என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 9 ஜனவரி, 2014

107 ] "குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.

2
ஸ்ரீராமஜயம்



குண்டலிநீ யோகம் -

அதி ஜாக்கிரதை தேவை.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது:
அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதன் பேரைச் சொன்னால்கூட அதுவும் அம்பலப்படுத்துவதுதான் என்பதால் அடியோடேயே பிரஸ்தாபிக்காமல் விட்டு விடணும் என்று இத்தனை நாழி நினைத்துக் கொண்டிருந்ததையும் இப்போது கொஞ்சம் ‘டச்’ பண்ணுகிறேன். [சிரித்து] அதை யாரும் ‘டச்’பண்ணவேண்டாமென்று ‘வார்ன்’பண்ணுவதற்கே ‘டச்’ பண்ணுகிறேன். 

ஏனென்றால் நான் சொல்லாவிட்டாலும் அந்தப் பெயர் இப்போது ரொம்ப அடிபடுகிறது. குண்டலிநீதான். குண்டலிநீ, அது ஸம்பந்தமான சக்ரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இறைபட்டுக் கொண்டிருக்கின்றன. 

‘ஸெளந்தர்ய லஹரி’யிலும் அந்த விஷயங்கள் வருகின்றன. ஆகையினால் அதை நீங்கள் பாராயணம் பண்ணும்போது அந்தப் பேர்களைப் பார்த்துவிட்டு, நான் ‘டச்’ பண்ணா விட்டாலும், வேறே புஸ்தகங்களைப் பார்க்கத்தான் பார்ப்பீர்கள். 

அதற்கு நாமேதான் சொல்லிவிடலாமே, [சிரித்து] இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
ஒரு சின்ன அணுவுக்குள்ளே எப்படி ஒரு பெரிய சக்தியை அடைத்து வைத்திருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலிநீ என்ற சக்தியாக இருக்கிறது; அது நம்மைப் போன்றவர்களிடம் தூங்குகிற மாதிரி ஸ்திதியில் இருக்கிறது; அதற்கான யோக ஸாதனை பண்ணினால், – பண்ணினால் என்பதை ‘அன்டர்லைன்’ பண்ணணும் – அப்படி [ஸாதனை] பண்ணினால் அது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புப் பெற்றுச் சில சக்ரங்கள் வழியாக ஊர்த்வ முகமாக [மேல் நோக்கி ] ஸஞ்சாரம் பண்ணி முடிவில் பராசக்தியாகப் பூர்ண விழிப்புப் பெற்று, அப்புறம் அந்த பராசக்தியும் பரமசிவத்தோடு ஐக்யமாகி ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் ஏற்படும் – என்பதுதான் ஸாரமான விஷயம். 

இதைத் தெரிந்து கொண்டால் போதும்; இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும்.
நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்? 

அதற்காகத்தான் குண்டலிநீ யோகம் என்று இப்படியரு சாஸ்திரம் இருக்கிறது என்று நான் இப்போது சொன்னேனே, அந்த அளவுக்குத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மேல் வேண்டாம். அது அவசியமில்லை.
ஏனென்றால் நம்மிலே ஆயிரத்தில் ஒருவர் – இல்லை, லக்ஷம் பத்து லக்ஷத்தில் ஒருவர் கூட முறைப்படி அந்த ஸாதனை பண்ணுவதற்கு முடியாது. அப்படியே பண்ணினாலும் முறைப்படி முன்னேறி ஸித்தி அடைகிறது ஸாதகர்களிலும் அபூர்வமாக இரண்டொருத்தரால்தான் முடியும் – “யததாமபி கச்சிந்” என்று பகவான் சொன்னாற் போல. 

அதனால்தான் ‘அதற்கான யோக ஸாதனை பண்ணினால்’ என்று அழுத்திச் சொன்னது. ‘பண்ணினால்’ என்பது ஸரி. ஆனால் பண்ணுவதுதான் முடியாத கார்யம்! 

இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மஹாசக்தியிலே கலப்பது – அல்லது அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது ] – லேசில் நடக்கிற விஷயமில்லை.
சாந்தத்திலே ஒன்றாகக் கலந்து ப்ரஹ்மமாவதை விடவும் சக்தியிலே கலப்பதைக் கஷ்டமானதாகவே அந்தப் பராசக்தி வைத்துக் கொண்டிருக்கிறாள் !
பக்தி பண்ணுகிறவனையும், ஞான வழியில் போகிறவனையுங்கூடத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தன்னுடைய சக்திக் கூத்தைப் பார்க்கும்படியும், அதை அவர்கள் வழியாகவும் கொஞ்சம் செலுத்தி அவர்களால் லோகத்துக்கு அநுக்ரஹம் கிடைக்கும்படியும் அவள் பண்ணுவதுண்டுதான். 

ஆனாலும் இவர்கள் [பக்தரும், ஞானியும்] தாங்களாகச் சக்திக்கு ஆசைப்படவில்லை. 

பக்தன் ப்ரேமைக்கு, ப்ரேமானந்தத்திற்குத்தான் ஆசைப்படுகிறான். அப்படிப்பட்டவர்களிடம், அவளே, ”பார்த்தாயா என் சக்தி ப்ரபாவம்!” என்று ‘போனஸ்’ மாதிரி அதைக் காட்டிக் கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கும் அதை, லோக கல்யாணத்தை உத்தேசித்து, தருகிறாள். 

ஆனால், யோகி என்கிறவன் சக்தியில் ஸித்தியாவதற்கே குண்டலிநீ யோகம் என்று பண்ணும்போது, [சிரித்து] அவள் இல்லாத கிராக்கியெல்லாம் பண்ணிக்கொண்டு அப்புறந்தான் கொஞ்சங் கொஞ்சமாக ஏதோ இண்டு இடுக்கு வழியாகத் தன் சக்தியை அவிழ்த்து விடுகிறாள்.
இன்றைக்கு குண்டலிநீ தீக்ஷை பல பேர் கொடுத்து, பெற்றுக் கொண்டவர்களிடம் தூங்குகிற குண்டலிநீ முழித்துக் கொண்டுவிட்டதாகச் சொல்வதெல்லாம் இந்த இண்டு இடுக்குக் கீற்று வெளிப்படுவதுதானே யொழிய பூர்ணமான சக்தி ஜ்யோதிஸ் ஸூர்யோதயத்தைப் போல வெளிப்படுவது இல்லை.
அரைத் தூக்கம், கால் தூக்கம் என்று சொல்கிறோமே, அப்படி ஸாதாரணமாக நமக்குள் எல்லாம் முக்காலே மூணு வீசம் தூக்கத்துக்கும் மேலே ப்ராண சக்தி ரூபத்தில் பராசக்தி தூங்கிக்கொண்டிருக்கிறாளென்றால், குண்டலிநீ தீக்ஷையாகி, அது ‘ரைஸ்’ ஆகிவிட்டது என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் முக்கால் தூக்கம் என்கிற அளவுக்கு நம்மைவிடக் கொஞ்சம் முழித்துக் கொண்டிருப்பாள்! அவ்வளவுதான். 

அதிலேயே [இந்தக் குறைந்த அளவு மலர்ச்சியிலேயே] உச்சந்தலை வரை ஒரு வைப்ரேஷன், ப்ரூமத்தியில் [புருவ மத்தியில்] ஒரு கான்ஸன்ட்ரேஷன் அப்போதப்போது உண்டாவதை வைத்துக்கொண்டு, குண்டலிநீ பூர்ணமாக முழித்துக்கொண்டு லக்ஷ்யமான உச்சிக் சக்ரத்திற்குப் போய்விட்ட மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

வாஸ்தவத்தில் ஏதோ கொஞ்சம் சக்தி, கொஞ்சம் ஏறுவது, மறுபடி விழுவது என்றுதான் நடக்கிறது. ஏறும்போதும் அங்கங்கே உண்டாகிற அத்புத சக்திகளில் (ஸித்திகளில், சித்து என்று சொல்வது இந்த சக்திகளைத்தான். அப்படிப்பட்ட சக்திகளில்) சித்தத்தை அலைபாய விடாமல், லக்ஷ்யத்திலேயே ஈடுபடுத்துவது ஸாமான்யமான ஸாதனை இல்லை. 

அவளேதான் இப்படிப்பட்ட சின்ன ஸித்திகளைக் கொடுத்து பெரிய, முடிவான ஸித்தியிலிருந்து டிஸ்ட்ராக்ட் பண்ணி மயக்குவது. 

இதெல்லாம் போதாதென்று குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.
லோகத்தில் பலவிதமான மாயைகள், மாயையிலிருந்து மீளுவதற்குப் பலவிதமான ஸாதனைகள் என்று அவள் பரப்பி வைத்திருப்பதில் நேரே அவளுடைய சக்தியைப் பிடிப்பது என்பதற்காக் குண்டலிநீ யோகம் என்று ஒரு ஸாதனையை வைத்திருக்கும்போது அதிலேயே நிறைய மாயையையும் பிசைந்து வைத்திருக்கிறாள். 

ஏன் அப்படி என்றால் என்ன சொல்வது? ஒரு பயிர் ஸுலபத்தில் பயிர் பண்ணி மகசூல் காணும்படி இருக்கிறது. இன்னொரு பயிருக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ணம், எரு ஆகிய எல்லாமே கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஏனென்று கேட்டால் என்ன பதில் சொல்வது? 

பல தினுஸாக அவள் லீலா நாடகம் ஆடுவதில் இதெல்லாம் அங்கம். அப்படி குண்டலிநீ யோக ஸாதனை என்பதை ரொம்பவும் சிரம ஸாத்யமாகவே வைத்திருக்கிறாள்.
‘பக்தி, ஞான மார்க்கங்களில் போகிறவர்கள் மட்டும் ஸுலபமாக ஸித்தி அடைந்து பிரத்யக்ஷ தரிசனமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ பெற்றுவிடுகிறார்களோ என்ன? ‘என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. 

ஆனாலும் எந்த அளவுக்கு அவர்கள் ஸாதனை பண்ணியிருந்தாலும், பண்ணுகிற மட்டும் அது [குண்டலிநீ யோகம் போல] இத்தனை ச்ரமமாகவோ, சிக்கலாகவோ இருப்பதில்லை.
அதோடுகூட ஸாதனையில் தப்பு ஏற்படுவதால் இத்தனை விபரீதமாகவும் அவற்றில் நடந்துவிடுவதில்லை. 

கர்ம யோகத்தைப் பற்றி – அதாவது பலனில் பற்று வைக்காமல் ஸ்வதர்மமான கடமைகளை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணுவதைப் பற்றி – பகவான் சொல்லியிருப்பதெல்லாம் பக்தி, ஞான யோகங்களுக்கும் பெரும்பாலும் பொருந்துவதுதான். 

‘யோகம்’ என்றாலே நினைக்கப்படும் குண்டலிநீ முதலான மார்க்கங்களுக்குத்தான் அது அவ்வளவாகப் பொருந்தாமலிருக்கிறது. என்ன சொல்கிறாரென்றால் .........
நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்ய்வாயோ ந வித்யதே *

ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் **

என்கிறார். என்ன அர்த்தமென்றால் ‘இந்த வழியில் நாம் பண்ணும் முயற்சி பலன் தராமல் வீணாகப் போவது என்பது இல்லை. ஏறுமாறாக, விபரீதமாகப் பலன் ஏற்படுவது என்பதும் இல்லை. ஏதோ ஸ்வல்பம்தான் ஸாதனை பண்ணினாலுங்கூட ஸரி, ‘நமக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடிவே இல்லையோ?’ என்கிற பெரிய பயத்திலிருந்து அது நம்மை ரக்ஷித்து விடும்’ என்கிறார். 

ஆனால் குண்டலிநீ மாதிரி ரொம்பவும் சிரமமாக, சிக்கலாக உள்ள ஒரு ஸாதனையில் போக ஆரம்பிக்கிறவர்களில் பலபேர் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு அப்புறம், ‘நம்மால் இதில் ஜயிக்க முடியாது’ என்று விட்டு விடுவதைப் பார்க்கிறோம். 

என் கிட்டேயே வந்து எத்தனையோ பேர் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது ‘அபிக்ரம நாசம்’- ‘முயற்சி வீணாவது’- என்று பகவான் சொன்னது நடந்துவிடுகிறது. 

‘ப்ரத்யவாயம்’- ‘விபரீத பலன்’- உண்டாவது என்கிறாரே, அதற்கும் இந்த வழி நிறையவே இடம் கொடுக்கிறது. நடுவாந்தரத்தில் “விட்டுவிடுகிறேன்”என்று இவர்கள் வருவதற்கே முக்யமாக அதுதான் காரணமாயிருக்கிறது. கடைசி வரையில் பயமும் போக இடமில்லை. 

‘ஸரியாகப் பண்ணி பலன் பெறுவோமா, அல்லது இசகு பிசகாக ஆகிவிடுமா?’என்ற பயம். அது மட்டுமில்லாமல் நடுவாந்தரப் பலன்களாகச் சில அத்புத சக்திகள் கிடைப்பதே பெரிய பலனைக் கோட்டைவிடும்படி திசை திருப்பிவிடுமோ என்ற பயம்! 

ஸ்வல்பம் அநுஷ்டித்தாலும் பயத்தைப் போக்கும் என்று பகவான் சொன்னது இந்த வழிக்கு ஏற்கவில்லை.
அதோடு பகவான் சொல்லாத இன்னொன்றும் இதில் சேருகிறது. என்னவென்றால், ஸாதனை பலிக்குமா என்று கடைசி மட்டும் பயம் ஒரு பக்கம் இருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் ஏதோ ஸ்வல்ப பலன் கிடைத்ததிலேயே தாங்கள் முடிவான ஸித்தி அடைந்து விட்டதாக ஏமாந்து போவதும் இதில் இருக்கிறது. 

பக்தி பண்ணுகிறவர்களும், ஞான விசாரம் பண்ணுகிறவர்களும் தங்களுக்கு நிஜமாகவே தெய்வ ஸாக்ஷாத்காரமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ ஏற்படுகிற வகையில் அவை ஏற்பட்டு விட்டதாக நினைப்பதற்கில்லை. 

ஆனால் குண்டலிநீ பண்ணுபவர்கள் ஏதோ கொஞ்சம் சக்ரங்களில் சலனம் ஏற்பட்டு விட்டால்கூட ஸித்தியாகி விட்டதாக நினைத்து விடுகிறார்கள் – தூரக்க [தூரத்தில்] அவுட்லைனாக கோபுரம் தெரிவதைப் பார்த்தே கர்பக்ருஹத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிற மாதிரி!
நான் குண்டலிநீ யோகம் தப்பு வழி என்று சொல்லவேயில்லை. நிச்சயமாக அத்வைத ஸமாதிவரை கொண்டு சேர்க்கக் கூடிய உசந்த வழிதான். இல்லாவிட்டால் யோகீச்வரர்கள், ரிஷிகள் இப்படியொரு சாஸ்திரத்தைக் கொடுத்திருப்பார்களா? 

அதெல்லாவற்றையும்விட, நம்முடைய ஆசார்யாள் அந்த விவரங்கள் சொல்லியிருப்பாரா? வழி ஸரிதான். ஆனால் அந்த வழியிலே போகிற அளவுக்கு நாம் ஸரியாயில்லை என்பதாலேயே, தீரர்களாக இருக்கப்பட்ட யாரோ சில பேரைத் தவிர, நமக்கு அது வேண்டாம் என்கிறேன். 

ஸித்தி பெற்ற குருவின் இடைவிடாத கண்காணிப்பிலேயே விடாமுயற்சியுடன் பரிச்ரமப்பட்டு அப்யஸிக்க வேண்டிய ஒரு வழியைப் பற்றிச் சும்மாவுக்காக எதற்காகப் பேசவேண்டும் என்பதால் சொல்கிறேன்.
நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்? நம்மால் முடிந்த முயற்சிகளைப் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள என்ன வழி என்று ஆலோசனை பண்ணத்தான். அப்படியிருக்கும் போது நம்மால் முடியாத முயற்சிகளைப் பற்றிப் பேசி எதற்காகப் பொழுதை வீணாக்க வேண்டும்? முடியாத முயற்சி என்பதோடு அவசியமும் இல்லாத ஸமாசாரம். 

பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். 

காஞ்சீபுரத்திற்கு வழி கேட்டால், நாம் ஸுலபமாகப் போய்ச் சேரும்படி, ‘இப்படியிப்படி ப்ராட்வேயிலிருந்து பஸ் இருக்கு. பீச்சிலிருந்து ரயில் இருக்கு’ என்று சொன்னால் அர்த்தமுண்டு. 

‘திருவொற்றியூரிலிந்து காஞ்சீபுரம் வரை பல்லவராஜா காலத்தில் போட்ட அன்டர்-க்ரவுன்ட் டன்னல் இருக்கு. அங்கங்கே தூர்ந்து போயிருக்கும். அந்த வழியாகப் போகலாம்’ என்றால் அர்த்தமுண்டா? வாஸ்தவமாகவே அப்படியும் வழி இருக்கலாம் – வாஸ்தவத்தில் இல்லைதான்; ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – டன்னல் இருக்கலாம். அதிலே துணிச்சலோடு போகிற ஸாஹஸக்காரர்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி வழி கேட்கிற ஸாதாரண ஜனங்களுக்குச் சொல்லி என்ன ப்ரயோஜனம்?
ஸர் ஜான் உட்ராஃப் [குண்டலிநீ யோகம் குறித்து] ‘ஸர்பென்ட் பவர்’முதலான புஸ்தகங்கள் போட்டாலும் போட்டார், வகை தொகையில்லாமல் அதில் ஸித்தியான யோகிகள் என்று பல பேர் தோன்றி ‘க்ளாஸ்’ நடத்துவதும், இன்னும் பல பேர் ஒரு அப்யாஸமும் பண்ணாமலே, பண்ணும் உத்தேசமும் இல்லாமலே, ‘மூலாதாரா, ஸஹஸ்ராரா’ என்றெல்லாம் எழுதி, பொது ஜனங்களிலும் பல பேர் தாங்களும் விஷயம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் ஆகியிருக்கிறது. 

எல்லாரும் பேசுகிறதாக ஆகியிருந்தாலும், பண்ணமுடியுமா-ஸரியாக, அதற்கான கட்டுப்பாடுகளோடு, விடாமுயற்சியோடு ஒரு பெரிய பவர் ரிலீஸாகிறதைப் பக்குவமாகத் தாங்கிக் கொள்கிற தைர்யத்தோடு பண்ண முடியுமா – கடைசிப் படிவரை டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் பண்ணிக் கொண்டு போய் ஜயிக்க முடியுமா என்கிறது பெரிய கேள்வியாக இருக்கிறது. 

சும்மாவுக்காக அதைப் பற்றி பேசுவது புரளிதான். அதைவிட விபரீதம், சும்மாவுக்காகப் பேசுவதாக இல்லாமல் தப்பும் தாறுமாகப் பண்ணிப் பார்த்துப் பல தினுஸான கஷ்டங்களுக்கு, ப்ரமைகளுக்கு ஆளாகிறது. 

அதனால்தான் இந்த ஸப்ஜெக்டில் இறங்க நான் ப்ரியப்படுவதில்லை. ஆனாலும் “ஸெளந்தர்ய லஹரிக்கு அர்த்தம் சொல்றேண்டா!” என்று ஆரம்பித்து விட்டு, இதை அப்படியே மூடி மறைப்பதென்று பண்ணப் பார்த்தால் நீங்கள் வேறே வழியில் தூக்கிப் பார்க்கத்தான் செய்வீர்களென்பதால் என் அபிப்ராயத்தை இளக்கிக் கொண்டு ப்ரஸ்தாபம் பண்ணுகிறேன்;’ வார்னிங்’கோடு சேர்த்தே ப்ரஸ்தாபிக்கிறேன்….
உட்ராஃபை நான் குற்றம் சொல்லவேயில்லை. ‘தாங்க்’ தான் பண்ணுகிறேன். ‘யோக சக்தி, யோக ஸித்தி என்பதெல்லாமே பொய். எங்கள் ஸயன்ஸுக்குப் பிடிபடாததாக அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது’ என்று மேல் நாட்டார்களும், அவர்கள் சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட நம்மவர்களும் சொல்லி வந்தபோது உட்ராஃப்தான் அது ஸத்யமானது, ஸயன்ஸுக்கு மேலான ஸூபர்ஸயன்ஸாக இப்படியிப்படி ஆகப்பட்ட ஒழுங்கில் அதன் கார்யக்ரமம் இருக்கிறது என்று விளக்கமாக எழுதி எல்லார் கண்ணையும் திறந்து வைத்தார். 

அவர் அப்படிப் பிரசாரம் பண்ணியில்லா விட்டால், நிஜமாகவே அந்த மார்க்கத்துக்கு அதிகாரிகளாக இருக்கப்பட்டவர்கள்கூட அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மார்க்கம் மங்கிப் போயிருந்தது.
அவர் எழுதினதில் நம்பிக்கை உண்டாக்கித்தான் பல பேர் அப்போது நிஜமாகவே யோக ஸித்தி பெற்றிருந்த யோகிகளிடம் போய் அந்த வழியைக் கற்றுக்கொண்டு, அதற்கப்புறம் மங்கிப் போன வழிக்குப் பிரகாசமான காலம் பிறந்தது. 

இன்றைக்கு வரை நல்ல யோக ஸித்தர்களும் உண்டாகாமலில்லை. அவர்களிடம் முறைப்படி கற்றுக் கொண்டு, முன்னேறும் ஸாதகர்களும் இல்லாமலில்லை. 

ஆனாலும் போலிகளும் சேர்வது, பிரகாசம் என்றேனே, அது கண்ணைக் குத்தும் அளவுக்கு வெறும் பேச்சில் மட்டும் பளபளப்பது என்றெல்லாமும் நிறைய ஆகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போதுதான் ஆத்மாவுக்கு நல்லதைத் தேடிக்கொண்டு போக்க வேண்டிய பொழுதை நாம் அப்யாஸம் பண்ணுவதாக இல்லாத ஒரு வழியைப் பற்றிய பேசி விருதாவாக்குவானேன் என்று தோன்றி [இதுவரை தெரிவித்த அபிப்ராயத்தைச்] சொன்னேன்.
இவ்வளவு சொன்னதாலேயே, அதில் சிலருக்கு இன்ட்ரெஸ்ட் உண்டாக்கியிருப்பேனோ என்னவோ? அதனால் ஒரு தடவைக்குப் பல தடவையாகப் எச்சரிக்கிறேன். 

‘நிச்சயமாக ஸித்தியானவர் எந்தவிதமான ஸொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய ஸத்குரு கிடைத்தாலொழிய யாரும் ஸ்வயமாகவோ, அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாஸம் பண்ணப்படாது. 

இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற ஸமாசாரம்’ என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.
இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மந்த்ர யோகத்திலும் ஜாக்ரதையாகவே இருக்கவேண்டும். குண்டலிநீ யோக ரிஸல்ட்களையே மந்த்ர யோகமும் சப்தங்களினால் உண்டாகிற நாடி சலனங்களின் மூலம் உண்டு பண்ணுவதுண்டு. 

குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.
க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை. 

வீட்டுக்குள்ளே உசந்த ஒயர், ஸ்விட்ச், ‘இம்போர்ட் பண்ணின பல்பு எல்லாம் போட்டாலும் பவர் ஹவுஸிலிருந்து கனெக்‌ஷன் இல்லாமல் விளக்கு எரியுமா? அப்படித்தான் குருவின் பவர் – உயிர் பவர் – இல்லாமல் மந்த்ர சப்தங்களை ஸ்வயமாக எடுத்துக் கொள்வதும்.
ஒரு ப்ரயோஜனமும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. சப்த வீர்யம் முறையாக க்ரஹிக்கப்படாவிட்டால் விபரீத பலனும் உண்டாகலாம். அதனால் உதாரணத்தை மாற்றிச் சொல்கிறேன்: 

மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? ‘ஷாக்’தான் அடித்துக் கஷ்டப்படுவோம். 

குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும். எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.
[Thanks to Mr. Mahesh in Sage of Kanchi 15.11.2013]


 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி
இந்தத்தொடரின் நிறைவுப்பகுதியாக
நாளை மறுநாள் வெளியாகும்.


oooooooooooooooooooooooooooooooooo

  




 

சிறுகதை விமர்சனப் போட்டி !


ஆண்டு முழுவதும் பரிசுகள் !

அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!

மொத்த பரிசுத்தொகை  
Minimum: Rs.12,000 
Maximum: Unlimited *
[*Variable according to the number of Participants ]

   

வெற்றிபெற அட்வான்ஸ் 
நல்வாழ்த்துகள் !!!

மேலும் முழு விபரங்களுக்கு


என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்







46 கருத்துகள்:

  1. நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்?

    குரு தொட்டுக்காட்டாத வித்தை பாழ் - என்று சொல்லுவார்கள்..!

    பதிலளிநீக்கு
  2. குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும். எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.

    சத் குருவின் அவசியத்தை சிறப்பாக எடுத்துரைத்த
    ’அமுத மழை ’பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை.

    பயனுள்ள ஆலோசனை..!

    பதிலளிநீக்கு
  4. பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம்.

    பக்தியும் ஞானமும் சரணாகதியுமே சுலபமான ஆரோக்கியமான மார்க்கங்கள் என்பதை அதி ஜாக்ரதையாக பிரஸ்தாபித்து நிரூபித்த உன்னத பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  5. பாதி வாசித்தேன் பின்பு மிகுதி வாசிப்பேன்
    மிக நீண்டது தானே.
    இனிய வாழ்த்தும் இறையாசியும் நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. //நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்?//


    ஆம்,அருமையான அமுத மொழி.
    தெரிந்து கொள்வது நம் கடமை.

    குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.//
    குருமுக உபதேசம் இல்லாமல் புத்தகங்களைப் படித்து தாங்களே செய்வது நல்லது இல்லைதான்.


    குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும். எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.//

    குருவின் மூலம் நல்வழி நடக்க அருமையாக கூறப்பட்ட அமுத மொழி.
    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள், நன்றி.





    பதிலளிநீக்கு
  7. //மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? ‘ஷாக்’தான் அடித்துக் கஷ்டப்படுவோம். //

    அருமை.... சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  8. அவசியமான உபதேசம். சாதாரண கிரகஸ்தர்களுக்கு பக்தி யோகம் மட்டுமே போதும் என்பது நான் கடைப்பிடிக்கும் உபதேசம்.

    பதிலளிநீக்கு
  9. மிகவும் அருமையான உபதேசம் ஐயா... விரிவான விளக்கம்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. //ஒரு அப்யாஸமும் பண்ணாமலே, பண்ணும் உத்தேசமும் இல்லாமலே, ‘மூலாதாரா, ஸஹஸ்ராரா’ என்றெல்லாம் எழுதி, பொது ஜனங்களிலும் பல பேர் தாங்களும் விஷயம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் ஆகியிருக்கிறது. //


    உண்மை தான். இப்போல்லாம் குண்டலினி என்பது எல்லாராலும் பேசப்படும்,விவரிக்கப்படும் ஒன்றாகி விட்டது. :( யோகாசனம் கத்துக்கறச்சே தான் என்னோட யோககுரு எனக்கு இதைப் பத்திய அறிவு கொஞ்சம் போல் கொடுத்தாங்க. மத்தபடி இதை எல்லாம் பத்தி இப்போ சர்வ சகஜமாப் பேசறதைப் பார்த்தால் ஆச்சரியமாத் தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. அதோடு இல்லாமல் இப்போ சிம்பிள் குண்டலினி யோகானு வேறே கத்துக் கொடுக்கறாங்களாம். :)

    பதிலளிநீக்கு
  12. இந்த யோகங்கள் ஒரு தேர்ந்த குருவின் மூலம்தான் அடைய முடியும் என்றால் முதலில் குருவை அடையாளம் காண்பதே மிக அரிதாகும் ஔவையின் அகவலில் வரும் வரிகள் படித்து என்ன என்று புரியாமல் இருந்தது. பெரியவரின் வாக்கு ஓரளவு என்ன என்று தெளிய வைத்தது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. சாதாரணமா கையக் கால உயத்துவதற்கே பொத்துன்னு விளுந்திருவோமே
    நாங்கெல்லாம் இந்தப் பக்கம் போனா ரவுண்டு கட்டி அடிப்பாங்க !! ....:)))))))))
    (அது சரி இந்தக் குண்டெலிக்கு எங்க யோகம் கிட்டப் போகுது மியின்ட் வொயிஸ் கேக்குது கேக்குது :))))))))))))) ) அருமையான படைப்பிற்கு பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் ஐயா .

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வை.கோ

    "குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது. - பதிவு நன்று நன்று --

    //
    குண்டலிநீ, அது ஸம்பந்தமான சக்ரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இறைபட்டுக் கொண்டிருக்கின்றன.
    //
    குண்டலிநீ விளக்கங்கள் அருமை.

    //இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.//

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளே கூறியது - பகிர்ந்தமைக்கு நன்றி

    //
    ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலிநீ என்ற சக்தியாக இருக்கிறது
    //
    நீண்டதொரு விளக்கக் கட்டுரை - பதிவு தேர்ந்தெடுக்கப் பட்ட பதிவு - நன்று நன்று .

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. இதெல்லாம் போதாதென்று குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.
    // அருமையான விளக்கங்கள்! பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  16. "குண்டலிநீ யோகம்" பற்றி விவரமாக விளக்கமளித்ததுக்கு மிக்க நன்றி. நான் இந்தியாவில் இருக்கும்போது, "பிரம்மகுமாரிகள் இயக்கம்" மற்றும் வேறு சில இயக்கங்கள் மூலமாக இந்த "குண்டலிநீ யோகம்" பற்றி கேள்விப்பட்டதுண்டு.
    இந்த பதிவை படித்த பின்பு தான், அவர்கள் சொல்வதெல்லாம் வெறும் பேச்சளவில் மட்டும் தான் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  17. யோகா வகுப்புகள் இன்று ஆங்காங்கே நடைபெற்று மக்களிடம் மன அமைதி,நோய்களுக்கு தீர்வாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுதியிருக்கிறது.எந்த ஒரு கலையையும் முழுமையாக,திடமாகதெரிந்தபின்,முயற்சிக்க வேண்டும்.ஸ்ரீபெரியவாளவர்குண்டலியோகம் பற்றிய எச்சரிக்கை இந்தகாலத்தில் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை நன்றி

    பதிலளிநீக்கு
  18. Mail Message from Mrs. Kamatchi Mahalingam

    Kamatchi Mahalingam 16:47 (1 minute ago) to me

    தளத்திற்குப்போனேன். பதிலிடமுடியவில்லை. குண்டலினீ. மஹாசக்தி. அறிந்து கொள்வதும்,புரிந்து கொள்வதும் ஸாமானிய விஷயமில்லை.

    மஹாசக்தி குண்டலினி பிசதந்து தநியஸி லலிதா ஸஹஸ்ர நாம வரிகள்.

    அருமையான பதிவு. நிறைய முறை படித்தால்தான் புரியும். வாழ்த்துகள். அன்புடன் மாமி.

    பதிலளிநீக்கு
  19. குண்டலிநீ குறித்த அருமையான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  20. குண்டலினி பற்றி எத்தனை தெளிவாக பொட்டில் அடித்தாற்போல சொல்லிபோகிறார், பெரியவா! பாவம் நிறையபேர்கள் இந்த பெயர் கேட்டு குழம்பித்தான் இருக்கிறார்கள். எங்கெங்கோ போய் அறியமுடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தப் பதிவு நிச்சயம் ஒரு தெளிவு கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
  21. யோகா கற்றுக் கொள்வதற்கே சரியான குருவைத் தேடி அலையநும். குண்டலினி யோகம் என்பதெல்லாம் எங்கோ உயரத்தில்....மகா பெரியவர் எஹ்தனை அக்கறையோடு அதி ஜாக்கிரதை என்று சொல்கிறார்.

    நன்றி வைகோ சார் பதிவுக்கு

    பதிலளிநீக்கு
  22. குண்டலினி சக்தியை எழுப்புவது
    பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்கள்
    எல்லாவற்றையும் விவரமாக எழுத நினைத்து
    எதை எதையோ எழுதியிருக்கிறீர்கள். .
    ஒன்றும் புரியவில்லை.

    அதை எழுப்புவது என்பது உறங்கி கொண்டிருக்கும்
    ஒரு வீரியம் மிக்க பாம்பை எழுப்புவது போலாகும்.

    ஒருபாராமான கல்லை ஸ்ப்ரிங் மீது வைத்து
    அமுக்க வைத்ததை அதன் சக்தியை
    உணராமல் எடுப்பது போலாகும் போலாகும்.

    ஆராயாமல் கல்லை எடுத்தால்
    அதைஎடுக்க புகுபவனின் மூஞ்சி எகிறித்தான் போகும்.
    அதுபோலத்தான். குண்டலினியை எழுப்புவதும்.

    பாமரர்களாகிய நமக்கு
    அது தேவையில்லாத விஷயம்.

    நமக்கு பரமனிடம் பக்தி இருந்தால் போதும்
    அது சக்தியைத் தரும், முக்தியைத்தரும்.

    அதையும் கடந்து அவனுடன் கலக்கும்போது
    இந்த பிரச்னைப் பற்றிய ஞானம் அவனே அளிப்பான்.

    அதனால்தான் அந்த குண்டலினி சக்தி
    கணபதியின் தொந்தியில் நிம்மதியாக
    உறங்கி கொண்டிருக்கிறாள்.

    உறங்கும் சிங்கத்தின் வாலை
    தொட்டால் அவ்வளவுதான்.
    அதன் வயிற்றுக்குள்தான் போகவேண்டும்
    என்பதை உணர்ந்து
    சிங்கத்திடம் செல்ல வேண்டுமென்றால்
    ரிங் மாஸ்டருடந்தான் செல்லவேண்டும்.
    பயிற்சி பெற்றால் அதன் மீது
    உட்கார்ந்து கொண்டு சவாரி செய்யலாம்.

    அதன் ரகசியத்தை அறிந்த யோகிகளிடம்
    முறையாக பயிற்சி பெற்று உடல், உள்ளம்
    இரண்டையும் கடந்து
    இந்த உடல்தான் ஆன்மா என்ற அறியாமை
    நீங்கிய நிலையில்தான் ,
    காம் க்ரோதாதிகள் நீங்கிய நிலையில்தான்
    குண்டலினியைப் பற்றி நினைக்க வேண்டும்.

    வலையில் இரண்டு பின்னூட்டங்கள்கூடுதலாக
    வந்தாலே மகிழ்ச்சி பொங்கி வழிந்து
    காவிரியில் வெள்ளம் போகிறது

    ஒரு சிறிய அற்ப சந்தோஷம் கிடைத்தாலே
    என்ன செய்வது என்று தெரியாமல்
    தலை கீழாக கூத்தாடுகிறோம்.

    கவைக்குதவாத கல்வியில்
    ஒரு தேர்வில் தேர்வு பெற்றாலே
    பித்தம் தலைக்கேறிவிடு கிறது


    புலன்கள் மூலம் கிடைக்கும் கண நேரம்கூட
    நிற்காது மறையும் இன்பங்களையே
    நம்மால் தாங்க முடியவில்லை.

    புலன்களைக் கடந்த
    ஒரு ஆனந்த வெள்ளம் வரும் போது
    அதை தாங்கி கொள்ளவும்.
    அதை அனுபவிக்கவும் நாம்
    நம்மை தகுதியாக்கிகொண்டுதான்
    குண்டலினியைப் பற்றியே சிந்திக்கவேண்டும்.

    அதுவரைக்கும் தினமும்
    காமாஷி அம்மனின் கோயிலுக்கு சென்று
    அவளை வணங்கி ,
    அங்கு கொடுக்கும் சுண்டலை
    சாப்பிட்டு வந்தால் போதும்.
    மற்றதை அவள் பார்த்துக்கொள்வாள்.

    பதிலளிநீக்கு
  23. மிகச் சிறப்பான விளக்கம் ஐயா,நன்றி!!

    பதிலளிநீக்கு
  24. Mail Message from Ambaladiyal

    அம்பாளடியாள் வலைத்தளம் has left a new comment on your post "107 ] "குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை" -...":

    மன்னிக்க வேண்டும் ஐயா. உங்கள் அம்பாளடியாள் ஆக்கங்கள் எழுதும் போது மனம் ஒருநிலைப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அது கொஞ்சம் கடினமாகவே உள்ளது .

    காரணம் ....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................விட்டது .

    இவைகளைப் போக்கவே குசியா ஒரு பாடல் அதுவும் பாருங்கள் நள்ளிரவு 02.32 க்கு எழுதப்பட்டுள்ளது :)))))

    இனியாவது மங்கோ ஜூஸ் கிடைக்குமா ?

    ..................................................................................................................................
    ...................................................................................................................................... போய்விடுவார்கள் :))))))))))))))))

    என்ன இருந்தாலும் அம்பாளடியாளுக்கு அன்பு செலுத்தும் என் செல்வங்களை எங்கிருந்தாலும் மறக்க மாட்டேன். உங்களையும் தான் ஐயா .

    [திருமதி அம்பாளடியாள் அவர்களின் வேண்டுகோளின்படி இதில் பலதகவல்கள் கோடிடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன.]

    -=-=-=-=-

    அன்புள்ள திருமதி அம்பாளடியாள் அவர்களே, வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி.

    பிறக்கப்போகும் ‘தை’ மாதம் நம் எல்லோருக்குமே, நம் சோதனைகளில் நாம் வெற்றிகண்டு, சாதனைகள் பலவும் படைக்கக்கூடியதாக அமையட்டும்.

    எந்த ஒரு சூழ்நிலையிலும் மனதை ஜில்லென்று குளுமையாகவும், தைர்யமாகவும் வைத்துக்கொள்ளுங்கோ.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  25. மிகவும் அருமையான உபதேசம் ஐயா... விரிவான விளக்கம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  26. மிகவும் அருமையான உபதேசம் ஐயா... விரிவான விளக்கம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  27. குண்டலினி யோகத்தைப் பற்றியும், அதனைச் செய்ய வேண்டிய முறைமை பற்றியும் சைவசித்தாந்த சாத்திரங்களில் சொல்லி இருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தரும் குண்டலினி யோகம் உள்ளவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். சிலர் இதனை கபாலம் வெடித்து சாதல் என்றுகூடச் சொல்லுகிறார்கள். இந்த எனவே பெரியவரின் எச்சரிக்கை நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
  28. குண்டலினி பற்றிய விரிவான செய்திகள் தெரிந்து கொண்டேன்; நன்றி!

    பதிலளிநீக்கு
  29. அமுதமொழிகளை படித்து சிறப்பான விஷயங்களை அறிந்து கொண்டேன்... நன்றி..

    பதிலளிநீக்கு
  30. ஐயாவிற்கு வணக்கம்
    அமுதமொழியில் நனைய செய்து சிந்தனையைத் தூண்டி விட்டு அசர வைத்து விட்டீர்கள். யோகம் பற்றிய அழகான செய்திகள் மிகவும் பயனுள்ளதாக அமையும். பணிச்சுமை காரணமாக முன்பு போல் கருத்திட வர இயலவில்லை. பொருத்தருள வேண்டும் ஐயா. விரைவில் பழைய நிலைக்கு திரும்பி விடுகிறேன்.
    ---------
    தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  31. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள், கோபு ஸார்!

    பதிலளிநீக்கு
  32. இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  33. "இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மஹாசக்தியிலே கலப்பது – அல்லது அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது ] – லேசில் நடக்கிற விஷயமில்லை"

    "பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம்".

    மிகச் சிறப்பான விளக்கம்.
    .

    பதிலளிநீக்கு
  34. எனக்கு இப்பதிவு மிகவும் பிடித்திருந்தது. கோடான கோடி நன்றி. மஹாபெரியவாளுக்கு எளியேனின் நமஸ்காரம்.

    பதிலளிநீக்கு
  35. குண்டலினி பற்றிய தெளிவான விளக்கங்கள் சிறப்பு. குரு உபதேசமில்லாம எதுவுமே கைகூடாதுதான்.

    பதிலளிநீக்கு
  36. அருமையான பதிவு. நிறைய முறை படித்தால்தான் புரியும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 26, 2015 at 3:50 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      //அருமையான பதிவு. நிறைய முறை படித்தால்தான் புரியும். வாழ்த்துகள். //

      இதுபற்றியெல்லாம் நமக்குப்புரியாமல் இருப்பதே மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன். சம்சார சாஹரத்தில் மூழ்கியுள்ள நமக்கு இவையெல்லாம் தேவையில்லாத மிகக் கடினமான பயிற்சிகள்.

      நமக்கேற்ற மிகச்சுலபமான வழிகள்தான் எவ்வளவோ உள்ளனவே ! அவையே நமக்குப்போதும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  37. ஆமுங்கோ எனக்கு கெடச்சிருக்க குருஜி போல அல்லாருக்குமே ஒரு குருஜி கெடைக்கணுங்கோ

    பதிலளிநீக்கு
  38. யோகாசன பயிற்சியின் போது இந்த குண்டலினி பத்தி மேலோட்டமா சொல்லிபுரிய வைப்பாங்க. இந்த பதிவு படித்ததும் இது வேற மாதிரி நினைக்க தேணுது. நாமல்லாம் சாதாரண மனுஷா. நம்மால என்ன முடியுமோ அதை கடைப்பிடித்தாலே போதும்தான்.

    பதிலளிநீக்கு
  39. குருமூலமாக பயின்று முறையாகச் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதை அழகாக உணர்த்தியவிதம் அருமை!

    பதிலளிநீக்கு
  40. இது அருமையான உபதேசம். நான் (மற்றும் என் ஹஸ்பண்ட்) தெரிந்துகொள்ளவேண்டிய உபதேசம். இது சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. நான் மூன்று வருடங்களுக்குமேல், ஓரளவு (அப்படிச் சொல்வதே தவறு) இந்த மார்க்கத்தில் செல்ல ஆரம்பித்தேன். என் ஹஸ்பண்ட் என்னைத் தொடரவேண்டாம் என்று எச்சரிக்கை பண்ணிக்கொண்டே இருந்தாள். அவளுக்கு எப்போதும், நம் முன்னோர் சொன்ன வழிமுறைதான் நமக்கு ஏற்ற முறை என்பதில் அளவிலாத நம்பிக்கை. நிற்க, சிலாகித்த வரிகளைச் சொல்ல ஆசை. பரமாச்சாரியார் இப்படி சொல்லியிருக்கிறாரே என்று புகழ்வது என்று அர்த்தமில்லை (அப்படிச் செய்வதற்கு நான் யார்). மூடனிலிருந்து, ஓரளவு தெரிந்தவரிலிருந்து, நிறையாகத் தெரிந்தவர் வரை எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். என்னே ஆற்றல்.

    அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது ] - இந்த மலர்வது என்ற சரியான வார்த்தையை இப்போதுதான் கண்டுகொண்டேன்.

    "குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே" - சரியான எச்சரிக்கை. எனக்குத் தெரிந்தவர் உயிரை உடம்பிலிருந்து பிரிக்கிறேன் என்று முயற்சித்து (பல வருடங்களான முயற்சி), இன்னொரு உயிரினத்திடம் புகுந்து மீண்டும் தன் உடம்பில் புகுவது என்று முயற்சித்து இள வயதிலியே மறைந்துவிட்டார். ('எங்க ஊர்க்காரன், என்னோடு கொஞ்சம் படித்தவன். அமெரிக்காவில்)

    தூரக்க அவுட்லைனாக கோபுரம் தெரிவதைப் பார்த்தே கர்பக்ருஹத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிற மாதிரி! - உண்மை. ஆரம்ப அதிர்வுகள் நமக்குள் ஏதோ நடக்கிறது என்பதைக் காட்டும். ஆனால் சொல்லிக்கொடுத்தவர், எது எதிர்ப்பட்டாலும் கவனச் சிதறல் இல்லாமல் சாதனை வழியில் போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். மார்க்கத்தில் தவறு இல்லை. பரமாச்சாரியார் சொன்னதுபோல் நமக்கு, சாதாரணப்பட்டவர்களுக்கு இது சாத்தியமில்லை.

    "திருவொற்றியூரிலிந்து காஞ்சீபுரம் வரை பல்லவராஜா காலத்தில் போட்ட அன்டர்-க்ரவுன்ட் டன்னல் இருக்கு. அங்கங்கே தூர்ந்து போயிருக்கும். அந்த வழியாகப் போகலாம்’ என்றால் அர்த்தமுண்டா?" - என்ன ஒரு அதாரிட்டியான விளக்கம், உதாரணம்.

    மந்திர சப்தங்களைப் பற்றி - உடனடியாக இரண்டு வேறுவகை உதாரணங்கள். அருமை.. அருமை...

    வை.கோ சார்... மிக அவசியமான பதிவைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். காலத்துக்குமான பதிவு. அதுவும் தேவையான இடங்களில் ஹைலைட் செய்துள்ளீர்கள் (ஒரிஜினல் டெக்ஸ்டில் இருந்ததா என்று தெரியவில்லை. அப்படி இல்லையென்றால், மிகச் சிறப்பாக அனுபவித்துச் செய்துள்ளீர்கள்) மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் September 28, 2016 at 4:06 PM

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் நீண்ட அனுபவபூர்வமான கருத்துரைகளுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.

      //வை.கோ சார்... மிக அவசியமான பதிவைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். காலத்துக்குமான பதிவு. அதுவும் தேவையான இடங்களில் ஹைலைட் செய்துள்ளீர்கள் (ஒரிஜினல் டெக்ஸ்டில் இருந்ததா என்று தெரியவில்லை. அப்படி இல்லையென்றால், மிகச் சிறப்பாக அனுபவித்துச் செய்துள்ளீர்கள்) மிக்க நன்றி.//

      சில வரிகளை ஹை-லைட் செய்து காட்டியுள்ளது என்னால் மட்டுமே.

      நான் படித்த புத்தகத்தில் அதுபோல ஏதும் ஹை-லைட் செய்யப்படவில்லை என்பதை இங்கு நான், தாங்கள் கேட்டுள்ளதால் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

      நீக்கு
  41. https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=876751122827583  

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=877458866090142 

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=878972632605432

    இந்த எனது இடுகை மூன்று பகுதிகளாகப் பிரித்து, நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், மேற்படி இணைப்புகளில், 4th, 5th & 7th April 2020 இல் வெளியிடப்பட்டுள்ளன.

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    பதிலளிநீக்கு