About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, July 6, 2012

இன்றைய இனியவை நான்கு


[ SWEET  : 1 ]

 

ONE MORE AWARD
GIVEN TO ME ON 04.07.2012


By Ms. RIYAA KATHIR, 
[ A    L U F L   B U T T E R F L Y ]



NAME OF THE AWARD 


MESSAGE FROM Ms. RIYAA KATHIR

Vai. Gopalakrishnan Sir on Vai. Gopalakrishnan
He is a regular appreciator, viewer  and comments not only for my blog, to all his blogging friends.. I am very lucky to have such a blogging friend, who is never been tired.. 
RIYAA KATHIR 

 RIYAA

This is the 9th Award for me in this year 2012  - vgk ]



I would like to Pass On  this Very Valuable Award 


To
Mrs. RAJARAJESWARI Madam of "MANIRAJ" BLOG
who is THE FITTEST PERSON to receive this Award from me. 


Reason for Awarding to this Particular Person:- 

NO ONE CAN FIND EVEN A SINGLE POST OF MINE, 
WITHOUT THE ENCOURAGING COMMENTS OF THIS MADAM. 

Mrs. RAJARAJESWARI Madam  


vgk

-oOo-oOo-oOo-oOo-oOo-


[ SWEET  : 2 ]


”முன்னெச்சரிக்கை முகுந்தன்” 

என்ற தலைப்பில் நான் எழுதி, மூன்று ஆண்டுகளுக்கு முன் அனுப்பி வைத்த, நகைச்சுவைச் சிறுகதையொன்று [08.07.2012 தேதியிட்ட] இந்த வார “ராணி” தமிழ் வார இதழில் பக்கம் எண் 31+32 இல் பிரசுரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.




இதுவே “ராணி” வார இதழில், 
முதன் முதலாக வெளியிடப்படும் 
என் சிறுகதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முழுக்கதையையும் படிக்க விரும்புவோருக்கு இணைப்பு இதோ:
[ SWEET  : 3 ]


மூன்று புதிர்க் கணக்குகள் கொடுத்து விடையளிக்க முடியுமா
என ஓர் போட்டி அறிவிப்பு 28.06.2012 அன்று 
ஒரு வ்லைத்தளத்தில் வெளியாகியிருந்தது:


அதில் நானும் கலந்து கொண்டதில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் மறுநாள் 29.06.2012 அன்று வெளியானது  

இணைப்பு:: http://manathiluruthivendumm.blogspot.in/2012/06/blog-post_30.html
[திரு. மணிமாறன் அவர்களின் ”மனதில் உறுதி வேண்டும்” என்ற வலைத்தளம்] 


மூன்று கணக்குகளுக்குமே 

சரியான பதிலைச் சொன்ன 

கணிதப்புலிகள்:


1] வை. கோபாலகிருஷ்ணன் சார்




2] ஜோஸப் ஜார்ஜ்


3] நித்திலன்


4] சார்வாகன்


5] நண்பேண்டா...ராஜா


என்று என் பெயர் முதலிடத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது 
என்பதை  மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


[ SWEET  : 4 ]





தெனாலிராமன் கதைகள், முல்லாக்கதைகள் முதலியனவற்றில் நாம் சிரிக்கவும் சிந்திக்கவும் பலவிஷயங்கள் இருக்கும். சமீபத்தில் நான் படித்து ரஸித்த முல்லாக்கதை ஒன்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


சாமர்த்தியமான பதில்


முல்லா பெரிய அறிவாளி. அவருக்கு எப்போது, எப்படி, எந்தவகை ஆபத்தோ துன்பங்களோ வந்தாலும் அதற்காகக் கவலைப்படாமல், பயப்படாமல், அவருக்கு இருக்கும் அறிவாற்றலைக்கொண்டு அந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுவார்.   

இந்த விஷயம் பரவலாக எல்லோருக்கும் தெரிந்தது. ஊர் எல்லாம் முல்லாவின் ஞானத்தையே பெருமையாக பேசியது. இது அந்நாட்டு மன்னரின் காதுக்கும் எட்டியது.

அவருடைய அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒருநாள் முல்லாவை தமது அரசசபைக்கு வரவழைத்தார்.

முல்லா சபைக்கு வந்தார். மன்னரை வணங்கியபடி நின்றார்.

“முல்லா, உமது அறிவைப்பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாக உள்ள்து. நீ உண்மையிலேயே அறிவாளியா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். அதனால் உமக்கு ஒரு பரிசோதனை வைக்கப்போகிறேன்; 

நீ ஏதேனும் ஒன்றை இப்போது இந்த சபையில் கூற வேண்டும். நீ சொன்னது உண்மையாக இருந்தால் உனது தலை வெட்டப்படும். நீ சொன்னது பொய்யாக இருந்தால் நீ தூக்கிலிடப்படுவாய்” என்றார் மன்னர்.

மன்னர் இப்படிச்சொன்னதும் முல்லா அதிர்ந்தார். மன்னர் எப்படியும் நம்மை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். நாம் உண்மையைச் சொன்னாலும், பொய்யைச் சொன்னாலும் நமக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. இதை மிகவும் சாமர்த்தியமாகவே சமாளிக்கணும் என்று முல்லா தீர்மானித்தார்.

முல்லா தீவிரமாக யோசித்தபடி இருந்தார். முல்லா இப்போது என்ன சொல்லப்போகிறார் என்பதை சபையினரும், மன்னரும் உன்னிப்பாக எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

முல்லா மன்னரிடம், “ மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில் தான் போடப் போகிறீர்கள்” என்றார்.

முல்லா அப்படிச்சொன்னதும், மன்னர் திகைப்படைந்தார்.

முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும். தலை வெட்டப்பட்டால் அவர் சொன்னது பொய்யாகிவிடும்.  

முல்லா சொன்னது பொய் என்று வைத்துக்கொண்டால், முல்லாவைத் தூக்கில் போட வேண்டும். 

தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்று கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும்.   

இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து, மன்னரை முல்லா திக்குமுக்காட வைத்து விட்டார்.

மன்னரால் எதுவும் தீர்ப்பு கூற முடியவில்லை.

சாதுர்யமாகப் பேசி, தனக்கு வந்த ஆபத்தை தன்னுடைய அறிவாற்றலால் சமாளித்த முல்லாவைப் பாராட்டி, பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து அனுப்பினார் மன்னர்.

oooooooooooo 








இப்படிக்கு,

என்றும் அன்புடன் தங்கள்,
vgk 

163 comments:

  1. இனிப்பு செய்திகளை வழங்கி திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். இன்னும்.. இன்னும் நிறைய இதேபோல நீங்கள் அவார்ட்/பிரசுரம் வாங்க வேண்டும் என்று மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.. இராஜராஜேஸ்வரி மேடத்திற்கு கொடுத்தது நிச்சயம் தகும்.. வாழ்த்துகள் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. எழுத்துலகத்திற்கு என்னை இழுத்துப்பிடித்து அழைத்து வந்த, என் இனிய எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்களின் முதல் வாழ்த்துகள் எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக அமைந்துள்ளது.

      தங்களால் ஏற்றி வைத்த இந்த சிறிய அகல் விளக்குக்கு அடிக்கடி எண்ணெயும்/நெய்யும் ஊற்றி, திரியை நன்கு தூண்டிவிட்டு அணையாமல் காத்துவரும், அரும் பணியைத் தொடர்ந்து செய்து வருவதால், இந்த விருதினை திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு கொடுப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.

      இதுவரை நான் வெளியிட்டுள்ள 300 க்கும் மேற்பட்டப் பதிவுகள் அத்தனைக்கும் ஒன்று விடாமல் வருகை தந்து, ஒவ்வொன்றுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானத்தை அள்ளி அள்ளி வழங்கியுள்ளார்கள்.

      தாங்களே, அவர்களுக்குக் கொடுத்தது தான் ’தகும்’ என்று சொல்லியுள்ளது எனக்கும் மிகுந்த சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.

      மிக்க நன்றி, சார்.

      பிரியமுள்ள

      vgk

      [வீ......ஜீ]

      Delete
  2. Oh great.. Superb.. So we should not loose hope. I did write a short story long back and as it does not get published i lost the interest in writing.. OMG.. It should be a great shock and surprise for you know sir. My hearty congratulations to you sir. And my hearty wishes for winning the Kanithapuli title. My best Best Best wishes to you..
    With Love
    Riya

    ReplyDelete
    Replies
    1. My Dear RIYA,

      Thank you very much for your kind visit and excellent comments.

      I was sending my short stories to many Tamil Weekly/Monthly magazines, from 2006 to 2010. Afterwards when I started writing in my own Blog, with the great help of our RISHABAN Sir, I have stopped sending my articles to magazines.

      You may like to read my 50th Post in the following Link:
      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html
      தலைப்பு: ஐம்பதாவது பிரஸவம்; ”மைடியர் ப்ளாக்கி” + “தாலி”

      Thanks a Lot

      With Best Wishes....

      பிரியமுள்ள
      vgk

      Delete
  3. கோபால் சார் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இன்னும் இந்த விருதுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்னு நினைக்கிரேன்

    ReplyDelete
  4. வாங்கோ, வாங்கோ Ms. Lakshmi Madam.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    எல்லாம் தங்களின் ஆசீர்வாதங்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  5. Aha......
    Really very sweet news. Congragulations Sir.
    I am very happy to know sir.
    viji

    ReplyDelete
  6. Mrs. VIJI Madam,

    WELCOME TO YOU !

    இனிய செய்திகளைப்படித்து மகிழ்ந்து, அன்புடன் தாங்கள் வருகை புரிந்து, வாழ்த்துகள் கூறியுள்ளது எனக்கும் மிக்க மகிழ்ச்சியாகவே உள்ளது. மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  7. Replies
    1. அன்பான அவசர வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, மேடம்.

      Delete
  8. Replies
    1. பயணத்தின் நடுவே பதட்டத்தில் கொடுத்த பின்னூட்டங்கள் எனத் தெரிகிறது. வீட்டுக்குத்திரும்பியபின் பொறுமையாக அழகுத்தமிழில் மேலும் கருத்துக்கள் கூறினால் மகிழ்வேன்.

      Delete
  9. ரிஷபன்July 6, 2012 12:21 AM
    இனிப்பு செய்திகளை வழங்கி திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். இன்னும்.. இன்னும் நிறைய இதேபோல நீங்கள் அவார்ட்/பிரசுரம் வாங்க வேண்டும் என்று மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.. இராஜராஜேஸ்வரி மேடத்திற்கு கொடுத்தது நிச்சயம் தகும்.. வாழ்த்துகள் மேடம்.//

    THANK YOU VERY MUCH SIR...

    ReplyDelete
    Replies
    1. Thanks a Lot Madam.

      I will forward this to Mr Rishaban Sir thro' e-mail.

      With Best Wishes ....
      vgk

      Delete
  10. அண்ணா...9ஆவது விருதிற்கு என் அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அண்ணா என பிரியத்துடன் உறவு சொல்லி அழைத்து என்னை தங்களின் சொந்தமாக்கிக் கொண்டதற்கும், தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.

      மிகவும் சந்தோஷம் Ms.ராதா ராணி அவர்களே. WELCOME!

      அன்புடன் vgk

      Delete
  11. Replies
    1. ஏதோ அகஸ்மாத்தாக [பாதை மாறியோ என்னவோ] என்னிடம் வந்து சேர்ந்ததை, ஸத்பாத்ரமான [பத்தரை மாத்துத்தங்கமான] உங்களிடம் சேர்த்து விட்டதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சிகள்.

      FOR ME ..... "YOU ARE THE BEST" ! ;)))))

      Delete
  12. விருது பெற்றதற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...நீங்கள் உண்மையிலே எனக்கும் மற்றும் பல பதிவர்களுக்குவிரிவான தவறாது பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துகிறீர்கள் என்பதால் இவ்விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் நீங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Respected Mrs. Usha Srikumar Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நான் போய்ப்பார்த்து, ரஸித்து, படிக்கும் பதிவுகளே மிக மிகக்குறைவு தான். அவ்வாறு நான் செல்லும் ஒருசில பதிவுகளை பொறுமையாகப் படித்து ரஸித்து, என் மனதில் அவை ஓரளவுக்குப் பதிந்த பிறகே பின்னூட்டம் இடும் வழக்கம் உண்டு.

      அதுவும் ரத்ன சுருக்கமாகவும்,சற்றே பெரிய எழுத்துக்களிலும், தகுந்த அழகான கருத்துள்ள பொருத்தமான படங்களுடன் கூடிய பதிவுகள் என்றால் எனக்கு படிக்க மிகவும் பிடிக்கும்.

      அதுபோல கைவேலைகள் [Art work, Craft work, Painting work, Drawing] என்றால் கூடுதலாக கவனம் செலுத்துவேன். ஏனென்றால் அவற்றில் எனக்கும் மிகவும் இஷ்டமுண்டு.

      [மற்றபடி மொக்கைப்பதிவுகள், ஆபாசப்பதிவுகள், ஆபாசத்தலைப்புள்ள பதிவுகள், ஆபாசப் படங்கள் உள்ள பதிவுகள், ஆபாச சினிமாச்செய்திகள், அர்த்தம் விளங்காத அல்லது அனர்த்தமான கவிதைகள் போன்றவற்றில் எனக்கு அதிக விருப்பம் இல்லாததால் நான் அவற்றைப் படிப்பதைத் தவிர்த்து வருகிறேன். அப்படியே படிக்க நேர்ந்தாலும் அவைகளுக்குப் பின்னூட்டம் இடுவதில்லை.]

      தங்களைப் போன்றவர்களின் மிகச்சிறந்த TANJORE PAINTING போன்ற படைப்புகளை எல்லோராலும் தரமுடியாது அல்லவா!

      இறையருள் இருப்பதால் தங்களால் அந்த இறைவனையே படைக்க முடிகிறது / செதுக்க முடிகிறது / காட்சிப்படுத்தவும் முடிகிறது.

      இது போன்ற தனித்திறமை வாய்ந்தவர்களை நாமும் பாராட்டி நன்கு ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் கொள்கை.

      உங்களைப் போன்றவர்கள் தரும் மிகத்தரமான படங்களுக்கும், பதிவுகளுக்கும் பின்னூட்டமிடும் பாக்யம் கிடைத்துள்ளதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.

      தங்களின் வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

      பிரியமுள்ள
      vgk

      Delete
  13. மழை பெய்து கொண்டே இருக்கிறது.தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, வாங்க, வணக்கம்.

      எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதம்.

      அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்கும் மிக்க நன்றி, சார்.

      அன்புடன் vgk

      Delete
  14. விருது◌ாற்றமைக்காக பாராட்டி நிற்கிறேன் சொந்தமே.விருதை பெற்ற மற்றய சொந்தத்திற்கும் என் வாழ்த்துக்கள்.சந்திப்போம் சொந்தமே!
    http://athisaya.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
  15. வரிக்குவரி வார்த்தைக்கு வார்த்தை தாங்கள் ’சொந்தமே’ எனக் குறிப்பிடுவது என்னை அப்படியே சொக்க வைத்து சொர்க்கத்திற்கே கொண்டுசெல்வதாக உள்ளது.

    வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், சொ ந் த மே ! ;)

    சொந்தமாகிப்போன,
    vgk

    ReplyDelete
  16. அய்யா தங்களுக்கு கிடைத்து வரும் விருதுகளைப் பார்க்கும் பொழுது, உங்கள் முயற்சியும் வலைப்பூவில் பழகியவரோ புதியவரோ எவராக இருந்தாலும் அதரவு அளித்து ஊக்குவித்து சமயங்களில் உங்கள் அனுபவ அறிவுகளை வழங்கி மேன்மைப் படுத்தும் அனுபவ அறிவுமே நீங்கள் உயர காரணம் என்பதை உங்கள் வரிகளில் மூலமே கண்டுகொண்டேன்... மென்மேலும் உங்கள் புகழ் உயர வாழ்த்துக்கள்.

    முல்லா கதை சொக்கிவிட்டேன்

    படித்துப் பாருங்கள்

    சென்னையின் சாலை வலிகள்

    http://seenuguru.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. My Dear SEENU Sir,

      வாங்க, வணக்கம். தங்களின் அன்பான வருகையும், ஆதரவான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வளித்தன. வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

      சென்னையின் சாலை வலிகளை நன்கு உணர்ந்து விட்டு வந்தேன். ஏற்கனவே சிலமுறை நேரில் சென்றபோதும் உணர்ந்துள்ளேன். கருத்துகள் கூறியுள்ளேன்.

      அன்புடன்
      vgk

      Delete
  17. வாழ்த்துக்கள் கோபு சார் :)))
    ரியா பொருத்தமானவருக்கு தான் அவார்ட் வழங்கியிருக்காங்க
    நீங்களும் அவ்வாறே ராஜேஸ்வரி அக்காவுக்கு வழங்கியிருக்கீங்க
    இருவருக்கும் வாழ்த்துக்கள்
    எனக்கு பிடித்த நேந்திரங்கா சிப்சை தட்டோடு எடுத்துக்கொள்கிறேன் :))

    ReplyDelete
    Replies
    1. வாங்க நிர்மலா,

      வணக்கம். எப்படியிருக்கிறீங்க? நலம் தானே!

      ரியாவை உங்களுக்கு முன்னமேயே தெரியுமா? எனக்கு ஓரிரு மாதங்களாக மட்டுமே வலையுலகப் பின்னூட்டங்கள் மூலமே பழக்கம். அவர்களுக்கு நன்றாகத் தமிழ் தெரிகிறது. “நான் ஒரு தமிழச்சி தான் சார்” என்று என்னிடம் சொல்லி விட்டார்கள்.

      எனக்குப்பிடித்த நேந்தரங்கா சிப்ஸ் உங்களுக்கும் பிடிக்கும் என்பது கேட்க சந்தோஷமாக உள்ளது. தட்டோடு தட்டாமல் எடுத்துக்கொண்டு நன்றாக சாப்பிடுங்கோ! சந்தோஷமாக இருங்கோ! ;))

      என்னையும், உங்கள் அக்கா திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களையும் சேர்த்து வாழ்த்தியுள்ளதற்கு, என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      கோபு

      Delete
    2. இல்லை :)) சார் பெயர் பார்த்து எழுதினேன் .இனிமே அறிமுகப்படுதிக்கொள்கிறேன்

      Delete
    3. OK .... OK .... No Problem, Nirmala.

      Just ஏற்கனவே அவர்களைத் தெரியுமோ என்று கேட்டேன். வேறொன்றும் இல்லை.

      அவங்க ப்ளாக்குக்குப்போய் Follower ஆகி ஏதாவது ஒரு Comment கொடுத்தீங்கன்னா சரியாப்போச்சு. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிவிடுவீர்கள்.

      அவர்களும் உங்களை மாதிரியே ART WORK, CRAFT WORK, EMBROIDERY என்று ஏதேதோ கைவேலைகளின் திற்மை உள்ளவர்களாகவே தெரிகிறது.

      OK Nirmala .. Bye for now.

      Delete
  18. நிறைய இனிப்புகள்... திகட்ட திகட்ட. உங்களுக்கும் விருதுக்கு மேல் விருதுகள். வாழ்த்துக்கள் சார். முன்னெச்சரிக்கை முகுந்தன் கதையும் ரசிக்கும்படி இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க Mr. விச்சு Sir.

      தங்களின் அன்பான வருகைக்கும்,
      அழகான வாழ்த்துகளுக்கும்,
      முன்னெச்சரிக்கை முகுந்தன்
      நகைச்சுவைச் சிறுகதையை
      ரசித்ததற்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் vgk

      Delete
  19. மேன்மேலும் பல பெருமைகள் உங்களைச் சேர வாழ்த்துகள் வை.கோ. ஜி! ....

    ReplyDelete
    Replies
    1. வாங்க மை டியர் வெங்கட்ஜி.

      தங்களின் அன்பான வருகைக்கும்,
      வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் vgk

      Delete
  20. CONGRATULATIONS on winning 9th award as well..truly you deserve it sir..my best wishes for showering more and more and more awards on you in future:)..recently i am able to read some words in tamil:)..hope for the best..

    ReplyDelete
    Replies
    1. LEELA .... WELCOME TO YOU!

      Thank you very much for your kind visit & valuable Comments / Greetings.

      First Sweet is for my 9th award. You would have fully understood, as I have written it fully in English.

      The Second Sweet is for a short story sent by me to a Tamil Weekly Magazine some 3 years back, which is selected now for Publication. It is now only Published in RANI a Tamil Weekly dated 8/7/2012 recently this week.

      The Third Sweet: Three critical mathematic problems were given in a Blog asking for correct answer. A small Contest. I have participated in that contest & my name is appearing at the top as No. 1 in the result announced. They have given me a Title as "MATHS TIGER" as an appreciation.

      The Forth Sweet: I have recently studied a short story [jovial one] which attracted me. I have just shared it with one & all. That is all in the post.

      I am very very Happy to know, that you have learned some words in Tamil. Good Good. All the Best ... Congrats. You can do anything like this. You have all such talents. ;)))))

      With kind regards & Best Wishes....

      Affectionately yours,
      vgk

      Delete
  21. இனிப்பான பதிவு சார் ! முகுந்தன் கதை அருமை ! படங்கள் சூப்பர் ! வாழ்த்துக்கள் ! நன்றி !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், இனிமையான வாழ்த்துகளுக்கும், ”முன்னெச்சரிக்கை முகுந்தன்”
      கதைக்கான ”அருமை” என்ற பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே. அன்புடன் vgk

      Delete
  22. ராணி சிறுகதை - வாழ்த்துக்கள்! அவார்ட் வாங்கறது உங்களுக்கு காத்து வாங்கறது மாதிரி. அதற்கும் பாராட்டுக்கள்! தகுதியான மனிதருக்கு கிடைப்பதில் எப்பவுமே தனி சந்தோஷம்!
    ஆமா உங்க பதிவை பசியாயிருக்கிற நேரத்தில் படிக்க முடியாதுன்னு படங்கள் சொல்கின்றனவே!

    ReplyDelete
  23. வணக்கம், வாங்க Mr. கே.பி. ஜனா Sir.

    தங்களின் அன்பான வருகையும், அழகான வேடிக்கையான கருத்துக்களும், இனிமையான வாழ்த்துகளும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்ற்ன. மனமார்ந்த நன்றிகள், சார்.

    ReplyDelete
  24. வை. கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் கதை ராணியில் வந்தமைக்கு வாழ்த்துக்கள். முதன் முதல் இடம் பெற்ற சிறுகதை என்பதை கேள்வி பட்டு மேலும் மகிழ்ச்சி. இக் கதையை நான் உங்கள் பதிவில் படித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

    நீங்கள் பெற்ற விருதுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு வழங்கிய ரியாவுக்கு வாழ்த்துக்கள்.

    உங்களிடம் விருது பெற்ற இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் முல்லா கதை நன்றாக இருக்கிறது.
    இனிமையான உணவுகள் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள திருமதி கோமதி அரசு மேடம்,

      வணக்கம். வாங்கோ, நலம் ... நலமா!

      நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் மகிழ்வளிக்கின்றன.

      எங்கள் அனைவரையும் பாராட்டியுள்ளதும், வாழ்த்தியுள்ளதும்
      சந்தோஷம் தருவதாக உள்ளது.

      தங்களின் இனிய வலையுலகப் பிரவேசத்தின், [மெளனம் ஆன] மூன்றாம் ஆண்டு நிறைவு நாளுக்கும், 100 ஆவது பதிவுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      மெளன அனுபவங்களை மெளனமாக எழுதுங்கள். நாங்களும் மெளனமாகவே படிக்கிறோம். மறக்காமல் எனக்கு லிங்க் மெயில் மூலம் அனுப்புங்கோ.

      அன்புடன்
      vgk

      Delete
  25. கடலில் அலைகளும் ஓயவேண்டாம்
    உங்களுக்கான விருதுகளும் ஓயவேண்டாம்
    மீண்டும் பதிவுகொடுக்கும் உத்வேகத்தைக் கொடுத்த
    விருதுகளுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள், ரமணி, சார்.

      தங்களின் பின்னூட்டம் எப்படியோ ஸ்பேமில் போய அமர்ந்துள்ளது. நான் இப்போது தான் சார் அதைப் பார்த்தேன். அதனால் என் பதில் தாமதமாகக் கொடுக்கும்ப்டி ஆகிவிட்டது. அதற்கு தயவுசெய்து மன்னிக்கணும்.

      அன்புடன் vgk

      Delete
  26. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா.. ராஜேஸ்வரி அக்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .... மேன்மேலும் விருதுகள் பெற வேண்டும் ....... அனைத்து இனிப்புகளும் சுவை மிகுந்தவை அது போன்று உங்களுடைய பகிர்வு.. அது மட்டும் இல்லாமல் ராணி வார இதழில் வந்த முன்னெச்சரிக்கை முகுந்தன் கதையின் இணைப்பை இங்கு கொடுத்ததிற்கு மிக்க நன்றி ஐயா.. கதைக்கு வாழ்த்துக்கள்..... I am Very Happyyyyyyyyyyyyyyyyy.............

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள Ms. VijiParthiban Madam,

      வாங்க, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், எங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இனிப்புகள் பற்றிய இனிப்பான தகவல்கள்களைச் சுட்டிக்காட்டி, கதையின் இணைப்பிணை நான் கொடுத்தது பற்றியும் நன்றி தெரிவித்துள்ளது அழகு. அதற்கும் என் நன்றிகள்.

      // I am Very Happyyyyyyyyyyyyyyyyy.............//

      I am also so Happyyyyyyyyyyyyyyyyy..............

      அன்புடன்
      vgk

      Delete
  27. my special congrats on your superb perfomance in many aspects and also getting a great title ganithapuli(i read it myself)..ofcourse you deserve the honour sir..i know you have a natural ability to do anything well..
    maths was also my fav subject on my school days and i too had a thrill to go thru simple puzzles(not too complicated heehee)and solve them..so i very much appreciate you sir..
    btw big thanks for translating the whole things to me..so nice and kind of you dear sir..all the best for doing and sharing good jobs in future..

    ReplyDelete
    Replies
    1. Leela .... I am very happy to see you again here. Thank you very much for your kind re-entry & offering so many encouraging messages.

      I am very much happy to note that your favourite subject is also Mathematics.

      It was really an interesting & simple problem which I would like to share with you in simple English through e-mail. If you don't mind kindly send your e-mail ID to my e-mail ID valambal@gmail.com

      Thanking you once again.

      With kind regards & Best Wishes to you Leela...

      vgk

      Delete
  28. என்னடா வை.கோ.சார் திடீர்னு ஒரு ப்ளேட் நிறைய அல்வா கொடுக்கறாரேன்னு நினைச்சுட்டேன்.

    அப்றம்தான் தெரிஞ்சுது உங்களுக்குக் கொடுத்த அல்வாவை பகிர்ந்து கொடுக்கறீங்கன்னு.

    பேஷ். பேஷ். ஜமாய்ச்சுட்டேள் ஸ்வாமி.

    ராணிக்காக இத்தனை நாள் காத்திருந்து ஜெயிச்ச கதையும் ஜோர்.

    மேலும் மேலும் தட்டுத் தட்டா அல்வா வீட்டுக் கதவைத் தட்டட்டும்.

    ReplyDelete
  29. அன்புள்ள Mr. சுந்தர்ஜி Sir,

    வணக்கம். வாங்கோ, வாங்கோ!

    ஆமாம சார், அல்வா கொடுத்தே அனைவரையும் நம் வலைப்பக்கம் இழுக்க வேண்டியதாக உள்ளது.

    ஆமாம் சார், ஓஸியில் கிடைத்த அல்வா தான். யாரோ ஒரு ரியாவால் எனக்கு அன்புடன் கொடுக்கப் பட்டுள்ளது.

    எனக்கு இந்தக் கையில் கசகசவென ஒட்டும் பதார்த்தங்களே எப்போது பிடிக்காது [அது அல்வாவாக இருந்தாலும் சரி, பழநி பஞ்சாமிர்த பிரஸாதமாகவே இருந்தாலும் சரி, துளியும் தொடவே மாட்டேன்] அதனால் அப்படியே பகிர்ந்து அளித்து விட்டேன்.

    ராணிக்காக இத்தனை நாட்கள் நான் காத்திருந்ததாகச் சொல்வது நல்ல வேடிக்கை தான்.

    2009 செப்டம்பரில் “ராணி” பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து ’ராணி’யே தான் என்னை முதன்முதலாகத் தொலைபேசியில் அழைத்தார்கள். கதை வேண்டும் என்று கேட்டார்கள்.

    அந்தக்காலக்கட்டம் பல பத்திரிகைகளில் என் கதைகள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருந்த நேரம்.

    அந்த ‘ராணி’ யின் அழைப்பில் நான் சொக்கிப் போனதென்னவோ உண்மை தான். இருந்தாலும் கிராக்கி செய்துகொண்டு, ஈ-மெயில் விலாசம் தந்தால் PDF Document ஆக அனுப்புவதாகச் சொன்னேன்.

    ராணி தன்னுடைய இரகசிய ஈ-மெயில் ID ஐ எனக்கு ஒருவனுக்கு மட்டுமே தந்து என்னைத் தன்பக்கம் சுண்டியிழுத்தார்கள். நானும் ஒன்றல்ல இரண்டல்ல ஒரு இருபத்தி ஐந்து படைப்புகளை, ஒரே நாளில் [அதுவும் ஒரே இரவில்] திணித்து அனுப்பி வைத்து ராணியைத் திருப்திப்படுத்தினேன்.

    பிறகு என்னவோ ராணி என்னிடம் பாராமுகமாகவே இருந்து தான் வந்தார்கள், கடந்த 33 மாதங்களாக. ஒருவாரம் முன்பு திரும்பவும் ராணியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.

    அதாவது “முன்னெச்சரிக்கை முகுந்தனை நான் இப்போது பயன்படுத்திக் கொள்ளலாமா? அல்லது அவரை வேறு யாராவது பயன்படுத்திக் கொள்ள ஏற்கனவே அனுமதித்து விட்டீர்களா? என்ற ஒரு தயக்கமான கேள்வியுடன்.

    ”சரி, நீங்களே பயன் படுத்திக் கொள்ளுங்கள் ராணி” என நானும் சொல்லி விட்டேன்.

    08.07.2012 இதழில் ராணியில் இந்த என் சிறுகதை வெளியாகியுள்ள விஷயம், எனக்கு, திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குப் பஸ்ஸில் பயணம் போய்க்கொண்டிருந்த வேறு ஒரு ராணியார் [என் சொந்தக்கார அம்மணியின் மூலம்] தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.

    பிறகு நான் கடைக்குப் போய் ஓர் இதழ் காசு கொடுத்து வாங்கி வந்து என் Records க்காக File இல் சேர்த்துக்கொண்டேன்.

    பத்திரிகை ராணி மூலம் இந்த நிமிடம் வரை எந்தத்தகவலோ, Free Complimentary Copy யோ எனக்கு வந்தபாடில்லை.

    இதையெல்லாம், இப்படியெல்லாம் பலவித அனுபவப்பட்டுத் தான், பத்திரிகைகளுக்கு, படைப்புகள் அனுப்புவதையே சுத்தமாக நான் நிறுத்தி விட்டேன்.

    தங்கள் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள், சார்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள்.

    தொடரும் வெற்றிகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Ms. மாதேவி Madam.

    ReplyDelete
  32. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் ஊக்கப் படுத்தும், உங்களுக்கு “ BEST AND THE BEST ENCOURAGER “ அவார்ட் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி! உங்களால் அதே அவார்டிற்கு தேர்வான மணிராஜ் வலைபதிவாளர் திருமதி. இராஜராஜேஸ்வரிக்கு எனது வாழ்த்துக்கள்! தங்களுக்கு இந்த விருதினைத் தந்த சகோதரி ரியா காதிர் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  33. அன்புள்ளம் கொண்ட திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா, அவர்களே!

    வாங்க, வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் கூடிய தங்களின் அழகான வாழ்த்துகளை ’கொடுத்தவர்’, ’பெற்றவர்’, ’பகிர்வின் மூலம் பெற்றவர்’ என எங்கள் மூவருக்கும் மறக்காமல் அளித்துச் சிறப்பித்ததற்கும், என் மனமார்ந்த ந்ன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  34. அன்புள்ள கோபு சார், ஏழு நாட்களுக்குப் பிறகு இன்று காலை வலைப்பூவில் கண்ட செய்தி , உங்களுக்கு வந்த விருதும், உங்கள் கதை பிரசுரமான விஷயமும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. வாழ்த்துக்கள். இந்த மாதம் மூன்றாம் தேதி திருச்சியில் இருந்தேன். திருச்சி பதிவர்கள் நினைவாகவே இருந்தது. ஒரே நாள் அங்கிருந்ததனால் யாரையும் காண முடியவில்லை. ஆனால் என் நினைவெல்லாம் நீங்கள்தான். மீண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள GMB Sir, வாங்க, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      ஒரே ஒரு நாளாக இருப்பினும், தங்களின் திருச்சி விஜயம் பற்றிய தகவல் எனக்குக் கொடுத்திருக்கலாமே, ஐயா.

      அதுவும் 03.07.2012 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் அல்லவா!

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/1.html

      தாங்கள் இருக்கும் இடம் தேடி நானும் என் மனைவியும், ஸ்வீட்டுடன் வருகை தந்து, தங்களின் அன்பான ஆசிகளை நேரில் பெற்றுக்கொள்ளும் பாக்யம் பெற்றிருப்போமே!

      OK பரவாயில்லை. இந்த முறை அதற்கான பிராப்தம் இல்லை போலிருக்கு. இனி வருகை தந்தால் கட்டாயம் எனக்குத் தெரிவிக்கவும்.

      என்றும் அன்புடன் தங்கள்,
      vgk 08 07 2012

      Delete
  35. “ராணி” தமிழ் வார இதழில் பக்கம் எண் 31+32 இல் பிரசுரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    //மிக்க மகிழ்ச்சி சார்.இனிப்பு விருந்து தந்து அசத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாரட்டுதலகள்+ வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்,
      Ms. ஸாதிகா Madam. அன்புடன் vgk

      Delete
  36. MAIL MESSAGE On 8th July, 2012 FROM நுண்மதி:

    BEST AND BEST ENCOURAGER விருது தங்களுக்குப் பொருத்தமானதே.

    பிடித்த பதிவுகள் அனைத்திற்கும் பின்னூட்டமிடுவது என்பது என்னால் இன்றளவும் முடியாததாகவே இருக்கிறது.

    இன்றும் பிடித்தவர்களின் பதிவுகளை ஒவ்வொன்றாகப் படித்து அவர்களுக்கு நீளமாகவும், உற்சாகப்படுத்தும் வகையிலும் பின்னூட்டமிட்டு வருவது பெரிய விடயமே.

    திருமதி. ராஜராஜேஸ்வரி அவர்களும் தங்களைப் போலவே உற்சாகமளித்து வருபவர். சில பதிவுகளில் இவரின் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் படிப்பாரோ என எண்ணி வியந்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள கெளரி,

      தங்களின் அன்பான வருகைக்கு நன்றி. என்க்கு அளிக்கப்பட்ட விருது பொருத்தமானதே என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதனால் அதை என்னாலும் மறுக்க முடியாது தான்.

      தங்களுக்கு வீடு, தாய் தந்தையர், அலுவலக்ம், உத்யோகம், மேற்படிப்பு, முனைவர் பட்டம் அடைய வேண்டும் என்ற முனைப்பு அதற்கான கடும் உழைப்பு என பல வேலைகள் இருப்பதால், பல பதிவுகளுக்கு வருகை தந்து படித்து, ரசித்து, பின், பின்னூட்டமும் இடுவது என்பது சாத்யமில்லாதது தான் என்பதை நானும் நன்றாகவே உணர்கிறேன்.

      நான் குறிப்பிட்ட ஒரு சில பதிவுகளுக்கு மட்டுமே விரும்பிச் செல்வதால், ஏதோ அவற்றை முழுவதுமாகப் படித்துப்பார்த்து, நான் அவற்றில் ரசித்தவற்றைப் பாராட்டி, ஏதோ ஒரு சில வரிகள் பின்னூட்டங்கள் கொடுத்து, ப்திவிட்டவரை உற்சாகப்படுத்தி வருவதை வழக்க்மாகக் கொண்டுள்ளேன்.

      தங்களின் அனைத்துப்பதிவுகளிலும் கூட என் பின்னூட்டங்கள் தவறாமல் இடம் பெற்றுக்கொண்டு தான் உள்ளன என்பது தங்களுக்கே தெரியும்.

      திரும்தி இராஜராஜேஸ்வரி அவர்களும், பிரதி தினமும் தன் வலைத்தளத்தில், மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த படங்களுடனும், மிகச் சிறந்த விளக்கங்களுடன் [VERY RICH TYPE ARTICLES] குறைந்தபக்ஷம் ஒரு பதிவாவது வெளியிட்டு வருவதுடன், பிறர் பதிவுகளுக்கும் சென்று முடிந்தவரை பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தி வருபவர்களாகவே உள்ளார்கள்.

      தாங்கள் சொல்வது போல, என் பதிவுகள் பலவற்றிற்கும் அவர்கள், ஒன்றிற்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் அளித்து வருவது எனக்கும் மிகுந்த உற்சாகம் தருவதாகவே உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.

      ஆனால் அவர்கள் நீங்கள் சொல்வது போல, என் பதிவுகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் படிப்பவராக இருப்பார்கள் என்று நிச்சயம் என்னால் சொல்லமுடியாது.

      நாம் எல்லோரும் பொதுவாக எழுத்து எழுத்தாக, வார்த்தை வார்த்தையாக, வரிவரியாக, பத்தி பத்தியாக வாசிப்பவர்களே.

      ஆனால் அவர்கள் சுவாமி விவேகாநந்தர் போல பக்கம் பக்கமாக, வேகவேகமாகப் படிக்கும் திறமையும் மற்றும் ப்டித்ததை கற்பூரம் போல உடனடியாக மனதில் கிரஹித்துக் கொள்ளும் தனித்திறமையும் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதே, நான் இதுவரை கண்டுபிடித்ததோர் உண்மை.

      Delete
  37. MAIL MESSAGE On 8th July, 2012 FROM நுண்மதி:

    மறந்து போய், காலைலயா இல்ல ராத்திரியானு தெரியாம ரயில்வே ஸ்டேஷனுக்கு போனாரே, அவரு தானே இவரு?.

    தங்களின் திறமைக்கு, ராணி புத்தகமெல்லாம் சிறுசுதான்.

    நீங்களே சொந்தமாக உங்களின் படைப்புகளை வெளியிடுவதாயிருந்தால் இன்னும் மகிழ்வேன்.

    ReplyDelete
    Replies
    1. அதே கதைதான் ராணி. நன்றாக்வே ஞாபகம் வைத்துக் கொண்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      நீங்கள் அந்த நகைச்சுவை சிறுகதைக்கு தனியாக ஒரு அழகான நீண்ட பின்னூட்டமும் கொடுத்துள்ளீர்கள்; அது இதோ இங்கே:

      oooooooo
      nunmadhiJanuary 2, 2012 10:56 AM
      \\பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட//

      இதைப் பார்த்ததும் ரஜினி சார் ஒரு படத்துல வேஷ்டியை மறந்துட்டு போவாரே அந்த ஞாபகம் வந்துடுச்சு சார். சிரிப்பை அடக்க ரொம்ப நேரமாச்சு.

      \\வாஜ்பாய் ஸ்டைலில் \\

      வாஜ்பாய் கண்முன் நடப்பதாக நினைத்துக் கொண்டே படித்ததில் சிரித்துவிட்டேன். :-D

      \\சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால்\\

      நான் கூட சிறு பிள்ளையாக இருக்கும்போது இந்த மாதிரியான அனுபவம் உண்டு சார். என்ன செய்வது வயதாகும் போது, பெரியவர்களும் குழந்தையாகி விடுகிறார்கள்.

      \\கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா\\

      மழைக் கால நிலாவை கண்முன் காட்டிய வரிகள்.

      இந்தக் கதையையும் வெகுவாக ரசித்துப் படித்தேன் சார்.

      - நுண்மதி
      ooooooooooo

      ராணி பத்திரிகைக்கு நான் எப்போதோ செப்டம்பர் 2009 இல் [அதுவும் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதால்] அனுப்பிவைக்கப்பட்ட இந்தக்கதை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியிடப்படுகிறது என்பதே எனக்கு மிகவும் ஆச்சர்யம் தான். நான் இந்தக்கதையை அவர்களுக்கு அனுப்பி வைத்ததையே சுத்தமாக மறந்தும் போய் விட்டேன்.

      அது பற்றிய சுவையான நிகழ்வுகளை மேலே திரு சுந்தர்ஜி அவர்களுக்கு நான் அளித்துள்ள பதிலிலும் எழுதியுள்ளேன், பாருங்கோ.

      என் படைப்புகளை நான் சொந்தமாக சிறுகதைத் தொகுப்புகளாக 3 முறை இதுவரை வெளியிட்டுள்ளேன்.

      அதுபற்றிய இணைப்பு இதோ:
      http://gopu1949.blogspot.in/2011/07/4.html

      அதற்கு தாங்கள் கூட வருகை தந்து பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள்,

      அவற்றில் பலவற்றை இதுவரை என் வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளேன். இன்னும் ஒரு 6 அல்லது 7 கதைகள் தான் வலையினில் பதிய வேண்டியுள்ளது.

      Delete
  38. MAIL MESSAGE On 8th July, 2012 FROM நுண்மதி:



    கணிதப்புலி பட்டம் என்பது பெரிய விடயம்தான், எனக்கு கணக்கு பிணக்கு. அதனால அது பக்கமே போறதில்லை. உங்களைப் போல கணிதப்புலிகளைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாகவும், சில சமயங்களில் பொறாமையாகவும் இருக்கும்.

    முல்லாவின் கதையும் வழக்கம் போலவே ரசிக்கும்படிக்கு இருந்தது. ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கணிதத்தில் நான் புலி என்றெல்லாம் சொல்ல முடியாது.

      சிறுவயதிலிருந்தே ஏதோ எனக்கு கணிதப்பாடத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு.

      அதில் தான் அந்தக்காலத்தில் [SSLC XI STD 1966] நம்மால் முழுமதிப்பெண்களான 100 க்கு 100 மிகச்சுலபமாக லட்டு போல வாங்கமுடியும்.

      மற்ற பாடங்களில் என்ன தான் நாம் மிகச்சிறப்பாக மிகச்சரியான விடைகளே எழுதினாலும் இந்தக்காலம் போல முழுமதிப்பெண் தரவே மாட்டார்கள்.

      75-80% தான் அதிகபக்ஷம் தருவார்கள். இதைப் பற்றிகூட, என் “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற சமீபத்திய தொடர்பதிவினில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

      எனக்கு கொஞ்சநாட்களாக பின்னூட்டங்கள் மூலம் பழக்கமாகியுள்ள LEELA அவர்களும் என்னைப்போலவே, கணிதப்பாடத்தில் ஆர்வமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.

      மெயில் மூலம் ஒருவருக்கொருவர், தந்திரக்கணக்குகளை பரிமாறிக்கொண்டு இன்புற்று வருகிறோம். அவர்களுக்கு சுத்தமாகத் தமிழ் எழுதப் படிக்க பேசத்தெரியாது. அது ஒன்று தான் சற்றே சிக்கலாக உள்ளது. எல்லாத் தந்திரக் கணக்குகளையும், அவர்களுக்காக நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பி வைக்க வேண்டியதாக உள்ளது.

      But this LEELA is very eager to learn these things from me & she is very intelligent also.

      முல்லாக் கதையையும் தாங்கள் படித்து ரசித்தது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, ராணி.

      Delete
  39. MAIL MESSAGE On 8th July, 2012 FROM நுண்மதி:

    அஞ்சாவதா நான் ஆசைப்பட்டத சொல்லாம ஏமாத்திட்டீங்களே!

    இன்றைய இனியவை நான்குனு படிச்சதும், நான் மறுபடியும் எழுதப்போறேன்னு சொல்லுவீங்கன்னு எதிர்பாத்தேன். பரவாயில்லை. சீக்கிரமே மறுபடியும் எழுத ஆரம்பிங்க சார்.

    பின்னூட்டம் மிக நீ..................ளமாக இருப்பதால், பின்னூட்டமாக இடாமல் மெயில் மூலம் அனுப்பியிருக்கிறேன். எப்படியோ என கருத்து உங்களைச் சேர வேண்டும் சார்.

    ReplyDelete
    Replies
    1. அஞ்சாவதாக தாங்கள் ஆசைப்பட்டதையே தான் என்மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள, என் நலம் விரும்பிகள் பலரும் விரும்புகிறார்கள்.

      அவர்களில் சிலர் பின்னூட்டங்கள் வாயிலாகவும், ஒருசிலர் நேரில் என்னை சந்தித்தும், பலர் மின்னஞ்சல், சுட்டிகள், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும்,தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

      உங்கள் அனைவரின் அன்பான வேண்டுகோள்களையும் நிச்சயம் என் பரிசீலனையில் வைத்துக்கொண்டுள்ளேன்.

      சூழ்நிலை சற்று சாதகமாக அமையும் போது, சீக்கிரமே மறுபடியும் நான் வலைப்பதிவினில் எழுத முயற்சிக்கிறேன். அதுவரை கொஞ்சம் பொருத்துக் கொள்ளுங்கள்.

      தாங்கள் மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பியுள்ள மிக நீ..............ளமான பின்னூட்டத்தை நான் நான்கு துண்டங்களாக ஆக்கி இங்கு என் COMMENT BOX க்குக் கொண்டு வ்ந்து விட்டேன். எல்லாவற்றிற்கும் பதிலும் கொடுத்து விட்டேன்.

      எப்போதாவது தாங்கள் வருகை தந்தாலும், என் படைப்புகள் மீது தாங்கள் எவ்வளவுக்கு ஆர்வம் உடையவ்ர்கள் என் எனக்கு மிக நன்றாகவே தெரியும்.

      ஒரு நாள் இரவு முழுவதும் சுத்தமாகத் தூங்காமல் என் படைப்புகளை வரிசையாக வாசித்து, உடனுக்குடன் பின்னூட்டம் அளித்து மகிழ்வித்தீர்கள்.

      அன்று ஒரே இரவில் மட்டும் நீங்கள் சுமார் 60 பதிவுகளுக்கு மேல் தொடர்ச்சியாக வாசித்ததையும், உடனுக்குடன் பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டே இருந்ததையும் என்னால் எப்படி மறக்க முடியும்?

      நம் இருவருக்குமே பொட்டுத் தூக்கம் இல்லாமல் பொழுதே விடிந்து போனதே... அன்று.

      அவை மிகவும் இனிய பசுமையான நினைவலைகள் அல்லவா ;)))))

      நுண்மதி.... உங்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகளும், ஆசிகளும், வாழ்த்துகளும் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். Bye for now.

      WELCOME!

      WITH KIND REGARDS & BEST WISHES TO YOU!


      பிரியமுள்ள
      vgk

      Delete
  40. திருச்சி வை.கோ. சார்.
    ராணியில் வந்த கதைக்கு, கணக்குப் புலியாக உறுமியதற்கு வாழ்த்துகள் சார். ஒரு கேள்வி,

    மூன்று வருடங்களுக்கு முன்பு அனுப்பிய கதை இப்போது பிரசுரமா? ஆச்சரியமா இருக்கு சார்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது Ms. ஆதிரா Madam. தங்களின் அழகான வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      மூன்றாண்டுகளுக்கு முன்பு அனுப்பிவைத்த கதை இப்போது பிரசுரம் ஆனதில் எனக்கும் ஆச்சர்யமாகவே தான் உள்ளது.

      IN FACT நான் இதை அவர்களுக்கு அனுப்பி வைத்த விஷயத்தையே சுத்தமாக மறந்து விட்டேன் என்பதே உண்மை.

      தமிழ் பத்திரிகைகளுக்கு நம் படைப்புகளை அனுப்ப மிகவும் பொறுமை வேண்டும். நம் பொறுமையை மிகவும் சோதிப்பார்கள். பொறுமை இழந்து போனதால் தான் நான் 1.1.2011 முதல் எந்த ஒரு படைப்பையும், எந்த ஒரு பத்திரிக்கைக்கும் அனுப்புவதே இல்லை. என் வலைத்தளத்தில் வெளியிடுவதோடு சரி.

      இந்தக்கதை எப்படி அவர்களுக்கு அனுப்பப்பட்டது என்ற கதையை மேலே திரு. சுந்தர்ஜி சாருக்கு நான் எழுதிய பதிலில் தெரிவித்துள்ளேன், பாருங்கோ!

      அன்பானதோர் உறுமலுடன்,
      vgk

      Delete
  41. சார் உங்களுக்கு வை.கோ. என்பதைவிட வேறு பெயர் எதாவது கொடுக்கலாமா என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் என்னை அன்புடன் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளும் உரிமை, தங்களுக்கு இதன் மூலம் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியா ? ;)))))

      Delete
  42. ”விருதுகளை விழுங்கும் வேங்கை”
    இது பொருத்தமா இருக்குமா சார். இது ஆதிராவின் விருது தங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. அடடா! மேலும் ஒரு விருதா?

      பொருத்தமா இருக்குமா இல்லையா
      என்பது அடியேன் அறியேன்.

      ஆதிரா அவர்களால்
      ஆசையாக
      ஆச்சர்யமாக
      ஆனாலும் அன்புடன் கொடுக்கப்பட்ட விருதுக்கு ந்ன்றிகள்.vgk

      Delete
  43. Replies
    1. என்னைப் பொருத்தவரை, இந்தக் குறிப்பிட்ட விருதுக்கு மிகவும் பொருத்தமான ஒரே நபராக தாங்கள் இருப்பதால்,
      இந்த் விருதினைத் தங்களுக்கு அளித்ததால், அந்த விருதுக்கே ஒரு பெருமையும், எனக்கு மிக்ப்பெரிய மகிழ்ச்சியுடன் கூடிய மனநிறைவும் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.

      விருதினை ஏற்றுக்கொண்டு கெள்ரவித்ததற்கு என் மனமார்ந்த் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      என்றும் பிரிய்முள்ள,
      vgk

      Delete
  44. இராஜராஜேஸ்வரி has left a new comment on your post "இன்றைய இனியவை நான்கு":

    மிகச்சாதாரண குடும்பத்தலைவியாக

    "அடுப்படியே திருப்பதி;
    குடும்பமே குலதெய்வம்"

    என இருந்த எனக்கு, என் குழந்தைகள் சிறகு முளைத்து பறந்து கொண்டிருப்பதால் பதிவுலகம் அறிமுகமானது..

    இத்தனை எழுத்துலக ஜாம்பவான்கள் வந்து வாழ்த்தியது
    ’வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்’ பெற்றது போல் சந்தோஷமளிக்கிறது..

    அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    - இராஜராஜேஸ்வரி

    ReplyDelete
    Replies
    1. //அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
      - இராஜராஜேஸ்வரி//


      அனைவர் சார்பாகவும் குறிப்பாக

      திருவாளர்கள்:
      =============
      ரிஷபன் Sir
      சுந்தர்ஜி Sir
      தி.தமிழ் இளங்கோ Sir

      திருமதிகள்:
      ===========
      அதிசயா Madam
      ஏஞ்சலின் [நிர்மலா] Madam
      கோமதி அரசு Madam
      விஜி பார்த்திபன் Madam

      மேலும்

      செல்வி நுண்மதி [கெளரி லக்ஷ்மி]

      சார்பாகவும் தங்களின் மனம் நிறைந்த இனிய நன்றிகளுக்கு நான் என் நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்.

      நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி.
      vgk

      Delete
  45. நான் மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்....
    உங்களுடைய புதிய படைப்புக்கு காத்திருக்கும் உங்கள் உறவு....

    ReplyDelete
  46. வாங்க! Ms. VIJIPARTHIBAN Madam,

    மீண்டும் தாங்கள் அன்புடன் வருகை தந்து மகிழ்ச்சியுடன் வாழ்த்தியுள்ளது எனக்கும் மிகுந்த சந்தோஷமாகவே உள்ளது. ;)

    மேலே, என் எழுத்துக்களின் தீவிர ரஸிகையும் அருமை மகளுமான செல்வி. நுண்மதிக்குச் சொல்லியுள்ளதையே உங்களுக்கும் சொல்லுகிறேன், உறவே!

    சூழ்நிலை சற்று சாதகமாக அமையும் போது, சீக்கிரமே மறுபடியும் நான் வலைப்பதிவினில் எழுத முயற்சிக்கிறேன்.

    அதுவரை கொஞ்சம் பொருத்துக் கொள்ளுங்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  47. ஐயா ராணியில் வெளியான கதைக்கு எனது பாராட்டுக்கள்... தொடர்ந்து ராணி வாசிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா?
    ஒரு உதவிக்காகக் கேட்கிறேன்....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

    ReplyDelete
  48. அன்புச் சகோதரர் திரு.ம.தி.சுதா அவர்களின் அன்பான வருகையும், அழகான பாராட்டுக்களும் என்னை மகிழ்விக்கின்றன.

    தொடர்ந்து “ராணி” வாசிக்கும் வழக்கம் எனக்கு இல்லை.

    நான் குறிப்பிட்ட ஒருசில வார/மாத இதழ்களுக்கு மட்டும் சந்தா செலுத்தி வாங்கி தொடர்ந்து படித்து வருகிறேன். அதில் ”ராணி” இதுவரை இடம் பெறவில்லை.

    இந்த 08.07.2012 தேதியிட்ட “ராணி” இதழ் மட்டுமே என்னிடம் உள்ளது. அதுவும் நானாக 02/07/12 அன்று கடையில் வாங்கியது ஒன்றும், நேற்று 10/07/12 அன்று “ராணி” அலுவலகம் மூலம் எனக்குத் தபாலில் அனுப்பி வைத்த இலவசப்பிரதி ஒன்றுமாக ஆகமொத்தம் இரண்டு பிரதிகள் என் கைவசம் இப்போது உள்ளன.

    தங்களுக்கு பழைய ”ராணி” இதழ்கள் ஏதாவது தேவை என்றாலோ, வேறு ஏதாவது உதவிகள் தேவையென்றாலோ தொடர்புகொள்ள “ராணி” வார இதழின் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன்:

    திரு. ர. பாஸ்கரன் அவர்கள், ஆசிரியர், “ராணி” வார இதழ், ராணி அச்சகம், 86 பெரியார் நெடுஞ்சாலை, சென்னை 600 007
    தொலைபேசி எண்: 044 - 25324771

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  49. மிக்க நன்றி ஐயா, ஒருவருடைய ஆக்கங்கள் சேகரிப்புக்காகத் தான் கேட்டேன்... அவர்களுடன் நேரே தொடர்பு கொள்கிறேன்....

    மிக்க மிக்க நன்றிகள்..

    ReplyDelete
  50. ஆஹா.. ரொம்ப லேட்டா வந்திருக்கேன் நான். ஆனா இங்க தித்திப்பு செய்திகளைப் பார்த்ததுல மகிழ்ந்து போச்சு மனசு. எல்லாரையும் என்கரேஜ் பண்றதுல உங்களுக்கு இணையா வேற யாருங்க.... அவார்டுகள் அத்தனையும் உங்களுக்கு மிகப் பொருத்தமுங்க. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நீங்க வழங்கினதுல எனக்கு மிகமிக சந்தோஷமுங்க. உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நான் படிச்சு மிகமிக ரசித்த நகைச்சுவைக் கதையான முன்னெச்சரிக்கை முகுந்தன் அச்சில வந்ததுல சந்தோஷம். இப்பவாவது ராணிக்கு இந்த மாதிரி நலல கதையை அடையாளம் தெரிஞ்சுதே... மீண்டும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, வணக்கம், வாங்க!

      உங்களை இந்தப்படத்தில் நான் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது தெரியுமா? நடுவில் கண்ணாடி அணிந்து, வேறு விதமாக படத்தில் தோற்றம் அளித்தீர்கள். நான் சற்றே குழம்பிப்போனேன், அவரா இவர் என்று!

      இப்போது என் குழப்பம் தீர்ந்ததே என்று பார்த்தால், ”கணேஷ்” என்ற தங்களின் பெயரை ”பால கணேஷ்” என மாற்றி மீண்டும் குழப்பி விட்டீர்களே! பரவாயில்லை. இதுவும் நன்றாகவே உள்ளது, குட்டியூண்டு குழந்தைப் பிள்ளையார் போலவே! ;)))))

      தங்களின் அன்பான வருகையும், அழகான் கருத்துக்களும், எங்கள் இருவருக்கும் தாங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள் கூறியுள்ள பாங்கும், எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக உள்ளது, Mr. Bala Ganesh Sir.

      நான் என் வலைப்பதிவில் வெளியிட்ட போதே தாங்கள் “முன்னெச்ச்சரிக்கை முகுந்தன்” கதையைப் பாராட்டிக் கருத்துக்கூறியிருந்தீர்கள். இதோ அது தங்கள் பார்வைக்காக:

      //கணேஷ்December 26, 2011 3:45 PM
      அடடா... நன்றாக அசந்து தூங்கிவிட்டால் இப்படி காலை, மாலை குழப்பம்கூட வருமா? நல்ல கதை சார்! பிரமாதம்! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

      கதை இப்போது ராணி வார இதழில் அச்சிடப்பட்டு பிரசுரம் ஆனதற்கும் தங்கள் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைக் கூறியுள்ளீர்கள். [உங்களுக்குத்தான் எல்லோரையும் விட இந்த பத்திரிகை உலகத்தைப் பற்றி மிக நன்றாகத் தெரியுமே Sir .. என்ன செய்வது. இருப்பினும் ’கடுகு’ அளவாவது மகிழ்ச்சி அடைய வேண்டியதாகத் தான் உள்ளது]

      தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் .... Sir.

      அன்புள்ள vgk

      Delete
  51. There is so much to see and read in your blog...I hardly know tamil,can talk but can not read.Any way I really enjoyed going through it ..I wish I could read...Thank you for going through my blog and encouraging me by giving your comments in each work.

    ReplyDelete
  52. WELCOME TO YOU Ms. LATHA Madam. ;)

    Thank you very much for your very first and kind entry to my blog today.

    You may just go through my replies in English to the comments of our Leela [who has come twice to this post] from which you may know something about this Sweet Post.

    I am enjoying all your posts and leaving some comments then & there.

    You have very good talent in stitching work & making new things in an attractive manner. I like them very much.

    My Best Wishes to you to shine further in your special talents as well as in your Blog post releases.

    With very kind regards,
    vgk

    ReplyDelete
  53. Hello VGK Sir ,

    VVVVAAAAALLTHTHUKKAL For your Awards !!!!!

    You give us a Grand treat through your blog Sir:)))

    Very nice to see:)))

    Keep on Sir ..

    www.southindiafoodrecipes.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. WELCOME TO Mrs. R.PUNITHA Madam.

      Thanks for your very kind entry & valuable Comments.

      Thanks a Lot, Madam.

      vgk

      Delete
  54. சந்தோஷம் அண்ணா. என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  55. இமா, “நினைத்தேன் வந்தாய் நூறு வயது”

    தங்களின் அன்பான வருகைக்கும், சந்தோஷமான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, இமா.

    இப்போ தான் தாங்கள் அன்புடன் தங்கள் மகனுக்காகச் செய்த கிரிக்கெட் Bat + Ball Type Cake பார்த்து அசந்து போனேன்.

    பின்னூட்டம் இட நினைத்தேன். முடியவில்லை. ஏதோதோ
    User name Password எனக்கேட்டு என்னைப் பாடாய்ப்படுத்தி விட்டது. அதனால் அப்படியே விட்டு விட்டேன்.

    உண்மையிலேயே அது உலகமஹா சாதனை தான் இமா.
    எவ்வளவு பொறுமையும் திறமையும் வேண்டும் அதற்கு.

    உங்களைக் கேக்க ஆள் இல்லாததால் கேக்கை அவ்வாறு செய்து அசத்தி விட்டீர்கள். அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள், இமா.

    பிரியமுள்ள
    vgk
    அண்ணா

    ReplyDelete
  56. ;)))))))))) யாருக்கும் தெரியாமல் படித்துவிட்டு ஓடப் பார்த்தேன். ;))

    அதற்கான கருத்துக்கள் தற்போதைக்கு மட்டுமாவது அறுசுவைக்குச் சொந்தம். அதனால் கருத்துப் பெட்டி மூடப்பட்டுள்ளது. பாராட்டுக்கு நன்றி அண்ணா.

    சிலேடையை ரசித்தேன். ;)

    ReplyDelete
  57. என் இனிய இமா .. மீண்டும் வருகை தந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

    அண்ணன் வீட்டுக்கு வருவதில் தங்கச்சிக்கு என்ன தயக்கம்?

    ஏன் யாருக்கும் தெரியாமல் படித்துவிட்டு ஓடப்பார்த்தீர்கள், இமா? ;)))))

    ”என் இனிய இயந்திரா” [என்ற சுஜாதா கதை போல]

    ”என் இனிய இமா” வருகை தந்தால் தானே பதிவுக்கு ஓர் நிறைவு

    ஏற்படும்! ;)))))

    ரொம்பவும் சந்தோஷம் இமா.

    பிரியமுள்ள
    vgk
    அண்ணா

    ReplyDelete
    Replies
    1. //சிலேடையை ரசித்தேன். ;)//

      OK Teacher. Thank you very much!

      டீச்சருக்கு எப்படியும் புரிந்துகொள்ள முடியும் என்ற முழு நம்பிக்கையில் தான் அதை சிலேடையாக எழுதினேன்.

      நம்பிக்கை எப்போதும் வீண் போவதில்லை. ;))))) vgk

      Delete
  58. மிகவும் இனிப்பான செய்திகளை இனிப்புகளோடு பகிர்ந்திருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார். மற்றுமொரு இனிய விருதுப்பகிர்வுக்கும், முன்னெச்சரிக்கை முகுந்தன் கதை ராணி இதழில் வெளிவந்ததற்கும் சிறப்பு பாராட்டுகள்.

    ReplyDelete
  59. அன்புள்ள திருமதி கீதமஞ்சரி மேடம்,

    வாங்க, வணக்கம்.

    தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் சந்தோஷம் அளிப்பதாக உள்ளன. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும், மிக்க நன்றி மேடம்.

    அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. Vanakkam Gopu sir. Neega chonna mathiri nan leelavuda commentum adukku replayum padichu parthathu. Enakku romba kushi vanthathu.Ungaludaya awards (inippana) parthu romba santhoshavum vanthathu. How is my tamil?.Long back I was in Vellore for sometime. It is sad that there is no option to translate tamil to english..Once again thank you for following my blog and giving all the encouragement.

      Delete
    2. Vanakkam Ms. Latha Madam. Naan sonna maathiriye Leelaa enakku ezhuthina 2 comments + Leelaavukku naan ezhuthina 2 replies patiththup purinthu kondathil enakkum snthoshame makizhchchiye. Neenga Vellore il irunthathaal ungalukku nallaave Tamil varuthu. Congratulations.

      Here is a Link I am giving for you, Madam.

      http://translate.google.com/?sl=ta&tl=en&js=n&prev=_t&hl=en&ie=UTF-8&layout=2&eotf=1&text=&file=#ta|en|

      By using it you can very well get the Translation from Tamil to English within a minute.

      Just you have to copy & paste the Tamil matter in left hand side space available & then press enter.

      You will immediately get the English Translation within a minute, in the right hand side space.

      90-95% accuracy will be there. some 5-10% you may not understand that too sometimes.

      With Best Wishes
      vgk

      Delete
    3. Thank you sir for giving the link to translate.But I cant copy/paste it ..Will ask someone to help . Even typing the link didnt work but I still go through your blog and enjoy it.

      Delete
    4. It is so easy Madam. From my blog, you can easily select, copy & paste anything you want.

      However, if you are very particular to read something, you may very well ask me & I will arrange for its translation in my systems and send it to you by e-mail.

      My e-mail ID is : valambal@gmail.com

      I am sending like this only to that Leela, who is much interested in some Interesting Mathematics Problems - Magic Problems which I have already published in Tamil in the following Links:

      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post.html சிந்தனைக்கு சில துளிகள் - 1

      http://gopu1949.blogspot.in/2011/07/2_23.html
      சிந்தனைக்கு சில துளிகள் - 2

      http://gopu1949.blogspot.in/2011/07/3_30.html
      சிந்தனைக்கு சில துளிகள் - 3

      http://gopu1949.blogspot.in/2011/08/4.html
      சிந்தனைக்கு சில துளிகள் - 4

      There are lot of short comedy stories of 1 or 2 pages
      in my blog [Released during 2011].

      If you are interested & if you don't mind, you may send your e-mail ID to me so that I may send them one by one, duly translated in English.

      With Best Wihes,
      vgk

      Delete
    5. Message from Mrs. Latha ....

      Thank you so much sir. Well, I am not at all good in mathamatics...I used to get just pass mark at school for this subject :) but I am intrested in stories and at your spare time you can send it to me.

      I really appreciate the sharing.

      Delete
    6. I appreciate you very much for your keen interest shown on my short stories.

      Thanks for kind reply. I have noted your e-mail ID, separately in my records.

      I will do the needful whenever I find time.

      With kind regards & Best Wishes,
      Gopu

      Delete
    7. Thank you for mailing me the short stories...They really are very short. As you said the English translated version is not that much enjoyable, still I got the humour in the content.
      Thanks again for forwarding the stories.

      Delete
    8. Thanks a Lot for your kind re-entry and valuable message. Yes ..... you may not be able to enjoy the actual humour that was written by me in Tamil, in a translated version in English. What to do?

      I have just made a trial of translating some 1 or 2 short stories & sent them to you, as requested.

      But I was also not fully satisfied while sending them by mail. OK Madam. Let us stop it further.

      But you may try to learn reading Tamil easily, as you are already able to speak/Listen/understand the Language of Tamil.

      All the Best.....
      vgk

      Delete
    9. Thank you sir.. yes, I need to learn to read Tamil and will try.I still go through your blog to read all the comments written in English.Problem is the pictures of all the sweet awards you got makes me hungry :)
      Thanks for the encouragement through commenting in my blog.

      Delete
    10. Comments of Ms. Latha Madam,

      // still go through your blog to read all the comments written in English.//

      Very Happy to hear this.

      //Problem is the pictures of all the sweet awards you got makes me hungry :) //

      aahaaaa! ..... very sweet words. ;)))))

      Thanks a Lot Madam. All the Best.

      With kind regards,
      GOPU [VGK]

      Delete
    11. You are not blogging for the past two, three days. Hope everything is OK with you. Really missing your comment. BTW I think you have noticed my 1st award given to me by Leela. All this is of your encouragement. Thank you Sir.

      Delete
    12. Ref:
      http://latha-mycreations.blogspot.in/2012/07/my-1st-award.html

      Thank you very much for your kind reminder. Just now I have visited your above post & left my comments as mentioned below:

      =============

      MY HEARTIEST CONGRATULATIONS TO YOU, FOR YOUR FIRST & BEST AWARD.

      I AM SO HAPPY TO KNOW THAT YOU HAVE RECEIVED THIS AWARD/HONOR FROM OUR GREAT HOLY LEELA.

      I AM VERY PROUD OF YOU.

      WE ARE REALLY LUCKY ENOUGH TO HAVE SUCH A NICE & HIGH QUALITY LADY [LEELA] AS OUR FRIEND & WELL WISHER, IN THIS BLOGGING WORLD.

      IT IS REALLY OUR BOON FROM LORD GURUVAYURAPPAN'S GRACE.

      ALL THE BEST TO GET MORE & MORE AWARDS, IN FUTURE.

      [I feel very sorry for my late entry here.

      Actually I have missed to see this very particular post.

      Thanks for your timely Reminder through the comment box of my latest post.

      Now-a-days, I have no time to go through my Dash Board which shows me hundreds of new releases daily, as I am a follower to so many people.

      It is better if you send me a separate mail with the Link of your new post so that I can easily come & offer my comments then & there.

      My mail ID : valambal@gmail.com ]

      Affectionately yours,

      - VGK [GOPU]
      gopu1949.blogspot.com

      Delete
    13. Thank you sir for replying and commenting my posts and especialy for my 1st award.
      I always wonder how you find time to comment all your followers !!!!! Your profile page is almost full and it is amazing the way you interact with them...You really are GREAT !!!!!

      Delete
    14. Ms.LATHA Madam,

      Now-a-days, I am not able to go through all the posts appearing in my Dash board.

      I have reduced all my activities, due to some personal problems.

      I am visiting only to very few blogs, that too to my favourite friends/writers from whom I regularly get the Link of the post through e-mail.

      Totally some 10-15 persons are only in my very close first circle now, even though I am a follower to so many blogs. What to do? There is no time at all to visit all the blogs.

      Moreover, without reading/enjoying the full article, I would not like to make any comments, just like that "Good/Finr/Nice" etc., etc.,

      OK Madam. If you want any comment from me, kindly send me a mail with proper link. Bye for now.

      vgk

      Delete
  60. விருது மழை! வாழ்த்துகள்.

    முல்லா கதை ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் வாசிப்பதில் சுகமும் சுவாரஸ்யமும். நாவில் நீரூற வைக்கும் படங்களைப் போட்டிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  61. வாங்கோ ஸ்ரீராம், வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்,

      முல்லாக்கதைகள் பலவற்றை நானும் படித்துள்ளேன். இந்த ஒரு கதை மட்டும் சமீபத்தில் தான் படித்தேன்.

      இது என்னையே மிகவும் குழப்பி விட்டது.

      மீண்டும் மீண்டும் படித்து ரஸித்தேன்.

      பிறகு தான் என் குழப்பம் தீர்ந்தது.

      அதனால் இதையும், [மூன்றாக இருக்க வேண்டாம் என்று நினைத்து] நான்காவதாகப் பகிர்ந்து கொண்டேன். ஆனால் இந்த முல்லா சொன்னதையும் அதில் உள்ள அர்த்தத்தையும், நகைச்சுவையையும் எவ்வளவு பேர்கள் பொறுமையாகப் படித்து புரிந்து கொண்டு ரஸித்திருப்பார்களோ தெரியவில்லை.

      தாங்கள் ரஸித்ததில் எனக்கு மகிழ்ச்சியே. vgk

      Delete
  62. Congrats on all your awards and first time visiting your space...
    Sir you have a lovely space and I am glad to be your follower and to know about many things....
    http://eezy-kitchen.blogspot.com/

    ReplyDelete
  63. WELCOME TO YOU .... Ms. Kavitha Madam!

    Thank you very much for your kind + first entry to my blog.

    Thanks a Lot for becoming a new follower to my blog.

    Just now I have also visited your blog & left some comments.

    I have also joined as a [54th] follower to your blog.

    All the Best to you.

    With kind regards,
    vgk

    ReplyDelete
  64. Hi Sir.. i am preeti from chennai.. your new follower.. its good to see tamil blogs in this growing blogging world.. be in touch.. do stop by mine sometime..

    http://jopreet.blogspot.com/

    ReplyDelete
  65. WELCOME TO Ms. PREETI Madam !

    Thanks a Lot for your kind introduction about you. I like it very much.

    I am very glad to note that you have become a new follower to my blog. I am so Happy! ;)

    As invited, I too visited your blog just now and joined myself there as your [121st] follower. I left some comments also for your latest post.

    All the Best ....
    vgk

    ReplyDelete
  66. அன்புள்ள வை.கோ சார்,
    இதுவரை வாங்கிய விருதுகளுக்கும், இனி வாங்கப் போகும் விருதுகளுக்கும் வாழ்த்துக்கள். முல்லா கதையும், 'முன் எச்சரிக்கை முகுந்தனும்' சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தனர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ, திருமதி ரஞ்சனிநாராயணன் மேடம்,

      வணக்கம்.

      பத்திரிகையுலகினில் பிரபலமான பத்திரிகைகளான ‘மங்கையர் மலர்” ”அவள் விகடன்” போன்ற பத்திரிகைகளில் மிகச்சிறப்பாக எழுதிவரும் எழுத்தாளரான தங்களின் அறிமுகம் எனக்குக் கிடைக்கப்பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

      http://ranjaninarayanan.wordpress.com/ என்ற வலைத்தளத்திலும் தாங்கள் எழுதி வருவது அறிய மேலும் சந்தோஷமாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      சமீப காலமாக என் பழைய சிறுகதைகளில் சிலவற்றைப் படித்துவிட்டு அவ்வப்போது கருத்துக்கள் அளிப்பது, எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது. நன்றி.

      என்றும் அன்புடன்
      vgk

      Delete
  67. விருது பெற்றமைக்கும் ராணி இதழில் த்ங்கள் சிறுகதை வெளியானதற்கும் மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  68. வாங்கோ திருமதி மனோ சாமிநாதன் மேடம்.

    வணக்கம். தங்களின் அன்பான வருகையும், மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துகளும், என் மனதுக்கு மேலும் உற்சாகம் தருவதாக உள்ளன.

    தங்களுக்கு என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  69. வாழ்த்துக்கள் அய்யா:)

    ReplyDelete
    Replies
    1. mazhai.net July 17, 2012 6:05 AM
      வாழ்த்துக்கள் அய்யா:)

      தங்கள் அன்பான வருகைக்கும்,
      வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      அன்புடன் vgk

      Delete
  70. How do i missed ur blog ?? Fantastic sir... Keep Rocking !!!
    Happy to follow you with ur permission... :)

    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  71. WELCOME TO YOU Ms. Sangeetha Nambi Madam.

    I am very happy to note that this is the very first time you are coming to my blog and joined as a follower to my blog.

    Most Welcome to you.

    Just now I have also visited your blog, joined as your follower, left some comments also for your latest post.

    All the Best.... bye for now.
    vgk

    ReplyDelete
    Replies
    1. Sir,
      Thanks for dropping in my space.. Didn't expect such a rapid reply from ur end. I am honored. Also changed the setting as per ur suggestion. Thank you once again... :)

      Delete
    2. Thanks for your kind re-entry and nice messages Madam.

      Thanks for removing the bottle-neck of
      "word verification" from your blog.

      Hereafter, it will be very easy for all
      to make comments to your post.

      Thank you once again.
      vgk

      Delete
  72. மிக மிக தாமதமான வருகை தான் என்னுடையது எனினும் இங்குள்ள
    இனிப்பு வகைகளையும் இனிப்பான செய்திகளையும் பார்த்த பிறகு
    முன்னமெ வந்திருக்கலாமோனு தோணுது.


    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ Ms. Sasi Kala Madam,

      தங்களின் வருகை தாமதமாக இருப்பதனால் தான், அது என் கவனத்தை அதிகம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

      அமைதியாகவும் பொறுமையாகவும் படித்து சந்தோஷப்பட முடிகிறது.

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன் vgk

      Delete
  73. அறுவை சிகிச்சை செய்து, ஓய்வில் இருப்பதால், இன்று பல நண்பர்களின் தளத்து பதிவுகளைப் படிக்க முடிந்தது. எழுத சிரமமாக இருந்த போதிலும், ஐயா அவர்களின் தளத்திலாவது பின்னூட்டம் இட வேண்டுமென்று ....

    ஐயாவை வாழ்த்த வயதும், அனுபவ்மும் இல்லை!
    தொடர்ந்து சேவை செய்து, எங்களைப் போன்றோருக்கு, வழிகாட்டியாக இருக்கும் ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுளும் நற்பேறும் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.!

    ReplyDelete
  74. அடடா! அறுவை சிகிச்சையா? ஏன்? என்ன ஆச்சு?
    உடம்பைப் பார்த்துக்கொண்டு ஓய்வில் இருங்கோ.

    எனக்காக தாங்கள் இறைவனைப் பிரார்த்திப்பதாக எழுதியுள்ளதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி.

    தாங்கள் உடனடியாக jaghamani.blogspot.com என்ற “மணிராஜ்” அவர்களின் வலைத்தளத்துக்குச் செல்லுங்கள்.

    “எங்கெங்கும் காணினும் சக்தியடா” என அருமையானதொரு பதிவினை சற்று முன்பு வழங்கியுள்ளார்கள்.

    போய் உடனே ஆடி வெள்ளிக்கிழமையான இன்று அம்மனை தரிஸனம் செய்து கொள்ளுங்கள்.

    உடல்நிலை செளகர்யமாகி தங்களுக்கும் சக்தி கிடைத்திடும்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  75. நீண்ட நாட்களாக தொழில்னுட்ப பிரச்சையின் காரணமாக தொடர்பில் இல்லை. ஆனால் தங்களின்[திருமதி.ராஜராஜேஸ்வரி ]அனைத்துப் பதிவினையையும் "மெயிலில்' கண்டேன். திரு..கோபலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளபடி பதிவினை திறம்பட தருவதில் தங்களுக்கு இணை இல்லை.
    ஐயா! தங்களின் "மு.முன்" கதையினை ராணியில் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும், ஈடு இணையற்ற தெய்வீகப் பதிவரான திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்து எழுதியுள்ளதும், மிகவும் எனக்கு மன மகிழ்ச்சியினைத் தருவதாக உள்ளது.

      ராணி பத்திரிகையில் என் சிறுகதையைப் படித்ததாகச் சொல்வதும் சந்தோஷமாக உள்ளது.

      நன்றி, நன்றி, நன்றி .... Ms. சந்திர வம்சம் Madam.

      அன்புடன்
      vgk

      Delete
  76. Sir , Congratualtions on your story being published in “ராணி” வார இதழில்.

    I wish you many more such publications, and a happy reading to all your readers, including me.

    Well done sir!

    ReplyDelete
    Replies
    1. WELCOME to Ms. PATTU Madam. I am very happy for your very first visit here with a Smooth & Silky name as PATTU.

      Thanks a lot for your kind Greetings.

      You may like to read my very interesting comedy short stories released in my Blog during 2011, most of them were also published in leading Tamil Magazines.

      You may start reading the following first & offer your comments:

      http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html
      மறக்க மனம் கூடுதில்லையே!

      http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html
      சுடிதார் வாங்கப் போறேன்!

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2406.html
      உடம்பெல்லாம் உப்புச்சீடை

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_30.html
      காதல் வங்கி

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_08.html
      ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ் எண்ணங்களும்

      http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_14.html
      தேடி வந்த தேவதை

      http://gopu1949.blogspot.com/2011/10/1-of-4.html
      மனதுக்குள் மத்தாப்பூ

      http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html
      தாயுமானவள்

      http://gopu1949.blogspot.in/2011/05/1-of-7.html
      மூக்குத்தி

      With Best Wishes.....
      vgk

      Delete
  77. Hi VGK Sir ,

    Looks excellent!!!

    And Do collect your

    SunShine Blog Award at

    www.southindiafoodrecipes.blogspot.in

    EnjoYYYY !!!!

    ReplyDelete
    Replies
    1. Respected Mrs. R. PUNITHA Madam,

      My heartiest Congratulations to you for getting "SUNSHINE BLOGGER AWARD" from your friend.

      Thank you very much for your kind & valuable sharing of this "SUNSHINE BLOGGER AWARD" with me on 28.07.2012.

      I am very Happy to note that this is the 10th award for this year: 2012.

      Thanks a Lot.

      Yours,
      vgk

      Delete
  78. ராணி இதழில் உங்கள் சிறுகதை இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    பலகாரஙக்ள் அருமை.

    இதில் என் வாழைக்காய் பஜ்ஜி பிளேட்டும் இடம் பெற்று இருப்பது ரொம்ப சந்தோஷம்..

    ReplyDelete
  79. வாருங்கள், வாருங்கள், Ms. JALELA KAMAL அவர்களே! வணக்கம்.

    தங்களின் அன்பான வருகையும் அழகான வாழ்த்துகளும், கருத்துகளும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கின்றன.

    ஆஹா! வாழைக்காய் பஜ்ஜி ப்ளேட் உங்களுடையதா? மிக்க நன்றி.

    தங்களுடையது எனத்தெரியாமலேயே அதை அப்படியே எடுத்து அனைவருக்கும் வாரி வழங்கிவிட்டேன். தங்களின் அனுமதியில்லாமல் ஓர் உரிமையுடன் எடுத்துக்கொண்டு விட்டேன்.
    தங்களுக்கும் இதில் ஓர் விளம்பரம் தந்துள்ளேன் அல்லவா! ;)))))

    நான் இந்த பஜ்ஜி சம்பந்தமாகவே “பஜ்ஜின்னா பஜ்ஜி தான்” என்ற ஒரு சிறுகதை எழுதியிருந்தேனே! அதைப் படித்தீர்களா?

    இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html பகுதி 1 / 2

    http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html பகுதி 2 / 2

    நேரமிருந்தால் படித்துவிட்டுக் கருத்துக்கூறுங்கள்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
    Replies
    1. To Ms.Jaleela Kamal,

      ”பஜ்ஜின்னா பஜ்ஜி தான்” சிறுகதையின் சரியான இணைப்புகள்
      இதோ இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.


      http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html

      http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html

      அன்புடன்
      vgk

      Delete
  80. விருதுக்கு,கதைப் பிரசுரத்துக்கு வாழ்த்துகள்
    விருது வழங்கியதற்கு நன்றி.
    படங்களை ப்பார்த்து அஜீரணமாகி விட்டது!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ஐயா, வாருங்கள், வணக்கம்.

      விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      அன்புடன்
      vgk

      Delete
  81. ஆஆஆஆ... பதிவையும் படிச்சு.. பின்னூட்டங்களும் படிச்சு வருவதுக்குள்.. ரொம்ப ரயேட் ஆகிட்டேன்ன்.. கொஞ்சம் இருங்க.. ஒரு ஸ்ரோங் ரீ குடிச்சிட்டு வாறேன்ன்ன்ன்:)...

    ReplyDelete
    Replies
    1. athira November 4, 2012 1:56 AM
      //ஆஆஆஆ... பதிவையும் படிச்சு.. பின்னூட்டங்களும் படிச்சு வருவதுக்குள்.. ரொம்ப ரயேட் ஆகிட்டேன்ன்.. கொஞ்சம் இருங்க.. ஒரு ஸ்ரோங் ரீ குடிச்சிட்டு வாறேன்ன்ன்ன்:)...//

      வாங்கோ வாங்கோ வாங்கோ அதிரா,

      நீங்க வந்தாலே பதிவுக்கு ஒரு கலகலப்பு ஏற்படுகிறதூஊஊஊஊஊஊஊஊஊஊ!;)

      ரீ [டீ] குடிச்சுட்டு, எனக்கும் ஒரு ரீ [டீ] கொண்டாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      கோபு

      Delete
  82. அதெதுக்கு ராணிக்கு மேல 31,32 என நெம்பர்:) போட்டிருக்கு? ராணியின் வயசோ?:)...

    நிறைய அவோர்ட்ஸ் வாங்கியிருக்கிறீங்க.. வாழ்த்துக்கள்.

    அதுக்காக என்ன வகையான இனிப்பை எல்லாம் தாராளமாக அள்ளிக் கொடுக்கிறீங்க?:)... வீட்டுக்கு வருவோருக்கும் இப்பூடித்தான் தருவீங்களோ?:) அல்லது?

    ReplyDelete
    Replies
    1. athira November 4, 2012 1:59 AM
      //அதெதுக்கு ராணிக்கு மேல 31,32 என நெம்பர்:) போட்டிருக்கு? ராணியின் வயசோ?:)...//

      நோ நோ வயசு அல்ல! அவங்க வயசு எனக்குத்தெரியாதூஊ.
      உங்க வயசே எனக்கு 16 ஓ 61 ஓ இரண்டுக்கும் சராசரியாக 38.5 ஓ என இன்னும் தெளிவாக்கவில்லையேஏஏஏ ! ;)))))

      அதாவது என் சிறு கதைகள் அடிக்கடி பல தமிழ் வார / மாத இதழ்களில் வெளியாகும். அதுபோல என் படைப்புகள் வெளியான புத்தகங்களை நான் மிகவும் பத்திரமாக ஒரு பெரிய பெட்டி நிறைய சேமித்து வைத்துள்ளேன். அந்தப் புத்தகத்தின் எந்தப்பக்கத்தில் என் படைப்புகள் வெளியாகி உள்ளதோ அந்தப்பக்க எண்களை உடனடியாக புத்தக அட்டையின் மேல் கொட்டை எழுத்துக்களில் எழுதி விடுவது என் வழக்கம். அது போல எழுதப்பட்டதே 31+32. அதாவது
      அந்த [பிரித்தானியா] ராணியை ஓபன் செய்தால் 31 + 32 ஆம் பக்கத்தில் நான் இருப்பேன். அதாவது என் படைப்பு இருக்கும், என்று மீனிங்கூஊஊஊஊஊ. புரிந்ததா? OK ;)))))

      //நிறைய அவோர்ட்ஸ் வாங்கியிருக்கிறீங்க.. வாழ்த்துக்கள்.//

      அதெல்லாம் முன்பு வாங்கியவை. ஏராளமாக உள்ளன.
      உங்களின் அன்பான வருகை + அழகான கொஞ்சும் கிளி போன்ற தமிழ் எழுத்துக்களுக்கு முன்பு அதெல்லாம் சும்மா ஜுஜுபி.

      //அதுக்காக என்ன வகையான இனிப்பை எல்லாம் தாராளமாக அள்ளிக் கொடுக்கிறீங்க?:)...//

      காசா பணமா செலவு! தாராளமாக அள்ளித்தருவோமே என்று தான்.

      //வீட்டுக்கு வருவோருக்கும் இப்பூடித்தான் தருவீங்களோ?:)
      அல்லது?//

      எல்லோருக்கும் அள்ளித் தந்தால் என்ன ஆவது? ஏதோ ஓரளவு கட்டாயமாகத் தருவேன். யாரையும் எதுவும் சாப்பிடாமல் வெளியே அனுப்ப மாட்டோம்.

      Atleast A Cup of Coffee யாவது தந்தே அனுப்புவோம்.

      பிரித்தானியா ராணி போல V.V.I.P. ஸ்வீட் 16 or 61 ? என்றால் ஸ்பெஷல் கவனிப்பு நிச்சயம் இருக்கும்.

      அதனால் தைர்யமாகப் புறப்பட்டு வாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      Delete
  83. அதனால் தைர்யமாகப் புறப்பட்டு வாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா///

    ஹா..ஹா..ஹா.. அழைக்கும் விதத்தை பார்க்கவே கை கால் எல்லாம் டைப்படிக்குதே ஜாமீஈஈஈஈஈ:)) மீ வரமாட்டேன்ன்ன் நேக்குப் பயம்மாக்க் கிடக்கூஊஊஊஊஊ:).

    ReplyDelete
    Replies
    1. athira November 4, 2012 8:15 AM
      ***அதனால் தைர்யமாகப் புறப்பட்டு வாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா***

      //ஹா..ஹா..ஹா.. அழைக்கும் விதத்தை பார்க்கவே கை கால் எல்லாம் டைப்படிக்குதே ஜாமீஈஈஈஈஈ:))

      மீ வரமாட்டேன்ன்ன் நேக்குப் பயம்மாக்க் கிடக்கூஊஊஊஊஊ:).//

      பிரித்தானியா ராணியின் பேத்தி ஸ்வீட் சிக்ஸ்டீன் என்றெல்லாம சொல்லிக்கொண்டு பயப்படலாமா?

      ஓடும் பாம்பை மிதிக்கும் வயசல்லவா? ;)

      ராணியின் பேத்தியா இல்லையா ?
      ஸ்வீட் சிக்ஸ்டீனா அல்லது சிக்ஸிடி ஒண்ணா ?
      என நேக்கு சந்தேகம் வருமாறு இப்படி ஓர் அறிக்கை விடலாமா ! ஷேம் ஷேம் ஆக உள்ளதூஊஊஊ ;(

      ஓஹோ, V.V.I.P. யாக இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்குமோ என்னவோ என யோசனையோ?

      அன்புக்கோர் அண்ணன் இங்கிருக்கும் போது உங்களுக்கு ஏன் இந்தக்கவலை?

      “மலர்களைப்போல் ........
      தங்கை உறங்குகிறாள்......
      அண்ணன் வாழவைப்பான்
      என்று அமைதி கொண்டாள்

      கலைந்திடும் கனவுகள்
      அவள் படைத்தாள்!
      அண்ணன் கற்பனைத்
      தேரினில் பவனி வந்தான்!!”

      என பாசமலர் சிவாஜிபோலப்
      பாட்டுப்பாடியே, மலைக்கோட்டை
      உச்சிப்பிள்ளையார், அருகே அடிக்கும்
      வெயிலில் அந்தப்பாறைகளிலேயே
      தூங்க வைத்திடுவேனே! ;)

      அதனால் உடனடியாகப் புறப்பட்டு வாங்கோ.

      துணைக்கு உங்கத்தோழி அஞ்சுவையும்
      வேண்டுமானால் கூட்டிட்டு வாங்கோ.
      அவங்களுக்கு திருச்சியைப்பற்றி நன்றாகத் தெரியும்.

      ஏற்கனவே வந்து போனதாக என்னிடம்
      சொல்லியிருக்காங்கோ.

      பிரியமுள்ள
      கோபு அண்ணன்

      Delete
  84. என பாசமலர் சிவாஜிபோலப்
    பாட்டுப்பாடியே, மலைக்கோட்டை
    உச்சிப்பிள்ளையார், அருகே அடிக்கும்
    வெயிலில் அந்தப்பாறைகளிலேயே
    தூங்க வைத்திடுவேனே! ;) ////

    அச்சச்சோ ஊரைச் சுற்றிக் காட்டப்போறீங்களாக்கும் எனப் பார்த்தால், நித்திரைக் குளிசை குடுத்து, பாறையில தூங்க வைக்கப் போறீங்களோ கழுகுக்கு இரையாக?:)) வாணாம் ஜாமீஈஈஈஈ மீ வரமாட்டேன்:).



    //
    துணைக்கு உங்கத்தோழி அஞ்சுவையும்
    வேண்டுமானால் கூட்டிட்டு வாங்கோ. ///

    ஹா..ஹா..ஹா.. அஞ்சு வந்தால் வருகிறேன்ன்ன்ன்...:)

    ReplyDelete
  85. VGK to ATHIRA

    //அச்சச்சோ ஊரைச் சுற்றிக் காட்டப்போறீங்களாக்கும் எனப் பார்த்தால், நித்திரைக் குளிசை குடுத்து, பாறையில தூங்க வைக்கப் போறீங்களோ கழுகுக்கு இரையாக?:)) வாணாம் ஜாமீஈஈஈஈ மீ வரமாட்டேன்:).//

    நான் பக்கத்திலிருக்கும் போது கழுகு வேறு தனியாகக் கொத்த வருமோ என்ன? கொத்த விட்டுவேனா என்ன?

    நீங்க என்னைத் தப்புத்தப்பாவே எடை போட்டு விடுறீங்க. மீ பிறந்ததிலிருந்தே முதல்நாளிலிருந்தே நல்ல பையன். இங்கு பின்னூட்டமிட வரும் எல்லோருக்குமே இது நல்லாத் தெரியும்.

    ஊரைச் சுற்றிக் காண்பிக்க அழைத்துபோனால் நீங்க ரொம்பவும் டயர்ட் ஆகிடுவீங்கோ, உங்கள் காலை வலிக்கும்.

    அதனால் மலை மேல் ஏற்றி, பாறையில் நின்று பார்த்தால் ஊரிலுள்ள அனைத்துமே அழகாகத் தெரியும்.

    கண்ணுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்டெரெயின் ஆகுமோல்யோ; அதனால் தான் தட்டித் தாலாட்டி தூங்கச் செய்வேன் என்றேன். பயப்படாமல் வாங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    //ஹா..ஹா..ஹா.. அஞ்சு வந்தால் வருகிறேன்ன்ன்ன்...:)//

    அஞ்சூ பாவம். ரொம்ப ரொம்ப நல்லவங்க. ஆனாலும் பூனையிடம் மாட்டப்போறாங்க; மொத்தத்தில் அவங்களுக்கு சகுனம் சரியில்லை.
    ;)))))


    ReplyDelete
  86. அருமையான விருது அளித்து
    பெருமைப்படுத்திய்தற்கு மனம்
    நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  87. இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:31 AM
    அருமையான விருது அளித்து
    பெருமைப்படுத்திய்தற்கு மனம்
    நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..//

    அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டு, அதைப்பற்றி தங்களின் 600 ஆவது சிறப்புப் பதிவினில் பகிர்ந்து கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  88. பாராட்டு மழை பொழிகிறதே, உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  89. உங்க பதிவுக்கு வாழ்த்துகள் டைப் பண்ணி டைப் பண்ணி அந்த வார்த்தைகளே தேய்ந்து போச்சு

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 12, 2015 at 6:12 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்க பதிவுக்கு வாழ்த்துகள் டைப் பண்ணி டைப் பண்ணி அந்த வார்த்தைகளே தேய்ந்து போச்சு//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அங்கு அந்த எழுத்துக்கள் தங்கள் கீ போர்டில் தேய்ந்து போயிருந்தாலும், இங்கு பளிச்சுன்னு, மூக்கும் முழியுமா ஜோராத்தான் இருக்குது ! :)

      அதுதானே எனக்கு முக்கியம் ! :)

      Delete
  90. ராணி பொஸ்தவத்துல கத வந்தாகாட்டியும் அது வெவரம் கமண்டுல சொல்லினது சூப்பரா இருந்திச்சி. இதிலேந்து நீங்க இன்னா வெளஙக்க கிடோணும் பிரியுதா இந்த போண்ணு அல்லா கமண்ட்ஸும் வுடாம படிக்குதுன்னிபிட்டு

    ReplyDelete
    Replies
    1. mru October 21, 2015 at 2:39 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //ராணி பொஸ்தவத்துல கத வந்தாகாட்டியும் அது வெவரம் கமண்டுல சொல்லினது சூப்பரா இருந்திச்சி. இதிலேந்து நீங்க இன்னா வெளஙக்க கிடோணும் பிரியுதா இந்த போண்ணு அல்லா கமண்ட்ஸும் வுடாம படிக்குதுன்னிபிட்டு//

      :))))) புரிஞ்சுக்கிட்டேன். நீங்க வெரி குட் கேர்ள்.

      சில சமயங்களில் பதிவுகளைவிட கமெண்ட்ஸ்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நானும் அவற்றை மிகவும் ரஸித்துப்படிப்பது உண்டு. இந்தப்பதிவினில் நம் அதிரா [உங்கள் அக்கா] போட்டுள்ள கமெண்ட்ஸ்களையும் அதற்கான என் பதில்களையும் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கோ.

      பொதுவாகவே நான் ஓர் பின்னூட்டப்பிரியன். அதற்காகவேதான் நான் இந்தப்பின்னூட்டப்போட்டியும் நடத்தத்திட்டமிட்டேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, முருகு.

      அன்புடன் குருஜி

      Delete
  91. சில சமயங்களில் பத்திரிகைகளில் நாம அனுப்பிய கதை வந்த சந்தோஷத்தைவிட தர்ம சங்கடங்களை நிறைய சந்திக்கவேண்டி இருக்கும்போல. உங்க ரிப்ளை பின்னூட்டத்தில் தெரிந்து கொள்ள முடியுது இரண்டு கைகளால் சூரியனை மறைத்து விட முடியுமா????? ராணி புக்கில் உங்களின் கதை வந்ததற்கு வாழ்த்துகள்.முல்லா கதைகள் எப்பவுமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  92. எல்லாவற்றையும்விட இந்த தலைப்பில் கொடுக்கப்பட்ட விருது மிக மிக பொருத்தம் என்னைப்பொறுத்தவரை..முல்லா கதைகள் எப்பவும் என் ஃபேவரைட்...

    ReplyDelete
  93. முல்லா கதை அருமை!விருது கவுரவம் பெறுகிறது!

    ReplyDelete
  94. Thanks for sharing Information to us. If someone wants to know about,I think this is the right place for you!
    Color dhoti | Readymade pattu pavadai

    ReplyDelete