
ஓர் அரிய பருவம். 

போனால் திரும்ப 
வரவே வராத வயது.

உடல் அளவில் முதிர்ச்சி 
ஏற்பட்டிருந்தாலும் 
18 வயது ஆனாலே 
சட்டப்படி மேஜர் 
என்று சொல்லுகிறார்கள்.  

’ஸ்வீட்ஸ்’ களிலும்
அதுபோல பலவிதமானவை உண்டு.

 ஒவ்வொன்றும் ஒவ்வொரு 
விதமான ருசிதான்.

அதிலும் மில்க் ஸ்வீட் எனப்படுபவை 
மிகவும் ருசியோ ருசிதான்.

இதோ இந்தாங்கோ 

’ஸ்வீட் சிக்ஸ்டீன்’

உங்களுக்குப்பிடிச்சதை 
நீங்களே எடுத்துக்கோங்கோ.

அதன் பிறகு  
இந்தப்பதிவினில் 
சொல்லவந்த 
முக்கியமான சமாசாரத்தை 
நான் சொல்லி விடுகிறேன். 


   

  

  



    




 

 


”ஸ்வீட் சிக்ஸ்டீன்” எல்லாவற்றையும் எல்லோரும் ருசி பார்த்தீங்களா?

அவற்றில் மில்க் ஸ்வீட் தானே மிகவும் ருசியாக இருந்திச்சு! 

இந்த மில்க் [அதாங்க ... பால்] நமக்கு எங்கேயிருந்து கிடைக்குதுன்னு நாம் யோசிப்போமா?.

பொதுவாக நாம் பெரும்பாலும் மாட்டுப் பாலைத்தான் உபயோகிக்கிறோம்.

அந்த மாடுகளிலும், நமக்கு பால் தருவனவற்றில் பசு மாடு, எருமை மாடுன்னு இரண்டு இனங்கள் உள்ளன. 

ஒரு பேருந்து ஓட்டுனர் ஹாரன் அடிச்சுக்கிட்டே இருந்தார். நம்மாளு ஒருத்தர் நடு ரோட்டிலே போகிறவர் கொஞ்சமும் நகருவதாகவோ ஒதுங்கிப்போவதாகவோ தெரியவில்லை. கோபம் வந்த ஓட்டுனர் “சுத்த எருமைமாடா இருக்கானே” எனப் புலம்பினாரு. 

அந்த நம்மாளுக்கு காது ஒரு வேளை சுத்தமா கேட்கவில்லையோ அல்லது தினமும் எருமைப்பாலையே, குடிப்பதால் இதுபோல நகராமல் எருமை போலவே சண்டித்தனம் செய்கிறாரோ என்னவோ? பாவம் என நான் என் மனதில் நினைத்துக்கொண்டேன்.

எருமைப்பாலைவிட பசும்பால் மிகவும் ஒஸத்திதாங்க. அது தாய்ப்பால் மாதிரி புனிதமானதுன்னு கூட சொல்லுவாங்க.  பசுவே புனிதமான பிராணி தானே! 

சரிங்க இப்போ நான் இந்தப்பதிவிலே சொல்லவந்த விஷயத்துக்கு சட்டுபுட்டுன்னு வந்துடறேனுங்க!  கோச்சுக்காதீங்க.


சத்தியம் நீயே! தர்ம தாயே!! 
குழந்தை வடிவே! தெய்வ மகளே!!




11.11.2012 ஞாயிறு
கோ வத்ஸ துவாதஸி

ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதஸிக்கு [தேய்பிறை 12 ஆம் நாள்] கோவத்ஸ துவாதஸி என்று பெயர்.  பிரும்மா, விஷ்ணு, சிவன், அம்பாள் முதலான அனைத்து தேவர்களும் பசுமாட்டின் உடலில் வாஸம் செய்கிறார்கள். 

இன்று [அதாவது 11.11.2012 ஞாயிறு அன்று] கன்றுக்குட்டியுடன் கூடிய பசுவை பூஜை செய்ய வேண்டும். 

”கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி” என்று சொன்னாலே நம் மனதுக்கு எவ்வளவு சந்தோஷமாக உள்ளது பாருங்கோ. நமக்குப் பிரியமானவர்களை நாம் இப்படித்தானே அழைப்போம்!

பசுவைக்குளிப்பாட்டி, மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்களால் அலங்கரிக்கச்செய்து வைக்கோல், புல், அரிசி களைந்த நீர், கடலைப்புண்ணாக்கு, பருத்திக்கொட்டை முதலியவற்றை அதற்கு ஆகாரமாகத் தந்து, விரிவாக பூஜிக்க வேண்டும். 

குறிப்பாக “கன்னுக்குட்டி என் செல்லக் கன்னுக்குட்டி” யை தன் இஷ்டப்படி பசுவிடம் பால் குடிக்குமாறு செய்ய வேண்டும்.

                               


11.11.2012 ஞாயிறு ஒரு நாள் மட்டும், நாம் நம் உபயோகத்திற்காகவோ, பிறரிடம் வியாபாரம் செய்யவோ பசும்பால் கறப்பதை தவிர்த்தல் நல்லது..   

கோ3க்ஷீரம் கோ3க்4ருதம் சைவ த3தி4 தக்ரம் ச வர்ஜயேத் 
[நிர்ணய - 147] 

என்பதாகச் சொல்லப்படுகிறது. 
ஆகவே இன்று ஒருநாள் மட்டும் 
பசும்பால், பசுநெய், பசுந்தயிர், பசுமோர் 
சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும்.   


 இன்று பசுவை பூஜை செய்து கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி பசுமாட்டுக்கு புற்கள், மற்றும் அஹத்திக்கீரைக்கட்டு 
தருவது மிகவும் விசேஷமாகும்..


ஸுரபி4 த்வம் ஜக3ந்மாதர் தே3வி விஷ்ணுபதே3 ஸ்தி2தா !
ஸர்வ தே3வ மயே க்3ராஸம் மயாத3த்த மிமம் க்3ரஸ !!



கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி பசுவை வேண்டிக்கொள்ள வேண்டும்.

ஸர்வதே3வ மயே! தே3வி! ஸர்வ தே3வைஸ்ச ஸத்க்ருதா !
மாதர் ! மமா[அ]பி4லஷிதம் ஸப2லம் குரு நந்தி3னி !!

பிறகு முடிந்தால் பசுமாட்டின் 
கழுத்துப்பகுதியை 
சொறிந்து கொடுக்கலாம்.

”கோகண்டூயனம்” 

என்னும் இந்தச்செயல் மஹாபாவத்தையும் போக்கக்கூடியது. மிகப்பெரும் புண்ணியத்தைத்தரக்கூடியது.

11.11.2012 அன்று பசுவை நாம் நமஸ்காரம் செய்ய வேண்டும்.
இதனால் குடும்பத்தில் அழியாச்செல்வமும், மங்களமும் உண்டாகும்.






கோமாதா எங்கள் குலமாதா !

அதுபோலவே பசுவை வழிபட
21.11.2012 புதன் கிழமையன்று
கோபாஷ்டமீ [அல்லது] கோஷ்டாஷ்டமி
எனப்படும் விசேஷமான திருநாளாகும்.


கார்த்திகே யாஷ்டமீ சுக்லா க்ஞேயா கோ3பாஷ்டமீ பு3தை4:!
தத்ர குர்யாத் க3வாம் பூஜாம் கோ3க்3ராஸம் கோ3ப்ரதக்ஷிணம்!!

என்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமி திதிக்கு 
[வளர்பிறை 8 ஆம் நாள்] 
கோபாஷ்டமி” 
அல்லது 
“கோஷ்டாஷ்டமீ” 
எனப்பெயர்.

இந்த நாளில் [21.11.2012 புதன்கிழமை] கன்றுக்குட்டியுடன் கூடிய பசுமாட்டை பூஜை செய்து அஹத்திக்கீரை, புல் முதலியவற்றை சாப்பிடக் கொடுத்து, ஜலமும் குடிக்கச்செய்து, பக்தியுடன் பசுவை 16 முறை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்க  வேண்டும்.

இதனால் அனைத்து தெய்வங்களின் அருளும் கிட்டும்.

பாபங்களும் விலகும் என்கிறது மாத்ஸ்ய புராணம்.  



பெரும்பாலும் நகர்புறப்பகுதிகளில் 
அதுவும் அடுக்குமாடிக்குடியிருப்புகளில் 
இன்று வாழும் நமக்கு 
கன்றுடன் கூடிய பசுவைப்பார்ப்பது 
என்பதே மிகவும் அரிதானதோர் செயலாகும். 

அந்தக்குறையைப் போக்கவே 
இங்கு நிறைய பசுக்களும் கன்றுகளுமாகப் 
படத்தில் காட்டியுள்ளேன்.



 





அனைவருக்கும் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்

என்றும் அன்புடன் தங்கள்
VGK


191 கருத்துகள்:

  1. சகலவித இனிப்புகளுடன் தீபாவளிக்கு பிறகு வரும் கோ வத்ச துவாதசி சிறப்புகளை மிக அழகாய் படங்களுடன் பகிர்ந்திருப்பது சிறப்பு அண்ணா....

    ஆரம்பமே அசத்தலாக எல்லோரும் ரசிக்கும் வண்ணம் ஸ்வீட் சிக்ஸ்டீன் என்று ஆரம்பித்து... ஸ்ரீதேவி படத்துடன் தொடங்கி

    பலவகை இனிப்புகளுடன் கொடுத்து மிக உன்னதமான கோ வத்ஸத் துவாதசி பற்றி விளக்கமாக கொடுத்திருக்கீங்க அண்ணா..

    தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி November 5, 2012 4:57 AM

      பிரியமுள்ள மஞ்சூஊஊஊஊஊஊ, வாங்கோ வணக்கம்.
      தங்களின் முதல் வருகை பெருமகிழ்ச்சியளிக்கிறதூஊஊ! ;)

      //சகலவித இனிப்புகளுடன் தீபாவளிக்கு பிறகு வரும் கோ வத்ச துவாதசி சிறப்புகளை மிக அழகாய் படங்களுடன் பகிர்ந்திருப்பது சிறப்பு அண்ணா....//

      தீபாவளிக்கு பிறகு வரும் கோவத்ச துவாதசி = தவறு

      தீபாவளிக்கு சற்று முன்பு வரும் என்பதே சரி. ஆவலுடன் அவசர அவசரமாகக் கொடுக்கப்பட்டுள்ள பின்னூட்டம் ஆதலால் மிகச்சிறிய இந்தத்தவறு நிகழ்ந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டேன்ம்ம்மா ... அதனால் பராவாயில்லை.

      //ஆரம்பமே அசத்தலாக எல்லோரும் ரசிக்கும் வண்ணம் ஸ்வீட் சிக்ஸ்டீன் என்று ஆரம்பித்து... ஸ்ரீதேவி படத்துடன் தொடங்கி...//

      அடடா, இந்த தேவரகசியத்தைக் கண்டுபிடிச்சுட்டீங்களா! போச்சு போச்சு நான் நல்லா மாட்டிட்டேன் மஞ்சுவிடம் ;)))))

      //பலவகை இனிப்புகளுடன் கொடுத்து மிக உன்னதமான கோ வத்ஸத் துவாதசி பற்றி விளக்கமாக கொடுத்திருக்கீங்க அண்ணா..//

      ரொம்ப சந்தோஷம்மா மஞ்சு.

      //தொடர்கிறேன்..//

      தொடருங்கோ.... ஆனால் நான் என் பதில்களைத்தொடர 4-5 நாட்கள் ஆகலாம் ...... இப்போ ரொம்பவும் பிஸி ம்ம்மா.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  2. கோகண்டூயனம் மஹா பாபங்களை எல்லாம் போக்கும் அற்புதமாக விளங்கும் விவரங்கள் பகிர்ந்தமைக்கு அன்புநன்றிகள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி November 5, 2012 4:58 AM
      //கோகண்டூயனம் மஹா பாபங்களை எல்லாம் போக்கும் அற்புதமாக விளங்கும் விவரங்கள் பகிர்ந்தமைக்கு அன்புநன்றிகள் அண்ணா...//

      ஆம் மஞ்சு. சம்ஸ்கிருதத்தில்

      கோ = பசு

      கண்டு/கண்டம் = கழுத்து

      அதைத்தான் “கோகண்டூயனம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

      [உதாரணமாக

      1] ஸ்ரீகண்டன் = விஷத்தை கழுத்தில் கொண்டவன்

      [”ஸ்ரீ” என்பதற்கு விஷம் என்றும் ஒரு பொருள் உண்டு]

      2] நீலகண்டன் = விஷம் ஏறியதால் நீல நிறம் கொண்ட கழுத்தை உடைய பரமசிவன்

      நீக்கு
  3. கோபாஷ்டமீ அல்லது கோஷ்டாஷ்டமீ பற்றிய மிக அருமையான விஷயங்கள் அறிய முடிந்தது... அன்புநன்றிகள் அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி November 5, 2012 4:59 AM
      //கோபாஷ்டமீ அல்லது கோஷ்டாஷ்டமீ பற்றிய மிக அருமையான விஷயங்கள் அறிய முடிந்தது... அன்புநன்றிகள் அண்ணா..//

      மிகவும் சந்தோஷம் மஞ்சு. பாம்பு பஞ்சாங்கத்தில் அந்த தினத்தில் இதை ”கோஷ்டாஷ்டமி” என மட்டும் காட்டியுள்ளார்கள். விளக்கங்கள் வேறு சில ஆன்மிக இதழ்களிலிருந்து திரட்டினேன்.

      நீக்கு
  4. தென்னேரியில் இருக்கும் பதினாறடி உயரத்தில் இருக்கும் லக்‌ஷ்மி நரசிம்மர் கோயிலில் அம்மா இம்முறை ஊருக்கு போனபோது கோதானம் கன்றுக்குட்டியுடன் செய்துவிட்டு வந்தார்கள் அண்ணா....

    மன நிறைவான பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி November 5, 2012 5:00 AM

      //தென்னேரியில் இருக்கும் பதினாறடி உயரத்தில் இருக்கும் லக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் அம்மா இம்முறை ஊருக்கு போனபோது கோதானம் கன்றுக்குட்டியுடன் செய்துவிட்டு வந்தார்கள் அண்ணா....//

      ஆஹா! இதைக்கேட்கவே என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்குது மஞ்சு.

      நாங்களும் எங்கள் குடும்பத்தில் இதுவரை ஐந்து முறைகள், நல்ல புஷ்டியான பசுமாடாக [நிறைய பால் கறக்கக்கூடியதாக] கன்னுக்குட்டியுடன், ஸத்பாத்திரமாக பார்த்து [அதாவது தொடர்ந்து அதை பராமரிக்கக்கூடிய வசதியுள்ளவர்களாகப் பார்த்து] தானம் செய்யும் பாக்யம் பெற்றோம்.

      //மன நிறைவான பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா...//

      ரொம்ப சந்தோஷம் மஞ்சு.

      நீக்கு
  5. உங்களுக்கும் மன்னிக்கும் மனம் நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி November 5, 2012 5:01 AM
      //உங்களுக்கும் மன்னிக்கும் மனம் நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் அண்ணா...//

      மிக்க மகிழ்ச்சி.... சந்தோஷம்.

      [ ”நீ சிரித்தால் ...... தீபாவளி .....” என்ற பழைய சினிமாப்பாடல் நினைவுக்கு வந்தது.]

      அன்பான வருகைக்கும் அழகான நிறைய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த சந்தோஷங்கள், மஞ்சு.

      [Heartiest Congratulations &
      Best Wishes for 8th November]

      பிரியமுள்ள
      கோபு அண்ணா+மன்னி.

      நீக்கு
  6. அறியாத செய்தி
    சுவாரஸ்யமாகச் சொல்லிப்போன விதம் அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும்
      கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள், திரு.ரமணி சார்.

      நீக்கு
  7. ஆஹா... அருமையான படங்கள்...

    எத்தனை வகையான இனிப்புகள்...

    (11.11.2012 & 21.11.2012)நாட்களின் சிறப்புக்களும் கருத்துக்களும் அறிந்து கொண்டேன்...

    மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும்
      அழகான கருத்துக்களுக்கும் தீபாவளி
      வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,
      திரு.திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  8. பதினாறு வயதினிலே, ஸ்வீட் சிக்ஸ்டீன் என்றெல்லாம் ஆரம்பித்து, போதாக்குறைக்கு ஸ்ரீதேவியின் படத்தையும் போட்டு நன்றாக ஆர்வத்தை பால்கோவா போலக் கிளறிவிட்டீர்கள். பசுவைப் பற்றிய விபரங்கள் எல்லாம் இதற்கு முன்னர் நான் எங்கும் கேள்விப்படாதவை. எனக்கு ஸ்வீட் பிடிக்காது என்றாலும், இடுகை பால்பாயசம் மாதிரி இனித்தது. வழமை போல, நிறைய தகவல்கள், பொருத்தமான படங்கள் என்று கலக்கியிருக்கிறீர்கள்! வாழ்த்துகள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வேணு சார், வாங்கோ. வணக்கம்.

      //பதினாறு வயதினிலே, ஸ்வீட் சிக்ஸ்டீன் என்றெல்லாம் ஆரம்பித்து, போதாக்குறைக்கு ஸ்ரீதேவியின் படத்தையும் போட்டு நன்றாக ஆர்வத்தை பால்கோவா போலக் கிளறிவிட்டீர்கள். //

      அஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! பால்கோவா போல நான் கிளறி
      வி ட் டு வி ட் டே னா ? ;)))))

      பால்கோவா, மல்கோவா, மர்மகோவா மூன்றையும் கிளறி விட்டது போல உள்ளது தங்களின் பின்னூட்டம். மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகானக்
      கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள், திரு.வேணு சார்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  9. அ""ருமையாக ஆ"...பற்றி இ""னிப்புகளுடன் ஈ""க்கள் எல்லாம் உ""வகையோடு படையெடுத்து வருகின்றன ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin November 5, 2012 5:27 AM
      அ""ருமையாக ஆ"...பற்றி இ""னிப்புகளுடன் ஈ""க்கள் எல்லாம் உ""வகையோடு படையெடுத்து வருகின்றன ..

      வாங்கோ நிர்மலா, வணக்கம். அ,ஆ,இ,ஈ,உ வரிசையில் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

      மேலும் உயிர் எழுத்துக்கள் தொடர்கின்ற்ன இப்போது.......

      ’ஊ’ட்டியே விட்டாலும்,‘ஸ்வீட்டா வேணாம்ன்னு’ சிலர்

      ’எ’த்தனை ஸ்வீட் என பிரமிக்கும் வேறு பலர்

      ’ஏ’ன் ”ஸ்வீட் 16” ஆகிய என்னைப்பற்றி? என நம் அதிரா;)

      ’ஐ’ய்ய்ய்ய்யா நல்லாயிருக்கு எல்லாமே என சிலர்

      ’ஒ’ரே ஒரு பின்னூட்டமாகினும் நச்சென்று நம் யங்மூன்

      ’ஓ’டி ஒளித்து கொண்டுவிட்ட பூசார், எட்டுக்குப்பின் எங்கே?

      ’ஒள’வைப்பாட்டி போல ஒருநாள் ஆகிடுவோம் எனத்
      தெரியாமல் ஸ்வீட் சிக்ஸ்டீனையே சாஸ்வதமாக நினைக்கும் மார்க்கண்டேயனின் எ..க்..கோ. )))))

      நீக்கு
    2. ஆரது நானில்லாத நேரம் என்னைப் பற்றியெல்லாம் கதைச்சது?:))... நாமதான் தூணிலும் துரும்பிலும் இருப்பமாக்கும்:))

      நீக்கு
    3. athira November 14, 2012 2:39 PM
      //ஆரது நானில்லாத நேரம் என்னைப் பற்றியெல்லாம் கதைச்சது?:))... நாமதான் தூணிலும் துரும்பிலும் இருப்பமாக்கும்:))//

      ”கதைச்சது” என்றால் “கதை பேசியது” என்ற பொருளோ?
      இதுவும் ஜோர் ஜோர் .. சந்தோஷம், அதிரா.

      தூணிலும் துரும்பிலும் இருப்பீர்களோ?

      அப்போ நீங்க நரசிம்ஹ மூர்த்தியோ?

      நான் “அதிரா” என்றதும் அழகிய பெண்குட்டி என்றும் ”ஸ்வீட் சிக்ஸ்டீன்” என்றெல்லவோ நினைத்து ஏமாந்து விட்டேன். ;(((((

      ooooooooooooo


      எறும்பழகீஈஈஈஈஈஈஈ ஓடியாங்கோ .....
      இதைப்பத்தியும் நாம் இருவரும் கொஞ்சம் கதைக்கணும்.

      எறும்பு = ANT [ஆங்கிலத்தில்]

      சுந்தரம் = அழகீ அல்லது அழகன் [வடமொழியில்]

      ooooooooooooooooo

      எப்பூடீஈஈஈஈஈஈ என் மொழி ஆராய்ச்சி.
      இப்போ புரிகிறதா? எறும்பழகீ யாருன்னு???????

      நீக்கு
  10. இனிப்பான பதினாறு என்ற தலைப்பே நன்றாக உள்ளது. உங்கள் பதிவும் அருமையாக இருக்கிறது. உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...

    முக்கியமான செய்தி:
    கின்னஸ்’ சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. YAYATHIN G November 5, 2012 5:38 AM
      //இனிப்பான பதினாறு என்ற தலைப்பே நன்றாக உள்ளது. உங்கள் பதிவும் அருமையாக இருக்கிறது. உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகானக் கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  11. பசு வழிபடுதல் பற்றிய விவரங்களுடன் கண்சிமிட்டும் கிருஷ்ணரின் படமும் அருமை .உங்களுக்கும் அண்ணிக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் வருகைக்கு சந்தோஷம் நிர்மலா.

      ஆம் நிர்மலா, அந்தக் கண் சிமிட்டும் கிருஷ்ணரின் படம் அருமையாகத்தான் உள்ளது.

      தங்களின் அன்பான தீபாவளி வாழ்த்துகளுக்கு எங்கள் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா + அண்ணி.

      நீக்கு
  12. அழகாகச் சொல்லப்பட்ட அற்புதத் தகவல்கள்! இதுவரை கேள்விப்படாதவை! என்றும் நினைவில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமேஷ் வெங்கடபதி November 5, 2012 6:22 AM
      //அழகாகச் சொல்லப்பட்ட அற்புதத் தகவல்கள்! இதுவரை கேள்விப்படாதவை! என்றும் நினைவில்!//

      மிக்க நன்றி, ஐயா.

      நீக்கு
  13. நிறைய தகவல்கள் - அறிந்திராத செய்திகள்...

    நினைவில் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் November 5, 2012 6:22 AM
      //நிறைய தகவல்கள் - அறிந்திராத செய்திகள்...

      நினைவில் கொள்கிறேன்... //

      சந்தோஷம், வெங்கட்ஜி

      நீக்கு
  14. ரெம்ப பீடிகையா ஆரம்பித்து ஸ்வீட் கொடுத்து அருமையான நல்ல விஷயத்தை பதிவா போட்டிருக்கீங்க அண்ணா..11 ம் தேதி கோ வத்ஸ துவாதசி மற்றும் 21 ம் தேதி அன்று கோபாஷ்டமி செய்து வணங்கி விடுகிறேன்.பகிர்விற்கு மிக்க நன்றி,, பசுவும் கன்றும் சேர்ந்து உள்ள ஒவ்வொரு படமும் வித விதமான அழகு...கண் இமைக்கும் குழந்தை கண்ணனும் கொள்ளை அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா ராணி November 5, 2012 6:36 AM
      //ரெம்ப பீடிகையா ஆரம்பித்து ஸ்வீட் கொடுத்து அருமையான நல்ல விஷயத்தை பதிவா போட்டிருக்கீங்க அண்ணா..//

      ;))))) ரொம்ப சந்தோஷம் தங்கச்சி.

      //11 ம் தேதி கோ வத்ஸ துவாதசி மற்றும் 21 ம் தேதி அன்று கோபாஷ்டமி செய்து வணங்கி விடுகிறேன்.//

      நம் பதிவர்கள் அனைவரையும் + என்னையும் நினைத்து வணங்கிடுங்கோ. மிக்க மகிழ்ச்சி. ;)))))

      //பகிர்விற்கு மிக்க நன்றி,, பசுவும் கன்றும் சேர்ந்து உள்ள ஒவ்வொரு படமும் வித விதமான அழகு...கண் இமைக்கும் குழந்தை கண்ணனும் கொள்ளை அழகு..//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகானக் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK அண்ணா

      நீக்கு
  15. கோபாஷ்டமி பற்றிய விவரங்கள் புதிதாக இருந்தன.

    எங்கள் ஊரில் கார்த்திகை மாத அமாவாசையை தொடர்ந்து வரும் துவாதசியை 'உத்தான துவாதசி' என்று கொண்டாடுவார்கள். அன்று கிருஷ்ணன் துளசி தேவியை திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

    துளசி செடி அருகில் நிறைய திருவிளக்குகள் ஏற்றி வைத்து நெல்லி மரக் கிளையையும் வைத்து பூஜிப்பார்கள்.

    கல்யாணம் துளசி கல்யாணம் என்று பாடுவார்கள்.

    நம்மைப் போல கார்த்திகை பௌர்ணமி அன்று கார்த்திகை பண்டிகை கொண்டாட மாட்டார்கள்.

    துளசி செடி அருகில் மட்டும் கார்த்திகை மாதம் முழுவதும் திரு விளக்குகள் ஏற்றி வைப்பார்கள்.

    உங்களது இந்தப் பகிர்வு மிகவும் மன நிறைவைக் கொடுக்கிறது. எத்தனை கோமாதாக்கள்!

    சரியாக தீபாவளிக்கு முன் போட்டிருக்கிறீர்கள்.

    நிறைய எழுதிவிட்டேன்.

    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan November 5, 2012 6:41 AM


      //கோபாஷ்டமி பற்றிய விவரங்கள் புதிதாக இருந்தன.
      .....
      உங்களது இந்தப் பகிர்வு மிகவும் மன நிறைவைக் கொடுக்கிறது. எத்தனை கோமாதாக்கள்!

      சரியாக தீபாவளிக்கு முன் போட்டிருக்கிறீர்கள்.
      நிறைய எழுதிவிட்டேன். நன்றி!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகானக் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ரஞ்சு மேடம்.

      பிரியமுள்ள
      கோபு

      நீக்கு
  16. மனம் கவர்ந்த பதிவு! நேரம் கிடைக்கும்போது தாங்கள் என் வலைப்பக்கத்திற்கு வருகை தர வேண்டுகிறேன்! தங்கள் கருத்துரைக்கு சில் பதிவுகள் காத்திருக்கின்றன! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s.November 5, 2012 7:14 AM
      //மனம் கவர்ந்த பதிவு! நேரம் கிடைக்கும்போது தாங்கள் என் வலைப்பக்கத்திற்கு வருகை தர வேண்டுகிறேன்! தங்கள் கருத்துரைக்கு சில் பதிவுகள் காத்திருக்கின்றன! நன்றி ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் வலைப்பக்கம் நான் வருகை தந்துகொண்டு தான் இருக்கிறேன். ஆனால் என்னால் சுலபமாக பின்னூட்டம் இட முடியவில்லை. பின்னூட்டப்பெட்டி திறக்க மறுக்கிறது.

      அரை மணி நேரமாவது போராட வேண்டியுள்ளது. ஏதோ உங்கள் தளத்தில் கோளாறுகள் உள்ளன.

      அந்த மிகப்பெரிய குழந்தைப்படத்தை சிறியதாக மாற்றி, வேறு ஒரு ஓரமாகக் கொண்டு சென்றால் சரியாகுமோ என்னவோ?

      பின்னூட்டப்பpeட்டியை திறக்க முயன்றால் திரும்பத் திரும்ப அந்தப்பொடியனே தோன்றி, குறுக்கே வந்து நின்று வெறுப்பேற்றி வருகிறான். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  17. அருமையான படங்கள்...

    எத்தனை வகையான இனிப்புகள்...

    11.11.2012 , 21.11.2012 நாட்களின் சிறப்புக்களும் கருத்துக்களும் அறிந்து கொண்டேன்...

    மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VijiParthiban November 5, 2012 8:12 AM
      அருமையான படங்கள்...
      எத்தனை வகையான இனிப்புகள்...

      11.11.2012 , 21.11.2012 நாட்களின் சிறப்புக்களும் கருத்துக்களும் அறிந்து கொண்டேன்...

      மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...//

      வாங்கோ மேடம். நல்லா இருக்கீங்களா? நலம் தானே?

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகானக் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  18. ஆஆஆஆ தலைப்பைப் பார்த்து பதறியடிச்சு ஓடிவந்தால்ல்.. தலைப்புப்பற்றி ஒண்ணுமே இல்லையே:).. ஆனாலும் சுவீட் 16 க்குப் போய், தினம் ஒரு பதிவாப் போட்டுக் கலக்கிறீங்க வாழ்த்துக்கள்... நாங்களும் ஓடி வந்து களைப்பு போக சுவீட்ஸ் எடுக்கிறோம்ம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira November 5, 2012 8:31 AM
      //ஆஆஆஆ தலைப்பைப் பார்த்து பதறியடிச்சு ஓடிவந்தால்ல்.. தலைப்புப்பற்றி ஒண்ணுமே இல்லையே:).. //

      என்ன அதிரா ஒரேயடியா இப்படிச்சொல்லிடீங்க?
      தலைப்பு என்ன? ஸ்வீட் சிக்ஸ்ட்டீன் தானே?
      நான் மொத்தம் கொடுத்துள்ளது சிக்ஸ்டீன் ஸ்வீட்ஸ் தானே?

      நீங்க பதறியடிச்சு ஓடிவரணும் என்பதற்காகவே, நான் எவ்வளவு கஷ்டப்பட்டு, இந்தத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன் தெரியுமா?

      என் போன பதிவுக்கு நீங்க கொடுத்துள்ள பின்னூட்டம் ஒன்றில், பெரிய மனது பண்ணி உங்கள் தபால் விலாசம் கொடுத்திருந்தீங்கோ. அதைப் படித்ததிலிருந்து, நான் தூங்கவே இல்லை.

      உடனே அதில் உள்ள ஒருவரியையே தலைப்பாப்போட்டு, இந்தப்பதிவை எழுதிப்புட்டேனாக்கும்.

      உங்களுக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது.
      சரியான மக்கூஊஊஊஊஊஊ மாதிரி நடிக்கிறீங்கோ! ;)))))

      ஆனாக்க நீங்க ரொம்ப புத்திசாலி தான்.
      பிரித்தானிய மஹாராணியாரின் பேத்தியோ கொக்கோ?

      //ஆனாலும் சுவீட் 16 க்குப் போய், தினம் ஒரு பதிவாப் போட்டுக் கலக்கிறீங்க வாழ்த்துக்கள்... நாங்களும் ஓடி வந்து களைப்பு போக சுவீட்ஸ் எடுக்கிறோம்ம்:)//

      ரொம்ப சந்தோஷம் அதிராஆஆஆஆஆஆ.

      நீக்கு
  19. //இதோ இந்தாங்கோ

    ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’

    உங்களுக்குப்பிடிச்சதை
    நீங்களே எடுத்துக்கோங்கோ.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடிப் படத்தைப் போட்டுக் காட்டி மோசம் செய்கிறீங்களே இது ஞாயமோ?:)).. எனக்கு இப்பவே கடையில போய் வாங்கி வரொணும் போல இருக்கு, ஆனா நான் வாங்க மாட்டேன்ன்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira November 5, 2012 8:33 AM
      ***இதோ இந்தாங்கோ, ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’
      உங்களுக்குப்பிடிச்சதை நீங்களே எடுத்துக்கோங்கோ.***

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடிப் படத்தைப் போட்டுக் காட்டி மோசம் செய்கிறீங்களே இது ஞாயமோ?:))..//

      ஏதோ நீங்களே அந்த ஸ்வீட் சிக்ஸ்டீன் போலவும், ஆளாளுக்கு உங்களைப் பிச்சுப்பிச்சுட்டாப் போலவும் அல்லவா கோபம் வருகிறது. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேறு ;)

      //எனக்கு இப்பவே கடையில போய் வாங்கி வரொணும் போல இருக்கு, ஆனா நான் வாங்க மாட்டேன்ன்..//

      நீங்க அதெல்லாம் ஒண்ணும் வாங்க மாட்டீங்க. எனக்கு நல்லாவே தெரியும்.

      அன்னிக்கு ’யங்க்மூன்’ பர்த் டேக்கு ஒட்டி சுட்டுத் தருவாதாச் சொல்லி, எல்லோரையும் ராத்திரி பட்டினி போட்டீங்க;

      காசிக்குப்போவதாகச் சொல்லி, டிக்கட்டுக்கு காசு கேட்கிறான் அதனால் போகவில்லைன்னு சொன்னீங்க.

      தேம்ஸ் இல் குதிக்கப்போகிறதா சொல்லி, கரையிலேயே நின்னுக்கிட்டு அலம்பல் பண்ணிட்டு, கடைசிவரை குதிக்காமலேயே இருந்துட்டீங்க.

      தீக்குளிக்கப்போவதாக நிறைய தடவை சபதம் பண்ணினீங்க.
      கடைசியிலே டீ தான் குடிச்சீங்க. தீக்குளிக்கவே இல்லை.

      முருங்கை ஏறப்போவதாகச்சொன்னீங்க! பிறகு இங்கிருந்த முருங்கை மரத்தையே காணோம்னு சொல்லி தேட ஆரம்பித்தீர்கள்.

      இதுபோல உங்களின் வீர தீர சாகஸங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துரைத்தால் எண்ணிலடங்காது.

      //மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்:).//
      இதையே தான் கடந்த 61 வருஷமாச் சொல்லிட்டு வரீங்கோ.

      நீக்கு
    2. ஹா..ஹா..ஹா.. கொஞ்சக் காலத்துக்குள்ளேயே என்னை ரொம்பப் புரிஞ்சிட்டீங்க... தமிழும் நிறையப் படிச்சிட்டீங்க.... :)) ஐ மீன் பூஸ் பாஷை:).

      நீக்கு
    3. athira November 14, 2012 2:12 PM
      //ஹா..ஹா..ஹா.. கொஞ்சக் காலத்துக்குள்ளேயே என்னை ரொம்பப் புரிஞ்சிட்டீங்க... தமிழும் நிறையப் படிச்சிட்டீங்க.... :)) ஐ மீன் பூஸ் பாஷை:).//

      ஆஹாஹ்ஹாஹ்ஹா!

      ’ஈதல் இசைபட வாழ்தல்’ போல

      ’புரிதல் புல்லரித்துப்போதல்’ ;)

      [ஒரே அரிப்பூஊஊஊஊஊ
      சீப்பும் கையுமா இப்போது நான் ;)]

      பூஸ் பாஷையை நான் பூஸிடம் மட்டுமின்றி அனைவரிடமும் ஆங்காங்கே உபயோக்கிக்க ஆரம்பித்து அனைவரும் இப்போ நல்லா குயம்பிட்டாங்கோ, அதிரா ;)

      உங்களின் [மொழிக்] கொள்கை பரப்புச் செயலாளர் ஆகிப்பூட்டேன் நான்; ஆக்கிப்பூட்டீங்க நீங்கோஓஓஓ! ;)

      நீக்கு
  20. //போனால் திரும்ப
    வரவே வராத வயது.//

    போனால் திரும்ப வராதுதான்:), ஆனால் சிலருக்கு போகாது:)).. எப்பவும் சுவீட் 16 இலயே இருப்பினமாம்:).. நான் மார்க்கண்டேயரைச் சொன்னேனாக்கும்.. க்கும்..க்கும்:))..(இது எக்கோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira November 5, 2012 8:35 AM
      ****போனால் திரும்ப வரவே வராத வயது.****

      //போனால் திரும்ப வராதுதான்:), ஆனால் சிலருக்கு போகாது:)).. எப்பவும் சுவீட் 16 இலயே இருப்பினமாம்:)..//

      ஆஹா கேட்க நல்லாத்தான் இருக்கு. நீங்க இன்னும் என்னுடைய “வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க” படிக்கவில்லை போலத்தெரிகிறது.

      அதில் வரும் ஐந்தாம் பகுதியை மட்டுமாவது படித்திருந்தால் இதுபோலெல்லாம் ஜம்பமாகச் சொல்லித்திரிய மாட்டீங்கோ.
      நானும் பலமுறை ஜொள்ளிட்டேன். உங்களுக்கு படிக்கவோ சிரிக்கவோ கொடுப்பிணை இல்லை.

      இந்தாங்கோ மீண்டும் இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html
      ”வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ.! புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க.” உதயம்: பகுதி 1 / 8

      முழுக்கப்படிக்க நேரமில்லாவிட்டாலும் பகுதி-5 ஐ மட்டுமாவது படியுங்கோ.

      //எப்பவும் சுவீட் 16 இலயே இருப்பினமாம்:)// என்பது எவ்வளவு பேத்தல் எனத் தெரிந்து போகும்.

      // நான் மார்க்கண்டேயரைச் சொன்னேனாக்கும்.. க்கும்..க்கும்:))..(இது எக்கோ:))//

      நீங்க மார்க்கண்டேயரைப்பற்றி மட்டுமே சொல்லியிருக்கீங்க என்பதை நானும் அப்படியே நம்புகிறேன்.

      ஒரு சின்ன சந்தேகம்: அவர் [அதான் உங்க மார்க்கண்டேயரூஊஊஊ] இப்போ எங்கே இருக்கிறார்?

      நீக்கு
    2. //ஒரு சின்ன சந்தேகம்: அவர் [அதான் உங்க மார்க்கண்டேயரூஊஊஊ] இப்போ எங்கே இருக்கிறார்?///

      ஹா..ஹா..ஹா..
      குட் குவெஷன்:))... அந்த இடத்தை நிரப்பத்தான் இப்போ அதிரா வந்திட்டனில்ல:)... சுவீட் 16 ஆக...

      நீக்கு
    3. athira November 14, 2012 2:11 PM
      ***ஒரு சின்ன சந்தேகம்: அவர் [அதான் உங்க மார்க்கண்டேயரூஊஊஊ] இப்போ எங்கே இருக்கிறார்?***

      //ஹா..ஹா..ஹா..
      குட் குவெஷன்:))... அந்த இடத்தை நிரப்பத்தான் இப்போ அதிரா வந்திட்டனில்ல:)... சுவீட் 16 ஆக...//

      ஆஹா! அப்போ அந்த மார்க்கண்டேயரூஊஊஊ வையும்
      தேம்ஸ்ஸில் ஒரே அமுக்கா அமுக்கிட்டீங்களோ. அடடா, நல்லா ஆழமாகத்தான் இருக்கும் போலிருக்கூஊஊஊ ;)

      [நல்ல ஆழம் என்று தான் சொன்னது தேம்ஸின் ஆழத்தைத் தான் .... நம்புங்கோஓஓஓஓ .... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்]

      ஸ்வீட் 16 னின் புகழ் என்றும் வாழ்க வாழ்கவே ! ;))))))

      நீக்கு
  21. //உங்களுக்குப்பிடிச்சதை
    நீங்களே எடுத்துக்கோங்கோ.///

    எடுத்தாச்சு, ஆனா நான் இதுக்கெல்லாம் பே பண்ண மாட்டேன்ன், ஆரம்பமே சொல்லிட்டேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira November 5, 2012 8:37 AM
      ***உங்களுக்குப்பிடிச்சதை நீங்களே எடுத்துக்கோங்கோ.***

      //எடுத்தாச்சு, ஆனா நான் இதுக்கெல்லாம் பே பண்ண மாட்டேன்ன், ஆரம்பமே சொல்லிட்டேன்:).//

      என்ன அதிரா? அண்ணா எல்லாமே ஆசையாப் ஃப்ரீயாக் கொடுத்ததும்மா, உங்களுக்கு.

      நீங்க பேயும் பண்ண வேண்டாம் பிசாசும் பண்ண வேண்டாம்.

      [முருங்கைமர சம்பந்தமானவங்கக்கிட்டே ’பே’சவே பயமா இருக்குதுப்பா...... ஜாமீஈஈஈஈஈ.]

      நீக்கு
  22. //சரிங்க இப்போ நான் இந்தப்பதிவிலே சொல்லவந்த விஷயத்துக்கு சட்டுபுட்டுன்னு வந்துடறேனுங்க! கோச்சுக்காதீங்க.//

    கோபமோ? அப்பூடியெண்டால் என்ன?:) எங்களுக்கு அதெல்லாம் தெரியாதே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira November 5, 2012 8:38 AM
      ***சரிங்க இப்போ நான் இந்தப்பதிவிலே சொல்லவந்த விஷயத்துக்கு சட்டுபுட்டுன்னு வந்துடறேனுங்க! கோச்சுக்காதீங்க.***

      //கோபமோ? அப்பூடியெண்டால் என்ன?:) எங்களுக்கு அதெல்லாம் தெரியாதே:)//

      ஆஹா, என் அன்புத்தங்கை அதிரா ரொம்ப நல்ல பொண்ணு. கோபம் என்றால் என்னென்னே தெரியாதாம் இந்தக் குழந்தைக்கு. நம்புவோம். நன்றி, மகிழ்ச்சி.

      பிரியமுள்ள கோபு அண்ணன்

      நீக்கு
    2. //ஆஹா, என் அன்புத்தங்கை அதிரா ரொம்ப நல்ல பொண்ணு. கோபம் என்றால் என்னென்னே தெரியாதாம் இந்தக் குழந்தைக்கு. நம்புவோம். நன்றி, மகிழ்ச்சி.//

      நம்பியே ஆகோணும்.. நம்பாட்டில்..
      -----
      ----
      ----
      ஒண்ணும் பண்ண மாட்டேன் எனச் சொல்ல வந்தேன்:).

      நீக்கு
    3. athira November 14, 2012 2:09 PM
      ***ஆஹா, என் அன்புத்தங்கை அதிரா ரொம்ப நல்ல பொண்ணு. கோபம் என்றால் என்னென்னே தெரியாதாம் இந்தக் குழந்தைக்கு. நம்புவோம். நன்றி, மகிழ்ச்சி.***

      //நம்பியே ஆகோணும்.. நம்பாட்டில்..
      -----
      ----
      ----
      ஒண்ணும் பண்ண மாட்டேன் எனச் சொல்ல வந்தேன்:).//

      நான் என்னவோ ஏதோன்னு ஒரு நிமிஷம் பயந்தே பூட்டேனாக்கும்.

      சமத்தோ சமத்தூஊஊஊஊஊ !
      கட்டிச் சமத்தூஊஊஊஊஊஊ
      கட்டித்தயிர் போலவேஏஏஏஏஏ

      சுட்டித்தனத்துடன் ..........
      ருசியோ ருசியாக அதிராவும்ம்ம்ம்ம்ம்! ;)

      நீக்கு
  23. பதினாறு இனிப்பும் மிக்க அருமை.அதைப்போல் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar November 5, 2012 10:06 AM
      //பதினாறு இனிப்பும் மிக்க அருமை. அதைப்போல் பகிர்வும் அருமை.//

      வாருங்கள் மேடம். நலம் தானே?

      தாங்கள் சமைத்து [செய்து] அசத்தாத இனிப்புகளா?

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகானக் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  24. இடையில விட்டிட்டுப் போயிட்டேனா.. அதால எங்கின விட்டேன் எனத் தெரியுதில்லை தொடர்வதற்கு.

    சரி ஏதோ என் ஞாபக சக்தியைப் பயன்படுத்தி தொடர்கிறேன்ன்..

    பசுவும் கன்றும், கண் சிமிட்டும் கருப்புக் கண்ணனும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira November 5, 2012 10:07 AM
      //இடையில விட்டிட்டுப் போயிட்டேனா.. அதால எங்கின விட்டேன் எனத் தெரியுதில்லை தொடர்வதற்கு.//

      இதைப்படித்ததும் குப்புன்னு சிரிச்சுட்டேன்.

      நீங்களே இடையில் விட்டுட்டுப் போயிட்டதாச் சொல்லிட்டு,
      திரும்ப வந்து எங்கின விட்டேன் எனத் தெரியவில்லை என்றால் எப்பூடி?

      இடையிலே தான் விட்டுருப்பீங்க.
      நல்லா தேடிப்பாருங்கோ. ;)))))

      நீக்கு
  25. ”கோபாஷ்டமி”
    அல்லது
    “கோஷ்டாஷ்டமீ” //

    வாயில் நுழையக் கஸ்டப்படுது இச்சொற்கள் எல்லாம். ஆனாலும் புதுமையான படைப்பு, தெரியாத, அறியாத பல விடயங்கள் அறிந்து கொண்டேன்.. சுவீட் 16 உட்பட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira November 5, 2012 10:08 AM
      ”கோபாஷ்டமி”
      அல்லது
      “கோஷ்டாஷ்டமீ” //

      வாயில் நுழையக் கஸ்டப்படுது இச்சொற்கள் எல்லாம். ஆனாலும் புதுமையான படைப்பு, தெரியாத, அறியாத பல விடயங்கள் அறிந்து கொண்டேன்.. சுவீட் 16 உட்பட..//

      அதிரா நல்லா மாட்டீஈஈஈஈஈஈ

      சுவீட் 16 உட்பட அறியாத விடயங்களா .. உங்களுக்கு?

      அப்போ நீங்க ஸ்வீட் 16 இல்லையா?

      61 ஆகத்தான் இருக்கணும்ன்னு நான் நினைச்சது சரியாப்போச்சு.

      ஆஹா! நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்.

      ஆனா ஒண்ணு 16 ஓ 61 ஓ இரண்டுக்கும் சராசரியாக
      38.5 ஓ எல்லாமே ஓ.கே. தான். நட்புக்கு ஆண் பெண் வயது இதெல்லாம் ஓர் தடையே இல்லை தான்.

      ஆனாக்க ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன் தான்.
      அது இப்படி அநியாயமாப் போச்சே. போனால் வராதே!
      ஜாமீஈஈஈஈஈஈஈ

      நீக்கு
    2. போனால்தானே வராது?:)..

      சரி அது போகட்டும்... நாங்க உங்கட பதிலை எல்லாம் சுடச்சுட.. அன்றே படிச்சிட்டமில்ல:)).. நீங்க படிக்கேல்லையோ எனும் டவுட்டில.. லிங் எல்லாம் போட்டிடுக்கிறீங்க:))).. நாங்க படிச்சிட்டும் படிக்காதமாதிரி இருப்பமாக்கும்.. ஏனெண்டால் ரொம்ப நல்ல பொண்ணு , 6 வயசிலிருந்தே:)

      நீக்கு
    3. athira November 14, 2012 2:05 PM
      போனால்தானே வராது?:)..

      //சரி அது போகட்டும்... நாங்க உங்கட பதிலை எல்லாம் சுடச்சுட.. அன்றே படிச்சிட்டமில்ல:)).. நீங்க படிக்கேல்லையோ எனும் டவுட்டில.. லிங் எல்லாம் போட்டிடுக்கிறீங்க:))).. நாங்க படிச்சிட்டும் படிக்காதமாதிரி இருப்பமாக்கும்.. ஏனெண்டால் ரொம்ப நல்ல பொண்ணு , 6 வயசிலிருந்தே:)//

      *****
      நாங்க படிச்சிட்டும் படிக்காதமாதிரி இருப்பமாக்கும்..
      *****

      ஆஹா! இதுபோதும். இந்த ஒரு வார்த்தையே போதும். ஆனாலும் போதாது. எனக்குப் போதாதூஊஊஊஊஊ.

      சர்க்கரை என்று பேப்பரில் எழுதி பேப்பரை நக்கினால் அது இனிக்குமோ, அதிரா?

      சர்க்கரை போன்ற FEEDBACK கொடுத்தால் தான் எனக்கு இனிக்குமாக்கும்! ;)

      நீக்கு
  26. அனைவருக்கும் இனிய
    தீபாவளி நல்வாழ்த்துகள்

    என்றும் அன்புடன் தங்கள்
    VGK//

    ஆஆஆஆ தீபாவளி வந்திட்டுதோ? சொல்லவேயில்லை:))..

    கோபு அண்ணன் உங்களுக்கும் ஆன்ரிக்கும், மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும், எம் குடும்பம் சார்பாக இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 16 இனிப்புச் சாப்பிட்டு, பதினாறு செல்வங்களோடு.. சந்தோசமா இருங்கோ. அப்ப நான் போட்டு வரட்டே?...

    யாழ்ப்பாணத்தில ஒரு பழமொயி சொலுவினம், “புகையிலை விரிச்சால் போச்சு, பொம்பிளை சிரிச்சால் போச்சு” எண்டு. அதாவது அளவோட இருக்கோணுமாம், நானும் அதனால அளவோடு கொமெண்ட்ஸ் போட்டிட்டுப் போறேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. //ஆஆஆஆ தீபாவளி வந்திட்டுதோ? சொல்லவேயில்லை:))//

      அதுமாட்டுக்கும் வருஷா வருஷம் வரும்..... போகும்.

      ஆனா இந்த ஜவுளி வியாபாரிகளும், பட்டாஸு வியாபாரிகளும், ஸ்வீட் கார விற்பனையாளர்களும், பொதுஜனங்களும் படுத்தும் பாடு இருக்கே .. அது தாங்கவே முடியாதுங்க.

      பஜார் பக்கம் சாதாரணமா நடந்து போய் வரவே பெரிய
      பேஜாரா இருக்குதுங்கோ.

      >>>>>>

      நீக்கு
    2. VGK to அதிரா

      //கோபு அண்ணன் உங்களுக்கும் ஆன்ரிக்கும், மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும், எம் குடும்பம் சார்பாக இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 16 இனிப்புச் சாப்பிட்டு, பதினாறு செல்வங்களோடு.. சந்தோசமா இருங்கோ.//

      ஆஹா, பிரித்தானியா மஹாராணியாரின் அருமைப்பேத்தி ஸ்வீட் சிக்ஸ்டீன் + அரண்மனைக் குடும்பத்தாரின் வாழ்த்துகள் கிடைத்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

      //அப்ப நான் போட்டு வரட்டே?...//

      வந்தது வந்தீங்க தீபாவளிவரை இருந்துட்டுப் போவீங்களோன்னு எதிர்பார்த்தேன்.

      ஆனாலும் அரண்மனையில் ஆயிரம் வேலைகள் இருக்கலாம் என்பதை உணர்ந்து பிரியாவிடை தருகிறேன்.;(

      >>>>>>

      நீக்கு
    3. //யாழ்ப்பாணத்தில ஒரு பழமொயி சொலுவினம், “புகையிலை விரிச்சால் போச்சு, பொம்பிளை சிரிச்சால் போச்சு” எண்டு.//

      யாழ்பாணத்தில் மட்டுமல்ல இங்கேயும் தான் சொல்லுவாங்க. ஆனா மாத்தி சொல்லுவாங்க. அதாவது
      பொம்பிளை சிரிச்சால் போச்சு” “புகையிலை விரிச்சால் போச்சு, எண்டு.

      ஆமா ... நீங்க புகையிலை போடுவீங்களா என்ன ?
      என்னால் நம்பவே முடியலையே ;(((((

      அந்தப்பழமொழி புகையிலை போடும் பொம்பளைக்கானதாக மட்டுமே இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்.

      அந்த காலத்திலே புகையிலையை விரிச்சு விரிச்சு ஒரு பொம்பளை வாய் நிறைய போட்டு குதப்பிக்கொண்டும் அதே நேரம் சிரித்துக்கொண்டும் இருந்திருப்பாள்.

      அவள் வாயிலிருந்து தெரித்த புகையிலைச்சாறு, பக்கத்தில் இருந்தவன் வெள்ளைச்சட்டையெல்லாம் கறையாக்கி இருந்திருக்கும்.

      தன் வீட்டுக்காரியிடம் பாட்டு வாங்கிய அந்த கறைபடிந்த வெள்ளைச்சட்டைக்காரன், பிறரிடம் சொல்லியிருப்பான், “ ”பொம்பளை சிரிச்சாப்போச்சு, புகையிலை தெரிச்சா போச்சு”ன்னு.

      அந்தப்பழமொழி நாளடைவில் மருவி இதுபோல மாறியிருக்கும். நீங்க அதுக்கெல்லாம் கவலைப்படலாகுமோ?

      //அதாவது அளவோட இருக்கோணுமாம், நானும் அதனால அளவோடு கொமெண்ட்ஸ் போட்டிட்டுப் போறேன்:).//

      எதையாவது ஒரு உறுப்படாத பழமொழியை மேற்கோள் காட்டி, இங்கு வந்து எட்டிப்பார்த்துவிட்டு, எட்டே எட்டு தடவை மட்டும் கொஞ்சூண்டு கமெண்ட் போட்டு விட்டு எஸ்கேப் ஆகப்பார்த்தால் விட்டுடோவோமா என்ன?

      எட்டு பின்னூட்டத்திற்கு ஒரு பதினெட்டு மறுமொழிகளாவது கொடுத்து திரும்பத்திரும்ப அழைச்சுடுவோமில்லே.

      பிரியமுள்ள
      கோபு அண்ணன்

      நீக்கு
    4. //”பொம்பளை சிரிச்சாப்போச்சு, புகையிலை தெரிச்சா போச்சு”ன்னு.

      அந்தப்பழமொழி நாளடைவில் மருவி இதுபோல மாறியிருக்கும். நீங்க அதுக்கெல்லாம் கவலைப்படலாகுமோ? ///

      நோஓஓஓஓஒ.. அப்பூடியில்லை, புகையிலையை விரிச்சு வைத்தால் காய்ந்து பழுதாகிவிடுமாம், அதுபோல பெண் சிரித்தால்(அளாவுக்கு மீறி...) அவவையும் ஆரும் மதிக்காயினமாம்.. எனச் சொல்லிப் போட்டினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      நீக்கு
    5. athira November 14, 2012 2:03 PM
      ***”பொம்பளை சிரிச்சாப்போச்சு, புகையிலை தெரிச்சா போச்சு”ன்னு.

      அந்தப்பழமொழி நாளடைவில் மருவி இதுபோல மாறியிருக்கும். நீங்க அதுக்கெல்லாம் கவலைப்படலாகுமோ?***

      //நோஓஓஓஓஒ.. அப்பூடியில்லை, புகையிலையை விரிச்சு வைத்தால் காய்ந்து பழுதாகிவிடுமாம்//

      ஆமாம். கரெக்ட்டூஊஊஊஊஊ.

      எப்போதும் அதை விரிச்சு வைத்துக்கொண்டே இருக்கக்கூடாதூஊஊஊஊ [ஐ மீன் புகையிலையை]

      அவ்வப்போது சுவைக்கும்போது மட்டும் விரிச்சு சுவைக்கணும்னு சொல்லுவாங்கோ;

      அப்போத்தான் பன்னீர்ப்புகையிலை மாதிரி,
      கும்முன்னு வாஸனையா சுவைக்க ஜிம்மினு இருக்கும்.

      எப்போதும் விரிச்சு வெச்சா, ஒரு பய சீந்துவானா?
      அடிக்கிற வெயிலுக்கு ஈரப்பதமே இல்லாம, காய்ஞ்சுக்கு கன்றாவியா இல்லேப்போயிடும்.

      //அதுபோல பெண் சிரித்தால்(அளாவுக்கு மீறி...) அவவையும் ஆரும் மதிக்காயினமாம்.. எனச் சொல்லிப் போட்டினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

      ”அவவை” என்றால் ’அவளையும்’ என்று பொருளோ!

      ”ஆரும்” என்றால் “யாரும்” என்று பொருளோ!!

      “மதிக்காயினமாம்” என்றால் ”மதிக்க மாட்டர்கள்” என்று பொருளோ!!!

      “போட்டினம்” என்றால் ”நீங்கள் எழுதிப்போட்டது” என்ற பொருளோ!!!!

      “கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”;)) என்றால் ”ஒரு சின்ன செல்லமான கோபம் போன்ற பாசாங்கு” என்று பொருளோ!!!!!

      அதிராவுடன் பழகுவதால் எவ்ளோ விஷயங்கள்,
      எவ்ளோ மொழிகள், எவ்ளோ அர்த்தங்கள் சுலபமாகக் கற்றுக்கொள்ள முடிகிறதூஊஊஊஊஊ ;))))))

      தலைப்பிய்த்துக்கொண்டு, என் முடிகள் அத்தனையும் அதனால் நான் இழந்து, மொட்டையாகிபோனாலும் ...
      {அடாது மழை பெய்தாலும் போலவே} அதிரடி அதிராவின் அத்தனை கிளிகொஞ்சும் வார்த்தைகளையும் கற்றுக் கொண்டே தீருவேன்ன்ன்ன்ன்னு சபதம் எடுத்து விட்டேன்.

      என் ஒரு முடியையும் நான் இழக்காமல் காப்பாத்துடா ஜாமீஈஈஈஈஈஈ ! ;)

      நீக்கு
  27. அருமையான தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதிச்சாரல் November 5, 2012 10:21 AM
      //அருமையான தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி.//

      வாருங்கள் மேடம். நலம் தானே?

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  28. கால நேரத்திற்கு உகந்தாற்போல நல்லதொரு பதிவு. நிறைய விஷயங்களை உங்கள்மூலமும் உங்கள் பதிவிற்கு பின்னூட்டமிடுபவர்கள் மூலமும் அறியக் கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி!

    கோமாதா பற்றியும் அதன் உடல்களில் எந்தெந்த அவயங்களில் என்னென்ன தேவதைகள் இருக்கின்றனர் என்று எங்கள் வீடுகளில் பெரியவர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
    மாட்டுப்பொங்கல் அன்று வீட்டில் கோபூஜை செய்து வழிபட்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் இங்கு கூறியவை அறிந்திராத ஒன்று. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி!

    தீபாவளிக்கு தனியே இனிப்புமட்டுமா கொடுப்பார்கள். சற்றுக் காரசாரமானவைகள் கறுமொறு பண்டங்கள் தானே இக்கால நிலைக்கு ஏதுவாயிருக்கும்.:)
    இனிப்பு ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் பிடிக்காதவர்களுக்கும் ஒன்றுமில்லாமல் போச்சே:(....

    இருப்பினும் கோபாஷ்டமி பதிவுக்கும், பட்சணங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி!

    ஐயா! அனைத்துப்படங்களும் நன்றாக இருக்கிறது. ஆனாலும்.....
    ஒரு விஷயத்தை பொடிவைத்து பகிர்ந்துள்ளீர்கள் :)

    கோ பற்றிய பதிவுடன் இறுதியில் கண்சிமிட்டும் பாலகிருஷ்ணன் படம் = கோபாலகிருஷ்ணன்!!!
    சிம்போலிக்காக உங்கள் பெயர் இங்கு வரவைத்திருப்பது தங்கக்கலசத்தில் பதித்த வைரம்:)))
    திறமையோ திறமை. வாழ்த்துக்கள் ஐயா!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி November 5, 2012 12:29 PM
      //கால நேரத்திற்கு உகந்தாற்போல நல்லதொரு பதிவு. நிறைய விஷயங்களை உங்கள்மூலமும் உங்கள் பதிவிற்கு பின்னூட்டமிடுபவர்கள் மூலமும் அறியக் கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி!//

      வாங்கோ இளமதி. நல்லா இருக்கீங்களா? செளக்யம் தானே?
      நீங்கள் அன்புடன் வருகை தந்து அழகாகவும் விரிவாகவும் கருத்துக்கள் கூறியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

      >>>>>>

      நீக்கு
    2. VGK to இளமதி....

      //கோமாதா பற்றியும் அதன் உடல்களில் எந்தெந்த அவயங்களில் என்னென்ன தேவதைகள் இருக்கின்றனர் என்று எங்கள் வீடுகளில் பெரியவர் சொல்லக்கேட்டிருக்கிறேன். மாட்டுப்பொங்கல் அன்று வீட்டில் கோபூஜை செய்து வழிபட்டிருக்கிறோம்.//

      மிகவும் சந்தோஷம்.

      //ஆனால் நீங்கள் இங்கு கூறியவை அறிந்திராத ஒன்று. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி!//

      நானும் அறிந்திராத ஒன்று தான். சமீபத்தில் ஒரு சில ஆன்மிக இதழ்களில் படித்துத் திரட்டிய தகவல்களே இவை.
      எல்லோருக்கும் தெரியட்டும், ஒருசிலருக்காவது பயன்படட்டும் என பதிவிட்டேனம்மா.

      >>>>>>>>

      நீக்கு
    3. VGK To இளமதி....

      //தீபாவளிக்கு தனியே இனிப்பு மட்டுமா கொடுப்பார்கள்.//

      தலைப்பு: ஸ்வீட் சிக்ஸ்டீன் தானே! அதற்குப் பொருத்தமாகத்தானே கொடுக்கப்பட்டுள்ளன 16 ஸ்வீட்ஸ்.!!

      //சற்றுக் காரசாரமானவைகள் கறுமொறு பண்டங்கள் தானே இக்கால நிலைக்கு ஏதுவாயிருக்கும்.:)//

      ஸ்வீட் 16 என்பது தன்னுடைய கொப்பி வலது [COPY RIGHT], அதை எப்படி எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கலாம் எனக்கேட்டு, ஒருத்தங்க காரசாரமாகச் சொல்லியிருக்காங்களே!

      அதையே காரமாக எடுத்துக்கொள்ளுங்கோ.

      >>>>>>>

      நீக்கு
    4. VGK To இளமதி....

      //இனிப்பு ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் பிடிக்காதவர்களுக்கும் ஒன்றுமில்லாமல் போச்சே:(....//

      அடடா, ஆமமில்லை. ஆனாலும் “பார்த்தால் பசி தீரும்”!

      இருப்பினும் கோபாஷ்டமி பதிவுக்கும், பட்சணங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி!

      நன்றிக்கு நன்றி!

      >>>>>

      நீக்கு
    5. VGK To இளமதி....

      ஐயா! அனைத்துப்படங்களும் நன்றாக இருக்கிறது. ஆனாலும்..... ஒரு விஷயத்தை பொடிவைத்து பகிர்ந்துள்ளீர்கள் :)

      கோ பற்றிய பதிவுடன் இறுதியில் கண்சிமிட்டும் பாலகிருஷ்ணன் படம் = கோபாலகிருஷ்ணன்!!!
      சிம்போலிக்காக உங்கள் பெயர் இங்கு வரவைத்திருப்பது தங்கக்கலசத்தில் பதித்த வைரம்:)))

      அட்டா, இந்தப்பொடி வைத்துள்ள விஷயம் இந்தப் பொடியனுக்கு, நீங்க சொல்லியபிறகே புரிகிறதூஊஊஊ.

      தங்களின் இந்தத் தங்கமான பின்னூட்டமும் எனக்கு வைரமாகவே மின்னுகிறது. ;)))))

      //திறமையோ திறமை.//

      இதில் எந்தத்திறமையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

      அவரவர் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் வித்யாசமாகத் தோன்றலாம் தான். இருப்பினும் என் நன்றிகள்.

      //வாழ்த்துக்கள் ஐயா!//
      நன்றியோ நன்றிகளம்மா!

      நீக்கு
    6. VGK To இளமதி....

      //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!!//

      அதே அதே! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
    7. //அட்டா, இந்தப்பொடி வைத்துள்ள விஷயம் இந்தப் ******பொடியனுக்கு*******, நீங்க சொல்லியபிறகே புரிகிறதூஊஊஊ.
      //
      ****** -----*******
      ஹையோ என்னை விடுங்கோ விடுங்கோ.. இனியும் உயிரோடு இருக்கோணுமோ.. நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:)).

      நீக்கு
    8. யங்மூன் யங்மூன் ....
      ஓடியாங்கோ ஓடியாங்கோ!
      அர்ஜண்ட் அர்ஜண்ட் ...
      நம் அதிராவைப் பாருங்கோ .....
      வழக்கம்போல தேம்ஸ்க்குப்புறப்பட்டுட்டாங்கோ ..... எனக்கு ஒரே கவலையாக்கீதூஊஊஊஊஊ.

      அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னாலும் அரைன்னாலும், கால்ன்னாலும், அரைக்கால்ன்னாலும் பிறகு என்னையும் நீங்க உயிரோடு பார்க்க முடியாதூஊஊஊஊஊஊஊ .... ஜொள்ளிட்டேன். ஜொள்ளிட்டேன்.

      நானும் காவிரிக்கரைக்குக் கிளம்பிட்டேன்.. ஜாக்கிரதை!

      எங்கள் இருவரையும் காப்பாத்துவது இப்போ உங்கள் கையில் தான் உள்ளது, இளமதீஈஈஈஈஈஈஈ. எதற்கும்
      ஃபயர் எஞ்சினுக்கும் ஃபோன் பண்ணிச் சொல்லிடுங்கோ.
      உங்களிடம் உள்ள இளம’தீஈஈஈஈஈ’ ஐ அணைக்கத்தான்! ;)

      ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் +
      ஒரு தேங்காய்ச்சில்லு உங்களுக்கு. ;)

      [என் கொப்பி வலது எப்ப்ப்ப்ப்பூடி?
      அதிராவே படித்தாலும் அதிர்ந்து போவாள் ;))))]

      வாய்ப்பை நழுவ விடாதீங்கோ....
      ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
      நல்லா பயன் படுத்திக்கோங்கோ!!

      VGK

      நீக்கு
  29. மின்னஞ்சலில் உங்கள் செய்தி கண்டேன். ஓடி வந்தேன். ஸ்வீட் ஸிக்ஸ்டீன் எல்லாமே சுவையானவைதான். நல்லவேளை கடவுள் புண்ணியத்தில் எனக்கு சுகர் இல்லை. கோமாதா பற்றிய ஆன்மீக எண்ணங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று. எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ November 5, 2012 5:31 PM
      //மின்னஞ்சலில் உங்கள் செய்தி கண்டேன். ஓடி வந்தேன்.//

      வாருங்கள் ஐயா, வணக்கம். உடல்நிலை இப்போது சற்று தேவலாமா? அடடா, ஓடியா வந்தீர்கள்? தவறு ஐயா தவறு.
      நாம் இருக்கும் நிலையில் அதுவும் தீபாவளி சமயம், தெருவில் நடந்து வருவதே மிகப்பெரிய விஷயம்.
      இனி ஓடி வராதீர்கள் ஐயா. ;)))))

      //ஸ்வீட் ஸிக்ஸ்டீன் எல்லாமே சுவையானவைதான். நல்லவேளை கடவுள் புண்ணியத்தில் எனக்கு சுகர் இல்லை.//

      ஆஹா, பாக்யம் செய்துள்ளீர்கள். கேட்கவே எனக்கு இனிப்பாக உள்ளது. ஆனாலும் இந்த இனிப்புச் செய்தியினைக் கேட்டதுமே எனக்கு கொஞ்சம் சுகர் ஏறிவிட்டது. ;)

      //கோமாதா பற்றிய ஆன்மீக எண்ணங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகானக் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      //எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!//

      மிக்க நன்றி ஐயா. தங்களுக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  30. தித்திப்பான படங்கள்! கோவத்ஸ துவாதசி, கோபாஷ்டமி பற்றிய விவரங்கள் அறிந்தோம், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா...November 5, 2012 5:47 PM
      //தித்திப்பான படங்கள்! கோவத்ஸ துவாதசி, கோபாஷ்டமி பற்றிய விவரங்கள் அறிந்தோம், நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகானக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  31. அறியாத செய்தி இது அருமையான தகவல்களை அறியத்தந்ததற்கு நன்றி. அப்படியே ஒரு மாட்டையும் கன்னுகுட்டியையும் வாங்கி அனுப்பினால் நீங்கள் சொல்படி நடக்க ஏதுவாக இருக்கும் அப்படி முடியாத பட்சத்தில் எங்களுக்கும் சேர்த்தும் நீங்களே பிரார்த்தித்து விடுங்கள் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Avargal Unmaigal November 5, 2012 6:09 PM
      //அறியாத செய்தி இது அருமையான தகவல்களை அறியத்தந்ததற்கு நன்றி.//

      சந்தோஷம். வாருங்கள் என் அன்புத்தம்பி, வணக்கம்.

      //அப்படியே ஒரு மாட்டையும் கன்னுகுட்டியையும் வாங்கி அனுப்பினால் நீங்கள் சொல்படி நடக்க ஏதுவாக இருக்கும்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

      //அப்படி முடியாத பட்சத்தில் எங்களுக்கும் சேர்த்தும் நீங்களே பிரார்த்தித்து விடுங்கள் நன்றி//

      ஆஹா! ததாஸ்து.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகானக் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் VGK

      நீக்கு
  32. Lovely post with lovely clicks... Keep rocking sir !!!
    http://recipe-excavator.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sangeetha Nambi November 5, 2012 8:28 PM
      //Lovely post with lovely clicks...
      Keep rocking sir !!!//

      Welcome! Thanks a Lot for your kind visit here & valuable comments Madam. vgk

      நீக்கு
  33. எனக்கு இனிப்பு பிடிக்கும்கறதால நீங்க தந்த 16ஐயும் எடுத்துக்கிட்டேன். கோமாதா பற்றிய நான் இதுவரை அறிந்திராத தகவல்களையும் சிந்தையில ஏத்திக்கிட்டேன். மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால கணேஷ் November 5, 2012 9:36 PM
      //எனக்கு இனிப்பு பிடிக்கும்கறதால நீங்க தந்த 16ஐயும் எடுத்துக்கிட்டேன். //

      ஆஹா, என்னைப்போலவே ஸ்வீட் சிக்ஸ்டீனை முழுவதும் திருப்தியாக ருசித்துள்ளீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

      //கோமாதா பற்றிய நான் இதுவரை அறிந்திராத தகவல்களையும் சிந்தையில ஏத்திக்கிட்டேன். மிக்க நன்றி ஐயா.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகானக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார். அன்புடன் VGK

      நீக்கு
  34. பதில்கள்
    1. நம்பிக்கைபாண்டியன் November 5, 2012 9:53 PM
      //ப"சுவை" பற்றிய அருமையான பதிவு!//

      தங்களின் அன்பான வருகைக்கும், ”சுவை” மிகுந்த அருமையான கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  35. "பசும்பால் மிகவும் ஒஸத்திதாங்க." ஆனால் பசுவின் பாலில் 60% மேல் கிடைப்பவை கலப்படப்பால் என்பது தங்களுக்கும் பத்திரிகை வாயிலாக தெரிந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திர வம்சம் November 6, 2012 1:25 AM
      //"பசும்பால் மிகவும் ஒஸத்திதாங்க." ஆனால் பசுவின் பாலில் 60% மேல் கிடைப்பவை கலப்படப்பால் என்பது தங்களுக்கும் பத்திரிகை வாயிலாக தெரிந்திருக்கும்.//

      வெளியே வாங்கும் எதில் தான் கலப்படம் இல்லை? ;(((((

      நாமே பசுமாடு வளர்த்து, நாமே கறந்தால் தான் கலப்படம் இல்லாத பசும்பால் கிடைக்கும் என்கிறீர்கள். நீங்கள் சொல்வதும் சரியே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  36. அறியாத நல்லதொரு தகவல்! மிக்க நன்றி! நல்ல விளக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. s suresh November 6, 2012 5:16 AM
      //அறியாத நல்லதொரு தகவல்! மிக்க நன்றி! நல்ல விளக்கம்!//

      மிக்க நன்றி.

      நீக்கு
  37. இதுவரை அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி November 6, 2012 5:42 AM
      //இதுவரை அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி சார்.//

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  38. அன்பின் வை.கோ - என்றும் பதினாறாக இருக்க ஆசை - ஸ்வீட் சிக்ஸ்டீன் - அருமையான பதிவு - எவ்வளவு தகவல்கள் - எவ்வளவு படங்கள் - எத்த்னை ஸ்வீட்கள் - ம்ம்ம்ம்ம்ம் - இரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 3 கருத்துக்கள் இட்டேன்.
      ஒன்று தான் தெரிகிறது.
      "நேர அவகாசம்
      மின்சார இணைப்பு
      நெட் இணைப்பு
      கணினியின் உடல்நிலை
      தங்களின் உடல்நிலை
      தங்களின் விருப்பம்
      தங்களின் சந்தோஷ மனநிலை

      போன்ற அனைத்தும் சாதகமாக இருந்தால்
      தயவுசெய்து வருகை தந்து சிறப்பிக்கவும்."---சரியாத்தான் கூறினீர்கள்.

      நீக்கு
    2. cheena (சீனா) November 6, 2012 6:09 AM
      //அன்பின் வை.கோ - என்றும் பதினாறாக இருக்க ஆசை//

      வாருங்கள் ஐயா, வணக்கம். வணக்கம். தங்கள் ஆசை நியாயமானதே!

      //ஸ்வீட் சிக்ஸ்டீன் - அருமையான பதிவு - //

      ஆஹா! ஸ்வீட் சிக்ஸ்டீன் என்றாலே அருமை தானே ஐயா! அது அருமையாகத்தானே இருக்க முடியும்!!

      //- எவ்வளவு தகவல்கள் - எவ்வளவு படங்கள் - எத்த்னை ஸ்வீட்கள் - ம்ம்ம்ம்ம்ம் - இரசித்தேன் - மகிழ்ந்தேன் -//

      மிக்க மகிழ்ச்சி ஐயா.

      //நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகானக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  39. sweet sixteen ena thodangi, sixteen variety of sweets katchikum vaithu, gomaadhaavai vazhipadum murayum thandhu, kutti jokum serthu asathiteenga gopu sir. Happy deepavali to you too.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mira November 7, 2012 12:43 AM
      sweet sixteen ena thodangi, sixteen variety of sweets katchikum vaithu, gomaadhaavai vazhipadum murayum thandhu, kutti jokum serthu asathiteenga gopu sir. Happy deepavali to you too.

      அன்புள்ள மீரா ... வாங்க, வணக்கம், செளக்யமா?

      //ஸ்வீட் சிக்ஸ்டீன் எனத்தொடங்கி, பதினாறு வகை ஸ்வீட்ஸ்களையும் காட்சிக்கும் வைத்து, கோமாதாவை வழிபடும் முறையையும் தந்து, குட்டி ஜோக்கும் சேர்த்து, அசத்திட்டீங்க, கோபு சார். உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், குறிப்பாக ஜோக்கினை ரஸித்ததற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மீரா.

      பிரியமுள்ள
      கோபு

      நீக்கு
  40. பதிவு ஆரம்பத்திலும் சரி ஸ்வீட் பாக்கும்போதும் சரி..ஆன்மிகம் சம்பந்தமான பதிவுன்னு நான் நினைக்கவே இல்லை...இதுவரை தெரியாத செய்திகள்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. gomathi November 7, 2012 5:38 AM
      //பதிவு ஆரம்பத்திலும் சரி ஸ்வீட் பாக்கும்போதும் சரி..ஆன்மிகம் சம்பந்தமான பதிவுன்னு நான் நினைக்கவே இல்லை...இதுவரை தெரியாத செய்திகள்.நன்றி.//

      வாருங்கள் மேடம். வணக்கம். தங்களின் அன்பான புதிய வருகையும், அழகான கருத்துக்களும், மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நன்றியோ நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      My e-mail ID: valambal@gmail.com

      நீக்கு
  41. பற்பல சுவையான தகவல்கள். உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள் வை.கோ சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகன்ஜி November 7, 2012 6:53 AM
      //பற்பல சுவையான தகவல்கள். உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள் வை.கோ சார்!//

      வாங்கோ Mr.மோகன்ஜி Sir, வணக்கம். அன்பான வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும்,
      என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  42. சந்திர வம்சம் November 7, 2012 12:28 AM
    //3 கருத்துக்கள் இட்டேன். ஒன்று தான் தெரிகிறது.//

    அடடா, மீதி இரண்டும் எங்கே?
    இங்கு வரவில்லையே! ஸ்பேமிலும் இல்லையே மேடம்.

    எங்கோ காக்கா ஊஷ் ஆகி விட்டது போலிருக்கே! ;(

    ***
    நேர அவகாசம்
    மின்சார இணைப்பு
    நெட் இணைப்பு
    கணினியின் உடல்நிலை
    தங்களின் உடல்நிலை
    தங்களின் விருப்பம்
    தங்களின் சந்தோஷ மனநிலை

    போன்ற அனைத்தும் சாதகமாக இருந்தால்
    தயவுசெய்து வருகை தந்து சிறப்பிக்கவும்."---
    ***

    //சரியாத்தான் கூறினீர்கள்.//

    ஆமாம் மேடம் இந்த மேற்கண்ட ஏழில் ஏதாவது ஒன்று ஒத்துழைக்காமல் போனாலும், நம்மால் பதிவுகளைப்படிக்கவோ, பின்னூட்டம் கொடுக்கவோ முடியாமல் உள்ளது.

    நான் இது போல பலமுறை அனுபவித்து விட்டதால், நான் என் புதிய பதிவு பற்றிய மெயில் தகவல் கொடுக்கும், உங்களைப்போன்ற ஒருசிலருக்கு மட்டும், மேற்கண்டவாறு எழுதி வருகிறேன்.

    அது நியாயம் தானே?

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  43. ஆஹா...ஸ்வீட்ஸ் அருமை ....கருத்து அருமையோ அருமை... ரசித்தேன்...jokes வெரி குட்!கோபாஷ்டமி தகவல் அருமை!
    நேற்றே பின்னூட்டம் தந்தேன் ,ஏனோ பப்ளிஷ் ஆகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Usha Srikumar November 7, 2012 8:19 PM
      //ஆஹா...ஸ்வீட்ஸ் அருமை ....கருத்து அருமையோ அருமை... ரசித்தேன்...jokes வெரி குட்!கோபாஷ்டமி தகவல் அருமை!

      நேற்றே பின்னூட்டம் தந்தேன் ,ஏனோ பப்ளிஷ் ஆகவில்லை.//

      வாருங்கள் மேடம். செளக்யமா இருக்கீங்களா? நல்லது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான் கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  44. 16 வயது இனிமைதான் அப்பொழுது இந்த 16 இனிப்பையும் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது.இப்ப யோசிப்பதற்கே பயமாக இருக்கு.எங்கே சக்கரை வியாதி வந்துவிடுமோ என்று...

    மிக இனிக்க வைக்கும் பதிவு.கோவத்ஸ துவாதஸி பற்றிய தகவல்கள் அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMVI November 9, 2012 12:11 AM
      //16 வயது இனிமைதான் அப்பொழுது இந்த 16 இனிப்பையும் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது.//

      ஆமாம் மேடம். தாங்கள் சொல்வது மிகவும் நியாயமான கருத்து தான், ஆனால் அதுவும் நம் காலத்தில் மட்டுமே.

      //இப்ப யோசிப்பதற்கே பயமாக இருக்கு. எங்கே சக்கரை வியாதி வந்துவிடுமோ என்று...//

      இப்போ சின்னச் சின்னக்குழந்தைகளுக்கே கூட [ஆரம்பப்பள்ளி படிக்கும் குழந்தைகளுக்கே கூட], இந்த சர்க்கரை நோய் வந்து பாடாய்ப்படுத்தி வருகிறது. ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து ஆஸ்பத்தரியில் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு பள்ளிக்குச்செல்லும், ஒருசில குழந்தைகளை நான் அறிவேன். பார்க்கவே மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

      //மிக இனிக்க வைக்கும் பதிவு.கோவத்ஸ துவாதஸி பற்றிய தகவல்கள் அருமை.நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  45. கோமாதாக்களின் வழிபாடுபற்றிய சிறப்பான பகிர்வு.

    இப்போதுதான் கண்டுகொண்டேன் நாளை நீங்கள் குறிப்பிட்ட சிறப்பான நாள்.

    இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  46. மாதேவி November 9, 2012 11:20 PM
    //கோமாதாக்களின் வழிபாடுபற்றிய சிறப்பான பகிர்வு.

    இப்போதுதான் கண்டுகொண்டேன் நாளை நீங்கள் குறிப்பிட்ட சிறப்பான நாள்.

    இனிய தீபாவளி வாழ்த்துகள்.//

    வாருங்கள். வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  47. என் முதல் வருகையிலேயே தீபாவளி ஸ்வீட்ஸ் தந்து இனிமையாக்கி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  48. உஷா அன்பரசு November 10, 2012 4:26 AM
    தீபாவளி ஸ்வீட்ஸ் இனித்தது.

    உஷா அன்பரசு November 10, 2012 4:26 AM
    என் முதல் வருகையிலேயே தீபாவளி ஸ்வீட்ஸ் தந்து இனிமையாக்கி விட்டீர்கள்.//

    வாருங்கள் சகோதரி! வணக்கம். தங்களின் முதல் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் முதல் வருகைக்கு தீபாவளி ஸ்வீட்ஸ் அதுவும் ”ஸ்வீட் சிக்ஸ்டீன்” ஆக அமைந்துள்ளதை விட ஆச்சர்யம் பின்னூட்டம்+பதில் எண்ணிக்கையும் மிகச்சரியாக 100 என அமைந்துள்ளது, தங்கள் விஷயத்தில் ஏற்பட்டுள்ள தனிச்சிறப்பாகும்.

    தங்களின் அன்பான முதல் வருகை + அழகான கருத்துரைகள் எனக்கு மிகவும் சந்தோஷத்தினை அளித்துள்ளது.

    100 Out of 100 சென்டம்ம்ம்ம்ம் ! ;))))) உங்களுக்கே !

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  49. அஜீம்பாஷா November 10, 2012 10:19 AM
    தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா//

    ஆஹா, வாருங்கள், நண்பரே!

    தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி.
    தங்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  50. அருமை அய்யா. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் November 10, 2012 8:46 PM
      // அருமை ஐயா. //

      மிக்க நன்றி, ஐயா.

      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள். அன்புடன் VGK

      நீக்கு
  51. ஸ்வீட் ஸிக்ஸ்டீன் பேரைப்பார்த்தால் சிறிசுகள் மயங்கிவிடும். இனிமையான ஆன்மீக விஷயம். படிக்கப்படிக்க எவ்வளவு விஷயங்கள் தெறிந்து கொள்ள முடிகிறது. மனதிற்கிதமாநது.
    ஸ்வீட்ஸ் எல்லாம் பார்க்கவே அருமை. தின்றால் இனிமை. கொடுத்த உங்ளுக்கு நன்றி. அந்தக் திருஷ்ணன் படம் மறக்க முடியாதது. நன்னாயிருக்கு பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi November 11, 2012 2:46 AM
      //ஸ்வீட் ஸிக்ஸ்டீன் பேரைப்பார்த்தால் சிறிசுகள் மயங்கிவிடும்.//

      ஆமாம்.... ஆமாம்.

      //இனிமையான ஆன்மீக விஷயம். படிக்கப்படிக்க எவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. மனதிற்கிதமானது.//

      ரொம்பவும் சந்தோஷம்..... மாமி.

      //ஸ்வீட்ஸ் எல்லாம் பார்க்கவே அருமை. தின்றால் இனிமை. கொடுத்த உங்ளுக்கு நன்றி.//

      நீங்க பார்க்காத செய்யாத ஸ்வீட்டா என்ன? ;)))))

      //அந்தக் கிருஷ்ணன் படம் மறக்க முடியாதது. நன்னாயிருக்கு பதிவு.//

      ஆமாம். கண்ணடிக்கும் மாயக்கண்ணன் அழகோ அழகு தான்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மாமி.

      அன்புடன்
      கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  52. Sir, It is verybad......
    Howmany sweets........
    How can i miss each......
    But not allowed to eat sweet is my problem......

    Really really i missed yesterday. Today only i am coming here.
    But daily i am doing Gopooja to a cowstatue in my home. Is it O.K.?

    But i will never miss 21st. Thanks Sir.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji November 11, 2012 10:46 PM

      வாருங்கள் திருமதி விஜி மேடம். நல்லா இருக்கீங்களா? செளக்யம் தானே?

      //Sir, It is verybad......
      Howmany sweets........
      How can i miss each......
      But not allowed to eat sweet is my problem......
      ஐயா, இது ரொம்பவும் அநியாயம்! எவ்ளோ இனிப்புகள்!!
      எப்படி என்னால் ஒவ்வொன்றையும் தவிர்க்கமுடியும்? ஆனால் இனிப்புகள் சாப்பிடக்கூடாது என்பதே எனக்குள்ள பிரச்சனை.//

      இந்தப்பிரச்சனை உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல. இன்று உலகில் சரிபாதி பேர்களுக்கு இருப்பதாகச் சொல்லுகிறார்கள். படத்தில் பார்ப்பதனால் சுகர் ஏறாது என நம்புவோம். அதனால் தாங்கள் ஏதும் கவலைப்பட வேண்டாம்.

      //Really really i missed yesterday. Today only i am coming here. அடடா! நேற்றே இந்தப்பதிவினைப் பார்க்க நான் தவறி விட்டேன். அதனால் இன்று மட்டுமே என்னால் காணமுடிந்தது.//

      அதனால் பரவாயில்லை மேடம். இன்றாவது பார்த்தீர்களே, சந்தோஷம்.

      //But daily i am doing Gopooja to a cowstatue in my home. Is it O.K.? ஆனால் நான் தினமும் பசுவும் கன்றுடன் உள்ள சிலைக்கு கோபூஜை செய்து வருகிறேன், அதுவே போதுமல்லவா? //

      ஆஹா, தாங்கள் பக்தி சிரத்தையுடன் தினமும் பூஜை புனஷ்காரங்கள் செய்து வருகிறீர்கள். தானும் லலிதா சஹஸ்ரநாமம் போன்றவற்றை தினமும் உச்சரிப்பதுடன், பிறருக்கும் அவற்றை போதித்தும் வருகிறீர்கள்.

      அதைத்தவிர ஆத்திலேயே ஸ்வாமிக்கு, [ராதா கல்யாணம், ஸீதா கல்யாணம் போன்ற] அடிக்கடி திருக்கல்யாண உத்சவங்களும் நடத்தி வருகிறீர்கள்.

      உங்களுக்கு இறையருள் ஏற்கனவே நிறையவே கிட்டியுள்ளது.

      இதுபோலெல்லாம் ஏற்கனவே இறையருள் கிட்டாதவர்களுக்கு, நடமாடும் பிரத்யக்ஷ தெய்வமான பசுமாடு+கன்னுக்குட்டியின் மூலம் கிட்டும்படிச் செய்ய மட்டுமே, இந்தப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

      //But i will never miss 21st. ஆனால் நான் வரும் 21 ஆம் தேதியை தவறவிடவே மாட்டேன்//

      ஆஹா, அருமை. உங்களுக்காகவே மற்றொரு வாய்ப்பு அமைந்துள்ளது பாருங்கோ. 11.11.2012 கோ வத்ஸ துவாதஸி. அது போனால் என்ன 21.11.2012 அன்று கோஷ்டாஷ்டமி என்ற மிகச்சிறந்த நாள் வருகிறதே!

      அந்த நாளில் தாங்கள் பிரத்யக்ஷ கோ+கன்னுக்குட்டி யை வழிபடுங்கோ. [எனக்காகவும் சேர்த்தே வழிபடுங்கோ, ப்ளீஸ்]

      //Thanks Sir.// viji

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
      Thank you very much, Madam. "HAPPY DEEPAVALI"

      VGK

      நீக்கு
  53. //But daily i am doing Gopooja to a cowstatue in my home. Is it O.K.? ஆனால் நான் தினமும் பசுவும் கன்றுடன் உள்ள சிலைக்கு கோபூஜை செய்து வருகிறேன், அதுவே போதுமல்லவா? // .... Viji

    முன்பெல்லாம், புதிதாக வீடு கட்டி கிருஹப் ப்ரவேஸம் செய்யும் வீடுகளில் முதன்முதலாக கன்றுடன் கூடிய பசுமாடும், பிறகு மாலையும் கழுத்துமாக கர்தாவும் மனைவியும், புதுக்குடத்தில் ஜலமும், புஷ்பம், பழங்கள், வெற்றிலை+பாக்கு, முதலிய மங்கலப்பொருட்களும், மேளம்+நாயனமோ அல்லது பூஜை மணியோ ஒலித்தவாறு செல்வது வழக்கம்.

    >>>>>>>>>
    தொடரும்
    >>>>>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK to VIJI Madam.....

      இப்போதெல்லாம் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் கிருஹப் ப்ரவேஸம் நடைபெறுகின்றன.

      பெங்களூரில் பழைய விமான நிலையம் போகும் வழியில் “புருவங்கரா” என ஓர் அடுக்குமாடி வளாகம். அதில் ஆயிரக்கணக்கான வீடுகள். அதில் உள்ள ஒவ்வொரு கட்டடமும் 13 மாடிகள் கொண்ட குடியிருப்புகள். பெரும் பாலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் Investment Purpose க்காக இங்கு வீடு வாங்குகிறார்கள். குறைந்தபக்ஷம் முக்கால் கோடி ரூபாய் வேண்டும், இதில் ஒரு வீடு வாங்க, அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே.

      என் மகன் அதில் ஒன்பதாவது மாடியில் வீடு வாங்கி அங்குள்ள வாத்யார் [சாஸ்திரிகள்] மூலம் கிருஹப் ப்ரவேஸம் செய்து வந்தோம். எல்லாமே அந்த வாத்யார் மூலம் டோட்டல் காண்ட்ராக்ட் தான். நீங்கள் சொன்னது போலவே ஓர் பசுவையும் கன்றையும் வெள்ளிச்சிலை ரூபத்தில் கொண்டு வந்து அசத்தி விட்டார் ..... அவர்.

      ;)))))

      அன்புடன்
      VGK

      நீக்கு
  54. தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  55. Asiya Omar November 13, 2012 7:07 PM
    //தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

    மிகவும் சந்தோஷம். மிக்க நன்றிகள், மேடம்.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  56. ashok November 15, 2012 10:59 AM
    //Happy Deepavali Sir!//

    Thank you very much, Sir.
    Happy Deepavali to you also.
    vgk

    பதிலளிநீக்கு
  57. வணக்கம் ஐயா.

    தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
    இந்தப் பதிவில் ஸ்வீட்டுகளைப் பார்வையாலேயே
    சாப்பிட்டு விட்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  58. அருணா செல்வம் November 19, 2012 1:58 AM
    //வணக்கம் ஐயா.//

    வாங்கோ, வணக்கம் மேடம்.

    //தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.//

    சந்தோஷம். தங்களுக்கும் என் வாழ்த்துகள்.

    //இந்தப் பதிவில் ஸ்வீட்டுகளைப் பார்வையாலேயே சாப்பிட்டு விட்டேன். நன்றி.//

    ஆஹா, மகிழ்ச்சி... மகிழ்ச்சி. சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ.

    அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    vgk

    பதிலளிநீக்கு
  59. தொழிற்களம் குழு
    உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,, //

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  60. சாப்பிட்டு விட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  61. மாலதி November 22, 2012 12:47 AM
    //சாப்பிட்டு விட்டேன். நன்றி.//

    தங்களின் அன்பான வருகைக்கும் சாப்பிட்டதற்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  62. இனிப்பான பதிவு !

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  63. சேக்கனா M. நிஜாம் November 26, 2012 1:47 AM
    //இனிப்பான பதிவு !

    தொடர வாழ்த்துகள்//

    தங்களின் அன்பான முதல் வருகைக்கும் கருத்துக்கும் என் மன்மார்ந்த நன்றிகள். அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  64. அனைத்து இனிப்பும் சாப்பிட்ட நல்லாத்தான் இருக்கும்...
    தீபாவளி வாழ்த்துகளை இப்படியும் சொல்லலாமா???

    பதிலளிநீக்கு
  65. இரவின் புன்னகை November 28, 2012 2:22 AM

    வாங்கோ ”இரவின் புன்னகை;)” Sir.

    //அனைத்து இனிப்பும் சாப்பிட்ட நல்லாத்தான் இருக்கும்...
    தீபாவளி வாழ்த்துகளை இப்படியும் சொல்லலாமா???//

    ஆஹா, தாங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் தான்.

    இருப்பினும் அடுத்த ஆண்டு 2013 அக்டோபர்/நவம்பரில் வரவிருக்கும் தீபாவளிக்கு அட்வான்ஸ் ஆக வாழ்த்துச்சொல்லியுள்ள முதல் நபர் தாங்கள் மட்டுமே, என்பதில் எனக்கு பகலிலேயே புன்னகை வந்தது. ;)

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  66. கோமாதா பற்றிய விரிவான பதிவு எவ்வளவு விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.

    எல்லோர் நன்மைக்கும் நல்லவைகளை எடுத்து சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    முன்பு தினம் வீட்டில் பசுவையும் கன்றையும் வணங்குவார்கள். நீங்கள் சொல்வது போல் இப்போது படத்திலும் உருவ பொம்மைகளையும் வணங்கி திருப்தி பட்டுக் கொள்கிறோம்.
    உங்கள் தீபாவ்ளி வாழ்த்தை இப்போது தான் பார்க்க முடிந்தது பேரன் ஊருக்கு போய் விட்டான் நானும் ஊருக்கு போய் விட்டு இப்போது தான் திருப்பினேன். இன்னும் ஊர் பயணம் முடியவில்லை அடுத்தமாதமும் போக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு November 28, 2012 10:52 PM
      //கோமாதா பற்றிய விரிவான பதிவு எவ்வளவு விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.

      எல்லோர் நன்மைக்கும் நல்லவைகளை எடுத்து சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.//

      வாருங்கள் மேடம். வணக்கம். செளக்யமா இருக்கீங்களா?

      //முன்பு தினம் வீட்டில் பசுவையும் கன்றையும் வணங்குவார்கள். நீங்கள் சொல்வது போல் இப்போது படத்திலும் உருவ பொம்மைகளையும் வணங்கி திருப்தி பட்டுக் கொள்கிறோம்.//

      ஆமாம், மேடம். முன்புபோல பசுவும் கன்றும் கண்ணிலே காண முடியாமல் தான் உள்ளன. முன்பெல்லாம் எங்கள் தெருவில் நிறைய பசுக்கள், மரங்களிலும், மின்கம்பங்களின் அடியிலும் கட்டப்பட்டிருக்கும். காவிரி ஆற்றுக்குக் குளிக்க ஓட்டிச்செல்வார்கள்.

      இப்போ பசுக்களையும் காணும். அவை கட்டப்பட்டிருந்த மரங்களையும் காணும். மின் கம்பங்கள் இருந்தும் மின்சாரத்தையும் காணும். காவிரியில் நீரையும் காணும்.;)

      //உங்கள் தீபாவ்ளி வாழ்த்தை இப்போது தான் பார்க்க முடிந்தது.//

      அதனால் என்ன, அடுத்த தீபாவளிக்கு அட்வான்ஸ் வாழ்த்தாக வைத்துக்கொள்ளுங்கள். ;)

      //பேரன் ஊருக்கு போய் விட்டான் நானும் ஊருக்கு போய் விட்டு இப்போது தான் திருப்பினேன். இன்னும் ஊர் பயணம் முடியவில்லை அடுத்தமாதமும் போக வேண்டும்.//

      பயணங்கள் எப்போதுமே ஓயாது தான். ஜாலியாக, சந்தோஷமாக, பாதுகாப்பாகப் போய் வாருங்கள்.
      Wishing you a Happy & Safe Journey, Madam.

      அன்புடன்,
      VGK

      நீக்கு
  67. http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

    நேரம் இருந்தால் வந்து பாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *Chennai Plaza-சென்னை ப்ளாசா*December 2, 2012 1:46 AM
      //http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html
      நேரம் இருந்தால் வந்து பாருங்கள்//

      பார்த்தேன். தகவலுக்கு நன்றிகள்.
      நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  68. MESSAGE RECEIVED FROM:
    கவியாழி கண்ணதாசன் December 2, 2012 2:56 PM

    இந்த அற்புதமான தகவல்களை தந்தமைக்கு நன்றி.
    நான் ஸ்ரீதேவியை பார்த்ததும் அவங்களை பற்றிய விமர்சனமோ என நினைத்தேன் ஆனால் பசும் பாலின் பலன்களும் படங்களும் கதையும் சொல்லி நவரசமாக்கி விட்டீர்கள் அருமை.

    உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் ஒதுக்க முடியுது சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. MESSAGE RECEIVED FROM:
      //கவியாழி கண்ணதாசன் December 2, 2012 2:56 PM

      இந்த அற்புதமான தகவல்களை தந்தமைக்கு நன்றி.
      நான் ஸ்ரீதேவியை பார்த்ததும் அவங்களை பற்றிய விமர்சனமோ என நினைத்தேன் ஆனால் பசும் பாலின் பலன்களும் படங்களும் கதையும் சொல்லி நவரசமாக்கி விட்டீர்கள் அருமை.

      உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் ஒதுக்க முடியுது சார்?//

      வாங்க, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      VGK

      நீக்கு
  69. ஸ்வீட்டுகளைப் பார்வையாலேயே
    சாப்பிட்டு விட்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  70. Student Drawings December 9, 2012 5:39 AM
    //ஸ்வீட்டுகளைப் பார்வையாலேயே சாப்பிட்டு விட்டேன். நன்றி.//

    தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  71. அடை சாப்பிடுவது ஆனந்தமே ஆனால் எடை கூடிடுமே என்ன செய்வது அதனால் ஒன்றிரண்டு சாப்பிட்டு விட்டு விடை கொடுப்பது தான் சரி ,நன்றிங்க சார் பழசையெல்லாம் நினைக்க வைச்சுட்டீங்க

    பதிலளிநீக்கு
  72. // சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.//

    இப்பதான் எனக்கு இதன் அர்த்தமே புரிகிறது.

    அடடே !! அடை பண்ணினாலும் அடடா !! என்ன அடை ,
    அதற்கு மோர்க்குழம்பு தொட்டுக்க இருந்தால் இன்னும் சுகம்.

    இருந்தாலும் வாய்க்கு ஒத்துக்கற சமாசாரங்கள் வயித்துக்கு சரிவருவதில்லை.



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  73. கண்ணுக்கும் காட்சிக்கும் விருந்து
    படங்களும் தகவல்களும் அருமை
    பொறுமையாக படிப்போருக்கு

    நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம் அய்யா!
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman January 17, 2013 at 4:48 PM
      கண்ணுக்கும் காட்சிக்கும் விருந்து
      படங்களும் தகவல்களும் அருமை
      பொறுமையாக படிப்போருக்கு

      நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம் ஐயா!
      பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  74. கண்ணுக்கும் காட்சிக்கும் விருந்து
    படங்களும் தகவல்களும் அருமை
    பொறுமையாக படிப்போருக்கு

    நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம் அய்யா!
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  75. குறையைப் போக்கவே
    இங்கு நிறைய பசுக்களும் கன்றுகளுமாகப்
    படத்தில் காட்டியுள்ளேன்.//

    குறை தீர்க்கும் கோமாதாக்களைப் பெருமைப்படுத்திய பயனுள்ள இனிய பகிர்வுகள்..பாராட்டுகள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:47 PM


      **குறையைப் போக்கவே இங்கு நிறைய பசுக்களும் கன்றுகளுமாகப் படத்தில் காட்டியுள்ளேன்.**

      //குறை தீர்க்கும் கோமாதாக்களைப் பெருமைப்படுத்திய பயனுள்ள இனிய பகிர்வுகள்..பாராட்டுகள்.. வாழ்த்துகள்..//

      வாங்கோ. வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  76. ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதஸிக்கு [தேய்பிறை 12 ஆம் நாள்] கோவத்ஸ துவாதஸி என்று பெயர். பிரும்மா, விஷ்ணு, சிவன், அம்பாள் முதலான அனைத்து தேவர்களும் பசுமாட்டின் உடலில் வாஸம் செய்கிறார்கள்.

    அருமையான நாளில் சிறப்பாக பதிவிட்டு நினைவூட்டியமைக்கு இனிய நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 31, 2013 at 5:17 AM

      வாங்கோ.... வாங்கோ, வந்தனம் ... வணக்கம்.

      *****ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதஸிக்கு [தேய்பிறை 12 ஆம் நாள்] கோவத்ஸ துவாதஸி என்று பெயர். பிரும்மா, விஷ்ணு, சிவன், அம்பாள் முதலான அனைத்து தேவர்களும் பசுமாட்டின் உடலில் வாஸம் செய்கிறார்கள்.*****

      //அருமையான நாளில் சிறப்பாக பதிவிட்டு நினைவூட்டியமைக்கு இனிய நன்றிகள்..!//

      http://gopu1949.blogspot.in/2013/10/73.html#comment-form என்ற இன்றைய [ 31.10.2013 ] என் பதிவுக்கு தாங்கள் முதல் வருகை தந்து கருத்தளித்து சிறப்பித்துள்ளது, எனக்கு மிக மிக மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

      இங்கு மீண்டும் வருகை தந்து சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். அன்புடன் VGK

      நீக்கு
  77. தங்கள் பகிர்வினைக் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா
    பகிர்வுக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பாளடியாள் வலைத்தளம் October 31, 2013 at 12:57 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்கள் பகிர்வினைக் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா
      பகிர்வுக்கு !//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  78. உங்கள் பதிவைப் பார்த்து ஸந்தோஷம். கோவர்தன பூஜை என்று நேபாலில் இந்த பூஜை செய்யப்படுகிறது. எதற்கெடுத்தாலும் நேபால் உபமானம் மனதில் வந்து விடுகிறது. தவிர,கௌவாபூஜா,குகுர்பூஜா,லக்ஷ்மிபூஜா,பா.ய்,பூஜா என கோவர்தன் பூஜை உட்பட ஐந்து தினங்கள் பூஜைகளேதான்.
    காகம்,நாய்,லக்ஷ்மி,உடன்பிரந்தவர்கள்,,கிருஷ்ணர் என இவைகள்.
    விவரமான உங்கள்பதிவு மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  79. Kamatchi October 31, 2013 at 10:24 PM

    வாங்கோ மாமி, நமஸ்காரங்கள். தீபாவளி நமஸ்காரங்களும் செய்கிறோம். ஆசீர்வாதம் செய்யுங்கோ.

    //உங்கள் பதிவைப் பார்த்து ஸந்தோஷம். கோவர்தன பூஜை என்று நேபாளில் இந்த பூஜை செய்யப்படுகிறது. எதற்கெடுத்தாலும் நேபாள உபமானம் மனதில் வந்து விடுகிறது.

    தவிர,கௌவாபூஜா, குகுர்பூஜா, லக்ஷ்மிபூஜா, பா.ய்,பூஜா என கோவர்தன் பூஜை உட்பட ஐந்து தினங்கள் பூஜைகளேதான்.

    காகம், நாய், லக்ஷ்மி, உடன்பிரந்தவர்கள், கிருஷ்ணர் என இவைகள்.

    விவரமான உங்கள்பதிவு மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி. அன்புடன்//

    நேபாளில் நடப்பவைகளை நானும் கேள்விப்பட்டுள்ளேன், மாமி.

    மேலும் என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சிநேகிதி திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள், நேபாள பூஜைகள் பற்றி தனியாக ஒரு பதிவே எழுதி சிறப்பித்திருந்தார்கள். நீங்களும் பாருங்கோ. சூப்பராக இருக்கும். இதோ இணைப்பு:

    http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_04.html

    நமஸ்காரங்களுடன் கோபு

    பதிலளிநீக்கு
  80. அன்பின் வைகோ

    இனிப்பான பதினாறு - ஸ்ரீதேவி - பதினாறு இனிப்பான படங்கள் - எருமைப்பால - பசும்பால் இரணடையும் ஒப்பு நோக்க்யது நன்ற் - பசும்பாலே சிறந்தது - எத்தனை கோமாதா படங்கள் - அத்தனையுய்ம் அருமை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) November 3, 2013 at 3:15 PM
      //அன்பின் வைகோ//

      அன்பின் திரு. சீனா ஐயா, வாங்கோ, வணக்கம்.

      //இனிப்பான பதினாறு - ஸ்ரீதேவி - பதினாறு இனிப்பான படங்கள் - எருமைப்பால் - பசும்பால் இரணடையும் ஒப்பு நோக்கியது நன்று - பசும்பாலே சிறந்தது - எத்தனை கோமாதா படங்கள் - அத்தனையுய்ம் அருமை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா//

      தங்களின் அன்பு வருகையும், அழகு கருத்துக்களும் பசும்பால் போலவே சுவையோ சுவையாக இருந்தன.

      மிக்க நன்றி ஐயா. அன்புடன் VGK

      நீக்கு
  81. கோமாதாவைப் பற்றி எழுதியதைப்
    படிக்க கோலிவுட் அழகியின்
    படத்தை போட்டால்தான்
    வருவார்ர்கள் என்று நீங்கள் கணக்கு போட்டது/
    நினைத்தது சரியாய்ப் போய்விட்டது போலும்!

    நிறைய நேரம் எடுத்து நிறைய தகவல்களை சேகரித்து
    உழைத்து கோக்களுக்காக ஒரு பதிவை வெளியிட்டமைக்கு பசுக்கள் சங்கம் உங்களை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

    அதே சமயம் அவைகளை அடிமாட்டு விலைக்கு விற்று லாரிகளில் அடைத்து கேரளாவில் கொடூரமாகக் கொன்று விற்கும் தின்னும்/, ஈவிரக்கமற்ற மனித மிருகங்களை நினைத்து பார்த்து அதை தடுக்க நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளன.

    நீங்கள் சொல்லும் பசுக்கள்
    இன்று படத்தில்தான் காணலாம்
    பசும்புல்லை மேய்ந்து வைக்கோல், எள்ளுபிண்ணாக்கு ,கடலைபிண்ணாக்கு , பருத்திக்கொட்டை
    போன்றவற்றை உண்டு கொழுத்த பசுக்களின் பால்தான் நீங்கள் சொல்லும் அனைத்து
    பூஜைகளுக்கும் தகுதியானவை. ஏதோ சில கோசாலைகளில் மட்டும் காணலாம்.

    மற்றபடி சாலையில் சுற்றி திரிந்து
    போஸ்டர், காகிதம் என்று கண்ட கண்ட குப்பைகளை தின்று ,ஊசி மூலம் கருவூட்டப்பட்ட பசுக்கள் தரும் பால் .கலப்படப்பாலை உண்டு வளரும் இந்த தலைமுறை இந்த பதிவை படித்துவிட்டு அடுத்த வேலைக்கு தாவும் மதி படைத்த உத்தம பிறவிகள்
    (என்னையும் சேர்த்து)(உண்மையான கோமாதா பக்தர்கள் சினம் கொள்ள வேண்டாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman November 4, 2013 at 1:11 AM

      வாங்கோ, வாங்கோ அண்ணா, வணக்கம். நமஸ்காரம்.

      //கோமாதாவைப் பற்றி எழுதியதைப் படிக்க கோலிவுட் அழகியின் படத்தை போட்டால்தான் வருவார்கள் என்று நீங்கள் கணக்கு போட்டது / நினைத்தது சரியாய்ப் போய்விட்டது போலும்!//

      அடடா, இவங்க கோலிவுட் அழகியா? அதுவே என் அன்பின் அண்ணா சொல்லித்தான் எனக்கு இப்போது தெரிய வருகிறது. எதோ நெட்டில் 16 வயது இளம் குட்டியின் படம் தேடினேன். இதுதான் கிடைத்தது. டபக்குன்னு புடிச்சுப்போட்டுட்டேன். மற்றபடி எனக்கு ஒன்றுமே தெரியாது அண்ணா.

      ஆனால் இவங்க நடிச்ச 16 வயதினிலே படத்தை 16 முறை நான் பார்த்துள்ளேன். அது ஒரு காலம். ;)))))

      //நிறைய நேரம் எடுத்து நிறைய தகவல்களை சேகரித்து
      உழைத்து கோக்களுக்காக ஒரு பதிவை வெளியிட்டமைக்கு பசுக்கள் சங்கம் உங்களை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. //

      ஆஹா, அப்படியா? சந்தோஷம், சந்தோஷம் ;)))))

      >>>>>

      நீக்கு
    2. //நீங்கள் சொல்லும் பசுக்கள் இன்று படத்தில்தான் காணலாம். பசும்புல்லை மேய்ந்து வைக்கோல், எள்ளுப் புண்ணாக்கு, கடலைப்புண்ணாக்கு, பருத்திக்கொட்டை
      போன்றவற்றை உண்டு கொழுத்த பசுக்களின் பால்தான் நீங்கள் சொல்லும் அனைத்து பூஜைகளுக்கும் தகுதியானவை. ஏதோ சில கோசாலைகளில் மட்டும் காணலாம். //

      உண்மை தான் அண்ணா. கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில், ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலில் இதுபோல நிறைய பசுக்களைப் பராமரித்து வளர்க்கிறார்கள். நானும் அவ்வப்போது டொனேஷன் அனுப்பி வருகிறேன்.

      அவைகள் ஸ்ரீ கிருஷ்ணர் மேய்த்த பசுக்களின் பரம்பரை வாரிசுகள். மதுராவிலிருந்து கொண்டு வரப்பட்டவைகள்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, அண்ணா. அன்புடன் VGK

      நீக்கு
  82. புளுகினாலும் பொருந்த புளுக வேண்டும் !

    இன்னும் உங்கள் ஆழ்மனதில் நீங்கள் 16 முறை
    முறைத்து பார்த்த 16 வயதினிலே இளங்குட்டியாக வந்து தற்போது பாட்டியாய் ஆனபின்னும் திரையுலகில் வலம் வரும் அந்த ஸ்வீடி இன்னும் உங்கள் மனதிற்குள் இன்றும் வலம் வருகிறாள் என்பது உங்கள்பதிவால் தெளிவாகிவிட்டது (The cat is out of the bag) .

    கெட்டிக்காரனின் புளுகு எட்டு நாளில் தெரியும் என்ற பழமொழி உண்மையாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  83. Pattabi Raman November 4, 2013 at 2:56 AM

    வாங்கோ அண்ணா, வணக்கம் அண்ணா, நமஸ்காரங்கள் அண்ணா.

    //புளுகினாலும் பொருந்த புளுக வேண்டும் !//

    என் அண்ணா அளவுக்கு அவ்வளவு சாமர்த்தியமெல்லாம் இந்தத்தம்பிக்குக் கிடையாது .... அண்ணா.

    முதலில் எனக்குப் புளுகவும் தெரியாது, அதுவும் அப்படியே புளுக நினைத்தாலும் பொருத்தமாகப் புளுகவும் தெரியாது .... மனதில் பட்டதைப் பட்டுப் பட்டுன்னு சொல்லிடுவான் இவன்.

    //இன்னும் உங்கள் ஆழ்மனதில் நீங்கள் 16 முறை முறைத்து பார்த்த 16 வயதினிலே இளங்குட்டியாக வந்து தற்போது பாட்டியாய் ஆனபின்னும் திரையுலகில் வலம் வரும் அந்த ஸ்வீடி இன்னும் உங்கள் மனதிற்குள் இன்றும் வலம் வருகிறாள் என்பது உங்கள் பதிவால் தெளிவாகிவிட்டது (The cat is out of the bag) .//

    அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை அண்ணா. இயற்கையையும், அழகையும், அன்பையும், அறிவையும் எப்போதுமே ஆராதிப்பவன் + ஆதரிப்பவன் தான் நான்.

    மிகச்சாதாரணமானவனாகிய, சாமான்யமான, என் ஆழ்மனதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகளும், கற்பனைகளும் எப்போதும் ’என்றும் பதினாறு’ ஆக உண்டு தான்.

    இதை பகிரங்கமாகச் சொல்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஏனென்றால் எனக்கு எதையும் மறைத்துப் பழக்கமே இல்லை. வெளிவேஷம் போடத்தெரியாதவன் நான்.

    //கெட்டிக்காரனின் புளுகு எட்டு நாளில் தெரியும் என்ற பழமொழி உண்மையாகிவிட்டது.//

    ;))))) எவ்வளவு வயதானாலும், கடந்த கால சம்பவங்களை, அதுவும் மிக இனிமையான நாட்களை மறக்க முடியுமா?

    இன்று ஷுகரால் ’சுகர்’ சொன்ன பாகவதம் நமக்கு மறக்கலாம். ஷுகர் பதார்த்தங்கள் பிடிக்காது போல நாம் நடிக்கலாம்.

    ஆனால் அவற்றின் ருசியை மறக்க மனம் கூடுதில்லையே !

    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html

    பால்கோவா, மல்கோவா + மர்மகோவா இவற்றின் ருசியை மறப்பவன் ஓர் மனிதனா? NEVER ! ;)))))

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  84. சாப்பாட்டு ராமனை இந்த பட்டாபிராமனால்
    ஒன்றும் செய்ய முடியாது. (யயாதி கதை போல)
    ததாஸ்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman November 4, 2013 at 3:46 AM

      வாங்கோ அண்ணா ! தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது அண்ணா !

      // சாப்பாட்டு ராமனை இந்த பட்டாபிராமனால்
      ஒன்றும் செய்ய முடியாது. (யயாதி கதை போல)
      ததாஸ்து //

      சின்ன வயதில் நான் ஆசைப்பட்டது எதுவும் எனக்குக் கிடைத்தது இல்லை. [இளமையில் வறுமையினால்]

      இப்போ கை நிறைய / பை நிறைய / பேங்க் நிறைய பணம் இருந்தும் வாய்க்கு ருசியான எதையும் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் / தடை செய்கிறார்கள் ..... உலக வாழ்க்கை மிகவும் வெறுப்பாக உள்ளது.

      தங்களின் ராமரஸம் மட்டுமே என் ’கதி’ என்று ஆகிவிட்டது.

      சோதனைமேல் சோதனை .... போதுமடா ஸ்வாமீ ......... வேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது .... பூமி.

      நீக்கு
  85. சின்ன வயதில் நான் ஆசைப்பட்டது எதுவும் எனக்குக் கிடைத்தது இல்லை. [இளமையில் வறுமையினால்]

    கிடைக்காவிட்டால் சனியன் விட்டது என்று இருங்கள்

    அந்த வறுமையை நினைத்து இப்போதுள்ள பெருமையை /அருமையான வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்.

    கடந்த காலம் கடந்த காலமே

    அதை கடந்து வந்தபின் மீண்டும் திரும்பி பார்ப்பது அறிவீனம், மதியீனம்,முட்டாள்தனம்

    இப்போது, இன்றி பகவான் அளித்துள்ள வாழ்க்கையை திருப்தியாக அனுபவியுங்கள்.

    நிகழ்காலத்தில்தான் மகிழ்ச்சி உள்ளது. கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ இல்லை.



    இப்போ கை நிறைய / பை நிறைய / பேங்க் நிறைய பணம் இருந்தும் வாய்க்கு ருசியான எதையும் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் / தடை செய்கிறார்கள் ..... உலக வாழ்க்கை மிகவும் வெறுப்பாக உள்ளது.

    இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் வேண்டும். அதை விடுத்து இல்லாததை நினைத்து பிலாக்கணம் பாடுபவர்கள் அடி முட்டாள்கள் என்றுதான் நான் சொல்லுவேன்.

    தங்களின் ராமரஸம் மட்டுமே என் ’கதி’ என்று ஆகிவிட்டது.

    இவனின் ராம ரசம் அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். கண்ட ரசத்தை குடித்து வயிற்றையும், மனதையும் வாழ்க்கையையும் கெடுத்துக்கொள்பவர்களே இந்த உலகில் அதிகம்.

    இப்போ கை நிறைய / பை நிறைய / பேங்க் நிறைய பணம் இருந்தும் .
    .
    கண்டதை தின்பதற்காக பணம் இறைவன் கொடுக்கவில்லை.
    செல்வது பயன் ஈதல்,அதாவது இல்லாதவர்களுக்கு அளித்தல்
    உங்களால் சாப்பிடமுடியாத இனிப்புகளை அந்த இனிப்புகளை வாங்கி சாப்பிட இயலாத அநாதை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து அவர்கள் சாப்பிட்டு மகிழ்வதை கண்டு நீங்கள் மகிழுங்கள். அது உங்களுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி தரும். .

    சோதனைமேல் சோதனை .... போதுமடா ஸ்வாமீ ......... வேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது .... பூமி.

    அகழ்வாராய் தாங்கும் நிலம் போல என்றார் வள்ளுவர். மனிதன் பூமியை விட பொறுமையில் சிறந்தவனாக விளங்க முடியும். மன உறுதி இருந்தால்.

    புலம்புவதை நிறுத்துமையா!புதிய சிந்தனைகள் உதிக்கும் ! புதிய வாழ்வு மலரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman November 4, 2013 at 8:30 AM

      எனக்கோர் அண்ணா இருந்தார். அவரும் மஹா ஞானி. அவர் இதே போலத்தான், என் சின்ன வயதில் என்னை உரிமையுடன் திட்டுவார். கோபித்துக்கொள்வார்.

      ஆனால் போகப்போக என் மீதும் என் திறமைகள் மீதும் என் குணாதிசயங்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர்.

      நேராக என்னிடம் எதையும் பாராட்டிச் சொல்ல மாட்டாரே தவிர என் உடன் பிறந்த இதர சகோதர சகோதரிகளிடம் நிறையவே சொல்லியிருக்கிறார். தன் நண்பர்களிடமும் நிறைய புகழ்ந்து சொல்லியிருக்கிறார். எனக்கு திருஷ்டி அதிகம் உள்ளது என்று ஞான திருஷ்டியில் பலமுறை பலரிடம் சொல்லியிருக்கிறார். அவர்கள் என்னிடம் பிறகு சொல்லியிருக்கிறார்கள்.

      ஏனோ தங்களின் இந்த பதிலைப்படித்ததும், அவர் ஞாபகம் எனக்கு வந்து கண்ணீர் சிந்தினேன்.

      //புலம்புவதை நிறுத்துமையா!//

      நான் இவ்வாறு புலம்பினால் மட்டுமே, என் அண்ணாவிடமிருந்து இதுபோன்ற அழகான ஆறுதலான பதில் வரும் என எதிர்பார்த்துத்தான் எழுதினேன்.

      நிஜமாகவே என் சொந்த அண்ணாவை நினைவு படுத்து விட்டீர்கள். கண்களில் கண்ணீருடன் தான் இதை டைப் அடிக்கிறேன்.

      //புதிய சிந்தனைகள் உதிக்கும் ! புதிய வாழ்வு மலரும். //

      மிகவும் சந்தோஷம் அண்ணா. புதிய சிந்தனைகள் அவ்வப்போது உதித்துக்கொண்டே தான் உள்ளது. தங்களின் ஆசியால் என் வாழ்வும் நன்கு மலரட்டும்.

      >>>>>

      நீக்கு
    2. Pattabi Raman November 4, 2013 at 8:30 AM

      //கண்டதை தின்பதற்காக பணம் இறைவன் கொடுக்கவில்லை. செல்வது பயன் ஈதல்,அதாவது இல்லாதவர்களுக்கு அளித்தல். உங்களால் சாப்பிடமுடியாத இனிப்புகளை, அந்த இனிப்புகளை வாங்கி சாப்பிட இயலாத அநாதை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து அவர்கள் சாப்பிட்டு மகிழ்வதை கண்டு நீங்கள் மகிழுங்கள். அது உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும். .//

      அதையே தான் நானும் அவ்வப்போது செய்து வருகிறேன். ஆனால் இதுபற்றி என்னைத்தவிர வேறு யாருக்குமே தெரியாமல் செய்துவருகிறேன்.

      பிறருக்குக் கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சியே உள்ளது என்பதை நான் நன்கு என் அனுபவத்தில் அறிந்துள்ளேன் / உணர்ந்துள்ளேன்.

      நமஸ்காரங்களுடன் VGK

      நீக்கு
  86. இவனின் மூதாதையர்கள் பூர்வீகம் திட்டை.
    ஆனால் என் தாத்தாவே அங்கு சென்றதில்லை
    ஏனென்றால் அவர் பூவுலகில் நுழையும் நேரம் அவர் அப்பா வானுலகம் சென்றுவிட்டார்.

    இன்று என் initial லோடு மட்டும் T உள்ளது. அவ்வளவுதான்.

    ஏதோ ஒருபிறவியில் நான் உங்களுக்கு அண்ணாவாக நிச்சயம் இருந்திருப்பேன். . அது இந்த பிறவியில் வெளிப்படுகிறது. போலும்.
    என் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள். ஆனால் இவன் ஜடபரதன்.

    எனினும் தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி என்பார்கள். ரேடியோ மிர்ச்சியில். (சும்மா ஒரு ரைமுக்காக)(ரேடியோ மிர்ச்சியில் இதை பற்றியெல்லாம் பேசமாட்டார்கள் -ஒரு நிமிடம் பாட்டு--300 நிமிடங்கள் லொட லொட...)

    எப்படி இருந்தாலும். நீங்கள் வாழ்க மகிழ்ச்சியுடன் பல்லாண்டு .இறைஅருளை பெற்று. இன்பமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman November 4, 2013 at 3:20 PM

      //இவனின் மூதாதையர்கள் பூர்வீகம் திட்டை.//

      ஆஹா, தங்கள் மூதாதையர்களின் பூர்வீகம் என்று தெரியாமலேயே நான் திட்டைக்கு இருமுறை சென்று குரு பகவானை தரிஸித்துள்ளேன்.

      >>>>>

      நீக்கு
    2. Pattabi Raman November 4, 2013 at 3:20 PM

      //ஏதோ ஒருபிறவியில் நான் உங்களுக்கு அண்ணாவாக நிச்சயம் இருந்திருப்பேன். . அது இந்த பிறவியில் வெளிப்படுகிறது. போலும். என் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள்.//

      மகிழ்ச்சி. ;)))))

      நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று சொன்னால் புரியுமா ..... !!!!!

      //எப்படி இருந்தாலும். நீங்கள் வாழ்க மகிழ்ச்சியுடன் பல்லாண்டு. இறை அருளை பெற்று. இன்பமாக.//

      தங்கள் ஆசிகளுக்கு மிகவும் சந்தோஷம் அண்ணா. vgk

      நீக்கு
  87. புதிய தகவல். அறிந்து கொண்டோம்....ஆனா ஸ்வீட் 16 என்றதும் ஏதோ அந்த வயதிற்கு உரிய அந்த வயதினர் காணும் ஏதோ கனாக்காலம் என்று நினைத்தோம். ஸ்ரீதேவியைப் பார்த்ததும்....ஒரு வேளை 16 வயதினிலே?! ம்ம்ம் அதான் ஸ்வீட் 16 போலும்....என்று வந்தால் 16 ஸ்வீட்ஸ்.....ம்ம்ம் சரி ஒவ்வொன்றின் ரிசிப்பி போலும் நு பார்த்தா பால் ஸ்வீட் நு ஆரம்பித்து கோமாதாக்குப் போய்.......ஸ்வீட் 16 அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu March 24, 2015 at 5:23 PM

      வாங்கோ .... வணக்கம்.

      //புதிய தகவல். அறிந்து கொண்டோம்....//

      மிக்க மகிழ்ச்சி.

      //ஆனா ஸ்வீட் 16 என்றதும் ஏதோ அந்த வயதிற்கு உரிய அந்த வயதினர் காணும் ஏதோ கனாக்காலம் என்று நினைத்தோம்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நம்மில் பெரும்பாலானோர் 16ஐக் [கனாக்காலத்தைக்] கடந்து வந்துள்ளவர்கள் தானே! தாங்கள் நினைத்ததில் ஒன்றும் தப்பே இல்லை.

      //ஸ்ரீதேவியைப் பார்த்ததும்....ஒரு வேளை 16 வயதினிலே?! ம்ம்ம் அதான் ஸ்வீட் 16 போலும்....என்று வந்தால்//

      சுண்டியிழுக்கும் தலைப்பும், அதற்கேற்றதோர் நடிகையின் படமும் போட்டுள்ளதால், நம் சேட்டைக்காரன் அவர்கள் உள்பட ஏராளமானோர் இங்கு வருகை தந்து கருத்தளித்துள்ளனர் என நினைக்கிறேன்.

      சேட்டை அவர்களின் கமெண்ட்ஸ் + அவருக்கான என் பதில் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். :)

      //16 ஸ்வீட்ஸ்..... ம்ம்ம் சரி ஒவ்வொன்றின் ரிசிப்பி போலும் ன்னு பார்த்தா ...... பால் ஸ்வீட் ன்னு ஆரம்பித்து ..... கோமாதாக்குப் போய்....... ஸ்வீட் 16 அருமை!//

      அன்பான வருகைக்கும், அருமை என்ற பாராட்டுக்கும், இனிமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  88. முதல் மரியாதை என்ற சினிமாவில் ஒரு பாட்டு வரும் "பழைய நெனப்புத்தான் பேராண்டி" என்று. அது மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  89. iபதினாறு வகை இனிப்புகளும் பார்க்கவே அருமையாக இருக்கு. பதிவும் மிக அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Saratha J May 30, 2015 at 8:30 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பதினாறு வகை இனிப்புகளும் பார்க்கவே அருமையாக இருக்கு. பதிவும் மிக அருமை சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் ’அருமை’ என்ற அருமையான கருத்துக்களுக்கும் என் நன்றிகள், மேடம்.

      நீக்கு
  90. புதிய தகவல்கள் அருமை.

    இனிப்புகளுக்கு நன்றி.

    ஆனா இப்ப இந்த லயாக்குட்டி, அவள் ஒரு இனிப்புப் பிரியை, போட்டிக்கு வந்து விடுகிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 20, 2015 at 3:30 PM

      வாங்கோ, வணக்கம்.

      //புதிய தகவல்கள் அருமை. இனிப்புகளுக்கு நன்றி.

      ஆனா இப்ப இந்த லயாக்குட்டி, அவள் ஒரு இனிப்புப் பிரியை, போட்டிக்கு வந்து விடுகிறாள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான லயாக்குட்டி பற்றிய செய்திகளுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

      நீக்கு
  91. //ஸ்வீட் சிக்ஸ்டீன்” எல்லாவற்றையும் எல்லோரும் ருசி பார்த்தீங்களா?//
    நல்ல லஞ்ச் டயத்துல ஸ்வீட்ஸ் படம் பாத்துட்டு சாப்பிட போனா அங்க இன்ற்ய மெனுசுண்டவத்த குழம்பு கத்தரிக்கா காரக்கறி. கீரை மசியல். மிளகுரசம், கரைச்சமோரு. ஸ்வீட் சாப்பிடதெல்லாம் ஜீரணமாச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 13, 2015 at 11:42 AM

      வாங்கோ, வணக்கம்.

      *ஸ்வீட் சிக்ஸ்டீன்” எல்லாவற்றையும் எல்லோரும் ருசி பார்த்தீங்களா?*

      //நல்ல லஞ்ச் டயத்துல ஸ்வீட்ஸ் படம் பாத்துட்டு சாப்பிட போனா அங்க இன்றய மெனு சுண்டவத்த குழம்பு கத்தரிக்கா காரக்கறி. கீரை மசியல். மிளகுரசம், கரைச்சமோரு. ஸ்வீட் சாப்பிடதெல்லாம் ஜீரணமாச்சு//

      அடடா, பத்திய சமையலெல்லாம் சொல்லி என் பசியைக் இப்போக் கிளப்பி விட்டுட்டீங்களே !

      இதில் சுண்டவற்றல் குழம்பு + கீரை மசியல் + மிளகு ரஸம் + கரைத்த மோர் ஆகிய நான்கும் எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம்ஸ் ஆச்சே ! :)

      கத்திரிக்காய் மட்டும் கறியாகவோ அல்லது குழம்புத்தான் ஆகவோ செய்து போட்டால் நான் சாப்பிடுவது இல்லை. அதைப் பொரிச்சகூட்டாகச் செய்தால் மட்டுமே விரும்பிச் சாப்பிடுவது உண்டு. :)

      கொடுத்துவெச்ச மகராஜி .... வேளாவேளைக்கு டாண்ணு டயப்படி சாப்பிடப்போக முடிகிறது ... உங்களால். :)

      நான் இப்போது தான் 1-1/2 கிலோ முட்டக்கோஸ், பொடிப்பொடியா டைமன்கல்கண்டுபோல அழகாக நறுக்கித்தந்துவிட்டு இங்கு வந்துள்ளேன். :)

      நீக்கு
    2. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 நவம்பர் வரை முதல் 23 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
  92. ஸவீட்ஸு பசுகன்னு படங்கலா சூப்பராகீதுன்னு சொல்லினதுக்குள்ளார அதிராவங்க கமண்டு உங்க பதிலு படிச்சி சிரிச்சிபோட்டு வாரதுக்குள்ளார ஒருமணி சமயம் ஓடி போகுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 10:36 AM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //ஸவீட்ஸு பசுகன்னு படங்கலா சூப்பராகீதுன்னு சொல்லினதுக்குள்ளார அதிராவங்க கமண்டு உங்க பதிலு படிச்சி சிரிச்சிபோட்டு வாரதுக்குள்ளார ஒருமணி சமயம் ஓடி போகுது//

      நானும் அதிராவின் கமெண்ட்ஸ்களை மட்டும் மீண்டும் படித்தேன், ரஸித்தேன், சிரித்தேன். அதற்கே அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது.

      அன்பான தங்களின் வருகைக்கும், அதிராவின் கமெண்ட்ஸ் + என் பதில்களைப் படித்து எடுத்துச் சொல்லியுள்ளதற்கு மிக்க நன்றிம்மா. :)

      நீக்கு
  93. கோமாதா என்குலமாதா..... காமதேனு பசு பசுகன்றுகுட்டி படங்கள் திகட்ட திகட்ட ஸ்வீட்ஸ் வகைகள்.பதிவு களை கட்டுது
    .

    பதிலளிநீக்கு
  94. ஸ்வீட்டில் துவங்கி ஸ்வீட்டான விஷயங்களுடன் முடித்தது ரசிக்கத்தக்கது...

    பதிலளிநீக்கு
  95. ஸ்வீட்டான பதிவு, சுவையான பின்னூட்டங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். October 8, 2017 at 12:55 PM

      //ஸ்வீட்டான பதிவு, சுவையான பின்னூட்டங்கள்.//

      மிக்க நன்றி. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! :)

      நீக்கு