என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 16 ஏப்ரல், 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-2]



ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-2]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-2


[திருச்சூரில் வடக்கும்நாதன் என்ற பெயரில் உள்ள சிவன் கோயிலில் சிவகுருவும், ஆர்யாம்பாளும்]





ஆர்யாம்பாள்: 


ஸ்வாமீ! நாம் இங்கு திருச்சூர் வடக்கும்நாதன் கோயிலுக்கு வந்து விரதம் மேற்கொண்டு இன்றுடன் 48 நாட்கள் முடிவடைகின்றன. 


வடக்கும்நாதன் ஸ்வாமி நமக்கு அருள் புரிவாரா? 


நமக்குக் குழந்தை பாக்யம் கிட்டுமா?


சிவகுரு: 


நமக்கு எந்த பாக்யத்தை எப்போது அளிக்க வேண்டும் என்பது அந்த பகவானுக்குத் தெரியும் ஆர்யா! 


நாம் யாருக்கும் எந்தக்கெடுதலும் மனதால் கூட நினைப்பதில்லை. 


நம்மைவிட ஏழையாக உள்ளவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளும், தொண்டுகளும் செய்து வருகிறோம். 


சிவனே கதியென இந்த 48 நாட்களில் நம் விரதத்தையும் முடித்து விட்டோம். 


நல்லதையே நினைப்போம். 


அந்த சிவன் அருளால் நிச்சயம் நல்லதே நடக்கும்.


[சிவபெருமான் தோன்றுதல். சிவகுருவும் ஆர்யாம்பாளும் மகிழ்ச்சியுடன் சிவனை வணங்குதல்.]


சிவன்: 


உங்கள் பக்தியை மெச்சினோம். 


உங்களுக்குக் குழந்தைப்பேறு ஏற்பட அருள் புரிகிறோம். 


உங்களுக்கு மந்த புத்திகொண்ட பல குழந்தைகள் வேண்டுமா அல்லது அதிபுத்திசாலியான ஒரே மகன் வேண்டுமா?


சிவகுரு: 


அதை முடிவு செய்வது நாங்கள் அல்ல ஸ்வாமீ. எங்களுக்கு எது நல்லதோ அதைத் தாங்களே பார்த்து அருள் புரிய வேண்டும்.. ஸ்வாமீ.


சிவன்: 


உங்களின் சரியான பதிலால் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். 


அப்படியே நடக்க அருள் புரிகிறோம். நிம்மதியாகச் சென்று வாருங்கள்.


[சிவபெருமான் மறைந்து போய் விடுதல்]






 வடக்கும்நாதன் ஆலயத்தில் நடைபெறும்
திருச்சூர் பூரத்திருவிழா

[அந்தக்காலத்தில் தென் கைலாஸம் என்றே 
அழைக்கப்பட்ட பழமையான ஆலயம்]

[இதன் தொடர்ச்சி தினமும் இரவு 9 மணி சுமாருக்கு வெளியிடப்படும்]

31 கருத்துகள்:

  1. ஆதி சங்கரர் அவதாரத்தில் இருந்து ஆரம்பமா. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆதி சங்கரர் அவதாரம் பற்றிய விஷயங்கள் தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆரம்பம் சிவ தரிசனத்தில்...
    அவதார சுவடுகளை
    நித்தமும் தரிசிக்க வருகிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. நமக்கு எந்த பாக்யத்தை எப்போது அளிக்க வேண்டும் என்பது அந்த பகவானுக்குத் தெரியும் ஆர்யா!

    சிவனே -- மகனே என்று அழைக்க வரம் தரும் அற்புத வரலாறு

    பதிலளிநீக்கு
  5. வடக்கும்நாதன் ஆலயத்தில் நடைபெறும்திருச்சூர் பூரத்திருவிழா
    [அந்தக்காலத்தில் தென் கைலாஸம் என்றே அழைக்கப்பட்ட பழமையான ஆலயம்]


    அருமையான வடக்கு நாதர் பூரத்திருவிழா படங்களுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. சிவாம்சமான ஆதிசங்கரர் அவதாரம் அமர்க்களமான ஆரம்பம்..

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கு மந்த புத்திகொண்ட பல குழந்தைகள் வேண்டுமா அல்லது அதிபுத்திசாலியான ஒரே மகன் வேண்டுமா?


    சிவகுரு:


    அதை முடிவு செய்வது நாங்கள் அல்ல ஸ்வாமீ. எங்களுக்கு எது நல்லதோ அதைத் தாங்களே பார்த்து அருள் புரிய வேண்டும்.. ஸ்வாமீ //

    எத்தனை அனுபூதி பெற்ற தம்பதிகள்!

    முடிவை சிவனிடமே விட்டதால்தானே சிவனே வந்து மகனாக பிறந்து பெற்றோராகும் பாக்கியம் பெற்றார்கள் ...

    பதிலளிநீக்கு
  8. ஆதி சங்கரர் பற்றி படித்திருக்கிறேன். உங்கள் எழுத்துக்களில் திரும்ப தரிசிக்கப் போகிறேன். :)

    பதிலளிநீக்கு
  9. நல்ல பகிர்வு சார். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. எங்களுக்கு எது நல்லதோ அதைத் தாங்களே பார்த்து அருள் புரிய வேண்டும்.. ஸ்வாமீ.//

    இறைவனிடம் இப்படித்தான் பிராத்தனை செய்ய வேண்டும்.
    இது தான் நல்ல முறை.

    பதிலளிநீக்கு
  11. பாமரரும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் பெரிய விஷயத்தை சொல்கிறீர்கள்...பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. Very apt question from Lord Shiva, and an equally apt reply from Sivaguru. It is not that we always get that we pray for. But God always gives us what is really required by us. Obviously, we don't know what we really want - we tend to pray for some mundane things in life.

    பதிலளிநீக்கு
  13. மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்ற வள்ளுவரின் வாக்கு நினைவுக்கு வந்தது!

    பதிலளிநீக்கு
  14. //அதை முடிவு செய்வது நாங்கள் அல்ல ஸ்வாமீ. எங்களுக்கு எது நல்லதோ அதைத் தாங்களே பார்த்து அருள் புரிய வேண்டும்.. ஸ்வாமீ.

    //

    எப்பேற்பட்ட பக்குவப்பட்ட மனம்!!!!!

    பதிலளிநீக்கு
  15. Only god knows who deserves what. If we understand that and submit ourselves 100% at the feet of almighty he takes care of his children.

    I have experienced, experiencing.. :)

    Each one's life gives the other valuable lessons.

    பதிலளிநீக்கு
  16. Mira,

    Thank you very much for your kind entry & valuable comments to
    Part 2,4,5,7 & 11 of this drama.

    Affectionately yours,
    Gopu

    பதிலளிநீக்கு
  17. காட்சி அமைப்புகள் நாடகத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கிறீர்கள். இந்த நாடகம் எங்கே அரங்கேறியது?

    பதிலளிநீக்கு
  18. ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர

    சங்கரர் அவதாரம் முதல் தொடங்கியுள்ளீர்கள்.

    ரொம்ப எளிமையாக புரிந்து கொள்ளும்படி உள்ளது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. ஒரு தகவலை சாதாரணமாய் சொல்வதை விடவும் நாடக பாணியில் சொல்லும்போது அதன் தாக்கம் அதிகம். மேலும் தேவையில்லாத செய்திகள் தவிர்க்கப்படுகின்றன. இங்கும் அப்படியே...

    எப்படிப்பட்ட குழந்தை வேண்டும் என்பதை இறைவனின் பொறுப்பிலேயே விட்டுவிட்ட தம்பதியர் புத்திசாலிகள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. நமக்கு என்ன தரவேண்டுமென தீர்மானிப்பவர் இறைவனே .அதை அழகா சொல்லிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  21. படங்க அல்லா நல்லாகீது நமக்கு எது எது எப்பூடில்லா நடக்கணுமோன்னு அந்த ஆண்டவருதானே தீர்மானம் செய்துபோடுவாங்கல.

    பதிலளிநீக்கு
  22. படங்களுடன் பதிவு சுவாரசியமாக ஆரம்பம் ஆண்டவன் தன் பக்தர்களை ஒரநாளும் கைவிட மாட்டாரே.

    பதிலளிநீக்கு
  23. நமக்கு எந்த பாக்யத்தை எப்போது அளிக்க வேண்டும் என்பது அந்த பகவானுக்குத் தெரியும் ஆர்யா! // வசனங்களுடன் வாழ்க்கைத்தத்துவம்...

    பதிலளிநீக்கு
  24. Comments Received from Mrs. PADMA SURESH ON 01.01.2019 thro' mail

    -=-=-=-=-

    Mama, Namaskarams. Wish you a very happy new year.

    Yesterday only I could manage some time to read the skits on Adi Shankara. Really it is awesome. The introduction of Kittu and Pattu proves your level of creative thinking and it becomes easier to reach out the minds of young children as the names Kittu and Pattu would be quite fascinating for the kids.

    Honestly, even I was not aware of all the stories narrated in the skit except a few. In fact, these stories MUST BE narrated to the children these days as it helps to develop morality in the society, respect our culture and many more positive attributes can be brought about in the community, which is the need of the hour.

    Thank you very much for sharing the skit, mama

    -=-=-=-=-

    பதிலளிநீக்கு
  25. WHATS-APP COMMENT RECEIVED ON 09.05.2019
    FROM Mr. RAJU alias S. NAGARAJAN, M.Com.,

    -=-=-=-=-=-=-=-=-
    My sincere namaskarams to Gopu mama (BHEL) for depicting the life history of Sri Adi Shankara in dramatic form with beautiful but simple style of words. I have the opportunity to read all the episodes today and stunned voiceless, how much knowledge he has. I pray Lord Sankara on his Jayanthi day, to give Gopu Mama hundreds of years of peaceful life to give numerous stories of dharma to uplift our life. Crores of pranams to his lotus feet.
    -=-=-=-=-=-=-=-=-

    Thanks a Lot, My Dear Raju.
    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  26. Whats-app message received today (18.5.2021) from one Mr. Libya Vasudevan (9442157457), Retired Senior Manager, BHEL, now residing at T.V.KOIL. 
    -=-=-=-=-=-=-=-=-

    Gopu Ji,

    Your Adhi Shankarar Tamil Drama was forwarded to one of my friends, who is a Music Teacher working in Kothagiri, near Ooty.

    He liked very much your presentation and the compilation of Adhi Shankara's life history.

    He wants to use it 'as it is' without any change for enacting a drama by his students.

    I need your clearance cum acceptance as well permission  to conduct a drama in school stage in the near future.

    Hope you will approve. Please confirm.

    My brothers and sisters have well received this Drama and eagerly to read further and other creations by you. 

    --oOo--

    My Dear Vasu,

    Thanks for your Comments. As discussed over phone, I have no objection in using my script for School Stage Drama or Radio Audio Drama or in any other form by school children.

    All the Best. - vgk - 19.05.2021

    பதிலளிநீக்கு