என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 24 மே, 2014

VGK-16 - EQUAL PRIZE WINNERS - LIST 2 OF 3 - ’ஜாதிப்பூ’





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 16 - ’ ஜா தி ப் பூ ‘


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html



 


 எல்லாமே வயிற்றுப்பாட்டுக்குத் தான். 

 பூ விற்பவர்களில் வயதானவர்கள் என்றும் உண்டு;  

 இள வயசுக்காரர்களும் உண்டு. 

 இளவயதினரிடம் பூ வாங்கும் கூட்டம் குவிவதையும்--- 

 வயதானவர்கள் வியாபாரம் சுணங்கிப் பரிதவிப்பதையும்- 

 பார்த்த பரிதாபத்தில் கதாசிரியர் 

மனத்தில் பூத்த கதையோ இது!.... 



 


 



  



  




மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  


 ஆறு 




நடுவர் அவர்களின் 


தீர்ப்பு + வழிகாட்டுதல்களின்படி


இந்தச்சிறுகதை விமர்சனத்திற்கான


மொத்தப்பரிசுத் தொகை


தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 


ஆறு  விமர்சனங்களுக்கும்


சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.



இந்த ஆறு விமர்சனங்களும்



சமமான பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பினும்



பதிவின் நீளம் கருதி தினமும் இருவரின் 


விமர்சனங்கள் வீதம் மட்டுமே



வெளியிடப்பட உள்ளன. 




இந்தப் பரிசுகளை சரிசமமாக வென்றுள்ள  


இந்த ஆறு விமர்சகர்களுக்கும்


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 



  

          

  

 

                  

 
          


'இந்தக் கதை விமரிசனப் போட்டிக்கு அறிமுகமாகி 
முதல் தடவையாக பரிசு பெற்றோருக்கு 
அவர்கள் மென்மேலும் 
பல பரிசுகளைப் பெற என் வாழ்த்துக்கள்'





  


மற்றவர்களுக்கு: 







    


[ 3 ]



திரு


  ரமணி  

அவர்கள்


தீதும் நன்றும் பிறர் தர வாரா...

yaathoramani.blogspot.com/



 


ஜாதி மதங்கள் மற்றும் சடங்குகள் சம்பிரதாயங்கள்
தனது எல்லைக் கோட்டை மீறி நடைமுறை
வாழ்க்கைக்கு உதவுவதை விடுத்து அதற்கு மாறாக
எதிராக இயங்கத் துவங்கியதைக் கண்டு
வெறுத்துப் போனவர்களுக்கு நிச்சயம் இந்தக்
கதைப் பிடிக்கும்

தகுதிப்படுத்திக் கொள்ள அவசியத் தேவையான படிப்பும்
மனப்பாரம் குறைத்து ஒரு ஆன்மீக உணர்வுபெறவென
உண்டான சடங்குகளும் சம்பிரதாயங்களும்,
சமூகக் கட்டமைப்புக்கு மிக அவசியமான குடும்ப அமைப்பும்
அதற்கு ஆதாரமான திருமணமும், இன்னும் சரியாகச் சொன்னால்
இறுதிச் சடங்குகளும் கூட வியாபாரமாகிவிட்ட இந்தச்
சந்தைச் சூழலில் திருமணத்தை மனம் சம்பத்தப்பட்டதாக
ஆக்கிவிட முடியாதா என ஏங்கித் தவிப்போருக்கு
இந்தக் கதை லேசாகக் கோடிட்டுக் காட்டும் புதுவழி
நிச்சயம் பிடிக்கும்

ஜாதிப்பூ எனப் பெயர் வைத்தது கூட அது குறித்து
மிக லேசாக மலர்களில் கூடவா ஜாதி என கேள்வி
எழுப்பி அது ஒழிய இப்படியும் ஒரு வழி என
அதிக அழுத்தம் தராது வித்தியாசமாக சொல்லிப்போனது
புதிய சிந்னைகளின் வாயிலாக
சாதி மத பேதமற்ற சமுதாயம் அமைக்க
விரும்புவோருக்கு நிச்சயம் அதிகம் பிடிக்கும்

ஒரு கதையென்றால் ஒரு சிக்கலும் அதன் உச்சமும்
பின் அதற்கான தீர்வையும் சொல்லிப்போய் அதில்
வாசகன் தானாக அது குறித்துச் சிந்திக்கும்படியாக
ஏதும் இல்லாது இருக்கிற பழைய பாணியில்
வெறுத்துப் போய் இருப்போருக்கு பல விஷயங்களை
புரிந்து கொள்ளும்படி விட்டுப்போனதும்
முடிவு நேர்மறையாக இருக்கும் என்பதைப்போல்
குறிப்பினை மட்டும் கொடுத்துப் போனது
நிச்சயமாக அதிகம் பிடிக்கும்

இப்படிப் பிடிக்கும் என்பதைச் சொல்லிப்போக
இக்கதையில் நிறைய இருப்பதால் எனக்கு மட்டுமல்ல
இதைப் படிப்போர் அனைவருக்கும் இக்கதை
மிகவும் பிடிக்கும்

சுருக்கமான ஆயினும் ஒரு நிறைவான கதையைக்
கொடுத்த வி.ஜி.கே அவர்களுக்கு எனது
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

 








மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








     



[ 4 ]


திரு


 ரவிஜி  



மாயவரத்தான் எம்.ஜி.ஆர்


அவர்கள்





mayavarathanmgr.blogspot.com




 



 ஹாட்-ட்ரிக் பரிசினை மேலும் 

தொடர்ந்து நான்காம் சுற்றிலும் 

தக்க வைத்துக்கொண்டு முன்னேறியுள்ள


திரு


 ரவிஜி  



மாயவரத்தான் எம்.ஜி.ஆர்



அவர்களின் விமர்சனம் இதோ:



“ பூக்களை விட… அந்தப்பூக்காரி… நல்ல அழகு!பதினாறுக்கு மேல் பதினெட்டு தாண்டாத பருவப்பெண்” என்று கதை ஒரு ‘யூத் டச்’ உடன் ஒரு சினிமாவின் துவக்கக் காட்சி போல் ஆரம்பிக்கிறது. பூக்களே அழகு. அதிலும் பூ விற்கும் அழகிய பெண்ணென்றால்…!  பூ வியாபரத்திற்கேற்றவாறு ......

இரட்டைப் பின்னல்கள்பாவாடை சட்டை தாவணிபளிச்சென்ற தோற்றம்படித்த பெண்ணாக தோற்றமளிக்கும் இவள் பூ வியாபாரத்திற்கு புதியவளா என்ற ஒரு கேள்விக் குறி! 

அந்தக்கோயில் வாசலில் ஏற்கனவே பூ விற்றுவந்த கிழவியின் வியாபாரம்இந்தப் புதுப் பெண்ணின்வருகையால் கடந்த ஒருவார காலமாகப்படுத்துப் போனது.  அழகான பெண் என்றால் பூ வாங்க கூட்டம் வருவதும், பக்தி வேடமிட்டாவது அவளைக் கவர்ந்திட நினைப்பதும் சகஜமென்றாலும் தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால் வழிசல் பேர்வழிகளையும், ஜொள்ளர்களையும் சாமர்த்தியமாக சமாளித்து முழுகவனத்தையும் செலுத்தி பூக்கூடையைக் காலி செய்துவிட்டு, கை நிறைய காசுடன் ‘வரட்டுமா பாட்டி?’ என்று கேட்டுச் செல்கிறாள்!

            அந்த பூ வியாபாரத்திற்கு சீனியரான பாட்டியோ கோபம் ஏதுமின்றி, போட்டியோ அல்லது பொறாமையோ கூட இல்லாதுஜாக்கிரதையாப் பார்த்துப் போம்மா கண்ணு” என்கிறாள் வாஞ்சையுடன்! ஏன்?

        இந்த இடத்தில், அந்த இளம் பெண் யார், பாட்டிக்கு என்ன உறவு என்று கீற்றாக ஒரு சந்தேகம் கலந்த கேள்வி வாசகனுக்கு எழுகிறது! 

      அந்தப்பெண் யார், அவள் பெயரென்ன, எந்த ஊர், எங்கே தங்கி இருக்கிறாள் என்று பலரும் எழுப்பும் சந்தேகத்திற்கு, ‘என் பிழைப்பைக் கெடுக்க வந்தவள், வேறொன்றும் தெரியாது! இனிமேல் அது வெள்ளி செவ்வாய் மட்டும்தான் வருமாம்!’ என்று சொல்லி ஜொள்ளர்களின் சூடான நெஞ்சங்களில் தண்ணீரை ஊற்றி அணைக்கிறாள்! அவளுக்கென்ன அக்கறை?

      மற்றவர்களெல்லாம், பேசாமல் சென்றுவிட அந்த இளைஞன் மட்டும் கிழவியின் காதில் ”செவ்வாய் வெள்ளியும் கூட இங்கு வரவேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடுங்க” என்று சொல்கிறான். அந்தப்பெண்மீது அவனுக்கென்ன அக்கறை? இதை ரகசியமாகச் சொல்லுமளவிற்கு, பூக்கார பாட்டியுடன் என்ன உறவு? இவ்வாறு அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பிவிட்டு, அவற்றுக்கு பதில் சொல்வதுபோல் கதை நகர்கிறது! பல வண்ணப்பூக்களை ஒரு நூலோ அல்லது நாரோ இணைப்பதனைப்போல சின்னச் சின்ன வண்ணமயமான காட்சிகளை திரைக்கதை பாணியில் கோர்த்துச் சென்றிருப்பது அருமையான உத்தி!

      அந்த இளைஞன் உண்மையிலேயே கடவுள் பக்தி உள்ளவன்; தினம் தவறாமல் கோயிலுக்கு வருபவன்; கிழவிக்கு அவனது சின்னவயது முதலாகவே பழக்கமுண்டு என்பதும் அவனை அவள் ‘பேராண்டி’ என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு பழக்கமென்பதும் முதலில் கோடிட்டுக்காட்டப் படுகிறது.  பூக்காரக் கிழவி உடல் நலமின்றி இருந்த பொழுது, மழையில் நனையாமல் குடையுடன் பத்திரமாக வீட்டிற்குக் கொண்டு போய்விட்டது இங்கே தெரியப்படுத்தப்படுகிறது. தள்ளாத வயதிலும் பூவிற்று தன் உழைப்பில் உயிர்வாழும் கிழவிமேல் அவனுக்கு ஒரு தனி பிரியம். கோயிலுக்குப்போய் ஸ்வாமி கும்பிட்டு விட்டு திரும்ப வீட்டுக்குப் போகும்முன் இந்தக் கிழவியிடம் ஒரு பத்து நிமிடங்களாவது தினமும் பேசி விட்டுத் தான் போவான்.

அந்த நட்புறவு அவனது சிறுவயதில் பூக்களின் பெயர்களைத் தெரிந்துகொள்வதில் துவங்கி வளர்ந்தது!  பூக்களிலே ‘ஜாதிப்பூ’ என்ற ஒன்று இருப்பதை அறிந்து ‘பூக்களிலும் தனியாக ஒரு ஜாதியா?’ என்று கேள்வியெழுப்புவதான அவனது பாத்திரப்படைப்பு அவனுக்கு ஜாதி வித்யாசங்கள் சிறுவயதிலிருந்தே இல்லை என்பதனை அறிவுறுத்துகிறது! அவன் பள்ளியில் முதல் ரேங்க் வாங்கியது, கல்லூரியில் படித்து உள்ளூர் பேங்க் ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணிபுரிவது வரை அவ்வப்பொழுது பகிர்ந்துகொண்டு பாட்டியின் வாழ்த்துக்களையும் பெற்று வந்துள்ளான். இவை எல்லாமே பாட்டிக்கும் ‘பேரனு’க்கும் உள்ள ஆழ்ந்த நட்புணர்வினை தெளிவுபடக் கூறுவதாக இருக்கிறது.

ஜாதி வித்தியாசம் பார்க்க விரும்பாத அந்தப்பையன் தான் பெண் வீட்டிற்கு எந்த செலவும் வைக்காமல் திருமணம் செய்துகொள்ள விரும்பிடும் அந்த இளம் பூக்கார அழகுப்பெண்ணை பொது இடத்தில் மற்றவர் பார்த்து ஜொள்ளு விடுவதை சகியாமல் பாட்டியிடம் விருப்பத்தைத் தெரிவித்து அது நிறைவேற அசீர்வதிக்கும்படியாக வேண்டுகிறான். பாட்டியிடம் வேண்டியது அம்பாளிடமே வேண்டியதுபோல நல்ல சகுனமாய் கோயில் மணிஅடித்து அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

      இங்கே ஒட்டுமொத்த கதைசுருக்கமும் ஏறக்குறைய தரப்பட்டுவிடுகிறது. 

உயர்நிலைப் பள்ளிப்படிப்புத் தேர்வு முடிந்துலீவுக்கு பூக்காரப்பாட்டியின் வீட்டுக்கு வந்துள்ள பேத்திஜாலிக்காக அவளுக்கே போட்டியாக ஒரு மாதம் மட்டும் பூ வியாபாரம் செய்யப்போவதோடு தான் யார் என்பதை எவருக்கும் சொல்லக்கூடாது என்று நிபந்தனை போட்டிருக்கிறாள்!

            அதன்பிறகான பிளாஷ்பேக் நிகழ்வே இதுவரையிலான கதை!

      பழம் நழுவிப் பாலில் விழுவதைப்போல, நன்றாகப் படித்து, நல்ல வேலையிலுள்ள, பாசத்தோடு, கடவுள் பக்தியோடு, நற்குணங்களும் பொருந்திய, சிறுவயதுமுதலே தான் நன்கு அறிந்த பையனே விளையாட்டாக பூவிற்க வந்த தனது பேத்திக்கு பூச்சூடி மணமகளாக ஆக்கிக்கொள்ள விரும்புவதை அம்பாளின் அனுக்கிரஹமாகவே எண்ணி சந்தோஷத்தில் பூரித்து பூத்துக் குலுங்குகிறாள் பூக்கார பாட்டி!

      அந்த அம்பாளே பேசுவதுபோல தனது முடிவாக சஸ்பென்ஸையும் உடைப்பதுபோல எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா ‘மாப்ளே’ என்கிறாள் அந்தப்பாட்டி.  அப்பொழுதே தனது பேத்தியை அவனுக்குக் கட்டிவைக்க முடிவு செய்திருப்பதனை மறைமுகமாகத் தெரிவிக்கிறாள். 

முதலில் நல்ல சகுனமென ஒலித்த கோயில் மணி, பாட்டி ‘மாப்ளே’ என்றழைக்கும்பொழுது சிம்பாலிக்காக  மேளதாள’த்துடன் கோயில்மணி ஒலிக்கிறது.  பாட்டியாக மனோரமா ஆச்சி, ‘பேத்தி’யாக தமன்னா, ‘பேரனாக’ இருந்து மாப்பிள்ளையாக இருக்கும் பாத்திரத்தில் சூர்யா என்பதான ஒரு காட்சி நமது மனக்கண்ணில் விரிகிறது.

மணக்கும் ‘ஜாதிப்பூ’ விற்கும் அவனது மனங்கவர்ந்த அழகிய பெண்ணேயே அவன் மணந்து  ‘பெண்ஜாதி’ஆகும் குறியீடான சுபநிகழ்வுடன்…’சுபம்’. எளிமையே வலிமை என்பதுபோல் அருமையான எளிமையான நடை! கதை முழுவதுமே இழையோடும் ஒரு பாஸிடிவ் அப்ரோச் வாசிக்கும் நமக்கு ‘சுகம்’. “திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன” என்பார்கள்! இங்கோ சொர்கத்தின் வாசலான கோயில் ஒன்றின் வாசலில் நிச்சயிக்கப்படுகிறது! ‘பேத்தி’யும் ‘மாப்பிள்ளையும்’ பேசுவது போன்ற சிறிய நிகழ்வு ஏதாவது ஒரு இடத்தில் அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! ‘புதுமணமக்கள்’ நீடூடி வாழ அந்த  அம்பாள் அனுக்ரஹம் பெற நாமும் வேண்டுவோம்!

நன்றி!
 











மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










இந்தப் போட்டியில் சரிசமமாகப் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள் எழுதியுள்ள விமர்சனங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-19


 எட்டாக்க(ன்)னிகள் !  




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 

29 . 05 . 2014


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.













என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

21 கருத்துகள்:

  1. பரிசு வென்ற திரு ரமணி ஐயா அவர்கள் - திரு ரவிஜி அவர்கள்-
    இருவருக்கும் இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. பரிசு வென்ற திரு. ரமணி ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! தொடரட்டும் வெற்றிகள்! இடுகைகள் மூலமாக அங்கீகரித்து பாராட்டி ஊக்கமளித்துவரும் திரு.வை. கோ. ஐயா அவர்களுக்கும், நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மீண்டும்!

    பதிலளிநீக்கு
  3. VGK-16 ஜாதிப்பூ Equal Prize Winners:

    http://mayavarathanmgr.blogspot.in/2014/05/vgk_24.html
    திரு. ரவிஜி மாயவத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்


    இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  4. // எல்லாமே வயிற்றுப்பாட்டுக்குத் தான்.

    பூ விற்பவர்களில் வயதானவர்கள் என்றும் உண்டு;

    இள வயசுக்காரர்களும் உண்டு.

    இளவயதினரிடம் பூ வாங்கும் கூட்டம் குவிவதையும்---

    வயதானவர்கள் வியாபாரம் சுணங்கிப் பரிதவிப்பதையும்---

    பார்த்த பரிதாபத்தில் கதாசிரியர்

    மனத்தில் பூத்த கதையோ இது!.... //


    நதி மூலமோ ரிஷிமூலமோ என்பார்கள். இது கதை மூலம் போலிருக்கு!

    எழுத்தாளர் மனசில் விதையாய் விழுந்த கருத்து மாற்றம் கண்டு தகுந்த ஜோடனையுடன் எப்படி செடியாய் மலர்ந்து பூத்து
    குலுங்குகிறது என்பதே யோசனையாய் போயிற்று.

    பதிலளிநீக்கு
  5. பரிசு பெற்ற திரு. ரமணி அவர்களுக்கும், திரு. ரவிஜி
    \அவர்களுக்கும் பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  6. ஒரு எழுத்தாளனுக்கு இதைவிட வேற என்ன வேண்டும் ? பரிசு பெற்றவர்களை வாழ்த்த வயதில்லை மேலும் பரிசு பெற பிரார்த்திக்கிறேன், இடுகையிட்ட ஐயா வை. கோபாலகிருஸ்ணன் அவர்களுக்கு நன்றி.
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. பரிசு பெற்ற திரு. ரமணி ஐயா அவர்களுக்கும்
    பரிசு பெற்ற திரு. மாயவரம் ரவி அவர்களுக்கும்
    எனது நல்வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  8. திரு. ரமணி அவர்களுக்கும், திரு. ரவிஜி \அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. இதுவரை வாழ்த்து தெரிவித்த இனிமேல் தெரிவிக்க இருக்கிற அன்பு உள்ளங்கள் அனைவர்க்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்!
    ரவிஜி...

    பதிலளிநீக்கு
  10. பரிசு பெற்ற திரு ரமணி மற்றும் திரு ரவிஜி அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள். ரமணி ஐயாவின் விமர்சனம் அவரது படைப்புகள் போலவே அருமை. திரு ரவிஜி, உங்கள் கதையை ஒரு சினிமாகவே, மனதுக்குள் வரித்து விட்டார். குறும்படமாக எடுக்கலாம் இக்கதையை.....

    பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. பரிசு பெற்ற திரு ரமணி மற்றும் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள். வித்தியாசமான விமரிசனங்கள்.

    பதிலளிநீக்கு
  12. எரர் மெசேஜ் வந்தது. பின்னூட்டம் திரும்பவும் கொடுக்கிறேன். பரிசு பெற்ற திரு ரமணி மற்றும் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள். வித்தியாசமான விமரிசனங்கள்.

    பதிலளிநீக்கு
  13. http://yaathoramani.blogspot.in/2014/05/blog-post_8735.html
    Mr. S V Ramani Sir

    இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  14. திரு ரமணி மற்றும் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. பரிசு வென்ற திரு ரமணி சார் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. பரிசு பெற்ற திரு. ரமணி அவர்களுக்கும் திரு. மாயவரம் ரவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. பரிசு வென்ற திரு ரமணி சார் திரு ரவிஜியவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. திரு ரமணிசார் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு