என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 31 டிசம்பர், 2019

பாசப்பறவைகள் 2019



  


திருச்சி BHEL எழுத்தாள நண்பர்கள் கூட்டம், 22.12.2019 ஞாயிறு மாலை 3 மணி முதல் 6 மணிவரை Dr. VGK [Dr. V.GOPALAKRISHNAN, Former EXECUTIVE DIRECTOR, BHEL] அவர்கள் தலைமையில், திருச்சி ரஸிக ரஞ்சன ஸபா வளாகத்தில், இனிதே நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பலரும் பணிஓய்வு பெற்றவர்களாகவே இருந்ததால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததும், அவரவர்கள் பற்றிய அறிமுகங்கள் + அனுபவங்களை கருத்துக்களாகப் பகிர்ந்துகொண்டதும் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தன.


YOU-TUBE FRIENDS OF 2019






'EXPERIENCE WITH MAHA PERIYAVA' என்ற தலைப்பில், யூ-ட்யூப்பில் பலரையும் பேட்டி எடுத்து வெளியிட்டு வரும், திரு. பரத் சுப்ரமணியன், பெங்களூர் அவர்கள், அடியேனின் குரலில் மேற்படி மூன்று ஆடியோக்களை You Tube இல் வெளியிட்டுச் சிறப்பித்திருந்தார்கள். இதன் மூலம் இந்த ஆண்டில் [2019] மட்டும், இதுவரை 186 புதிய நண்பர்கள் என்னுடைய மின்னஞ்சல் தொடர்பில் வந்துள்ளனர். அதில் சுமார் 10 நபர்கள் தினமும் எனது வாட்ஸ்-அப் வட்டத்தில் உள்ளனர். அவர்களில் இரு பெண்மணிகள், என் இல்லத்திற்கே நேரில் வருகை தந்து, இப்போது நெருங்கிய குடும்ப நண்பர்களாகவே ஆகி விட்டனர். 

(1) திருச்சியைச் சேர்ந்த திருமதி. பத்மா சுரேஷ் அவர்கள், தன் கணவர் மற்றும் மாமனார் அவர்களுடன் முதன் முறையாக, என்னை சந்தித்த நாள்: 03.01.2019. மாதாமாதம் எங்கள் குடும்பத்தில் நடைபெற்றுவரும் அனுஷ பூஜைக்கு ஆர்வத்துடன் வருகை தந்து பங்கெடுத்து வருகிறார்கள்.

  


 

கணித மேதை இராமானுஜம் அவர்களின் மறுபிறவியோ இவர்கள் என நான் பலமுறை வியந்ததுண்டு. அந்த அளவுக்குக் கணிதத்தில் புலியாக இருக்கும் இவர்களிடம், எனக்கு ஓர் தனிப் பிரியமும், பாசமும் ஏற்பட்டுள்ளதில் வியப்பு ஏதும் இல்லை. கணிதம் மட்டுமா .. இவர்களின் ஆங்கில அறிவு அதற்கும் மேலாக. மொத்தத்தில் MASTER OF ALL SUBJECTS  இவர்கள்! தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் என பலமொழிப் புலமை வாய்ந்தவர்களும்கூட.  சுறுசுறுப்பிலும், அடுத்தடுத்துப் புனிதப் பயணங்கள் மேற்கொள்வதிலும்  ஓர் சிட்டுக்குருவி போலவும் திகழ்பவர்கள். 


உலக மஹா சோம்பேறியான நான் இவர்களைப் பார்த்து அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொள்வதும் உண்டு. :)  

 

oooooOooooo

2) பெங்களூரைச் சேர்ந்த திருமதி. சந்தியா என்கிற மந்தாகினி ஜானகிராமன் R. எங்களின் முதல் சந்திப்பு: 28.10.2019  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் தீவிர பக்தையான இவள், எங்கள் குடும்பத்தில் உள்ள பொக்கிஷமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பாதுகைகளை தன் குடும்பத்தாருடன் 28.10.2019 அன்று தரிஸித்துக்கொண்டாள். 

கலையுணர்வுகள் கொண்ட அவள், தன் கைப்பட எனக்காகவே செய்துகொண்டு வந்த மிகச்சிறிய, ஜொலிக்கும் வெல்வெட் பாதுகைகள் ஒரு ஜோடி  இதோ:

 


29.10.2019 அன்று, எனது வழிகாட்டுதல்களின் படி, திருச்சி திருவானைக்கோயில் சங்கரமடத்தில் முகாமிட்டிருந்த ஸ்ரீ பாலபெரியவா அவர்களை, தன் வாழ்நாளில் முதன்முறையாக, நன்கு திவ்ய தரிஸனம் செய்துகொண்டு, அவர்களின் திருக்கரங்களால், நேரிடையாக பிரஸாதம் கிடைக்கும் பாக்யம் பெற்றாள். 



30.10.2019 ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அவளின் ஒன்றுவிட்ட சகோதரரின் திருமண நிகழ்ச்சிக்கு எங்களையும் கட்டாயப்படுத்தி வரச்சொல்லி அழைத்து, தன் அப்பா, அம்மா, மாமியார், நாத்தனார்கள் போன்ற அனைத்து உறவினர்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்து பூரிப்படைந்து மகிழ்ந்தாள். அவளின் குழந்தைத்தனம், கிளி கொஞ்சும் பேச்சு, எப்போதுமே சிரித்த முகம் ஆகியவை எங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தின. 
  
  

   

 


 


 

 


பாசமுள்ள பெற்றோருக்கு ஒரே வாரிசான மகள்

 



2014-ம் ஆண்டு டிஸம்பர் மாதம் அடியேன் ’துபாய்’க்கு சுற்றுலா சென்றிருந்த போது என் மூத்த பிள்ளை எனக்கு ஓர் புத்தம்புதிய SAMSUNG MOBILE PHONE வாங்கிக்கொடுத்திருந்தார். 


அதைப்பற்றிகூட படங்களுடன் எனது பதிவினில் வெளியிட்டிருந்தேன்.   http://gopu1949.blogspot.com/2014/12/blog-post.html 

மிகச் சரியாக ஐந்து ஆண்டுகள் நன்கு உழைத்த அது, சற்றே தளர்ந்து, பணிஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. அதை யாரிடம் கொடுத்து எப்படி பழுதுபார்ப்பது என நினைத்துக்கொண்டிருந்த என்னிடம், நானே சற்றும் எதிர்பாராத நிலையில், 24.12.2019 அன்று திருச்சிக்கு நேரில் வருகை புரிந்த என் மூத்த மகனால் வேறொரு புத்தம்புதிய SAMSUNG MOBILE SET எனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.   

 

  

TIMELY SUPPLY !


 

1980 வரை நான் குடியிருந்த பகுதியில், என் அண்டைவீட்டில், எனக்குத்தெரிந்து, 1963-இல் பிறந்து வளர்ந்த பொடியன் G. கண்ணன், இன்று ஓர் மிகப்பெரிய, மிடுக்கான, காவல் துறை அதிகாரியாக என் கண்முன் காட்சியளித்து, என்னை மகிழ்வித்த நாள்: 29.12.2019

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின், மலரும் நினைவுகளாக இந்த சந்திப்பு, அகஸ்மாத்தாக நிகழ்ந்தது என்னை மிகவும் மகிழ்வித்தது.





அனைவருக்கும் 
2020
ஆங்கிலப் புத்தாண்டு 
மற்றும் 
பொங்கல் நல்வாழ்த்துகள்.




என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

திங்கள், 16 டிசம்பர், 2019

மீண்டும் ’ஜெ’ ! வெற்றிடம் இல்லை !! ஆளுமை உண்டு !!!


தினமும் இரவு என் மனைவி, சயனம் செய்ய 
உபயோகிக்கும் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து,  
வெற்றிடத்தை நிரப்பிய ‘ஜெ’


இடது கையை ஓங்கி தன் ஆத்துக்காரரிடம் திருப்பி
தன் ஆளுமையை நிரூபிக்கும் ‘ஜெ’


ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்பு தன் அன்பினால் 
எங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும்
மீண்டும் ஆட்சி புரிய வந்த ‘ஜெ’ !


எங்கள் இல்லத்தில் அமரச் செய்து எடுத்த புகைப்படம்
ஜே ஜே .... ’ஜெயந்தி ரமணி’ தம்பதி

^’ஜெ’ கூட்டணியில் 
நாங்களும் சேர்ந்தோம்^


^ஜெயந்தி ரமணி தம்பதியினர்
எங்களை நமஸ்கரித்து அன்புடன் அளித்துள்ள
புடவை, ரவிக்கைத்துணி, வேஷ்டி, டி ஷர்ட்
மற்றும்  அமெரிக்கா சாக்லேட்ஸ்^

கங்கைச் சொம்பு + இரு பாதங்கள்

நேபாளம் பசுபதிநாதர் கோயிலில் வாங்கப்பட்டுள்ள
^தட்டுடன் கூடிய இரு பாதுகைகள்^
எனக்கே .... எனக்காக !


எனது அன்றாட பூஜையில் வைக்கப்பட்டுள்ள 
^’ஜெ’ கொடுத்த மேற்படி பாதுகைகள்^ 
  

  
^பிரியத்துடன் ‘ஜெ’ கொடுத்த டி ஷர்ட்டை
14.12.2019 கார்த்திகை புனர்பூச நக்ஷத்திரப் பிறந்த நாளில்
அணிந்து மகிழ்ந்த போது எடுக்கப்பட்ட படங்கள்^
{என் தொந்தி சற்றே பெரிதாகத் தெரிகிறதோ?}

http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_28.html
’உனக்கே உனக்காக !’


சுமார் ஐந்து-ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, எனது அன்புக்குரிய பதிவர், திருமதி. ஜெயந்தி ஜெயா 06.12.2019 வெள்ளிக்கிழமையன்று, தன் கணவருடன், இரண்டாம் முறையாக என் இல்லத்திற்கு, திடீர் வருகை தந்து மகிழ்வித்திருந்தாள்.  இரவு சுமார் 7 மணிமுதல் 9 மணி வரை எங்கள் சந்திப்பு இனிதே நடைபெற்றது.

”மணம் (மனம்) வீசும்” பதிவர்  'ஜெ’
http://manammanamviisum.blogspot.in/

எங்களின் முதல் சந்திப்பு (25.02.2014) பற்றிய படங்கள் ஏற்கனவே ’பனை (பண) விசிறி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அதற்கான இணைப்பு இதோ:  http://gopu1949.blogspot.com/2014/03/blog-post_29.html  

  

எங்களுடைய நெருங்கிய நட்புக்கு உதாரணமான மேலும் சில பதிவுகள்:
அறுபதிலும் ஆசை வரும் !

பூம்..பூம்...பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி !

நேயர் கடிதம் - 9 திருமதி. ஜெயந்தி ரமணி 


சாதனையாளர் விருது - ஜெயந்தி ரமணி


http://manammanamveesum.blogspot.com/2014/07/blog-post.html
அண்ணா வீடு எங்கே, .... இன்னும் கொஞ்சம் தூரம்

https://manammanamveesum.blogspot.com/2019/12/blog-post.html
வாழ்த்துகள்

http://manammanamveesum.blogspot.com/2015/11/1.html
பிறந்த வீட்டு சீதனம் 



எனது பாசத்திற்குரிய பதிவுலக தோழி, திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்திலிருந்து எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்த ‘காமதேனு பெரியவா’ படத்தைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக்கொண்டாள் ‘ஜெ’ 

ஜெயஸ்ரீ

 


எனது அன்புக்குரிய பதிவுலக தோழி,  திருமதி. ஆச்சி, ஹரியானாவிலிருந்து எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்த கலைநயம் மிக்க பீங்கான் கோப்பையை எடுத்து ஆசையுடன் தொட்டுத் தடவிப்பார்த்து மகிழ்ந்தாள் ‘ஜெ’

                               
தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் எங்கட ஆச்சி

 

 


எனது சந்திப்புக்குப்பின்
’கொடநாடு எஸ்டேட் பங்களா’விலிருந்து
’சென்னை கோட்டை’க்குத் திரும்பிய ‘ஜெ’ -
கார்த்திகை தீபத் திருநாள் (10.12.19) 
அன்று அன்புடன் அனுப்பியுள்ள படங்கள்


லயா - ஜெயா - தியா
தன் (பிள்ளை வழிப்) பேத்திகளான 
லயா-தியாவுடன் எங்கட ஜெயா !

^’ஜெ’ யின் (பெண் வழி) ஒரே அருமைப் பேரன்^
[10.12.2019 அமெரிக்காவில் எடுத்த புகைப்படம்]
[DOB : 27.07.2019 - BORN AT USA]



அபூர்வப் பேரனின் பிரஸவத்திற்காக
அமெரிக்கா சென்று வெற்றிகரமாகத் 
திரும்பியுள்ள ‘ஜெ’




‘ஜெ’

ஜெய ஜெய ஜெய ஜெயா !
  

வஸுதேவஸுதம் தேவம், கம்ஸசாணூர மர்தனம்,
தேவகீ பரமானந்தம், க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்!


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]