என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

VGK 13 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., - புதிய கட்சி : மூ.பொ.போ.மு.க. உதயம் !’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 13 - ” வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., ! 

புதிய கட்சி : மூ.பொ.போ.மு.க. உதயம் !! “


இணைப்பு:

மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து


















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







     



முதல் பரிசினை வென்றுள்ளவர்கள் 

மொத்தம் இருவர்.


அதில் ஒருவர்



இரட்டை ஹாட்-ட்ரிக் 

வெற்றியாளரான


 

திருமதி. 



  இராஜராஜேஸ்வரி   

    
  

அவர்கள்




http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"









முதல் பரிசினை வென்றுள்ள


திருமதி.



 இராஜராஜேஸ்வரி  




அவர்களின் விமர்சனம் இதோ:

 




மிகவும் விறுவிறுப்பான கதை சுறுசுறுப்பாகப் படிப்பதற்காக நகைச்சுவை தோரணங்களால் அழகுபடுத்தப்பட்ட கதை..

’பொண்டாட்டி’யின் சுருக்கமான ’பொ.........டி’யை, தீட்க்ஷையாகப் பெற்றுக்கொள்ள தயாராக அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச்சேர்ந்த ஒருவர் மூன்று மாதங்களில் ஓய்வு பெறப்போகும் தன் தந்தை வயதில் உள்ள வ.வ.ஸ்ரீ.யை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வதை நகைச்சுவையே பிரதானமாக பிரவாகமாக பெருக்கெடுதோடவிட்டு சிரிப்பாய் சிரிக்கவைக்கிறார் கதை ஆசிரியர்...!

வ.வ.ஸ்ரீ.யோ கொச்சையான பேச்சை சற்றும் சங்கோஜமோ, சங்கடமோ, லட்ஜையோ இல்லாமல் தன் இல்வாழ்க்கையின் இரகசியங்களை  எடுத்துரைத்த விதம்   உயர்ந்த அபிப்ராயத்தை ஏற்படுத்தி குருவாக ஏற்றுக்கொள்ளவைக்கிறது..

அவர் சரித்திரத்தை பேட்டியாக கேள்விகள் கேட்டு ஞானம் பெறும் புது அலுவலர் இன்றைய அலுவலகத்தில் சிலர் அடிக்கும் கூத்துகளை முழுநீள நகைச்சுவை திரைப்படமாக ஓடவிடுகிறார் கதாசிரியர்..

இப்படி ஒரு அலுவலகத்தில் நான்கு பேர் ..வேண்டாம் வேண்டாம் ..இவர்கள் இரண்டு பேரே போதும் ... நாடு உருப்பட்டமாதிரிதான் என யோசிக்கவைக்கிறார்கள்..

இதில் வ.வ.ஸ்ரீ. மனநிலை மருத்துவரிடம் ஷாக் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ளும் நிலையிலிருப்பவர் .. இவர் செய்யும் வேலைக்கு இவருக்கு சிஷ்யர் வேறு.. 

நவரசங்களும் கதையில் மிளிர்ந்தாலும்  நகைச்சுவை வெள்ளத்தில் அவை அனைத்தும் அடித்துச்செல்லப்படுவதை உணர்ந்துகொள்கிறோம் ..

தன் தந்தையின் தொன்னூற்று ஒன்பதேகால் வருட பொடி அனுபவத்தையும், தாத்தாவின் நூற்றாண்டு  வாழ்க்கையின் முடிவை  கண்ணீர்வழிய சோகத்தில் அவர் சொன்னாலும் நகைச்சுவைதான் பிரதானமாக மலர்கிறது.. 

அலுவலகத்தில் வேலைபார்ப்பதாக மற்றவர்களை எண்ணவைக்கும் டெக்னிக் அனுபவசாலிகளுக்கே உரியது..1

பொடிக்குறள், பொடிக்காயத்ரி, பொடிகள் வாழ்வில் அங்கிங்கெனாதபடி ஆக்ரமித்திருக்கும் பாங்கு, பொடி செய்யும் முறை, மூக்குப்பொடியின் விலை காப்பிப்பொடியின் விலையைவிட அதிகம் என்னும் பொருளாதார குறிப்புகள், என கதை எங்கும் பொடி விரவிநின்று நகைச்சுவைவையை பரப்புகிறது..!

பழக்கங்கள் விருந்தாளியாய் மனிதவாழ்வில் நுழைந்து,  பிறகு அதுவே அடிமைப்படுத்துவதை சுவாரஸ்யமாய் காட்சிப்படுத்தப்படுகிறது..

விமானப்பணிப்பெண்களிடம்  எல்லா உபசிரிப்புகளும் கிடைத்தாலும் லாகிரிவஸ்துவாக விமானத்தில் தடைசெய்யப்பட்ட அந்த துளியூண்டு மூக்குப்பொடி கிடைக்காமல் அவர் படும் அவஸ்தை  நகைச்சுவையாகத்தான் சித்தரிக்கப்படுகிறது..

சின்ன வெங்காயம் போல் தங்க மோதிரங்கள் மலையாகக் குவித்துவைக்கப்பட்டிருக்கும் அத்தனை பெரிய துபாய் மால்கூட புடலங்காய் ஷாப்பிங்மால் பொடிகூட கிடைக்கவில்லை என முணுமுணுக்கும்போது சிரிக்கவைக்கிறார்..!

வியாபரத்ந்திரம், ஆடித்தள்ளுபடி அதிரடித்தள்ளுபடியின் சரித்திரத்தையும் பொடி விற்பனை மூலமாகவே எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது..

கதை எழுதிய காலக்கட்டத்தில் நிகழ்ந்த தேர்தல் திருவிழா - இன்றைக்கு நடைபெறும் தேர்தல் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து - எத்தனை ஆச்சரியம் அதே காட்சிகள் மாறாமல் நிகழ்ந்து காலம் கடந்தும் காட்சிப்படுவது இந்த நகைச்சுவைக் கதை காலத்தை கந்து வென்று சாதனை படைத்திருப்பதே இக்கதையின் வெற்றிக்குச்சான்று பகர்கிறது ..

தேர்தல் நேரத்தில் மனநிலை மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கவேண்டி நிலையிலுள்ள நோயாளி வ.வ.ஸ்ரீ  என அவர் மனைவி மூலமாக அறிந்து அதிர்ச்சியடைந்தாலும் அவர் மனைவியே அதை அடுத்த தேர்தல் வரை கவலையில்லை என சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்..

மருத்துவரின் ஆலோசனைப்படி மூக்குப்பொடி போடாமல் தவித்த அவருக்கு தானே பரண்மீது ஏறி பொடி டின் எடுத்துக்கொடுத்த பத்தினி தெய்வமல்லவா அவர்..

கல்லானாலும் கணவன்  புல்லானாலும் புருஷன் - என
பொடி போட பொண்டாட்டி செய்யும் பொருத்தமான  உதவி 
பொடியானது அல்லவே .. மகத்துவமான உயிர்காத்த உத்தமமானது அல்லவா..
  
பொடி டின், வழுவட்டை என்றெல்லாம்  கதை முழுக்க பலமுறை திரும்பத்திரும்ப வருகிறது..!

பொடிபோடாத மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து வி அவரிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சிய மூக்கு. முன்னுரிமை அடிப்படையில், படிப்பவர்களின் வாய் தன்னைறியாமல் கலகல வெனச்சிரிக்கத்தலைப்படுவது நகைச்சுவையின் உச்சம் எனலாம்..!..

தந்தையின் இறப்பின் சோகம் 

இல்ல வாழ்வின் கொழுக்கட்டை விவரிப்பில் சிருங்காரம்

பூங்காவில் ஆற்றிய சொற்பொழிவில் ஆவேசம்

அலுவலக பணிகளில் அலட்சியம்

பொடி போட்டுத்தும்முவதில் ரசிக்கவைக்கும் மிருதங்கக்கச்சேரி, தீபாவளி ஆயிரம்வாலா பட்டாசு வெடிப்பு,

மேலாளருக்கு தண்ணிகாட்டுவது- என எந்த  உணர்ச்சியானாலும் நகைச்சுவைப்பொடியை அனாயசமாகத்தூவி வெற்றி வாகை சூடுகிறார் கதாசிரியர்..

பொதுவாக படிப்பவர்களை அழவைப்பது சுலபம் ..ஒரு கோடிகாட்டினால் போதும் தங்கள் வாழ்வில் நடந்தவைகளையோ, தங்களுக்கு வேண்டியவர் வாழ்வில் நிகழ்ந்தவைகளையோ, மனதிற்குக் கொண்டுவந்து சோகத்தில் மூழ்கடிக்கத் தயாராகிவிடுவார்கள்..தற்போதைய மெகாத்தொடர்கள் இல்லத்துப்பெண்களை சுலபமாக ஈர்த்திருப்பது இப்படித்தானே..!

ஆனால் நகைச்சுவை எழுத்தோ நடிப்போ  அவ்வளவு சுலபமல்ல..
யாரும் தங்கள் சூழ்நிலை சுற்றுப்புறத்தை மறந்து அவ்வளவு சீக்கிரம் சிரிக்க தயாராக இருக்கமாட்டார்கள்..

சிரிப்பு என்பது இயற்கை யாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செயல்.. 
நல்ல நண்பர்கள் மூலமும் அக்கறையும் அன்பும் கொண்டவர்களிடமும் மட்டுமே  பெற முடியும். ‘துன்பம் வரும் போது சிரி’  என்பார்கள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர்..! நல்ல சமயங்களில் யாராயினும் சிரித்து மகிழலாம்.  மிகுந்த கடினமாக காலங்களில் எப்படி சிரிப்பது?  அதையும்  மீறி சிரிக்கும்போது துன்பத்திலிருந்து  மீண்டு வரவும், கடினமான காரியங்களை செய்யும் துணிவும் கிடைக்கும்.

வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பதை மனதில் கொண்டு  மனதில் மகிழ்ச்சி மலர்விக்கும் மருத்துவராக கடினப்பணியை சிரமேற்கொண்டு சிரிக்கவைத்திருப்பது உகளாவிய சாதனை என்றே கொள்ளவேண்டும்..


அர்சுனனின் அம்பைப் போல எய்யும் குறி தான் ஒரே கவனமாய் எழுதும் பொருளான 

நகைச்சுவையில் போய் குவிந்து  இதயத்தில் இனிமையும் உதடுகளில் சிரிப்பின் 

பிரகாசத்தையும் ஒரு சேரக் குவிக்கும் அற்புதத்தை உணர்கிறோம்..!


ஆசிரியர் தனது குறிக்கோளாக நகைச்சுவையை எடுத்துக்கொண்டு கவனம் சிதறாமல் - தவறாமல் மிகச்சரியாக  இலக்கினை வென்றிருக்கிறார்...!

நவரசங்களும் கதையில் ததும்பினாலும் ஜீவநதியானது வெய்யில் காலத்தில் பனிமலையின் பனிஉருகுவதாலும், மழைக்காலத்தில் மழை பொழிவதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்துவதுபோல அனைத்து உணர்ச்சிகளிலும், வரிக்குவரி நகைச்சுவை வெள்ளத்தையே  பாயவிட்டிருக்கிறார் கதை ஆசிரியர்.. 

சிரிக்கலாம் வாங்க என்று பொடிவைத்து அழைத்து மகிழ்ச்சியூட்டுகிறது இந்த அருமையான கதை..!





 


    






09.03.2014 அன்று பிறந்து 

இன்றுடன் 50 நாட்களே ஆன 

 எங்களின் புதிய பேரன் ”ஆதர்ஷ்” 

முதன் முதலாக எங்கள் இல்லத்திற்கு 

இன்று 27.04.2014 வருகை புரிந்ததில் 

எங்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !



     




முதல் பரிசினை வென்று 


பகிர்ந்து கொண்டுள்ள 


மற்றொருவர் யார் ? 





தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

ஏழாம் முறையாக வெற்றிவாகை சூடியுள்ள

நம் அன்புக்குரிய சாதனை நாயகி







 ’கீத மஞ்சரி ’ 


திருமதி



 கீதா மதிவாணன்  



அவர்களே தான் ! ;)



  



விமர்சன வித்தகி 

திருமதி. 


 கீதா மதிவாணன்     

அவர்களின் 



அழகான சங்கீத உபன்யாசத்தினைக் 





இப்போது நாம் கேட்டு மகிழ்வோமா !






திமிகிட திமிகிட வாத்திய மிருதங்கம்
ப்ருமானந்த ஹரே !
கஜானன தாண்டவ நித்ய ஹரே !!

நமஸ்காரம் மகாஜனங்களே… எல்லாரும் க்ஷேமந்தானே… நான் இன்னிக்கு யார் கதையைப் பத்தி சொல்லப் போறேன்னு எல்லாரும் ரொம்ப ஆர்வமாக் காத்திருப்பேள்னு தெரியும்இன்னிக்கு ஒரு வித்தியாசம் பாருங்கோ… நான் கதை சொல்லப்போறதில்லே.. கதையைப் பத்தின கதை சொல்லப்போறேன்.. கொழப்பமா இருக்கா… கொழம்பாதீங்கோ… தெளிவா சொல்லிடறேன்… இந்த லோகமே ஒரு வலை… அதிலே மாட்டிண்டு முழி பிதுங்கிப் போனாவாதான் நாமெல்லாம்னு சொல்லத் தேவையில்லே.. ஆனா பாருங்கோ.. இந்த லோகத்துல வலை லோகமுன்னு ஒண்ணு தனியா இருக்கு தெரியுமோ… அந்த லோகத்துலே ஆளாளுக்கு ப்ளாக்னு ஒண்ணு வச்சுண்டு எழுதி எழுதித் தள்ளி மூளை பிதுங்கிப் போனவா நெறைய பேர் இருக்கா…. நான் ஒருநாள் யதேச்சையா அந்தப்பக்கம் போயிட்டேன்.

நல்ல இடம் நான் போன இடம்
வை.கோபாலகிருஷ்ணன் என்னும் வலைத்தளம்
வ.வ.ஸ்ரீ என்றொரு கதைக்களம்
வாசித்தேன் ஆஹா… அமர்க்களம்.

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ! புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம்’ங்கிறது கதையோட பேரு! அடபேரே அட்டகாசமா இருக்கேன்னு நானும் வாசிச்சேன்அந்தக் கதைக்கு விமர்சனப்போட்டியிருக்காம்… உங்கள்ல யாருக்காணும் உபயோகமா இருக்குமேன்னு இன்னிக்கு அந்தக் கதையைப் பத்தி சொல்லலாம்னு இருக்கேன்… கேட்க எல்லாரும் தயாரா இருக்கேளா

இருக்கோம்….

ஆதௌ கீர்த்தனாரம்பத்துல நம்ம கதாநாயகன் வழுவட்டை ஸ்ரீனிவாசன் ஒரு ஆபிஸூல வேலை பாக்கறதா பேர் பண்ணிண்டு அஞ்சு நிமிஷத்துக்கொருதரம் மூக்குப்பொடி போட்டுண்டு அவர் பக்கம் போறவா வரவாளுக்கெல்லாம் பிரசாதமாட்டம் அதை விநியோகிச்சுண்டு… இப்படியே சீட்டைத் தேய்ச்சு தேய்ச்சு… இப்போ ரிடையராகிற ஸ்டேஜுக்கும் வந்துட்டார்..

வழுவட்டைங்கறேளே… அப்படின்னாஎன்ன குருவேவழுக்கைத்தலையா

அட வழுவட்டை… இது தெரியாதா நோக்குஉன்னை மாதிரிதான் அந்த ஆபிஸூல வேலை பாக்கறதா பேர் பண்ணிண்டு பாவலா காமிச்சுண்டிருக்கானே ஒரு புதுப் புள்ளையாண்டான் அவனும் நினைச்சிருக்கான்அப்பறந்தான் தெரிஞ்சிருக்கு.. ப்போவெல்லாம் மொக்கை மொக்கைன்னு சொல்றாளே… அதைத்தான் அவர் அப்போ வழுவட்டைங்கறார்னு..

ஆஹா… பேஷ்.. பேஷ்

அதைச் சொல்லிச் சொல்லி அதுவே அவருக்குப் பட்டப்பெயராயிடுத்து. பொடிதான் அவருக்கு உயிர். அந்தப் பொடி விஷயத்தை எடுத்துண்டு இப்படி பாகம் பாகமா எழுதமுடியுமான்னு நேக்கு ஆச்சர்யமாப் போயிடுத்து. கொஞ்சநாள் நாமும் வ.வ.ஸ்ரீயோட ஆபிஸ்ல வேலை பாத்த மாதிரியான்னா இருக்கு கதையை வாசிச்சு முடிச்சதும்.

அப்படி அந்தப் பொடியிலே என்னதான் இருக்கு குருவே..…

அட பொடிப்பயலே.. பொடின்னு சாதாரணமா சொல்லாதடா

சோதியும் ஜீவனும் அவருக்குப் பொடிதான்
சோம்பல் நீக்க வேணுமந்த நெடிதான்!
ஆதியும் அந்தமும் ஆன படிதான்
பாதியாய் ஆன பார்யாளும் பொடிதா….ன்!

என்னதுபாதியாய் ஆன பார்யாளா?

அட ஆமாண்டா… அபிஷ்டு… பொடியும் பொண்டாட்டி மாதிரிதானாம்… அந்த வார்த்தையோட ஆதியும் அந்தமும் அதாவது ‘பொவும் ‘டியும் தான் அவருக்கு ஜீவன்கிறதை பொடி போடாத நான் சொல்லமுடியுமோ… அந்த வ.வ.ஸ்ரீ சொல்றதா கதாசிரியர் சொல்றார். இன்னொரு விஷயம் சொல்லணும்…

சொல்லுங்கோ…

ரசத்திலே பொடிகலந்து பாத்திருப்பேள்.. 
பொடியிலே ரசத்தைக்கலந்து பார்த்திருக்கேளா… 
இந்தக் கதையிலே வர பொடிடப்பாவுக்குள்ளே எத்தனை ரசம்… 
அடா அடா… ஒன்பது பகுதியிலும் ஒன்பது ரசமா… 
நவரசமுமில்லே அடங்கிக்கிடக்கு.

ஒவ்வொண்ணா சொல்லுங்க குருவே..

முதல்லே நவரசங்கள் என்னென்னன்னு தெரியுமோடா அம்பி?

ஸ்ருங்காரம் வீரம் காருண்யம்
ருத்ரம் ஹாஸ்யம் பயங்கரம்
பீபத்சம் அற்புதம் சாந்தம்!
சரிதானா குருவே சொல்லும்!

சபாஷ்… இந்தக் கதையிலே ஒண்ணாம் பாகத்துலே காருண்யத்தைக் காட்டறார் கதாசிரியர்... அதாகப்பட்டது.. கர்ணனுக்கு கவசகுண்டலம் மாதிரி அந்த வழுவட்டை ஸ்ரீனிவாசனுக்கு பொடி டப்பா. கர்ணன் மாதிரியே பொடியை வாரி வழங்குறதில் வள்ளல்தான் அவரும்னு நமக்கு சொல்லாம சொல்லிடறார். 

அதிலயும் போறவாவரவாக்கெல்லாம் பொடி டப்பாவை நீட்டி நீட்டி 
விநியோகம்பண்றக் கருணையைப் பாக்கணுமே… 
ஒரு நாளைக்கு அவர் ஆபீஸ் வரலேன்னாலும் 
தவியாத் தவிக்கறதாம் பல மூக்குகள்!

ஆஹா.. என்னே ஒரு அபயஹஸ்தம்!

ரெண்டாம் பாகத்துல… பீபத்சம்…. அதாகப்பட்டது அருவறுப்புஅந்த வ.வ.ஸ்ரீ. பொடியைப் போட்டுண்டு தும்மி கைக்குட்டையாலே… அட சொல்றபோதே… ஆஹ்… நேக்கு ஒமட்டிண்டு வரதுனா..

வாசகருக்கு ஒமட்டிண்டு வரா மாதிரி எழுதலாமோ அவர்தப்புத்தானே குருவே

அட… யோசிச்சிப்பாருடா அம்பி… வாசிக்கும்போதே ஒமட்டிண்டு வரதுன்னா… எந்த அளவுக்கு ஈடுபாட்டோட எழுதியிருப்பாருன்னு புரிஞ்சுண்டுக்க வேணாமோ… அவர் பொடிடப்பாவை நீட்டி பொடி தர்ற அழகை பொம்மனாட்டிகள் குங்குமம் கொடுத்து கொலுவுக்கு அழைக்கிறா மாதிரி இருக்குன்னதை… நினைச்சிப் பார்த்தாலே சிரிப்பு வரதோன்னோ… ஹியூமரான ஒரு விஷயத்தை வாசிக்கறச்சே ஆஹா…ன்னு சிரிப்பு வரயிலே…. துக்கமான ஒரு விஷயத்தை வாசிக்கறச்சே அச்சச்சோ…ன்னு பச்சாத்தாபம் வரயிலே…. அருவருப்பான விஷயத்தை வாசிக்கறச்சே அய்யய்யே…ன்னு ஒமட்டிண்டு வரதுல என்ன தப்புஅதுவும் எழுத்தாளரடோ பலம்ன்னுன்னா சொல்லணும்

ஓ.. அப்படியா குருவே… இப்ப புரிஞ்சது… சரி… மூணாம் பாகத்தைப் பத்தி சொல்லுங்கோ

மூணாம் பாகம் முச்சூடும் வழுவட்டை ஸ்ரீனிவாச மகாராஜாவோட வீரதீரப் பிரதாபங்களைப் பத்திபத்தி பத்தியா எழுதியிருக்கார்… பரம்பரை பரம்பரையா அவர் தோப்பனார்தோப்பனார்க்குத் தோப்பனார்… பொடி போடற மகாத்மித்யத்தையும்… அவர் பொடி போட்டதாலே நூறு வயசு வரைக்கும் யமதர்மராஜாவும் அவங்களை நெருங்க பயந்த பராக்கிரமத்தையும் சொல்லியிருக்கார்

பலே… பலே… பொடிக்குள்ளே இவ்வளவு விஷயமிருக்கா?

ஆமாம்டா அம்பி! மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிதுன்னு சும்மாவான சொன்னா… நாலாம்பாகத்துல பொடி வாங்கற கடையைப் பத்தி… பொடிக்கடை மனுஷாளைப் பத்தி… பொடி வியாபாரத்துக்கு அவா செய்யற விளம்பர சாதுர்யம் பத்திபொடிப்பயல்கள்தான் பின்னாளில் பொடிமனுஷாளாவான்னு தெரிஞ்சு சின்னத்துலேயே அதுகளை பொடி தந்து மடக்கி ரெடியாக்கற தந்திரம் பத்தி… வாசிக்க வாசிக்க நமக்கு ஆச்சர்யமானா இருக்கு

அப்படின்னா.. இந்தப் பாகத்துல அற்புத ரசம் ஆறா ஓடறதுனுசொல்றேள்.. சரிதானா குருவே

சரியாச் சொன்னேடா… அஞ்சாம் பாகத்தில் கொஞ்சம் ஸ்ருங்கார ரசம்கொஞ்சம் ஸ்ஸ்..கார ரசம்அதாகப்பட்டதுகல்யாணம் ஆன புதுசில் பொண்டாட்டி எப்படியிருப்பான்னு வர்ணிக்கறது ஸ்ருங்காரம்… போகப் போக என்ன ஆவாள்னு சொல்றது ஸ்…காரம்… பழகிப் போன பொண்டாட்டியை புளிச்சுப்போன பழைய சோத்துப்பானைஊசிப்போன கொழுக்கட்டைன்னு உதாரணமெல்லாம் பேஷா சொல்லிண்டு போறார்… அவர் சம்சாரம் கேட்டிருக்கணும்; அவரை ஸ்பாட்லயே சம்ஹாரம் பண்ணிருப்போ…

அடப்பாவமே… மனுஷன் அவ்வளவு நொந்துபோயிருக்கார்போல… சரி, இப்போ ஆறாம்பாகத்துல என்ன ரசம் சொல்லுங்கோ…  

ஆறாம் பாகத்துல குருவி தலையிலே பனங்கா மாதிரி வ.வ.ஸ்ரீ-க்குப் பிறகு அவருடைய பொறுப்பை தான் ஏற்கணுமேன்னு பயப்படறான் நம்ம புதுப்பிள்ளையாண்டான்அதுக்கு வ.வ.ஸ்ரீ சொல்ற உபாயங்கள் அலாதி… ஆபீஸ் ஃபைலைத் தேடி வர்றவனை எப்படி அலறவச்சி ஓடவக்கலாம்ன்னு ஐடியா சொல்றார்… இந்தப் பாகத்துல பொடி தயாரிக்கிற வித்தையை சொல்றார்… வாசனைப் பொடி போட்டா பொணநாத்தம்கறாளாம் பொண்டாட்டி… நாசிகாசூர்ணம் போட்டா… மண்டையிலே உள்ள நரம்பெல்லாம் கட்டாற மாதிரி நச்சு நச்சுன்னு தொடர்தும்மல் வருமாம்… வாசிக்கறச்சேயே பக்கு பக்குன்னது நேக்கு.

அப்படின்னா அது பயங்கரம்.. ஏழாம் பாகம் எப்படி?

ஏழாம் பாகத்தைப் பத்தி சொல்லணுமானா… ஹாஸ்யமய்யாஹாஸ்யம்… கங்கையிலே முங்கினாலும் காக்கை வெளுப்பாயிடுமா… துபாய் போனாலும் நம்ம வ.வ.ஸ்ரீ-க்கு பொடியாசை போயிடுமா… விமானத்துல பொடியில்லாம நம்ம வ.வ.ஸ்ரீ தவிக்கற தவிப்பும்… அவ்வளவு பெரிய ஷாப்பிங் மாலில்  ஒரு பொடிக்கடை இல்லியேன்னு அவர் ஏங்கறதும்… அண்டர்வேர்ல்ட் தாதா ஆயுதத்தை மறைச்சு எடுத்துவராப்போலே… பொடியை அண்டர்வேரில் மறைச்சி அவர் எடுத்துவர காட்சியும் நினைச்சாலே குபீர்னு சிரிப்பு வரது நேக்கு…

நீங்க சொல்லும்போதே எங்களுக்கும் சிரிப்பு வரதே… சரி.. அடுத்ததா என்ன… சொல்லுங்கோ…

எட்டாம் பாகத்துல ரௌத்ர தாண்டவம்னா ஆடறார்! இப்பத்திய அரசியல் கட்சிகள் பத்தி என்னமா கோபாவேசத்தோடு பேசறார்... இந்தப் பாழாப்போன கட்சிகளை நெனைச்சு ஆத்திரப்பட்டதாலேதானே… காத்திரமான பொடி டப்பாவை சின்னமா வெச்சி ஒரு புதிய கட்சியான மூ.பொ.போ.மு.கழகத்தையே தொடங்கறார்… அவரை வாழவைக்கிற பொடிக்கு உரிய மரியாதையைத் தரவேணாமோ… அரசியல் சாக்கடையைப் பத்தி அந்த வ.வ.ஸ்ரீ வாயால் கதாசிரியர் சொல்றது… ஆஹா… முற்போக்கு,பிற்போக்கு பத்தி என்னவொரு தத்துவ வாக்கு! என்ன பண்ணி என்ன பிரயோசனம்கிறா மாதிரி… எல்லாமே பிரம்மையான்னாபோயிடுத்து… தேர்தல் நேரங்கள்ல அவருக்கு ஏற்படற அதிர்ச்சி அவரோட மூளையைப் பாதிக்கறதுங்கறது நம்ம புதுப்பிள்ளையாண்டானுக்கு மட்டுமல்ல, வாசிக்கற நமக்கும் கடைசிவரைக்கும் தெரியாமலேயே போயிடுத்து.

ஐயையோ…

பதறாதீங்கோ… எப்படியோ… சிகிச்சையெல்லாம் நல்லவிதமா முடிஞ்சுநம்ம நகைச்சுவை மாமணி… தும்மல்திலக சிகாமணி… வ.வ.ஸ்ரீ நார்மலாயிட்டார்… அவர் ரிடையரான அன்னிக்கு ஆபீஸ்லயும் அவருக்கு நல்லவிதமா வழியனுப்பி வச்சு… 25கார்கள் தொடர… வீட்டுக்கு பவனி போறார்… எல்லாமே அமைதியா முடிஞ்சது… ஒம்பதாம் பாகத்துல… சுபம்சாந்தம்!

ஆஹா…. அவரோட பழகுன ஒருத்தரும் அவரை மறக்கமுடியாதபடிக்குப் பண்ணிட்டார்.. அந்த வ.வ.ஸ்ரீ… அவர் கதையைக் கேட்ட நாமளும் வ.வ.ஸ்ரீயை மறக்கமுடியாதபடிக்கு பண்ணிட்டார் இந்தக் கதாசிரியர்.

மகாஜனங்களே… இதுவரைக்கும் வ.வ.ஸ்ரீனிவாசனுடைய கதையை வை.கோபாலகிருஷ்ணன் என்னும் கதாசிரியர் எழுதின அழகைப் பத்தி சொன்னேன். எல்லாரும் பொறுமையா சிரத்தையா இருந்து கேட்டேள்… நன்னா ரசிச்சேள்னு உங்க மொகமே சொல்லிடுத்து… அடுத்தவாரம் வேறொரு கதையைப் பத்திப் பார்ப்போம். அதுவரைக்கும்…
மங்களம் சுப மங்களம்
வ.வ.ஸ்ரீ கதையைக் கேட்ட உங்களுக்கும்
கதையை விமர்சித்த எங்களுக்கும்
மங்களம் சுப மங்களம்.


மங்களம் பாடியது மனதுக்கு மிகவும் மகிழ்வளித்தது.
நகைச்சுவையான சங்கீத உபன்யாசம் 
படிக்கச் சிரிப்பாகவும் சிறப்பாகவும் இருந்தது.
தனித்தன்மை வாய்ந்த தங்களின் 
கற்பனைக்கு தலை வணங்குகிறேன்.

பிரியமுள்ள கோபு


[கதை கேட்டவாளுக்கெல்லாம் விநியோகிக்க சுண்டல்]


 



மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.




     





மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.





நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

முதல்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.



-oOo-


போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 

பற்றிய விபரங்கள்  தனித்தனிப்

பதிவுகளாக பல மணி நேர இடைவெளிகளில்

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 

காணத்தவறாதீர்கள் !




    




’போனஸ் பரிசு’ பற்றிய 

மகிழ்ச்சியானதோர் தகவல்.


’VGK-13 வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. 

புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !’ 

என்ற இந்தக் குறிப்பிட்ட சிறுகதைக்கு 

 விமர்சனம் எழுதி 

அனுப்பியுள்ள 

ஒவ்வொருவருக்குமே 

மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை என்னால் 

 ’போனஸ் பரிசாக ’

அளிக்கப்பட உள்ளது என்பதை 

பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏன்? எதற்கு? எப்படி? என யாரும் குறுக்குக்கேள்வி எதுவும் கேட்கக்கூடாது.  ஒருசில கதைகளையும், அவை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் நினைக்கையில் மனதில் அவ்வப்போது ஏற்படும் ஏதோவொரு [ எழுத்தில் எடுத்துரைக்க இயலாத ] சந்தோஷம் மட்டுமே இதற்குக் காரணமாகும். 

உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்கு இங்கு இப்போது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களுகும் இந்த போனஸ் பரிசு என்னால் உபரியாக அளிக்கப்படும் என்பதையும் மேலும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற போனஸ் பரிசுகள் அவ்வப்போது மேலும் ஒருசில கதைகளுக்கு மட்டும் என்னால் அறிவிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த கதைகள் என்பது மட்டும் இப்போதைக்கு ’சஸ்பென்ஸ்’.

அதனால் இந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான அனைத்துக் கதைகளுக்கும், அனைவருமே, இப்போது போலவே மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். அப்போதுதான் போனஸ் பரிசு கிடைக்கும் வாய்ப்புக்களும் தங்களுக்கு அவ்வப்போது அமையக்கூடும்.

    




இதுவரை முதல் பதிமூன்று கதைகளுக்கான 

விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 


முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

  [[
சிறுகதை விமர்சனதாரர்களா  ..... கொக்கா ! 



இதுவரை ஹாட்-ட்ரிக்

வெற்றியாளர்கள் 


பட்டியலில் உள்ளோர் :






 கீதமஞ்சரி  



திருமதி




  
      
 1] கீதா மதிவாணன்  


அவர்கள்

[VGK-07 To VGK-13] 



தொடர்ச்சியாக      அடுத்தடுத்து 


ஏழு முறைகள் வெற்றி


 

 2) திரு.    ர ம ணி   அவர்கள் 


[VGK-01 To VGK-04]


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


நான்கு முறைகள் வெற்றி

 

3) திருமதி. 



இராஜராஜேஸ்வரி         



அவர்கள் 


[VGK-04 To VGK-06] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி

 
4] திருமதி. 



இராஜராஜேஸ்வரி 



அவர்கள் 


[VGK-08 To VGK-10] 


மீண்டும் 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி

 

5] திரு. 



 E.S. சேஷாத்ரி  



(காரஞ்சன் - சேஷ்) அவர்கள்


[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி

 

6] திருமதி



 ராதாபாலு  



அவர்கள்


[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி


 

7] களம்பூர்  திரு.



 G. பெருமாள் செட்டியார் 


அவர்கள்


[VGK-11 TO 13]



தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி

 


இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?


இதைப்படித்துக்கொண்டிருக்கும்


நீங்களாகவும் இருக்கலாம் !



oooooOooooo



ஹாட்-ட்ரிக் பட்டியலில் இன்று 

புதிதாக இடம்பெற்றுள்ள


களம்பூர் திரு. 


 G. பெருமாள் செட்டியார் * 


அவர்களுக்கு


நம் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + 


நல்வாழ்த்துகள்.


  இவரின் தொடர் வெற்றியினைப் பொறுத்து

ஹாட்-ட்ரிக் பரிசுக்கான தொகை பிறகு நிர்ணயிக்கப்படும்.

அது பற்றிய மேலும் விபரங்களுக்கு இணைப்பு:


oooooOooooo



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 




இணைப்பு: 
கதையின் தலைப்பு:


VGK-15



” அழைப்பு   



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


01.05.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.









என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்



35 கருத்துகள்:

  1. அழகாக சங்கீத உபந்யாசம் செய்து முதல் பரிசை பகிர்ந்துகொண்ட திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..
    அன்பான பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  2. முதல் பரிசுக்கு எமது விமர்சனத்தை தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் அருமையாக கதை எழுதி போட்டியை நடத்தும் கதை ஆசிரியர் அவர்களுக்கும் இனிய நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான விமரிசனத்தை அளித்திருக்கும் இருவருக்கும் வாழ்த்துகள்.

    குழந்தை சமர்த்தாக இருக்கிறான். திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்கள். நாளை அமாவாசை அன்று கூடப் போடலாம்.

    பதிலளிநீக்கு
  4. முதல் பரிசு பெற்ற திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  5. மிகச் சிறப்பாக விமர்சனம் எழுதி பரிசு பெற்ற இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  6. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், கீதமஞ்சரி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. இம்முறையும் முதல் பரிசுக்குரியதாய் என் விமர்சனம் நடுவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    சிறுகதைகளுக்கான விமர்சனப்போட்டியைத் தொடர்ந்து திறம்பட நடத்திவரும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார். என் சார்பில் அனைவருக்கும் சுண்டல் விநியோகம் செய்த தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

    முதல் பரிசினைப் பகிர்ந்துகொண்ட இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

    தங்கள் பேரக்குழந்தை ஆதர்ஷ்க்கு அன்பும் ஆசிகளும்.

    பதிலளிநீக்கு
  8. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், கீதமஞ்சரி அவர்களுக்கும் என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. முதல் பரிசினை பெற்ற ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மற்றும் சகோதரி கீத மஞ்சரி – கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    இவர்கள் இருவரும் போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி? என்று எழுதினால் நன்றாக இருக்கும்.


    பதிலளிநீக்கு
  10. பரிசு பெற்ற திருமதி . இராஜராஜேஸ்வரி அவர்கள்

    மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  11. //இவர்கள் இருவரும் போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி? என்று எழுதினால் நன்றாக இருக்கும். //

    -- திரு. தமிழ் இளங்கோ

    அருமையான கருத்தும் வேண்டுகோளும்.

    நானும் இப்படியொரு கேள்வியை என்னுள் கொண்டிருந்தேன்.
    தமிழ் இளங்கோ ஐயாவும் இதையே கேட்டதில் மகிழ்ச்சி.
    இருவருமே தங்கள் பதிவுகளில் இது பற்றி எழுதி இந்தப் பகுதிக்கு சுட்டியும் கொடுத்தார்கள் என்றால், இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் மற்றவர்களுக்கும் மிகவும் உதவியாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. வித்தியாசமான சுவையான விமர்சனங்கள்.
    திருமதி. இராஜராஜேஸ்வரி,
    திருமதி. கீதா மதிவாணன்
    இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. விமர்சனம் எழுதுவதில் நான் ஒன்றும் வித்தகி இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். தேர்ந்த விமர்சகர்கள் பலர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. இருப்பினும் தி.தமிழ் இளங்கோ ஐயா மற்றும் ஜீவி சார் இருவரின் வேண்டுகோளை ஏற்று நான் விமர்சனம் எழுதும் முறையைச் சொல்கிறேன்.

    சிறுகதை வெளியானவுடனேயே அதை ஒருமுறைக்கு இருமுறை ஊன்றி வாசித்துவிடுவேன். அதற்குப்பிறகு அதைத் திரும்பியும் பார்க்கமாட்டேன். விமர்சனம் எழுதுவதற்கு ஒருவார கால அவகாசம் உள்ளதே… ஆனால் அந்த நேரத்தில்… வீட்டு வேலைகள் செய்யும்போதும், நடை பயிலும்போதும், ஓய்வாயிருக்கும்போதும் உள்ளுக்குள் அந்தக் கதையைப் பற்றிய அலசலை மேற்கொள்வேன். என்ன விமர்சனம் எழுதலாம், எப்படி எழுதலாம், கதையின் சிறப்பம்சங்கள் என்ன, குறை என்ன, வித்தியாசம் என்ன, கதாசிரியர் சொல்லவிரும்புவது என்ன, பாத்திரப் படைப்புகளின் குணாதிசயங்கள்... எழுத்து நடை... போன்றவற்றை அசைபோட்டபடியிருப்பேன்.

    தொடர்போட்டிகள் என்பதால் ஒரேமாதிரி இல்லாமல் ஒவ்வொரு முறையும் சிற்சிறு மாற்றங்களுடன் எழுதினால் சுவாரசியமாக இருக்கும் என்பதால் அதில் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொள்வேன். எல்லாம் மனத்துக்குள் முடிவானதும் மறுபடி ஒருமுறை கதையை வாசித்து என் எண்ணக்கோர்வையை உறுதிப்படுத்திக்கொண்டு எழுத ஆரம்பிப்பேன்.

    கிட்டத்தட்ட முதல் முயற்சியிலேயே நான் எண்ணியவற்றை சீராக எழுதிவிடமுடியும். அப்படித்தான் இதுவரை செய்கிறேன். வேறெந்த சிறப்புப் பயிற்சிகளோ, முயற்சிகளோ இல்லை... பலரும் இப்படித்தான் யோசித்து விமர்சனம் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அப்படி இல்லாதவர்களுக்கு இந்தப் பதிவு பயன்படும் எனில் மிகவும் மகிழ்வேன்.

    பரிசு பெறும் மற்றவர்களது விமர்சனங்களையும் வாசிக்கும்போது இன்னும் சில யுத்திகள் கிடைக்கின்றன. அவற்றையும் நாம் உபயோகப்படுத்திக்கொள்வதால் வெற்றி கிட்டும்.

    எழுதத் தூண்டிய திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் ஜீவி சார் அவர்களுக்கும் எழுதவைக்கும் கோபு சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா !

      எவ்வளவு ஒரு

      ஈடுபாடு

      சிரத்தை

      தன்னம்பிக்கை

      தனித்தன்மை

      தனித்திறமை

      கற்பனை வளம்

      எழுத்தாற்றல்

      இவை எல்லாவற்றிற்கும் மேல்

      த ன் ன ட க் க ம் !

      இவைகளே வெற்றிக்கான படிக்கற்கள்
      என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?

      அடியேன் பார்த்தவரை தங்களின் விமர்சனங்களில் 99.99% எழுத்துப்பிழை என்பதையே என்னால் பார்க்க முடிவது இல்லை என்பதை பெருமகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

      தங்களின் தரமான இந்த பதிலில் நான் சொக்கிப்போய் உள்ளேன். ;)))))

      மிக்க மகிழ்ச்சி.;)))))

      தங்களை இவ்வாறு எழுதத்தூண்டிய திரு. தமிழ் இளங்கோ ஐயா மற்றும் திரு. ஜீவி ஐயா இருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு [VGK]

      நீக்கு
    2. ஊக்கம் தரும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி கோபு சார்.

      நீக்கு
  14. ///தேர்ந்த விமர்சகர்கள் பலர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை..//

    என் கருத்தும் இதுதான் தோழி..!

    அவுட் ஆஃப் சிலபஸில் அத்தனை கேள்விகளும் அமைந்த வினாத்தாளை பார்த்த மாணவனைப்போல விமர்சனம் எழுத தெரியாதே என திகைத்தேன்..
    ஆரம்பத்தில் பரிசுபெற்றவர்கள் விமர்சனம் எழுத கற்றுக்கொள்ள களமாக அமைந்தது..
    ஆசிரியர் தன் பதிவில் ஏற்கெனவே வெளியிட்ட கதைகள்..

    சில சமயங்களில் இந்த வாரம் என்ன கதையாக இருக்கும் என நினைத்துப்பார்த்து அந்தக்கதையே வெளியாவது ஆச்சரியம் அளிக்கும் .
    அப்போது கருத்துரைகளும் எழுதியிருப்பதும் நினைவு வரும்..
    பத்திரிகைகளிலும் வெளியாகி பரிசுபெற்ற கதைள் ஆயிற்றே..
    எனவே கதையைப்படிக்கும்போதே இப்போதெல்லாம் குறைகளும் நிறைகளும் தோன்ற ஆரம்பித்துவிடுகின்றன்..
    படித்து முடித்த அடுத்தகணம் அப்போது மனதில் தோன்றுபவைகளை உடனே விமர்சனமாக எழுதி அனுப்பிவிடுகிறேன்..
    .
    ஆசிரியரும் ஏன் இவ்வளவு அவசரம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.. ஒரு வாரம் நேரம் இருக்கிறதே என்பார்..

    ஆனால் எனக்கு அவ்வப்போது வெளியில் கிளம்ப வேண்டியிருக்கும்.. கணினி கிடைப்பதும் நிச்சயமிருக்காது..
    உறுத்தும் எழுத்துப்பிழைகளை திருத்த முயற்சித்தாலோ, இன்னும் சில வரிகளை சேர்க்க நினைத்தாலோ - கேம்ஸ் விளையாட கணினி கேட்டு தொல்லை செய்பவர் அருகில் இருந்துகொண்டு " எங்களை நோட்டில் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதவேண்டும் என்று கண்டிக்கும் நீங்கள்மட்டும் திருத்தி எழுதலாமா -எழுதியவரை போதும் ''என்று send பட்டனை அவரே அழுத்திவிட்டு கணினியை பிடுங்கிக்கொள்வார்..

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா3 மே, 2014 அன்று PM 12:07

    முதல் பரிசு பெற்ற திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் வாழ்த்துகள்....
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  16. அன்புடையீர்,

    வணக்கம்.

    மேலும் ஒரு மகிழ்ச்சியான தகவல்:

    இந்த VGK-13 'வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !’ என்ற கதைக்கு விமர்சனம் எழுதி அனுப்பியிருந்த அனைவருக்குமே போனஸ் பரிசு அளிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அதற்கான புதிய அறிவிப்பு இந்தப்பகுதியில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தக்குறிப்பிட்ட போட்டியில் கலந்து கொண்டுள்ள அனைவரின் தகவல்களுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  17. திருமதி இராஜேஸ்வரி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

    அன்புடையீர்,

    வணக்கம்.

    31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 ஏப்ரல் வரையிலான 40 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

    என்றும் அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  19. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.

    அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.

    அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.

    'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .

    மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.

    முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.

    இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  20. விமரிசன கட்டுரை எப்படி எழுதணும்னு விளக்கமாக சொன்ன விதமே ரசிக்கும்படி இருந்தது

    பதிலளிநீக்கு
  21. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

    வணக்கம்மா.

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 ஏப்ரல் வரை முதல் 40 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  22. முதல் பரிசு பெற்ற திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 28, 2015 at 7:16 PM

      //முதல் பரிசு பெற்ற திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்....//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, ஜெயா :)

      நீக்கு
    2. இருவருமே மிகச்சிறப்பாகத்தான் விமர்சனம் எழுதி அசத்தியுள்ளார்கள். இரண்டையும் தனித்தனியே படித்து ரஸித்தீர்களா, ஜெயா?

      அதுவும் அந்த சங்கீத உபன்யாசம் போன்ற விமர்சனத்தைப்பற்றி கூடுதலாக ஏதேனும் தங்கள் பாணியில் சொல்லுவீர்கள் என நான் மிகவும் எதிர்பார்த்தேனாக்கும்.

      நீக்கு
  23. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:

    அன்புள்ள ஜெயா,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 ஏப்ரல் மாதம் வரை முதல் 40 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  24. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திருமதி கீத மஞ்சரி அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

    அன்புள்ள (mru) முருகு,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஏப்ரில் மாதம் வரை, முதல் 40 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் அல்லது சில பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

    பதிலளிநீக்கு
  26. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் திருமதி கீதமஞ்சரி மேடம் வாழ்த்துகள் இருவருடைய விமரிசனமும் நல்லா இருக்கு குறிப்பாசங்கீத உயன்யாசம் அமர்க்களம் இன்று கதை சொல்லப்போறதில்ல ன்னு சுவாரசியமா ஆரம்பிக்கறாங்க..

    பதிலளிநீக்கு
  27. அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
    திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஏப்ரல் மாதம் முடிய, என்னால் முதல் 40 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  28. // ஆனால் நகைச்சுவை எழுத்தோ நடிப்போ அவ்வளவு சுலபமல்ல..
    யாரும் தங்கள் சூழ்நிலை சுற்றுப்புறத்தை மறந்து அவ்வளவு சீக்கிரம் சிரிக்க தயாராக இருக்கமாட்டார்கள்..//

    //அண்டர்வேர்ல்ட் தாதா ஆயுதத்தை மறைச்சு எடுத்துவராப்போலே… பொடியை அண்டர்வேரில் மறைச்சி அவர் எடுத்துவர காட்சியும் நினைச்சாலே குபீர்னு சிரிப்பு வரது நேக்கு…// ரசிக்கவைத்த வரிகள். வெற்றிக்கு வாழ்த்துகள்.


    பதிலளிநீக்கு
  29. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    527 out of 750 (70.53%) that too within
    13 Days from 26th Nov. 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஏப்ரல் மாதம் வரை, என்னால் முதல் 40 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  30. மிகச் சிறப்பாக விமர்சனம் எழுதி பரிசு பெற்ற இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  31. WHATS-APP COMMENTS AT 15.49 Hrs. ON 21.05.2019 FROM Mrs. PADMA SURESH FOR MY STORY VGK-13


    👏👏👏👏👏👏
    Awesome comedy... I couldn't control my laughter when I was reading your (official) discussions... 😜 Enjoyed the whole story.... very interesting... throughout the story, there was a suspense about how you are going to combine it with politics and how it is going to end.... Well done. 👏👏👏👏

    Mrs. PADMA SURESH
    MDMT

    [MDMT = My Dear Maths Teacher]

    பதிலளிநீக்கு