என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 25 ஜூலை, 2011

ஊரைச்சொல்லவா!! பேரைச்சொல்லவா!!

என் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது:



இப்ப இந்த பதிவை தொடர 
          ரமா http://maduragavi.blogspot.com/
          அரசன் http://karaiseraaalai.blogspot.com
          இராஜராஜேஸ்வரி http://jaghamani.blogspot.com/
          வை .கோபாலக்ருஷ்ணன் http://gopu1949.blogspot.com/
          இவர்களையும் அழைக்கிறேன் .

angelin [காகிதப்பூக்கள்]

                   

அழைப்பிற்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறேன் vgk 

==========================================================



திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலிலிருந்து 
உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பாதை
(அருகில் இருப்பது மணிக்கூண்டு)




மலைக்கோட்டை நகரமாம்

திருச்சிராப்பள்ளி



தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஊர். புண்ணிய நதியாம் காவிரி பாயும் ஊர். நான் ஊன்றிப் பார்த்துவரும் கடந்த ஐம்பது ஆண்டுகளில், நாளுக்கு நாள் நல்ல பல வளர்ச்சிகளைக் கண்டு வரும் ஊர். தமிழ்நாட்டின் சரித்திரம், கலை, கலாச்சாரம், ஆன்மீகம், ஆலயங்களுக்கு கீர்த்திமிக்க ஒரு மையமே திருச்சி எனப்படும் திருச்சிராப்பள்ளி நகரம்.

ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலும், ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வரர் கோயிலும், அதன் அழகிய தெப்பக்குளமும், அதன் மாபெரும் நந்தி கோயிலும், அடிவாரத்தில் படிவாசல் பிள்ளையார் என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீ மாணிக்க விநாயகர் சந்நதியும் மிகவும் பிரபலமானவை.  [இந்த சிவன்கோயிலை தூய தமிழில் “அருள்மிகு மட்டுவர் குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானவர் கோயில்” என்று அழைக்கிறார்கள்]


இந்த மலைக்கோட்டைக்கு அருகேயுள்ள சின்னக்கடைத்தெரு, பெரியகடை வீதி, NSB Road (நேதாஜி சுபாஷ் சந்த்ரபோஸ் ரோடு) ஆகியவற்றில் கிடைக்காத தங்கமோ, வைரமோ, வெள்ளியோ, பித்தளைப்பாத்திரங்களோ, வெங்கலப்பாத்திரங்களோ, அலுமினிய, எவர்சில்வர், பிளாஸ்டிக் சாமான்களோ, ஜவுளிகளோ, மருந்துகளோ, நாட்டு மருந்துகளோ, ஆயுர்வேத மருந்துகளோ, செயற்கை வைரங்களோ, இதர மளிகை காய்கறி, கனி வகைகளோ, சாப்பாடோ, டிபனோ, காஃபியோ, டீயோ. தீனியோ, கூல் டிரிங் ஐஸ்க்ரீமோ, பாய் படுக்கை தலையணி, மெத்தை, ஃபர்னிச்சர் சாமான்களோ உலகில் வேறு எங்குமே கிடைக்காது என்று தலையில் அடித்து சத்தியம் செய்யலாம்.  அந்த அளவுக்கு குடும்பத்திற்கு வேண்டிய அனைத்துப்பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் வணிக வளாகங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாகும்.


இந்த மலைக்கோட்டையின் உச்சியிலிருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயிலிருந்து பார்த்தால் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), திருவானைக்காவல், காவிரி ஆறு, பசுமை வயல்கள், எழில்மிகு திருச்சி நகரம் ஆகியவை நம் கண்களுக்கு விருந்தாகும்.


மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சோழர்கள், பல்லவர், பாண்டியர், மராட்டியர், நாயக்கர் மன்னர்களின் கட்டடக்கலைத் திறனுக்குச் சான்று. மகேந்திரவர்மனால் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலும் இங்கே இருக்கிறது.


திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை பாறையின் வயது 3500 மில்லியன் (350 கோடி) ஆண்டுகள் ஆகும் என புவியியல் ஆய்வு மதிப்பிடுகிறது. தமிழக கட்டடக்கலையின் தனிச்சிறப்புக்குச் சான்றாக நிற்கும் இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு கொடும்பலூரிலிருந்து கற்களைக் கொண்டு வந்ததாக அறியப்படுகிறது.


இலங்கை மன்னன் இராவணனின் தம்பியான திரிசரன் ஆட்சி நடத்தி இந்த இறைவனை வழிபட்டு பேறுகளை அடைந்ததால் திருசிராமலை என்று பெயர் வந்ததாகவும், சிரா என்ற முனிவர் வாழ்ந்ததால் சிராப்பள்ளி எனப்பட்டதாகவும் பெயர்க்காரணங்கள் கூறப்படுகின்றன.


திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், தாயுமானவ அடிகள் என சைவசமயக்குரவர்கள் போற்றிப்பாடிய சிறப்புக்கு உரியது இந்தத் திருத்தலம்.


இரத்னாவதி என்ற வணிகர் குலப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அந்தப்பெண்ணின் தாயார் காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து இங்கே வந்தபோது, காவிரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியதால் திருச்சிராப்பள்ளிக்கு வர முடியவில்லை. பிரசவ வலியால் துடித்த இரத்னாவதிக்கு அவரது தாயைப்போல உருமாறிய மலைக்கோட்டை ஈசனே சென்று பிரசவம் பார்த்து உதவினார் என்பதால் தாயுமானவர் [தாயும் + ஆனவர்] என்று பெயர் பெற்றதாக வரலாறு குறிப்பிடுகிறது.


இன்றும் தாய்மைப்பேறு அடைந்த பெண்மணிகள் தங்களின் பிரஸவம் அதிக சிரமம் இல்லாமல் இருக்க வேண்டி, இந்த இறைவனை மனதில் நினைத்து ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் தினமும் சொல்வது வழக்கம். அதை பிறகு தனியாக ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.   


இந்த மலைக்கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க சுமார் 200 படிகள் ஏறிப்போக வேண்டும். மலைமீது எல்லையில்லா ஆனந்தம் காத்திருக்கும் நமக்கு.  


பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் மலைக்கோட்டைப் பாறைகளுக்கு மத்தியில் இந்த சிவன் (தாயுமானவர்) கோயிலைக்கட்டியதாக தமிழக வரலாறு குறிப்பிடுகிறது. பிரிட்டிஷ் நூலகத்தில் திருச்சி மலைக்கோட்டை பற்றிய அரிய ஓவியங்களும், புகைப்படங்களும் கொண்ட நூல்கள் உள்ளன.


பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மதில் சுவர்களும், அகழிகளும், தர்பார் மண்டபங்களும், திருச்சி கோட்டையின் கண்கவர் கலை நுட்பங்களுக்குச் சான்றுகளாகும்.










திருச்சியின் மற்றுமொரு சிறப்பு கல்லணை. நதியின் குறுக்கே கட்டப்பட்ட, உலகில் முதலாவது அணையே இந்த திருச்சியில் உள்ள கல்லணை தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்) என்ற மன்னரே, அந்தக் காலத்திலேயே அதிசயிக்கத்தக்க தொழில் நுட்பங்களுடன், இன்றும் அசையாத உறுதி கொண்ட இந்த கல்லணையைக் கட்டினார்.



2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்லணையின் அடிப்படைக் கட்டுமானம் அப்படியே இன்னும் நிலைத்திருக்கிறது.புதிப்பிப்பதும், பராமரிப்பதும் மட்டுமே அவ்வப்போது நடைபெறுகிறது. காலத்தால் அழியாத உறுதிமிக்க கல்லணையின் கட்டுமான தொழில்நுட்பம், தண்ணீர் மற்றும் மணல் குறித்த அறிவியல் அறிவு, தமிழர் தம் திறனுக்கு வியப்பூட்டும் ஒரு அதிசய சான்றாகும். 

இராமாயண காவியத்தைக் கவிச்சக்கரவர்த்தியான கம்பர் அரங்கேற்றியது, திருச்சியின் ஒரு பகுதியான ஸ்ரீரங்கத்தில் தான்.

திருச்சி மாவட்டத்தின் திருவள்ளரை மொட்டை கோபுரமும், ’ஸ்வஸ்திக்’ கிணறும் அதிசயிக்கத்தக்கவை.




குணசீலம் பெருமாள்


மேற்படி குணசீலம் பெருமாளை ஓவியமாக வரைந்துள்ளவர் 
நம் நண்பர் திரு. பட்டாபி ராமன் அவர்கள்
E-mail ID : vijayakoti33@gmail.com
Blog: http://tamilbloggersunit.blogspot.in {RAMARASAM}


உத்தமர் கோயில் மும்மூர்த்தி ஸ்தலம். 
இங்கு ப்ரும்மா + சரஸ்வதிக்கு தனி சந்நதிகள் உண்டு என்பது சிறப்பு



திருவானைக்காவல் கோபுரங்கள்


ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ ஜம்புநாதர், திரு ஆனைக்கா
பஞ்சபூதங்ளில் ஒன்றான நீருக்கான கடவுள்



தூய தமிழில் திருவரங்கம் என அழைக்கப்படும் 
ஸ்ரீரங்கம் இராஜகோபுரம்



சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் [ மஹமாயீ]






குமார வயலூர் ஸ்ரீ முருகன் கோயில் நுழைவாயில்



திருச்சியிலுள்ள குணசீலம் [பெருமாள் கோயில்], உததமர்கோயில் [மும்மூர்த்தி ஸ்தலம்], சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் (பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று), ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், வயலூர் முருகன் முதலியன மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களாகும்.  


திருச்சி நீதி மன்றம் அருகே அமைந்துள்ள ஐயப்பன் ஆலயம் அனைவரும் அவசியம் போய் பார்க்க வேண்டிய ஒன்று.  கோயில் என்றால் எப்படித் தூய்மையாக இருக்க வேண்டும்; எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்று போதிக்கும் இடமாக உள்ளது. பல்வேறு சமுதாய நலப்பணிகளும் செய்து வருகிறார்கள். இங்கு ஒருமுறை சென்று வந்தால் மன அமைதி கிட்டுவது நிச்சயம். கையில் ஒரு பைசாகூட இல்லாமல் இறைவனை தரிஸித்து வரலாம். பணம் நாம் கொடுத்தாலும் யாரும் வாங்க மாட்டார்கள். விருப்பம் உள்ளவர்கள் உண்டியலில் மட்டுமே காணிக்கை செலுத்த முடியும்.  கண் தானம் உறுப்புகள் தானம் செய்ய விரும்புபவர்கள் இந்தக் கோயிலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம். ஞாயிறு தோறும் குழந்தைகளுக்கு பாலவிஹார் என்ற பெயரில் தேவாரம், திருவாசகம் முதலியன சொல்லித்தரப்படுகிறது. கோயிலுக்குச் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் முன்பே சுத்தம் .. சுத்தம் .. படுசுத்தம் ஆரம்பமாகிவிடுகிறது. கோயில் நிர்வாகமே சுத்தமாகப் பராமரித்து வருகிறது. மொத்தத்தில் திருச்சியிலேயே சபரிமலை .... ஆனால் படு சுத்தமாக .... சப்தம் ஏதும் இல்லாமல் ... பேரமைதியாக.


சிவன் தலைக்குமேல் வெய்யில் அடிக்காத வண்ணம் ஒரு சிலந்தி தினமும் வலைபிண்ணி அழகாக குடைபோல கூடு கட்டுமாம். அதே சிவனுக்கு அபிஷேகம் செய்ய நினைக்கும் ஒரு யானை தன் துதிக்கையில் நீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின் தலையில் ஊற்றும் போது அந்த சிலந்தி அரும்பாடுபட்டுச் செய்த வலை அறுந்து போகுமாம். கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து அதைக்கடித்துப் புண்ணாக்கி அந்த மிகப்பெரிய யானையையும் கொன்று தானும் இறந்ததாம்.






திருவானைக்கா சிவனை பூஜித்த யானையும் சிலந்தியும்



தனக்கு சேவை செய்த இரு பக்தர்களையும் உயிர்பெறச்செய்து மோட்சம் அளித்தாராம் சிவபெருமான். இது திருச்சி ’திருவானைக்கா’ என்ற பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான [ஜலத்திற்கான க்ஷேத்ரமான] ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ ஜம்புநாத ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்றதாக ஒரு ஸ்தல புராண வரலாற்றுக்கதை கூறுகிறது. 


யானை போன்ற மிகப்பெரிய விலங்கு மட்டுமல்லாமல் சிலந்தி போன்ற சிறிய ஜந்துவையும் ஆட்கொண்ட ஈஸ்வரன், எறும்புகளுக்குக்கூட தனது மேனியில் ஊர்ந்து விளையாடி மகிழ வாய்ப்பளித்ததாக, திருச்சி-தஞ்சை சாலையில் திருச்சியிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவெறும்பூர் அருகேயுள்ள எறும்பேஸ்வரர் மலைக்கோயில் வரலாறு கூறுகிறது.   






திருச்சி திருவெறும்பூர் எறும்பேஸ்வரர் மலைக்கோயில்

-o-oOo-o-

”மணப்பாறை மாடு கட்டி .... மாயவரம் ஏறு பூட்டி ....
வயக்காட்ட உழுது போடு ... செல்லக்கண்ணு .....”


என்ற சினிமாப்பாடல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா! அந்த மணப்பாறையும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்ததுதாங்க. ஒவ்வொரு புதன் கிழமையும் இங்கு மாட்டுச்சந்தை கூடுகிறது.காளை மாடுகள்,கறவைப்பசுக்கள், கன்றுக்குட்டிகள், எருமைகள் என, பல ஊர்களிலிருந்து லாரிகளில் வந்திறங்கும் சுமார் 5000 மாடுகள் வாராவாரம் சந்தையில் விற்கப்படுகின்றன.







அதுபோல திருச்சி-மணப்பாறை முறுக்கு ரொம்ப ஃபேமஸ் ஆனதுங்க! மணப்பாறையின் பல குடும்பங்கள் பாரம்பர்யமான இந்த முறுக்குத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.  இவை உள்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி அரேபியா, பிரான்ஸ், ரோம் போன்ற பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மணப்பாறை நிலத்தடி நீர் சற்று உப்புச்சுவை உள்ளது. அதனால் தான் எங்கள் மணப்பாறை முறுக்குகளுக்கு அவ்வளவு ருசி, என்கிறார், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறுக்குத் தயாரிப்பைக் குடும்பத் தொழிலாகவே செய்து வரும் துரைசாமி என்பவர். 


முக்கொம்பு முதல் கல்லணை வரை காவிரி நதிக்கரையோரமே கண்கொள்ளாக் காட்சிகள் கொண்ட சுற்றுலாப்பகுதியாகும். காவிரி ஆறு திருச்சிக்கு அழகும் வளமும் சேர்க்கிறது.









மேலணை எனப்படும் முக்கொம்பு [காவிரி நதி மூன்றாகப் பிரியுமிடம்]

-o-o-O-o-o-




வீரப்பூரும், வளநாடும், மணப்பாறையும், துறையூரும், திருப்பஞ்சீலியும், சமயபுரமும், திருவானைக்காவலும் நெடிய சமூக - வரலாறு - கலாச்சாரப் பண்புகளைக்கொண்ட பகுதிகளாகும்.



திருச்சி மாவட்டத்தில் வழங்கப்படும் பொன்னர்-சங்கர் வரலாற்றுக் கூத்துகளும், பாட்டுக்களும், நாட்டுப்புறக்கலைகளின் மேன்மை மிகு வெளிப்பாடாகும். பல்வேறு வகையான கதை சொல்லும் விதங்களுக்கு பொன்னர்-சங்கர் வரலாறு ஒரு வியத்தகு சான்றாகும்.  


’மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர், ந.மு.வெங்கடசாமி நாட்டார், “கல்கி” கிருஷ்ணமூர்த்தி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, அகிலன், ‘திருவாசகமணி’ கே.எம். பாலசுப்ரமணியன், கி.வா. ஜகன்நாதன், புலவர் கீரன், ’கவிதாமணி’ அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார், டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், எழுத்தாளர்கள் ராஜம் கிருஷ்ணன், பிரேமா நந்தகுமார், ஐராவதம் மஹாதேவன் போன்ற கீர்த்தி மிக்க அறிஞர்களுக்கு திருச்சிராப்பள்ளியுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.


இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த முதல் சினிமா படத்தில் அவருடன் சேர்ந்து கதாநாயகனாக நடித்த எப்.ஜி. நடேச அய்யர் திருச்சியைச் சேர்ந்தவர்.


திருச்சி மாவட்டத்தில் பரவியிருக்கும் தமிழ்ப்பண்பாட்டின், வாழ்க்கை முறைகளின், கலைகளின் வெளிப்பாடாகவே, பெண்களின் நிலாக்காலக் கும்மிப்பாட்டுகள், தாலாட்டுக்கள், ஒப்பாரிகள், வயல் பாட்டுக்கள், கிராமிய நடனங்கள், நாடகங்கள், கரகாட்டம், தேவர் ஆட்டம், மயில் ஆட்டம், ஒயில் ஆட்டம், சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டுகள் போன்ற வீர விளையாட்டுக்கள் முதலியன விளங்குகின்றன.





திருச்சி இதயப்பகுதியான மெயின்கார்ட்கேட் அருகே அமைந்துள்ள
  மிகப்பழமை வாய்ந்த மிக உயரமான கிறிஸ்தவ தேவாலயம்





திருச்சியில் மிகப்பரபரப்பான பெரியகடைவீதியில் உள்ள செளக் பகுதியில் அமைந்துள்ள முகமதியர்கள் தொழும் பழமையான மசூதி.


இந்துக்கோயில்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவ தேவாலயங்களும், முஸ்லீம் மசூதிகளும் நிறைந்து வலுவான மதப்பிண்ணனி கொண்ட திருச்சியில் மதக்கலவரங்கள் ஏதும் ஏற்படுவதில்லை. மத நல்லிணக்கமும், அமைதியும் தவழும் அழகிய நகரமே திருச்சி.


சர்வ தேச விமான நிலையம், ரயில் நிலையங்கள், 24 மணி நேர வெளியூர் மற்றும் உள்ளூர் டவுன்பஸ் வசதிகள், இரவு நேர உணவு விடுதிகள், டாக்ஸி, ஆட்டோ, தங்கும் வசதிகள் கொண்ட மிகச்சிறந்த லாட்ஜ்கள், பசிக்கும் ருசிக்கும் பல உணவகங்கள் என்று அனைத்து வசதிகளும் உள்ள ஊர் திருச்சி. 


தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர நாயகனான எம்.கே.தியாகராஜ பாகவதரை முதன் முதலாக நாடக மேடையில் ஏற்றியது (ஹரிச்சந்திரா) எங்கள் ஊரான திருச்சியே.


சிறந்த நடிகையும் முதல் பெண் இயக்குனருமான டி.பி.ராஜலட்சுமி, டி.ஏ. மதுரம் ஆகியோரும் திருச்சியில் வாழ்ந்தவர்களே. திருச்சி ஸ்ரீரங்கம் நவாப் இராஜ மாணிக்கம் நாடக மேடைகளில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.




நடிகர் திலகம், நவரசத்திலகம் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, ஹேமமாலினி, அசோகன், ரவிச்சந்திரன், ப்ரஸன்னா, திருச்சி லோகநாதன், எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, எம்.எம்.மாரியப்பா, லால்குடி ஜயராமன், கவிஞர் வாலி போன்ற அநேக கலைஞர்களை கலைத்துறைக்குத் தந்தது திருச்சி மாவட்டம்.




Sir C V Raman, The Great Scientist of India


நோபல் பரிசுபெற்ற அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன், திருச்சி திருவானைக்காவலில் பிறந்தவர். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், எழுத்தாளர்கள் திருலோக சீதாராம், சுஜாதா, மணவை முஸ்தபா, ‘நாதஸ்வரச்சக்ரவர்த்தி’ ஷேக் சின்ன மெளலானா, தமிழ் மொழியில் தந்தியைக்கண்டறிந்த சிவலிங்கம், இசை மேதை ’சங்கீதக் கலாநிதி’ ஏ.கே.சி. நடராஜன், ‘கலைமாமணி’ ரேவதி முத்துசாமி, நாடக இயக்குனர் ‘கார்முகில்’ முத்துவேலழகன், நடிகை டி.என்.மங்களம், மிருதங்க வித்வான் தாயுமானவன், வாய்ப்பாட்டு சம்பா கல்குரா ஆகியோரும் திருச்சி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் அடையாளங்கள்.


ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்பாடல்களை இயற்றி சாதனை புரிந்த மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் திருச்சி (அதவத்தூர்). சுதந்திரப்போராட்ட வீரரும், இராமாயணத்தை ஆங்கிலத்தில் தந்தவருமான வ.வே.சு. அய்யர் வாழ்ந்ததும் திருச்சி (வரகனேரி) தான்.


பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்திற்கு நிலம் வழங்கி, அடிக்கல் நாட்டி, 1961 இல் கட்டடத்தைத் திறந்து வைத்து ஆதரவு காட்டினார்.    


தந்தைப் பெரியாரின் சுயமரியாதை நிறுவனம் மையம் கொண்டிருப்பதும் திருச்சியில் தான்.


காவிரியும், மலைக்கோட்டையும் திருச்சிக்குப் புராதனப் பெருமை என்றால், உலகப்புகழ்பெற்ற பாரதமிகுமின் நிறுவனம் [BHEL], படைக்கலன் தொழிற்சாலை [Small Arms Project - Ordnance Factory] , பொன்மலை ரயில்வே பணிமனை [Golden Rock Railway Workshop] முதலியன நவீன வளர்ச்சிக்குச் சான்றாகும்.






அனல் மின் நிலையங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் யாவும் திருச்சி BHEL மூலம் செய்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலேயுள்ள படத்தில் இருப்பது High Pressure Boiler Drum எனப்படும் ஒரு பாகம் மட்டுமே. இதன் எடை மிகவும் அதிகம். இதை தரை வழியாகப் பாதுகாப்பாக எடுத்துச்செல்ல சுமார் 80 க்கும் மேற்பட்ட டயர்கள் உள்ள ட்ரைலர் லாரி தேவைப்படுகிறது. இது அனல் மின் நிலையம் அமைக்கத்  தேவைப்படும் பல்வேறு பொருட்களில் ஒரு மிகச்சிறிய Component மட்டுமே, என்றால் அதன் மற்ற அனைத்து பாகங்களையும் ஒட்டுமொத்தமாக நீங்களே கற்பனை செய்துகொள்ளவும்.


தமிழகத்தின் நான்கு வகை நிலப்பகுதிகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அனைத்து வகை நிலப்பகுதிகளையும் கொண்ட இயற்கையின் அற்புதப் படைப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம்.


பல்வேறு புகழ்பெற்ற கல்வி ஸ்தாபனங்களையும், ஆண்கள் பெண்கள் கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி, பல்கலைக்கழகங்கள், மிகச்சிறந்த மருத்துவ மனைகள், நீதி மன்றம் போன்ற அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளது இந்தத் திருச்சி மாநகரில்.  




முன்னால் குடியரசுத்தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்கள் படித்த கல்லூரியான செயிண்ட் ஜோஸப் ஆண்கள் கல்லூரி,  தேசியக்கல்லூரி [National College] பிஷப் ஹீபர் ஆண்கள் கல்லூரி, ஜமால் முகமது ஆண்கள் கல்லூரி,  ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி, சீதாலட்சுமி ராமஸ்வாமி பெண்கள் கல்லூரி,  ஸ்ரீமதி இந்திராகாந்தி பெண்கள் கல்லூரி முதலியன திருச்சியில் பல்லாண்டுகளாக புகழ்பெற்று விளங்கி வருபவையாகும். 





Mrs. Jayashree Muralidharan, Hon'ble District Collector of Tiruchi


Mrs. S. Sujatha, Hon'ble Mayor of Tiruchirapalli Municipal Corporation



Dr. K. Meena, Hon'ble Vice-Chancellor of Bharathidasan University, Tiruchi 




திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் (கலெக்டர்), திருச்சி மாநகர கார்ப்பரேஷன் மேயர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்துணை வேந்தர் முதலிய முக்கியப்பதவிகளை இன்று வகிப்பவர்கள் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.








எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல, சமீபத்திய தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ’அ.இ.அ.தி.மு.க.’ பொதுச்செயலாளரான செல்வி. ஜெயலலிதா அவர்கள், தன் கட்சியின் அமோக வெற்றியால் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது, திருச்சி வாழ் மக்களுக்கும், குறிப்பாக ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கும் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக உள்ளது.


-o-oOo-o-




திருச்சிராப்பள்ளி சந்திப்பு
புகைவண்டி நிலையம்



வெள்ளைக்காரர் காலத்திலிருந்து இன்றுவரை திருச்சி ஜங்ஷன் புகைவண்டி நிலையம் தென்னிந்திய ரயில்வே நிலையங்களிலேயே மிகவும் தூய்மையானது, வசதிகள் நிறைந்தது, வெகு அழகாக வடிவமைக்கப்பட்டது என்ற பெருமைகளை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளது.


பிரதான சாலையிலிருந்து ரெயில் நிலையத்திற்குள் செல்லும் நுழைவாயிலில் உண்மையான ரயில் எஞ்ஜினையே நிறுத்தி வைத்து சமீபத்தில் சாதனை புரிந்துள்ளார்கள். இது இந்த ரெயில் நிலையத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுவதாக உள்ளது. 




The Train Engine displayed on the main road in between 
Tiruchi Railway Station and the Central Bus Stand.




திருச்சிக்கு வாருங்கள்!


அனைத்தையும்


திகட்டாமல் பாருங்கள்!!






என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

100 கருத்துகள்:

  1. திருச்சி அழகோ அழகு! திருச்சியைச் சேர்ந்த எனக்கே சுத்திப் பார்க்கணும்னு தோன்றுகிறது உங்கள் பதிவைப் படித்த பிறகு!!

    பதிலளிநீக்கு
  2. திருச்சிக்கு பலமுறை வந்திருக்கிறேன். விரிவான பதிவு. சிறப்பாகத் தொகுப்பட்ட படங்கள், தகவல்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தமிழகத்தில் மதுரைக்கு அடுத்தபடியாக, எனக்குப் பிடித்த நகரம் திருச்சி! சமயபுரம் மகமாயியைப் பற்றி சென்ற வெள்ளிக்கிழமைதான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அருமையான, பல விவரங்களுடனான இடுகை! நன்றி

    பதிலளிநீக்கு
  4. அழகான புகைப்படங்களுடன் ஊர் பற்றி சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. சிறுவயதில் திருவரங்கத்திற்கு வந்து மார்கழி மாதம் முழுவதும் தங்கி அனைத்து இடங்களையும் பலமுறை தரிசித்திருக்கிறோம்.

    மற்ற 11 மாதங்களும் அடுத்த மார்கழி எப்போது வரும் என்று ஏங்கியிருப்போம்.

    தங்கள் பகிர்வின் மூலம் மீண்டும் தரிசனம் பெற்றோம். மகிழ்ச்சி நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஊரைச்சொல்லவா!! பேரைச்சொல்லவா!!"

    பேர் சொல்லும் அசாதாரணமான அருமையான பகிர்வு.. பலமுறை படிக்கத்தூண்டும் அற்புதப்படைப்பு.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. @திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலிலிருந்து உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பாதை//

    பார்க்கும்போதே அங்கு அடிக்கும் காற்று மனதில் வாசம் வீசுகிறது.

    பதிலளிநீக்கு
  8. மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் //
    திருவாதிரை அன்று ஒருமுறை கோலாகலத்திருவிழாவில் கலந்துகொள்ளும் பேறுகிடைத்தது அருமையானது.
    வாத்சல்யமான மாத்ருபூதேஸ்வரரும், மாணிக்கவிநாகரும், சந்தோஷிமாதாவும் சந்தோஷம் கொள்ள வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  9. திருச்சி மாவட்டத்தின் திருவள்ளரை மொட்டை கோபுரமும், ’ஸ்வஸ்திக்’ கிணறும் அதிசயிக்கத்தக்கவை.
    அந்தக்குளத்தில் ஒருகரையில் குளிப்பவர்களை இன்னொருகரையிலிருந்து பார்க்கமுடியாத அற்புத வடிவமைப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுபோல தங்கள் பதிவும் அருமையானது. ஆச்சரியப்படுத்தியது.
    காவிரித்தண்ணீர தங்களை வளப்படுத்தியுள்ளது.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் பொறுமையாக அதே நேரம் மிகுந்த உற்சாகத்துடன் அத்தனை தகவல்களையும் திரட்டி பதிவாக வெளியிட்டமைக்கு முதலில் என் பாராட்டுகள் !!

    படங்களும், பகிர்ந்த தகவல்களும் திருச்சி பற்றி தெரியாத எனக்கு மிகவும் நிறைவை கொடுத்தன...

    திருச்சினா மலைகோட்டை , மணப்பாறை முறுக்கு மட்டும் தான் இதுவரை கேள்வி பட்டு இருக்கிறேன்... இந்த பதிவை படித்த பிறகு கண்டிப்பா திருச்சிக்கு சென்று இங்கே குறிப்பிடபட்ட இடங்களை எல்லாம் பார்க்கணும் என்று முடிவே பண்ணிவிட்டேன்.

    அருமையான விரிவான பகிர்வுக்கு என் நன்றிகள் + வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. திருசியில் நான் 1971 முதல் 1974 வரை இருந்தேன்
    அப்போதெல்லா ம் கோர்ட்டிலிருந்து ஜங்சன் வரையும்
    ஜங்சனிலிருந்து பாலக்கரை வரையும் தனியாக வருவது
    கஷ்டம்.அப்படி வெறிச் சோடிக்கிடக்கும்
    இப்போது அதனுடைய அசுர வளர்ச்சி கண்டு
    பிரமித்துப்போனேன்
    ஒரு தலை நகர் ஆவதற்குரிய அனைத்து தகுதிகளும் கொண்ட
    இத்தனை பெரிய நகரை விடுதல் ஏதும் இல்லாமல் சொல்வதென்றால்
    எத்தனை கடினம்.அதை மிக அழகாகச் செய்த உங்களை
    எவ்வளவு பாராட்டினாலும் தகும்
    எதைசெய்தாலும் நிறைவாகவும் சிறப்பாகவும்
    செய்யும் தங்களைத்தான் நான் பதிவுலகில்
    முன் மாதிரியாகக் கொண்டுள்ளேன்
    சிறப்பான பதிவினைத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. காவிரி ஒன்றே போதுமே அய்யா ஊரின் சிறப்பைச் சொல்லுதற்கு..

    அருமையான தகவல்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. என் வேண்டுகோளை ஏற்று திருச்சி பற்றிய வியத்தகு தகவல்கள் .இல்லை இல்லை தகவல் களஞ்சியம் பகிர்வுக்கு மிக்க நன்றி ..திருமணத்திற்கு முன்பு SLET எக்ஸாம்ஸ் எழுத அங்கே வந்தேன் .அப்ப சரியா சுற்றி பார்க்க முடியவில்லை .அருமையான பதிவு மற்றும் படங்கள் .மிக்க நன்றி .
    நான் அறிந்தது மலைகோட்டை மற்றும் மணப்பாறை முறுக்கு மட்டுமே .
    மீண்டும் மிக்க நன்றி எங்களை திருச்சிக்கு அழைத்து சென்றதற்கு .
    எங்கள் டூர் லிஸ்டில் கண்டிப்பாக திருச்சி இந்த முறை உண்டு .

    பதிலளிநீக்கு
  14. மிக அருமையான, அரிய விவரங்கள் கொண்ட கட்டுரை. மற்றுமொரு திருச்சி பெருமை: மியூசிக் அகடமியின் மிகப் பெரிய சங்கீத விருது, 'சங்கீத கலாநிதி' பெறுவதற்காக - இந்த வருடம் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பவர், திருச்சி சங்கரன் என்கிற மிருதங்க வித்வான்.

    பதிலளிநீக்கு
  15. ஒவ்வொரு வருடமும் திருச்சி வந்து செல்லும்போது, ஏதோவொரு முன்னேற்றத்தைக் காண முடிகிறது.என் வாழ்வின் பெரும்பகுதியை திருச்சியில் செலவிட்ட எனக்கே இவ்வளவு தகவல்களும் தெரிந்திருக்க வில்லை.ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியும், ஸ்ரீரங்கதைச் சேர்ந்த கவிஞர் வாலி பற்றியும் கூறியிருக்கலாமோ.?பாராட்டுக்கள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  16. திருச்சியைப் பற்றின ஒர் முழுமையான பகிர்வு சார். (பெல் பற்றி குறிப்பிட்டிருக்கலாம். அப்புறம் ஏர்போர்ட் கூடவும்..)

    ஆனால் நிறைய விவரங்கள் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. ஐயா, உங்கள் வர்ணணை மற்றும் படங்கள் மூலம் திருச்சியை சுற்றி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.திருச்சி மாவட்டத்தை பற்றிய பெரிய தகவல் களஞ்சியமே படித்தது போல இருந்தது. அருமையாக இருக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  18. திருச்சி படங்களுடன் நிறைவான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  19. ஒருமுறை திருச்சிக்கு வந்து தாயுமானவரையும் புள்ளையாரையும் தரிசிக்க பாக்கியம் கிடைச்சதையே இன்னும் பெருமையா நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  20. ஒருமுறை திருச்சிக்கு வந்து தாயுமானவரையும் புள்ளையாரையும் தரிசிக்க பாக்கியம் கிடைச்சதையே இன்னும் பெருமையா நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  21. திருச்சி எனக்கு பிடித்த ஊர். திருமணம் முடிந்து முதன்முதலில் என்னை என் கணவர் அழைத்துச் சென்றது கல்லணைக்குத் தான்.

    தாயுமானவர் கோயிலில் சுகப்பிரசவம் ஆனால் வாழைத் தார் கட்டி வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். என் மகளுக்கும் செய்தோம்.

    திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில், திருவெறும்பூரும், ஐயப்பன் கோவிலும் போனதில்லை. அடுத்த முறை நிச்சயம் சென்று வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. காவிரி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் திருச்சியின் அழகை மற்றும் அதன் அத்தனை சிறப்பையும் தெரிந்துக் கொண்டேன்...


    நன்றி...

    பதிலளிநீக்கு
  23. தற்போது தொ்டர்பதிவுகள் அதிகமாக வருகிறது...

    வாழ்த்துக்கள்..
    தொடரட்டும் தாங்கள் அழைத்தவர்கள்...

    பதிலளிநீக்கு
  24. அகிலாண்டேஸ்வரி சின்னஞ்சிறு பெண் போல அந்த ஒன்பது கஜம் புடவையில்.. ஆண்டார்வீதி பஜ்ஜி கடை..இப்பவும் பழமை குறையாமல் இருக்கும் சில பாரம்பர்யமிக்க ஸ்டோர்கள்..ஆதிகுடி அடை அவியல்..ஆனைக் காவிலில் குருக்கள் பெண் வேடம் பூண்டு செய்யும் கண் கொள்ளா கோ பூஜை..சங்கர விலாஸ் ஸ்பெஷல் ரவா....ராபர்ட் க்ளைவ் கட்டிய அந்த காவேரிப் பாலம்....பழைய பத்மா காஃபி..தமிழ் தாத்தா உ.வே.சாமினாதய்யர் வீடு..காங்கிரஸ் தியாகி ஹாலாஸ்யம்...
    சொல்லிக் கொண்டே போகலாம் எங்கள் திருச்சியை!!!

    திருச்சி திருச்சி தான்!!!

    பதிலளிநீக்கு
  25. 'திருச்சியும் நானும்' என்ற தலைப்பில் நானும் எழுதப் போகிறேன்!

    பதிலளிநீக்கு
  26. முப்பது வருடங்களிருக்கும் திருச்சித் தெருக்களில் நடந்து. திருவானைக்காவல் நினைவுகள் நிறைய. கொள்ளிடம் பாலம் போட்டோ கிடைக்கலியா?

    அருமையான தொகுப்பு. ஊர்ப்பெருமை நன்றாக வெளிவருகிறது.

    பதிலளிநீக்கு
  27. எந்தத் தகவலையும் விட்டு விடாமல், அனைத்தையும் தொகுத்து, பிரமிக்கும் வண்ணம் தந்திருக்கிறீர்கள். தனித் தனியாகக் கொஞ்சம் சொஞ்சம் தெரியும் என்றாலும் தொகுக்கப் பட்டு ஒரே இடத்தில் படிக்கும்போது அட அட என்று வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. ஊரைச்சொன்னாலும் பேரைச்சொல்லாதே என்பார்கள்
    ஆனால், தாங்கள் இங்கே
    இரண்டையும் சொல்லி விட்டீர்.
    நான் தமிழகத் தமிழாசிரியர்
    கழகத்தின் மாநிலத் தலைவராக
    பதினைந்து ஆண்டுகள்,ஓய்வு பெறும் வரை இருந்திருக்கிறேன்
    அதுபோது, கணக்கின்றி
    திருச்சியில் நான் வந்து தங்கியிருந்தும்
    காணத பல அழகிய காட்சிகளை
    இப் பதிவின் மூலம் கண்டேன்
    நன்றி! ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  29. தங்களின் ஊரைப் பற்றி பல அறிய தகவல்கள்..
    பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  30. அருமை. ஒரு ரவுண்ட் போய் விட்டு வந்தாச்சு.

    பதிலளிநீக்கு
  31. அருமையான பதிவு...விக்கிபீடியா வில் அப்படியே சேருங்கள்...

    பதிலளிநீக்கு
  32. அன்பின் வை.கோ

    அருமையான உரை - ஊரைப்பற்றியும் பேரைப்பற்றியும். திருச்சி மாநகரத்தினைப் பற்றி - கோவில்கள் - காவிரி நதி - சுற்றுப்புறக் கோவில்கள் - ஐயப்பன் ஆலய சுத்தம் - யானை - சிலந்தி -எறும்பு - சினைமாப்பாடல்கள் - முறுக்கு - அணைக்கட்டு - தமிழறிஞர்கள் - எமெஸ்ஸின் முதல் படக் கதாநாயகன் - கிருத்துவ, இசுலாமிய தேவாலயங்கள் - சினிமாக் கலைஞர்கள் - நோபல் பரிசு பெற்ற மேதை மற்றும் பல்வேறு துறைகளீல் சிறந்து விளங்கிய மேதைகள் - தொழிற்சாலைகள் - நில வளம் - கல்லூரிகள் - முக்கிய மூன்று உயர் பதவிகள் வகிக்கும் பெண்மணீகள் - யப்பா - அசத்திட்டீங்க போங்க - திருச்சி சம்பந்தப்பட்ட யாரையும் - எதனையும் விட வில்லை.

    ஆமா நான் அடிக்கடி ஃபெமினா ஓட்டலில் தங்கி இருக்கிறேனெ - கி.ஆ.பெ பேரன் எங்கள் குடும்ப னருத்துவர். அப்ப என்னப் பத்தி ஏன் எழுதல் - ம்ம்ம்ம்ம்ம்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  33. விரிவான பதிவா இருந்தாலும் சூப்பரா ஊரை சுத்தி காட்டிட்டீங்க ஐயா....!!!

    பதிலளிநீக்கு
  34. இனிமே திருச்சி பத்தி யாராவது விசாரிச்சா உங்களோட இந்த போஸ்ட் லிங்கை தான் அனுப்பி வைக்கப் போறேன். விரிவான தகவல்கள் நிறைந்த அழகான பதிவு!

    பதிலளிநீக்கு
  35. அந்த காவிரியாறு - அகண்ட காவிரியாக, கெண்டையும் கெழுத்தியும் துள்ளியோட, கரையோர மாமரங்களின் புளிக்காத மாங்காய்கள் , ஆடிப்பெருக்கின்போது காவிரி பாலத்தில் இருந்து குதிக்கும் நீச்சல்(?) வீரர்கள் (அலங்காநல்லூர் மஞ்சு விரட்டு போல் பெண்களை கவரும் டைவ் அது)- அட நாங்களும் திருச்சிதான்(by birth) VGK சார். தங்கள் விவரிப்பில் திருச்சி சிறப்பு பெற்றுவிட்டது.

    பதிலளிநீக்கு
  36. நேற்று காலமான நடிகர் ரவிச்சந்திரனுக்குக் கூட சொந்த ஊர் திருச்சிதானாம். செய்தித் தாளில் படித்தேன். அப்புறம் திருச்சி சிவா எம் பி இருக்காரே...!

    பதிலளிநீக்கு
  37. அமர்க்களம் அய்யா
    சகலத்தையும்
    சர்வமாக
    சமமாக
    சக்கரை பொங்கலைப் போல
    பகிர்தமைக்கு
    மனம் மகிழ்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  38. எப்படி இவ்வளவு படங்களைச் சேகரித்தீர்கள்..?

    பதிலளிநீக்கு
  39. பாய்லர் தொழிற்சாலை சார்ந்த பகுதி மற்றும் அது சார்ந்த குடியிருப்பு வளாகம், அங்கே இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மரங்கள், கல்வி வளாகங்கள் முக்கியமா அங்க கிடைக்கும் அமைதியான ஒரு சூழ்நிலை, திட்டமிட்டு வெகு நேர்த்தியாக கட்டப்பட்ட வீடுகள், சாலைகள் என்று பாய்லர் நகரியமே ஒரு முன்மாதிரியா இருக்கும். திருச்சிக்கு வரவங்க அந்த இடத்தையும் பார்க்கலாம். ஒரு நல்ல அனுபவமா இருக்கும். பள்ளிக்காலம் அங்கு தான் கழிந்தது. அத தாண்டினா தேசிய தொழில் நுட்ப கல்லூரி(NIT), துவாக்குடியில் இருக்கக்கூடிய சிறு தொழில் வளாகங்கள்னு இதுவும் சேர்த்துக்கோங்க..வளருது வளருதுன்னு சொல்றாங்க பள்ளிக்காலத்தில் திருச்சி தஞ்சை சாலையில் காட்டூரில் ஆரம்பித்து எரூபீஸ்வரர் கோவில வரையில் இரண்டு பக்கமும் வயல்வெளிகளும், வாழைத்தோட்டங்களும் நிறைந்து இருந்தது. இன்று அனைத்தும் கட்டிடங்களாக மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
  40. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.. திருச்சியை டூர் சுற்றிய அனுபவம் உங்கள் பதிவில்.. எவ்வளவு தகவல்கள்.. அசாத்திய உழைப்பு தெரிகிறது..

    பதிலளிநீக்கு
  41. வணக்கம். மிகவும் அருமையான பதிவு. விரிவாக படங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள். அருமை. உங்கள் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  42. அருமையான பதிவு! நிறைய பொறுமை! அசராத உழைப்பு! எத்தனை எத்தனை செய்திகள் திருச்சியைப்பற்றி! மனங்கனிந்த பாராட்டுக்கள்! படங்கள் எல்லாமே அழகு!
    ஒரு திருத்தம். நடிகர் திலகம் சிவாஜி கனேசன் தஞ்சைக்கருகேயுள்ள 'சூரக்கோட்டை' என்ற ஊரைச் சார்ந்தவர். சிறு வயதில் திருச்சி வந்து நாடக மேடையில் நடிக்க ஆரம்பித்தார் என்பதே சரி.

    பதிலளிநீக்கு
  43. மனோ சாமிநாதன் said...
    //ஒரு திருத்தம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தஞ்சைக்கருகேயுள்ள சூரக்கோட்டை என்ற ஊரைச் சார்ந்தவர். சிறு வயதில் திருச்சி வந்து நாடக மேடையில் நடிக்க ஆரம்பித்தார் என்பதே சரி.//

    வணக்கம் மேடம். தங்கள் வருகைக்கு நன்றி.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்தது மட்டும் விழுப்புரம் மாவட்டம்.

    கலையுலகுக்கு செல்வதற்கு முன்பு வாழ்ந்தது எல்லாம் எங்கள் திருச்சியில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் தான். சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். அவரும் திருச்சியில் பல இடங்கங்களில் கஷ்டப்பட்டு மிகச் சாதாரண வேலைகள் பார்த்தவரே.

    பிறகு அவரின் நாடகங்கள் மேடையேறியதும் எங்கள் திருச்சி தேவர் ஹாலிலேயே. அவரின் நாடகத்திறமை மூலம் அவரை திரையுலகுக்கு அடையாளம் காட்டிய பெருமையும் திருச்சிக்கு மட்டுமே உண்டு.

    சங்கிலியாண்டபுரத்தில் அவருக்கு பக்கத்து வீட்டில் வாழ்ந்தவர் காக்கா இராதாகிருஷ்ணன் அவர்கள்.
    (பிறகு சினிமா ந்டிகர் ஆனவர்)

    இருவரும் சேர்ந்தே திரையுலக வாழ்க்கையை சந்திக்க, அழைப்பை ஏற்று சென்னைக்குப் புறப்பட்டனர்.

    அந்தக்கால சிவாஜி ரசிகர்களான எங்களிடம் அவர் பற்றிய அனைத்து
    ஜாதகக்குறிப்புகளும் ஆதாரத்துடன் உள்ளன.

    தஞ்சையில் உள்ள சூரக்கோட்டை என்பது அவர் மனைவி வாழ்ந்த ஊர்.
    சிவாஜி அவர்களின் மாமனார் ஊர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

    திருச்சி பாலக்க்ரையில் இருந்த பிரபாத் தியேட்டர் சிவாஜி அவர்களுக்கு சொந்தமானது. இப்போது அந்தத் தியேட்டர் இருந்த இடத்தின் அருகே சிவாஜிக்கு சென்ற வருடம் (2010) இல் சிலை வைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சைக்காரரான தங்களுக்கும், திருச்சிக்காரரான எனக்கும், சிவாஜியை நமக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாட ஆசை தான். அதனாலேயே இந்த் சர்ச்சையைக் கிளப்பி உள்ளீர்கள்.

    அவர் உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல இந்த உலகுக்கே சொந்தமான மாபெரும் கலைஞர்
    அல்லவா!

    அவரையும் அவர் திறமையையும், மிகச் சிறந்த நடிப்பாற்றலையும் நினைத்தாலே இனிக்கிறதே!

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  44. இந்த பதிவை படித்த பிறகு கண்டிப்பா திருச்சிக்கு சென்று இங்கே குறிப்பிடபட்ட இடங்களை எல்லாம் பார்க்கணும் என்று முடிவே பண்ணிவிட்டேன்.திருச்சி மாவட்டத்தை பற்றிய பெரிய தகவல் களஞ்சியமே படித்தது போல இருந்தது.தங்கள் விவரிப்பில் திருச்சி சிறப்பு பெற்றுவிட்டது.நன்றி.

    பதிலளிநீக்கு
  45. நாங்களும் திருச்சிக்காரங்க தாங்கோ . (15 வருடம் திருச்சியில் தான் இருந்தேன்) . என் சகோதர்கள் அங்கு தான் இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  46. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது திருச்சியைப்பற்றிய ஒரு ஒட்டு மொத்தமான பகிர்வு மட்டுமே. இதில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் விரிவாகச் சொல்வதானால் ஒவ்வொன்றுக்கும் இதுபோல ஒரு மிகப்பெரிய பதிவு போட வேண்டியதாக இருக்கும்.

    மேலும் இது தவிர எவ்வளவோ சிறப்பான பல விஷயங்களை, பதிவின் நீள அகலம் கருதி, நான் இந்தப்பதிவினில் கொண்டு வரவில்லை.

    உதாரணமாக பள்ளிப்பருவத்தில் BHEL Township இல் படித்துவிட்டு, இப்போது UAE இல் இருக்கும் ஜீவன்பென்னி என்பவர் தன் கருத்துக்களை பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறார்.

    அவரைப் போலவே நானும் என் வாழ்நாளில் பாதிக்கு மேல் அதே BHEL இல் கழித்தவன் தான்.

    BHEL இல் 38 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, அதே டவுன்ஷிப்பில் 20 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தவன் தான்.

    மிகச்சிறப்பானதொரு MODEL நிர்வாகமும், அனைத்து வசதி வாய்ப்புக்களும் நிறைந்த மிக அருமையாக திட்டமிடப்பட்ட குடியிருப்பு வசதிகளும் நிறைந்த நல்லதொரு பகுதிதான்.

    அதைப்பற்றி எழுத வேண்டுமானால் இதுபோல ஒரு பத்து மடங்கு சுவைபட எழுதலாம் தான்.

    ஒட்டுமொத்தமாக திருச்சியைப்பற்றி, படிப்பவர்களின் நலன் கருதி என்னால் முடிந்த வரை சுவையாகவும், சுருக்கமாகவும் தந்துள்ளேன்.

    இங்கு திருச்சியில் உள்ள பல்வேறு கோயில்கள், ஸ்தல வரலாறுகள் போன்றவற்றை தகுந்த விளக்கங்களுடனும், அழகிய படங்களுடனும் அவ்வப்போது நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தனது பதிவினில் தந்து கொண்டிருக்கிறார்கள்; மேலும் மேலும் தொடர்ந்து தருவார்கள். எனவே அவற்றை பற்றியெல்லாம் நான் ஏதும் விஸ்தாரமாகக் கூறாமல் விட்டு விட்டேன்.

    கோயில்கள் தவிர, இதில் விட்டுப்போன பல விஷயங்களை, பிறகு வாய்ப்புக்கிடைக்கும் போது, அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக நானோ அல்லது என் திருச்சி எழுத்தாள நண்பர்களோ நிச்சயமாகத் தருவார்கள்.

    இண்ட்லியில் எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    வை. கோபாலகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  47. கொஞ்சம் தாமதமாக படிக்கிறேன்.

    அருமை ஐயா. ஒரு திருச்சிகாரன் ஆக எனக்கு இதில் மிகவும் பெருமை. (நான் முசிறி வட்டம் தும்பலம் கிராமம்).

    எதைக் குறிப்பிடுவது எதை விடுவது என்றே தெரியவில்லை, அவ்ளோ சொல்லி இருக்கீங்க.

    அதிகமாக கோவில்களுக்கு சென்றது இல்லை. ஆனால் இப்போது போக வேண்டும் எனத் தோணுகிறது.

    தமிழ்மொழி பல ஊர்களிலும் பல விதமாக பேசப்பட்டாலும் நம்ம ஊர்ப் பேச்சுதான் பொது மொழி. எந்தக் கலப்பும் இல்லாதது.

    ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இந்த பதிவை எங்கள் ஊர் என்று போட்டு என் வலைப்பூவில் இணைத்துக் கொள்ளப்போகிறேன்.

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  48. திருச்சிராப்பள்ளியை
    சுற்றி பார்த்தது போல் இருந்தது..
    இடங்களும் அதற்க்கான காரணங்களும்
    அருமை...

    பதிலளிநீக்கு
  49. இரவு 2 மணிக்கு தூக்கம் வராமல், பொழுது போக்க, கம்ப்யூட்டரில் முதல் நாள் இரவு டிவியில் பார்த்த அதே செய்திகளை மீண்டும் ஒரு முறை INTERNET ஹிண்டுவில் படித்து முடித்த பிறகு, BLOG ல் நுழைந்து, முதல் முறையாக உங்கள் BLOG க்கு வந்து சேர்ந்தேன்.

    அட நம்ம ஊரை ப‌ற்றி எழுதியிருக்கிராரே என்று ஆரம்பித்து ( நானும் திருச்சியில் 30 வருடம் இருந்தேன் 1963 - 1993), முடிவை யூகிக்க முடியாத சிறு கதைகளிலும், நகைச்சுவை நிறைந்த கட்டுரைகளிலும் மூழ்கி எழுவதற்க்குள் பொழுதும் விடிந்து விட்டது.

    இவ்வளவு நன்றாக எழுதுராரே, இவர் யாரென்று PROFILE-ல் பார்த்தால், "ஆஹா இவரும் நம்ம BHEL-தான்" என்று மகிழ்ச்சி அடைந்தேன். நானும் BHEL-ல் 1971-1993 வரை 22 வருடம் பணி புரிந்தேன். நீங்கள் CASH SECTION ஆனதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் நிச்சயமாக இருந்திருக்கும். ஆனால் பேசி பழ‌கிய நினைவு இல்லை.

    PROFILE-ல் கூறிய பல விவரங்கள் எனக்கும் பொருந்துவதாக தோன்றியது. முக்கியமாக - ''காச் மூச் கத்தல்கள் இல்லாத இனிமையாக அர்த்தம் விளங்கும் படியான அழகிய மெல்லிசையுடன் கூடிய மனதை மயக்கும் அந்தக்கால சினிமா பாடல்கள். ''

    திருச்சியை பற்றி 30 வருஷத்தில் நானறியாத பல விவரங்கள் உங்கள் BLOG மூலம் தெரிந்து கொண்டேன். MAIN GUARD GATE பகுதியில் பிரபலமான MICHEAL ICE CREAM-ஐ குறிப்பிட விட்டு போனது ஒரு குறை.

    S.Sankaran

    பதிலளிநீக்கு
  50. shreyas said...
    //இரவு 2 மணிக்கு தூக்கம் வராமல், பொழுது போக்க, கம்ப்யூட்டரில் முதல் நாள் இரவு டிவியில் பார்த்த அதே செய்திகளை மீண்டும் ஒரு முறை INTERNET ஹிண்டுவில் படித்து முடித்த பிறகு, BLOG ல் நுழைந்து, முதல் முறையாக உங்கள் BLOG க்கு வந்து சேர்ந்தேன்................
    ..........................//

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

    தாங்களும் திருச்சி BHEL இல் பல வருஷம் பணியாற்றியவர் என்பது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கும் தங்களை எங்கோ பார்த்தது போலத் தெரிகிறது.

    நான் 04.11.1970 Boiler Production Department இல் [LDC]Lower Division Clerk ஆகச் சேர்ந்தேன். அப்போது அங்கே Mr M K Sridhar தான் HOD.

    பிறகு OP&C, Medical Department களில் சில காலம் பணியாற்றி விட்டு, 10.02.1981 முதல் 24.02.2009 வரைத் தொடர்ச்சியாக 28 ஆண்டுகள் Finance Dept. Cash Office இல் வேலைசெய்து 24.02.2009 இல் பணி ஓய்வு பெற்றேன்.

    நன்றி. பிறகு மீண்டும் பேசுவோம். vgk

    பதிலளிநீக்கு
  51. பதிவை படித்துக்கொண்டிருக்கும் போதே இராஜராஜேஸ்வரி வலைக்கு சென்று விட்டோமோ என்ற சந்தேகம் வந்து விட்டது . இத விட அழகா ஊரைப் பற்றி பதிவிட முடியாதுங்க வலைச்சரம் எழுதும் போது தவறவிட்டுட்டேன் என நினைக்கும் போதே வருத்தமா இருக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகையும்,
      மனம்திறந்து அழகாகக் கூறியுள்ள கருத்துக்களும்,
      எனக்கு மிகவும் மனமகிழ்ச்சியளிப்பதாக உள்ளன.

      வலைச்சரத்தில் தாங்கள் ஆசிரியராக இருந்தபோது, ’இதைப்பற்றி எழுதத்தவற விட்டுவிட்டேனே’ என்று தாங்கள் உணர்ந்து சொல்வதே எனக்கு ஆறுதலாகவும், உற்சாகம் தருவதாகவும் உள்ளது. நமக்குள் வலையுலகில் இதுவரை அதிக பரிச்சயம் இல்லாததே இதற்குக் காரணம்.

      2011 ஆண்டு மட்டுமே மொத்தமுள்ள 52 வாரங்களில் என் பெயர் வலைச்சரத்தில் 26 முறைகள் பலராலும் அறிமுகப் படுத்தப்பட்டு விட்டது. அதனால் எனக்குக் குறையொன்றும் இல்லை.

      இதைப்பற்றி கூட என் 200 ஆவது பதிவாகிய “நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி” என்ற பதிவில் வெளியிட்டுள்ளேன்.
      இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

      அந்த 26 தடவைகள் வலைச்சரத்தில் என்னைப்பற்றி எழுதியுள்ளவர்களில் ஒருவர் இந்த என் “ஊரைச்சொல்லவா! பேரைச்சொல்லவா!! பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
      //பதிவை படித்துக்கொண்டிருக்கும் போதே இராஜராஜேஸ்வரி வலைக்கு சென்று விட்டோமோ என்ற சந்தேகம் வந்து விட்டது.//

      ஆஹா! This is too much.

      ஆன்மிகப்பதிவுகள் உலகில் அவர்கள் ஒரு மலைபோல, சாதாரண மலை அல்ல, இமயமலை; எவரெஸ்ட் சிகரம் போல - ஓங்கி உயர்ந்து நிற்பவர்கள்.

      அவர்களுடன் ஒப்பிடும்போது திறமைகளில் நான் என்றுமே மிகச் சாதாரணமானவனே. இருப்பினும் என் எழுத்துக்களைப் பாராட்டி அவ்வப்போது உற்சாகம் தந்துகொண்டிருப்பவர்களில் அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். என் நலம் விரும்பியும் கூட. என்னுடனான ஆரோக்யமான, அழகானதொரு, நல்ல நட்புக்கு அவர்கள் ஓர் நல்லதோர் உதாரணம்.

      தொடரும்....

      நீக்கு
    2. என்னைப்பற்றி மேலும் சில விபரங்கள் அறிய என்னுடைய 50th, 100th to 106th, 150th, 200th, 250th & 300th பதிவுகளையும் அதிலுள்ள படங்களையும் தயவுசெய்து பாருங்கள். இணைப்புகள் இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html 50th

      http://gopu1949.blogspot.in/2011/07/of-2011.html
      100th

      http://gopu1949.blogspot.in/2011/07/1.html 101st

      http://gopu1949.blogspot.in/2011/07/2.html 102nd

      http://gopu1949.blogspot.in/2011/07/3.html 103rd

      http://gopu1949.blogspot.in/2011/07/4.html 104th

      http://gopu1949.blogspot.in/2011/07/5.html 105th

      http://gopu1949.blogspot.in/2011/07/6.html 106th

      http://gopu1949.blogspot.in/2011/10/4-of-4.html
      150th

      http://gopu1949.blogspot.in/2011/12/2011.html
      200th

      http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_07.html
      250th

      http://gopu1949.blogspot.in/2012/04/17.html
      300th

      http://gopu1949.blogspot.in/2012/03/1.html மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தொடர் ஆரம்பம் - பகுதி 1 of 8

      http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html
      மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தொடரின் நிறைவுப்பகுதி
      8 of 8 இயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா

      தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய பழைய பதிவுகளை [நகைச்சுவைச் சிறுகதைகளை] ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்து, பிடித்திருந்தால் பின்னூட்டம் கொடுங்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  52. WoW.... Thrich kae pottu vantha mathiri irukku sir.. great info.. all places i have visited you listed above.. my home is near to uthamar kovil and in very much walkable distance to samayapuram.. Went back to my sweet momories where me and my mom used to walk and go to samayapuram during sunday evenings.. The info which is new is Dr. Meena became Vice chancellor.. it is a shock for me.. :) even visited HUGE Bharathidasan university also.. used to go only in auto in inside campus.. cant walk, its that big.. I request you to add all the colleges also.. Trichy is very good in education, It gives education to most of the villages and nearby cities. Best schools and colleges we have.. Thanks a lot for making me to know this Gopal sir... its super.. You should have added about thanjavur, pillaiyar patti, karbarakshambigai temples also which is very near by and we can reach in 2 hours..
    very very very very glad to read this.... it came me virtual visit to my home and in laws home... superb information. loved it sir.. :D

    பதிலளிநீக்கு
  53. and as you siad i have took the word verification sir.. thanks for nitifying me the difficulty..

    பதிலளிநீக்கு
  54. Respected Riya Madam,

    Thank you very much
    [1] for your kind visit to this post
    [2] for your complete reading about our Tiruchirapalli
    [3] for your valuable comments

    My wife's native place is also Bikshandar Koil Village near Uttamar koil Railway Station & Temple.

    Very Glad to note that you were with your mother near Uttamarkoil & visited Samayapuram very often that too by walk.

    With Best Wishes & Kind regards,

    vgk

    பதிலளிநீக்கு
  55. திருச்சி குறித்த படங்களும்,பதிவும் மிக அருமை சார்.கல்லணையின் அழகை சிறப்பாகப் படமாக்கியுள்ளீர்கள்.அற்புதமான நீண்ட பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Murugeswari RajavelAugust 18, 2012 8:55 AM
      திருச்சி குறித்த படங்களும்,பதிவும் மிக அருமை சார்.கல்லணையின் அழகை சிறப்பாகப் படமாக்கியுள்ளீர்கள்.அற்புதமான நீண்ட பதிவு.//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      எனக்குக்கிடைத்துள்ள பன்னிரெண்டாவது விருது ஒன்றை தங்களுடன் அடுத்தவார இறுதியில் பகிர்ந்து கொள்வதாக இருக்கிறேன்.

      This is just for your advance information.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  56. நாங்கள் திருச்சியில் நான்கு வருடங்கள் இருந்திருக்கிறோம். இவ்வளவு இடங்களா .யோசித்துப் பார்க்கவே அதிசயமாக இருக்கிறது. வெகு விரிவான விஷயங்கள் பொதிந்த பதிவு. மிக நன்றி திரு வை.கோ.

    பதிலளிநீக்கு
  57. வாருங்கள் திருமதி வல்லிசிம்ஹன் அவர்களே!

    வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

    நேரம் கிடைக்கும் போது இதுபோல என்னுடைய பழைய படைப்புகள் சிலவற்றை பார்த்து, படித்து, கருத்துக்கூறினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

    அதை எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமாகக் கருதுவேன். இதுபோல மிக நீண்ட பதிவாக நிச்சயம் எதுவுமே இருக்காது. கவலையே பட வேண்டாம்.

    பெரும்பாலும் சிறுகதைகளும், ந்கைச்சுவை கதைகளுமே அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக 2011 நவம்பர் மாதம் நான் தமிழ்மண நட்சத்திரமாக ஒருவாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஒரு 28 பதிவுகள் வெளியிட்டுள்ளேன். அவற்றை மட்டுமாவது படித்து விட்டு கருத்துக்கூறுங்கள்.

    முதல் பதிவு “ஜாங்கிரி” சிறுகதை. இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post.html

    நவம்பர் + டிஸம்பர் 2011 இல் உள்ள என் அனைத்துப் படைப்புகளையுமே தாங்கள் படித்து விட்டு கருத்து அளித்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்.

    எல்லாமே சுவாரஸ்யமான சிறுகதைகளாகவே இருக்கும்.

    தாங்களும் திருச்சியில் ஓர் நாலு ஆண்டுகள் வசித்து வாழ்ந்துள்ளதாகக் கூறுவது, எனக்கு மேலும் ஓர் அந்நோன்யத்தை தங்கள் மேல் ஏற்படுத்துவதாக உள்ளது. ரொம்பவும் சந்தோஷம், மேடம்.

    அன்புடன்,
    VGK

    பதிலளிநீக்கு
  58. டில்லி பிரெண்ட்ஸ் மூலமாக தங்கள் ப்ளாக் கிடைக்கப்பெற்றேன்.
    தங்களுடைய திருச்சி உலா விறுவிறுப்பாக இருந்தது. அடுத்து, மலைக்கோட்டை உச்சியிலிருந்து ஓதுவார் அவர்களின் தேவாரம் அழுத்தமாகவும் அதேசமயத்தில் காற்றில் இழையோடி வருவதும், ஷேக் சின்னமௌலான குடும்பத்தாரின் சாச்வதமான நாதஸ்வர இசையும் திருச்சியின் நுண்ணியல்களின் சாம்பிள்ஸ். இவைகளை எல்லாம் பற்றி எழுத தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
    கி.நாராயணன்.

    பதிலளிநீக்கு
  59. டில்லி பிரெண்ட்ஸ் மூலமாக தங்கள் ப்ளாக் கிடைக்கப்பெற்றேன்.
    தங்களுடைய திருச்சி உலா விறுவிறுப்பாக இருந்தது. அடுத்து, மலைக்கோட்டை உச்சியிலிருந்து ஓதுவார் அவர்களின் தேவாரம் அழுத்தமாகவும் அதேசமயத்தில் காற்றில் இழையோடி வருவதும், ஷேக் சின்னமௌலான குடும்பத்தாரின் சாச்வதமான நாதஸ்வர இசையும் திருச்சியின் நுண்ணியல்களின் சாம்பிள்ஸ். இவைகளை எல்லாம் பற்றி எழுத தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
    கி.நாராயணன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Narayanan Krishnamurthi October 3, 2012 10:37 AM
      //டில்லி பிரெண்ட்ஸ் மூலமாக தங்கள் ப்ளாக் கிடைக்கப்பெற்றேன்.

      தங்களுடைய திருச்சி உலா விறுவிறுப்பாக இருந்தது.

      அடுத்து, மலைக்கோட்டை உச்சியிலிருந்து ஓதுவார் அவர்களின் தேவாரம் அழுத்தமாகவும் அதேசமயத்தில் காற்றில் இழையோடி வருவதும், ஷேக் சின்னமௌலான குடும்பத்தாரின் சாச்வதமான நாதஸ்வர இசையும் திருச்சியின் நுண்ணியல்களின் சாம்பிள்ஸ். இவைகளை எல்லாம் பற்றி எழுத தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
      கி.நாராயணன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், மகிழ்வுடன் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் 03/10/2012 தேதியிட்ட இந்தப்பின்னூட்டத்தை நான் இன்று 27/11/2012 அன்று தான் அகஸ்மாத்தாகப் பார்க்க நேர்ந்துள்ளது. அதனால் என் பதிலில் தாமதம். மன்னிக்கவும்.

      தங்களின் டெல்லி ஃப்ரண்ட்ஸ்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  60. வை . கோ. சார் தாயுமானவளில் திருச்சியின் வர்ணனை படித்துவிட்டு இதுதான் திருச்சின்னு குழந்தைத்தனமா நினைச்சுட்டேன். இப்ப இந்த பதிவு படிச்சு திருச்சி பூராவும் நல்லா சுத்திப்பாத்துவிடுவேன். முதல்ல உச்சி பிள்ளையார் கோவில் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறேன், ஒவ்வொன்றாக ரசித்துக்கொண்டே கீழே வருகிறேன்.காத்து பிச்சுகிட்டு அடிக்குது.(இது கொஞ்சம் கொச்சைத்தமிழ்ல எழுதிட்டேன் சாரி) ஸ்ரீரங்கம், திர்வானைக்காவல் காவிரி ஆறு யப்பா எவ்வளவு அற்புதமான காட்சிகள். திருச்சியின் பெயர்க்காரணமும் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப உள்ள பெரிய பெரிய மால் கள் எல்லாம் இந்தக்கடை வீதியைப்பார்த்தா திகைச்சுப்போயிடுவாங்க. அவ்வளவு பொருட்கள்
    இரத்தினாவதிக்கு, ஈசனே போயி பிரசவம் பார்த்ததினால் தான் தாயுமானவரா சூப்பர். .கல்லணையின் கட்டுமானம் காலத்தால் அழியாத ஆச்சரியம்தான், கம்பர் ராமயணத்தையும் இங்குதான் அதாவது ஸ்ரீ ரங்கத்தில்தான் அரங்கேற்றினாரா?
    திருச்சி மாவட்டத்தின் திருவள்ளரை மொட்டை கோபுரமும், ’ஸ்வஸ்திக்’ கிணறும் அதிசயிக்கத்தக்கவை.ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி நினைவில் வைத்துக்கொண்டு கோர்வையாக எழுத முடிகிறது. திருச்சியிலும் சுற்றி உள்ள ஊர்களிலும் நிறையக்கோவில்கள் இருக்கிறதே. அதுவும் ஐயப்பன்கோவிலில் அவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் பாராட்டப்பட வேண்டியவை.
    ’திருவானைக்கா’ என்ற பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான [ஜலத்திற்கான க்ஷேத்ரமான] ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ ஜம்புநாத ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்றதாக ஒரு ஸ்தல புராண வரலாற்றுக்கதை கூறுகிறது. இதுவும் சிறப்பு.
    அதுபோல திருச்சி-மணப்பாறை முறுக்கு ரொம்ப ஃபேமஸ் ஆனதுங்க! பார்த்ததுமே தினுடலாம் போல இருக்கு. ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான படங்களும் இணைச்சிருக்கீங்க அது இன்னும் சுவாரசியம். பதிவை விட என் பின்னூட்டம் ரொம்ப பெரிசாப்போகுதே. என்ன பண்ண உங்க ஊருல அவ்வளவு விஷயங்களிருக்கிறதே. எவ்வளவு கலைஞர்களையும் வித்துவான்களையும் கொடுத்திருக்கு திருச்சி. பின்னணிப்பாடகர் திருச்சி லோக நாதன்னு ஒருத்த இருந்தாரே அவரும் இந்த ஊர்க்காரர்தானா? தேவாலயம் மசூதி படங்கள் பகிர்வு படிச்சுகிட்டே திருச்சினாபள்ளி ரயில்வே ஸ்டேஷன் வந்து எங்க ஊருக்கு வந்துட்டேன். இப்ப தைரியமக சொல்ல முடியும் திருச்சியை நல்லா சுத்திப்பாத்துட்டேன்னு. ஹா ஹா ஹ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் January 14, 2013 at 7:54 AM

      வாங்கோ Ms. பூந்தளிர் Madam, WELCOME to our TIRUCHI.
      வணக்கம்.

      //வை.கோ. சார் தாயுமானவளில் திருச்சியின் வர்ணனை படித்துவிட்டு இதுதான் திருச்சின்னு குழந்தைத்தனமா நினைச்சுட்டேன்.//

      அந்தத் தாயுமானவள் சிறுகதையில் வந்த வாணப்பட்டறை மாரியம்மன் கோயிலும் மிகவும் சகதி வாய்ந்த பிரபலமான மஹமாயீ கோயில் தான். அதுவும் Heart of the City இல் தான் உள்ளது. மிகச்சிறிய கோயில். ஆனாலும் மிகவும் சக்தி வாய்ந்த அம்பாள். சமயபுரத்து மஹமாயீ போலவே, ஆனால் எங்கள் வீட்டருகில் 5 நிமிட நடை தூரத்தில் உள்ள அம்பாள்.

      //இப்ப இந்த பதிவு படிச்சு திருச்சி பூராவும் நல்லா சுத்திப்பாத்துவிடுவேன். முதல்ல உச்சி பிள்ளையார் கோவில் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறேன், ஒவ்வொன்றாக ரசித்துக்கொண்டே கீழே வருகிறேன்.காத்து பிச்சுகிட்டு அடிக்குது.(இது கொஞ்சம் கொச்சைத்தமிழ்ல எழுதிட்டேன் சாரி)//

      இதுபோன்ற இடங்களில் கொச்சைத்தமிழில் தான் எழுத வேண்டும். அது தான் ரஸிக்கும்படியாக இருக்கும்.

      ஆமாம் இவ்வளவு தூரம் உச்சிப்பிள்ளையார் கோயில் வரை வந்துள்ளீர்கள், எங்கள் ஆத்துக்கு* [*இதுவும் கொச்சைத்தமிழே - வீட்டுக்கு என்று அர்த்தம்] ஏன் நீங்கள் வரவில்லை? மலையைச்சுற்றியுள்ள 4 தேர் ஓடும் வீதிகளில் ஒன்றில் தானே நான் இருக்கிறேன்.

      அதுவும் அந்த வாணப்பட்டறை மஹமாயீ கோயிலும் என் வீட்டின் மிக அருகே தானே உள்ளது. சரி பரவாயில்லை.

      அடுத்த முறை வரும்போது கட்டாயம் வரணும். அடை + உங்களுக்கு என்னென்ன பிடிக்குமோ எல்லாமே சாப்பிட்டு விட்டுத் தான் போகணும். சொல்லிட்டேன். O.K. யா?

      >>>>>

      நீக்கு
    2. //இரத்தினாவதிக்கு, ஈசனே போயி பிரசவம் பார்த்ததினால் தான் தாயுமானவரா சூப்பர்.//

      ஆமாம். இதைப்பற்றியே தனியாக ஓர் குட்டியூண்டு படப்பதிவு போட்டுள்ளேன்.

      அவசியமாக உடனே இப்போதே போய்ப் பாருங்கோ.

      உங்களுக்கோ உங்களைச்சேர்ந்த உறவினர்களுக்கோ அன்புத் தோழிகளுக்கோ பயன்படக்கூடும்.

      அதில் என் அன்புச்சகோதரி “இமா” என்பவரின் பின்னூட்டத்திற்கு நான் கொடுத்துள்ள பதிலையும் படியுங்கோ... ப்ளீஸ்.

      தலைப்பு:
      “காது கொடுத்துக்கேட்டேன் ஆஹா குவா குவா சப்தம்”

      இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_27.html

      >>>>>

      நீக்கு
    3. //ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான படங்களும் இணைச்சிருக்கீங்க அது இன்னும் சுவாரசியம். பதிவை விட என் பின்னூட்டம் ரொம்ப பெரிசாப்போகுதே.//

      என் வலைத்தளத்தில் உங்களைப்போன்ற் பலர் தரும் விரிவான பின்னூட்டங்களும், அவற்றில் பெரும்பாலானவர்களுக்கு நான் தந்து வரும் பொறுமையான் விரிவான பதில்களுமே என்னை அனைவருக்கும் அடையாளம் காட்டி, அனைவருடனும் எனக்கு ஒரு நெருக்கமானதொரு நட்பையும், பிரியத்தையும் ஏற்படுத்தி சிறப்பித்துள்ளது.

      ஒருவரின் பதிவினை மேலும் மெருகூட்டக்கூடியது, அதனை ஏனோ தானோ என்று படிக்காமல், ஓர் ஈடுபாட்டுடன் முழுவதுமாகப் படித்துப்பார்த்து, நண்பர்கள் கூறும் ஆத்மார்த்தமான கருத்துக்கள் மட்டுமே.

      //என்ன பண்ண உங்க ஊருல அவ்வளவு விஷயங்களிருக்கிறதே. எவ்வளவு கலைஞர்களையும் வித்துவான்களையும் கொடுத்திருக்கு திருச்சி. பின்னணிப்பாடகர் திருச்சி லோக நாதன்னு ஒருத்த இருந்தாரே அவரும் இந்த ஊர்க்காரர்தானா? //

      ஆம் பல பிரபலங்களைக் கொடுத்துள்ள ஊர் தான் திருச்சி.
      திருச்சி லோகநாதன் அவர்களும் எங்கள் ஊரே தான். அதுபற்றித்தான் நானே எழுதியுள்ளேனே [நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் படத்திற்குக்கீழேயுள்ள பத்தியில் [Paragraph இல்] பாருங்கோ.

      >>>>>

      நீக்கு
    4. //தேவாலயம் மசூதி படங்கள் பகிர்வு படிச்சுகிட்டே திருச்சினாபள்ளி ரயில்வே ஸ்டேஷன் வந்து எங்க ஊருக்கு வந்துட்டேன்.//

      இந்தப்பதிவிலேயே திருச்சியைப் பார்த்து மகிழ்ந்தால் போதாது.

      சமயம் கிடைக்கும் போது நேரில் கட்டாயம் வந்து பாருங்கோ.

      நான் கூறியுள்ள ஒவ்வொன்றிலும் உட்புகுந்து பார்த்தால் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக பல பதிவுகள் என்னால் தர முடியும்.

      இதில் விட்டுப்போய் உள்ள ஒருசில சமாசாரங்களும் உண்டு தான்.

      பதிவு ஏற்கனவே மிகப்பெரியதாகப் போய்விட்டது. அதானால் அதை மேலும் நீட்டிச்செல்ல விரும்பவல்லை நான்.

      இதையே கூட 4-5 பகுதிகளாக நான் பிரித்துப் போட்டிருக்கலாம் தான். ஏனோ அப்போது எனக்கு அது தோன்றவில்லை.

      //இப்ப தைரியமாகச் சொல்ல முடியும் திருச்சியை நல்லா சுத்திப்பாத்துட்டேன்னு. ஹா ஹா ஹா//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      திருச்சியைப்பற்றி இப்போது ‘பூந்தளிர்’ படித்து பூரிப்பு அடைஞ்சாச்சு. OK ...

      ஆனால், என்றாவது ஒருநாள் ‘சிவகாம சுந்தரி’யின் காலடி பட்டு திருச்சி மேலும் சிறப்படைய வேண்டும் என்பதே என் அவா.

      பிரியமுள்ள,
      கோபு

      நீக்கு
  61. சிவகாம சுந்தரியை உங்க ஆத்துக்கு அழைத்தற்கு ரொம்ப, ரொம்ப நன்றிங்க. வரும் முன்னே எனக்கு என்னலாம் பிடிக்குனு சொல்லுவேன். எல்லாம் பண்ணி வைப்பீங்களா? அன்புக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  62. பூந்தளிர் January 14, 2013 at 8:09 PM

    //சிவகாம சுந்தரியை உங்க ஆத்துக்கு அழைத்தற்கு ரொம்ப, ரொம்ப நன்றிங்க.//

    ஆஹா அழைத்ததற்கே ரொம்ப ரொம்ப நன்றியா? சுந்தர் என்றால் அழகு என்று அர்த்தம். சுந்தரி என்றாலும் அப்படியே. அதனால் தான் தங்களின் நன்றி அறிவிப்பும் அழகாக உள்ளது.

    அதுவும் சாதாரண சுந்தரியா, சிவகாம சுந்தரி அல்லவோ! ஆடலரசன் தில்லை அம்பல வாணன் நடராஜர் சம்சாரம் அல்லவோ!
    எங்காத்துக்கு நீங்க வர கொடுத்து வைத்திருக்கணுமே, நாங்கள்.

    //வரும் முன்னே எனக்கு என்னலாம் பிடிக்குனு சொல்லுவேன். எல்லாம் பண்ணி வைப்பீங்களா?//

    ஆஹா தங்கள் ஸித்தம் எங்கள் பாக்யமம்மா.

    உடனே டோட்டல் லிஸ்டு போட்டு மெயிலில் அனுப்புங்கோ, ப்ளீஸ்.

    //அன்புக்கு நன்றிங்க.//

    நன்றிக்கு நன்றிகளம்மா.

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  63. வாவ்.
    2,3 தடவை திருச்சி வந்திருக்கிறேன். உங்கள் பதிவில் உள்ள பல இடங்களை பார்த்திருக்கிறேன். உங்கள் பதிவுகளைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

    திருச்சி என்றதும் மலைக்கோட்டைக்கு அடுத்த படி முன்பெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது அம்மா வழி உறவில் ஐராவதம் அண்ணா. அவர் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் WRITER ஆக இருந்தார் என்று அம்மா சொல்லுவார்.

    இப்ப திருச்சி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கோபு சார்தான். உங்களை நேரில் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANIJanuary 24, 2013 at 1:09 AM

      வாங்கோ, திருச்சிக்கு வந்துள்ள தங்களை வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறேன்.

      //வாவ்.
      2,3 தடவை திருச்சி வந்திருக்கிறேன். உங்கள் பதிவில் உள்ள பல இடங்களை பார்த்திருக்கிறேன்.//

      மிகவும் சந்தோஷம்.

      // உங்கள் பதிவுகளைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. //

      அடடா, மிகவும் புகழ்கிறீர்களே! நான் சாதாரணமானவன் தான்.

      //இப்ப திருச்சி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கோபு சார்தான்.//

      அப்படியாம்மா, ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;)

      //உங்களை நேரில் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.//

      பிராப்தம் இருந்தால் சந்திப்போம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  64. பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் February 9, 2013 at 9:15 AM
      //ஏராளமான தகவல்கள்... நன்றி ஐயா...//

      வாருங்கள், வணக்கம். அன்பான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  65. உட்கார்ந்த இடத்திலேயே திருச்சி பற்றிய
    பயாஸ் ஸ்கோப்பு படம் காட்டியதற்கு நன்றி
    .
    என்னுடைய பங்களிப்பாக நான் வரைந்த
    குண சீலப்பெருமாள் படத்தை உங்கள் பதிவில் போட்டால் மகிழ்ச்சியடைவேன்
    போடாவிட்டால் வருத்தப்படமாட்டேன்.

    பதிலளிநீக்கு
  66. Pattabi Raman April 28, 2013 at 4:00 AM

    வாங்கோ அண்ணா, நமஸ்காரம்.

    //உட்கார்ந்த இடத்திலேயே திருச்சி பற்றிய பயாஸ் ஸ்கோப்பு படம் காட்டியதற்கு நன்றி//

    சந்தோஷம் அண்ணா.
    .
    //என்னுடைய பங்களிப்பாக நான் வரைந்த குண சீலப்பெருமாள் படத்தை உங்கள் பதிவில் போட்டால் மகிழ்ச்சியடைவேன். போடாவிட்டால் வருத்தப்படமாட்டேன்.//

    தங்களின் மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல, என் குலதெய்வமான குணசீலம் பெருமாளை என் கண்முன் அழகிய ஓவியமாகக் கொண்டுவந்து நிறுத்தி என் பதிவில் போடச்சொன்னால், என்னால் அதை எப்படி மறுக்க முடியும்?

    என் குலதெய்வமான குணசீலம் பெருமாளே வந்து உத்தரவு இட்டதுபோல நினைத்து உடனடியாகச் சேர்த்து விட்டேன், அண்ணா.

    தங்களின் அன்பான வருகைக்கும், உரிமையுடன் என்னிடம் கேட்டுக்கொண்ட கோரிக்கைக்கும் மிக்க நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள உயர்திரு பட்டாபிராமன் அண்ணா,

      “குலதெய்வமே உன்னைக்கொண்டாடுவேன்”
      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html

      படித்துப்பாருங்கோ, ப்ளீஸ்.

      நீக்கு
  67. அன்பின் வை.கோ - படித்து இரசித்து மறுமொழி இடுவதற்குச் சென்று பார்த்தால் - அங்கும் பொறுமையாக அனைத்து மறுமொழிகளையும் படித்துப் பின்னர் எனது மறுமொழியினை இடலாமென நினைத்துச் சென்றால் - அங்கு என் மறுமொழி ஜூலை 25 2011- இரவு 10:04 மணீக்கு - இடப்பட்டிருகிறது. சப்பென்று போய் விட்டது - பரவாய் இல்லை என இப்பொழுது மறுமொழி இட நினைத்து வந்ததைத் தள்ளி வைத்து விட்டேன்.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  68. cheena (சீனா) May 9, 2013 at 7:00 PM

    வாருங்கள் என் அன்பின் சீனா ஐயா, வணக்கம் ஐயா

    //அன்பின் வை.கோ - படித்து இரசித்து மறுமொழி இடுவதற்குச் சென்று பார்த்தால் - அங்கும் பொறுமையாக அனைத்து மறுமொழிகளையும் படித்துப் பின்னர் எனது மறுமொழியினை இடலாமென நினைத்துச் சென்றால் - அங்கு என் மறுமொழி ஜூலை 25 2011- இரவு 10:04 மணீக்கு - இடப்பட்டிருகிறது. சப்பென்று போய் விட்டது - பரவாய் இல்லை என இப்பொழுது மறுமொழி இட நினைத்து வந்ததைத் தள்ளி வைத்து விட்டேன். //

    ஆஹா தங்களின் மீண்டும் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது ஐயா. இந்தப்பதிவினை ஏற்கனவே படிக்காதவர்கள் படிக்கட்டும் என்ற எண்ணத்தில் இதன் இணைப்பினை 27.04.2013 அன்று வெளியிட்டிருந்த “அன்றும் இன்றும்” என்ற http://gopu1949.blogspot.in/2013/04/12.html இந்தப்பதிவினில் சுட்டிக் காட்டியிருந்தேன் ஐயா.

    அதைப்பார்த்துவிட்டு தாங்கள் இங்கு மீண்டும் வருகை தந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். தாங்கள் இந்தப்பதிவுக்கு ஏற்கனவே வருகை தந்து அழகான மாறுபட்ட கருத்துக்கள் சொல்லி பாராட்டியுள்ளீர்கள் ஐயா.

    **ஆமா நான் அடிக்கடி திருச்சி ஃபெமினா ஓட்டலில் தங்கி இருக்கிறேனே - கி.ஆ.பெ பேரன் எங்கள் குடும்ப மருத்துவர் ஆச்சே. அப்ப என்னப் பத்தி ஏன் எழுதலே - ம்ம்ம்ம்ம்ம்**

    என உரிமையுடன் கேட்டிருந்தீர்கள் ஐயா! ;)))))

    //நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், புதுக்கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.


    பதிலளிநீக்கு
  69. SIR ...

    what an interesting place ....;yes my native is trichy i am so happy to read about my place...and i am happy to follow you....

    by
    anuprem
    http://anu-rainydrops.blogspot.in/

    பதிலளிநீக்கு
  70. Anuradha Prem July 21, 2013 at 11:09 PM

    WELCOME !


    //SIR ...

    what an interesting place ....;yes my native is trichy i am so happy to read about my place...and i am happy to follow you....//

    by
    anuprem
    http://anu-rainydrops.blogspot.in/ //

    வாங்கோ, வணக்கம். என் தளத்தில் தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

    தாங்களும் திருச்சியைச் சேர்ந்தவர் தான் என்பது கேட்க மிக்க மகிழ்ச்சி.

    மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    அன்புடன்
    கோபு

    பதிலளிநீக்கு
  71. மிகவும் பழமையான ஊர்களில் ஒன்று திருச்சாராப்பள்ளி. நியாயமாக இந்த ஊர்தான் தமிழகத்தின் தலைநகராக இருந்திருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  72. திருச்சி ஊரை பற்றி உங்கள் பதிவின் மூலம் நன்கு தெரிந்து கொண்டேன். மணப்பாறை முறுக்கும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Saratha J May 30, 2015 at 8:12 PM

      வாங்கோ, வணக்கம்.

      //திருச்சி ஊரை பற்றி உங்கள் பதிவின் மூலம் நன்கு தெரிந்து கொண்டேன். மணப்பாறை முறுக்கும் அருமை.//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
    2. Saratha J May 30, 2015 at 8:12 PM

      வாங்கோ, வணக்கம்.

      //திருச்சி ஊரை பற்றி உங்கள் பதிவின் மூலம் நன்கு தெரிந்து கொண்டேன். மணப்பாறை முறுக்கும் அருமை.//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  73. ஓரே வார்த்தையில் சொல்வதானால் ‘அற்புதம்”>..........வேறு வார்த்தைகளே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manakkal August 27, 2015 at 6:00 PM

      வாங்கோ, நமஸ்காரங்கள், வணக்கம்.

      //ஓரே வார்த்தையில் சொல்வதானால் ‘அற்புதம்”>..........வேறு வார்த்தைகளே இல்லை.//

      வியாழன் வெள்ளி கூடும் நேரம், அதுவும் வரலக்ஷ்மி நோன்புக்கு முதல்நாள், அழைக்கும் அம்மனுக்கு பூஜை நடந்துகொண்டிருக்கும் மிகச்சரியான நேரத்தில் தங்களின் அன்பான வருகைக்கும் ’அற்புதம்’ என்ற அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்த மணக்கால் ஸ்ரீமதி பர்வத அக்காவே {தங்களைப்பெற்ற மகராஜி} நேரில் வந்து ஆசீர்வதித்ததுபோல கண்கலங்கி ஆனந்தக்கண்ணீர் விட்டேன்.

      நோன்பு, ஆவணியாவட்டம், காயத்ரி ஜபம் முதலியன நல்லபடியாக நடக்கட்டும்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  74. அடேங்கப்பாடியோவ் திருச்சில இம்பூட்டு வெசயங்க கெடக்குதா கோவிலு கோவிலா வருதேன்னு பாத்தேன் எங்கட மசூதி பத்தி கூட சொல்லினிங்க

    பதிலளிநீக்கு
  75. திருச்சி பற்றி இவுவளவு விரிவாக யாராலயும் சொல்லி இருக்க முடியாது. கைபிடித்து கூட்டிண்டுபோயி ஒவ்வொரு இடமா காட்டினாப்போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  76. இடுகையை மிகவும் ரசித்து ருசித்து படித்தேன். 1962-1972 BHEL TOWN SHIPல் தங்கி 5ம் வகுப்பு வரை BHEL தமிழ் மீடியம் பள்ளியில் படித்தேன்...எனக்கு தெரியாத எவ்வளவு விஷயங்கள்...நன்றி வாத்யாரே...

    பதிலளிநீக்கு
  77. திருச்சியைத் திரும்பிப் பார்க்கத் தூண்டிய பதிவு!

    பதிலளிநீக்கு
  78. இந்த பதிவு மூலமாக திருச்சி யை ஓரளவுக்கு சுத்தி காட்டி டிங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2017 at 1:34 PM

      //இந்த பதிவு மூலமாக திருச்சி யை ஓரளவுக்கு சுத்தி காட்டி டிங்க..//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு