என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 4 மே, 2012

நாடக ரஸிகர்களுக்கு நன்றி அறிவிப்பு


”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” 

என்ற தலைப்பில் என்னால் 15.04.2012 முதல் 30.04.2012 வரை வெளியிடப்பட்ட [பகுதி-1 முதல் பகுதி-18 வரை]  தொடர் நாடகப் பதிவுகளுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய பல கருத்துக்கள் கூறி சிறப்பித்து, எனக்கு அவ்வப்போது உற்சாகம் கொடுத்து உதவியுள்ள 

திருவாளர்கள்:-
===============

01. ரிஷபன் Sir அவர்கள்

02. மணக்கால் ஜே. ராமன் Sir அவர்கள்

03. ஜீவி Sir அவர்கள்

04. ஸ்ரீராம் Sir அவர்கள்

05. மகேந்த்ரன் Sir அவர்கள்

06. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள் *****

07. மணிமாறன் Sir அவர்கள்

08. விச்சு Sir அவர்கள்

09. தி. தமிழ் இளங்கோ Sir அவர்கள்

10. சீனுகுரு Sir அவர்கள்

11. ஸ்ரீநிவாஸன் இராமகிருஷ்ணன் Sir அவர்கள்

12. ம.தி.சுதா Sir அவர்கள்

13. D. சந்த்ரமெளலிSir அவர்கள்

14. ஈ.எஸ்.சேஷாத்ரி Sir அவர்கள் *****

15. அப்பாதுரை Sir அவர்கள்

16. பழனி. கந்தசாமி Sir அவர்கள்

17. சென்னை பித்தன் Sir அவர்கள்

18. ரமணி Sir அவர்கள்

19. T N முரளிதரன் Sir அவர்கள்

20. G. ஸ்ரீதர் Sir அவர்கள்

21.  சுந்தர்ஜி Sir அவர்கள்

22. G. M. B.  Sir அவர்கள்

23. கே.பி. ஜனா Sir அவர்கள்

24. மதுரை சொக்கன் Sir அவர்கள்

25. பாலா Sir அவர்கள்

26. ”அன்பை தேடி....அன்பு” Sir அவர்கள்

27. ’ஆரண்யநிவாஸ்’ ஆர்.ராமமூர்த்தி Sir அவர்கள்

28. ”அவர்கள் உண்மைகள்” Sir அவர்கள்

மற்றும்

திருமதிகள்:-
=============

01. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்*****

02. மிடில் கிளாஸ் மாதவி Madam அவர்கள்

03. விஜி Madam அவர்கள்*****

04. லக்ஷ்மி Madam அவர்கள்*****

05. கோமதி அரசு Madam அவர்கள்*****

06. கோவை2தில்லி Madam அவர்கள்*****

07. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்*****

08. தேனம்மை லெக்ஷ்மணன் Madam அவர்கள்

09. மாதேவி Madam அவர்கள்

10. வல்லி சிம்ஹன் Madam அவர்கள்

11. ஏஞ்சலின் Madam அவர்கள்

12. நுண்மதி Madam அவர்கள்

13. சித்ரா Madam அவர்கள்

14. ஆசியா உமர் Madam அவர்கள்

15. இமா Madam அவர்கள்

16. திருமதி BS ஸ்ரீதர் [ஆச்சி] Madam அவர்கள்

17. சந்திரகெளரி Madam அவர்கள்

18. ஷக்திப்ரபா Madam அவர்கள்

19. ரமாரவி [ராம்வி] Madam அவர்கள் 


20. ஸாதிகா Madam அவர்கள்



ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***** 
தொடர்ச்சியாக அனைத்துப் பதினெட்டு பகுதிகளுக்குமே, எழுச்சியுடன் வருகை புரிந்து, மகிழ்ச்சியுடன் கருத்துரை இட்டு சிறப்பித்துள்ள

01. திரு. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்


02.  திருமதி கோவை2தில்லி Madam அவர்கள்




03. திருமதி இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்



04. திருமதி விஜி Madam அவர்கள் 


05. திருமதி லக்ஷ்மி Madam அவர்கள்


06. திருமதி கோமதி அரசு Madam அவர்கள் 



07. திருமதி உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்






and 
08. திரு E S சேஷாத்ரி Sir அவர்கள்


*****

ஆகியவர்களுக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


  

  


  

  



 


உங்களுக்கு பிடித்ததை எடுத்து ருசித்து சாப்பிடுங்கள்.






ஒரு சிறு அறிவிப்பு


பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக்கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதுவரை நீங்கள் எல்லோரும் எனக்குக் கொடுத்துவந்த ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

என்றும் அன்புடன் தங்கள்
vgk 
03 05 2012


65 கருத்துகள்:

  1. இதென்ன,.. விமானமா இல்லை அரண்மனையா!!

    ரொம்பவே பிரமிப்பூட்டுது.

    பதிலளிநீக்கு
  2. கோபால்ஜி சார்! உங்களுக்கு ரொம்ப ரொம்ப பெரிய மனசு! 'வாங்க, பறக்கலாம்' என்று நீங்கள் கூப்பிடும் பொழுதே மனசு ரெக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பிச்சாச்சு..
    ஆனா எதுக்கு இங்கே கொண்டு வந்து ஒரு விமானத்தை இறக்கியிருக்கீங்கன் னும் தெரிலே. எதுக்கானும் இருக்கட்டும்!

    ஆனா, நான் சொல்ற பறத்தலுக்கு மட்டும் எந்த விமானமும் தேவையில்லே.. இதுலே இருந்த இடத்திலிருந்தே பறக்கற வித்தையைச் செய்யலாம்; மனசை மட்டும் லேசாக்கி தங்கிட்டேயிருந்து கழட்டி விட்டாப் போதும். நீங்க கூட அடிக்கடி இப்படிப் பறக்கறதாலே, நான் சொல்லணும்ன்னு இல்லே, இல்லையா?..

    நீங்க சொன்னது தான்; அதே காரணங்கள் தான். அத்தனைக்கும் நடுவே பதிவெழுதறது; படிக்கறதுங்கற ரெண்டு காரியத்தை ஓரளவு செஞ்சாலும் இந்த பின்னூட்டம் போடறதை மட்டும் அப்பவே செஞ்சாத் தான் ஆச்சு; தள்ளிப் போட்டோமோ தொலைஞ் சோம். சேர்ந்து போய்ட்றதா?.. பிராக்ட்டிகலா முடிலே சார்! 'ரொம்ப அருமை சார்' 'பிரமாதம் சார்'ன்னு போட்டுட்டு ஓடிடலாம்ன்னா மனசு கேக்கலே சார்! இந்த வயசில் இவ்வளவு சிரமம் எடுத்திண்டு எழுதியிருக்கார்; அவர் எழுதினதிலேந்து ரெண்டொரு வரியை எடுத்துச் சொல்லி பாராட்டணும்ன்னு தோணும். இதனாலே தான் டிலேன்னு தெரியறது; தெரிஞ்சி என்ன பிரயோஜனம்?.. பழக்கத்தை விட முடியலேயே சார்!

    உங்களோட 'பகவத்பாதாளின்' பக்கங்களை தொடர்ந்து படிச்சேன்.
    தத்துவார்த்தமாக நிறைய பேச வேண்டியிருக்கு. எனக்கு எப்பவுமே
    அத்வைதம்ன்னா, உடனே விசிஷ்டாத் வைதத்தையும், துவைதத்தையும் பக்கத்லே எடுத்து வைச்சிக்கணும்.
    முரண்லாம் எடுத்து ஒதுக்கி வைச்சிட்டு, ஒத்து வரதையெல்லாம் ஒண்ணாச் சேத்து சொல்லணும்.
    சொல்லணும்ன்னு தோண்றதே தவிர நிகழ்த்திக் காட்டணும்ங்கறது கனவா இருக்கு. நனவாக்க முடியாததுக்குக் காரணம், நீங்க சொல்லியிருக்கீங் களே, அதே காரணங்கள் தான்! பார்க்கலாம்.. ஒரு பெரியவர் இப்படிச் சொல்லிச் சொல்லியே நிறைய காரியங்களை சாதிச்சிருக்கார்!
    அந்த நம்பிக்கை தான்!

    எத்தனை 'சார்'கள்! எத்தனை 'மேடம்'கள்! ஒரு படையேனா திரண்டிருக்கு! இந்த பதிவுக்கு ஒண்ணோ ரெண்டோ பின்னூட்டம் போட்ட என்னையும் இந்த லிஸ்ட்லே சேர்த்திருக்கறதைப் பார்த்தா, கூச்சமா இருக்கு, சார்! சபை மரியாதை தான்; ஒப்புக்கறேன். இருந்தாலும் அந்த மரியாதை தெரிஞ்சவர் கிட்டே மரியாதையா ஒத்துக்கணும், இல்லையா?.. அதனாலே தான்
    உங்க பெரிய மனசுக்கு நன்றி சொன்னேன்..

    மனம் நெகிழ்ந்த நன்றி, கோபால்ஜி!
    அப்படித்தான் இருக்கும். அப்பப்ப முடிஞ்சப்போ வாங்களேன்!

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவுகளை ஆர்வமுடன் படித்துக்கொண்டு இருந்தேன். உங்கள் சொந்த வாழ்க்கையில் அமைதி நிலவ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான பதிவு. பின்னூட்டமிட்டவர்களுக்கு வித்தியாசமான மரியாதை ஜீவி சார் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன், வழிமொழிகிறேன். ஓரிரு வரிகளில் பின்னூட்டமிட்டுச் செல்வது சில இடங்களில் தவிர்க்க முடியாதது. என்னைப் பொறுத்தவரை நான் செல்லும் தளங்களில் முழுக்கப் படித்து விட்டே பின்னூட்டமிடுகிறேன். பின்னூட்டங்களைப் பார்க்கும்போது பதிவிட்டவர்களுக்கு 'இவர்கள் எல்லாம் படித்திருக்கிறார்கள்' என்ற சந்தோஷம் வருமே...அதற்காகவே படித்த இடங்களில் பின்னூட்டம் மஸ்ட் என்று நினைக்கிறேன்!.அப்புறம் ஒரு விஷயம். என்னைப் பற்றிச் சொல்லும்போது ஸ்ரீராம் என்று சொன்னால் போதும். சார் எல்லாம் வேண்டாமே ப்ளீஸ்...

    பதிலளிநீக்கு
  5. சைன் - இன் பிரச்னையால் முதல் பின்னூட்டத்திற்கு பின் தொடரும் ஆப்ஷனை கிளிக் செய்ய முடியாததால் இந்தப் பின்னூட்டம்!

    பதிலளிநீக்கு
  6. என்ன சார் நன்றியெல்லாம் தனித்தனியா சொல்லியிருக்கீங்க. அதுக்கு ஒரு நன்றி.எனக்கு ஒரு மைசூர்பா, ஒரு வடை கொஞ்சம் காபி எடுத்துக்கிட்டேன். அந்த பயணிகள் விமானம் வியக்க வைக்குது. நானெல்லாம் விமானத்தை எங்க ஊருக்கு மேல பறக்கும்போது பாக்குறதோட சரி. அப்புறம் சீக்கிரம் பதிவுலகத்துக்கு திரும்புங்க.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா4 மே, 2012 அன்று AM 9:33

    ஆகா பத்தாவதாக என்னுடைய பெயரும் உள்ளது. என்னை தங்கள் நட்புவட்டத்தில் இணைத்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். தங்கள் குடும்ப சூழ்நிலை இனிமையானதாக மாற வேண்டும், சீகிரமே நீங்கள் பதிவுலகிற்கு திரும்ப வேண்டும். உங்கள் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. விருந்துக்கும் பயணத்துக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  9. Sir, As usual my language problem to comment elebarately.
    But I enjoyed each and every bit is real.
    Thanks for included my name.
    I must say thanks to you Sir, for the fine post.
    Happy reading.

    Aha nan masalvadai onnum( neeraya Sapida asai anal .......) medhu vadai rendum ofcourse coffium eduthunduten.Thanks for virundu.


    Why this parakkum vimanam?
    Paranthu velinadu poringaloo?
    Ana miss panrom Sir.
    viji

    பதிலளிநீக்கு
  10. //பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக்கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். //
    நானும் இது போல்தான் இடைவேளை அறிவித்தேன்.ஆனால் பிரச்சினைகளுக்கு நடுவே ஒரு ரிலீஃப் ஆக வலைப்பூ இருப்பதால்,இடைவேளையைக் குறைத்து மீண்டும் வந்து விட்டேன்.

    நீங்களும் விரைவில் திரும்பி வருவீர்கள்; வரவேண்டும்.
    எதிர்பார்ப்புடன்

    பதிலளிநீக்கு
  11. நன்றி சொல்லும் விதமே அலாதிதான்.

    விமானம் படங்கள் அற்புதம்.

    விருந்தோ அசத்தல்.

    பதிலளிநீக்கு
  12. //பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக்கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். //

    வருத்தமாக இருக்கு வை.கோ.சார். இது ஒரு விடுமுறை மாதிரி இருக்கட்டும். விரைவில் உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து பதிவுலகுக்கு மீண்டும் நீங்கள் வர வேண்டும் என் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஐயா..
    உங்களின் இந்த வரலாற்றுப் பதிவை
    படிக்க நாங்கள் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
    எம்மையும் மதித்து நன்றிகள் உரைத்தமைக்கு என்
    சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா...

    சிங்கப்பூர் விமானத்தில் ஒரே ஒரு முறை பயணித்திருக்கிறேன் ஐயா..
    இந்த வகை விமானத்தில் ஒருமுறையாவது பயணித்திட வேண்டும்..

    பதிலளிநீக்கு
  14. சொகுசான விமானம்தான். நல்ல பகிர்வு.

    நேரம் அனுமதிக்கையில் மீண்டும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  15. சிரமங்கள் யாருக்குத்தான் இல்லை! பதிவுகள் பக்கம் தொடர்ந்து வரமுடியாவிட்டாலும், முடிகிறபோதாவது பதிவிடுங்கள் அண்ணா.

    உங்கள் சிரமம் எதுவானாலும் விரைவில் சரியாக என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  16. படங்களும் பதிவும் அருமை .
    தொடர்ந்து வருவோம் .வடையும் காப்பியும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ,நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  17. கோபால் சார் நீங்க எல்லாருக்கும் நன்றி சொன்ன விதம் நல்லா இருக்கு. எல்லாருமே கத்துக்கனும். சிங்கபூருக்கும் 4 முரை போய் வந்திருக்கேன். படங்களும் பதிவும் நல்லா இருக்கு. நன்றி

    பதிலளிநீக்கு
  18. தொடர்ச்சியாக அனைத்துப் பதினெட்டு பகுதிகளுக்குமே, எழுச்சியுடன் வருகை புரிந்து, மகிழ்ச்சியுடன் கருத்துரை இட்டு சிறப்பித்துள்ளவர்களுக்கு நன்றி அறிவுப்பு மகிழ்ச்சி அளித்தது ..

    கரும்பு தின்ன கூலி கொடுத்த மாதிரி கரும்பு ஜூஸ் ருசிக்கவும் நன்றி அறிவுப்பு !

    நிறைவான இனிய நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  19. உங்களுக்கு பிடித்ததை எடுத்து ருசித்து சாப்பிடுங்கள். /

    எல்லாவற்றையும் ருசி பார்த்தாயிற்று.. நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  20. உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானத்தில்!! வாங்க பறக்கலாம் என்று பற்க்கச் செய்த பிரம்மாண்ட விமான்ப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  21. எனக்கு வேண்டிய இனிப்பு உங்க எழுத்து தான்.. அப்பப்ப எழுதுங்க.. ரசிச்சு ருசிச்சுக்கறேன்..

    பதிலளிநீக்கு
  22. ரிஷபன் அவர்கள் முன்மொழிந்ததை நானும் வழிமொழிகிறேன்ன்ன்ன். ;) எல்லாம் சரியானதும் திரும்ப வரணும் அண்ணா.

    பதிலளிநீக்கு
  23. சொகுசு விமானம் சூப்பர். நல்ல பகிர்வு. பண்டம் பலகராம் பழம் எல்லாம் சூப்பர்.சார் உங்கள் விருந்தோம்பல் செமை.தொடர்ந்து எழுதுங்கள்.காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  24. உலகத்தின் மிகப்பெரிய பயணிகள் சொகுசு விமானம் பற்றிய பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் புத்துணர்வுடன் வலைவலம் வர என் வேண்டுதல்கள்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி நான் வடை ஐஸ்க்ரீம், ஜூஸ், அப்புறம் குலாப் ஜாமுன் எடுத்துகிட்டேன்.

    மீண்டும் உங்கள் வரவை அனைவரும் எதிர்நோக்கியுள்ளோம்.

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா5 மே, 2012 அன்று PM 11:50

    விமானத்தின் படங்கள் யாவும் பிரமிப்படைய வைக்கின்றன. இந்த இடைவேளை மிகச் சிறிய இடைவேளையாக அமைந்து, மீண்டும் தாங்கள் தங்களது படைப்புகளை எங்களுக்கு வழங்க வேண்டும் சார். இது எமது மிகச் சிறிய வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  27. விடுமுறை முடித்து உங்கள் பிரச்சினைகளுக்கு விடை கொடுத்து மீண்டும் கலந்து கொள்ளுங்கள். மனத் தைரியமும் ஊக்கம் என்னும் கைப்பிடியும் கொண்டு பிரச்சனைகளை விரட்டி அடியுங்கள் . சொகுசு விமானம் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றேன். மனிதன் எதிலும் புதுமை காண்பவனே

    பதிலளிநீக்கு
  28. VGK அவர்களுக்கு வணக்கம்!

    // பகிர்ந்து கொள்ள ஆயிரக் கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக் கிடப்பினும், ஒரு சில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். //

    மேலே தாங்கள் தெரிவித்த செய்தியைக் கண்டதும் கொஞ்சநேரம் எனக்கு கருத்து ஒன்றுமே தோன்றவில்லை. அதன் பின்னரும் உடன் என்னால் கருத்துரை எழுதத் தோன்றவில்லை. பதிவுலகில் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கும்போது “ எதற்காக எழுதுகிறோம்? இதனால் என்ன சாதிக்கப் போகிறோம்? “ என்ற இந்த சலிப்பு தோன்றவே செய்கிறது. வீட்டில் உள்ளவர்களும் சில சமயம் சலித்துக் கொள்வார்கள். உண்மையில் ரொம்பவும் சலித்துக் கொள்ளப் பட வேண்டியவர்கள் “ முகமூடி “ போட்டு புனை பெயரில் எழுதுபவர்கள் மட்டுமே. சொந்தப் பெயரில் வெளிப்படையாக எழுதும் உங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் உண்டு. நன்றி! மீண்டும் வருக!

    பதிலளிநீக்கு
  29. பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக் கிடப்பதால்,உடனடியாக அடுத்த பதிவு வெளியிடப்படும்

    பதிலளிநீக்கு
  30. "வாங்க பறக்கலாம் ! [உலகத்தின் மிகப்பெரிய பயணிகள் விமானம்]"

    பறந்துகொண்டிருப்பதால் பயணம் நிறைந்து பதிவுக்கு வந்து பதிவிட திட்டமா ஐயா ??!!

    பதிலளிநீக்கு
  31. தொடருங்கள் சார் உங்களின் சிறப்பான பதிவுகளை !

    பதிலளிநீக்கு
  32. விமானம் மிக அழகு! சிம்பாலிக்காக திடீரென்று பறந்து போகிறேன் என்று சொல்வது மாதிரி இருக்கிறது!
    என்ன ஆனது, திடீரென்று இடைவெளி? இடை வேளை என்று தான் நினைக்கிறேன். முற்றுப்புள்ளி என்று நினைக்க முடியவில்லை. உங்களைப் பதிவெழுதச் சொல்லி எழுதியதும் அதன் பிறகு நீங்கள் வலைப்பூ ஆரம்பித்ததும் இப்போது தான் நடந்தது போல உள்ளது. அதற்குள் எத்தனையோ அருமையான பதிவுகளை எழுதி விட்டீர்கள். மறுபடியும் தொடர, சீக்கிரம் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

    அன்பு சகோதரி
    மனோ சாமிநாதன்

    பதிலளிநீக்கு
  33. அன்பின் வை.கோ

    நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொவது நற்றமிழர் பண்பு. வந்திருந்து படித்து மறுமொழியும் தொடர்ந்து இட்டவர்களுக்கு நன்றி கூறியது நன்று. இத்தனை நாட்களிலும் நான் அயலகத்தில் இருந்த படியினால் படிக்கவோ மறு மொழி போடவோ இயலவில்லை.

    இராஜ இராஜேஸ்வரியினிஅத் தொடர்ந்து பலப்பல படங்கள் இட்டு ஒரு செய்தியினைப் பகிர்ந்தது நன்று. இவ்வளவு பெரிய விமானமா ? ம்ம்ம்ம் - ஒரு நாள் செல்வோம் இதிலும்.

    கடைசியில் அமர்க்களப் படுத்தி விட்டீர்கள். எத்தனையைத் தான் சாப்பிடுவது. அடேங்ல்கப்பா .....

    வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  34. இப்படி பலகாரத்த எல்லாம் காட்டி நாவூற வைத்து விட்டீங்களே..

    பதிலளிநீக்கு
  35. விமானமா இது! என வியப்பூட்டியது.
    தங்களின் படைப்புகளைப் போலவே
    பரிமாறிய விருந்தும் மிக அருமை!
    தங்களின் படைப்புகளைப் படிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்வடைகிறோம். மீண்டும் விரைவில் எங்களுக்கு படைப்புகளை விருந்தாக்குவீர்கள்! ஆண்டவன் அருள் தங்களுக்கு பரிபூர்ணமாகக் கிடைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை!நன்றி!
    -சேஷாத்ரி

    பதிலளிநீக்கு
  36. விமானமா இது! என வியப்பூட்டியது.
    தங்களின் படைப்புகளைப் போலவே
    பரிமாறிய விருந்தும் மிக அருமை!
    தங்களின் படைப்புகளைப் படிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்வடைகிறோம். மீண்டும் விரைவில் எங்களுக்கு படைப்புகளை விருந்தாக்குவீர்கள்! ஆண்டவன் அருள் தங்களுக்கு பரிபூர்ணமாகக் கிடைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை!நன்றி!
    -சேஷாத்ரி

    பதிலளிநீக்கு
  37. மிகவும் அருமையான குறிப்புக்கு நன்றி அய்யா.

    அய்யா அவர்களே நானும் இதை மேற்கொள்கிறேன் .

    பதிலளிநீக்கு
  38. நன்றியும் விருந்தும் பெற்றுக்கொண்டு விமானத்தில் உல்லாசமாகப் பறந்து ஓய்வெடுத்து ரசித்து வந்தோம்.

    அருமை.

    பதிலளிநீக்கு
  39. அனைத்தும் மிக அருமை . இனிமை.. எல்லாரும் அந்த நிலையில்தான் இருக்கோம் கோபால் சார்.

    உங்க அனைவரின் பின்னூட்டம் பார்க்கும்போதெல்லாம் நாம் அனைவரின் பதிவுகளுக்கும் போய் படிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியோடுதான் கடக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  40. இன்றுதான் உங்கள் வலைப்பூவை முதன்முறையாக படிக்க நேர்ந்தது..
    அற்புதமாகவும் ஆரோக்யமாகவும் தொடர்ந்து ஒவ்வொரு மனதையும் உயர்த்தும் முயற்சியாக எழுதி இருக்கிறீர்கள்
    உங்களுக்காக ஒரே ஒரு வரி.."முடிவென்பதும் ஆரம்பமே!"

    http://karadipommai.blogspot.in/

    பதிலளிநீக்கு
  41. பொறாமை பட வைக்குது அந்த விமானம். உங்க சொந்த வாழ்வில் அமைதி ஏற்பட்டு விரைவில் பதிவிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  42. ஆத்தாடி எம்மாம் பெரிய விமானம்..

    பகிர்வு மிக அருமை அய்யா.

    //உங்க சொந்த வாழ்வில் அமைதி ஏற்பட்டு விரைவில் பதிவிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.// நானும்தான்..

    பதிலளிநீக்கு
  43. உங்கள் நன்றியை பெற்றுக்
    கொண்டேன் நன்றி.
    அருமையான விருந்தை ஏற்றுக் கொண்டேன்.

    பெரியவிமானத்தில் பயணம் இனிமையாக இருந்தது.
    நன்றி.

    விரைவில் பதிவிட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  44. மீனமேஷம் பார்த்து நான் வலைக்கு மீண்டு வந்தால் நீங்க கார்டு போட்டுட்டீங்க வை.கோ. சார்! மீண்டும் விரைவில் வரவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  45. அன்பின் வை.கோ அவர்களே,
    தங்களது அன்பையெல்லம் நான் பல மாதங்களாக கிட்டத்தட்ட ஓராண்டு காலமாய் இழந்தேன். மிகவும் வருத்தம். ஜிமெயிலில் தங்களைக் காணும்போதெல்லாம் ஒரு குற்ற உணர்வு என்னைச் சங்கடப்ப்டுத்தும்.

    நலம் விசாரித்துச் செல்லலாம் என்று வந்தால் அதிர்ச்சி தரும் பதிவு. இருப்பினும் விரைவில் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  46. அன்புள்ள...

    வணக்கம். என்னுடைய தொடர்பணிகளால் எப்போதாவதுதான வரும் வழக்கம் வாய்த்துவிட்டது. இருப்பினும் மனதில் அடிக்கடி நினைத்துக்கொள்ளும் பதிவுகளில உங்களுடையது ஒன்று. உங்களின் இயலாமை எதுவாயினும் ஆண்டவன் உதவட்டும். விரைவில் திரும்பிவாருங்கள் பதிவுகளுடன்.
    சந்திக்கலாம். ஆவலாகவே நான்.

    பதிலளிநீக்கு
  47. இந்த்ப்பதிவுக்கு அன்புடன் வருகை
    தந்து அரிய பெரிய கருத்துக்களை
    ஆறுதலாகக்கூறியுள்ளவர்களுக்கும்,

    நேரிலும், தொலைபேசியிலும்,
    மின்னஞ்சலிலும் என்னைத் தொடர்புகொண்டு, மீண்டும் நான் என் படைப்புகளைத் தொடர்ந்து தரவேண்டும் என்று அன்புக்கட்டளை
    இட்டுள்ளவர்களுக்கும் என்
    மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வளவு பேர்கள் என் மீதும்,
    என் எழுத்துக்கள் மீதும் பாசம் வைத்துள்ளது, உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    தங்கள் அனைவரின் அன்புக்காகவும், நட்புக்காகவும், பாசத்திற்காகவும், என் மீதும் என் எழுத்துக்கள் மீதும் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்காகவும், தங்கள் அனைவரின் ஏகோபித்த வேண்டுகோளுக்காகவும் விரைவில் வலையுலகில் வலம்வர கட்டாயம் நானும் முயற்சி செய்வேன்.

    அதுவரை தயவுசெய்து பொருத்தருள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    பதிலளிநீக்கு
  48. As suggested by "support@blogger.com",
    through their mail
    dated 12.06.2012,
    I have removed
    ALL THE PLANE PHOTOS
    from this article.

    Just for your information, please.

    vgk

    பதிலளிநீக்கு
  49. மின்னஞ்சலில் தொடர்புகொண்ட
    =============================

    திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்

    திருமதி ஸாதிகா அவ்ர்கள் [2 Times]

    திருமதி ஆசியாஉமர் அவர்கள்

    திருமதி இமா

    திருமதி நிர்மலா [ஏஞ்சலின்]

    திரு S. Venkat Sir அவர்கள்
    [excelvenkat@gmail.com]

    நேரிலேயே வீடு தேடி வருகை தந்த
    =================================

    பதிவர் தம்பதி

    திருமதி கோவை2தில்லை அவர்கள்

    திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்

    தொலைபேசியில் தொடர்புகொண்ட
    ================================

    திருமதி ஆச்சி அவர்கள்
    [Thirumathi BS Sridhar]

    குமாரி கெளரி லக்ஷ்மி [நுண்மதி]

    மற்றும்

    என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என்

    ம ன மா ர் ந் த ந ன் றி க ள்.

    என்றும் தங்கள் பிரியமுள்ள
    vgk

    பதிலளிநீக்கு
  50. நாடகத்தின் ஒவ்வொரு பகுதியும் அருமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும் ”அருமை” என்ற அழகான கருத்துக்கும் மிக்க நன்றி, வெங்கட்.

      அன்புடன் vgk

      நீக்கு
  51. அருமையான பகிர்வு.
    அப்பப்பா அனைவருக்கும் தனித்தனி நன்றிகள்.
    அடிக்கடி வராவிட்டாலும் எப்பவாவது வாருங்கள்...
    இறுக்கமான சூழலும் இனிதாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான முதல்? வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      அடிக்கடி வராவிட்டாலும், அவ்வப்போது வரத்தான், நிச்சயமாக முயற்சிப்பேன்.

      ஆம், நீங்கள் சொல்வது போல இறுக்கமான சூழல் இனிதாகும் என்பதும் உண்மைதான்.

      நன்றியுடன்
      vgk

      நீக்கு
  52. அருமையான ஆன்மீகத் தொடரை சுவையுடன் கொடுத்தமைக்கு நன்றி. நன்றி, நன்றி.

    பதிலளிநீக்கு
  53. சுவையுடன் ஒரு ஆன்மீகத் தொடரை அருமையாக கொடுத்ததற்கு நன்றி.

    மேலும், வலைத் தளத்திற்கு வந்து பின்னூட்டம் கொடுத்தவர்களை கௌரவிக்கும் உங்கள் எண்ணம், அப்பப்பா என்ன சொல்ல. உங்களுக்கு இணை நீங்களே தான்.

    பதிலளிநீக்கு
  54. பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்தியவர்களுக்கு அருமையாக நன்றி கூறி ஸ்வூட்ஸும் கொடுத்து அசத்திட்டூங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 மே வரை முதல் பதினேழு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
  55. கமண்டு போட்டுகிட்ட அல்லா பேரயும் மறக்காம நன்றி சொல்லினீங்களே. இபுபூடில்லா யாரலயுமே ஏலாது. உங்க கிட் கத்துகிட நெறயா வெசயங்க இருக்குதுங்க

    பதிலளிநீக்கு
  56. mru October 21, 2015 at 2:06 PM

    வாங்கோ முருகு, வணக்கம்மா.

    //கமண்டு போட்டுகிட்ட அல்லா பேரயும் மறக்காம நன்றி சொல்லினீங்களே. இபுபூடில்லா யாரலயுமே ஏலாது. உங்க கிட் கத்துகிட நெறயா வெசயங்க இருக்குதுங்க//

    அதெல்லாம் என்னிடம் கற்றுக்கொள்ள உங்களுக்கு ஒரு விஷயமும் இல்லை. நான் மிகவும் சாதாரணமானவன் மட்டுமேதான்.

    எனினும் தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  57. நீங்க பின்னூட்டம் போட்டவர்களையும் நினைவு கூர்ந்து அமர்க்களமாக ஸ்வீட் காரம் காபியுடன் நன்றி சொன்ன விதம் கலக்கல் இதுபோலல்லாம் உங்களுக்கு மட்டும் எப்படித்தான் தோணறதோ. .

    பதிலளிநீக்கு
  58. இவ்வளவா...வயிறு தாங்காது...எல்லாத்துக்கும் தாங்க்ஸ் சொல்ற பண்பு...தலை வணங்கத்தக்கது..

    பதிலளிநீக்கு