என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 19 ஏப்ரல், 2014

VGK 12 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - 'உண்மை சற்றே வெண்மை’





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 12 - ” உண்மை சற்றே வெண்மை “


இணைப்பு:



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து












இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    


இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் 


மொத்தம் இருவர்.




அதில் ஒருவர்




 



இரட்டை ஹாட்-ட்ரிக் 

வெற்றியாளரான


 




திருமதி. 




  இராஜராஜேஸ்வரி  



    
  

அவர்கள்







http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"









இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திருமதி.



 இராஜராஜேஸ்வரி  




அவர்களின் விமர்சனம் இதோ:

 

மாடு  என்றால்  செல்வம்  என்று  ஒரு  பொருளும்  உண்டு..
முற்காலத்தில் ஆநிறை கவர்தல் என்பதே மன்னர்களின் பெரும்  போருக்கு ஆரம்பமாக அமையும்..

பசுக்கொட்டிலில்   பசுமாட்டுக்கு   இருக்கும்   வரவேற்பு  - 
அதே இல்லத்து தொட்டிலில் வளரும் நடுத்தர வர்க்கப் பெண்குழந்தைக்கு  இருப்பதில்லை என்னும் உண்மையை சற்றே வெண்மையாய் உணர்த்துவதில் கதாசிரியர் வெற்றி காண்கிறார்..

தேர்ந்த ஒரு ஓட்டுநர் மேடுபள்ளமில்லாத அருமையான சாலையில் காரோட்டும் போது அதில் அமர்ந்து பயணிப்பவர் ஹாரன் சத்தத்தையும் , காரோட்டுபவர் இதயச்சத்தத்தைத் தவிர வேறொரு ஓசைகளை உணர்வதில்லை. அதைப்போன்று இந்தக்கதை அந்த மத்தியதர இல்லத்திலும், பசுக்கொட்டிலிலும் காட்சிகளாக விரியும் உத்திகளிலும் படிப்பவர்கள் அந்தப்பெண்ணின் உணர்ச்சிகளைத்தவிர வேறொன்றையும்  உணர்வதில்லை..

இந்த நிலையில் அர்சுனனின் அம்பைப் போல எய்யும் குறி தான் ஒரே கவனமாய் போய் எழுதும் பொருளில் உண்மையின் சுடரையும் பிரகாசத்தையும் ஒரு சேரக் குவிக்கும் ஆற்றலை உணர்கிறோம்..

இரண்டு வண்ணம் கொண்டதாலேயே விலை அதிகம் என கொள்முதல் செய்ய நிர்ணயிக்கப்படுகிறது அந்தக் காராம்பசு.. மார்க்கெட்டில் மதிக்கப்படுகிறது மாட்டின் இரட்டை வண்ணம்

அதுவே கண்பார்வைக்கு எளிதில் படாத இடத்தில் இருக்கும் சின்னஞ்சிறு வெள்ளை வட்டப் பகுதிக்காக வரதட்சினை சீர்வரிசை  என அதிகம் செலவழிக்கவேண்டிய நிர்பந்தம்  அந்தப்பெண்ணுக்கு .. கன்னிப்பெண்ணின் மார்க்கெட் இழப்பிற்கு அதே வண்ணம் காரணமாகிறதே..!

இருவேறு எல்லைகளையும் அநாயசமாக தொட்டுத் தொடர்ந்து வண்ணமயமாகிறது கதை..! 

காராம்பசுவாகப் பிறக்காமல் கன்னிப்பெண்ணாக பிறந்ததற்காக வேதனைப்படும் வார்த்தைகள் எவராலும் எளிதில் மறக்கமுடியாதவை..

ஆயிரம் பொய்சொல்லிக்கல்யாணம் என்பதுபோல் ஆயிரங்காலத்துப்பயிரை ஆரம்பிக்க என்ணமில்லாமல் சொன்னாலும் காட்டினாலும் மட்டுமே தட்டுப்படும் சின்னஞ்ச்சிறு குறையைக்கூட மறைக்காமல் உண்மை ஒளியுடன் நேர்மையுடன் சொல்லும் குடும்பத்திற்கு ஏற்ற மருமகன் கிடைக்கவேண்டுமே என நம்மையும் ஏங்கவைக்கிறது கதை..!

சுழித்தோடும் புதுவெள்ளம் பாய்ந்தோடும் நதி தீரத்தில் தேர்ந்த நீச்சல்வீரர் ஒருவர் ஒருகரையில் குதித்து ஆற்றின் போக்கிலேயே நீந்தி மறுகரையில் கரை ஏறி இளைப்பாறி அந்த நதியில் வெள்ளத்தின் வேகத்தை மனதால் உணர்வதுபோல கதையின் முதல் வரிகளிலேயே கதைப்பிரவாகத்தில் உள்ளிழுத்து கதையின் முடிவுவரை கவனத்தை ஈர்த்து கதை முடிந்தபிறகே தன்ணுணர்வு அடைந்து அந்த கதையைசிந்தித்துப் பார்க்கவைக்கும் கதாசிரியரின் தடங்கலற்ற கற்பனை அலைகளின் வண்ணம் ஆச்சரியப்படுத்துகிறது..!

இத்தனை  நேரம்  நாம்  நீந்தியது   நதிவெள்ளத்தில்  அல்லவே   அல்ல ..!
அந்த அழகுப்பெண்ணின் சின்னஞ்சிறு வண்ண வேறுபாட்டால் திருமணம் தட்டிப் போய் கொட்டிய கண்ணீர் வெள்ளத்தில்தான் என்று..!

உண்மையில் வெண்மை என்பது தனி நிறமல்ல.. வானவில்லின் ஏழு நிறங்களும்  இணைந்த வண்ணம் என்பதை மழை பெய்த மாலை வேளைகளில் வானவில் வந்து உணர்த்துவது போல நவரசங்களாலான மனித உணர்ச்சிகளை கதாநாயகியின் உள்ளக் குமுறல்களாலேயே காட்சிப்படுத்தும் கதையின் வண்ணம் ஆச்சரியப்படுத்துகிறது..

அத்தனை வண்ணங்களும் வெண்மையாக தோற்றம் காட்டுவது போல அத்தனை  உணர்ச்சிகளும்  இறுதியில்  சோகம்  என்னும்  கண்ணீரை  வரவழைக்கிறது..

கதைக்கு ஏற்ற  தலைப்பும் பொருத்தமான படங்களும்  சிறப்பு சேர்க்கின்றன..!

இதுபோல் ஏக்கத்தில் வாழும் கணக்கற்ற பெண்களின் பிரதிநிதியாய்  மனம் கனக்கச்செய்கிறாள் அந்தப்பெண்....

மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.

 


      


இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள மற்றொருவர்


இம்முறை புதிதாக ஹாட்-ட்ரிக் பரிசுபெற


முற்றிலும் தகுதி பெற்றுள்ள.


காரஞ்சன் {சேஷ் }



 திரு. E.S. சேஷாத்ரி  


அவர்கள்



திரு. E.S. சேஷாத்ரி 

காரஞ்சன் [சேஷ்] அவர்கள்

esseshadri.blogspot.com



இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்


திரு. E.S. சேஷத்ரி 


அவர்களின் விமர்சனம்:




மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா! என்றார் கவிமணி. ஆனால் இக்கதையோ காராம்பசுவாகப் பிறக்காமல் கன்னிப்பெண்ணாகப் பிறந்துவிட்டேனே என தன் எண்ணக் குமுறலை வெளிப்படுத்தும்  பெண்ணைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்வவதற்காக  எழுதப்பட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

கதையின் ஆரம்பம் நம்மை ஒரு மாட்டுத் தொழுவத்தின் முன்னால் கொண்டு நிறுத்திவிடுகிறது.

"பண்பால் அன்பால் பாசத்தின் பிணைப்பால் பசுவே நீ தரும் பால்..
உன்பால் உலகை உருகிடச் செய்யும் பெண்பால் நீ எனப் பேசிடச் செய்யும்
பசுவுக்குப் பெண்ணும் பென்ணுக்குப் பசுவும் பந்தம் திருமகளே - இந்தப்
பெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும் சொந்தம் குலமகளே"

எனும் பாடல் வரிகளை நினைவூட்டிச் செல்கிறது. பசுக்களை நன்கு பராமரிப்பதும், கன்றுகள் குடித்த பின் மீதமுள்ள பாலைக் கறந்து பயன்படுத்துவதாகக் காட்டியதிலிருந்து கதாநாயகியின் பெற்றோர் நல்ல இரக்ககுணமும், மனிதாபிமானமும் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தி விடுகிறார்.

பசுக்களிடம் காட்டிய அக்கறையைத் தங்கள் அழகு தேவதையான ஒரே பெண்ணிடம் காட்டத் தவறவில்லை அவர்களது பெற்றோர். அவளைச் செல்லமாக வளர்த்து உரிய பருவத்தில் பொருத்தமான வரனைத் தேடும் முயற்சியையும் மேற்கொள்கின்றனர்.

பசுக்கள் வளர்ந்து, கருவுற்று, கன்றுகளை  ஈன்று பண்ணையாகி விட்டாலும் தனக்கென்று ஒரு வரன் மட்டும் இன்னும் அமையவில்லை என அப்பெண் தன் உள்ளக் குமுறலை வெளிக்காட்டும் இடமும்,   இரவு நேரங்களில் சில பசுக்கள் ஒருமாதிரி கத்தும்போது அவைகளால் தம் உணர்வை வெளிப்படுத்த முடிவதாகவும், தன்னால் அவ்வாறு வெளிப்படுத்தமுடியாதென எண்ணும் இடமும் எல்லோர் மனதிலும் நிச்சயம்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதே சமயம் பெற்றோர் தன் மகளுக்கு உரிய வரன் கிடைக்கவில்லையே என கவலைப்படுவதாக அமைத்ததிலிருந்து அவர்களின் பொறுப்புணர்ச்சியும் வெளிப்படுத்தப் படுகிறது.

"பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. " எனத் தொடங்கும் வரிகளில் கதையின் முடிச்சு ஆரம்பமாகிறது.


"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும், திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே! " என்ற வரிகளில் ஒரு திருப்பம் விளைகிறது.


பருவ வயதை எட்டியவுடன் மகனோ. மகளோ தம் பெற்றோர் தம்மிடம் முன்புபோல் அன்பாக இல்லையென எண்ணுதல் இயற்கைதான்.


இரவெல்லாம் கத்திக்கொண்டிருந்த பசுமாடு, கால்நடை வைத்தியரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றபின் இரவில் கத்தாமல் அமைதியாக இருந்ததையும், அதன் முகத்தில் ஒரு தனி அமைதியும் அழகும்  குடிகொண்டிருந்ததையும், மூன்று மாதங்கள் கழித்து அது சினையாக இருப்பதாகப் பேசிக்கொண்டிருந்ததையும் வைத்து தனக்கு ஏதோ புரிந்தும், புரியாமலும் இருப்பதாகக் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் வெகுளியானவளாகவும், பாலியல் விஷயங்கள் குறித்து அறியாதிருந்த நிலையும் வெளிப்படுத்தப் பட்டது மட்டுமல்ல  உரிய விதத்தில் பாலியல் குறித்தும், நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.
இக்காலத்தில் மாணவப்பருவத்திலேயே மகளிர் பள்ளிகளில் பாலியல் குறித்த இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியைகள் மூலம் வழிவகை செய்கிறார்கள். பாடத்திட்டங்களும் ஓரளவு இது குறித்த விஷயங்களை அறிய வைப்பதாகவே அமைக்கப்பட்டுள்ளன. பருவமடைந்த   குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக ஏற்பாடு செய்கிறார்கள். தாயாரின் பங்கு  இதில் மிகவும் அதிகம்.

காராம்பசுவின் வரவால் கதையின் முடிச்சு அவிழ்க்கப் படுகிறது. காராம்பசுவின் மடியில்    வெள்ளைத் திட்டுகள்  இருந்தும், அதன் அழகு கூடி, அதிக விலை போவதையும்,  தனக்கு அதே இடத்தில் ஒரு ரூபாய் அளவில் உள்ள வெள்ளைத்திட்டால் தன் திருமணம்  தடைபடுவதையும் எடுத்துரைப்பதில்தான் திருமணம தடைபடுவதற்கான காரணம் வெளிப்படுத்தப்படுகிறது.

மறைவிடத்தில் இருந்த தழும்பைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையின் தாயாரிடம்  மறைக்காமல் கூறியவிதம் பாராட்டத்தக்கது. கதாசிரியரும் அதை இலைமறை காயாக உணர்த்தியவிதம் அருமை.

இந்த இடத்திலும் சமூகத்திற்கு ஒரு செய்தியை உணர்த்த விழைவதாகவே தெரிகிறது. இன்றும்  இதுபோன்ற வெள்ளைப் புள்ளிகளையும், தழும்புகளையும் “வெண்குஷ்டம்” என்றே நினைத்து அக்குறைபாடுடையவர்களை சமூகத்தில் ஒதுக்கி வைக்கும் நிலையும், அவர்களின் திருமணத்திற்கு சிக்கல் உண்டாகும் நிலையும்  ஆங்காங்கே  நிலவுகிறது.

 இது ஒரு நிறக் குறைபாடு என்பதும் இதை “வெண்புள்ளிகள்”என்றே அழைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு 2010ல் அரசாணை வெளியிட்டுள்ளது. வெண்புள்ளிகள் உள்ளவர்க்கு தற்காலத்தில் மகிழ்ச்சிதரும் செய்தி ஒன்றும் உள்ளது. நவீன சிகிச்சை முறைகள் மூலம் வெண்புள்ளிகளைக் குணப்படுத்த முடியும் என ஸ்டான்லி மருத்துவமனையில் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கதையின் நாயகிக்கு அவள் பெற்றோர் அதற்கான சிகிச்சை அளிக்க முற்பட்டார்களா என்பதை எங்குமே குறிப்பிடவில்லை. இது ஒரு நோயல்ல. குறைபாடு என்பதை இந்த சமூகத்திற்குப் புரிய வைக்கவும், அதற்காக நவீன மருத்துவத்தில் ஏராளமான சிகிச்சை முறை உள்ளதென்பதையும் விளக்கும் வகையில் இந்தக் கதை உருவாக்கப் பட்டுள்ளதாக நினைக்கத் தோன்றுகிறது.


யாராவது ஒரு தூரத்து உறவினர் அல்லது மருத்துவர் அவளைப் பெண்பார்க்க வந்து அந்நோயைக் குணப்படுத்தி திருமணம் முடித்ததாகக் காட்டியிருந்தால் இன்னும் அற்புதமாக இருந்திருக்கும்.


சமுதாயத்தில் அதுவம் நடுத்தர மற்றும் வறுமையில் வாழ்பவர்களிடையே இதுபோன்ற குறைபாட்டுடையவர்களின் மனநிலையையும் அவர் படும் துயரங்களையும் விளக்கி இது ஒரு நோயே அல்ல, குறைபாடுதான் என்பதை விளங்க வைக்க முயற்சித்ததும் அருமை.


மொத்தத்தில் இதை ஒரு விழிப்புணர்வுப் படமாக எடுத்து சமுதாய்த்திற்குப் பயன்படும் வகையில் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.


கதாசிரியரின் படைப்புகள் யாவும் கற்பனைக் கதைகளாய்த் தோன்றாமல் சமுதாயத்தில் எங்கோ நடந்த நிகழ்வுகளை ஒட்டி அமைவதாகத் தோன்றுகிறது. கதாபாத்திரங்களை சித்தரிப்பதிலும், அதற்கான களத்தைத் தேர்வு செய்யும் விதத்திலும் நம் பாராட்டைப் பெற்றுவிடுவதிலும், அவர் சாதாரணமானவர் இல்லை, சாதிக்கப் பிந்தவர்தான் என்பது உறுதியாகிறது.

-காராஞ்சன்(சேஷ்)


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.

 





    

   


   

மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.







நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.


-oOo-



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக 


பல மணி நேர இடைவெளிகளில் 

வெளியிடப்பட்டு வருகின்றன.


காணத்தவறாதீர்கள் !





அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:




” நீ .....முன்னாலே போனா .....

நா .....  பின்னாலே வாரேன் ..... 
 ! 





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


24.04.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.
















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

20 கருத்துகள்:

  1. விமர்சனங்கள் அருமை... திருமதி. இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. எமது விமர்சனத்தை இரண்டாவது பரிசுக்கு
    தேர்ந்தெடுத்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  3. இரண்டாம் பரிசினை வென்று- புதிதாக ஹாட்-ட்ரிக் பரிசுபெற முற்றிலும் தகுதி பெற்றுள்ள.காரஞ்சன் {சேஷ் }திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!!

    பதிலளிநீக்கு
  4. பரிசு பெற்ற திருமதி . இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் ,
    திரு. E.S . சேஷாத்ரி அவர்களுக்கும் பாராட்டுக்கள் !


    பதிலளிநீக்கு
  5. திரு. E.S . சேஷாத்ரி அவர்களின் , தமிழக அரசாணை பற்றிய
    பயனுள்ள குறிப்புக்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் !

    பதிலளிநீக்கு
  6. அருமையான விமரிசனங்களை எழுதி பரிசினைப் பெற்ற திரு சே ஷாத்ரி மற்றும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. இரண்டாம் பரிசுக்கு என் விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு மிக்க நன்றி! வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  8. இரண்டாம் பரிசுக்குரிய இரண்டு விமர்சனங்களுமே அருமை. அதிலும் சேஷாத்ரி அவர்களின் விமர்சனம் மிகவும் சிறப்பாக இருந்தது.....

    திருமதி இராஜராஜேஸ்வரி மற்றும் திரு சேஷாத்ரி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான விமரிசனம் எழுதி இரண்டாம் பரிசைப் பெற்ற திருமதி ராஜராஜேஸ்வரிக்கும், திரு சேஷாத்ரிக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள், தொடர்ந்து வெற்றி பெறப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

  10. இரண்டாம் பரிசினை வென்ற ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மற்றும் கவிஞர் திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. http://esseshadri.blogspot.com/2014/04/blog-post_25.html
    Mr. E S Seshadri காரஞ்சன் (சேஷ்) அவர்கள்

    இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  12. திருமதி.ராஜேஸ்வரி அவர்களின் விமரிசனம் அருமையாக அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  13. வெற்றி பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. வெற்றி பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 28, 2015 at 6:57 PM

      //வெற்றி பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)

      நீக்கு
    2. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திரு சேஷாத்ரி சாரவங்களுக்கும் வாழ்த்துகள்

      நீக்கு
  15. திருமதி இரூஜராஜஸ்வரி மேடம் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள். பசுகொட்டிலில் இருக்கும் மாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வீட்டு தொட்டிலில் வளரும் பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதில்லையே என்கிறார்.

    பதிலளிநீக்கு
  16. காராம்பசுவாகப் பிறக்காமல் கன்னிப்பெண்ணாக பிறந்ததற்காக வேதனைப்படும் வார்த்தைகள் எவராலும் எளிதில் மறக்கமுடியாதவை..//
    //மறைவிடத்தில் இருந்த தழும்பைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையின் தாயாரிடம் மறைக்காமல் கூறியவிதம் பாராட்டத்தக்கது. கதாசிரியரும் அதை இலைமறை காயாக உணர்த்தியவிதம் அருமை.//
    ரசித்தேன். வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. இரண்டாம் பரிசுக்கு என் விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு மிக்க நன்றி! வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு