About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, September 1, 2012

லஞ்ச லாவண்யங்கள் !

லஞ்ச லாவண்யங்கள் !

[ஓர் கற்பனை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வெற்றி வாகை சூடியது. ஸ்ரீ இராமதூதனும், ஸ்ரீ ராமபக்தனுமான ஹனுமார், தான் தன் அலுவல் நிமித்தமாக சஞ்சீவிமலையைப் பெயர்த்து எடுத்து வந்ததற்கான பயணச்செலவுகளைப் பட்டியலிட்டு, அயோத்யா நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கிறார். [His Claim of Traveling expenses is submitted]

ஸ்ரீ ஹனுமாருடைய பயணச்செலவுகளின் பட்டியலை சரிபார்த்து, பணப்பட்டுவாடா செய்ய பரிந்துரைக்க வேண்டிய குமாஸ்தா [CLERK], அதில் மூன்று விதமான ஆட்சேபணைகளை குறிப்பிட்டு, அந்தப் பயணச் செலவுக்கான T.A. Reimbursement Claim Bill ஐ, சுத்தி விட்டு, தன்  மேலதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு போய் உள்ளார்.

அந்த குமாஸ்தா சுட்டிக்காட்டியுள்ள ஆட்சேபணைகள்:     

[1]  அப்போது முழுப்பொறுப்பு அதிகாரியாகவும், அயோத்தி ராஜாவாகவும் பதவி வகித்து வந்த பரதன் அவர்களிடம், முன் அனுமதி ஏதும் பெறாமல், ஸ்ரீ ஹனுமார் அவர்கள், இந்தப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

[He has not taken any prior permission from the Competent Authority for this Official Tour]

[2] கிரேடு "D" குட்டி அதிகாரியாக விளங்கிய ஸ்ரீ ஹனுமார், ஆகாய மார்க்கமாக அலுவலகப் பயணத்தினை மேற்கொள்ளவும், அந்தப்பயணச் செலவுகளைத் திரும்பப் பெறவும்,  அரசாங்க சட்டதிட்டங்களின்படி தகுதியற்றவராக உள்ளார். 

[He is  not at all entitled  to make Official Air Travels ].

[3]  ஸ்ரீ ஹனுமாருக்குப் பணிக்கப்பட்டிருந்த வேலை, சஞ்சீவி மலையில் உள்ள ஒரே ஒரு சிறிய செடியினைப் பறித்துக்கொண்டு வருவது மட்டுமே. ஆனால் இவர் அவ்வாறு செய்யாமல், ஒரு மிகப்பெரிய சஞ்சீவி மலையையே அப்படியே பெயர்த்து எடுத்து வந்துள்ளார். இதனால் அவரின் ஆகாயப்பயணத்தில் ஏற்றி வந்துள்ள சரக்கின் எடை மிகவும் அதிகமாகியுள்ளது.  

[Unauthorized Excess Baggage] 

இவ்வாறெல்லாம் சொல்லி அந்த குமாஸ்தாவால் நிராகரிக்கப்பட்டது,  ஸ்ரீ ஹனுமாரின் பயணப்பட்டியல்.

இது ராஜாவான ஸ்ரீ ராமரின் கவனத்திற்குச் சென்றது. இருப்பினும் தர்மத்தையே எப்போதும் அனுஷ்டிக்கும் ராஜாவான ஸ்ரீ இராமராலும் இந்த விஷயத்தில், தனது ஸ்பெஷல் பவர்களை உபயோகித்து ஸ்ரீ ஹனுமாருக்கு உதவி செய்ய முடியாது போனதால்,  ”இந்த முடிவினை தயவுசெய்து, முடிந்தால் மறுபரிசீலனை செய்யவும்” என்று அடிக்குறிப்பிட்டு [foot note - endorsement] அந்தத்தாளை திரும்ப அனுப்ப மட்டுமே ஸ்ரீ ராமரால் அன்று, முடிந்தது.

இதனையெல்லாம் கேள்விப்பட்டு மிகவும் வருந்திய ஜாம்பவான் [மிகப்பெரிய கரடி போன்ற அதிகாரி] அந்த சம்பந்தப்பட்ட குமாஸ்தாவை தனியாக அழைத்துச்சென்று, ஸ்ரீ ஹனுமாருக்கு, அவரின் இந்த அலுவலகப் பயணத்தினால் கிடைக்கும்  தொகையில் ஒரு பத்து சதவீதத்தை அந்த குமாஸ்தாவுக்கு ஒதுக்கீடு செய்துவிடுவதாக வாக்களிக்கிறார்.

இதைக்கேட்டதும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்த அந்த குமாஸ்தா, தான் ஆட்சேபணை எழுப்பிய அந்த பயணப்பட்டியலைத் திரும்பப்பெற்று, கீழ்க்கண்டவாறு [Justifications for passing the Bill] அதில் எழுத ஆரம்பிக்கிறார்:

1] பரதன் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றிருந்தாலும், ஸ்ரீ ராமரின் பாதுகைகளே அப்போது இராஜாவாக எல்லோராலும் ஏற்கப்பட்டிருந்தது. அதனால் ராஜா என்ற பெயரில் அதிகாரம் ஏதும் இல்லாமலிருந்த  பரதனிடம் பயணத்திற்கான, முன் அனுமதி பெறாதது, ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

[As a very Special Case, due to emergency situation]

2]  மேலும் இதுபோன்ற ஒரு நெருக்கடியான அவசர வேலைகளின் நிமித்தம், தகுதியற்ற அதிகாரிகள் கூட ஆகாய மார்க்கத்தில் பறந்து சென்று வேலைகளை முடித்து வந்து, பிறகு சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளின் அனுமதி பெற்று, அந்தக் கணக்கினை நேர் செய்துகொள்ளலாம் என்ற விதிமுறைகள் உள்ளன. அது போன்ற சில முன்னுதாரணங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.      

[Further in an emergency, non-entitled officers can be authorized ex-post facto to Fly]


3] அதுபோலவே அதிக கனமுள்ள பொருளான ஒரு மிகப்பெரிய சஞ்சீவி மலையை ஸ்ரீ ஹனுமார் கொண்டுவந்ததிலும் ஓர் நியாயத்தினை உணர முடிகிறது. அவரால் கொண்டுவர பணிக்கப்பட்ட செடிக்கு பதிலாக வேறு ஏதோ ஒரு செடியினை தவறுதலாக அவர் கொண்டு வந்திருந்தால், அவர் மீண்டும் மிகச்சரியான செடியினை கொண்டுவர மீண்டும் மீண்டும் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் பொன்னான நேரம் வீணாவதுடன், அவருக்கான அடுத்தடுத்த பயணச்செலவுகளையும் நாம் ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அதுபோன்ற தவறு ஏதும் நடப்பதற்கான சந்தர்ப்பம்   இவரின் இந்தப்பயண விஷயத்தில், எப்படியோ தவிர்க்கப்பட்டுள்ளது. 

[Also excess baggage is justified as bringing a wrong plant would have entailed multiple journeys with extra cost; hence bill may be paid ] 

4] இந்த இவரின் பயணப்பட்டியல் செலவுத் தொகையினை முழுவதுமாக அனுமதிக்க நான் பரிந்துரைக்கிறேன்.

[The T.A. Claim Bill is Strongly Recommended for its Full Payment, accordingly]

கரடி ராஜா ஜாம்பவான் அவர்களின் ஆலோசனையைக் கேட்ட, அந்த குமாஸ்தா,  மேலே சொன்னபடி மாற்றி எழுதி பரிந்துரைத்து கையெழுத்துப் போடுகிறார்.  

அதன்படி ஸ்ரீ ஹனுமார் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தொகையில் பெரும்பகுதியான [ 90 சதவீதம்] பணமும் கிடைத்து விடுகிறது.

[ முற்றும் ]


லஞ்ச லாவண்யங்கள் !
இராமாயண காலத்திலிருந்தே துவங்கியிருக்கலாமோ?



[முழுவதும் கற்பனையான இந்த நிகழ்வு பற்றி, ஆங்கிலத்தில் ஓர் மின்னஞ்சல்,  இன்று காலையில் என் தோழி ஒருவரால், என்னுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. 

நகைச்சுவையாக இருப்பதாலும், பல அலுவலகங்களில் இன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகத் தெரிவதாலும், அதை நான் தமிழாக்கம் செய்து இங்கு தங்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளேன்]



என்றும் அன்புடன் தங்கள்,
VGK

198 comments:

  1. மிகவும் ரசித்தேன்! நல்லதொரு கற்பனை! பகிர்வுக்கு நன்றி!
    இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

    ReplyDelete
  2. உண்மை தான் ஐயா. சிறப்பான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Ms. Rasan Madam.

      Delete
  3. ஐயா, அந்தக் காலத்துலே சி.ஏ.ஜி. இருந்திருந்தா பெரிய வம்புலே கொண்டுபோய் விட்டிருக்கும்! :-))

    ----------------- அட்டகாசம்....!!!!!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ”அட்டகாசம்” ஆன கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், திரு. சேட்டைக்காரன், Sir. [C A G ;))))) ]

      Delete
  4. கற்பனையை இல்லை. 100 சதம் நிஜத்தைத்தான் எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Dr. பழனி.கந்தசாமி Sir.

      Delete
  5. குமாஸ்தா 10 சதவிகிதம் பெற்று அத்ற்கான அப்ருவலை தந்ததும் அனுமார் 90 சதவிகிதம் பெற்றார் என்பது மிக தவறாக்தான் இருக்க வேண்டும். உண்மையில் அந்த கையெழுத்து இட்ட குமாஸ்தா டேபிளில் இருந்து அது மற்ற டிபார்ட்மெண்டுகளுக்கு போய் கடைசியில் பணம் கையில் வந்து ஸெரும் போது 25% மட்டும் அனுமார் கையில் கிடைத்திருக்கும் என்பதுதான் உண்மை

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ”Avargal Unmaigal"

      தங்கள் பெயரே “அவர்கள் உண்மைகள்” பிறகு பொய்யா சொல்லப் போகிறீர்கள்? நீங்கள் யூகித்ததும் உண்மையாகவே இருக்கலாம். கற்பனை நகைச்சுவையில் மேலும் நகைச்சுவை ஊட்டியுள்ளீர்கள் ..... சந்தோஷம்..... நன்றி! ;)

      Delete
  6. மீண்டும் வலைப் பதிவில் எழுத வந்த VGK அவர்களுக்கு நன்றி! ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அலுவலக நடைமுறைகள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கும் போலிருக்கிறது. கற்பனை என்றாலும் நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கு பகிரப்பட்டது, அலுவலக நிர்வாகத்தால் பந்தாடப்பட்ட ஒருவரது ஆங்கில மின்னஞ்சல் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,
      திரு. தி. தமிழ் இளங்கோ, ஐயா.

      //மீண்டும் வலைப் பதிவில் எழுத வந்த VGK அவர்களுக்கு நன்றி!//

      ஐயா, என் மனதும், இங்குள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளும் எனக்கு சாதகமானதாக இல்லாததால், உண்மையில் நான் எதுவும் புதியதாக எழுதுவதாகவே இல்லை. இருப்பினும் இதுபற்றி ஆங்கிலத்தில் நகைச்சுவையாக என் அலுவலகத் தோழி ஒருவரால் என்னுடன் மெயில் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டதும், ஏனோ அதை உடனடியாக தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்ற ஓர் எண்ணம் எனக்குள் ஏற்பட்டது, என்பதே உண்மை.

      //தங்களுக்கு பகிரப்பட்டது, அலுவலக நிர்வாகத்தால் பந்தாடப்பட்ட ஒருவரது ஆங்கில மின்னஞ்சல் போலிருக்கிறது. //

      இந்த ஆங்கில மின்னஞ்சலை முதன் முதலாக எழுதியுள்ளவர் [யாரோ தெரியவில்லை] ஒருவேளை தாங்கள் சொல்வது போல அவரின் அலுவலக நிர்வாகத்தால் பந்தாடப்பட்டிருக்கலாம்.

      ஆனால் இதை எனக்கு Forward செய்துள்ளவர், அதுபோல எந்தவொரு பாதிப்புக்கும் ஆளாக சந்தர்ப்பமே இல்லாத, ஓர் அருமையான, மிக அருமையான, நிர்வாகத்தில் [Model Administration னில்] பணிசெய்யும் பாக்யம் பெற்றுள்ளவர், என்னைப்போலவே. ;)

      Delete
  7. என்னே குமாஸ்தாவின் சாமர்த்தியம்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், திரு. அப்பாதுரை Sir.

      Delete
  8. இந்த மெயில்தான் இப்போது எல்லோரிடமும். எந்த அள்வு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், திரு. ரிஷபன் Sir.

      எனக்கு இந்த மெயில் வந்ததுள்ளது நமது தலைமை அலுவலகமான புதுடெல்லியிலிருந்து. பலருக்கும் அதுபோல வந்திருக்கலாம் தான். இன்று வரை தங்கமோ தங்கமாக விளங்கி வரும் நம் TA Section நண்பர்கள் இதைப் படித்து விட்டு, தங்களை மாற்றிக்கொள்ளாமல் இருக்கணுமே என எனக்கு ஒரே கவலையாக உள்ளது, Sir. ;)))))

      பிரியமுள்ள தங்கள்
      வீ..............ஜீ
      VGK

      Delete
  9. இன்று காலை ந‌ண்ப‌ரிட‌ம் இருந்து இதே வ‌ந்த‌து.
    சுவார‌ஸ்ய‌மான மொழி பெய‌ர்ப்பு.
    என்ன‌டா வைகோ "லஞ்ச‌ம்" ப‌ற்றி எழுதிகிறாரே
    என்று வேக‌ம் வேக‌மாய் ப‌திவைத் திற்ந்தேன்....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,
      திரு. Vasan Sir.

      //என்ன‌டா வைகோ "லஞ்ச‌ம்" ப‌ற்றி எழுதிகிறாரே
      என்று வேக‌ம் வேக‌மாய் ப‌திவைத் திறந்தேன்....//

      ஆஹா! இதைப்பற்றியெல்லாம் எழுதுவதற்கு தனித்திறமைகளும், பழுத்த அரசியம் அனுபவமும் தேவை அல்லவா! அதற்கென்றே பிறவி எடுத்துள்ள எழுத்தாளர்களில் தாங்களும் ஒருவர் அல்லவா!!

      நான் மிகமிக சாதாரணமானவன் தானே!!!

      என்னால் கொஞ்சம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மட்டுமே முடிந்துள்ளது. ஸ்ரீராமருக்கு அணில் சேவை செய்தது போலவே, இது என்னால் தங்களுக்கு.

      //சுவாரஸ்யமான மொழி பெயர்ப்பு//

      மிக்க நன்றி, Sir.

      பிரியமுள்ள
      VGK

      Delete
  10. முதலில் சொல்லப் பட்டிருக்கும் ஆட்சேபணைகளும், அப்புறம் திறமையாக அதே ஆட்சேபனைகள் பதிலளிக்கப் பட்டு திருத்தப் பட்ட தீர்ப்பும்.... அபாரம். அபாரம்! நிஜமாக நடப்பதுதான்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், திரு. ஸ்ரீராம்.

      Delete
  11. நடக்கிற விஷயம் தான்...

    சார்... அவ்வப்போது இது போல் நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள்... பாருங்க உங்களுக்கு போட்டியா இராஜராஜேஸ்வரி அம்மா எவ்வளவு அருமையாக, அழகாக கருத்து சொல்லி இருக்காங்க... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், திரு. திண்டுக்கல் தனபாலன் Sir.

      //சார்... அவ்வப்போது இது போல் நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள்...//

      முயற்சிக்கிறேன் நண்பரே. அதற்கான சாதகமான சூழ்நிலையில், மனநிலையில் நான் இப்போது இல்லை.

      // பாருங்க உங்களுக்கு போட்டியா இராஜராஜேஸ்வரி அம்மா எவ்வளவு அருமையாக, அழகாக கருத்து சொல்லி இருக்காங்க...//

      அதுபோல எதுவுமே என் கண்களுக்குத் தெரியவில்லையே!
      தங்களைப் போன்றவர்களின் கண் திருஷ்டியால் அவை ஒருவேளை இப்போது மறைந்திருக்கலாமோ என்னவோ!! ;(

      Delete

  12. இதிலிருந்து எதையும் நியாயப் படுத்தலாம் என்றும் எது செய்தாலும் குற்றம் காணலாம் என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது. இனிய கற்பனை. ரசனை மிக்கத் தமிழாக்கம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா! தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், திரு. GMB Sir.

      Delete
  13. மிகவும் நயமான புனைவு..மிகவும் ரசிக்கத்தக்கது!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும், ரஸிப்புக்கும் மிக்க நன்றி Sir.

      Delete
  14. அருமை அருமை
    மிகச் சரியாக அரசு அதிகாரிகள் இயங்கும் விதத்தைத்
    தெளிவுபடுத்திய அசத்தலான பதிவு
    இதே விஷயத்தை இன்றைய கிரானைட் விவகாரத்துடன்
    ஒப்பிட்டுப்பார்த்துக் கொண்டேன்
    நேற்றுவரை எல்லோரும் சரியாக இருப்பதாகச்
    சொன்னவைகள் எல்லாம் இன்று தவறாக இருப்பதும்
    வானம் பார்க்க வெட்டவெளியில் கிடப்பதெல்லாம்
    பதுக்கலாகச் சொல்லப்படுவதும்...
    வெகு நாள் கழித்து பதிவிட்டாலும்
    சுவாரஸ்யமான பதிவுடன் மீண்டும் பதிவை கொடுத்து
    அசத்தியமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழத்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், திரு. RAMANI Sir.

      அன்புடன் தங்கள்
      VGK

      Delete
  15. நகைச்சுவையாகவும் சிந்திக்க தூண்டுவதாகவும் இருந்தது ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், திரு."வரலாற்று சுவடுகள்” Sir.

      Delete
  16. 250 பின்தொடர்பாளர்களை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், திரு.”வரலாற்று சுவடுகள்” Sir.

      Delete
  17. அட... என்னமா யோசிக்கறாங்கப்பா...

    அழகிய தமிழாக்கம். ரசித்தேன். மீண்டும் வலையுலகிற்கு வந்ததற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், திரு.வெங்கட் ஜி.

      //மீண்டும் வலையுலகிற்கு வந்ததற்கு வாழ்த்துகள்//

      [திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கு நான் மேலே கொடுத்துள்ள பதிலே தங்களுக்கும் பொருந்தும், வெங்கட் ஜீ]

      Delete
  18. நல்ல கற்பனை அண்ணா:)
    உங்களுக்கே உரித்தான பாணியில் நகைச்சுவை உணர்வுடன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள்.
    ஆனாலும் முத்தாய்ப்பாக //லஞ்ச லாவண்யங்கள் !
    இராமாயண காலத்திலிருந்தே துவங்கியிருக்கலாமோ?// என்றது கொஞ்சம் அதிகம்;)
    ராமராமான்னு கன்னத்திலை போட்டுக்கணும்;)))))

    வலைப்பூவை மீள மலரவைத்தமைக்கு நன்றி சொல்வதுடன் தொடர்ந்து உங்கள் பதிவுகளைத் தரவும் அன்போடு வேண்டுகிறேன்.
    வாழ்த்துக்கள் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரி இளமதியே,

      வாங்கோ ... வணக்கம் ... எப்படி இருக்கீங்க நலமா?

      // ராமராமான்னு கன்னத்திலை போட்டுக்கணும்;))))) //

      போடச்சொன்னா போட்டுக்கறேன் .....
      போதும் வரை கன்னத்திலே ..........

      என் தங்கை இளமதிக்காக இப்போது கன்னத்தில் போட்டுக்கொண்டு விட்டேன். ஓ.கே. யா ? ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், இளமதி.

      பிரியமுள்ள
      அண்ணா VGK

      Delete

  19. //[Unauthorized Excess Baggage] //
    விழுந்து விழுந்து சிரிக்க வைத்த வரிகள் .
    ஏர்போர்டில் இந்த எக்சஸ் பாகேஜ் அடிக்கடி பார்க்கும் ஒன்று ஹா ஹா :)) சஞ்சீவி மலையும் இந்த லிஸ்டில் அபாரமான சிரிக்க வைத்த கற்பனை

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள நிர்மலா,

      வாங்கோ, எப்படி இருக்கீங்க ... நலமா?

      **[Unauthorized Excess Baggage]**
      //விழுந்து விழுந்து சிரிக்க வைத்த வரிகள்.//

      அடடா, விழுந்து விழுந்தா? அடியேதும் படவில்லையே? ;)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா.

      பிரியமுள்ள
      VGK


      Delete
  20. என்ன ஒரு கற்பனை!!!கடவுள்கள் கண்ணை குத்தப் போறாங்க.(அதுக்கும் fir போட்டுடப் போறாங்க )

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ, வாங்கோ! நலம். நலமறிய ஆவல்.
      எப்படி இருக்கீங்க? செளக்யமா?

      தாங்கள் நீண்ட நாட்களுக்குப்பின் இங்கு வந்துள்ளது மனதுக்கு மிகவும் மகிழ்சியாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,
      Mrs. thirumathi bs sridhar, Madam.

      Please take care ! All the Best ... Bye for now.

      Delete
  21. ஹா..ஹா..ஹா... சாதாரணமாகப் படிக்கும்போது போரடிக்கும் ஒரு கதையை, மிக நகைசுவையாகச் சொலி, அனைத்தையும் படிக்க வைத்த விதம் அருமை...

    // ஒரு மிகப்பெரிய சஞ்சீவி மலையையே அப்படியே பெயர்த்து எடுத்து வந்துள்ளார். இதனால் அவரின் ஆகாயப்பயணத்தில் ஏற்றி வந்துள்ள சரக்கின் எடை மிகவும் அதிகமாகியுள்ளது. //

    ஹா...ஹா...ஹா... சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஹா...ஹா...ஹா... சூப்பர் என்ற சிரிப்பொலிக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Mrs. athira Madam.

      Thanks a Lot.
      vgk

      Delete
  22. Replies
    1. வாங்கோ, வணக்கம், எப்படி இருக்கீங்க? நலம் தானே?

      //ராம ராஜ்யத்திலேவா?!! ;-) //

      யாரோ கற்பனை செய்து எழுதியது. என்னால் சற்றே சுவை கலந்து தமிழாக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

      ஏதும் தவறாக இருந்தால் .... மன்னிக்க வேண்டுகிறேன்.;)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,
      Mrs. Middleclassmadhavi Madam.

      அன்புடன்
      VGK

      Delete
    2. Mrs. MCM Madam,

      யாரோ செய்த சமையல் இது. லேஸாக சூடாக்கி, கொஞ்சூண்டு உப்பு காரம் சேர்த்து, தலைவாழை இலைபோட்டு பரிமாறியது மட்டுமே நான்.

      அன்புடன்
      vgk

      Delete
  23. " மேலும் இதுபோன்ற ஒரு நெருக்கடியான அவசர வேலைகளின் நிமித்தம், தகுதியற்ற அதிகாரிகள் கூட ஆகாய மார்க்கத்தில் பறந்து சென்று வேலைகளை முடித்து வந்து, பிறகு சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளின் அனுமதி பெற்று, அந்தக் கணக்கினை நேர் செய்துகொள்ளலாம் என்ற விதிமுறைகள் உள்ளன. அது போன்ற சில முன்னுதாரணங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. "

    இது போல எங்கவீட்டுக்காரருக்கு நடந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அனுபவக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Mrs. சந்திர வம்சம் Madam.

      அன்புடன்,
      vgk

      Delete
  24. Replies
    1. மிக்க நன்றி, திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      Delete
  25. அன்பின் வை.கோ - இங்கும் மகள் வீடு குடும்ப சமேதராக வந்திருந்து - நேற்றுதான் திரும்பிச் சென்றனர். அதனால் பயங்கர பிஸி - நிறைய மடல்கள் உள்ளன - அத்தனையையும் படித்து விடுகிறேன் - இங்கு இராஜ இராஜேஸ்வரியின் வரிகள் என்னைக் கவர்ந்தன,

    //தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் தர்மத்தை அனுசரிப்பவர்கள் சிக்கித்தவிப்பது தவிர்க்கமுடியாததாயிற்றே //

    அழகான நடையில் நகைச்சுவை ததும்ப ஒரு நேரடி ஒளிபரப்பாய் ஒரு நிக்ழ்வினைக் கற்பனை செய்து எழுதியமை நன்று. மிக மிக இரசித்தேன். நலல் நடை - நன்று

    நல்வாழ்த்துகள் வை.கோ
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்பின் திரு. சீனா ஐயா,

      வாருங்கள். வணக்கம் பல. நலம். நலமறிய ஆவல்.

      தங்களின் பல்வேறு பொறுப்புகளுக்கும், இல்லக் கடமைகளுக்கும் இடையே இங்கு வந்து கருத்தளித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா. மிக்க நன்றி.

      இங்கு இராஜ இராஜேஸ்வரியின் வரிகள்: //தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் தர்மத்தை அனுசரிப்பவர்கள் சிக்கித்தவிப்பது தவிர்க்கமுடியாததாயிற்றே // என்னைக் கவர்ந்தன.

      என்னையும் மிகவும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பக் கவர்ந்த வரிகள் தான் அவை! ;)))))

      //அழகான நடையில் நகைச்சுவை ததும்ப ஒரு நேரடி ஒளிபரப்பாய் ஒரு நிக்ழ்வினைக் கற்பனை செய்து எழுதியமை நன்று. மிக மிக இரசித்தேன். நலல் நடை - நன்று. நல்வாழ்த்துகள் வை.கோ., நட்புடன் சீனா//

      தங்களின் அன்பான வருகையும், அழகான விரிவான கருத்துக்களும், பாராட்டுக்களும், வாழ்த்துகளும் என்னை மிகவும் மகிழ்வித்து உற்சாகப்படுத்தின.

      என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      Delete
  26. மட்டுறுத்தல் இருக்கிறதென நினைக்கிறேன் - எழுதியது வருமல்லவா

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா, வீட்டுக்கு வந்திருந்த பதிவர் ஒருவர், இப்போது அதனை புதிதாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

      //எழுதியது வருமல்லவா//

      கட்டாயம் வரும். கவலைப்ப்ட வேண்டாம். முன்புபோல உடனேயே தாங்கள் பார்க்க இயலாது தான். மன்னிக்கவும்.

      அன்புடன்
      vgk

      Delete
  27. வை.கோ சார்!உங்கள் இயல்பான நகைச்சுவையில் ஸ்வாரஸ்யமாய் எழுதியிருக்கிறீர்கள். சில நண்பர்களுக்கும் சுட்டியைக் கொடுத்திருக்கிறேன். நான் பெற்ற இன்பம் பெறுக அனைவரும் என்றே.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திரு. மோகன்ஜி Sir!

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், சுட்டியை சில நண்பர்களுக்கு கொடுத்து பகிர்ந்து மகிழ்ந்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      Delete
  28. வை.கோ சார் புதுமையான படைப்பு.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான புதுமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Mrs. Asiya Omar Madam.

      அன்புடன்,
      vgk

      Delete
  29. ஆஹா என்ன ஒரு கற்பனை. மிகவும் சுவாரசியம் ராம ராஜ்ஜியத்திலேயே இப்படின்னா இப்பல்லாம் என்னத்த சொல்ரது

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள். வணக்கம். நலம். நலமறிய ஆவல்.
      எப்படி இருக்கீங்க? செளக்யமா?

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான சுவாரஸ்யமான அனுபவக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Mrs. Lakshmi Madam.

      அன்புடன்
      vgk

      Delete
  30. ரொம்ப நாள் கழித்து திரும்ப வலைப்பூவை உங்கள் எழுத்தால் மலரவைத்தமைக்கு அன்பு வாழ்த்துகள் சார்... தொடர்ந்து எழுதுங்கோ.. ரசிகர்கள் நாங்க காத்துண்டு இருக்கோம் வாசிக்க....

    க்ரியேட்டிவிட்டி அதிகம் சார் உங்களுக்கு... கைல பேப்பர் துண்டோ அல்லது எதுனா விஷயமோ கிடைத்தால் உடனே அதை அழகாய் வடிவமைத்து எல்லோரும் ரசிக்கும் வண்ணம் பகிரத்தருவது உங்களுக்கே உரிய சிறப்பு இது....

    உங்களுக்கு வந்த ஆங்கில மின்னஞ்சலை படிச்சிட்டு அப்டியே விடாம இப்படி எல்லோரும் ரசிக்கும்படி தமிழாக்கம் செய்து அதில் கொஞ்சம் உங்க ஸ்டைல் ஃப்ளேவர் கலந்து எல்லோரும் ருசிக்கும்படி கொடுத்துட்டீங்க அசத்தல்.....

    அட அட ராமர் காலத்துலயே தொடங்கியாச்சா?? ராம ராஜ்ஜியம் மலரவேண்டும் சொல்றாங்களே அப்ப இது???? ஆஞ்சநேயர் சீதாம்மா கிட்ட தூது போனாங்களே அதெல்லாம் கணக்குலயே எடுக்கலை பாருங்க அது அவரோட பெருந்தன்மை தானே...

    குமாஸ்தாக்கு பர்சனலா ஆஞ்சநேயர் கிட்ட என்ன பிரச்சனையோ தன் கிட்ட வந்த வாய்ப்பை நல்லா பிடிச்சுண்ட்டுட்டார்....

    இராமனாலயும் ஒன்னும் பண்ண முடியலையே... நேர்மையா நடக்கிறவர் சீதாம்மாவை காட்டுக்கு அனுப்ப அவருக்கு கிடைச்ச ஒரு வாக்கியமே போதுமானதா இருந்ததே... இதுக்கெல்லாம் எங்கிருந்து சப்போர்ட் பண்ணி பேசப்போறார்.... ( இராமா இராமா கண்ணை குத்திராதேப்பா... சும்மா தமாஷுக்கு தான் எழுதினேன் பகவானே)

    ஜாம்பவானால கூட நேர்மையா அவருக்கான உழைப்பை சிறப்பை திறமையை சொல்லி வாங்கி தரமுடியலையே... அவரும் சாதாரண மனுஷா போல லஞ்சம் தரேன்னு சொல்லி தானே குமாஸ்தாவை சரிக்கட்ட முடிஞ்சிருக்கு...

    லஞ்ச லாவண்யம் வை.கோபாலகிருஷ்ணன் சார் சொன்னது போல தொடங்கியது அப்பத்துலேருந்து தானோன்னு எனக்கே டவுட் வந்துருத்து....

    யாராலயும் தன் பவர் யூஸ் பண்ண முடியாதப்ப.. சாதாரண குமாஸ்தா ( ஹூம் ஹூம் இனி அப்படி சொல்லவே முடியாது ஸ்வாமியை பார்க்கணும்னா பூசாரிக்கு லஞ்சம் கொடுக்கணும் போலிருக்கே அது போல கதைன்னா....) காரணங்கள் கிரியேட் செய்து பணம் தர இயலாதுன்னு சொல்லி... அதே காரணத்தை தனக்கு சாதகமாவும் செய்துகிட்டு பணம் ஆஞ்சநேயருக்கு கிடைக்க வழி செய்திருக்காரே..

    பவர்ஃபுல் குமாஸ்தா தான்...

    அருமையான ஒரு சிச்சுவேஷனை டைமிங்கா இங்க அசத்தலா பகிர்ந்தது ரசிக்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது வை.கோபாலகிருஷ்ணன் சார்... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திருமதி மஞ்சுபாஷிணி அவர்களே, வணக்கம்.

      ஹனுமன் ஒரே கையால் தூக்கி வந்த சஞ்சீவிமலை போல மிகப்பெரியதாகவும் கனமாகவும் உள்ளது தங்களின் இந்தப் பின்னூட்டமும். ஹனுமனின் வால் போன்ற மிக நீ...ண்...ட பின்னூட்டம் தான். இருப்பினும் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

      //ரொம்ப நாள் கழித்து திரும்ப வலைப்பூவை உங்கள் எழுத்தால் மலரவைத்தமைக்கு அன்பு வாழ்த்துகள் சார்... தொடர்ந்து எழுதுங்கோ.. ரசிகர்கள் நாங்க காத்துண்டு இருக்கோம் வாசிக்க....//

      ஆஹா! இதுபோல யார் சொல்லுவார்கள்? உங்களைப் போன்ற நல்லவங்க எங்கோ போய் விட்டதால் தான், நான் இவ்வளவு நாட்களாகப் பதிவு ஏதும் தராமலேயே இருந்தேன் தெரியுமா உங்களுக்கு?

      தொடரும்....


      Delete
    2. திருமதி மஞ்சுபாஷிணிக்கு VGK யின் தொடர்ச்சி [2]
      ===============================================

      //க்ரியேட்டிவிட்டி அதிகம் சார் உங்களுக்கு... கைல பேப்பர் துண்டோ அல்லது எதுனா விஷயமோ கிடைத்தால் உடனே அதை அழகாய் வடிவமைத்து எல்லோரும் ரசிக்கும் வண்ணம் பகிரத்தருவது உங்களுக்கே உரிய சிறப்பு இது....//

      மிகப்பெரிய ஐஸ்கட்டியை என் தலையில் இப்படி வைத்து அசத்திவிட்டீர்களே! எனக்கு ஜில்லுன்னு ஆகி, ஒரேயடியா குளிருதுங்க ..... ;)))))

      //உங்களுக்கு வந்த ஆங்கில மின்னஞ்சலை படிச்சிட்டு அப்படியே விடாம இப்படி எல்லோரும் ரசிக்கும்படி தமிழாக்கம் செய்து அதில் கொஞ்சம் உங்க ஸ்டைல் ஃப்ளேவர் கலந்து எல்லோரும் ருசிக்கும்படி கொடுத்துட்டீங்க அசத்தல்.....//

      புரிதலுக்கு மிகவும் நன்றிங்க.

      //உங்க ஸ்டைல் ஃப்ளேவர் கலந்து எல்லோரும் ருசிக்கும்படி//

      அதே அதே .... அதே அதே .....
      பாய்ண்டை கண்டுபிடித்துச் சொன்னதற்கு மிக்க நன்றி.

      தொடரும்.....

      Delete
    3. திருமதி மஞ்சுபாஷிணிக்கு VGK யின் தொடர்ச்சி [3]
      ===============================================

      //காரணங்கள் கிரியேட் செய்து பணம் தர இயலாதுன்னு சொல்லி... அதே காரணத்தை தனக்கு சாதகமாவும் செய்துகிட்டு பணம் ஆஞ்சநேயருக்கு கிடைக்க வழி செய்திருக்காரே.. பவர்ஃபுல் குமாஸ்தா தான்...//

      இதைத்தான் ”வேண்டுமென்றால் வேரிலேயும் காய்க்கும்”
      என்பார்கள். புரிந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி.

      //அருமையான ஒரு சிச்சுவேஷனை டைமிங்கா இங்க அசத்தலா பகிர்ந்தது ரசிக்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது வை.கோபாலகிருஷ்ணன் சார்... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிக நீ..ண்..ட [ஹனுமார் வால் போன்ற] கருத்துரைக்கும், ஒவ்வொன்றையும் மிகவும் ஊன்றி ரஸித்தலுக்கும், ரஸித்ததை அப்படியே வரிக்குவரி பாராட்டி எழுதியுள்ள பொறுமைக்கும், அன்பான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      Delete
  31. நகைச்சுவையாக இருப்பதாலும், பல அலுவலங்களில் இன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகத் தெரிவதாலும், அதை நான் தமிழாக்கம் செய்து இங்கு தங்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளேன்//
    நல்ல கற்பனை.
    காலை வந்த மெயில், அதை படித்து மதியம் அருமையான பதிவு கொடுத்தமைக்கு நன்றி.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திருமதி கோமதி அரசு அவர்களே!

      வணக்கம்.

      ஆம் அன்று காலையில் தான் எனக்கும் இந்த மெயில் அனுப்பப்பட்டது. மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் உடனே மொழிபெயர்த்து, கையோடு மதியம் மூன்று மணிக்குள் வெளியிட்டு விட்டேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      vgk

      Delete
  32. ஒரு லஞ்சம் எப்படி உருவாகிறது என்பதை அக்கு வேறு ஆணி வேறாக அலசு அலசு என்று அழகாக அலசி இருக்கிறீர்கள். இது ஒரு ஆங்கில நகைச்சுவை என்ற போதிலும், அந்த நகைச்சுவையின் கருத்தை இராமாயணத்தில் ஏற்றி, யதார்த்தமான தமிழில், வரிகளில் புத்திசாலித்தனம் தொனிக்க எழுதியுள்ளீர்கள். அற்புதம் !

    ஒரு லஞ்சத்தின் " மனோதத்துவம் " இந்தப் பதிவு முழுக்க விரவிக் காணப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் Mr, குருச்சந்திரன் Sir.

      WELCOME to you, Sir.

      தங்களின் அன்பான முதல் [?] வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      vgk

      Delete
  33. I just had gone down to my office. Felt like sitting in my chair and had discussion with audit officer.
    Very practical imagination. We had chances (not with Hanuman and SriRama) but like wise persons T.A.Bill passing positions.
    Very nice.
    viji

    ReplyDelete
    Replies
    1. Welcome to you Mrs. Vijayalakshmi Krishnan Madam.

      I am very happy for your kind visit here and also for your Valuable, Practical & Nice comments.

      Thank a Lot Madam.

      With All my Good Wishes to you .... vgk

      Delete
  34. இப்பத்தான் புரிந்தது ஏன் கோவில்களில் கூட குருக்கள்/அர்ச்சகர்கள் தட்டுகளில் 10-100 என்று விழுகிறது என்று. வாழ்க்கையே ஒரு பயணம் தானே. பயண பில்கள் சரிவர pass ஆகும் யுக்தி விளக்கப்பட்டிருக்கிறதோ?

    ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் Mr. VENGKAT Sir!

      வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      // வாழ்க்கையே ஒரு பயணம் தானே.//

      ”கண்டேன் ஸீதையை” என்பது போல ரத்தின சுருக்கமாகச் அழகாகச் சொல்லிவிட்டீர்கள். ;)))))

      யுக்தியை ரஸித்துப்படித்து மகிழ்ந்துள்ளது, எனக்கும் மகிழ்வு அளிக்கின்றது.

      அன்புடன்
      vgk

      Delete
  35. இப்பத்தான் புரிந்தது ஏன் கோவில்களில் கூட குருக்கள்/அர்ச்சகர்கள் தட்டுகளில் 10-100 என்று விழுகிறது என்று. வாழ்க்கையே ஒரு பயணம் தானே. பயண பில்கள் சரிவர pass ஆகும் யுக்தி விளக்கப்பட்டிருக்கிறதோ?

    ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் Mr. VENGKAT Sir!

      வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      // வாழ்க்கையே ஒரு பயணம் தானே.//

      ”கண்டேன் ஸீதையை” என்பது போல ரத்தின சுருக்கமாகச் அழகாகச் சொல்லிவிட்டீர்கள். ;)))))

      யுக்தியை ரஸித்துப்படித்து மகிழ்ந்துள்ளது, எனக்கும் மகிழ்வு அளிக்கின்றது.

      அன்புடன்
      vgk

      Delete
  36. நல்ல கர்பனை.இனி அடிக்கடி பதிவெழுதுவீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திருமதி ஸாதிகா மேடம், வணக்கம்.

      //நல்ல கற்பனை.//

      மிக்க நன்றி.

      //இனி அடிக்கடி பதிவெழுதுவீர்கள் என நம்புகிறேன்.//

      நம்பிக்கைத்தான் வாழ்க்கையே. அதுபோலவே நம்புவோம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      Delete
  37. சமகாலத்தில் இருப்பதை எல்லோரும் உணர செய்வது படைப்பாளியின் திறன் உங்களுக்கு இருக்கிறது அது ...........நல்ல கற்பனை வலம் சிறந்த ஆய்வு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் Ms. கோவை மு. சரளா அவர்களே,

      வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், படைப்பாளியின் திறன் மற்றும் அழகான கற்பனை வளத்தினைப் பாராட்டும் மென்மையான மற்றும் மேன்மையான குணத்திற்கும், ஆய்வுக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      Delete
  38. தாமதத்திற்கு வருந்துகிறேன்.... அருமை ஐயா உங்களின் கற்பனை ம்ம்ம்ம் சூப்பர்.....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் Mrs. VijiParthiban Madam, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      ஆனானப்பட்ட ஹனுமாருக்கே அவரின் பயணச்செலவுகள் மிகவும் தாமதமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது இந்தப் பதிவின் மூலம் நமக்குத்தெரிய வருகிறது.

      அதனால் தாங்களும் தயவுசெய்து தாமதத்திற்கு வருந்த வேண்டாம்.

      அன்புடன்
      VGK

      Delete
  39. ha..ha... humorous Gopu Sir. Welcome back.

    ReplyDelete
    Replies
    1. Welcome to you MIRA !

      Thanks for your kind visit here & for your valuable Comments also.

      With Best Wishes & kind regards.

      Yours,
      GOPU

      Delete
  40. நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கிறீங்க அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரி Ms. PRIYASAKI அவர்களே,

      வாருங்கள், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      Delete


  41. இன்றுதான் பார்தேன் மீண்டும் தங்கள் வருகைக்கு நன்றி! நகைத் சுவைப்பதிவு! நல்ல நடை இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள புலவர் திரு சா இராமாநுசம் ஐயா அவர்களே,

      வாருங்கள். வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், நகைச்சுவையையும் நடையையும் இரசித்து எழுதியுள்ள அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      என்றும் அன்புடன்,
      vgk

      Delete
  42. நல்ல ஒரு கற்பனை பதிவு , ரசித்து படிக்கும்படி உள்ளது நன்றி

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள சகோ Gnanam Sekar அவர்களே,

      வாருங்கள், வணக்கம்.

      தங்களின் அன்பான முதல் [?] வருகையும், கற்பனையின் அழகை ரசித்துப் படித்ததாகச் சொல்லும் அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

      தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  43. நல்ல நகைசுவையான பதிவு..கற்பனை படிக்கவும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது அண்ணா..:)

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரி Ms. ராதா ராணி Madam அவர்களே,

      வாருங்கள், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நகைச்சுவையினைப் படித்து, ரசித்து, சிரித்ததாகச் சொல்வது கேட்க மிக்க மகிழ்ச்சி.

      அன்புடன்
      vgk

      Delete
  44. அருமை சார். ராமராஜ்யமானாலும், நிர்வாகம், சீராக நடைபெற வேண்டாமா? குமாஸ்தா இல்லாவிட்டால் யார் மங்கு மங்குன்னு வேல செய்யற்து!;-))))

    உங்கள் நகைச்சுவை அபாரம். ஹி ஹி..

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள பட்டு,

      வாங்கோ, வாங்கோ, வணக்கம். நலம். நலமறிய ஆவல்.

      நிர்வாகம் சீராக நடைபெற வேண்டும்; குமாஸ்தா இல்லாவிட்டால் யார் மாங்கு மாங்குன்னு வேலை செய்யறது! என்ற உங்களின் வஞ்சப்புகழ்ச்சி அணியை
      நன்கு ரஸித்தேன்.

      பட்டுவா .. கொக்கா! என நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

      //உங்கள் நகைச்சுவை அபாரம். ஹி ஹி..//

      நமக்குள் ஏற்பட்ட அந்த 51 ஆம் எண் நகைச்சுவை மெயில்களை விடவா? என்னால் எப்போதுமே மறக்க முடியாதே பட்டு ! ;)))))

      அன்பான தங்களின் பட்டுப்போன்ற [silk] வருகைக்கும், அழகான தங்களின் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      என்றும் பிரியமுள்ள,
      VGK


      Delete
  45. சிரித்து மாளவில்லை வை.கோ.சார். மிகவும் சுவையான கற்பனை. மூலம் கெடாமல் மிக அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள். அதிலும் அந்த காரியதரிசி ஹனுமனிடம் பயணச் செலவுத் தொகையைத் தரமறுக்கும் காரணங்களை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான். வெகுநாளைக்குப் பிறகு தங்கள் முத்திரை மின்னும் அருமையான படைப்பு. மனமார்ந்த பாராட்டுகள் சார்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திருமதி கீதமஞ்சரி மேடம்.

      வணக்கம். நல்லாயிருக்கிறீர்களா?

      //சிரித்து மாளவில்லை வை.கோ.சார். மிகவும் சுவையான கற்பனை. மூலம் கெடாமல் மிக அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள். அதிலும் அந்த காரியதரிசி ஹனுமனிடம் பயணச் செலவுத் தொகையைத் தரமறுக்கும் காரணங்களை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான்.//

      தங்களின் மிகுந்த ரஸிப்புடன் கூடிய சிரிப்பொலியினை நான் கற்பனை செய்து பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //வெகுநாளைக்குப் பிறகு தங்கள் முத்திரை மின்னும் அருமையான படைப்பு. மனமார்ந்த பாராட்டுகள் சார்.//

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும், மனமார்ந்த பாராட்டுக்களும் என்னை மிகவும் மகிழ்வித்து, உற்சாகம் தருவதாக அமைந்துள்ளது, மேடம்.

      தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      என்றும் அன்புடன்,
      VGK

      Delete
  46. அருமையான கற்பனை! தமிழாக்கம் அபாரம்! தொடர்க உங்கள் நகைச்சுவை பதிவுகள்!
    நன்றியுடன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பர் Mr E S Seshadri Sir,

      வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அபாரமான பாராட்டுக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      Delete
  47. True story padippadu polirunthathu, with a dash of...more than dash of, sense of humour. Rasiththu padiththein. Nandri.

    ReplyDelete
    Replies
    1. மறதி மன்னியாக இல்லாமல் மறக்காத மன்னிபோல, மறக்காமல் இங்கு வருகை தந்துள்ள அன்புக்குரிய Ms. Sandhya Madam அவர்களே வாருங்கள் வாருங்கள்.

      தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

      உண்மைக்கதைபோலவே இருந்தது என்றும், நகைச்சுவை உணர்வுடன் மிகவும் ரஸித்துப் படித்ததாகச் சொல்வதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      சென்ற ஆண்டு 2011 நான் வெளியிட்டுள்ள பலகதைகளில் நகைச்சுவைகள் மிகுதியாகவே இருக்கும். நேரம் கிடைக்கும் போது படித்துப்பார்த்து கருத்துக்கூறுங்கள்.

      ஒருசில உதாரணப் பதிவுகள்:

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4903.html

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html

      http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html

      http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html

      http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_11.html

      http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_26.html

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_445.html

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_5143.html

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_10.html

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_8942.html

      இவற்றில் ஒருசிலவற்றைப் படித்தாலே, மீதி நான் குறிப்பிடாத பலகதைகளைத் தாங்களே படிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புள்ள,
      VGK

      Delete
  48. 90 சதவிகிதம் ஹனுமாருக்குப் போய் விட்டதா...? அப்பா... சந்தோஷம். 10 சதவிகிதம் தானே குமாஸ்தாவுக்கு? பரவாயில்லை.

    90 சதவிகிதத்தைக் கோட்டை விட்டு, 10 சதவிகிதமாவது திரும்ப வராதா என ஏங்கும் கலி காலத்திற்கு புராண காலம், எவ்வளவோ பரவாயில்லை.

    நகைச்சுவை ரசிக்கும்படிக்கும், சிந்திக்கும்படிக்கும் இருக்கிறது சார்.

    பகிர்வுக்கு நன்றிகள் பல.

    - நுண்மதி.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள கெளரி லக்ஷ்மி,

      வாருங்கள். வணக்கம். செளக்யமா? எப்படி இருக்கீங்க?

      நீண்ட நாட்களுக்குப்பின் நுண்மதியின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிற்து.

      கலிகாலத்திற்கு புராணகாலமே பரவாயில்லை என ராணி வாயாலேயே சொல்லிவிட்டதால், வேறு பேச்சுக்கோ, விவாதங்களுக்கோ, பஞ்சாயத்துக்கோ வழியே இல்லை.

      தங்கள் அன்பான வருகைக்கும் விரிவான பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள
      vgk

      Delete
  49. I enjoyed this post very much. Long awaited post from you Sir, Today only I saw this post,I had a hearty laugh. Thank you Sir.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ”Under the Mango Tree" மேடம்,

      வணக்கம். தங்களின் அன்பான வருகையும், இந்தக் கற்பனைக் கதையினை ரஸித்து சிரித்து மகிழ்ந்ததாகப் பாராட்டி எழுதியுள்ளதும் எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.

      தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      Delete
  50. உங்களுக்கு வந்த சுவாரஸ்யமான இந்த மின்னஞ்சலை, அதையும் விட சுவாரஸ்யமாக தமிழாக்கம் செய்து பகிர்ந்துள்ள பதிவை ரசித்துப்படித்தேன்!நெடுநாட்க‌ள் க‌ழித்து மீண்டும் ப‌திவு எழுதியதைக்க‌ண்டு ம‌கிழ்ச்சியும் அடைந்தேன்.
    இது போன்ற சிறந்த பதிவுகளை மீண்டும் தொடர்ந்து எழுதுங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள திருமதி மனோ சாமிநாதன் மேடம்.

      வாருங்கள். வணக்கம். நலம். நலமறிய் ஆவல்.

      இந்த என் தமிழாக்கத்தை ரசித்துப்படித்து மகிழ்ந்ததாகச் சொல்லி எழுதியுள்ளது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.

      ஆம் ... நெடுநாள் கழித்து இந்தப்பதிவினை நான் எழுதி வெளியிட ஏதோ சந்தர்ப்பம் அமைந்தது. தொடர்ந்து பதிவுகள் தரவேண்டும் என்கிறீர்கள். தங்களின் ஊக்குவிப்புக்கு என் நன்றிகள்.

      மற்றொரு சிறிய தகவல் உங்களுக்கு .....

      வரும் நவ்ம்பர் டிஸம்பரில் நான் அநேகமாக [99.9%] உங்கள் நாட்டில் தான் இருப்பேன். முடிந்தால் ஒரே ஒரு நாள், தங்களை ஷார்ஜாவுக்கே நேரில் வந்து சந்திக்க முயற்சிக்கிறேன்.

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      Delete
  51. WELCOME to you Mr. Karuppasamy Duraichamy Nadar Sir,

    Thank you very much for your kind visit here &
    for your valuable comments also.

    Thanks a Lot, Sir.

    vgk

    ReplyDelete
  52. நகைச்சுவை + கற்பனைத் திறம் = வை. கோ.

    எத்தனை திறமை உங்களிடம் என்று வியந்தவாறே இந்தக் கருத்துரையை எழுதுகிறேன்.

    தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
    அன்புடன்
    ரஞ்ஜனி

    ReplyDelete
  53. வாங்கோ, வாங்கோ, வாங்கோ Mrs. Ranjani Narayanan Madam,

    செளக்யமா? எப்படி இருக்கிறீர்கள்? ஏன் உங்களின் அழகான கலர் போட்டோவை மாற்றி Black & White ஆக ஓர் நிழல் படம் போல மாற்றிவிட்டீர்கள்? [திருஷ்டியாகிவிடும் என்றா? OK .... OK]

    //நகைச்சுவை + கற்பனைத் திறம் = வை. கோ.//

    ஆஹாஹா! மிகப்பெரிய ஐஸ்கட்டியை இப்படி என் தலையில் வைத்து விட்டீர்களே! ;)))))

    //எத்தனை திறமை உங்களிடம் என்று வியந்தவாறே இந்தக் கருத்துரையை எழுதுகிறேன்.//

    என் மனதுக்குப் பிடித்தமான பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான தாங்களே இவ்வாறு எழுதியுள்ளதில் நானும் வியந்தவாறே இந்த பதிலினை எழுதுகிறேன். என் ஸ்பெஷல் நன்றிகள்.

    //தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். அன்புடன் ரஞ்ஜனி//

    ஸ்ரீ ஹனுமாருக்கே, அவரின் அதிவேக அற்புதத் திறமைக்கே, அவரின் பயணச்செலவுகளை திரும்பப்பெறவே மிகவும் தாமதமாகியுள்ளதாக இந்தக் கற்பனைக் கதையில் வருகிறது.

    அப்படியிருக்கும் போது நாமெல்லாம் சாதாரண ஆட்கள் தானே.
    நமக்குள் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பெல்லாம் எதற்கு, மேடம்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஜில்லென்ற ஐஸ் கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  54. Replies
    1. தங்களின் புதிய முதல் வருகைக்கும், மாறுபட்ட நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே.

      Delete
  55. கற்பனையாக இருந்தாலும் சுவையா சொல்லியிருக்கீங்க சார்.... அசத்தல்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் [மனதில் உறுதி வேண்டும்]திரு. மணிமாறன் சார்,

      வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான சுவையான அசத்தலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் வலையினில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள சிறுகதையை சற்று முன் படித்தேன்.

      பலமுறை நான் முயன்றும் தங்களின் பின்னூட்டப்பெட்டி திறக்கவே இல்லை.

      படிக்கும் போதே என் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. இன்னும் 20 ஆண்டுகள் கழித்தும் இப்படியே தான் இந்தக் குழந்தைகளின் நிலைமை இருக்குமா? வேதனையாக உள்ளதே ;(

      முடிவு வரிகள் ....

      //அதன் வலது புறத்தில் ரப்பர் ஸ்டாம்பிலுள்ள பள்ளியின் பெயரையும் பதிந்தார்.அதில் "அரசு உயர்நிலைப் பள்ளி, இடிந்தகரை" என்றிருந்தது.//

      நச்சென்று உள்ளது. பாராட்டுக்கள்.

      அன்புடன்
      VGK

      Delete
  56. மொழி பெயர்ப்பை சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவது மிக கடினம். பல தொழில்முறை எழுத்தாளர்களே தடுமாறும் அந்தக் கலை உங்களுக்கு வாய்த்திருப்பது கடவுளின் வரம். மிக்க நன்று. உங்களுக்கு இதுவரை அறிமுகமாகாத புதிய வாசகன் நான். அதே சமயம் தவறாக இணைந்திருந்தாலும் பல காலமாக எனக்கான ஒரே வாசகர் நீங்கள். நன்றி.

    ReplyDelete
  57. அன்புள்ள நண்பர் திரு முத்து குமரன் அவர்களே,

    வாருங்கள். தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என தாங்கள் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு மிகவும் உண்மையே.

    // அதே சமயம் தவறாக இணைந்திருந்தாலும் பல காலமாக எனக்கான ஒரே வாசகர் நீங்கள்.//

    ஏன் இப்படிச் சொல்லுகிறீர்கள் என எனக்குப் புரியவில்லை.

    நான் தங்களுக்கு Follower ஆகியும், இதுவரை தங்களின் படைப்புகளுக்குக் கருத்துக்கள் ஏதும் கூறவில்லையே என்பதால் மட்டுமே இருக்கலாம் என நினைக்கிறேன்.

    தங்களுக்கு மட்டுமல்ல. என் உடல்நிலை மற்றும் வேறு ஒருசில சொந்தப் பிரச்சனைகளால், நான் Follower ஆகியுள்ள அனைத்துத் தளங்களுக்கும் சென்று, வெளியீடுகளைப் படித்து, கருத்துக்கள் கூற முடியவில்லை தான். நானும் அதனை ஒத்துக்கொள்கிறேன்.

    இப்போதெல்லாம் நான் என் டேஷ் போர்டு பக்கமே போவதும் இல்லை. அதற்கெல்லாம் எனக்கு நேரமோ, பொறுமையோ இல்லை.

    வெளியீடுகள் பற்றி மெயில் மூலம் லிங்க் கொடுத்து வரும் ஒருசில நெருங்கிய நண்பர்களின் வலைத்தளங்களுக்கு மட்டுமே, அதுவும் எனக்கு ஓர் Happy Mood அமைந்தால் மட்டுமே சென்று, கருத்துக்கள் கூறிவருகிறேன்.

    இதனால் பலருக்கும் என் மீது சற்று வருத்தமே!

    நான் என்ன செய்வது? என் சூழ்நிலைகள் அவ்வாறு அமைந்துள்ளன.

    என்னாலும் முன்பு போல தொடர்ந்து பதிவுகள் தரமுடியாமலேயே உள்ளன.

    தாங்கள் எல்லோருடைய மனதிலும் இடம் பெறுமாறு, மிகச் சிறந்த ஆக்கபூர்வமான படைப்புகளாகத் தொடர்ந்து வெளியிடுங்கள்.

    தங்களுக்குப் பிடித்தமான பலரின் வலைத்தளங்களுக்குச் சென்று அவர்களுக்கு Follower ஆகி தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள்.

    இதுபோலெல்லாம் ஆர்வமாகச் செய்து வந்தீர்களானால், உங்கள் வலைத்தளத்திற்கு பலரும் அவர்களாகவே வருகைதந்து, Follower ஆகி, கருத்துக்களும் கூறி உற்சாகப்படுத்துவார்கள்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கக்கூடும்.

    சிலரையும், சிலரின் படைப்புகளையும், சிலர் விரும்புவார்கள், சிலர் விரும்பாமல் இருப்பார்கள். எல்லாவற்றையும் நாம் ஏற்றுக் கொள்ள பழகிடல் வேண்டும்.

    நான் வலைப்பூவில் எழுதத்தொடங்கிய புதிதில் [02.01.2011 முதல்] ஓரிரு மாதங்கள் எனக்கும் இந்தப் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது.

    இன்று அதுபோல இல்லை. சுமார் 250 க்கும் மேற்பட்ட Followers அவர்களாகவே வந்து இணைந்துள்ளனர். அதில் 25 முதல் 50 பேர்கள் வரை தொடர்ந்து என்னுடைய படைப்புகளுக்குப் பின்னூட்டமும் அளித்து வருகிறார்கள்.

    நான் தொடர்ந்து எழுத வேண்டும் என எனக்குப் பின்னூட்டம் மூலமும், தொலைபேசி, மின்னஞ்சல், சுட்டிகள் மூலம் தொடர்ந்து என்னை வற்புருத்திவருவோரின் பட்டியல் இன்றும் நீண்டுகொண்டே வருகின்றது.

    சென்ற 2011 ஆண்டு நிறைவில், நான் எழுதிய “நான் ஏறிவந்த ஏணி, தோணி, கோணி” என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.
    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

    தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். நானும் நேரம் கிடைக்கும் போது தங்கள் வலைத்தளத்திற்கு வந்து, படித்துப்பார்த்து, எனக்குப் பிடித்திருந்தால், கருத்துக்கள் கூற முயற்சிக்கிறேன்.

    தாங்கள் தொடர்ந்து சமுதாயத்திற்கு பயன்படும் நல்ல பதிவுகளாகத் தந்து, எழுத்துலகில் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள்.

    [நான் என் இந்த அறிவுரைகளில் தங்களுக்கு ஏதேனும் மன வருத்தம் தருமாறு எழுதியிருந்தால் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.]

    என்றும் அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  58. நன்றி ஐயா, தங்கள் அறிவுரைகளில் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை. நான் அவ்வாறு எழுத காரணம், என் வலைத்தளம் பெயரை ஒத்த மற்றும் ஒரு வலைத்தளம் கண்டதால்தான். எனினும் பெரியவர்கள் அனுபவம் எக்காலத்திலும் பயனுடையது. நன்றி.

    ReplyDelete
  59. வாருங்கள் நண்பர் திரு. முத்து குமரன் அவர்களே!

    தங்களின் மீண்டும் வருகைக்கு நன்றிகள். தங்களின் புரிதலுக்கும் நன்றிகள்.

    நானும் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதையும் புரிந்து கொண்டு விட்டேன். தங்களுடைய வலைத்தளப்பெயரில் பன்மையும், அவர்களுடையதில் ஒருமையும் மட்டுமே உள்ளது.

    இருப்பினும் இவை பிறருக்குக் கொஞ்சம் குழப்பம் தருவதாகத்தான் அமைந்துள்ளன.

    OK மீண்டும் நன்றிகள்.

    [இன்று தங்கள் தளத்திற்கு நான் வருகை தந்து கருத்தளித்துள்ளேன்.]

    மேலும் மேலும் வெற்றிபெற என் அன்பான வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  60. வணக்கம்!

    கம்பனைப் போற்றும் கவிஞன்நான்! வந்தவுடன்
    வம்பனைப் போன்று வதைக்க மனமில்லை!
    எந்தமிழ் மக்கள் இனிய நலமெய்த
    தந்ததமிழ் தாங்கும் தலை!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
  61. வாருங்கள் கவிஞர் திரு. கி.பாரதிதாசன் அவர்களே, வணக்கம்.

    அன்புடன் இங்கு என் தளத்திற்கு இன்று முதல் வருகை தந்து, பின்னூட்டத்திலேயே கவி மழை பொழிந்துள்ளீர்கள்.

    அதற்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    அன்புடன்,
    VGK

    ReplyDelete
  62. நல்ல நகைச்சுவையும் கற்பனையும் கலந்த பதிவு.
    முதல் முறையாக உங்களின் வலைக்கு வந்தேன்.
    சிரித்து மகிழ்ந்தேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள Ms. அருணா செல்வம் அவர்களே,

      வாருங்கள். வணக்கம்.

      தங்களின் முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

      சிரித்து மகிழ்ந்தேன் எனக்கூறுவதும் சந்தோஷமாக உள்ளது.

      தாங்கள் இதுபோல சிரித்து மகிழ நான் 2011 ஆண்டு, நிறைய சிறுகதைகள் வெளியிட்டுள்ளேன். நேரம் கிடைத்தால் போய்ப் படித்துப்பாருங்கள்.

      மாதிரிக்கு இதோ ஒரு சில இணைப்புகள்:
      =======================================
      http://gopu1949.blogspot.in/2011/10/blog-post.html
      பெயர் சூட்டல்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html
      எட்டாக் க[ன்]னிகள்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4903.html
      தாலி

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_445.html
      பவழம்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1783.html
      வரம்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_5143.html
      யார் முட்டாள்?

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_5143.html
      அமுதைப் பொழியும் நிலவே

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4523.html
      திருமண மலைகளும் மாலைகளும்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html
      கொட்டாவி

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_691.html
      தங்கமே தங்கம்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_8942.html
      பிரமோஷன்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_5686.html
      சூழ்நிலை

      http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_11.html
      அழைப்பு

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html
      சிரிக்கலாம் வாங்க ... உலக்கை அடி

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html
      வாய் விட்டுச் சிரித்தால்

      http://gopu1949.blogspot.in/2011/09/blog-post_22.html
      ஏமாற்றாதே .... ஏமாறாதே !!

      http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html
      பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html
      வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம்

      http://gopu1949.blogspot.in/2011/02/1-8.html
      எலிஸபத் டவர்ஸ்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2406.html
      உடம்பெல்லாம் உப்புச்சீடை

      ============================

      படித்து மகிழ்ந்தவற்றிற்கு மறக்காமல் கருத்தும் கூறுங்கள்.

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      Delete
  63. நீங்கள் படித்ததை மொழியாக்கம் செய்து மற்றவர்களும் படிக்க செய்ததற்கு நன்றி நண்பரே..

    எனது தளத்தில் தங்கத்தின் கடந்த ஆண்டுகளின் விலை விவரம்... ( http://yayathin.blogspot.in/2012/09/blog-post_4418.html )

    ReplyDelete
    Replies
    1. Welcome Mr. YAYATHIN Sir.

      வணக்கம்.

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் தங்கமான பதிவினை இப்போது தான் படித்து விட்டு கருத்துக்களும் கூறிவிட்டு வந்துள்ளேன்.

      பார்ப்போம் .... vgk

      Delete
  64. மொழி பெயர்ப்பை சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவது மிக கடினம். பல தொழில்முறை எழுத்தாளர்களே தடுமாறும் அந்தக் கலை உங்களுக்கு வாய்த்திருப்பது கடவுளின் வரம். மிக்க நன்று. //

    உண்மைதான் அய்யா. மிக அருமையாக மொழியாக்கம் செய்துள்ளீர்கள்.. ஓல்ட் ஈஸ் கோல்ட் என்பதை நிருபித்துவிட்டீர்கள். . பாராட்டுகள் வாழ்த்துகள்

    ReplyDelete
  65. வாருங்கள் திருமதி “அன்புடன் மலிக்கா” மேடம்,

    வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    2011 ஜனவரி மாதம் தான் நான் வலையுலகில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தேன். மறுமாதமே அதாவது 06.02.2011 அன்றே என்னை தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருந்தீர்கள்.

    அவை எவ்வளவு மகிழ்ச்சியான தருணங்கள் தெரியுமா! என்னால் தங்களை என்றுமே மறக்க முடியாது மேடம்.

    http://blogintamil.blogspot.in/2011/02/blog-post_06.html
    ”வலையில் சிக்கிய சுறாக்களும் புறாக்களும்” என்ற தலைப்பில், எங்கள் எல்லோரையும் புகைப்படங்களுடன் அறிமுகப்படுத்தி, அசத்தியிருந்தீர்கள்.

    மீண்டும் என் அன்பான நன்றிகள்.

    அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  66. சார் வணக்கம் பயணப்படி பட்டியலை கருவுலத்தில் செலுத்தி பணம் கொடுத்த பட்டியலை பணமாக்கிடலாம் நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான முதல் வருகைக்கும்
      அழகான நம்பிக்கையளிக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Mrs. Mohan P அவர்களே.

      Thank you & Welcome.

      Delete
  67. நல்ல மொழியாக்கம்,
    நகைச்சுவை ஆனந்தம் நிறைந்தது.
    நல்வாழ்த்து ஐயா...எனக்கு 65 வயது.
    இறயாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் Ms. kovaikkavi வேதா. இலங்காதிலகம் அவர்களே!

      வணக்கம்.தங்களின் அன்பான் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Madam.

      நீங்கள் என்னைவிட 2-3 ஆண்டுகள் மூத்தவர்.
      இறையாசியுடன் நீடூழி வாழ்க!

      அன்புடன்,
      VGK

      Delete
  68. ரொம்பவும் ரசிக்கும்படியான பதிவு. அரசுத் துறையில் 38 ஆண்டுகள் பணி புரிந்து விட்டேன். நேரடியாக ‘லஞ்ச லாவண்ய’த்தில் பாதிக்கப்படாவிட்டாலும் மற்றவர்களின் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

    அனுமனையும் விட்டு வைக்கவில்லையே.

    ரசிக்கத்தக்க நல்ல கற்பனை

    ReplyDelete
    Replies
    1. WELCOME to you Ms. JAYANTHI RAMANI Madam.

      தங்களின் புதிய வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      நானும் உங்களைப்போலவே 38+ ஆண்டுகள் மத்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளேன். நானும் என் பணி நாட்களில் நேரிடையாக எந்தவொரு பாதிப்புக்கும் ஆளானது இல்லை.

      பிறர் சொல்லிக் கேள்விப்பட்டது மட்டுமே உண்டு.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் vgk

      Delete
  69. Replies
    1. அப்பாவி தங்கமணி
      Simply superb..


      Welcome.
      Thanks a Lot Madam.
      vgk

      Delete
  70. சுவாரஸ்யமான பதிவு சார்! கற்பனை என்றே தோன்றவில்லை நிஜமென்றே தோன்றியது சார்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Ms. யுவராணி தமிழரசன் Madam.

      vgk

      Delete
  71. வணக்கம். எப்படிசார் இப்படியெல்லாம் கற்பனை போகிறது. காப்பி பேஸ்ட் செய்கிற எனக்கு சோம்பேறித்தனம் ரொம்ப இருக்கு. தாங்கள் பதிவும் எழுதிக் கொண்டும், கருத்துகளுக்கு விரிவான பதிலும் போடுகிறீர்களே??? ரொம்ப சந்தோஷம் சார். உங்கள் தளத்திற்கு வந்தாலே மனசெல்லாம் லேசாகிவிடுகிறது. புத்துணர்ச்சி தன்னாலே வந்துவிடுகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  72. வணக்கம். எப்படிசார் இப்படியெல்லாம் கற்பனை போகிறது. காப்பி பேஸ்ட் செய்கிற எனக்கு சோம்பேறித்தனம் ரொம்ப இருக்கு. தாங்கள் பதிவும் எழுதிக் கொண்டும், கருத்துகளுக்கு விரிவான பதிலும் போடுகிறீர்களே??? ரொம்ப சந்தோஷம் சார். உங்கள் தளத்திற்கு வந்தாலே மனசெல்லாம் லேசாகிவிடுகிறது. புத்துணர்ச்சி தன்னாலே வந்துவிடுகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  73. வாருங்கள் Mr Kasiviswanath Ramanathan அவர்களே!

    வணக்கம்.

    //எப்படிசார் இப்படியெல்லாம் கற்பனை போகிறது?//

    2011 ஜனவரி முதல் டிஸம்பர் வரை நிறைய பதிவுகள் கொடுத்துள்ளேன். கற்பனையும் நகைச்சுவையும் அவற்றில் கலந்திருக்கும்.

    இந்தக்கதை என்னுடைய சொந்தக்கற்பனை அல்ல.
    ஆங்கிலத்தில் வந்த மெயில் தகவலை தமிழாக்கம் செய்து சற்றே காது மூக்கு வைத்து, கொஞ்சம் என் பாணியில் நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளேன்.

    //காப்பி பேஸ்ட் செய்கிற எனக்கு சோம்பேறித்தனம் ரொம்ப இருக்கு.//

    இருக்கலாம். இப்போதெல்லாம் அதே சோம்பேறித் தனம் எனக்கும் வரத்தான் செய்கிறது. அதற்கு பல்வேறு சொந்தக் காரணங்களும் இருக்கின்றன.

    எந்தவிதமான தொந்தரவுகளும் இன்றி Happy mood ஏற்பட்டால் என்னால் ஏராளமான பதிவுகள் சொந்தக் கற்பனையில் தர முடியும்.

    //தாங்கள் பதிவும் எழுதிக் கொண்டும், கருத்துகளுக்கு விரிவான பதிலும் போடுகிறீர்களே??? ரொம்ப சந்தோஷம் சார்.//

    ஆமாம் சார். ஓரளவு நல்ல தரமுள்ள, சுவாரஸ்யமான பதிவுகளாக அவ்வப்போது நாம் தர வேண்டும்.

    அதே சமயம் நம் பதிவுக்கு சிரத்தையாக வருகை தந்து கருத்துச் சொல்லியவர்களுக்கு, நாம் நிச்சயம் நன்றி சொல்லி நாலு வரிகளாகவது Feed Back தர வேண்டும்.

    அவ்வாறு நம்மால் தரப்படும் பதில்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறுபட்ட முறையில் இருக்க வேண்டும் என்பதில் நான் மிகுந்த கவனம் செலுத்தக் கூடியவனே.

    என் தளத்திற்கு வருகை தந்து ரஸித்துப்படித்து, கருத்துக்கூறுபவர்கள் ஓரளவு கணிசமாக அளவில் இருப்பதால், இவ்வாறு அவர்கள் ஒவ்வொருவரையும் நான் மிகவும் மதித்து, என் பதில் கருத்துக்களை மாறுபட்ட முறையில் தருவதால், எங்களுக்குள் உள்ள நட்புகள் நாளுக்கு நாள் வலுப்படுவதாக நான் நம்புகிறேன். அது தான் உண்மையும் கூட.

    இவ்வாறு ஒரு Personal + Friendly Relationships களை, வலுவாக ஏற்படுத்திக்கொள்ளாமல், தினமும் For Votes & Hits alone ஏராளமான பதிவுகளாகத் தருவதில் ஒன்றும் அர்த்தமே இல்லை என்பது என் அபிப்ராயம்.

    //உங்கள் தளத்திற்கு வந்தாலே மனசெல்லாம் லேசாகிவிடுகிறது. புத்துணர்ச்சி தன்னாலே வந்துவிடுகிறது.//

    ஆஹா, இதைக்கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

    முடிந்தால் என்னுடைய மற்ற பதிவுகளையும் படியுங்கள். பிடித்திருந்தால் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து அனுப்புங்கள்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான எண்ணப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்,
    VGK

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் உங்களுடைய விரிவான பதிலுக்கு. அவசியம் மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்

      Delete
    2. அன்புள்ள Kasiviswanath Ramanathan Sir அவர்களே,

      வாருங்கள். தங்களின் அன்பான மீண்டும் வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது.

      தங்கள் வசதிக்காக குட்டியூண்டு நகைச்சுவைக் கதைகளாக கீழே ஒரு 18 இணைப்புகள் கொடுத்துள்ளேன். இவை ஒவ்வொன்றையும் படிக்க ஐந்து நிமிடங்கள் மட்டுமே போதும்.

      தினமும் ஒன்று அல்லது இரண்டு வீதம் படித்து விட்டுக் கருத்து அளியுங்கள். எல்லாம் படித்த பிறகு எனக்கு ஓர் மெயில் கொடுங்கோ.என் Mail ID: valambal@gmail.com

      பிறகு மேலும் பல நல்ல மிகச்சிறந்த கதைகளின் இணைப்புகளை தருகிறேன். தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கு மீண்டும் என் இனிய நன்றிகள்.
      அன்புடன் VGK

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_8942.html
      பிரமோஷன்

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html
      வாய்விட்டுச்சிரித்தால்

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html
      சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]

      http://gopu1949.blogspot.in/2011/10/blog-post.html
      பெயர் சூட்டல்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1783.html
      வரம்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_5143.html
      யார் முட்டாள்?

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_10.html
      அமுதைப்பொழியும் நிலவே !

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4523.html
      திருமண மலைகளும் மாலைகளும்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html
      கொட்டாவி

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html
      எட்டாக்க[ன்]னிகள்

      http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_26.html
      முன்னெச்சரிக்கை முகுந்தன்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2535.html
      கார் கடத்தல்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_691.html
      தங்கமே தங்கம்

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_16.html
      பகற்கொள்ளை

      http://gopu1949.blogspot.in/2012/02/i-q-tablets.html
      ஐக்யூ டாப்லெட்ஸ் [I Q TABLETS]

      http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html
      விருது மழையில் தூறியதோர் குட்டிக்கதை.
      [ புத்திசாலி மனைவியைப் பற்றிய நகைச்சுவைக் கதை ]

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4903.html
      ”தாலி”

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_04.html
      ”ஆசை”

      ======================

      Delete
  74. //KASTHURI RAJAM September 28, 2012 2:17 AM
    nice content//

    Thank you very much, Madam.

    vgk

    ReplyDelete
  75. //கணேஷ் September 29, 2012 2:02 AM
    excellent one.

    nice work.
    I enjoyed.//

    My Dear Ganesh,

    Welcome.

    How are you?

    I am very glad to see you here after a very long period.

    However I am also not giving any fresh releases after 3rd May 2012 except "Thanks for some Awards" given to me by others.

    Please convey my kind enquiries to your Mrs. & kids.

    All are safe at Tiruchi. No problems. Bye for now.

    GOPU

    ReplyDelete
  76. அன்பு நண்பர் அன்பு தாஸன் அவர்களே, வாருங்கள். வணக்கம்.

    அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

    வலைச்சரம் பற்றி அறிந்துள்ளீர்களா? கீழ்க்கண்ட இணைப்புக்குச் செல்லுங்கள். அவ்விடம் இன்று [02 10 2012] என்னைபற்றி ஏதேதோ குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள், திருமதி மஞ்சுபாஷிணி என்ற இந்த வார வலைச்சர ஆசிரியர்.

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

    நேரம் இருந்தால் மேற்படி இணைப்புக்குச்சென்று தாங்களும் தங்கள் கருத்தினை பதிவு செய்யுங்கள்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  77. மதன்மணி பேசுகின்றேன் தங்கள் பதிவு நடப்பியலை வலியுறுத்தி அமைந்துள்ளது தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. மதன்மணி October 3, 2012 12:56 AM
      மதன்மணி பேசுகின்றேன் தங்கள் பதிவு நடப்பியலை வலியுறுத்தி அமைந்துள்ளது தொடர்ந்து எழுதுங்கள்...//

      வாருங்கள் திரு மதன்மணி அவர்களே. வணக்கம். தங்களின் புதிய வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.

      என்னைப்பற்றி மேலும் சில விபரங்கள் அறிய நேற்று 02.10.2012 வெளியிடப்பட்டுள்ள வலைச்சரத்தைப் போய் பாருங்கள். கருத்துக் கூறுங்கள். இணைப்பு இதோ:

      http://blogintamil.blogspot.in/search?updated-max=2012-10-03T11:38:00%2B05:30

      அன்புடன்,
      VGK

      Delete
  78. மதன்மணி பேசுகின்றேன் தங்கள் பதிவு நடப்பியலை வலியுறுத்தி அமைந்துள்ளது தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
  79. இது இன்றும் மிக நன்றாக பொருந்துகிறது...

    ஏன் சோனியாவின் 1800 கோடி பயணச் செலவுக்கு கூட இந்த பதிவு மிகவும் நன்றாகவே பொருந்துகிறது. இன்றைய இந்தியாவின் நிலையை மிக நன்றாகவே விளக்கியுள்ளீர்கள்...

    அருமை

    ReplyDelete
    Replies
    1. //இரவின் புன்னகை October 3, 2012 12:58 AM
      இது இன்றும் மிக நன்றாக பொருந்துகிறது...

      ஏன் சோனியாவின் 1800 கோடி பயணச் செலவுக்கு கூட இந்த பதிவு மிகவும் நன்றாகவே பொருந்துகிறது. இன்றைய இந்தியாவின் நிலையை மிக நன்றாகவே விளக்கியுள்ளீர்கள்...

      அருமை//

      வாருங்கள், தங்களின் அன்பான முதல் வருகையும் அழகான கருத்துக்களும் என்னை மகிழ்விக்கின்றன.

      தங்களின் பெயரைப் படித்ததும் எனக்குப் பகலிலேயே புன்னகை ஏற்பட்டது. மிக்க நன்றி.

      என்னைப்பற்றி மேலும் சில விபரங்கள் அறிய நேற்று 02.10.2012 வெளியிடப்பட்டுள்ள வலைச்சரத்தைப் போய் பாருங்கள். கருத்துக் கூறுங்கள். இணைப்பு இதோ:

      http://blogintamil.blogspot.in/search?updated-max=2012-10-03T11:38:00%2B05:30

      அன்புடன்,
      VGK

      Delete
    2. சரி அய்யா, நான் சென்று பார்க்கிறேன். நன்றி, வணக்கம்...

      Delete
    3. தாங்கள் கொடுத்த இணைப்பில் தங்களைப் பற்றி தெரிந்துகொண்டேன் அய்யா. வாழ்த்துகள். தங்கள் குருங்கதைகளையும் விரைவில் படித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்...

      Delete
    4. இரவின் புன்னகை October 15, 2012 12:17 PM
      //தாங்கள் கொடுத்த இணைப்பில் தங்களைப் பற்றி தெரிந்துகொண்டேன் அய்யா. வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      //தங்கள் குறுங்கதைகளையும் விரைவில் படித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்...//

      படியுங்கள். வாரம் ஒன்றல்லது இரண்டு வீதம் பொறுமையாகப்படியுங்கள். எல்லாமே சுவாரஸ்யமாகத் தான் இருக்கும். படித்தவற்றிற்கு தயவுசெய்து கருத்துக் கூறுங்கள்.

      அன்புடன்
      VGK

      Delete
  80. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ராமா,,,

    பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் போடலாம்னா பெட்டியை கண்டிபிடிக்கவே இம்புட்டு நேரமாயிடுச்சே...


    ரசிக்கும்படியான வார்த்தை ஜாலங்கள்,, கண் முன்னே பாத்திரங்களை காட்சிபடுத்தியது,,,,

    அருமை,,

    தொடருங்கள்,,

    ReplyDelete
    Replies
    1. தொழிற்களம் குழு October 4, 2012 2:15 AM

      தொழிற்களம் குழுவின் முதல் வருகைக்கு நன்றி. வாருங்கள்.

      //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ராமா,,,

      பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் போடலாம்னா பெட்டியை கண்டிபிடிக்கவே இம்புட்டு நேரமாயிடுச்சே...//

      ஆஹா! ;) அது ஏன் தெரியுமா? லஞ்சமய்யா லஞ்சம். அந்த லஞ்சம் பற்றிய பெட்டியைக் கண்டு பிடிப்பது கஷ்டமய்யா .. கஷ்டம். மஹா கஷ்டம்.

      //ரசிக்கும்படியான வார்த்தை ஜாலங்கள்,, கண் முன்னே பாத்திரங்களை காட்சிபடுத்தியது,,,,//

      மிக்க நன்றி ... என் எழுத்தினைத் தாங்கள் பாராட்டியுள்ளதற்கு மட்டும்.

      //அருமை, தொடருங்கள்.//

      நோ நோ ... லஞ்சத்தை அருமை எனச் சொல்வது தவறு.
      லஞ்ச லாவண்யங்கள் இனி தொடரக்கூடாது ஐயா, கூடாது.

      அன்புடன்,
      VGK

      Delete
  81. Thank you very much for your visit, support and comments on my blog..
    but I don't know Tamil..

    ReplyDelete
  82. Lakshmi October 4, 2012 5:16 PM
    Thank you very much for your visit, support and comments on my blog.. but I don't know Tamil..//

    That is alright Madam. No problem at all.

    I just visited your blog and enjoyed the design you have given in your recent post of "embroidery on a saree blouse". It was very Nice & attractive to me.

    I like all these art work. You may just go through some of my work [just pictures only] in my post. Link given below:

    http://gopu1949.blogspot.in/2011/07/6.html
    கலைகளிலே அவள் ஓவியம்

    http://gopu1949.blogspot.in/2011/07/1.html
    நல்லதொரு குடும்பம்

    http://gopu1949.blogspot.in/2011/07/2.html
    அலுவலக நாட்கள்

    http://gopu1949.blogspot.in/2011/07/3.html
    என்னை வரவேற்ற எழுத்துலகம்

    http://gopu1949.blogspot.in/2011/07/4.html
    நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள்

    http://gopu1949.blogspot.in/2011/07/5.html
    துபாய்ப் பயணம்

    http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
    About sharing of my 12th award with 108 Blog Writers

    Yours,
    VGK

    ReplyDelete
  83. நல்ல பதிவு VGK சார். வலைச்சரத்தில் உங்களின் அறிமுகத்துக்கான சிறப்புப் பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டேன். நன்றி.

    ReplyDelete
  84. //SOS October 7, 2012 3:10 AM
    நல்ல பதிவு VGK சார். வலைச்சரத்தில் உங்களின் அறிமுகத்துக்கான சிறப்புப் பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டேன். நன்றி.//

    பார்த்தேன். அங்கு பதிலும் கொடுத்துள்ளேன்.
    ரொம்ப ரொம்ப சந்தோஷம் சகோதரி.

    கடைசியில் [SOS என்ற தங்களின் தளத்தின் பெயருக்குப் பொருத்தமாகவே] மெளனத்தைக் கலைத்து சப்தத்தை எழுப்பிப் என்னையும் மஞ்சுவையும் பாராட்டியுள்ளதற்கு உங்களுக்கும் என்னுடைய ”A VERY BIG ROYAL SALUTE !” ;)))))

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  85. சிரித்தேன். அலுவலக வாழ்க்கையும் இந்த மாதிரி வேண்டுமென்றே எழுதிய க்ளார்க்கும் உடனே நினைவுக்கு வந்தனர்.

    இப்போதைய யு.பி.யே. கவர்மெண்ட் எழுதும் ஆபீஸ் நோட்டுகள், இதைவிட, அருமையாக இருக்குமா? ஆர்.டீ.ஏ. போட்டுப பார்த்தால் தெரியும்;-)

    ReplyDelete
  86. //Pattu Raj October 8, 2012 6:21 AM
    சிரித்தேன். அலுவலக வாழ்க்கையும் இந்த மாதிரி வேண்டுமென்றே எழுதிய க்ளார்க்கும் உடனே நினைவுக்கு வந்தனர்.

    இப்போதைய யு.பி.யே. கவர்மெண்ட் எழுதும் ஆபீஸ் நோட்டுகள், இதைவிட, அருமையாக இருக்குமா? ஆர்.டீ.ஏ. போட்டுப பார்த்தால் தெரியும்;-)//

    அன்பின் பட்டு,

    வாங்கோ, வாங்கோ, வாங்கோ... நமஸ்காரம்.
    எப்படியிருக்கேள்? செளக்யம் தானே!

    தங்களின் அன்பான வருகையும், அழகானப் பட்டுப்போன்ற கருத்துக்களும் எனக்கு மகிழ்வளிக்கின்றன.

    இங்கு திருச்சியில் 24 மணி நேரத்தில் தினமும் 14 மணி நேரங்கள் மின்தடை ஏற்பட்டு பாடாய்ப் படுத்தி வருகிறது. அதனால் என்னால் வலைப்பக்கமே சரியாக வர முடிவதில்லை.

    அப்புறம் நேற்று ஓர் கனவு கண்டேன். [கனாக்கண்டேன் தோழி].

    அதாவது இந்த வாரம் என் அன்புக்குரிய பட்டுவின் தோட்டவேலைகளில் உள்ள அழகான அருமையான ஈடுபாடுகள், பற்றி மிகப்பிரபலமாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்படுவது போல கனாக் கண்டேன்.

    என் கனவு நிச்சயமாகப் பலிக்கும். அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    நிஜமாகவே இந்தக்கனவு பலித்து உங்கள் பெயர் பிரபலப் ப்டுத்தப்படும்போது, இங்கு மின்சாரம் இருக்குமா? இன்வெட்டெர் உதவுமா? கணினியில் நெட் க்னெக்‌ஷன் கிடைக்குமா என என்னால் உறுதியாகச் சொல்ல முடியாததால், இப்போதே இங்கேயே உங்களைப் பாராட்டி விட்டேன். OK யா ?

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete
  87. மிகவும் ரசனையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  88. //மாதேவி October 9, 2012 8:19 AM
    மிகவும் ரசனையான பகிர்வு. பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி, மேடம். சந்தோஷம்.

    ReplyDelete
  89. நல்ல பதிவு . பாராட்டுக்கள்

    ReplyDelete
  90. மாலதி October 10, 2012 3:19 AM
    நல்ல பதிவு . பாராட்டுக்கள்/

    மிக்க நன்றி. சந்தோஷம்.

    ReplyDelete
  91. Sir, You have a big heart to encourage all of the new comes to the blog world and make us write. Taht makes you unique.
    I am sorry about the power situation. I only wish the power connections in the ministers and the officials also gets disconnected . Then only we can say we are true democracy.

    All the best.

    ReplyDelete
  92. And thanks for the "parattukkal". Ranjani madam is eqully kind to mention me.

    ReplyDelete
  93. Pattu October 17, 2012 2:14 AM
    //Sir, You have a big heart to encourage all of the new comes to the blog world and make us write. Taht makes you unique.
    I am sorry about the power situation. I only wish the power connections in the ministers and the officials also gets disconnected . Then only we can say we are true democracy.

    All the best.//

    ஆஹா, வாருங்கள் பட்டு, வணக்கம். தங்களின் மீண்டும் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மீண்டும் மகிழ்வளிக்கிறது.

    //ஐயா, வலைத்தளத்தில் புதிதாக எழுதவரும் அனைத்து எழுத்தாளர்களையும் உற்சாகப்படுத்தி எழுத வைக்கும்
    தங்களுக்கு மிகவும் பரந்தமனது தான்.

    அதுதான் தங்களை ஓர் ஒப்பற்றவராக ஆக்கி எல்லோருக்குமே அடையாளம் காட்டியுள்ளது.//

    பட்டுவின் வாயால் இதைக் கேட்க எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

    எனக்குப் பரந்த மனது எனில் எங்கள் பட்டுவுக்கு:

    பட்டுப்போன்ற மனதல்லவா ! ;)))))) [SILKY SWEET HEART]

    //தமிழக மின்தடைகள் பற்றி கேள்விப்பட்டு நான் வருந்துகிறேன்.

    மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவர் வீட்டிலும் மின் இணைப்புகள் இதுபோல துண்டிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.

    அப்போதுதான் நாம் அதை உண்மையான ஜனநாயகம் என பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்.//

    மிகச்சிறந்த ஜனநாயகம் வளர, மிகச்சுலபமான வழிமுறைகள் சொல்லியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    // வாழ்த்துகள் //

    தங்களின் அன்பான வருகை+வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete
  94. தன்னிகரில்லாத சொல்லின் செல்வனான
    அனுமனுக்கே ஜாம்பவானின் உதவி
    தேவைப்படும் கலிகாலம் !!..

    ReplyDelete
    Replies
    1. //இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:03 AM
      தன்னிகரில்லாத சொல்லின் செல்வனான
      அனுமனுக்கே ஜாம்பவானின் உதவி
      தேவைப்படும் கலிகாலம் !!..//

      ஆமாம். கலிகாலமே தான் !

      இப்படியெல்லாம் சில நல்லவர்களையும் கஷ்டப்படுத்துது. ;(

      Delete
  95. நகைச்சுவையாக இருப்பதாலும், பல அலுவலகங்களில் இன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகத் தெரிவதாலும், அதை நான் தமிழாக்கம் செய்து இங்கு தங்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளேன்]

    எந்த்க்காலத்திற்கும் பொருந்தும் அருமையான நிகழ்வை நகைச்சுவையுடன் பகிர்ந்தமைக்குப்பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரிJanuary 29, 2013 at 12:07 AM

      **நகைச்சுவையாக இருப்பதாலும், பல அலுவலகங்களில் இன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகத் தெரிவதாலும், அதை நான் தமிழாக்கம் செய்து இங்கு தங்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளேன்**

      //எந்த்க்காலத்திற்கும் பொருந்தும் அருமையான நிகழ்வை நகைச்சுவையுடன் பகிர்ந்தமைக்குப்பாராட்டுக்கள்.//

      தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றீங்க !

      Delete
  96. தர்மசங்கடமான சூழ்நிலைகள்
    தர்மத்தை அநுசரிப்பவர்களுக்கு
    ஏற்படுவது எப்போதும் தவிர்க்கமுடியாததுதானே..

    ReplyDelete
    Replies
    1. //இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:09 AM
      தர்மசங்கடமான சூழ்நிலைகள்
      தர்மத்தை அநுசரிப்பவர்களுக்கு
      ஏற்படுவது எப்போதும் தவிர்க்கமுடியாததுதானே..//

      ஆமாம். இந்தத்தங்களின் கருத்து தன்னை கவர்ந்ததாக நம் அன்பின் சீனா ஐயா அவர்கள் கூட தன் மறுமொழியில், மேலே சுட்டிக்காட்டியுள்ளார்.

      இதோ அதை இங்கு நான் கீழே கொடுத்துள்ளேன்:

      -=-=-=-=-=-=-=-
      இங்கு இராஜ இராஜேஸ்வரியின் வரிகள்: //தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் தர்மத்தை அனுசரிப்பவர்கள் சிக்கித்தவிப்பது தவிர்க்கமுடியாததாயிற்றே // என்னைக் கவர்ந்தன.
      - சீனா ஐயா
      -=-=-=-=-=-=-=-
      என்னையும் மிகவும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பக் கவர்ந்த வரிகள் தான் அவை! ;))))) - VGK
      -=-=-=-=-=-=-=-

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க !

      Delete
  97. அனுமன் கொண்டுவந்த சஞ்சீவி மலையில் இருந்த சொக்குப்பொடி -சிரிக்கும் மூலிகைப்பொடியையும் கலந்து சிரிக்கவைத்த அருமையான பகிர்வுக்குப்பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. //இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:15 AM
      அனுமன் கொண்டுவந்த சஞ்சீவி மலையில் இருந்த சொக்குப்பொடி -சிரிக்கும் மூலிகைப்பொடியையும் கலந்து சிரிக்கவைத்த அருமையான பகிர்வுக்குப்பாராட்டுக்கள்..//

      சொக்குப்பொடி போட்டது போன்ற இந்தத்தங்களின் கருத்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் என் நன்றீங்க!

      Delete
  98. சரியான கணக்கு அதிகாரியாக இருந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  99. "அய்யா மன்னிக்கவும். உங்களது பதிவை ஒட்டியே எனது பதிவும், படங்களும் அமைந்து விட்டன. இது யதேச்சையாக நடந்தது. இருப்பினும் மன்னித்துக் கொள்ளக் கோருகிறேன்."

    ReplyDelete
    Replies
    1. வெட்டிப்பேச்சு May 16, 2015 at 7:42 PM

      வாங்கோ, வணக்கம்.

      //"அய்யா மன்னிக்கவும். உங்களது பதிவை ஒட்டியே எனது பதிவும், படங்களும் அமைந்து விட்டன. இது யதேச்சையாக நடந்தது. இருப்பினும் மன்னித்துக் கொள்ளக் கோருகிறேன்."//

      இந்தக்கதைக்கான கரு என்னுடையதும் அல்ல. தங்களுடையதும் அல்ல. மின்னஞ்சலில் எனக்கு என் தோழி ஒருத்தி பல வருடங்கள் முன்பே ஆங்கிலத்தில் அனுப்பியிருந்தாள். அதனை என் பாணியில் நான் தமிழாக்கம் செய்து, என் வழக்கமான நகைச்சுவை உணர்வுகளையும் அதில் கொஞ்சம் கலந்து கொடுத்திருந்தேன்.

      அதையே இப்போது தங்கள் பாணியில் தாங்கள் தமிழில் கொடுத்துள்ளீர்கள். நல்லதுதான்.

      அதனால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இதில் இடமில்லை, ஐயா. மனதில் எந்தவொரு வருத்தமும் வேண்டாம். எனக்கும் மகிழ்ச்சியே.

      அன்புடன் VGK

      Delete
  100. ஏற்கனவே ஊழல் குறித்தும் file interpretation குறித்தும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அய்ய தயவு கூர்ந்து அதனையும் பார்வையிடவும்.

    http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_4453.html

    ReplyDelete
    Replies
    1. வெட்டிப்பேச்சு May 16, 2015 at 7:49 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஏற்கனவே ஊழல் குறித்தும் file interpretation குறித்தும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அய்யா தயவு கூர்ந்து அதனையும் பார்வையிடவும்.

      http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_4453.html//

      பார்த்தேன், படித்தேன், இன்று கருத்தளித்துள்ளேன். தகவல் கொடுத்து இணைப்பு கொடுத்து, தங்கள் தளம் பக்கம் வரவேற்று, உபசரித்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

      பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள். தங்களின் இதுபோன்ற நியாயமான + பிறர் மனதைப் புண்படுத்தாத எழுத்துப்பணிகள் தொடரட்டும். சமுதாயத்தில் ஒரு சிலராவது நியாயவான்களாக தங்களை மாற்றிக்கொண்டு திருத்தினால் மகிழ்ச்சிதான்.

      அன்புடன் VGK

      Delete
  101. அய்யா, நான் ஏற்கனவெ குறிப்பிட்டிருந்தது போல இது என்னுடைய கற்பனை அல்ல. நண்பரது விழாவிற்குச் சென்றிருந்தபோது ஒரு ஆடிட்டர் அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருந்த கதைதான் இது. நான் ஊழல் பற்றிய உரத்த சிந்தனை கொண்டவனானதால் இதை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். மற்றபடி நான் இந்த பதிவை வெளியிட்டபோது அதில் சில திருத்தங்கள் செய்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றிய எனது கடைசி சிந்தனை இந்தப் பதிவை மறுபடி DRAFT க்கு REVERT செய்ய வைத்தது. அதனால்தான் இந்தப் பதிவு உங்கள் டேஷ் போர்டில் தெரிந்துள்ளது. இந்தப் பதிவின் தலைப்பே மாறியுள்ளது அதை கவனித்தீர்களானால் தெரியும்.

    மற்றபடி என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள சூழல் காரணங்களும் மற்றவைகளும் இருந்த போதும் இதை இயல்பாய் எடுத்துக் கொண்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகின்றது.
    நன்றி.
    God Bless You

    ReplyDelete
  102. ஆஹா நாமாயண கதையிலேயே உங்க நகைச்சுவை கற்பனை கலந்துட்டீங்களா. இதுகூட நல்லாதான் இருக்கு. எந்த காலத்துக்கும் பொருந்தும்படிதான் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 13, 2015 at 9:52 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஹா இராமாயண கதையிலேயே உங்க நகைச்சுவை கற்பனை கலந்துட்டீங்களா. இதுகூட நல்லாதான் இருக்கு. எந்த காலத்துக்கும் பொருந்தும்படிதான் இருக்கு//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete
    2. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 செப்டெம்பர் வரை முதல் 21 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      Delete
  103. ராமாயண காலத்துலகூட லஞ்சம்லா இருந்தாப்ல கற்பன பண்ணிபோட்டீகளா உங்க கற்பன இப்பகூடதான் பொருந்துது

    ReplyDelete
    Replies
    1. mru October 21, 2015 at 6:13 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ராமாயண காலத்துலகூட லஞ்சம்லா இருந்தாப்ல கற்பன பண்ணிபோட்டீகளா உங்க கற்பன இப்பகூடதான் பொருந்துது//

      அப்படியாம்மா ....

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா.

      Delete
  104. ஹா ஹா உங்ககறபனைக்கு அளவே கிடையாதா என்னதான் இது உங்களுக்கு வந்த மெயில் விஷயம் என்றாலும் ரசிக்கும்படி தமிழில் சொல்லி இருப்பது கலகலதான்.

    ReplyDelete
  105. ஏற்கனவே படித்துள்ளேன். மீண்டும் படித்தேன்...ரசித்தேன்..

    ReplyDelete