என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 3 நவம்பர், 2012

"ஆனந்த விகடன்--என் விகடன்--வலையோசை” இல் “என் வலைப்பூ”

அன்புடையீர்,

வணக்கம்.

முன்பெல்லாம் ஒரு எழுத்தாளரின் பெயரோ அல்லது ஒரு படைப்போ ஒரு பிரபல தமிழ் இதழில் [பத்திரிகையொன்றில்] அச்சேறி வெளியிடப்படுகிறது என்பது மிகப்பெரியதோர் விஷயமாக இருந்தது. இன்றும் கூட அதே நிலை தான். 

இதனால் பல எழுத்தாளர்களுக்கு, தங்களின் கற்பனை வளத்தினைப் பெருக்கிக்கொள்ளவும், நல்ல நல்ல படைப்புகளாக எழுத வேண்டியதோர் உற்சாகத்தை  ஏற்படுத்தவும், அவ்வாறு தரமான படைப்புகளைத்தரும் எழுத்தாளர்களை நாளடைவில் வாசகர்கள் மத்தியில் பிரபலமாக்கவும், இதுபோன்ற பிரபல பத்திரிகைகள் உதவி வந்துள்ளன என்பதை நாம்  மறுப்பதற்கு இல்லை..

நான் கூட 2005 முதல் 2010 வரை, பல படைப்புகளை எழுதி, பல்வேறு தமிழ் வார / மாத இதழ்களில்  அவை வெளியாகி, எனக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டி வந்தன என்பதையும் இங்கு கூறிக்கொள்கிறேன்..

இருப்பினும் பத்திரிகைகளுக்கு நம் படைப்புகளை எழுதி அனுப்பி, அவை வெளியாகுமா? வெளியாகாமல் நிராகரிக்கப்படுமா? என நீண்ட நாட்கள், காத்திருந்து காத்திருந்து பல நேரங்களில் நான் சோர்வடைந்ததும் உண்டு  

ஒரு பத்திரிகையால் நிராகரிக்கப்படும் ஓர் படைப்பு வேறு ஒரு பத்திரிகையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு, அங்கீகாரம் அளிக்கப்பட்டதும் உண்டு. 

இதுபோல பிரசுரித்து வெளியாகும் நம் படைப்புகள் பலவற்றில், நாம் புஷ்டியாக அனுப்பி வைத்த நம் படைப்புகள் பலவும், ஆங்காங்கே வெட்டப்பட்டு, செதுக்கப்பட்டு, சுருக்கப்பட்டு, நசுக்கப்பட்டு   மிகவும் பலகீனமாகவே வெளியிடப்படுவதும் உண்டு. 

EDITING செய்யாமால் அவர்களால் எதையும் அப்படியே வெளியிட முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவர்களையும் நாம் குறை சொல்ல முடியாது. 

சம்பந்தப்பட்ட படைப்பாளிக்கு மட்டும், இந்த இவர்களின் EDITING என்ற செயல், மிகவும் வருத்தம் அளிப்பதுண்டு. எரிச்சல் ஊட்டுவதும் உண்டு. 

மொத்தத்தில் பத்திரிகையொன்றில் நம் படைப்பு வெளியாக வேண்டும் என்றால், அதற்காக நாம் செல்வழிக்கும் உழைப்பு, காலம், நேரம், தபால செலவு, பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவை மிகவும் அதிகமாகத் தேவைப்படுகிறது. 

என் நண்பரும் பிரபல எழுத்தாளருமான  திரு. ரிஷபன் அவர்களால் எனக்கு தனியே ஒரு வலைப்பூ உருவாக்கிக்கொடுக்கப்பட்டது 

அதனால் 2011 முதல் என்னுடைய வலைப்பூவில் மட்டுமே, நான் எழுத ஆரம்பித்தேன். வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பிறகு பத்திரிகைகளுக்கு எழுதுவதை சுத்தமாக நான் நிறுத்தி விட்டேன்

அதுபோல வலைப்பதிவினில் மட்டும் எழுத ஆரம்பித்த பிறகு என் படைப்புகளுக்கு உடனுக்குடன், பலரின் கருத்துக்கள் கிடைக்கப்பட்டு என்னை மகிழ்ச்சியடையச்செய்தன. உற்சாகப்படுத்தி வந்தன. உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களை சுலபமாக என்னால் என் எழுத்துக்களால் எட்டிப்பிடிக்க ஏதுவாகிப்போனது.

இதுபோல பல எழுத்தாளர்களுக்கு  தங்கள் கருத்துக்களையும், கற்பனைகளையும், அனுபவத்தையும், படைப்புகளாக அழகாக முழு சுதந்திரமாக எழுதி வெளியிட,  அவர்களின் வலைப்பக்கமே உதவி வருகிறது.  

உடனுக்குடன் தங்கள் படைப்புகளுக்கு, வாசகர்களிடமிருந்து கருத்துக்கள் பெற முடிவதால், படைப்பாளிக்கு உற்சாகமும், ஆத்ம திருப்தியும் ஏற்பட்டு வருகிறது.

இன்று பத்திரிகை உலகமே, நம் வலைப்பூக்களின் பக்கம் தன் பார்வையைச் செலுத்தி வருகிறது என்பது, நம் வலைப்பூக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியும் அங்கீகாரமும் எனச் சொல்லி நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம்.

குறிப்பாக தமிழ்ப்பத்திரிகை உலகில் மிகப்புகழ் பெற்ற “ஆனந்த விகடன்” என்ற பத்திரிகை செய்துவரும் பணி மகத்தானது. ”ஆனந்த விகடன்” குழுமத்தின் “என் விகடன்” என்ற இதழினில், ”வலையோசை” என்ற பகுதியில், வாராவாரம், ஒவ்வொரு ஊரிலும் உள்ள தமிழ் வலைப்பதிவர்களை அடையாளம் கண்டு, சிறப்பித்து எழுதி வருகிறார்கள்.

சென்ற வாரத்தில் என்னைப்பற்றியும், என் வலைப்பூவினைப்பற்றியும் சிறப்பித்து எழுதியுள்ளார்கள்.

இணைப்பு இதோ:

http://en.vikatan.com/article.php?aid=25811&sid=751&mid=33

humourous write up by Vai Gopalakrishnan





வை.கோபாலகிருஷ்ணன்

திருச்சியைச் சேர்ந்த வை.கோபாலகிருஷ்ணன் பி.ஹெச்.இ.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

தன்னுடைய http://www.gopu1949.blogspot.in/  
என்ற வலைப்பூவில் நகைச்சுவை, ஆன்மீகம், அரசியல் என்று கலந்துகட்டி எழுதிவருகிறார். அவருடைய வலைப்பூவில் இருந்து...


ராம ராஜ்யத்தில் ஊழல் தொடங்கி இருந்தால்...

ராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ராமனின் அணி வெற்றிவாகை சூடியது. ராம பக்தன் ஹனுமார்,  தன் அலுவல் நிமித்தமாக சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்ததற்கான பயணச் செலவுகளைப் பட்டியலிட்டு, அயோத்தியா அரசு நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கிறார்.

ஹனுமாருடைய பயணச் செலவுகளின் பட்டியலைச் சரிபார்த்து, பணப்பட்டுவாடா செய்ய பரிந்துரைக்கவேண்டிய குமாஸ்தா அதில் மூன்று விதமான ஆட்சேபணைகளைக் குறிப்பிட்டு மேலதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுசெல்கிறார்.

குமாஸ்தா சுட்டிக் காட்டியுள்ள ஆட்சேபணைகள்:    

1. அப்போது முழுப் பொறுப்புக்கும் அதிகாரியாகவும் அயோத்தி ராஜாவாகவும் பதவி வகித்துவந்த பரதன் அவர்களிடம், முன் அனுமதி ஏதும் பெறாமல், ஹனுமார் அவர்கள், இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

2. கிரேடு ‘D’யில்  குட்டி அதிகாரியாக விளங்கிய ஹனுமார், ஆகாய மார்க்கமாக அலுவலகப் பயணத்தினை மேற்கொள்ளவும், அந்தப் பயணச் செலவுகளைத் திரும்பப் பெறவும், அரசாங்கச் சட்டதிட்டங்களின்படி தகுதியற்றவராக உள்ளார்.

3.ஹனுமாருக்குப் பணிக்கப்பட்டிருந்த வேலை, சஞ்சீவி மலையில் உள்ள ஒரே ஒரு சிறிய செடியினைப் பறித்துக்கொண்டு வருவது மட்டுமே. ஆனால், இவர் அவ்வாறு செய்யாமல், ஒரு மிகப் பெரிய சஞ்சீவி மலையையே அப்படியே பெயர்த்து எடுத்து வந்துள்ளார். இதனால், அவரின் ஆகாயப் பயணத்தில் ஏற்றி வந்துள்ள சரக்கின் எடை மிகவும் அதிகமாக உள்ளது.  



இவ்வாறெல்லாம் சொல்லி அந்த குமாஸ்தாவால் ஹனுமாரின் பயணப் பட்டியல் நிராகரிக்கப்பட்டது.  

இது ராஜாவான ராமரின் கவனத்துக்குச் சென்றது. இருப்பினும் தர்மத்தையே எப்போதும் அனுஷ்டிக்கும் ராஜாவான ராமராலும் இந்த விஷயத்தில், தன்னுடைய ஸ்பெஷல் பவர்களை உபயோகித்து ஹனுமாருக்கு உதவி செய்யமுடியாது போனதால், 'இந்த முடிவினை தயவுசெய்து, முடிந்தால் மறு பரிசீலனை செய்யவும்’ என்று அடிக் குறிப்பிட்டு திரும்ப அனுப்ப மட்டுமே ராமரால் முடிந்தது.

இதனையெல்லாம் கேள்விப்பட்டு மிகவும் வருந்திய ஜாம்பவான் (மிகப்பெரிய கரடி போன்ற அதிகாரி) சம்பந்தப்பட்ட குமாஸ்தாவை தனியாக அழைத்துச்சென்று, ஹனுமாரின் இந்த அலுவலகப் பயணத்தினால் கிடைக்கும் தொகையில் ஒரு பத்து சதவீதத்தை அந்த குமாஸ்தாவுக்கு ஒதுக்கீடு செய்துவிடுவதாக வாக்களிக்கிறார்.

இதைக் கேட்டதும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்த அந்த குமாஸ்தா, தான் ஆட்சேபணை எழுப்பிய அந்த பயணப் பட்டியலைத் திரும்பப் பெற்று, கீழ்க்கண்டவாறு எழுத ஆரம்பிக்கிறார்:

1. பரதன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்தாலும், ராமரின் பாதுகைகளே அப்போது ராஜாவாக எல்லோராலும் ஏற்கப்பட்டிருந்தது. அதனால், ராஜா என்ற பெயரில் அதிகாரம் ஏதும் இல்லாமல் இருந்த பரதனிடம் பயணத்திற்கான, முன் அனுமதி பெறாதது, ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

2. மேலும், இதுபோன்ற ஒரு நெருக்கடியான அவசர வேலைகளின் நிமித்தம், தகுதியற்ற அதிகாரிகள்கூட ஆகாய மார்க்கத்தில் பறந்து சென்று வேலைகளை முடித்துவந்து, பிறகு சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளின் அனுமதி பெற்று, அந்தக் கணக்கினை நேர் செய்துகொள்ளலாம் என்ற விதிமுறைகள் உள்ளன. அதுபோன்ற சில முன் உதாரணங்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.    

3. அதுபோலவே அதிகக் கனமுள்ள பொருளான ஒரு மிகப் பெரிய சஞ்சீவி மலையை ஹனுமார் கொண்டுவந்ததிலும் ஓர் நியாயத்தினை உணரமுடிகிறது. அவரால் கொண்டுவர பணிக்கப்பட்டச் செடிக்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு செடியினைத் தவறுதலாக அவர் கொண்டுவந்திருந்தால், அவர் மீண்டும் மிகச் சரியான செடியினைக் கொண்டுவர மீண்டும் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் பொன்னான நேரம் வீணாவதுடன், அவருக்கான அடுத்தடுத்த பயணச் செலவுகளையும் நாம் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அதுபோன்ற தவறு ஏதும் நடப்பதற்கானச் சந்தர்ப்பம் இவரின் இந்தப் பயணவிஷயத்தில் எப்படியோ தவிர்க்கப்பட்டுள்ளது.

4. இவரின் பயணப் பட்டியல் செலவுத் தொகையினை முழுவதுமாக அனுமதிக்க நான் பரிந்துரைக்கிறேன்!

முழுவதும் படிக்க இணைப்பு இதோ:


ooooooooOoooooooo 

சாமர்த்தியமான பதில்!
முல்லா பெரிய அறிவாளி. அவருக்கு எப்படி ஆபத்தோ துன்பங்களோ வந்தாலும் அதற்காகக் கவலைப்படாமல், பயப்படாமல், தனது அறிவாற்றலால் தப்பிவிடுவார். 

ஊர் எல்லாம் முல்லாவின் ஞானத்தையே பெருமையாகப் பேசியது. அது அந்த நாட்டு மன்னரின் காதுக்கும் எட்டியது.

அவருடைய அறிவாற்றலைப் சோதிக்க விரும்பிய மன்னர் ஒருநாள், முல்லாவை அரசவைக்கு வரவழைத்தார். முல்லாவும் வந்தார். மன்னரை வணங்கியபடி நின்றார்.

''முல்லா, உமது அறிவைப்பற்றி ஊரெல்லாம் மெச்சுகிறார்கள். நீ உண்மையிலேயே அறிவாளியா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். அதனால், உமக்கு ஒரு பரிசோதனை வைக்கப்போகிறேன். 

நீ ஏதேனும் ஒன்றை இப்போது இந்தச் சபையில் கூற வேண்டும். நீ சொன்னது உண்மையாக இருந்தால் உன்னுடைய தலை வெட்டப்படும். நீ சொன்னது பொய்யாக இருந்தால் நீ தூக்கிலிடப்படுவாய்'' என்றார் மன்னர்.

மன்னர் இப்படிச் சொன்னதும் முல்லா அதிர்ந்தார். மன்னர் எப்படியும் நம்மை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். நாம் உண்மையைச் சொன்னாலும், பொய்யைச் சொன்னாலும் நமக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. இதை மிகவும் சாமர்த்தியமாகவே சமாளிக்க வேண்டும் என்று முல்லா தீர்மானித்தார். முல்லா தீவிரமாக யோசித்தபடி இருந்தார். முல்லா இப்போது என்ன சொல்லப்போகிறார் என்பதைச் சபையினரும், மன்னரும் உன்னிப்பாக எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

முல்லா மன்னரிடம், ''மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில்தான் போடப் போகிறீர்கள்'' என்றார்.

முல்லா அப்படிச் சொன்னதும், மன்னர் திகைப்படைந்தார். 

முல்லா சொன்னது உண்மையானால், அவருடைய தலை வெட்டப்பட வேண்டும். தலை வெட்டப்பட்டால் அவர் சொன்னது பொய்யாகிவிடும். முல்லா சொன்னது பொய் என்று வைத்துக்கொண்டால், முல்லாவைத் தூக்கில்போட வேண்டும். தூக்கில்போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்று கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் தலையை வெட்ட வேண்டும்.  

இப்படி ஒரு குழப்பத்தைத் தம்முடைய அறிவாற்றலால் தோற்றுவித்து, மன்னரை முல்லா திக்குமுக்காட வைத்துவிட்டார். மன்னரால் எதுவும் தீர்ப்புகூற முடியவில்லை.

சாதுர்யமாகப் பேசி, தனக்கு வந்த ஆபத்தைத் தன்னுடைய அறிவாற்றலால் சமாளித்த முல்லாவைப் பாராட்டி, பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து அனுப்பினார் மன்னர்!

முழுவதும் படிக்க இணைப்பு இதோ:




ooooooooOoooooooo 




மருத்துவரின் அறிவுரை!

கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மனைவியிடம் டாக்டர் சில அறிவுரைகள்கூறினார்...

1. நல்ல சத்துள்ள ஆகாரமாக அவருக்கு அளியுங்கள்.

2. நல்ல மன நிலையில் எப்போதும் அவர் சந்தோஷமாக இருக்கும்படி மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

3. உங்கள் பிரச்னைகள் எதையும் அவரிடம் சொல்லாதீர்கள்.

4. டி.வி. சீரியல் நீங்களும் பார்க்க வேண்டாம். அவரும் பார்க்க வேண்டாம்.

5. புத்தாடைகளோ நகைகளோ கேட்டு அவரை நச்சரிக்க வேண்டாம்.

6. இவற்றை எல்லாம் ஓர் ஆண்டுக்கு மட்டும் கடைபிடியுங்கள் போதும். அவர்  பிழைத்து பழையபடி நல்லாவே ஆகிவிடுவார். கவலை வேண்டாம்.

திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் கணவர் மனைவியிடம் கேட்கிறார்: ''டாக்டர் உன்னிடம் என்ன சொன்னார்?''

மனைவி: ''நீங்கள் உயிருடன் இருக்கக் கொஞ்சமும் சான்ஸே இல்லை என்று சொன்னார்.''

முழுவதும் படிக்க இணைப்பு இதோ:



ooooooooOoooooooo 




மகனின் சந்தேகம்!



தந்தையும் மகனும் ஒரு மிருகக்காட்சி சாலையில் புலியை அடைத்து வைத்துள்ள கூண்டின் வெளியே நிற்கின்றனர். 

புலியின் வேகம், ஆற்றல், சக்தி, பாய்ச்சல், அதனால் ஏற்படக்கூடும் ஆபத்துகள் எனத் தந்தை விபரமாகச் சொல்ல மகனும் உன்னிப்பாகக் கேட்டுக்கொள்கிறான்.

மகன்: ''அப்பா, எனக்கு ஒரு சிறு சந்தேகம்...''

தந்தை: ''சந்தேகம் எதுவானாலும் உடனே கேட்டுத் தெரிந்துகொள்வதே நல்லது. கேள் மகனே கேள்!''

மகன்: ''அப்பா, ஒருவேளை இந்தப் புலி கூண்டில் இருந்து தப்பி வெளியேவந்து உங்களை அடித்துச் சாப்பிட்டுவிட்டால்?''

தந்தை: ''அதுபோல நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லைதான்''

மகன்: ''அப்போ நான் எத்தனாம் நம்பர் பஸ்ஸைப்பிடித்து வீட்டுக்குப் போகணும்?''

முழுவதும் படிக்க இணைப்பு இதோ:




ooooooooOoooooooo 



வேடிக்கை வாய்ப்பாடு!

எதையுமே ஒரு ராகத்துடன் பாட்டாக... அதுவும் எல்லோரும் சேர்ந்து கோரஸாகச் சொல்லும்போது அதுசுலபமாக மனதில் பதியும். 

உதாரணத்துக்கு, நான் ஒண்ணாவது, இரண்டாவது படிக்கும்போது சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒரு வேடிக்கையான பாடல் இதோ இங்கே:

1 +1=2 ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு...  ஜப்பான்காரன் குண்டு

2 +1=3 ரெண்டும் ஒண்ணும் மூணு...  ஐயா வீட்டுத் தூணு

3+ 1=4 மூணும் ஒண்ணும் நாலு...  கருப்பு நாயி வாலு

4+1=5 நாலும் ஓண்ணும் அஞ்சு...  பாட்டி தலை பஞ்சு

5 +1=6 அஞ்சும் ஒண்ணும் ஆறு...  ரோட்டுல ஓடுது காரு

6 +1=7 ஆறும் ஒண்ணும் ஏழு...  அம்மா தந்த கூழு

7 +1=8 ஏழும் ஒண்ணும் எட்டு...  மாமி தந்த புட்டு

8+ 1=9 எட்டும் ஒண்ணும் ஒம்போது...  வெத்தல பாக்கு திம்போது (தின்பது)

9 +1=10 ஒம்போதும் ஒண்ணும் பத்து...  உன் வாயக் கொஞ்சம் பொத்து!


முழுவதும் படிக்க இணைப்பு இதோ:



ooooooooOoooooooo 





என்னை அடையாளம் கண்டு சிறப்பித்துள்ள
 “ஆனந்த விகடன் - என் விகடன் - வலையோசை பகுதி” 
குழுவினருக்கு என் மனமார்ந்த 
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்
VGK







பின்குறிப்பு:

சென்ற வாரம் என் அன்புக்குரிய நண்பரும், நலம் விரும்பியும், எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் அவர்களைப்பற்றி, இதே ஆனந்த விகடன், என் விகடன், வலையோசைப்பகுதியில் வெளியிட்டிருந்தார்கள்.

எனக்கும் ஆனந்த விகடனுக்கும் இதுவரை எந்தவொரு நேரடியான தொடர்பும் இல்லாமலேயே இருந்தபோதும், என்னை இந்தவாரம் அவர்களின் வலையோசையில் அடையாளம் காட்டியுள்ளது எனக்கே மிகவும் வியப்பாக உள்ளது. 

எனக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தின்  பின்னணியில் நிச்சயமாக திரு. ரிஷபன் அவர்கள் தான் இருக்கக்கூடும்  என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதனால் என் நலம் விரும்பியான திரு. ரிஷபன் அவர்களுக்கு  என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இதுபோல “ஆனந்தவிகடன் - என் விகடன் - வலையோசை” பகுதியில் என்னைப்பற்றி எழுதியுள்ளார்கள் என்ற முதல் தகவலை எனக்கு இணைப்புடன் மின்னஞ்சலிலும், தொலைபேசி மூலமும் தெரிவித்த திரு. தி தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



[From  VGK]





125 கருத்துகள்:

  1. ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு பகிரப்பட்டது குறித்து முதலில் உங்களுக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அண்ணா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ மஞ்சூஊஊஊஊஊ ! ;)))))

      தங்களின் அன்பான முதல் வாழ்த்து எனக்கு மிகுந்த சந்தோஷமும் உற்சாகமும் தருகிறது. வாழ்க !!

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  2. படைப்பாளிகளின் படைப்புகள் பத்திரிகையில் வரும்போது படைப்பாளியின் சந்தோஷ உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை தங்களின் எழுத்துகளில் உணரமுடிகிறது அண்ணா....

    2005 ல இருந்து தங்களின் எழுத்துகள் கதைகளாக பத்திரிகையில் பிரசுரம் ஆனது மிகப்பெரிய விஷயம் அண்ணா.. அதற்கும் அன்புவாழ்த்துகள்...

    ஆனால் படைப்பாளியின் எழுத்துகள் வெட்டப்பட்டு, நசுக்கப்பட்டு வெளிவரும்போது படைப்பாளியின் மனம் படும் வேதனையை உணரமுடிகிறது.... அவர்களை ச்சொல்லியும் குற்றமில்லை உண்மையே.. பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருப்பதையும் ஒப்புக்கொள்ள முடிகிறது..





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK To மஞ்சு


      பத்திரிகை உலகுடன் தொடர்புகொண்ட படைப்பாளிகளின் பல்வேறு சந்தோஷங்கள் மற்றும் வருத்தங்களைப் புரிந்து கொண்டு கருத்திட்டுள்ளதற்கு மிகவும் சந்தோஷ்ம் மஞ்சு.

      அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
  3. நீங்கள் வலைப்பூ தொடங்கக் காரணமாக இருந்த ரிஷபனுடைய தன்னலமில்லாத இந்த அன்பை நினைத்து வியக்காமல் இருக்கமுடியவில்லை அண்ணா...

    வலைப்பூவில் எழுதத்தொடங்கியப்பின் தாங்கள் பத்திரிகையில் எழுதுவதை முழுமையாக விட்டுவிட்டதை அறியமுடிகிறது.... காரணத்தையும்...

    சுதந்திரமாக நம் வீட்டில் இருந்து நம் படைப்புகள் பிரகாசிப்பது நமக்கு சந்தோஷத்தை தருகிறது என்பதும் அறியமுடிகிறது அண்ணா....

    அதற்கு நீங்கள் இன்று கூட மறக்காமல் நன்றிகள் ரிஷபனுக்கு சொல்வதில் இருந்து தங்களின் நன்றி எத்தனை மகத்தானது என்பதை குருவாக ரிஷபனை உயர்த்தி சொல்வதில் அறியமுடிகிறது....


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK To மஞ்சு

      ஆம் மஞ்சு. எழுத்தாளர்களாகிய நாம் ஒரு சில படைப்புகளை மட்டுமே உருவாக்க முடியும்.

      என் அருமை நண்பர் திரு. ரிஷபன் அவர்கள் போன்றவர்களால் மட்டுமே தனது படைப்புகளையும் உருவாக்கி, அதேசமயம் ஒருசில படைப்பாளிகளையும் உருவாக்கிட முடியும்.

      போட்டியும் பொறாமைகளும் நிறைந்த இந்த எழுத்துலகில் திரு ரிஷபன் அவர்களைப்போன்றும், என் அன்புத்தங்கை மஞ்சுவைப்போன்றும் ஒருசில தங்கமான உள்ளங்களை ஆங்காங்கே காண்பதில் எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

      அன்புடன்
      கோபு அண்ணா

      நீக்கு
  4. விகடன் வலையோசையில் அறிமுகம் கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் எழுத்துக்களின் தீவிர ரசிகன் என்கிற முறையில் எனது சந்தோஷத்தை பதிவு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் November 3, 2012 3:37 AM
      //விகடன் வலையோசையில் அறிமுகம் கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் எழுத்துக்களின் தீவிர ரசிகன் என்கிற முறையில் எனது சந்தோஷத்தை பதிவு செய்கிறேன்.//

      எல்லாப்புகழும் என் ஆருயிர் நண்பரும், நலம் விரும்பியும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமாகிய தங்களையே சாரும்.

      பிரியமுள்ள
      வீ.......ஜீ ;)))))
      [VGK]

      நீக்கு
  5. தாங்கள் அறியாமலேயே தங்களின் பெயர் வலையோசையில் இடம்பெற்றது குறித்தும் ரிஷபனால் தான் இது சாத்தியமானது என்றும் சொல்லும்போது உங்களின் அன்புநிறைந்த மனதை நன்றியோடு மனநெகிழ்வோடு இங்கே சொல்லுவதில் இருந்தே உணரமுடிகிறது அண்ணா...

    மனம் நிறைந்த சந்தோஷங்கள் அண்ணா தங்களின் படைப்பு வலையோசையில் இடம் பெற்றமைக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK To மஞ்சு

      ஆமாம் மஞ்சு. எனக்கும் விகடனுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. என்னை விகடனிலிருந்து இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவும் இல்லை. நானும் யாரையும் இதுவரை இது சம்பந்தமாகத் தொடர்பு கொண்டதும் இல்லை.

      ஏற்கனவே வலையோசையில் 2-3 மாதங்கள் முன்பு இடம்பெற்ற ஓர் பதிவர், என்னை நேரில் சந்தித்தபோது, வலையோசையில் இடம்பெற நாம் நம்மைப்பற்றியும், நம் வலைப்பூவினைப் பற்றியும் எழுதி, நம் போட்டோவை இணைத்து மெயில் மூலமோ தபால் மூலமோ அப்ளை செய்ய வேண்டும் என என்னிடம், அவராகவே சொல்லிச்சென்றார்.

      நான் அதை சிரத்தையாகக் கேட்டுக்கொள்ளவும் இல்லை. வழக்கம்போல் அதை அப்படியே இந்தக்காதில் வாங்கி அந்தக்காதில் விட்டுவிட்டேன்.

      இதுபோன்ற விதிமுறைகள் இருக்கும் போது, எனக்கே தெரியாமல் என் புகைப்படத்துடன் என் வலைப்பூ விகடனின் வலையோசைப்பகுதியில் இடம் பெறுகிறது என்றால், அது எப்படி?

      என் நலம் விரும்பியான திரு. ரிஷபன் அவர்கள் செய்த உதவியாகத்தான் நிச்சயமாக இது இருக்க முடியும்.

      அவரைக்கேட்டால் இதெல்லாம் ஒரு உதவியா? இதற்கெல்லாம் ஒரு நன்றியா? என மட்டுமே சொல்லுவார்.
      அவரைப்பற்றியும் அவரின் நல்ல சுபாவம் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும்.

      தான் செய்யும் உதவிகளை சம்பந்தப்பட்ட பயனாளி உள்பட யாருக்கும் தெரிய வேண்டாமே, என நினைக்கும் ஓர் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர் அவர்.

      //மனம் நிறைந்த சந்தோஷங்கள் அண்ணா தங்களின் படைப்பு வலையோசையில் இடம் பெற்றமைக்கு..//

      மஞ்சுவுக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷமே.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  6. தங்களின் படைப்புகள் விகடனில் வந்தவைகளை இங்கே தொகுத்துக்கொடுத்து படிக்க வசதியாக லிங்கும் கொடுத்திருக்கீங்க அண்ணா....

    இதில் ஆஞ்சநேயரின் பகிர்வு மட்டும் படித்து கருத்திட்டது நினைவிருக்கிறது..

    மீதியும் படித்து கருத்து இடுகிறேன் அண்ணா...

    மீண்டும் ஒரு முறைமனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி November 3, 2012 3:41 AM
      //தங்களின் படைப்புகள் விகடனில் வந்தவைகளை இங்கே தொகுத்துக்கொடுத்து படிக்க வசதியாக லிங்கும் கொடுத்திருக்கீங்க அண்ணா....//

      மஞ்சூஊஊஊஊஊஊ,

      நீங்க 02.10.2012 அன்று வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html?showComment=1349605091455
      கொடுக்காத புதிய லிங்குகள் தான் இவை.
      அதுவரையில் எனக்கும் சந்தோஷமே.

      //இதில் ஆஞ்சநேயரின் பகிர்வு மட்டும் படித்து கருத்திட்டது நினைவிருக்கிறது..//

      ஆம், எனக்கும் அது நினைவிருக்கிறது.

      //மீதியும் படித்து கருத்து இடுகிறேன் அண்ணா...//

      ஒண்ணும் அவசரமே இல்லையம்மா. மெதுவா முடிஞ்சபோது ஒழிந்தபோது கருத்து இடுங்கோ போதும். மஞ்சுவின் பிஞ்சுக் கைவிரல்கள் ஜாக்கிரதை. [கருத்துக்களின் நீள அகல ஆழம் அதிகமாகவல்லவா இருக்கும் - அதனால் சொல்கிறேன்ம்மா]

      //மீண்டும் ஒரு முறைமனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அண்ணா...//

      ரொம்ப சந்தோஷம் மை டியர் மஞ்சுக்கண்ணாஆஆஆ! ;)))))

      நீக்கு
  7. ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிநேகிதி November 3, 2012 3:56 AM
      //ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்...//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் VGK

      நீக்கு
  8. வாழ்த்துக்கள். உங்கள் அனுத்து பதிவுகளுமே மிக அருமை
    வலையோசை பகுதியில் உங்களை பற்றி வந்தந்தில் மிக்க மகிழ்சி

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal November 3, 2012 4:03 AM
      வாழ்த்துக்கள். உங்கள் அனுத்து பதிவுகளுமே மிக அருமை
      வலையோசை பகுதியில் உங்களை பற்றி வந்தந்தில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம். அன்புடன் VGK

      நீக்கு
  9. ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்...உங்கள் அனுத்து பதிவுகளுமே மிக அருமை......
    வாழ்த்துக்கள். ..........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VijiParthiban November 3, 2012 4:16 AM
      //ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்...உங்கள் அனைத்துப் பதிவுகளுமே மிக அருமை...... வாழ்த்துக்கள். ......//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம். அன்புடன் VGK

      நீக்கு
  10. வாழ்த்துக்கள் வை.கோ சார்.ஆனந்த விகடன் வலையோசையில் தங்களைப் பற்றிய அறிமுகம் அறிந்து மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து அசத்துங்க..மிக நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar November 3, 2012 4:33 AM
      //வாழ்த்துக்கள் வை.கோ சார்.ஆனந்த விகடன் வலையோசையில் தங்களைப் பற்றிய அறிமுகம் அறிந்து மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து அசத்துங்க..மிக நல்ல பகிர்வு.//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம். அன்புடன் VGK

      நீக்கு
  11. ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் பதிவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மிகவும் சந்தோஷம், சார். வாழ்த்துக்கள்.

    //உடனுக்குடன் தங்கள் படைப்புகளுக்கு, வாசகர்களிடமிருந்து கருத்துக்கள் பெற முடிவதால், படைப்பாளிக்கு உற்சாகமும், ஆத்ம திருப்தியும் ஏற்பட்டு வருகிறது.//

    உண்மைதான் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMVI November 3, 2012 4:36 AM
      ***உடனுக்குடன் தங்கள் படைப்புகளுக்கு, வாசகர்களிடமிருந்து கருத்துக்கள் பெற முடிவதால், படைப்பாளிக்கு உற்சாகமும், ஆத்ம திருப்தியும் ஏற்பட்டு வருகிறது.***

      //உண்மைதான் சார்.// ஆமாம். சந்தோஷம்.

      //ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் பதிவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மிகவும் சந்தோஷம், சார். வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம். அன்புடன் VGK

      நீக்கு
  12. ஒரு நல்ல ரசிகர் தான் ஒரு நல்ல எழுத்தாளராக இருக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு தலை சிறந்த உதாரணம் சார்! வரிக்கு வரி வாசித்து, லயித்து, பிடித்த வரிகளை மேற்கோள் காட்டி எழுதுபவர்களை உற்சாகப்படுத்துகிற உங்களது பாங்கை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. உங்களது பன்முகத்திறன் என்ற தங்கத்தில் வைரம் பதித்தாற்போல் இந்த செய்தி வந்திருக்கிறது. தவறாமல் உங்களது இடுகைகளை வாசிக்கும் என் போன்றவர்களுக்கு இது அளப்பரிய மகிழ்ச்சியைத் தருகிறது. மென்மேலும் புகழ் சிறக்கட்டும் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேட்டைக்காரன் November 3, 2012 4:38 AM
      //ஒரு நல்ல ரசிகர் தான் ஒரு நல்ல எழுத்தாளராக இருக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு தலை சிறந்த உதாரணம் சார்! வரிக்கு வரி வாசித்து, லயித்து, பிடித்த வரிகளை மேற்கோள் காட்டி எழுதுபவர்களை உற்சாகப்படுத்துகிற உங்களது பாங்கை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. உங்களது பன்முகத்திறன் என்ற தங்கத்தில் வைரம் பதித்தாற்போல் இந்த செய்தி வந்திருக்கிறது. தவறாமல் உங்களது இடுகைகளை வாசிக்கும் என் போன்றவர்களுக்கு இது அளப்பரிய மகிழ்ச்சியைத் தருகிறது. மென்மேலும் புகழ் சிறக்கட்டும் சார்!//

      My Dear Mr VENU Sir, தங்களின் அன்பான வருகையும், அழகான மிகச்சிறப்பான பாராட்டு வரிகளும், வாழ்த்துகளும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.

      ஓரிரு வாரங்கள் முன்பு தங்களையும் என் விகடன் சென்னைப்பதிவில் வலையோசையில் அறிமுகம் செய்து கெளரவித்ததையும், திரு. தி.தமிழ் இளங்கோ மூலம் அறிந்து கொண்டேன். அதற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

      தங்களின் ஒருசில பதிவுகள் இன்னும் என்னால் படிக்கப்படாமல் உள்ளன. நான் கொஞ்சம் பொறுமையாக, வரிக்குவரி ரஸித்துப்படிக்க ஆசைப்படுபவன்.

      அதனால் அதற்கான நேரம் ஒதுக்க முடியாமலும், நேரம் ஒதுக்கும் போது மின்தடை போன்ற தொந்தரவுகளும் வந்து விடுகின்றன.

      எப்படியும் என்றாவது ஒருநாள் விட்டுப்போகும் அனைத்தையும் நிச்சயமாகப் படித்துக் கருத்தளித்து விடுவேன்.

      அன்புடன் தங்கள்,
      VGK

      நீக்கு
  13. //சென்ற வாரம் என் அன்புக்குரிய நண்பரும், நலம் விரும்பியும், எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் அவர்களைப்பற்றி, இதே ஆனந்த விகடன், என் விகடன், வலையோசைப்பகுதியில் வெளியிட்டிருந்தார்கள்.//

    திரு.ரிஷபன் அவர்களின் இடுகைகளைத் தவறாமல் வாசிப்பவன்; அவரது சொல்வீச்சில் லயிப்பவன் என்ற முறையில் உங்கள் சார்பாக அவருக்கும் எனது நன்றியையும், உளமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். குருவும் சிஷ்யரும் மற்றவர்களைப் பாராட்டுவதில் சிக்கனமே காட்டுவதில்லை. இருவருக்கும் என் சிரம்தாழ்த்திய வணக்கங்கள் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Mr VENU Sir,

      //குருவும் சிஷ்யரும் மற்றவர்களைப் பாராட்டுவதில் சிக்கனமே காட்டுவதில்லை. இருவருக்கும் என் சிரம்தாழ்த்திய வணக்கங்கள் சார்!//

      நான் சிஷ்யன். திரு. ரிஷபன் என் குரு என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

      குருவின் குருவை பரமகுரு என்றும்
      அந்த பரமகுருவின் குருவை பரமார்த்த குரு என்றும்,
      அந்த பரமார்த்த குருவின் குருவை பரமேஷ்டி குரு என்றும் ஏதேதோ குருபரம்பரை பற்றிச் சொல்லுவார்கள்.

      நகைச்சுவையாக எழுதுவதில் பதிவுலகில் உள்ள அனைவருக்குமே நீங்கள் தான் மிகப்பெரிய பரமேஷ்டி குரு ஆவீர்கள். தங்களுக்கு எங்கள் குரு வந்தனங்கள்.

      [குரு பாதுகையில் காணிக்கை ஏதும் வைக்கச்சொல்லி கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதிவிட்டேன். ;))))) ]

      அன்புடன்
      VGK

      நீக்கு
  14. ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களை அறிமுகப்படுத்தி உங்களின் பதிவில் சிலவற்றையும் அவர்கள் பிரசுரித்திருப்பது மட்டற்ற மகிழ்வாயிருக்கிறது.

    வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!!

    வலையோசையில் உங்களைப்பற்றிப் பார்க்கும் போது வாசகரான எமக்கே இப்படி மகிழ்வாயுள்ளதே. உங்களுக்கேற்பட்ட சந்தோஷம் எத்தையதாக இருக்கும் என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.
    எதிர்பாராமல் கிடைத்த இந்தச் சந்தோஷத்துடன் நின்றுவிடாமல் உங்கள் பதிவுகளை தொடர்ந்தும் உங்களின் வலைப்பூவில் பதிவிடுவீர்களென நம்புகிறேன்.

    தயவு செய்து உங்கள் எழுத்துப் பணியை தொடர வேண்டுமெனவும் புதிய பதிவுகளை விரவில் பதிவிட வேண்டுமெனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதிNovember 3, 2012 4:53 AM

      வாங்கோ இளமதி, வாங்கோ; செளக்யமா இருக்கீங்களா?
      என்ன நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க? உங்க மற்ற தோழிகளையெல்லாம் இன்னும் காணோம்! சரி, அதனால் பரவாயில்லை. நீங்களாவது வந்தீங்களே. அது போதும் எனக்கு, இப்போதைக்கு. அவங்களெல்லாம் மெதுவாகவே வரட்டும்.

      //ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களை அறிமுகப்படுத்தி உங்களின் பதிவில் சிலவற்றையும் அவர்கள் பிரசுரித்திருப்பது மட்டற்ற மகிழ்வாயிருக்கிறது.

      வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!!//

      ரொம்ப சந்தோஷம்ம்மா! இதை தாங்கள் சொல்வதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //வலையோசையில் உங்களைப்பற்றிப் பார்க்கும் போது வாசகரான எமக்கே இப்படி மகிழ்வாயுள்ளதே. உங்களுக்கேற்பட்ட சந்தோஷம் எத்தையதாக இருக்கும் என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.//

      அதெல்லாம் ஒன்றும் இல்லை. உங்களின் [வாசகரின்] சந்தோஷத்திற்கு முன் என் சந்தோஷம் மிகச்சிறியது தான்.

      //எதிர்பாராமல் கிடைத்த இந்தச் சந்தோஷத்துடன் நின்றுவிடாமல் உங்கள் பதிவுகளை தொடர்ந்தும் உங்களின் வலைப்பூவில் பதிவிடுவீர்களென நம்புகிறேன்.//

      தயவு செய்து உங்கள் எழுத்துப் பணியை தொடர வேண்டுமெனவும் புதிய பதிவுகளை விரைவில் பதிவிட வேண்டுமெனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

      ஆகட்டும்மா. தங்களின் நம்பிக்கையை கருத்தில் கொண்டு முடிந்த வரை முயற்சிக்கிறேன். ’யங் மூன்’ அவர்களின் விருப்பத்தை என்னால் எப்படித்தட்ட முடியும்?

      //மிக்க நன்றி ஐயா!//

      நன்றிக்கு நன்றியம்மா!

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  15. விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Avargal Unmaigal November 3, 2012 5:41 AM
      //விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.//

      வாங்கோ என் அன்புத்தம்பி அவர்களே,

      தங்கள் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் VGK

      நீக்கு
  16. பத்திரிகை பிரசுரத்திற்கும், இணையதள சொந்த பிரசுரத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளை பட்ட அனுபவத்துடன் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி November 3, 2012 5:41 AM
      //பத்திரிகை பிரசுரத்திற்கும், இணையதள சொந்த பிரசுரத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளை பட்ட அனுபவத்துடன் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

      வாருங்கள் ஐயா, வணக்கம். தங்கள் அன்பான் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      தங்களின் மெயில் படித்தேன் வியந்து போனேன். அனுபவசாலியான தங்களின் கருத்துக்கள் யாவும் அசத்தலாக உள்ளன. மனம் விட்டு பேசியுள்ளது மகிழ்வளிக்கிறது, ஐயா. மிக்க நன்றி. தங்களிடம் தனிப்பிரியமுள்ள .. கோபு.

      நீக்கு
  17. மிகவும் மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துக்கள்...

    திரு ரிஷபன் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்...

    தங்களின் கருத்துக்களை ரசிக்கவே சில தளங்களை மறுபடியும் பார்ப்பதுண்டு... நீங்கள் நினைத்தால் நிறைய பதிவுகளை பகிர முடியும்... உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் November 3, 2012 5:44 AM
      //மிகவும் மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துக்கள்...

      திரு ரிஷபன் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்...//

      வாருங்கள் திண்டுக்கல் தனபாலன் சார்.

      தங்களின் அன்பான வருகையும் அழகான வாழ்த்துகளும் மிகவும் மகிழ்வளிக்கின்றன. திரு. ரிஷபன் அவர்களைப் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //தங்களின் கருத்துக்களை ரசிக்கவே சில தளங்களை மறுபடியும் பார்ப்பதுண்டு...//

      அப்படியா! ஆச்சர்யமாக உள்ளதே!! அப்படி எந்த எந்தத் தளங்களுக்கெல்லாம் போய் என்னனென்ன கருத்துக்கள் [நீங்கள் மீண்டும் மீண்டும் போய் ரசிக்கும் படியாக] எழுதினேனோ? ஒரே கவலையாக உள்ளதே ! ;)))))

      //நீங்கள் நினைத்தால் நிறைய பதிவுகளை பகிர முடியும்...//

      ஆம், நான் நினைத்தால் நிறைய பதிவுகளைப் பகிர முடியும் தான். ஆனால் என்னை நினைக்கவே விடாமல் சிலர் நேரிடையாகவும், சிலர் மறைமுகமாகவும் தடுத்து வருகிறார்களே, ஸ்வாமீ. நான் என்ன செய்ய?

      //உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்...//

      என் விருப்பம் போல என்னால் சுதந்திரமாக செய்யவோ செயல்படவோ முடியாமல் உள்ளது. இருப்பினும் முயற்சிக்கிறேன்.

      //நன்றி ஐயா...//

      நன்றிக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  18. விகடன் வலையோசையில் தங்களின் அறிமுகம் வெளிவந்ததற்கு மிக்க மகிழ்ச்சி..பாராட்டுக்கள் அண்ணா..தங்களின் நகைசுவை பதிவு ஒவ்வொரு பதிவையும் நிதானமாக நாளை படிக்கிறேன் .மீண்டும் பாராட்டுக்கள் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா ராணி November 3, 2012 6:04 AM
      //விகடன் வலையோசையில் தங்களின் அறிமுகம் வெளிவந்ததற்கு மிக்க மகிழ்ச்சி..பாராட்டுக்கள் அண்ணா..//

      வாங்கோ என் அன்புத்தங்கை Ms.ராதாராணி அவர்களே!

      தங்களின் மகிழ்ச்சியான பாராட்டுக்கள் என்னை மகிழ்விக்கிறதும்மா.

      //தங்களின் நகைசுவை பதிவு ஒவ்வொரு பதிவையும் நிதானமாக நாளை படிக்கிறேன் .மீண்டும் பாராட்டுக்கள் ..!//

      சரிம்மா.... அப்படியே நிதானமாகப் படியுங்கோ.

      மீண்டும் பாராட்டுக்கு மீண்டும் என் நன்றிகள்.

      அன்புள்ள
      VGK அண்ணா

      நீக்கு
  19. மிக்க மகிழ்ச்சி.

    உங்களுக்கு முன்னரே கிடைக்க வேண்டிய அங்கீகாரம்....


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் November 3, 2012 6:07 AM
      //மிக்க மகிழ்ச்சி.
      உங்களுக்கு முன்னரே கிடைக்க வேண்டிய அங்கீகாரம்.... //

      வாங்கோ வெங்கட்ஜி, தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  20. வாழ்த்துகள் சார்! எங்கள் சந்தோஷமும் உங்களுடன் இணைகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். November 3, 2012 6:13 AM
      //வாழ்த்துகள் சார்! எங்கள் சந்தோஷமும் உங்களுடன் இணைகின்றன.//

      வாங்கோ ’ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்’

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் சந்தோஷப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஒரு நாள் முதல்வர் போல இன்றும் நாளையும் வலைச்சரத்தில் பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிக்க ’எங்கள் ப்ளாக்’ சார்பாக உங்களுக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டேன். அதற்கு என் அன்பான வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  21. வாழ்த்துகள் சார். ஆனந்த விகடனில் தங்களின் பெயர் வந்திருப்பது நிச்சயம் பெரிய விஷயம். மேலும் மேலும் தங்களின் படைப்புகள் சிறப்புகள் அடையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி November 3, 2012 6:25 AM
      //வாழ்த்துகள் சார். ஆனந்த விகடனில் தங்களின் பெயர் வந்திருப்பது நிச்சயம் பெரிய விஷயம். மேலும் மேலும் தங்களின் படைப்புகள் சிறப்புகள் அடையட்டும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம். அன்புடன் VGK

      நீக்கு
  22. பத்திரிக்கையில் நம் படைப்பு பல வெட்டுக்களுக்குப் பிறகு வரும்போது நம் படைப்பா என்ற சந்தேகமே வந்துவிடும்.
    நானும் கூட பத்திரிகைகளுக்கு எழுதுவதையே விட்டுவிட்டேன்.

    நீங்கள் கொடுத்திருக்கும் (என் விகடனில் வந்த) இணைப்புகள் எல்லாவற்றையும் இப்போதுதான் படித்து முடித்தேன்.

    வேறு வேறு சம்பவங்கள், கதை நடக்கும் சூழல், காலம் (ராமாயண காலம்!) இவற்றோடு கூடிய உங்கள் படைப்புகள் பிரமாதம்.

    ஒவ்வொரு படைப்பிற்கும் வந்திருக்கும் பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளை பார்த்துவிட்டு - இங்கேயே என் எண்ணங்களை சொல்லிவிடலாம் என்று தோன்றியது.

    எல்லா தகுதிகளையும் பெற்ற உங்களை ஆ.வி. அங்கீகரித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

    தகுதியானவரை தேர்ந்தெடுத்து என் விகடன் தன் புகழைக் கூட்டிக் கொண்டுள்ளது.

    பாராட்டுக்கள்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan November 3, 2012 7:33 AM

      வாங்கோ, வாங்கோ ரஞ்சும்மா மேடம்!
      வணக்கம். செளக்யமா இருக்கேளா?

      //பத்திரிக்கையில் நம் படைப்பு பல வெட்டுக்களுக்குப் பிறகு வரும்போது நம் படைப்பா என்ற சந்தேகமே வந்துவிடும்.
      நானும் கூட பத்திரிகைகளுக்கு எழுதுவதையே விட்டுவிட்டேன்.//

      ஆமாம். எனக்கும் இந்த கசப்பான அனுபவங்கள் நிறையவே உண்டு.

      ஆனாலும் மங்கையர் மலரின் முன்னால் ஆசிரியராக இருந்த திருமதி ரேவதி சங்கரன் அவர்களை மட்டும் என்னால் மறக்கவே முடியாது.

      நான் எழுதி என் மனைவி பெயரில் அனுப்பியிருந்த “உடம்பெல்லாம் உப்புச்சீடை” என்ற சற்றே மிகப்பெரிய கதையை நெடுங்கதையாக மார்ச் 2006 இதழில் பக்கம் எண்: 98 முதல் 112 வரை, வெளியிட்டிருந்தார்கள்.

      நான் எழுதிய இரண்டாவது கதையான அந்தக்கதையை பிப்ரவரி 2006 முதல் வாரத்தில் தான் அனுப்பியிருந்தேன். உடனே 20 நாட்களுக்குள் வெளியிட்டு விட்டார்கள்.

      அதில் மிகப்பெரியதொரு ஆச்சர்யம் என்னவென்றால், அதில் நான் எழுதியிருந்த ஒரு வாக்கியமோ, ஒரு வார்த்தையோ, ஒரு எழுத்தோ கூட எடிட் செய்யப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே முழுவதுமாக தகுந்த படங்களுடன் வெளியிட்டு சிறப்பித்தார்கள். திருமதி ரேவதி சங்கரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கும் இப்போது பதிவு செய்துகொள்கிறேன்.

      //நீங்கள் கொடுத்திருக்கும் (என் விகடனில் வந்த) இணைப்புகள் எல்லாவற்றையும் இப்போதுதான் படித்து முடித்தேன்.//

      ஆஹா, கேட்கவே சந்தோஷமாக உள்ளது. மகிழ்ச்சி.

      //வேறு வேறு சம்பவங்கள், கதை நடக்கும் சூழல், காலம் (ராமாயண காலம்!) இவற்றோடு கூடிய உங்கள் படைப்புகள் பிரமாதம்.//

      மிக்க நன்றி. ரொம்ப சந்தோஷம்.

      //ஒவ்வொரு படைப்பிற்கும் வந்திருக்கும் பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளை பார்த்துவிட்டு - இங்கேயே என் எண்ணங்களை சொல்லிவிடலாம் என்று தோன்றியது.//

      அடாடா, ஆங்காங்கேயே தாங்கள் சொல்லியிருக்கலாமே, அதுதான் இன்னும் சிறப்பாக இருக்கும். பரவாயில்லை.

      //எல்லா தகுதிகளையும் பெற்ற உங்களை ஆ.வி. அங்கீகரித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

      தகுதியானவரை தேர்ந்தெடுத்து என் விகடன் தன் புகழைக் கூட்டிக் கொண்டுள்ளது.//

      அடாடா! நான் ஒரு மிகச்சாதாரணமானவன் தான், மேடம்.
      ஒரேயடியாக இப்படியெல்லாம் என்னைப் புகழ்வது, என்னை மிகவும் கூச வைக்கிறது. தங்கள் அன்புக்கு நன்றிகள்.

      //பாராட்டுக்கள்!//

      தங்களின் ஆத்மார்த்தமான பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ரஞ்சு மேடம்.

      [தாங்கள் மெயில் மூலம் சொல்லியிருந்த ’மங்கையர் மலரில்’ வெளியான தங்களின் முதல் கதையை இன்று படித்து முடித்து பின்னூட்டங்களும் கொடுத்து விட்டேன்.]

      அன்புடன்
      VGK

      நீக்கு
  23. வாழ்த்துக்கள் சார்..கேட்கவே ரொம்பவும் ச்ந்தோஷமாய் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி November 3, 2012 7:53 AM

      வாங்கோ ராமமூர்த்தி சார். செளக்யமா?

      //வாழ்த்துக்கள் சார்..கேட்கவே ரொம்பவும் ச்ந்தோஷமாய் இருக்கிறது!//

      அடடா, இதை “நம்மாளு” கேட்டிருந்தால் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா?

      -=-=-=-=-=-=-

      நம்மாளு:

      ஏனய்யா, ஏதோ காணாததைக் கண்டா மாதிரி, இப்படி ரொம்பவும் சந்தோஷமாய் இருப்பதாய், அதுவும் நம்ம வை.கோ. சாரிடம் போய்ப் பொய் சொல்லுகிறாய்?

      உம்மை தானே என் விகடன் வலையோசையில் திருச்சி மாவட்டத்திலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்தி கெளரவப்படுத்தினாங்க!

      அதை மறந்துட்டயா?

      அல்லது அதை அந்த வை.கோ. சாரும் மறந்திருப்பார்ன்னு நினைச்சுட்டயா?

      வைக்கோலை மாடு மறக்கலாம். ஆனா நம்ம
      வை.கோ. சார் எதையுமே லேஸில் மறக்க மாட்டாராக்கும்,
      தெரிஞ்சுக்கோ. ஜாக்கிரதை!

      ராமமூர்த்தி: ????????

      -=-=-=-=-=-=-=-=-

      அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஸ்வாமீ.

      அன்புடன் VGK

      நீக்கு
  24. பதில்கள்
    1. S.Menaga November 3, 2012 8:59 AM
      //வாழ்த்துக்கள் ஐயா!!//

      மிக்க நன்றி Ms S.Menaga Madam.

      நீக்கு
  25. அன்பின் வை.கோ

    ஆனந்த விகடனில் தங்களின் தளத்தினைப் பற்றி அறிமுகம் / விமர்சனம் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா)November 3, 2012 8:59 AM
      அன்பின் வை.கோ

      ஆனந்த விகடனில் தங்களின் தளத்தினைப் பற்றி அறிமுகம் / விமர்சனம் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே,
      வாருங்கள். வணக்கம் ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  26. வாழ்த்துக்கள் சார். உங்களால் என் விகடனுக்குப் பெருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை November 3, 2012 9:56 AM
      //வாழ்த்துக்கள் சார்.//

      வாங்கோ சார். தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

      //உங்களால் என் விகடனுக்குப் பெருமை.//

      நான் அப்படி நினைக்கவில்லை சார். நான் ஒரு மிகச் சாதாரணமானவன் சார். பாரம்பர்யம் மிக்க பிரபல தமிழ்ப் பத்திரிகையான ஆனந்த விகடனால் தான் [என் விகடன்] எனக்குப் பெருமை என மட்டுமே நினைக்கிறேன்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  27. என் விகடனில் தங்களின் வலைப்பூ பற்றிய அறிமுகம் பிரசுரமாகியிருப்பதற்கு இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்.

    இங்கே விகடன் வந்தாலும் என் விகடன் வருவதில்லை. உங்களை மறுபடியும் நேரில் சந்திக்கும்போது தான் இந்த இதழை வாங்கிப் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் November 3, 2012 11:00 AM
      //என் விகடனில் தங்களின் வலைப்பூ பற்றிய அறிமுகம் பிரசுரமாகியிருப்பதற்கு இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்.//

      வாங்கோ மேடம், ரொம்பவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      //இங்கே விகடன் வந்தாலும் என் விகடன் வருவதில்லை. உங்களை மறுபடியும் நேரில் சந்திக்கும்போது தான் இந்த இதழை வாங்கிப் படிக்க வேண்டும்.//

      ஆனந்த விகடனின் “என் விகடன்” மட்டும் இப்போது சமீப காலமாக புத்தக வடிவில் வருவதை நிறுத்தி விட்டார்கள், மேடம். மின்பதிவில் மட்டுமே நாம் படிக்க முடியும்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  28. கோபு அண்ணன், மிக்க மகிழ்ச்சி. ஆனந்த விகடன் புத்தகத்தை கையில் வாங்கிப் படித்தால் இன்னும் அதிக மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira November 3, 2012 12:51 PM
      //கோபு அண்ணன், மிக்க மகிழ்ச்சி. ஆனந்த விகடன் புத்தகத்தை கையில் வாங்கிப் படித்தால் இன்னும் அதிக மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்த்துக்கள்.//

      வாங்கோ வாங்கோ வாங்கோ அதிராஆஆஆஆஆ !

      ஆனந்த விகடன் பதிப்பான என் விகடனை நீங்க கையிலே பிடிக்கவோ படிக்கவோ முடியாது, அதிரா. அதை புத்தகமா வெளியிடுவதை நிப்பாட்டிட்டாங்கோ.

      மின் இதழாகத்தான் வெளியிடுறாங்கோ.

      அது மட்டும் புத்தகமாக் கிடைச்சா நானே நிறைய கொப்பி வாங்கி உங்கள் விலாசம் கேட்டு, ஃபோன் நம்பரும் கேட்டு, மின்னஞ்சல் முகவரியும் கேட்டு SPEED POST இல் அனுப்பியிருப்பேனாக்கும்.

      அதனால் தாங்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்க மேலே உள்ளவற்றை உடனடியா எனக்கு அனுப்புங்கோ.

      நான் [ஆனந்த விகடன் - என் விகடனுக்குப் பதிலாக] வேறு ஏதாவது அனுப்பி வைக்கிறேன்.

      வைர நகைகளான வைர நெக்லஸ், வரைத்தோடுகள், வைர மூக்குத்தி அல்ல - அது தான் வேண்டாம் ஜாமீஈஈஈஈஈஈன்னு சொல்லிட்டீங்களே ;(]

      அதாவது நான் இதுவரை வெளியிட்டுள்ள சிறுகதைத்தொகுப்பு நூல்களில் ஏதாவது சில அனுப்பி வைக்கிறேன்னு சொன்னேன்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணன்

      நீக்கு
    2. ////வைர நகைகளான வைர நெக்லஸ், வரைத்தோடுகள், வைர மூக்குத்தி அல்ல - அது தான் வேண்டாம் ஜாமீஈஈஈஈஈஈன்னு சொல்லிட்டீங்களே ;(] ///

      என்ன கோபு அண்ணன் இது சின்னப் புள்ளத் தனமால்ல இருக்கூஊஊஊஊ:))...

      நான் ஒரு மரியாதைக்காக, வாணாம் எனச் சொன்னால் உடனேயே வாணாமாம் என விட்டுவிடுவதோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... வள்ளிக்கு வச்ச நேர்த்தியை முடிக்க முடியாமல் நான் திண்டாடிட்டிருக்கிறேன் அப்பூடிச் சொல்வேனோ?:)..

      நீக்கு
    3. அது மட்டும் புத்தகமாக் கிடைச்சா நானே நிறைய கொப்பி வாங்கி உங்கள் விலாசம் கேட்டு, ஃபோன் நம்பரும் கேட்டு, மின்னஞ்சல் முகவரியும் கேட்டு SPEED POST இல் அனுப்பியிருப்பேனாக்கும்.////

      பொப்பூலரானவங்களுக்கு:) விலாசம் எல்லாம் எதுக்கு(அதார் பொப்பூலர் ஆனவங்க எனக் கேட்டிடப்பூடா பப்ளிக்கில:).. பிறகு எப்பூடி எனக்கு பப்ளிக்குட்டி கிடைக்கும்:)).. அதிராமியா, குயினின் பேத்தி, சுவீட் 16, பிரித்தானியாபுரம்:) எனப் போட்டாலே வீட்டு வாசல்ல கொண்டு வந்து தந்திடப்போகினம்:))

      நீக்கு
    4. VGK to அதிரடி அதிரா !

      //பொப்பூலரானவங்களுக்கு:) விலாசம் எல்லாம் எதுக்கு(அதார் பொப்பூலர் ஆனவங்க எனக் கேட்டிடப்பூடா பப்ளிக்கில:).. பிறகு எப்பூடி எனக்கு பப்ளிக்குட்டி கிடைக்கும்:)).. அதிராமியா, குயினின் பேத்தி, சுவீட் 16, பிரித்தானியாபுரம்:) எனப் போட்டாலே வீட்டு வாசல்ல கொண்டு வந்து தந்திடப்போகினம்:))//

      பொப்பூலர் = POPULAR
      பப்ளிக்குட்டி = PUBLICITY
      தந்திடப்போகினம் = தந்துவிடப்போகிறார்கள்.

      அடடா, உங்க தமிழ் கிளிகொஞ்சுவது போல
      அய்க்கா இருக்கு. என் தமிழ்நாட்டுத்தமிழ்
      நாளடைவில் சுத்தமா எனக்கு மறந்துடும்
      என்ற நம்பிக்கை வந்துடுச்சு.

      அதிராமியா
      குயினின் பேத்தி
      சுவீட் 16
      பிரித்தானியாபுரம்

      OK NOTED. திருப்பதியிலே ஓர் மொட்டைத்தலையனைத் தேடுவது போல கஷ்டமாக இருக்குமோன்னு நினைச்சேன்.

      THANK YOU ATHIRAAAAAAAAAAA ! ;)))))

      பிரியமுள்ள
      கோபு அண்ணன்

      நீக்கு
    5. ஹா...ஹா..ஹா... கண்டு பிடிக்க மாட்டீங்களோ என நினைச்சேன்:) கரெக்ட்டாக் கண்டுபிடிச்சு ஆங்கிலீஷில் ஜொள்ளிட்டீங்க:)). வரவர உங்கட கிட்னி ஷார்ப் ஆகிக்கொண்டேஏஏஏஏ வருதூஊஊஊ.. இனி மீயும் ரொம்ப ஷார்ப்பாத்தான் இருக்கோணும்:).

      நீக்கு
    6. athira November 4, 2012 8:07 AM
      ஹா...ஹா..ஹா...

      பதிவு வெளியிடப்போகும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு எனக்கு தயவுசெய்து மெயில் தகவல் கொடுக்க வேண்டும்.
      அப்போதான் நான் முதல் பந்தியில் பாய்ந்து முதல் இலையில் ருசித்து சாப்பிட்டு மொய் எழுத முடியும்.

      சும்மா 2 நாளிலோ,1 நாளிலோ, நாளைக்கோ, இன்றோ,இப்போதோ கூட புதிய பதிவு வெளியாகலாம் அல்லது வெளியாகாமலும் இருக்கலாம் எனச் சொல்லி வெறுப்பேற்றி விட்டு, பிறகு முறைக்காதீங்கோ என்றும் சொல்லுவது முறை அல்ல, அதிரா.

      இதுபோலத்தான் அஞ்சு ஒரு அஞ்சு நிமிஷம் முன்னால் ஒரு மெயில் கொடுத்து, லிங்க் கொடுத்து செளகர்யப்பட்டபோது வாங்கோ என அழைத்திருந்தாங்க.

      மெயில் கிடைத்த மூன்றாம் நிமிஷம் நானும் ஓடினேன். அதற்குள் அங்கு ஒரு 30 பேர்கள் வந்து மூக்கைப்பிடிக்கச் சாப்பிட்டாச்சு.

      நான் வெறுத்துப்போய்

      “இன்று நான் உண்ணாவிரதம் அதனால் நாளை சாப்பிட வருவேன்”

      என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

      அதனால் தான் சொல்கிறேன் அதிரா, உங்க வீட்டுப் போன விசேஷத்திலேயே நான் 96 ஆவது பந்தியில் தான் அமர முடிந்தது. முதல் பந்தியில் முதல் ஆளாக அமர்ந்து சாப்பிட வாய்ப்புக்கொடுங்கோ இல்லாட்டி ஆளை விடுங்கோ.

      எனக்காப் பசிக்கும் போது ஏதாவது ஒரு பந்தியில் அமர்ந்து ஏதோ கிடைத்ததை சாப்பிட்டு விட்டு வருகிறேன்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு

  29. அண்ணா :)) தாமதமாக வந்ததற்கு மன்னிக்கணும்
    //சென்ற வாரத்தில் என்னைப்பற்றியும், என் வலைப்பூவினைப்பற்றியும் சிறப்பித்து எழுதியுள்ளார்கள்.//

    அன்றே வாசிக்கும்போது மிக சந்தோஷமாக இருந்தது ..
    மீண்டும் மீண்டும் ரசித்து வாசிக்க தூண்டுபவை உங்கள் படைப்புக்கள்.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..தொடர்ந்து எழுதுங்கள்.தங்கள் படைப்புக்களை வாசிக்க ஆவலாயிருக்கிறோம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin November 3, 2012 12:52 PM

      //அண்ணா :)) தாமதமாக வந்ததற்கு மன்னிக்கணும்//

      அதெல்லாம் மன்னிக்கவே முடியாது நிர்மலா!

      நீங்க வீக் எண்டாக இருந்தாலும் சரியாக உங்கள் நேரத்திற்கு [IST Mid Night 12 to 1] கரெக்டா வந்து ஆஜர் கொடுத்திட்டீங்களே.

      பிறகு எதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகளெல்லாம்?

      நிர்மலாவின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  30. திருச்சியைச் சேர்ந்த வை.கோபாலகிருஷ்ணன் பி.ஹெச்.இ.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ///

    ஆஆவ்வ்வ்வ் நீங்கள் ஓய்வு பெற்று விட்டீங்களோ? நான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றே எண்ணியிருந்தேன்... காரணம், குறிப்பிட்ட நேரம் மட்டுமே நெட்டில் காண முடிந்தது...

    ஆஆஆ நீங்கள் அப்போ உச்சிப் பிள்ளையாரடியாக்கும்:).

    பதிலளிநீக்கு
  31. athira November 3, 2012 12:53 PM
    திருச்சியைச் சேர்ந்த வை.கோபாலகிருஷ்ணன் பி.ஹெச்.இ.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ///

    //ஆஆவ்வ்வ்வ் நீங்கள் ஓய்வு பெற்று விட்டீங்களோ?//

    நான் நானாக ஓய்வு பெறவில்லை. அவர்களாகவே ஓய்வு கொடுத்து அனுப்பிவிட்டார்கள், என் மகிமை தெரிந்திருந்தும். அதனால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. என் நிறுவனத்திற்கு மட்டுமே பேரிழப்பு.

    //நான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றே எண்ணியிருந்தேன்... //

    வெரி குட் அதிரா! நீங்க நினைச்சது தான் கரெக்டூஊ.
    நான் என் எந்த வேலைகளிலிருந்துமே இன்னும் ஓய்வு பெறவில்லை. தொடர்ந்து பேரெழுச்சியுடன் வேலை செய்து வருகிறேன்.

    [எழுவது, பல்துலக்குவது, குளிப்பது, உம்மாச்சியைக் கும்பிடுவது, காய்கறிகள் வாங்கியாந்து வெட்டிக்கொடுப்பது, வேளாவேளைக்குக் காஃபி, டிபன், சாப்பாடு சாப்பிடுவது, படம் வரைவது, பதிவுகள் எழுதுவது, பதிவுகள் வெளியிடுவது, புத்தகங்கள் வாசிப்பது, செய்திகள் வாசிப்பது, பிறரின் வலைப்பதிவுகளையும் கொஞ்சூண்டு பார்ப்பது, பின்னூட்டம் [எனிமா] கொடுப்பது போன்ற இன்னும் லிஸ்டில் எழுத முடியாத பல வேலைகளால், ஒரு நாளைக்கு 24 மணி நேரமே எனக்குப் போதாமல் உள்ளதூஊஊஊஊ தெரியுமா?]

    //காரணம், குறிப்பிட்ட நேரம் மட்டுமே நெட்டில் காண முடிந்தது... //

    என் லாப்டாப் எப்போதும் 24 மணி நேரமும் ONLINE இல் மட்டுமே இருக்கும். [ஆண் லைனை விட்டு பெண் லைனுக்கே அது போகாது, ஏன்னா நான் பிறந்த முதல் நாளிலிருந்தே ரொம்ப நல்ல பையன். உங்களை மாதிரி 6 வயதிலிருந்து அல்ல] அதாவது LAPTOP ஐ OFF செய்வதே கிடையாது. நடுவில் மின் தடைகள், நெட் கிடைக்காமல் போவது, நான் எங்காவது எழுந்து போவது போன்றவற்றால் நான் நெட்டில் இல்லையோ என உங்களுக்குத் தோன்றியிருக்கக்கூடும்.

    //ஆஆஆ நீங்கள் அப்போ உச்சிப் பிள்ளையாரடியாக்கும்:).//

    அதே அதே சபாபதே ! அதிரபதே !! எப்பூடி கரெக்டா கண்டு பிடிச்சீங்கோ? நீங்க உச்சிப்பிள்ளையாருக்கோ அல்லது அவரோட அடிக்கோ வந்து போயிருக்கீங்களா?

    பிரியமுள்ள
    கோபு அண்ணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்ட இடம்
      திருச்சி மலையினிலே...
      எனக் கேட்டு வளர்ந்தாச்சு.. சின்னனிலிருந்தே அதேன்ன்ன்ன்..

      நீக்கு
    2. athira November 4, 2012 1:46 AM
      //உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்ட இடம்
      திருச்சி மலையினிலே...
      எனக் கேட்டு வளர்ந்தாச்சு.. சின்னனிலிருந்தே அதேன்ன்ன்ன்..//

      ஓஹோ! சின்னனிலிருந்தே பிறந்த இடம், வளர்ந்த இடம், படிச்ச இடம், புகுந்த இடம், இப்போ குடிகொண்டுள்ள இடம் பற்றியெல்லாம் விபரமாச் சொன்னாத்தானே நேக்குத் தெரியும். நீங்களும் எங்க ஊரோன்னு நினைச்சுப்புட்டேன்.

      அன்புடன்
      கோபு அண்ணன்
      valambal@gmail.com

      நீக்கு
    3. athira November 4, 2012 1:40 AM

      ***வைர நகைகளான வைர நெக்லஸ், வரைத்தோடுகள், வைர மூக்குத்தி அல்ல - அது தான் வேண்டாம் ஜாமீஈஈஈஈஈஈன்னு சொல்லிட்டீங்களே ;(]***

      //என்ன கோபு அண்ணன் இது சின்னப் புள்ளத் தனமால்ல இருக்கூஊஊஊஊ:))...

      நான் ஒரு மரியாதைக்காக, வாணாம் எனச் சொன்னால் உடனேயே வாணாமாம் என விட்டுவிடுவதோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... வள்ளிக்கு வச்ச நேர்த்தியை முடிக்க முடியாமல் நான் திண்டாடிட்டிருக்கிறேன் அப்பூடிச் சொல்வேனோ?:)..//

      கீழேயுள்ள இணைப்பில் நீங்க கொடுத்த ஏராளமான எனிமாக்களையும் [எனிமா=பின்னூட்டம்] நான் அதற்குக்கொடுத்துள்ள தாராளமான என் பதில்களை பொறுமையாக மீண்டும் படிச்சுப்பாருங்கோ:

      நான் எவ்வளவு ஆசை ஆசையாக வைர நகைகள் எல்லாம் சப்ஜாடாக என் அதிரடி அதிராவுக்காக வாங்கக் கடைக்குப் புறப்பட்டேன், அன்று. சைஸ் மட்டும் தானே கேட்டிருந்தேன். கடைசிவரை சைஸ் என்னவென்றே சொல்லாமல் ஏதேதோ சொல்லி என்னைக் குழப்பிட்டீங்களே!

      அநியாயமாக ஏதேதோ சொல்லி எனக்கு ஏற்பட்ட பேரெழுச்சியை சுத்தமா வழுவட்டையாக்கி
      விட்டீங்களே. ;(((((

      இப்போ ஏன் மீண்டும் இப்படிச்சொல்றீங்க.
      ஒரே குயப்பவாதி நீங்கோஓஓஓஓஓ.

      -=-=-=-=-=-=-=-=-=-

      http://gopu1949.blogspot.in/2012/10/blog-post.html

      வை.கோபாலகிருஷ்ணன்October 19, 2012 10:20 AM
      அதிரடி அதிராவுக்கு [6]

      //இல்லைத்தானே?:)... அதனால பெரிசா ஒண்ணும் வாணாம்ம்.. சின்னதா ஒரு “பெரிய வைரத்தோடு”:)//

      ஆஹா! வெள்ளிக்கிழமையும் அதுவுமா, அதுவும் நவராத்திரி வெள்ளிக்கிழமையும் அதுவுமா, ஒரு சுமங்கலிப்பொண்ணு ஆசைப்பட்டு, துணிச்சலோட, இதுவரை என்னிடம் யாருமே [என் மேலிடம் உள்பட] கேட்காத ஒரு பொருளைக் கேட்டுடுத்து.

      இது என்ன பிரமாதம் After all “வைரத்தோடு” தானே சந்தோஷமாப் செய்து போட்டு விடுவேன்.

      வைரத்தோடு மட்டுமல்ல ஏற்கனவே கேட்டுள்ள வைர நெக்லஸ், வைர மூக்குத்தி எல்லாமே ஒரு செட்டாக!

      [நடுவில் ஏராளமான /தொடரும்/ பின்னூட்டங்கள்]

      கடைசியில்.......

      //athira October 20, 2012 4:12 AM
      ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ:)) தெரியாமல் ஒரு தூங்கும் புலியின் மீசையில:) .. டச்சு பண்ணிட்டேன்ன்ன்ன்ன்:)... எனக்கு வைரமும் வாணாம்ம்.. தங்கமும் வாணாம்ம்:)).. நான் திருப்பதியில பிச்சை எடுத்து என் நேர்த்தியை நிறைவேத்தப் போறேன்ன் ஜாமீஈஈஈஈஈ:)) பூஸ் ஒன்று புறப்படுதே:)) பிச்சை எடுக்கத்தேன்:))...

      //[அதாவது வைரமூக்குத்தி, வைரத்தோடு போடும்
      மூக்கு, காது துவாரங்களைத்தான் சொல்றேன்]

      தொடரும்......//

      வாணாம்ம்.. வணாம்ம்ம் ஜொல்லிட்டேன்ன்:)).. “முற்றும்” :) எனப் போட்டு முடிச்சிட்டு டக்குப் பக்கெனப் புதுத்தலைப்பு போட்டிடுங்கோ:).. போற வழியில மங்கோ ஊசாவது கிடைக்கும்:))..

      உஸ்ஸ்ஸ்ஸ் என் தலை தப்பியது அம்பிரான் புண்ணியம் ஜாமீ:)) கட்டிலடியை விட்டு வெளியில வர ஆசைச்ப்பட்டது டப்பாப்போச்சு:).. இனி முருங்கில ஏறி இருந்திட வாண்டியதுதான்:).//

      -=-=-=-=-=-=-=-=-

      இனி வைர நகைகளைப்பற்றியே என்னிடம் நீங்க பேசக்கூடாதூஊஊஊஊஊஊஊ. ஜொள்ளிட்டேன்.

      முருங்கை மரத்திலேயே ஏறி இருக்கக்கடவது!
      த தா ஸ் து !!

      பிரியமுள்ள
      கோபு அண்ணன்

      நீக்கு
  32. வலைஒசையில் வளம் வந்து விட்டீர்கள் . ஆனந்தவிகடன் ஒரு பிரபலமான பத்திரிக்கை . அதில் இடம் பெறுவதென்றால் உங்களைப் போன்றோரால் மட்டுமே முடியும் . அனைத்தையும் பார்க்கக் கூடிய லிங்கையும் தந்து உதவியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் பிரபலம் அடைய வேண்டும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரகௌரி November 3, 2012 2:59 PM
      //வலைஒசையில் வளம் வந்து விட்டீர்கள் . ஆனந்தவிகடன் ஒரு பிரபலமான பத்திரிக்கை . அதில் இடம் பெறுவதென்றால் உங்களைப் போன்றோரால் மட்டுமே முடியும் . அனைத்தையும் பார்க்கக் கூடிய லிங்கையும் தந்து உதவியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் பிரபலம் அடைய வேண்டும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்//

      வாருங்கள் மேடம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள். அன்புடன் VGK

      நீக்கு
  33. பதில்கள்
    1. Seeni November 3, 2012 3:03 PM
      vaazhthukkal ayya..

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, சார்.

      நீக்கு
  34. பதில்கள்
    1. middleclassmadhavi November 3, 2012 5:36 PM
      //Very happy to see this... Congrats Sir!//

      Very Happy to see you here. ;)))))
      Thank you very much, Madam.

      vgk

      நீக்கு
  35. பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் November 3, 2012 6:53 PM
      //வாழ்த்துக்கள் ஐயா.//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா. அன்புடன் VGK

      நீக்கு
  36. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமலக்ஷ்மி November 4, 2012 12:58 AM
      //மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!//

      வாங்கோ, மேடம்.

      தங்களின் அன்பு வருகைக்கும், மகிழ்ச்சியான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் VGK

      நீக்கு
  37. நேற்று அவசரமா ஓடிவந்து, அவசரமா பாதிக்கு மட்டும் பதில் போட்டுவிட்டு ஓடிவிட்டேன்ன்... இன்று
    தொடரும்...........

    இங்கல்ல தலைப்புக்களின் கீழே போட்டால் நல்லதென நினைக்கிறேன், அதுக்காகத்தானே நீங்களும்.. பாதிக் கதையோடு மறைச்சுப் போட்டீங்க:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira November 4, 2012 1:47 AM
      //நேற்று அவசரமா ஓடிவந்து, அவசரமா பாதிக்கு மட்டும் பதில் போட்டுவிட்டு ஓடிவிட்டேன்ன்... இன்று
      தொடரும்...........//

      ரொம்ப ரொம்ப சந்தோஷம் ... அதிரா.

      //இங்கல்ல தலைப்புக்களின் கீழே போட்டால் நல்லதென நினைக்கிறேன்,//

      உங்க இஷ்டப்படி எங்கே வேண்டுமானாலும் போட்டுகோங்கோ அதிரா, நோ ப்ராப்ளம் ஃபார் மீ.

      //அதுக்காகத்தானே நீங்களும்.. பாதிக் கதையோடு மறைச்சுப் போட்டீங்க:).//

      நான் மறைக்கவில்லை. ’என் விகடன்’காரங்கோ அப்படி செய்துட்டாங்கோ. அதனால் தான் உங்களுக்காகவே நான் அதனதன் அடியில் இணைப்பைக்கொடுத்து உதவியுள்ளேன்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணன்

      நீக்கு
  38. பதில்கள்
    1. Seshadri e.s.November 4, 2012 1:45 AM
      என் உளமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா!//

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, சார்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  39. அன்பின் கோபு சார், பத்திரிகையில் உஙகள் வலைப்பூ பற்றி வந்தது அறிந்து மகிழ்ச்சி, ஏற்கனவே எண்ணற்ற வாசகர்களுக்கு அறிமுகமான உங்களுக்கு இது இன்னுமொரு அங்கீகாரம். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G.M Balasubramaniam November 4, 2012 2:05 AM

      //அன்பின் கோபு சார், பத்திரிகையில் உஙகள் வலைப்பூ பற்றி வந்தது அறிந்து மகிழ்ச்சி, ஏற்கனவே எண்ணற்ற வாசகர்களுக்கு அறிமுகமான உங்களுக்கு இது இன்னுமொரு அங்கீகாரம். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.//

      அன்புள்ள Mr. GMB Sir,

      வாங்கோ, வணக்கம், நமஸ்காரம்.

      நல்லா இருக்கீங்களா, சார்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், நெஞ்சார்ந்த வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      அன்புடன்
      கோபு

      நீக்கு
  40. நீங்க‌ள் ப‌திவிட்டுள்ள‌ கிராஃபிக் ரோஜாக்க‌ள் ம‌ல‌ர்ந்து விரிவ‌து போல் ம‌கிழ்ச்சி ம‌ன‌மெங்கும். வாழ்த்துக்க‌ள் சார். ஆதிராவுட‌னான‌ கும்மி அட்ட‌காச‌ம் போங்கோ!

    பதிலளிநீக்கு
  41. நிலாமகள் November 4, 2012 9:39 AM

    அன்புக்கும் மரியாதைக்குமுரிய Ms. நிலாமகள் Madam,
    வாருங்கள். வணக்கம்.

    //நீங்க‌ள் ப‌திவிட்டுள்ள‌ கிராஃபிக் ரோஜாக்க‌ள் ம‌ல‌ர்ந்து விரிவ‌து போல் ம‌கிழ்ச்சி ம‌ன‌மெங்கும். வாழ்த்துக்க‌ள் சார்.//

    தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும், வாழ்த்துகளும் விரிந்த நறுமணம் வீசும் ரோஜா மலர் போலவே உள்ளதுங்க, மேடம்.

    ஆனால் படத்தில் காட்டியுள்ளது ரோஜா இல்லை மேடம்.

    அதன் பெயர் “நிஷாகந்தி” ப்பூவாம். கோவையில் உள்ள என் நெருங்கிய சொந்தக்காரங்க வீட்டுத் தோட்டத்திலிருந்து, அவங்க ஆசையா எனக்காகவே எடுத்துக் கொடுத்தப்படம் அது.

    இங்கே அதைப்பார்த்ததாக யாருகிட்டேயும் தயவுசெய்து சொல்லிடாதீங்கோ, ப்ளீஸ்.

    //ஆதிராவுட‌னான‌ கும்மி அட்ட‌காச‌ம் போங்கோ!//

    அடடா, அவங்க பெயர்

    “ஆதிரா”வும் இல்லை. ”ஆதிராமுல்லை”யும் இல்லை.

    அவங்க பெயர்: அதிரா [நான் வைத்துள்ள பெயர்: அதிரடி அதிரா]

    அவங்க பிரிட்டானியா ராணியாரின் குடும்பத்து வாரிசாம். தேம்ஸ் நதிக்கரையிலே மிகப்[பெரிய பங்களாவாம். ராணியாரின் ஒரே பேத்தியாம். வயசு: ஸ்வீட் சிக்ஸ்டீனாம். [61 அல்ல 16]. அவங்க ரொம்ப நல்லவங்க. ஆறு வயசுலிருந்தே நல்லவங்களாத்தான் இருக்காங்களாம். எல்லாம் அவங்க இதுவரை என்னிடம் சொல்லியதன் சுருக்கமே.

    இப்போ ஒரு மாதமாகத்தான் என்னோட அவங்களுக்குப் பழக்கம். அதுவும் நம்ம “ஏஞ்சலின்” மூலமாக. இந்த ஒரு மாதத்தில் நான் அவங்களைப்பற்றி தெரிந்து கொண்டது என்னவென்று கேட்டால் “இவங்க பேசுவது எல்லாமே ஒரே பொய் பொய் பொய் பொய் மட்டுமே. மேலே சொன்ன எதுவுமே உண்மையில்லை.”

    இதையும் நீங்க யாருகிட்டேயும் சொல்லிடாதீங்க.

    முக்கியமா அந்த அதிரடி அதிராவுக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது.

    ஏற்கனவே என்னைப் பாடாய்ப்படுத்தி வருகிறார்கள்.

    இதுவும் தெரிஞ்சாப்போச்சு.

    என் கதி அதோகதியாகிவிடும்.

    அதனால் இது விஷய்ம் நமக்குள் மட்டுமே ரகசியமாக இருக்கட்டும், ப்ளீஸ் மேடம். ;)))))

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதிராவுட‌னான‌ கும்மி அட்ட‌காச‌ம் போங்கோ!//

      இதில் தாங்கள் உபயோகித்துள்ள
      “கும்மி” [“கும்மி அடித்தல்”]
      என்ற வார்த்தை என்னை மிகவும் கவ்ர்ந்தது.

      அதே அதே ! சபாபதே !!

      கும்மி ;)
      Very very appropriate words.
      Thank you very much, Madam.
      vgk

      நீக்கு
  42. சார்,மிகவும் சந்தோஷம் ..பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.உங்கள் எழுத்துத் திறமையின் புகழுக்கு என்றும் குறையில்ல.,மேலும் பற்பல வெற்றிகள் வந்தடைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் எழுத்துத் திறமையின் புகழுக்கு என்றும் குறையில்ல.. மேலும் பற்பல வெற்றிகள் வந்தடைய வாழ்த்துகள். //

      ஆஹா! அசரீரி போல யாரோ என் மனதுக்கினிய
      ஒரு அம்பாள் சொல்வது போல எடுத்துக்கொண்டேன்.

      [தயவுசெய்து கீழே இறங்கி வாங்கோ....

      அதையும்படியுங்கோ]

      vgk

      நீக்கு
  43. சார்,மிகவும் சந்தோஷம் ..பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.உங்கள் எழுத்துத் திறமையின் புகழுக்கு என்றும் குறையில்ல.,மேலும் பற்பல வெற்றிகள் வந்தடைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar November 4, 2012 3:14 PM
      //சார்,மிகவும் சந்தோஷம் ..பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.உங்கள் எழுத்துத் திறமையின் புகழுக்கு என்றும் குறையில்ல.,மேலும் பற்பல வெற்றிகள் வந்தடைய வாழ்த்துகள்.//

      வாங்கோ வாங்கோ வாங்கோ திருமதி. ஆச்சி மேடம்.
      எப்படி இருக்கீங்க? குழந்தைங்க எப்படி இருக்காங்கோ?
      எல்லாம் நலம் தானே?

      உங்களைப்பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. ரொம்ப வருஷம் ஆனாப்போலே இருக்குது.

      கடைசியா உங்களை
      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7.html
      நம்ம மஞ்சு அறிமுகம் செய்த வலைச்சரத்திலே பார்த்தேன்னு ஞாபகம்.

      அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      நீக்கு
  44. உங்களுக்கு கமென்ட் எழுதி போஸ்ட் பண்ணினேன்.இதுவாகிலும் போகிறதா பார்க்கணும்.
    என் விகடனும் பார்த்தேன். என்ன அருமையாக எழுதுகிறீர்களென்று வியந்து போகிறேன் என் விகடனிலும் கமென்ட் எழுதினேன்.உங்களுக்கு என் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  45. Kamatchi November 4, 2012 11:09 PM

    வாங்கோ வாங்கோ காமாக்ஷி மாமி, நமஸ்காரம்.

    செளக்யமா இருக்கேளா?

    //உங்களுக்கு கமென்ட் எழுதி போஸ்ட் பண்ணினேன்.இதுவாகிலும் போகிறதா பார்க்கணும்.//

    வந்து சேர்ந்துடுச்சு. கவலைப்படாதீங்கோ.

    //என் விகடனும் பார்த்தேன். என்ன அருமையாக எழுதுகிறீர்களென்று வியந்து போகிறேன்.
    என் விகடனிலும் கமென்ட் எழுதினேன்.//

    ஆஹா, எனக்காக எவ்வளவு சிரமப்படுகிறேள். பாவம்.
    அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், மாமி.

    //உங்களுக்கு என் பாராட்டுகள்//

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாமி.

    <<<<<<< தொடரும் >>>>>>>>

    பதிலளிநீக்கு
  46. கோபு >>>>>> காமாக்ஷி மாமிக்கு ...

    மாமி, உங்களைப்பற்றி என் சகோதரி ஏஞ்ஜலின் என்கிற அஞ்சூ என்கிற நிர்மலா நிறையவே மிகவும் பெருமையாகச் சொல்லியிருக்காங்க.

    நீங்கள் புதிய பதிவுகள் வெளியிடும் போதெல்லாம், நிர்மலா தான் எனக்கு மெயில் மூலம் லிங்க் அனுப்பித் தெரிவிக்கிறார்கள். அதனால் தான் என்னால் உடனுக்குடன் அவ்விடம் தங்கள் தளத்திற்கு வருகை தந்து கருத்துக்கூற முடிகிறது.

    நேற்று முன் தினம் கூட “எப்படியிருக்கு” ன்னு ஒரு பதிவு போட்டிருந்தீங்களே! அதற்கும் நிர்மலா சொல்லித்தான் நான் வந்து கருத்துக்கூறியிருந்தேன்.

    இந்த வயதிலும் நீங்க சிரத்தையாக ஆசையாக எழுதி பதிவுகள் தருவது எனக்கு மிகவும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. என் அன்பு வாழ்த்துகள்.

    அநேக நமஸ்காரங்களுடன்,
    தங்கள் மேல் தனிப்பிரியம் உள்ள
    கோபாலகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  47. முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்! கடுமையான காய்ச்சல் காரணமாக வலைப் பதிவுகள் பக்கம் வர இயலவில்லை. மீண்டும் வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ November 5, 2012 12:11 AM
      //முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்!//

      வாருங்கள் ஐயா, வணக்கம். தங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      //கடுமையான காய்ச்சல் காரணமாக வலைப் பதிவுகள் பக்கம் வர இயலவில்லை. மீண்டும் வருவேன்.//

      உடம்பை கவனமாக ஜாக்கி்தையாகப் பார்த்துக்கொள்ளுங்கள், ஐயா. அதுதான் மிகவும் முக்கியம்.

      தாங்கள் தான் எனக்கு இந்தத்தகவலையே [என் விகடன் வெளியீடு பற்றிய செய்தியை]முதன்முதலாகச் சொன்னீர்கள்.

      மேலும் தாங்கள் தான் இதைப்பற்றியே தனிப்பதிவு ஒன்று நான் தரவேண்டும் என ஆசோசனையும் கூறினீர்கள்.

      எல்லாவற்றிற்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  48. விகடன் வலைஓசையில தங்கள் ப்ளாக் பற்றி வந்த கட்டுரைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.இன்னுன் பலபல அங்கீகாரங்கள் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  49. Usha Srikumar November 6, 2012 8:55 PM
    //விகடன் வலைஓசையில தங்கள் ப்ளாக் பற்றி வந்த கட்டுரைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.இன்னுன் பலபல அங்கீகாரங்கள் பெற வாழ்த்துக்கள்.//

    வாங்கோ மேடம்! இப்போ செளக்யமா இருக்கீங்களா? மகிழ்ச்சி! ;)

    தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும், பாராட்டுக்களும், வாழ்த்துகளும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக உள்ளன.

    சந்தோஷங்களுடன் கூடிய என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  50. Very happy to see Sir, You are deserve for it sir.
    Congragulations.
    viji

    பதிலளிநீக்கு
  51. viji November 11, 2012 10:39 PM
    //Very happy to see Sir, You are deserve for it sir.
    Congragulations.
    viji//

    WELCOME Mrs. VIJI Madam,

    Thanks a Lot for your kind visit here &
    for your valuable comments too.

    My Best Wishes to you for a
    Very Very Happy Deepavali.

    With kind regards,
    VGK

    பதிலளிநீக்கு
  52. ஐயா! தங்களின் நீண்டநாள் இரசிகனின் வணக்கங்கள்! நலமா! இன்றுதான் காணும் வாய்ப்பு கிடைத்தது! வலைசர அறிமுகத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்! மீண்டும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  53. புலவர் சா இராமாநுசம் November 16, 2012 6:52 PM
    //ஐயா! தங்களின் நீண்டநாள் இரசிகனின் வணக்கங்கள்! நலமா!//

    என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய புலவர் ஐயா அவர்களே வாருங்கள், வாருங்கள், வணக்கங்கள். நான் ஓரளவு ந்லமே! தாங்கள் நலமாக இருக்கின்றீர்களா, ஐயா. தங்களின் அன்பான வருகை என்னை மிகவும் மகிழ்விக்கிறது, ஐயா.

    //இன்றுதான் காணும் வாய்ப்பு கிடைத்தது!//

    அது என் பாக்யம் ஐயா .... மிகுந்த சந்தோஷம் ஐயா.

    //வலைச்சர அறிமுகத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்!//

    ஆனந்த விகடன் - என் விகடன் - வலையோசை - அறிமுகம் - ஐயா. வாழ்த்துகளுக்கு நன்றிகள் ஐயா. எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள், ஐயா.

    //மீண்டும் சந்திப்போம்.//

    ஆகட்டும் ஐயா. கட்டாயமாக மீண்டும் சந்திப்ப்போம்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  54. வணக்கம் ஐயா...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன்November 17, 2012 5:37 PM
      //வணக்கம் ஐயா...//

      வாங்கோ! வணக்கம் திண்டுக்கல் திரு. தனபாலன் சார்!

      தாங்கள் என் பதிவுக்கு வருகை தந்தாலே, அந்தக்காலத்தில் என் வீட்டுவாசலுக்கு வரும் குடுகுடுப்பாண்டி ஞாபகமே எனக்கு வருகிறது. கோபித்துக்கொள்ளாதீர்கள், அதுபோன்று வரும் குடுகுடுப்பைக்காரரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

      “நல்ல காலம் பொறக்குது [பிறக்குது]
      நல்ல சேதி [செய்தி] வருகுது [வருகிறது]”ன்னு
      தான் அவரு சொல்லுவார். நான் பொய் சொல்லவில்லை.
      உங்களுக்கு சந்தேகமானால் என் இந்தப்பதிவுக்குச் சென்று பாருங்கோ / படியுங்கோ / கருத்துச்சொல்லுங்கோ:

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_3486.html

      //உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...//

      மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...//

      அட்டா! பார்த்தீங்களா!! ஒரு நல்ல சேதியைக்கொண்டாந்து கொடுத்து அசத்திட்டீங்க!!!

      திண்டுக்கல் என்றாலே பிரபலமான “பூட்டு” ஞாபகம் தான் எனக்கு வருகிறது. ஆனால் திண்டுக்கல்காரராகிய உங்களால் எதையுமே பூட்டி ரகசியமாக வைக்கவே முடிவது இல்லை.
      திறந்த பூட்டுபோலவே பரந்த மனத்துடன் உள்ளீர்கள்.

      இதுபோலவே எனக்கு ஒரு கோவைக்காரர் பேருதவி செய்து வந்தது தான் என் நினைவுக்கு வருகிறது.

      நான் என் பதிவுகளில் கொடுத்த விருதுகளையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களின் தளங்களுக்குச் சிட்டுக்குருவி போல அல்ல அல்ல பைங்கிளிபோல அழகாகப் பறந்து சென்று முதல் தகவல் அளித்து வந்தார்கள்.

      பசுமையான அந்த பைங்கிளியின் நினைவுகள் என் நெஞ்சத்தில் இன்றும் நிறைந்துள்ளது.

      ”மறக்க மனம் கூடுதில்லையே .....!”
      இதோ அதற்கான இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
      மறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1 / 4

      பைங்கிளியின் + திறந்த பூட்டின் சேவைகளுக்கு தலை வணங்குகிறேன். நன்றி கூறிக்கொள்கிறேன்.

      என்றும் நன்றி மறவாத.....
      தங்களிடம் பிரியமுள்ள ....
      VGK

      நீக்கு
  55. ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் தளம் பகிரபட்டதற்கு வாழ்த்துக்கள். என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  56. கோமதி அரசு November 30, 2012 3:35 AM
    //ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் தளம் பகிரபட்டதற்கு வாழ்த்துக்கள். என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்த்துக்கள் சார்.//

    வாங்கோ மேடம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  57. "ஆனந்த விகடன்--என் விகடன்--வலையோசை” இல்
    “தங்கள் வலைப்பூ” -
    பெருமையுடன் அறிமுகம் கிடைத்ததற்கு
    மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்..
    இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:50 PM

      //"ஆனந்த விகடன்--என் விகடன்--வலையோசை” இல்
      “தங்கள் வலைப்பூ” - பெருமையுடன் அறிமுகம் கிடைத்ததற்கு
      மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.. இனிய பாராட்டுகள்.//

      வாங்கோ மேடம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மகிழ்ச்சியுடன் கூடிய மனம் நிறைந்த நல்வாழ்த்துகளுக்கும், இனிய பாராட்டுக்களுக்கும். என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  58. மிகவும் அருமை சார் ரசித்துப் படித்தேன். வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு
  59. Thenammai Lakshmanan May 13, 2014 at 3:23 PM

    //மிகவும் அருமை சார் ரசித்துப் படித்தேன். வாழ்த்துகள். :)//

    வாங்கோ மேடம். வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் ரசித்துப்படித்து வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  60. ஆஹா.. இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். வாழ்த்துகள் கோபு சார். நம்முடைய சிறு துணுக்கு பத்திரிகையில் வந்தாலுமே மனம் கொள்ளாத மகிழ்ச்சி ஏற்படும். வலைத்தளத்தையே அறிமுகம் செய்வது அதுவும் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகையால் என்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயம். அந்த அளவுக்கு தங்களுடைய எழுத்து தரம் வாய்ந்தது என்பது நாங்கள் அறிந்ததே. மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி March 24, 2015 at 3:06 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஹா.. இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். வாழ்த்துகள் கோபு சார்.//

      மிகவும் சந்தோஷம். தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      //நம்முடைய சிறு துணுக்கு பத்திரிகையில் வந்தாலுமே மனம் கொள்ளாத மகிழ்ச்சி ஏற்படும்.//

      ஆமாம். உண்மைதான். நிச்சயமாக மனம் கொள்ளாத மகிழ்ச்சிதான் ஏற்படும். என் அனுபவமும் அப்படியே.

      //வலைத்தளத்தையே அறிமுகம் செய்வது அதுவும் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகையால் என்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயம்.//

      மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும்தான் உணர்ந்தேன். எனக்கும் ஆனந்தவிகடனுக்கும் இன்றுவரை எந்தவிதமான ஒரு சிறு தொடர்புகளும் இல்லாதபோதும், இதுபோல அவர்கள் என்னைப்பற்றி எழுதியிருந்தது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது.

      //அந்த அளவுக்கு தங்களுடைய எழுத்து தரம் வாய்ந்தது என்பது நாங்கள் அறிந்ததே.//

      அடடா, இங்கு திருச்சியில் இன்று 105 டிகிரிக்குமேல் வெயில் கொளுத்தி வருகிறது. இருப்பினும் எனக்குக் குளிர்வதுபோல உள்ளது .... உங்களின் இந்த கருத்துக்கள் மிகப்பெரிய ஐஸ்கட்டி மேல் என்னை அமரச்செய்துள்ளதால் மட்டுமே நான் ஜில்லிட்டுப் போய் உள்ளேன். :)

      //மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார்.//

      நன்றி, நன்றி, நன்றி !

      தங்களின் அன்பு வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன் கோபு

      நீக்கு
  61. தாங்கள் அடைந்த சிறப்பிற்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனி. கந்தசாமி May 4, 2015 at 8:50 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தாங்கள் அடைந்த சிறப்பிற்கு பாராட்டுகள்.//

      எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள்.

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி சார்.

      நீக்கு
  62. இதெல்லாம் நடக்காட்டாதான் ஆச்சரியப் படணும்.

    வாழ்த்துக்கள் கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 20, 2015 at 3:28 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //இதெல்லாம் நடக்காட்டாதான் ஆச்சரியப் படணும்.//

      ஹைய்ய்ய்ய்ய்ய்யோ :)

      //வாழ்த்துக்கள் கோபு அண்ணா//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, ஜெ.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  63. விகடனில் உங்கள் வலைப்பக்கம் பற்றிய அறிமுகம் வெளிவந்ததற்குப் பாராட்டு:-
    அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்ததற்கான பயணச்செலவு பட்டியலைச் சமர்ப்பிக்க அதில் மூன்றுவித ஆட்சேபணைகள் எழுப்பும் குமாஸ்தா, பணம் கைமாறியதும் அவற்றைத் மாற்றிப் பரிந்துரைக்கும் குமாஸ்தா என மிகவும் சுவையான, புதுமையான கற்பனையை மிகவும் ரசித்தேன்.
    முல்லா கதையும் அருமை. இரண்டு நகைச்சுவை துணுக்குகளையும் வெகுவாக ரசித்தேன். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kalayarassy G July 1, 2015 at 8:30 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //விகடனில் உங்கள் வலைப்பக்கம் பற்றிய அறிமுகம் வெளிவந்ததற்குப் பாராட்டு:-

      அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்ததற்கான பயணச்செலவு பட்டியலைச் சமர்ப்பிக்க அதில் மூன்றுவித ஆட்சேபணைகள் எழுப்பும் குமாஸ்தா, பணம் கைமாறியதும் அவற்றைத் மாற்றிப் பரிந்துரைக்கும் குமாஸ்தா என மிகவும் சுவையான, புதுமையான கற்பனையை மிகவும் ரசித்தேன். முல்லா கதையும் அருமை. இரண்டு நகைச்சுவை துணுக்குகளையும் வெகுவாக ரசித்தேன். பாராட்டுக்கள்! //

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான மகிழ்வான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  64. ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு பகிரப்பட்டது குறித்து முதலில் உங்களுக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 13, 2015 at 11:38 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆனந்த விகடனில் வலையோசையில் தங்களின் படைப்பு பகிரப்பட்டது குறித்து முதலில் உங்களுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளால் என் மனம் குளிர்ந்து போனது! :))

      தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

      நீக்கு
  65. ஓ...ஓ... விகடனு பொஸ்தவத்துலயும் உங்கட பத்தி வந்துகிச்சா. வாழ்த்துகள். அது மின் பொஸ்தகம்னு சொல்லினிங்க.

    அந்த வேடிக்கை வாய்ப்பாடு நல்லாருக்குது இப்ப தா பாத்தன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 10:15 AM

      //ஓ...ஓ... விகடனு பொஸ்தவத்துலயும் உங்கட பத்தி வந்துகிச்சா. வாழ்த்துகள். அது மின் பொஸ்தகம்னு சொல்லினிங்க.//

      அது ஓ...ஓ... விகடன் அல்ல. :))))) ஆனந்தவிகடனாக்கும்! வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      //அந்த வேடிக்கை வாய்ப்பாடு நல்லாருக்குது இப்ப தா பாத்தன்//

      அது ஏற்கனவே என் ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற அனுபவத்தொடரிலேயே வெளியிட்டுள்ளேன்.

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/03/2.html

      நீக்கு
  66. ஆனந்த விகடன் ஒரு ஸ்டாண்டர்டு பத்திரிக்கை. வலையோசையில் உங்களைப்பாராட்டி இருப்பதற்கு வாழ்த்துகள். எப்படி பின்னூட்டம் போடறவாளுக்கெல்லாம் இவ்வளவு நீண்ட பதில் கொடுக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
  67. வலைல எழுதத் துவங்குனதாலதான் எனக்கு ஒரு வாத்யார் கிடைத்தார்...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு