என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

98 ] அன்னதான மஹிமை - 1 of 3

2
ஸ்ரீராமஜயம்




அன்னதான சிறப்புக்கு 
மஹாபெரியவா சொன்ன 
உண்மைக்கதை. 

பல வருடங்களுக்கு முன்பு காஞ்சி மஹாஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக்கிழமை. 

தரிஸனத்திற்கு ஏகக்கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். 

ஒரு நடுத்தர வயது தம்பதி, ஆசார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கைகூப்பி நின்றனர். 

அவர்களைக்கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், “அடேடே ..... யாரு .... பாலூர் கோபாலனா! ஒரு வருஷத்துக்கு முன்னால் வந்திருந்தே! அப்போ என்னவோ கஷ்டத்தையெல்லாம்  சொல்லிண்டு வந்தயே ..... இப்போ செளக்யமா இருக்கேயோல்லியோ ! என்று சிரித்துக்கொண்டே வினவினார்.

உடனே அந்த பாலூர் கோபாலன், “பரம செளக்யமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ண படியே நித்யம் மத்யான வேளைல ஒரு ’அதிதி’க்கு [எதிர்பாராத விருந்தாளின்னு சொல்லலாம்] சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வறது பெரியவா! வயல்கள்ல விளைச்சல் நன்னா ஆறது ...... முன்ன மாதிரி பசுமாடுகள் மரிச்சுப்போறதில்லே! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம், இப்போல்லாம் கையிலே தங்கறது. 

எல்லாம் நீங்க அனுக்ரஹம் செய்து சொன்ன அதிதி போஜன மஹிமைதான் பெரியவா .... தினமும் செஞ்சிண்டுருக்கேன். வேற ஒண்ணுமே இல்லை” என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர்.

உடனே ஆச்சார்யாள், “ பேஷ் ... பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாகறதுங்கறதப் புரிஞ்சிண்டா  சரிதான் ..... அது சரி, இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் கிளம்பி இங்கே வந்துட்டேளே ... அங்க பாலூர்லே யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா?” என்று கவலையுடன் விசாரித்தார்.

உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு ”அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணிவெச்சுட்டுத்தான் பெரியவா வந்திருக்கோம்.  ஒரு நா கூட அதிதி போஜனம் விட்டுப்போகாது” என்றாள்.

இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே  ஒரு வைராக்யம் வேணும். அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”


குதூகுலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்ரஹ வார்த்தைகளைக் கேட்டு மகிழ, க்யூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர். அனைவரையும் கீழே அமரச்சொல்லி ஜாடை காட்டினார், ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.


ஒரு பக்தர் ஸ்வாமிகளைப்பார்த்துக் கேட்டார், ”அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மஹிமை இருக்கா ஸ்வாமீ?”


உடனே ஸ்வாமிகள், “ஆமாமாம்! மோட்சத்துக்கே அழைச்சுண்டு போகக்கூடிய மஹாப் புண்ய தர்மம் அது. ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணியிருக்கு! அத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள்ட்ட கேட்டாத்தான் சொல்லுவா. அப்பேர்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!” என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.

ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டு, பெளவ்யமாக, “என் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாளை .... நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்றோம் ... இந்த அதிதி போஜன மஹிமையைப்பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா ..... நாங்கள்ளாம் நன்னா புரிஞ்சிக்கிறாப்போல கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும்” என்றார். 


அவரை அமரச்சொன்னார் ஸ்வாமிகள். பக்தரும் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பரப்பிரும்மம் பேச ஆரம்பித்தது. 


”ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தெட்டு [1938-39] .... முப்பத்தொன்பதாம் வருஷம்ன்னு ஞாபகம்.ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்திலே [கும்பகோணம்] நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. 


அப்போ நடந்த ஒரு சம்பவத்தத்தான் இப்போ நா சொல்லப்போறேன். அத நீங்கள்ளாம் ஸ்ரத்தையாக் கேட்டுட்டாளே, இதுலே இருக்கற மஹிமை நன்னாப் புரியும்!  சொல்றேன் ... கேளுங்கோ ... சற்று நிறுத்திவிட்டு, தொடர்ந்தார் ஸ்வாமிகள்.

கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்ட கரையிலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்ன்னு பலசரக்கு வியாபாரி ஒருவர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு ..... அவரோட தர்மபத்தினி பேர் சிவகாமி ஆச்சி. அவா காரைக்குடி பக்கத்துல பள்ளத்தூரைச் சேர்ந்தவா. அந்த தம்பதிக்குக் கொழந்த குட்டி கெடயாது.  


கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா. 



தொடரும்


oooooOooooo

[ 2 ]


எட்டு பவுன் ... இரட்டை வடம் 
சங்கிலி ... எங்கே?

[இந்த அனுக்ரஹ அமுதமழைத் தொடரினை
 வெளியிடுவதற்கு முன்பே மிகவும் சுவையானதோர்
 MIRACLE  சம்பவத்தை அடியேன் வெளியிட்டிருந்தேன்.
http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html
அதைப் டிக்கத் தவறியவர்களுக்காக
 மீண்டும் இங்கே இதில் கொண்டு வந்துள்ளேன்.]




பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை, லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மஹாபெரியவா.




தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச் செல்வதற்காக எழுந்தார் ஸ்வாமிகள்.


அப்போது வயதான பாட்டியும், இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வேகவேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டார்.



சந்தோஷம் தவழ, “அடடே, மீனாக்ஷி பாட்டியா? என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே? பக்கத்திலே ஆரு? ஒம் பேத்தியா…


பேரென்ன?” என்று வினவினார் ஸ்வாமிகள்.

மீனாக்ஷி பாட்டி.. ”பெரியவா, நா எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன்.

இதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி தெரிவிச்சுண்டதில்லே … அதுக்கான சந்தர்ப்பம் வரலே..

ஆனா, இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே.. இவ எம் பொண் வயத்துப் பேத்தி. இந்த ஊர்ல பொறந்ததால காமாக்ஷின்னு பேரு வெச்சுருக்கு. நேக்கு ஒரே பொண்ணு.. அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை எங்கிட்ட விட்டுட்டு கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன் மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான்.

“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன். படிப்பு ஏறலே.
அஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு. வயசு பதினஞ்சு ஆறது..

இவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா
எங்கடமை விட்டுது” என்று சொல்லி முடித்தாள்.

பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன்.

சரி..என்ன சமாசாரம்?” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.

முதலில் தயங்கிய மீனாக்ஷி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.

“ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு. பையனும் இந்த ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார். அறுவது ரூவா சம்பளமாம். நல்ல குடும்பம், பிக்கல் புடுங்கல் இல்லே. ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா.

எப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…” என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது? கல்யாணத்த நா நடத்தி வெக்கறதாவது… என்ன பேசறே நீ..” என்று கடிந்து கொண்டார்.

அடுத்த சில வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே?” என்றார்.

பாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லே பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி முடுச்சுடுவேன்.

ஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, ’பாட்டி, நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ.. ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரெட்ட [இரட்டை] வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்’னு கண்டிஷனா சொல்லிப்டா.

பவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே.

தலா ஒரு பவுன்ல இவ ரெண்டு கைக்கு மாத்ரம் வளையல் பண்ணி  

வெச்சுருக்கேன்… அதான் என்னால முடிஞ்சது.

நா எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் பெரியவா நீங்கதான்…” என்று முடிப்பதற்குள்…

ஸ்வாமிகள், “ரெட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப் போடணும்கறயா, சொல்லு?” என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.

உடனே மீனாக்ஷி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, 

“அபசாரம்..அபசாரம் பெரியவா, நா அப்டி சொல்ல வரலே.

ஒங்களை தரிசனம் பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய மனுஷாள்ளாம் வராளே.. அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய பூர்த்தி பண்ணித்தரச் சொல்லக்கூடாதா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது? அப்டியெல்லாம் கேக்கற வழக்கமில்லே.

நீ வேணும்னா ஒன் சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு.. பத்து பவுன் கேக்காத எடமா பார்த்துக்கோ. அதான் நல்லது” என்று சொல்லி எழுந்துவிட்டார் ஸ்வாமிகள்.

உடனே மீனாக்ஷி பாட்டி பதற்றத்தோடு, 

“பெரியவா அப்டி சொல்லிப்டு
போகக்கூடாதுனு பிரார்த்திக்கிறேன்.

இப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன் தங்கமான குணம், அவாத்துல ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே எட்டெட்டு பவுன்ல ரெட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம்.

அதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரெட்ட வடத்தோட வரணும்னு ஆசைப்படறா.. வேறு ஒண்ணுமில்லே

பெரியவா, நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்” என்று கெஞ்சினாள்.

எழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம் 
யோசனையில் ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார், 

“நா ஒரு கார்யம் சொல்றேன்…. பண்றயா?”

“கண்டிப்பா பண்றேன். என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள், 

“ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு
காமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, “எட்டு பவுன்ல ரெட்ட வடம் சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.

இப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ… ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாக்ஷி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரஹித்தார்.

நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாக்ஷி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே. அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாக்ஷி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.

உடனே மஹா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.

அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.




 

 




“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா?” என்று பிரார்த்திதாள் பாட்டி.



ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.

ஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

“சரி பெரியவா. அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார். பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பேத்தியுடன் காமாக்ஷி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி.

வெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.

அன்னை காமாக்ஷி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள். இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர். 



பேத்தியின் நக்ஷத்திரத்துக்கு ஓர் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக்கொண்டாள், பாட்டி.


பிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், ’எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி’ யையே பிரார்த்தித்தபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர். 



ஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நமஸ்காரம் பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.


சனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்ட  மீனாட்சி பாட்டி, பாரிஜாத புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம் நோக்கி விரைந்தாள். 

மடத்தில் 
ஏகக் கூட்டம். மீனாக்ஷி பாட்டி இருபது முப்பது பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.



பாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம் 
சொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.


அவர், “இன்னிக்கு அனுஷ நக்ஷத்ரம். பெரியவாளோட நக்ஷத்ரமாம். அதனால் ஸ்வாமிகள் இன்னிக்கி மௌன விரதம்.

யாரோடயும் பேசமாட்டாராம். முக தரிசனம் மட்டும்தான்” என்று விசாரப்பட்டுக் கொண்டார்.



மீனாக்ஷி பாட்டிக்குக் கவலை தொற்றிக் கொண்டது. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து எட்டு பவுன் ரெட்ட வடச் சங்கிலியைப்பத்தி ஞாபகப்படுத்தலாம்னு நெனச்சுண்டிருந்தேனே, அது இப்ப முடியாது போலருக்கே?” என்று கவலைப்பட்டாள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றி அப்படியே அமர்ந்திருந்தது, அந்த பரப்பிரம்மம். 



”எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி” குறித்துச் சட்டென்று வாய் திறந்து ஸ்வாமிகள் ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி. 



மஹா ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தவர் சற்றுக் கடுமையாக,பாட்டி, நகருங்கோ… நகருங்கோ... பெரியவா இன்னிக்கு மௌன விரதம் பேசமாட்டார். பின்னாலே எத்தனை பேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” என்று விரட்டினார்.


காமாக்ஷியம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன் நடையைக் கட்டினாள்.




அன்றைக்கும் காமாக்ஷியம்மன் சந்நிதியில் பெரியவா கூறியபடி ‘பஞ்ச 
ஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர் இருவரும். 



அடுத்தடுத்து ஞாயிறு, திங்கள் இரு நாட்களும் மஹா ஸ்வாமிகள் மௌன விரதம் மேற்கொண்டார். இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் மட்டும் செய்துவிட்டுத் திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.


பாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள். ”பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே, ஒண்ணுமே நடக்கலியே…

அம்மா காமாக்ஷி கண் திறந்து பார்ப்பாளா, மாட்டாளா?” என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி

செவ்வாய்க்கிழமை விடிந்தது. அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் மிகவும் 
கலகலப்பாக இருந்தது. ஆரணியிலிருந்து வந்திருந்த பஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப் பரபாவத்தில் ஆழ்த்திக்கொண்டு இருந்தது.

ஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ்! இன்று மௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக்கூட்டம். 




வரிசையில் வந்த நடுத்தர வயது மாமி, முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு முன் வந்து நமஸ்கரித்து எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம்.


தான் கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத் தேங்காய்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, பூசணி, மொந்தன் வாழைக்காய் வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு, மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித்தாள்.

எதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம் விட்ட ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டார்.

பிறகு கண்களை இடுக்கிக்கொண்டு அந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர், 

நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட ஆம்படையா [மனைவி] அம்புஜம்தானே?

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே.. ஏதோ சொல்லி 
துக்கப்பட்டுண்டே.. இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோட 

நீ வந்துருக்கறதைப் பாத்தா காமாக்ஷி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது. சரிதானே!” என்று கேட்டார்.

அம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, ”வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமா எங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்த அவலத்தைச் சொல்லி அழுதேன். நீங்கதான் இந்த ஊர் காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி, அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி.. அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.

சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன். என்ன ஆச்சரியம் பாருங்கோ.. பதினஞ்சு நாளக்கி முன்னாடி, ஜாம்ஷெட்பூர் டாடா 
ஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னு வந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார்.

எல்லாம் அந்த காமாக்ஷி கிருபையும், ஒங்க அனுக்கிரஹமும்தான் பெரியவா” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.

உடனே பெரியவா, “பேஷ்..பேஷ்.. ரொம்ப சந்தோஷம். தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா… இவ்வளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே!” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.

அம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே, ”இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா. அதான் அப்டி பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.

ஸ்வாமிகள் மகிழ்வோடு,” சரி…சரி.. ஒம் பொண்ணு, மாப்ளய திருப்பியும் அம்மா காமாக்ஷிதான் சேத்து வெச்சிருக்கா, அதனால் நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி அவளுக்கு அர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு” என்று கட்டளையிட்டார்.

உடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா… இது இந்த சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன். 




பெரியவா….  நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்.


“பேஷா, பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல 
சாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்.. ஞாபகம் வெச்சுக்கோ” என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.

அன்று காமாக்ஷியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால் பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக் கட்டினாள் மீனாட்சி பாட்டி. 




கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டு வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம், “அடியே காமாக்ஷி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா பண்ணிடுவோம். நீ என்ன பண்றே.. அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா, அஞ்சு 
ஜோடி வாழப்பழம், வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா, பார்ப்போம்” என்று காசைக் கொடுத்தாள்.


பாட்டி சொன்னபடியே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

பாட்டி: “அம்மா காமாக்ஷி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா வேற கதி நேக்கு இல்லேடிம்மா. நீதான் எப்டியாவது அந்த எட்டு பவுன் ரெட்ட வட 
சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”

பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி  பின்தொடர இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.

நான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம் வந்துகொண்டு இருந்தனர் இருவரும்.

“பாட்டீ…பாட்டீ….பாட்டீ…!” பேத்தியின் உயர்ந்த குரலைக் கேட்டுத் 
திரும்பிப் பார்த்த பாட்டி, ஆத்திரத்தோடு,  “ஏன் இப்டி கத்றே? என்ன 

பறிபோயிடுத்து நோக்கு? என்று கடுகடுத்தாள்.

“ஒண்ணும் பறிபோகலே பாட்டி, கெடச்சிருக்கு! இப்டி ஓரமா வாயேன் காட்றேன்!” என்று சொல்லி பாட்டியை ஓரமாக அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள். பேத்தி.  அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட பவுன் சங்கிலி!

“ஏதுடி இது?” பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள். 



பேத்தி, “நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா.. அப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல பட்டுது… அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே! இது அறுந்துருக்கே பாட்டி.. பவுனா.. முலாம் பூசினதானு பாரேன்” என்றாள்.



அதைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி, “பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி, காமாக்ஷி, எட்டு.. எட்டரை பவுன் இருக்கும்னு நெனக்கிறேன்.

இது பெரியவா கிருபைல காமாக்ஷியே நமக்கு அனுக்கிரகம் பண்ணியிருக்கா. சரி…சரி….வா, வெளியே போவோம், மொதல்லே” என்று சொல்லியபடி அதைத்தன் புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாக வெளியே வந்துவிட்டாள்.

அன்று பிரதட்சிணத்தில், “பஞ்ச ஸங்க்யோபசார’த்தை [5 முறை வலம் வருவதை] மறந்து விட்டாள். மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ காத்திருந்தனர். பேத்தியுடன் வந்த மீனாக்ஷி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.

பாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா என்று குழம்பினாள்.

அதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, “இன்னியோட நோக்கு காமாக்ஷியம்மன் கோயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம் கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்…..  ஆனா ஒம் பேத்தி கைல கெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து! அந்த சந்தோஷம்…. நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாக்ஷி பூர்ணமா அனுக்கிரகம் பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே…  என்ன நான் சொல்றது சரிதானே?” என யதார்த்தமாகக் கேட்டார்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால் 
ஓடவில்லை. 



“ஸ்வாமிகள் என்னை தப்பா எடுத்துண்டுடப்டாது.

பேத்தி கைல அது கிடச்ச ஒடனே, அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச் சொல்லியிருக்கானு நெனச்சுண்டுட்டேன்…அந்த சந்தோஷத்துல இன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்துட்டேன்”

என்று தயங்கித்தயங்கிச் சொன்னாள்.

உடனே பெரியவா, 

“அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ 
எடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட எட போடறத்துக்கோ…. அறுந்தத பத்த வக்கறத்துக்கோ மறக்கலியே நீ?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு, “அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என முத்தாய்ப்பு வைத்தார்.

கிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். “நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி.

ஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், “நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்?”

“அம்பாள் காமாக்ஷிக்கு.”

“நீயே சொல்லு… அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்பிலே முடிஞ்சிக்கலாமா?”

“தப்பு…தப்புதான்! என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்” என்று மிகவும் வருத்தப்பட்ட பாட்டி, அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து, கை நடுங்க ஸ்வாமிகளுக்கு முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.

இப்போது மணி இரண்டு, மீனாக்ஷி பாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச்சொன்னார் ஸ்வாமிகள்.. அப்போது, காலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினி அம்புஜம் அம்மாள், சோகமே உருவாகத் திரும்பி வந்து ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தாள்.

பொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள்,



“அடடா…எதுக்கம்மா கண் கலங்கறே? என்ன நடந்தது?” என வாத்ஸல்யத்துடன் வினவினார்.


உடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே, “வேற ஒண்ணுமில்லே பெரியவா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்க உத்தரவுபடி காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவை பண்றச்சே, ’பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா, எங்கழுத்துல போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்’னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.

தம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடி அந்த ரெட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப் போனேன்.  அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன எடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன். ஒரு எடத்லயும் கிடைக்கலே… இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா?” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

ஸ்வாமிகள் மீனாக்ஷி பாட்டியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி, 
அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி.

பெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரெட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள். மகிழ்ச்சியுடன், “அம்மா அம்புஜம்… நீ தவறவிட்ட ரெட்ட வடம் இதுவா பாரு?” என்று காண்பித்தாள்.

அதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள்:

“இதேதான்….இதேதான்…..பாட்டி.. இது எப்படி இங்கே வந்தது?

ஆச்சரியமா இருக்கே!” என்று வியந்தாள். 

நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.

மீனாக்ஷிப் பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள் 

“பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ.

ஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத் தெரிவிச்சுக்கிறேன். 


எட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரெட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும்,



நா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரெட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு 
அர்ப்பணிக்கறதா வேண்டிண்டு இருக்கேன்.

இன்னிக்கு சாயந்தரமே ஒங்களையும், பேத்தி காமாக்ஷியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு போய், எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன். அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்” என்று ஆறுதல் அளித்தாள்.

ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து 
பார்த்துக்கொண்டு இருந்தார்.

அனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர்.

ஆச்சார்யாள், மீனாக்ஷி பாட்டியைப் பார்த்து, 

”இன்னிக்கு நீயும் ஒம் 
பேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ” என்று விடை கொடுத்தார்.

மீனாக்ஷி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடைந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. !

oooooOooooo



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.



இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

55 கருத்துகள்:

  1. அன்பின் வை.கோ

    அன்ன தான மகிமை - பதிவு நன்று நன்று - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் புகைப் படம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் - அவ்வளவு அழகு - தலையில் டர்பன் - முகத்த்ன் சாந்த சொரூபம் - உலகில் நடக்கும் அனைத்தையும் மனதில் பார்த்துக் கொண்டிருக்கும் பெரியவாளை என்ன வென்று சொல்வது ? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வை.கோ

    அன்னதான சிறப்புக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா சொன்ன கதை - உண்மைக் கதை அருமை அருமை - முதல் பகுதி அருமை. தொடரட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வை.கோ

    எட்டு பவுன் ரெட்டைச் சங்கலி - எங்கே ? - பதிவு அருமை - பேத்திக்கு கல்யாணம் பண்ணி வைக்கத் தேவையான சங்கிலி இல்லாததால் பாட்டியும் பேத்தியும் பெரியவாளைச் சந்தித்து சங்கிலி பெற வழி தேடி வந்திருந்தார்கள் -

    ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளும் வழி கூறினார் - காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட வழி முறைகள் கூறி ஆசிர்வாதம் பண்னி அனுப்பி வைத்தார்.

    ஆமாம் முதல் முறையாக இப்பதிவில் தான் பெரியவா சற்றே கோபக் கனலை வீசுவதைக் கண்டேன். அவருக்கும் கோபம் வருமா - நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை - ம்ம்ம் - கோபத்திலும் நன்மை இருக்கும், நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வை.கோ - மகாப் பெரியவா வழி காட்டி விட்டார்- பாட்டீயும் பேத்தியும் வழியினைப் பின் பற்றத் துவங்கி விட்டனர்-நிச்சயம் திருமணம் நடக்கும் - பொறுத்திருப்போம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வை.கோ

    பேத்தியின் திருமண்ம சிறப்புடன் நடை பெற பாட்டிக்கு வழி காட்டி - முகத்தில் சிரிப்புடன் வழி அனுப்பி வைத்த பெரியவாளின் கருணைக்கு அளவே இலலை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய் ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர் ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர் ஹர் சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர் ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர் ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர் ஹர் சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

    பதிலளிநீக்கு
  7. அருமையான பகிர்வு.. முன்பே படித்திருந்தாலும் மீண்டும் வாசிக்கும் போதே பெரியவாளின் அருளை எண்ணி மகிழ்ந்தேன்..

    பதிலளிநீக்கு
  8. அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”

    அதிதி உபசாரம் பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன். அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்” என்று ஆறுதல் அளித்தாள்.

    ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து
    பார்த்துக்கொண்டு இருந்தார்.

    கேட்டது கேட்டபடியே அனுகிரஹித்த நடமாடும் தெய்வம்..!

    பதிலளிநீக்கு
  10. “சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.

    ஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

    வெள்ளிகிழமையில் கிடைத்த திருவாக்கு அற்புதம் ..!

    பதிலளிநீக்கு
  11. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.
    அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு
    அனுக்கிரகம் பண்றவ அவ,
    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  12. ரெண்டுமே படிச்சேன். சக்தி விகடன்லேனு நினைக்கிறேன். கர்ணன் எல்லா தானமும் பண்ணியும் அன்னதானம் பண்ணாததாலே தானே அவனுக்கு சொர்க்கம் சென்றும் பசி எடுத்ததுனு சொல்வாங்க! :))) அன்னதானத்தின் மகிமை தனிதான். :)))

    பதிலளிநீக்கு
  13. இந்த உண்மைச் சம்பவத்தைப் படிக்க படிக்க
    மெய் சிலிர்த்தது.சொல்லிச் சென்ற விதம்
    நேரடியாக பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  14. அன்னதான சிறப்பு குறித்து மஹாபெரியவாளின் உரையை அறிய மிக ஆவல்! நன்றி!

    பதிலளிநீக்கு
  15. மஹாபெரியவா அவர்கள் சொன்ன அன்னதான கதை மிகவும் சிறப்பு... மீனாக்ஷி பாட்டியின் சம்பவம் மெய் சிலிர்க்க வைத்தது ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  16. பசித்த வயிறுக்கு உணவு இடுவது மிக நல்ல தர்மம். என் அம்மா தினம் இதைத்தான் செஞ்சிட்டிகிட்டு இருக்காங்க...! ஒரு நாளைக்கு ஒரு ஏழை வயிறுக்காவது உணவை தர மறந்ததில்லை.

    பதிலளிநீக்கு
  17. அன்னதான சிறப்பினை பற்றி விளக்கியமைக்கு நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு
  18. இரட்டைவடச் சங்கிலி அருள் மகிமையோ மகிமை.
    இனிய நன்றி.
    இறையருள் நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  19. புதுக் கதையை, இல்லையில்லை, சம்பவத்தை பாதியிலே சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கும் சம்பவத்தைப் போட்டதற்கு நான் என் ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறேன்!! :-))

    பதிலளிநீக்கு
  20. ஹர ஹர சங்கர ஜெயா ஜெயா சங்கர என்று பெரியவாளின் நாமத்தை ஜபிப்பதைவிட வேறு ஒன்றும் தோன்றவில்லை. அவ்வளவு நெகிழவைக்கும் பதிவு. நன்றி பல.

    --

    பதிலளிநீக்கு
  21. கண்களில் அருவியாக நீர் வழியாமல் படிக்கும்படியான ஒரு கட்டுரையை -ஆச்சார்யா சுவாமிகளைப் பற்றி- உங்களால் எழுதவே முடியாதா?

    பதிலளிநீக்கு
  22. மீனாட்சி பாட்டிகதை முன்பே படித்திருந்தாலும், திரும்பப் படித்ததில் மகிழ்வாக இருக்கிறது.
    இரட்டை வடச் சங்கிலி எங்கிருந்து எங்கு போய் யாதுமாகி நின்றது.
    அதிதி போஜனம் நம் கையில் சமையலரை இருக்கும்போதே ஆரம்பித்து செய்து வர வேண்டும்.
    பின்னாளில் வா என்றால் வராது. விசேஷ,மானது இது. நல்ல பதிவு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  23. அன்னதான சிறப்பு சிறந்த அமுத வாக்கு.
    சுவாமிகள் சொல்ல போகும்
    கதையை படிக்க ஆவல்.
    இரட்டைவட கதை முன்பே படித்தது, மீண்டும் படிக்கும் போதும்
    எளியவருக்கு உதவும் கருணையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
    நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  24. படிக்கப் படிக்க பரவசமாக இருக்கின்றது.. பக்தி மயம்.
    ஜய ஜய சங்கர.. ஹர ஹர சங்கர..

    பதிலளிநீக்கு
  25. பாட்டி, பேத்தி, இரட்டைவட சங்கிலி ... உங்கள் பதிவிலேயே ஏற்கனவே இந்தக்கதை வந்துவிட்டது, இல்லையோ? நிஜம் தான். நீங்களே இணைப்பும் கொடுத்திருக்கிறீர்கள்.

    அன்னதானக் கதை தொடருகிறதா? நல்லது வந்து படிக்கிறேன்.


    பதிலளிநீக்கு
  26. குமரேசன் செட்டியார் - சிவகாமி ஆச்சி தம்பதி உண்மைக் கதையை கேட்க ஆவலாக இருக்கிறேன்.

    எட்டுபவுன் இரட்டைவடம் செயின் பாட்டியை ரொம்பவே படுத்தி விட்டது.

    பதிலளிநீக்கு
  27. உங்களுக்கு ஒரு ஆலோசனை. சகோதரி ராஜலக்‌ஷ்மி பரமசிவத்தின் இந்த பதிவைக் காணவும்.
    http://rajalakshmiparamasivam.blogspot.in/2013/12/blog-post_10.html

    பதிலளிநீக்கு
  28. அதிதி போஜன மஹிமையை
    அருமையாக எடுத்துரைத்த பதிவுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்தகுமார் December 20, 2013 at 7:02 PM

      வாங்கோ My Dear Mr. அரவிந்தகுமார் ஜெகமணி Sir, வாங்கோ, வணக்கம்.

      //அதிதி போஜன மஹிமையை அருமையாக எடுத்துரைத்த பதிவுக்குப் பாராட்டுக்கள்..//

      தங்களின் வருகை எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

      வெளிநாட்டில் உள்ள என் சொந்தக்குழந்தையே வருகை தந்ததுபோல மகிழ்வளிக்கிறது.

      தாங்கள் இதுவரை இந்தத்தொடரின் கீழ்க்கண்ட நான்கு பகுதிகளுக்கு வருகை தந்து சிறப்பித்து மகிழ்வித்துள்ளீர்கள்

      http://gopu1949.blogspot.in/2013/09/48.html
      http://gopu1949.blogspot.in/2013/10/65-3-4.html
      http://gopu1949.blogspot.in/2013/10/68.html
      http://gopu1949.blogspot.in/2013/12/98-1-of-3.html

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      என்றும் எப்போதும் க்ஷேமமாக , செளக்யமாக, சந்தோஷமாக இருக்க என் மனமார்ந்த நல்லாசிகள்.

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  29. இது ஏற்கனவே உங்கள் பதிவில் வந்தது மாதிரியே இருக்கிறதே!
    இல்லை இது வேறோ? எப்படியிருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் படிக்கும் போது கடவுள் நம்பிக்கை அதிகமாகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam December 20, 2013 at 8:19 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இது ஏற்கனவே உங்கள் பதிவில் வந்தது மாதிரியே இருக்கிறதே! இல்லை இது வேறோ? எப்படியிருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் படிக்கும் போது கடவுள் நம்பிக்கை அதிகமாகிறது.//

      இது நான் ஏற்கனவே வெளியிட்டுள்ள பதிவுதான் மேடம். அதற்கான [LINK] இணைப்புகூட மேலே ஆரம்பித்தில் கொடுத்துள்ளேன், பாருங்கோ.

      இதுவும் இதுபோல மற்றொன்றும், நான் இந்த அமுதமழைத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே வெளியிட்டுள்ளேன்.

      அவைகள் இரண்டையும் இந்தத்தொடரின் 108 பகுதிகளுக்குள் எங்காவது கொண்டு வந்தால் நல்லது என எனக்குத் தோன்றியதால், இந்தப்பகுதியில் ஒன்றும், அடுத்த பகுதியில் மற்றொன்றையும் கொண்டுவர இருக்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  30. நீங்கள் எழுதும் ஆக்கங்களை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது சுவாமிகளை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்துகொண்டே போகிறது .இம்முறை மங்கோ ஜூஸ் வேண்டாம் சுவாமி தரிசனம் வேண்டும் .அம்பாளடியாள் மஹா பெரியவாளைக் காணத் துடிப்பதாகச் சொல்லிவிடுங்கள்
    ஐயா ! :))

    பதிலளிநீக்கு
  31. அன்ன தான மகிமை -- முதல் பாகம் படித்ததும் அடுத்த பாகங்களையும் படிக்கும் ஆவல்......

    சங்கிலி சம்பவம் முதலில் படித்திருந்தாலும் மீண்டும் படிக்க மனதுக்கு திருப்தி......

    பதிலளிநீக்கு
  32. அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி! அன்னதான சிறப்பு பற்றிய கதையில் , மறுபடியும் “சஸ்பென்ஸ்” போர்டு தொங்கவிட்டு விட்டீர்களே! இரண்டாவது சம்பவம் பற்றி நீங்கள் ஏற்கனவே ஒருமுறை எழுதிவிட்டதாக நினைவு. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ December 22, 2013 at 1:37 PM
      //அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி!//

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //அன்னதான சிறப்பு பற்றிய கதையில் , மறுபடியும் “சஸ்பென்ஸ்” போர்டு தொங்கவிட்டு விட்டீர்களே!//

      ;)))))

      அதன் பகுதி-2 இன்று 22.12.2013 வெளியிட்டு விட்டேன். [அது ஏனோ துரதிஷ்டவசமாக டேஷ் போர்டில் தோன்றவில்லை]

      அதற்கான இணைப்பு இதோ:
      http://gopu1949.blogspot.in/2013/12/99-2-of-3.html

      இன்னும் ஒரே ஒரு பகுதி அதாவது பகுதி-3 மட்டுமே பாக்கி. அது 24.12.2013 அதிகாலையில் [இந்த அமுத மழைத்தொடரின் 100வது பகுதியில்] வெளியிட உள்ளேன்.

      //இரண்டாவது சம்பவம் பற்றி நீங்கள் ஏற்கனவே ஒருமுறை எழுதிவிட்டதாக நினைவு. நன்றி! //

      ஆம் ஐயா. இந்த இரண்டாவது சம்பவம் ஏற்கனவே நான் வெளியிட்டுள்ளது தான். ஆனால் இந்த அமுதமழைத் தொடரினில் சேராமல் இதுபோல 2-3 நிகழ்வுகள் நான் ஏற்கனவே என் ‘பொக்கிஷம்’ என்ற தொடரினில் எழுதியிருந்தேன்.

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவரைப்பற்றிய இந்த 108 சிறு பகுதிகள் கொண்ட ஒரு மெகா தொடரினில் அவைகளும் விட்டுப் போகாமல் இடம் பெற்றிருந்தால், சிறப்பாக இருக்கும் என்றும், நாளை என்றாவது ஒருநாள் இதை ஆர்வமாகப் படிக்கத்தொடங்கும் யாராவது ஒருவருக்காவது பயன்படக்கூடும் என்ற எண்ணத்தில் இங்கு மீண்டும் சேர்த்துள்ளேன்.

      இதே போலவே 100வது பகுதியிலும், ஏற்கனவே என்னால் வெளியிடப்பட்ட ஓர் சம்பவம் இடம் பெறக்கூடும்.

      அத்தோடு சரி. மொத்தத்தில் பகுதி-98, 99 + 100 இல் மட்டும் ஏற்கனவே வெளியிட்ட ஒருசில சுவையான சம்பவங்கள் மட்டும் மீண்டும் REPEAT ஆகியிருக்கும்.

      அதை நானும் எடுத்துச்சொல்லி தலைப்பினிலேயே LINK கொடுத்துள்ளேன், பாருங்கோ.

      அன்புடன் VGK

      நீக்கு
  33. அன்னதான சிறப்பினை பற்றி விளக்கியமைக்கு நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு
  34. தர்ம சிந்தனையோ அன்னதானம் செய்வதோ நல்லகுணங்களமைவது பூர்வ ஜன்ம ஸுஹ்ருதம் எவ்வளவு கஷ்டத்திலும் தானும் தன் குடும்பமும் பட்டினி கிடக்கும்போதும் அரிதாக கிடைத்த மாவை ஒரு அந்தணர் பட்டினியுடன் யாசித்தபோது ஒவ்வொருவரும் தன் பங்கை அவருக்கு கொடுத்து பசியாற்றியதுதான் மிகப்பெரிய புண்ணியம் அங்கு சிந்திய மாவில் ஒரு கீரிபிள்ளையின் உடல் பட்டு பாதி தங்கமாகமாறியது என்றும் மீதி பாதியை தங்கமாகமாற்ற தர்மபுத்திரரின் ராஜசூய யக்ஞ்த்தில் செய்யபட்டமிகப்பெரிய தானங்களினால் கூட முடியவில்லை என் பாரதம் உரைக்கிறது நல்ல பகிர்வு அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sundaresan Gangadharan December 23, 2013 at 3:14 PM

      அன்புள்ள சுந்தர், வாப்பா, வணக்கம்.

      //தர்ம சிந்தனையோ அன்னதானம் செய்வதோ நல்லகுணங்களமைவது பூர்வ ஜன்ம ஸுஹ்ருதம் எவ்வளவு கஷ்டத்திலும் தானும் தன் குடும்பமும் பட்டினி கிடக்கும்போதும் அரிதாக கிடைத்த மாவை ஒரு அந்தணர் பட்டினியுடன் யாசித்தபோது ஒவ்வொருவரும் தன் பங்கை அவருக்கு கொடுத்து பசியாற்றியதுதான் மிகப்பெரிய புண்ணியம் அங்கு சிந்திய மாவில் ஒரு கீரிபிள்ளையின் உடல் பட்டு பாதி தங்கமாகமாறியது என்றும் மீதி பாதியை தங்கமாகமாற்ற தர்மபுத்திரரின் ராஜசூய யக்ஞத்தில் செய்யபட்டமிகப்பெரிய தானங்களினால் கூட முடியவில்லை என் பாரதம் உரைக்கிறது//

      எனக்கு மிகவும் பிடித்தமான அழகோ அழகான உதாரணக்கதையை நீ இங்கு சுட்டிக்காட்டியுள்ளது என்னை மிகவும் மகிழ்விக்கிறது, சுந்தர்.

      இந்த தங்கமயமான கீரிப்பிள்ளையின் கதையினை தகுந்த படங்களுடனும், அனைவருக்கும் எளிதில் புரியும்படியும் விபரமான விளக்கங்களுடன், விரைவாக ஓர் தங்கமான தெய்வீகப்பதிவர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

      // நல்ல பகிர்வு அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன்//

      இதன் அடுத்த பகுதியில், குறிப்பாக, உன்னை அப்படியே ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கப்போகும் ஓர் அபூர்வமான செய்தியும் இடம் பெற உள்ளது.

      பிழைத்துக்கிடந்தால் இன்று நள்ளிரவு 12.05க்கு அது வெளியிடப்படும்.

      எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அனுக்ரஹம் மட்டுமே.

      அன்பான ஆசிகளுடன் கோபு.

      நீக்கு
  35. பெரியவாளின் லீலைகளில் இது ஒரு தினுசு
    அவர் நம்பியவரை என்றும் கைவிட்டதில்லை.
    நம்பாதவரையும் கூட திருத்தி அருள் செய்வதில் அவருக்கு இணை அவரே
    நெஞ்சை நெகிழ வைக்கும் நல்லதோர் பதிவு VGK

    பதிலளிநீக்கு
  36. எட்டு பவுன் சங்கிலி சம்பவம்! மெய்சிலிர்க்க வைத்தது! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  37. அன்ன தான மகிமை அருமை.

    ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு."

    பதிலளிநீக்கு
  38. Aha Annadanamahimai......

    Patti and pethi ......Ambal karunai......Periyiva asirvadam....
    Maisilerkum anubhavam.

    பதிலளிநீக்கு
  39. அன்னதான மகிமையைக் கேட்டு புல்லரித்துப் போனேன்.

    பதிலளிநீக்கு
  40. அன்னதான மஹிமை பற்றி பெரியவா சொல்லும் நிகழ்ச்சிக்கு வெயிட்டிங்க்

    பதிலளிநீக்கு
  41. அன்னதான மஹிமை பற்றி பெரியவா சொல்லும் நிகழ்ச்சிக்கு வெயிட்டிங்க்

    பதிலளிநீக்கு
  42. //இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே ஒரு வைராக்யம் வேணும். அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”//

    இந்தக் காலத்துல அதிதி கிடைக்கறதே அபூர்வமா ஆயிடுத்து. அதனாலதான் எல்லாரும் ஆதரவற்றவர்கள் இல்லங்களுக்கு செய்துடறா.

    இன்னிக்கு லயாக்குட்டிக்கு மூன்றாவது பிறந்த நாள். சாதம் தனியாக எங்கள் தெரு பைரவர்களுக்காக வடித்து வைத்திருக்கிறேன். BREADம் வாங்கி வைத்திருக்கிறேன். 11 மணிக்குமேல் லயாக்குட்டி பள்ளிக் கூடத்தில் இருந்து வந்ததும் அவள் கையாலேயே பைரவர்களுக்கு சாதம் போடச் சொல்லப் போகிறேன். தாத்தா சாய்ராம் பைரவர்களுக்கு அன்னம் இடுவதைப் பத்தி ரொம்ப சிலாகிச்சு சொல்லிவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 23, 2015 at 9:59 AM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      **இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே ஒரு வைராக்யம் வேணும். அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”**

      //இந்தக் காலத்துல அதிதி கிடைக்கறதே அபூர்வமா ஆயிடுத்து. அதனாலதான் எல்லாரும் ஆதரவற்றவர்கள் இல்லங்களுக்கு செய்துடறா.//

      கரெக்ட் ... ஜெயா, அதே .... அதே .... சபாபதே !!

      //இன்னிக்கு லயாக்குட்டிக்கு மூன்றாவது பிறந்த நாள்.//

      ஆஹா, மிகவும் சந்தோஷம். மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்துகள் + ஆசீர்வாதங்கள்.

      தனியாக மெயிலில் லயாக்குட்டிக்காக நிறைய அனிமேஷன் படங்களாகத் தேடிப்பிடித்து அனுப்பியுள்ளேன். :)))))

      உடனே பாருங்கோ ! அவளிடம் அவசியமாகக் காட்டுங்கோ.

      //சாதம் தனியாக எங்கள் தெரு பைரவர்களுக்காக வடித்து வைத்திருக்கிறேன். BREADம் வாங்கி வைத்திருக்கிறேன். 11 மணிக்குமேல் லயாக்குட்டி பள்ளிக் கூடத்தில் இருந்து வந்ததும் அவள் கையாலேயே பைரவர்களுக்கு சாதம் போடச் சொல்லப் போகிறேன். தாத்தா சாய்ராம் பைரவர்களுக்கு அன்னம் இடுவதைப் பத்தி ரொம்ப சிலாகிச்சு சொல்லிவார்.//

      மிகவும் நல்லதுதான்.

      பைரவருக்கு நாம் அன்னமளித்தால் நம் கைகால்கள் உறுதியாக இருக்கும் என்றும் சொல்லுவார்கள். என் மாமியார் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.

      >>>>>

      நீக்கு
  43. //கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா.
    தொடரும்//

    இங்கயும் தொடருமா? இந்தக் காவேரிக் கரையில வளர்ந்தவாளுக்கு இந்த குசும்பு மட்டும் போகவே போகாதே.

    இந்த மீனாட்சி பாட்டிக்கு மகா பெரியவா அருள் புரிந்ததை ஏற்கனவே படித்திருக்கேன். ஆனா எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 23, 2015 at 10:03 AM

      **கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா.
      ........தொடரும்.........**

      //இங்கயும் தொடருமா? இந்தக் காவேரிக் கரையில வளர்ந்தவாளுக்கு இந்த குசும்பு மட்டும் போகவே போகாதே.//

      அன்புத்தங்கை ஜெயாவின் குசும்புகளில் 1% ஆவது அண்ணாவாகிய கோபுவுக்கும் இருக்காதா என்ன? :)

      //இந்த மீனாட்சி பாட்டிக்கு மகா பெரியவா அருள் புரிந்ததை ஏற்கனவே படித்திருக்கேன். ஆனா எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது. //

      முதல்முறை நான் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாகி அப்படியே ஆனந்தக்கண்ணீரே வந்துவிட்டது.

      தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  44. இந்த கத நல்லாருக்குது. இதுபோலலா கதயிலதா நடக்கும்

    பதிலளிநீக்கு
  45. மீனாட்சி பாட்டி பெரியவாளே கதின்னு முழுமையா நம்பி வந்தா. பேத்தி கல்யாணத்திற்கும் வழிகாட்டினார்.

    பதிலளிநீக்கு
  46. கேளுங்கள் தரப்படும்!!! உண்மை சம்பவத்தையும் சுவாரசியத்தொடராக்த் தருவது வாத்யாரலதான் முடியும்..

    பதிலளிநீக்கு
  47. இது 'கேளுங்கள் தரப்படும்' இல்லை. அந்தப் பெண்ணுக்குப் ப்ராப்தம் இருந்தது. அவளின் பாட்டி என்னதான் பக்தியாக இருந்தாலும், விசுவாசம் ஒரு மாத்துக் குறைவுதான். பக்தியைவிட பணத்தில் ஒரு மாற்று அதிகம் ஆசை வைத்திருந்தாள்.

    ஆசாரியன், குற்றத்தைப் பொருட்படுத்தாமல், குணத்தைமாத்திரம் எடுத்துக்கொண்டு தன் அருளைத் தந்துள்ளார்.

    |இன்னிக்கு நீயும் ஒம் பேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ"

    படிக்கும்போது மனது நெகிழ்வதுபோல் எழுதியுள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் September 29, 2016 at 6:47 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இது 'கேளுங்கள் தரப்படும்' இல்லை. அந்தப் பெண்ணுக்குப் ப்ராப்தம் இருந்தது. அவளின் பாட்டி என்னதான் பக்தியாக இருந்தாலும், விசுவாசம் ஒரு மாத்துக் குறைவுதான். பக்தியைவிட பணத்தில் ஒரு மாற்று அதிகம் ஆசை வைத்திருந்தாள்.//

      பொதுவாக அது நம் மனித சுபாவம் மட்டுமே.

      //ஆசாரியன், குற்றத்தைப் பொருட்படுத்தாமல், குணத்தைமாத்திரம் எடுத்துக்கொண்டு தன் அருளைத் தந்துள்ளார்.//

      ஆமாம். மிகச் சரியாகவே உணர்ந்து சொல்லியுள்ளீர்கள்.

      **இன்னிக்கு நீயும் ஒம் பேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ"**

      //படிக்கும்போது மனது நெகிழ்வதுபோல் எழுதியுள்ளார்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு