என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 30 ஜனவரி, 2017

நினைவாற்றல் - பகுதி 3 of 3


பகுதி-1 க்கான இணைப்பு: 
 http://gopu1949.blogspot.in/2017/01/1-of-3.html

பகுதி-2 க்கான இணைப்பு:


On 25th January, 2017 
 a Lecture Demonstration
on Ashtaavadaanam
by
Sri V.Mahalingam, 
(Former AGM, UCO BANK - Retd.)

Time:  6.30 PM to 8 PM
Venue: Thathachariar House,
No.152, South Chitra Street, 
Srirangam, Trichy-620006.



பகுதி-3 

பக்கம் எண்-1 முதல் பக்கம் எண்-5 வரை இதன் சென்ற பகுதியில் நாம் பார்த்தோம்.


பக்கம் எண்-6  [DIGITAL MEMORY DEMONSTRATION] பற்றி இப்போது நாம்   பார்ப்போம்.


பக்கம் எண்-6 ஆன  இதில் மொத்தம் 10 x 10 = 100 கட்டங்கள் போடப்பட்டுள்ளன. 


தலைப்பக்கம் 1 முதல் 10 வரை தலைப்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன

இடது கை மார்ஜின் பக்கம் A, B, C, D, E, F, G, H, I, J என முதல் 10 ஆங்கில எழுத்துக்கள் ஒன்றன்கீழ் ஒன்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு நான்கு ஸ்தான இலக்கம், எந்த ஒரு ஒழுங்கான முறைப்படியும் இல்லாமல், ஒரேயடியாக  கலந்துகட்டியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.


பார்வையாளர்களில் ஒவ்வொருவராக கேட்க அஷ்டாவதானி, அந்தக் கட்டத்தில் உள்ள அதற்கான நம்பரை மிகச்சரியாக ஒரு கரும்பலகையில் எழுதிக்காட்டி அசத்துகிறார்.


உதாரணமாக ......


What is the Value written against G8 எனக்கேட்டால், G வரிசையில் 8-வது தலைப்பு எண்ணுக்குக்கீழேயுள்ள, நான்கு ஸ்தான எண்ணான 9467 என்பது அஷ்டாவதானி அவர்களால் அங்குள்ள கரும்பலகையில் உடனடியாக எழுதிக் காட்டப்படுகிறது. 

இதுபோல அந்த, பக்கம் எண்-6 இல் உள்ள 100 நான்கு ஸ்தான எண்களையும் அவரால் மிகச் சுலபமாகச் சொல்ல முடிகிறது என்பதும் ஆச்சர்யமாக உள்ளது.




இந்த இனிய நிகழ்ச்சியின் நிறைவாக
துக்ளக் + இந்தியா டுடே இதழ்களில்
அவரின் நினைவாற்றல் பற்றி:


 



Invitees are requested to bring each a pencil and pen and INDIA TODAY ENGLISH EDITION with Cover date 23 January 2017 and THUGLAK Tamil Magazine with Cover date 18 January 2017. This will help to  understand and appreciate the skills of the ASHTAVADHANI

இதுபோன்றதொரு அறிவிப்பு அவர்களின் அழைப்பிதழிலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் பெரும்பாலானோர் மேற்படி இரு இதழ்களையும் தங்களுடன் கொண்டு வரவில்லை. அங்கிருந்த ஓரிரு பிரதிகளையே சர்குலேஷன் முறையில் பலரிடமும் வரிசையாகத் தரப்பட்டது. 

அந்த இரண்டு இதழ்களிலும் உள்ள ஏதேனும் ஒரு பக்கத்தின் எண்ணையும், ’இந்தியா டுடே’ அல்லது ’துக்ளக்’ என்பதையும் நாம் சொன்னால் போதும், அந்தப்பக்கத்தில் உள்ள முழுச்செய்திகளையும் சுருக்கமாக நமக்குச் சொல்லிவிடுகிறார் அந்த அஷ்டாவதானி. 

செய்திகளோ, படங்களோ, விளம்பரங்கள் மட்டுமே உள்ள பக்கங்களோ, கேள்வி பதில் பகுதியோ, எதுவாக இருப்பினும் டாண் டாண் எனச் சொல்லி அசத்தி விடுகிறார். 

அந்த குறிப்பிட்ட இரண்டு இதழ்களையும், இந்தப்புறம் உள்ள முன் அட்டை முதல், அந்தப் பின்புறம் உள்ள கடைசி அட்டை வரை, அதன் பக்க நம்பர்களுடன் கரைத்துக்குடித்து மண்டையில் ஏற்றியுள்ளார் என்பது அறிய நமக்கு  மிக மிக ஆச்சர்யமாகவே உள்ளது.



இவ்வாறு அடுத்த ஒரு அரைமணி நேர நிகழ்ச்சி முடிந்ததும், கடைசியாக ஒருசிலர், அவரால் எவ்வாறு இதுபோன்ற ஒரு தனித்திறமையை வளர்த்துக்கொள்ள முடிந்தது என ஆர்வத்துடன் கேட்டார்கள். 

நம்பர் எண்ணிக்கைகளில் 1 to 9 and 0 ஆகிய 10 நம்பர்கள் + 26 ஆங்கில எழுத்துக்கள் + நம்பர் எண்ணிக்கைகளில் உள்ள ரோமன் லெட்டர்ஸ் போன்றவைகளை உபயோகித்து, தன் பாணியில் ஒருசில குறியீடுகளாக மாற்றிக்கொண்டு (உதாரணமாக Date of Birth of some of his Friends and Relatives, Car Registration Numbers of some of his friends போன்றவைகளை) மனதில் ஏற்றிக்கொள்வாராம். இதுபோல பழகிப்பழகி, தன் மூளையில் பலவற்றை அவர் ஓரு குறியீடாகவே (Just like Password) பதிந்து வைத்திருப்பதால், தன்னால் இவ்வாறு மேஜிக் செய்ய முடிகிறது என்று சொல்லி மகிழ்வித்தார்.

மொத்தத்தில் அன்றைய அந்த ஒன்றரை மணி நேர நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், அனைவரையும் ஆச்சர்யப்பட வைப்பதாகவும் இருந்தது. 




அஷ்டாவதானி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உங்கள் அனைவரின் பலத்த கரகோஷங்களுடன் இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.




  






எல்லா அஷ்டாவதானிகளும், இதே போன்ற இவரின் இந்த முறையைத்தான் கடைபிடிப்பார்கள் என்று தயவுசெய்து நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமான பாணியில் தங்களின் திறமைகளை நிரூபிப்பார்கள். 

ஏற்கனவே நான் பள்ளியில் படிக்கும் சிறிய பையனாக இருந்தபோது, வேறு ஒரு அஷ்டாவதானி அவர்களின் செய்முறையை நேரில் கண்டு வியந்துள்ள அனுபவமும் எனக்கு உள்ளது. 

அதுபோல ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றிய வேறொரு அஷ்டாவதானி, வேறொரு முறையில் சாதனைகள் செய்து மகிழ்வித்திருந்தார்.

நேற்று கூட என் அன்புக்குரிய பதிவர் அண்ணா திரு. பட்டாபிராமன் அவர்கள் (’ராமரஸம்’ வலைத்தளப் பதிவர்) தனது பின்னூட்டத்தில் கொடுத்திருந்த You Tube Link ....  https://youtu.be/FYwWC6F5NT4  மூலம் மேலும் ஒரு மிகச்சிறந்த நிபுணரின் நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் பாக்யம் பெற்றேன். 

என்னதான் நான் இவரைப்பற்றியும், இவரின் தனித்திறமைகள் பற்றியும், அபூர்வமான + அதிசயமான இவரின் நினைவாற்றல்கள் பற்றியும், என்னால் இயன்றவரை, என் சிற்றறிவுக்கு எட்டியவரை,  என் எழுத்துக்களில் இங்கு வடிவமைத்து எடுத்துக்  கூறியிருப்பினும், உங்களில் பலராலும் அதனை சரிவரப் புரிந்துகொண்டு, ரஸித்து மகிழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏனோ இல்லை. 

இந்தத் தொடரின் பகுதி-1 க்கும் பகுதி-2 க்கும் கிடைத்துள்ள பின்னூட்ட எண்ணிக்கைகளின் வித்யாசத்தின் மூலம் இதனை என்னால் நன்கு, மிகச்சுலபமாக உணர முடிகிறது.

அதனால் இவரின் இதுபோன்ற நிகழ்ச்சிகளை, தாங்கள் அனைவருமே நேரில் சென்று கண்டு களிக்க வேண்டும்.  அப்போதுதான், அதைப்பற்றி நன்கு புரிந்துகொண்டு ரஸிக்கவும் முடியும். 

அடிக்கடி பல ஊர்களிலும், பல பள்ளிகளிலும், பல கல்லூரிகளிலும் இவரின் நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்து வருகிறார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன். அது சம்பந்தமாக ’THE HINDU’ போன்ற பிரபல செய்தித்தாள்களிலும், ’அன்றாட நிகழ்ச்சி நிரல்’ பகுதியில் விளம்பரம் செய்யப்பட்டு வருவதாகவும் பிறர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.

இதற்கு நுழைவுக் கட்டணமோ அல்லது வேறு எந்த அன்பளிப்புச் செலவுகளோ ஏதும் நமக்குக் கிடையவே கிடையாது. ஆர்வமுள்ளவர் போய்க் கலந்துகொண்டு, அவரின் தனித்திறமைகளைக் கண்டு களித்து கைதட்டிப் பாராட்டினாலே போதும் ..... அவருக்கு உடனே மேலும் ஊக்கமும், உற்சாகமும், பேரெழுச்சியும் ஏற்பட்டு அவர் மிகவும் மனம் மகிழக் கூடும். நம்மையும் அவர் என்றும் மறக்காமல் தன் நினைவாற்றலில் வைத்துக்கொள்ளவும் கூடும்.

இதில் உண்மையிலேயே ஆர்வமுள்ளவர்கள் அவரை தொலைபேசியில் அழைத்தோ அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொண்டோ, தங்களின் பெயர்களை, இப்போதே பதிவு செய்து கொண்டால், அடுத்த நிகழ்ச்சி நடைபெறும் ஊர், நாள், இடம், நேரம் முதலியனவற்றை அவரே தங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க ஏதுவாகும். 

அவரைத் தொடர்பு கொள்ள 
விரும்புவோருக்காக ....

அஷ்டாவதானி 
திரு. V. மஹாலிங்கம் அவர்கள்.
M.Com., L.L.B., C.A.I.I.B., 

Phone: 0431-2432340


Residing now at

Dhanraj Complex
B-6, First Floor
15, Veereswaram Main Road
Srirangam  
Thiruchirappalli-620 006  

-oOo-






இந்த அஷ்டாவதானி திரு. V. மஹாலிங்கம் அவர்கள், சிலரால் அன்புடன் ‘மாலி’ என்றும், வேறு சிலரால் ‘மெளலி’ என்றும் அழைக்கப் பட்டு வருகிறார். எனக்கென்னவோ அதுபோல அவர்கள், அவரைச் செல்லப்பெயரில் அழைக்கும்போதெல்லாம் சமீபத்தில் எங்கள் வீட்டில் தயாரித்த ’மாகாளி’ ஊறுகாய் மட்டுமே நினைவுக்கு வருகிறது. 

எனது நினைவாற்றல் எப்போதுமே சாப்பாடு விஷயங்களில் மட்டும் தானே !  :)


அதற்கு உதாரணமாக என் பதிவுகள் சிலவற்றின் இணைப்புகள்:


 

gopu1949.blogspot.com/2012/12/blog-post_14.html 
அடடா என்ன அழகு ..... !
அடையைத் தின்னு பழகு ..... !! 
Total No. of Comments as on 29.01.2017 = 297 










வெண்ணிலவைத் தொட்டு.....
 முத்தமிட ஆசை .....
மிளகாய்ப்பொடி கொஞ்சம் .....
தொட்டுக்கொள்ள ஆசை  .....
Total No. of Comments as on 29.01.2017 = 187


 



உணவே வா .... உயிரே போ !
Total No. of Comments as on 29.01.2017 = 163





 





மீண்டும் உங்களை நான் 
என் பதிவுகளில் சந்திக்கும் வரை

என்றும் அன்புடன் தங்கள்,

 

(வை. கோபாலகிருஷ்ணன்)

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

நினைவாற்றல் - பகுதி 2 of 3

பகுதி-1 க்கான இணைப்பு:  
 a Lecture Demonstration on
Ashtaavadaanam
by
Sri V.Mahalingam, 
(Former AGM, UCO BANK - Retd.)

Time:  6.30 PM to 8 PM
Venue: Thathachariar House,
No.152, South Chitra Street, 
Srirangam, Trichy-620006.

பகுதி-2

பார்வையாளர்களாகிய நாம் பலரும் சேர்ந்து, அவ்வப்போது தாறுமாறுமாக தந்து குழப்பிவரும் பலவிதமான விஷயங்களை, அஷ்டாவதானியான ஒருவர் ஒரே நேரத்தில், தன் மூளைக்குள் கிரஹித்துக்கொண்டு, அவற்றை அப்படியே ஆங்காங்கே ஸ்டோரேஜ் செய்து கொண்டு, பேனா, பென்சில், பேப்பர் எதுவுமே தன்னிடம் வைத்துக்கொள்ளாமல், தனக்குள் உள்ள ஸ்பெஷல் மூளையால் மட்டுமே, ஒரு தியானம் போல ஆழ்ந்து யோசித்து, பல்வேறு கணக்குகள் போட்டு, மிகவும் ஆச்சர்யமான முறையில் கடைசியில், நமக்கு அந்தப் பல்வேறு தகவல்களை ஒழுங்குபடுத்தித் திரும்பத் தருவார் என்பதே இதில் உள்ள மிக முக்கியமான விஷயமாகும்.  

இதோ இந்தப்படம் ... நிகழ்ச்சி நடக்கும்போது 
மண்டை பூராவும் பல்வேறு யோசனைகளுடன்
தன் கைகளைக் கட்டிய நிலையில் 
திருவாளர்: அஷ்டாவதானி அவர்கள்.

முதலில், நிகழ்ச்சிக்கு வந்துள்ள பார்வையாளர்கள் ஒவ்வொருவரிடமும், ஒரே மாதிரியான மேட்டர்கள் டைப் செய்யப்பட்ட ஆறு பக்கங்கள் கொண்ட ஒரு பேப்பர் கொத்து அளிக்கப்படுகின்றன. 

[உண்மையில் Back to Back Print செய்யப்பட்ட ஒரேயொரு தாள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில் இருபுறமும் சேர்த்து முக்கியமான (5 + 1 = 6) ஆறு பகுதிகள் இருந்தன. தங்களுக்கு அதனைப்பற்றி சுலபமாக புரிய வைப்பதற்காக நான் இங்கு, தனித்தனியே ஆறு தாள்கள் கொண்ட ஒரு பேப்பர் கொத்து (A Bunch of Papers with 6 Pages)  எனக் குறிப்பிட்டுள்ளேன்] 

எழுதுகோல்களான பென்சில் அல்லது பேனா கொண்டு வராமல் மறந்துபோய்விட்ட பார்வையாளர்களில் சிலருக்கு, அவைகள் அங்கு அஷ்டாவதானி அவர்களின் மகளினால் தந்து உதவப் பட்டன.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் ”யாராவது ஒருத்தர் மட்டும், ஒரு மூன்று ஸ்தான எண் சொல்லுங்கோ” என்றார். உடனே ஒருவர் எழுந்தார். 204 என்றார். மைக்கிலும் அந்த நம்பர் 204 என்று உரக்க அறிவிக்கப்பட்டது. அனைவரும் இதனை தங்களிடம் உள்ள பக்கம் எண்-1 இல் ஓர் ஓரமாகக் குறித்துக்கொண்டனர். 

இப்போது அந்த அஷ்டாவதானி அவர்களின் மூளையில் இந்த நம்பர் 204 நுழைந்து தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டது. இதில் அவரின் வேலை என்னவென்றால், எந்த ஒரு நான்கு எண்களின் கூட்டுத்தொகை 204 ஆக வரும் எனச் சொல்ல வேண்டும். அதுபோல ஒன்றல்ல இரண்டல்ல ..... நான்கு காம்பினேஷன்களை அவர் நமக்குச் சொல்ல வேண்டும். 



**என்னை யாராவது இதுபோலக் கேட்டால் ஒரே ஒரு முறை மட்டும் 51+51+51+51=204; 50+52+50+52=204; 1+1+1+201=204; 2+2+100+100=204 என சற்றே யோசித்து மிகச் சுலபமாகச் சொல்லி விடுவேன்.** 

ஆனால் அந்த நான்கு நம்பர்களும் மேலிருந்து கீழோ அல்லது படுக்கை வசமாகவோ கூட்டினாலும் அந்த கூட்டுத்தொகை 204 என வருமாறு அவர் தன் எண்களைச் சொல்ல வேண்டும். 

மேலும் அந்த அஷ்டாவதானி, இதன் விடையை என்னைப்போல ஒரேயடியாகச் சொல்லக்கூடாது. 

அடுத்தடுத்து பல்வேறு விஷயங்கள் நம்மிடமிருந்து அவர் மண்டைக்குள் நுழைந்து கொண்டிருக்கும் போது அவர் யோசித்து, நீண்ட இடைவெளி கொடுத்து, ஒவ்வொரு நம்பராக நம்மிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். 

அவர் இவ்வாறு சொல்லச்சொல்ல, நாம் நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள பக்கம் எண்-1 என்ற தாளில் உள்ள கட்டங்களில் குறித்துக்கொண்டே வரணும். 

அவர் நம்மிடம் சொல்வதில் ஒரே நம்பர்கள்  திரும்பவும் ரிப்பீட் ஆகவும் கூடாது. மேலும், மேலிருந்து கீழ் மற்றும் படுக்கை எண்களின் கூட்டல்கள் இரண்டும் சரியாக 204 என்று வர வேண்டும்.  

**நான் மேலே என் விடையாக அண்டர்லைன் செய்து சொல்லியுள்ளதில் இந்த இரண்டு கண்டிஷன்களுக்குமே பொருந்தாமல் உள்ளதை கவனிக்கவும்.**

பக்கம் எண்-1 [MAGIC SQUARE] மேலே நான் சொல்லியுள்ளதை அவ்வப்போது, பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் குறித்துக்கொள்ள மட்டுமே இந்த பக்கம் எண்-1 நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் நான்கு புள்ளி நான்கு வரிசை கோலம் போல, 4 x 4 = 16 காலிக் கட்டங்கள் மட்டுமே  போடப்பட்டுள்ளன.



A    B   C   D
  E    F   G   H  
I     J    K    L
 M   N   O    P 

இந்த A, B, C, D order இல் தான் அவரால் அவ்வப்போது நம்பர்கள் சொல்லப்பட்டு வரும். 

அந்த அஷ்டாவதானி நம்மிடம் அவ்வப்போது சொல்லும் நம்பர்களை நாம் அதில் குறித்துக்கொண்டே வர வேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் வரக்கூடிய முதல் எண்ணை மட்டும், அவர் அவ்வப்போது சொல்லுவார். அதன் பின் ஒவ்வொரு வரிசையிலும் வரும் இரண்டாம் எண். அதன் பிறகு ஒவ்வொரு வரிசையிலும் வரும் மூன்றாம் எண் எனச் சொல்லுவார். இந்த மூன்று ஸ்டேஜ்கள் முடிந்ததும் அவர் சொல்லப்போகும் நாலாவது வரிசை எண்கள் (M  N  O  P) என்னென்ன என்பதை நாமே யூகித்து விடலாம்.  ஒவ்வொரு வரிசையிலும் உள்ள முதல் மூன்று எண்களையும் கூட்டி, 204-இல் இருந்து கழித்தால் போதுமே. இருப்பினும் அந்த ஒவ்வொரு வரிசையில் வரவேண்டிய நான்காவது எண்ணையும் அஷ்டாவதானியே நமக்குச் சொல்லுவார். நாம் அது சரியே என்பதை அவருக்கு அறிவிக்க நம் கைகளை பலமாகத் தட்டினால் மட்டும் போதும்.

அன்று அவரால் அவ்வப்போது அறிவிக்கப்பட்ட எண்கள்:

 81     25     29     69   = 204

 37     61     57     49   = 204

 53     45     41     65   = 204

 33     73     77     21   = 204
________________

204   204   204   204 
_________________

இதில் உள்ள 16 நம்பர்களில் எதுவுமே ரிப்பீட் ஆகவில்லை என்பதையும், அதில் உள்ள ஒவ்வொரு நான்கு நம்பர்களையும் மேலிருந்தும் கீழாகவோ அல்லது படுக்கை வசமாகவோ அல்லது ஒரு மூலையிலிருந்து மறு மூலை வரைக்குமோ எப்படிக் கூட்டினாலும் (ALL THE 10 DIRECTIONS) 204 வருகிறது என்பதையும் கவனிக்கவும்.





பக்கம் எண்-2 [ PLAYING CARDS ]


 

 





இந்த பக்கம் எண்-2 இல் சீட்டாட்டத்தில் உள்ள கிளாவர், இஸ்பேட், ஹாட்டீன், டைமன் ஆகிய நான்கு பூக்களின் பெயர்கள் தலையில் எழுதியிருந்தன. கீழே ஒவ்வொன்றிலும் 13 கட்டங்கள். அதாவது சீட்டுக்கட்டினில் உள்ள சீட்டுகளான ACE, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, JACK, QUEEN, KING என இடதுபுற மார்ஜினில் குறிப்பிடப்பட்டிருந்தன. இப்போது  4 x 13 = 52 கட்டங்கள் உள்ள பேப்பர் ஒன்று, பக்கம் எண்-2 என போடப்பட்டு உங்களிடம் கையில் உள்ளதாக கற்பனை செய்துகொள்ளவும்.

பார்வையாளர்களில் சிலர் இவற்றில் ஏதேனும் சில கார்டுகளின் பெயர்களை மாற்றி மாற்றிச் சொல்ல வேண்டும். உதாரணமாக எட்டு இஸ்பேடு, பத்து கிளாவர், கிங் ஹாட்டீன், ஏழு டைமன் என எது வேண்டுமானாலும் சற்றே இடைவெளி விட்டுச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவை மைக்கில் ஒரு முறை சொன்னதும், அனைவராலும் அவர்களிடம் உள்ள பக்கம் எண்-2 இல், அந்த குறிப்பிட்ட கட்டத்தில் டிக் செய்து கொள்ளப்பட்டு விடும்.

அவ்வாறு சொல்லப்படும் சீட்டுகள் யாவும் அஷ்டாவதானி அவர்களின் மூளையில் அவ்வப்போது ஒரு பக்கமாக ஏற்றிக்கொள்ளப்பட்டு, அவர் மூளையில் பதிவாகிக்கொண்டே இருக்கும். 

இவ்வாறு 52 கார்டுகளில் சுமார் 40 கார்டுகள் டிக் ஆன பிறகு, டிக் ஆகாத கார்டுகள் ஒவ்வொரு ஜாதியிலும் என்னென்னவாக இருக்கும் என்று அந்த அஷ்டாவதானியானவர் மிகச் சரியாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்தி, பலத்த கரகோஷத்தைப் பெற்று விடுகிறார்.



பக்கம் எண்-3

இதில் இரண்டே இரண்டு கட்டங்கள் வீதம் மொத்தம் பத்து வரிசைகள் இருக்கும். முதல் கட்டத்தில் 1 முதல் 10 வரை நம்பர்கள் ஏற்கனவே ஒன்றன்கீழ் ஒன்றாகப் போடப்பட்டு இருக்கும். அதன் அருகே உள்ள கட்டம் மட்டும் காலியாக இருக்கும். அதில் நடு நடுவே யாராவது ஒருவர் ஓர் இரண்டு இலக்க நம்பரை  எழுதிவிட்டு, அறிவிக்கலாம். அது மைக்கில் சொல்லப்பட்டதும், அனைவரும் அவரவர்களிடம் உள்ள பக்கம் எண்-3 இல் அந்த எண்ணைக் குறித்துக்கொள்ளலாம். 

உதாரணமாக .... 
பக்கம் எண்-3 .... வரிசை எண்-8 ..... நம்பர்: 49 எனச் சொல்லலாம். 
பக்கம் எண்-3 .... வரிசை எண்-3 ..... நம்பர்: 83 எனச் சொல்லலாம்.
பக்கம் எண்-3 .... வரிசை எண்-9 ..... நம்பர்: 71 எனச் சொல்லலாம். 

அவ்வப்போது இடை இடையே இதுபோல சொல்லப்படும் நம்பர்கள் அனைத்துமே கவனமாக அஷ்டாவதானியால் தன் மூளையில் ஏற்றிக்கொள்ளப்படும்.  கடைசியில் அவர் Serial Nos: 1 to 10 இல் உள்ள எண்களை  வரிசையாகச்  சொல்லி அசத்துவார்.


பக்கம் எண்-4 

இதிலும் மேலே சொன்னபடியே வரிசையாக Serial Nos: 1 to 10 என ஒன்றன்கீழ் ஒன்றாக இருக்கும். அதன் அருகே உள்ள கட்டத்தில் ஓர் வார்த்தை எழுதக்கூடிய அளவுக்கு இடம் விடப்பட்டிருக்கும். 

அதில் அவ்வப்போது பார்வையாளர்களில் சிலர் ஏதேனும் ஒரு வார்த்தையை எழுதிவிட்டு அதனைச் சொன்னால் மைக் மூலம் உரக்கச் சொல்லப்படும். அனைவரும் தங்களிடம் அதனைப் அப்படியே குறித்துக் கொள்ளலாம். 

உதாரணமாக ....

Serial No. 6   CHAIR

Serial No. 8   CAR

Serial No. 3   FISH

Serial No. 1   BOAT

அவ்வப்போது இடை இடையே இதுபோல சொல்லப்படும் வார்த்தைகள் அனைத்துமே கவனமாக அஷ்டாவதானியால் தன் மூளையில் ஏற்றிக்கொள்ளப்படும்.  கடைசியில் அவர் Serial Nos: 1 to 10 இல் உள்ள வார்த்தைகளை வரிசையாகச்  சொல்லி அசத்துவார்.


பக்கம் எண்-5 [ ராகங்கள் ]

பார்வையாளர்களில் சிலர் அவ்வப்போது எழுந்து ஏதேனும் பாட்டுக்கான ராகங்களை மட்டும் பாடி விட்டு அமரலாம். பாட்டாகப் பாடணும் என்ற அவசியம் இல்லை. ராகத்தை மட்டுமே ஆலாபணை செய்து காட்டினால் போதுமானது. 

அவை எந்த ராகங்கள் என இசை ஞானம் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பக்கம் எண்-5 இல் குறித்துக்கொள்ளலாம். 

அந்த ராகங்கள் ஒவ்வொன்றும் வரிசைக்கிரமமாக அவ்வப்போது அந்த அஷ்டாவதானி அவர்களின் கம்ப்யூட்டர் ப்ரைனில் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்.

அவ்வாறு ராகம் பாடிய ஒவ்வொருவரும் கல்யாணி, காம்போதி, கரகரப்பிரியா போன்ற எந்த ராகத்தில் பாடினார்கள் என்பதையும் அந்த அஷ்டவதானி கடைசியில் நமக்கு வரிசைக் கிரமமாகச்  சொல்லுவார்.





இதில் நான் மேலே சொல்லியுள்ள பக்கம் எண்-1 முதல் பக்கம் எண்-5 வரை, மாற்றி மாற்றி ஒரு சில நிமிட இடைவெளியில் பலராலும் கலந்துகட்டியாக சொல்லப்பட்டு, மைக்கிலும் அறிவிக்கப்படுகிறது. 

இதுபோன்ற பல தகவல்களை அந்த அஷ்டாவதானியின் மூளை தன்னுள் உடனுக்குடன் கிரஹித்துக்கொண்டு, ஏதேதோ கணக்குப்போட்டு வைத்துக்கொண்டு, கடைசியில் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வரிசைக்கிரமமாகச் சொல்லி அசத்துகிறது என்பதுதான் மிகவும் ஆச்சர்யமானதோர் விஷயமாகும்.

இவையெல்லாவற்றிற்கும் சேர்த்தே, மொத்தமாக ஒரு 40-45 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இதைத்தவிர நடந்துள்ள இன்னும் ஒருசில அதிசய நிகழ்வுகளை இதன் அடுத்த பகுதியில் தொடர்ந்து சொல்லி, என் முடிவுரையுடன் நிறைவு செய்ய உள்ளேன்.  






என்றும் அன்புடன் தங்கள்,

 

(வை. கோபாலகிருஷ்ணன்)