என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 16 பிப்ரவரி, 2013

என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் !





என் வீட்டு ஜன்னல் கம்பி 
ஒவ்வொன்றாய்க் 
கேட்டுப்பார் !

அனுபவம்
By
வை. கோபாலகிருஷ்ணன்


[ பகுதி 3 of 3 ]

-oOo-




இந்த என் வீட்டு ஜன்னலுக்கு பக்கத்திலேயே தான் என்னுடைய DOUBLE COT கட்டிலில், என் படுக்கை கும்முன்னு மெத்தையோட இருக்கும். எனக்கு படுத்துக்கொள்ளும் போது குறைந்தது ஒரு ஏழு தலையணியாவது வேணும். அதுவும் ஒவ்வொன்றும் கொஞ்சம் கிண்ணுன்னு மோதமுழங்க இருக்கணும். தொஞ்ச பஜ்ஜி மாதிரி இருக்கக்கூடாது. 

அதாவது தலைக்கு மூன்று, காலுக்கு இரண்டு, இரண்டு கால் தொடைகளுக்கும் இடையிலே இரண்டு தலையணி வேண்டும். 

என் கட்டிலிலே நானும் என் இன்றைய அன்புக்காதலியான லாப்டாப்பும் மட்டும் தான் இருப்போம். எப்போதுமே நான் தலையணிகளில் சாய்ந்து படுத்துக்கொண்டே தான்,[ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமாள் போலத்தான்] லாப்டாப்பில் படிப்பேன், அடிப்பேன், ஆபரேட் செய்வேன்.  


ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமாள்

கட்டிலின் இருபக்கங்களிலும் இரண்டு  மிகப்பெரிய பைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். 

அவற்றில் நிறைய ‘மிக்ஸர், காராபூந்தி, ஓமப்பொடி, காராச்சேவ், வறுத்த முந்திரி, பச்சை முந்திரி, பாதாம் பருப்பு, தூள்பக்கோடா, சிப்ஸ், முறுக்கு, தட்டை, பாப்கார்ன், மஸாலா கடலை, கடலை மிட்டாய், கடலை உருண்டைகள், தித்திப்பு தேன்குழலான மனோரக்கா உருண்டைகள்,  தேங்காய் பர்பி,  நிலக்கடலை, பொட்டுக்கடலை, அச்சு வெல்லம், போன்ற பலவிதமான பக்க வாத்யங்களான கரமுராக்கள், சின்னச்சின்ன 50 கிராம் / 100 கிராம் பாக்கெட்களாக வாங்கி ஸ்டாக்கில் வைத்திருப்பேன்.





இவையெல்லாம் நான் மட்டும் தின்பதற்காக, எனக்காக மட்டும் அல்ல. என்னை நாடி வருவோருக்கு கொடுப்பதற்காகவும் தான்.  

இது எல்லாமே செளகர்யமாகவே இருந்தாலும், “பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது” என்ற பாடல் போல நான் பெரும்பாலும் இரவெல்லாம்  சரியாகத் தூங்குவதே இல்லை. 

லாப்டாப்புக்கு நெட் கனெக்‌ஷன் சரியாகக் கிடைக்காமல் போனால் தான், நானும் தூங்கப்போகலாமா என யோசிப்பது வழக்கம். 

லாப்டாப்புக்கு நெட் கனெக்‌ஷன் இருக்கும் பக்ஷத்தில், பெரும்பாலும் விடியற்காலம் தான் நான் தூங்கவே ஆரம்பிக்கிறேன். அதனால் நான் எழுந்திருக்கவும் மிகவும் தாமதம் ஆகி விடுகிறது.  

எல்லாமே இந்த வலைப்பதிவுக்கு வந்த 02.01.2011 க்குப் பிறகு தான், இப்படியெல்லாம் நடக்கிறது. 

அதற்கு முன்பெல்லாம் நான் இப்படி இருந்ததே இல்லை. ஏதாவது புஸ்தகம் படிச்சுக்கிட்டே இருப்பேன். அப்படியே ஒரு அரை மணி நேரத்தில் தூங்க ஆரம்பித்து விடுவேன்.

நான் எப்போது தூங்கி கண் விழித்தாலும், முதலில் ஜன்னல் கதவுகளில் உள்ள [ கொசுக்கள் உள்ளே நுழையாமல் இருப்பதற்காகப் போடப்பட்டுள்ள] வலைக்கதவுகளைத் திறப்பேன். பிறகு ஜன்னல் கதவுகளையும் விரியத் திறப்பேன். அழகாக உச்சிப்பிள்ளையாரும் தாயுமானவரும் குடிகொண்டுள்ள மலையைப் தரிஸிப்பேன். வணங்குவேன்.
            
                                                                                                                  

என் வீட்டுக்குள் இருந்தவாறே  ஜன்னல் கம்பிகள் 
வழியாக எடுக்கப்பட்ட படங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மலைக்கோட்டையை, அநேகமாக மலையைச்சுற்றிக் குடியிருக்கும் எல்லோருமே மிகச்சுலபமாகப் பார்க்க முடியும் தான். 

என் வீட்டு ஜன்னல்களுக்கு உள்ள 
தனிச்சிறப்பு இதோ கீழே வருகிறது.




என் வீட்டில், என் படுக்கையில் அமர்ந்தவாறே, என் வீட்டு ஜன்னல் கம்பிகள் வழியாக,  “ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி” கோயிலின் இரண்டு கோபுரத்தையும் ஒருங்கே தரிஸிக்க முடிகிறது.  

கோபுர தரிஸம் கோடிப்புண்ணியம் அல்லவா!  இரண்டு கோபுர தரிஸனம் என்றால் புண்ணியமும் இரண்டு கோடியல்லவா!! அதுவும் தினமும் இரண்டு கோடிகள் அல்லவா!!!

ஒன்று கிழக்கு பார்த்த கோபுரம், மற்றொன்று மேற்கு பார்த்த கோபுரம். இரண்டு கோபுரத்தின் சைடு போர்ஷன்களும் அழகாக என் வீட்டு ஒரே ஜன்னல் மூலம் காட்சியளிக்கும். அத்தோடு உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் மலைகளும்.  வேறென்னங்க வேணும் என் மகிழ்ச்சிக்கு. ;))))) 

இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர் கோயில் ஓரளவு நல்ல பெரிய கோயில். தினமும் நான்கு கால பூஜைகளும் முறைப்படி நடைபெற்று வருகின்றன.   

கோயில் மணி அடித்தாலும், மேளம் + நாயனம் வாசித்தாலும், என் வீட்டினில் அந்த இன்னிசை மென்மையாகக் கேட்கும். வீட்டிலிருந்து ஐந்தே நிமிடத்தில் இந்தக் கோயிலை அடைந்து விட முடியும்.  

பிரதோஷம் தோறும் கோயிலுக்குள்ளேயே ரிஷப வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு அமர்க்களமாக நடைபெறும்.  அன்னாபிஷேகம் போன்ற அனைத்து விசேஷங்களும் வெகு சிறப்பாக நடைபெறும். நவராத்திரி 10-12 நாட்களும் மிக அழகான அம்பாள் அலங்காரங்களும், வீதிகளில் அம்பாள் புறப்பாடும் வெகு ஜோராக நடைபெறும்.  விஜயதஸமியன்று ஸ்வாமி அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். 

பிள்ளையார், முருகன், ஸ்வாமி, அம்பாள், சந்திரன், சூரியன், கால பைரவர், தக்ஷிணாமூர்த்தி, 63 நாயன்மார்கள், கஜலக்ஷ்மி,  இடும்பன், ஸ்ரீ துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரஹங்கள், ஸ்ரீ ஹனுமான் போன்ற அனைத்துக் கடவுளுக்கும் தனித்தனி சந்நதிகள் இந்த “ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர் கோயிலில் உண்டு.  

பிரஸாதங்கள் தயார் செய்யுமிடமான மடப்பள்ளியும் உண்டு. தினமும் மதியம் சுமார் 50 ஏழை ஜனங்களுக்கு  கோயிலுக்குள்ளேயே ஓர் பெரிய இடத்தில், அவர்களை டேபிள் சேர் போட்டு அமர வைத்து , அன்னதானமும் செய்யப்பட்டு வருகிறது. அன்னதானத்திற்கென தனியே ஒரு உண்டியலும் வைத்து நிர்வகித்து வருகிறார்கள்.

ஸ்வாமி புறப்பாடுகள் நடத்த, புத்தம் புதியதாக பெயிண்ட் செய்யப்பட்ட மிகப்பெரிய வாஹனங்களும் இந்தக்கோயிலில் உள்ளன. மிகச்சிறப்பாக பராமரிக்கப்படும் மிகவும் சுத்தமான அதுவும் HEART OF THE CITY யில் அமைந்துள்ள கோயிலாகும் இது.

மேலே சைடு போர்ஷனில் மட்டும் படத்தில் தெரியும்  அந்த இரண்டு கோபுரங்களும், ஸ்வாமி அம்பாள் கருவறை விமானங்களின் உச்சிப்பகுதியும் என் வீட்டுக்குள் இருந்து ஜன்னல் கம்பிகளின் வழியே எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த இரண்டு கோபுரங்களின் முழுத் தோற்றத்தினையும் இதோ இங்கே பாருங்கோ:






கிழக்கு நோக்கிய 
கோபுரத்தின் முன்பகுதி



மேற்கு நோக்கிய 
கோபுரத்தின் முன்பகுதி


ஸ்ரீ நாகநாதர் [சிவன்] 




ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள்

இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாளுடன் எனக்கு நீண்டகாலமாக பரிச்சயமும், ஆத்மார்த்த பிரியமும், அளவுக்கு அதிகமான அன்பும்,  பாசமும், பக்தியும் உண்டு. 

இந்த அம்பாளுடன் நான் மிகவும் உரிமையுடன் சண்டை போட்டதும் உண்டு. மிகுந்த கோபப்பட்டதும் உண்டு. அவற்றில் ஒரு சம்பவத்தைக்கூட என் பதிவினில் எழுதியுள்ளேன்.

இணைப்பு இதோ: 

http://gopu1949.blogspot.in/2012/03/5.html




தைப்பூசத்தன்று, திருச்சியில் உள்ள அனைத்துக்கோயில் ஸ்வாமி, அம்பாள் விக்ரஹங்களும், காவிரி ஆற்றில் தீர்த்தவாரி முடித்து, வெகு சிறப்பான அலங்காரங்களுடன் எங்கள் தெருவழியாகவே ஆரம்பித்து, விடியவிடிய இன்னிசைக் கச்சேரிகளுடன் ஊர்வலமாக  திருச்சி மலைக்கோட்டையைச்சுற்றிச் செல்வது வழக்கம். 

சூர சம்ஹார நிகழ்ச்சியன்று, ஸ்ரீ முருகப்பெருமான் செம்மறி ஆட்டுக்கடா வாகனத்தில் அமர்ந்தவாறு, சூரனின் தலையை வாங்கும் நிகழ்ச்சி  எங்கள் கட்டட வாசலில் மட்டுமே வெகு சிறப்பாக நடைபெறும் ஒன்றாகும்.  

திருச்சி பக்கம் அடிக்கடி வருபவர்கள் சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ள “ஸ்ரீ நாகநாதா டீ ஸ்டால்” என்ற கடையினை நகரத்தின் ப்ல இடங்களில் ஒரே மாதிரியான அமைப்புடன் கண்டிருக்கலாம். இந்தக்கோயிலின் ஸ்வாமி பெயரில் தான், அந்தக்கடைகளை ஒரே முதலாளி தான், பல இடங்களில் நடத்தி வருகிறார். அவர் வசிக்கும் பங்களாவும் எங்கள் வடக்கு ஆண்டார் தெருவிலேயே “ஸ்ரீ நாகநாதர் இல்லம்” என்ற பெயரில் அமைந்துள்ளது.

என் குடியிருப்புப்பகுதியின் மொட்டை மாடிக்குச் சென்றால் போதும், தெற்கு நோக்கினால் மிகவும் அருகிலேயே மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலையும், ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரரான தாயுமானவர் கருவறையின் தங்கக் கலஸ கோபுரத்தையும் நான் மிகச்சுலபமாக தரிஸிக்கலாம்.

மொட்டைமாடியின் வடக்குப்பக்க ஓரத்திற்குச் சென்றால் காவிரி நதியையும், ஸ்ரீரங்கம் இராஜ கோபுரத்தையும் என்னால் காணமுடிகிறது. 

இடையில் இப்போது தோன்றியுள்ள  பலமாடிக் கட்டடங்களாலும், என் வீட்டிலிருந்து ஸ்ரீரங்கம் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் தாண்டியுள்ளதாலும், இராஜகோபுரத்தின் உச்சியை மட்டுமே,என் வீடு அமைந்துள்ள கட்டடத்தின் மொட்டைமாடியிலிருந்து எடுத்த  புகைப்படத்தில் கொண்டுவர முடிந்துள்ளது. அந்தப்படம் இதோ இங்கே:



     
ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் அருகே 
நேரில் சென்றால் காட்சியளிக்கும் தோற்றம்


சிலர் தங்கள் வீட்டை அழகு படுத்த வேண்டி, பெரும் பணம் செலவுசெய்து INTERIOR DECORATIONS என்று செய்துகொள்கிறார்கள்.

மலைகள், நதிகள், மரங்கள், பசுஞ்சோலைகள் போன்ற இயற்கைச்சூழலை செயற்கையாக படங்கள் மூலமும், துணியினால் ஆன திரைகள் மூலமும் வீட்டுக்குள் கொண்டு வந்து சுவற்றில் ஒட்டி மகிழ்கிறார்கள். 

எனக்கு அது போலெல்லாம் இயற்கையைச் செயற்கையாக வீட்டிற்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை என்பதை என் வீட்டு ஜன்னல் கம்பிகளைக் கேட்டாலே தெரியும். 

அந்த ஜன்னல் கம்பிகளின் மூலமே தான் நான் தினமும், இயற்கை அழகான திருச்சி மலைக்கோட்டையையும், அதன் மேல் உள்ள உச்சிப்பிள்ளையாரையும், அருகே உள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயிலின் தங்கக்கலஸத்தையும், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் ஸமேத ஸ்ரீ நாகநாதர் கோயிலின் இரண்டு கோபுரங்களையும், ஸ்வாமி + அம்பாளின்  மேற்கூரை விமானங்களையும், வீட்டில் என் கட்டிலில் அமர்ந்தவாறே ஒரே ஜன்னல் மூலம், கண்குளிரக்காணும் பாக்யம் பெற்றவனாக இருக்கிறேன் என்பது அந்த என் வீட்டு ஜன்னல் கம்பிகளுக்கு மட்டுமே தெரிந்த கதை.  

இவையெல்லாம் எனக்கு சாதகமாக இன்று அமைந்துள்ளது எல்லாமே, எல்லாம் வல்ல அந்த எங்கள் ஊர் உச்சிப்பிள்ளையார் அவர்களின் கருணை மட்டுமே என சொல்லிக்கொண்டு என்னுடைய இந்த கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.

இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக நேரில் பார்த்தும் கேட்டும் பரவஸம் ஆகிப்போய்விட்ட  ”மூன்றாம் சுழி” வலைத்தளத்தின் பதிவர் நம் அன்புக்குரிய திரு. அப்பாதுரை சார் அவர்கள், என் வீட்டு ஜன்னல் ஓரத்தில், தான் தங்க ஓர் இடம் கேட்டதில் வியப்பு ஏதும் இல்லை தானே ! 



மீண்டும் அடுத்த ஞாயிறு [24.02.2013] அன்று 
என் மற்றொரு பதிவின் மூலம் சந்திப்போம்

என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo- -oOo- -oOo-

இதே போன்ற வீடு கட்டிய அல்லது வீடு வாங்கிய 
தன் அனுபவத்தை சுவைபட எடுத்துக்கூற 
”மணம் (மனம்) வீசும் ” 
என்ற வலைத்தளப்பதிவர் திருமதி ஜெயந்தி ரமணி 
அவர்களை தொடர்பதிவிட நான் அழைக்கின்றேன்.

வாருங்கள் என் அன்புக்குரிய
http://manammanamviisum.blogspot.in
திருமதி ஜெயந்தி ரமணி அவர்களே!
தொடருங்கள்!!


[வேறு யாரேனும் பதிவர்கள் தங்களின் 
வீடு கட்டிய அல்லது வீடு வாங்கிய அனுபவத்தை 
எழுத விரும்பினாலும், இதையே 
 என் அழைப்பாக ஏற்றுக்கொண்டு  
எழுதினால் மிக்க மகிழ்ச்சிய்டைவேன்.]

அன்புடன் 
கோபு

168 கருத்துகள்:

  1. ஆஹா... என்னே தரிசனம்... கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்...

    ஆரம்பத்தில் பசிக்க வைத்து, பிறகு தரிசனம் செய்ய வைத்து, முடிவாக மிகவும் ரசிக்க வைத்து விட்டீர்கள்...

    உங்கள் வீட்டு ஜன்னல் ஓரத்தில் தங்குவதற்கு ஒரு இடம் கேட்க யாருக்கு தான் பிடிக்காது...?

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் February 16, 2013 at 5:53 AM

      வாருங்கள், வணக்கம்.

      //ஆஹா... என்னே தரிசனம்... கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்...

      ஆரம்பத்தில் பசிக்க வைத்து, பிறகு தரிசனம் செய்ய வைத்து, முடிவாக மிகவும் ரசிக்க வைத்து விட்டீர்கள்...

      உங்கள் வீட்டு ஜன்னல் ஓரத்தில் தங்குவதற்கு ஒரு இடம் கேட்க யாருக்கு தான் பிடிக்காது...?

      வாழ்த்துக்கள் ஐயா...//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  2. விரிவாக, விளக்கமாக, அழகாக, ரசனையாக, சுவையாக, ஆகா....! இன்னும் எத்தனையோ 'ஆக'க்களுடன் அப்பாதுரை சொன்ன ஒரு வரியை வைத்து விளாசித் தள்ளி விட்டீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே தத்துவத்தை நன்றாகக் கடைப் பிடிக்கிறீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்.February 16, 2013 at 6:34 AM

      வாங்கோ, ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //விரிவாக, விளக்கமாக, அழகாக, ரசனையாக, சுவையாக, ஆகா....! இன்னும் எத்தனையோ 'ஆக'க்களுடன் அப்பாதுரை சொன்ன ஒரு வரியை வைத்து விளாசித் தள்ளி விட்டீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே தத்துவத்தை நன்றாகக் கடைப் பிடிக்கிறீர்கள். அருமை.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான ரசனையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மகாப் பொறாமையாக இருக்கு கோபு சார்.:)
    கண்ணத்திறந்தால் கோபுரம் என்றால் யார்தான் அங்கே இருக்க மாட்டார்கள்
    விரிவாகத் தரிசனம் செய்து வைத்திருக்கிறீர்கள்.
    நாகநாத ஸ்வாமியும் ஆனந்தவல்லித் தாயாரும்,உச்சிப் பிள்ளையாரும் தாலாட்ட உறங்கக் கொடுத்துவைத்தவர் நீங்கள்.
    இந்த வளம் எப்பவும் நிலைக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் February 16, 2013 at 7:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மகாப் பொறாமையாக இருக்கு கோபு சார்.:)// ;)))))

      //கண்ணத்திறந்தால் கோபுரம் என்றால் யார்தான் அங்கே இருக்க மாட்டார்கள்? விரிவாகத் தரிசனம் செய்து வைத்திருக்கிறீர்கள்.//

      சந்தோஷம்.

      //நாகநாத ஸ்வாமியும் ஆனந்தவல்லித் தாயாரும்,உச்சிப் பிள்ளையாரும் தாலாட்ட உறங்கக் கொடுத்துவைத்தவர் நீங்கள்.
      இந்த வளம் எப்பவும் நிலைக்கணும்.//

      எல்லாவற்றிற்கும், என் முன்னோர்கள் + தங்களைப்போன்ற நலம் விரும்பிகளின் ஆசீர்வாதங்கள் தான் காரணமாக இருக்க முடியும்.
      தாங்கள் சொல்வதுபோல இந்த வளங்கள் எப்பவும் நிலைக்கட்டும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  4. வலைப்பதிவர் திரு.அப்பாத்துரை ஐயா நன்றாகத்தான் உங்கள் வீட்டு யன்லலோரம் நின்று நிறைய விஷயங்களை அவதானித்திருக்கிறார். அதனால்தான் உங்களை இப்பதிவை எழுதத்தூண்டி இருக்கிறார்.

    அருமை. மனதிற்கு மிகமிக ரசனை, பக்தி, அழகிய இயற்கைக் காட்சிகளை காணக்கூடியதான அழகிய, அமைதியான, அற்புதமான சூழலில் உங்கள் வீடு அமைந்ததும், இன்னும் யன்னலோரத்தில் நின்றே அத்தனையையும் கண்டு தரிசிக்கக்கூடியதாக அமைந்திருப்பது பெரிய கொடைதான்.

    உண்மை. நல்லதொரு இடத்தில் இத்தனையும் கிடைக்கப்பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரர்தான்.
    நல்ல வர்ணனையுடனான அழகிய பதிவு. அருமையான படங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி February 16, 2013 at 7:44 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வலைப்பதிவர் திரு.அப்பாத்துரை ஐயா நன்றாகத்தான் உங்கள் வீட்டு யன்னலோரம் நின்று நிறைய விஷயங்களை அவதானித்திருக்கிறார். அதனால்தான் உங்களை இப்பதிவை எழுதத்தூண்டி இருக்கிறார்.//

      யன்னலோரம் = ஜன்னலோரம்;
      அவதானித்திருக்கிறார் = கவனித்திருக்கிறார்

      இரண்டு புதிய அயல்நாட்டு தமிழ்ச்சொற்கள் உங்கள் மூலம் இன்று அறிய முடிந்தது. மிக்க நன்றி.

      //அருமை. மனதிற்கு மிகமிக ரசனை, பக்தி, அழகிய இயற்கைக் காட்சிகளை காணக்கூடியதான அழகிய, அமைதியான, அற்புதமான சூழலில் உங்கள் வீடு அமைந்ததும், இன்னும் யன்னலோரத்தில் நின்றே அத்தனையையும் கண்டு தரிசிக்கக்கூடியதாக அமைந்திருப்பது பெரிய கொடைதான்.//

      பெரிய கொடைதான் = பெரிய அதிர்ஷ்டம் தான் ;)))))

      மேலும் ஒரு சொல், ஆனால் இது நாங்களும் கூட உபயோகிப்பதே.

      //உண்மை. நல்லதொரு இடத்தில் இத்தனையும் கிடைக்கப்பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரர்தான்.//

      அப்படியா! உங்கள் பார்வையில் ஒருவேளை அப்படித்தெரியலாம். எனினும் மிக்க நன்றி.

      //நல்ல வர்ணனையுடனான அழகிய பதிவு. அருமையான படங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான ரசனையான மிகுந்த ஈடுபாட்டுடன் கூடிய நீ...ண்....ட கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,

      நீக்கு
  5. அந்த ஜன்னல் கம்பிகளின் மூலமே தான் நான் தினமும், இயற்கை அழகான திருச்சி மலைக்கோட்டையையும், அதன் மேல் உள்ள உச்சிப்பிள்ளையாரையும், அருகே உள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயிலின் தங்கக்கலஸத்தையும், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் ஸமேத ஸ்ரீ நாகநாதர் கோயிலின் இரண்டு கோபுரங்களையும், ஸ்வாமி + அம்பாளின் மேற்கூரை விமானங்களையும், வீட்டில் என் கட்டிலில் அமர்ந்தவாறே ஒரே ஜன்னல் மூலம், கண்குளிரக்காணும் பாக்யம் பெற்றவனாக இருக்கிறேன் என்பது அந்த என் வீட்டு ஜன்னல் கம்பிகளுக்கு மட்டுமே தெரிந்த கதை.//
    செயற்கையான இயற்கை காட்சி இல்லாமல் உண்மையான
    இயற்கை காட்சியும், கோவில் கோபுர தரிசனமும் அருமை.
    நீங்கள் சொல்வது போல் ஜன்னல் மூலம் கண்குளிரக்காணும் பாக்யம் பெற்றவ்ர்தான் நீங்கள்.

    உச்சிபிள்ளயார், தாயுமானவர், மலை தரிசன் படங்கள் அழகு. ஆனவல்லி அம்பாள், நாகநாத சாமி மூலவர் படங்கள் அழகு.
    தாயிடம் உரிமையுடன் சண்டையிட்டு கொள்வது தானே குழந்தையின் குணம்.
    அந்த பதிவை படிக்கிறேன்.
    நிறைவில் மலரும் ரோஜாபூ அழகோ அழகு.

    எல்லாம் வல்ல அந்த எங்கள் ஊர் உச்சிப்பிள்ளையார் அவர்களின் கருணை மட்டுமே //

    உண்மை, உண்மை, அவர் கருணையால் எல்லா நலன்களும் பெற்று குடும்பத்தினர் அனைவரும் நலமாக வாழ வாழ்த்துக்கள் சார்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு February 16, 2013 at 7:54 AM

      வாருங்கள், வண்க்கம்.

      //செயற்கையான இயற்கை காட்சி இல்லாமல் உண்மையான
      இயற்கை காட்சியும், கோவில் கோபுர தரிசனமும் அருமை.
      நீங்கள் சொல்வது போல் ஜன்னல் மூலம் கண்குளிரக்காணும் பாக்யம் பெற்றவ்ர்தான் நீங்கள்.//

      சந்தோஷம்.

      //உச்சிபிள்ளயார், தாயுமானவர், மலை தரிசன் படங்கள் அழகு.//

      மகிழ்ச்சி.

      //ஆனந்தவல்லி அம்பாள், நாகநாத சாமி மூலவர் படங்கள் அழகு.//

      நன்றி, சந்தோஷம்.

      //தாயிடம் உரிமையுடன் சண்டையிட்டு கொள்வது தானே குழந்தையின் குணம்.//

      ஆம், நாம் மிகுந்த ஈடுபாடும், அன்பும், பாசமும், பிரியமும், பக்தியும் வைத்துவிடும் ஒருவரிடம் உரிமை எடுத்துக்கொண்டு சண்டை போடும்படியாகத்தான் ஆகிறது, அது அம்மாவே ஆனாலும் சரி, அம்பாளே ஆனாலும் சரி. அவர்களிடம் நம் எதிர்பார்ப்புகள் அதுபோல அமைந்து விடுகிறது.

      // அந்த பதிவை படிக்கிறேன்.//

      ஏற்கனவே படித்து கருத்தும் எழுதியுள்ளீர்கள்.

      //நிறைவில் மலரும் ரோஜாப்பூ அழகோ அழகு.//

      அது ரோஜாப்பூ இல்லையாம், மேடம். அது நிஷாகந்தி என்ற ஒருவகைப் பூவாம்.

      அது மிகவும் அழகாக மலர்வதுபோல அனிமேஷனில் இருந்து, எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டதால், நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்களின் ஓர் பழைய பதிவிலிருந்து உரிமையுடம் நான் எடுத்து, என்னிடம் சேகரித்து வைத்துக்கொண்டேன்.

      அவர்கள் வீட்டிலேயே மலர்வதாக அந்தப்பதிவினில் சொல்லி இருந்தார்கள். இந்தப்பூ விஷயத்தில் எல்லாப்புகழும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களையே சேரும்.

      அவர்களுக்கு மீண்டும் இங்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      *****எல்லாம் வல்ல அந்த எங்கள் ஊர் உச்சிப்பிள்ளையார் அவர்களின் கருணை மட்டுமே*****

      //உண்மை, உண்மை, அவர் கருணையால் எல்லா நலன்களும் பெற்று குடும்பத்தினர் அனைவரும் நலமாக வாழ வாழ்த்துக்கள் சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான ரசனையான மிகுந்த ஈடுபாட்டுடன் கூடிய நீ...ண்....ட கருத்துக்களுக்கும், நலமாக வாழ வாழ்த்தியுள்ளதற்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.





      நீக்கு
  6. அருமையான கட்டுரை. கொடுத்து வைத்தவர் தான் நீங்கள். சுவாமி தரிசனமும், கோபுர தரிசனமும் கிடைக்க கோடி புண்ணியம் வைத்திருக்க வேண்டும்.

    ஸ்நாக்ஸெல்லாம் காண்பிச்சு பசியை கிளப்பி விட்டீர்கள் சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி February 16, 2013 at 7:57 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையான கட்டுரை. கொடுத்து வைத்தவர் தான் நீங்கள். சுவாமி தரிசனமும், கோபுர தரிசனமும் கிடைக்க கோடி புண்ணியம் வைத்திருக்க வேண்டும்.//

      சந்தோஷ்ம்..

      //ஸ்நாக்ஸெல்லாம் காண்பிச்சு பசியை கிளப்பி விட்டீர்கள் சார்...//

      ஆஹா, அப்படியா! நீங்கள் மனசு வைத்தால், எது வேண்டுமானாலும் உடனே டேஸ்டாச் செய்து விடுவீர்களே

      கூடமாட ஒத்தாசைக்கும், பக்குவம் சொல்லி வழிகாட்டுவதற்கும் மாமியார் அருகே இருக்கும்போது என்ன கவலை உங்களுக்கு? ;)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  7. Poraamaiyaaga irukkirathu, ungal jannalaip paarththu...jannal vazhiyaagap paarththu!

    Naan Tiruchchi Uchchi Pillaiyaar koilukku yerip poyirukken. Azhagaana koil...adilum thaayumaanavar sannidhi pidikkum. Srirangam koilum pidikkum!

    Yen husbandoda oor Lalgudi!

    Naalla valaip padhivu!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sandhya February 16, 2013 at 8:36 AM

      வாருங்கள், வணக்கம்.

      //Poraamaiyaaga irukkirathu, ungal jannalaip paarththu...jannal vazhiyaagap paarththu! பொறாமையாக இருக்கிறது, உங்கள் ஜன்னலைப்பார்த்து ... ஜன்னல் வழியாகப்பார்த்து!//

      சந்தோஷமாக உள்ளது, உங்களின் பொறாமையைப்பார்த்து ... அதுவும் என் ஜன்னல் வழியாகப்பார்த்து...... ;))))))

      //Naan Tiruchchi Uchchi Pillaiyaar koilukku yerip poyirukken. Azhagaana koil...adilum thaayumaanavar sannidhi pidikkum. Srirangam koilum pidikkum!
      நான் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு ஏறிப்போய் இருக்கிறேன்.//

      ஏறாமல் அங்கு போகமுடியாதே ! அதனால் நீங்கள் சொல்வது தான் உண்மை. கேட்கவே சந்தோஷமாக உள்ளது. ;)))))

      //அழகான கோயில். அதிலும் தாயுமானவர் சந்நதி பிடிக்கும். ஸ்ரீரங்கம் கோயிலும் பிடிக்கும்//

      எனக்கும் தான், அவை எல்லாமே பிடிக்கும். அவை எல்லாவற்றையும் விட தங்களின் இந்தப் பின்னூட்டமும் மிகவும் பிடித்துள்ளது. ;)))))

      //Yen husbandoda oor Lalgudi!//

      எங்கள் வீட்டுக்காரரின் [கணவரின்] ஊர் லால்குடி.

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எங்கள் ஊரின் நாட்டுப்பெண் [மருமகள்] என்பது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      எங்களின் பூர்வீக கிராமம் ஆங்கரை. திருச்சியிலிருந்து லால்குடிக்கு பஸ்ஸில் சென்றால், ஆங்கரை தாண்டியதும் ஓரிரு கிலோமீட்டர் தூரத்தில் லால்குடி வந்து விடும்.

      //Nalla valaip padhivu! நல்ல வலைப்பதிவு//

      மிக்க சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  8. ஜன்னலுக்கு பக்கத்தில ஒரு சொர்க்கபுரி உருவாக்கி வச்சிருக்கீங்க..:) தலையணிக்கு எவ்வளவு ரசனை.." தொஞ்சு போன பஜ்ஜி மாதிரி " நல்ல உவமை..எக்ஸ்பிரஸ் வேகத்தில வரீ....சையா ஸ்நாக்ஸ் பேரா வருது.பாத்து அண்ணே ...ஹெல்த்தையும் கொஞ்சம் பாருங்கோ..தினம் தினம் 200கோடி புண்ணியம் ஜன்னல் வழி தரிசனத்தில கிடைச்சிடுது.. ரொம்ப கொடுத்து வைத்தவர்தான் . கடவுள் கடைக்கண் பார்வைதான் பக்தர்களுக்கு கொடுப்பார் என்று சொல்லுவாங்க..ஆனா உச்சி பிள்ளையார் முழு பார்வையுமே உங்க மேல வைத்து கருணை மழை பொழிந்துவிட்டார்..:) உங்க வீட்டு ஜன்னல் நிச்சயமாக அனைவருக்கும் பிடித்த ஜன்னல்தான்.. பதிவு முழுதும் படிக்க அருமை..படங்களும் அருமை.பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா ராணி February 16, 2013 at 8:40 AM

      வாருங்கள், வணக்கம்.

      //ஜன்னலுக்கு பக்கத்தில ஒரு சொர்க்கபுரி உருவாக்கி வச்சிருக்கீங்க..:) தலையணிக்கு எவ்வளவு ரசனை.." தொஞ்சு போன பஜ்ஜி மாதிரி " நல்ல உவமை..//

      ஆம், பஜ்ஜி ... எப்போதுமே சூடாக சுவையாக கும்மென்று சற்று உப்பலாக இருக்க வேண்டும்.

      தொஞ்ச பஜ்ஜி என்பது, வாங்கி வந்து அப்படியே வைத்து மறந்து ஒரு 2 நாட்கள் கழித்துப்பார்த்தால் தொஞ்சு போனது போல, ஊசிப்போனதாகவும் இருக்கும் அல்லவா! அதை எப்படி விரும்பிச் சாப்பிட முடியும்?

      அதுபோலவே சில தலையணிகளும் மிகவும் மெல்லியதாக இருக்கும். அவை எனக்கு சரிப்பட்டு வராது.

      //எக்ஸ்பிரஸ் வேகத்தில வரீ....சையா ஸ்நாக்ஸ் பேரா வருது. பாத்து அண்ணே ...ஹெல்த்தையும் கொஞ்சம் பாருங்கோ..//

      ஆகட்டும்மா. இப்போதெல்லாம் மிகவும் குறைத்துக்கொண்டு விட்டேன். வீட்டுக்கு வருபவர்களுக்கு பகிர்ந்தளிப்பதோடு சரி. நள்ளிரவில் தூக்கமும் வராமல் மிகவும் பசியாக இருந்தால் ஏதாவது ஒரு சின்ன பொட்டலமும், பிஸ்கட் + பழங்களும் சாப்பிடுவது உண்டு. தினமும் அல்ல.

      //தினம் தினம் 200கோடி புண்ணியம் ஜன்னல் வழி தரிசனத்தில கிடைச்சிடுது.. ரொம்ப கொடுத்து வைத்தவர்தான் . கடவுள் கடைக்கண் பார்வைதான் பக்தர்களுக்கு கொடுப்பார் என்று சொல்லுவாங்க..ஆனா உச்சி பிள்ளையார் முழு பார்வையுமே உங்க மேல வைத்து கருணை மழை பொழிந்துவிட்டார்..:)//

      மிகவும் சந்தோஷம். ஏதோ நான் முற்பிறவியில் செய்த ஏதோ ஒரு சிறு புண்ணியம் + என் முன்னோர்களின் ஆசிகள் + உங்களைப் போன்ற நலம் விரும்பிகளின் நல்ல எண்ணங்கள் மட்டுமே இதற்கெல்லாம் காரணம் என நினைக்கிறேன் / மகிழ்கிறேன்.

      //உங்க வீட்டு ஜன்னல் நிச்சயமாக அனைவருக்கும் பிடித்த ஜன்னல்தான்.. பதிவு முழுதும் படிக்க அருமை..படங்களும் அருமை.பகிர்விற்கு நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  9. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வீட்டு ஜன்னல் கம்பிகளை ஒவ்வொன்றாய்க் கேட்டுப் பார்த்தேன். அவை உங்கள் புகழ்பாடி நிற்கின்றன.

    Double Cot, ஏழு தலையணைகள், அனந்த சயனம், அன்புக் காதலி லாப்டாப், தின் பண்டம் நிரம்பிய பைகள், உச்சிப்பிள்ளையார் தரிசனம், நாகநாதர் கோயிலின் இரண்டு கோபுர தரிசனம், தைப்பூசத் திருவிழா, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் காட்சி – என்று காட்சிகள் கண் முன்னே விரிகின்றன.

    மீண்டும் வருவேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ February 16, 2013 at 8:42 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வீட்டு ஜன்னல் கம்பிகளை ஒவ்வொன்றாய்க் கேட்டுப் பார்த்தேன். அவை உங்கள் புகழ்பாடி நிற்கின்றன. //

      மிக்க சந்தோஷம், ஐயா.

      //Double Cot, ஏழு தலையணைகள், அனந்த சயனம், அன்புக் காதலி லாப்டாப், தின் பண்டம் நிரம்பிய பைகள், உச்சிப்பிள்ளையார் தரிசனம், நாகநாதர் கோயிலின் இரண்டு கோபுர தரிசனம், தைப்பூசத் திருவிழா, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் காட்சி – என்று காட்சிகள் கண் முன்னே விரிகின்றன. //

      கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.

      //மீண்டும் வருவேன்!//

      அவசியம் வாருங்கள், ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
  10. வணக்கத்துடனும், நன்றியுடனும்

    படித்து முடித்து விட்டேன். விரிவான பின்னூட்டம் நாளை அல்லது நாளன்னைக்கு.

    என் பதிவினை நான் என்று போட வேண்டும் என்று சொல்லுங்கள்.

    நன்றியுடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI February 16, 2013 at 9:46 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வணக்கத்துடனும், நன்றியுடனும். படித்து முடித்து விட்டேன். விரிவான பின்னூட்டம் நாளை அல்லது நாளன்னைக்கு.//

      மிகவும் சந்தோஷம்.

      //என் பதிவினை நான் என்று போட வேண்டும் என்று சொல்லுங்கள்.//

      ஒன்றும் அவசரமே இல்லை. மெதுவாக பொறுமையாக தங்கள் செளகர்யப்படி போட்டால் போதும். ஒரு வாரமோ, ஒரு 10-15 நாட்களோ அல்லது ஒரு மாதமே ஆனாலும் கூடப் பரவாயில்லை.

      தங்களின் 50 ஆவது பதிவாக அமையப்போகும் அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

      //நன்றியுடன்
      ஜெயந்தி ரமணி//

      தொடர்பதிவு எழுதுமாறு நான் வைத்துள்ள கோரிக்கையை, அன்புடன் ஏற்றுக்கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நான் 24.02.2013 ஞாயிறு அன்று வெளியிட இருக்கும் என் அடுத்த பதிவையும் தாங்கள் படித்தால், தங்களின் கட்டுரையை மேலும் சிறப்பாக வடிவமைக்க / மெருகூட்ட, அது மேலும் உதவக்கூடும் என நான் நினைக்கிறேன்.

      இருப்பினும் உங்கள் செளகர்யப்படி செய்யவும். வாழ்த்துகள்.

      நீக்கு
    2. //விரிவான பின்னூட்டம் நாளை அல்லது நாளன்னைக்கு.//

      ஆளையே காணுமே, என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு, நேக்கு ஒரே கவலையாக்கீதூஊஊஊஊஊ, தெரியுமா உங்களுக்கு?.

      -=-=-=-=-=-=-

      லயா குட்டி! உன் பாட்டி எங்கேம்மா போய்ட்ட்டாங்க ?

      VGK 20/02/2013

      நீக்கு
  11. வைகோ சார்,

    உங்கள் வீட்டையே நாலாபுறமும் பெருமாள்., சிவன் , அவன் மகன் என எல்லோரும் சூழ்ந்து நின்று நான் , நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அருள் பாலிக்கிறார்கள்.

    கொடுத்து வைத்தவர் நீங்கள்.
    அதுவும் அந்த ஆனந்தவல்லித் தாயார் இருக்கிறாளே அவளை விட்டு கண்ணை எடுக்கவே முடியவில்லை.
    அவள் கடைக்கண்ணால் பார்த்தாலே போதும் என்று அபிராமி பட்டர் சொல்கிறார். நீங்களோ சண்டைபோடும் அளவிற்கு நெருங்கி இருக்கிறீர்கள் போலிருக்கிறது.அந்தப் பதிவை படிக்கிறேன்.

    நீங்கள் கடை விரித்திருக்கும் snacks ம் பார்த்தேன்.
    பெரிய நொறுக்ஸ் பிரியர் போல் தெரிகிறது.

    நீங்கள் மட்டுமல்ல உங்கள் வீட்டு ஜன்னலும் அந்த இடத்தில் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

    அருமையான பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    அடுத்த வாரம் எதைப் பற்றி.?
    படிக்கக் காத்திருக்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam February 16, 2013 at 9:57 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வைகோ சார்,

      //உங்கள் வீட்டையே நாலாபுறமும் பெருமாள்., சிவன் , அவன் மகன் என எல்லோரும் சூழ்ந்து நின்று நான் , நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அருள் பாலிக்கிறார்கள். கொடுத்து வைத்தவர் நீங்கள்.//

      கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

      //அதுவும் அந்த ஆனந்தவல்லித் தாயார் இருக்கிறாளே அவளை விட்டு கண்ணை எடுக்கவே முடியவில்லை. அவள் கடைக்கண்ணால் பார்த்தாலே போதும் என்று அபிராமி பட்டர் சொல்கிறார். //

      ஆமாம். மிகவும் அழகான அம்மன். சக்தி வாய்ந்த அம்மன்.

      [1] மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகை/பாலாம்பிகை + [2] சிவகங்கை மாவட்டம் கோவிலூர் ஸ்ரீ சாடிவாலீஸ்வரி அம்மன் + [3] இந்த ஸ்ரீ ஆனந்தவல்லீ அம்மன் மூவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

      உயரம், உருவம், அழகு, கருணை, கவர்ச்சி, காந்த சக்தி எல்லாவற்றிலும் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

      [1] என் குலதெய்வங்களில் ஒன்று

      [2] நான் பிறந்த ஊரில் உள்ள கோயில்
      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

      [3] நான் வாழும் வீட்டருகே உள்ள கோயில்.

      //நீங்களோ சண்டைபோடும் அளவிற்கு நெருங்கி இருக்கிறீர்கள் போலிருக்கிறது.அந்தப் பதிவை படிக்கிறேன்.//

      அவசியமாகப்படியுங்கோ.
      http://gopu1949.blogspot.in/2012/03/5.html

      //நீங்கள் கடை விரித்திருக்கும் snacks ம் பார்த்தேன். பெரிய நொறுக்ஸ் பிரியர் போல் தெரிகிறது.//

      ஆமாம். இப்போது ரொம்பவுமே குறைத்துக்கொண்டு வருகிறேன்.

      வறுத்த முந்திரி மட்டும் மிகவும் இஷடமாக உள்ளது. மற்றதெல்லாம் எவ்வளவோ குறைத்துக்கொண்டு விட்டேன்.

      //நீங்கள் மட்டுமல்ல உங்கள் வீட்டு ஜன்னலும் அந்த இடத்தில் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் .//

      சந்தோஷம்.

      //அருமையான பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//

      மகிழ்ச்சியாக உள்ளது.

      //அடுத்த வாரம் எதைப் பற்றி.? படிக்கக் காத்திருக்கிறேன்.//

      அதுவும் ஓரளவு இதன் தொடர்ச்சி என்றே சொல்லலாம்.

      இப்போதைக்கு சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டுமே.

      இப்போதைக்கு நான் வைத்துள்ள தலைப்பு:

      “குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன்”

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் பதிவுகளின் மேல் தங்களுக்குள்ள தொடர்ச்சியான ஆர்வத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அடுத்த வெளியீடு அநேகமாக வரும் சனிக்கிழமை இரவு சுமார் 7 மணிக்கு வெளியிடப்படும். [Subject to Power & Net availability].

      நீக்கு
  12. சார்,மிக அருமையான பகிர்வு ரசித்து வாசித்தேன்,வை.கோ.சார் என்றால் இதெல்லாம் நினைவு வரும்..பலகாரம் சூப்பர் :)!
    ஜெ மாமி தொடரையும் படிக்க ஆவல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar February 16, 2013 at 10:02 AM

      வாருங்கள், வணக்கம்.

      சார், மிக அருமையான பகிர்வு ரசித்து வாசித்தேன்//

      மிக்க நன்றி!

      //வை.கோ.சார் என்றால் இதெல்லாம் நினைவு வரும்..பலகாரம் சூப்பர் :)! //

      அடடா, அப்படியா? சந்தோஷம்.

      //ஜெ மாமி தொடரையும் படிக்க ஆவல்..//

      அவர்கள் மிகுந்த ஆவலுடன், இந்தத்தொடரை தானும் தொடரலாமா, என என்னிடம் த்னிப்பட்ட முறையில் கேட்டிருந்தார்கள்.

      அதனால் சந்தோஷமாக, அவர்களை மட்டும் தொடர் பதிவிட நானும் அழைத்துள்ளேன். இது தங்கள் தகவலுக்காக.

      நீக்கு
  13. ஆ! சொல்லி முடிச்சிட்டீங்களா?
    நிறைய விவரங்கள். உங்க வீட்டு ஜன்னல்ல ரெண்டு செகண்டுல ஒரு உயிரோட்டத்தை உணர்ந்தேன்.. அதை அப்படியே எழுதியிருக்கீங்க. வல்லியம்மா சொன்னது போல ஜன்னலோர சீட், ரெண்டு மூணு புக்ஸ், நொறுக்குத் தீனி.. சொர்க்கம்.
    நொறுக்குத் தீனிக்கு உங்க கிட்டே சொல்லணுமா என்ன? (உங்க கலெக்சனைப் பார்த்து நடுங்கிப் போயிட்டேன். கடைல கூட இப்படி வெரைடி வச்சிருப்பாங்களானு சந்தேகம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை February 16, 2013 at 11:33 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //ஆ! சொல்லி முடிச்சிட்டீங்களா?//

      இன்னும் கொஞ்சம் பாக்கியுள்ளது. அது வேறு ஒரு தலைப்பில் வரும் சனி/ஞாயிறு வெளியாக உள்ளது. ஒரே ஒரு பகுதி மட்டுமே! அதனால் யாரும் பயமோ / கவலையோ படவேண்டாம், சார்.

      //நிறைய விவரங்கள். உங்க வீட்டு ஜன்னல்ல ரெண்டு செகண்டுல ஒரு உயிரோட்டத்தை உணர்ந்தேன்.. அதை அப்படியே எழுதியிருக்கீங்க.//

      நீங்க என் வீட்டு ஜன்னலில் எந்த அடசலை, ஒட்டடையை, புழுதிகளைப் பார்த்தீங்களோ அந்த உண்மையான விஷயங்கள் எனக்குத் தெரியாதூஊஊ.

      ஆனால் நான் அதை எனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு எழுச்சியுடன் மூன்று பதிவுகள் கொடுத்துள்ளேன்.

      //வல்லியம்மா சொன்னது போல ஜன்னலோர சீட், ரெண்டு மூணு புக்ஸ், நொறுக்குத் தீனி.. சொர்க்கம்.//

      நொறுக்கித்தீனி பிரியர்கள் எல்லோருமே கொஞ்சம் 'பஹூத் படா சைஸ் ' ஆக இருப்பார்களோ என்னவோ, எனக்குத் தெரியாது.

      நீங்கள் தான் பல நாடுகளுக்கு / ஊர்களுக்குப் போய் பல பதிவர்களை சந்தித்துள்ளீர்கள். 'படா' சைஸ் யார்? 'பஹூத் படா சைஸ் யார்? 'சோட்டா சைஸ் யார்? என விளக்க வேண்டுகிறேன்.

      வல்லியம்மா சண்டைக்கு வந்துடப்போறாங்கோ! நான் அவர்களையும் இதுவரை [படத்தில் கூட] பார்த்ததே இல்லை

      //நொறுக்குத் தீனிக்கு உங்க கிட்டே சொல்லணுமா என்ன? (உங்க கலெக்சனைப் பார்த்து நடுங்கிப் போயிட்டேன். கடைல கூட இப்படி வெரைடி வச்சிருப்பாங்களானு சந்தேகம் :)//

      உங்களைச் சாக்கிட்டாவது நானும் சாப்பிடலாம் என ஏதோ சில பாக்கெட்டுக்களை உடைத்தும் கூட நீங்க [அதுவும் என் வற்புருத்தலுக்காக மட்டுமே] ஸ்லைட்டாக மாதிரி பார்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டீர்களே! ;)))))

      நீக்கு
    2. VGK >>>>> Mr. அப்பாதுரை Sir [2]

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், தூண்டித்துருவி கேள்விக்கணைகளை வீசி, மேலும் மேலும் என்னை பேச வைக்கும் சாமர்த்தியத்திற்கும், என் பதிவுகளின் மேல் தங்களுக்குள்ள தொடர்ச்சியான ஆர்வத்திற்கும் என் மனமார்ந்த அன்பு நன்றிகள், சார்..

      நீக்கு
  14. சுற்றமும் நட்பும் போல கோவிலும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.கொசுறு.திண்பண்டங்கள்
    சார் கொடுத்து வைத்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவியாழி கண்ணதாசன் February 16, 2013 at 12:33 PM

      வாருங்கள், வணக்கம்.

      //சுற்றமும் நட்பும் போல கோவிலும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.கொசுறு.திண்பண்டங்கள்
      சார் கொடுத்து வைத்தவர்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கவிதை நடைக்கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  15. முதலில் அப்பாத்துரை சாருக்கு நன்றி. அவரின் வேண்டுகோளால்தான் நீங்க எழுதியிருக்கிறீங்க.ரெம்ப கொடுத்து வைச்சவர் அண்ணா.எழுந்ததும் பிள்ளையார்தரிசனம்,அம்பாள் தரிசனம் இப்படி. உங்க வீட்டுக்கு அருகில் தடுக்கி விழுந்தால் கோவில்கள்,அல்லது உணவகங்கள்தான் சுற்றி வர இருக்கின்றன. மன அமைதிக்கு கோவில். வயிற்றுப்பசிக்கு உணவகம்.
    நல்லதொரு சூழலான இடம்.
    மிக்ஸர்,முறுக்கு தின்பண்டங்களைப்பார்த்ததும் நான் நினைத்தேன்,இரவு பசித்தால் சாப்பிடவாக்குமென.பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ammulu February 16, 2013 at 2:35 PM

      வாங்கோ, வாங்கோ, வணக்கம்மா!

      //முதலில் அப்பாத்துரை சாருக்கு நன்றி. அவரின் வேண்டுகோளால்தான் நீங்க எழுதியிருக்கிறீங்க.//

      சரியாகக் கரெக்டாகச் சொல்லிட்டீங்கோ!

      //ரெம்ப கொடுத்து வைச்சவர் அண்ணா.எழுந்ததும் பிள்ளையார்தரிசனம், அம்பாள் தரிசனம் இப்படி. உங்க வீட்டுக்கு அருகில் தடுக்கி விழுந்தால் கோவில்கள்,அல்லது உணவகங்கள்தான் சுற்றி வர இருக்கின்றன. //

      ஆமாம்மா, அதுபோலத்தான் உள்ளது.

      //மன அமைதிக்கு கோவில். வயிற்றுப்பசிக்கு உணவகம்.
      நல்லதொரு சூழலான இடம்.//

      சந்தோஷம்.

      //மிக்ஸர், முறுக்கு தின்பண்டங்களைப்பார்த்ததும் நான் நினைத்தேன், இரவு பசித்தால் சாப்பிடவாக்குமென.//

      அதே அதே ...... எனக்கு எப்போ பசிக்கும்ன்னு எனக்கே தெரியாது.

      //பகிர்விற்கு நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  16. //பஜ்ஜி மாதிரி இருக்கக்கூடாது. //


    ஆஹா !!! தலையணைக்கும் உதாரணம் சாப்பாடு பொருளா அண்ணா :))
    எனக்கு முந்தைய பதிவிலேயே அந்த பஜ்ஜி வண்டி கண்ணில் பட்டது :))
    ..தினமும் எந்நேரமும் கடவுளை தரிசிக்கு பாக்கியம் சிலருக்கே கிடைக்கும் நீங்க மிகவும் கொடுத்து வைத்தவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin February 16, 2013 at 2:45 PM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      *****பஜ்ஜி மாதிரி இருக்கக்கூடாது.*****

      //ஆஹா !!! தலையணைக்கும் உதாரணம் சாப்பாடு பொருளா அண்ணா :))//

      ஆமாம்மா, அதுபோலவே நாம் பழகிவிட்டோம். சின்ன வயசிலிருந்து பழக்கப்படுத்திட்டாங்க.

      இதோ ஒரு சில உதாரணங்கள்:
      ==========================

      பொண்ணு எப்படி?
      சும்மா ”லட்டு” மாதிரி

      கலர் எப்படி?
      சும்மா தளதளன்னு ”தக்காளி” மாதிரி:

      குண்டா ஒல்லியா?
      கும்முனு ஜிம்முனு ”ராயல் ஆப்பிள்” போலவாக்கும்!

      உன் கன்னம் என்னடா ”அப்பம்” மாதிரி வீங்கியிருக்கு?

      வாயைத்திறந்து பேசேன். உன் வாயில் என்ன ”கொழுக்கட்டை”யா?

      என்று தானே சொல்லிப்பழக்கியுள்ளார்கள். ;)))))

      //எனக்கு முந்தைய பதிவிலேயே அந்த பஜ்ஜி வண்டி கண்ணில் பட்டது :))//

      என்ன பார்வை ..... உந்தன் பார்வை...... !!

      உங்கள் பார்வை டூஊஊஊஊ ஷார்ப்.

      //தினமும் எந்நேரமும் கடவுளை தரிசிக்கும் பாக்கியம் சிலருக்கே கிடைக்கும் நீங்க மிகவும் கொடுத்து வைத்தவர்//

      மிகவும் சந்தோஷம் நிர்மலா.

      தங்களின் அன்பான வருகைக்கும் மனம் திறந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      நீக்கு
    2. angelin February 16, 2013 at 2:45 PM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      *****தொஞ்ச பஜ்ஜி மாதிரி இருக்கக்கூடாது.*****

      //ஆஹா !!! தலையணைக்கும் உதாரணம் சாப்பாடு பொருளா அண்ணா :))//

      ஆமாம்மா, அதுபோலவே நாம் பழகிவிட்டோம். சின்ன வயசிலிருந்து பழக்கப்படுத்திட்டாங்க.

      இதோ ஒரு சில உதாரணங்கள்:
      ==========================

      பொண்ணு எப்படி?
      சும்மா ”லட்டு” மாதிரி

      கலர் எப்படி?
      சும்மா தளதளன்னு ”தக்காளி” மாதிரி:

      குண்டா ஒல்லியா?
      கும்முனு ஜிம்முனு ”ராயல் ஆப்பிள்” போலவாக்கும்!

      உன் கன்னம் என்னடா ”அப்பம்” மாதிரி வீங்கியிருக்கு?

      வாயைத்திறந்து பேசேன். உன் வாயில் என்ன ”கொழுக்கட்டை”யா?

      என்று தானே சொல்லிப்பழக்கியுள்ளார்கள். ;)))))

      //எனக்கு முந்தைய பதிவிலேயே அந்த பஜ்ஜி வண்டி கண்ணில் பட்டது :))//

      என்ன பார்வை ..... உந்தன் பார்வை...... !!

      உங்கள் பார்வை டூஊஊஊஊ ஷார்ப்.

      //தினமும் எந்நேரமும் கடவுளை தரிசிக்கும் பாக்கியம் சிலருக்கே கிடைக்கும் நீங்க மிகவும் கொடுத்து வைத்தவர்//

      மிகவும் சந்தோஷம் நிர்மலா.

      தங்களின் அன்பான வருகைக்கும் மனம் திறந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      நீக்கு
  17. காவிரி நதியையும் ராஜ கோபுரத்தையும் எந்நேரமும் காணும் பாக்கியம் உண்மையிலேயே உச்சி பிள்ளையார் உங்களுக்கு ரொம்ப பெஸ்ட் ப்ரண்ட் தான் :))
    அந்த பாக்கெட் பக்க வாத்தியங்கள் ..பார்க்கும்போதே நாவூறுகிறது ....
    படங்களுடன் அழகாக உங்கள் வீட்டு ஜன்னலை பற்றி சொல்லியுள்ளீர்கள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin February 16, 2013 at 2:51 PM

      வாங்கோ, நிர்மலா, மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      //காவிரி நதியையும் ராஜ கோபுரத்தையும் எந்நேரமும் காணும் பாக்கியம் ..... உண்மையிலேயே உச்சி பிள்ளையார் உங்களுக்கு ரொம்ப பெஸ்ட் ப்ரண்ட் தான் :))//

      ஆமாம். இதை நிர்மலா சொல்லிக் கேட்க என் மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கிறது.

      //அந்த பாக்கெட் பக்க வாத்தியங்கள் ..பார்க்கும்போதே நாவூறுகிறது .... //

      உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கோ, ஏர் பார்ஸலில் அவற்றை அனுப்பி வைக்கிறேன். [நிஜமாகவே]

      //படங்களுடன் அழகாக உங்கள் வீட்டு ஜன்னலை பற்றி சொல்லியுள்ளீர்கள் ..//

      ரொம்பவும் சந்தோஷம் நிர்மலா. ;)))))

      நீக்கு
  18. அய்யா தங்கள் வீட்டில் இருப்பது ஜன்னலா, பரமபத வாசலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் February 16, 2013 at 4:05 PM

      வாருங்கள், வணக்கம்.

      //ஐயா தங்கள் வீட்டில் இருப்பது ஜன்னலா, பரமபத வாசலா?//

      ஒரே வரியில் மிக அழகாக கேட்டு விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், ’பரமபத வாசல்’ போன்ற புனிதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  19. அருமையான பதிவு.
    நன்றி ஐயா.
    கணினியில் செலவழிக்கும் நேரத்தை ஒரு அளவோடு வைத்துக் கொண்டு, நடைப்பயிற்சி, புத்தகம் படித்தல் போன்றவற்றில் நேரத்தை கூட்டிக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rathnavel Natarajan February 16, 2013 at 5:33 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //அருமையான பதிவு. நன்றி ஐயா.//

      மிகவும் சந்தோஷம்.

      //கணினியில் செலவழிக்கும் நேரத்தை ஒரு அளவோடு வைத்துக் கொண்டு, நடைப்பயிற்சி, புத்தகம் படித்தல் போன்றவற்றில் நேரத்தை கூட்டிக் கொள்ளுங்கள்.//

      ஐயா, தங்களின் அன்பான அறிவுரை நெகிழ்ச்சியாக உள்ளது, ஐயா. அதுபோலவே செய்ய / கடைபிடிக்க முயற்சிக்கிறேன், ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும், பொறுப்பான, அக்கறையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
  20. நீங்க இருக்கறது சொர்க்கத்துலேன்னு புரிஞ்சுக்கிட்டேன். இத்தனை அருமையான இடத்தை வேறு எப்படிச்சொல்ல :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதிச்சாரல் February 16, 2013 at 7:32 PM

      வாருங்கள், வணக்கம்.

      //நீங்க இருக்கறது சொர்க்கத்துலேன்னு புரிஞ்சுக்கிட்டேன். இத்தனை அருமையான இடத்தை வேறு எப்படிச்சொல்ல :-))//

      சொர்க்கத்திலிருந்து வந்துள்ள அமைதியான கருத்துக்கள் மிகவும் மகிழ்வளிக்கின்றன. ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும் மனம் திறந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்,.

      நீக்கு
  21. “ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி” கோயிலின் இரண்டு கோபுரத்தையும் ஒருங்கே தரிஸிக்க முடிகிறது.

    ஆனந்த தரிசனம் கண்டு ஆரம்பிக்கும் நாட்கள்
    இனிமை சேர்க்கும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 16, 2013 at 7:46 PM

      *****“ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி” கோயிலின் இரண்டு கோபுரத்தையும் ஒருங்கே தரிஸிக்க முடிகிறது*****.

      //ஆனந்த தரிசனம் கண்டு ஆரம்பிக்கும் நாட்கள் இனிமை சேர்க்கும்.... //

      இத்துடன் என் இனிமைக்கு மேலும் இனிமை சேர்ப்பது, தங்களின் தங்கமான அன்றாடப் பதிவுகளும் தான், என்றால் அது மிகையாகாது.

      நீக்கு
    2. தைப்பூசத்தன்று, திருச்சியில் உள்ள அனைத்துக்கோயில் ஸ்வாமி, அம்பாள் விக்ரஹங்களும், காவிரி ஆற்றில் தீர்த்தவாரி முடித்து, வெகு சிறப்பான அலங்காரங்களுடன் எங்கள் தெருவழியாகவே ஆரம்பித்து, விடியவிடிய இன்னிசைக் கச்சேரிகளுடன் ஊர்வலமாக திருச்சி மலைக்கோட்டையைச்சுற்றிச் செல்வது வழக்கம். //

      நாங்கள் ஒருமுறை வந்தபோது தைப்பூச ஊர்வலத்தைப் பார்த்து ஊர்வலதோடே திருச்சி மலைக்கோட்டையைச்சுற்றிச் சென்று மலை ஏறி சுவாமி தரிசன்ம் செய்த இனிய நினைவுகள் மகிழ்விக்கின்றன ஐயா

      நீக்கு
    3. இராஜராஜேஸ்வரி February 23, 2013 at 4:13 AM

      //நாங்கள் ஒருமுறை வந்தபோது தைப்பூச ஊர்வலத்தைப் பார்த்து ஊர்வலதோடே திருச்சி மலைக்கோட்டையைச்சுற்றிச் சென்று மலை ஏறி சுவாமி தரிசன்ம் செய்த இனிய நினைவுகள் மகிழ்விக்கின்றன ஐயா//

      அம்பாள் போன்ற தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும், தங்களின் இனிய நினைவலைகளைப்பகிர்ந்து கொண்டதும் மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

      மிகவும் சந்தோஷம் + மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  22. VGK அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பதிவுக்கான நேரம் அமைப்பை (TIME SETTINGS ) இந்திய நேரத்திற்கு மாற்றவும். ( உங்களின் இந்த பதிவுக்கு எனது முந்தைய கருத்துரையை இரவுவேளை எழுதினேன். உங்கள் பதிவு அதனை காலை வேளையாக காட்டுகிறது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ February 16, 2013 at 7:47 PM

      வாருங்கள் ஐயா, தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      //VGK அவர்களுக்கு வணக்கம்!//

      வணக்கம் ஐயா!

      // உங்கள் பதிவுக்கான நேரம் அமைப்பை (TIME SETTINGS ) இந்திய நேரத்திற்கு மாற்றவும்.//

      அடடா, இந்தத்தொழில்நுட்பங்கள் தெரிந்திருந்தால் நான் ஏன் இங்கு பதிவுகளுக்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறேன் ? ;)))))

      சந்திர மண்டலத்திலோ அல்லது செவ்வாய் கிரஹத்திலோ அல்லவா இருப்பேன்.

      இந்நேரம் நாசா விஞ்ஞானிகள் என்னைக்கொத்திக் கொண்டல்லவா சென்றிருப்பார்கள். ;)))))

      // ( உங்களின் இந்த பதிவுக்கு எனது முந்தைய கருத்துரையை இரவுவேளை எழுதினேன். உங்கள் பதிவு அதனை காலை வேளையாக காட்டுகிறது)//

      என் பதிவினில் உங்கள் கருத்துக்கள் இரவு வேளையாகத் தெரிய வேண்டுமானால் பகலிலும், பகல் வேளையாகத் தெரிய வேண்டுமானால் இரவிலும் கருத்துரை இடுங்கோ.

      எதையாவது எனக்குப் புரியாதவற்றைச் சொல்லி, கோபத்தில், எனக்குக் கருத்துரை இடுவதையே நிறுத்தி விடாதீர்கள்.

      [இவையெல்லாம் இங்கு சும்மா தமாஷுக்காகவே எழுதியுள்ளேன் ஐயா, இதுபற்றி நான் உங்களிடம் அலைபேசியில் ஏற்கனவே பேசி விட்டேன்]

      நீக்கு
  23. இரண்டு கோபுரத்தின் சைடு போர்ஷன்களும் அழகாக என் வீட்டு ஒரே ஜன்னல் மூலம் காட்சியளிக்கும். அத்தோடு உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் மலைகளும். வேறென்னங்க வேணும் என் மகிழ்ச்சிக்கு. ;)))))

    வியூபாயிண்ட் ..தெய்வங்களின் கருணை கடாட்சத்தை வர்ஷிக்கிறது .. வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 16, 2013 at 7:50 PM

      *****இரண்டு கோபுரத்தின் சைடு போர்ஷன்களும் அழகாக என் வீட்டு ஒரே ஜன்னல் மூலம் காட்சியளிக்கும்.

      அத்தோடு உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் மலைகளும். வேறென்னங்க வேணும் என் மகிழ்ச்சிக்கு. ;)))))*****

      //வியூபாயிண்ட் ..தெய்வங்களின் கருணை கடாட்சத்தை வர்ஷிக்கிறது .. வாழ்த்துகள்...//

      என் அன்புக்குரிய அம்பாள் வாயால் இதைக்கேட்பது என் மனதுக்கு மிகுந்த ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

      தாங்கள் இங்கு வர்ஷித்துள்ள வாழ்த்துகளுக்கு என் வந்தனங்கள்.

      நீக்கு
  24. இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாளுடன் எனக்கு நீண்டகாலமாக பரிச்சயமும், ஆத்மார்த்த பிரியமும், அளவுக்கு அதிகமான அன்பும், பாசமும், பக்தியும் உண்டு.

    ஆனந்த தரிசனம் ஆத்மார்த்தமாக இனிமை சேர்க்கிறது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 16, 2013 at 7:51 PM

      *****இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாளுடன் எனக்கு நீண்டகாலமாக பரிச்சயமும், ஆத்மார்த்த பிரியமும், அளவுக்கு அதிகமான அன்பும், பாசமும், பக்தியும் உண்டு. *****

      //ஆனந்த தரிசனம் ஆத்மார்த்தமாக இனிமை சேர்க்கிறது ...//

      ஆத்மார்த்தமான இனிமை சேர்ந்த தங்களின் கருத்துக்கள் எனக்கு ஆனந்தம் அளிப்பதாக உள்ளது.

      நீக்கு
  25. இவையெல்லாம் எனக்கு சாதகமாக இன்று அமைந்துள்ளது எல்லாமே, எல்லாம் வல்ல அந்த எங்கள் ஊர் உச்சிப்பிள்ளையார் அவர்களின் கருணை மட்டுமே ..

    அழகாக நிறைவுப்பகுதி மனம் மகிழ்வித்தது ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 16, 2013 at 7:53 PM

      *****இவையெல்லாம் எனக்கு சாதகமாக இன்று அமைந்துள்ளது எல்லாமே, எல்லாம் வல்ல அந்த எங்கள் ஊர் உச்சிப்பிள்ளையார் அவர்களின் கருணை மட்டுமே ..*****

      //அழகாக நிறைவுப்பகுதி மனம் மகிழ்வித்தது ..பாராட்டுக்கள்..//

      நிறைவுப்பகுதி, தங்களின் மகிழ்ச்சியுடன் கூடிய கருத்துக்களால் மேலும் மன நிறைவினைத்தந்து மகிழ்வளித்தது.

      5 + 1 = 6 ஆறுமுறைகள் இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து தங்களின் தங்கத்தாமரைகளால் அர்சித்து, அழகான பல கருத்துரைகளால் பதிவினை பெருமைப்படுத்தி, மெருகூட்டியுள்ளதற்கு, அடியேனின் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

      மிக்க நன்றி, மிகவும் சந்தோஷம். ;)))))))

      நீக்கு
  26. ஆஹா..என்ன ஒரு ரசனை..அடுத்த ஜன்மம்னு ஒன்று இருந்தால், இந்த பூமியில் கோபு அண்ணாவா பொறக்கணும்! அப்படி இல்லாட்டா, கொசுவாப் பொறந்து மூணே நாளில் மூட்டையைக் கட்டணும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி February 16, 2013 at 10:12 PM

      வாங்கோ ஸ்வாமி, வணக்கம்.

      //ஆஹா..என்ன ஒரு ரசனை.. அடுத்த ஜன்மம்னு ஒன்று இருந்தால், இந்த பூமியில் கோபு அண்ணாவா பொறக்கணும்! அப்படி இல்லாட்டா, கொசுவாப் பொறந்து மூணே நாளில் மூட்டையைக் கட்டணும்!//

      எதையாவது இதுபோல எழுதி என்னையே குழப்புகிறீரே!

      அப்போ நான் ஆரண்யநிவாஸில் பாம்புக்குட்டி ஸ்நேகாவுடனும், இருமலா நிர்மலாவுடனும் ஒரே ஜாலியாக இருப்பேனோ என்னவோ.

      எதற்கும் ஒருமுறைக்கு இருமுறையாக யோசித்து வேண்டிக்கொள்ளுங்கள் ..... ஸ்வாமீ.

      என் வீட்டின் சந்தோஷமாக ஒருசில விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளேனாக்கும். ஜாக்கிரதை ! ;)))))

      நீக்கு
  27. கூப்பிடு தூரத்தில் எவ்வளவு சாமிகள் இருக்கிறார்கள்! கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்! :-)

    ஏழு தலையணையா என்ற வியப்போடு வாசித்தால், கட்டிலிலே ஒரு அடையாறு ஆனந்த பவனே இருக்கும் போலிருக்குதே! நீங்களும் என்னை மாதிரி நொறுக்ஸ் பிரியரா? :-))

    அசத்தல் சார்! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேட்டைக்காரன் February 16, 2013 at 10:52 PM

      வாங்கோ என் அன்புக்குரிய வேணு சார், வணக்கம்.

      //கூப்பிடு தூரத்தில் எவ்வளவு சாமிகள் இருக்கிறார்கள்! கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்! :-)//

      இருங்கோ இருங்கோ .... அவசரப்படாதீங்கோ.

      அழகான பெண்களாகவே இருப்பினும், சிலர் தலைக்கு அட்டாச்மெண்ட் [செளர்ர்ர்ர்ர்ரீஈஈஈஈ] எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே இன்னும் ஒரே ஒரு பதிவு மட்டும் இதற்கு செளரீஈஈஈஈ, போல வெளியிட உள்ளேன்.

      வேறொரு தலைப்பில், வரும் சனி இரவு அநேகமாக அது வெளியிடப்படும்.

      அதையும் தயவுசெய்து பாருங்கோ, கருத்து எழுதுங்கோ.

      >>>>>>>>

      நீக்கு
    2. VGK >>>>>> Mr VENU Sir [2]

      //ஏழு தலையணையா என்ற வியப்போடு வாசித்தால்//

      ஏழுமலையான் போல அவற்றை உயரப்படுத்தி சாய்ந்து படுத்தால் தான், எனக்கு குஜாலாக உள்ளதுங்க.

      //கட்டிலிலே ஒரு அடையாறு ஆனந்த பவனே இருக்கும் போலிருக்குதே! //

      ஒருமுறை சென்னையிலிருந்து திருச்சிக்கு இரயில் ஏறும் முன்பு, எழும்பூர் ஸ்டேஷன் வாசலில் உள்ள ”அடையார் ஆனந்த பவன்” னுக்குச்சென்றேன்.

      ஏராளமான ஐட்டம்ஸ்களை, தாராளமாகத் திருப்தியாக வாங்கிக்கொண்டேன்.

      கம்ப்யூட்டரில் பில் போடுபவரே அசந்து விட்டார்.

      ”எந்த ஊர்?” என்று கேட்டார்.

      “திருச்சி” என்றேன்.

      ”கடை வைத்திருக்கிறீர்களோ?” எனக்கேட்டார்.

      “ஆமாம்” என்றேன். ;)))))

      //நீங்களும் என்னை மாதிரி நொறுக்ஸ் பிரியரா? :-))//

      அடடா, நீங்களுமா? உங்களைப்பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!

      //அசத்தல் சார்! :-)//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      நீக்கு
  28. ஜன்னலுக்கு உட்புறம் இருப்பது நாம் அமைப்பது; வெளியே அமைவது கடவுள் தருவது. கடவுளிருக்கும் கோவில்களே அழகுற அங்கே அமைவது... ஆஹா! தங்கள் மனசுக்கு ஏற்ற பரிசு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா...February 17, 2013 at 12:39 AM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்..

      //ஜன்னலுக்கு உட்புறம் இருப்பது நாம் அமைப்பது; வெளியே அமைவது கடவுள் தருவது. கடவுளிருக்கும் கோவில்களே அழகுற அங்கே அமைவது... ஆஹா! தங்கள் மனசுக்கு ஏற்ற பரிசு! //

      வெகு அழகாக ரத்தின சுருக்கமாக ஓர் மாபெரும் உண்மையை கருத்தாகச் சொல்லியுள்ளீர்கள்.

      அது எனக்கு மிகவும் வியப்பாகவும், மனமகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது.

      தங்களின் இந்தக்கருத்தும் எனக்குக்கிடைத்த மாபெரும் பரிசாக எண்ணி மகிழ்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், Mr K B JANA Sir.

      நீக்கு
  29. பதில்கள்
    1. viji February 17, 2013 at 1:19 AM

      வாங்கோ திருமதி. விஜயலக்ஷ்மி மேடம், வணக்கம்.

      //Aha Aha!!!!! Vanthu parkanam pola asaiyai errukku sir.
      ஆஹா ... ஆஹா!!!!! வந்து பார்க்கணும் போல ஆசையாய் இருக்கு சார், viji//

      வாங்கோ மேடம், ரொம்ப சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  30. //அவற்றில் நிறைய ‘மிக்ஸர், காராபூந்தி, ஓமப்பொடி, காராச்சேவ், வறுத்த முந்திரி, பச்சை முந்திரி, பாதாம் பருப்பு, தூள்பக்கோடா, சிப்ஸ், முறுக்கு, தட்டை, பாப்கார்ன், மஸாலா கடலை, கடலை மிட்டாய், கடலை உருண்டைகள், தித்திப்பு தேன்குழலான மனோரக்கா உருண்டைகள், தேங்காய் பர்பி, நிலக்கடலை, பொட்டுக்கடலை, அச்சு வெல்லம், போன்ற பலவிதமான பக்க வாத்யங்களான கரமுராக்கள், சின்னச்சின்ன 50 கிராம் / 100 கிராம் பாக்கெட்களாக வாங்கி ஸ்டாக்கில் வைத்திருப்பேன்.//

    அப்பாதுரை ஏற்கெனவே சொல்லி இருந்ததால் இதான் ஜன்னலின் ரகசியமோனு நினைச்சேன். அது இல்லைனு சொல்லிட்டீங்க. அருமையான கோபுர தரிசனத்தையும் காட்டிட்டீங்க. ஒவ்வொருத்தரும் வீடு வாங்கப் பட்ட கஷ்டம் பல கதைகள் எழுதலாம் தான். உங்களுக்கு இந்த இடம் அமைந்தது மிகவும் அதிர்ஷ்டமே. திருஷ்டிப் பூஷணி கட்டுங்கள். அதோடு வாங்கி வைத்திருக்கும் தின்பண்டங்களை அளவோடு சாப்பிட்டு, வளமாக வாழ்ந்து இன்னமும் பல ஆண்டுகள் ஜன்னல் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என அந்தத் தாயுமானவரையும், மட்டுவார் குழலி அம்மையையும், உச்சிப் பிள்ளையாரையும் வேண்டிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    மின்சாரம் இருக்கும் நேரம்மட்டும் கணினியில் அமர்ந்து கொள்ளவும். இரவில் கண் விழிக்காமல் அதிகாலை நடைப்பயிற்சியும் உங்க வீட்டு மொட்டை மாடியிலேயே மேற்கொள்ளலாம். உடல் நலம் பேணவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. geethasmbsvm 6February 17, 2013 at 2:22 AM

      வாங்கோ, வணக்கம்.

      ****அவற்றில் நிறைய ‘மிக்ஸர், காராபூந்தி ......... 50 கிராம் / 100 கிராம் பாக்கெட்களாக வாங்கி ஸ்டாக்கில் வைத்திருப்பேன்.*****

      //அப்பாதுரை ஏற்கெனவே சொல்லி இருந்ததால் இதான் ஜன்னலின் ரகசியமோனு நினைச்சேன். //

      அவரே சொல்லிட்டாரா?

      என்னைப் பார்த்ததும் அடுத்து உங்களைப் பார்க்கப் போவதாகச் சொல்லித்தான் என் வீட்டிலிருந்து கிளம்பினார்.

      //அது இல்லைனு சொல்லிட்டீங்க. //

      நான் ஒருவேளை மாத்தி சொல்லிட்டேனோ? இருக்கலாம். அவர் என்ன நினைத்துச்சொன்னாரோ ... நான் என்ன நினைத்து எழுதினேனோ ... ஒன்றுமே புரியவில்லை. சரி அதை விடுங்கோ.

      //அருமையான கோபுர தரிசனத்தையும் காட்டிட்டீங்க. //

      சந்தோஷம்.

      //ஒவ்வொருத்தரும் வீடு வாங்கப் பட்ட கஷ்டம் பல கதைகள் எழுதலாம் தான். உங்களுக்கு இந்த இடம் அமைந்தது மிகவும் அதிர்ஷ்டமே. திருஷ்டிப் பூஷணி கட்டுங்கள். //

      2001 இல் கிரஹப்பிரவேஸம் நடந்தபோது பூஷணிக்காய் கட்டப்பட்டது. இப்போ வீடே பழசாயிடுச்சு. .

      இப்போ போய் திடீர்ன்னு பூசணிக்காய் கட்டினால் அதுதான் வீட்டைவிட புதுசாத்தெரியும்..

      பிறகு அந்த பூஷணிக்காய்க்கு திருஷ்டி பட்டு விடும். ;))))))

      //அதோடு வாங்கி வைத்திருக்கும் தின்பண்டங்களை அளவோடு சாப்பிட்டு, வளமாக வாழ்ந்து இன்னமும் பல ஆண்டுகள் ஜன்னல் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என அந்தத் தாயுமானவரையும், மட்டுவார் குழலி அம்மையையும், உச்சிப் பிள்ளையாரையும் வேண்டிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.//

      இப்போதெல்லாம் மிகவும் அளவோடு தான் அவைகளைச் சாப்பிடுகிறேன். வரவர அவற்றின் மீதே ஒருவித வெறுப்பே ஏற்பட்டு விட்டது.

      இருந்தாலும் சுடச்சுட மனோரக்கா உருண்டை வெல்லப்பாகுடன், தேங்காய்ப்பல்லுடன், ஏலக்காய் மணத்துடன் + ப்யூர் நெய்யில் செய்த கைமுறுக்கு என்றால் ஒரு சிறு சபலம் ஏற்படத்தான் செய்கிறது. என்ன செய்யறது ..... சொல்லுங்கோ.

      //மின்சாரம் இருக்கும் நேரம்மட்டும் கணினியில் அமர்ந்து கொள்ளவும். இரவில் கண் விழிக்காமல் அதிகாலை நடைப்பயிற்சியும் உங்க வீட்டு மொட்டை மாடியிலேயே மேற்கொள்ளலாம். உடல் நலம் பேணவும்.//

      தங்களின் அன்பான அக்கறையான அறிவுரைகளுக்கு மிக்க நன்றி. ஆகட்டும் உடல் நலம் பேண முயற்சிக்கிறேன். [என்னிடமிருந்து அதிகமாக கமெண்ட் எதிர்பார்ப்பவர்கள் என்னை தயவுசெய்து மன்னிப்பார்களாக]

      நீக்கு
  31. அருமையான விவரிப்பு! திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் தரிசனத்தையும் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத நாகநாத சுவாமியின் தரிசனத்தையும் எங்களுக்கும் புகைப்படம் வாயிலாக வழங்கியமைக்கு நன்றி! என் வீடும் பழமையான ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயம் அருகே உள்ளது. என்ன இந்த ஆலயம் பழமையாக இருந்தாலும் வான் முட்டும் கோபுரங்களும் விண் தொடும் விமானங்களும் இல்லை! அருமையான பதிவு! மிக்க நன்றிஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  32. அன்றே எழுதினேன்
    கம்பன் வீட்டு கட்டுத்தறி கவி பாடியதை போல்
    உங்கள் வீட்டு ஜன்னல் கம்பி கதை சொல்லுகிறது என்று.

    இன்று சொல்கிறேன்
    அது காவியம் படைத்து விட்டது

    எல்லோர் வீட்டிலும்
    ஜன்னல் கம்பிகள் இருக்கிறது.
    ஆனால் அது ஜன்னல்கள் திறக்கப்படாததால்
    வெளியில் தெரிவதில்லை .

    ஏனெனில் உள்ளே இருப்பவர்கள்
    உள்ளம் மூடிக்கிடக்கிறது.

    அவர்களுக்கு திறக்கவும் தெரியவில்லை.
    பிறரை திறக்கவும் விடுவதில்லை.

    திறந்தால் அல்லவோ உள்ளிருக்கும்
    வெப்ப காற்று வெளியேறும்
    தென்றல் காற்று உள்ளே வரும்.

    இலவசமாய் கிடைக்கும்
    இயற்கைகாற்றை விடுத்து
    செயற்கை காற்றை விலைக்கு வாங்கி
    உள்ளே சுற்ற விடுகிறார்கள்.

    மின் கட்டண பில்லை கண்டு
    தலை சுற்றி கீழே விழுகிறார்கள்

    மயக்கம் தெளிந்து எழுந்தால்
    மருத்துவர் அளிக்கும்
    மாத்திரை வில்லைகளை
    முழுங்கி விழித்தால் மருத்துவ மனை
    அளிக்கும் கட்டண தொகையை
    கண்டு மீண்டும் ஏறுகிறது ரத்த அழுத்தம்.

    இதுதான் இன்றைய வாழ்க்கை

    இயற்கையோடு இணைந்து
    வாழும் வாழ்க்கைதான் இன்பம் தரும்.

    செயற்கைகள் எல்லாம் இறைக்கைகள்
    இல்லாத பறவைகள்போல்
    அதனால் பறக்க முடியாது.


    ரசிப்பவன்தான் இந்த உலகில்
    உண்மை வாழ்க்கை வாழ்கிறான்

    மற்றவர்கள் ஏதோபெயருக்கு
    காலத்தை கழிக்கிறார்கள்.

    உணவை ரசித்து புசிப்பவனுக்கு
    வயிறும் நிரம்புகிறது
    மனதும் நிரம்புகிறது.

    பிறரிடம் குறைகளை காணாது
    நிறைகளை மட்டும் பாராட்டி
    வாழ்பவனே நிறை மனிதன்

    பிறரிடம் குறை காண்பவர்கள்
    இறைவனால் முழுமையாக
    படைக்கபட்டிருந்தாலும்
    குறை பிரசவங்கள்தான்

    தானும் மகிழ்ந்து பிறரையும்
    மகிழ்விப்பவனே உண்மையான
    மகிழ்ச்சியை அடைகிறான்.

    எத்தனை கோடி இன்பம்
    வைத்தாய் இறைவா என்று
    பாரதி பாடினான் அன்று தன் வாழ்வில்
    கோடிகணக்கான துன்பங்களை
    சுமந்தும் அதை கருதாது

    நம்மை சுற்றி இறைவன் படைத்த
    அனைத்தும் இன்பம் தருபவை

    அனைவரால் அதை காண முடிவதில்லை
    கண்ணிருந்தும் அவர்களின்
    ரசனை குறைபாட்டினால்.

    உம் போன்றோரை பார்த்து
    அவர்கள் பார்வை பெறட்டும் .

    வாழ்வை ரசித்து
    வாழ கற்றுக்கொள்ளட்டும்.

    வாழ்க பல்லாண்டு
    நீங்கள் வரலாறு படைக்க.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Pattabiraman Sir,

      உங்களிடம் என்னால் பேசி ஜெயிக்கவே முடியாது என்பதை எப்போதோ புரிந்து கொண்டு விட்டேன்.

      அதுவும் கடந்த ஒரு வாரமாக தாங்கள் எனக்குக்கொடுத்துள்ள மிக நீளமான கருத்துச்செறிவுகள் மிக்க மின்னஞ்சல் தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பொக்கிஷமாகும்.

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் + ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆகிய இருவரின் பரம அனுக்கிரஹம் பெற்றுள்ள தங்களை நினைத்தால் எனக்கு கொஞ்சம் பொறாமையாகக் கூட உள்ளது.

      அவர்கள் இருவரின் பரம அனுக்கிரஹமும் எனக்கு மட்டுமே
      சொந்தமானது என்று எனக்குள், [என் அறியாமையால்]
      நினைப்பவன் / கர்வப்படுபவன் நான்.

      அதனால் ஏற்பட்டுள்ள பொறாமை மட்டுமே இது. ஆரோக்யமான பொறாமை தானே இது? அதனால் என்னை தாங்கள் தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்குமே பொருந்தக்கூடிய அழகான மிக நீண்ட கருத்துக்களுக்கும், ”வாழ்க பல்லாண்டு” என்ற வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என்றும் அன்புடன் VGK.

      நீக்கு
    2. நண்பர் VGK அவர்களே

      I thought my mail failed to
      evoke response from you.

      today I received your mail
      sailed from trichy and reached my
      டப்பா .நன்றி

      இறைஅருளும்
      குருவருளும் மட்டிலடங்காது
      பெய்யும் மழையைப்போல ,
      அங்கிங்கெனாது அனைவருக்கும்
      ஒளி தரும் ஆதவன் போல
      அளிக்கப்படுகிறது.

      கையில் வைத்திருக்கும் பாத்திரத்தின்
      அளவுதானே நீர் நிரம்பும்.

      ஆதவனாய் தோற்றமளிக்கும்
      மாதவனை வெளியே
      வந்து கண்டால்தான்
      அவனருள் கிடைக்கும்.

      அதுபோல்தான்
      குருவருளும் திருவருளும்

      அவர்களை நினைக்கும்போதாவது
      அல்லது தரிசிக்கும்போதாவது
      அனைத்தையும், தான் என்ற
      அகந்தையையும் மறந்து நின்றால்
      முழு பயனும் கிடைக்கும்
      அவ்வளவுதான்.

      இதில் பொறாமைப்பட
      ஒன்றும் இல்லை

      அதுவும் நீங்கள் பொறாமைப்படும்படி
      என்னிடம் ஒன்றும் இல்லை.
      நான் வெறும்
      சத்தம்போடும் காலி டப்பா
      அவ்வளவுதான்.

      குக்கிராமத்தில் உள்ள
      ரயில் வண்டிநிலையத்திர்க்கு
      எப்போதாவது ஒருமுறை
      வந்துபோகும் ஒன்றிரண்டு
      ரயில்வண்டிகளைதவிர யாரும்
      என் வலைப்பதிவுகளுக்கு
      வருவதில்லை.
      தப்பி தவறி உங்களை போல்
      யாராவது வந்தாலும்
      அவர்களை
      நான் விடுவதில்லை.

      உங்கள் busy schedule கிடையே
      ராமரசம் குடியுங்கள்.
      அது நிச்சயம்
      உங்களுக்கு
      நலம் தரும்

      நீக்கு
    3. Dear Mr. Pattabi Raman Sir,

      இதில் உள்ள ஒவ்வொரு வரிகளுமே எனக்கு மிகவும் பிடித்த ‘மிளகு ரஸமாகவும், தக்காளி ரஸமாகவும், எலுமிச்சை ரஸமாகவும்’ மிகுந்த ருசியுடன் உள்ளது சார்.

      //கையில் வைத்திருக்கும் பாத்திரத்தின் அளவுதானே நீர் நிரம்பும்.

      ஆதவனாய் தோற்றமளிக்கும் மாதவனை வெளியே வந்து கண்டால்தான் அவனருள் கிடைக்கும்.

      அதுபோல்தான்குருவருளும் திருவருளும் //

      அருமையோ அருமையான உதாரணங்கள். காரசாரமான ரஸம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெள்ளரிப்பிஞ்சு தயிர்பச்சடி போல ..... சூப்பரோ சூப்பர் சார்.

      //குக்கிராமத்தில் உள்ள ரயில் வண்டி நிலையத்திற்கு எப்போதாவது ஒருமுறை வந்துபோகும் ஒன்றிரண்டு ரயில் வண்டிகளைதவிர யாரும் என் வலைப்பதிவுகளுக்கு வருவதில்லை.//

      அப்படியெல்லாம் நினைக்காதீங்கோ சார். கொடுப்பிணை உள்ள வண்டிகள் மட்டுமே அங்கு வர நேரிடும். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம், காலம், சூழ்நிலை, பிராப்தம், சம்சார சாஹரத்திலிருந்து விடுதலை, நம் உடல்நிலை, வீட்டில் உள்ள மற்றவர்களின் உடல்நிலை, கணினியின் உடல்நிலை, மின் இணைப்பு, நெட் தொடர்பு போன்ற எவ்வளவோ விஷயங்கள் எல்லாமே ஒன்றுகூடி வர வேண்டியுள்ளதே, சார்.

      //தப்பி தவறி உங்களை போல் யாராவது வந்தாலும் அவர்களை
      நான் விடுவதில்லை. //

      அட ராமா !

      10-15 நாட்களுக்கு ஒருமுறையாவது வர முயற்சிக்கிறேன், சார்.

      என்னாலும் முன்புபோல அடிக்கடி இங்குமங்கும் பயணம் செய்ய இயலவில்லை சார்.

      அதனால் தான் என் வண்டியையே ஓட்டாமல் வெகு நாட்களாக அப்படியே அம்போவென விட்டுவிட்டேன், சார்.

      கோச்சுக்காதீங்கோ சார்.

      நீக்கு
    4. இதில் உள்ள ஒவ்வொரு வரிகளுமே எனக்கு மிகவும் பிடித்த ‘மிளகு ரஸமாகவும், தக்காளி ரஸமாகவும், எலுமிச்சை ரஸமாகவும்’ மிகுந்த ருசியுடன் உள்ளது சார்.

      இன்னும் மோடிரசம்,
      வேப்பம்பூ ரசம்,பூண்டு ரசம்
      மைசூர் ரசம்,கிள்ளுமிளகாய் ரசம்
      அன்னசிபழ ரசம். ரோஜா இதழ் ரசம்,
      ,என்று ஏராளமான் ரசம் கேட்கிறது
      இந்த நாக்கு நினைவுதப்பும்வரை

      அழியும் உடல் மீது இத்தனை பாசம் .

      அதில் ஒரு கடுகளவாவது
      அழியா உடல்பெற ராம ரசம் குடியுங்கள்
      உங்களுக்கு புண்ணியமாக போகும்.


      //கையில் வைத்திருக்கும் பாத்திரத்தின் அளவுதானே நீர் நிரம்பும்.

      ஆதவனாய் தோற்றமளிக்கும் மாதவனை வெளியே வந்து கண்டால்தான் அவனருள் கிடைக்கும்.

      அதுபோல்தான்குருவருளும் திருவருளும் //

      அருமையோ அருமையான உதாரணங்கள். காரசாரமான ரஸம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெள்ளரிப்பிஞ்சு தயிர்பச்சடி போல ..... சூப்பரோ சூப்பர் சார்.

      இதற்கும் சாப்பாடுதான்
      உதாரணம் காட்ட வேண்டுமோ
      சரியானசாப்பாடு ரசிகர் நீங்கள்.

      //குக்கிராமத்தில் உள்ள ரயில் வண்டி நிலையத்திற்கு எப்போதாவது ஒருமுறை வந்துபோகும் ஒன்றிரண்டு ரயில் வண்டிகளைதவிர யாரும் என் வலைப்பதிவுகளுக்கு வருவதில்லை.//

      அப்படியெல்லாம் நினைக்காதீங்கோ சார். கொடுப்பிணை உள்ள வண்டிகள் மட்டுமே அங்கு வர நேரிடும். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம், காலம், சூழ்நிலை, பிராப்தம், சம்சார சாஹரத்திலிருந்து விடுதலை, நம் உடல்நிலை, வீட்டில் உள்ள மற்றவர்களின் உடல்நிலை, கணினியின் உடல்நிலை, மின் இணைப்பு, நெட் தொடர்பு போன்ற எவ்வளவோ விஷயங்கள் எல்லாமே ஒன்றுகூடி வர வேண்டியுள்ளதே, சார்.

      உண்மையான விடுதலை
      வேண்டுமென்றால்
      ஆன்ம விடுதலை வேண்டுமென்றால் மனம் கேட்கும் தறுதலை விஷயங்களுக்கு மதிப்பு கொடுக்கக்கூடாது


      //தப்பி தவறி உங்களை போல் யாராவது வந்தாலும் அவர்களை
      நான் விடுவதில்லை. //

      அட ராமா !

      10-15 நாட்களுக்கு ஒருமுறையாவது வர முயற்சிக்கிறேன், சார்.

      என்னாலும் முன்புபோல அடிக்கடி இங்குமங்கும் பயணம் செய்ய இயலவில்லை சார்.

      அதனால் தான் என் வண்டியையே ஓட்டாமல் வெகு நாட்களாக அப்படியே அம்போவென விட்டுவிட்டேன், சார்.

      வண்டியைபயன்படுத்தவேண்டுமேன்றால்
      அதை ஓடும் நிலையில் வைத்திருக்கவேண்டும்.

      கோச்சுக்காதீங்கோ சார்.

      கோபிப்பதற்கு ஒன்றுமில்லை
      உங்கள்மீது இனம் புரியாத
      ஏதோ ஒரு அன்புதான்

      நீக்கு
    5. Pattabi Raman February 22, 2013 at 10:52 PM

      //கோபிப்பதற்கு ஒன்றுமில்லை
      உங்கள்மீது இனம் புரியாத
      ஏதோ ஒரு அன்புதான்//

      அப்பாடி ...... ஏதோ ஒரு அன்பு தான்
      என முடித்து ஆளை விட்டுட்டாரப்பா .... ராமா ராமா ராமா ராமா!

      பிழைத்தேன் நானும் இன்று ராமரஸத்தால் ! ;))))))

      ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !

      நீக்கு
    6. நான் உங்களை விட்டுவிட்டதாக
      நினைத்து சந்தோஷப்படவேண்டாம்
      நான் வணங்கும் ராமன்
      தன் பக்தர்களை என்றும்
      விடுவது கிடையாது ,
      விட்டதும் கிடையாது
      என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

      நீக்கு
  33. "எங்கிட்டே என்னத்தைக் கேக்கறது?.." என்றது ஜன்னல் கம்பி.

    "கொசு வலைக்கதவுகளுக்கு அப்பாலே என்னை நிறுத்திட்டாங்க. வெயிலோ, மழையோ, குளிரோ எல்லாம் பழகிப்போச்சு. கறுத்துப் போயிட்டேன். பெயிண்ட் அடிச்சு குளிப்பாட்டுவாங்கன்னாலும், அது கூட தற்காலிக ரிலீப் தான். தூசி தும்பட்டை வருமென்று எந்நேரமும் கதவு சாத்தல் வேறே. சந்தேகம் இருந்தா முதல் பதிவில் எனக்கு மேலே பாருங்க. ஆரம்பத்திலே இருந்த அந்த தூசி அலர்ஜியும் இப்போ பழகிப் போச்சு.

    என்னேரமும் கோபுர தரிசனம். இதில் என்னேரமுங்கறது தான் உருப்படியா எனக்குக் கிடைச்ச பாக்கியம். நீட்ட வாக்கில் நிக்க வைச்சிருந்தாங்கன்னா இன்னும் அந்த பாக்கியம் கூடியிருக்கும்.
    என் கையில் இல்லாததுக்கெல்லாம் குறைப்பட்டு என்ன பிரயோசனம். சொல்லுங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி February 17, 2013 at 6:32 AM

      வாருங்கள் என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. ஜீவி ஐயா,
      அவர்களே! வணக்கம். நமஸ்காரங்கள்..

      //"எங்கிட்டே என்னத்தைக் கேக்கறது?.." என்றது ஜன்னல் கம்பி.
      "கொசு வலைக்கதவுகளுக்கு அப்பாலே என்னை நிறுத்திட்டாங்க. வெயிலோ, மழையோ, குளிரோ எல்லாம் பழகிப்போச்சு. கறுத்துப் போயிட்டேன். பெயிண்ட் அடிச்சு குளிப்பாட்டுவாங்கன்னாலும், அது கூட தற்காலிக ரிலீப் தான். தூசி தும்பட்டை வருமென்று எந்நேரமும் கதவு சாத்தல் வேறே. சந்தேகம் இருந்தா முதல் பதிவில் எனக்கு மேலே பாருங்க. ஆரம்பத்திலே இருந்த அந்த தூசி
      அலர்ஜியும் இப்போ பழகிப் போச்சு//

      ஜன்னல் பேசுவதுபோல தாங்கள் பேசியுள்ளது மிகச்சிறப்பாகவே உள்ளது. மிகவும் நியாயமாகவும் உள்ளது.

      BUILDING’S FRONT ELEVATION என்ற பெயரில் ஏதேதோ ஜோல்னா வேலைகள் அழகுக்காகச் செய்யப்பட்டுள்ளன. மூன்று SUNSHADE களுக்கும் மேல் கூட ஒரு கூம்பு போல வைத்துள்ளார்கள்.

      வீட்டை வாங்கி சுமார் 12 ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும் ஒரு முறை கூட OUTER பெயிண்ட் அடிக்கப்படவில்லை. இருப்பினும், தங்களின் ஷார்ப்பானா கண்கள் அந்தத் தூசிகளையும் கவனிக்கத் தவறவில்லை என்பது எனக்கே வியப்பளிப்பதாக உள்ளது.

      அது தான் “முதிர்ந்த பார்வை” என்பது. இது போன்ற முதிர்ந்த பார்வை கொண்டவர்களைப்பற்றியும் கூட நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

      -=-=-=-=-=-=-
      இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2.html

      அதன் இரண்டாம் பகுதியில் தாங்கள் கொடுத்துள்ள கருத்து இதோ:

      ஜீவி September 6, 2011 at 8:36 AM

      இந்தத் தடவை தலைப்பு தான் பெயரைத் தட்டிக் கொண்டு போகிறது. நல்லதிற்காக தங்களை வருத்திக் கொள்ளும் பக்குவம் அந்தப் பக்குவப்பட்ட வயசில் தான் வரும் போலிருக்கு.

      நல்ல நல்ல கதைகளாகத் தரும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். ..

      -=-=-=-=-=-=-

      //என்னேரமும் கோபுர தரிசனம். இதில் என்னேரமுங்கறது தான் உருப்படியா எனக்குக் கிடைச்ச பாக்கியம்.//

      ஆமாம். வாஸ்தவம் தான். எந்நேரமும் வெயிலோ, மழையோ, வெளிச்சமோ , இருட்டோ, குளிரோ, காற்றோ, இரவோ, பகலோ, 365 நட்களும் தினமும் 24 மணி நெரமும் தரிஸிப்பது இந்த ஜன்னல்கள் மட்டுமே. உண்மையிலேயே பாக்கியசாலிகள் தான்.

      // நீட்ட வாக்கில் நிக்க வைச்சிருந்தாங்கன்னா இன்னும் அந்த பாக்கியம் கூடியிருக்கும்.//

      ஆமாம் ஐயா, நான் என் பிரமோட்டரிடம் இந்தக்கோரிக்கையை வேறு விதமாக வைத்து, அதற்கு தனியா அரை லக்ஷமோ ஒரு லக்ஷமோ தருவதாகச் சொல்லிப்பார்த்தேன்.

      அதாவது FRONT SIDE ROAD FACING ஆக இருப்பதாலும், 40 அடி அகலமும் முழுவதுமாக என் வீட்டுக்கே சொந்தமாக இருப்பதாலும், அந்தப்பகுதி வழியாக வெளியே சென்று வேடிக்கை பார்க்க ஒருசிறிய பால்கனி போல அமைத்துத்தாருங்கள், ஒரு சிறிய பாதையாவது வைத்துத்ட்தாருங்கள் என்று மன்றாடிப்பார்த்தேன். அது நடக்கவில்லை.

      //என் கையில் இல்லாததுக்கெல்லாம் குறைப்பட்டு என்ன பிரயோசனம். சொல்லுங்க..//

      ஜன்னல் கையில் மட்டுமல்ல. PROMOTER கையிலும் அது இல்லையாம். GOVT. TOWN PLANNING APPROVAL வாங்கிய பிறகு எந்தவிதமான ALTERATIONS களும் அதுவும் குறிப்பாக FRONT ELEVATION இல் செய்யவே முடியாது, சார் என்று சொல்லிவிட்டார்.

      மேலும் நான் தான், கட்டிடம் முழுவதும் முடிந்த பிறகு இந்த வீட்டை கட்டக்கடைசியாக READY MADE SHIRT போல வாங்கி உடனே கிரஹப்பிரவேஸம் செய்து மகிழ்ந்தவன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும்,
      மனப்பூர்வமான ஆசீர்வாதங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      அநேக நமஸ்காரங்களுடன்
      கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  34. உணர்வுபூர்வமான பதிவு. உங்கள் வீடு எங்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டது.பார்க்கவேண்டும் என்ற ஆவலையும் தூண்டிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. T.N.MURALIDHARAN February 17, 2013 at 7:55 AM

      வாருங்கள், வணக்கம்.

      //உணர்வுபூர்வமான பதிவு. உங்கள் வீடு எங்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டது. பார்க்கவேண்டும் என்ற ஆவலையும் தூண்டிவிட்டது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உணர்வு பூர்வமான ஆவலுடன் கூடிய கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  35. ஜன்னல் கம்பிகளுக்குப் பின், முன் எத்தனை எத்தனை கதைகள்!
    கட்டில் அதில் அனந்த சயனம், தலையணைகள்(7!) - நீங்கள் எழுதும்போதே எல்லாம் கண்முன்னே காட்சிகளாக விரிகின்றன! எழுத்தில் என்ன ஒரு லாவகம்!

    ஜன்னல் கம்பிகள் சொல்லும் ஒவ்வொரு நிகழ்வும் அருமை! உங்கள் நொறுக்குத்தீனி லிஸ்ட் கொஞ்சம் பயமுறுத்துகிறது.

    திருச்சி நகரையும், உங்கள் வீட்டுப் பக்கத்தில் குடிகொண்டுள்ள கடவுளரின் கோவில்கள், எல்லாமே 'உடனே கிளம்பி வா' என்று அழைப்பு விடுக்கின்றன.

    கூடிய சீக்கிரம் வருகிறேன்.

    ஊரில் இல்லாததால் இந்தத் தாமதமான வருகை. மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan February 17, 2013 at 10:03 AM

      வாருங்கள், வணக்கம்.

      //ஜன்னல் கம்பிகளுக்குப் பின், முன் எத்தனை எத்தனை கதைகள்!
      கட்டில் அதில் அனந்த சயனம், தலையணைகள்(7!) - நீங்கள் எழுதும்போதே எல்லாம் கண்முன்னே காட்சிகளாக விரிகின்றன! எழுத்தில் என்ன ஒரு லாவகம்!//

      திருவாளர் ”அனந்த சயனம்” என்ற ஓர் மிகப்பெரிய அதிகாரி நான் வேலைபார்த்த BHEL FINANCE DEPT. இல் இருக்கிறார்.

      என் அருமைப் பேத்தி பிறந்த அதே நாளில் அவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைகள் இருவரும் பிறந்தது வெவ்வேறு ஊர்களில்.

      பிறகு ஒரு 10 நாட்கள் கழித்து நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்ட போது தான் தெரிந்து கொண்டோம், என் முதல் பேத்தி பெயரும், அவரின் முதல் பெண் குழந்தை பெயரும் “பவித்ரா” என்பதை.

      இப்போது இந்த இரண்டு பவித்ராக்களும் Best Friends என் பேத்தி இவ்விடம் இந்தியா வரும்போது, ஒருசில நாட்கள் அவர்கள் வீட்டுக்கும், அதுபோல அந்த பவித்ரா எங்கள் வீட்டுக்கும் வருகை தருவார்கள். விளையாடுவார்கள்.

      அன்றாடம் e-mail chatting தொடர்புகளும் அந்த இரு குழந்தைகளுக்குள் உண்டு.

      அந்த மிகவும் புத்திசாலித்தனமுள்ள Mr. T.அனந்தசயனம் Sir அவர்களுக்கு என் பெரிய பிள்ளையின் வயது தான் இருக்கும்.

      அவர் மேன்மேலும் பதவி உயர்வுகள் பெற்று கூடிய சீக்கரமே GENERAL MANAGER/FINANCE >>> DIRECTOR/FINANCE >>> CMD of BHEL ஆக வேண்டும் என்பது என் விருப்பம். கடவுள் கிருபையால் என் இந்த விருப்பமும் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      //ஜன்னல் கம்பிகள் சொல்லும் ஒவ்வொரு நிகழ்வும் அருமை! உங்கள் நொறுக்குத்தீனி லிஸ்ட் கொஞ்சம் பயமுறுத்துகிறது. //

      கொஞ்சமும் பயப்படாதீங்கோ. பொட்டலங்களாக மட்டுமே நீங்கள் வரும்போது offer செய்வேன். உங்களுக்கு எது பிடிக்குமோ அதை மட்டும் பிரித்து சாப்பிடுங்கோ. மீதி எல்லாவற்றையும், அப்படியே பார்ஸலாக பையில் போட்டு எடுத்துச்செல்லுங்கோ. அநேகமாக உங்கள் பயணத்திலேயே எல்லாம் காலியாகிவிடும். ;)

      //திருச்சி நகரையும், உங்கள் வீட்டுப் பக்கத்தில் குடிகொண்டுள்ள கடவுளரின் கோவில்கள், எல்லாமே 'உடனே கிளம்பி வா' என்று அழைப்பு விடுக்கின்றன. கூடிய சீக்கிரம் வருகிறேன்.//

      வாங்கோ !

      //ஊரில் இல்லாததால் இந்தத் தாமதமான வருகை. மன்னிக்கவும்!//

      என் உடம்பும் ஊரில் இல்லாததால், இந்தத் தாமதமான பதில். தானிக்கு தீனி சரியாப்போச்சு. மன்னிப்பெல்லாம் எதற்கு?

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  36. எப்போ வந்தாலும் இவ்வளவு நொறுக்கு தீனி கிடைக்குமா, இருங்க வர்ர ஜூன்லே லீவுலே ஊருக்கு வரும் போது என் பசங்களையும் கூட கொண்டு வந்து எல்லாத்தையும் ஒரு கை பார்க்க சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஜீம்பாஷா February 17, 2013 at 1:32 PM

      வாருங்கள், வணக்கம்.

      //எப்போ வந்தாலும் இவ்வளவு நொறுக்கு தீனி கிடைக்குமா, இருங்க வர்ர ஜூன்லே லீவுலே ஊருக்கு வரும் போது என் பசங்களையும் கூட கொண்டு வந்து எல்லாத்தையும் ஒரு கை பார்க்க சொல்கிறேன்.//

      சந்தோஷம். வாராவாரம் தீரத்தீர சரக்குகள் வாங்கி வருவது என் வழக்கம். தாங்கள் தங்கள் பசங்களுடன் வருகை தர இருப்பதால் ஸ்டாக் கைவசம் இல்லாவிட்டாலும், ஓடிப்போய் 5 நிமிடத்தில் அனைத்தையும் வாங்கி வந்து விடுவேன். எல்லாக்கடைகளுமே என் வீட்டருகேயே உள்ளன.

      அவ்வப்போது FRESH ஆக வாங்கி வந்தால் தான் TASTE ஆக இருக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.


      நீக்கு
  37. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், இன்று (18.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ February 17, 2013 at 4:11 PM

      //அன்புடையீர் வணக்கம்! //

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், இன்று (18.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன்.//

      ஆஹா, மிக்க நன்றி ஐயா. சந்தோஷம் ஐயா.

      //தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!//

      அன்றே ஓடிப்போய் கருத்துச் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன்.

      எதற்கும் மீண்டும் ஒருமுறை போய்ப்பார்க்கிறேன், ஐயா.

      மீண்டும் நன்றிகள், ஐயா.

      நீக்கு
  38. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்... (http://blogintamil.blogspot.in/2013/02/1.html)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் February 17, 2013 at 5:06 PM

      //வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்... (http://blogintamil.blogspot.in/2013/02/1.html)//

      வருகைக்கும், தகவலுக்கு, வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, சார்.
      தங்களின் இத்தகைய அரும்பணி மகத்தானது.

      நீக்கு
  39. வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 17, 2013 at 6:47 PM

      //வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள் ஐயா.//

      மிகவும் சந்தோஷம். இனிய வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  40. //சிலர் தங்கள் வீட்டை அழகு படுத்த வேண்டி, பெரும் பணம் செலவுசெய்து INTERIOR DECORATIONS என்று செய்துகொள்கிறார்கள்.//எனக்கு அது போலெல்லாம் இயற்கையைச் செயற்கையாக வீட்டிற்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை என்பதை என் வீட்டு ஜன்னல் கம்பிகளைக் கேட்டாலே தெரியும். //

    உண்மைதான் வை.கோ சார். என்னதான் செயற்கையாக இவற்றை கொண்டு வந்தாலும் இயற்கை அழகே தனிதான். உங்கள் படங்களைப் பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கு.
    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.உங்களுக்கு ஒரு கோடி இல்லை பல கோடி புண்ணியங்கள் கிடைக்கிறது.

    திரு.அப்பாதுரை அவர்கள் பரவசம் அடைந்து சொன்ன ஒரு வார்தையால் எங்களுக்கு அற்புதமான பதிவு, படிக்க பார்த்து ரசிக்கக் கிடைத்தது. அதற்காக அவருக்கும், பொறுமையாக படங்களுடன் இவற்றை விளக்கிய உங்களுக்கும் எங்களுடைய நன்றிகள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMVI February 17, 2013 at 9:05 PM

      வாருங்கள், வணக்கம்.

      *****சிலர் தங்கள் வீட்டை அழகு படுத்த வேண்டி, பெரும் பணம் செலவுசெய்து INTERIOR DECORATIONS என்று செய்துகொள்கிறார்கள். எனக்கு அது போலெல்லாம் இயற்கையைச் செயற்கையாக வீட்டிற்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை என்பதை என் வீட்டு ஜன்னல் கம்பிகளைக் கேட்டாலே தெரியும்.*****

      //உண்மைதான் வை.கோ சார். என்னதான் செயற்கையாக இவற்றை கொண்டு வந்தாலும் இயற்கை அழகே தனிதான். உங்கள் படங்களைப் பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கு.
      கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.உங்களுக்கு ஒரு கோடி இல்லை பல கோடி புண்ணியங்கள் கிடைக்கிறது.//

      மிகவும் சந்தோஷம். மதுரகவியாக வருகை தந்து பல கோடி புண்ணியங்கள் தரும் கருத்துக்களை மகிழ்ச்சியுடன் கூறியுள்ளது எனக்கும் பிரமிப்பாகவே உள்ளது

      //திரு.அப்பாதுரை அவர்கள் பரவசம் அடைந்து சொன்ன ஒரு வார்தையால் எங்களுக்கு அற்புதமான பதிவு, படிக்க பார்த்து ரசிக்கக் கிடைத்தது. அதற்காக அவருக்கும், பொறுமையாக படங்களுடன் இவற்றை விளக்கிய உங்களுக்கும் எங்களுடைய நன்றிகள்.//

      ரொம்பவும் சந்தோஷம். எல்லாப்புகழும் என் எஞ்சினை ஸ்டார்ட் செய்து உதவிய திரு. அப்பாதுரை சார், அவர்களையே சேரும்.

      இதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு சிறிய பதிவு ஒன்று, வேறு ஒரு தலைப்பில் நாளை 23.02.2013 இரவோ அல்லது நாளைய மறுநாளோ வெளிவர உள்ளது. அதற்கும் வருகை தாருங்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  41. நான் படித்தேன்,படித்தேன்,திரும்பவும் படிப்பேன். உங்கள் ஜன்னல்கம்பிகளும் கொடுத்து வைத்தவை. ஒவ்வொரு முறை நீங்கள் தரிசனம் செய்யும் போதும் உங்களுக்கு முன்னால்,நான்
    தரிசனம் செய்து கொண்டே இருக்கிறேன் என்றும் அவைகள் நினைத்துக் கொள்ளும். எவ்வளவு ஆன்மீகமான சூழ்நிலை,அதை ரஸிக்கும் மனம், கோபுரம்,கோட்டை,ஆலயம்,ஆலயமணியின்மணியோசை, கடவுள்களின் ஊர்கோலப்பாதை, இருந்த இடத்தினின்றே தரிசனம் செய்ய வசதி, மிகவும் பொறாமையாக இருக்கு.
    இப்படிப்பட்ட இடம் கிடைக்க என்ன தவம் செய்தீர்கள் என்று கேட்க வேண்டும் போல உள்ளது. உணர்ச்சிகள் எழுத்து வடிவம் பெறும் போது மற்றவர்களின் ஆச்சரியத்திற்கும் உள்ளாகிறது
    அருமையும் உணர முடிகிறது.
    பிறருக்கு கொடுக்கக் கூட ரொம்ப தின் பண்டங்கள்ரொம்ப ஸ்டாக் வேண்டாம். துளித்துளி வருபவர்களோடு சாப்பிட்டாலும்
    கஷ்டம்தான்.
    ரிஃப்ளெக்ஸ் இருப்பவர்களுக்குதான் ப்ரமிட்மாதிறி,5,6 தலையணைகள் வேண்டுமென்று நினைத்திருந்தேன். வசதிக்காக
    நீங்கள் உபயோகிக்கிறீர்கள்.
    தூக்கத்தைப் புறக்கணித்தால் அது நல்லதில்லை.
    வாலாம்பாள் அவர்கள் இன்னும் சற்று உங்களைக் கண்காணிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்
    ஆர்வம் மெச்சும்படி இருந்தாலும் நம்மை,நாமேதான் கவனித்துக் கொள்ள வேண்டும். ஸரியான முறையில் புரிந்து
    கொள்ளுங்கள். அட்வைஸ் இல்லை. அபிமானம்.
    அழகான, மெச்சும்படியான உண்மையான ,உணர்வான பதிவு.
    நன்றியும், ஆசிகளும். அன்புடன் தாமதமான பதில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi February 17, 2013 at 10:32 PM

      வாங்கோ மாமி, அன்பான நமஸ்காரங்கள்.

      தங்களின் அபிமானத்துடன் கூடிய விரிவான மிகப்பெரிய பின்னூட்டம் என்னை மெய் சிலிரிக்க வைத்துள்ளது.

      //இப்படிப்பட்ட இடம் கிடைக்க என்ன தவம் செய்தீர்கள் என்று கேட்க வேண்டும் போல உள்ளது. உணர்ச்சிகள் எழுத்து வடிவம் பெறும் போது மற்றவர்களின் ஆச்சரியத்திற்கும் உள்ளாகிறது
      அருமையும் உணர முடிகிறது.//

      மிகவும் சந்தோஷம், மாமி.

      //பிறருக்கு கொடுக்கக் கூட ரொம்ப தின் பண்டங்கள்ரொம்ப ஸ்டாக் வேண்டாம். துளித்துளி வருபவர்களோடு சாப்பிட்டாலும்
      கஷ்டம்தான். //

      உணர்ந்துள்ளேன். டாக்டர்களும் அதையே தான் சொல்கிறார்கள். தங்களின் எச்சரிக்கைக்கு நன்றிகள். இனி குறைத்துக்கொள்கிறேன்.

      //வாலாம்பாள் அவர்கள் இன்னும் சற்று உங்களைக் கண்காணிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்//

      பல வருடங்கள் பின் தூங்கி முன் எழுந்தவள் இப்போது முன் தூங்கி [பின் எழுவதில்லை] முன் எழுந்து கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

      அதனால் நான் அவள் தூங்குவதை கண்காணித்து விட்டு, கணினியுடன் நீண்ட நேரம் பொழுதைக்கழித்து விட்டு, தாமதமாகத்தூங்கி தாமதமாக எழுந்து கொள்கிறேன்.

      காலையில் நான் தாமதமாக எழுவதை மட்டுமே அவளால் கண்காணிக்க முடிகிறது.

      அவள் பாவம் ...... மாமி. அவளுக்கு இப்போதெல்லாம் எவ்வளவோ சரீர சிரமங்கள்.

      ஒரு காலத்தில் [அதாவது எங்களுக்கு கல்யாணம் ஆகி முதல் 20 வருடங்கள்] தெம்பாகத்தான் இருந்தாள். நடு ராத்திரி 12 மணிக்கு பஜ்ஜி வேண்டும் என்று நான் கேட்ட எவ்வளவோ நாட்கள் எனக்காக சுடச்சுட ருசியாக பஜ்ஜி செய்து தந்தவள் தான்.

      இப்போது கடந்த ஒரு 10 வருடங்களாக தான், சரீர உபாதைகள் அதிகமாக தொந்தரவு அளித்து வருகின்றன.

      அவள் என்னை கண்காணிப்பதற்கு மேல், நான் அவளை எப்போதும் கண்காணிக்க வேண்டியதாக உள்ளது.

      சும்மா சொல்லக்கூடாது. மிகவும் நல்லவள். யாருக்கும் ஒரு கெடுதலும் மனதால் கூட நினைக்க மாட்டாள். கூப்பிட்டு நானாக எதையாவது பார்க்கச்சொல்லி சொன்னால் மட்டுமே கம்ப்யூட்டருக்கு வருவாள். அவ்வளவு நல்லவள்.

      //அழகான, மெச்சும்படியான உண்மையான ,உணர்வான பதிவு.
      நன்றியும், ஆசிகளும்//

      எங்கள் இருவருக்கும் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள் மட்டுமே தேவை, மாமி.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான அன்புடன் கூடிய கருத்துக்களுக்கும், ஆசிகளுக்கும் எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள், மாமி.

      நமஸ்காரங்களுடன்
      கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  42. வை. கோ. சார். திருச்சிக்கு டிக்கட் புக் பண்ணியாச்சு.
    அந்த ராசியான சன்னலை ஒரு வாரம் வாடகைக்கு விட்டுவிட வேண்டும். அவ்வளவு ஆசையைத் தூண்டிவிட்டுட்டீங்க.

    மிக அழகான புகைப்படங்கள். தின் பண்டங்களைக் காட்டி வேற பசியைத் தூண்டிட்டீங்க... மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதிரா February 18, 2013 at 6:14 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வை. கோ. சார். திருச்சிக்கு டிக்கட் புக் பண்ணியாச்சு.//

      சந்தோஷம். ரொம்ப நாட்களாகவே பதிவுகள் பக்கம் தங்களைக் காணோமே என ஒரே கவலையாக இருந்தது. டிக்கெட் புக் பண்ணப்போயிருப்பீங்க போலிருக்கு. ;)

      //அந்த ராசியான சன்னலை ஒரு வாரம் வாடகைக்கு விட்டுவிட வேண்டும். அவ்வளவு ஆசையைத் தூண்டிவிட்டுட்டீங்க.//

      வாடகை எல்லாம் எதற்கு? ஆசையாகத் தங்கிச்செல்லுங்கள். அதுவரை நாங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். அல்லது வேறு எங்காவது போய்த் தங்கிக்கொள்கிறோம்.

      //மிக அழகான புகைப்படங்கள். தின் பண்டங்களைக் காட்டி வேற பசியைத் தூண்டிட்டீங்க... மிகவும் ரசித்தேன்//

      ரொம்பவும் சந்தோஷம்.

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  43. வழக்கம் போல் சுவாரஸ்யமான பகிர்வு.படங்கள் பார்க்கவே ரம்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா February 18, 2013 at 7:00 PM

      வாருங்கள், வணக்கம்.

      //வழக்கம் போல் சுவாரஸ்யமான பகிர்வு.படங்கள் பார்க்கவே ரம்யமாக இருந்தது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ரம்யமான சுவாரஸ்யமான கருத்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  44. எப்பா ! எம்புட்டு தலகானி ! இம்புட்டு நொறுக்குத் தீனி!! வரவங்களுக்கு ரெண்டு வேணாம் ஒரு தலகானி கொடுத்து இப்படி தீனியும் கொடுத்தால் உங்க ஜன்னலில் வேடிக்கைப் பார்த்துகிட்டே சுகமா தூங்கிடலாம்.உங்க நொறுக்குத்தீனி பாக்கட்டுகளை உங்க ஜன்னலில் தொங்கவிட்டு ஒரு பெட்டிக்கடையே நடத்திடலாம்னு யாரோ திட்டம் போட்ருக்காங்க.ஜாக்கிரதை சார்.

    அதென்ன கோவில் கோபுரமா ? ஏர்டெல் கோபுரமா ?

    அம்பாள் மிகவும் அழகு .

    அம்மாடி சாரின் வண்டி பதில் பின்னுட்டங்களை காணும்.
    ஆனாலும் ஏன் பதில்கள் மிஸ்ஸிங்.உடல் நலம் சரிதானே சார்?ஜன்னலுக்கும் உங்களுக்கும் திருஷ்டி போட சொல்லிடுங்க.இடை இடையே தூக்கத்தையும் மாமியையும் கவனித்துக்கொள்ளுங்கள்.எங்களைவிட அவங்க ரெண்டு பேர்தான் உங்களுக்கு மிகவும் உதவுவார்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar February 19, 2013 at 2:58 AM

      வாங்கோ ... வணக்கம்.

      //எப்பா ! எம்புட்டு தலகானி ! இம்புட்டு நொறுக்குத் தீனி!! வரவங்களுக்கு ரெண்டு வேணாம் ஒரு தலகானி கொடுத்து இப்படி தீனியும் கொடுத்தால் உங்க ஜன்னலில் வேடிக்கைப் பார்த்துகிட்டே சுகமா தூங்கிடலாம்.//

      வருகிற விருந்தாளிகளுக்குக் கொடுக்க என்றே தனியாக புதிதாக உரை போட்டு 7-8 தலையணிகள் வைத்திருக்கிறோம், மேடம். தீனிக்கு எப்போதுமே பஞ்சமில்லை. எப்போதும் வீட்டின் அருகிலேயே கிடைக்கும். அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாகவே வாங்கிக்கொள்ளலாம். அதனால் கவலைப்படாமல் வாங்கோ, வரும்போது சாரையும், ’அம்ருதா’வையும், ’யக்சிதாஸ்ரீ’யையும்
      அவசியம் கூட்டி வாருங்கள். 04.06.2013 அன்று சின்னவளுக்கு முதல் பிறந்த நாள் ... ஞாபகம் இருக்கட்டும். இங்கு திருச்சியிலேயே கொண்டாடி விடலாம்.

      >>>>>>>>

      நீக்கு

    2. கோபு >>>> ஆச்சி மேடம் [2]

      //உங்க நொறுக்குத்தீனி பாக்கட்டுகளை உங்க ஜன்னலில் தொங்கவிட்டு ஒரு பெட்டிக்கடையே நடத்திடலாம்னு யாரோ திட்டம் போட்ருக்காங்க.ஜாக்கிரதை சார்.//

      நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளை ஜன்னலில் தொங்க விடலாம். அது ஈஸி தான்.

      இரண்டாவது மாடியில் அதுவும் ரோட்டைப்பார்த்து உள்ள ஜன்னலுக்கு ஜனங்கள் பொருட்கள் வாங்க எப்படித் தாவி வருவார்கள்.

      எப்போதாவது குரங்குகள், காக்கைகள், அணில்கள் மட்டுமே பொருட்கள் வாங்க வரக்கூடும். அவை காசு தராமல் எடுத்துக்கொண்டு ஓடியே போகும்.

      பெட்டிக்கடை வியாபாரம் போண்டியாகி விடும்.

      இதுபோன்ற திட்டங்களெல்லாம் உங்களால் மட்டுமே போட முடியும். யாரோ என்று யார் பேரிலோ பழியைப்போடுகிறீர்களே! ;)

      >>>>>>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> ஆச்சி மேடம் [3]

      //அதென்ன கோவில் கோபுரமா ? ஏர்டெல் கோபுரமா ?//

      எல்லாக்கோயிலும் திருப்பதி திருவனந்தபுரம் போன்ற பணக்கார கோயில்களா என்ன? இது ஏதோ எங்களைப்போன்ற ஏழைபாழைகளுக்கான கோயில் அல்லவா?

      இந்தப்பதிவினிலே கூடச்சொல்லியிருக்கிறேன்:

      http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_28.html

      நாங்கள் மட்டுமல்ல எங்கள் பிள்ளையாரும் கூட ஏழை தான் என்று. நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

      ஏதோ கும்பாபிஷேகம் நடந்த போது, கோயிலில் கோபுரத்திற்கு பெயிண்ட் அடிக்கவோ, மின் விளக்குகளை எரிய வைக்கவோ, ஏர்டெல் காரர்கள் உதவி செய்வதாகச்சொல்லி, தங்களுக்கும், அதில் விளம்பரம் தேடிக்கொண்டிருப்பார்கள்.

      என்ன செய்வது? சில சாமிகளுக்கும் இதுபோன்ற சில ஆசாமிகளின் உதவிகள் தேவைப்படத்தான் செய்கிறது, என்பதே ஆங்காங்கே நம்மால் பார்க்க முடிகிறது. அதனால் ஒன்றும் தவறு இல்லை.

      ஏதோ கோயில்கள் இதுபோன்ற ஒருசிலரால் ஓரளவுக்கு சுத்தமாகப் பராமரிக்கப் படுகின்றதே. அதுவரை சந்தோஷமே.

      >>>>>>>>>>

      நீக்கு

    4. கோபு >>>>>> ஆச்சி மேடம் [4]

      //அம்பாள் மிகவும் அழகு .//

      அந்த அம்பாள் எப்போதுமே நல்ல அழகு தான். விசேஷ நாட்களில் சந்தனக்காப்பு, விசிறி மடிப்பு பாவாடை / புடவை + புஷ்ப அலங்காரங்களுடன் மேலும் ஜொலிப்பாள்.

      என்னைப்பொறுத்தவரை அவள் ஓர் பேசும் தெய்வம். என்னுடன் மட்டுமே பேசுவாளாக்கும். ;)))))

      >>>>>>>

      நீக்கு
    5. கோபு >>>> ஆச்சி மேடம் [5]

      //அம்மாடி சாரின் வண்டி பதில் பின்னுட்டங்களை காணும்//.

      -=-=-=-=-=-=-=-=-
      என்னுடைய போன பதிவுக்கு நீங்கள் கொடுத்துள்ள பின்னூட்டத்தில் ஒரு பகுதி இதோ:

      thirumathi bs sridharFebruary 12, 2013 at 4:56 PM

      பதிவையும் பின்னுட்டங்களையும் படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ப்பாஆஆஆஆஆஆ யே கொல்லியாத்தி னு சொல்லத்தோணுது


      அதற்கு என் பதில் இதோ::
      ========================

      எல்லோரும் பதிவை மட்டுமே படித்தோ அல்லது படிக்காமலேயோ கூட கமெண்ட் அளிப்பார்கள்.

      நீங்களும் உங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் சிலரும் மட்டுமே, பின்னூட்டங்களையும், அதற்கான என் பதிலகளையும் ரஸித்துப் படிக்கிறீங்கோ. ;)))))

      ஸ்ப்பாஆஆஆஆஆஆ யே கொல்லியாத்தி னு தான் எனக்கும் சொல்லத்தோணுதாக்கும் ;))))))))))))

      -=-=-=-=-=-=-=-=-

      //ஆனாலும் ஏன் பதில்கள் மிஸ்ஸிங்.உடல் நலம் சரிதானே சார்?//

      உடல்நலம் கொஞ்சம் சரியில்லாமல் போனது என்பது உண்மையே. எப்படி கரெக்டாகக் கண்டு பிடித்துள்ளீர்கள். ஆச்சர்யமாக உள்ளது.

      >>>>>>>>>

      நீக்கு
    6. கோபு >>>> ஆச்சி மேடம் [6]

      //ஜன்னலுக்கும் உங்களுக்கும் திருஷ்டி போட சொல்லிடுங்க.//

      இதற்கும் சென்ற பதிவினிலேயே பதில் உள்ளது. இதோ மீண்டும் நினைவூட்டுகிறேன்.

      -=-=-=-=-=-

      ஆச்சி மேடத்தின் பின்னூட்டம் :-

      //ஒரு டன் பூசனிக்காய் உடைத்தாலும் தகும்.//


      VGK's பதில்
      ===========

      **வரும் போது ஹரியானாவிலிருந்து ஒரு லாரியில் ஏற்றி வாங்கோ ஒரு டன் பூசணிக்காய்களையும்.

      நீங்க தான் வந்து உங்க கையால் தான் உடைக்கணும்

      மிகவும் ராசியான கையாக்கும்! ஹுக்க்க்க்க்கும் !!. ;)))))).**

      -=-=-=-=-=-

      ஹரியானாவிலிருந்து ஒரு டன் பூசணிக்காயுடன் ஆச்சி மேடம் இன்னும் புறப்பட்டதாகவே தெரியவில்லை.

      >>>>>>>

      நீக்கு
    7. கோபு >>>> ஆச்சி மேடம் [7]

      //இடை இடையே தூக்கத்தையும் மாமியையும் கவனித்துக்கொள்ளுங்கள்.//

      இடை இடையே மாமியின் தூக்கத்தையும் கவனித்துக்கொண்டு தான், [அதாவது நிச்சயமாக நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துள்ளார்களா என கவனித்த பிறகே] உங்கள் அனைவரையும் கவனித்து கொண்டு வருகிறேனாக்கும்.

      //எங்களைவிட அவங்க ரெண்டு பேர்தான் உங்களுக்கு மிகவும் உதவுவார்கள் .//

      கரெக்ட். உங்கள் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும். யக்சிதாஸ்ரீக்கு பாலுக்குப்போடும் போது நீங்களும் ஒரு ஸ்பூன் போட்டுக்கொள்ளுங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      oooooo

      நீக்கு
  45. கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்! முழுவதுமாய்ப் படித்தேன்! அருமையான பகிர்வு! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. February 19, 2013 at 5:44 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்! முழுவதுமாய்ப் படித்தேன்! அருமையான பகிர்வு! பகிர்விற்கு நன்றி!//

      மிகவும் சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  46. அடடா... கோபு அண்ணனின் பதிவு வந்து 3 நாட்கள் ஆகிவிட்டது.. என் கண்ணுக்குத் தெரியவில்லையே... இப்போதான் கண்டேன்ன்.. இம்முறை பதிவு உச்சிப் பிள்ளையாரின் உச்சிக்கே போய்விட்டது:) அவ்ளோ உயரப் பதிவாக இருக்கு.. மீ கொஞ்ச நேரத்தால வந்து படிக்கிறேன்ன்.. ஒண்ணே ஒண்ணு மட்டும் இப்போ சொல்லிடறேன்ன்..

    //
    [ பகுதி 3 of 3 ]//

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா... முடிவுப்பகுதி வெளியாகியிருக்கு.. வாழ்த்துக்கள்.. மீண்டும் வருகிறேன் இப்போ நேரமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira February 19, 2013 at 7:13 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒண்ணே ஒண்ணு மட்டும் இப்போ சொல்லிடறேன்ன்..
      [ பகுதி 3 of 3 ]

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா... முடிவுப்பகுதி வெளியாகியிருக்கு.. வாழ்த்துக்கள்.. மீண்டும் வருகிறேன். இப்போ நேரமில்லை.//

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா... இப்போ நேரமில்லையாம். ;)))))

      நீக்கு
  47. //அதாவது தலைக்கு மூன்று, காலுக்கு இரண்டு, இரண்டு கால் தொடைகளுக்கும் இடையிலே இரண்டு தலையணி வேண்டும். //

    அச்சச்சோ அப்ப நீங்க சென்னை, அப்பலோ ஹொஸ்பிட்டலில்.. 5ம் வோட்டிலயோ இருக்கிறீங்க கோபு அண்ணன்?:). நாங்களெல்லாம், நீங்க வீட்டில இருக்கிறதா நம்பிக்கொண்டிருக்கிறோம்ம்:)).. மீ எஸ்கேப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
  48. //அவற்றில் நிறைய ‘மிக்ஸர், காராபூந்தி, ஓமப்பொடி, காராச்சேவ், வறுத்த முந்திரி, பச்சை முந்திரி, பாதாம் பருப்பு, தூள்பக்கோடா, சிப்ஸ், முறுக்கு, தட்டை, பாப்கார்ன், மஸாலா கடலை, கடலை மிட்டாய், கடலை உருண்டைகள், தித்திப்பு தேன்குழலான மனோரக்கா உருண்டைகள், தேங்காய் பர்பி, நிலக்கடலை, பொட்டுக்கடலை, அச்சு வெல்லம், போன்ற பலவிதமான பக்க வாத்யங்களான கரமுராக்கள், சின்னச்சின்ன 50 கிராம் / 100 கிராம் பாக்கெட்களாக வாங்கி ஸ்டாக்கில் வைத்திருப்பேன்.//

    கிட்டத்தட்ட ஒரு குட்டிக்கடை எனச் சொல்லுங்கோ.. என்ன இருப்பினும் பக்கட்டோடு பண்டங்கள் பார்க்க ஆசையா இருக்கே..:)


    //என் வீட்டுக்குள் இருந்தவாறே ஜன்னல் கம்பிகள்
    வழியாக எடுக்கப்பட்ட படங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
    // உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்ட இடம்.. கோபு அண்ணனின் ஜன்னல் கம்பிகளே..:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira February 19, 2013 at 8:55 AM

      //கிட்டத்தட்ட ஒரு குட்டிக்கடை எனச் சொல்லுங்கோ.. என்ன இருப்பினும் பக்கட்டோடு பண்டங்கள் பார்க்க ஆசையா இருக்கே..:)//

      ’பக்கட்டோடு’ இல்லை அது ‘பாக்கெட்டோடு’.
      எங்கள் பக்கமெல்லாம் ‘பக்கட்’ அல்லது ’பக்கெட்’ என்றால் வாளி என்று புரிந்து கொள்வோம்.

      //// உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்ட இடம்.. கோபு அண்ணனின் ஜன்னல் கம்பிகளே..:)..//

      நோ நோ நோ நோ ...... தப்பூஊஊஊ.

      உச்சிப்பிள்ளையார் கோயில் கொண்ட இடத்தை கப்புன்னு போட்டோ பிடிக்கவும் கபால்ன்னு க்ளிக் பண்ணவும் கேமரா குடிகொண்ட இடமே என் வீட்டு ஜன்னல் கம்பிகள்.

      நீக்கு
  49. அருமையான படங்கள் அதுக்கேற்ப விளக்கங்கள்.. ஒன்று மட்டும் சொல்லிட்டு ஓடிடுறேன்ன்..

    என்னவெனில் உங்கள் பதிவும் நிளம், அதைவிடக் கொமெண்ட்களின் எண்ணிக்கையும் நீளம்.. ஸ்குறோல் பண்ணியே கை வலிக்குது, இதுக்கு பொப் - அப் விண்டோவாக பின்னூட்ட பொக்ஸ் போட்டால் பின்னூட்டமிட வசதியாக இருக்கும் என்பது என் கருத்து.

    இது எங்க வீட்டு ரிமியார் மாதிரி:)(விரைவில் தெரியவரும் அவர் யாரென:)).. மேலே ஓடிப்போய் கொமெண்ட் படிப்பதும் கீழே ஓடிவந்து பின்னூட்டம் போடுவதும், திரும்ப மேலே ஓடுவதுமாக இருந்தேன்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira February 19, 2013 at 9:07 AM

      //அருமையான படங்கள் அதுக்கேற்ப விளக்கங்கள்.. //

      சந்தோஷம்.

      //ஒன்று மட்டும் சொல்லிட்டு ஓடிடுறேன்ன்..//

      ஓட வேண்டாம், மெதுவாகவே போங்கோ!

      //என்னவெனில் உங்கள் பதிவும் நிளம், அதைவிடக் கொமெண்ட்களின் எண்ணிக்கையும் நீளம்.. ஸ்குறோல் பண்ணியே கை வலிக்குது//

      ஐய்ய்யோ பாவம் ... இந்த ஒருமுறை மட்டும் இதை வாங்கி ஜில்லுன்னு தடவிக்கோங்கோ

      DEEP FREEZE COLD GEL 2% W/W FAST ACTING, PAIN RELIEVING GEL [CONTAINING RACEMIC MENTHOL 2% W/W] MANUFACTURED BY "THE MENTHOLATUM CO. LTD.,EAST KILBRIDEG74 SPE SCOTLAND UK

      நான் உங்கள் பதிவுக்கு வருகை தரும்போதெல்லாம் இதைத்தான்
      ஸ்குறோல் பண்ணி கைவலித்த போதெல்லாம் தடவிக்கொண்டேன்.

      //இதுக்கு பொப் - அப் விண்டோவாக பின்னூட்ட பொக்ஸ் போட்டால் பின்னூட்டமிட வசதியாக இருக்கும் என்பது என் கருத்து.//

      $ பொப் - அப் விண்டோவாக பின்னூட்ட பொக்ஸ் போட்டால் $

      நீங்க சொல்லுவது எனக்கு ஒன்னுமே புரியலே.

      ஏற்கனவே என் வீட்டிலுள்ள ஏழு விண்டோக்களை எப்படியோ கஷ்டப்பட்டு, சுருக்கோ சுருக்குன்னு சுருக்கி மூன்றே மூன்று பதிவுகளில் முடிச்சிருக்கேன்.

      மேற்கொண்டு ஏதோ பொப்-அப் விண்டோவைப் போடச்சொல்றீங்கோ ... அதெல்லாம் வேண்டாங்கோ .... என்னை விட்டுடுங்கோ.

      நீக்கு
  50. Naan veedu vaanga / virka patta paattai remba naal munnadiye pottuten sir. Ungaludhu very interesting 'jannal' post. Enjoyed reading

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவி தங்கமணி February 19, 2013 at 9:53 PM

      வாங்கோ, வணக்கம்.

      //Naan veedu vaanga / virka patta paattai remba naal munnadiye pottuten sir.
      நான் வீடு வாங்க/விற்க பட்ட பாட்டை ரொம்ப நாள் முன்னாடியே போட்டுட்டேன், சார்.//

      அப்படியா! நான் படித்தேனோ இல்லையோ, போய்ப்பார்க்கிறேன்.
      இல்லாவிட்டால் மீள் பதிவாகக்கொடுத்துடுங்கோ.

      //Ungaludhu very interesting 'jannal' post. Enjoyed reading
      உங்களுடையது மிகவும் சுவாரஸ்யமான ஜன்னல் பதிவு. நன்கு ரஸித்து படிக்க முடிந்தது//

      வீடு என்று இல்லை எதிலுமே பல சாதகங்களும் அதே போல பல பாதகங்களும் இருக்கத்தான் இருக்கும்.

      நான் சாதகங்களை மட்டுமே தேடித்தேடி எழுதியுள்ளேன். அதனால் தங்களுக்கும் மற்றவர்கள் பலருக்கும் சுவாரஸ்யமாக ரஸித்துப்படிக்க முடிந்துள்ளது. அதில் எனக்கும் சந்தோஷமே.

      [சோகங்களையெல்லாம் யாரிடமும் நான் சொல்ல விரும்புவது இல்லை. என் கற்பனைக் கதைகளைக்கூட பெரும்பாலும் நான் சோகமாக முடிப்பது இல்லை.]

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  51. அவற்றில் நிறைய ‘மிக்ஸர், காராபூந்தி, ஓமப்பொடி, காராச்சேவ், வறுத்த முந்திரி, பச்சை முந்திரி, பாதாம் பருப்பு, தூள்பக்கோடா, சிப்ஸ், முறுக்கு, தட்டை, பாப்கார்ன், மஸாலா கடலை, கடலை மிட்டாய், கடலை உருண்டைகள், தித்திப்பு தேன்குழலான மனோரக்கா உருண்டைகள், தேங்காய் பர்பி, நிலக்கடலை, பொட்டுக்கடலை, அச்சு வெல்லம், போன்ற பலவிதமான பக்க வாத்யங்களான கரமுராக்கள், சின்னச்சின்ன 50 கிராம் / 100 கிராம் பாக்கெட்களாக வாங்கி ஸ்டாக்கில் வைத்திருப்பேன்.//

    இதெல்லாம் ரொம்ப ஓவர். சொல்லிட்டேன். வாலாம்பா மன்னி இதையெல்லாம் எடுத்து அண்ணாவோட தலைய சுத்தி அந்த ஜன்னல் வழியா தூக்கி போட்டுட்டு நல்ல பழங்களா வாங்கி வெய்ங்கோ.

    //லாப்டாப்புக்கு நெட் கனெக்‌ஷன் சரியாகக் கிடைக்காமல் போனால் தான், நானும் தூங்கப்போகலாமா என யோசிப்பது வழக்கம்.

    லாப்டாப்புக்கு நெட் கனெக்‌ஷன் இருக்கும் பக்ஷத்தில், பெரும்பாலும் விடியற்காலம் தான் நான் தூங்கவே ஆரம்பிக்கிறேன். அதனால் நான் எழுந்திருக்கவும் மிகவும் தாமதம் ஆகி விடுகிறது. //

    இதுக்கு ஏதாவது செய்யலாமான்னு யோசிக்கறேன்.

    ஹரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவன் வாயில மண்ணு. இதை உங்க வீடு கூட தெரிஞ்சு வெச்சிருக்கு. அதான் வீட்டை சுத்தி ஹரி, சிவன் எல்லாரும் இருக்கா.

    அந்த ஆனந்தவல்லி அழகோ அழகு.

    இப்படி நூத்துக் கணக்குல COMMENTகளை அள்ளிக்கொள்ளும் ரகசியத்தைக் கொஞ்சம் எனக்கு சொல்லிக் கொடுங்கோளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI February 20, 2013 at 3:45 AM

      வாங்கோ மீண்டும் வருகைக்கு நன்றி.

      //இதெல்லாம் ரொம்ப ஓவர். சொல்லிட்டேன். வாலாம்பா மன்னி இதையெல்லாம் எடுத்து அண்ணாவோட தலைய சுத்தி அந்த ஜன்னல் வழியா தூக்கி போட்டுட்டு நல்ல பழங்களா வாங்கி வெய்ங்கோ. //

      ஆஹா, ஆஹா.... ஜோராகச் சொல்லிட்டீங்கோ. சந்தோஷம்.

      மன்னியோ மருமகளோ பொதுவாக ஆத்தை விட்டு தனியே எங்கும் நகர மாட்டாங்கோ. இருவரும் கையில் காசையோ பணத்தையோ, ரூபாய் நோட்டுக்களையோ தொடவே மாட்டாங்கோ. பணத்தைப்பார்த்தாலே பயப்படுவாங்கோ.

      எல்லா வரவு செலவுகளும் [வரவு எங்கே? செலவு மட்டுமே] நானே பார்க்க வேண்டியதாக உள்ளது. Too Smart & Sharp ஆக ஒரு Secretary வைத்துக்கொள்ளலாமா என யோசித்து வருகிறேன்.

      அப்புறம் நான் பழங்களும் அவ்வப்போது வாங்கி வருவேனே!

      அந்தப்போட்டோவில் கூட நம் ‘லயா’ குட்டிபோல, சிகப்பா / FANTA COLOUR இல் கொடாரஞ்சுப் பழங்களைக்காட்டியுள்ளேனே!

      [இதை கமலாரஞ்சு என்றும் சொல்வார்கள் - கான்பூரிலிருந்து வருபவை மிகவும் இனிப்பாக இருக்கும் - சிவப்பாக இருக்கும் - தோல் உரிக்க ரொம்பவும் ஈஸியாக இருக்கும் - சாதாரண சாத்துக்குடி என்றால் உரிக்க கொஞ்சம் ஜாஸ்தி பொறுமை தேவை.
      ஒரு சாத்துக்குடியை உரித்து சாப்பிடுவ்தற்குள், ஒரு டஜன் கொடாரஞ்சுகளை சுலபமாகச் சாப்பிட்டு விடுவேனாக்கும் - இது அதைவிட ஓவர் என்று முறைக்காதீங்கோ]

      >>>>>>


      நீக்கு
    2. கோபு >>>> திருமதி ஜெயந்தி மேடம் [2]

      சொல்ல மறந்துட்டேனே, ஆஸ்திரேலியா ’கமலா ஆரஞ்சு’ டேஸ்டோ டேஸ்டாக, இனிப்போ இனிப்பாக ரொம்ப ஜோராக இருக்குமாம். ஒரு பதிவர் சொன்னாங்கோ. ;) ஆனால் இன்னும் ஒரு பழத்தையும் என்னிடம் சாப்பிடக்கொடுக்கவே இல்லை. ;(
      சரி அதை விடுங்கோ.

      *****லாப்டாப்புக்கு நெட் கனெக்‌ஷன் இருக்கும் பக்ஷத்தில், பெரும்பாலும் விடியற்காலம் தான் நான் தூங்கவே ஆரம்பிக்கிறேன். அதனால் நான் எழுந்திருக்கவும் மிகவும் தாமதம் ஆகி விடுகிறது.*****

      //இதுக்கு ஏதாவது செய்யலாமான்னு யோசிக்கறேன்.//

      இது உங்களால் மிகவும் ஈஸியாகச் செய்து விட முடியும். BSNL GM இடம் SECRETARY யாக உள்ளீர்கள். இது கூடவா செய்ய முடியாது.

      என்ன ஒரு யோசனையாக இருக்கும் என்றால், பிறகு ”மணம் [மனம்] வீசும்” பதிவுக்கு இவர் வராமல் போய் விடுவாரே என யோசிக்கிறீர்களோ என்னவோ! அந்த ஒரு சின்ன பயம் மட்டும் இருக்குதுன்னா போதும்.

      ஆனால் நான் BSNL ஐத்தவிர வேறு எதற்கும் என்னை மாற்றிக் கொள்வதாக இல்லை.

      எவ்வளவோ பேர்கள் ஏதேதோ சொல்லி என்னைக்குழப்பி விட்டு மாற்றச் சொன்னார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

      24 Hours Maximum Usage Plan வாங்கியும் விட்டேன். அதனால் எப்போதுமே OFF செய்வதே கிடையாது.

      >>>>>>

      நீக்கு
    3. கோபு >>>> திருமதி ஜெயந்தி மேடம் [3]

      //ஹரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவன் வாயில மண்ணு. இதை உங்க வீடு கூட தெரிஞ்சு வெச்சிருக்கு. அதான் வீட்டை சுத்தி ஹரி, சிவன் எல்லாரும் இருக்கா.

      அந்த ஆனந்தவல்லி அழகோ அழகு.//

      ரொம்பவும் அழகாகவே சொல்லிட்டீங்கோ.

      பொதுவாக எல்லாக் கோயில்களிலும், எல்லா அம்பாள்களுமே அழகு தான்.

      குறிப்பாக சில அம்பாள்களிடம் மட்டும், சிற்பிகளின் கை வண்ணத்தாலும், தொடர்ந்து நடைபெற்று வரும் பக்தி சிரத்தையுடன் கூடிய அபிஷேகம், அலங்காரம், பூஜை முதலியவற்றாலும், தெய்வ சாந்நித்யம் மிகுதியாகி, அப்படியே ஜொலிக்க ஆரம்பித்து விடுகிறது.

      ஒருசில அம்பாள்கள் நம்மிடம் நேரில் பேசுவது போலவும், நம்மைப் பார்த்து புன்னகை புரிவதுபோலவும், ஒரு செகண்ட் கண் இமைத்து அனுக்கிரஹம் செய்வது போலவும் என்னால் உணர முடிகிறது. இதுபோல நான் உணர்ந்துள்ள கோயில்கள்:

      1] இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள்
      [2] எங்கள் ஊர் வாணப்பட்டரை மஹமாயீ அம்மன்
      [3] திருவானைக்கோயில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள்
      [4] மாந்துரை ஸ்ரீ வாலாம்பாள் அல்லது ஸ்ரீ பாலாம்பாள் அம்பாள்
      [5] சமயபுரம் ஸ்ரீ மஹமாயீ [மூலஸ்தான பெரிய அம்பாள்]
      [6] காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன்
      [7] மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன்
      [8] சிவகங்கை மாவட்டம் கோவிலூர் ஸ்ரீ சாடிவாலீஸ்வரி அம்மன்.

      >>>>>>

      நீக்கு
    4. கோபு >>>> திருமதி ஜெயந்தி மேடம் [4]

      //இப்படி நூத்துக் கணக்குல COMMENTகளை அள்ளிக்கொள்ளும் ரகசியத்தைக் கொஞ்சம் எனக்கு சொல்லிக் கொடுங்கோளேன்.//

      ரகசியம் என்று நீங்களே சொல்லிவிட்டு, இப்படி ஓபனாகவா கேட்பது?

      தனியே உங்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுக்கிறேன்.

      ஆனால் உங்களால், இப்போது உள்ள சூழ்நிலையில், சற்றே அது கஷ்டமான வேலையாக இருக்கும். இருப்பினும் ஓரளவுக்கு, முன்னேற்றி கொண்டு வந்து விடலாம். கவலையே படாதீங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான அழகான மனம் திறந்த கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  52. ..என்னே தரிசனம்... கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்...மிக விரிவாகவும் எழுதியுள்ளீர்கள். அருமை..அருமை..
    நன்றாக ரசித்தேன்.
    இன்று தான் நேரம் வந்தது வாசிக்க. இணைப்பிற்கு மிக மிக நன்றி. இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kovaikkavi February 20, 2013 at 10:04 AM

      வாருங்கள், வணக்கம்.

      //என்னே தரிசனம்... கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்... மிக விரிவாகவும் எழுதியுள்ளீர்கள். அருமை..அருமை.. நன்றாக ரசித்தேன். இன்று தான் நேரம் வந்தது வாசிக்க. இணைப்பிற்கு மிக மிக நன்றி. இறையாசி நிறையட்டும். வேதா. இலங்காதிலகம்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  53. Thanks for sharing the 2 crore puniyam and the pictures moolavar shivan and amabal. So Divine!

    The display of snacks really tempts me a lot :p :p who can say no when you offer such mouthwatering crispies :p :p :p

    Being myself a lover of the views that my window brings to me and the view from the open terrace, I thoroughly enjoyed the posts Gopu Sir. Thank you for sharing happy hours through your window :-)

    Yeah computers eats up majority of our time but you should keep it under your control and take adequate sleep to let the god residing in your temple (body) feel refreshed :D

    Take care Gopu Sir

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mira February 20, 2013 at 8:12 PM

      WELCOME MIRA ! Seen your comments in all my 3 Parts. Thanks a Lot. First I am replying to this and then later to them.

      //Thanks for sharing the 2 crore puniyam and the pictures moolavar shivan and amabal. So Divine!//

      கேட்கவே ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது.

      The display of snacks really tempts me a lot :p :p who can say no when you offer such mouthwatering crispies :p :p :p

      அதானே, நீங்க தான் ருசியில் .... நம்மாளு. நீங்க பால் பாயஸம் போன்ற ஏதேதோ உங்கள் பதிவினில் காட்டியபோதும், எனக்கு அப்படித்தான் நாக்கில் நீர் ஊறியது. நீங்க மிகப்பெரிய கூஜாவில் பால் பாயஸத்தைக்கொண்டு வந்து எனக்குக் கொடுத்து விட்டு, இவை எல்லாவற்றையும் எடுத்துட்டுப்போகலாம். ;)))))

      //Being myself a lover of the views that my window brings to me and the view from the open terrace, I thoroughly enjoyed the posts Gopu Sir. Thank you for sharing happy hours through your window :-) //

      ஒருசில காட்சிகளை, ஒருசில பேர்களால் மட்டுமே, ஒருவித முழு ஈடுபாட்டுடன், மன ஒருமைப்பாட்டுடன் ரஸிக்க முடியும். அதுவே ஒரு தியானம் போலத்தான். தாங்கள் அதுபோலவே என்பது கேட்க எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //Yeah computers eats up majority of our time but you should keep it under your control and take adequate sleep to let the god residing in your temple (body) feel refreshed :D ...... Take care Gopu Sir//

      ஆமாம் புரிகிறது. அக்கறையுடன் மிக அழகாகவே எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். இன்றும் நான் சுத்தமாகத் தூங்கவில்லை. மணி அதிகாலை 4.40 [சனிக்கிழமை வந்தாச்சு] இனி கவனமாக இருக்கிறேன்.. இதோ படுக்கப்போகிறேன்.

      தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  54. Romba arumaiyana, intersting post sir !! Enakum antha snacks packet konjam parcel panungalen pls :)
    http://recipe-excavator.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sangeetha Nambi February 20, 2013 at 8:21 PM

      வாருங்கள், வணக்கம்.

      //Romba arumaiyana, intersting post sir !! //

      மிக்க மகிழ்ச்சி.

      //Enakum antha snacks packet konjam parcel panungalen pls :)
      http://recipe-excavator.blogspot.com//

      உங்களால் செய்ய முடியாத RECIPE க்களா?

      இருப்பினும் நான் பார்ஸலில் அனுப்பி வைக்க ரெடி. ஆனால் உங்களால் கொடுக்கப்பட்டுள்ள http://recipe-excavator.blogspot.com என்ற விலாசத்திற்கு எப்படி என்னால் பார்ஸல் அனுப்ப முடியும்?

      சரியான விலாசமும், போன் நம்பரும், என்னென்ன மிகவும் பிடிக்கும் என்றும் மெயில் மூலம் valambal@gmail.com க்கு எழுதினால் கட்டாயமாக கொரியர் மூலம் அனுப்பி வைப்பேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    2. உங்க வார்த்தைக்கே என்னோட மிக பெரிய நன்றி சார்... இப்போவே எனக்கு எல்லான் சாப்பிட்ட திருப்த்தி :)

      நீக்கு
    3. Sangeetha Nambi March 4, 2013 at 2:18 AM

      வாருங்கள், வணக்கம், தங்களின் மீண்டும் வருகை, எனக்கு மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //உங்க வார்த்தைக்கே என்னோட மிக பெரிய நன்றி சார்... இப்போவே எனக்கு எல்லாம் சாப்பிட்ட திருப்த்தி :)//

      மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிக்க நன்றி. ;)))))

      நீக்கு
  55. காலை எழுந்ததும் கோபுர தர்சனங்களில் கண்விழிப்பு ஆகா! கொடுத்துவைத்தவர் நீங்கள் அரிதான பாக்கியம்.

    சுற்றி வர ஆலயங்கள் அமைந்திருந்து அருள்ஆட்சி செய்ய அதன் கீழ் வாழ்வது கிடைக்காத பேறு.எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது.
    "என்ன தவம் செய்தனை "பாடல்தான் நினைவுக்கு வருகின்றது.

    இனிதாக பகிர்ந்து எங்களையும் மெய்மறக்க வைத்துவிட்டீர்கள். பல்லாண்டுகள் நலமுடன் வாழ உச்சி ஆண்டவனை வேண்டுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி February 22, 2013 at 5:04 AM

      வாருங்கள், வணக்கம்.

      //காலை எழுந்ததும் கோபுர தர்சனங்களில் கண்விழிப்பு ஆகா! கொடுத்துவைத்தவர் நீங்கள் அரிதான பாக்கியம்.//

      சந்தோஷம்.

      //சுற்றி வர ஆலயங்கள் அமைந்திருந்து அருள்ஆட்சி செய்ய அதன் கீழ் வாழ்வது கிடைக்காத பேறு.எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது.

      "என்ன தவம் செய்தனை "பாடல்தான் நினைவுக்கு வருகின்றது.//

      ஆம், மிக அருமையான பாடல். குழந்தை ஸ்ரீ கிருஷ்ணனால் அம்மா என்று அழைக்கப்பட்டப் பெருமையைப்பெற்ற யசோதை மேல் பாடப்பட்ட அழகானபாடல் அல்லவா!

      கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //இனிதாக பகிர்ந்து எங்களையும் மெய்மறக்க வைத்துவிட்டீர்கள்.//

      ஆஹா, இதுவும் சந்தோஷமாகவே உள்ளது.

      //பல்லாண்டுகள் நலமுடன் வாழ உச்சி ஆண்டவனை வேண்டுகின்றேன்.//

      மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான அசத்தலான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  56. உண்மையாக சொல்கிறேன் , 16 பிப் முதல் உங்கள் பின்னுட்டன்களோ பதில்களோ இல்லாதது நிஜமாக ஏதோ போலிருந்தது , நான் (சவுதி யில் இருப்பதால் இல்லைஎன்றால் நானே வந்திருப்பேன் )என் வீட்டருகே (திருச்சி அண்ணா நகர் ) உள்ள ஆட்டோ டிரைவரை அனுப்பி விசாரிக்கலாம் என்று நினைத்தேன் , ஆனால் தங்கள் சில சமயம் வெளி ஊர் போக வாய்ப்புள்ளதால் அனுப்பவில்லை . தாங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள நண்பர் திரு. அஜீம்பாஷா அவர்களே,

      எனக்கு 2-3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் அனைவருக்குமே பதில் அளிக்க மிகவும் தாமதமாகி விட்டது. இன்னும் இது முடிந்தபாடும் இல்லை. இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளது.

      இதை முடித்துவிட்டே, என் அடுத்த பதிவினை, நான் ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி, இன்றோ நாளையோ நான் வெளியிட வேண்டும்.

      அதன் பிறகு பல நாட்கள் ஓய்வில் தான் இருக்கப்போகிறேன்.

      இன்னும் பழைய சில பதிவுகளில் சிலரின் பின்னூட்டங்களுக்கும் நான் இன்னும் பதில் தராமலேயே உள்ளேன். அதையும் பிறகு கவனிக்க வேண்டியுள்ளது.

      //தாங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் .//

      தங்களின் இந்த பிரார்த்தனை ஒன்றே என் இன்றைய தேவையாக உள்ளது. மிக்க நன்றி நண்பா. தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  57. இராஜராஜேஸ்வரி has left a new comment on your post "என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பா...":

    //ஒருமுறை திருவாதிரை அன்று சுவாமி ஊர்வலம் தரிசன்ம் செய்தோம்.. சுவாமியை சுமந்து செல்லும் பல்லக்குத்தூக்கிகளுடன் சேர்ந்தே மலை ஏறினோம் குழந்தைகளுடன் .. சும்மா ஏறிவரும் நமக்கே இப்படி களைப்பாக இருந்தால் இத்தனை பாரம் தூக்கிவரும் இவர்கள் எப்படி சிரமப்படுவார்கள் என்று அவர்களையும் விசாரித்து நமஸ்கரித்தோம் ..

    சிறுவயதில் எங்களுக்குதெரிந்த ஒரே கோவில் திருவரங்கம் மற்றும் திருச்சிதான் . எனது.சகோதரர் திருச்சி நேஷனல் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலை பயின்றார் ....//

    தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும் அழகான நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  58. எல்லா வரவு செலவுகளும் [வரவு எங்கே? செலவு மட்டுமே] நானே பார்க்க வேண்டியதாக உள்ளது. Too Smart & Sharp ஆக ஒரு Secretary வைத்துக்கொள்ளலாமா என யோசித்து வருகிறேன். //

    ஒரு ஒண்ணேகால் ஆண்டு பொறுத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு 40 வருட அனுபவம்தான் இருக்கும். Too Smart & Sharp ஆக இல்லாவிட்டாலும் சமாளித்துவிடுவேன். ONLINE SECRETARY பணிக்கு நான் தயார்.

    அந்தப்போட்டோவில் கூட நம் ‘லயா’ குட்டிபோல, சிகப்பா / FANTA COLOUR இல் கொடாரஞ்சுப் பழங்களைக்காட்டியுள்ளேனே! //

    சாஸ்திர சம்பிரதாயத்துக்கு 3 பழம். மத்தபடி எல்லாம் பொரித்த, வறுத்த, இந்த வயதுக்கு ரொம்ப ஏத்த சமாசாரங்கள்தான்.
    ஆனால் நான் BSNL ஐத்தவிர வேறு எதற்கும் என்னை மாற்றிக் கொள்வதாக இல்லை.

    எவ்வளவோ பேர்கள் ஏதேதோ சொல்லி என்னைக்குழப்பி விட்டு மாற்றச் சொன்னார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். //

    இந்த மாதிரி STUBBORN ஆ இருக்கறவாளாலதான் எங்களுக்கும் சம்பளம் வந்துண்டிருக்கு. அதுக்கு ரொம்ப நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI February 25, 2013 at 2:16 AM

      வாங்கோ, வணக்கம்.

      *****எல்லா வரவு செலவுகளும் [வரவு எங்கே? செலவு மட்டுமே] நானே பார்க்க வேண்டியதாக உள்ளது. Too Smart & Sharp ஆக ஒரு Secretary வைத்துக்கொள்ளலாமா என யோசித்து வருகிறேன்.*****

      //ஒரு ஒண்ணேகால் ஆண்டு பொறுத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு 40 வருட அனுபவம்தான் இருக்கும். Too Smart & Sharp ஆக இல்லாவிட்டாலும் சமாளித்துவிடுவேன். ONLINE SECRETARY பணிக்கு நான் தயார். //

      அடாடா, என்னே என் பாக்யம்!

      TOO SMART & SHARP ஆக மட்டுமே நான் ஒருத்தரை நியமிக்கனும்ன்னு எதிர்பார்க்கும் போது TOO SMART SHARP, SWEET & SILKY SMOOTH PERSON ஆஆஆஆஆஆஆ!!

      அத்துடன் வால் தனமும் நகைச்சுவையும் போனஸாகவா?

      VERY GOOD .... VERY GOOD ஒண்ணேகால் ஆண்டு BSNL சம்பளத்தையும் ஒட்டு மொத்தமாக இப்போதே கொடுத்து விட்டு, இப்போதே APPOINTMENT ORDER ISSUE செய்துவிடலாமா எனத் தோன்றுகிறதே! ;))))

      >>>>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள் [2]

      *****அந்தப்போட்டோவில் கூட நம் ‘லயா’ குட்டிபோல, சிகப்பா / FANTA COLOUR இல் கொடாரஞ்சுப் பழங்களைக்காட்டியுள்ளேனே!*****

      //சாஸ்திர சம்பிரதாயத்துக்கு 3 பழம். மத்தபடி எல்லாம் பொரித்த, வறுத்த, இந்த வயதுக்கு ரொம்ப ஏத்த சமாசாரங்கள்தான். //

      அப்படி இல்லை, மற்ற பழங்கள் எல்லாம் Fridge இல் உள்ளதாக்கும். அந்த மூன்று கொடாரஞ்சுகள் மட்டும், அன்று எடுத்து உரித்து சாப்பிட்டதுபோக மீதியாக்கும்.

      *****ஆனால் நான் BSNL ஐத்தவிர வேறு எதற்கும் என்னை மாற்றிக் கொள்வதாக இல்லை. எவ்வளவோ பேர்கள் ஏதேதோ சொல்லி என்னைக்குழப்பி விட்டு மாற்றச் சொன்னார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். *****

      //இந்த மாதிரி STUBBORN ஆ இருக்கறவாளாலதான் எங்களுக்கும் சம்பளம் வந்துண்டிருக்கு. அதுக்கு ரொம்ப நன்றி. //

      THE SERVICE OF YOURS IS ALSO EXCELLENT [BSNL'S] - REALLY NOW-A-DAYS FAR FAR BETTER. ;))))))

      உங்களை இந்தப்பதிவுப்பக்கமே காணோமே என்று, லயாக்குட்டியிடம் நான் பேசினேன்.

      பா..த்..தி [பாட்டி] பாண்டி விளையாட பாண்டிக்குப் போயிருக்காங்கோன்னு மழலை மொழியில் சொன்னா.

      மிகவும் சந்தோஷமாக இருந்தது. ரொம்ப மஹா கெட்டிக்காரி ..... பாட்டி போலவே. ;))))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான அசத்தலான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  59. பின்னுட பாக்ஸ் தேடி பிடிப்பதற்கு ரொம்ப நாள் ஆகிவிட்டது ...................
    நானும் திருச்சியை இரண்டு மூன்று முறை நீங்கள் சொன்ன எல்லா இடத்திற்கும் சென்று வந்தள்ளேன் ஆனாலும் உங்கள் பதிவு மீண்டும் ஒரு முறை தரிசனங்கள் செய்ய தூண்ட்டுகிறது அதுவும் அந்த ஜன்னலில் இருந்து பார்த்தல் நிச்சயமாக நான் வேண்டுவது கிட்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது
    ஆமாம் என் ப்ளாக் கில் கருத்துகள் சொல்வதில்லை மாற் று கருத்துகள் எழுந்தாலும் அனுபவம் மிக்கவர்கள் சொல்வது உபயோகம் தானேஎன் பதிவில் விஷயம் ஒன்றுமில்லை என்றாலும் சாடிவிடுதான் போங்களேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. malar balan February 26, 2013 at 9:50 PM

      வாருங்கள், வணக்கம்.

      //பின்னுட பாக்ஸ் தேடி பிடிப்பதற்கு ரொம்ப நாள் ஆகிவிட்டது ...................//

      அட ராமா! நல்ல நகைச்சுவையாகவே பேசுகிறீர்கள். மகிழ்ச்சி! ;))

      //நானும் திருச்சியை இரண்டு மூன்று முறை நீங்கள் சொன்ன எல்லா இடத்திற்கும் சென்று வந்தள்ளேன் //

      கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

      //ஆனாலும் உங்கள் பதிவு மீண்டும் ஒரு முறை தரிசனங்கள் செய்ய தூண்டுகிறது.//

      அப்படியா! தூண்டும் ..... தூண்ட வேண்டும் .... அப்போது தான் என் பதிவு ..... ஓர் நல்ல பதிவு ..... என எடுத்துக்கொள்ள முடியும்.

      //அதுவும் அந்த ஜன்னலில் இருந்து பார்த்தல் நிச்சயமாக நான் வேண்டுவது கிட்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது //

      ஆஹா, நல்லதொரு தாக்கம் தான்.

      தாங்கள் நியாயமாக வேண்டுவது எல்லாமே தங்களுக்குக் கிட்டட்டும்.

      //ஆமாம் என் ப்ளாக் கில் கருத்துகள் சொல்வதில்லை//

      உங்கள் ப்ளாக் என்று மட்டும் இல்லை. இங்கு பின்னூட்டம் கொடுத்துள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்ட ப்ளாக்குகளுக்கு நான் போவதே இல்லை. எனக்கு அதற்கெல்லாம் நேரமும் இல்லை.

      இருப்பினும் தங்களைப்போல எவ்வளவோ பேர்கள், என் பதிவுகளுக்குத் தொடர்ந்து வருகை தந்து கருத்து அளித்துச் செல்கிறார்கள்.

      பதிவுகளுக்கும் மேலே என் மீது ஏதோ ஓர் தனிப்பட்ட அன்பும் பாசமும் செலுத்தி வருகிறார்கள் என்பதே உண்மை.

      //மாற்று கருத்துகள் எழுந்தாலும் அனுபவம் மிக்கவர்கள் சொல்வது உபயோகம் தானே ! //

      நேரம் கிடைக்கும் போது தங்கள் பக்கம் என்றாவது ஒருநாள் வர முயற்சிக்கிறேன்.

      //என் பதிவில் விஷயம் ஒன்றுமில்லை என்றாலும் சாடிவிட்டுதான் போங்களேன்.//

      அப்படியெல்லாம் தங்கள் எழுத்துக்களைத் தாங்களே தாழ்வாக நினைக்காதீர்கள்.

      அப்படிப்பார்த்தால் 90% பதிவுகளில் ‘விஷயம் ஒன்றுமில்லை’ என்று தான் சொல்ல வேண்டும்.

      மீதி 10% பதிவுகளில் விஷயம் மட்டும் இருப்பினும் யாரும் திரும்பிப்பார்ப்பதும் இல்லை;. கருத்துச்சொல்வதும் இல்லை..

      ஆகையால் ‘விஷயம் இருக்கோ ... விஷயம் இல்லையோ, ஒருசில தில்லாலங்கடி வேலைகள் செய்தால் மட்டுமே, ஓரளவு கணிசமானவர்கள் வருகை தந்து கருத்துக்கூறுகிறார்கள்.

      உதாரணமாக திருச்சியில் ஆயிரக்கணக்கான ஜவுளிக்கடைகள் உள்ளன, ஒன்றுடன் ஒன்று பலத்த போட்டியில் விளம்பரம் செய்து வியாபாரம் செய்கின்றன. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட கடைக்கு மட்டுமே MORE THAN 50% CUSTOMERS செல்கிறார்கள். நானும் அங்கு மட்டும் தான் செல்வது உண்டு.

      இவை ஒவ்வொன்றுக்கும் பின்னனியில் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் + செண்டிமெண்ட்ஸ் இருக்கக்கூடும்.

      போகப்போக பதிவுலகைப்பற்றி உங்களுக்கே தெரியவரும்.

      அதுவரை பொறுமையாக, ஓரளவு தரமாக, ஜனரஞ்சகமாக எழுதிக்கொண்டே செல்லுங்கள்.

      ”கடமையைச்செய் ...... பலனை எதிர்பார்க்காதே” என்பார்கள், சிலர்.

      நான் அதை என் பதிவுகள் விஷயத்தில் ஒத்துக்கொள்வது இல்லை.

      கருத்திட ஆட்கள் வரவில்லையென்றால் மிகவும் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்.

      எல்லாம் போகப்போக நாளடைவில் சரியாகி விடும்.

      கவலை வேண்டாம். அன்பான வாழ்த்துகள்.

      நீக்கு
    2. போக போக தெரியும்
      இந்த பூவின் வாசம் புரியும்

      நீக்கு
    3. To Mr Malar Balan Sir,

      //Pattabi Raman February 27, 2013 at 4:01 PM

      போக போக தெரியும்
      இந்த பூவின் வாசம் புரியும்//

      பளிச்சுன்னு நம்ம Mr. Pattabi Raman சாரே ஒரு பாட்டின் மூலம் சொல்லிட்டார் பாருங்கோ.

      என் ஒருசில ஆன்மீகப்பதிவுகளுக்கு பிறரை சுண்டி இழுத்து வரவழைக்க நான் கொடுத்துள்ள தலைப்புகள் இதோ:

      1]
      ”காவேரிக்கரை இருக்கு,
      கரைமேலே _____ இருக்கு!
      http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html
      61 Comments

      2]
      “காது கொடுத்துக்கேட்டேன்!
      ஆஹா குவா குவா சப்தம் !!
      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_27.html
      46 Comments

      3]
      ஸ்வீட் சிக்ஸ்டீன்
      http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html
      153 Comments

      4]
      நீ முன்னாலே போனா .........
      நா ...... பின்னாலே வாரேன்.
      http://gopu1949.blogspot.in/2011/10/15.html
      31+34+25+26+44 = 160 Comments

      இவையெல்லாம் தலைப்பைத்தேர்ந்தெடுக்கவே செய்ய வேண்டிய தில்லாலங்கடி வேலைகளின் ஒரு சிறு பகுதியும், ஒருசில உதாரணங்களும் மட்டுமே.

      இதுபோல நான் இதுவரை பதிவுலகில் கற்றது கைமண் அளவு. இன்னும் கற்க வேண்டியது உலகளவு மைனஸ் கைமண் அளவு இருக்குது.

      இவையெல்லாம் தங்கள் அனைவரின் ’தொழில்நுட்பத் தகவலுக்காக’ மட்டுமே !

      நீக்கு
  60. ஆண்டவன் புண்ணியத்தில் செளக்கியமா இருங்கோன்னு வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலாமகள் February 27, 2013 at 5:58 AM

      வாருங்கள், வணக்கம்.

      //ஆண்டவன் புண்ணியத்தில் செளக்கியமா இருங்கோன்னு வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்.//

      ஒருவரை ஒருவர் மனதார வாழ்த்துவதற்கு வயதெல்லாம் பார்க்க வேண்டியது இல்லை என்பது என் கருத்து.

      அதுவும் ஆண்டவன் புண்ணியத்தில் என்று ஆரம்பிக்கும் போது நிச்சயமாக வாழ்த்தலாம். பரவாயில்லை.

      தங்கள் வணக்கங்களையே வாழ்த்துகளாக ஏற்று மகிழ்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

      நீக்கு
  61. ஒருமுறை திருவாதிரை அன்று சுவாமி ஊர்வலம் தரிசன்ம் செய்தோம்.. சுவாமியை சுமந்து செல்லும் பல்லக்குத்தூக்கிகளுடன் சேர்ந்தே மலை ஏறினோம் குழந்தைகளுடன் .. சும்மா ஏறிவரும் நமக்கே இப்படி களைப்பாக இருந்தால் இத்தனை பாரம் தூக்கிவரும் இவர்கள் எப்படி சிரமப்படுவார்கள் என்று அவர்களையும் விசாரித்து நமஸ்கரித்தோம் ..

    சிறுவயதில் எங்களுக்குதெரிந்த ஒரே கோவில் திருவரங்கம் மற்றும் திருச்சிதான் . எனது.சகோதரர் திருச்சி நேஷனல் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலை பயின்றார் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 3, 2013 at 7:52 AM

      //ஒருமுறை திருவாதிரை அன்று சுவாமி ஊர்வலம் தரிசன்ம் செய்தோம்.. சுவாமியை சுமந்து செல்லும் பல்லக்குத்தூக்கிகளுடன் சேர்ந்தே மலை ஏறினோம் குழந்தைகளுடன் .. சும்மா ஏறிவரும் நமக்கே இப்படி களைப்பாக இருந்தால் இத்தனை பாரம் தூக்கிவரும் இவர்கள் எப்படி சிரமப்படுவார்கள் என்று அவர்களையும் விசாரித்து நமஸ்கரித்தோம் ..//

      அடியார்க்கு அடியாரைக்கொண்டாடிச் சிறப்பித்தது அருமையோ அருமை தான். மிக உயர்ந்த தாயுள்ளத்திற்கு அன்பான பாராட்டுக்கள்.

      //சிறுவயதில் எங்களுக்குதெரிந்த ஒரே கோவில் திருவரங்கம் மற்றும் திருச்சிதான்.//

      இதைக் கேட்கவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))

      //எனது.சகோதரர் திருச்சி நேஷனல் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலை பயின்றார் ....//

      சந்தோஷம். ORCHILD அவர்களாக இருக்குமோ?

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும் அழகான நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  62. ஜன்னல் கம்பிகளின் பேசுவதும்
    காட்சிகளைக் காண்பதும் ரசிக்கவைக்கிறது ஐயா..

    வீடும்
    வீட்டில் வைத்துக்கட்டப்படும் செங்கற்களும்
    ஜன்னல் வைக்கும் மரச்சட்டங்களும் ,
    சிமண்ட் மணல் கலவைகளும்
    நம் சுவாசக்காற்றோடும்
    மனதில் எண்ணும் எண்ண அலைகளையும்
    கிரஹித்துக்கொண்டு நம்முடன் பழகும் பாக்கியம் பெற்றவை அல்லவா ..

    அவை பேசுவதும் கதைகளைப்பகிர்வதிலும்
    ஆச்சரியம் என்ன ..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி March 3, 2013 at 7:58 AM

      //ஜன்னல் கம்பிகளின் பேசுவதும்
      காட்சிகளைக் காண்பதும் ரசிக்கவைக்கிறது ஐயா..//

      மிகவும் சந்தோஷம்.

      //வீடும், வீட்டில் வைத்துக்கட்டப்படும் செங்கற்களும்
      ஜன்னல் வைக்கும் மரச்சட்டங்களும், சிமண்ட் மணல் கலவைகளும், நம் சுவாசக்காற்றோடும் மனதில் எண்ணும் எண்ண அலைகளையும் கிரஹித்துக்கொண்டு நம்முடன் பழகும் பாக்கியம் பெற்றவை அல்லவா ..//

      வெகு அழகாக உணர்ந்து சொல்லியுள்ளீர்கள். மனதுக்கு மிகவும் ஹிதமாக ஆறுதலாக உள்ளது.

      //அவை பேசுவதும் கதைகளைப்பகிர்வதிலும் ஆச்சரியம் என்ன ..!! //

      ஆச்சர்யமான [கிளி கொஞ்சும்] கருத்துக்கள். என்னமாய் சின்னக் குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல அழகாகச் சொல்லிப் புரிய வைக்கிறீர்கள். மிகவும் பெருமையாக உள்ளது.

      மிக்க நன்றிங்க மேடம்.

      நீக்கு
  63. எனக்கு படுத்துக்கொள்ளும் போது குறைந்தது ஒரு ஏழு தலையணியாவது வேணும். அதுவும் ஒவ்வொன்றும் கொஞ்சம் கிண்ணுன்னு மோதமுழங்க இருக்கணும். தொஞ்ச பஜ்ஜி மாதிரி இருக்கக்கூடாது.

    ,இகுந்த ரசனையான ஆளுதான் நீங்க படுக்கர தலையணைகளில் கூட என்ன ரசனை குட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 27, 2013 at 9:43 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

      ”பூங்.....கதவே ..... தாழ் திறவாய் ........” என்றொரு அழகான பாட்டு. ’நிழல்கள்’ என்ற தமிழ் சினிமாப் படத்தில் வ்ருவது.

      அதுபோல இனிமையாக உள்ளது தங்களின் திடீர் வருகையும், என் இல்லத்தின் ஜன்னல் பற்றிய இந்தப்பதிவுக்கு.

      ******எனக்கு படுத்துக்கொள்ளும் போது குறைந்தது ஒரு ஏழு தலையணியாவது வேணும். அதுவும் ஒவ்வொன்றும் கொஞ்சம் கிண்ணுன்னு மோதமுழங்க இருக்கணும். தொஞ்ச பஜ்ஜி மாதிரி இருக்கக்கூடாது*****

      //இத்தகு ரசனையான ஆளுதான் நீங்க .... படுக்கர தலையணைகளில் கூட என்ன ரசனை ... குட்.//

      வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் மிகவும் நுணுக்கமாக ரஸிக்கப்பழக வேண்டும்.

      அதுவும் படுக்கை தலையணை என்பதெல்லாம் சும்மாவா? நம் வாழ்க்கையில் பெரும்பகுதி MORE THAN 33% OF OUR LIFE நம்முடன் ஒட்டிஉறவாடும் பாசமுள்ள பொருட்கள் அல்லவா?

      தலையணி மந்திரம் என்று ஒன்று உண்டு தெரியுமோ? அதெல்லாம் கரெக்டா தெரிஞ்சு வெச்சுண்டுதான் இருப்பீங்கோ! ;)

      நீக்கு
    2. பூந்தளிர் March 27, 2013 at 9:43 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

      ”பூங்.....கதவே ..... தாழ் திறவாய் ........” என்றொரு அழகான பாட்டு. ’நிழல்கள்’ என்ற தமிழ் சினிமாப் படத்தில் வ்ருவது.

      அதுபோல இனிமையாக உள்ளது தங்களின் திடீர் வருகையும், என் இல்லத்தின் ஜன்னல் பற்றிய இந்தப்பதிவுக்கு.

      ******எனக்கு படுத்துக்கொள்ளும் போது குறைந்தது ஒரு ஏழு தலையணியாவது வேணும். அதுவும் ஒவ்வொன்றும் கொஞ்சம் கிண்ணுன்னு மோதமுழங்க இருக்கணும். தொஞ்ச பஜ்ஜி மாதிரி இருக்கக்கூடாது*****

      //இத்தகு ரசனையான ஆளுதான் நீங்க .... படுக்கர தலையணைகளில் கூட என்ன ரசனை ... குட்.//

      வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் மிகவும் நுணுக்கமாக ரஸிக்கப்பழக வேண்டும்.

      அதுவும் படுக்கை தலையணை என்பதெல்லாம் சும்மாவா? நம் வாழ்க்கையில் பெரும்பகுதி MORE THAN 33% OF OUR LIFE நம்முடன் ஒட்டி உறவாடும் பாசமுள்ள பொருட்கள் அல்லவா?

      தலையணி மந்திரம் என்று ஒன்று உண்டு தெரியுமோ?

      அதெல்லாம் கரெக்டா தெரிஞ்சு வெச்சுண்டுதான் இருப்பீங்கோ! ;)

      நீக்கு
  64. நான் எப்போது தூங்கி கண் விழித்தாலும், முதலில் ஜன்னல் கதவுகளில் உள்ள [ கொசுக்கள் உள்ளே நுழையாமல் இருப்பதற்காகப் போடப்பட்டுள்ள] வலைக்கதவுகளைத் திறப்பேன். பிறகு ஜன்னல் கதவுகளையும் விரியத் திறப்பேன். அழகாக உச்சிப்பிள்ளையாரும் தாயுமானவரும் குடிகொண்டுள்ள மலையைப் தரிஸிப்பேன். வணங்குவேன்.

    ஆஹா அதிர்ஷ்ட்டக்காரர் தான். கண் விழித்ததுமே உச்சிப்பிள்ளையாரையும் தாயுமானவரையும் தரிசிக்கும் பாக்கியம் செய்திருக்கீங்க. நான் ஜன்னல் கதவு பார்த்ததுமே உள்ள , வெளியேன்னு 2, 2 கதவுகள் இருக்கேன்னு நினச்சேன். நீங்க சொன்னபிறகுதான் அது கொசு விரட்டிக்கதவுன்னு தெரிஞ்சுகிட்டேன். என்னே அறிவுக்கொழுந்து இல்லியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 27, 2013 at 9:49 PM

      *****நான் எப்போது தூங்கி கண் விழித்தாலும், முதலில் ஜன்னல் கதவுகளில் உள்ள [ கொசுக்கள் உள்ளே நுழையாமல் இருப்பதற்காகப் போடப்பட்டுள்ள] வலைக்கதவுகளைத் திறப்பேன். பிறகு ஜன்னல் கதவுகளையும் விரியத் திறப்பேன். அழகாக உச்சிப்பிள்ளையாரும் தாயுமானவரும் குடிகொண்டுள்ள மலையைப் தரிஸிப்பேன். வணங்குவேன்.*****

      //ஆஹா அதிர்ஷ்ட்டக்காரர் தான். கண் விழித்ததுமே உச்சிப்பிள்ளையாரையும் தாயுமானவரையும் தரிசிக்கும் பாக்கியம் செய்திருக்கீங்க.//

      ஆம். ஏதோ ஒரு பாக்யம் செய்துள்ளேன், பூந்தளிரிடமிருந்து இதுபோன்ற ஓர் சொல்லினைக்கேட்கவும் தான்.

      //நான் ஜன்னல் கதவு பார்த்ததுமே உள்ள , வெளியேன்னு 2, 2 கதவுகள் இருக்கேன்னு நினச்சேன். நீங்க சொன்னபிறகுதான் அது கொசு விரட்டிக்கதவுன்னு தெரிஞ்சுகிட்டேன்.

      என்னே அறிவுக்கொழுந்து இல்லியா?//

      அப்படியெல்லாம் இல்லை. எனக்கும் லேஸில் பல விஷயங்கள் புரியாமல் தான் இருக்கும்.

      எல்லோருக்கும் எல்லாமே புரியும் என நாம் சொல்லமுடியாது.

      போகப்போக ஆர்வம் + அனுபவங்களால் மட்டுமே பல விஷயங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

      பூந்தளிர் சற்றே முற்றிய பிறகு, எல்லாமே சுலபமாகத் தெரியவரும் / புரியவரும். ;)

      நீக்கு
  65. அவற்றில் நிறைய ‘மிக்ஸர், காராபூந்தி, ஓமப்பொடி, காராச்சேவ், வறுத்த முந்திரி, பச்சை முந்திரி, பாதாம் பருப்பு, தூள்பக்கோடா, சிப்ஸ், முறுக்கு, தட்டை, பாப்கார்ன், மஸாலா கடலை, கடலை மிட்டாய், கடலை உருண்டைகள், தித்திப்பு தேன்குழலான மனோரக்கா உருண்டைகள், தேங்காய் பர்பி, நிலக்கடலை, பொட்டுக்கடலை, அச்சு வெல்லம், போன்ற பலவிதமான பக்க வாத்யங்களான கரமுராக்கள், சின்னச்சின்ன 50 கிராம் / 100 கிராம் பாக்கெட்களாக வாங்கி ஸ்டாக்கில் வைத்திருப்பேன்.

    ஆஹா இது வேரயா? அப்ப எப்ப வந்தாலும் நொறுக்கு தீனி நல்லா வே கிடைக்கும் போல இருக்கே.படங்கள் பாக்கும் போதே நாக்குல தண்ணீர் ஊறுதே. இப்படி சொல்லுவதால நான் சரியான தீனிப்பண்டாரமாக இருப்பேனொன்னு நினச்சுடாதிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 27, 2013 at 9:52 PM

      *****அவற்றில் நிறைய ‘மிக்ஸர், காராபூந்தி, ஓமப்பொடி, காராச்சேவ், வறுத்த முந்திரி, பச்சை முந்திரி, பாதாம் பருப்பு, தூள்பக்கோடா, சிப்ஸ், முறுக்கு, தட்டை, பாப்கார்ன், மஸாலா கடலை, கடலை மிட்டாய், கடலை உருண்டைகள், தித்திப்பு தேன்குழலான மனோரக்கா உருண்டைகள், தேங்காய் பர்பி, நிலக்கடலை, பொட்டுக்கடலை, அச்சு வெல்லம், போன்ற பலவிதமான பக்க வாத்யங்களான கரமுராக்கள், சின்னச்சின்ன 50 கிராம் / 100 கிராம் பாக்கெட்களாக வாங்கி ஸ்டாக்கில் வைத்திருப்பேன்.*****

      //ஆஹா இது வேறயா? அப்ப எப்ப வந்தாலும் நொறுக்கு தீனி நல்லாவே கிடைக்கும் போல இருக்கே. படங்கள் பாக்கும் போதே நாக்குல தண்ணீர் ஊறுதே.//

      உடனே புறப்பட்டு வாங்கோ, நாக்கிலே தண்ணீர் ஊற விடாதீங்கோ. வாங்கோ, வந்து நல்லா மூக்கைப்பிடிக்க சாப்பிடுங்கோ.

      //இப்படி சொல்லுவதால நான் சரியான தீனிப்பண்டாரமாக இருப்பேனோன்னு நினச்சுடாதிங்க.//

      சேச்சே, அப்படியெல்லாம் நினைக்கவே மாட்டேன். எனக்குத் தெரியாதா உங்களைப்பற்றியும், நீங்களும் என்னைப்போலவே தான் என்பது பற்றியும்.

      மேலும், வாய்க்குப்பிடிச்சதை வாங்கி தாராளமாகச் சாப்பிடவும் கொடுத்து வைத்திருகணும், நாம்.

      தீனி விஷயத்தில் சங்கோஜமோ, கஞ்சத்தனமோ காட்டவே கூடாது. நினைத்ததை நினைத்தபோது, வாங்கி ஜாலியாகச் சாப்பிட்டு மகிழணும். அது தான் என் பாலிஸி.

      சம்பாதிப்பதே வாய்க்குப்பிடிச்சதை வாங்கிச் சாப்பிடமட்டுமே தான். அதற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது என் வழக்கம். ;)

      நீக்கு
  66. கோபுர தரிஸம் கோடிப்புண்ணியம் அல்லவா! இரண்டு கோபுர தரிஸனம் என்றால் புண்ணியமும் இரண்டு கோடியல்லவா!! அதுவும் தினமும் இரண்டு கோடிகள் அல்லவா!!!

    ஒன்று கிழக்கு பார்த்த கோபுரம், மற்றொன்று மேற்கு பார்த்த கோபுரம். இரண்டு கோபுரத்தின் சைடு போர்ஷன்களும் அழகாக என் வீட்டு ஒரே ஜன்னல் மூலம் காட்சியளிக்கும். அத்தோடு உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் மலைகளும். வேறென்னங்க வேணும் என் மகிழ்ச்சிக்கு. ;)))))

    ஆமாங்க உண்மைதான். ரிடையர்மெண்ட் லைஃபை சந்தோஷமா எஞ்சாய் பண்ண்ணிகிட்டு இருக்கீங்க. அதை எங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொண்டு எங்களையும் சந்தோஷப்படுத்துரீங்க. இது பெரிய விஷயம் இல்லியா. என்னிக்கும் இதே சந்தோஷமுடன் இருக்கணும் நீங்க்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 27, 2013 at 9:56 PM

      *****கோபுர தரிஸம் கோடிப்புண்ணியம் அல்லவா! இரண்டு கோபுர தரிஸனம் என்றால் புண்ணியமும் இரண்டு கோடியல்லவா!! அதுவும் தினமும் இரண்டு கோடிகள் அல்லவா!!!

      ஒன்று கிழக்கு பார்த்த கோபுரம், மற்றொன்று மேற்கு பார்த்த கோபுரம். இரண்டு கோபுரத்தின் சைடு போர்ஷன்களும் அழகாக என் வீட்டு ஒரே ஜன்னல் மூலம் காட்சியளிக்கும். அத்தோடு உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் மலைகளும். வேறென்னங்க வேணும் என் மகிழ்ச்சிக்கு. ;))))) *****

      //ஆமாங்க உண்மைதான். ரிடையர்மெண்ட் லைஃபை சந்தோஷமா எஞ்சாய் பண்ண்ணிகிட்டு இருக்கீங்க. அதை எங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொண்டு எங்களையும் சந்தோஷப்படுத்துறீங்க. இது பெரிய விஷயம் இல்லியா. என்னிக்கும் இதே சந்தோஷமுடன் இருக்கணும் நீங்க//

      மிக்க மகிழ்ச்சி. பூந்தளிரின் அன்பான வருகைக்கும், பூப்போன்ற அழகான மென்மையான மேன்மையான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  67. Savithri Venkatesan June 10, 2013 at 6:27 PM

    வாங்கோ, வாங்கோ, வணக்கம். செளக்யமா? தங்களின் முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வருகை தாருங்கள்.

    //very good//

    தங்களின் அன்பான வருகைக்கும், VERY GOOD ஆன கருத்துக்கும் என் மனமார்ந்து இனிய அன்பு ந்ன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  68. ஆஹா, இந்தப் பதிவைப் படித்து விட்டுத்தான் வைகோ அவர்கள் வீட்டிற்குப் போகவேண்டும் என்ற ஆவல் தோன்றியது. அதற்கான வாய்ப்பும் 2014ல் கிட்டியது.

    பதிலளிநீக்கு
  69. இந்த பதிவுக்கு ஏற்கனவே 5-பின்னூட்டமும் தங்களின் பதில பின்னூட்டமும் பார்த்தேன் நானே தானோ யாரோதானோ?????????
    மறுபடியும் வந்துட்டேன். அதிரா அவங்க சொன்னது போல ஸ்கோரல் பண்ணி பண்ணி முடியல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 15, 2015 at 6:30 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இந்த பதிவுக்கு ஏற்கனவே 5-பின்னூட்டமும் தங்களின் பதில் பின்னூட்டமும் பார்த்தேன்.//

      5-பின்னூட்டங்கள் இல்லையாக்கும். 4-தான் இருக்காக்கும். இருப்பினும் பரவாயில்லை. மிக்க மகிழ்ச்சி. நானும் இன்று மீண்டும் ஒருமுறை அனைத்தையும் படித்து மகிழ்ந்தேன்.

      //நானே தானோ யாரோதானோ?????????//

      சூப்பராப் பாடுவீங்க போலிருக்கு ... மிக்க மகிழ்ச்சி, பாடகியே. :)))))

      //மறுபடியும் வந்துட்டேன்.//

      சந்தோஷம். சந்தோஷம். மீண்டும் வந்ததில் மீண்டும் சந்தோஷம்.

      //அதிரா அவங்க சொன்னது போல ஸ்கோரல் பண்ணி பண்ணி முடியல//

      :))))) இதை மிகவும் ரஸித்தேன்.

      ”என்றும் என் வயது ஸ்வீட் சிக்ஸ்டீனாக்கும்” என பல மாமாங்கங்களாகச் சொல்லிவரும் அதிரடி, அலம்பல், அட்டகாச, அதிரஸ அதிராவின் பின்னூட்டங்கள் ஒரே ஜாலியாக, சிரிப்பாக, வேடிக்கையாக, குழந்தைபோல கொச்சை மொழிகளில் இருக்கும்.

      அதனை இங்கு குறிப்பிட்டுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
  70. 7--- தலவாணியா??? ஒறக்கம்லா எப்பூடி. நல்லா வருதா. கூடவே பொட்டணம் பொட்டணமா நொறுக்ஸ் வேர. இன்னா ரசனயான ஆளுய்யா. படங்க சூப்பரு பதிவு நீஈஈஈஈஈஈஈளமாகீது கமண்டுகளும் நீஈஈஈஈஈஈஈஈட்டமாகீது
    மேல கீள போயி போயி வார வேண்டிகிது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 11:53 AM

      //7--- தலவாணியா???//

      ஆமாம். இல்லாவிட்டால் எனக்கு சரிப்பட்டு வராது. இப்போ அந்த ஏழு எட்டாகிவிட்டது. :) தலைப்பக்கமே இப்போதெல்லாம் எனக்கு நான்கு தேவைப்படுகிறது. :)

      //ஒறக்கம்லா எப்பூடி. நல்லா வருதா. //

      பாலிருக்கும் ...... பழமிருக்கும் ...... பசியிருக்காது ......
      பஞ்சணையில் காற்று வரும் ........ தூக்கம் வராது ......
      என்ற பாட்டுப்போலவே என் கதையும் இப்போது ஆகிவிட்டது. நள்ளிரவு வெகு நேரம்வரை தூக்கமே வருவது இல்லை. எப்படியும் 2 அல்லது 3 மணிக்குள் தூக்கம் வந்துவிடும். பிறகு எப்போது நான் விழித்துக்கொள்வேன் என்பது மட்டும் என்னால் சொல்லவே முடியாது. எப்படியும் காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் விழித்து எழுந்து விடுவேன். பிறகு பகலில் தூங்கவே மாட்டேன். :)

      //கூடவே பொட்டணம் பொட்டணமா நொறுக்ஸ் வேர. இன்னா ரசனயான ஆளுய்யா.//

      :))))) உடல்நலம் கருதி, இப்போதெல்லாம் இவைகளை விரும்பி உண்பதைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு விட்டேனம்மா. என்னிடம் அவ்வபோது கொஞ்சம் STOCK செய்வது இங்கு என் வீட்டுப்பக்கம் வருவோர் போவோருக்காக (விருந்தாளிகளுக்காக) மட்டுமே.

      //படங்க சூப்பரு பதிவு நீஈஈஈஈஈஈஈளமாகீது கமண்டுகளும் நீஈஈஈஈஈஈஈஈட்டமாகீது. மேல கீள போயி போயி வார வேண்டிகிது //

      அது என்னவோ சில பதிவுகளில் இதுபோல எக்கச்சக்கமாகக் கமெண்ட்ஸ் வந்து குவிந்து விடுகின்றன. மெளஸைப் பிடித்து மேலும் கீழுமாகக் ஸ்க்ரோல் செய்வதில் கொஞ்சம் கஷ்டம்தான் .... உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும்தான். :)

      நீக்கு
  71. இப்ப இந்த வயதில் லைஃபை என்ஜாய் பண்ணி வசதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகிறீர்கள் என்றால் இளம் வயதில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க. இளம் வயதில் எவ்வளவு கஷ்டங்கள் பிரச்சனைகள் வந்தாலும் தாங்கிக்க மனதில் தைரியமும் உடம்பில் தெம்பும் இருக்கும். அதுவே வயதாக ஆக தெம்பு தைரியமெல்லாம் காணாமலே போயிடும் . ஸோ.......... இளமையிலேயே நன்கு யோசித்து உங்களைப்போல முடிவெடுப்பது நல்ல விஷயம்.சாப்பாட்டு ரசிகராகவும் இருக்கீங்க. 7---8--- தலகாணி வச்சுக்கற சொகுசுக்காரராகவும் இருக்கீங்க. வாழ்க பல்லாண்டு

    பதிலளிநீக்கு
  72. இத்தனை கோபுரங்களை தினம்தினம் தரிசித்தால் எத்தனை கோடி புண்ணியம். நீங்கள் செய்த தெரிவு என்னைப்பொருத்தவரை முற்றிலும் சரிதான்!!!;-))))))))))

    பதிலளிநீக்கு
  73. Mail message received on 19.10.2017 - 11.44 Hrs.

    என் வீட்டு ஜன்னல்..... பதிவு கண்டு படித்தேன்.
    அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

    படிப்பவர் மனம் பார்ப்பது போன்ற ஒரு பிரமை....ஜன்னல் சொன்ன கதைகள் நிச்சயம் அங்கு ஓரிடம் வேண்டும் என்று கேட்கத் தான் சொல்கிறது மனம்.

    திரு. அப்பாதுரை அவர்கள் கேட்டதில் நியாயம் இருக்கிறது.. வியந்ததும், தங்களை விளக்கம் எழுதச் சொல்லிக் கேட்டதிலும் வியப்பேதும் இல்லை தானே.

    பவித்ராலயாவின் அன்புலோகத்தின் கண்கள்
    உலகத்தைப் பார்க்கும் அழகோ அழகு.

    இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
    பரம ரஸிகை

    பதிலளிநீக்கு