ஓர் முக்கிய ஸ்லோகம்!

’மூக பஞ்ச சததி’ என்பது, முற்பிறவியில் கவி காளிதாஸனாகப் பிறந்தவரும், இப்பிறவியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 20-ஆவது பீடாதிபதியாக சுமார் 39 ஆண்டுகள் விளங்கியவரும், கி.பி. 437 இல், கோதாவரி நதிக்கரை அருகே ஸித்தி அடைந்தவருமான ‘மூக சங்கரர்’ என்ற பிறவி ஊமையால், அம்பாளின் அருள் பெற்று, சதகம் ஒன்றுக்கு 100 ஸ்லோகங்கள் வீதம், ஐந்து சதகங்களில் மொத்தம் 500 ஸ்லோகங்களாக, அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாளின் மீது பாடப்பட்டதாகும்.
இதில் கடாக்ஷக சததத்தில் வரும் 45-வது ஸ்லோகம் மிகவும் முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. இதனை தினமும் தனியாகவோ, கூட்டாகவோ, தனக்காகவோ, பிறருக்காகவோ வேண்டிக்கொண்டு, பாராயணம் செய்துவர அனைத்து *ஸ்ரேயஸ்*களும் ஏற்படுவதுடன், நினைத்துப்பார்க்கவே முடியாத அற்புதங்கள் (MIRACLES) நிகழும் என இதனைப் பாராயணம் செய்து கண்கூடாக பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள்.
*ஸ்ரேயஸ்* = நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம், சந்தோஷம், நல்ல புத்தி, வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் மற்றும் மன நிம்மதி போன்ற அனைத்து விதமான செளக்யங்களுமாகும்.
இதோ அந்தப் பொக்கிஷமான 45-வது ஸ்லோகம்:
மாத:
(மாதஹா)
க்ஷணம் ஸ்னபய,
மாம் தவ வீக்ஷிதேன
மந்தாக்ஷிதேன
ஸுஜனை:
(ஸுஜனைஹி)
அபரோக்ஷிதேன !
காமாக்ஷி, கர்ம, திமிரோத்கர,
பாஸ்கரேண, ஸ்ரேயஸ்கரேண,
மது, பத்யுதி, தஸ்கரேண !!
ஸ்லோகத்தின் பொருள்:
அம்பாள் காமாக்ஷி தேவியே ! ஒரு மலரிலிருந்து தேனைத் திருடிக்கொண்டு வேறு மலருக்கு, ரீங்காரமிட்டுக்கொண்டு, மிகவும் ஜொலிக்கும் வெளிச்சத்துடன் பறந்து செல்லும் பொன் வண்டினைப்போன்ற, காந்த சக்தியுள்ள, உன் கடைக்கண் பார்வையை, புன்னகையுடன், ஒரு க்ஷண நேரம் (கண் இமைக்கும் நேரம்) என் மீது திருப்பி, என் ஜன்மாந்தர பாபங்களாகிய மன அழுக்குகளைக் குளிப்பாட்டி நீக்கி, ஸதா ஸர்வ காலமும் உன்னையே நினைத்து வழிபடும் ஞானிகளுக்கு அருள் செய்வதுபோலவே, என்னையும் அக்ஞானம் என்ற இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அருள வேண்டும் தாயே !!
ரத ஸப்தமி + பீஷ்மாஷ்டமி
12.02.2019 செவ்வாய்க்கிழமை
வரும் 12.02.2019 செவ்வாய்க்கிழமை சூர்ய பகவானுக்கு உரிய ரத ஸப்தமியும், பீஷ்மருக்கு உரிய பீஷ்மாஷ்டமியும் சேர்ந்து ஒரே நாளில் வருகின்றன. அன்று ஸ்நானம் செய்யும்போது, ஆண்கள் + பெண்களால் சொல்லப்பட வேண்டிய மந்திரங்களும், அன்று ஆண்கள் அனைவராலும் செய்யப்பட வேண்டிய மிகச்சுலபமான தர்ப்பண (நீர்க்கடன்) மந்திரங்களும் கீழ்க்கண்ட பதிவுகளில் உள்ளன. அவற்றைத் தனியாகக் குறித்து வைத்துக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சூர்ய பகவானுக்காகச் செய்ய வேண்டிய, மிகச் சுலபமான ரத ஸப்தமி ஸ்நான மந்திரங்களும், ரத ஸப்தமி தர்ப்பண (நீர்க்கடன்) மந்திரங்களும் தெரிந்துகொள்ள இதோ ஓர் பதிவு: http://gopu1949.blogspot.com/ 2012/01/blog-post_31.html
குருக்ஷேத்ர யுத்த பூமியில், மஹா பாரதப் போர் முடிந்து, உத்தராயண புண்யகாலத்தில் தனது மரணம் நிகழ வேண்டும் என எதிர்பார்த்து, அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்ம பிதாமஹர், பஞ்ச பாண்டவர்களுக்காக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் முன்னிலையில், முதன் முதலாக எடுத்துச் சொன்னதுதான் ’ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்’ என்ற மஹா மந்திரமாகும். பீஷ்மாஷ்டமி புண்ணிய காலத்தில் பீஷ்மப் பிதாமஹருக்காக ஆண்கள் அனைவராலும் செய்யப்பட வேண்டிய, மிகச் சுலபமான தர்ப்பண (நீர்க்கடன்) மந்திரங்கள் இடம் பெற்றுள்ள பதிவு இதோ: http://gopu1949.blogspot.com/ 2012/01/31012012.html
2011 முதல் 2015 வரை நான் என் வலைத்தளத்தில்
வெளியிட்டுள்ள அனைத்து 806 பதிவுகளுக்கும்,
அன்புடன் வருகைதந்து,
அழகாகப் பின்னூட்டங்கள் அளித்துள்ளவரின்
அழகாகப் பின்னூட்டங்கள் அளித்துள்ளவரின்
மூன்றாம் ஆண்டு நினைவு நாள்.
09.02.2019
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
"வாசிப்பது என்பது சுவாசிப்பது !
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”
வலைத்தளம்: மணிராஜ்
[ மறைவு: 09.02.2016 ]
தொடர்புடைய பழைய பதிவுகள்:
கண்ணீர் அஞ்சலி :(
அதற்குள் ஓராண்டு ஓடிப்போனதே ! :(
http://gopu1949.blogspot.com/ 2018/02/09022018.html
நினைவு நாள் : 09.02.2018
நினைவு நாள் : 09.02.2018
9
2
19
நினைத்துப் பார்க்கிறேன்
சாதனையாளர் விருது - 2015
அன்றும், இன்றும், என்றும்
நீங்காத நினைவுகளுடன்
பதிவர்களாகிய நாங்கள்.
[ வை. கோபாலகிருஷ்ணன் ]