2
ஸ்ரீராமஜயம்
நம்முடைய ஹிந்து மதம் ஒன்றுதான் ’இது ஒன்றே மோக்ஷ மார்க்கம்’ என்று சொல்லாமலிருக்கிறது.
நம்முடைய வைதீக மதம் தான், பிறரை தன் மதத்துக்கு மாற்றுவது என்பது கிடையாது.
ஏனென்றால் ‘ஒரே பரமாத்மாவை அடைவதற்கான பல மார்க்கங்களே பல மதங்களும்’ என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! அதுவே தப்பு. வேத பாஷைக்கு ஸம்ஸ்கிருதம் என்று பெயர் இல்லை. அதற்குப்பெயர் ’ஸந்தஸ்’ என்பது தான்.
சந்தஸ் என்றால் சந்தம் [Metre அதாவது Poetical Rhythm] மட்டுமில்லை.
முழுக்கவும் லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக்கொண்டே ஏற்பட்ட ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையின் ஸந்தந்தான்.
oooooOooooo
ஹரியும் சிவனும் பற்றி
அருமையான விளக்கங்கள்
அருமையான விளக்கங்கள்
பெரியவரின் சைவ-வைணவச் சமநோக்குக்கு அவர் காட்டும் உதாரணங்களும் – வியாக்யானங்களும் ‘அடேயப்பா என்ன ஒரு பார்வை – என்ன ஒரு நேர்மை – என்ன ஒரு நடுவு நிலை’ என்று வியப்பையே ஏற்படுத்துகிறது.
‘எல்லா தேவ தேவியர்களுக்குள்ளும் ஒரே பரமாத்மாதான் இருக்கிறான்’ – இது பொதுவான கருத்து. இதை ‘ஒன்றே குலமென்று பாடுவோம் – ஒருவனே தேவனென்று போற்றுவோம்’ என்னும் கருத்தோடும், பிற மதங்களின் இறைக் கொள்கைகளோடும், இணைத்து ஏற்கவும் முடிகிறது.
இதையும் சொல்லிக் கொண்டு சிவன் – விஷ்ணு – பிரம்மா என்று மும்மூர்த்திகள் என அந்த ஒன்றை மூன்றாக்குவதும், அதைத் தொடர்ந்து சக்தி-சரஸ்வதி-லக்ஷ்மி என்று அது விரிவாவதெல்லாமும் எதனால்?
குறிப்பாக சிவம் - விஷ்ணு என்று இருபெரும் அணிபோல், இந்த ஒன்றை இரண்டாக்கி, இதில் ஒன்று பெரியது மற்றது அதற்கு அடங்கியது என்பதுபோல் பேசுவதெல்லாம் எந்த வகையில் சரி?
இதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பதில்
மிக இதமாக இதோ…
‘சிவனும் விஷ்ணுவும் கொஞ்சம்கூட வேறு வேறில்லை. ஆனாலும் இரண்டையும் வழிபடுகிற போது, கொஞ்சம் பிரித்து பக்தி செய்தால், அதிலும் ஒரு ரஸம் இருக்கத்தான் செய்கிறது. பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் நம் மதத்தின் சாரம் (Unity in Diversity)..
இப்படியே சிவன் – விஷ்ணு என்கிற இரண்டு மூர்த்திகளையும் வழிபடுகிறபோதும், அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும், ஒவ்வொரு மூர்த்தியை ஒவ்வொரு தத்துவத்துக்கு ரூபமாக வைத்துக்கொண்டு பக்தி செய்வதில் ஒரு ருசி இருக்கத் தான் செய்கிறது.
இப்படிச் செய்யும் போது, சிவத்தை ஏக வஸ்துவான ஞானமாக பாவிக்கலாம். அந்த ஏக வஸ்துவை பலவிதமாகக் காட்டி ஜகத்தை நடத்தும் சக்தியாக விஷ்ணுவை பாவிக்கலாம்.
அதாவது, சிவத்தை பரப்பிரம்மமாகவும், விஷ்ணுவை பராசக்தியாகவும் வைத்துக் கொள்ளலாம்.
அதாவது, சிவத்தை பரப்பிரம்மமாகவும், விஷ்ணுவை பராசக்தியாகவும் வைத்துக் கொள்ளலாம்.
இருக்கிற ஒன்றை இல்லாத பலவாக காட்டுகிற சக்தியே, அம்பாள் அல்லது விஷ்ணு. இதனால் ஜகம் முழுவதுமே விஷ்ணுரூபம்!
’விஸ்வம் விஷ்ணு’ என்றுதானே சஹஸ்ர நாமமே ஆரம்பமாகிறது?
உலக பரிபாலனமும் விஷ்ணுவுக்கே உரியது. அதனாலேயே உலகத்தில் இருக்கிற ஆனந்தங்களை உணர்ச்சிகளை எல்லாம் தெய்வீகமாக்குகிற பக்தி மார்க்கமும் விஷ்ணு சம்பந்தமாகவே அதிகம் உள்ளது.
ஹரிகதை, ஹரிநாம சங்கீர்த்தனம் என்று கூறுவதுபோல் ஹரகதை ஹரகீர்த்தனம் என்று சொல்லப்படுவதில்லை.
உலக பரிபாலனமும் விஷ்ணுவுக்கே உரியது. அதனாலேயே உலகத்தில் இருக்கிற ஆனந்தங்களை உணர்ச்சிகளை எல்லாம் தெய்வீகமாக்குகிற பக்தி மார்க்கமும் விஷ்ணு சம்பந்தமாகவே அதிகம் உள்ளது.
ஹரிகதை, ஹரிநாம சங்கீர்த்தனம் என்று கூறுவதுபோல் ஹரகதை ஹரகீர்த்தனம் என்று சொல்லப்படுவதில்லை.
கதை, பாட்டு இதெல்லாம் விஷ்ணுவிடமே அதிகம். பாகவதர் என்றால் பகவானைச் சேர்ந்தவர் என்றே அர்த்தமாயினும், பொதுவாக பாகவதர், பாகவதம் என்றெல்லாம் சொன்னால் விஷ்ணுபக்தர், விஷ்ணுவின் கதை என்றே எடுத்துக் கொள்கிறோம்.
பிரபஞ்ச சௌகரியங்களை எல்லாம் வைத்து, பூஜை, பக்தி, பஜனை, கதை என்பதெல்லாமே விஷ்ணு சம்பந்தமாயிருக்கிறது.
இதை விட்டு இதற்கு ஆதாரமான சாந்தத்தில் திளைக்கும்போது, சிவசம்பந்தம் அதிகம் தோன்றுகிறது. சிவஞானம், சிவயோகம் என்று சொல்கிற மாதிரி விஷ்ணு ஞானம், விஷ்ணு யோகம் என்பன காணப்படவில்லை.
பலவாக இருக்கிற உலகனைத்தும் விஷ்ணு என்பதால், ’ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற வாக்கு தோன்றியது.
பலவாக காண்பது போனால், ‘ஸர்வம்’ போய்விடும். அப்புறம் ஏகம்தான் இருக்கும்.
பலவாக காண்பது போனால், ‘ஸர்வம்’ போய்விடும். அப்புறம் ஏகம்தான் இருக்கும்.
ஏகம் இருக்கும்போது ஸர்வத்துக்கு இடம் ஏது?
இந்த ஏகத்தை அனுபவிக்கிறவனைத் தவிர, ஜகம் என்றும் ஒன்று தனியாக இல்லை. ஜகமும் அடிப்பட்டு போய்விடுகிறது.
சிவம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. இதனால் தான் ‘சிவமயம்’ என்கிறார்கள்.
இந்த ஏகத்தை அனுபவிக்கிறவனைத் தவிர, ஜகம் என்றும் ஒன்று தனியாக இல்லை. ஜகமும் அடிப்பட்டு போய்விடுகிறது.
சிவம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. இதனால் தான் ‘சிவமயம்’ என்கிறார்கள்.
VIBGYOR என்கிற ஏழு நிறங்களில் கறுப்பும் வெளுப்பும் இல்லை.
இங்கே வெள்ளை சிவன், கரிய திருமால் ஆகிய இருவருமே பிரபஞ்ச வர்ணங்களில், அதாவது லௌகீகத்தில் சேராதவர்கள்தான்.
இங்கே வெள்ளை சிவன், கரிய திருமால் ஆகிய இருவருமே பிரபஞ்ச வர்ணங்களில், அதாவது லௌகீகத்தில் சேராதவர்கள்தான்.
எதை எரித்தாலும் முதலில் அது கறுப்பு ஆகிறது. ஆனால், அப்போதும் எரிபட்ட வஸ்துவுக்கு நிறம் மாறினாலும் ரூபம் அப்படியே இருக்கும். நியூஸ் பேப்பரைகூட கொளுத்திவிட்டு பார்த்தால், அது கறுப்பானாலும் அந்த கறுப்புக்குள் அதிக கறுப்பாக எழுத்துக்கள் தெரியும்.
ஒரு துணிக்கும் இது பொருந்தும். எரிந்த இந்த நிலைதான் சர்வம் விஷ்ணு மயம் ஜகத்! எல்லாம் இருப்பதுபோல, இருந்தாலும் லௌகீகமாக இல்லாமல் தெய்வீகமாக பக்தி ரூபத்தில் இருக்கின்றன.
யோகத்திலும் ஞானத்திலும் மேலும் ஆன்மாவைப் புடம்போட்டால் அதுவும் நீற்றுப்போய் பஸ்பமாகிவிடும்.
எரிகிற வஸ்துக்கள் கறுப்பானாலும், கடைசிவரை எரித்தால் முடிவில் வெள்ளை வெளேரென்று நீராகின்றன.
இதுதான் சிவமயம்!”
பெரியவரின் இந்த சிவம் - விஷ்ணு குறித்த சிந்தனை என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. என்னை மட்டுமா?
இதை வாசிக்கும் யாருக்குத்தான் சிந்தனைகள் தோன்றாது.
அவரின் வியாக்யானம் தொடர்கிறது. எப்படித் தெரியுமா? ‘அரனை மறவாதே – திருமாலுக்கு அடிமை செய்’ என்று!
‘எரிந்த மரம் கரியாகிறது. அந்தக் கரியும் முதிர்ந்தால் வைரமாகிறது. உலகம் இருந்த போதிலும் அதன் மாயை விஷ்ணுமயமாக தெரிகிறபோது, நம் அஞ்ஞானம் கரியாகிப்போன நிலையில் இருக்கிறோம். திருமாலும் கரிமாலாக இருக்கிறார் – கரி வைரமாகிற நிலைக்கு பரமேஸ்வரன் வந்து விடுகிறார்.
கரியும் வைரமும் வேறு வேறா? – கேட்கிறார் பெரியவர். அப்படியே மஹாவிஷ்ணுவின் கறுப்பும், சிவனின் வெளுப்பும் இந்த உலக வண்ணங்களில் சேருவதேயில்லை. கலர் வந்தாலே பொய் வந்து விட்டதாகத்தான் பொருள். இந்த இரண்டும் பொய்யோடு சேர்ந்தது மில்லை; சேரப்போவதுமில்லை. வெண்மைக்கு விபூதி. கருமைக்கு விஷ்ணுமய உலகின் மண் திருமண்ணாகிவிட்டது.
இதை எல்லாம் கசடற உணர்ந்த காரணத்தால்தான், ‘பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து…’ என்று ஆழ்வாரும், ‘குடமாடியை (கோபிகா கிருஷ்ணனை) இடத்தேகொண்டு’ என்று சைவத்திரு முறைகளும் பாடுகின்றன.
இதை எல்லாம் கசடற உணர்ந்த காரணத்தால்தான், ‘பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து…’ என்று ஆழ்வாரும், ‘குடமாடியை (கோபிகா கிருஷ்ணனை) இடத்தேகொண்டு’ என்று சைவத்திரு முறைகளும் பாடுகின்றன.
அவ்வைப் பாட்டியும் ஒரு படி மேலே போய், ‘அரனை மறவாதே, திருமாலுக்கு அடிமை செய்’ என்கிறாள்.
தமிழகத்தில் இம்மட்டில் சமரசபாவம் புரிந்த எல்லோரிடமும் இருந்தே வந்துள்ளது. அதனாலேயே 27 நட்சத்திரங்களில் சிவனுக்குரிய ஆதிரை, விஷ்ணுவுக்குரிய ஓணம் இரண்டுக்கும் மட்டும் திரு சேர்த்து திருவாதிரை, திருவோணம் என்று சொல்கிறோம்” என்று விரியும் பெரியவரின் திருவாக்கு, அடுத்தடுத்து பல பரிமாணங்களைக் காட்டுகிறது.
மஹாவிஷ்ணுவானவர் திருபுவன சக்ரவர்த்தி. சிவனோ பிச்சாண்டி. இருவருடைய சொத்துக்களை கொஞ்சம் கணக்கெடுப்போம்.
சிவனிடம் சாம்பல், எருக்கம்பூ தும்பைப்பூ, ஊமத்தை, மண்டை ஓடு, யானைத்தோல், பாம்பு. இவைதான் உள்ளன. இது எதுவுமே விலைபோகாதவையும்கூட.
மஹாவிஷ்ணுவிடமோ கிரீட குண்டலம், முக்தாஹாரம், பட்டுப்பீதாம்பரம், கௌஸ்துப மணி, இத்யாதிகள்… இவற்றுக்கோ விலையை நிர்ணயமே செய்ய முடியாது.
இதிலிருந்து சந்தோஷத்துக்கு விஷ்ணு, வைராக்கியத்துக்கு சிவன் என்பது புரியவருகிறது. இதை ஒட்டியே காலை எழுந்தவுடன் ‘ஹரி நாராயண ஹரி நாராயண’ என்கிறோம். பொழுது நன்றாக சந்தோஷமாக செல்ல வேண்டுமே?
மாலையில் ‘சிவசிவ’ என்கிறோம்.
என்ன பொருத்தமான வழிகாட்டல் பாருங்கள். பகல் முழுக்க சந்தோஷமாக வாழ, நாராயணன். இரவில் ஒடுங்கி அமைதியாய் தூங்க, சிவன்.
அண்டம் பிண்டம் இரண்டும் ஒரே சரக்கானதால், உலக நடப்புக்கும் நம் அக உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
என்ன பொருத்தமான வழிகாட்டல் பாருங்கள். பகல் முழுக்க சந்தோஷமாக வாழ, நாராயணன். இரவில் ஒடுங்கி அமைதியாய் தூங்க, சிவன்.
அண்டம் பிண்டம் இரண்டும் ஒரே சரக்கானதால், உலக நடப்புக்கும் நம் அக உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
காலையில் பஞ்சகச்சம் உடுத்தி, சந்தியாவந்தனம் செய்த ஒருவர், பகலில் சூட் போட்டுக்கொண்டு ஆபீஸுக்கு போகிறார். இது காரியத்துக்கு ஏற்ப போடும் வேஷம்.
இங்கேயும் ஒன்றான பரமாத்மாதான் விஷ்ணுவாக காரியமாற்றும்போதும், சிவமாக காரியம் முடிக்கும் போதும் செயலாற்றுகிறது.”
இங்கேயும் ஒன்றான பரமாத்மாதான் விஷ்ணுவாக காரியமாற்றும்போதும், சிவமாக காரியம் முடிக்கும் போதும் செயலாற்றுகிறது.”
இப்படி சிவ - விஷ்ணுவின் பேத - அபேத சிறப்புக்களை பாமரனுக்கும் புரியும் வண்ணம் கூறியுள்ளார் மஹாபெரியவா.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியிடப்படும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியிடப்படும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
அறிய அறிய மனம் இதம் ஆகிறது... நன்றி ஐயா...
ReplyDeleteசர்வம் விஷ்ணு மயம் ஜகத்...!
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன்
DeleteSeptember 19, 2013 at 1:13 AM
//சர்வம் விஷ்ணு மயம் ஜகத்...!//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
Very nice explanation
ReplyDeleteHarini M September 19, 2013 at 1:36 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//Very nice explanation//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
பெரியவாளின் அரி-ஹரன் விளக்கம் அருமை! 400வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeletes sureshSeptember 19, 2013 at 2:35 AM
Delete//400வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி.
மஹாவிஷ்ணுவானவர் திருபுவன சக்ரவர்த்தி. சிவனோ பிச்சாண்டி. இருவருடைய சொத்துக்களை கொஞ்சம் கணக்கெடுப்போம்.
ReplyDeleteசிவனிடம் சாம்பல், எருக்கம்பூ தும்பைப்பூ, ஊமத்தை, மண்டை ஓடு, யானைத்தோல், பாம்பு. இவைதான் உள்ளன. இது எதுவுமே விலைபோகாதவையும்கூட.
மஹாவிஷ்ணுவிடமோ கிரீட குண்டலம், முக்தாஹாரம், பட்டுப்பீதாம்பரம், கௌஸ்துப மணி, இத்யாதிகள்… இவற்றுக்கோ விலையை நிர்ணயமே செய்ய முடியாது.
இதிலிருந்து சந்தோஷத்துக்கு விஷ்ணு, வைராக்கியத்துக்கு சிவன் என்பது புரியவருகிறது. இதை ஒட்டியே காலை எழுந்தவுடன் ‘ஹரி நாராயண ஹரி நாராயண’ என்கிறோம். பொழுது நன்றாக சந்தோஷமாக செல்ல வேண்டுமே?
மாலையில் ‘சிவசிவ’ என்கிறோம்.
என்ன பொருத்தமான வழிகாட்டல் பாருங்கள். பகல் முழுக்க சந்தோஷமாக வாழ, நாராயணன். இரவில் ஒடுங்கி அமைதியாய் தூங்க, சிவன். // சுவையான எளிமையான விளக்கம்! மிக்க நன்றி!
பரப்ரம்மமும்,பராசக்தியுமாக,சிவா,விஶ்ணுவை நினைக்க என்ன அருமையான வியாக்யானம்.
ReplyDeleteஎன்ன அருமையான விஶயங்கள். அமுத மழையாகவே இருக்கிறது பதிவு. மிகவும் அருமை. அன்புடன்
Kamatchi September 19, 2013 at 3:09 AM
Deleteவாங்கோ, நமஸ்காரங்கள்.
//பரப்ரம்மமும்,பராசக்தியுமாக,சிவா,விஶ்ணுவை நினைக்க என்ன அருமையான வியாக்யானம்.
என்ன அருமையான விஶயங்கள். அமுத மழையாகவே இருக்கிறது பதிவு. மிகவும் அருமை. அன்புடன்//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
ஹரி சிவன் பற்றிய விளக்கங்கள் அறிந்து கொண்டேன். படங்கள் அழகு. 400 பகிர்வுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் தொடர்கிறோம்.
ReplyDeleteSasi Kala September 19, 2013 at 3:43 AM
Delete//ஹரி சிவன் பற்றிய விளக்கங்கள் அறிந்து கொண்டேன். படங்கள் அழகு. 400 பகிர்வுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் தொடர்கிறோம்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
//‘ஒரே பரமாத்மாவை அடைவதற்கான பல மார்க்கங்களே பல மதங்களும்’ என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.//
உண்மையான வார்த்தை.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவர் அவர்கள் சொன்ன ஹரியும் சிவனும் பற்றிய
அருமையான விளக்கங்களை படிக்க கொடுத்தமைக்கு
நன்றி.
கோமதி அரசு
DeleteSeptember 19, 2013 at 3:56 AM
//400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
நானூறாவது பதிவுக்கு
ReplyDeleteநலமான வாழ்த்துகள்..!
இராஜராஜேஸ்வரி
DeleteSeptember 19, 2013 at 4:33 AM
//நானூறாவது பதிவுக்கு நலமான வாழ்த்துகள்..!//
தங்களின் அன்பான வருகைக்கும், நலமான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
‘ஒரே பரமாத்மாவை அடைவதற்கான பல மார்க்கங்களே பல மதங்களும்’ என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்
ReplyDeleteநம் முன்னோர்களின்
ஆழ்ந்த உணர்வுத்திறன்
அர்த்தமுள்ளது..!
‘எரிந்த மரம் கரியாகிறது. அந்தக் கரியும் முதிர்ந்தால் வைரமாகிறது. உலகம் இருந்த போதிலும் அதன் மாயை விஷ்ணுமயமாக தெரிகிறபோது, நம் அஞ்ஞானம் கரியாகிப்போன நிலையில் இருக்கிறோம். திருமாலும் கரிமாலாக இருக்கிறார் – கரி வைரமாகிற நிலைக்கு பரமேஸ்வரன் வந்து விடுகிறார்.
ReplyDeleteஒன்றுக்கு ஒன்று ஆதாரமாகவும் , அடித்தளமாகவும் இருந்து ஜொலித்து ஜோதியாய் உண்மையை விளக்கி நிற்கும் பாங்கு போற்றுதலுக்குரியது..!
பகல் முழுக்க சந்தோஷமாக வாழ, நாராயணன். இரவில் ஒடுங்கி அமைதியாய் தூங்க, சிவன்.
ReplyDeleteஅர்த்தமுள்ள நாமங்கள்..!
இந்த ஏகத்தை அனுபவிக்கிறவனைத் தவிர, ஜகம் என்றும் ஒன்று தனியாக இல்லை. ஜகமும் அடிப்பட்டு போய்விடுகிறது. சிவம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. இதனால் தான் ‘சிவமயம்’ என்கிறார்கள்.
ReplyDeleteஏகன் அநேகன் அடிபோற்றும் அருமையான பகிர்வுகள்..!
ஜகம் முழுவதுமே விஷ்ணுரூபம்!
ReplyDeleteசர்வம் விஷ்ணுமயம் ஜகத்...!
சிவனும் விஷ்ணுவும் கொஞ்சம்கூட வேறு வேறில்லை. ஆனாலும் இரண்டையும் வழிபடுகிற போது, கொஞ்சம் பிரித்து பக்தி செய்தால், அதிலும் ஒரு ரஸம் இருக்கத்தான் செய்கிறது. பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் நம் மதத்தின் சாரம் (Unity in Diversity)..
ReplyDeleteஅமிர்த மயமான ஆனந்த ரசம் ..
அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
ஸ்ரீ மஹாபெரியவாளின் அமுத மழையினில் நனைவதற்கு என்ன தவம் செய்தோமோ!.. நல்ல பதிவினை வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா!..
ReplyDeleteதுரை செல்வராஜூ
DeleteSeptember 19, 2013 at 4:56 AM
//ஸ்ரீ மஹாபெரியவாளின் அமுத மழையினில் நனைவதற்கு என்ன தவம் செய்தோமோ!.. நல்ல பதிவினை வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா!..//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
wonderful explanation !!!!Thanks for sharing...
ReplyDeletesrikars kitchen September 19, 2013 at 5:49 AM
DeleteWELCOME !
//wonderful explanation !!!!Thanks for sharing...//
Thanks for your FIRST visit & BEST wonderful Comments.
vgk
ReplyDeleteமுதலில் என் வாழ்த்துக்கள். இறையறிவு பற்றிப் பெரியவர்கள் என்னதான் சொல்லி இருந்தாலும் பெரும்பாலும் மக்களின் புரிதலே தனி. எந்த நம்பிக்கையையும் அதன் தாத்பரியம் அறிந்து ஒழுக வேண்டும். நிறைய விஷயங்கள் போய்ச் சேர்ந்தால் மகிழ்ச்சி. கடைசியாக எழுத்துக்களின் அளவை சற்று பெரிதாக்கலாமே. பொடி எழுத்துக்கள் படிக்க சிரமமாய் இருக்கிறது.
G.M Balasubramaniam
DeleteSeptember 19, 2013 at 5:55 AM
வாங்கோ ஐயா, வணக்கம்.
//முதலில் என் வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி, ஐயா.
//கடைசியாக எழுத்துக்களின் அளவை சற்று பெரிதாக்கலாமே. பொடி எழுத்துக்கள் படிக்க சிரமமாய் இருக்கிறது.//
தாங்கள் படிக்க நான் சிரமம் கொடுத்துவிட்டதற்கு வருந்துகிறேன்.
அடுத்த பகுதி முதல் அதை சற்றே பெரிதாகக்காட்ட முயற்சிக்கிறேன், ஐயா. தகவல் கொடுத்துள்ளதற்கு மிக்க நன்றி, ஐயா.
அன்புடன் VGK
G.M Balasubramaniam ஐயா அவர்களுக்கு : ஒரு சின்ன வழி இருக்கிறது... Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, (+) ப்ளஸ் Key-யை ஒருமுறையோ இருமுறையோ... (நம் தேவைகேற்ப) அழுத்தினால், தளத்தில் உள்ள எழுத்துகள் பெரிதாகி விடும்... நன்றி ஐயா...
Delete//திண்டுக்கல் தனபாலன்
DeleteSeptember 19, 2013 at 7:27 PM
G.M Balasubramaniam ஐயா அவர்களுக்கு : ஒரு சின்ன வழி இருக்கிறது... Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, (+) ப்ளஸ் Key-யை ஒருமுறையோ இருமுறையோ... (நம் தேவைகேற்ப) அழுத்தினால், தளத்தில் உள்ள எழுத்துகள் பெரிதாகி விடும்... நன்றி ஐயா...//
அன்புள்ள திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வணக்கம்.
ஆஹா, எளிமையான ஒரு விஷயத்தை மிகவும் அருமையாகச் சொல்லி புரிய வைத்துள்ளீர்கள். நானும் இன்று தான் இதை தங்கள் மூலம் கற்றுக்கொண்டேன். செய்தும் பார்த்தேன். உடனே எழுத்துக்கள் பெரிதாகிப்போனது. மீண்டும் சிறியதாக ஆக்க Ctrl ஐ அழுத்திக்கொண்டு, மைனஸ் போட்டால் போதுமானதாக உள்ளது.
மிக்க நன்றி, நன்றி, நன்றி, நன்றி. ;)))))
நானூறாவது
ReplyDeleteபதிவிற்கு
மனங்கனிந்த
வாழ்த்துக்கள் ஐயா
தொடரட்டும்
தங்களின்
ஆன்மீகப்
பயணம்
கரந்தை ஜெயக்குமா
Deleteர்September 19, 2013 at 7:27 AM
//நானூறாவது பதிவிற்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள் ஐயா//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
தெளிவான, நல்ல விளக்கம்.
ReplyDeleteGMB அவர்கள் சொன்னதைப்போல கொஞ்சம் பெரிதாகப் போடுங்கள், ப்ளீஸ்!
Ranjani Narayanan
DeleteSeptember 19, 2013 at 7:53 AM
வாங்கோ, வணக்கம்.
//தெளிவான, நல்ல விளக்கம். GMB அவர்கள் சொன்னதைப்போல கொஞ்சம் பெரிதாகப் போடுங்கள், ப்ளீஸ்!//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
Mr. GMB அவர்களுக்கு நான் கொடுத்துள்ள பதிலே உங்களுக்கும் பொருந்தும்.
நானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் ஐயா. விரைவில் 500+வது பதிவை அடைய இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteவேல் September 19, 2013 at 8:21 AM
Delete//நானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் ஐயா. விரைவில் 500+வது பதிவை அடைய இனிய வாழ்த்துகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
யோகத்திலும் ஞானத்திலும் மேலும் ஆன்மாவைப் புடம்போட்டால் அதுவும் நீற்றுப்போய் பஸ்பமாகிவிடும்.
ReplyDeleteஎரிகிற வஸ்துக்கள் கறுப்பானாலும், கடைசிவரை எரித்தால் முடிவில் வெள்ளை வெளேரென்று நீராகின்றன.
இதுதான் சிவமயம்!”//
அற்புதம்! நானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் ஐயா! நன்றி!
Seshadri e.s.September 19, 2013 at 9:04 AM
Delete//நானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் ஐயா! நன்றி!//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
சிவ விஷ்ணு பேதம்
ReplyDeleteசராசரி மனிதர்கள் பார்ப்பதில்லை
அவர்கள் எல்லாவற்றையும்
தங்களை காப்பாற்ற வரும்
கடவுளாகதான் பார்க்கிறார்கள்.
பேதங்கள் பார்ப்பது
வேதங்களை கற்றவர்களும்
மடாதிபதிகளும்தான்.
மதங்கள் அந்தந்த காலங்களில்
நிலவி வந்த சூழ்நிலைக்கேற்ப
மக்களை பண்படுத்தும் பொருட்டும்
நல்லதோர் வழியை காட்டி வழி நடத்துவதற்கும்
முன்னோர்களார் உருவாக்கப்பட்டன.
அவற்றில் சில கொள்கைகள்
ஒவ்வாதவை என்பது தெரிந்திருந்தும்
அவற்றை மக்கள் மீது திணிப்பதால்தான்
மக்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை.
எல்லா மதங்களும் எல்லா
உயிர்களையும் அன்பு செய்யவேண்டும் ,
ஒருவொருக்கொருவர் உதவி செய்ய வேண்டும்,
இருப்பதை பகிர்ந்து உண்ண வேண்டும்,
என்றெல்லாம் வலியுறுத்தினாலும்.
மத தலைவர்கள். மக்களிடையே பேதங்கள் கற்பித்து,
மோதல்களை உண்டாக்கி கொண்டு,
இந்த உலகின் அமைதியை
கெடுத்து கொண்டிருக்கின்றனர்.
அவரவர் தான் விரும்பும் மதத்தில் இருந்துகொண்டு
மற்ற மதத்தினரோடு இணக்கமாக பழக தொடங்கினால்
நன்மை விளையும்.
ஆனால் அது கானல் நீரே.
Pattabi Raman
DeleteSeptember 19, 2013 at 9:17 AM
//சிவ விஷ்ணு பேதம் சராசரி மனிதர்கள் பார்ப்பதில்லை
அவர்கள் எல்லாவற்றையும் தங்களை காப்பாற்ற வரும் கடவுளாகதான் பார்க்கிறார்கள்.//
மிக்க மகிழ்ச்சி.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிக நீ....ண்....ட கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்பின் வை.கோ
ReplyDeleteநானூறாவது பதிவினிற்கு பாராட்டுகள் -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
cheena (சீனா)
DeleteSeptember 19, 2013 at 10:43 AM
அன்பின் திரு. சீனா ஐயா, வாங்கோ ஐயா, வணக்கம் ஐயா.
//அன்பின் வை.கோ
நானூறாவது பதிவினிற்கு பாராட்டுகள் -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்பின் வை.கோ
ReplyDeleteவேத நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப் பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே !
இங்கு ஒரு புது விளக்கம் - சமஸ்கிருதம் அல்ல - சந்தஸ் என்பது தான் - சந்தஸ் என்றால் சத்தம் என்று பொருள் - உலகத்தில் உள்ள அனைத்துச் சத்தங்களின் மூலத்தைக் கொண்ட ஒரு மொழி சந்தஸ் மொழி தான் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - இருப்பினும் இவ்விளக்கம் எங்கிருந்து எடுக்கப் பட்டது என மூலத்தினையும் குறிப்பீட்டிருந்தால் நலமாக இருக்கும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
cheena (சீனா)September 19, 2013 at 10:53 AM
Deleteவாங்கோ அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம்.
//அன்பின் வை.கோ
வேத நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப் பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே!
இங்கு ஒரு புது விளக்கம் - சமஸ்கிருதம் அல்ல - சந்தஸ் என்பது தான் - சந்தஸ் என்றால் சத்தம் என்று பொருள் - உலகத்தில் உள்ள அனைத்துச் சத்தங்களின் மூலத்தைக் கொண்ட ஒரு மொழி சந்தஸ் மொழி தான் - தகவல் பகிர்வினிற்கு நன்றி -//
சந்தோஷம் ஐயா.
ஆனால் வேதத்திற்கு என்று தனி நூல்களே ஆதி காலத்தில் கிடையாது ஐயா.
சமஸ்கிருதம், க்ரந்தம் ஆகிய மொழிகளில் மிகச் சமீபகாலத்தில் சிலர், அச்சிட்டு இருக்கலாம் என்பதே உண்மை, ஐயா.
வேதம் என்பது, அதற்கான வேத பாடசாலையில், குரு ஒருவரால் ஸ்வரத்துடன் சொல்லப்பட்டு, அதை சிஷ்யர்கள் அப்படியே காதில் வாங்கிக்கொண்டு, மனதில் கிரஹித்துக் கொண்டு சொல்ல வேண்டியது மட்டுமே முறையாகும். இதில் படிப்பதற்கோ எழுதுவதற்கோ எந்தவொரு வேலையும் கிடையாது. காலம் காலமாக யுகம் யுகமாக செவி வழியாகவே போதிக்கப்படுவது தான் வேதம்.
மற்ற பள்ளிப் பாடப்புத்தகங்கள் போலெல்லாம் இதை புத்தகத்தைப் பார்த்துப் படிப்பது, நோட்ஸ் எடுப்பது, ஏனோதானோ என பாஸ் மார்க் வாங்குவது என்பதெல்லாம் கூடவே கூடாது, முடியவே முடியாது .... ஐயா.
முழுவதுமாக வேதத்தை ஒருவன் கற்று குருகுலத்திலிருந்து வெளிவர குறைந்தது ஏழு ஆண்டுகள் ஆகும். அதற்கு மேல் சாஸ்திரம், தர்க்கம், பிரயோகம், பாஷ்யம் என்றெல்லாம் மேல் படிப்புகள் படிக்க மேலும் பல ஆண்டுகள் ஆகும்.
//இருப்பினும் இவ்விளக்கம் எங்கிருந்து எடுக்கப் பட்டது என மூலத்தினையும் குறிப்பீட்டிருந்தால் நலமாக இருக்கும்.//
ஐயா,
சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்ப பஜனை சங்கம் என்ற அமைப்பு 2008ம் ஆண்டில் “ஆயுசு நூறு அனுக்ரஹம் நூறு” என்று ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்கள்.
அதைத் தொகுத்தவர் பெயர்:
திரு. இரா. விஸ்வநாத சர்மாஜி என்பதாகும்.
அச்சிட்டோர்: ராஜன் & கம்பெனி ப்ரிண்டர்ஸ், No. 1, கூம்ஸ் தெரு, சென்னை-1
இந்தக்குறிப்பிட்ட பகுதி அந்தப்புத்தகத்திலிருந்து நான் படித்து அறிந்த தகவல் ஆகும்.
அன்புடன் VGK
அன்பின் வை.கோ - அருமையான விளக்கம் நன்று - - மூலம் பற்றிய தகவல் பகிர்வும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Deleteஅரியும் சிவமும் ஒண்ணு என்பதை இனியும் மறப்போமா... மறுப்போமா...?!
ReplyDelete400 - 4000 ஆகும் நாள் தொலைவிலில்லை.
நிலாமகள் September 19, 2013 at 10:53 AM
Delete//400 - 4000 ஆகும் நாள் தொலைவிலில்லை.//
சிவ சிவா!
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்
அன்பின் வைகோ
ReplyDelete//பெரியவரின் சைவ-வைணவச் சமநோக்குக்கு அவர் காட்டும் உதாரணங்களும் – வியாக்யானங்களும் ‘அடேயப்பா என்ன ஒரு பார்வை – என்ன ஒரு நேர்மை – என்ன ஒரு நடுவு நிலை’ என்று வியப்பையே ஏற்படுத்துகிறது.// - ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாளின் சைவ வைணவச் சம நோக்கு அனைவராலும் கடைப்படிக்க வேண்டிய ஒன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாளீன் அமுத மழை நன்று - ஹரியும் சிவனும் ஒன்று என்ற மூலத்தினை - அழகாக சிவ - விஷ்ணுவின் பேத - அபேத சிறப்புகளை பாமரனுக்கும் புரியும் வண்ணம் கூறியுள்ளார்.
ReplyDeleteநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அமுதமழை அருமை...
ReplyDeleteசிவன் விஷ்ணு குறித்து பெரியவரின் கருத்து அருமை...
சே. குமார் September 19, 2013 at 11:40 AM
Delete//அமுதமழை அருமை... சிவன் விஷ்ணு குறித்து பெரியவரின் கருத்து அருமை...//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
// இந்தப்பதிவு அடியேனின் 4 0 0 வது பதிவாக அமைந்துள்ளதில் மகிழ்ச்சி //
ReplyDelete400 ஆவது பதிவிற்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோ
DeleteSeptember 19, 2013 at 6:27 PM
//400 ஆவது பதிவிற்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
ReplyDeleteகாலையில் பஞ்சகச்சம் உடுத்தி, சந்தியாவந்தனம் செய்த ஒருவர், பகலில் சூட் போட்டுக்கொண்டு ஆபீஸுக்கு போகிறார். இது காரியத்துக்கு ஏற்ப போடும் வேஷம்.
இங்கேயும் ஒன்றான பரமாத்மாதான் விஷ்ணுவாக காரியமாற்றும்போதும், சிவமாக காரியம் முடிக்கும் போதும் செயலாற்றுகிறது.”
எளிமையாகச் சொல்லப்பட்ட
அருமையான விளக்கம்
பதிவு முழுவதையும் இரண்டு முறை படித்து
மிக்க மகிழ்ச்சி கொண்டேன்
தங்கள் பதிவின் மூலம் அரிய விஷயங்களை
அறிந்து தெளிவு கொள்ள முடிகிறது
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நன்றி
Ramani S September 19, 2013 at 6:38 PM
Delete//எளிமையாகச் சொல்லப்பட்ட அருமையான விளக்கம். பதிவு முழுவதையும் இரண்டு முறை படித்து மிக்க மகிழ்ச்சி கொண்டேன்
தங்கள் பதிவின் மூலம் அரிய விஷயங்களை
அறிந்து தெளிவு கொள்ள முடிகிறது.
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நன்றி//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
400 வது பகிர்வுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் பல்லாயிரம்.
ReplyDelete"வேத பாஷைக்கு ஸம்ஸ்கிருதம் என்று பெயர் இல்லை. அதற்குப்பெயர் ’ஸந்தஸ்’ என்பது தான்" அறியத்தந்தமைக்கு நன்றி.
மாதேவி
DeleteSeptember 19, 2013 at 7:57 PM
//400 வது பகிர்வுக்கு வாழ்த்துகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
//தொடரட்டும் பல்லாயிரம்.//
சிவ சிவா!
Congragulations for the 400th post/ This is very nice. Learnt a lot.
ReplyDeleteExpecting more and more.
Thanks.
viji
viji September 19, 2013 at 8:33 PM
Deleteவாங்கோ விஜி, வணக்கம்.
//Congratulations for the 400th post//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். ;)
அன்புள்ள மாமா அவர்களுக்கு சுந்தர் அனேக நமஸ்காரம் தங்களது 400 வது பதிவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.உங்களது அனைத்து பதிவுகளையுயும் கடந்த ஒரு வாரமாக படித்து பின்னுட்டங்களுடன் பிரமித்து போய் உள்ளேன் ஒவ்வொரு பதிவர்களும் அவரவர் பாணியில் ரசித்து எழுதுவதை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது வர்ணணை குறித்து வர்ணிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை என் மாமா என்ற பெருமை எனக்கு கர்வமாக உள்ளது கடவுள் தங்களுக்கு நல்ல தேக ஆரொக்கியத்தை கொடுக்கவும் மாமியும் உடல் நலத்துடன் வாழவும் அருளட்டும் என மஹா பெரியவாளை ப்ரார்திக்கிறேன்
ReplyDeleteSundaresan Gangadharan
DeleteSeptember 19, 2013 at 11:01 PM
ஆஹா, வா .... சுந்தர், வா; செளக்யமா?
அடாடா உன்னிடமிருந்து இன்று முதன் முதலாக ஒரு பின்னூட்டம் [Comment] அதுவும் ஒருமுறைக்கு இருமுறையாக வந்துள்ளதில் நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப்போனேன்.
வலைத்தளத்தில் புதிய இணைப்பொன்றை உனக்கு ஏற்படுத்திக்கொடுத்து, தமிழில் எவ்வாறு டைப் செய்வது என்பதை, நான் சொன்னபடி, என் நாட்டுப்பெண் நன்கு கற்றுக் கொடுத்துவிட்டாள் போலிருக்கிறது.
மிக்க மகிழ்ச்சி சுந்தர்.
>>>>>
அன்புள்ள மாமா அவர்களுக்கு சுந்தர் அனேக நமஸ்காரம் தங்களது 400 வது பதிவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.உங்களது அனைத்து பதிவுகளையுயும் கடந்த ஒரு வாரமாக படித்து பின்னுட்டங்களுடன் பிரமித்து போய் உள்ளேன் ஒவ்வொரு பதிவர்களும் அவரவர் பாணியில் ரசித்து எழுதுவதை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது வர்ணணை குறித்து வர்ணிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை என் மாமா என்ற பெருமை எனக்கு கர்வமாக உள்ளது கடவுள் தங்களுக்கு நல்ல தேக ஆரொக்கியத்தை கொடுக்கவும் மாமியும் உடல் நலத்துடன் வாழவும் அருளட்டும் என மஹா பெரியவாளை ப்ரார்திக்கிறேன்
ReplyDeleteSundaresan Gangadharan
DeleteSeptember 19, 2013 at 11:01 PM
//அன்புள்ள மாமா அவர்களுக்கு சுந்தர் அனேக நமஸ்காரம்.//
அநேக ஆசீர்வாதங்கள்.
//தங்களது 400 வது பதிவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.//
மிகவும் சந்தோஷம், சுந்தர்.
//உங்களது அனைத்து பதிவுகளையுயும் கடந்த ஒரு வாரமாக படித்து பின்னுட்டங்களுடன் பிரமித்து போய் உள்ளேன்.//
ஆஹா, அப்படியா, மிக்க மகிழ்ச்சி, சுந்தர்.
//ஒவ்வொரு பதிவர்களும் அவரவர் பாணியில் ரசித்து எழுதுவதை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது.//
ஆம். பதிவுலகில் ஒருசிலர் மிகவும் திறமையாக நன்றாகவே எழுதுகிறார்கள். நாம் தான் அவற்றை நன்கு ஆராய்ந்து, வடிகட்டி, தேர்ந்தெடுத்துப்படிக்க வேண்டும்.
//வர்ணணை குறித்து வர்ணிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. என் மாமா என்ற பெருமை எனக்கு கர்வமாக உள்ளது.//
என் சொந்த சகோதரிகளின் குழந்தைகள் மொத்தம் 12 பேர்களில் நீ தான் மூத்தவனாகப் பிறந்து எங்களை அன்று மிகவும் மகிழ்வித்தவன். அதில் எனக்கோர் தன் சந்தோஷம் எப்போதும் உண்டு.
உன் தம்பிகள் சி. கணேஷ் [குட்டி] மற்றும் சி. சந்தானம் இருவரும் எப்போதாவது வந்து கமெண்ட் எழுதுவது உண்டு. அதுபோல மணக்கால் பர்வத அக்கா பிள்ளை குஞ்சாலி என்ற M J ராமன் ‘மணக்கால்’ என்ற பெயரில் எப்போதாவது கமெண்ட் கொடுப்பதுண்டு. நம் குடும்பத்தில் இப்போ நீயும் இங்கு வருகை தந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
//கடவுள் தங்களுக்கு நல்ல தேக ஆரோக்கியத்தை கொடுக்கவும் மாமியும் உடல் நலத்துடன் வாழவும் அருளட்டும் என மஹா பெரியவாளை ப்ரார்திக்கிறேன்.//
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தால் மட்டுமே, ஏதோ இந்த அளவுக்காவது வண்டி ஓடி வருகிறது, சுந்தர். இப்போது உன் பிரார்த்தனைகளும் சேரட்டும். சந்தோஷம்.
பிரியமுள்ள கோபு மாமா
அன்பின் வை.கோ
Deleteபிரியமான, உடன் பிறப்பின் மகனின் மறுமொழிக்கு, அழகான பதில் எழுதியது நன்று. மாட்டுப்பெண் அறிவேன் மறுமகளென - அதென்ன நாட்டுப் பெண் - மகளை அழைக்கும் சொல்லா ?
சுந்தரின் பிரார்த்தனைகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளீன் கருணையுடன் சேர்ந்து தங்களுக்கு மேன் மேலும் நீண்ட ஆயுளையும், பூரண உடல் நலத்தையும் தர எங்கள் பிரார்த்தனைகள் .
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
cheena (சீனா)
DeleteSeptember 20, 2013 at 12:14 AM
வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா, தங்களின் மீண்டும் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது ஐயா.
//அன்பின் வை.கோ
பிரியமான, உடன் பிறப்பின் மகனின் மறுமொழிக்கு, அழகான பதில் எழுதியது நன்று. மாட்டுப்பெண் அறிவேன். மறுமகளென - அதென்ன நாட்டுப் பெண் - மகளை அழைக்கும் சொல்லா ? //
நாட்டுப்பெண் என்பதைத்தான் மாட்டுப்பெண் எனவும் சிலர் சொல்கிறார்கள் ஐயா.
நாட்டுப்பெண் = மாட்டுப்பெண் = மருமகள்
[அதாவது மகனின் மனைவி தான் ஐயா]
//சுந்தரின் பிரார்த்தனைகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளீன் கருணையுடன் சேர்ந்து தங்களுக்கு மேன் மேலும் நீண்ட ஆயுளையும், பூரண உடல் நலத்தையும் தர எங்கள் பிரார்த்தனைகள்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
தங்கள் பிரார்த்தனைகளுக்கும் என் நன்றிகள் ஐயா.
எனக்கு இரண்டு சகோதரிகள் ஐயா. இருவரும் என்னை விட மூத்தவர்கள்,ஐயா.
மூத்த அக்காவுக்கு 6 பிள்ளைகள் + 2 பெண்கள் என எட்டு குழந்தைகள் ஐயா.
அதில் இந்த சுந்தர் என்கிற சுந்தரேசன் மூத்த பிள்ளை ஐயா.
அக்கா பிள்ளையை நாங்கள் மறுமான் என்போம் ஐயா. அவர்கள் என்னை மாமா என்று அழைப்பார்கள் ஐயா. அதாவது தாய் மாமன் என்று சொல்வார்களே, அதே அதே ஐயா.
இந்த சுந்தர் எனக்கு இப்போது மறுமான் மட்டும் அல்ல ஐயா.
இப்போது 4 ஆண்டுகளுக்கு முன்பு சம்பந்தியாகவும் ஆகிவிட்டார், ஐயா.
இவருக்கு ஒரே ஒரு பெண் + அதன்பிறகு ஒரே ஒரு பிள்ளை. இவரின் பெண்ணை எங்கள் மூன்றாவது மகனுக்குத் திருமணம் செய்து கொண்டுள்ளோம், ஐயா.
அந்தப்பெண்ணின் புகைப்படம் இதோ இந்த என் பதிவினில் உள்ளது ஐயா.
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
அதில் மேல் விநாயகரிலிருந்து ஆரம்பித்து படம் எண்: 8, 9 மற்றும் 12 இல் என் மருமகள் இருக்கிறாள் ஐயா.
படம் 12 இல் மைக் முன் நின்று PRAYER SONG பாடுகிறாள், ஐயா.
மேலும் நான் “சுடிதார் வாங்கப்போறேன்” என்று ஓர் அனுபவ நகைச்சுவைச் சிறுகதை எழுதியுள்ளேன் ஐயா. இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html
அதில் நான் சுடிதார் வாங்கச்சென்றதும் இவளுக்காக மட்டுமே ஐயா.
எல்லாம் தங்களின் தகவலுக்காக மட்டுமே ஐயா.
அன்புடன் VGK
வேதமொழி சம்ஸ்கிருதம் அல்ல, சந்தஸ் என்பது "தெய்வத்தின் குரல்" புத்தகங்களிலும் உள்ளது. திரு ரா.கணபதி அவர்களால் தொகுக்கப் பட்டது. 2ஆம் பாகத்திலோ, 2 ஆம் பாகத்திலோ காணலாம். சரியாய் நினைவில் இல்லை. 2 ஆம் பாகத்திலும் வேதங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும்.
ReplyDeleteஅரியும் சிவனும் ஒண்ணு, அறியாதோர் வாயிலே மண்ணுனும் சொல்வாங்க! :)))) தீவிர சைவர்களோ, தீவிர வைணவர்களோ இதை ஒத்துக்க மாட்டாங்க. போகட்டும்! :))))
ReplyDelete400 ஆவது பதிவுக்கும் சேர்த்து வாழ்த்துகள். மேன்மேலும் பற்பல பதிவுகள் எழுதவும் வாழ்த்துக்கள்.
சீனா சார்,
தென் மாவட்டங்களில் மருமகளை, "நாட்டுப்பெண்" என்றே சொல்வார்கள். அதே போல் தஞ்சை ஜில்லாவில் கணவனும் அண்ணனும் மைத்துனன், தம்பியும் மைத்துனன். ஆனால் தென் மாவட்டங்களில் கணவனின் அண்ணன் எனில் மைத்துனர் என்றும் தம்பி என்றால் கொழுந்தன் என்றும் சொல்லுவோம். :))))) கல்யாணம் ஆகிக் கும்பகோணம் போன புதுசுலே என் கணவரோட தம்பிகளைக் கொழுந்தனார் னு குறிப்பிட்டால் அவங்கல்லாம் ஒரே சிரிப்பு. அவங்க மைத்துனன் னு சொல்றதைக் கேட்டு நமக்குச் சிரிப்பு. சிரிப்பாய்ச் சிரிச்சாச்சு போங்க! :))))
Geetha Sambasivam
DeleteSeptember 20, 2013 at 2:20 AM
//400 ஆவது பதிவுக்கும் சேர்த்து வாழ்த்துகள். மேன்மேலும் பற்பல பதிவுகள் எழுதவும் வாழ்த்துக்கள். //
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteஉஷா அன்பரசு
DeleteSeptember 20, 2013 at 4:18 AM
//400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! நன்றி!//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா..மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!
ReplyDeleteS.Menaga September 20, 2013 at 6:10 AM
Deleteவாங்கோ மேனகா, வணக்கம்.
//400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா..மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம்...
ReplyDelete//
இதிலிருந்து சந்தோஷத்துக்கு விஷ்ணு, வைராக்கியத்துக்கு சிவன் என்பது புரியவருகிறது. இதை ஒட்டியே காலை எழுந்தவுடன் ‘ஹரி நாராயண ஹரி நாராயண’ என்கிறோம். பொழுது நன்றாக சந்தோஷமாக செல்ல வேண்டுமே?
மாலையில் ‘சிவசிவ’ என்கிறோம்.
என்ன பொருத்தமான வழிகாட்டல் பாருங்கள். பகல் முழுக்க சந்தோஷமாக வாழ, நாராயணன். இரவில் ஒடுங்கி அமைதியாய் தூங்க, சிவன்.
// இப்போழுதுதான் இதன் அர்த்தத்தை முழுமையாக தெரிந்துக்கொண்டேன்...
ஹரி-ஹரன் - அற்புதமான விளக்கங்கள்.......
ReplyDeleteசந்தஸ்.... பற்றியும் மீண்டும் படித்த போது மனதில் பழைய நினைவுகள் வந்து போயின......
உங்களுடைய நானூறாவது பதிவு..... மனமார்ந்த வாழ்த்துகள்..... மேலும் பல பதிவுகள் எழுதிட உங்களுக்கு நேரம் அமையட்டும்....
வெங்கட் நாகராஜ்
DeleteSeptember 20, 2013 at 7:01 AM
//உங்களுடைய நானூறாவது பதிவு..... மனமார்ந்த வாழ்த்துகள்.....//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், வெங்கட்ஜி.
//மேலும் பல பதிவுகள் எழுதிட உங்களுக்கு நேரம் அமையட்டும்....//
சரியாகச்சொன்னீர்கள். நன்றி.
நானூறாவது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இது ஒரு மிகச் சிறந்த, குறிப்பிடத்தக்க சாதனை. ஸ்ரீமஹாபெரியவரின் அருளாசியும் இணைந்திருக்கிறது. தங்கள் சாதனைகள் மேன்மேலும் சிகரங்கள் தொட இறையருளை வேண்டுகிறேன்.
ReplyDeleteபார்வதி இராமச்சந்திரன்.
DeleteSeptember 20, 2013 at 9:31 AM
//நானூறாவது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இது ஒரு மிகச் சிறந்த, குறிப்பிடத்தக்க சாதனை.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். மிக்க மகிழ்ச்சி.
//ஸ்ரீமஹாபெரியவரின் அருளாசியும் இணைந்திருக்கிறது.//
ஆம். எல்லாம் அவர் அருளாசியாலேயே ! ;)
//தங்கள் சாதனைகள் மேன்மேலும் சிகரங்கள் தொட இறையருளை வேண்டுகிறேன்.//
மிக்க நன்றி, சந்தோஷம்.
400 ஆவது பதிவு என்பது சாதாரணமல்ல. உங்களின் அசுர வேகம், அளவில்லாத ஆர்வம், அனைவரிடமும் அன்புடன் பழகும் இனிய குணம், எழுத வேன்டுமென்ற தாகம், இப்படி எல்லாமே உங்களுக்குப்பின்னால் தனித்தன்மையுள்ள அரண்களாக நிற்கின்றன! இந்த சாதனைக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனோ சாமிநாதன்
DeleteSeptember 20, 2013 at 10:01 AM
வாங்கோ, வணக்கம்.
இந்த என் தொடருக்குத் தங்களின் வருகை மிகவும் அபூர்வமானதாகவும் ஆச்சர்யம் அளிப்பதாகவும் உள்ளது.
இந்தத்தொடரில் இதுவரை நான் வெளியிட்டுள்ள 52 பகுதிகளில் தாங்கள் வருகை தந்து கருத்தளித்துள்ளது பகுதி-15, பகுதி-20, பகுதி-32 + இந்த பகுதி-52 ஆகிய நான்கு மட்டுமே.
ஆன்மிகப் பதிவுகளுக்குக் கருத்தளிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒருசில கருத்து வேற்றுமைகள் உண்டென்று நான் முற்றிலும் உணர்ந்திருந்தாலும், இதுபோன்ற தங்களின் அபூர்வ வருகைகள் மனதுக்கு சந்தோஷம் தருவதாகவே உள்ளன.
வருகை தந்து கருத்தளிக்கிறீர்களோ இல்லையோ, என் எல்லாப்பதிவுகளையும் ஒரு Glance பார்த்து விடுகிறீர்கள் என்பதை இதனால் என்னால் நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது. அதுவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
//400 ஆவது பதிவு என்பது சாதாரணமல்ல. உங்களின் அசுர வேகம், அளவில்லாத ஆர்வம், அனைவரிடமும் அன்புடன் பழகும் இனிய குணம், எழுத வேன்டுமென்ற தாகம், இப்படி எல்லாமே உங்களுக்குப்பின்னால் தனித்தன்மையுள்ள அரண்களாக நிற்கின்றன!//
இந்த என் சாதனைகளில் தங்களின் பங்கு மிகவும் கணிசமானது, மேடம். அதை நான் என்றும் மறக்கவே மாட்டேன்.
2010 ஆம் ஆண்டிலேயே தங்களின் அன்பான பல மின்னஞ்சல்கள் மூலம், என்னை வலையுலகுக்கு வந்து எழுதுமாறு தொடர்ந்து தூபம் போட்டு, தூண்டிவிட்டவர்களே தாங்கள் தானே ! ;)
எப்படி அதை என்னால் மறக்க முடியும்?
ஓரிரு TRIAL பதிவுகளுக்குப்பின் ஒருவழியாக 02.01.2011 முதல் தொடர்ந்து முழுவீச்சில் நான் எழுத ஆரம்பித்தேன். அந்த முதல் ஆண்டிலேயே என்னால் வெற்றிகரமாக 200 பதிவுகளைக்கொடுக்க முடிந்தது.
நான் 02.01.2011 எழுதிய முதல் படைப்புக்கு முதல் பின்னூட்டம் கொடுத்ததும் தாங்கள் மட்டுமே. இப்போது நினைத்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;)
இதோ, அது தங்கள் பார்வைக்காக:
//மனோ சாமிநாதன்
January 5, 2011 at 9:45 AM
இந்தக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் படும் துயரத்தை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்க்கை அன்பால் மட்டுமே மதிப்பிடப்பட்டது ஒரு காலம்! இன்றைய வாழ்க்கை பெரும்பாலானவர் இல்லங்களில் சுயநலத்தாலும் பணத்தாலும் மட்டுமே மதிப்பிடப்படுகிறது! //
2012 ஆம் ஆண்டில் எனக்கு ஏற்பட்ட பல்வேறு வேதனைகள் + சோதனைகளால் என் எழுதும் ஆர்வமும் வேகமும் வெகுவாக பாதிக்கப்பட்டது.
அதனால் அந்த 2012ம் ஆண்டு என்னால் 116 பதிவுகள் மட்டுமே கொடுக்க முடிந்தது.
இந்த 2013ம் ஆண்டு இதுவரை 82 பதிவுகள் கொடுத்து, 1+1+200+116+82 = 400 என்ற இலக்கினை அடைய முடிந்துள்ளது.
02.01.2011 முதல் 19.09.2013 வரை இடைப்பட்ட 993 நாட்களில் 400 பதிவுகள் கொடுத்துள்ளதும், அவைகள் பதிவர்கள் + வாசகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பினைப் பெற்றுத்தந்துள்ளதும், என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய சாதனையே.
இரண்டரை நாட்களுக்கு ஒரு பதிவு என்ற வீதத்தில் இதுவரை செயல்பட்டுள்ளேன் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
993/400=2.5
[993 Days 400 Posts @ 2.5 Days per Post]
என் வலைத்தளத்தினை இன்று பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 318 ஆகியுள்ளதும் எனக்கு மகிழ்ச்சியே.
2011 நவம்பரில் ஒருவாரம் தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவராக செயல்பட்டது, அந்த வாரத்தில் மட்டும் 28 பதிவுகள் கொடுத்தது, அந்த வாரத்தின் TOP 20 LIST இல் என் பெயர் முதலிடத்தைப்பிடித்தது போன்றவையெல்லாம் மகிழ்ச்சியளித்த தருணங்கள் தான்.
இப்போது நான் தமிழ்மணத்திலோ, இண்ட்லியிலோ வேறு எந்த திரட்டிகளிலோ என்னை இணைத்துக்கொள்ளவில்லை.
வோட் எனக்குத் தேவையே இல்லை.
ரஸித்துப்படித்துப் பின்னூட்டம் இடுபவர்கள் தரும் உற்சாக பானம் மட்டுமே போதும் என்று எழுதிவருகிறேன்.
அதுபோலவே வலைச்சர ஆசிரியர்கள் பலரால் என் படைப்புகள் இதுவரை எழுபது முறைகள் பாராட்டிப் பேசப்பட்டுள்ளன.
பதிவு எழுத ஆரம்பித்து 33 மாதங்கள் முடிவதற்குள் 70 முறை வலைச்சரத்தில் புகழ்ந்து பேசப்பட்டுள்ளதும் ஒரு மிகப்பெரிய சாதனையாக நினைத்து மகிழ்கிறேன்.
இதுவரை என் 400 படைப்புகளுக்கும் சேர்த்து 18000 பின்னூட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
//இந்த சாதனைக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆதரவான, ஆறுதலான கருத்துக்களுக்கும், மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
என்றும் அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
//இந்த சாதனைக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!/
DeleteAsiya Omar September 22, 2013 at 5:00 AM
Delete//இந்த சாதனைக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!//
தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும் சிறப்பான இனிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.
''..பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் நம் மதத்தின் சாரம் (Unity in Diversity)..''
ReplyDeleteஇப்படிப் பல கருத்துகள் .
அற்புதம்.
இனிய நன்றி.
400வது பதிவிற்கும் மனம் நிறைந்த வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்:_
kovaikkavi September 20, 2013 at 10:11 AM
Delete//400வது பதிவிற்கும் மனம் நிறைந்த வாழ்த்து. வேதா. இலங்காதிலகம்://
தங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மிக தெளிவாக அழகான விளக்கம் ..
ReplyDeleteஅரியும் சிவனும் ஒன்னு என்று சிலர் பேசும்போது சொல்வதை கேட்டிருக்கிறேன் ..இப்போதுதான் அதற்கான விளக்கத்தை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் ..
நாட்டுப்பெண் a k a ....மாட்டுப்பெண் .....விளக்கம் அருமை .
நானூராவது பதிவுக்கு அன்பான வாழ்த்துக்கள் ..மென்மேலும் இப்படி நிறைய எழுத தங்களுக்கு எல்லா ஆசீர்வாதத்தையும் தரனும் என இறைவனை வேண்டுகிறேன் ..
...................
அப்படியே சீனா ஐயாவுக்கு தந்த லிங்க் மூலமாக தங்கள் முழு குடும்ப ஆல்பம் சந்தோஷமான பேசும்படத்தையும் பார்த்து விட்டு வந்தேன் :))
இப்போ புரிகிறது எப்படி நீங்க தங்கு தடையின்றி காவிரியாறுபோல பதிவெழுதும் ரகசியம் ..
எல்லாவற்றுக்கும் காரணம் இறையாசி ..அதனால் அடைந்த சந்தோசம் இதுவே .!!!இங்கு வெளிப்படுகின்றது ..
Angelin.
Cherub Crafts
DeleteSeptember 20, 2013 at 10:22 AM
வாங்கோ நிர்மலா, வணக்கம்.
//நானூராவது பதிவுக்கு அன்பான வாழ்த்துக்கள் ..மென்மேலும் இப்படி நிறைய எழுத தங்களுக்கு எல்லா ஆசீர்வாதத்தையும் தரனும் என இறைவனை வேண்டுகிறேன்.//
தங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
//நாட்டுப்பெண் a k a ....மாட்டுப்பெண் .....விளக்கம் அருமை .//
மிக்க மகிழ்ச்சி, நிர்மலா.
//அப்படியே சீனா ஐயாவுக்கு தந்த லிங்க் மூலமாக தங்கள் முழு குடும்ப ஆல்பம் சந்தோஷமான பேசும்படத்தையும் பார்த்து விட்டு வந்தேன் :))
இப்போ புரிகிறது எப்படி நீங்க தங்கு தடையின்றி காவிரியாறுபோல பதிவெழுதும் ரகசியம் ..
எல்லாவற்றுக்கும் காரணம் இறையாசி .. அதனால் அடைந்த சந்தோசம் இதுவே .!!!இங்கு வெளிப்படுகின்றது ..//
ஆஹா, இரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டீர்களா, நிர்மலா. மிக்க மகிழ்ச்சி.
அது நம் இருவருக்குள் மட்டும் இரகசியமாகவே இருக்கட்டும். மியாவுக்குத்தெரிய வேண்டாம். ;)))))
மீயும் ஓடிச்சென்று பார்த்துவிட்டு வந்தேனாக்கும்...
Delete400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க வை.கோ.சார்.
ReplyDeleteAsiya Omar September 20, 2013 at 12:16 PM
Delete//400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க வை.கோ.சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
பிளாக் ஆரம்பித்து மூன்றெ வருடங்களில் 400 பதிவு பிரமிக்க வைக்கிறது.மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள் வி ஜி கே சார்.400 4000 ஆக விரைவில் பெருகட்டுமாக!
ReplyDeleteஸாதிகா September 20, 2013 at 6:41 PM
Delete//பிளாக் ஆரம்பித்து மூன்றே வருடங்களில் 400 பதிவு பிரமிக்க வைக்கிறது. மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள் வி ஜி கே சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
//400 4000 ஆக விரைவில் பெருகட்டுமாக!//
ஆஆஆஆஆ அல்லாஹு அக்பர் ! ;)
Congrats sir on your 400th post, simply superb. It is something really great sharing wonderful information and knowledge via these posts and I have personally learnt a lot of new things. Though I have not read all your post, but have been following your post regularly. I feel very divine reading your post... Thank you very much sir, vaazthukkal...
ReplyDeletePriya Anandakumar
ReplyDeleteSeptember 21, 2013 at 2:18 AM
வாங்கோ, வணக்கம்.
//Congrats sir on your 400th post, simply superb. It is something really great sharing wonderful information and knowledge via these posts and I have personally learnt a lot of new things.//
மிகவும் சந்தோஷம், நன்றி.
//Though I have not read all your post, but have been following your post regularly.//
என்னுடைய பிரபலமான பல படைப்புகளைப் படித்து மகிழ [பெரும்பாலும் சிறுகதைகள் + நகைச்சுவைச் சிறுகதைகள்] இந்த கீழ்க்கண்ட இணைப்பு உங்களுக்கு ஒரு INDEX போல பயன்படக்கூடும்.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
//I feel very divine reading your post... Thank you very much sir, vaazthukkal..//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இன்று தான் என் கணக்குப்பிள்ளைக் கிளிக்கும் சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. ;)))))
With Best Wishes .... GOPU
400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
கவிக்காயத்ரி September 21, 2013 at 4:41 AM
Delete//400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
வாழ்க வளமுடன் + நலமுடன்.
400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteஹரி ஹாராதியர்கள் பற்றிய விளக்கம் மிக அருமை. மிக்க நன்றி பகிர்வுக்கு.
RAMVI September 21, 2013 at 5:53 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
400வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் :)
ReplyDeleteரிஷபன் September 21, 2013 at 7:56 AM
Deleteவாங்கோ சார், வணக்கம்.
//400வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் :)//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்தத இனிய அன்பு நன்றிகள்.
தொடரட்டும் மேலும் மேலும் இதே போல அருமையான பதிவுகள்.
ReplyDelete400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.இன்னும் பல 100 பதிவுகள் போடவும் வாழ்த்துக்கள்
ReplyDeleteJaleela Kamal September 21, 2013 at 7:58 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.இன்னும் பல 100 பதிவுகள் போடவும் வாழ்த்துக்கள்//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
தித்திக்கும் வார்த்தை ஜாலமும்
ReplyDeleteதெய்வீகப் பகிர்வுகள் என்றும்
எத்திக்கிலும் பெருமை சேர்க்கும்
இனி வேண்டாம் கவலை இங்கே ...
இரட்டிப்பாய் ஆக்கம் மலரும்
இன்பத்தில் மனமும் துடிக்கும்
மொத்தத்தில் நாநூறிங்கே
முன்னேறி முதுகெலும்பாய் நிற்கும் !
வாழ்த்துக்கள் சொல்லி மகிழும்
மனம் போல நல் ஆக்கம் செழிக்கும்
ஊக்கத்தை அள்ளி வழங்க
உமக்காக நானும் துதிப்பேன் .......
வணகுகிறேன் ஐயா !!
Ambal adiyal
DeleteSeptember 21, 2013 at 3:53 PM
வாங்கோ, வணக்கம்.
//தித்திக்கும் வார்த்தை ஜாலமும்
தெய்வீகப் பகிர்வுகள் என்றும்
எத்திக்கிலும் பெருமை சேர்க்கும்
இனி வேண்டாம் கவலை இங்கே ...
இரட்டிப்பாய் ஆக்கம் மலரும்
இன்பத்தில் மனமும் துடிக்கும்
மொத்தத்தில் நாநூறிங்கே
முன்னேறி முதுகெலும்பாய் நிற்கும் !
வாழ்த்துக்கள் சொல்லி மகிழும்
மனம் போல நல் ஆக்கம் செழிக்கும்
ஊக்கத்தை அள்ளி வழங்க
உமக்காக நானும் துதிப்பேன் .......
வணங்குகிறேன் ஐயா !!//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகானதொரு பாடல் மூலம் வாழ்த்துச் சொல்லியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
/வேத பாஷைக்கு ஸம்ஸ்கிருதம் என்று பெயர் இல்லை. அதற்குப்பெயர் ’ஸந்தஸ்’ என்பது தான்.// புதிய தகவல்!
ReplyDeleteநானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! நாற்பதாயிரம் நாலு லட்சம் என்று மென்மேலும் பெருக இறைவனை வேண்டுகிறேன்!
middleclassmadhavi
DeleteSeptember 21, 2013 at 9:08 PM
வாங்கோ, வணக்கம்.
//நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! //
சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
//நாற்பதாயிரம் நாலு லட்சம் என்று மென்மேலும் பெருக இறைவனை வேண்டுகிறேன்!//
அட, ஆண்டவா ! இதென்ன புதிய சோதனை? ;)
ஹரி ஹரன் பற்றிய அருமையான விளக்கங்கள்.
ReplyDeleteதங்களது 400வது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் சார்.
கோவை2தில்லி
DeleteSeptember 22, 2013 at 12:19 AM
வாங்கோ, வணக்கம்.
//தங்களது 400வது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
400 ஆவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் ஐயா, இன்ஷா அல்லா 1400 வது பதிவுக்கும் இதே போல வாழ்த்தும் பாக்கியம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .
ReplyDeleteஅஜீமும்அற்புதவிளக்கும்
ReplyDeleteSeptember 22, 2013 at 2:59 AM
வாங்கோ திரு. அஜீம்பாஷா அவர்களே !
சலாம் மாலே கும் ! மாலே கும் சலாம் !!
//400 ஆவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் ஐயா//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், நண்பரே.
//இன்ஷா அல்லா 1400 வது பதிவுக்கும் இதே போல வாழ்த்தும் பாக்கியம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.//
தங்களின் வேண்டுதலுக்கு மிக்க நன்றி.
1400 மிகவும் அதிகம். மேலும் 140 க்காவது அல்லாஹ் அருள்புரியட்டும்.
அதன்பிறகு முடிந்தால் 1400 பதிவர்களின் படைப்புகளுக்கு உற்சாகமாக பின்னூட்டம் இடுவதற்காக சக்தியை எனக்கு அருளட்டும். அதுவே போதும்.
அன்புடன் VGK
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அண்ணா உங்களின் நம்பிக்கையான உத்வேகமான சுறுசுறுப்பான 400 ஆவது பதிவுக்கு.
ReplyDeleteஉடல்நலம் எப்படி இருந்தாலும் சரி உங்கள் பதிவுகளில் மட்டும் என்றும் தொய்வென்று ஒன்று நான் கண்டதே இல்லை என்றும்....
இதேபோல் தெய்வீக பதிவுகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கட்டும் அண்ணா.. உங்கள் ஆரோக்கியம் சிறக்க என் பிரார்த்தனைகள் இறைவனிடத்து...
வேத பாஷைக்கு ஸந்தஸ் அரிய தகவல்.
//எரிந்த மரம் கரியாகிறது. அந்தக் கரியும் முதிர்ந்தால் வைரமாகிறது. உலகம் இருந்த போதிலும் அதன் மாயை விஷ்ணுமயமாக தெரிகிறபோது, நம் அஞ்ஞானம் கரியாகிப்போன நிலையில் இருக்கிறோம். திருமாலும் கரிமாலாக இருக்கிறார் – கரி வைரமாகிற நிலைக்கு பரமேஸ்வரன் வந்து விடுகிறார்.
//
இது மட்டுமல்லாது நிறைய விஷயங்களை உங்களுடைய பகிர்வில் அறியவும் தெளியவும் முடிகிறது அண்ணா...
சிவன் விஷ்ணு பற்றிய விளக்கங்கள் மஹா பெரியவா கொடுத்திருப்பதுப்பற்றி நீங்கள் பகிர்ந்தது மிக மிக அற்புதம் அண்ணா...
Manjubashini Sampathkumar
DeleteSeptember 22, 2013 at 4:10 AM
வாங்கோ மஞ்சு, வணக்கம். செளக்யமா? ;)
//மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அண்ணா உங்களின் நம்பிக்கையான உத்வேகமான சுறுசுறுப்பான 400 ஆவது பதிவுக்கு. //
மிகவும் சந்தோஷம் மஞ்சு.
//உடல்நலம் எப்படி இருந்தாலும் சரி உங்கள் பதிவுகளில் மட்டும் என்றும் தொய்வென்று ஒன்று நான் கண்டதே இல்லை என்றும்....
இதேபோல் தெய்வீக பதிவுகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கட்டும் அண்ணா.. உங்கள் ஆரோக்கியம் சிறக்க என் பிரார்த்தனைகள் இறைவனிடத்து...//
தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும், எனக்கான விசேஷப் பிரார்த்தனைகளும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது மஞ்சு. ;)
அன்புடன் கோபு அண்ணா
400க்கு வாழ்த்துகள். அதுவும் இது சாதாரண மைல்கல் அல்ல.. பொக்கிஷமாக்கும்.
ReplyDeleteஅமைதிச்சாரல் September 24, 2013 at 5:04 AM
ReplyDeleteவாங்கோ, வணக்கம்.
//400க்கு வாழ்த்துகள்.//
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
//அதுவும் இது சாதாரண மைல்கல் அல்ல.. பொக்கிஷமாக்கும்.//
தங்களைப்போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களின் அதுவும் வல்லமை பொருந்தியவர்களின் பின்னூட்டங்களே என்னுடைய பொக்கிஷங்களில் விலை மதிப்பில்லாதவைகளாக நான் நினைக்கிறேன்.
அந்த மதிப்பு வாய்ந்த பொக்கிஷம் இந்த மிகச்சாதாரண மைக்கல்லுக்கும் கிடைக்க நான் பாக்யம் செய்துள்ளேன். மிக்க நன்றி, மேடம்.
உங்களுடைய 400பதிவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹரிஹரன் பற்றிய மகா பெரியவரின் சிந்தனைகள் படிக்க படிக்க திகட்டாதவை. அதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.
rajalakshmi paramasivam September 25, 2013 at 12:55 AM
ReplyDeleteவாங்கோ, வணக்கம். நம் தாய் நாட்டுக்கு நல்லபடியாகத் திரும்பி வந்தது கேட்க மிக்க மகிழ்ச்சி.
//உங்களுடைய 400பதிவிற்கு வாழ்த்துக்கள். //
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
Congratulations Gopu sir. Enjoyed your 400th post with lot many details.
ReplyDeleteMira September 26, 2013 at 12:37 AM
Deleteவாங்கோ மீரா, வணக்கம்.
//Congratulations Gopu sir. Enjoyed your 400th post with lot many details.//
தங்களின் அன்பு வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
தாமத வருகைக்கு மன்னிக்கவும். தங்கள் நானூறாவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார்.
ReplyDeleteஇந்தப் பதிவின் மூலம் சைவ வைணவ சாரங்களை இனிதே அறிந்து மகிழ்ந்தேன். நன்றி தங்களுக்கு.
கீத மஞ்சரி September 28, 2013 at 5:52 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//தாமத வருகைக்கு மன்னிக்கவும். தங்கள் நானூறாவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார். //
தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
[சற்று தாமதமானால் தான் என்ன? மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் எதற்கு? மிக்க நன்றி]
//சிவ - விஷ்ணுவின் பேத - அபேத சிறப்புக்களை பாமரனுக்கும் புரியும் வண்ணம் கூறியுள்ளார் மஹாபெரியவா.// அருமையான விளக்கம் அய்யா. நான் முன்பே கூறியது போல் பெரியாவாளின் சொற்பொழிகள் மற்றும் அற்புதங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். 400 ஆவது பதிவிற்கு சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்..
ReplyDeleteஅ. பாண்டியன் September 28, 2013 at 10:36 PM
Deleteவாருங்கள், வணக்கம்.
//400 ஆவது பதிவிற்கு சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.. //
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அடடா அதெப்படி கரெக்ட்டா உங்களின் இந்த 400 ஆவது பதிவை மிஸ்பண்ணினேன்ன்???.. அதிலும் நான் வந்த அத்தனை பதிவுகளையும் தவிர்த்து:) நான் வராத இப்பதிவுக்கு மட்டும் அனைவருக்கும் பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க..:)).. சரி சரி இப்பவாவது அட்ரஸ் கண்டு பிடிச்சு வந்திட்டேன்ன்.. வழி விடுங்கோ மீ வாழ்த்துச் சொல்லோணும்ம்ம்ம்..:)
ReplyDeleteathira October 4, 2013 at 11:26 AM
Deleteவாங்கோ அதிரா, வணக்கம். அப்பாடீ ... ஒருவழியா வந்து சேர்ந்தீங்களே .... அதுவரை சந்தோஷமே.
//அடடா அதெப்படி கரெக்ட்டா உங்களின் இந்த 400 ஆவது பதிவை மிஸ்பண்ணினேன்ன்???.. அதிலும் நான் வந்த அத்தனை பதிவுகளையும் தவிர்த்து:) நான் வராத இப்பதிவுக்கு மட்டும் அனைவருக்கும் பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க..:)).. சரி சரி இப்பவாவது அட்ரஸ் கண்டு பிடிச்சு வந்திட்டேன்ன்.. வழி விடுங்கோ மீ வாழ்த்துச் சொல்லோணும்ம்ம்ம்..:)//
வரவர அதிராவுக்கு கோபு அண்ணன் மீது அன்பு குறைந்து விட்டதூஊஊஊஊ, என்பதைத்தான் இது காட்டுதூஊஊ.;)
உங்கள் 400 ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கோபு அண்ணன்... மேலும் பல பதிவுகளை, எந்த உடல் நோய்களும் இன்றி, இருந்து பதிவிட ஆண்டவன் அருள் புரிவாராக..
ReplyDeleteathira October 4, 2013 at 11:27 AM
Delete//உங்கள் 400 ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கோபு அண்ணன்... மேலும் பல பதிவுகளை, எந்த உடல் நோய்களும் இன்றி, இருந்து பதிவிட ஆண்டவன் அருள் புரிவாராக..//
தங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த அழகான வாழ்த்துகளுக்கும், வேண்டுதலுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், அதிரா.
கரியும் வைரமும் ஒன்றுதான். ஆனால் லௌகீகத்தில் என்ன ஒரு வேறுபாடு?
ReplyDelete400---வது பதிவுக்கு வாழ்த்துகள. பதிவில மற்ற விஷயங்கள் மிகவும் பொடி எழுத்தில் வரது சரியா படிச்சு புரிய முடியல
ReplyDeleteபூந்தளிர் August 19, 2015 at 1:07 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//400---வது பதிவுக்கு வாழ்த்துகள்//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
//பதிவில மற்ற விஷயங்கள் மிகவும் பொடி எழுத்தில் வரது. சரியா படிச்சு புரிய முடியல//
அவ்வாறு பொடி எழுத்துக்களில் வருவதை மட்டும், அந்த இடத்தில் கிரசரை வைத்து லெஃப்ட் க்ளிக் செய்துவிட்டு, பிறகு Control + Plus பட்டன்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்தினால் பொடி எழுத்துக்கள் சற்றே பெரிதாகும். மீண்டும் ஒருமுறை Control + Plus Buttons களை ஒருசேர அழுத்தினால் மேலும் எழுத்துக்கள் பெரிதாகக் காட்சியளிக்கும்.
இவ்வாறு எழுத்துக்களைப் பெரியதாக்கி படித்து முடித்ததும், Control + Minus Buttons களை ஒருசேர அழுத்தினால் பழையபடி Normal Size க்கு வந்துவிடும். இதை எங்காவது தனியாக டயரியில் குறித்து வைத்துக்கொள்ளவும்.
அன்புடன் கோபு
அரியும், சிவனும் ஒண்ணு
ReplyDeleteஅறியாதவன் வாயில மண்ணு
தெளிவான விளக்கத்துக்கு நன்றி.
400 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
அப்படியே நானும் ஒரு 100 பதிவாவது போடணும்ன்னு வாழ்த்துங்களேன்.
400---வது பதிவா. ஆத்தாடியோவ். வாழ்த்துகள். ஆன படங்க நல்லாருக்கு
ReplyDelete400-வது பதிவுக்கு வாழ்த்துகள். ஒரே பரமாத்மாவை அடைய பல வழிகள்தான் மதங்கள். இதை அனைவருமே புரிந்துகொண்டால் நல்லா இருக்கும்.
ReplyDeleteபயனுள்ள பதிவு...400ம் பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (27.06.2018) பகிரப்பட்டுள்ளது.
ReplyDeleteஅதற்கான இணைப்பு:-
https://www.facebook.com/groups/396189224217111/permalink/425772861258747/
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு