About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, July 3, 2015

நினைவில் நிற்போர் - 33ம் திருநாள்

2





நினைவில் நிற்கும்


பதிவர்களும், பதிவுகளும்


33ம் திருநாள்


03.07.2015



211.  திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


அற்புத அன்னை ஸ்ரீ சமயபுரம் மஹாசக்தி-101

சந்தோஷம் அருளும் அன்னை ஸ்ரீ சாரதாம்பாள்-102

குதூகலக் குழந்தைகள் தினம்-103
அழகு மலர்களின் கொண்டாட்டம்-104








212.   திருமதி. SANDHYA அவர்கள்
வலைத்தளங்கள்: 
மறக்காத மன்னி
மறதி மன்னி
SWAADHISHT


http://swaadhisht.blogspot.in/2009/03/ribbon-pakkodaoattu-pakkoda-south_05.html

ரிப்பன் பக்கோடா
ரவா தோசை
Cycles, The Most Convenient Transport!
HAPPY HOBBY
மொஜில்லா பயர் பாக்ஸ் - Mozilla Fire Fox application




213. திருமதி. புதுகைத் தென்றல் அவர்கள்
வலைத்தளம்: புதுகைத் தென்றல்



மாலத்தீவு பயணக்குறிப்புகள்

புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி!

சிறுதுளி .... பெருவெள்ளம்  ....
இதை எப்படி ஹேண்டில் செய்வது?

இவர்களின் வலைத்தளம் பற்றி
‘கலைமகள்’ பத்திரிகையில்
பாராட்டிப் பேசப்பட்டுள்ளது.





 

214.  திருமதி. துளசி கோபால் அவர்கள்
வலைத்தளங்கள்: 
துளசிதளம்
விக்கி பசங்க
சற்று முன்....
சாப்பிடவாங்க!
ஏழாம்படைவீடு
 

கடந்த 11 வருடங்களாக பல்வேறு வலைத்தளங்களில் 

2000க்கும் மேற்பட்ட 

பதிவுகள் கொடுத்து அசத்தியுள்ளார்கள். 



சமீபத்திய ஸ்ரீரங்கம் பயணம் + பதிவர்கள் சந்திப்பு





215.  திருமதி.  தீபிகா அவர்கள்
வலைத்தளம்: தீபிகா கவிதைகள்




மதிப்புக்குரிய ஆண்களுக்கு
வண்ணத்துப்பூச்சியும் மகனும்
குடியிரவு
சிறை வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்




216.   திருமதி. அகிலா அவர்கள்
வலைத்தளம்: சின்னச் சின்ன சிதறல்கள்

 
இதுவரை இவர்கள் வெளியிட்டுள்ள 
இரு கவிதைத்தொகுப்பு நூல்கள்

 

எதைப்பேச முடியும்?
கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
ஹலோ .. ராங்க் நம்பர்
அம்மா என்கிற பெண் தெய்வம்


217.   திருமதி. பிரியா அவர்கள்
வலைத்தளம்: என் மனதில் இருந்து


முதல் ஸ்பரிசம் [பென்சில் ஓவியம்]
கரையாத நினைவுகளோடு
அழகு என்பது நிச்சயம் பெண்பால்தான் !
[அழகான ஓவியங்கள்]
காதலாகிக் கசிந்துருகும் வேளையிலே!
கொஞ்சம் வரைந்துதான் பாருங்களேன்



218.   திருமதி. பூவிழி அவர்கள்
வலைத்தளம்: பூவிழி


பல் போனா சொல் போச்சு - ஞானப்பழம் நீ
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
குப்பையும் கோபுரம் ஆகுதாம்




219.  திருமதி. பிரியா ஆனந்தகுமார் அவர்கள்

வலைத்தளம்: PRIYA'S VIRUNDHU

 

இவரும் தன் சமையல் குறிப்புகளை
ஆங்கிலத்தில் எழுதி வருபவர்.





220. சுய அறிமுகத்தில் சில .... 


மலரும் நினைவுகள்
படங்களுடன் ....
ஒவ்வொன்றாகக் க்ளிக் செய்து பாருங்கள்





3rd July, 1972

 

Pavithra and Shiva

 

Anirudh and Aadharsh


As on Today .... 3rd July, 2015 
We are blessed with Four Grand Children ! :)





24th February 2009 
[Retirement from BHEL]




27th July, 1999
First Prize - Gold Necklace !

அகில இந்திய அளவில் 
கட்டுரைப்போட்டியில் வென்றது



 
28th February, 2010

முதல் நூலுக்கு 
முதல் பரிசு

 



 
17th January, 2010

இரண்டாம் நூலுக்கு 
மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு




 



 15th May, 2011

மூன்றாம் நூலுக்கு
முதல் பரிசு !






OCTOBER, 2004 AT DUBAI
துபாய் தமிழ்ச் சங்கத்தில்
முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு
போட்டிகளில் வென்றோருக்கு பரிசளித்தல்




கல்கியில் வந்த அட்டைப்பட ஜோக்
பார்த்து நான் வரைந்த படம்








மீண்டும் நாளை சந்திப்போம் !






என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

54 comments:

  1. பச்சைக்கிளிகளின் குதாகலத்துடன் இன்றைய அனைத்து அறிமுகப் பதிவர்களிற்கும் நிறைந்த வாழ்த்துகள் உரித்தாகுக.
    சுய அறிமுகத்தில் தங்கள் படங்களும் கண்டு மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. @kovaikkavi

      :) வாங்கோ மேடம், வணக்கம்.

      பச்சைக்கிளிகளின் குதூகலத்துடன் தாங்களும் பறந்துவந்து அனைவருக்கு நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்கிச் சென்றுள்ளீர்கள்.

      மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      Delete
  2. அருமையான மலரும் நினைவுகள்! சார்! ஃபோட்டோக்களும்அருமை....தங்கள் தளத்திற்கு வர சிறிது தாம்தமாகிவிட்டது சார்....எவ்வளவு பரிசுகள்! எவ்வளவு படைப்புகள்! அசத்துகின்றீர்கள் சார்....மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது உங்களைப்போன்றோருடன் இங்கு வலையில் நட்புடன் இருப்பது.....

    தங்களுக்காகப் பிரார்த்தனைகளுடன்....

    ReplyDelete
    Replies
    1. @Thulasidharan V Thillaiakathu

      :) வாங்கோ சார், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அசத்தலான கருத்துக்களுக்கும், மகிழ்ச்சியளிக்கும் பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      தாமதமானால் என்ன? நம் எல்லோருக்கும் இது மிகவும் சகஜமே.

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete
  3. எத்தனை பதிவர்கள்! பலரை நீங்கள் அடையாளப்படுத்துகின்றீர்கள்! நாங்கள் ஒரு சிலரின் தளங்களுக்கு வழக்கமாகச் செல்வதுண்டு...நண்பர்கள். நிறையபேரைத் தெரிந்து கொள்கின்றோம் சார் தங்களால்...அவர்களது இடுகைகள் உட்பட...

    மிக்க நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. @Thulasidharan V Thillaiakathu

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், அரிய பல நல்ல கருத்துக்களுக்கும் மீண்டும் என் நன்றிகள், சார்.

      Delete
    2. சகோதரி துளசி கோபால் அவர்களின் தளத்தைத் தொடர்ந்து வருகின்றோம்... நேற்று இந்தக் கிளி படங்கள் வரவில்லை நெட் முரண்டு பிடித்தது...

      கொள்ளை அழகு கிளிகள் கண்ணாடி பார்த்து தன் அழகை மெச்சிக் கொண்டு பெருமிதமாக ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றன பாருங்கள்...அப்படியே அந்தக் குஞ்சுகளையும் வாரி எடுத்துக் கொஞ்ச வேண்டும் போல் உள்ளது....அருமையான படங்களை அள்ளித் தெளிக்கின்றீர்கள்....என்ன ஆகிறது என்றால் இந்தப் படங்கள் எல்லாம் மனதைக் கொள்ளை கொண்டு விடுவதால் தாங்கள் தரும் பதிவர்களையும் பின்னால் தள்ளிவிட்டு இந்தப் படங்கள் முன்னே வந்து பேசுகின்றன...ஹஹஹ்ஹ் (ஜோக்ஸ் அபார்ட்...!!) அருமையாக கல்ர்ஃபுல்லாகத் தருகின்றீர்கள் சார்....

      Delete
  4. அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

    மலரும் நினைவுகளில் படங்கள் அருமையோ அருமை....கருப்பு வெள்ளைப்படம் + இப்போதய படம் - இரண்டிலும் மன்னி ஒரே மாதிரி சிரித்தபடி இருக்கிறார்கள் . நீங்களும் தான் ....ஐயா.

    நகைச்சுவைப் படம் - அழகாய் வரைந்து இருக்கிறீர்கள்

    பண விசிரி மாலை கைவந்த கலையாய் இருக்கிறது.

    அருமை அருமை...நன்றி

    ReplyDelete
    Replies
    1. R.Umayal Gayathri July 3, 2015 at 2:04 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்....//

      சந்தோஷம்.

      //மலரும் நினைவுகளில் படங்கள் அருமையோ அருமை.... கருப்பு வெள்ளைப்படம் + இப்போதய படம் - இரண்டிலும் மன்னி ஒரே மாதிரி சிரித்தபடி இருக்கிறார்கள் . நீங்களும் தான் .... ஐயா.//

      ஆஹா, நல்ல ஜோக் ! :) மிக்க மகிழ்ச்சி.!! :)

      //நகைச்சுவைப் படம் - அழகாய் வரைந்து இருக்கிறீர்கள்//

      மிக்க நன்றி.

      //பண வி சி றி மாலை கைவந்த கலையாய் இருக்கிறது. அருமை அருமை...நன்றி//

      :) சந்தோஷம். சந்தோஷம், மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      Delete
  5. மலரும் நினைவுகளை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. @பழனி. கந்தசாமி

      :) வாங்கோ முனைவர் சார். வணக்கம் சார்.

      //மலரும் நினைவுகளை ரசித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி + நன்றி, சார்.

      Delete
  6. துளசி டீச்சர் மட்டுமே நான் அறிந்த பதிவர் - ராஜராஜேஸ்வரி அம்மா, வைகோ ஸார் தவிர!

    இரண்டாம் நூலுக்கு இரண்டாம்பரிசும், மூன்றாம் நூலுக்கு முதல் பரிசும்! மகிழ்ச்சி.

    உங்கள் கைத்திறனைக் காட்டும் பகிர்வுகளும், கலைத்திறனைக் காட்டும் பகிர்வுகளுமாய் சுய அறிமுகம் ஜோர்!

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம்.

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம். அப்போ உங்களுக்கு 10க்கு 3 மார்க் மட்டுமே இன்று. :)

      //இரண்டாம் நூலுக்கு இரண்டாம்பரிசும், மூன்றாம் நூலுக்கு முதல் பரிசும்! மகிழ்ச்சி.//

      ”இரண்டாம் நூலுக்கு இரண்டாம்பரிசும், முதல் மற்றும் மூன்றாம் நூலுக்கு முதல் பரிசும்! மகிழ்ச்சி” என இருக்க வேண்டுமோ?

      //உங்கள் கைத்திறனைக் காட்டும் பகிர்வுகளும், கலைத்திறனைக் காட்டும் பகிர்வுகளுமாய் சுய அறிமுகம் ஜோர்!//

      ஜோரான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி, ஸ்ரீராம்.

      Delete
  7. அனைத்து தளங்களுக்கும் சென்றேன். பெரும்பாலானோர் புதியவர்கள், துளசிதளம் தவிர. நாளை சந்திப்போம்.
    தினமணி இதழில் வெளியான எனது பேட்டியை கீழ்க்கண்ட இணைப்பில் காண அழைக்கிறேன்.
    http://www.ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. @Dr B Jambulingam

      வாங்கோ, முனைவர் சார், வணக்கம். தகவல்களுக்கும் அன்பான தங்களின் அழைப்பிற்கும் மிக்க நன்றி. நேரம் கிடைக்கும் போது வர முயற்சிக்கிறேன்.

      மிக்க மகிழ்ச்சி + நன்றி, சார்.

      Delete
  8. துளசிதளம் தவிர அனைத்துத்தளங்களும் புதியவையே. அனைத்துத் தளங்களுக்கும் சென்றேன், படித்தேன். தங்கள் வாழ்நாளின் முக்கிய நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் அருமை. நன்றி. நாளை சந்திப்போம்.
    தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @Dr B Jambulingam

      //தங்கள் வாழ்நாளின் முக்கிய நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் அருமை.//

      தங்களின் ‘அருமை’ என்ற அருமையான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி, சார்.

      Delete
  9. அன்புள்ள கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,
    உங்கள் வலைத்தளத்தில் என் அறிமுகத்தைப் பார்த்து நெகிழ்ந்து விட்டேன். மிக்க நன்றி! தமிழில் எழுதுவதே இல்லை. என் மகன் எழுத சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஒருநாள் ஆரம்பிக்கணும். உங்களால் நிறைய தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் என் நன்றி.

    சில பேர் எழுத்து ஏற்கனவே அறிமுகம். புதியவர்களையும் படிக்கிறேன்.

    உங்களைப் பற்றிய புதிய தகவல்கள் தெரிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Sandhya July 3, 2015 at 7:29 AM

      வாங்கோ வாங்கோ ... வணக்கம். வெகுநாட்களுக்குப்பின்பு மீண்டும் தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

      //அன்புள்ள கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,
      உங்கள் வலைத்தளத்தில் என் அறிமுகத்தைப் பார்த்து நெகிழ்ந்து விட்டேன். மிக்க நன்றி! //

      தங்களின் இந்தக் கருத்துக்களும் என்னை ஒரேயடியாக நெகிழத்தான் வைக்கிறது :)

      //தமிழில் எழுதுவதே இல்லை. என் மகன் எழுத சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஒருநாள் ஆரம்பிக்கணும்.//

      இப்போதே இன்றே இங்கேயே முதன்முதலாகத் தமிழில் எழுத ஆரம்பித்துள்ளீர்களே ! என் கண்ணே பட்டுவிடும் போல மிக அழகாகத் தவறேதும் இல்லாமல், எழுத்துப்பிழையேதும் இல்லாமல் அருமையோ அருமையாக எழுதியுள்ளீர்கள், மேடம் ! :) மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதற்குக் காரணமான தங்கள் மகனுக்கும் என் நன்றிகளைச் சொல்லுங்கோ, ப்ளீஸ்.

      //உங்களால் நிறைய தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் என் நன்றி.//

      ஆஹா, இதைக் கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //சில பேர் எழுத்து ஏற்கனவே அறிமுகம். புதியவர்களையும் படிக்கிறேன்.//

      ஆஹா, பேஷாப் படியுங்கோ !

      //உங்களைப் பற்றிய புதிய தகவல்கள் தெரிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். //

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு

      Delete
  10. இன்றைய அறிமுகப்பதிவர்களில் திருமதி துளசி கோபால் அவர்களின் வலைத்தளம் எனக்கு பரிச்சயமானது. மற்றவர்களின் வலைத்தளங்கள் எனக்கு புதியவை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ‘மலரும் நினைவுகளில்’ காலம் போட்டிருக்கும் கோலத்தை பார்த்து இரசித்தேன்.
    தங்களின் கைவேலைப்பாட்டுத் திறனுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி July 3, 2015 at 7:45 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //இன்றைய அறிமுகப்பதிவர்களில் திருமதி துளசி கோபால் அவர்களின் வலைத்தளம் எனக்கு பரிச்சயமானது. மற்றவர்களின் வலைத்தளங்கள் எனக்கு புதியவை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! //

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார். :)

      ‘மலரும் நினைவுகளில்’ காலம் போட்டிருக்கும் கோலத்தை பார்த்து இரசித்தேன்.

      காலம் ..... அது போட்டுவிட்ட ..... கோலம் !

      நானும் தங்களின் இந்தச்சொல்லாடலை மிகவும் இரசித்தேன் ! :)

      //தங்களின் கைவேலைப்பாட்டுத் திறனுக்கு வாழ்த்துக்கள்! //

      தங்களின் அன்பான தினசரி வருகைக்கும், அழகழகான ’கோலங்கள்’ போன்ற கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      Delete
  11. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    மலரும் நினைவுகள் வெகு ஜோர்...

    ReplyDelete
    Replies
    1. @திண்டுக்கல் தனபாலன்

      :) வாங்கோ Mr DD Sir, வணக்கம்.

      //மலரும் நினைவுகள் வெகு ஜோர்...//

      வெகு ஜோரான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      Delete
  12. congrats to everybody, thank you very much sir for bringing back all the wonderful memories...

    ReplyDelete
    Replies
    1. @Priya Anandakumar July 3, 2015 at 10:00 AM

      வாங்கோ வாங்கோ, வணக்கம். வெகுநாட்களுக்குப்பின்பு மீண்டும் தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

      //congrats to everybody, thank you very much sir for bringing back all the wonderful memories...//

      அனைவர் சார்பிலும் தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், ஆச்சர்யமான எல்லா நினைவலைகளையும் நான் மீண்டும் மீட்டுக்கொடுத்துள்ளதாகச் சொல்லி நன்றி கூறியுள்ளதற்கும், என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு

      Delete
  13. இன்று அறிமகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. @mehrun niza

      :) வாங்கோ, வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      தொடர்ந்து முயற்சித்து, இறுதியாக வெற்றிக்கொடியை எட்டிப்பிடித்து விட்டீர்கள் எனத் தெரிகிறது. மிகவும் சந்தோஷம். என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு

      Delete
  14. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
    தங்களின் சுயஅறிமுகம் படங்களுடன் வெகு சிறப்புங்க ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சசி கலா July 3, 2015 at 1:05 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.//

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      //தங்களின் சுயஅறிமுகம் படங்களுடன் வெகு சிறப்புங்க ஐயா.//

      ’வெகு சிறப்பான’ என்ற தங்களின் வெகு சிறப்பான கருத்துக்களுக்கு மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி :)

      Delete
  15. தாங்கள் இத்தனை புத்தகங்கள் எழுதியவர் என்பதை இன்று தான் அறிந்துகொண்டேன். மகிழ்ச்சி அய்யா!
    இன்றைய அறிமுக பதிவர்களில் துளசியம்மாவை தவிர மற்ற அனைவருமே எனக்கு புதியவர்கள். தங்கள் மூலம் நிறைய பதிவர்களை அறிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
    Replies
    1. @S.P. Senthil Kumar

      //தாங்கள் இத்தனை புத்தகங்கள் எழுதியவர் என்பதை இன்று தான் அறிந்துகொண்டேன். மகிழ்ச்சி ஐயா!//

      எல்லாப்புகழும் என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் ஸ்ரீனிவாஸன் அவர்களை மட்டுமே சாரும். நான் எழுதியுள்ள இவை அவர் எழுதியுள்ள நூல்களின் எண்ணிக்கைகளில் ஒரு 10% மட்டுமே இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

      தங்களின் அன்பான இன்றைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. நாளைக்கும் அவசியமாக வாங்கோ, ப்ளீஸ். :)

      Delete
  16. எல்லோருக்கும் வாழ்த்துகள். தினமும் பார்க்காது இருப்பதில்லை.
    கன ஜோராக அறிமுகங்கள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi July 3, 2015 at 4:06 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.

      //எல்லோருக்கும் வாழ்த்துகள். தினமும் பார்க்காது இருப்பதில்லை. கன ஜோராக அறிமுகங்கள். அன்புடன்//

      :) இதனைக்கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி :)

      அன்புடன் கோபு

      Delete
  17. வணக்கம் வை கோ ஐயா.

    தங்கள் பார்வை துளசிதளத்துக்கும் கிடைத்தது மன மகிழ்ச்சியைத் தந்தது. அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    இத்தனை அன்பும் பரிவும் இணையம் கொடுத்த நன்கொடை.

    மீண்டும் வணக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. துளசி கோபால் July 3, 2015 at 4:13 PM

      //வணக்கம் வை கோ ஐயா.//

      வாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

      //தங்கள் பார்வை துளசிதளத்துக்கும் கிடைத்தது மன மகிழ்ச்சியைத் தந்தது.//

      ஸ்ரீகோபாலகிருஷ்ண பகவானின் பார்வை துளஸிதளத்தின் மேல் தானே எப்போதுமே இருக்க முடியும் ! பெருமாளின் திவ்யப்பிரஸாதமான துளஸி தளத்தினால் (துளஸி தளம் கலந்த தீர்த்தத்தினால்) மட்டுமே, இந்த என் பதிவு இன்று புண்ணியம் பெற்று ஜொலிக்கிறது என நான் நினைத்து மகிழ்கிறேன்.

      //அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

      தங்களின் வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கு அனைவர் சார்பிலும் என் அன்பான நன்றிகள்.

      //இத்தனை அன்பும் பரிவும் இணையம் கொடுத்த நன்கொடை. மீண்டும் வணக்கங்கள்.//

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. பெருமையே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      Delete
  18. வணக்கம் அய்யா,
    தங்கள் தளம் அறிமுகப்பதிவர்கள், அதனின் தங்களின் கலை என அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. mageswari balachandran July 3, 2015 at 4:33 PM

      //வணக்கம் ஐயா,//

      :) வாங்கோ, வணக்கம்.

      //தங்கள் தளம் அறிமுகப்பதிவர்கள், அதனின் தங்களின் கலை என அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள். நன்றி//

      கலை உணர்வுடன் கூடிய தங்களின் அருமையான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      Delete
  19. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @பரிவை சே.குமார்

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      Delete
  20. தங்களின் தளத்தில் என் அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி அய்யா..
    இவ்வளவு விரிவாய் இத்துணை பொறுமையுடன் விவரித்தமைக்கு என் நன்றி. உங்களின் நூல்களையும் கண்டேன். மிக்க மகிழ்வே.

    ReplyDelete
    Replies
    1. Ahila D July 3, 2015 at 7:15 PM

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      //தங்களின் தளத்தில் என் அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி ஐயா.. இவ்வளவு விரிவாய் இத்துணை பொறுமையுடன் விவரித்தமைக்கு என் நன்றி.//

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      // உங்களின் நூல்களையும் கண்டேன். மிக்க மகிழ்வே.//

      மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கு மீண்டும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  21. Replies
    1. Chitra July 3, 2015 at 9:01 PM

      //Super! Best wishes!//

      :) வாங்கோ சித்ரா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      Delete
  22. பதிவர்களுக்கு வாழ்த்துகள்!!!

    தாங்கள் பெற்றுள்ள பாராட்டுகள், வெகுமதிகள்,
    கண்டு மிக்க மகிழ்ச்சி!!!

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் July 4, 2015 at 3:18 AM

      வாங்கோ நண்பரே, வணக்கம்.

      //பதிவர்களுக்கு வாழ்த்துகள்!!!//

      OK ... மிக்க மகிழ்ச்சி + நன்றி.

      //தாங்கள் பெற்றுள்ள பாராட்டுகள், வெகுமதிகள்,
      கண்டு மிக்க மகிழ்ச்சி!!!//

      மகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ள வெகுமதிகளான தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. :)

      Delete
  23. இப்பதிவில் அடையாளம் காட்டப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @வெங்கட் நாகராஜ்

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      Delete
  24. vanakkam,

    indrudhan valaipo pakkam vandhen. ennai gypagam vaithirundhu pathivil suttihal koduthatharku mikka nandri

    ReplyDelete
    Replies
    1. புதுகைத் தென்றல் July 13, 2015 at 7:56 PM

      //vanakkam, வணக்கம்//

      வாங்கோ, வணக்கம்.

      //indrudhan valaipo pakkam vandhen. ennai gypagam vaithirundhu pathivil suttihal koduthatharku mikka nandri இன்றுதான் வலைப்பூப்பக்கம் வந்தேன். என்னை ஞாபகம் வைத்திருந்து பதிவில் சுட்டிகள் கொடுத்துள்ளதற்கு மிக்க நன்றி//

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி.

      Delete
  25. அருமையான மலரும் நினைவுகளுக்கும்,
    அழகான பதிவர்கள் அறிமுகத்திற்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையான மலரும் நினைவுகளுக்கும், அழகான பதிவர்கள் அறிமுகத்திற்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

      எனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களைத் தங்களிடம்கேட்டு, முதன் முதலாக என் பதிவினில் படங்களை இணைத்து இந்தப்பதிவினை நான் வெளியிட்ட நாளும், இப்போது நினைத்தாலும் மலரும் நினைவுகளாக என் மனதுக்கு மகிழ்ச்சியினை அளிக்கிறது.

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க :)))))

      Delete
  26. உங்கள் வலைத்தள மலரும் நினைவுகள் அருமையோ அருமை. அறிமுகப் பதிவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)

      Delete