என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 28 மே, 2013

1] வெயிட்லெஸ் விநாயகர்

2
ஸ்ரீராமஜயம்

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம். 

நவக்கிரஹங்களுக்குள் மந்திரங்கள், தெய்வ வழிபாடு ஆகியவற்றிற்கு அதிபதியாக உள்ள ஸ்ரீ குரு பகவான் [வியாழன் என்னும் கிரஹம்] திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 31.05.2013 வெள்ளிக்கிழமை காலை 06.49 மணிக்கும், வாக்கியப் பஞ்சாங்கப்படி  இன்று 28.05.2013 செவ்வாய்க்கிழமை இரவு 09.18 மணிக்கும்,  ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சியாகிறார்.

குழந்தைகள், வம்சவிருத்தி, ஸ்வர்ண [தங்க] இலாபம், பதவி உயர்வு ஆகியவற்றைத்தர சக்தியுள்ள குருபகவான் புதன் வீடான மிதுன ராசியில் நுழைவதால், தேசத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும். ஆஸ்திகம் வளர்ச்சியடையும்  எனக்கூறப்படுகிறது.

குருப்பெயர்ச்சி + அக்னி நக்ஷத்திர நிவர்த்தி நாளான இன்று, மிகச்சரியாக குருப்பெயர்ச்சி நேரத்தில் இந்தப்புதிய தொடரின் முதல் பகுதியினை வெளியிடும் பாக்யம், குருவருளால் கிடைத்துள்ளதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.  

உலக மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இந்தத் தொடரினை தொடர்ந்து படிக்கப்போகும் அனைவருக்கும் குருவருள் கிட்டி, எல்லோரும் வாழ்க்கையில், சுபிட்சமாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழவேண்டும் என பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்




2
ஸ்ரீராமஜயம்



விநாயகரோ யானை மாதிரி இருக்கின்றார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தன் வாகனமாக வைத்துக்கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி என்று வாகனம் இருக்கிறது. 

இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக்கொண்டாலும், வாகனத்தினால் ஸ்வாமிக்கு கெளரவம் இல்லை. ஸ்வாமியால் தான் வாகனத்திற்கு கெளரவம். 

வாகனத்திற்கு கெளரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப்பிள்ளையார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார், அதற்கு சிரமம் இல்லாமல். 





ஆனால் அதற்கு மரியாதை கெளரவம் எல்லாம் உண்டாகும்படியாக தம் உடம்பை வைத்துக்கொண்டிருக்கிறார், ஸ்தூலகாயரான போதிலும்.



‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.     




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
[ஒருநாள் விட்டு ஒருநாள்]
தொடர்ந்து பொழியும்.






62 கருத்துகள்:

  1. குரு அருள் முதலில் கிடைத்திருக்கிறது..! அமுத மழையை படிக்கும் நேரம் வேலூரிலும் சின்னதாய் வான் மழையும் பொழிந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரு மழையும் பொழியட்டும் நாடு செழிக்கட்டும்..!
    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. Mahaa periyavaaludaiya amuda mazhaiyei rasikka kaaththirukkirom!

    பதிலளிநீக்கு
  3. Aha!
    Guru peyarchi aduvum Guruvin thiruvarul.
    Muthal padame romba arumai.
    Nan pillayar preeyai.
    pillayarin dance pose romba romba super.
    Amutha malayil nanaya arvamudan kathrikken.
    viji

    பதிலளிநீக்கு
  4. வெயிட்லெஸ் விநாயகர் பதிவு நிறைய தகவல்களுடன் வெயிட்டாக இருக்கிறது. உங்களுடைய தொடர் பதிவை எங்களுக்கும் குருவின் திருவருள் கிடைக்குமென்று நம்புகிறேன்.
    அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. குருப்பெயர்ச்சி நேரத்தில் நல்லதொரு பதிவு.
    மாலை ஒரு திருமண வரவேற்புக்குச் சென்று வந்தேன்.
    நல்ல மழை வேறு.

    என் செல்லப்பிள்ளை பிள்ளையார் பற்றிய பதிவு அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வை.கோ - மடலும் கிடைத்தது - மகிழ்ச்சி அடைந்தேன் - இப்பதிவு அருமை - குருபெயர்ச்சி அன்று விளக்கங்களுடன் வெளீ வந்த பதிவு - நன்று நன்று. விநாயகர் பெரிய ஸ்வாமியாக இருந்தாலும் வகனம் சிறியதாகத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

    குருவருள் அனைவருக்கும் கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக்கொண்டாலும், வாகனத்தினால் ஸ்வாமிக்கு கெளரவம் இல்லை. ஸ்வாமியால் தான் வாகனத்திற்கு கெளரவம்.

    அமுதமழைக்கு வாழ்த்துகள்...!

    பதிலளிநீக்கு
  8. ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.

    எத்தனை கனமான பிரச்சினைகளையும்
    களைந்து கனமில்லாமல் லேசாக்குபவராயிற்றே கணபதி ..!

    பதிலளிநீக்கு
  9. குருப்பெயர்ச்சி + அக்னி நக்ஷத்திர நிவர்த்தி நாளான இன்று, மிகச்சரியாக குருப்பெயர்ச்சி நேரத்தில் இந்தப்புதிய தொடரின் முதல் பகுதியினை வெளியிடும் பாக்யம், குருவருளால் கிடைத்துள்ளதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

    குருவருளால் குருப்பெயர்ச்சி நலமே நல்கிடும்..!

    பதிலளிநீக்கு
  10. மிக நன்றி கோபு சார். சங்கரா டிவியிலும் இப்போது மஹா பெரியவா தரிசனம்.அனைவரும் நலமாக இருக்க இந்தப் பதிவுகள் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  11. ஆழ்ந்த கருத்துடைய
    அருமையான விளக்கம்
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  12. சிறப்பான நாளில் ஆரம்பம்... குருவருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்...

    நல்வாழ்த்துகள் ஐயா... நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  13. அருமையான பகிர்வு. தொடருங்கள். தொடருகிறோம்.

    பதிலளிநீக்கு
  14. மூஞ்சூறு மிகச்சிறிய விலங்கினம்.
    சுறுசுறுப்பிலோ அதன் ஓட்டங்களிலோ
    ஒரு அளவிடமுடியாதது.

    மனிதர்களாகிய நாமும் அண்ட சராசரத்தோடு ஒப்பிடுகையில்
    ஒரு துளி மண்ணுக்கும் குறைவே.

    இருப்பினும் நம் ஊசலாடும் மனசுக்கோர் அளவில்லை.

    இறைவனை மனசில் நிறுத்தினால்
    இறைவன் சிந்தனையே தன் மேல் நிறுத்தினால்
    மனதின் ஓட்டம் குறையும்.
    மனதில் அமைதி கூடும்.

    இப்படியும் நினைக்கலாமோ என்று தோன்றியது.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
  15. தெய்வத்தின் குரலை, மீண்டும் மீண்டும் கேட்பதில் மனம் மகிழ்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா29 மே, 2013 அன்று AM 10:49

    கனதியான பதிவு. குருப் பெயர்சித் தகவலுடன்.
    வாகனம் சிறிதானாலும் ஆதாயம் பெரிதல்லவா!
    மிக்க நன்றி
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  17. மூஷிக வாகனருடன் பதிவு அருமை. தெய்வத்தின் குரலை உங்களின்
    பாணியில் படிக்கத் தயாராகி கணேசரை வணங்கியாகிவிட்டது, அப்புரம் என்று காத்திருக்கிறோம். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. தொடரின் பிள்ளையார் சுழியே அபாரம். தன் வாகனத்துக்கு கனக்காமல் பயணிக்கும் பிள்ளையார் ரசிக்கவைக்கிறார். தொடரும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து மகிழ்வேன்.

    பதிலளிநீக்கு
  19. எந்த ஒரு செயலானாலும் பிள்ளையார் பூஜையுடன் தொடங்குவது போல இதையும் விநாயகத் தகவலுடன் தொடங்கியிருக்கிறீர்கள். தற்செயலா? திட்டமிட்டேவா? நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  20. எப்படி இந்த பதிவை மிஸ் செய்தேன்..எனக்கு பிடித்த பிள்ளையார் பதிவு,நல்வாழ்த்துக்கள் ஐயா!!

    பதிலளிநீக்கு
  21. // உலக மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இந்தத் தொடரினை தொடர்ந்து படிக்கப்போகும் அனைவருக்கும் குருவருள் கிட்டி, எல்லோரும் வாழ்க்கையில், சுபிட்சமாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழவேண்டும் என பிரார்த்தித்துக்கொள்கிறேன். //

    உங்கள் பதிவினை இப்போதுதான் படிக்க முடிந்தது. எல்லோருடைய நலனையும் வேண்டி பிரார்த்தனை செய்யும் உங்களுக்கு நன்றி! உங்களின் தொடர் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  22. நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு.
    பாராட்டுக்கள்.

    இவன் எப்போதும் உங்களுடன்தான் இருக்கிறான்.
    உங்கள் பணி தொய்வின்றி தொடரட்டும்.

    பெரியவர் நமக்களித்த பொக்கிஷம் அவரின் பணிவு,துணிவு, அன்பு,கட்டுப்பாடு,கடமைகளை தவறாது அனுஷ்டித்தல், பக்தி, வாத்சல்யம் ,தெய்வ நம்பிக்கை, அனைவரையும் மதித்து போற்றும் பரந்த குணம் ,எளிமை, பொறுமை, அகந்தையின்மை, சகிப்புத்தன்மை, நிறைவான ஞானம் இவை போன்றவைதான். அவைகளை நாம் வாழ்வில் கடைபிடிப்பதுதான் நாம் அவருக்கு செய்யும் நன்றிகடனாகும்.

    பதிலளிநீக்கு
  23. வாகனத்திற்கு கெளரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப்பிள்ளையார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார், அதற்கு சிரமம் இல்லாமல்.

    உங்கள் பதிவுகளும் வாசிக்க சிரமம் இல்லாமல் எளிதாய் இருப்பது போல !

    பதிலளிநீக்கு
  24. குருப் பெயர்சித் தகவலுடன்.
    வாகனம் சிறிதானாலும் ஆதாயம் பெரிதல்லவா!
    மிக்க நன்றி
    மழை பொழியட்டும் அய்யா

    பதிலளிநீக்கு
  25. குருவருள் பற்றியும் பிள்ளையாரின் பெருமை பற்றியும் சொல்லி தொடர் ஆரம்பித்திருக்கிறது. தொடரட்டும்..... தொடர்கிறேன் நானும்!

    பதிலளிநீக்கு
  26. ஆரம்பமே அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  27. ஆரம்பமே அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  28. // ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.
    //

    arumaiyana varigal.

    //
    உலக மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இந்தத் தொடரினை தொடர்ந்து படிக்கப்போகும் அனைவருக்கும் குருவருள் கிட்டி, எல்லோரும் வாழ்க்கையில், சுபிட்சமாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழவேண்டும் என பிரார்த்தித்துக்கொள்கிறேன்.//

    prarthanaikkum vazhuthukalukkum nandri gopu sir.

    பதிலளிநீக்கு
  29. //உலக மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இந்தத் தொடரினை தொடர்ந்து படிக்கப்போகும் அனைவருக்கும் குருவருள் கிட்டி, எல்லோரும் வாழ்க்கையில், சுபிட்சமாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழவேண்டும் என பிரார்த்தித்துக்கொள்கிறேன்.//

    பிள்ளையார் துதியுடன் குருவைபற்றி அழகாய் சொல்ல போகிறீர்கள். அதற்கு முன் அனைவருக்குக்ம் உங்கள் வாழ்த்து மகிழ்ச்சியை அளிக்கிறது.
    நன்றி.
    தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  30. விநாயகரை துதித்து குருவருள் பற்றி சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள். நாங்களும் உங்களுடன் சேர்ந்து குருவருள் பெற காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  31. ஆரம்பமே அருமை.குருவருள் பற்றியும் பிள்ளையாரின் பெருமை அருமை...

    பதிலளிநீக்கு
  32. குருவருள் பற்றியும் பிள்ளையாரின் பெருமை பற்றியும் அருமை..அருமை..அருமை... நல்வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  33. குருபெயர்சி நாளில் அனைவருக்கும் சுபீட்சம் கிடைக்க வாழ்த்தி பிள்ளையார் வணக்கத்துடன் ஆரம்பித்துள்ளீர்கள்.

    நன்றி. தொடர்ந்து மகிழ்வோம்.

    பதிலளிநீக்கு
  34. The very first post itself is excellent. Very very informative, I learnt a lot about Guru and Vinayagar.
    Sir, You had mentioned in my post I have not visited your blog, I was on blog break and was not in town. I came back only yesterday. I am sorry I could not visit your space earlier.
    Thank you very much...

    பதிலளிநீக்கு
  35. அடடா மீ எப்பூடி மிஸ் ஆனேன்ன்:)).. பறவாயில்லை.. தகவல் அறிஞ்சு வந்திட்டனெல்லோ...

    பதிலளிநீக்கு
  36. //இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக்கொண்டாலும், வாகனத்தினால் ஸ்வாமிக்கு கெளரவம் இல்லை. ஸ்வாமியால் தான் வாகனத்திற்கு கெளரவம். ///

    என்னா ஒரு கண்டுபிடிப்பு சூப்பர்ர்ர்ர்ர்ர்:))... அது ஏனெண்டால் எலியோடு இருந்தால்தான் பூஸ் வரும் என்றுதான் அவர் அப்படி எலிவாகனம் வைத்திருக்கிறார்ர்... பூஸில அப்படி ஒரு விருப்பம்...:)).. ஆனா பூஸுக்கு பிள்ளையார் எதிரி:) ஏன் தெரியுமோ?:) எலியாரைப் பாதுகாக்கிறார்:))

    பதிலளிநீக்கு
  37. //நவக்கிரஹங்களுக்குள் மந்திரங்கள், தெய்வ வழிபாடு ஆகியவற்றிற்கு அதிபதியாக உள்ள ஸ்ரீ குரு பகவான் [வியாழன் என்னும் கிரஹம்] திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 31.05.2013 வெள்ளிக்கிழமை காலை 06.49 மணிக்கும், வாக்கியப் பஞ்சாங்கப்படி இன்று 28.05.2013 செவ்வாய்க்கிழமை இரவு 09.18 மணிக்கும், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சியாகிறார்.///

    ஆவ்வ்வ்வ்வ் எங்களுக்கு குருப்பெயர்ச்சியால நல்ல எழுப்பமாம்ம்ம்ம்... நானும் கணவரும் ஒரே ராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆசி:).

    பதிலளிநீக்கு
  38. ஆரம்பம் அருமை! அமுத மழை பொழியட்டும்! அருளெங்கும் பரவட்டும்!நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  39. //பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.// மனதில் லேசாக இருப்பவர். லேசுப்பட்டவர் இல்லை. அவரைப்பற்றி முதலெழுதி தொடரை ஆரம்பிக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  40. அருள்மழையில் நனைய ஆயத்தமாகி விட்டேன்!

    பதிலளிநீக்கு
  41. மிகமிகச் சிறப்பே... அனைத்தும் அவன் சித்தம். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  42. குரு+விநாயகர்+காஞ்சி பெரியவர் தொடர் பற்றின அறிவிப்பு நன்று.எனக்கு விநாயகர் வாகனம் பற்றின பிரமிப்பு உண்டு.வட இந்தியாவில் எலிகள் என்ன வாலுத்தனம் செய்தாலும் விநாயகர் சேட்டையாக எண்ணி வணங்கி மகிழ்பவர்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
  43. விநாயகர் பற்றிய அமுத மொழிகளை படித்து இன்றைய நாளை துவக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  44. குரு பார்க்கக் கோடி நன்மை கிட்டுமாம் எங்கள் பாட்டி சொன்னது :)அனேகமாக அந்த மாம்பழ யூஸ் எனக்கே எனக்கே அட கீழ நம்ம விரோதி இருக்காரே ஏற்கனவே இவரால வந்த குழப்பத்தில தானே ஒருத்தர் ஆண்டியாப் போனார் எனக்கு அந்த நிலம வராது .பகவான் கோபால கிருஷ்ணன் இருக்கிறப்போ மனக் கவலை எதற்கு ?....:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ambal adiyal September 27, 2013 at 3:05 PM

      வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      இனிமையாக இன்று புரட்டாசி சனிக்கிழமையில் ஸ்திர வாரத்தில் முதல் பகுதியைப் படிக்க ஆரம்பித்துள்ளீர்கள். மகிழ்ச்சி.

      மளமளவென்று ஒவ்வொரு பகுதியாகப் படித்துக்கொண்டு போங்கோ.

      மறக்காமல் ஒரு சின்ன பின்னூட்டமாவது கொடுங்கோ. என் கணக்குப்பிள்ளைக் கிளிக்கு அது மிகவும் தேவை. அப்போதான் உங்களுக்கு அது மாங்கோ ஜூஸ் கொடுக்கும்.

      //குரு பார்க்கக் கோடி நன்மை கிட்டுமாம் எங்கள் பாட்டி சொன்னது :)அனேகமாக அந்த மாம்பழ யூஸ் எனக்கே எனக்கே அட கீழ நம்ம விரோதி இருக்காரே ஏற்கனவே இவரால வந்த குழப்பத்தில தானே ஒருத்தர் ஆண்டியாப் போனார் எனக்கு அந்த நிலம வராது .பகவான் கோபால கிருஷ்ணன் இருக்கிறப்போ மனக் கவலை எதற்கு ?....:))))//

      மிக்க மகிழ்ச்சி ;))))) சந்தோஷம். ALL THE BEST !

      நீக்கு
  45. வணக்கம் ஐயா
    வெயிட்லெஸ் விநாயகர்!
    //விநாயகர் பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார் //
    நல்ல பதிவு.
    தங்களின் ஒவ்வொரு பதிவும் என்றும் மறைய கூடாத வரலாறு.
    அதற்கு முழுமுதற் கடவுள் விநாயகர் துணை புரியட்டும்.
    அனைவருக்கும் குருவருள் கிடைக்கட்டும்.
    வாழ்த்துகள். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  46. அன்பு நண்பர் வை.கோ அவர்களே !

    50 மறுமொழிகளீல் ஆறாவது மறு மொழியாக - மே மாதம் இறுதியில் ( 28ம் நாள் ) - நள்ளிரவை நெருங்கும் போது (10:44 மணி ) க்கு இம்மறுமொழி யினை வெளியிட்டமை குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    தங்களீன் இடை விடா முயற்சியினை நினைத்து மகிழ்கிறேன்.

    பாராட்டுகள்
    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  47. அன்பு நண்பர் வை.கோ அவர்களே !

    50 மறுமொழிகளீல் ஆறாவது மறு மொழியாக - மே மாதம் இறுதியில் ( 28ம் நாள் ) - நள்ளிரவை நெருங்கும் போது (10:44 மணி ) க்கு இம்மறுமொழி யினை வெளியிட்டமை குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    தங்களீன் இடை விடா முயற்சியினை நினைத்து மகிழ்கிறேன்.

    பாராட்டுகள்
    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) April 8, 2015 at 5:33 AM

      வாங்கோ அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே ! வணக்கம்.

      //அன்பு நண்பர் வை.கோ அவர்களே !
      50 மறுமொழிகளீல் ஆறாவது மறு மொழியாக - மே மாதம் இறுதியில் ( 28ம் நாள் ) - நள்ளிரவை நெருங்கும் போது (10:44 மணி ) க்கு இம்மறுமொழி யினை வெளியிட்டமை குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் இடை விடா முயற்சியினை நினைத்து மகிழ்கிறேன். பாராட்டுகள்
      நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா//

      இந்தப்பதிவுக்குத்தங்களின் மீண்டும் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

      இந்த நம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய என் மெகா தொடரின் 108+17=125 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ள 17 நபர்களில் தாங்களும் ஒருவரே.

      பகுதி-1 க்கான இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2013/05/1.html

      பகுதி-108 க்கான இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2014/01/108.html

      இந்த 108 பகுதிகளுக்கு நடுவே 17 உப பகுதிகளும்
      என்னால் வெளியிடப்பட்டன.

      தங்களைப்போன்று இந்தத்தொடரின் (108+17=125) அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர் வருகை புரிந்து பின்னூட்டமிட்டுள்ள தங்கள் எல்லோரையும் தனித்தனியே குறிப்பிட்டு சிறப்பித்து, இந்தத்தொடரின் நன்றி அறிப்புப்பகுதியில் நான் வெளியிட்டிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். அதற்கான இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2014/01/108108.html

      இந்த ஒரு மெகா தொடர் போக, மேலும் என் பதிவுகள் பலவற்றிற்கு வருகை தந்து கருத்தளித்து மகிழ்வித்தும் உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      இருப்பினும் தாங்கள் இன்னும் வருகை தராமல் கருத்தளிக்காமல் உள்ள பதிவுகளும் கணிசமான அளவினில் பல உள்ளன என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

      தங்களைப்போல எனக்கு ... என் எழுத்துக்களுக்கு அவ்வப்போது ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள நபர்களை கெளரவித்து ஓர் அன்புப்பரிசளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஓர் மிக எளிமையான புதுமையான போட்டி ஒன்று என் சமீபத்திய பதிவினில் அறிவித்துள்ளேன்.

      இதோ அதற்கான இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2015/03/120404.html

      இதில் கட்டாயம் ஏதும் இல்லை. வற்புருத்தலோ நிர்பந்தங்களோ ஏதும் இல்லை.முடிந்தால் செளகர்யப்பட்டால் கலந்துகொள்ள முயற்சிக்கவும்.

      போட்டிக்கான காலக்கெடுவாக இன்னும் 8 அல்லது 9 மாதங்கள் உள்ளதால், தினசரி 2-3 பதிவுகள் வீதம் ஏற்கனவே தங்களால் விட்டுப்போன பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டம் அளித்துக்கொண்டே வந்தால் ஒரு ஆறு மாதங்களுக்குள் மிகச்சுலபமாக இதனை முடித்து, ரூ 500 அல்லது ரூ. 1000 அன்பளிப்பைத் தாங்களும் வென்று மகிழலாம்.

      இது JUST ஓர் தகவலுக்காக மட்டுமே.

      அன்புடன் VGK

      நீக்கு
  48. விநாயகர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். அவரை எப்படி வேண்டுமானாலும் படைத்து வணங்கலாம்.

    பதிலளிநீக்கு
  49. வெயிட் லெஸ் விநாயகர் தலைப்பும் படங்களும் தகவல்களும் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  50. புள்ளயாரு படங்கலா பதிவு நல்லா இருக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 25, 2015 at 10:21 AM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //புள்ளயாரு படங்கலா பதிவு நல்லா இருக்குது//

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      நீக்கு
  51. வெயிட்லெஸ் வினாயகர். தலைப்பும் படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. கோபுரம் பொம்மய தாங்கறதா பொம்மை கோபுரத்த தாங்கறதா.

    பதிலளிநீக்கு
  52. கனத்த மனத்துடன் வருவோரையும் மனதி லேசாக்கி அனுப்ப வல்லவர்!!!

    பதிலளிநீக்கு
  53. வெயிட்லெஸு பிள்ளையார்..... தலைபுபு எங்கேந்து பிடிக்கறேள். பதிவும் படங்களும் ரொம்ப நல்லா இருக்கு.. இந்த பதிவு போட்டே மூணு வருஷமாச்சே பெரிப்பா.. எனக்கு இப்பத்தான் பார்க்க ரசிக்க படிக்க சந்தோஷப்பட வாய்ப்பு கிடைச்சது.. இப்பவாவது கிடைச்சதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy October 21, 2016 at 6:17 PM

      வாம்மா .... ஹாப்பி, வணக்கம்.

      //வெயிட்லெஸு பிள்ளையார்..... தலைபுபு எங்கேந்து பிடிக்கறேள்.//

      :)))))

      //பதிவும் படங்களும் ரொம்ப நல்லா இருக்கு..//

      சந்தோஷம்மா.

      //இந்த பதிவு போட்டே மூணு வருஷமாச்சே பெரிப்பா.. எனக்கு இப்பத்தான் பார்க்க ரசிக்க படிக்க சந்தோஷப்பட வாய்ப்பு கிடைச்சது.. இப்பவாவது கிடைச்சதே..//

      இப்போதுதான், உனக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்து உள்ளது. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா பற்றி இனி அனைத்தையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளப் போகிறாய். அவரின் அனுக்கிரஹத்தால் உனக்கு வாழ்க்கையில் எல்லா வெற்றிகளும் + மனம் போல மாங்கல்யமும் கிடைக்கும்.

      தொடர்ந்து தினமும் ஒன்று வீதம் படித்துக்கொண்டே வா. எல்லா நல்லதும் அடுத்தடுத்து நடந்துகொண்டே இருக்கும், பார்.

      இனிய நல்வாழ்த்துகள் ..... டா.

      நீக்கு