என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
இனிய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

வலைச்சரத்தில் 100வது அறிமுகம்



  வலைச்சரத்தில்   

 வெற்றிகரமான  

  100வது அறிமுகம்  

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான அன்பு வணக்கங்கள்.

இன்று 24.08.2014 ஞாயிறு வலைச்சரத்தில் என்னுடைய வலைத்தளத்தின் 100வது அறிமுகம் நிகழ்ந்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

02.01.2011 அன்று முதன்முதலாக வலைத்தளத்தில் எழுதத் துவங்கிய என்னையும், என் பதிவுகளையும் கடந்த 44 மாதங்களில் பல்வேறு வலைச்சர ஆசிரியர்கள் பாராட்டி வலைச்சரத்தில் எழுதியுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் இங்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். 

அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியுமே தனித்தனிப் பதிவுகளாகத் [ஒருசில தொடர் பதிவுகளாக]  தந்து சிறப்பித்து நன்றி கூறவும் எண்ணியுள்ளேன்.

இன்றைய வலைச்சரத்தின் இணைப்பு இதோ:






இந்த வெற்றிகரமான 100வது அறிமுகத்தினைச் செய்து இன்று பெருமை படுத்தியுள்ள என் அன்புச்சகோதரி திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.


என் அன்புக்குரிய சகோதரி
திருமதி ‘ஜெயந்தி ரமணி’ அவர்கள். 

இவர்களின் வலைத்தளங்கள்
எப்போதும் 


மனம் [மணம்] வீசும்’




எங்களின் நட்புக்கு ஓர் இணைப்புப் பாலமாக 
அமைந்துள்ள ஒரு சில பதிவுகள்  
இதோ தங்களின் பார்வைக்காக:

அறுபதிலும் ஆசை வரும் :)))))

[ படங்களுடன் ]

-oOo-

பனை [பண] விசிறி 

[எங்களின் இனிய சந்திப்பு - படங்களுடன்]



அன்புள்ள திருமதி. ஜெயந்தி  ரமணி அவர்களே ! 

வணக்கம்.

இன்று என்னை வலைச்சரத்தில்
100வது முறையாக அடையாளம் காட்டி
சிறப்பித்துள்ளதற்கு 
என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.



 பிரியமுள்ள கோபு அண்ணா

 


திங்கள், 10 டிசம்பர், 2012

16.12.2012 தேதியிட்ட கல்கியில் என் பெயர்

அன்புடையீர்,

வணக்கம்.


16.12.2012 தேதியிட்ட கல்கி இதழின் 
பக்கம் எண்கள்: 58 +59 இல் 
“வாசகர் கமென்ட்ஸ் போட்டி முடிவு!” வெளியிட்டுள்ளார்கள்.

அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
15 கமென்ட்ஸ்களில் 
என்னுடையதும் ஒன்று 
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

-oOo-

கீழ்க்கண்ட படத்துக்கு வாசகர்கள் அனுப்பிக் குவித்த கமென்ட்ஸ்களிலிருந்து தேர்வான சிறந்த கமென்ட்ஸ்கள் இங்கே பிரசுரமாகியுள்ளன. 

பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் நன்றி!

[ "கல்கி" Dated 16.12.2012 
Released on 09.12.2012 ]





என்னால் எழுதியனுப்பப்பட்டு
வெளியாகியுள்ள கமெண்ட்:

அறுந்திடும் செருப்புக்களால்
அறாமல் தொடர்ந்திடும் படிப்பு

- வை.கோபாலகிருஷ்ணன், திருச்சி




போட்டி முடிவு வெளியான 
கல்கி இதழின் அட்டைப்படம்





அன்புடன்
VGK

திங்கள், 20 பிப்ரவரி, 2012

நாளை நடக்க உள்ள அதிசயம் !




விகடகவி

தேருவருதே

யானைபூனையா

MALAYALAM

தாத்தா 

பாப்பா

மாமா

காக்கா

டாட்டா 

மேலே காணப்படும் வார்த்தைகளிலெல்லாம் ஏதோ ஒரு ஒற்றுமை உள்ளது.

அவற்றைத் திருப்பிப்படித்தாலும் [வலமிருந்து இடமாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ] அதே வார்த்தைகள் வருகின்றன.

அதே போல கீழே உள்ள வார்த்தைகளை படுக்கை வசமாகவோ, மேலிருந்து கீழாகவோ வாசித்தாலும் அதே வார்த்தைகள் திரும்ப வருகின்றன பாருங்கள்.


சி வா ஜி
வா யி லே
ஜி லே பி

வி பூ தி
பூ ண ல்
தி ல் லி

க ர டி
ர யி ல்
டி ல் லி 

நாளைய ஆங்கிலத் தேதியாகிய 21022012 லும் இதே போன்ற ஆச்சர்யம் உள்ளது பாருங்கள். 

எப்படிப் பார்த்தாலும் 21022012 ஐக் காட்டும் அபூர்வத்தேதி அல்லவா! 

-ooooOoooo-










செவ்வாய், 24 ஜனவரி, 2012

செல் ஃபோன் திருடப்பட்டால், இனி கவலையில்லையாம்!

செல் ஃபோன் திருடப்பட்டால், 
இனி கவலையில்லையாம்!






செல் ஃபோன் திருடப்பட்டால், இனி கவலையில்லையாம்! என்பது இனிய செய்தி தானே! அதைப்பற்றி எனக்கு சமீபத்தில் கிடைத்த தகவல்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

செல் ஃபோன் என்பது இன்று நமக்கு இன்றியமையாத ஒரு [அத்யாவஸ்யமானப்] பொருளாகி விட்டது. அது இல்லாமல் இனி உயிர்வாழவே முடியாது என்ற நிலைமைக்குத் தான் அநேகமாக நாம் எல்லோரும் வந்துவிட்டோம்.

இந்த அத்யாவஸ்யமான பொருள் அடிக்கடி திருட்டுப்போகவும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என்பதும் நம்மால் மறுக்க முடியாத ஒன்று தான். 

அவ்வாறு தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ நம் மனம் மிகவும் வருத்தமடையத்தானே செய்யும். 

இதனால் பல தொல்லைகள் நமக்கு ஏற்படுவதும் இயற்கையே.  கையும் ஓடாது காலும் ஓடாது. பல நண்பர்களின், உறவினர்களின் தொடர்பு எண்கள் நமக்குத் தெரியாமல் போகும். திருடப்பட்ட அது திருடப்பட்டவரால் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்புகள் அதிகம். 

இந்த தொல்லைகள் இனி இல்லை என்று சொல்லி, காதுக்கு இனிமையான செய்தி ஒன்று வந்துள்ளது.

கவனமாகப் படியுங்கள். அதன்படி உடனடியாக செயல்படுங்கள். மிகவும் எளிது தான்.

உங்கள் செல்போனை இப்போது கையில் எடுத்துக்கொள்ளுங்கள். பேசுவதற்குத் தயாராக Switch On செய்துகொள்ளுங்கள்.

*#06#  டயல் செய்யுங்கள்.

இப்போது IMEI எண் என்ற 15 ஸ்தான எண் ஒன்று வரும்.

இதை மிகவும் ரகசியமாக எங்காவது தனியே எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இதை எக்காரணம் கொண்டும் உங்கள் செல் ஃபோனிலேயே பதிவு செய்து வைக்காதீர்கள். அது மீண்டும் ஆபத்தையே விளைவிக்கும்.

இதை உங்கள் மின்னஞ்சலுக்குப்போய் [Compose Mail க்குப்போய்] உங்கள் மெயில் விலாசத்திற்கே அனுப்பிக்கொள்ளுங்கள்.  முடிந்தால் அந்த மெயில் அனுப்பப்படும் நாள், உங்கள் பிறந்த நாளோ, திருமண நாளோ, குழந்தைகளின் பிறந்த நாளோ ஏதாவது ஒன்றில் அனுப்பி வைத்தீர்களானால், அது மறக்காமல் பிறகு அவசர ஆத்திரத்திற்கு தேடிக் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும். 

தங்கள் செல்ஃபோன் துரதிஷ்டவசமாக தொலைந்து போனாலோ, திருடப்பட்டாலோ, உடனடியாக இந்த 15 ஸ்தான IMEI எண்ணை மேலும் சில தகவல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கவும்:

மின்னஞ்சல் முகவரி: cop@vsnl.net

மின்னஞ்சலில் மேலும் தரவேண்டிய தகவல்கள்:

Name:
Full Postal Address:
Phone Model:
Make:
Last used Number:
E-mail for communication:
Missed Date:
IMEI Number [15 digit]

போலீஸில் புகார் அளிக்க வேண்டியது இல்லை. 

இந்த தங்களின் மெயில் கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், GPRS & INTERNET SYSTEM மூலம் தங்களின் செல் ஃபோன் எங்கு யாரிடம் உள்ளது என்ற தகவல் சுலபமாகக் கண்டு பிடித்துத் தந்து விடுவார்களாம். 

திருடியவர் ஒருவேளை ஏற்கனவே உள்ள தங்களின் செல் ஃபோன் நம்பரையே மாற்றி, பயன்படுத்தி வந்தாலும், கண்டுபிடித்து விடுவார்களாம்.

இது உங்களுக்கு உபயோகமான, மகிழ்ச்சியளிக்கும் நல்லதொரு தகவல் தானே!

நமது செல் ஃபோன் அடுத்த நிமிடமே கூட காணாமல் போய்விடக்கூடும் அல்லவா? அதனால் மேலும் தாமதிக்காமல் IMEI எண்ணை உடனடியாகக் கண்டு பிடித்து அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்புடன்
vgk