என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 27 ஏப்ரல், 2013

12] அன்றும் இன்றும் !




திருச்சி மலைக்கோட்டை
அன்றும் இன்றும்

By
வை.கோபாலகிருஷ்ணன்


திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. தா. சவுண்டையா I.A.S., அவர்கள் 2010 ஆகஸ்டு மாதம் “முத்தமிழ்” என்ற கலை, பண்பாட்டுச் சிறப்பிதழ் ஒன்றில் எழுதியுள்ள படைப்பு ஒன்றினில் திருச்சி மலைக்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளை பற்றி  குறிப்பிட்டுள்ளார்கள். 




அதில் மேற்படி படமும் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னொரு காலத்தில் .... என்று காட்டியுள்ள இந்தப்படம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ள திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலாகும். அதன் அருகே திருச்சி ஸ்ரீ தாயுமானவர் கோயில் இல்லை என்பதை கவனிக்கவும்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே இன்று உள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் என்பவரால் பாறைகளுக்கு மத்தியில் கட்டப்பட்டதாக, தமிழக வரலாறு குறிப்பிடுகிறது, என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள்.



உச்சிப்பிள்ளையார் + ஸ்ரீ தாயுமானவர் 
கோயில்களின் இன்றைய தோற்றம் 
இதோ இங்கே


அதுபோல திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையின் வயது 3500 மில்லியன் ஆண்டுகள் என புவி இயல் வல்லுனர்களின் ஆய்வு மதிப்பிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.  ஒரு மில்லியன் என்றால் பத்து இலட்சம் ஆகும். 3,500 x 10,00,000 = 350,00,00,000 திருச்சி மலைக்கோட்டையின் வயது 350 கோடி ஆண்டுகளுக்கு மேல் என்பது தெரியவருகிறது. மிகவும் ஆச்சர்யமான தகவலாக உள்ளது அல்லவா!




திருச்சியைப்பற்றியும் அதன் பெருமைகளைப்பற்றியும் மேலும் பல்வேறு படங்களுடன் காண நான் ஏற்கனவே எழுதி வெளியிட்டுள்ள “ஊரைச்சொல்லவா ..... பேரைச்சொல்லவா” என்ற பதிவினில் பார்க்கவும். இணைப்பு http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

-oOo-


”பொக்கிஷம்”
தொடர்பதிவுக்கு
வருகை தந்தோருக்கு
நன்றி அறிவிப்பு


”பொக்கிஷம்” என்ற தொடர்பதிவினை வெவ்வேறு தலைப்புகளில் 14.03.2013 முதல் 24.04.2013 வரை 11 பகுதிகளாக எழுதி வெளியிட்டிருந்தேன்.


பகுதி-01 க்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/03/1.html

பகுதி-11 க்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html


அதற்கு மொத்தமாக 53 பெண்களும்  35 ஆண்களுமாக ஆக மொத்தம் 88 நபர்கள் அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்து உற்சாகப்படுத்தியிருந்தார்கள். 


அவர்கள் அனைவருக்குமே, முதல் 10 பகுதிகளிலும், ஆங்காங்கே தனித்தனியே அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிகூறி பதில் அளித்துள்ளேன். 

இதோ அவர்களின் பட்டியல்:


திருமதிகள்:


01] அதிரா அவர்கள் 11/11


02] அம்முலு [பிரியசகி[ அவர்கள் 11/11

03] ஆச்சி [thirumathi bs sridhar] அவர்கள் 11/11

04] ஆசியா ஓமர் அவர்கள் 11/11

05] இராஜராஜேஸ்வரி அவர்கள் 11/11

06] இளமதி அவர்கள் 11/11

07] உஷா அன்பரசு அவர்கள் 11/11

08] ஏஞ்ஜலின் [நிர்மலா] அவர்கள் 11/11

09] காமாக்ஷி  அவர்கள் 11/11

10] கீத மஞ்சரி அவர்கள் 11/11

11] கீதா சாம்பசிவம் அவர்கள் 11/11

12] கோமதி அரசு அவர்கள் 11/11

13] கோவை2தில்லி அவர்கள் 11/11

14] சங்கீதா நம்பி அவர்கள் 11/11

15] மாதேவி அவர்கள் 11/11

16] ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் 11/11

17] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 11/11

18] வல்லிசிம்ஹன் அவர்கள் 11/11

19] ஜெயந்தி ரமணி அவர்கள் 11/11

20] ப்ரியா ஆனந்தகுமார் அவர்கள் 9/11

21] ஜலீலா கமால் அவர்கள் 8/11
22] விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள் 8/11
23] ஸாதிகா அவர்கள் 8/11
24] மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள் 8/11
25] S. மேனகா அவர்கள் 8/11


26] விஜி பார்த்திபன் அவர்கள் 7/11


27] சந்திரகெளரி அவர்கள் 6/11
28] மனோ சுவாமிநாதன் அவர்கள் 6/11
29] பூவிழி அவர்கள் 6/11


30] கோவைக்கவி வேதா இலங்காதிலகம் அவர்கள் 5/11
31] பூந்தளிர் அவர்கள் 5/11


32] சந்தியா அவர்கள் 4/11
33] ராமலக்ஷ்மி அவர்கள் 4/11
34] அமைதிச்சாரல் அவர்கள் 4/11

35] ருக்மணி சேஷசாயீ அவர்கள் 3/11
36] அம்பாளடியாள் அவர்கள் 3/11
37] சசிகலா [தென்றல்] அவர்கள் 3/11
38] நிலாமகள் அவர்கள் 3/11

39] ராம்வி அவர்கள் 2/11
40] ஃபைசா காதர் அவர்கள் 2/11
41] மாலதி அவர்கள் 2/11
42] ராதாராணி அவர்கள் 2/11
43] கிரிஜா ஸ்ரீதர் அவர்கள் 2/11


44] அருணா செல்வம் அவர்கள் 1/11
45] விஜிகிச்சன் கிரியேஷன் அவர்கள் 1/11
46] அன்புடன் அருணா அவர்கள் 1/11
47] எழில் அவர்கள் 1/11
48] புனிதா அவர்கள் 1/11
49] மீரா அவர்கள் 1/11
50] அப்பாவி தங்கமணி அவர்கள் 1/11
51] நீலா ரூஃபஸ் அவர்கள் 1/11
52] அருணா அவர்கள் 1/11
53] ஷைலஜா அவர்கள் 1/11





திருவாளர்கள்:



54] திண்டுக்கல் தனபாலன் அவர்கள் 11/11


55] ஸ்ரீராம் அவர்கள் 11/11

56] தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் 11/11



57] கே.பி. ஜனா அவர்கள் 9/11


58] E.S.. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் 8/11

59] S. ரமணி அவர்கள் 6/11

60] பட்டாபிராமன் ஐயா அவர்கள் 5/11
61] வெங்கட் நாகராஜ் அவர்கள் 5/11
62] அப்பாதுரை அவர்கள் 5/11

63] அஜீம்பாஷா அவர்கள் 4/11
64] சே. குமார் அவர்கள் 4/11
65] ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள் 4/11
66] T.N. முரளிதரன் அவர்கள் 4/11

67] ரிஷபன் அவர்கள் 3/11
68] G. கணேஷ் [செளதி] அவர்கள் 3/11
69] G.M. பாலசுப்ரமணிய ஐயா அவர்கள் 3/11
70] வாஸன் அவர்கள் 3/11
71] கரந்தை ஜயகுமார் அவர்கள் 3/11
72] கவியாழி கண்ணதாசன் அவர்கள் 3/11

73] ஆரண்யநிவாஸ் R. ராமமூர்த்தி அவர்கள் 2/11
74] சூரி சிவா சுப்புத்தாத்தா அவர்கள் 2/11
75] மணக்கால் ஐயா அவர்கள் 2/11
76] மலர் பாலன் அவர்கள் 2/11
77] ’அவர்கள் உண்மைகள்’ அவர்கள் 2/11

78] S. சுரேஷ் அவர்கள் 1/11
79] இக்பால் செல்வன் அவர்கள் 1/11
80] Advocate P.R. ஜயராஜன் அவர்கள் 1/11
81] சேக்கனா M நிஜாம் அவர்கள் 1/11
82] K.S.S. ராஜ் அவர்கள் 1/11
83] விமலன் அவர்கள் 1/11
84] D. சந்திரமெளலி அவர்கள் 1/11
85] பழனி கந்தசாமி ஐயா அவர்கள் 1/11
86] லதிகார் அவர்கள் 1/11
87] கிருஷ்ணா ரவி [அட்சயா] அவர்கள் 1/11
88] மகேந்திரன் அவர்கள் 1/11

அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதோ அனைவருக்கும் பூங்கொத்து.


 


 



மஞ்சள் பூசப்பட்டுள்ள 19 பெண்களும், சந்தனம் பூசப்பட்டுள்ள 3 ஆண்களும்   [ஆக மொத்தம்  22 பேர்கள்] இந்தத்தொடரின் அனைத்துப் பதினொன்று பகுதிகளுக்கும் வருகை புரிந்து தங்களின் கருத்துக்களைப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




என் வம்புத்தங்கை ..... ஸாரி ..... என் அன்புத்தங்கை, பிரித்தானியா இளவரசி  அலம்பல், அலட்டல், அட்டகாச, அதிரடி ”அதிரா” ஸ்வீட் சிக்ஸ்டீன்  அவர்கள், இந்த என் தொடருக்கு, ஏராளமான பின்னூட்டங்களை தாராளமாக வழங்கியுள்ளார்கள். 






அதிரா அவர்கள் இந்த என் “பொக்கிஷம்” தொடரின் 11 பகுதிகளுக்கும் சேர்த்து இதுவரை கொடுத்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை: 47 ஆகும்.  இது வழக்கத்துக்கு மாறான அதிசயமாகக் கருதப்படுகிறது. அதிரா அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்.

அதிராவுக்கு மிகவும் பிடித்த பூனை மூலம் பூ கொடுத்தனுப்பப்பட்டுள்ளது. 


வழக்கம்போலவே மிக அதிகமான பின்னூட்டங்களை, மிகவும் அமைதியாகவும், ஸாத்வீகமான முறையிலும், மிக அழகாகவும், தெளிவாகவும் அள்ளி அள்ளிக்கொடுத்து அசத்தியுள்ளவர், என்ற  முதலிடத்தினைத் தக்க வைத்துக்கொண்டுள்ளவர்கள், நம் அன்புக்கும், பாசத்திற்கும் உரிய, தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்கள் தான். 






திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இந்தப் “பொக்கிஷம்” தொடரின் 11 பகுதிகளுக்கும் சேர்த்து இந்த நிமிடம் வரை கொடுத்துள்ள மொத்தப்பின்னூட்டங்களின் எண்ணிக்கை: 61 ஆகும். அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

ஞானத்தலைவியான இவருக்கு, ஞானத்தின் அடையாளமான  யானை மூலம் பூங்கொத்து கொடுத்தனுப்பி ராஜமரியாதை செய்யப்பட்டுள்ளது.

என்னிடமிருந்த, நான் இதுவரை பொக்கிஷமாக நினைத்து மகிழ்ந்த, பல விஷயங்களைப்பற்றி மட்டும், என் இந்தத்தொடரின் 11 பகுதிகளிலும் எடுத்துச்சொல்லியிருந்தேன். 


அவை எல்லாவற்றையும் விட மாபெரும் பொக்கிஷமாக நான் நினைப்பது, என் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள் எழுதி உற்சாகப்படுத்தி வரும் விலைமதிப்பில்லாத பெரும் பொக்கிஷமான தங்களின் பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானத்தை மட்டுமே.


இந்தத்தொடரின் 11 பகுதிகளுக்கும் [என் பதில்கள் உள்பட] இந்த நிமிடம்வரை கிடைத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கை: 


125+132+114+133+107+119+114+113+118+93= 1168 + [44 * 2 assumed =88] = 1256


பின்னூட்டங்களின் எண்ணிக்கை [என் பதில்கள் உள்பட] பெரும்பாலான பகுதிகளில் 100ஐத் தாண்டி, இந்தத்தொடரின் மொத்தப் பின்னூட்ட எண்ணிக்கை 1250ஐத் தாண்டியுள்ளது, மிகவும் அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும்,  சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் உள்ளது. 


இந்த மகிழ்ச்சியினைக் கொண்டாட இந்தாங்கோ விருந்து:   



 

 

 

 

 

 


ooooooOoooooo







மாறுதலுக்கு உட்பட்ட மேற்படி 
புள்ளி விபரங்கள் 27.04.2013 சனிக்கிழமை
மிகச்சரியாக 16.45 மணிக்கு [I.S.T] எடுக்கப்பட்டுள்ளது.



என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்





இன்று 27.07.2015 
புதிதாக இணைக்கப்பட்டுள்ள 
சில படங்களும் செய்திகளும்






திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் கோயில்களில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் வளாகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 

உச்சிப்பிள்ளையார் கோயில் தங்க நிற விமானத்திற்கும், தாயுமானவர் கோயிலின் தங்கநிற விமானத்திற்கும் இடையே மிகப்பெரிய அளவில் ‘ஓம்’ என்ற மின்விளக்கு இந்த மாதம் [ஜூலை 2015] பொருத்தியுள்ளார்கள். 

இந்த ‘ஓம்’ என்ற விளக்கின் அமைப்பு, வடக்கு நோக்கி அமைந்துள்ளதால், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திருச்சிக்கு வருபவர்கள் திருவானைக்கோயில் அருகேயுள்ள மாம்பழச்சாலை + காவிரிப்பாலம் போன்ற தொலைவிலிருந்து இதனைத்தங்கள் கண்களால் கண்டு களிக்கலாம்.  

இந்தப்புகைப்படங்கள் என் வீட்டு ஜன்னல் கம்பிகள் வழியே இன்று 27.07.2015 எடுக்கப்பட்டு இதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

புதன், 24 ஏப்ரல், 2013

11] தெய்வம் இருப்பது எங்கே ?



                                                                   




”பொக்கிஷம்”

தொடர்பதிவு

[ நிறைவுப்பகுதி ]

By
வை. கோபாலகிருஷ்ணன்
                                                                 
-oOo-

                          
 



தினந்தோறும் எங்கள் குடும்பத்தில் நடைபெற்று வரும் சிவபூஜை:

                                         



என் தகப்பானாரிடமிருந்து எனக்குக் கிடைத்த 
பொக்கிஷமான பஞ்சாயதன பூஜை விக்ரஹங்களுக்கு  
10.03.2013 ஞாயிறு சிவராத்திரி அன்று இரவு, 
எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற 
சிறப்பான சிவபூஜையில் சில படங்கள்.









ஸ்ரீருத்ரம் மஹன்யாசம் போன்ற ஜபங்கள் வேதவித்துக்களால் ஜபிக்கப்பட்டு, முறைப்படி 12 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை + நைவேத்யம் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நான்கு மணி நேரங்களுக்கு மேல் பூஜை நடைபெற்றது.

சிவராத்திரியன்று நடைபெற்ற சிறப்பான அபிஷேகங்கள்:

[1] வாசனைத் தைலம்
[2] பஞ்சகவ்யம்
[3] பஞ்சாமிர்தம்
[4] நெய்
[5] பால்
[6] தயிர்
[7] தேன்
[8] கரும்புச்சாறு
[9] எல்லாவிதமான பழச்சாறுகளும்
[10] இளநீர்
[11] சந்தனம்
[12] ஜபம் செய்யப்பட்ட கும்ப தீர்த்தம்


-oooo சுபம் oooo -








அன்று சிவராத்திரி இரவு பூஜை முடிந்து 
நான் வீடு திரும்புகையில் 
தெருவில் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற 
சமயபுரம் ஸ்ரீ மஹமாயீ பூச்சொரிதலுக்கு 
புஷ்பங்கள் வசூல் செய்ய வந்த 
ஸ்ரீ மாரியம்மன் ரதம் 
அலங்கார மின் விளக்குகளுடன்






 



நேற்று 23.04.2013 செவ்வாய்க்கிழமை
மதியம் 12.15க்கு எங்கள் வீட்டருகே 
தேரில் பவனி வந்த திருச்சி தெப்பக்குளம் 
வாணப்பட்டரை மஹமாயீ [மாரியம்மன்]
சித்திரைத் தேர்திருவிழா படங்கள்.





 


2
=


1961-1965  ஸ்ரீ மஹாபெரியவா 
அவர்கள் செய்து வந்த 
ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரீ ஸமேத 
ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் பூஜை


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் கருணைக்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த ஓர் உண்மைச்சம்பவத்தை நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.. அதை இங்கு தங்களுடன் பகிர்ந்து கொண்டு, என் இந்த “பொக்கிஷம்” தொடரை நிறைவு செய்து கொள்கிறேன்.


2


ஸ்ரீராமஜயம்


பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை, லேசாக மழை
பெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மஹாபெரியவா.


தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச்
செல்வதற்காக எழுந்தார் ஸ்வாமிகள்.

அப்போது வயதான பாட்டியும், இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வேகவேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டார்.

சந்தோஷம் தவழ, “அடடே, மீனாக்ஷி பாட்டியா? என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே? பக்கத்திலே ஆரு? ஒம் பேத்தியா…

பேரென்ன?” என்று வினவினார் ஸ்வாமிகள்.

மீனாக்ஷி பாட்டி.. ”பெரியவா, நா எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன்.

இதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி தெரிவிச்சுண்டதில்லே … அதுக்கான சந்தர்ப்பம் வரலே..

ஆனா, இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே.. இவ எம் பொண் வயத்துப் பேத்தி. இந்த ஊர்ல பொறந்ததால காமாக்ஷின்னு பேரு வெச்சுருக்கு. நேக்கு ஒரே பொண்ணு.. அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை எங்கிட்ட விட்டுட்டு கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன் மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான்.

“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன். படிப்பு ஏறலே.
அஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு. வயசு பதினஞ்சு ஆறது..

இவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா
எங்கடமை விட்டுது” என்று சொல்லி முடித்தாள்.

பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன்.

சரி..என்ன சமாசாரம்?” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.

முதலில் தயங்கிய மீனாக்ஷி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.

“ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு. பையனும் இந்த ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார். அறுவது ரூவா சம்பளமாம். நல்ல குடும்பம், பிக்கல் புடுங்கல் இல்லே. ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா.

எப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…” என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது? கல்யாணத்த நா நடத்தி வெக்கறதாவது… என்ன பேசறே நீ..” என்று கடிந்து கொண்டார்.

அடுத்த சில வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே?” என்றார்.

பாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லே பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி முடுச்சுடுவேன்.

ஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, “பாட்டி, நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ.. ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரெட்ட [இரட்டை] வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்’னு கண்டிஷனா சொல்லிப்டா.

பவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே.

தலா ஒரு பவுன்ல இவ ரெண்டு கைக்கு மாத்ரம் வளையல் பண்ணி
வெச்சுருக்கேன்… அதான் என்னால முடிஞ்சது.

நா எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் பெரியவா நீங்கதான்…” என்று முடிப்பதற்குள்…

ஸ்வாமிகள், “ரெட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப் போடணும்கறயா, சொல்லு?” என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.

உடனே மீனாக்ஷி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, “அபசாரம்..அபசாரம் பெரியவா, நா அப்டி சொல்ல வரலே.

ஒங்களை தரிசனம் பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய மனுஷாள்ளாம் வராளே.. அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய பூர்த்தி பண்ணித்தரச் சொல்லக்கூடாதா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது? அப்டியெல்லாம் கேக்கற வழக்கமில்லே.

நீ வேணும்னா ஒன் சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு.. பத்து பவுன் கேக்காத எடமா பார்த்துக்கோ. அதான் நல்லது” என்று சொல்லி எழுந்துவிட்டார் ஸ்வாமிகள்.

உடனே மீனாக்ஷி பாட்டி பதற்றத்தோடு, “பெரியவா அப்டி சொல்லிப்டு
போகக்கூடாதுனு பிரார்த்திக்கிறேன்.

இப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன் தங்கமான குணம், அவாத்துல ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே எட்டெட்டு பவுன்ல ரெட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம்.

அதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரெட்ட வடத்தோட வரணும்னு ஆசைப்படறா.. வேறு ஒண்ணுமில்லே

பெரியவா, நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்” என்று கெஞ்சினாள்.

எழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம்
யோசனையில் ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார், “நா ஒரு கார்யம் சொல்றேன்…. பண்றயா?”

“கண்டிப்பா பண்றேன். என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள், “ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு
காமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, “எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.

இப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ… ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாக்ஷி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரஹித்தார்.

நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாக்ஷி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே. அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாக்ஷி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.

உடனே மஹா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.

அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.




 

 



“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா?” என்று பிரார்த்திதாள் பாட்டி.

ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.

ஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

“சரி பெரியவா. அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார். பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பேத்தியுடன் காமாக்ஷி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி.
வெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.

அன்னை காமாக்ஷி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள். இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர். 

பேத்தியின் நக்ஷத்திரத்துக்கு ஓர் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக்கொண்டாள், பாட்டி.

பிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், “எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி’ யையே பிரார்த்தித்தபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர். 

ஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நமஸ்காரம் பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.

சனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்ட மீனாட்சி பாட்டி, பாரிஜாத புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம் நோக்கி விரைந்தாள். மடத்தில்
ஏகக் கூட்டம். மீனாக்ஷி பாட்டி இருபது முப்பது பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.

பாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம்
சொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.

அவர், “இன்னிக்கு அனுஷ நக்ஷத்ரம். பெரியவாளோட நக்ஷத்ரமாம். அதனால் ஸ்வாமிகள் இன்னிக்கி மௌன விரதம்.

யாரோடயும் பேசமாட்டாராம். முக தரிசனம் மட்டும்தான்” என்று விசாரப்பட்டுக் கொண்டார்.

மீனாக்ஷி பாட்டிக்குக் கவலை தொற்றிக் கொண்டது. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து எட்டு பவுன் ரெட்ட வடச் சங்கிலியைப்பத்தி ஞாபகப்படுத்தலாம்னு நெனச்சுண்டிருந்தேனே, அது இப்ப முடியாது போலருக்கே?” என்று கவலைப்பட்டாள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றி அப்படியே அமர்ந்திருந்தது, அந்த பரப்பிரம்மம். 

”எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி” குறித்துச் சட்டென்று வாய் திறந்து ஸ்வாமிகள் ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி. 

மஹாஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர் சற்றுக் கடுமையாக, பாட்டி, நகருங்கோ… நகருங்கோ... பெரியவா இன்னிக்கு மௌன விரதம் பேசமாட்டார். பின்னாலே எத்தனை பேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” என்று விரட்டினார்.

காமாக்ஷியம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன் நடையைக் கட்டினாள்.


அன்றைக்கும் காமாக்ஷியம்மன் சந்நிதியில் பெரியவா கூறியபடி ‘பஞ்ச
ஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர் இருவரும். 

அடுத்தடுத்து ஞாயிறு, திங்கள் இரு நாட்களும் மஹா ஸ்வாமிகள் மௌன விரதம் மேற்கொண்டார். இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் மட்டும் செய்துவிட்டுத் திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.

பாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள். ”பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே, ஒண்ணுமே நடக்கலியே…

அம்மா காமாக்ஷி கண் திறந்து பார்ப்பாளா, மாட்டாளா?” என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி

செவ்வாய்க்கிழமை விடிந்தது. அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் மிகவும்
கலகலப்பாக இருந்தது. ஆரணியிலிருந்து வந்திருந்த பஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப் பரபாவத்தில் ஆழ்த்திக்கொண்டு இருந்தது.

ஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ்! 
இன்று மௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக்கூட்டம். 


வரிசையில் வந்த நடுத்தர வயது மாமி, முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு முன் வந்து நமஸ்கரித்து எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம்.

தான் கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத் தேங்காய்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, பூசணி, மொந்தன் வாழைக்காய் வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு, மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித்தாள்.

எதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம் விட்ட ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டார்.

பிறகு கண்களை இடுக்கிக்கொண்டு அந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர், நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட ஆம்படையா [மனைவி] அம்புஜம்தானே?

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே.. ஏதோ சொல்லி
துக்கப்பட்டுண்டே.. இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோட
நீ வந்துருக்கறதைப் பாத்தா காமாக்ஷி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது. சரிதானே!” என்று கேட்டார்.

அம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, ”வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமா எங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்த அவலத்தைச் சொல்லி அழுதேன். நீங்கதான் இந்த ஊர் காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி, அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி.. அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.

“சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன். என்ன ஆச்சரியம் பாருங்கோ.. பதினஞ்சு நாளக்கி முன்னாடி, ஜாம்ஷெட்பூர் டாடா
ஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னு வந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார்.

எல்லாம் அந்த காமாக்ஷி கிருபையும், ஒங்க அனுக்கிரஹமும்தான் பெரியவா” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.

உடனே பெரியவா, “பேஷ்..பேஷ்.. ரொம்ப சந்தோஷம். தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா… இவ்வளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே!” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.

அம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே, ”இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா. அதான் அப்டி பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.

ஸ்வாமிகள் மகிழ்வோடு,” சரி…சரி.. ஒம் பொண்ணு, மாப்ளய திருப்பியும் அம்மா காமாக்ஷிதான் சேத்து வெச்சிருக்கா, அதனால் நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி அவளுக்கு அர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு” என்று கட்டளையிட்டார்.

உடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா… இது இந்த சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன். 


பெரியவா….  நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்.

“பேஷா, பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல
சாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்.. ஞாபகம் வெச்சுக்கோ” என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.

அன்று காமாக்ஷியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால் பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக் கட்டினாள் மீனாட்சி பாட்டி. 


கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டு வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம், “அடியே காமாக்ஷி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா பண்ணிடுவோம். நீ என்ன பண்றே.. அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா, அஞ்சு
ஜோடி வாழப்பழம், வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா, பார்ப்போம் என்று காசைக் கொடுத்தாள்.

பாட்டி சொன்னபடியே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

பாட்டி: “அம்மா காமாக்ஷி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா வேற கதி நேக்கு இல்லேடிம்மா. நீதான் எப்டியாவது அந்த எட்டு பவுன் ரெட்ட வட
சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”

பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி 

பின்தொடர இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.

நான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம் 

வந்துகொண்டு இருந்தனர் இருவரும்.

“பாட்டீ…பாட்டீ….பாட்டீ…!” பேத்தியின் உயர்ந்த குரலைக் கேட்டுத்
திரும்பிப் பார்த்த பாட்டி, ஆத்திரத்தோடு,  “ஏன் இப்டி கத்றே? என்ன
பறிபோயிடுத்து நோக்கு? என்று கடுகடுத்தாள்.

“ஒண்ணும் பறிபோகலே பாட்டி, கெடச்சிருக்கு! இப்டி ஓரமா வாயேன் காட்றேன்!” என்று சொல்லி பாட்டியை ஓரமாக அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள். பேத்தி.  அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட பவுன் சங்கிலி!

“ஏதுடி இது?” பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள். 

பேத்தி, “நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா..
அப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல பட்டுது… அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே! இது அறுந்துருக்கே பாட்டி.. பவுனா.. முலாம் பூசினதானு பாரேன்” என்றாள்.

அதைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி, “பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி, காமாக்ஷி, எட்டு.. எட்டரை பவுன் இருக்கும்னு நெனக்கிறேன்.

இது பெரியவா கிருபைல காமாக்ஷியே நமக்கு அனுக்கிரகம் பண்ணியிருக்கா. சரி…சரி….வா, வெளியே போவோம், மொதல்லே” என்று சொல்லியபடி அதைத்தன் புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாக வெளியே வந்துவிட்டாள்.

அன்று பிரதட்சிணத்தில், “பஞ்ச ஸங்க்யோபசார’த்தை [5 முறை வலம் வருவதை] மறந்து விட்டாள். 
மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ காத்திருந்தனர். பேத்தியுடன் வந்த மீனாக்ஷி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.

பாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா என்று குழம்பினாள்.

அதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, “இன்னியோட நோக்கு காமாக்ஷியம்மன் கோயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம் கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்…..  ஆனா ஒம் பேத்தி கைல கெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து! 
அந்த சந்தோஷம்…. நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாக்ஷி பூர்ணமா அனுக்கிரகம் பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே…  என்ன நான் சொல்றது சரிதானே?”என யதார்த்தமாகக் கேட்டார்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால்
ஓடவில்லை. “ஸ்வாமிகள் என்னை தப்பா எடுத்துண்டுடப்டாது.

பேத்தி கைல அது கிடச்ச ஒடனே, அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச் சொல்லியிருக்கானு நெனச்சுண்டுட்டேன்…. அந்த சந்தோஷத்துல இன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்துட்டேன்”

என்று தயங்கித்தயங்கிச் சொன்னாள்.

உடனே பெரியவா, “அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ
எடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட எட போடறத்துக்கோ…. அறுந்தத பத்த வக்கறத்துக்கோ மறக்கலியே நீ?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு, “அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என முத்தாய்ப்பு வைத்தார்.

கிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். “நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி.

ஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், “நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்?”

“அம்பாள் காமாக்ஷிக்கு.”

“நீயே சொல்லு… அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்பிலே முடிஞ்சிக்கலாமா?”

“தப்பு…தப்புதான்! என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்” என்று மிகவும் வருத்தப்பட்ட பாட்டி, அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து, கை நடுங்க ஸ்வாமிகளுக்கு முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.

இப்போது மணி இரண்டு, மீனாக்ஷி பாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச்சொன்னார் ஸ்வாமிகள்.. அப்போது, காலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினி அம்புஜம் அம்மாள், சோகமே உருவாகத் திரும்பி வந்து ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தாள்.

பொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள்,


“அடடா…எதுக்கம்மா கண் கலங்கறே? என்ன நடந்தது?” என வாத்ஸல்யத்துடன் வினவினார்.

உடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே, “வேற ஒண்ணுமில்லே பெரியவா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்க உத்தரவுபடி காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவை பண்றச்சே, ”பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா, எங்கழுத்துல போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்”னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.

தம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடி அந்த ரெட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப் போனேன்.  அந்த 
செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன

எடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன். ஒரு எடத்லயும் கிடைக்கலே… இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா?” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

ஸ்வாமிகள் மீனாக்ஷி பாட்டியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி,
அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி.

பெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரெட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள். மகிழ்ச்சியுடன், “அம்மா அம்புஜம்… நீ தவறவிட்ட ரெட்ட வடம் இதுவா பாரு?” என்று காண்பித்தாள்.

அதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள்.

“இதேதான்….இதேதான்…..பாட்டி.. இது எப்படி இங்கே வந்தது?

ஆச்சரியமா இருக்கே!” என்று வியந்தாள். நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.

மீனாக்ஷிப் பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள் “பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ.

ஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத் தெரிவிச்சுக்கிறேன். 

எட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரெட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும்,

நா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரெட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு
அர்ப்பணிக்கறதா வேண்டிண்டு இருக்கேன்.

இன்னிக்கு சாயந்தரமே ஒங்களையும், பேத்தி காமாக்ஷியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு போய், எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன். அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்” என்று ஆறுதல் அளித்தாள்.

ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து
பார்த்துக்கொண்டு இருந்தார்.

அனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர்.

ஆச்சார்யாள், மீனாக்ஷி பாட்டியைப் பார்த்து, ”இன்னிக்கு நீயும் ஒம்
பேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ” என்று விடை கொடுத்தார்.

மீனாக்ஷி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடைந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. !





 



-o- சுபம் -o- 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOO


என்னை இந்தப் ”பொக்கிஷம்” தொடர்பதிவு வெளியிடுமாறு அழைப்புக்கொடுத்திருந்த  


[1] அன்புச்சகோதரி திருமதி ஏஞ்ஜலின் நிர்மலா [02 02 2013]


வலைத்தளம்: காகிதப்பூக்கள் 





அவர்களுக்கும்

[2] அன்புச்சகோதரி திருமதி ஆசியா ஓமர் அவர்கள். [05.02.2013]

Reference: http://asiya-omar.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81  

வலைத்தளம்: மணித்துளி  





அவர்களுக்கும் 

மீண்டும் என் மனமார்ந்த இனிய நன்றிகளைக் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். வணக்கம்.



அரிய பொக்கிஷங்களைக் கைவசம் வைத்திருந்து,
பதிவிட விருப்பமும் உள்ள தோழர்களும் தோழிகளும் 
 யார் வேண்டுமானாலும் இதே தலைப்பில் தங்களின்
தொடர்பதிவினை வெளியிட்டு அசத்தலாம்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்