என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3

நூல் வெளியீடு:
சிவப்பு பட்டுக் கயிறு 
(சிறுகதைகள்)
நூல் ஆசிரியர்: 
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்

PUBLISHER:

DISCOVERY BOOK PALACE
# 6, MAHAVEER COMPLEX
MUNUSAMY SALAI
K.K.NAGAR WEST
CHENNAI-600 078

PHONE: +91 - 44-6515 7525
MOBILE: +91 87545 07070

E-mail: discoverybookpalace@gmail.com
Website: www.discoverybookpalace.com 

First Edition: May 2016

Total No. of Pages: 104 
(Excluding wrappers)

Price Rs. 80/- only



ஓர் சிறுகதைத் 
தொகுப்பு நூலுக்கான மதிப்புரை





 



4) கத்திக் கப்பல்

”எப்ப வருவ.. எப்ப வருவ..” என்ற ஆரம்ப வரிகளுடன், மிக அழகானதோர் நாட்டுப்புறப் பாடலுடன்  ஆரம்பிக்குது இந்தக்கதை  .... அந்தப் பாடலின் இடையில் வரும் ஒருசில வரிகள் :-

குழம்புதான் வைக்கிறேன் .....
பொடியும் புளியுமில்லாம ......
குழம்புதய்யா என் மனசு .........

வெளிநாட்டில் கணவன் ... நம் நாட்டில் மனைவி.  சில இடங்களில் வெளி நாட்டில் மனைவி ... இங்கு நம் நாட்டில் கணவன் என, அவரவர்களின் பணி நிமித்தமாகப் பிரிந்து வாழ நேரிடுகிறது. எப்போதோ அவர்கள் இருவரும் ஒன்று சேர நேரிடுகிறது. பிறகு மீண்டும் பிரிய வேண்டியதாகிறது. அவ்வாறான சில ஜோடிகளின் சேரும் மற்றும் பிரியும் உணர்வுகளை எழுத்தில் வடித்து மிக அருமையாகக் கொடுத்துள்ளார்கள், நம் ஹனி மேடம். 

இவ்வாறான ஜோடிகளின் காதல், காம இச்சைகள், ஒருவர் மீது மற்றொருவர் வைக்கும் நம்பிக்கைகள், ஆங்காங்கே தவறுகள் நடப்பதற்கான சிற்சில வாய்ப்புகள்; உணர்ச்சி வேகத்தினால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத மனநிலையில் நிகழ்ந்துவிடும் அவ்வாறான சில தவறுகளையும், பெரிது படுத்தாமல் சகஜமாக ஏற்றுக்கொள்பவர்கள், என பலதரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.  

இதுபோக உலகில் ஆங்காங்கே நிகழும் தீவிர வாதங்கள், இயற்கையின் பேரிடர்கள் .... அந்த சமயங்களில் செய்திகளை பார்த்து, படித்து துடித்திடும் உள்ளங்கள் என அனைத்தையும் பற்றி அலசி ஆராய்ந்து மிக அழகாக எழுதியிருக்கிறார்கள். பொருத்தமான தலைப்பினையும் கொடுத்துள்ளார்கள்.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

இந்தக்கதையில் ரேகா என்ற இளம் வயது மாடர்ன் பெண் ஒருத்தி ஓர் கதாபாத்திரமாக வருகிறாள். அவளின் நடை உடை பாவனை ஹேர் ஸ்டைல் எல்லாமே மாறிப்போய் வருகிறது. பல ஆடவர்களோடு சகஜமாகப்பழகி சுற்றித் திரிபவளாகவும்  இருக்கிறாள். 

வெளிநாடுகள் பலவற்றில் கப்பலில் சுற்றிக்கொண்டிருக்கும், தன் கணவனையே நினைத்து எப்போதும் அவன் நினைவாகவே ஏங்கி வருபவளான வேறொருத்தியிடம், ஒருநாள் இந்த மேற்படி ரேகா என்பவள் பேச நேரிடுகிறது.

’ஆத்துல போறத் தண்ணி தானே... ஐயா நீ குடுச்சுக்கோ, அம்மா நீ குடுச்சுக்கோ’  என்பதே என் பாலிஸி, என ரேகா இவளிடம் அப்பட்டமாகச் சொல்லிச் சிரித்து மகிழ்ந்து கொள்கிறாள்.  

”மேலும் கண்ட்ரி கண்ட்ரியா போகும்போது ஆங்காங்கே இருக்கிற கேளிக்கை விடுதிகளுக்கெல்லாம் போகாமல் எந்த ஆம்பளையுமே இருக்க மாட்டாங்க. லைவ் ஷோ, பீப் ஷோ, ந்யூட் ஷோ எல்லாம் தெரியாதுன்னு சொன்னாக்க, அவன் உங்கிட்ட நான் நல்லவன்னு ஷோ காட்டுறான்னு அர்த்தம்” என ஓர் புதிய அர்த்தம் சொல்லி இவளையும் மனம் தடுமாறுமாறு செய்துவிட்டு போய்க்கிட்டே இருக்கிறாள். 

[இந்தக்கதை 29.03.2013 - 05.04.2013 தினமலர் பெண்கள் மலரில் வெளியாகியுள்ளது]

 



5) பட்டாம் பூச்சிகளும் பூக்களும்


பூக்களைப் பெண்களாகவும், மலருக்கு மலர் தாவும் பட்டாம் பூச்சிகள் + வண்டுகளை ஆண்களாகவும் கற்பனை செய்து எழுதப்பட்டுள்ள மிகவும் அருமையான கதையாக உள்ளது. ஆரம்பத்தில் உள்ள வரிகளிலேயே ஏராளமான கற்பனை வளங்களும், வர்ணனைகளும்  நிறைந்துள்ளன. 

ஒரு காலக் கட்டத்தில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் மிகச்சிறந்த பிரபல நடிகைகளில் பலரும் நாளடைவில் என்ன ஆகிறார்கள்? 

அவ்வாறு தாங்கள் கொஞ்சம் நாட்கள் ஜொலிக்க வேண்டியும், அந்த ஜொலிப்பினைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியும், அவர்கள் கொடுத்துள்ள + இழந்துள்ள விலைகள்தான் எத்தனை எத்தனை? 

அவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதன் உண்மையான காரணம் என்ன?  அவர்கள் உழைத்துக் கொண்டுவரும் காசினை அவர்களுடன் கூடவே  உள்ளவர்கள் ஏன் தட்டிப்பறித்து, அவர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எப்போதும் ஹிம்சிக்கிறார்கள்? என பலவிஷயங்களைப் பக்குவமாகக் கோடிட்டுக் காட்டி நமக்கு உணர்த்துகிறார்கள், இந்தக்கதையில்.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

எத்தனைக் கதாநாயகிகளைப் பார்த்தாலும் அத்தனை பேரோடும் கூடிக்களிக்கும் கதாநாயகர்களின் மனநிலையில் வண்ணத்துப் பூச்சிகள் சுற்றுவதை உணர்ந்த பூக்களுக்கும் தெரியும் ... இந்த மயக்கமெல்லாம் நம்மிடம் தேனிருக்கும்வரை மட்டுமே என்றும், பளபளப்புத் தீர்ந்தவுடன் கசங்கிய ஜிகினாக் காகிதமாய் குப்பையாய் வாடிப்போய் விடுவோம் என்றும்.

சினிமாவோ அல்லது விளம்பரமோ காசு வந்து கொட்டினால் போதும். நல்ல நடிகை என்ற பெயரை நிலை நிறுத்திக்கொண்டு விட்டால்போதும். சில காலகட்ட கஷ்டங்களுக்குப்பின் பெரிய அளவு அங்கீகாரமும், புகழும், மரியாதையும் கிடைக்கும். அதற்குக் கொடுக்கும் விலை சில சமயம் உடலாகவும், சில சமயம் தன்மானமாகவும் இருக்கும். 

ஒவ்வொரு சிரமத்தையும் கடக்க, உடல் என்னும் வாகனத்தைச் சுமந்தபடி, அந்த உடல் என்னும் வாகனத்தில் சில சமயம், ஒரே நேரத்தில் பலரையும் சுமந்தபடி கடக்க வேண்டியிருக்கும். 

கடக்கும் இந்தக் கஷ்டம், அதே நடிகை பிரபலமடைந்து விட்டால் குறைந்துவிடும். பின்னர் பலர் தன்னைச் சுமக்க .... தான் பல்லக்கில் ஏறிச் சுகமாகப் பயணம்  செல்லலாம். 

ஏதோ ஓரிடத்தில் அல்லது ஓர் படத்தில் பயங்கர அடி வாங்கிவிட்டால் பின் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி, தன் கால்களால் தானே நடந்தே போக வேண்டியதுதான். 

ஒரு பெண் நடிகையாகவோ, இயக்குனராகவோ ஆவது ஒன்றும் பெரிய கஷ்டமே இல்லை. அதற்கு உடல் பளபளப்பும் வடிவமும் மிகவும் முக்கியம். இன்றைய வெகுஜனம் நடிப்பைவிட உருவங்களின் அழகுக்குத்தானே மயங்குகிறது. உடனடி ரெஸ்பான்ஸ் என்பது அதற்குத்தான். அப்படி அழகாக இருப்பவளுக்கு, ஒருவேளை கொஞ்சம் நன்கு நடிக்கவும் தெரிந்திருந்தால் அது ஒரு போனஸ் தகுதிதான்.


 


6) செம்மாதுளைச் சாறு

இது ஒரு வித்யாசமான கற்பனைக்கதை. ஏற்கனவே ஹனி மேடம் பதிவுகளில் நான் படித்துள்ள கதையும்கூட.

வங்கியில் ஏராளமாகப் பணம் டெபாஸிட் செய்துள்ளவர்களுக்கு மட்டுமே அங்கு வரவேற்பும் அதிகமாகக் கிடைக்கிறது. எதனையும் பாதுகாப்பாக வைக்க லாக்கர் வசதியும் கிடைக்கிறது. வங்கி மேலாளரை எதற்கும் அவர்களால், மிகச் சுலபமாக நேருக்கு நேர் தனிமையில் சந்திக்கவும் முடிகிறது. 

சின்னச் சின்ன ட்ரான்ஸாக்‌ஷன்களுக்குக்கூட அவர்கள் அங்குள்ள வங்கி ஊழியர்களை அணுகாமல் நேரிடையாக வங்கி மேலாளரின் குளுகுளு அறையில் போய் உட்கார்ந்து, அவர்களின் தேவைகளைச் சொல்லி, உடனடியாக அவரையே வேலை வாங்கி சுலபமாக முடித்துக்கொள்ள முடிகிறது. 

அதற்காக எதை வேண்டுமானாலும் அங்கு பாதுகாப்பாக லாக்கரில் வைத்துக்கொள்வார்களா என்ன? 

தானே போய் ரிஜிஸ்டரில் கையொப்பமிட்டுவிட்டு, இவர்களுக்கான லாக்கர் ரூமின் சாவியை வாங்கிக்கொண்டு, அவர்களிடம் சொல்லாமல் + கண்ணில் காட்டாமலேயே கூட வைத்துவிட்டு வந்து விடலாம்தான். 

ஆனால் இவர்களுக்குள்ள தனி செல்வாக்கினைக் காட்டவும், அதை எப்போதும் நிலைநிறுத்திக்கொள்ளவும், மேலாளர் ரூமுக்குப்போய் அவரிடம் பெருமையாக அனைத்தையும் சொல்லிக்கொள்வார்கள்.

அது அந்த வாடிக்கையாளருக்கு மிக மிக முக்கியமான, விலை மதிப்பற்ற பொருளே தான் என்று நன்கு உணர்ந்தும் கூட, அதை வங்கி மேலாளரால் தன் வங்கி லாக்கரில் வைக்க அனுமதிக்க முடியவில்லை. 

அடமானம் போலவாவது வாங்கி, பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சியும், அதுவும் முடியாது என்கிறார் அந்த வங்கி மேலாளர். 

வங்கியின் வாடிக்கையாளராக வந்துள்ளவள் மிகவும் கடுப்பாகி, திரும்ப அந்தப்பொருளை தன்னுடனேயே மிகுந்த மனபாரத்துடன் எடுத்துக்கொண்டு செல்கிறாள்.

அவள் போன பிறகும், அன்று அந்த வங்கி மேலாளரால் தன் பணிகளைத் தொடர்ந்து இயல்பாகச் செய்ய முடியவில்லை.  அவர் ஏனோ ஒருவித அதிர்ச்சிக்கு உள்ளாகி பயத்தில் அமர்ந்து இருக்கிறார். 

ஒருவேளை இந்தப் பணக்காரியான வாடிக்கையாளர் தன் வேலைக்கே உலை வைத்துவிடுவாளோ என்ற பயமாகவும் கூட அவருக்கு இருக்கலாம்.

இந்தக்கதையைப் படித்தால் மட்டுமே இதனை முழுவதுமாக நீங்களும் உணர முடியும். 

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:-

தன்னிடம் உள்ள அந்தப்பொருளை வங்கியில் ஒப்படைத்துவிட்டால் தீர்ந்தது பாரம். எல்லாவற்றிலும் மிக இலகுவானதாய் கைப்பிடி அளவே இருந்தாலும், எல்லாவற்றிலும் கடினமாகவே அது இருந்து வந்தது அவள் மனதுக்கு. எதைப்போட்டாலும் உள்ளடக்கி வழிந்து கொண்டிருந்தது அது. 

அதை மட்டும் ஒப்புவித்துவிட்டால், ஒரு காற்றடைத்த பலூன் போல எங்கெங்கும் பறந்து செல்லலாம் என்ற நினைவே நிம்மதியாக இருந்தது அவளுக்கு. 

ஆனால் அது நடக்காததில் அவளுக்குப் பெருத்த ஏமாற்றமே.





இந்த என் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள் 
36 மணி நேர இடைவெளிகளில்
வெளியிட திட்டமிட்டுள்ள உத்தேச நேர அட்டவணை:

பகுதி-4 .... 27.09.2016 செவ்வாய் ....   பகல்  10 மணிக்கு
பகுதி-5 .... 28.09.2016 புதன் ..............   இரவு  10 மணிக்கு
பகுதி-6 .... 30.09.2016 வெள்ளி .........  பகல்  10 மணிக்கு

தொடரும்


 


என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]

89 கருத்துகள்:

  1. நூல் மதிப்புரை என்பதானது ஆராய்ந்து படித்து, அறிமுகப்படுத்தி, முக்கியமானவற்றை உள்வாங்கிக் கொண்டு செய்வது என்பதற்கு உதாரணமாக உங்களது பதிவு. மிகவும் ரசித்தேன். தேனம்மை அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr B Jambulingam September 26, 2016 at 6:50 AM

      வாங்கோ, முனைவர் ஐயா அவர்களே, வணக்கம்.

      //நூல் மதிப்புரை என்பதானது ஆராய்ந்து படித்து, அறிமுகப்படுத்தி, முக்கியமானவற்றை உள்வாங்கிக் கொண்டு செய்வது என்பதற்கு உதாரணமாக உங்களது பதிவு. மிகவும் ரசித்தேன்.//

      நல்ல வாசிப்புக்கு ஓர் உதாரணமாக, என் மதிப்புரையை ஆராய்ந்து படித்து, உள்வாங்கிக்கொண்டு தாங்களும் இங்கு கருத்தளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ஐயா.

      //தேனம்மை அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்களுக்கு நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான கருத்துக்களுக்கும், கதாசிரியருக்கான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
    2. சரியாவும் சிறப்பாவும் சொன்னீங்க ஜம்பு சார். /////நூல் மதிப்புரை என்பதானது ஆராய்ந்து படித்து, அறிமுகப்படுத்தி, முக்கியமானவற்றை உள்வாங்கிக் கொண்டு செய்வது என்பதற்கு உதாரணமாக உங்களது பதிவு. மிகவும் ரசித்தேன்.//

      அத வெகு சிறப்பா செய்திருக்கும் விஜிகே சாருக்கு மனமார்ந்த நன்றி. உங்களுக்கும் நன்றி. :)

      நீக்கு
  2. கத்திக்கப்பலில் யதார்த்தமான உண்மைகள் நல்லா சொல்லி இருக்காங்க வேலைக்காக வெளிநாடுகளில் தனியாக வசிக்கும் ஆணோபெண்ணோ பல விஷயங்களைத்தாண்டித்தான் வர வேண்டி உள்ளது.ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறமுடியும்னு சொல்லிடுவாங்க.. தன்சுகம் சந்தோஷம் எல்லாத்தையும் இழந்துதான் கைநிறய காசு சம்பாதிக்கறாங்க. எல்லோராஸும் புத்தராக முடியாது.. மனக்கட்டுப்பாட்டை தகற்கவென்றே எவ்வளவு..எவ்வளவு பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... September 26, 2016 at 10:01 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ !!! வணக்கம்.

      //ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறமுடியும்னு சொல்லிடுவாங்க..//

      மிகவும் சரியே. மஹா பாரதக்கதையில் தன் சொந்த மூத்த மகனான கர்ணனை இழந்தே அர்சுனனைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது, குந்தியால் அன்று.

      //எல்லோராலும் புத்தராக முடியாது.. //

      ஆம். அது எப்படி முடியும்? அப்படி முடிந்தால் புத்தருக்கு எப்படித் தனிச்சிறப்பும் மதிப்பும் இருக்க முடியும்?

      //மனக்கட்டுப்பாட்டை தகர்க்கவென்றே எவ்வளவு.. எவ்வளவு பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டது.//

      ஆமாம். மிகவும் உண்மைதான். இன்றுள்ள சூழ்நிலைகளில் மனதைக் கட்டுப்படுத்திக்கொள்வது இயலாத மிகக் கஷ்டமான காரியம் மட்டுமே.

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. சரியா கணிச்சிருக்கீங்க ஸ்ரத்தா அருமை.. ///தன்சுகம் சந்தோஷம் எல்லாத்தையும் இழந்துதான் கைநிறய காசு சம்பாதிக்கறாங்க. எல்லோராஸும் புத்தராக முடியாது.. மனக்கட்டுப்பாட்டை தகற்கவென்றே எவ்வளவு..எவ்வளவு பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டது. ///

      கருத்துக்கு நன்றிம்மா. நன்றி விஜிகே சார்

      நீக்கு
  3. பட்டாளம் பூச்சிகளும்...பூக்களும்.. சிந்தனைக்கும் சில வரிகளே மனதை காயப்படுத்துது.. நடிகையானாலும்சரி வேறு பிரபலங்களானாலும்சரி பெண்களென்றால் ஆண்களின் கண்ணோட்டமே வேறுமாதிரிதான் இருக்கிறது. அவர்களின் திறமையால் முன்னுக்கு வந்தாலும்கூட எதை விலையாக கொடுத்து இவ்வளவு உச்சத்துக்கு வந்தாளோ என்ற விமரிசனங்கள்தான் பரவலாக வரும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... September 26, 2016 at 10:06 AM

      //பெண்கள், அவர்களின் திறமையால் முன்னுக்கு வந்தாலும்கூட, எதை விலையாக கொடுத்து இவ்வளவு உச்சத்துக்கு வந்தாளோ என்ற விமரிசனங்கள்தான் பரவலாக வரும்..//

      இது மிகவும் வேதனையளிக்கும் விஷயமே.

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. உண்மைதான் ஸ்ரத்தா ஸபுரி.. ஹ்ம்ம்

      நீக்கு
  4. செம்மாதுளைச்சாறு.. வித்தியாசமா இருக்கு. வங்கியின் நடைமுறைகளை அப்பட்டமாக தோலுறித்துகாட்டி இருக்காங்க.. இது மாறணும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... September 26, 2016 at 10:08 AM

      //செம்மாதுளைச்சாறு.. வித்தியாசமா இருக்கு.//

      வித்யாசமானதோர் கற்பனை கதைதான்.

      //வங்கியின் நடைமுறைகளை அப்பட்டமாக தோலுறித்துகாட்டி இருக்காங்க.. இது மாறணும்..//

      முழுக்கதையின் சுருக்கத்தையும் என்னால் சொல்ல முடியாமல் நான் தவித்து, ஒருவேளை என் போக்கில் ஏதேனும் சுவைபட எழுதியிருக்கலாமோ என்னவோ .. அதைத்தான் நீங்கள் ”இது மாறணும்” என இறுதியில் சொல்லியிருக்கீங்களோ என்னவோ என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். :)

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

      நீக்கு
    2. சே சே.. என்ன கோபால்ஸார்... தப்பா புரிஞ்சிகிட்டீங்களே... வங்கியின் நடைமுறை மாறணும்னு என் கருத்தைத்தானே சொல்லியிருந்தேன்..எதாவது தப்பா பட்டிச்சினா வெரி ஸாரி..

      நீக்கு
    3. ஸ்ரத்தா, ஸபுரி... September 26, 2016 at 5:30 PM

      //சே சே.. என்ன கோபால் ஸார் ... தப்பா புரிஞ்சிகிட்டீங்களே...//

      இல்லை. நீங்க தப்பாவே ஏதும் சொல்லவில்லை. நானும் தப்பாவே ஏதும் புரிந்துகொள்ளவும் இல்லை என்பதை முதலில், தயவுசெய்து நீங்கள் புரிந்துகொள்ளணும்.

      //வங்கியின் நடைமுறை மாறணும்னு என் கருத்தைத்தானே சொல்லியிருந்தேன்..//

      நீங்க நிச்சயமாக வங்கியின் நடைமுறை மாறணும்ன்னு தான் உங்கள் கருத்தினை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் என்பது எனக்கும் மிக நன்றாகவே தெரிகிறது.

      ஒருசில குறிப்பிட்ட வங்கிகளுடன் எனக்கான அனுபவங்கள் மிக மிக அதிகம். மிக மிக சுவாரஸ்யமான அவற்றைப்பற்றியெல்லாம் நானே பல பதிவுகள் எழுதமுடியும்.

      நேரில் சென்றபோது என்னிடம் அலட்சியமாக நடந்துகொண்டு, நான் சொல்வதை காதுகொடுத்துக் கேட்டுக்கொள்ளாமல், நான் அவர்கள் செய்துள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியதையும் புரிந்துகொள்ளாமல் பேசிய எவ்வளவோ வங்கி மேலாளர்களை என் வீட்டுக்கே, அவர்கள் வந்து என்னிடம் கெஞ்சும் படியாக, என் எழுத்துக்களால் மட்டுமே செய்து சாதித்துக்காட்டியுள்ளவன் நான். ’போர் வாளைவிட என் பேனா வலிமையானது’ என்பதை அவர்களுக்குப் பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளவன் நான்.

      //எதாவது தப்பா பட்டிச்சினா வெரி ஸாரி..//

      அதாவது நம் ஹனி மேடம் வெளியிட்டுள்ள இந்த சிறுகதைத் தொகுப்பினிலேயே இந்த ஒரு கதைக்கு மட்டும் என்னால், நான் மேலே எழுதியுள்ள என் சொந்த நடைக் கருத்துக்களைத்தவிர வேறு எதுவும் சொல்ல முடியாமல் என் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளவும்.

      மேலும் நம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. ஜீவி ஸார் அவர்கள் இங்கு கீழே என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் ஒருமுறைக்கு நான்கு முறையாகப் படித்துப் பார்க்கவும். அப்போதுதான் இதில் என் தர்மசங்கடமான நிலைமை என்னவென்று உங்களுக்கும் புரிந்துகொள்ள முடியும்.

      அன்புடன் VGK

      நீக்கு
    4. அஹா விஜிகே சாருக்கே தர்மசங்கடமா. :)

      நன்றி ஸ்ரத்தா ஸபுரி கருத்துக்கு :)

      நீக்கு
  5. மூன்று தலைப்புகளும்.... சிந்தனைக்கும் சிலவரிகளுமே கதை இப்படித்தான் இருக்கும் என்று யூகம் பண்ண முடியுது. எப்படில்லாம் யோசிக்கறாங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ராப்தம் September 26, 2016 at 10:15 AM

      வாங்கோ சாரூ, வணக்கம்.

      //மூன்று தலைப்புகளும்.... சிந்தனைக்கும் சிலவரிகளுமே கதை இப்படித்தான் இருக்கும் என்று யூகம் பண்ண முடியுது.//

      அப்படியா! சந்தோஷம்.

      //எப்படில்லாம் யோசிக்கறாங்க...//

      அதானே ! :)

      உன் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

      நீக்கு
    2. நன்றி ப்ராப்தம் :) & விஜிகே சார் :)

      நீக்கு
  6. இன்று வேறு மூன்று தலைப்புகளா... சிந்தனைக்கும் சில வரிகள் படிப்பதில் கதை இப்படித்தான் போகுமோன்னு நினைக்க தோணுது. கடைசியில் ட்விஸ்ட் ஏதாச்சிம் வச்சிருப்பாங்களோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் September 26, 2016 at 10:19 AM

      வாங்கோ ரோஜா, வணக்கம்.

      //இன்று வேறு மூன்று தலைப்புகளா...//

      பிறகு நேற்று கொடுத்த அதே தலைப்புகளையாத் திரும்பவும் தரமுடியும்?

      //சிந்தனைக்கும் சில வரிகள் படிப்பதில் கதை இப்படித்தான் போகுமோன்னு நினைக்க தோணுது.//

      உனக்கு எப்படித் தோணுதோ, அப்படியே நீ நினைச்சுக்கோ. :)

      //கடைசியில் ட்விஸ்ட் ஏதாச்சிம் வச்சிருப்பாங்களோ...//

      யாரு கண்டா? நூலினை வாங்கி சிடுக்கு ஆகாமல் பிரித்துப் படித்தால் மட்டுமே தெரியுமாக்கும். :)

      உன் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

      நீக்கு
    2. நன்றி பூந்தளிர் & விஜிகே சார் :)

      நீக்கு
  7. மூணு தலைப்புமே நல்லா இருக்கு...ஒவ்வொரு கதைக்களமே வேறு வேறு கோணத்தில் சொல்லி இருக்காங்க..சிந்தனைக்கும் சில வரிகள் மூலமாக ஓரளவு புரிந்து கொள்ள முடியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... September 26, 2016 at 10:22 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மூணு தலைப்புமே நல்லா இருக்கு... ஒவ்வொரு கதைக்களமே வேறு வேறு கோணத்தில் சொல்லி இருக்காங்க.. சிந்தனைக்கும் சில வரிகள் மூலமாக ஓரளவு புரிந்து கொள்ள முடியுது.//

      வெரி குட். வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
    2. நன்றி ஆல் இஸ் வெல் & விஜிகே சார் :)

      நீக்கு
  8. கமெண்டெல்லாம் படிச்சேன்..... பதிவையும் பிடிச்சேன் பெரிப்பா ..மூணு தலைப்பு மட்டும்தான் புரிஞ்சுக்க முடிஞ்சுது..ஏன் கோபு பெரிப்பா எனக்கு மட்டும் எதுவுமே சரியா புரிய மாட்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy September 26, 2016 at 10:32 AM

      வா....டா, ஹாப்பி. வணக்கம்.

      //கமெண்டெல்லாம் படிச்சேன்.....//

      மிகவும் சந்தோஷம்.

      //பதிவையும் பிடிச்சேன் பெரிப்பா ..//

      பதிவையும் பிடிச்சாயா அல்லது படிச்சாயா அல்லது மிகவும் பிடிச்சுப்போய் படிச்சாயா? :)

      //மூணு தலைப்பு மட்டும்தான் புரிஞ்சுக்க முடிஞ்சுது..//

      அது போதுமே. சபாஷ்....டா தங்கம்.

      //ஏன் கோபு பெரிப்பா எனக்கு மட்டும் எதுவுமே சரியா புரிய மாட்றது..//

      போகப்போக எல்லாவற்றையும் சரியா புரிய வெச்சுடுவோம்ல .... என்னிடமோ எங்கட ரோஜா டீச்சரிடமோ அல்லது எங்கள் இருவரிடமும் சேர்ந்தோ, நேரில் வந்து நீ கொஞ்சம் ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ் சேர்ந்து படிக்கணும் ..... டா செல்லம். :)

      உன் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்..டா.

      நீக்கு
    2. ஹேப்பி புத்தகத்தைப் படிச்சா புரியும். :) நன்றிம்மா கருத்துக்கு

      நன்றி விஜிகே சார் :)

      நீக்கு
  9. யதார்த்தமாக, சுவாரஸ்யமாக போகிறது கதை... சும்மா இருக்கும் பெண்களை பேசி கெடுப்போர் உளர்...
    நடிகையின் வாழ்க்கை.... என கதைகளை அழகாய் விமர்சித்து உள்ளீர்கள் ஐயா...விரைவில் படிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri September 26, 2016 at 10:59 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      தாங்கள் இன்று சுடச்சுடச் செய்த வாழைப்பூ வடையுடன் இங்கு வருவீர்களோ என ஆவலுடனும் பசியுடனும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன்.

      அதில் எனக்குச் சற்றே ஏமாற்றமாகினும், ஒன்றிற்கு இரண்டாகப் பின்னூட்டங்கள் கொடுத்துள்ளது, இரண்டு வடைகள் சாப்பிட்டதைவிட அதிக மகிழ்ச்சியளிக்கிறது.

      //யதார்த்தமாக, சுவாரஸ்யமாக போகிறது கதை... சும்மா இருக்கும் பெண்களை பேசி கெடுப்போர் உளர்...
      நடிகையின் வாழ்க்கை.... என கதைகளை அழகாய் விமர்சித்து உள்ளீர்கள் ஐயா...விரைவில் படிக்கிறேன்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  10. தங்கள் பணிக்கும்
    தங்கள் பாணிக்கும்
    வாழ்த்துகள், பாராட்டுகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri September 26, 2016 at 11:02 AM

      //தங்கள் பணிக்கும், தங்கள் பாணிக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள் ஐயா//

      அடடா, தங்களின் பல்வேறு வாழைப்பூ வடை தயாரிப்புப் பணிகளுக்கு இடையேயும் இங்கு வருகை தந்து, தங்கள் பாணியில் என்னைப் பாராட்டி வாழ்த்தியுள்ளது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை அளிக்கிறது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      தொடர்ந்து தினமும் வாங்கோ, ப்ளீஸ் ... இன்னும் மூன்றே மூன்று பகுதிகள் மட்டுமே பாக்கியுள்ள. எனவே அவற்றைக்

      காணத் தவறாதீர்கள்! கருத்தளிக்க மறவாதீர்கள்!! :)

      நீக்கு
  11. வை.கோ சார்... உங்கள் விமரிசனத்திற்கே இன்னொரு விமரிசனம் எழுதிவிடலாம் போலிருக்கிறது. படிக்காமலேயே, தன்னுடைய பெருமையை உணர்த்தும் விதமாகத்தான் பெரும்பாலும் முன்னுரைகளும் விமரிசனங்களும் இருக்கும். இங்கு நீங்கள் கதைகளை முழுவதுமாகப் படித்து, அதில் எந்தப் பகுதிகள் சிறப்பாக இருக்கின்றன, முக்கியமான வரிகளைக் கோடிட்டுக் காண்பிப்பது, அந்தக் கதை தரும் உணர்வென்ன போலவற்றை நன்றாகச் சொல்லுகிறீர்கள். பாராட்டுக்கள்.

    கத்திக்கப்பல் - கதையை எந்த மாதிரி ஆசிரியர் கொண்டுபோயுள்ளாரோ என்ற எண்ணம் வருகிறது. நான் நிறைய இத்தகையவர்களைச் சந்தித்திருப்பதால்.

    பட்டாம் பூச்சிகளும் பூக்களும் - தலைப்பு கதைக்கு எப்படிப் பொருத்தமாக இருக்கும் என்று கதையை வாசித்துத்தான் உணரமுடியும். நீங்கள் கொடுத்துள்ள குறிப்புகள் சரியானால், வண்டுகளும் பூக்களும் தலைப்புதான் சரியாக இருக்கும்போல் தோணுகிறது.

    வங்கிக் கதையின் விமரிசனமும் அருமை (அது என்ன பொருள் என்று சொல்லாமல் சொல்லிச்சென்ற விதம் அருமை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் September 26, 2016 at 11:52 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வை.கோ சார்... உங்கள் விமரிசனத்திற்கே இன்னொரு விமரிசனம் எழுதிவிடலாம் போலிருக்கிறது.//

      தாங்கள் யாரோ என்னவோ எனக்கு இன்னும் இதுவரை தெரியவே தெரியாது. இருப்பினும் தங்கள் மேல் ஒருவித பாசத்துடன் கூடிய தனி அட்டாச்மெண்ட்டே எனக்கு ஏற்பட்டுவிட்டது.

      எல்லாம் அந்த ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’-இன் அருள் மட்டுமே காரணமாக இருக்கலாம்.

      கடந்த சில நாட்களாக மட்டுமே என்னுடைய இந்தத் தொடருக்கு மட்டுமல்லாமல், என் பழைய சில பதிவுகளுக்கும் மிக அருமையாகப் பின்னூட்டம் இட்டுக் கொண்டு வருகிறீர்கள்.

      நான் ஒவ்வொருவருக்கும், மிகவும் யோசித்து பதில் அளிப்பவனாக இருப்பதனால், தங்கள் வேகத்திற்கு என்னால் உடனுக்குடன் பதில் அளிக்க இயலாமல் உள்ளது. எப்படியும் எதற்கும் பதில் அளிக்காமல் விடவே மாட்டேன் என்பதை மட்டும் தங்களுக்கு இங்கு நான் சொல்லிக்கொள்கிறேன்.

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> நெல்லைத் தமிழன் (2)

      //படிக்காமலேயே, தன்னுடைய பெருமையை உணர்த்தும் விதமாகத்தான் பெரும்பாலும் முன்னுரைகளும் விமரிசனங்களும் இருக்கும்.//

      இது ஊரறிந்த உலகறிந்ததோர் உண்மையான விஷயமாகும்.

      இருப்பினும் என்னாலும் என் போன்ற (விரல் விட்டு எண்ணக்கூடிய) வேறு சிலராலும், எதையும் படிக்காமல் + மண்டையில் ஏற்றிக்கொள்ளாமல் பின்னூட்டங்கள்கூட கொடுக்க இயலாது.

      //இங்கு நீங்கள் கதைகளை முழுவதுமாகப் படித்து, அதில் எந்தப் பகுதிகள் சிறப்பாக இருக்கின்றன, முக்கியமான வரிகளைக் கோடிட்டுக் காண்பிப்பது, அந்தக் கதை தரும் உணர்வென்ன போலவற்றை நன்றாகச் சொல்லுகிறீர்கள். பாராட்டுக்கள்.//

      செய்ய எடுத்துக்கொண்ட காரியத்தை முழுமையாகவும், ஒருவித அர்ப்பணிப்பு உணர்வோடும், ஓரளவுக்கு நமக்கே மனத்திருப்தி ஏற்படும் வண்ணமும், படிப்பவருக்கு சுவாரஸ்யம் கொடுக்கும் விதமாகவும், கதையின் க்ளைமாக்ஸ் உள்பட அனைத்தையுமே என் மதிப்புரையில் சொல்லி சம்பந்தப்பட்ட கதாசிரியரின் நூல் விற்பனைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் என் மூலம் ஏற்படாதவாறும், ஒவ்வொன்றையும் உணர்ந்து மட்டுமே செய்ய வேண்டியதாக உள்ளது.

      தங்களின் இந்தப் பாராட்டுகள் என்னை மேலும் இதுபோலவே என் பாணியில் நான் எழுதத் தூண்டுகோலாக அமைகிறது.

      அதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      >>>>>

      நீக்கு
    3. VGK >>>>> நெல்லைத் தமிழன் (3)

      //கத்திக்கப்பல் - கதையை எந்த மாதிரி ஆசிரியர் கொண்டுபோயுள்ளாரோ என்ற எண்ணம் வருகிறது ..... நான் நிறைய இத்தகையவர்களைச் சந்தித்திருப்பதால்.//

      கத்தி மேல் நடப்பவன் போல நான் தற்சமயம் இந்த நூலுக்கு மதிப்புரை தருபவனாக இருப்பதால், கத்திக்கப்பல் கதையை, எந்த மாதிரி ஆசிரியர் கொண்டுபோயுள்ளார் என்று என்னாலும் இங்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் உள்ளது. :)

      //பட்டாம் பூச்சிகளும் பூக்களும் - தலைப்பு கதைக்கு எப்படிப் பொருத்தமாக இருக்கும் என்று கதையை வாசித்துத்தான் உணரமுடியும். நீங்கள் கொடுத்துள்ள குறிப்புகள் சரியானால், ’வண்டுகளும் பூக்களும்’ தலைப்புதான் சரியாக இருக்கும்போல் தோணுகிறது.//

      கதைக்கான தலைப்புத் தேர்வு நூலாசிரியர் அவர்களால் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. இங்கு வெளியிட்டுள்ள குறிப்புகள் பலவும் மட்டும் என்னால் என் கருத்துக்களாகவும் சொல்லப்பட்டுள்ளன.

      நான் கொடுத்துள்ள குறிப்புகள் சரிதானா என்பதை நானே சொல்வது சரியாகாது அல்லவா! :)

      நான் இப்போது இந்த நூலின் ’மதிப்புரை’யாளர் என்பதனால், ’வண்டுகளும் பூக்களும்’ என்ற தலைப்புத்தான் சரியாக இருக்கும்போலத் தோணுகிறது என்று தாங்கள் சொல்லும் கருத்தை சரி என்றோ சரியில்லை என்றோ என்னால் சொல்ல முடியாமல் என் மனம் ஆகிய பூவினை ஓர் வண்டு குடைவது போல மட்டுமே என்னால் உணர முடிகிறது. :)

      //வங்கிக் கதையின் விமரிசனமும் அருமை (அது என்ன பொருள் என்று சொல்லாமல் சொல்லிச்சென்ற விதம் அருமை)//

      தாங்கள் எது சொன்னாலும் அதை ‘அருமை’யாகவே சொல்லுகிறீர்கள். :)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான மிக நீண்ண்ண்ண்ண்ண்ட பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.

      அன்புடன் VGK

      நீக்கு
    4. இங்கு நீங்கள் கதைகளை முழுவதுமாகப் படித்து, அதில் எந்தப் பகுதிகள் சிறப்பாக இருக்கின்றன, முக்கியமான வரிகளைக் கோடிட்டுக் காண்பிப்பது, அந்தக் கதை தரும் உணர்வென்ன போலவற்றை நன்றாகச் சொல்லுகிறீர்கள். பாராட்டுக்கள்.///


      மிக மிக அருமையா சொன்னீங்க நெல்லைத் தமிழன் சார்,

      மேலும் அந்தக் கதைக்கு வண்டுகளும் பூக்களும் கூடப் பொருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் அந்தப் பட்டாம்பூச்சி, பூக்கள் ரெண்டுமே அந்த நடிகை என்பதால் அப்படி பேர் வைத்துள்ளேன். :)

      நீக்கு
  12. மூன்று கதைகளும் ஒவ்வொரு உணர்வுகளை சொல்கிறது.
    தொழில் நிமித்தம் பிருந்து வாழும் கண்வன், மனைவி துனபம்.முதல் கதையில் சொல்லப்படுகிறது.

    நடிகைகளின் நிலைமையை குறிப்பிடுகிறது. படிக்க கஷ்டமாய் இருக்கிறது.

    மூன்றாவது கதை வங்கி கதை அங்கு வேலைசெய்யும் மேலார்களின் இக்கட்டான சூழ்நிலைகளை சொல்கிறது.

    அருமையாக விமர்சனம் செய்து இருக்கிற்ரிகள்.
    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    அடுத்து தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு September 26, 2016 at 12:35 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.
      உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள். அடுத்து தொடர்கிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஒவ்வொரு கதையையும் பற்றி கொஞ்சம் தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறி, அருமையான விமர்சனம் என்று சொல்லி வாழ்த்தியுள்ளதற்கும், அடுத்துத் தொடர்ந்து வருவேன் என்ற உறுதிமொழி கொடுத்து சந்தோஷமாக உற்சாகப் படுத்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. மூன்று கதைகள் பற்றியும் அழகா சொல்லிட்டீங்க . மிக்க நன்றி கோமதி மேம். & விஜிகே சார்

      நீக்கு
  13. அருமையான திறனாய்வுக் கண்ணோட்டம்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jeevalingam Yarlpavanan Kasirajalingam

      //அருமையான திறனாய்வுக் கண்ணோட்டம். பாராட்டுகள்//

      வாங்கோ, வணக்கம்.

      அருமையான திறனாய்வுக் கண்ணோட்டம் என்று சொல்லிப் பாராட்டியுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
    2. நன்றி யாழ்பாவண்ணன் சகோ & விஜிகே சார் :)

      நீக்கு
  14. மதுரை புத்தகக் கண்காட்சியில் 'சிவப்பு பட்டுக் கயிறு' புத்தகத்தை வாங்கினேன். அதற்குள் ஒரு 10 நாட்கள் சுற்றுலா சென்றதால் படிக்க முடியவில்லை. கூடிய விரைவில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தங்களின் பதிவு எனக்கு தந்தது.

    மிக்க நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.P.SENTHIL KUMAR September 26, 2016 at 5:15 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மதுரை புத்தகக் கண்காட்சியில் 'சிவப்பு பட்டுக் கயிறு' புத்தகத்தை வாங்கினேன்.//

      ஆஹா, சபாஷ் ... வெரி குட்.

      //அதற்குள் ஒரு 10 நாட்கள் சுற்றுலா சென்றதால் படிக்க முடியவில்லை.//

      அதனால் என்ன? கைவசம் சரக்கு (சிவப்பு பட்டுக் கயிறு) இருப்பதால் மெதுவாகப் பொறுமையாகப் படித்துக்கொள்ளலாம்தான்.

      //கூடிய விரைவில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தங்களின் பதிவு எனக்கு தந்தது. மிக்க நன்றி அய்யா!//

      ஆஹா. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
    2. அஹா ஒரு மாசம் ஆகப் போகுதே இப்ப படிச்சிட்டீங்களா செந்தில் சார் ! :)

      நன்றி விஜிகே சார் :)

      நீக்கு
  15. உங்கள் பிரசன்ட்டேஷனில் இந்தப் பகுதி போகப் போகப் மெருகேறுகிறது.

    சுருக்கமாக, அதே நேரத்தில் புத்தகத்துடனான நேரடி வாசிப்பில் தான் முழுக்கதையையும் முழுசாகப் புரிந்து கொள்ள முடியும் என்கிற அளவில் உங்கள் கதை அறிமுகங்கள் அற்புதம்.

    அந்த அற்புதத்தின் பின்னணியில், கதையில் வரும் ஒரு சில வரிகளைக் கொடுப்பது கதாசிரியரின் தனித் திறமையைப் பளிச்சிட்டுக் காட்டுவதாய் அமைகிறது.

    இதையெல்லாம் தாண்டி புத்தகத்தில் முழுக்கதையையும் படித்தால் தான் முழுமையான வாசிப்பு அனுபவத்தைப் பெற
    முடியும் என்கிற அளவில் எல்லாவற்றையும் கச்சிதமாக அமைப்பதையும், பின்னூட்டங்களுக்கான உங்களது பதில்களிலும் கூட முழுக்கதையின் சுவாரஸ்யம் கசிந்து விடாதபடி பார்த்துக் கொள்ளும் உங்கள் திறமையும்---
    அடேயப்பா... எழுதியவரின் எழுத்துக்கு முழு மரியாதையைக் கொடுத்து வெளியிடும் இந்தப் புத்தக அறிமுகப் பகுதி எக்ஸலண்ட்.. இது வரை யாருமே முயற்சி செய்திராத புதுமை.. நீங்களும் மற்றவர்களின் எழுத்துக்களை மதிக்கும் ஒரு 'வாசக எழுத்தாளராக' இருப்பது தான் இத்தனை திறமைகளையும் சாத்தியப்படுத்துகிறது.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி September 26, 2016 at 5:26 PM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள் + வணக்கம் ஸார்.

      //உங்கள் பிரசன்ட்டேஷனில் இந்தப் பகுதி போகப் போகப் மெருகேறுகிறது.//

      ஆஹா, தன்யனானேன். இதைத்தங்கள் மூலம் இப்போது கேட்டதும், மேலும் மேலும் அடுத்த பகுதிகளில் இன்னும் மெருகேற்ற வேண்டுமே என்ற பொறுப்பும் கவலையும் இப்போது கூடுதலாக எனக்கு ஏற்படத்தான் செய்கிறது.

      //சுருக்கமாக, அதே நேரத்தில் புத்தகத்துடனான நேரடி வாசிப்பில் தான் முழுக்கதையையும் முழுசாகப் புரிந்து கொள்ள முடியும் என்கிற அளவில் உங்கள் கதை அறிமுகங்கள் அற்புதம்.//

      மிகவும் அற்புதமாகவே இதனைத் தாங்களும் இங்கு சொல்லியுள்ளீர்கள். நூல் அறிமுகங்களின் அடிப்படை நோக்கமே, வாசகர்களுக்கு ஒருவித படிக்கும் ஆவலை உண்டாக்கி, புத்தகத்துடனான நேரடி வாசிப்பில் அவர்களை ஈடுபடச் செய்வது மட்டும்தானே. அதையேதான் என்னால் முடிந்த அளவு முயற்சிகள் எடுத்துச் செய்துள்ளேன்.

      //அந்த அற்புதத்தின் பின்னணியில், கதையில் வரும் ஒரு சில வரிகளைக் கொடுப்பது கதாசிரியரின் தனித் திறமையைப் பளிச்சிட்டுக் காட்டுவதாய் அமைகிறது.//

      கஷ்டப்பட்டு தன் தனித்திறமைகளைக் காட்டி கதைகளை எழுதி, அதனை ஓர் தொகுப்பு நூலாக வெளியிட்டுள்ள, கதாசிரியரின் பங்கினைப் பளிச்சிட்டுக் காட்டத்தானே வேண்டும். முழுவதுமாக இல்லாவிட்டாலும் ஒருசில வரிகளையாவது தேர்ந்தெடுத்து ஹை-லைட் செய்து காட்ட வேண்டியது மிகவும் முக்கியம் அல்லவா! இந்த ஒரு நூல் வெளியீட்டுக்காக மட்டுமே அவர்களும் எவ்வளவு உழைத்திருப்பார்கள்!!

      //இதையெல்லாம் தாண்டி புத்தகத்தில் முழுக்கதையையும் படித்தால் தான் முழுமையான வாசிப்பு அனுபவத்தைப் பெறமுடியும் என்கிற அளவில் எல்லாவற்றையும் கச்சிதமாக அமைப்பதையும், பின்னூட்டங்களுக்கான உங்களது பதில்களிலும் கூட முழுக்கதையின் சுவாரஸ்யம் கசிந்து விடாதபடி பார்த்துக் கொள்ளும் உங்கள் திறமையும் --- அடேயப்பா... எழுதியவரின் எழுத்துக்கு முழு மரியாதையைக் கொடுத்து வெளியிடும் இந்தப் புத்தக அறிமுகப் பகுதி எக்ஸலண்ட்.. இது வரை யாருமே முயற்சி செய்திராத புதுமை..//

      தங்களின் இத்தகைய ஆத்மார்த்தமான பாராட்டுகள் என் மனதுக்கு மிகவும் ஹிதமளிப்பதாக உள்ளது.

      இதில் தாங்கள் சொல்லியுள்ள ’முழுக்கதையின் சுவாரஸ்யம் எங்கும் எப்படியும் கசிந்து விடாதபடி பார்த்துக் கொள்ளும் பொறுப்பு மட்டுமே’ மிகவும் கஷ்டமானதோர் வேலையாக எனக்கு இருந்து வருகிறது. அதனைத் தாங்கள் உணர்ந்து இங்கு குறிப்பிட்டுள்ளது எனக்கு மேலும் கூடுதல் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது.

      //நீங்களும் மற்றவர்களின் எழுத்துக்களை மதிக்கும் ஒரு 'வாசக எழுத்தாளராக' இருப்பது தான் இத்தனை திறமைகளையும் சாத்தியப்படுத்துகிறது.. வாழ்த்துக்கள்..//

      எல்லாம் நல்லபடியாக சாத்தியப்பட தங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதம் மட்டுமே எனக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து என்னைக் காத்து வருகிறது.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், மிகவும் ஆச்சர்யமான + ஆத்மார்த்தமான + ஆழமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. அட்டகாசமா சொன்னீங்க ஜிவி சார் !!!

      ///இதையெல்லாம் தாண்டி புத்தகத்தில் முழுக்கதையையும் படித்தால் தான் முழுமையான வாசிப்பு அனுபவத்தைப் பெற
      முடியும் என்கிற அளவில் எல்லாவற்றையும் கச்சிதமாக அமைப்பதையும், பின்னூட்டங்களுக்கான உங்களது பதில்களிலும் கூட முழுக்கதையின் சுவாரஸ்யம் கசிந்து விடாதபடி பார்த்துக் கொள்ளும் உங்கள் திறமையும்---
      அடேயப்பா... எழுதியவரின் எழுத்துக்கு முழு மரியாதையைக் கொடுத்து வெளியிடும் இந்தப் புத்தக அறிமுகப் பகுதி எக்ஸலண்ட்.. இது வரை யாருமே முயற்சி செய்திராத புதுமை.. நீங்களும் மற்றவர்களின் எழுத்துக்களை மதிக்கும் ஒரு 'வாசக எழுத்தாளராக' இருப்பது தான் இத்தனை திறமைகளையும் சாத்தியப்படுத்துகிறது.. வாழ்த்துக்கள்..//

      உள்ளபடியே மெருகேறிக் கொண்டே போய் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது ஜிவி சார். சஸ்பென்ஸைக் காப்பாற்றிபடி செல்லும் மிக அழகான எக்ஸலண்ட் பகிர்வுக்கு நன்றி விஜிகே சார். :)

      நீக்கு
  16. உங்களின் சிலவரிகள் கதையைப்பற்றி நிறைய சிந்திக்க வைத்து விடுகிறது. கதைகளை நம் போனபோக்கில் கற்பனை செய்து மகிழ ஒரு சான்ஸாகவும் மாறிவிடுகிறது. வேறு யோசனைகளைத் தடுத்து விடுகிறது. எப்படி தெரியலே. அன்படன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி September 26, 2016 at 6:39 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள் + வணக்கம்.

      //உங்களின் சிலவரிகள் கதையைப்பற்றி நிறைய சிந்திக்க வைத்து விடுகிறது. கதைகளை நம் மனம் போனபோக்கில் கற்பனை செய்து மகிழ ஒரு சான்ஸாகவும் மாறிவிடுகிறது.//

      இவ்வாறு நம் மனம் போன போக்கில் கதையைக் கற்பனை செய்து மகிழ்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், தாங்களேகூட இதே கதைக்கருவில் ஓர் கதையை நம்மால் எழுத முடியுமா எனவும் முயற்சிக்கலாம்.

      //வேறு யோசனைகளைத் தடுத்து விடுகிறது. எப்படி தெரியலே. அன்புடன் //

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மாமி.

      நீக்கு
    2. மிக்க நன்றி காமாட்சி மேம் ! & விஜிகே சார் :)

      நீக்கு
  17. இந்த மூன்று கதைகளில் என்னைக் கவர்ந்தது செம்மாதுளைச்சாறு. தலைப்பு வித்தியாசமாயும் புதுமையாயும் இருக்கிறது.
    அந்த வாடிக்கையாளர் கொண்டுவந்தது என்ன பொருளாக இருக்கக் கூடும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது உங்கள் விமர்சனம்.
    ஜீவி சார் சொல்லியிருப்பது போல கதையின் சஸ்பென்ஸை கசிய விடாமல் விமர்சனத்தை எழுதுவது மிகச் சிறப்பு.
    புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை அதிகப் படுத்தும் விதமாக அமைந்துள்ள இத்தொடருக்குப் பாராட்டுக்கள் கோபு சார்!
    நூலாசிரியர் தேனம்மை அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி September 26, 2016 at 8:07 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இந்த மூன்று கதைகளில் என்னைக் கவர்ந்தது செம்மாதுளைச்சாறு. தலைப்பு வித்தியாசமாயும் புதுமையாயும் இருக்கிறது.//

      ஆமாம். கதையும் தலைப்பும் மட்டும், மிகவும் வித்யாசமாகவும் புதுமையாகவும்தான் உள்ளன.

      //அந்த வாடிக்கையாளர் கொண்டுவந்தது என்ன பொருளாக இருக்கக் கூடும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது உங்கள் விமர்சனம்.//

      :) சொல்ல முடியாததோர் விசித்திர்ப் பொருளாக இருப்பதால், என்னாலும் பகிரங்கமாக அதனைப்பற்றி ஏதும் சொல்ல முடியாமல், நானும் ஏதேதோ மழுப்பித்தான் என் மதிப்புரையில் எழுதியுள்ளேன். :)

      //ஜீவி சார் சொல்லியிருப்பது போல கதையின் சஸ்பென்ஸை கசிய விடாமல் விமர்சனத்தை எழுதுவது மிகச் சிறப்பு.//

      :) ’கதையின் சஸ்பென்ஸை கசிய விடாமல் இருத்தல்’ என்ற இதனைத்தாங்களும் மிகச்சிறப்பாக எடுத்துச் சொல்லியுள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை அதிகப் படுத்தும் விதமாக அமைந்துள்ள இத்தொடருக்குப் பாராட்டுக்கள் கோபு சார்!//

      என்னுடைய எழுத்துக்களின் அடிப்படை நோக்கம், நிறைவேறி, வெற்றி கிட்டி வருவது தங்களின் இந்த எழுத்துக்களாலும் பாராட்டுகளாலும் என்னால் நன்கு உணர முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

      //நூலாசிரியர் தேனம்மை அவர்களுக்கும் பாராட்டுக்கள்!//

      மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, ஆத்மார்த்தமான, என் எழுத்துக்களை மேலும் ஊக்குவிக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. மிக்க நன்றி கலையரசி :) & விஜிகே சார் :)

      நீக்கு
  18. நானும் இப்போதுதான் படித்துக் கொண்டிருப்பதால் வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். September 26, 2016 at 8:13 PM

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //நானும் இப்போதுதான் படித்துக் கொண்டிருப்பதால் வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை! தொடர்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
    2. மிக்க நன்றி ஸ்ரீராம் & விஜிகே சார் :)

      நீக்கு
  19. புத்தகம் இன்னும் படிக்கவில்லை. உங்கள் பதிவுகள் மூலம் கதைகளைப் பற்றிய எண்ணத்தினைத் தருகிறது. பார்க்கலாம் எனக்கு எப்போது படிக்க முடிகிறது என.....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் September 26, 2016 at 8:17 PM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      //புத்தகம் இன்னும் படிக்கவில்லை. உங்கள் பதிவுகள் மூலம் கதைகளைப் பற்றிய எண்ணத்தினைத் தருகிறது. பார்க்கலாம் எனக்கு எப்போது படிக்க முடிகிறது என..... தொடர்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி. :) சந்தோஷம்.

      நீக்கு
    2. அஹா சீக்கிரம் படிங்க வெங்கட் சகோ :) & நன்றி விஜிகே சார் :)

      நீக்கு
  20. ‘கத்திக் கப்பல்’ கதையில் திரவியம் தேட திரை கடலோடியவர்களின் குடும்பங்களில், பிரிவின் காரணமாக சிலருக்கு ஏற்படும் மனத் தடுமாற்றத்தை துல்லியமாக படம் பிடித்து நூலாசிரியர் காட்டியதை அழகாய் தந்திருக்கிறீர்கள்.
    // ஆத்துல போறத் தண்ணி தானே... ஐயா நீ குடுச்சுக்கோ, அம்மா நீ குடுச்சுக்கோ’ என்பதே என் பாலிஸி, // என ரேகா என்ற கதா பாத்திரம் சொல்வதைப் படிக்கும்போது கூடா நட்பு கேடாய் விளையும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

    ‘பட்டாம் பூச்சிகளும் பூக்களும்’ என்ற கதை கனவுத்தொழிற்சாலையில் பணிபுரியும் நடிகைகளின் உண்மையான வாழ்க்கை நிலையை காட்டுவதாக அறிகிறேன்.
    ஜொலிப்பினைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியும், அவர்கள் கொடுத்துள்ள + இழந்துள்ள விலைகள்தான் எத்தனை எத்தனை? என்ற தங்களின் கருத்து சிந்திக்கவைக்கிறது.
    //சில காலகட்ட கஷ்டங்களுக்குப்பின் பெரிய அளவு அங்கீகாரமும், புகழும், மரியாதையும் கிடைக்கும். அதற்குக் கொடுக்கும் விலை சிலசமயம் உடலாகவும், சில சமயம் தன்மானமாகவும் இருக்கும். // என்ற வரிகள் யதார்த்தத்தை சொல்கிறது. அதே நேரத்தில் அவர்களின் நிலையை எண்ணும்போது வருக்தமாகவும் இருக்கிறது.

    ‘செம்மாதுளைச் சாறு’ கதைச் சுருக்கம் என்னைக் கவர்ந்த காரணம் நானும் ஒரு வங்கியாளன் என்பதால்!
    // வங்கியில் ஏராளமாகப் பணம் டெபாஸிட் செய்துள்ளவர்களுக்கு மட்டுமே அங்கு வரவேற்பும் அதிகமாகக் கிடைக்கிறது.// என்ற தங்களின் கருத்து ஏற்புடையதே.

    // தன்னிடம் உள்ள அந்தப்பொருளை வங்கியில் ஒப்படைத்துவிட்டால் தீர்ந்தது பாரம்// என்ற வரிகளைப் படிக்கும்போது அந்த வாடிக்கையாளப் பெண்மணி எதை வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க வந்தார் என அறிய ஆவலாய் உள்ளது.

    மூன்று கதைகளையும் அழகாக சுருக்கித் தந்து அவைகளை படிக்கத் தூண்டிய தங்களுக்கு நன்றி! நூலாசிரியர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி September 27, 2016 at 11:56 AM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      மூன்று கதைகளுக்குமான என் சில சொந்தக் கருத்துக்கள் + கதையிலிருந்து நான் எடுத்துக்கொடுத்துள்ள ஒருசில குறிப்பிட்ட பகுதிகளை நன்கு அலசி ஆராய்ந்து, தங்களின் நியாயமான கருத்துக்களை எடுத்துக்கூறி அசத்தியுள்ளீர்கள்.

      மேலும் ஓர் வங்கியின் பொறுப்பாளராக இருந்துள்ளதால் ... ஒரு குறிப்பிட்ட கதையின் மர்மத்தை அறிய ஆவலாக இருப்பதாகவும் கூறி மகிழ்வித்துள்ளீர்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான மிகப் பெரிய பின்னூட்டக்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. அழகான விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி நடன சபாபதி சார். :) & நன்றி விஜிகே சார் :)

      நீக்கு
  21. ஒவ்வொரு கதையின் கருவும்
    ஒவ்வொரு விதமாக
    மிகச் சரியாக நாம் அனைவரும்
    அன்றாடம் சந்திக்கிற பிரச்சனைகளாக
    எடுத்துக் கொண்ட விதம்
    அதிசயபடவைத்தது

    (தாங்கள் ஜிவி அவர்களின் நூலை
    மிகச் சிறப்பாக அறிமுகம் செய்தவிதம்
    உடனடியாக அவருடன் நேரடியாகத்
    தொடர்பு கொண்டு அவரிடம் இருந்தே
    அவரின் நூலைப் பெற்று இங்கு அமெரிக்கா
    வருகையில் படிப்பதற்காக எனக் கொண்டு வர
    வைத்தது.ஒருமுறை முழுவதும்படித்து
    முடித்துவிட்டேன்.மறுமுறை படிக்க வேண்டி இருக்கிறது)

    இந்த முறை சென்னைத் திரும்புகையில்
    தேனம்மை அவர்களின் நூலை
    நிச்சயம் வாங்கிப் படித்து விடுவேன்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S September 27, 2016 at 7:33 PM

      வாங்கோ Mr RAMANI Sir, வணக்கம்.

      //ஒவ்வொரு கதையின் கருவும் ஒவ்வொரு விதமாக
      மிகச் சரியாக நாம் அனைவரும் அன்றாடம் சந்திக்கிற பிரச்சனைகளாக எடுத்துக் கொண்ட விதம் அதிசயபடவைத்தது//

      நூலினை வாசித்த என்னையும் ஆங்காங்கே மிகவும் அதிசயப்படத்தான் வைத்தது. :)

      ஆஹா! அமெரிக்கா போகும் போது ஜீவி ஸாரின் தேன் போன்ற நூல், திரும்ப வரும்போது ’ஜீவி’தமான தேன்-இன் நூல். கொடுத்து வைத்தவர் ஸார் ... நீங்கள். :))

      //பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. அஹா கேக்கும்போதே தேனா இனிக்குது. நன்றி ரமணி சார். தேன் போன்ற பதிவு தந்த விஜிகே சாருக்கும் நன்றி.

      நீக்கு
  22. அழகான தலைப்புகள். அதில் நீங்கள் கோடிட்டுக் காட்டும் உரையாடல்கள் என்று உங்கள் விமர்சனம் அருமையாகச் செல்கிறது. நாங்களும் இனி தான் புத்தகம் வாசிக்க வேண்டும். அருமை சார் தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu
      September 29, 2016 at 5:08 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அழகான தலைப்புகள்.//

      அப்படியா! சந்தோஷம்.

      //அதில் நீங்கள் கோடிட்டுக் காட்டும் உரையாடல்கள் என்று உங்கள் விமர்சனம் அருமையாகச் செல்கிறது.//

      விமர்சனம் அருமையாகச் செல்கிறது எனக் கோடிட்டுக் காட்டியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      //நாங்களும் இனி தான் புத்தகம் வாசிக்க வேண்டும்.//

      வாசிக்கவும்.

      //அருமை சார் தொடர்கின்றோம்...//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
    2. நன்றி துளசி சகோ & கீத்ஸ். சீக்கிரம் வாசிங்க. :) நன்றி விஜிகே சார் :)

      நீக்கு
  23. செம்மாதுளைச்சா று(ரு)....)))) நல்லா இருக்கு.. பதிவை விட கமெண்ட்ஸ்... ரிப்ளை கமெண்ட்ஸ் வெரி இன்ட்ரஸ்டிங்குஉஉஉஉ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. October 3, 2016 at 11:02 AM

      வா .... மீனா, வணக்கம்.

      //செம்மாதுளைச்சா று(ரு)....)))) நல்லா இருக்கு..//

      ’செம்மாதுளைப் பிழிந்து தா....தா....தா’
      என்ற பாடல் வரிகள் போலவா? :)

      //பதிவை விட கமெண்ட்ஸ்... ரிப்ளை கமெண்ட்ஸ் வெரி இன்ட்ரஸ்டிங்குஉஉஉஉ//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அதுதான் என் பதிவுகளின் ஸ்பெஷாலிடி என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள். நீயும் இப்போது சொல்லியுள்ளதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. :)

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மீனா.

      நீக்கு
    2. ’செம்மாதுளைப் பிழிந்து தா....தா....தா’
      என்ற பாடல் வரிகள் போலவா? :)

      =

      ’செம்மாதுளைப் பிளந்து தா....தா....தா’
      என்ற பாடல் வரிகள் போலவா? :)

      நீக்கு
    3. ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு

      செவ்வாழைக் காலெடுத்து வா வா வா

      செம்மாதுளை பிளந்து தா தா தா

      நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம்

      கோட்டை கட்டி வா வா வா

      மாம்பழத்துச் சாறெடுத்து

      மல்லிகையில்தேனெடுத்து தா தா தா..

      ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு

      செவ்வாழைக் காலெடுத்து வா வா வா

      செம்மாதுளை பிளந்து தா தா தா

      வேலோடு விழியிரண்டு வெள்ளோட்டம் போனதென்று

      நூலான இடையெடுத்து போராட வந்த பெண்ணே

      ஆளான நாள் முதலாய் அச்சாரம் கொடுத்து விட்டு

      வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற

      கண்ணா..கண்ணா...

      ஹேஹேஹேஹெ....ஹே...

      ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு

      செவ்வாழைக் காலெடுத்து வா வா வா

      செம்மாதுளை பிளந்து தா தா தா

      பூப்போல இதழ் விரித்து பொன்னான உடலெடுத்து

      தேர் போல வந்த கண்ணே

      சிலை போல வந்த பெண்ணே

      அத்தானின் துணையிருக்க முத்தான மொழியிருக்க

      பித்தாகக் கிடந்த என்னைக் கொத்தாக அணைத்த

      கண்ணா..கண்ணா...

      ஹேஹேஹேஹெ..ஹே..

      ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு

      செவ்வாழைக் காலெடுத்து வா வா வா

      செம்மாதுளை பிளந்து தா தா தா

      -=-=-=-=-=-

      எம்.ஜி.ஆர். படம்: பணத்தோட்டம் (1963)

      பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாஸன்

      பாடியவர்கள்: டி.எம்.செளந்தரராஜன் + பி. சுசிலா

      இசை: விஸ்வநாதன் + இராமமூர்த்தி

      நீக்கு
    4. கோபு அண்ணா குஷி ஆகிட்டா இப்படித்தான் பாடுவார். ஜமாயுங்கோ

      நீக்கு
    5. Jayanthi Jaya October 18, 2016 at 11:56 AM

      //கோபு அண்ணா குஷி ஆகிட்டா இப்படித்தான் பாடுவார். ஜமாயுங்கோ.//

      :))))) மிக்க நன்றி, ஜெயா :)))))

      மேலேயுள்ள ‘சிப்பிக்குள் முத்து’ மீனா ஒரு பாட்டுப் பிரியை. தினமும் பொழுதுவிடிஞ்சா நான்கு சினிமா பாடல்களைத் தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுப் பாடாய்ப் ப-டு-த்-தி வருகிறாள்.

      அதனால் அவளுக்காகவே ஸ்பெஷலாக, நானும் செம்மாதுளையைப் பிளந்து கொடுத்து அவளுக்கு உதவியுள்ளேன். :)

      நீக்கு
    6. ஹாஹாஹா ரசித்துப் படித்துச் சிரித்தேன். என்னையே இம்மாம் பின்னூட்டம் எழுத வைத்துட்டீங்களே சார். நீங்க உண்மையிலேயே ரொம்பப் பெரிய ஆள்தான். :) பாடல் அருமை.

      நன்றி சிப்பிக்குள் முத்து & ஜெயந்தி :) :) :)

      நீக்கு
  24. ஸாரி.. கிஷ்ணாஜி.. ( ஸாரிலாம் கட்டமாட்டிங்கல்ல)..... எப்படி இந்த பகுதி விட்டுப்போச்சி.. நினைவு படுதியதற்கு நன்றிஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. shamaine bosco October 3, 2016 at 11:26 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஸாரி.. கிஷ்ணாஜி.. ( ஸாரிலாம் கட்டமாட்டிங்கல்ல).....//

      உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி உள்ளது. மிகவும் சந்தோஷம். :))))))

      //எப்படி இந்த பகுதி விட்டுப்போச்சி..//

      அது எப்படியோ ஆட்டோமேடிக் ஆக, வழக்கம்போல, ’நடுவிலே’ விட்டுப்போச்சு போலிருக்குது. :)

      //நினைவு படுத்தியதற்கு நன்றிஜி..//

      நினைவு ப-டு-த்-தி விட்டேனா? இதுபோன்ற என்
      ப-டு-த்-த-ல் தாங்க முடியவில்லையா?

      எனினும், பதிவினைப்பற்றி ஏதும் சொல்லாமல், ஏதேதோ சொல்லி, தலையை மட்டும் காட்டிவிட்டு, தலை தப்பிச்சாப்போதும் என நினைத்து ஓடிச் சென்றுள்ளதற்கு என் நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. நன்றி திருமதி போஸ்கோ மேம் & விஜிகே சார் :)

      நீக்கு
  25. பெண்கள் மலரில் வெளியான கத்திக்கப்பலை முன்பே வாசித்து பெண்களின் மாறுபட்ட மனநிலையை தேனம்மை விவரிக்கும் விதங்கண்டு வியந்திருக்கிறேன். திரையில் ஆராதிக்கப்படுபவர்களாகவும் திரைக்குப்பின்னே பரிதாபத்துக்குரியவர்களாகவும் இருக்கும் நடிகைகள் வாழ்வு குறித்த சிந்தனையோட்டம் பிரமாதம். செம்மாதுளைச்சாறு கதையில் அந்தப்பெண் தன்னிடமிருக்கும் எந்தப் பொருளை வங்கி லாக்கரில் வைக்க வந்திருப்பாள்… அப்படி வைக்கமுடியாத விலைமதிப்பற்ற பொருள் என்னவாக இருக்கும்.. ஆம் அதுவாகத்தான் இருக்கும்… இல்லையென்றால் இதுவாக இருக்குமோ… தேனம்மையின் நூல் கையில் கிடைக்கும் நாளன்று ஐயம் தெளிந்துவிடும்.. அதுவரை யூகத்திலேயே இருப்போம்.. கதையின் முடிச்சை அவிழ்த்துவிடாமல் கச்சிதமாய்க் கோடிட்டுக் காட்டியமை சிறப்பு கோபு சார். பாராட்டுகள் உங்களுக்கும் தோழி தேனம்மைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதமஞ்சரி October 4, 2016 at 9:09 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //பெண்கள் மலரில் வெளியான கத்திக்கப்பலை முன்பே வாசித்து பெண்களின் மாறுபட்ட மனநிலையை தேனம்மை விவரிக்கும் விதங்கண்டு வியந்திருக்கிறேன்.//

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //திரையில் ஆராதிக்கப்படுபவர்களாகவும் திரைக்குப்பின்னே பரிதாபத்துக்குரியவர்களாகவும் இருக்கும் நடிகைகள் வாழ்வு குறித்த சிந்தனையோட்டம் பிரமாதம்.//

      நீங்களும் சிந்தனையோட்டத்துடன் இதனை பிரமாதமாகவே இங்கு எடுத்துச் சொல்லியுள்ளீர்கள், மேடம். :)

      //செம்மாதுளைச்சாறு கதையில் அந்தப்பெண் தன்னிடமிருக்கும் எந்தப் பொருளை வங்கி லாக்கரில் வைக்க வந்திருப்பாள்… அப்படி வைக்கமுடியாத விலைமதிப்பற்ற பொருள் என்னவாக இருக்கும்.. ஆம் அதுவாகத்தான் இருக்கும்… இல்லையென்றால் இதுவாக இருக்குமோ… தேனம்மையின் நூல் கையில் கிடைக்கும் நாளன்று ஐயம் தெளிந்துவிடும்.. அதுவரை யூகத்திலேயே இருப்போம்..//

      யூகத்தில் இருப்பதுதான் மிகவும் நல்லது. :)

      //கதையின் முடிச்சை அவிழ்த்துவிடாமல் கச்சிதமாய்க் கோடிட்டுக் காட்டியமை சிறப்பு கோபு சார்.//

      ஏற்கனவே எனக்கு இதுபோன்ற விமர்சனப்பதிவுகள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள சிற்சில அனுபவங்கள் மட்டுமே, இதிலும் முடிச்சு அவிழ்ந்துவிடாமல் கச்சிதமாய்க் காப்பாற்றின. :)

      சிவப்பு பட்டுக்கயிறும் என் கைவசம் இருந்ததனால் மேலும் அதனை இறுக்கிக் கட்டிப்போட என்னால் முடிந்தது. :)

      //பாராட்டுகள் உங்களுக்கும் தோழி தேனம்மைக்கும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், மென்மையான மேன்மையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. கதையின் சஸ்பென்ஸை உடைக்காமல் விமர்சனம் எழுதியது உண்மையிலேயே வெகு சிறப்புத்தான் விஜிகே சார் !!! & தாங்க்ஸ் டா கீத்ஸ். :)

      நீக்கு
  26. http://honeylaksh.blogspot.in/2016/10/blog-post_6.html

    மேற்படி இணைப்பினில் ‘சிவப்பு பட்டுக் கயிறு’ நூலாசிரியர் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள், இந்த என் நூல் அறிமுக + மதிப்புரைத் தொடரினைப் பற்றி சிறப்பித்து நன்றிகூறி ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளார்கள்.

    அவர்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.

    இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    பதிலளிநீக்கு
  27. தேன் வித்தியாசமான கோணங்களில் யோசித்து எழுதியுள்ளார்.

    கதையின் ஒரு பகுதியைப் படிக்கும் போதே சுவாரசியமாக இருக்கிறது.

    இருக்காதா பின்னே, விமர்சனம் செய்பவர் சிறந்ததில் சிறந்ததை எடுத்துச் சொல்பவர் அல்லவா?

    கோபு அண்ணா அப்படியே உங்கள் கற்பனை குதிரையையும் தட்டி விட்டு உங்கள் கதைகளையும் பதியுங்கள். நானும் ரொம்ப நாளா கேட்டுண்டிருக்கேன்.

    புத்தகத்தை வாங்கி முழுக்கதைகளையும் படித்து விட்டு மீண்டும் விமர்சிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya October 18, 2016 at 11:55 AM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      //தேன் வித்தியாசமான கோணங்களில் யோசித்து எழுதியுள்ளார். //

      கரெக்ட் ஜெயா.

      //கதையின் ஒரு பகுதியைப் படிக்கும் போதே சுவாரசியமாக இருக்கிறது.//

      ஆமாம் .... ஆமாம். சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமே இல்லை.

      //இருக்காதா பின்னே, விமர்சனம் செய்பவர் சிறந்ததில் சிறந்ததை எடுத்துச் சொல்பவர் அல்லவா? //

      அடடா, நறுக்குன்னு நடு மண்டையில் இப்படிக் குட்டிட்டேளே ! ரொம்பவும் வலிக்குது ஜெயா ..... எனக்கு. :)

      //கோபு அண்ணா அப்படியே உங்கள் கற்பனை குதிரையையும் தட்டி விட்டு உங்கள் கதைகளையும் பதியுங்கள்.//

      என் கற்பனைகளுக்கு என்றுமே என்னிடம் பஞ்சம் இல்லை ஜெயா.

      இருப்பினும் மிகவும் ஸ்பீடான பின்னூட்டக் குதிரைகளில் மிக மிக முக்கியமாக நான் நினைத்திருந்ததோர் மிக அருமையான குதிரைதான் 09.02.2016 முதல் எங்கோ காணாமலேயே போய்விட்டதே. :(((((

      அந்த வருத்தம் என்னை நொண்டிக்குதிரையாக்கி விட்டது.

      ’நொண்டிக்குதிரைக்கு சறுக்கினது சாக்கு’ என நீங்க உடனே நினைக்க வேண்டாம். அதுதான் உண்மை என்பது உங்களுக்கும் உண்மையாகவே தெரிந்திருக்கும்.

      //நானும் ரொம்ப நாளா கேட்டுண்டிருக்கேன்.//

      கேட்டதும் கொடுப்பவனே (கோபால) கிருஷ்ணா .... கிருஷ்ணா.

      உங்களின் பதிவுகளுக்கு உடனுக்குடன் பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறேன். வேறு என்ன வேண்டுமோ .... கேளுங்கோ, தருகிறேன். :)

      //புத்தகத்தை வாங்கி முழுக்கதைகளையும் படித்து விட்டு மீண்டும் விமர்சிப்பேன்.//

      ஆஹா, முதலில் அதைச் செய்யுங்கோ. அதைச் சாக்கிட்டு சில பதிவுகளாவது உங்களுக்கும் தேறும். நம் ஹனி மேடத்திற்கும் மேலும் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஜெ.

      நீக்கு
    2. //இருக்காதா பின்னே, விமர்சனம் செய்பவர் சிறந்ததில் சிறந்ததை எடுத்துச் சொல்பவர் அல்லவா? //

      மிகச் சரியா சொல்லி இருக்கீங்க ஜெயந்தி :)

      கொஞ்சநஞ்ச சந்தோஷமில்லை. அமுதசுரபி மாதிரி இடுகையும் பின்னூட்டமும் பெருகி வழிஞ்சிட்டே போகுது. பிரமிப்பில் இருக்கேன் விஜிகே சார் :)

      நீக்கு
    3. Thenammai Lakshmanan October 20, 2016 at 11:13 AM

      //கொஞ்சநஞ்ச சந்தோஷமில்லை. அமுதசுரபி மாதிரி இடுகையும் பின்னூட்டமும் பெருகி வழிஞ்சிட்டே போகுது. பிரமிப்பில் இருக்கேன் விஜிகே சார் :)//

      நூலாசிரியரான தங்களின் அருமையான நூலினால் என் இடுகைகளும், இங்கு தங்களின் அன்பான வருகை + ஒவ்வொருவருக்கும் தாங்கள் தனித்தனியே கொடுத்துவரும் அழகான பதில்கள் இவற்றால் பின்னூட்டங்களும் அமுதசுரபி மாதிரி பெருகி வழிந்துக்கிட்டே போகுது.

      இதுவரை முதல் மூன்று பகுதிகளைப்பார்த்து நானும் பிரமிப்பில் இருக்கிறேன். இந்த பிரமிப்பு இதற்கு அடுத்த மூன்று பகுதிகளிலும் மேலும் தொடரட்டும்.

      நீக்கு