என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 23 ஜனவரி, 2013

புத்தாண்டில் சில மகிழ்ச்சிகள் !

அன்புடையீர்!



அனைவருக்கும் வணக்கம். 




என் சென்ற பதிவினில் 

“அடடா ... என்ன அழகு!
‘அடை’யைத் தின்னு பழகு” 




என்ற தலைப்பில் ஓர் சமையல் குறிப்பு கொடுத்திருந்தேன்.




இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html



வெள்ளித்தட்டில் சூடான அடைகளும்

சுவையான வெல்லப்பொடியும் ரெடி.

உருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்!



”சமையல் குறிப்பு” என்ற தலைப்பின் கீழ் நான் எழுதியுள்ள இந்த என் முதல் முயற்சிக்கு பெருந்திரளான வரவேற்பு கிடைத்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பாராட்டி பேசி பின்னூட்டக் கருத்தளித்துள்ளனர். அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

இதுவரை என் பதில்கள் உள்பட பின்னூட்டங்களின் எண்ணிக்கை 257 எனக் காட்டுகிறது. 

1 முதல் 200 வரை உள்ள பின்னூட்டங்களை மட்டுமே சுலபமாக என்னால் என் வலைத்தளத்தில் படிக்க முடிகிறது. 

அதன் பிறகு வந்துள்ள பின்னூட்டங்களை வேறொரு முறையில் போய்த்தான் என்னால் சற்றே கஷ்டப்பட்டு படிக்க முடிகிறது. பதில் அளிக்கவும் முடிகிறது.   

வேறு சில பதிவர்களால், அதுபோலும் படிக்க முடியாமல் உள்ளதாக எனக்குத்தெரிவித்துள்ளனர்.  அதாவது ”பின்னூட்ட எண் 1 முதல் 200 வரை மட்டுமே தெரிகிறது / படிக்க முடிகிறது; கடைசியாக “பூந்தளிர்” என்பவரின் பின்னூட்டத்திற்கு  நீங்கள் பதில் [Comment No. 200] கொடுத்துள்ளீர்கள். அதன்பிறகு 201 முதல் 257 வரை தெரியவே இல்லை” என்று சொல்லியுள்ளனர்..

மேலும் சிலர் உங்கள் பின்னூட்டப்பெட்டியையே காணவில்லை, அதைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை எனச்சொல்லி, மின்னஞ்சல் மூலமாகப் பாராட்டி எழுதியுள்ளனர். 

இந்த என் “சமையல் குறிப்பு” பற்றியே சமீபத்திய வலைச்சரங்களில் மூன்றுமுறை [18.12.2012  + 08.01.2013 + 19.01.2013 ஆகிய தேதிகளில்] பாராட்டிப் பேசப்பட்டுள்ளது. இணைப்புகள் இதோ:

2] http://blogintamil.blogspot.in/2013/01/2516.html
3] http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_19.html

அந்த வாரங்களின் வலைச்சர ஆசிரியர்களாக இருந்த மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நகைச்சுவையான இந்த என் பதிவுக்கு வருகை தந்துள்ள ஒரு சிலரின் நகைச்சுவையான பின்னூட்டங்களும், அவற்றிற்கு நான் எழுதியுள்ள பதில்களும் இந்தப்பதிவினை மேலும் மெருகூட்டி ஜொலிக்கச் செய்துள்ளன.

இந்த என் பதிவு “சமையல் அட்டகாசங்கள்” என்ற வலைத்தளத்தில் சமீபத்தில் நடத்திய ”பேச்சுலர் சமையல் போட்டி” யில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசினை” வென்றுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன், உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.




சிறப்பான முறையில் இந்தப் போட்டியை 
வெற்றிகரமாக நடத்திய பதிவர்: 
திருமதி ஜலீலா கமால் அவர்கள்.



பரிசு முடிவுகள் பற்றிய அறிவிப்புக்கான
அவர்களின் இணைப்பு இதோ 


http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_5444.html




1] Emergency Rechargeable  Light 33 Led PF 733 
இரண்டாவது பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


2] "BEST BREAKFAST RECIPE"
என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 


3] "WELL EXPLAINED RECIPE"
என்ற சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. 




4] CERIFICATE OF PARTICIPATION
என்ற சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. 




5] KITCHEN'S KING 
என்ற சிறப்புச் சான்றிதழும் 
வழங்கப்பட்டுள்ளது. 



To 
Mrs. JALEELA KAMAL Madam 
and 
Her Selection Team Members.




”சமைத்து அசத்தலாம்” என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் பிரபலமான பதிவர் Mrs. ASIYA OMAR  அவர்களும் இந்த என் பதிவினை மிகவும் பாராட்டி, அதே முறையில், தான் தன் வீட்டில் “அடைகள் + குணுக்குகள்” செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்ததாகச் சொல்லி ஓர் தனிப்பதிவே கொடுத்து, கெளரவித்துள்ளார்கள்.

அதன் இணைப்பு இதோ:   
http://asiyaomar.blogspot.in/2013/01/healthy-adai-awads.html


இந்தப்பதிவினில் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ள 
அனைத்து அன்புள்ளங்களுக்கும் 
என் மனமார்ந்த நன்றிகளைத் 
தெரிவித்துக் கொள்கிறேன். 

னைவருக்கும் என் [2013] இனிய 
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.













என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்.

-oOo-


150 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ரிஷபன் January 23, 2013 at 2:38 AM
      CONGRATS SIR :)

      THANKS YOU VERY MUCH, SIR

      FOR YOUR

      FIRST & BEST COMMENT ;)))))

      அன்புடன்

      வீ.......ஜீ

      [VGK]

      நீக்கு
  2. வாழ்த்துக்கள் ஐயா! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. வைகோ சார்,
    உங்கள் சமையல் அட்டகாச வெற்றிக்கு எங்களுடைய (நானும், என் கணவரும்) வாழ்த்துக்கள்.
    அன்று அடை சாப்பிட வைத்தீர்கள்.
    இன்று ஸ்வீட் காரம் காபி கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    அடைக்குப் பிறகு ஏன் ஒன்றுமே எழுதவில்லை.

    உங்கள் பதிவைப் படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

    ஒரு விஷயம்.
    இப்பொழுது எல்லாம் அடை டிபன் என்றால் என் கணவரே சமயலறையில் அடை செய்ய கிளம்பி விடுகிறார்.

    அதற்காக உங்களுக்கு நன்றி.

    வணக்கத்துடன்,
    ராஜி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam January 23, 2013 at 3:02 AM

      வாங்கோ வணக்கம்.

      //வைகோ சார்,
      உங்கள் சமையல் அட்டகாச வெற்றிக்கு எங்களுடைய (நானும், என் கணவரும்) வாழ்த்துக்கள்.//

      உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //அன்று அடை சாப்பிட வைத்தீர்கள்.
      இன்று ஸ்வீட் காரம் காபி கொடுத்து அசத்தி விட்டீர்கள்.//

      ஏதோ மிகவும் சுலபமான விஷயம்.. காசா பணமா செலவு?. அள்ளி விடுவோமே என்று ஒரு ஆசை தான்.

      //அடைக்குப் பிறகு ஏன் ஒன்றுமே எழுதவில்லை.
      உங்கள் பதிவைப் படிக்க ஆவலோடு இருக்கிறேன். //

      நிறையா எழுதணும்ன்னு மனசுலே அடைஅடையா ஆசைகள் உள்ளன. சரளமாக எழுத சரக்குகளுக்கும் என்னிடம் பஞ்சமில்லை தான்.

      ஏதோ Happy Mood இல்லாமல் பல்வேறு சோதனையான சூழ்நிலைகள் உள்ளன. பார்ப்போம். முயற்சிக்கிறேன்.. .

      //ஒரு விஷயம்.இப்பொழுது எல்லாம் அடை டிபன் என்றால் என் கணவரே சமயலறையில் அடை செய்ய கிளம்பி விடுகிறார்.
      அதற்காக உங்களுக்கு நன்றி.//

      அடடா, அவரை நினைத்தால் எனக்குப் பாவமாக உள்ளது.

      உள்ளூர என்னைத்திட்டுவாரோ எனவும் எனக்கு உள்ளூர பயமாகவும் உள்ளது.

      உங்கள் பாடு ஜாலி தான். அவர் செய்யும் அடையை ருசிப்பதோ சரியாக்கும்! ;)))).

      //வணக்கத்துடன் ராஜி.// சந்தோஷம்.

      நீக்கு
  4. பரிசு பெற்றதற்கு அழகாய் பதிவு எழுதி நன்றி தெரிவித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    எங்களுக்கும், இனிப்பு, காரம் எல்லாம் கொடுத்தற்கு மிகவும் நன்றி.
    மேலும் மேலும் இந்த மாதிரி பரிசுகள் வாங்க வேண்டும்.
    நிறைய பயனுள்ள பதிவுகள் எழுதி எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசுJanuary 23, 2013 at 3:40 AM
      பரிசு பெற்றதற்கு அழகாய் பதிவு எழுதி நன்றி தெரிவித்தமைக்கு வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  5. வன்மையாக கண்டிக்கிறேன் ...................
    -------------
    -------------------------
    ---------------------------------
    பின்ன என்ன ஐயா ......
    வாயுறும் படி படமும் போட்டு ...
    ////வெள்ளித்தட்டில் சூடான அடைகளும்

    சுவையான வெல்லப்பொடியும் ரெடி.

    உருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்!////
    என்று சொன்னதும் நான் எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா ....
    நெய் வரவே இல்லை !!!!!!!!!!!

    சரி வீட்டுக்கார அம்மணியிடம் போயி பதிவை காட்டி சுட்டு நானே சாபிட்டுகிறேன் ... ரொம்ப அழகான பதிவு அல்லவே ,படித்ததும் பசிதிடுமே பரவசமா சாபிடுவோமே .....

    ஹ ஹா ஹா ...இப்ப என்ன செய்விங்க .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //riyaz ahamedJanuary 23, 2013 at 3:41 AM
      வன்மையாக கண்டிக்கிறேன் ...................
      -------------
      -------------------------
      ---------------------------------
      பின்ன என்ன ஐயா ......
      வாயுறும் படி படமும் போட்டு ...
      ////வெள்ளித்தட்டில் சூடான அடைகளும்

      சுவையான வெல்லப்பொடியும் ரெடி.

      உருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்!////
      என்று சொன்னதும் நான் எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா ....
      நெய் வரவே இல்லை !!!!!!!!!!!

      சரி வீட்டுக்கார அம்மணியிடம் போயி பதிவை காட்டி சுட்டு நானே சாபிட்டுகிறேன் ... ரொம்ப அழகான பதிவு அல்லவே ,படித்ததும் பசிதிடுமே பரவசமா சாபிடுவோமே .....//

      வாருங்கள் நண்பா! வணக்கம்.

      // ஹ ஹா ஹா ...இப்ப என்ன செய்விங்க .....//

      ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹெள என்று நானும் சொல்வதைத்தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது நண்பா. ஏனெனில் நான் சாதாரணமானவன் மட்டுமே.

      அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, நண்பா.

      நீக்கு
  6. தங்களுக்கு இரண்டாம் பரிசென்பதை தோழி ஜலீலா சொன்னதுமே மற்றற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.இது வரை யாருமே ஒரு சமையல் குறிப்பு எழுதாதாத அளவுக்கு நீளமாகவும்,சுவாரஸ்யம் குறையாமலும்,அனைவரையும் கவரும் படி எழுதி இரண்டாம பரிசு பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.இது போல் இன்னும் பற்பல பரிசுகள் வெல்ல வேண்டும் என்பதே அவா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸாதிகாJanuary 23, 2013 at 4:11 AM
      தங்களுக்கு இரண்டாம் பரிசென்பதை தோழி ஜலீலா சொன்னதுமே மற்றற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.இது வரை யாருமே ஒரு சமையல் குறிப்பு எழுதாதாத அளவுக்கு நீளமாகவும்,சுவாரஸ்யம் குறையாமலும்,அனைவரையும் கவரும் படி எழுதி இரண்டாம பரிசு பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.இது போல் இன்னும் பற்பல பரிசுகள் வெல்ல வேண்டும் என்பதே அவா.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  7. Semma super sir... Kalakureenga and Congrats...
    http://recipe-excavator.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Sangeetha Nambi January 23, 2013 at 4:35 AM
      Semma super sir... Kalakureenga and Congrats...
      http://recipe-excavator.blogspot.com//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. பழனி. கந்தசாமிJanuary 23, 2013 at 4:57 AM
      வாழ்த்துக்கள்.//

      அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.

      நீக்கு
  9. வாழ்த்துக்கள் ஐயா!! ஸ்வீட்,காரம் எல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //S.Menaga January 23, 2013 at 4:58 AM
      வாழ்த்துக்கள் ஐயா!! ஸ்வீட்,காரம் எல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!//

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  10. மட்டற்ற மகிழ்ச்சி. பரிசு கௌரவம் பெற்றது. இவ்வளவு விதரணையாக விரிவாக அடையை அசத்தலாக கொடுத்து, பரிசையும் பெற்ற உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
    மேலும் பழங்கள், இனிப்புகள், காரங்கள் எனக்கொடுத்து
    உபசரித்ததற்கு வந்தனங்கள். அன்புடனும், ஆசிகளுடனும் மாமி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Kamatchi January 23, 2013 at 6:30 AM
      மட்டற்ற மகிழ்ச்சி. பரிசு கௌரவம் பெற்றது. இவ்வளவு விதரணையாக விரிவாக அடையை அசத்தலாக கொடுத்து, பரிசையும் பெற்ற உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
      மேலும் பழங்கள், இனிப்புகள், காரங்கள் எனக்கொடுத்து
      உபசரித்ததற்கு வந்தனங்கள். அன்புடனும், ஆசிகளுடனும் மாமி//

      வாங்கோ மாமி, அநேக நமஸ்காரங்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், ஆசீர்வாதங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மாமி..

      நீக்கு
  11. வாழ்த்துகள். ஆசிகள். தொடரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. KamatchiJanuary 23, 2013 at 6:36 AM
      வாழ்த்துகள். ஆசிகள். தொடரும்.//

      தொடரட்டும். சந்தோஷம்.

      அவைகள் தான், அதாவது தங்களைப்போன்றவர்களின் வாழ்த்துகளும், ஆசிகளும் மட்டுமே எனக்கும் இன்றைய அத்யாவஸ்யத் தேவையாகும்.

      மற்றபடி குறையொன்றும் இல்லை.

      நீக்கு
  12. வாழ்த்துகள் அண்ணா !!!
    எனக்கு பிடித்த நேந்திரங்காய் சிப்சை நான் மட்டும் எடுத்துக்கறேன் .
    நிறைய குறிப்புகளை எங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //angelin January 23, 2013 at 7:26 AM
      வாழ்த்துகள் அண்ணா !!!
      எனக்கு பிடித்த நேந்திரங்காய் சிப்சை நான் மட்டும் எடுத்துக்கறேன் .
      நிறைய குறிப்புகளை எங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் .//

      மிகவும் சந்தோஷம் நிர்மலா.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. உஷா அன்பரசுJanuary 23, 2013 at 8:30 AM
      வாழ்த்துக்கள் சார்.//

      வாங்கோ டீச்சர், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  14. மிக சிறப்பாக அடை செய்து அருமையான பரிசினை தட்டிச் சென்றுள்ளிர்கள்..வாழ்த்துக்கள் அண்ணன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //faiza kader January 23, 2013 at 9:08 AM
      மிக சிறப்பாக அடை செய்து அருமையான பரிசினை தட்டிச் சென்றுள்ளிர்கள்..வாழ்த்துக்கள் அண்ணன்..//

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  15. வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் இதுபோன்ற வெற்றிகள்
    உங்களைத் தேடி வர வேண்டும் !...மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் இதுபோன்ற வெற்றிகள்
    உங்களைத் தேடி வர வேண்டும் !...மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அம்பாளடியாள் January 23, 2013 at 9:52 AM
      வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் இதுபோன்ற வெற்றிகள்
      உங்களைத் தேடி வர வேண்டும் !...மிக்க நன்றி பகிர்வுக்கு .//


      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      இருமுறை நன்றிகள்,

      நீக்கு
  17. வாழ்த்துக்கள் வை.கோ சார்.ஹெல்தி அடை பகிர்வு மிக சுவாரஸ்யம்.வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை என்க்கு முன்பே இருந்தது.அடை செய்து பார்த்த பின்பு கண்டிப்பாக இதற்கு பரிசு உண்டு என்று நினைத்தேன்.அது போலவே இரண்டாம் பரிசினை தட்டி சென்றது மிக சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Asiya Omar January 23, 2013 at 10:14 AM
      வாழ்த்துக்கள் வை.கோ சார்.ஹெல்தி அடை பகிர்வு மிக சுவாரஸ்யம்.வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை என்க்கு முன்பே இருந்தது.அடை செய்து பார்த்த பின்பு கண்டிப்பாக இதற்கு பரிசு உண்டு என்று நினைத்தேன்.அது போலவே இரண்டாம் பரிசினை தட்டி சென்றது மிக சந்தோஷம்.//

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் சந்தோஷம்..

      நீக்கு
  18. கோபு சாருக்கு

    மிக அருமையாக என் லின்குகள் அனைத்தும் கொடுத்து பகிர்ந்து இருக்கீங்க.
    வாழ்த்துக்கள்.

    ஏதோ ஏனோ தானோன்னு படிச்சிட்டு கமெண்ட் போடாமல் வரிக்கு வரி அழகாக ரசித்து படித்து விட்டு, விரிவான பதில் அளிப்பதில் உங்களை மிஞ்ச முடியாது.

    நான் பேச்சுலர் ஈவண்டுக்கு இவ்ளோ குறிப்புகள் வரும் என நினைக்கல,

    எங்க கடையை பற்றியும் இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    உங்கள் அடையை நாங்களும் நீங்க செய்து போஸ்ட் பண்னதுமே செய்து வெல்லத்துடனும், இட்லி மிளகாய் பொடியுடனும் ருசிச்சாச்சு.

    பிறகு போஸ்ட் பண்றேன்.
    ஆர்வமாக கலந்து கொண்ட உங்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal January 23, 2013 at 11:26 AM

      வாங்கோ வணக்கம்.

      //கோபு சாருக்கு

      மிக அருமையாக என் லின்குகள் அனைத்தும் கொடுத்து பகிர்ந்து இருக்கீங்க.வாழ்த்துக்கள்.//

      மிகவும் சந்தோஷம்.

      //ஏதோ ஏனோ தானோன்னு படிச்சிட்டு கமெண்ட் போடாமல் வரிக்கு வரி அழகாக ரசித்து படித்து விட்டு, விரிவான பதில் அளிப்பதில் உங்களை மிஞ்ச முடியாது.//

      ஏதோ என்னால் முடிந்தது அது மட்டுமே, இன்றைய தேதியில். நாளை எப்ப்படியோ????

      //நான் பேச்சுலர் ஈவண்டுக்கு இவ்ளோ குறிப்புகள் வரும் என நினைக்கல,//

      நிறைய பேர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள். மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.

      //எங்க கடையை பற்றியும் இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.//

      அடடா, இது என்ன பெரிய விஷயம். இன்னும் விரிவாகவே நான் சொல்லியிருக்கணும் தான். ஏதோ விட்டுப்போய் விட்டது..

      //உங்கள் அடையை நாங்களும் நீங்க செய்து போஸ்ட் பண்னதுமே செய்து வெல்லத்துடனும், இட்லி மிளகாய் பொடியுடனும் ருசிச்சாச்சு.//

      ஆம் தெரியும். ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

      //பிறகு போஸ்ட் பண்றேன். ஆர்வமாக கலந்து கொண்ட உங்களுக்கு பாராட்டுகள்.//

      இதில் எல்லாப்புகழும் உங்க்ளுக்கே! உங்களுக்கு மட்டுமே!!

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் சந்தோஷம்..

      நீக்கு
  19. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வை.கோ ஸார். மேலும் நிறய்ய பரிசுகள் பெற என் வாழ்த்துக்கள். என் தோழி ஜலீ நடத்தி இந்த முதல் சமையல் போட்டியில் உங்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறதை என்றதும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
    இதேஅடை குறிப்பை என் தோழி ஆசியா அவங்களும் செய்து சாப்பிடாச்சு. அடுத்து நானும் செய்ய போகிறேன். நன்றி எனக்கு பிடித்த எங்க ஊர் சிப்ஸை நானும் கொஞ்சம் எடுத்து கொள்கிறேன்.
    நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Vijiskitchencreations January 23, 2013 at 1:46 PM
      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வை.கோ ஸார். மேலும் நிறய்ய பரிசுகள் பெற என் வாழ்த்துக்கள்.

      என் தோழி ஜலீ நடத்தி இந்த முதல் சமையல் போட்டியில் உங்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறதை என்றதும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

      இதேஅடை குறிப்பை என் தோழி ஆசியா அவங்களும் செய்து சாப்பிடாச்சு.

      அடுத்து நானும் செய்ய போகிறேன். நன்றி

      எனக்கு பிடித்த எங்க ஊர் சிப்ஸை நானும் கொஞ்சம் எடுத்து கொள்கிறேன்.

      நன்றி நன்றி.//

      வாங்கோ ...... வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் சந்தோஷம்..

      நீக்கு
  20. திரு VGK அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் விருது பெற்ற விவரம் தெரிந்தவுடன் திருமதி ஜலீலாகமால் அவர்களின் பதிவில் நான் இட்ட கருத்துரை.(January,19,2013) இது.

    //”சமையல் அட்டகாசங்கள் ஜலீலாகமால்” அவர்களின் KITCHEN’S QUEEN – விருதினைப் பெறும் பேச்சுலர் சமையல் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தினைப் பெற்றவர் எங்கள் ஊர்க்காரர் (திருச்சி) திரு VGK (VAI GOPU) அவர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கிய ஜலீலாகமால் அவர்களுக்கு நன்றி!”//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தி.தமிழ் இளங்கோ January 23, 2013 at 4:42 PM
      திரு VGK அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் விருது பெற்ற விவரம் தெரிந்தவுடன் திருமதி ஜலீலாகமால் அவர்களின் பதிவில் நான் இட்ட கருத்துரை.(January,19,2013) இது.

      //”சமையல் அட்டகாசங்கள் ஜலீலாகமால்” அவர்களின் KITCHEN’S QUEEN – விருதினைப் பெறும் பேச்சுலர் சமையல் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தினைப் பெற்றவர் எங்கள் ஊர்க்காரர் (திருச்சி) திரு VGK (VAI GOPU) அவர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கிய ஜலீலாகமால் அவர்களுக்கு நன்றி!”//

      அன்புள்ள் ஐயா, வாருங்கள். வணக்கம்.

      தங்களின் அனபான சிறப்பான மேற்படி கருத்துரையை அந்த வலைத்தளத்தில் அன்றைக்கே பார்த்து விட்டேன், ஐயா. மிக்க மகிழ்ச்சி + நன்றி ஐயா.

      நீக்கு
  21. வை.கோ. சார்... நான் தங்களுக்கு ஏற்கனவே மின்மடல் மூலம் உடனடியாக வாழ்த்துமடல் அனுப்பியிருந்தேன். இருந்தாலும் சபையில் தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் அடைக்கு பிறகு தங்கள் பதிவு ஏதும் வரவில்லையே...? ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்... தொடர்க... தொடர்ந்து வெல்க....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Advocate P.R.Jayarajan January 23, 2013 at 8:45 PM
      வை.கோ. சார்... நான் தங்களுக்கு ஏற்கனவே மின்மடல் மூலம் உடனடியாக வாழ்த்துமடல் அனுப்பியிருந்தேன். இருந்தாலும் சபையில் தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் அடைக்கு பிறகு தங்கள் பதிவு ஏதும் வரவில்லையே...? ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்... தொடர்க... தொடர்ந்து வெல்க....!//

      வாருங்கள் சார், வணக்கம். தங்களின் உடனடியான மின்மடலும் பார்த்தேன் சார். அங்கும் இங்கும் தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, சார். ப்திவுகள் தொடர்ந்து நான் கொடுக்க ஆவலுடன் எதிர்பார்ப்பத்ற்கும் ச்ந்தோஷம் சார். முயற்சிக்கிறேன், சார்.

      நீக்கு
  22. திரு VGK அவர்களுக்கு வணக்கம்! அடை பற்றிய தங்களது பதிவில் நான் மூன்றாவது தடவையாக எழுதிய கருத்துரை ஏனோ பதிவாகவில்லை! அந்த கருத்துரை.. (ஹாரம் இணைய இதழில் வந்ததின் நகல்) இதோ>

    // ”சமையல் அட்டகாசங்கள் ஜலீலாகமால்” அவர்களின் KITCHE...
    Commenter: :தி.தமிழ் இளங்கோ Blog :VAI. GOPALAKRISHNAN Article : *அடடா என்ன அழகு ! ................ ’அடை’யைத் தின்னு பழகு!!* Commented Date: 18-01-2013 01:21:07
    ”சமையல் அட்டகாசங்கள் ஜலீலாகமால்” அவர்களின் KITCHEN’S QUEEN – ( http://samaiyalattakaasam.blogspot.com ) விருதுகளில் இரண்டாம் இடத்தினைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் QUEEN அல்ல KING! //

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தி.தமிழ் இளங்கோ January 23, 2013 at 9:00 PM
      திரு VGK அவர்களுக்கு வணக்கம்! அடை பற்றிய தங்களது பதிவில் நான் மூன்றாவது தடவையாக எழுதிய கருத்துரை ஏனோ பதிவாகவில்லை! அந்த கருத்துரை.. (ஹாரம் இணைய இதழில் வந்ததின் நகல்) இதோ> .............. ................. //

      அன்புள்ள ஐயா, வணக்கம்.

      த்கவலுக்கு நன்றிக்ள். வரும் பின்னூட்டங்கள் + நமது பதில்கள் எல்லாம் சேர்த்து 200 ஐத்தாண்டுமானால் அதில் FURTHER ஆக LOAD ஆகாமல் சண்டித்தனம் செய்கிறது.

      கஷ்டப்பட்டு வேறொரு மாற்று வழியில் போய் அவற்றைத் தேடிப்பித்து, படித்து பதில் அளிக்க வேண்டியுள்ளது.

      பல்ருடைய பின்னூட்டங்கள் இதுபோல எங்கோ காணாமல் போய் உள்ளன என்னும் விஷயமும் மெயில் மூலம் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.. அதை எப்படிச்சரி செய்வது என்பதும் எனக்குக் கடைசிவரை தெரியவில்லை.

      அதற்காகவுமே கூட இந்தப் பதிவினை நான் வெளியிட்டுள்ளேன் எனச் சொல்லவேண்டும். இதிலும் அதே சிக்கல் வராமல் இருக்க வேண்டியே நான் உடனுக்குடன் பதில் தராமல் தவிர்த்து வந்தேன்.

      மீண்டும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  23. பதில்கள்
    1. //”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி January 23, 2013 at 10:31 PM
      Congaratulations. Eppa adai saapida varalaam?
      வாழ்த்துகள். எப்போ அடை சாப்பிட வரலாம்? //

      எப்போது வேண்டுமானாலும் வாங்கோ. ஆனால் மறக்காமல் “நம்மாளு” வையும், குறிப்பாக “ஸ்நேகா” வையும் கூட்டி வாங்கோ. “நம்மாளு” வை விட “ஸ்நேகா” எனக்கு ரொம்ப்வும் பிடிச்சுப்போச்சு.

      அது பாம்பாவே இருப்பினும் கூட பயமெல்லாம் போய் ஒரு ஸ்நேகபாவம் ஏற்பட்டுப்போச்சு. தொட்டுத்தடவி கொஞ்சனும் போல ஒரு பேரெழுச்சி ஏற்பட்டுள்ளது.

      எனக்கு மிகவும் பிடித்த நல்லதொரு பெயராகவே வைத்துள்ளீர்கள். ;)))))

      நீக்கு
    2. அப்புறம் அந்த வெண்புறா “நிர்மலா” [இருமலா ... நிர்ம்லா] கதையைப் பாதியில் நிறுத்தி சஸ்பென்ஸ் கொடுத்துட்டீங்களே!

      அதை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்குது ஸ்வாமீஈஈஈஈஈ.

      முடிந்தால் “நம்மாளு” + “ஸ்நேகா” உடன் “நிர்மலா” வையும் கூட்டிட்டு வாங்கோ. நாம் ஐவருமாக அடை சாப்பிடுவோம்.;)))))

      நீக்கு
  24. புத்தாண்டில் இது போன்ற மகிழ்ச்சிகள் ஆயிரமாகப் பெருகட்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மனோ சாமிநாதன் January 23, 2013 at 10:38 PM
      புத்தாண்டில் இது போன்ற மகிழ்ச்சிகள் ஆயிரமாகப் பெருகட்டும்!!//

      வாங்கோ மேடம். வணக்கம். ஆயிரம் நன்றிகள். !!!! ;)))))

      நீக்கு
  25. வாழ்த்துகள் வை.கோ ஐயா. இன்னும் நிறையப் பரிசுகளை நீங்கள் வெல்லணும்.

    ஸ்வீட் காரம் கொடுத்து அசத்திட்டீங்க :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அமைதிச்சாரல் January 23, 2013 at 11:53 PM
      வாழ்த்துகள் வை.கோ ஐயா. இன்னும் நிறையப் பரிசுகளை நீங்கள் வெல்லணும்.

      ஸ்வீட் காரம் கொடுத்து அசத்திட்டீங்க :-))//

      வாங்கோ மேடம். வணக்கம்.

      என் அன்புக்குரிய தங்களுடன் சேர்ந்து நானும் ஓர் பரிசு பெற்றதில் எனக்குமோர் தனி மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் சந்தோஷம், மேடம்..

      நீக்கு
  26. வாழ்த்துக்கள் ஐயா...

    மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சே. குமார் January 24, 2013 at 12:06 AM
      வாழ்த்துக்கள் ஐயா...

      மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையட்டும்.//

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  27. மகிழ்ச்சி ஐயா! மேலும் மேலும் இன்னும் பல வாய்ப்புகள் கிட்டிட வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இளமதி January 24, 2013 at 12:35 AM
      மகிழ்ச்சி ஐயா! மேலும் மேலும் இன்னும் பல வாய்ப்புகள் கிட்டிட வாழ்த்துக்கள்!//

      மிகவும் சந்தோஷம், என் பிரியத்திற்குரிய கவிதாயினி இளமதி அவர்களே. நன்றி.

      [ கிட்டிட ;)))))))))))))) மிகவும் அழகான சொல்]

      நீக்கு
  28. கிச்சன் கிங் கோபு சாருக்கு வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம்.

    அடை, இட்லி, தோசை எல்லாம் நம்ப பாரம்பரிய பலகாரங்கள்.

    இருந்தாலும் அடை செய்யும் முறையை இதைவிட அருமையாக யாருமே சொல்லி இருக்க முடியாது.

    தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் ஆண்களுக்கும், பேச்சிலர்களுக்கும் ஸ்பெஷலாக சில விஷயங்களை ‘அடடா என்ன அழகு, அடையைத் தின்னு பழகு’ பதிவில் சொல்லி இருக்கிறீர்கள்.

    ஜலீலா சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் உங்கள் பதிவினை பரிசிற்குகந்ததாக.

    மேன் மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //JAYANTHI RAMANI January 24, 2013 at 1:01 AM
      கிச்சன் கிங் கோபு சாருக்கு வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம்.//

      வாங்கோ, இப்போதெல்லாம் உங்களைக்காண்பது அரிதாகி விட்டது, எனக்கு.

      அவ்வளவு பிஸி எனத் தெரிகிறது. இருக்கட்டும். இருக்கட்டும்.

      பேத்தி ‘லயா’ குட்டியின் கையில் குச்சியைக்கொடுத்து, பாட்டியை அடிக்கச்சொல்லலாம் என்று நினைத்துள்ளேன்.;)))))

      அத்திப்பூத்தாற்போல இங்கு கண்டதில் மகிழ்ச்சி.;))))

      >>>>> தொடரும் >>>>>

      நீக்கு
    2. கோபு >>>> திருமதி. ஜெயந்தி [2]

      //அடை, இட்லி, தோசை எல்லாம் நம்ப பாரம்பரிய பலகாரங்கள்.

      இருந்தாலும் அடை செய்யும் முறையை இதைவிட அருமையாக யாருமே சொல்லி இருக்க முடியாது.//

      இதைத்தங்கள் வாயால் கேட்பதில் எனக்கோர் தனி ஆனந்தம், என் அடைக்கு. ஆஸ்கார் அவார்ட்டே கிடைத்தது போல.! ;)

      >>>>>>>

      நீக்கு
    3. கோபு >>>> திருமதி ஜெயந்தி [3]

      //தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் ஆண்களுக்கும், பேச்சிலர்களுக்கும் ஸ்பெஷலாக சில விஷயங்களை
      ‘அடடா என்ன அழகு, அடையைத் தின்னு பழகு’
      பதிவில் சொல்லி இருக்கிறீர்கள்.

      ஜலீலா சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் உங்கள் பதிவினை பரிசிற்குகந்ததாக. //

      அடடா ... என்ன அழகு ! இந்தத்தங்களின் பின்னூட்டமும்!!

      //மேன் மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் சந்தோஷம். ;)))))

      நீக்கு
    4. வாங்கோ, இப்போதெல்லாம் உங்களைக்காண்பது அரிதாகி விட்டது, எனக்கு.
      அவ்வளவு பிஸி எனத் தெரிகிறது. இருக்கட்டும். இருக்கட்டும். //

      புரிதலுக்கு மிக்க நன்றி. தினமும் ஒரு எட்டு உங்கள் தளத்துக்கு வந்து விடவேண்டும் என்றுதான் நினைப்பேன். குடும்பபாரம், உத்தியோக பாரம் எல்லாம் சேர்ந்து அழுத்தும் அழுத்தலில் மூச்சுதான் திணறுகிறது. இதற்கு நடுவில் இந்த லயாக்குட்டி வேற பொக்கை வாய் சிரிப்பால் கட்டிப் போட்டுவிடுகிறாள், கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும்.

      பேத்தி ‘லயா’ குட்டியின் கையில் குச்சியைக்கொடுத்து, பாட்டியை அடிக்கச்சொல்லலாம் என்று நினைத்துள்ளேன்.;)))))

      இன்னும் குச்சி பிடிக்கத் தெரியவில்லை. காலால்தான் உதைக்கிறாள். நானும், “பிஞ்சுக் கால்கள் நெஞ்சில் பட்டால் பனி விழுந்தது போலே” என்று பாடிக்கொண்டிருக்கேன்.

      இதைத்தங்கள் வாயால் கேட்பதில் எனக்கோர் தனி ஆனந்தம், என் அடைக்கு. ஆஸ்கார் அவார்ட்டே கிடைத்தது போல.! ;)//

      ஆஹா. உங்களுக்குத்தான் ஏகப்பட்ட விருதுகள் கிடைத்திருக்கே. எப்படி கொடுப்பதென்று எனக்கு தெரியவில்லை. தெரிந்து கொண்டு நானும் ஒரு விருது கொடுக்கிறேன்.

      நன்றிக்கு நன்றி

      நீக்கு
    5. JAYANTHI RAMANIFebruary 3, 2013 at 9:57 PM
      *****வாங்கோ, இப்போதெல்லாம் உங்களைக்காண்பது அரிதாகி விட்டது, எனக்கு. அவ்வளவு பிஸி எனத் தெரிகிறது. இருக்கட்டும். இருக்கட்டும். //*****

      //புரிதலுக்கு மிக்க நன்றி. தினமும் ஒரு எட்டு உங்கள் தளத்துக்கு வந்து விடவேண்டும் என்றுதான் நினைப்பேன். குடும்பபாரம், உத்தியோக பாரம் எல்லாம் சேர்ந்து அழுத்தும் அழுத்தலில் மூச்சுதான் திணறுகிறது. இதற்கு நடுவில் இந்த லயாக்குட்டி வேற பொக்கை வாய் சிரிப்பால் கட்டிப் போட்டுவிடுகிறாள், கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும்.//

      எல்லாமே புரிகிறது. நான் 26.01.2013 அன்று ஒருவரின் 800 ஆவது பதிவுக்கு வரச்சொல்லி சொல்லியிருந்தேன். அதற்கு நீங்கள் வராமல் இருந்தது தான் எனக்குக் கொஞ்சம் லேஸாக வருத்தமாக இருந்தது. அதானால் அப்படி எழுதிவிட்டேன்.

      இன்று என்னுடைய எல்லாக்குறையையும் தீர்த்து வைத்து விட்டீர்கள். உங்களின் இனிமையான குரலையும் கேட்கும் பாக்யம் கிடைத்ததில் மகிழ்ச்சியே.

      லயாக்குட்டிக்கு என் அன்பான வாழ்த்துகள். ஆசிகள்.

      ‘லயா’ என்ற பெயரே ஜோராக ஒருவித ஸ்ருதி லயத்துடன் உள்ளது.

      >>>>>

      நீக்கு
    6. கோபு >>>>> திருமதி. ஜெயந்தி [2]

      இன்னொரு விஷயம் கவனித்தீர்களா?

      1999 இல் பிறந்த என் அருமைப்பேத்தி பெயரையும், 2012 இல் பிறக்க உள்ள தங்களின் அருமைப்பேத்தி பெயரையும் சேர்த்தே என் சொந்த கிருஹதிற்கு [ In anticipation ] முன்கூட்டியே நான் திட்டமிட்டு 2001 இல் வைத்துள்ளேன்.

      என் பேத்தி பெயர்: பவித்ரா +
      உங்கள் பேத்தி பெயர்: லயா
      நம் வீட்டின் பெயர்: ”பவித்ராலயா” [பவித்ரா + லயா]

      என்னப்பொருத்தம் பாருங்கோ!

      “என்னப்பொருத்தம் .... நமக்குள் ..... இந்தப்பொருத்தம்”
      என்ற சினிமாப்பாட்டு போல உள்ளது. ;)))))

      நீக்கு
    7. கோபு >>>>> திருமதி. ஜெயந்தி [3]

      ***பேத்தி ‘லயா’ குட்டியின் கையில் குச்சியைக்கொடுத்து, பாட்டியை அடிக்கச்சொல்லலாம் என்று நினைத்துள்ளேன்.;)))))***

      //இன்னும் குச்சி பிடிக்கத் தெரியவில்லை. காலால்தான் உதைக்கிறாள். நானும், “பிஞ்சுக் கால்கள் நெஞ்சில் பட்டால் பனி விழுந்தது போலே” என்று பாடிக்கொண்டிருக்கேன்.//

      மிகவும் இனிமையான சந்தோஷமான தருணங்கள். ENJOY ! ;)

      ***இதைத்தங்கள் வாயால் கேட்பதில் எனக்கோர் தனி ஆனந்தம், என் அடைக்கு. ஆஸ்கார் அவார்ட்டே கிடைத்தது போல.! ;)//***

      //ஆஹா. உங்களுக்குத்தான் ஏகப்பட்ட விருதுகள் கிடைத்திருக்கே. எப்படி கொடுப்பதென்று எனக்கு தெரியவில்லை. தெரிந்து கொண்டு நானும் ஒரு விருது கொடுக்கிறேன்.//

      அச்சச்சோ ! விருதா வேண்டாம் ... வேண்டவே வேண்டாம்.

      நான் சென்னைக்கோ அல்லது நீங்கள் திருச்சிக்கோ வரும்போது விருதுக்கு பதில் விருந்தே சாப்பிடுவோம். நன்றியுடன் கோபு.

      நீக்கு
  29. பரிசுகள் பெற்ற மகிழ்ச்சியை எங்க எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி சார். அடை வார்த்தாலே உங்க அடடா என்ன அழகு அடையை தின்னு பழகு பாட்டும் நினைவுக்கு வருகிறது சார். பரிசுகளும் பாராட்டுகளும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி January 24, 2013 at 5:05 AM
      //பரிசுகள் பெற்ற மகிழ்ச்சியை எங்க எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி சார்.//

      வாங்கோ மேடம்.... மிக்க மகிழ்ச்சி.

      //அடை வார்த்தாலே உங்க ”அடடா என்ன அழகு அடையை தின்னு பழகு” பாட்டும் நினைவுக்கு வருகிறது சார். //

      ஆம். என் வாயும் இப்போதெல்லாம் அடிக்கடி அதையே முணுமுணுத்து வருகிறது, அடையை நினைக்காமலே ! ;)

      உங்களைப்போன்ற பலரும் இன்று சினிமா பாடல் ரஸிகர்களாகவே இருப்பதால், நான் கஷ்டப்பட்டு அந்தப்பாடலை இந்தப்பதிவுக்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்தேன்.

      தாங்களும் அதையே இங்கு ரஸித்துச்சொல்லியுள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. சந்தோஷம். ;)

      //பரிசுகளும் பாராட்டுகளும் தொடரட்டும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் சந்தோஷம். ;)))))

      நீக்கு
  30. பதில்கள்
    1. //ராமலக்ஷ்மி January 24, 2013 at 7:24 AM
      மகிழ்ச்சி. வாழ்த்துகள்!//

      வாங்கோ மேடம். மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றிகள்.

      நீக்கு
  31. வாழ்த்துக்கள் ஐயா! தொடருங்கள் உங்கள் வலைச்சரப்பணியை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Seshadri e.s. January 24, 2013 at 7:42 AM
      வாழ்த்துக்கள் ஐயா! தொடருங்கள் உங்கள் வலைச்சரப்பணியை! நன்றி!//

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சார்.

      வலைச்சரப்பணியா?

      மெதுவாகச்சொல்லுங்கோ. அப்புறம் நம் அன்பின் சீனா ஐயா காதில் விழுந்திடப்போகுது. மீண்டும் எனக்குத் தலைவலி ஆரம்பித்து விடும்.

      இப்போத்தான் நம்ம உஷா டீச்சர் வகுப்புகள் முடிந்து போனதும், லீவ் விட்டது போல கொஞ்சம் ஜாலியா இருக்கேன். ;)))))

      நீக்கு
  32. ”பேச்சுலர் சமையல் போட்டி” யில் கலந்துகொண்டு ”இரண்டாம் பரிசினை” வென்றுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன், உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன் //

    மிக்க மகிழ்ச்சி ..

    சமையலறை சாம்ராஜ்ஜிய சக்ரவர்த்தியான தாங்கள் பரிசு வென்றதற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரிJanuary 24, 2013 at 8:37 AM

      வாங்கோ, வருக! வருக!! வருக!!! அன்பான வணக்கங்கள்..

      ***”பேச்சுலர் சமையல் போட்டி” யில் கலந்துகொண்டு ”இரண்டாம் பரிசினை” வென்றுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன், உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்***

      //மிக்க மகிழ்ச்சி ..

      சமையலறை சாம்ராஜ்ஜிய சக்ரவர்த்தியான தாங்கள் பரிசு வென்றதற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...பாராட்டுக்கள்..//

      நீண்ட நாட்களுக்குப்பின், என் பதிவு ஒன்றுக்குத் தங்களிடமிருந்து ஓர் அழகான பின்னூட்டம் கிடைத்துள்ளது, என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

      இந்தத்தங்களின் மகிழ்ச்சியுடன் கூடிய மனம் நிறைந்த நல்வாழ்த்துகளும், பாராட்டுக்களுமே எனக்குக்கிடைத்த மிகப்பெரியதோர் பரிசாக நான் நினைத்து மகிழ்கிறேன்.

      தங்களின் அபூர்வமான வருகைக்கு என் நன்றியோ நன்றிகள். ;)))))

      நீக்கு
  33. Hello Sir. Hope you are doing great.
    You are invited to be a part of an upcoming blog event.
    Plz visit the link - http://andmylifegoeson.blogspot.in/2013/01/whats-your-story-you-are-invited.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manju Modiyani January 24, 2013 at 9:56 AM
      //Hello Sir. Hope you are doing great.//

      Welcome Miss. Manju Modiyani. Yes I am doing well here. How you are?

      //You are invited to be a part of an upcoming blog event.
      Plz visit the link - http://andmylifegoeson.blogspot.in/2013/01/whats-your-story-you-are-invited.html//

      Thanks for your kind & special invitation to me here.

      Yes, I shall try to participate. Thanks a Lot.

      VGK

      நீக்கு
  34. Posts in English, Sir...So that all the people could read your story. Glad to know you're participating. Thanks a lot.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Manju Modiyani January 24, 2013 at 10:50 AM
      Posts in English, Sir...So that all the people could read your story. Glad to know you're participating. Thanks a lot.//

      OK Noted this point Manju. Thanks.

      நீக்கு
  35. it would also do if u give a same story in english as well as tamil..that wud do just fine..i will post them both :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Manju Modiyani January 24, 2013 at 10:56 AM
      it would also do if u give a same story in english as well as tamil..that wud do just fine..i will post them both :)//

      Welcome Again !.

      OK Manju ..... Thanks a Lot for your keen interest shown on me.

      I am ON THE JOB now. Please Don't worry. My article/articles will reach you on or before the Last Date 31.01.2013. ;)

      நீக்கு
  36. பதில்கள்
    1. //வெங்கட் நாகராஜ் January 24, 2013 at 7:34 PM
      வாழ்த்துகள்....//

      தங்களின் வருகை + வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, வெங்கட்ஜி. ;)

      நீக்கு
  37. தங்களுக்கு பரிசு கிடைத்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி சார். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMVIJanuary 24, 2013 at 8:18 PM
      தங்களுக்கு பரிசு கிடைத்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி சார். வாழ்த்துக்கள்.//

      வாங்கோ, வணக்கம். .

      தங்களின் வருகை + வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. சந்தோஷம். ;)

      நீக்கு
  38. நளபாகம் ,பீமபாகம் என்றெல்லாம் பாராட்டுப் பெறும் பாகங்களெல்லாம் ருசியான காவியச்சுவைகள்..

    அடை பாகம் அருமையாய் அடை மழையாய் விருதுகளையும் பாராட்டுக்களையும் அள்ளிவந்து பொழிந்திருக்கிறது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி January 24, 2013 at 10:02 PM

      //நளபாகம் ,பீமபாகம் என்றெல்லாம் பாராட்டுப் பெறும் பாகங்களெல்லாம் ருசியான காவியச்சுவைகள்..

      அடை பாகம் அருமையாய் அடை மழையாய் விருதுகளையும் பாராட்டுக்களையும் அள்ளிவந்து பொழிந்திருக்கிறது ..//

      அ ட டா எ ன் ன அ ழ கு !

      தங்களின் இந்தப்பின்னூட்ட மழையும் !! மகிழ்ச்சி + நன்றி ;)

      நீக்கு
  39. Aha samayal kruppaikooda evvaluu algaga elethamudyuma........
    age, ungal adaikku evvallu rasikarkal errukkanga....
    enni Trichi vanthal adai sapidamal pogakoodadhu
    Congragulations Sir,
    Really i felt happy on seeing your prizes and awards.
    Dont stop writing.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji January 25, 2013 at 12:37 AM

      //Aha samayal kruppaikooda evvaluu algaga elethamudyuma........
      ungal adaikku evvallu rasikarkal errukkanga....
      enni Trichi vanthal adai sapidamal pogakoodadhu

      //ஆஹா சமையல் குறிப்பைக்கூட இவ்வளவு அழகா எழுதமுடியுமா.....!!!!!//

      ஏதோ என்னால் முடிந்தது. எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே.

      //உங்கள் அடைக்குத்தான் எண்ணிலடங்காமல் எவ்வளவு ரஸிகர்கள் இருக்காங்கோ !!!!!//

      உங்களைப் போன்றவர்கள் + உங்களின் தோழியைப் போன்றவர்கள் தரும் ஊக்கமும் உற்சாமுமே மேலும் மேலும் என்னை எழுத வைக்கக்கூடும்.

      //திருச்சிக்கு வந்தால் உங்காத்தில் அடை சாப்பிடாமல் போகக்கூடாதுன்னு முடிவே செய்துட்டேன்.//

      கண்டிப்பாக வாங்கோ !

      ‘அ’ வில் ஆரம்பிக்கும் அடை மட்டுமல்ல ’அல்வா’ போன்ற உங்களுக்குப் பிடித்தமான அனைத்தையும் கேட்டுக்கேட்டுத் தந்து அன்புடன் மிகச்சிறப்பாக உபசரித்துத்தான் அனுப்புவோமாக்கும்..

      //Congragulations Sir,
      Really i felt happy on seeing your prizes and awards.
      Dont stop writing.

      வாழ்த்துகள் சார்.

      உங்களுக்குக்கிடைத்த விருதுகளையும் பரிசையும் பார்த்து நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ந்து போனேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் சந்தோஷம். ;)))))

      //எழுதுவதை நிறுத்தாதீங்கோ//

      அது தான் நிறுத்தாமல் உங்களுக்காகவே விரிவான பதில்களாக எழுதிக்கொண்டே இருக்கிறேனே !!!!!!! ;)))))))

      நீக்கு
  40. வணக்கம் சார்

    இந்த ஆண்டின் முதல் பதிவே பரிசு பெற்றதற்கான பதிவு,இன்னும் உங்களுக்கு பல பரிசுகள் காத்திருக்கு என்பதை உணர்த்தும் சகுனம்.இந்த பதிவிற்கான மெயில் வந்து சில நாள் ஆகியும் படிக்க நேரமின்மையால் இன்று காலையிலிருந்து எப்படியாவது படித்து கமென்ட் கொடுக்கணும்னு தீவிர முயற்சியில் கடந்த 3 மணி நேரத்திற்கு முன் பதிவை கிளிக்கினேன்,தொடர்ந்து படிக்க முடியவில்லை.இடையிடையே அவ்ளோ பிசி ..முழுவதும் படித்து இப்பதான்,பின்னுட்டத்திற்கு வந்துள்ளேன்.எனக்கு முன் வந்துள்ள கமேன்ட்ஸ்களை படிக்க கூட இல்லை.

    //மேலும் சிலர் உங்கள் பின்னூட்டப்பெட்டியையே காணவில்லை, அதைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை எனச்சொல்லி, மின்னஞ்சல் மூலமாகப் பாராட்டி எழுதியுள்ளனர். //

    ஒவ்வொரு பின்னுட்டத்திற்கும் பதிலே ஒரு பதிவு போல எழுதியதன் விளைவோ என்னவோ !!!!!!!!!!!!!!!!!!

    பதிவில் வைத்துள்ள விருந்து எல்லாமே எனக்குத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridharJanuary 25, 2013 at 6:41 AM

      //வணக்கம் சார்//

      வாங்கோ, வணக்கம்.

      //இந்த ஆண்டின் முதல் பதிவே பரிசு பெற்றதற்கான பதிவு, இன்னும் உங்களுக்கு பல பரிசுகள் காத்திருக்கு என்பதை உணர்த்தும் சகுனம்.//

      அடடா, அப்படியா! சரிங்க.... நன்றீங்க!!

      //இந்த பதிவிற்கான மெயில் வந்து சில நாள் ஆகியும் படிக்க நேரமின்மையால் இன்று காலையிலிருந்து எப்படியாவது படித்து கமென்ட் கொடுக்கணும்னு தீவிர முயற்சியில் கடந்த 3 மணி நேரத்திற்கு முன் பதிவை கிளிக்கினேன்,//

      அடடா, ஏன் இப்படி சிரமப்படுறீங்கோ? உங்கள் சூழ்நிலை எனக்குத்தெரியாதா? தகவல் மெயில் வந்தாலும் தான் என்ன? எனக்கு தினமும் எவ்வளவோ தகவல் மெயில்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

      எல்லாவற்றையும் உடனுக்குடன் எப்படிப்போய் நாம் பார்க்க முடியும்? படிக்க முடியும்? பின்னூட்டம் இட்முடியும்?

      இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லீங்கோ.

      //தொடர்ந்து படிக்க முடியவில்லை.இடையிடையே அவ்ளோ பிசி .... முழுவதும் படித்து இப்பதான்,பின்னுட்டத்திற்கு வந்துள்ளேன்.//

      எல்லாமே புரிகிறது, பிசியோ பிசியாகத்தான் இருப்பீங்கோ. சும்மாவா !!!!!

      //எனக்கு முன் வந்துள்ள கமேன்ட்ஸ்களை படிக்க கூட இல்லை.//

      நிச்சயமாகப் படித்திருக்க மாட்டீங்கோ. யார் யார் வந்துள்ளார்கள் என பார்த்துக்கூட இருக்க மாட்டீங்கோ. அப்படியே நம்புகிறேனுங்கோ. ;)

      >>>>>

      நீக்கு
  41. வணக்கம் சார்

    இந்த ஆண்டின் முதல் பதிவே பரிசு பெற்றதற்கான பதிவு,இன்னும் உங்களுக்கு பல பரிசுகள் காத்திருக்கு என்பதை உணர்த்தும் சகுனம்.இந்த பதிவிற்கான மெயில் வந்து 2 நாள் ஆகியும் படிக்க நேரமின்மையால் இன்று காலையிலிருந்து எப்படியாவது படித்து கமென்ட் கொடுக்கணும்னு தீவிர முயற்சியில் கடந்த 3 மணி நேரத்திற்கு முன் பதிவை கிளிக்கினேன்,தொடர்ந்து படிக்க முடியவில்லை.இடையிடையே அவ்ளோ பிசி ..முழுவதும் படித்து இப்பதான்,பின்னுட்டத்திற்கு வந்துள்ளேன்.எனக்கு முன் வந்துள்ள கமேன்ட்ஸ்களை படிக்க கூட இல்லை.

    //மேலும் சிலர் உங்கள் பின்னூட்டப்பெட்டியையே காணவில்லை, அதைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை எனச்சொல்லி, மின்னஞ்சல் மூலமாகப் பாராட்டி எழுதியுள்ளனர். //

    ஒவ்வொரு பின்னுட்டத்திற்கும் பதிலே ஒரு பதிவு போல எழுதியதன் விளைவோ என்னவோ !!!!!!!!!!!!!!!!!!

    பதிவில் வைத்துள்ள விருந்து எல்லாமே எனக்குத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ***மேலும் சிலர் உங்கள் பின்னூட்டப்பெட்டியையே காணவில்லை, அதைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை எனச்சொல்லி, மின்னஞ்சல் மூலமாகப் பாராட்டி எழுதியுள்ளனர்.***

      //ஒவ்வொரு பின்னுட்டத்திற்கும் பதிலே ஒரு பதிவு போல எழுதியதன் விளைவோ என்னவோ !!!!!!!!!!!!!!!!!!//

      கரெக்டாக் கண்டுபிடிச்சு சூப்பராப் புட்டுபுட்டு வெச்சுப்புட்டீங்கோ!
      அதே அதே தான் .... அதன் விளைவு தானோ என்னவோ!

      ஆனால் சிரத்தையாக இப்போ நீங்க எவ்வளவோ கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்கோ ! இல்லையா ..., உங்களுக்கு நானும் சிரத்தையா ஏதாவது பதில் எழுதினால் தானே உங்களுக்கும் ஒரு சந்தோஷமாக இருக்கும்?

      அது போலத்தாங்க எல்லோருக்குமே இருக்கும். அதனால் நான் கொஞ்சம் என் பதில்களை ஓர் பதிவு போலவே கொடுக்க வேண்டியதாகி விடுகிறதுங்கோ. ஏதோ ஒரு வகையில் நாம் பிறரை கொஞ்சமாவது மகிழ்விக்க வேண்டாமா?

      //பதிவில் வைத்துள்ள விருந்து எல்லாமே எனக்குத்தான்.//

      ஆஹா, சந்தோஷமாக எடுத்து சந்தோஷமாகச் சாப்பிடுங்கோ. எல்லாமே உங்களுக்குத்தான். ;)

      [பரிசு கிடைச்சதைப்பற்றி ஒரு வார்த்தை சொன்னீங்களா என என்னை வம்புக்கு இழுப்பீர்களோ என்பதனால் மட்டுமே, மெயில் கொடுத்திருந்தேன்.

      மெயிலெல்லாம் பார்த்து கவலையே படாதீங்கோ. நண்டு சிண்டு நார்த்தங்காய் வண்டு போல உள்ள இருவரையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கோ.

      உங்கள் உடம்பையும் அதுபோல கவனமாகப் பார்த்த்க் கொள்ளுங்கோ. பனி காலமாக உள்ளது. அதிக கவனம் தேவைப்படும்]

      நீக்கு
  42. பதிவுகள் உள்ள ப[ண்]டங்கள் அனைத்தும் பசியைத் தூண்டுகின்றன.

    பரிசு பெற்றதற்க்கும் பதிவுக்கும் வாழ்த்துகள்...

    தொடர்ந்து இதுபோன்ற நல்ல சுவாரசியமான பதிவுகள் தந்து பரிசுகள் பல பெற மீண்டும் என் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சேக்கனா M. நிஜாம்ன் January 25, 2013 at 8:04 AM
      பதிவுகள் உள்ள ப[ண்]டங்கள் அனைத்தும் பசியைத் தூண்டுகின்றன.

      பரிசு பெற்றதற்க்கும் பதிவுக்கும் வாழ்த்துகள்...

      தொடர்ந்து இதுபோன்ற நல்ல சுவாரசியமான பதிவுகள் தந்து பரிசுகள் பல பெற மீண்டும் என் வாழ்த்துகள்.//

      வாருங்கள். வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  43. ஆஹா.. கோபு அண்ண்ணன் முதலில் என் இனிய வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!.. நீங்க புதுப்பதிவு போடுவீங்க வாழ்த்தலாம் என இருந்தேன்ன்.... முதல் குறிப்பிலேயே 2ம் இடம் பிடிச்சிட்டீங்க... சூப்பர் கலக்கிட்டீங்க போங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //athira January 25, 2013 at 12:02 PM
      ஆஹா.. கோபு அண்ண்ணன் முதலில் என் இனிய வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!.. நீங்க புதுப்பதிவு போடுவீங்க வாழ்த்தலாம் என இருந்தேன்ன்.... முதல் குறிப்பிலேயே 2ம் இடம் பிடிச்சிட்டீங்க... சூப்பர் கலக்கிட்டீங்க போங்கோ..//

      வாங்கோ அதிரா ! வணக்கம்.

      நீங்க வந்தால் தான் பதிவுக்கே ஒரு கலகலப்பு கிடைக்கிறது.

      பிறர் பதிவுகளில் பின்னூட்டம் மூலம் கலக்கி வரும் தாங்கள் போய் என்னை ‘கலக்கிட்டீங்க’ எனச் சொல்லி கலக்குறீங்களே! ;)

      உங்களுடன் சேர்ந்து பரிசினை வாங்கியதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக இருந்ததூஊஊஊ எனக்கு.

      ஏதோ உங்களின் பரிசளிப்பு விழாவில் விசிலடித்து பலமாகக் கைத்தட்ட மட்டுமே வந்த எனக்குப்போய் ஒரு பரிசு அளிச்சுட்டாங்க உங்க ’ஜல் அக்கா’ ;)))).

      நீக்கு
  44. அதெப்படி எனக்கு மூன்று சேர்டிபிகேட் கோபு அண்ணனுக்கு 4 சேர்டிபிகேட்ட்,.. முடியாது நான் இப்பவே ஆரம்பிக்கப்போரேன் உணாவிரதம்.. அதுக்கு முதல் கொஞ்சம் சுவீட்டும் சாப்பிட்டு ஒரு ரீயும் எடுக்கிறேன்ன் தாங்க்ஸ்ஸ் :)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //athira January 25, 2013 at 12:03 PM
      அதெப்படி எனக்கு மூன்று சேர்டிபிகேட் கோபு அண்ணனுக்கு 4 சர்டிபிகேட்ட்//

      கோச்சுக்காதீங்கோ அதிரா; என் நாலு சர்டிபிகேட்களையும் உங்களுக்கே தந்து விடுகிறேன். நாலும் மூணும் ஏழாக நீங்களே வெச்சுக்கோங்கோ.

      என்னிடம் இருந்தால் என்ன, என் அன்புக்குரிய செல்லமான தங்கச்சி அதிராவிடம் இருந்தால் என்ன? எனக்கு எல்லாமே ஒன்று தான்.

      // முடியாது நான் இப்பவே ஆரம்பிக்கப்போறேன் உண்ணாவிரதம்//

      அடடா, நான் அழுதுடுவேன். அப்புறம் நீங்க தான் டிஷ்யூ பேப்பர் தரும்படியாக இருக்கும். வேணாம் ப்ளீஸ். வயிறு முட்ட நல்லா மூக்கைப்பிடிக்க சாப்பிடுங்கோ அதிரா. ;)))))

      //அதுக்கு முதல் கொஞ்சம் சுவீட்டும் சாப்பிட்டு ஒரு ரீயும் எடுக்கிறேன்ன் தாங்க்ஸ்ஸ் :)..//

      அதானே பார்த்தேன். இதற்குப்பெயர் உண்ணாவிரதம் அல்ல. உண்ணும் விரதமாக்கும். ஹுக்க்க்க்க்க்க்க்க்கும்! ;)

      நீக்கு
  45. கொமெண்ட்ஸ் 200 க்கு மேல தெரிவதுக்கு.. கொமெண்ட்ஸ் செட்டிங்ஸ் ஐ மாத்திப் பாருங்கோவன்...

    Settings - comments - pop - up window என மாத்தி சேஃப் பண்ணிப் பாருங்கோ சிலவேளை சரியாகிடும், அல்லது புளொக் டிஷைனைப் பொறுத்து அமைஞ்சிருக்கோ தெரியேல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira January 25, 2013 at 12:06 PM

      //கொமெண்ட்ஸ் 200 க்கு மேல தெரிவதுக்கு.. கொமெண்ட்ஸ் செட்டிங்ஸ் ஐ மாத்திப் பாருங்கோவன்...//

      அதெல்லாம் எனக்குத் தெரியாது அதிரா. நானாக உள்ளே போய் ஏதாவது செய்யப்போய் உள்ளதும் போய்விடுமோ என மிகவும் பயப்படுவேன்.

      //Settings - comments - pop - up window என மாத்தி சேஃப் பண்ணிப் பாருங்கோ சிலவேளை சரியாகிடும், அல்லது புளொக் டிஷைனைப் பொறுத்து அமைஞ்சிருக்கோ தெரியேல்லை.//

      நீங்க ஏற்கனவே ஏதோ சொன்னீங்கோ. நீங்கள் புதிய பதிவுகள் வெளியிடும்போது அதை கூகுள் ரீடரில் எப்படிப் பார்க்கோணும் என்று. அதுவே உங்க மக்கு அண்ணனுக்குப் புரியலே.

      ஆனால் அதைப்பார்த்த மற்றொருவர் [அவரும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வேண்டியப்பட்டவர் தான்] தனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகச் சொன்னாங்கோ.

      அதைக்கேட்ட எனக்கு அதுவே ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது, அதிரா. அவர்கள் சார்பில் என் நன்றிகள். உடனே FEES கேட்காதீங்கோ, என்னிடமோ அவர்களிடமோ. ;))))))

      நீக்கு
  46. சொல்ல மறந்திட்டேன் றி சார்ஜ்ஜபிள் லைட்டுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //athira January 25, 2013 at 12:08 PM
      சொல்ல மறந்திட்டேன் றி சார்ஜ்ஜபிள் லைட்டுக்கு வாழ்த்துக்கள்...//

      அந்த ரீ-சார்ஜபிள் லைட்டையும் உங்களுக்கே உங்களுக்காகத் தரத்தான் நானும் ரொம்பவும் ஆசைப்பட்டேன்.

      அதையும் வாங்கிக்கொண்டு உங்களுக்கான பரிசான அழகான ஆரஞ்சு கலர் பேக்கில் சொருகிக்கொண்டு போவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

      ஆனால் விழாவில் பரிசை வாங்கிக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ப்ளேன் ஏறிப்போய்ட்டீங்கோ ;(((((((

      உங்களுக்குக்கிடைத்த அந்த ஆரஞ்சு கலர் பேக்கை, ப்ளாக்கில் அடிக்கடி பார்த்தாலே போதும் ..... எனக்கு ஓர் தனி சந்தோஷமும், எனெர்ஜியும் ஆட்டோமேடிக்காக ..... ரீ-சார்ஜ் ஆகிவிடுகிறதூஊஊஊஊஊஊஊ,

      இதற்கும் உடனே FEES கேட்காதீங்கோ. முறைக்காதீங்கோ.;))))

      நீக்கு
  47. ஐயா அவர்களுக்கு வணக்கம்! நீண்ட நாட்களாகி விட்டன வலைப்பூக்கள் படித்து! பணிச்சுமையின் காரணமாக, பதிவுமட்டும் அவ்வப்பொழுது எழுதிக் கொண்டிருந்தேன். இன்று சிறிது ஓய்வில் , தங்களின் வலைப்பூ பார்த்தேன். அருமையான எழுத்து நடையில், சிறப்பான சமையல் பதிவு! தங்களின் ஓய்வில் கிருஷ்ணாலயாவும் பார்த்து கருத்திடுங்கள் ஐயா!
    http://www.krishnaalaya.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ravi krishna January 26, 2013 at 4:52 AM
      ஐயா அவர்களுக்கு வணக்கம்! நீண்ட நாட்களாகி விட்டன வலைப்பூக்கள் படித்து! பணிச்சுமையின் காரணமாக, பதிவுமட்டும் அவ்வப்பொழுது எழுதிக் கொண்டிருந்தேன். இன்று சிறிது ஓய்வில் , தங்களின் வலைப்பூ பார்த்தேன். அருமையான எழுத்து நடையில், சிறப்பான சமையல் பதிவு! தங்களின் ஓய்வில் கிருஷ்ணாலயாவும் பார்த்து கருத்திடுங்கள் ஐயா!
      http://www.krishnaalaya.com//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் சந்தோஷம்.

      தங்களின் பொதுநல சேவைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் குடியரசு தினத்தன்று, பரிசளித்து கெளரவிக்கப்பட்டதாக அறிந்தேன். சந்தோஷம்.

      அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

      தொடரட்டும் தங்களின் சமூக சேவைகள்.

      நீக்கு
  48. கே. பி. ஜனா...January 23, 2013 at 3:19 AM
    CONGRATS!//

    THANK YOU VERY MUCH, SIR.

    பதிலளிநீக்கு

  49. வெள்ளித்தட்டில் சூடான அடைகளும்

    சுவையான வெல்லப்பொடியும் ரெடி.

    உருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்!

    எண்ணம் நிறைக்கும் வண்ணம
    மனம் நிறைக்கும் மணம் மிகு அடைகள் சூடாகப்பரிமாறியதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி January 27, 2013 at 9:59 PM

      வெள்ளித்தட்டில் சூடான அடைகளும்
      சுவையான வெல்லப்பொடியும் ரெடி.
      உருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்!

      எண்ணம் நிறைக்கும் வண்ணம, மனம் நிறைக்கும் மணம் மிகு அடைகள் சூடாகப்பரிமாறியதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்...//

      செந்தாமரையும் செந்தேன் நிலவும் மூன்றாவது தடவையாக இங்கு பூத்திருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

      ஞாபகம் வருதே .... ஞாபகம் வருதே ....
      ஞாபகம் வருதே .... ஞாபகம் வருதே! ...

      என், ‘எலி’ஸபத் டவர்ஸ் -
      சிறு தொடர் கதை ஏனோ ஞாபகம் வருதே !!

      சுண்டெலி போல எவ்வளவு முறை வந்து போனீர்கள்?

      போதும் போதும் என்றல்லவா என்னைச்
      சொல்ல வைத்து விட்டீர்கள் !!!!!

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>> செந்தாமரை [2]

      அது போல இதற்கும் மூன்று முறை என்ன முப்பது முறை வருகை தந்தாலும் நான் ஆச்சர்யப்படவே மாட்டேன். ;)

      அலுக்காமல் பதில் சொல்லுவேனாக்கும்.!!!!!

      >>>>>>

      நீக்கு
    3. கோபு >>>> செந்தாமரை [3]

      “அந்த .... நாள் .... ஞாபகம் .....

      நெஞ்சிலே ..... வந்ததே ....

      இந்த . .நாள் ... அன்று ... போல் ...

      இன்பமாய் ... இல்லையே !!

      அது ஏன் ஏன் ஏன்

      நண்பியேஏஏஏஏஏஏஎ ! ;((((((((((

      ”உயர்ந்த மனிதன்” னுக்குத்தான் இதுபோலெல்லாம் பழசையெல்லாம் மறக்காமல் நினைக்கத்தோன்றும்.

      என்னை ‘உயர்ந்த மனிதன்’ என்று நான் உயர்வாகச் சொல்வதாக நினைக்க வேண்டாம்.

      இந்தப்பாடல் இடம் பெற்ற, எனக்கு மிகவும் பிடித்தமான படம் “உயர்ந்த மனிதன்”.

      சுமார் 25 தடவைகளுக்கு மேல் நான் மிகவும் ரஸித்துப்பார்த்த, என்னை மிகவும் பாதித்த, ஒரே படம் இது மட்டுமே.

      >>>>>>

      நீக்கு
  50. கோபு >>>> செந்தாமரை [4]

    வெள்ளித்தட்டில் வெல்லத்துடன் என் அடையைப் பகிர்ந்து சாப்பிட வந்த ’தங்கத்தாம்பாளத்திற்கு’ [தங்கத்தாமரைக்கு] என் நன்றியோ நன்றிகள்.

    என் மீளாத்துயரம் நீங்க .........

    நீங்க மீண்டும் மீண்டும் வாங்க !

    -oOo-

    பதிலளிநீக்கு
  51. Emergency Rechargeable Light 33 Led PF 733

    சூரியனுக்கு வெளிச்சம் தரும் பரிசு ...பொருத்தமான பரிசுதான் ..!

    பதிலளிநீக்கு
  52. //இராஜராஜேஸ்வரிJanuary 28, 2013 at 7:08 AM
    Emergency Rechargeable Light 33 Led PF 733

    சூரியனுக்கு வெளிச்சம் தரும் பரிசு ...பொருத்தமான பரிசுதான் ..! //

    Respected Madam,

    வாங்கோ ! வாங்கோ !! வாங்கோ !!! வாங்கோ !!!!

    [நாலாம் முறைக்காக நாலு ’வாங்கோ'வாக்கும் ! ;))))) ]

    மீண்டும் வணக்கம்.

    சூரியனைக்கண்டால் தாமரை மலரும் என்பார்கள்,

    கேள்விப்பட்டுள்ளேன்..... படித்துள்ளேன்.

    ஆனாலும் இதை நான் இதுவரை நேரில் சென்று பார்த்தது இல்லை.

    >>>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு >>>> தங்கத்தாமரை [2]

      பல மாதங்களுக்குப்பின் இப்போது என் இந்தப்பதிவாகிய தடாகத்தில் அழகான தாமரை மலர்கள் பூத்துக்குலுங்குவதைக் கண்குளிரக்கண்டு மகிழ்கிறேன்.

      அதனால் ஒருவேளை, தாங்கள் சொல்வது போல, நான் நிஜமாகவே சூரியனோ [அல்லது முற்பிறவி எதிலாவது நான் சூர்ய வம்சத்தில் பிறந்திருப்பேனோ] என நினைக்கத் தோன்றுகிறது. ;)

      வாக்தேவியாகிய தங்களின் கூற்றினில் தவறேதும் இருக்காது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.. ;)))))

      மேலும் வாக்குப்பலிதம் உள்ளவர்கள் நீங்கள் என்பதும் எனக்கு என் அனுபவத்தில் நன்றாகவே தெரியும்.;)))))

      அதுபோல அந்தத்தங்களின் ’வாக்கு’க்கு என்னிடம் எப்போதுமே ஓர் தனி ’செல்வாக்கு’ உண்டு என்பதும் தங்களுக்குத் தெரியும்.;)

      >>>>>

      நீக்கு
  53. கோபு >>>> தங்கத்தாமரை [3]

    தங்களை ஈன்றெடுத்த புண்ணியவதியான தங்கள் தாயாரே, தங்களின் வாக்கு அப்படியே பலித்துவிடும் என்று சொல்லியும் இருக்கிறார்கள் என்பதைத் தாங்களே “நம் கற்றலும் கேட்டலும் திருமதி ராஜி” அவர்கள் எழுதிய தேள் பற்றிய பதிவுக்குத் தாங்கள் எழுதிய பின்னூட்டம் ஒன்றில், சொல்லியிருக்கிறீர்கள்.

    அவர்கள் மறந்தாலும், ஏன் நீங்களே கூட மறந்தாலும் நான் எதையும் அவ்வளவு சுலபமாக மறப்பதே கிடையாது. ;)))))

    >>>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு >>>> தங்கத்தாமரை [4]

      //சூரியனுக்கு வெளிச்சம் தரும் பரிசு ....... பொருத்தமான பரிசுதான் ..! //

      என்று மிகவும் நகைச்சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.

      சூரியனாகவே இருந்தாலும் சமயத்தில் சூரியனுக்கும் [கிரஹனம் போன்ற காலங்களில்] இந்த பரிசுப்பொருளான EMERGENCY LIGHT போன்றவைத் தேவைப்படக்கூடுமோ? யார் கண்டார்கள்? ;)

      விஞ்ஞானத்தின்படி நான் சொல்வது சரியில்லை என்று எனக்கே தெரியும். கிரஹண காலங்களில் பூமியின் நிழல் சூரியன் மேல் விழுவதால், சூரியன் சற்று நேரம் பாதியாகவோ அல்லது முழுமையாகவோ நம் கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகிறது என்று தான் அறிவியலின் அற்புதமான கண்டுபிடிப்பு..

      இருப்பினும் சூரியன் தன் வெளிச்சத்தையோ வெப்பத்தையோ கிரஹண காலங்களிலும் இழப்பது இல்லை தான்.

      நானும் தங்களைப்போலவே, JUST ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே, இங்கு இதை உதாரணமாகச் சொல்லியுள்ளேன். ;)

      >>>>>>

      நீக்கு
    2. கோபு >>>> தங்கத்தாமரை [5]

      சூரியனுக்கோ என்றோ ஒரு நாள் தான் அதுவும் சிலமணி நேரங்கள் தான் இவ்வாறு கிரஹணம் என்கிற POWER CUT ஏற்படுகிறது.

      ஆனால் இன்று தமிழ்நாட்டில் வாழும் மக்களாகிய நமக்கு, தினமும் அடிக்கடி கிரஹணம் போன்ற மின் தடைகள் ஏற்பட்டு நம்மைப் பாடாய்ப்படுத்தி வருகின்றது.

      எங்கும் ஒரே இருட்டாகிப் போகின்றது.

      [இருட்டு உள்ளு, முரட்டுப்பொண்ணு, சுருட்டுப்பாய் என்று ஒரு பழமொழி உண்டு. அதுதான் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது. ;)]

      >>>>>>

      நீக்கு
    3. கோபு >>>> தங்கத்தாமரை [6]

      மிகச் சாதாரணமானவனாகிய என் வீட்டிலேயே இரண்டு ஸ்பிலிட் ஏ.ஸி, ஒரு விண்டோ ஏ.ஸி, ஏழு மின்விசிறிகள், பதினோறு குழல் [TUBE LIGHTS] விளக்குகள், மூன்று EXHAUST
      FANS, குளிர்சாதனப்பெட்டி, ஈ.குக், கிரைண்டர், மிக்ஸி, வாட்டர் ஹீட்டர், வாஷிங் மெஷின், மேஜை கணினி, மடிக்கணினி, மிகப்பெரிய EXIDE 12 VOLT [பஸ் லாரிகளில் பயன்படுத்தப்படுவது] பேட்டரியுடன் கூடிய இன்வெட்ட்ர் போன்ற எல்லா மின் வசதிகளும் செளகர்யங்களும் இருந்தும் கூட, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ரூபாய் 7000 முதல் 8000 வரை மின்கட்டணமாகச் செலுத்தியும் கூட, பல நேரங்களில் எந்த ஒரு மின் சாதனமும் பயனளிக்காமல் போய் விடுகிறது.

      பழைய காலம் போல, பனைஓலையால் செய்யப்பட்ட விசிறிகளையும், டார்ச் லைட் களையும், எமெர்ஜென்ஸி
      லைட்களையும், அது தவிர மெழுகு வர்த்திகள், தீப்பெட்டிகள், அகல் விளக்குகள் என எல்லாவற்றையுமே தயார் நிலையில் ஒவ்வொரு அறைகளிலும் தனித்தனியாக வைத்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது..

      ஏற்கனவே அவ்வாறு தான் என் வீட்டிலும் வைத்துள்ளோம்..

      இவ்வாறு உள்ள சூழ்நிலையில் இவர்களால் எனக்குக் கொடுக்கப்படும் பரிசான ”Emergency Rechargeable Light 33 Led PF 733” என்பது நிச்சயமாக எனக்குப் பயனளிக்கக் கூடியதாகவே இருக்கக்கூடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

      ஏற்கனவே இதே போன்ற EMERGENCY LIGHT [துபாயிலிருந்து வரவழைக்கப்பட்டவைகள் தான்] நாங்களும் பயனபடுத்தி
      வருகிறோம்.

      மேலும் ஒன்று வந்து சேர்ந்தால், அதுவும் நல்லது தான்.

      எல்லாவற்றையும் அவ்வப்போது சார்ஜ் செய்யவாவது
      மின்சாரம் கிடைத்தால் நல்லது. .;)))))

      நீக்கு
    4. கோபு >>>> தங்கத்தாமரை [7]

      ஓராண்டுக்கு முன்பு என் பதிவாகிய தடாகங்களில் எத்தனை எத்தனையோ தாமரைப்பூக்கள் பூத்துக்குலுங்கியதை நான் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் !!!!

      நடுவில் வந்த புயல், வெள்ளம், சூறாவளிச் சுழற்காற்று, சுனாமி, தண்ணீர் இல்லாத வறட்சி போன்ற இயற்கையின் சீற்றங்களாலும் மாற்றங்களாலும், இங்குமங்குமாக என்னுடைய ஒருசில நிலங்களில் [தளங்களில்] நன்கு வளந்திருந்த தாமரைகள் ஏனோ காணாமல் போயோ அல்லது பாதிக்கப்பட்டோ நான் பார்த்ததில், எனக்கு ரத்தக்கண்ணீர் தான் வந்தது.

      அவற்றை மட்டும் புள்ளிவிபரங்களால் சேதார மதிப்பு போட்டு செப்பனிட வேண்டும் என நினைத்துக்கொண்டுள்ளேன்.

      ஒவ்வொரு தடாகத்திலும் பழையபடி தாமரைப்பூக்கள் தோன்றி ஜொலிக்கச்செய்ய வேண்டும் என நான் என் பக்திக்குரிய அம்பாளைப் பிரார்த்திக்கொள்கிறேன்.

      -oOo-

      நீக்கு
  54. மகிழ்ச்சி.
    நன்றி.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rathnavel Natarajan January 29, 2013 at 3:48 AM
      மகிழ்ச்சி.
      நன்றி.
      வாழ்த்துகள்.//

      வாருங்கள் ஐயா, வணக்கம். தங்களின் மகிழ்ச்சியான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
  55. .ஐயா நீங்க சகலகலா வல்லவர்தான்.
    பரிசு பெற்றதற்க்கும் பதிவுக்கும் வாழ்த்துகள்.

    அந்த அடையை பஹ்ரீனுக்கு பார்சல் அனுப்பிவைய்ங்க! அப்படியே கொஞ்சம் வெல்லப்பொடியும் சேர்த்து .

    பதிலளிநீக்கு
  56. //அன்புடன் மலிக்கா February 1, 2013 at 10:51 AM//

    வாருங்கள் மேடம். வணக்கம்.

    //ஐயா நீங்க சகலகலா வல்லவர்தான்.
    பரிசு பெற்றதற்க்கும் பதிவுக்கும் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி, சந்தோஷம் மேடம்.

    //அந்த அடையை பஹ்ரீனுக்கு பார்சல் அனுப்பிவைய்ங்க! அப்படியே கொஞ்சம் வெல்லப்பொடியும் சேர்த்து //

    இது என்ன பிரமாதம். கட்டாயமாக AIR PARCEL இல் அனுப்புகிறேன்.

    Address + Phone Number எனக்கு Mail பண்ணுங்கோ valambal@gmail.com

    அன்பான தங்களின் அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    http://blogintamil.blogspot.in/2011/02/blog-post_06.html
    வலையில் சிக்கிய சுறாக்களும் புறாக்களும்
    மறக்க முடியாத நிகழ்ச்சி ... மகிழ்ச்சி ! ;)))))

    பதிலளிநீக்கு
  57. 121 comments naan 122 ஆக இருக்கும் தங்களால் வாசிக்க முடியும்.
    இனிய வாழ்த்து பரிசு பெற்றதற்கு-
    அனைத்துக்கும் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //kovaikkavi February 2, 2013 at 12:32 AM
      121 comments naan 122 ஆக இருக்கும் தங்களால் வாசிக்க முடியும்.
      இனிய வாழ்த்து பரிசு பெற்றதற்கு - அனைத்துக்கும் வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்.//

      வாருங்கள் மேடம். பின்னூட்ட எண்ணிக்கை 200க்குள் இருப்பின் கட்டாயமாக சுலபமாகவே படிக்க முடிகிறது. பதிலும் தர முடிகிறது.

      அதற்கு மேல் போனால் மட்டுமே சற்றே சிரமமாக உள்ளது.

      அப்படியும் எல்லோருக்கும் ஏதோ ஒரு பதில் கொடுத்துத் தான் இருக்கிறேன், என் சென்ற பதிவிலும்.

      அவர்களாலும் அதை பார்க்கவோ படிக்கவோ முடிகிறதா என்று தான் எனக்குத் தெரியவில்லை.

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  58. வணக்கம் அண்ணா..
    மிக தாமதமான பதிவு. காரணம் இங்கு பவர் கட்..தினமும் 8 மணி நேரம்..மேலோட்டமாக அனைத்து பதிவையும் பார்த்து கமண்ட் போடும்முன் கரண்ட் போகும் அல்லது லேப்டாப் என்மகன் கைக்கோ,மாமா கைக்கோ போய்விடும்..:)நகைசுவையாக எழுதுவதிலும்,அறிவு பூர்வமாக எழுதுவதிலும் சூப்பர் நீங்க..சமையலிலும் கை தேர்ந்தவர்னு நிருபிச்சிட்டீங்க..பாராட்டுக்கள்..
    அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா ராணிFebruary 4, 2013 at 9:27 PM
      //வணக்கம் அண்ணா..//

      வாங்கோ, வணக்கம் சகோதரியே!

      //மிக தாமதமான பதிவு. காரணம் இங்கு பவர் கட்..தினமும் 8 மணி நேரம்..மேலோட்டமாக அனைத்து பதிவையும் பார்த்து கமண்ட் போடும்முன் கரண்ட் போகும் அல்லது லேப்டாப் என்மகன் கைக்கோ,மாமா கைக்கோ போய்விடும்..:)//

      இந்த பவர் கட் என்பது எல்லோருக்குமே உள்ள கஷ்டங்கள் தான். அதனாலேயே இந்த என் பதிலும் மிகவும் தாமதமாக.

      //நகைசுவையாக எழுதுவதிலும்,அறிவு பூர்வமாக எழுதுவதிலும் சூப்பர் நீங்க..சமையலிலும் கை தேர்ந்தவர்னு நிருபிச்சிட்டீங்க..பாராட்டுக்கள்.. அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் சந்தோஷம்ம்மா. ;)))))

      நீக்கு
  59. Asiya Omar February 5, 2013 at 12:11 PM
    http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html
    அன்புடன் தொடர தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.//

    ஏற்கனவே ஓரிரு தொடர்பதிவுகளில் நான் இப்போது சிக்கியுள்ளேன். கட்டாயமாக சற்றே தாமதமாக முயற்சிக்கிறேன்.

    தங்களின் அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  60. அன்பின் வை.கோ - ஜனவரி 23 - 2013 அன்று எழுதிய ப்திவினிற்கு இன்று மறுமொழி.

    அடடா என்ன அழகு - அடையத் திண்ணு பழகு - பதிவு அருமை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  61. அன்பின் வை.கோ

    வெள்ளித்தட்டில் சூடான அடைகளும் - சுவையான வெல்லப்பொடியும் ரெடி.-
    உருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்! - அது சரி -

    நாங்கள் தங்கள் வீட்டிற்கு வந்து மூன்றினையும் சுவைத்து மகிழ ஒரு வாய்ப்பு தாருங்கள்

    ஆசையுடன் வருகிறோம்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  62. அன்பின் வை.கோ

    257 மறுமொழிகள் அன்று வரை- நன்று நன்று -

    தங்களீன் இபதிவு - வலைச்சரத்தில் மூன்று முறை அறிமுகப் படுத்த்ப் பட்டது குறித்து பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - மிக்க மகிழ்ச்சி - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  63. அன்பின் வை.கோ

    நகைச்சுவையான் பதிவு - நகைச்சுவையான மறுமொழி - நகைச்சுவையான பதில் மொழி - பதிவு மேன்மேலும் மெருகேற்றப்பட்டு ஜொலிக்கிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  64. அன்பின் வை.கோ

    இந்தப் பதிவு பேச்சிலருக்கான ( ?????? ) போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  65. அன்பின் வை.கோ - சான்றிதழும் பரிசும் பெற்ற்மைக்குப் பாராட்டுகள் - மேன்மேலும் பல பரிசுகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  66. அன்பின் வை.கோ - கிட்சன்ஸ் கிங் சான்றிதழ், கலந்து கொண்டமைக்குச் சான்றிதழ், நன்கு செய்முறை விளக்கப் பட்டமைக்குச் சான்றிதழ், சிறந்த காலை உணவுக்கான சான்றிதழ், என அள்ளி விட்டீர்கள் போலும் - மிக்க ம்கிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  67. அன்பின் வை.கோ - ஆசியா ஓமர் தனிப்பதிவு போட்டு பாராட்டியமை மகிழ்ச்சியினிஅத் தருகிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  68. அன்பின் வை.கோ

    புத்தாண்டு வாழ்த்துகளுடன் எத்தனை எத்த்னை விதமான பலகாரங்கள் வழங்கப்பட்டன் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  69. cheena (சீனா)March 19, 2014 at 5:41 AM

    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே,

    வாருங்கள். வணக்கம். சுமார் 14 மாதங்களுக்குப்பிறகு, மீண்டும் மீண்டும் ஒன்பது முறைகள் வருகை தந்து அரிய பல கருத்துக்கள் சொல்லி பாராட்டி வாழ்த்தியுள்ளது மிகவும் மகிழ்வளிக்கின்றது. பழைய மகிழ்வுகளை மீண்டும் அசைபோட வைத்துள்ளீர்களே !

    நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  70. பரிசு வென்றதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 ஜனவரி வரையிலான 25 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  71. அப்பாடி எவ்வளவு சான்றிதழ்கள் எவுவளவு பாராட்டுக்கள.வாழ்த்துகள். பரிசுகளும் பாராட்டுகளும் சேரும் இடம் அறிந்து தான் சேர்ந்திருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 14, 2015 at 6:09 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அப்பாடி எவ்வளவு சான்றிதழ்கள் எவ்வளவு பாராட்டுக்கள. வாழ்த்துகள். பரிசுகளும் பாராட்டுகளும் சேரும் இடம் அறிந்து தான் சேர்ந்திருக்கின்றன.//

      :) மிக்க நன்றி.

      நீக்கு
    2. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஜனவரி வரை முதல் 25 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
  72. ஆத்தாடி எவ்ளோ பரிசு எவ்ளோ பாராட்டுமழ. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 10:55 AM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //ஆத்தாடி எவ்ளோ பரிசு எவ்ளோ பாராட்டுமழ. வாழ்த்துகள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  73. இப்படை தோறகின் எப்படை வெல்லும்.?? இந்தப்போட்டில அடைப்பதிவுக்கு பரிசு கிடைத்து அந்தப் பரிசே பெருமை பெற்று விட்டது. சரியான பொருத்தமான தேர்வுதான்.. லைட் பரிசு கொடுத்து ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்குனு சிம்பாலிக்கா சொல்லி இருக்காங்க. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  74. எத்த்தனை செர்டிபிகேட்டு? நாங்க கேட்டாலும் கிடைக்குமா?இரண்டாம் பரிசுவேறயா??வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு