என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
போட்டி பற்றி நேயர் கடிதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போட்டி பற்றி நேயர் கடிதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 அக்டோபர், 2014

நேயர் கடிதம் - [ 11 ] திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்.



 

வலைத்தளம்:
நிஜாம் பக்கம்



திரு. 

 அ. முஹம்மது 
நிஜாமுத்தீன்  


அவர்களின் பார்வையில் !  



ஐயா அவர்களுக்கு... நலம்தானே?



இந்த வாரம் முடிந்து, அடுத்த வாரத்துடன் விமரிசனப் போட்டி 

முடியப் போகிறதே என எண்ணுகையில் வருத்தமாகத்தான் உள்ளது. 



எனது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்திலிருந்தே வானொலிக்கு 

விமரிசனக் கடிதங்கள் எழுதியும்  பத்திரிகைகளுக்கு விமரிசனங்கள், 

கேள்விகள், போட்டிகள் என்று கலந்து கொண்டு, அவற்றில் பல 

பரிசுகளும் பெற்றிருக்கிறேன். தங்களுக்கும் இது தெரியும். 



ஆனால், தங்கள் வலையில் தொடர்ச்சியாக 40 வாரங்கள் 

சிறுகதைகளை வெளியிட்டு, அதன் விமரிசனங்களுக்கு 


5 பரிசுகள் அளித்தது அவற்றிலிருந்து 


(அதாவது பத்திரிகைகளிலிருந்து) 

முற்றிலும் மாறுபட்டது. 





நடுவரை வாசகர்களுக்கு காட்டாதது, மற்றும் நடுவருக்கு விமரிசனம் 


எழுதியவரைக் காட்டாதது என்ற யுக்தி, புதுமைதன்மை கொண்டது.





மூன்று பரிசுகளை 5 பேர்களுக்கு அளித்து ஐவரைத் 


திருப்தி படுத்தினீர்கள். 





அதுவும் தொடர்ச்சியாக. அதற்காக, சிறப்பு நன்றிகள் தங்களுக்கு. 





நடுவர் யார் என்றும்கூட ஒரு போட்டி!!! 





இன்னும் முதல் சுற்றில் தேர்வான விமர்னங்களை வெளியிட்டு 

எந்த விமரிசனத்திற்கு எந்த பரிசு என்று ஒரு போட்டி!!! 





போட்டியில் வெற்றி பெற்றதற்கே தொடர் வெற்றிகளைக் 

குறிப்பிட்டு 'ஹாட் ட்ரிக்' என்று ஒரு பரிசு!!! 





பரிசு மழை சலிக்கவேயில்லை ஐயா! 





இன்னும் இன்னும் இன்னும் வராதா... என்று 


ஏங்க வைக்கும் தாகம் தரும் போட்டிகள்!!!






வாரம் தோறும் வெள்ளியன்று கதை வெளியீடு,




அடுத்த சனி, ஞாயிறு, திங்களில் முந்தின கதைகளின் போட்டி முடிவுகள், 




ஒவ்வொன்றிலும் அதன் தொடர்பான பதிவின் இணைப்பு,




ஒவ்வொரு பதிவிலும் நினைவூட்டல்,




மெயில் மூலம் தொடர் நினைவூட்டல்....




கடிகார நிமிடங்களும் உருண்டோடிய காலம் 10 மாதங்களை 


நெருங்கி விட்டது. 





கதைகளில் முக்கிய பகுதிகளுக்கு 


வேறொரு நிறம்...





உரையாடலுக்கும் வர்ணனைகளுக்கும் 


வேறு, வேறு நிறங்கள்...




தகுந்த இணைப்புப் படங்கள்...




முடிவு வெளியிடும்போது,




வெற்றியாளர் பெயர்,




அவரது வலைப்பூ பெயர்,




அவரது விமரிசனம்,




கைதட்டல்,





ஹாட் ட்ரிக் எனில் 

எத்தனையாவது என்ற விவரம்...





இப்படியாக ஒரு யூனிஃபார்மாக, முறைப்படுத்தி செய்வது என்று...


வியக்க, வியக்க எத்தனை விசயங்கள்???!!! 



நானும் சுமார் 7 அல்லது 8 போட்டிகளில்தான் கலந்து கொண்டேன். 
(ஐயா... தங்களிடம் அந்த விவரங்கள் இருக்குமே, நான் குறிப்பிட்டது சரிதானா?) அதிலேயே இரு போட்டிகளில் எனக்கும் பரிசு பெறும் வாய்ப்பைத் தந்தீர்கள் தாங்களும் நடுவர் அவர்களும். 



நான் எனது வலைப்பூவில் பதிவுகள் தொடர்ந்து இட இயலாத 
நெருக்கடியில் உள்ளேன். அப்படி, பதிவுகளை இட ஆரம்பித்தால், 
எனது 'நிஜாம் பக்கம்' வலைப்பூவிலும் தங்கள் மேன்மை பண்புகளை 
வெளிப்படுத்துவேன் என்று உறுதி கொள்கிறேன். 


இறை நாட்டமே, முதன்மையானது. 

அவ்வாறே நிகழ இறையருள் உண்டு என்று நம்புகிறேன்.

தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம் 
இறைஞ்சுகிறேன்.

நன்றி!

     அன்பன்,

  

          அ. முஹம்மது நிஜாமுத்தீன்.


 


என் அருமை நண்பர் 

திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களே ! 

தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.

தாங்கள் எழுதியனுப்பியுள்ள 
இந்த நேயர் கடிதம் எனக்கு மிகுந்த 
மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் 
தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.
தங்களுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

//எனது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்திலிருந்தே வானொலிக்கு 

விமரிசனக் கடிதங்கள் எழுதியும்  பத்திரிகைகளுக்கு விமரிசனங்கள், 

கேள்விகள், போட்டிகள் என்று கலந்து கொண்டு, அவற்றில் பல 

பரிசுகளும் பெற்றிருக்கிறேன். தங்களுக்கும் இது தெரியும். //



நன்றாகத் தெரியும். தங்கள் வலைப்பதிவினில் படித்துள்ளேன். 

அந்த அனுபவத்தில் இங்கும் அழகானதோர் நேயர் கடிதம் 

எழுதி அசத்தியுள்ளீர்கள். 



மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, நண்பரே !




//நானும் சுமார் 7 அல்லது 8 போட்டிகளில்தான் கலந்து கொண்டேன். 
(ஐயா... தங்களிடம் அந்த விவரங்கள் இருக்குமே, நான் குறிப்பிட்டது சரிதானா?) அதிலேயே இரு போட்டிகளில் எனக்கும் பரிசு பெறும் வாய்ப்பைத் தந்தீர்கள் 
தாங்களும் நடுவர் அவர்களும். //

VGK-01 முதல் VGK-37 வரையுள்ள 37 போட்டிகளில் 
தாங்கள் கலந்து கொண்டுள்ளது மொத்தம் 13 
போட்டிகளில் மட்டுமே. 

VGK-03 TO VGK-09; VGK-12, VGK-15, VGK-17, VGK-18,
VGK-31 and VGK-32 ஆகியவையாகும். 

VGK-06 இல் இரண்டாம் பரிசுக்கும், 
VGK-07 இல் மூன்றாம் பரிசுக்கும் 
தாங்கள் அனுப்பியிருந்த விமர்சங்கள் 
உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகி 
தங்களைவிட எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தன.

//நான் எனது வலைப்பூவில் பதிவுகள் தொடர்ந்து இட இயலாத 
நெருக்கடியில் உள்ளேன். அப்படி, பதிவுகளை இட ஆரம்பித்தால், 
எனது 'நிஜாம் பக்கம்' வலைப்பூவிலும் தங்கள் மேன்மை பண்புகளை 
வெளிப்படுத்துவேன் என்று உறுதி கொள்கிறேன். //

மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. 
மெதுவாகவே அவசரம் ஏதும் இல்லாமல் 
வெளியிட்டுக்கொள்ளுங்கள். இப்போது என்றால் 
அதனை பார்வையிட எனக்கும் நேர நெருக்கடியே :)

//தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான, 
ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம் 
இறைஞ்சுகிறேன்.//

ஆஹா, அப்படியே செய்யுங்கள் நண்பா; மிக்க நன்றி.




 

  




என்றும் அன்புடன் கோபு [VGK]

     



நினைவூட்டுகிறோம்




இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான


இணைப்புகள்:



 
பகுதி-1 க்கான இணைப்பு:  
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html


பகுதி-2 க்கான இணைப்பு:  
பகுதி-3 க்கான இணைப்பு:  
பகுதி-4 க்கான இணைப்பு:  



கதையின் தலைப்பு:



VGK-40


மனசுக்குள் மத்தாப்பூ !



விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்



26.10.2014


 ஞாயிற்றுக்கிழமை



இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.




போட்டியில் 


கலந்துகொள்ள 


மறவாதீர்கள் !




இதுவே இந்தப்போட்டியில் 



தாங்கள் கலந்துகொள்வதற்கான


இறுதி வாய்ப்பாகும். 


நல்லதொரு வாய்ப்பினை 
நழுவ விடாதீர்கள்.




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

வியாழன், 23 அக்டோபர், 2014

நேயர் கடிதம் - [ 10 ] திருமதி தமிழ்முகில் அவர்கள்


 

வலைத்தளம்:
http://muhilneel.blogspot.com/

"muhilneel"

tamizhmuhil.blogspot.com

”முகிலின் பக்கங்கள்” 

 

திருமதி 

 தமிழ்முகில் பிரகாசம்  




அவர்களின் பார்வையில் !  


மதிப்பிற்குரிய திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு,

                                  

வணக்கம். வலையுலகில் புதியதாக ஓர் போட்டி. தங்களது அற்புதமான சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுத ஓர் வாய்ப்பு. பொதுவாக, பலரும் தங்களது படைப்பைக் குறித்து பிறர் விமர்சனம் செய்வதை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். நீங்கள், உங்களுடைய சிறுகதைகளை படித்து, அவற்றை விமர்சனம் செய்யக் கூறி, நல்ல விமர்சனங்களுக்கு பரிசுகளும் அளித்து வருகிறீர்கள். அது மட்டுமன்றி, சில கதைகளுக்கு பங்கேற்ற அனைத்து விமர்சனங்களுக்குமே போனஸ் பரிசு என்று வழங்கி அனைவரையும் மகிழ்வித்து உள்ளீர்கள்.




நான் தங்களது மூன்றாம் சிறுகதையான " சுடிதார் வாங்கப் போறேன் " சிறுகதைக்கு முதன் முதலாக எனது விமர்சனத்தை அனுப்பினேன். அந்த விமர்சனத்திற்கு எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. இது குறித்து அறிந்ததும் மிகவும் மகிழ்ந்தேன். அதன் பின் என்னால் இயன்றவரை தங்களது சிறுகதைகளுக்கு எனது விமர்சனங்களை அனுப்பி வந்தேன். சில சமயங்களில், கைப்பட விமர்சனங்களை எழுதி வைத்து விட்டு, அவற்றை தட்டச்சு செய்ய நேரமில்லாத காரணத்தினால், அனுப்பாமல் விட்டுப் போன விமர்சனங்களும் உண்டு.



சில சிறுகதைகளுக்கு மட்டுமே விமர்சனம் அனுப்பியிருந்தாலும், பலவற்றை  புதியதாகக் கற்றுக் கொண்டுள்ளேன். முதலில், சிறுகதை விமர்சனம் என்பதே எனக்கு புதியது தான். விமர்சனக் கலை குறித்து அறிந்து கொண்டதே தங்கள் வாயிலாகத் தான். அதற்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள். 



இரண்டாவதாக, எனது விமர்சனங்கள் பரிசுக்கு தேர்வாகாது போனாலும், எனது வலைப்பூவில் வெளியிட்ட போது, தங்களது மேலான கருத்துக்கள், ஊக்கமூட்டும் வார்த்தைகள் என்னை மேலும் எழுத உற்சாகமூட்டும் தூண்டுகோலாய் அமைந்தன.




ஒரு போட்டியை அறிவித்து, அதை திறம்பட தொய்வேதும் இல்லாது நடத்தி, பரிசுத் தொகையை அவ்வப்போது, வெற்றி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் சேர்த்து, அப்பப்பா, எவ்வளவு வேலைகள் ! இது போதாதென்று, எனது வங்கிக் கணக்கு எண் வேறு நான் பிழையாகக் கொடுத்து விட, அதனால் தங்களுக்கு எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை உணருகிறேன். நான் செய்த பிழைக்கு மன்னித்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.



தங்களது சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுத நேரமில்லாது போனாலும், வாராவாரம் வியாழன் காலை பதினோறு மணிக்கு ( அதாவது இந்திய நேரப்படி வியாழன் இரவு எட்டரை மணிக்கு ) தங்களது  புதிய சிறுகதையை படிக்க தவறியதில்லை.




நல்லதோர் வாய்ப்பினை வழங்கி, புதிய விஷயங்கள் பலவற்றை அறியச் செய்து, ஊக்கமும் உற்சாகமும் வழங்கி வரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.






நன்றி.





இப்படிக்கு,







திருமதி.பி.தமிழ் முகில்


   

 

 



    

அன்புள்ள 
திருமதி. தமிழ்முகில் அவர்களே !
தங்களுக்கு முதலில் அடியேனின் வணக்கங்கள்


தாங்கள் இங்கு மனம் திறந்து 

எழுதியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், 

உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. 



தாங்கள் இந்தப்போட்டியின் ஆரம்பகட்டத்தில் 13 போட்டிகளில் மட்டுமே 

கலந்துகொண்டீர்கள். 


அதிலும் முதன் முதலாகத் தாங்கள் கலந்துகொண்ட VGK-03 ’சுடிதார் வாங்கப் 

போறேன்’ என்ற என் கதைக்கான தங்களின் விமர்சனம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத்தேர்வானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. மேலும்

VGK-05 'காதலாவது .... கத்திரிக்காயாவது’ என்ற கதையிலும் தங்களின் விமர்சனம் 

மீண்டும் பரிசுக்குத்தேர்வானதில் என் சந்தோஷம் இருமடங்காக இருந்தது.


அதன்பிறகு தங்களின் குடும்ப சூழ்நிலைகளால், தங்களின் முழுத்திறமைகளை 

வெளிப்படுத்தி தொடர்ந்து போட்டியில் கலந்துகொள்ள இயலாமல் உள்ளதாகச் 

சொல்லியிருந்தீர்கள். இது பெரும்பாலும் இந்தப்போட்டிகளில் கலந்துகொண்ட 

எல்லோருக்குமே ஏற்பட்ட சோதனைகள் தான். அதனால் பரவாயில்லை.








//இரண்டாவதாக, எனது விமர்சனங்கள் பரிசுக்கு தேர்வாகாது போனாலும், எனது வலைப்பூவில் வெளியிட்ட போது, தங்களது மேலான கருத்துக்கள், ஊக்கமூட்டும் வார்த்தைகள் என்னை மேலும் எழுத உற்சாகமூட்டும் தூண்டுகோலாய் அமைந்தன.//


போட்டியில் கலந்துகொண்ட பின் அந்தத் தங்களின்  விமர்சனம் நம் நடுவர் 

அவர்களால் பரிசுக்குத் தேர்வானாலும், தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் 

தங்களின் வலைத்தளப்பதிவுகளில் வெளியிட்டு சிறப்பித்திருந்தீர்கள். இது மிகவும் 

பாராட்டப்பட வேண்டியதோர், அரிய பெரியதோர் துணிச்சலான மற்றும் 


எழுத்துலகுக்கான ஆரோக்யமான செயல் மட்டுமே. எல்லோரும் இதை துணிந்து


விரும்பிச்செய்ய மாட்டார்கள். தயங்குவார்கள். 




தாங்கள் செய்த இந்தச்செயல் எழுத்துலகில் ஓர் புதுமையும். வரவேற்கப்பட 

வேண்டியதும், பிறரால் பின்பற்றப்பட வேண்டியதுமான ஓர் ஆரோக்யமான 


முன்னுதாரணம் என்றும் சொல்வேன்.




தங்களைப்பார்த்து மேலும் சிலரும் இதுபோலச் செய்து சிறப்பித்திருந்தார்கள். 

இன்றுவரை இதனை சிலர் பொறுப்புடனும் ஆவலுடனும் செய்துவருவது மிகவும் 

மகிழ்ச்சியளிக்கிறது. 


[உதாரணமாக ஒருசிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன்:

திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
திரு. ரமணி அவர்கள் 
திரு. பெருமாள் செட்டியார் அவர்கள்]


இருப்பினும் ’VGK-12 உண்மை சற்றே வெண்மை’ வரை இதனை மிகுந்த ஆர்வத்துடன் 

செய்துவந்த தாங்கள், அதன்பிறகு தாங்கள் கலந்துகொண்ட VGK-17, VGK-18, VGK-23 

மற்றும் VGK-24 ஆகிய நான்கு விமர்சனங்களை மட்டும் தங்கள் பதிவினில் 

இதுவரை வெளியிடாமல் உள்ளீர்கள் என்பதையும் நினைவூட்டிக்கொள்கிறேன்.








தாங்கள் 05.05.2014 முதல் 11.05.2014 வரை வலைச்சர ஆசிரியராக 


ஒருவார காலம் பொறுப்பேற்றிருந்தபோது அதில் மூன்று நாட்கள் 

என்னைப்பற்றியும் என் வலைத்தளம் பற்றியும் எழுதியிருந்தீர்கள்.

மிக்க நன்றி, மிகவும் சந்தோஷம்.







அனைவருக்கும் முதற்கண் எனது அன்பு வணக்கங்கள். எனது பெயர் பி. தமிழ் முகில். இன்று தொடங்கி, இன்னும் ஒரு வார காலத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க உள்ளேன். தங்களது மேலான அன்பினையும் ஆதரவையும் நாடுகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க கேட்ட போது, சில காரணங்களால் இயலாமல் போனது.  முதன் முறையாக வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். நல்லதோர் வாய்ப்பளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.





அதிலும் 09.05.2014 வெள்ளிக்கிழமையன்று 

என் இந்த சிறுகதை விமர்சனப் 

போட்டியினைப் பற்றி வலைச்சரத்தில் 

மிகச்சிறப்பான விளம்பரமும் கொடுத்திருந்தீர்கள்.

இதோ இங்கே அதனை அப்படியே கொடுத்துள்ளேன். 






 அறிவிப்பு 

திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களது தளத்தில் 
நடைபெறும் சிறுகதை விமர்சனப் போட்டி 

அன்பின் திரு.வை. கோபாலகிருஷ்ணன்  ஐயா
அவர்களின் வலைத்தளத்தினில் 
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று 
ஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது. 

அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப 
போட்டியும் நடைபெற்று வருகிறது.

அனைவரும் இதில் கலந்துகொண்டு 
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

போட்டியின் பொதுவான விதிமுறைகளுக்கான இணைப்பு:



இந்த வாரப்போட்டிக்கான சிறுகதையின் தலைப்பு: 


“ சூ ழ் நி லை ”


  

  


ஆண்டு முழுவதும் பரிசுகள் !


அள்ளிச்செல்ல அன்புடன் செல்லுங்கள் !!

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

தங்களின் பேரன்புக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.


  
 


//தங்களது சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுத நேரமில்லாது போனாலும், வாராவாரம் வியாழன் காலை பதினோறு மணிக்கு ( அதாவது இந்திய நேரப்படி வியாழன் இரவு எட்டரை மணிக்கு ) தங்களது  புதிய சிறுகதையை படிக்க தவறியதில்லை.//



போட்டியில் தொடர்ந்து தங்களால் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் 


என் சிறுகதைகளை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து படித்து


வந்ததாகச் சொல்வதைக்கேட்கவே, எனக்கு மிகவும் சந்தோஷமாக 


உள்ளது.



 


//இது போதாதென்று, எனது வங்கிக் கணக்கு எண் வேறு நான் பிழையாகக் கொடுத்து விட, அதனால் தங்களது எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை உணருகிறேன். நான் செய்த பிழைக்கு மன்னித்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.//



தங்களின் வங்கித்தகவல்களை முதலில் தவறுதலாக எழுதி அனுப்பிவிட்டீர்கள். பிறகு

அந்தப்பணம் சரியாகப்போய்ச்சேராமல் எங்களுக்கே [நல்ல வேளையாகத்] திரும்பி 


வந்தது தெரிந்ததும், அமெரிக்காவில் உள்ள தங்களையும், தாங்கள் 


கேட்டுக்கொண்டபடி தொலைபேசியில் கோவையில் உள்ள தங்கள் தந்தையையும் 


நான் தொடர்பு கொண்டேன். 




பிறகு சரியான சேமிப்புக்கணக்கு எண்ணுடன் தகவல் அனுப்பி வைத்தீர்கள். அந்த 


REVISED SB ACCOUNT க்கு நாங்கள் 29.04.2014 அன்று பணத்தை மீண்டும் அனுப்பி 


வைத்தோம். பணம் கிடைத்துவிட்டதாக 11.05.2014 அன்று தாங்கள் Confirm செய்தீர்கள். 




அதன்பிறகு சமீபத்தில் 16-17/09/2014 அன்றும் [போனஸ் பரிசாக] ஒரு தொகை தங்களின் 


வங்கிக்கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 



இதுபோன்ற தவறுகள் எல்லாம் சகஜம் தான். இதற்கெல்லாம் ‘மன்னிப்பு’ என்ற பெரிய 


வார்த்தைகளெல்லாம் எதற்கு?




இருப்பினும் தாங்கள் கொடுத்திருந்த தவறுதலான [உல்டா புல்டா நம்பர்களுடன்] 

கணக்கு எண்ணில் வேறு ஒரு நபருக்கு அதே வங்கியில் கணக்கு இருந்து அதில் 

இந்தத்தொகை வரவு வைக்கப்பட்டிருந்தால், அதனை நாம் திரும்பப்பெறுவது மஹா

மஹா கஷ்டமாகியிருக்கும். நல்லவேளையாக அதுபோலெல்லாம் ஒன்றும் 

ஆகவில்லை என்பதில் நமக்கு ஓர் ஆறுதல். :)





தாங்கள் அன்புடன், மிகவும் சிரத்தையாக,  இந்த நேயர் கடிதத்தினை எழுதி எனக்கு அனுப்பியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். வாழ்க !





பிரியமுள்ள கோபு [VGK]

     


நினைவூட்டுகிறோம்




இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான


இணைப்புகள்:



 
பகுதி-1 க்கான இணைப்பு:  
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html


பகுதி-2 க்கான இணைப்பு:  
பகுதி-3 க்கான இணைப்பு:  
பகுதி-4 க்கான இணைப்பு:  



கதையின் தலைப்பு:



VGK-40


மனசுக்குள் மத்தாப்பூ !



விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்



26.10.2014


 ஞாயிற்றுக்கிழமை



இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.




போட்டியில் 


கலந்துகொள்ள 


மறவாதீர்கள் !




இதுவே இந்தப்போட்டியில் 



தாங்கள் கலந்துகொள்வதற்கான


இறுதி வாய்ப்பாகும். 




நல்லதொரு வாய்ப்பினை

நழுவ விடாதீர்கள்.




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்